கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்
மிசிசாகாவில் செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில் கார் மோதியதில் , யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீடு ஒன்றில் இருந்து திடீரென வெளியேறிய கார், வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த செவ்வாயக்கிழமை காலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பெண் யாழ்ப்பாணம் இணுவிலை பிறப்பிடமாக கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தை ஏற்படுத்தியவர் அவ்விடத்தில் இருந்து தப்பி செல்லாமல் பொலிஸாரின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பீல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனத்திற்கு அடியில் இருந்த பெண்ணை வெளியே எடுத்து தீவிர சிகிச்சையளித்து காப்பாற்ற முயற்சித்த போதிலும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.