கனடா கோர விபத்தில் பெண் பலி; இரண்டாக உடைந்த கார்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் டொராண்டோவின் எட்டோபிகோக் என்ற இடத்தில் நடந்த கோர விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த விபத்து கடந்த சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் நடந்துள்ளது.
அந்த சமயத்தில் வேகமாக வந்த கார் கம்பத்தின் மோதி விபத்துக்குள்ளானதில் காரானது இரண்டு பகுதிகளாக உடைந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் மற்றும் ஆண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்தார்.
இந்த நிலையில் விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விபத்தில் கார் உடைந்ததில் சாலை முழுவதும் காரின் பாகங்கள் குப்பை போல சிதறின.
இதையடுத்து பொலிஸார் விசாரணைக்காக அந்த பகுதியை மூடியுள்ளா நிலையில், விசாரணைக்கு பின்னர் விபத்து தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.