வடமேற்கு லண்டனில் துப்பாக்கிச்சூடு; பெண் உயிரிழப்பு
வடமேற்கு லண்டனின் ஹார்லெஸ்டன்(Harlesden) பகுதியில் சனிக்கிழமை (14) கொடூரமான துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் Gifford சாலையில் துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் அவசர சேவைகள் விரைந்தனர்.
அங்கு துப்பாக்கி சூடு காயங்களுக்கு உள்ளாகியிருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பொலிஸார் மீட்ட நிலையில், மருத்துவப் பணியாளர்கள் தீவிர சிகிச்சைகள் செய்த போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்தில் 30 வயதுக்கு உட்பட்ட இரு ஆண்களும் காயமடைந்த நிலையில் , ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளதுடன் மற்றொருவரின் காயங்கள் ஆபத்தானவையாக இல்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பொலிஸார் கொலை வழக்கு விசாரணையை நடத்தி வருகின்றனர். எனினும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.