அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் பலியான 5 பேர் வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் ரொமேனியாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ஆற்றில் மூழ்கி பலியான விடயம் நினைவிருக்கலாம்.
அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில்...
2023ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 29ஆம் திகதி, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், ரொமேனியாவைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதியரும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளும் பலியானார்கள்.

மோசமான வானிலை காரணமாக அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அந்த பயணிகளுடன் படகின் சாரதியான கேஸி ஓக்ஸ் என்பவரும் உயிரிழந்தார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்
இந்நிலையில், ரொமேனியாவைச் சேர்ந்த இளம் தம்பதியர் மற்றும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளும், படகு சாரதியும் பலியான வழக்கில் ஸ்டெஃபனி ஸ்க்வேர் (Stephanie Square, 53) என்னும் பெண், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த ஸ்டெஃபனி, கனேடிய அமெரிக்க இரட்டைக் குடியுரிமை கொண்டவர் ஆவார். அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆட்கடத்தல் கும்பலின் தலைவிதான் இந்த ஸ்டெஃபனி என அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட அவர், அமெரிக்காவில் வழக்கை எதிர்கொள்கிறார்.
இந்நிலையில், அந்த ரொமேனியக் குடும்பம் மற்றும் படகு சாரதி உயிரிழந்த வழக்கில், தான் குற்றவாளி என ஸ்டெஃபனி ஒப்புக்கொண்டுள்ளார்.
அதாவது, சம்பவம் நடந்த அன்று மோசமான வானிலை நிலவியுள்ளது. பலத்த காற்று, கடும் குளிர் மற்றும் படகை செலுத்த போதுமான வெளிச்சம் இல்லாத நிலையிலும், பணத்துக்கு ஆசைப்பட்டு, தனக்கு பணம் கிடைத்தால் போதும் என முடிவு செய்து, அவர் அந்த ரொமேனியக் குடும்பத்தை படகில் பயணிக்க வலியுறுத்தியுள்ளார் ஸ்டெஃபனி.
ஆனால், மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்து, அந்த ரொமேனியக் குடும்பமும் படகின் சாரதியும் உயிரிழந்துவிட்டார்கள்.
இந்த வழக்கில் நவம்பர் மாதம் 25ஆம் திகதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்டெஃபனிக்கு குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம்.