1 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு TTC மீது வழக்கு தொடர்ந்த கனேடிய பெண்
கனடாவில் பரபரப்பான சுரங்கப்பாதை ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட ரொறன்ரோ பெண் ஒருவர் TTC மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த மாதம் நடந்த இச்சம்பவத்தில், தமக்கு ஏற்பட்ட விபத்தை தவிர்க்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், தம்மை மீட்க முயற்சி முன்னெடுத்தவர்கள் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட Shamsa Al-Balushi என்ற பெண்மணி தெரிவிக்கையில், விபத்து நடந்த பின்னர், தொடர்புடைய பகுதிக்கு வரும் ரயிலை நிறுத்தவும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதனால், இரு ரயில்களுக்கு நடுவே சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படட்டதாகவும், இழப்பீடாக 1 மில்லியன் டொலர் அளிக்கவும், அத்துடன் சட்ட போராட்டங்களுக்கான செலவீனங்களும் அளிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
மேலும், ஷம்சாவை ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்டவர் TTC ஊழியர் அல்ல என்றபோதும் TTC இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என ஷம்சாவின் சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
ஷம்சா மீதான தாக்குதல் தொடர்பில் 45 வயதான ரொறன்ரோ பெண்மணி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
மட்டுமின்றி, குறித்த சம்பவத்தில் விலா எலும்புகள் பல உடைந்து, கழுத்து மற்றும் புறமுதுகு காயங்களுடனும் மீட்கப்பட்டு ஷம்சா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், விபத்துக்கு முன்னர் மூன்று வாரங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்ட அவர், புதிய வேலையில் உறுதி செய்யப்படாத நிலையில் ஷம்சா விபத்தில் சிக்கியதால், எந்த உதவியும் அலுவலகம் சார்பில் பெற முடியாமல் போயுள்ளது.
மேலும், சொந்தமாக அவருக்கு வாகனம் ஏதும் இல்லை என்பதால், அவர் கட்டாயம் TTC சேவையை நம்பியிருக்கும் நிலை உள்ளது என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022