பஸ்ஸில் தீ மூட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்
கனடாவில் பஸ்ஸில், நபர் ஒருவரினால் தீ மூட்டப்பட்டு ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 17ம் திகதி கிப்லிங் மற்றும் டுன்டாஸ் அவன்யூவிற்கு அருகமையில் ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸில் நபர் ஒருவர், பெண் மீது தீ மூட்டியிருந்தார்.
தீ விபத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்துடன் 33 வயதான நபர் ஒருவருக்கு தொடர்பு உண்டு என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை குரோத அடிப்படையில் மேற்கொண்ட ஒர் தாக்குதலாக கருதி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணை தாக்குதல் நடத்திய நபர் அறிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.