லண்டன் நகரை உலுக்கிய சம்பவம்.... சைக்கிள் சாரதியின் கொடுஞ்செயல்
பிரிட்டனின் கிழக்கு லண்டனில் சைக்கிளில் சென்ற மர்ம நபரால் பெண் ஒருவர் முதுகில் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லண்டனில் Ilford என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் 27 வயதான குறித்த பெண் சைக்கிளில் சென்ற மர்ம நபரால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் நகர பொலிசார் அந்த சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அவர் கருப்பு நிற ஆடைகள் மற்றும் வெள்ளை மற்றும் கருப்பு நிற சைக்கிள் ஹெல்மெட் அணிந்து, ஒரு கருப்பு பையை ஏந்தியபடி, விசித்திரமான பச்சை நிற சைக்கிளை பயன்படுத்தியுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான பெண்ணுக்கு உயிர் அபாயம் ஏதுமில்லை எனவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பு உறுதி அளித்துள்ளது. இதேப்போலவே, ஜூன் 26ம் திகதி குடியிருப்புக்கு நடந்து சென்ற 35 வயதான பெண் சட்டத்தரணி ஸாரா அலீனா என்பவர் தலை மற்றும் கழுத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு பரிதாபமாக மரணமடைந்தார்.
இந்த வழக்கில் 29 வயதான நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது கொலை, துஸ்பிரயோகத்திற்கு முயற்சி, கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.