கோமா நிலையில் இருந்த பெண் பிரசவித்த குழந்தை ; வியப்பில் மருத்துவர்கள்!
இங்கிலாந்தில் கோமா நிலையில் இருந்த பெண் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் மருத்துவர்களை வியப்பில் அழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த கெல்சி ரூட்ஸ் (Kelsie Routs) 28 வார கால கர்ப்பிணியாக இருந்தபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.
பெண்ணின் உடலுக்கு ஓய்வு தேவை என்பதற்காக அவளை செயற்கையாக மருத்து சிகிச்சைக்காக கோமா நிலைக்கு அனுப்பினார். இந்நிலையில் குறித்த அவள் சுயநினைவு பெற்றபோது, தான் ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததாக மருத்துவர்கள் கூறியபோது, அந்தப் பெண்ணின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்ததில் அவசர சிகிச்சையாக சிசேரியன் செய்து அவருக்கு பிரசவம் செய்தபோது கெல்சி இன்னும் சுயநினைவில்லாமல் இருந்தார். கெல்சிக்கு மருத்துவர் பிரசவம் குறித்து கொடுத்த திகதிக்கு 12 வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
பெண் குழந்தை பிறந்து 7 நாட்களுக்கு பிறகு தான் அவர் கோமாவிலிருந்து வெளியே வந்தார். ஆனால், அவரது மகளைப் பார்த்ததும் அவருடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இது குறித்து அப் பெண் கூறுகையில்,
என்னையும் என் பெண் குழந்தையையும் காப்பாற்ற மருத்துவர்கள் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளனர் என எனக்கு தெரியும் என்றார்.
அதோடு மூன்று குழந்தைகளின் தாயான கெல்சி, மருத்துவர்கள் என் உயிரையும் என் குழந்தையையும் காப்பாற்றியது ஒரு பெரும் "அதிசயம்" என்றும் கூறியுள்ளாராம்.