தன்னை தானே விவாகரத்து செய்து கொண்ட மாடல் அழகி! பிரேசில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்
பிரேசிலை சேர்ந்த மாடல் அழிகி ஒருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டு இப்போது விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ள சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் 31 வயதான மாடல் அழகி கிறிஸ் கலேரா என்பவர்கடந்த காலங்களில் உறவு முறிவுகளால் ஏற்பட்ட விரக்தி காரணமாக தன்னை தானே திருமணம் செய்துகொள்ள அவர் முடிவெடுத்து கடந்த செப்டம்பர் மாதம் பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் குறித்து கிறிஸ் கலேரா கூறுவதாவது, “தனது வாழ்க்கையில் தனியாக இருக்க பயம் கொள்ளும் சுபாவம் உடைய பெண்ணான தான் தற்போதைய நிலையில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அதனை உணர்ந்த நிலையில் அதனை கொண்டாட முடிவு செய்து தன்னை தானே திருமணம் செய்துகொண்டேன்” என்று அப்போது கூறியிருந்தார்.
இந்நிலையில் தன்னை தானே திருமணம் செய்துகொண்ட 90 நாட்களுக்கு உள்ளாகவே தன்னை தானே விவாகரத்து செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.
ஏனெனில் சிறப்பு நபர் ஒருவரை சந்தித்ததாகவும் தற்போது காதல் மீது நம்பிக்கை வந்துள்ளது என்றும் தெரித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் விவாகரத்து செய்துகொள்வது வரை தன்னுடனான தனது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் பலரை பெரிதும் ஆச்சரியத்துள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.