சிறுநீர் தொற்றென மருத்துவமனை சென்ற பெண்; மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
பெண்ணின் சிறுநீர் பையில் இருந்த 8 செ.மீ கண்ணாடி டம்ளரை டாக்டர்கள் அகற்றினர்.
மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட தகவலின்படி, ஆப்பிரிக்க நாடான துனிசியாவை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் தனக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) இருப்பதாக டாக்டரை அணுகி உள்ளார்.
அப்போது ஸ்கேன் செய்ததில் 45 வயதுடையவரின் உடலில் சிறுநீர்ப்பைக் கல்லால் மூடப்பட்ட 8 செ.மீ கண்ணாடி டம்ளர் இருப்பது தெரியவந்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பு தகாத முறையில் இன்பத்திற்காக குடிக்கும் கண்ணாடி டம்ளரை பயன்படுத்தியதாக பின்னர் வெளிப்படுத்தினார்.
பெண் பிறப்புறுப்பு வழியாக தகாத முறை தூண்டுதலின் வழக்கமான நடைமுறையை கைவிட்டு, அதற்கு பதிலாக சிறுநீர்க்குழாயின் பாதையை பயன்படுத்தி உள்ளார்.
ஹபீப் போர்குய்பா பல்கலைக்கழக மருத்துவமனையின் டாக்டர்களால் நவீன சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணின் சிறுநீர்ப்பைக் கல்லானது அகற்றப்பட்டது.

