உலகளவில் 15.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15.83 கோடியைத் தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக நாடுகள் பலவற்றையும் ஆட்டம் காண வைத்துவிட்டது கொரோனா, ஒரு ஆண்டுக்கும் மேலாக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருவதுடன் இன்னும் பல நாடுகளின் இதன் தாக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.
தற்போது உலகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 15,83,23,839 -ஆக அதிகரித்துள்ளது, அவா்களில் 32,96,717 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 13,57,73,911 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,92,53,211 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,07,603 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,34,54,581 கோடியைத் தாண்டியுள்ளது, பலி எண்ணிக்கை 5 லட்சத்து 95 ஆயிரத்து 588-ஆக உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,22,95,911 கோடியைத் தாண்டியுள்ளது. இதுவரை கொரோனாவால் 2,42,398 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,50,628 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 4,21,484 பேர் உயிரிழந்துள்ளனர்.