கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும்; உலக சுகாதார அமைப்பு தகவல்
உலகை அச்சுறுத்தும் கொரோனா பரவல் குறித்த பல்வேறு குழப்பங்கள், மற்றும் அந்நோய்க்கான சிகிச்சையில் உள்ள சிக்கல்களை பார்க்கும்போது அது முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என தோன்றுவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரிசிஸ் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நிருபர்களை சந்தித்தபோதே டெட்ராஸ் அதானம் இதனை கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக அது தொடர்ந்து பரவி வருகிறது. தங்களுக்கு கொரோனா வராது என இளம் வயதினர் திடமாக நம்புவதாகவும், ஆனால் அது தவறு . எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் இத்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்பது நமக்கு தெரியவந்துள்ள உண்மை எனவும் அவர் கூறினார்.
இதன்போது பேசிய உலக சுகாதார அமைப்பின் உயரதிகாரி மரியா வான் கெர்கோவ்,
தொடர்ந்து 7 வாரமாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகில் கொரோனா தொற்று 9 சதவீதம் அதிகரித்துள்ளதுடன் இறப்பு எண்ணிக்கையும் ஒரே வாரத்தில் சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறினார்.