உக்ரைனில் உலகின் 2 வது உயரமான தொலைக்காட்சி கோபுரம் மீது தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள உயரமான தொலைக்காட்சி கோபுரத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கியது.
உக்ரைன் மீது தொடர்ந்து ஆறாவது நாளாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்ய ராணுவம் குறிவைத்துள்ளது. குறிப்பாக அரசு கட்டிடங்கள், ராணுவ தளங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் ஆகிய இடங்களில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது.
அந்த வகையில், ரஷ்யப் படைகள் இப்போது கார்கிவின் மத்திய சதுக்கத்தில் குண்டுகளை வீசுகின்றன. கியேவில் உள்ள உளவுத்துறை கட்டிடத்திற்கு அருகில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்ய தலைநகர் கீவ் மற்றும் கார்கில் நகரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் உள்துறை அமைச்சக ஆலோசகர் அன்டன் ஹெராஷ்செங்கோ, உக்ரைனின் தலைநகரான கியேவில் உள்ள உலகின் இரண்டாவது மிக உயரமான தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக தெரிவித்தார்.