என்னுடைய குழந்தையின் நிறம் குறித்து கவலை கொண்டனர்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மேகன்
இங்கிலாந்து அரச குடும்ப பொறுப்புகளிலிலிருந்து விலகிய இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கெல் அரச குடும்பத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிக்களை கூறி உள்ளனர். இங்கிலாந்து அரச குடும்ப பொறுப்புகளிலிலிருந்து விலகிய இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கெல் தங்களது மகனுடன் தற்போது அமெரிக்காவில் குடியேறி விட்டனர்.
அவர்கள் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆர்ப் வின்பிரேவுக்கு பேட்டி அளித்தனர். அந்தப் பேட்டியில் அரச குடும்பத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிக்களை கூறி உள்ளனர்.
அவர்களுடைய பேட்டி உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய மேகன் மார்கெல், கூறியதாவது:- ஹாரியின் சகோதரரின் மனைவி கேட் 2018-ம் ஆண்டு எங்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கு கொஞ்ச நேரம் முன்பு என்னை அழவைத்தார். அதுதான் திருப்புமுனை.
கேட்டை நான் அழவைத்தேனா என்று கேட்கிறீர்கள். அவர்தான் என்னை அழவைத்தார். திருமணத்துக்கு சில தினங்களுக்கு முன்னர் கேட் மனஅமைதியின்றி இருந்தார். அது மோதல் இல்லை. என்னுடைய திருமணத்தின்போது நான் அனுபவமின்றி இருந்தேன். நான் எப்போது அரச குடும்பத்துடன் இணையப் போகிறேன் என்பது தெரியாமல் இருந்தேன்.
நான் அனுபவமின்றிதான் திருமணத்துக்கு சென்றேன் என்று கூறுவேன். ஏனென்றால், பிரிட்டன் அரச குடும்பத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. அதிகாரப்பூர்வமாக திருமணம் நடைபெறுவதற்கு மூன்று தினத்துக்கு முன்னரே நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
யாருக்கும் தெரியாது.
அரச குடும்பத்தினர் என்னுடைய குழந்தையின் நிறம் குறித்து கவலை கொண்டனர் என்று என் கணவர் ஹாரி தெரிவித்தார் என கூறினார்.
எங்களுடைய மகனுக்கு பட்டம் வழங்கப்படவில்லை. அதனால், பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. நான் உயிர்வாழவேண்டாம் என்று