கருப்பின முன்னாள் நீதிபதியை விலங்கிட்டு இழுத்து சென்ற வான்கூவர் பொலிஸ்: பின்னர் தெரிய வந்த உண்மை
பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்ற முதல் கருப்பின நீதிபதியை பொதுமக்கள் மத்தியில் விலங்கிட்டு இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் உண்மையை அறிந்து கொண்ட வான்கூவர் பொலிசார் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளனர்.
சம்பவத்தன்று 81 வயதான முன்னாள் நீதிபதி Selwyn Romilly ஸ்டான்லி பார்க் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
திடீரென்று 2 பொலிஸ் வாகனங்களில் வந்த அதிகாரிகளில் ஐவர், நீதிபதி Selwyn Romilly-ஐ சுற்றிவளைத்ததுடன், அவர் மீது பொதுமக்களிடம் இருந்து புகார் கிடைத்துள்ளதாகவும், எதுவும் பதிலளிக்கும் முன்னர் கைகளுக்கு விலங்கிட்டதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, தம்மிடம் துப்பாக்கி உள்ளிட்ட எந்த ஆவணங்களும் தற்போது இல்லை எனவும் அவர் பொலிசாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
பகல் 9.45 மணியளவில் கடற்கரை பகுதியில் திரளான மக்கள் கூட்டத்தில் எந்த குற்றமும் செய்யாமல் கைது செய்யப்படுவது, அதுவும் ஒரு கருப்பின நபர், உண்மையில் அந்த நிகழ்வு தமக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது என்றார்.
இதனிடையே, தாம் ஒரு முன்னாள் நீதிபதி என தெரிவித்த பின்னர், பொலிசார் கைகளில் இருந்து விலங்கை விடுவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
டிரினிடாட்டில் பிறந்த Selwyn Romilly பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல் கருப்பின உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்.
மட்டுமின்றி பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற நான்காவது கருப்பின மாணவர்.
இதனிடையே, உண்மையை அறிந்து கொண்ட வான்கூவர் பொலிசார், நீதிபதி Selwyn Romilly-ஐ விடுவித்ததுடன், மன்னிப்பும் கோரியுள்ளனர்.
மேலும், உண்மையான குற்றவாளியை அதே பகுதியில் இருந்து பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.