யாழ்.பாசையூரில் உள்ள பல சிறப்புக்களை இந்த காணொளியில் பார்க்கலாம் வாங்க.!
யாழ் குடாநாடு சுற்றிலும் கடல்களால் சூழப்பட்டதாகும். இதன் காரணமாகவே பல வளங்களும் நிறைந்ததாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. அந்தவகையில் யாழ்பாணம் நகருக்கு அண்மையில் உள்ள பாசையூர் கத்தோலிக்க மக்கள் செறிந்துவாழும் பிரதேசமாக காணப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் கடற்தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். பாரிய மீன் சந்தை இங்கு காணப்படுவதுடன் உணவுப்பிரியர்கள் பலரின் நாவூறும் கணவாய்க்கு மிகவும் பேர்போனதாக பாசையூர் மீன் சந்தை காணப்படுகின்றது.
உடனடியாகவே கடலில் இருந்து பிடிக்கப்பட்ட மீன்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதால் பாசையூர் கிராமம் கடலுணவுக்கு பிரசித்தி பெற்ற இடமாகவும் காணப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல் பாசையூரின் இன்னும் பல சிறப்புக்களை இக் காணொளிவாயிலாக நாம் அறிந்துகொள்ளலாம்.