அமெரிக்காவில் கோர விபத்தில் பலியான இலங்கை பெண் ; துயரில் உறவுகள்
அமெரிக்காவில் சிலி பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த இளம் 29 வயது இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (20) மாலை 6.45 மணியளவில் ஸ்கொட்ஸ்வில் (Scottsville) வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறி ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்ட போது, குறித்த இலங்கை பெண் ஓட்டி சென்ற வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளயுள்ளது.
இந்த விபத்தில் இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவருடன் காரில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகயுள்ளது.
கடந்தாண்டு திருமணமாகி கணவனுடன் அமெரிக்கா சென்ற நிலையில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் பூதவுடலை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வந்து இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, ரோசெஸ்டர் இலங்கை அமெரிக்க சங்கத்தினால் GoFundMe நிதியுதவித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது