யானைகளை ஈவு, இரக்கமின்றி தாக்கிய இளைஞர்கள் மூவரை தீவிரமாக தேடும் வனத்துறையினர்!
உடுமலை வனப்பகுதியில், காட்டு யானை கூட்டத்தை, கற்களால் தாக்கி கொடுமைப்படுத்தியவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகம், மானுப்பட்டி பிரிவு, ஈசல்திட்டு மேற்கு சுற்று பகுதியில், குட்டியுடன் கூடிய மூன்று யானைகள் கூட்டம் சுற்றியது.
அப்பகுதிக்கு சென்ற இளைஞர்கள், யானைகளை, கற்கள் மற்றும் மரங்களின் கிளைகளை கொண்டு கடுமையாக தாக்கினர்.குட்டியை காப்பாற்றுவதற்காக, பெரிய யானைகள் பிளிறியும், துரத்தி துரத்தி வந்து மிரட்டியும், வேட்டை நாய்கள் துணையுடன், இளைஞர்கள் துரத்தி விளையாடினர்.
யானைகளை துரத்துவதை ஒரு நபர், மொபைல் போனில் காணொளி எடுத்தவாறு துரத்தும் காட்சியும், இளைஞர்கள் பலர், அவற்றை விடாமல் துரத்தும் காட்சியும், மரத்தின் மீது அமர்ந்து வீடியோ பதிவு செய்தனர்.
காணொளி பதிவை ஆதார மாக வைத்து, வனத்துறையினர், திருமூர்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த, 25 - 32 வயதுள்ள மூவர் மீது, வன பாதுகாப்பு சட்டம், வன விலங்குகளை காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர்.
யானைக் கூட்டத்தை இளைஞர்கள் கூட்டம் தாக்கும் வீடியோவில், 12 பேர் வரை உள்ள நிலையில், மூவர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முழுமையாக விசாரணை நடத்தி, அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வன ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.