சிறுவர்களை கொடூரமாக கொன்ற இளைஞர்கள்: விசாரணையின் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
சிறுவர்களின் காதுகள் அறுக்கப்பட்டும் உடல் சிதைக்கப்பட்டும் கொன்று வீசிய இளைஞைரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் உள்ள பள்ளி அருகில் இரு சிறுவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் Masten Milimu Wanjala என்ற 20 வயது இளைஞனை கைது செய்துள்ளனர்.
மேலும் கைதான அந்த இளைஞனிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிக்குள்ளான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை அந்த இளைஞன் 12 சிறுவர்களை கொலை செய்துள்ளதாக கூறினான். இதனை அடுத்து இரு சிறுவர்களின் உடலை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அதிலும் இந்த சிறுவர்களுக்கு 12 மற்றும் 13 வயதான நிலையில் அவர்களின் காதுகள் அறுக்கப்பட்டு உடல் சிதைக்கப்பட்ட நிலையில் மீட்டெடுத்துள்ளனர்.
மேலும் ஒரு சிறுவனின் சடலமானது ஆற்றங்கரையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீதமுள்ள சிறுவர்களின் சடலங்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கைதான இளைஞனிடம் விசாரணை செய்தபோது சரியான தகவல்கள் வெளிவராததால் இந்த சம்பவமானது மாந்திரீக சடங்குகளுக்காக செய்யப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.