கேரளாவில் முதல் முறையாக கர்ப்பிணிப் பெண்ணுக்கு கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ்!
ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெப்பப் வெப்பமண்டல பகுதிகளில் கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ், கேரள மாநிலத்தில் முதல் முறையாக ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு கண்டறியப் கண்டறியப்பட்டுள்ளது.
ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் இந்த ஜிகா வைரஸ் பாதிப்பு முதலில் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. பின்னர் தென் அமெரிக்காவிலும், அதன் பின்னர் வெப்ப மண்டலப் பகுதிகளிலும் கண்டறியப்பட்டது.
இந்த நோய் பாதித்த கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளின் தலை, இயல்பாக இருக்கும் குழந்தையின்தலை அளவை விட சிறியதாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளத்தில் முதல்முறையாக கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இந்த ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 24 வயதான பெண்ணுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவ கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் அவதிப்பட்டு வந்த அந்த கர்ப்பிணிப் பெண்ணு புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு நடத்திய சோதனையில் ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இவருடன் தொடர்பில் இருந்த 13 பேரின் மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிர்கள் ஆய்வு நிலையத்திற்கு, மாநில சுகாதாரத்துறை அனுப்பி வைத்துள்ளது.