மார்செ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐவர் காயமடைந்துள்ளனர்.
14 ஆம் வட்டாரத்தின் Rosiers நகரில் இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 22:00 மணி அளவில் உந்துருளியில் வந்த ஆயுத தாரி இருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதோடு, ஐவர் காயமடைந்துள்ளனர். இரண்டு மகிழுந்துகள் தோட்டாக்களால் துளைக்கப்பட்டு முற்றாக சேதமடைந்துள்ளது. பின்னர் ஆயுததாரிகள் தப்பியோடியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினரும், காவல்துறையினரும் வந்தடைந்தனர். 30 தோட்டாக்கள் வரை சூடு நடத்தப்பட்டதாகவும், 7.62 mm வரை ரைஃபிள் துப்பாக்கியால் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண கொடுக்கல் வாங்கல் விவகாரத்தினால் இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக மார்செ நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.