<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-20T08:36:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காணமல் போன விமானி சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/body-of-missing-pilot-found-in-kawartha-lakes-ont-1787209898"></link>
            <id>https://canadamirror.com/article/body-of-missing-pilot-found-in-kawartha-lakes-ont-1787209898</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கவர்தா லேக்ஸ் பகுதிக்குத் தனது சிறிய, சொந்தமாக தயாரிக்கப்பட்ட விமானத்தில் சென்று காணாமல் போன விமானியின் உடல் மீட்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கவர்தா லேக்ஸ் பகுதிக்குத் தனது சிறிய, சொந்தமாக தயாரிக்கப்பட்ட விமானத்தில் சென்று காணாமல் போன விமானியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாணக் காவலத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னர், வுல்ஃப் ஏரியில் மூழ்கிய நிலையில் அந்தச் சிறிய விமானத்தைக் கண்டறிந்த மீட்புக் குழுவினர், அதிலிருந்த விமானி உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.</p><p> 
ஆரம்பத்தில் விமானம் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட நிலையில், அதை இயக்கிச் சென்றவர் டேவிட் டக்ளஸ் என்ற முதியவர் என்பதை அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bbc8de3-6551-432b-b5d6-b2141a4aa477/26-6a86a8ac1779f.webp' /></p><p> 
கடந்த வார இறுதியில் ஒஷாவா எக்சிகியூட்டிவ் விமான நிலையத்திலிருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்ற அவர், அதன்பின் திரும்பவில்லை.</p><p> ஞாயிற்றுக்கிழமையன்று வுல்ஃப் ஏரியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட போதிலும், விமானியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. </p><p>
பல தேடுதல் மற்றும் மீட்பு முகமைகள், காவல்துறையினர் இணைந்து இந்த தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தற்போது ஏரியிலிருந்து விமானத்தையும் உடலையும் வெளியே எடுப்பதற்கான திட்டங்களை அதிகாரிகள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
இந்த விபத்துக்கான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து விசாரணை நடத்த கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்ராறியோ காவலத்துறை தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T08:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உன் நாட்டுக்குத் திரும்பிப்போ... இந்தியரை இனரீதியாக விமர்சித்த கனேடியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-man-face-racist-tirade-in-canada-1787209603"></link>
            <id>https://canadamirror.com/article/indian-man-face-racist-tirade-in-canada-1787209603</id>
            <summary type="text">An Indian man was targeted in a racist tirade in Halifax: கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் இந்தியர் ஒருவர் இனவெறுப்புச் சம்பவம் ஒன்றை எதிர்கொண்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>An Indian man was targeted in a racist tirade in Halifax: கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் இந்தியர் ஒருவர் இனவெறுப்புச் சம்பவம் ஒன்றை எதிர்கொண்டுள்ளார்.
</p><p>
கனடாவில் வாழ்ந்துவரும் இந்தியர் ஒருவர் இனவெறுப்புச் சம்பவம் ஒன்றை எதிர்கொண்ட நிலையில், முதன்முறையாக தனக்கு அச்சம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdf3e057-bdc1-45a4-9a6d-360f51cb3714/26-6a86a78473f1f.webp' /></p><p>

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் வாழ்ந்துவரும் ஷாலு ஷாஜன் என்னும் இந்தியர், கடைக்குச் செல்வதற்காக தனது காரை சாலையோரமாக நிறுத்தியுள்ளார்.</p><p>

அப்போது அவ்வழியே வந்த கனேடியர் ஒருவர், தன் கையில் வைத்திருந்த bagpipes என்னும் கருவியைக் கொண்டு ஷாஜனின் கார் கண்ணாடியில் இடித்துள்ளார்.</p><p>

காரிலிருந்து இறங்கிய ஷாஜன் என் கார் கண்ணாடியில் இடித்துவிட்டீர்கள் என அந்த நபரிடம் கூற, அந்த நபர் திரும்பிவந்து வேண்டுமென்றே காரின் பின்பக்கத்தில் அந்தக் அக்கருவியைக் கொண்டு ஓங்கி அடித்துள்ளார்.
</p><p>
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, ஷாஜனை இனரீதியாக விமர்சிக்கத் துவங்கிய அந்த நபர், உன் நாட்டுக்குத் திரும்பிப் போ என சத்தமிட்டுள்ளார்.</p><p>

அந்த நபர் தன் மீது இனவெறுப்புக் காட்டுகிறார் என்பது ஷாஜனுக்குத் தெளிவான நிலையில், அவர் நடந்துகொண்ட விதம் கைகலப்பில் முடிந்துவிடுமோ என தான் அஞ்சியதாக தெரிவிக்கிறார் ஷாஜன்.</p><p>

பின்னர் அந்த நபரை தான் புகைப்படம் எடுத்ததுடன், பொலிசிலும் புகாரளித்துள்ளதாக தெரிவிக்கிறார் ஷாஜன்.
</p><p>
கனடாவைப் பொருத்தவரை, தெற்காசியர்களுக்கு எதிரான இனவெறுப்பு சம்பவங்கள் அதிகரித்துவருவதாக கனடா புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
விடயம் என்னவென்றால், தான் இதற்கு முன்பும் இதேபோல இனவெறுப்பை எதிர்கொண்டதுண்டு. ஆனால், தான் தாக்கப்படுவேனோ என பயந்தது இதுதான் முதல் முறை என்கிறார் ஷாஜன்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T07:06:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடக மோகம் ; ஆபத்தான சாகசம்.. 5 இளைஞர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/social-media-crash-5-youths-accident-ireland-1787203738"></link>
            <id>https://canadamirror.com/article/social-media-crash-5-youths-accident-ireland-1787203738</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அயர்லாந்தில் சமூக ஊடகங்களில் அதிகப் பார்வையாளர்களைப் பெறுவதற்காக இளைஞர்கள் நெடுஞ்சாலைகளில் தவறான திசையில் வாகனம் செலுத்தும் ஆபத்தான போக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அயர்லாந்தில் சமூக ஊடகங்களில் அதிகப் பார்வையாளர்களைப் பெறுவதற்காக இளைஞர்கள் நெடுஞ்சாலைகளில் தவறான திசையில் வாகனம் செலுத்தும் ஆபத்தான போக்கில் ஈடுபட்டு வருவதாக அயர்லாந்து பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், டப்ளின் வானூர்தி நிலையத்துக்குப் பயணித்த மற்றுமொரு வாகனத்தின் மீது, தவறான திசையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதி 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/874c637c-e979-42cd-8ebf-19b4449cba24/26-6a86909ba975c.webp' /></p><p>
</p><h2>அயர்லாந்து அரசாங்கம் தீவிர நடவடிக்கை</h2><p>
 விபத்தில் மற்றைய வாகனத்தில் பயணித்த மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து, ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான வீதிப் பயணங்களை ஊக்குவிக்கும் விதமாக வெளியிடப்படும் காணொளிகளை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு அயர்லாந்து நாடாளுமன்றக் குழு மற்றும் ஊடக ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு என்பன டிக்டொக் (TikTok) நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.</p><p>

இதேவேளை, விதிகளை மீறும் கணக்குகள் மற்றும் விபத்து தொடர்பான காணொளிகளைத் தீவிரமாகக் கண்காணித்து அகற்றி வருவதாக டிக்டொக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இளைஞர்கள் குழுக்களாக இணைந்து , போக்குவரத்து விதிகளுக்கு மாறாக வாகனம் செலுத்தியும் காணொளிகளைப் பதிவிட்டு வருவதைக் கட்டுப்படுத்த அயர்லாந்து அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
</p><p>
நெடுஞ்சாலையில் தவறான திசையில் வாகனம் செலுத்துவதைத் தனிக் குற்றமாக அறிவிக்கவும், காவல்துறைக்கு விசேட வாகனத் துரத்தல் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-20T07:03:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்பெர்ட்டா பிரிவினை வாக்கெடுப்பு: வெளிநாட்டுத் தலையீடு தீவிரமாக உள்ளதாக ஆய்வில் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-linked-actors-stoking-division-in-alberta-1787209053"></link>
            <id>https://canadamirror.com/article/russian-linked-actors-stoking-division-in-alberta-1787209053</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவிலிருந்து ஆல்பெர்ட்டா மாகாணம் பிரிந்து செல்வது தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடைபெற இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், இது தொடர்பான இணைய வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவிலிருந்து ஆல்பெர்ட்டா மாகாணம் பிரிந்து செல்வது தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடைபெற இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், இது தொடர்பான இணைய விவாதங்கள் வெளிநாடுகளின் தவறான தகவல் பிரச்சாரங்களுக்குப் பெரும் இலக்காக மாறியுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. </p><p>
ரெஜினா பல்கலைக்கழகத்தின் 'செயற்கை நுண்ணறிவு, தரவு மற்றும் மோதல் மையத்தின்' இணை இயக்குநரும், 'Cipher AI' நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியுமான பிரையன் மெக்குவின் தலைமையிலான குழுவினர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.</p><p> 
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ரஷ்யா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த போலியான உள்ளடக்கப் பண்ணைகள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள் தவறான தகவல்களைப் பரப்பி வருவது கண்டறியப்பட்டுள்ளது. 
தவறான தலைப்புகள், கட்டுரைகள் மற்றும் பொய் கதைகள் மூலம் மறைமுகமாக இந்த விவாதத்தில் செல்வாக்கு செலுத்த முயல்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24ba34f2-7f3b-40bb-91de-50cdda89827d/26-6a86a55f314f2.webp' /></p><p> பெரும்பாலான தலையீடுகள் ரஷ்யாவுடனே தொடர்புடையவை. 
அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பகிரங்கமாக கருத்துகளைத் தெரிவிப்பதன் மூலம் வெளிப்படையாகச் செல்வாக்கு செலுத்துகின்றனர்.</p><p> 
"மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி, ஒருவரை ஒருவர் எதிரியாகப் பார்க்க வைப்பதே இவர்களின் முக்கிய நோக்கமாகும்" என்று பிரையன் மெக்குவின் குறிப்பிட்டார். 
சைமன் ஃபேசர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அகமது அல்-ராவி கூறுகையில், "மக்களோடு மக்களாகப் போலியாக நடித்து சிலர் இத்தகைய கருத்துகளைப் பரப்புகின்றனர், இது குறித்துக் கனடியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்றார். </p><p>
இந்த விவகாரம் குறித்து கனடிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு மற்றும் காவல்துறை தமக்கு விளக்கமளித்துள்ளதாக ஆல்பெர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.</p><p> 
இதுவரை குற்றவியல் அளவிலான சட்டவிரோதத் தலையீடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் ரஷ்யாவுடன் தொடர்புடைய 'போட் ஃபார்ம்கள்' மூலம் தகவல்கள் அதிகளவில் பரப்பப்படுவது கவலையளிக்கிறது என்று கூறியுள்ள முதல்வர், இணையத்தில் தகவல்களைப் பகிரும்போது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுவாக்கெடுப்பு வரும் அக்டோபர் 19 அன்று நடைபெறவுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T07:01:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது இதுவரை இல்லாத பொருளாதார தடை; ட்ரம்ப் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/unprecedented-economic-sanctions-on-iran-1787209407"></link>
            <id>https://canadamirror.com/article/unprecedented-economic-sanctions-on-iran-1787209407</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் உதவி வழங்கி, உயிர்நாடியாகச் செயற்படும் எந்தவொரு நாடும் அமெரிக்காவின் மிகக் கடுமையான பொருளாதார விளைவுகளையும் தடைகளையும் சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d28d69a9-05ae-4f95-9af6-256899cf5ba8/26-6a86a6c0c06ae.webp' /></p><p>

ஈரானை முழுமையாகத் தனிமைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T07:00:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேனிடோபாவில் பிறந்த சிசுவின் உடற்பாகங்கள் கண்டெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/infant-remains-found-in-manitoba-community-rcmp-1787202818"></link>
            <id>https://canadamirror.com/article/infant-remains-found-in-manitoba-community-rcmp-1787202818</id>
            <summary type="text">கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றிற்கு வெளியே புதிதாக பிறந்த குழந்தையின் உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, கனடிய பொலிஸார் தீவிர விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றிற்கு வெளியே புதிதாக பிறந்த குழந்தையின் உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, கனடிய பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> 
வின்னிபெக் நகரத்திலிருந்து வடமேற்கே சுமார் 630 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அம்ஃபர்வில் பகுதியில் உள்ள ஒரு முகவரிக்கு வெளியே மனித உடற்பாகங்கள் இருப்பதாக திங்கள்கிழமை காலை 9 மணியளவில் தி பாஸ் பகுதி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.</p><p> 
இரண்டு வீடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9b8d015-00c5-4818-8bee-d0ff3b90422c/26-6a868d0455215.webp' /></p><p> </p><p>
கண்டெடுக்கப்பட்ட உடற்பாகங்கள் புதிதாக பிறந்த குழந்தை அல்லது கருவினுடையது என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 204-627-6204 என்ற எண்ணில் தி பாஸ் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T05:11:51+00:00</updated>
        </entry>
    </feed>
