<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-31T14:53:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகி எட்டு மாதங்களின் பின் வெளியான வெனிசுலா முன்னாள் அதிபர் புகைப்படம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/photo-of-former-venezuelan-president-released-1788159702"></link>
            <id>https://canadamirror.com/article/photo-of-former-venezuelan-president-released-1788159702</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். </p><p>

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட பின்னர், சுமார் எட்டு மாதங்களுக்கு பிறகு அவர் காவலில் இருக்கும் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3437b06b-3db8-46e5-9f55-f1c16e93b889/26-6a9526d86761a.webp' /></p><h2>நியூயார்க்கில்&nbsp; &nbsp;புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் ...</h2><p>
 
 
ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த இரண்டு புகைப்படங்களிலும் மதுரோ சாம்பல் நிற டிராக்சூட் மற்றும் வெள்ளை நிற காலணிகள் அணிந்தபடி புன்னகையுடன் காணப்படுகிறார்.
</p><p>
 இரு கைகளாலும் வெற்றி சின்னம் காட்டும் வகையிலும் அவர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>

எனினும், அவை சமீபத்தில் எடுக்கப்பட்டவை அல்ல என்றும், ஜூன் 25, 2026 என்ற தேதி புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.
</p><p> 
தனது பேரக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அன்பையும் நம்பிக்கையையும் தெரிவிக்கும் வகையில் மதுரோ இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 தானும் தனது மனைவி சிலியா புளோரஸும் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். </p><p>மேலும், தங்களது ஆதரவாளர்களின் பிரார்த்தனைகள் மற்றும் ஒற்றுமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
மதுரோ மற்றும் அவரது மனைவி ஜனவரியில் வெனிசுலாவில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><p> 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் . எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மதுரோ மறுத்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T13:31:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஆரம்பித்த தாக்குதல்கள்; ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் செல்ல அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fear-over-ship-strait-of-hormuz-us-iran-colin-1788175080"></link>
            <id>https://canadamirror.com/article/fear-over-ship-strait-of-hormuz-us-iran-colin-1788175080</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வளைகுடாவில் ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வளைகுடாவில் ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்கும் கப்பல்கள் அச்சத்தை எதிர்கொண்டுள்ளன.
</p><p> 

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் லாரக் தீவில் இரண்டு ஏவுகணை ஏவுதளங்களை அமெரிக்க ராணுவம் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94a7bf0d-536a-4502-a9ea-a5465f81cd81/26-6a9562ea27491.webp' /></p><p>
</p><p>
 ஜூலை மாதத்துக்குப் பிறகு ஈரான் பிரதேசத்தில் அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் முதல் நேரடி தாக்குதல் இதுவாகும்.
</p><p> 
 
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஜோர்டானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப்படை தளங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.</p><p>
 
ஒரு முன்னணி செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய தகவலின்படி, அஸ்ராக் பகுதியில் உள்ள முவாஃபக் சல்தி விமானப்படை தளம் மற்றும் கிங் ஹுசைன் விமானப்படை தளம் ஆகியவை தாக்குதலின் இலக்குகளாக இருந்ததாக IRGC தெரிவித்துள்ளது. </p><p> 
 
மேலும், ஹோர்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டை இந்த தாக்குதல்கள் எந்த வகையிலும் பலவீனப்படுத்தாது என்றும் IRGC எச்சரித்துள்ளது. </p><p> 


இன்னிலையில் ஹோர்முஸ் நீரிணை உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக இருப்பதால், இப்பகுதியில் அதிகரிக்கும் பதற்றம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T11:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்காக கையில் பச்சை குத்திய தாய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mother-in-canada-get-a-tattoo-keypad-son-autism-1788171473"></link>
            <id>https://canadamirror.com/article/mother-in-canada-get-a-tattoo-keypad-son-autism-1788171473</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கனடாவில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது மகனின் தாயார், தனது கையில் கீபோர்ட் வடிவத்தில் பச்சை ஒன்றை குத்திக் கொண்டார். 

இதன் மூல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கனடாவில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது மகனின் தாயார், தனது கையில் கீபோர்ட் வடிவத்தில் பச்சை ஒன்றை குத்திக் கொண்டார். 

இதன் மூலம் தனது மகன் எந்த சூழ்நிலையிலும் அவன் நினைப்பதை மற்றவர்களிடம் தெரிவிக்க முடியும் என கூறினார். </p><p>

கனாடாவில் வசித்து வரும் ஜெசிகா என்பவர், மூளை வளர்ச்சி குன்றிய நோயால் பாதிக்கப்பட்ட தனது 11 வயது மகனான ஹண்டர் உடன் சேர்ந்து ஒரு உணவகத்திற்கு உணவருந்த சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8377b620-3434-460d-9d86-ff74fee782f6/26-6a9554d2bed90.webp' /></p><h2>&nbsp;எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்பு</h2><p> </p><p>

அப்போது ஹண்டர் தனது வார்த்தைகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக, அவன் வைத்திருந்த ஒரு எலக்ட்ரிக் கருவியின் பேட்டரி திடீரென தீர்ந்து போனது. இதனால் அவன் என்ன நினைக்கிறான் என்பதை, தனது தாயிடம் வெளிப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. </p><p>

இந்த சூழ்நிலையில் ஹண்டர் ஒரு காகிதத்தை எடுத்து, அதில் ஒரு கீபோர்டை வரைந்து, பிறகு தனக்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதை தனது தாய்க்கு தெரியப்படுத்தும் வகையில், அந்த வரையப்பட்ட காகிதத்தில் எழுத்துக்களை சுட்டிக்காட்டினான். 

இந்த காட்சியை பார்த்த ஹண்டரின் தாயார், இதற்கு ஒரு மாற்று தகவல் தொடர்பு சாதனம் தேவை என்பதை உணர்ந்தார். </p><p>

இதைத்தொடர்ந்து ஜெசிகா தனது கையில் ஒரு கீபோர்டை பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தார். மேலும் அந்த கீபோர்டு வடிவிலான டாட்டூவில், ‘மகிழ்ச்சி, சோகம்’ ஆகிய ஸ்மைலி வடிவங்களும், ‘நான் உன்னை விரும்புகிறேன்’ என்ற பொத்தானும் இடம்பெற்றிருந்தன.</p><p> 

இந்த வடிவத்தை தனது கையில் பச்சை குத்திக்கொண்ட அவரின் தாயார், அதை தனது மகனிடம் முதலில் காண்பித்தார். அப்போது ஹண்டர், தனது தாயின் கையில் வரையப்பட்ட கீபோர்டில், ‘அம்மா’ என்று பதிவுசெய்தான். </p><p>

இதன்மூலம் ஹண்டர் தன்னுடன் எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்பு கொள்ளும் வீடியோவை, ஜெசிகா சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். 

இதைத்தொடர்ந்து, ஜெசிகா ஒரு ஆடை நிறுவனத்துடன் இணைந்து, கீபோர்டு வடிவிலான அச்சுகளை தனது சட்டைகளில் அச்சிட்டார்.</p><p> 

இதன்மூலம்,&nbsp; ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தங்களது எண்ணங்களை வீடுகளிலும், வைத்தியசாலைகளிலும், பாடசாலைகளிலும் வெளிப்படுத்த முடியும் என ஜெசிகா குறிப்பிட்டார். </p><p>

மேலும் தனது உடலில் ஆயிரம் தழும்புகளை பச்சை குத்திக் கொள்வதன் மூலம், தனது மகனுக்கு அவனது எண்ணங்களை வெளிக்காட்ட ஒரு வழி இருக்குமென்றால், தான் உடல் முழுவதும் பச்சை குத்திக்கொள்ள தாயாராக இருப்பதாகவும் ஜெசிகா தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-31T10:15:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் மீண்டும் மோதல் ; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crude-oil-rises-renewed-fighting-in-middle-east-1788168488"></link>
            <id>https://canadamirror.com/article/crude-oil-rises-renewed-fighting-in-middle-east-1788168488</id>
            <summary type="text">&amp;nbsp; மத்திய கிழக்கில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள புதிய போர் மோதல்கள் காரணமாகவே கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்துள்ளன.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மத்திய கிழக்கில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள புதிய போர் மோதல்கள் காரணமாகவே கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்துள்ளன.
</p><p>அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் மோதல்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில், உலகச் சந்தையிலும்&nbsp; அது எதிரொலித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e351a6d-d792-4d9b-9a47-4ecdd0a4e15f/26-6a954929e79c1.webp' /></p><p> 

இதற்கமைய, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.57% அதிகரித்து 85.54 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதுடன், ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.84% அதிகரித்து 90.60 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.</p><p> 

 மர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 4.04% என்ற சதவீதத்தில் அதிகரித்து 95.75 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. </p><p>

கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஈரான் நாட்டின் லாரக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதுடன், அதற்குப் பதிலடியாக ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈரான் பெலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T09:25:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்வி அனுமதி தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள ஒரு முக்கிய செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/study-permit-rules-changes-from-sep-1-in-canada-1788167979"></link>
            <id>https://canadamirror.com/article/study-permit-rules-changes-from-sep-1-in-canada-1788167979</id>
            <summary type="text">Canada Study Permit Rules changes from September 1: செப்டம்பர் 1ஆம் திகதி முதல், கனடா கல்வி அனுமதி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

கனடாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada Study Permit Rules changes from September 1: செப்டம்பர் 1ஆம் திகதி முதல், கனடா கல்வி அனுமதி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.</p><p>

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக கனடாவில் யாரையும் சார்ந்திருக்காமல், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக, அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்றொரு விதி உண்டு.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/249e871b-89f2-46b8-b8cb-0da55ce7bb07/26-6a95472c3c189.webp' /></p><p>
இந்நிலையில், அது தொடர்பான விதிகளில், நாளை முதல் சில மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன.
</p><p>
கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக தங்கள் வங்கிக்கணக்கில் 22,895 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
</p><p>
தற்போது மீண்டும் அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆம், இனி வெளிநாட்டு மாணவர்கள் தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்கான தங்கள் வங்கிக்கணக்கில் 23,448 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இது மாணவர்கள் கல்வி கற்பது, போக்குவரத்து போன்ற விடயங்களை உள்ளடக்கிய கல்விக் கட்டணம் அல்ல. அது, தனிச் செலவு!
</p><p>
அத்துடன், கனடாவில் கல்வி கற்பதற்காக உரிமம் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களுடன் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேரை அழைத்துவருகிறார்களோ, அதற்கேற்ப அவர்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டிய தொகையும் அதிகரிக்கும்.
</p><p>
ஒரு மாணவர் தன்னுடன் தன் உறவினர்கள் இரண்டு பேரை கனடாவுக்கு அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 29,192 டொலர்கள் வைத்திருக்கவேண்டும்.
</p><p>
மூன்று பேரை அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 35,888 டொலர்களும், நான்கு பேரை அழைத்துவர விரும்பினால் தன் வங்கிக்கணக்கில் 43,572 டொலர்களும் வைத்திருக்கவேண்டும்.
</p><p>
இப்படியே இந்த தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும். அதாவது, ஒரு மாணவர் கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வந்தால், அவர் கனடாவில் வேலை செய்யாமலே, தனது மற்றும் தன்னுடன் அழைத்துவந்துள்ள குடும்ப உறுப்பினர்களின் செலவுகளை சந்திக்கும் வகையில் தன்னிடம் போதுமான பணம் உள்ளது என்பதை நிரூபித்தாகவேண்டும் என்கிறது, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு!&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T09:20:48+00:00</updated>
        </entry>
    </feed>
