<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-06T13:47:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் திடீர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/families-of-military-suddenly-arrested-in-the-us-1785994044"></link>
            <id>https://canadamirror.com/article/families-of-military-suddenly-arrested-in-the-us-1785994044</id>
            <summary type="text">அமெரிக்காவில்&amp;nbsp; 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில்&nbsp; 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>&nbsp;அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் தீவிர குடியேற்ற கொள்கையின் விளைவாக, பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு குடியேற்ற பாதுகாப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>&nbsp;இதன் காரணமாக, கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், பலர் குடியேற்ற காவல்துறையின் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>&nbsp;நாட்டிற்காக உயிரை பணயம் வைத்து எல்லையில் சேவை செய்யும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரையே கைது செய்து வெளியனுப்புவது, அமெரிக்க வீரர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் மன உளைச்சலையும் உருவாக்கியுள்ளது.</p><p> இந்த நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புக்கும் வீரர்களின் மன உறுதிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T13:35:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கனடாவின் ஆதரவு உறுதியானது - மார்க் கார்னி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/carney-says-canada-backs-icc-but-stays-mum-1785997414"></link>
            <id>https://canadamirror.com/article/carney-says-canada-backs-icc-but-stays-mum-1785997414</id>
            <summary type="text">சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கலைப்பதாக அமெரிக்கா சூளுரைத்துள்ள நிலையில், அந்த நீதிமன்றத்திற்கான கனடாவின் ஆதரவு மிகவும் உறுதியானது என கனடிய பிரதமர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கலைப்பதாக அமெரிக்கா சூளுரைத்துள்ள நிலையில், அந்த நீதிமன்றத்திற்கான கனடாவின் ஆதரவு மிகவும் உறுதியானது என கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.</p><p>
எனினும், வின்னிபெக்கில் பிறந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிம்பர்லி புரோஸ்ட் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடைகளை விதித்துள்ளமை குறித்து தனது அரசாங்கம் பகிரங்கமாக எவ்வித விமர்சனத்தையும் தெரிவிக்காதது ஏன் என்பது குறித்து பிரதமர் புதன்கிழமை விளக்கம் அளிக்கவில்லை.</p><p>
டொரண்டோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்னி, தனது கடன் அட்டைகளைப் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்திய அமெரிக்கத் தடைகளை நீக்கக் கோரி நியூயோர்க் நீதிமன்றத்தை அணுகியுள்ள நீதிபதிக்கு கனடா தேவையான ஆதரவை வழங்கும் என கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b4a9c3e-abeb-4c8d-96e1-24cae0f6b22f/26-6a74286c3e2a5.webp' /></p><p>
</p><p>ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் ஈடுபட்ட வழக்கு தொடர்பில் பணியாற்றியதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிபதி புரோஸ்ட் மீது டிரம்ப் தடை விதித்தார். 
பிரான்ஸ் இந்த நடவடிக்கையைக் கண்டித்த போதிலும், கனடா அரசாங்கம் இது குறித்து எவ்வித விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.</p><p>
இதனிடையே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைக் "கலைப்பதாக" சபதம் செய்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இதுவரை எந்தவொரு அமெரிக்கரையும் முறைப்படி விசாரிக்கவோ அல்லது குற்றம் சுமத்தவோ செய்யாத அந்த நீதிமன்றத்திலிருந்து வெளியேறுமாறு தனது நட்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.</p><p>
உலகில் ஆபத்துகள் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில் சர்வதேச சட்டத்திற்கு ஒட்டாவா அளிக்கும் முக்கியத்துவத்தை கனடாவின் பல்வேறு ராஜதந்திர நியமனங்கள் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட கார்னி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T13:34:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச தரவுத் திருட்டு வழக்கு: கனடிய நபர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/kitchener-man-faces-up-to-30-years-in-prison-1785997997"></link>
            <id>https://canadamirror.com/article/kitchener-man-faces-up-to-30-years-in-prison-1785997997</id>
            <summary type="text">மிகவும் முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்களை&quot; திருடிய பிரமாண்ட சர்வதேச தரவுத் திருட்டு வழக்கில், கனடாவின் ஒன்ராறியோ, கிச்சனர் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிகவும் முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்களை" திருடிய பிரமாண்ட சர்வதேச தரவுத் திருட்டு வழக்கில், கனடாவின் ஒன்ராறியோ, கிச்சனர் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>அலெக்சாண்டர் மௌகா என்றும் அழைக்கப்படும் 26 வயதான கானர் மௌகா, 2024 அக்டோபரில் கிச்சனரில் கைது செய்யப்பட்டு, 2025 ஜூலை மாதம் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டார். </p><p>இதனைத் தொடர்ந்து அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித் துறை ஆகஸ்ட் 5 அன்று அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/016b378e-529e-4ac8-8ffc-4a00766db6ac/26-6a742aaf6c191.webp' /></p><p>
</p><p>கானர் மௌகா 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை ஹேக் செய்து, மிகவும் ரகசியமான தகவல்களைப் பெற்று, பாதிக்கப்பட்டவர்களிடம் மில்லியன் கணக்கான டொலர்களைப் பறித்துள்ளார் என்று நீதித் துறையின் குற்றவியல் பிரிவின் உதவி அட்டோர்னி ஜெனரல் ஏ. டைசன் டுவா தெரிவித்துள்ளார்.</p><p>
நீதிமன்ற ஆவணங்களில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட 'ஸ்னோப்லேக்' என்ற மேகக்கணி தரவுச் சேமிப்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு இந்த ஹேக்கிங் நடந்துள்ளதாக நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 
சில பிரபல நிறுவனங்கள் இந்த ஊடுருவலால் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளன.
</p><p>கணினி மோசடி, வயர் மோசடி, தீவிர அடையாளத் திருட்டு மற்றும் அது தொடர்பான சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளை மௌகா ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>அவருக்கு வரும் அக்டோபர் 27 அன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 2 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T13:34:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாய இராணுவப் பயிற்சியில் இணைந்த முதல் இளவரசி இசபெல்லா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/isabella-princess-join-military-1st-history-danish-1786017239"></link>
            <id>https://canadamirror.com/article/isabella-princess-join-military-1st-history-danish-1786017239</id>
            <summary type="text">டென்மார்க்கில் கட்டாய இராணுவ சேவையில் பயிற்சி பெறும் முதல் பெண்மணியாக இளவரசி இசபெல்லா பெருமை பெற்றுள்ளார்.டென்மார்க் அரச குடும்பத்தில் பாரம்பரியமாக இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>டென்மார்க்கில் கட்டாய இராணுவ சேவையில் பயிற்சி பெறும் முதல் பெண்மணியாக இளவரசி இசபெல்லா பெருமை பெற்றுள்ளார்.</p><p>டென்மார்க் அரச குடும்பத்தில் பாரம்பரியமாக இராணுவ சேவை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>நாட்டின் பட்டத்து இளவரசர் கிறிஸ்டியனும், இராணுவ முகாமில் தனது பயிற்சியை நிறைவு செய்து, தற்போது 2ஆம் லெப்டினன்டாகப் பயிற்சி பெற்று வருகிறார்.</p><p>இந்த நிலையில், புதிதாக விரிவுபடுத்தப்பட்ட 11 மாத கட்டாய இராணுவ சேவைத் திட்டத்தில் அவரது சகோதரியான இசபெல்லாவும் சேர்ந்துள்ளார்.</p><p>சமீபத்தில் உயர்நிலைப் படிப்பை முடித்த இசபெல்லா, பெண்களை உள்ளடக்கிய மற்றும் நீண்டகால பயிற்சியைக் கொண்ட விரிவுபடுத்தப்பட்ட தேசிய சேவை அமைப்பின்கீழ் பணியாற்றும் முதல் குழுவில் இடம்பெற்றுள்ளார்.</p><p>இதன் மூலம், அரச குடும்பத்திலிருந்து முழுமையான கட்டாய இராணுவ சேவை பயிற்சி பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையை இசபெல்லா பெறுகிறார். மேலும், இந்தச் சேவைக்காக எந்த ஊதியமும் வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T11:54:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களுக்கான வீடுகள் தொடர்பில் கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/carney-announce-5000-rental-houses-for-toronto-1786010941"></link>
            <id>https://canadamirror.com/article/carney-announce-5000-rental-houses-for-toronto-1786010941</id>
            <summary type="text">ரொரன்றோ மக்களுக்காக சுமார் 5,600 வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து மக்களுக்காக 5,600க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரொரன்றோ மக்களுக்காக சுமார் 5,600 வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து மக்களுக்காக 5,600க்கும் அதிகமான வாடகை வீடுகளை கட்ட இருப்பதாக கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e5090e-1946-4fb9-9a05-b0c4477a364f/26-6a745d3e93db8.webp' /></p><p>
கனடா அரசும் ரொரன்றோ நகரமும் இணைந்து 2.7 பில்லியன் டொலர்கள் முதலீட்டில் 18 வீடுகட்டும் திட்டங்களை செயல்படுத்த உள்ளன.
</p><p>
அடுத்த மூன்று ஆண்டுகளில், 5,600க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 4,500க்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட இருப்பதாக கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் அனைத்து வீடுகளுமே வாடகைக்கு விடப்படுவதற்காகவே கட்டப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T10:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்து போட்டியில் மின்னல் தாக்கி வீரர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/football-player-dies-struck-by-lightning-match-1786009667"></link>
            <id>https://canadamirror.com/article/football-player-dies-struck-by-lightning-match-1786009667</id>
            <summary type="text">தென் தாய்லாந்தின் சுங்கை கோலோக் பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கியதில் 24 வயதான வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சன்டிபாப் விளைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் தாய்லாந்தின் சுங்கை கோலோக் பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கியதில் 24 வயதான வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>சன்டிபாப் விளையாட்டரங்கில் சொம்கொல்ட்ஸ் மற்றும் அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சொம்கொல்ட்ஸ் அணியின் வீரரான சோவ்யான் அவேய் மீது திடீரென மின்னல் தாக்கியுள்ளது.</p><p>மின்னல் தாக்கியதில் அவர் மைதானத்திலேயே சரிந்து விழுந்தார். உடனடியாக சக வீரர்கள் மற்றும் அவசர வைத்திய குழுவினர் அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சம்பவத்தில் கால்பந்து வீரர் உட்பட மொத்தம் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி வீரர் உயிரிழந்த இந்தச் சம்பவம் தாய்லாந்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது</p>]]></content>
            <updated>2026-08-06T09:48:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்கொரியாவில் கடும் வெப்ப அலை; 20க்கும் மேற்பட்டோர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/severe-heatwave-in-south-korea-over-20-dead-1786004763"></link>
            <id>https://canadamirror.com/article/severe-heatwave-in-south-korea-over-20-dead-1786004763</id>
            <summary type="text">தென்கொரியாவை கடுமையாகத் தாக்கியுள்ள வெப்ப அலை, தலைநகர் சியோலில் இன்று (06) உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.தலைநகரில் வெப்பநிலை 39 டிகிரி செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்கொரியாவை கடுமையாகத் தாக்கியுள்ள வெப்ப அலை, தலைநகர் சியோலில் இன்று (06) உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தலைநகரில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் (102 ஃபாரன்ஹீட்) வரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்த வெப்ப அலை குறித்து கருத்து தெரிவித்த அதிபர் லீ ஜே-மியுங், “நாம் இதற்கு முன் அனுபவிக்காத அளவில் வெப்ப அலைகளை அனுபவித்து வருகிறோம். </p><p>முன்பு வெளிநாட்டு செய்தி அறிக்கைகளில் மட்டுமே காணப்பட்ட வெப்ப அலைகள் இப்போது நமது நிஜமாகிவிட்டன,” என்றார்.&nbsp;</p><p>பகலின் வெப்பமான நேரங்களில் வெளிப்புறப் பணியாளர்களுக்குக் கட்டாய ஓய்வு நேரங்களை கடுமையாக அமல்படுத்துவதாகவும் அதிபர் அறிவித்தார்.</p><p><br></p><p>இதற்கு முந்தைய அதிகபட்ச வெப்பம் ஆகஸ்ட் 2018-ல் பதிவானது, அப்போது வெப்பநிலை 39.6 டிகிரி செல்சியஸை எட்டியது</p>]]></content>
            <updated>2026-08-06T08:26:13+00:00</updated>
        </entry>
    </feed>
