<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-15T08:28:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம்; அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/middle-east-tension-us-issues-stern-warning-1786772116"></link>
            <id>https://canadamirror.com/article/middle-east-tension-us-issues-stern-warning-1786772116</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மற்றும் அரசியல் பதற்றங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளமை உலக நாடுகளில்&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மற்றும் அரசியல் பதற்றங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளமை உலக நாடுகளில்&nbsp; பதற்றத்தை ஏற்படுடததியுள்ளது.</p><p>இந்தநிலையில், ஈரான் தோற்கடிக்கப்பட்ட பின்னர், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை, ":அமெரிக்காவின் பிராந்தியம்" என விரைவில் அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>எனினும், இந்த நீர்சந்தி எப்போதுமே ஈரானின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்றும், ஈரானின் அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் கடந்து செல்ல முடியாது என்றும் ஈரானிய இராணுவம் பதில் அளித்துள்ளது.</p><p>இதற்கிடையில், தெஹ்ரானை முற்றாக தனிமைப்படுத்தும் நோக்கில், ஈரான் மீது இதுவரை கண்டிராத கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) எச்சரித்துள்ளார்.</p><p>இதேவேளை, லெபனான் அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைப் போக்கை ஏற்க முடியாது என்றும், இது "சரணடைவதற்கு" சமம் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசிம் (Naim Qassem) குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>லெபனான் அரசு இஸ்ரேலின் நிபந்தனைகளுக்குப் பணியக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>அதேவேளை&nbsp; ஏமனின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மொகா துறைமுக நகர் மீது ஹு தி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக&nbsp; அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T08:10:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் பெரும் காட்டுத்தீ; 525 பேர் அவசரமாக வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/massive-wildfire-in-france-525-people-evacuated-1786781082"></link>
            <id>https://canadamirror.com/article/massive-wildfire-in-france-525-people-evacuated-1786781082</id>
            <summary type="text">பிரான்ஸின் லேண்டஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் காட்டுத்தீ காரணமாக 525 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.அடர்ந்த பை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் லேண்டஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் காட்டுத்தீ காரணமாக 525 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>அடர்ந்த பைன் காடுகளுக்குப் புகழ்பெற்ற லேண்டஸ் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வெப்பம் நிலவி வந்துள்ளது. இதனால் காடுகள் வறண்டு, தீப்பற்றக்கூடிய அபாயகரமான நிலையில் காணப்பட்டன.</p><p>இந்நிலையில், லக்லான் கிராமத்திற்கு அருகிலுள்ள காடுகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.</p><p>சுமார் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையுடன் பலத்த காற்றும் வீசியதால், தீ வேகமாகப் பரவி சுமார் 2,700 ஏக்கர் வனப்பகுதியை எரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தீ தற்போது கிராமத்திற்கு மிக அருகில் சென்றுள்ளதால், உயிருக்கு அஞ்சிய 525 பேர் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆறு விமானங்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p><div><br></div>]]></content>
            <updated>2026-08-15T08:04:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிச்சிகன் மாநிலத்தில் ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றவர் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/person-killed-five-people-in-michigan-found-dead-1786776956"></link>
            <id>https://canadamirror.com/article/person-killed-five-people-in-michigan-found-dead-1786776956</id>
            <summary type="text">அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், தீவிர தேடுதலின் பின்னர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், தீவிர தேடுதலின் பின்னர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மிச்சிகன்&nbsp; பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>மிசாக்கி கவுண்டியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக கிடைத்த தகவலையடுத்து, நேற்று (14) காலை சுமார் 11.40 மணியளவில் பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.</p><p>அங்கு மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதுடன், நான்காவது நபர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபராக 39 வயதான சாட் ஹிக்மேன் அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸார் சம்பவ இடத்தை சென்றடைவதற்கு முன்னரே அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து சந்தேகநபரைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், மற்றொரு குடியிருப்பில் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.</p><p>பின்னர் விட்லாக் ஏரிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் சந்தேகநபரின் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு சந்தேகநபரும் மற்றொருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.</p><p>இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T06:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/powerful-7-7-magnitude-earthquake-in-indonesia-1786771486"></link>
            <id>https://canadamirror.com/article/powerful-7-7-magnitude-earthquake-in-indonesia-1786771486</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கு அப்பால் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக&amp;nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று (15)அதிகாலை 3....</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கு அப்பால் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இன்று (15)அதிகாலை 3.28 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாகப் பூகம்பவியல் மையங்கள் தெரிவித்துள்ளன.</p><p>நிலநடுக்கத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளுக்கு உடனடியாக ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>எனினும் இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக் கடலோரப் பகுதிகளுக்கோ அல்லது நாட்டிற்கோ எந்தவித ஆழிப்பேரலை அச்சுறுத்தலும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் இடர் மேலாண்மை மையம் என்பன அறிவித்துள்ளன.</p><p>அத்துடன் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், நிலவரம் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T05:24:51+00:00</updated>
        </entry>
    </feed>
