<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-28T05:58:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-earthquake-in-qinghai-province-china-1785217814"></link>
            <id>https://canadamirror.com/article/two-earthquake-in-qinghai-province-china-1785217814</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயின் ஜங்ஹாய் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11:16 மணிக்கு 5.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகச் சீன ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயின் ஜங்ஹாய் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11:16 மணிக்கு 5.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகச் சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.
</p><p>


CENC இன் தகவல்படி, 18 நிமிடங்களுக்குப் பிறகு இதே மாகாணத்தில் 5.8 ரிச்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98ac09b-d576-40da-bf4d-f5c9e133fd4b/26-6a6843181d053.webp' /></p><p>



இரண்டு நிலநடுக்கங்களும் 10 கி.மீ (6.2 மைல்) ஆழத்தைக் கொண்டிருந்ததுடன், கிங்ஹாய் மாகாணத்தின் தலைநகரான ஸீனிங்கிலிருந்து (Xining) சுமார் 244 கி.மீ தூரத்தில் பதிவாகியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-28T05:48:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இளம்பெண்ணைக் கொன்ற நபர் தப்பியோட்டம்: பொலிசார் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-girl-shot-death-in-canada-suspect-abscond-1785215412"></link>
            <id>https://canadamirror.com/article/indian-girl-shot-death-in-canada-suspect-abscond-1785215412</id>
            <summary type="text">கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவரை சுட்டுக்கொன்ற நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் பெரும் எண்ணிக்கையிலான பொலிசார் அதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவரை சுட்டுக்கொன்ற நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் பெரும் எண்ணிக்கையிலான பொலிசார் அதிரடியாக அவரைக் கைது செய்துள்ளார்கள்.
</p><p>
வெள்ளிக்கிழமை காலை 7.23 மணியளவில், கனடாவின் ரொரன்றோவில், நவ்நீத் கௌர் (26) என்னும் இளம்பெண் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/846ffa76-1ea3-4ca0-aaac-c2a76683e203/26-6a6839b5c9d3b.webp' /></p><p>

கௌரை பின் தொடர்ந்த ஒருவர், திடீரென அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
</p><p>
தகவலறிந்த பொலிசார், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் அதிரடியாக அவரைக் கைது செய்துள்ளார்கள்.
</p><p>
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஷரன்ஜீத் சிங் (37) என்றும் அவர் பிராம்டனைச் சேர்ந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
அவர் ஏற்கனவே கௌருக்கு அறிமுகமானவரா, எதனால் கௌரை அவர் சுட்டார் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.</p><p>
சிங் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-28T05:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை புகழ்ந்து பாாட்டும் ரஷ்ய அதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/putin-praises-iran-s-mosquito-fleet-1785214649"></link>
            <id>https://canadamirror.com/article/putin-praises-iran-s-mosquito-fleet-1785214649</id>
            <summary type="text">&amp;nbsp;மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், ஈரானின் &#039;சிறுகப்பல் படைகளை&#039; ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெகுவாகப் பாராட்டியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், ஈரானின் 'சிறுகப்பல் படைகளை' ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெகுவாகப் பாராட்டியுள்ளார். </p><p>
ரஷ்ய கடற்படை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்ததாக ரஷ்ய அரசின் 'ஸ்புட்னிக்' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>
மத்திய கிழக்கு மோதல் மண்டலத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள், எனக் குறிப்பிட்ட புடின், ஈரானியக் கடற்படை தங்களது 'மஸ்கிட்டோ ஃபிலீட்' மூலம் நவீன போர்மறையில் மிகவும் திறம்படச் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0460e0d4-9cf4-4b37-b210-9c4c44406246/26-6a6836bb1ee6c.webp' /></p><p> 
இது புதிய தொழில்நுட்பங்களின் விளையாட்டு. நம்மிடமும் குறைந்த எடைகொண்ட சிறிய கப்பல்கள் உள்ளன; ஆனால் அவை அதிநவீன ஆயுதங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>ஸ்புட்னிக் தகவலின்படி, ஈரானின் 'மஸ்கிட்டோ ஃபிலீட்' என்பது சுமார் 20 'காதிர்-கிளாஸ்' சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அதிவேக ஏவுகணைப் படகுகளைக் கொண்ட ஒரு கடற்படை அமைப்பாகும்.
</p><p>மிகச் சிறியதாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கக்கூடிய இந்தப் படகுகள் எதிரிகளின் பெரிய போர்க்கப்பல்களைக் குழப்பித் தாக்கும் வல்லமை கொண்டவை. </p><p>
ஈரானின் பாறை நிறைந்த கடலோரப் பகுதிகளில் செதுக்கப்பட்டுள்ள நிலத்தடி குகைகளுக்குள் இவற்றை எளிதாக மறைத்து வைக்க முடியும்.
</p><p>இந்த மறைவிடங்கள் மற்றும் வேகக் காரணிகளால், அமெரிக்காவின் நீண்டதூரம் சென்று தாக்கும் அதிநவீன ஆயுதங்களாலும் கூட இவற்றை எளிதில் அழிப்பது மிகவும் கடினம் எனக் கூறப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T05:05:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் - லெபனான் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை: அமெரிக்கா அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-lebanon-talks-to-be-held-on-august-4-1785215026"></link>
            <id>https://canadamirror.com/article/israel-lebanon-talks-to-be-held-on-august-4-1785215026</id>
            <summary type="text">&amp;nbsp;இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான அடுத்தகட்ட அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த தூதரகப் பேச்சுவார்த்தை வரும் ஆகஸ்ட் 4 முதல் 6 ஆம் திகதி வரை இத்தாலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான அடுத்தகட்ட அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த தூதரகப் பேச்சுவார்த்தை வரும் ஆகஸ்ட் 4 முதல் 6 ஆம் திகதி வரை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். </p><p>
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவது குறித்து இரு நாடுகளின் தொழில்நுட்பக் குழுக்கள் இதில் கவனம் செலுத்தும்.</p><p> 
தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட 'சோதனை மண்டலங்களை' மேலும் விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db04db45-57d8-415f-89ae-1a63257940b9/26-6a68383408e64.webp' /></p><p> 
நிலுவையில் உள்ள எல்லைத் தகராறுகளுக்குத் தீர்வு காண்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையே முழுமையான அமைதி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p> 
இந்த ஒப்பந்தத்தின் படி, கட்டம் கட்டமாகச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
</p><p>லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதங்கள் முழுமையாகக் களையப்பட வேண்டும். </p><p>
அதனைத் தொடர்ந்து, லெபனான் ராணுவம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தனது இறையாண்மையையும் கட்டுப்பாட்டையும் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்.
</p><p>இந்த நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே, தெற்கு லெபனானில் இருக்கும் இஸ்ரேலியப் படைகள் படிப்படியாகத் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பப் பெறப்படும்.
</p><p>முதற்கட்டமாக இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவதற்காக இரண்டு 'சோதனை மண்டலங்கள்' அடையாளம் காணப்பட்டு, அமைதி முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T05:04:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 90 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய மர்மக் கொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/oronto-police-identify-2-separate-cold-case-1785214126"></link>
            <id>https://canadamirror.com/article/oronto-police-identify-2-separate-cold-case-1785214126</id>
            <summary type="text">கனடாவின் தொராண்டோ நகரில் பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த இரண்டு பழைய மர்மக் கொலை வழக்குகளில் பலியான பெண்களின் அடையாளங்களை, நவீன மரபியல் தொழில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் தொராண்டோ நகரில் பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த இரண்டு பழைய மர்மக் கொலை வழக்குகளில் பலியான பெண்களின் அடையாளங்களை, நவீன மரபியல் தொழில்நுட்பமான ஐ.ஜீ.ஜீ. மூலம் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
</p><p>இதில் 90 ஆண்டுகளுக்கு முன்பு கணவரால் கொடூரமாகக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட பெண் ஒருவரின் மர்மமும் அடங்கும்.
</p><p>கடந்த 1995-ஆம் ஆண்டு, தொராண்டோவில் உள்ள 'டான்ஃபோர்த் மற்றும் காக்ஸ்வெல்' பகுதியில் பழைய கார் விற்பனையகக் கட்டடம் ஒன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், பூமிக்கு அடியில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருப்பதை அவதானித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2861e21-753a-4653-ac80-dab93818bc7f/26-6a6834af9d2b5.webp' /></p><p>
மருத்துவப் பரிசோதனையில், அந்தப் பெண் சுத்தியல் போன்ற கனமான ஆயுதத்தால் மண்டையில் 6 முறை தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதும், பின்னர் திட்டமிட்டுப் புதைக்கப்பட்டதும் உறுதியானது.
</p><p>கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அந்த உடலின் அடையாளம் தெரியாமல் இருந்தது. மண்ணில் பல ஆண்டுகள் இருந்ததால் பாக்டீரியாக்களால் டி.என்.ஏ மாதிரிகளைப் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. </p><p>
ஆனால், அண்மையில் எலும்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பெறப்பட்ட தூய்மையான டி.என்.ஏ மூலம், இறந்தவர் மேரி மெக்லியோட் மாஃபாட் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>
1905-இல் ஸ்காட்லாந்தில் பிறந்த மேரி, 1913-இல் கனடாவிற்கு இடம்பெயர்ந்தார்.
மேரியின் கணவரான ஆண்ட்ரூ லாயிட் மாஃபாட் என்பவரே இக்கொலையைச் செய்துள்ளார். </p><p>
மேரிக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணை மணந்து தொராண்டோவில் வாழ்ந்து வந்த கணவரைத் தேடி மேரி வந்தபோது ஏற்பட்ட தகராறில், ஏப்ரல் 1936-இல் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.</p><p>
கொலையாளி ஆண்ட்ரூ, தனது காரியகத்திற்கு அருகிலேயே மேரியைப் புதைத்துவிட்டு, 'டிரேக் லாயிட் கம்மிங்ஸ்' என்ற போலி பெயரில் அமெரிக்கா மற்றும் வான்கூவரில் தலைமறைவாக வாழ்ந்து, மொத்தம் 4 பெண்களைத் திருமணம் செய்துகொண்டு 1985-இல் உயிரிழந்தார்.
</p><p>இதேவேளை, ஏப்ரல் 22, 2004 அன்று, நெடுஞ்சாலை 401-இல் ஒரு கார் வேண்டுமென்றே டிராக்டர்-டிரெய்லர் மீது மோதி விபத்துக்குள்ளானது. </p><p>காரின் பயணியர் இருக்கையில் எரிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
</p><p>காரை ஓட்டிவந்த சியுமி கில்ஃபு என்பவர், காரைக் கொளுத்தி ஆதாரங்களை அழிக்க முயன்றதற்காகவும், வாகனத்தை ஆபத்தாக இயக்கியதற்காகவும் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று 2012-இல் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். </p><p>ஆனால், இறந்த பெண் யார் என்பதை அவர் கடைசி வரை கூறவில்லை.
தற்போது ஐ.ஜீ.ஜீ தொழில்நுட்பம் மூலம் அந்தப் பெண் மணிடோபாவைச் சேர்ந்த பேட்ஸி புளோரா லாகார்ட் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பழங்குடியினப் பின்னணியைக் கொண்டவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
பல தசாப்தங்களாக விடை தெரியாமல் இருந்த இந்த இரண்டு வழக்குகளிலும், உயிரிழந்த பெண்களின் உண்மையான அடையாளங்கள் மீட்டெடுக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-28T04:50:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹெய்ட்டி மற்றும் சிரிய அகதிகள்: கனடாவிற்குள் மீண்டும் நுழைய முடியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/option-for-thousands-of-haitians-and-syrians-1785213434"></link>
            <id>https://canadamirror.com/article/option-for-thousands-of-haitians-and-syrians-1785213434</id>
            <summary type="text">அமெரிக்காவில் வாழும் 3,50,000-க்கும் அதிகமான ஹெய்ட்டி நாட்டினரும், சுமார் 6,000 சிரிய நாட்டினரும் தங்களது &#039;தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை&#039; இழக்கும் நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் வாழும் 3,50,000-க்கும் அதிகமான ஹெய்ட்டி நாட்டினரும், சுமார் 6,000 சிரிய நாட்டினரும் தங்களது 'தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை' இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p> இதனால், அவர்கள் மீண்டும் கனடாவிற்குள் பெருமளவில் தஞ்சமடைய முயல்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
</p><p>இயற்கைப் பேரிடர்கள் மற்றும் உள்நாட்டுப் போர்கள் காரணமாகத் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாத வெளிநாட்டினருக்கு அமெரிக்கா TPS என்ற பாதுகாப்பை வழங்கி வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20b8b2f2-041e-420a-aa2c-d85daf4608e6/26-6a6831fc2ff28.webp' /></p><p> 
ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பைத் தொடர்ந்து, இந்தத் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
</p><p>இதனால், அங்கு வாழும் ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் அல்லது நாடு கடத்தப்படும் அபாயத்தைச் சந்திக்க வேண்டும்.
</p><p>கடந்த காலங்களில் அமெரிக்காவில் பாதுகாப்பு அந்தஸ்தை இழக்கும் பலர் கனடா எல்லை வழியே, குறிப்பாக 'ராக்ஸாம் ரோடு' போன்ற உத்தியோகபூர்வமற்ற எல்லைப் பாதைகள் வழியாகக் கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் போக்கு காணப்பட்டது.</p><p> 
எனினும், தற்போதைய சூழ்நிலை முற்றிலும் வேறுபட்டது என தொராண்டோவைச் சேர்ந்த குடிவரவு வழக்கறிஞர் ஜோயல் சாண்டலக் தெரிவித்துள்ளார்.
</p><p>கனடா அரசாங்கம் தற்போதைய சூழ்நிலையில் ஹெய்ட்டி மற்றும் சிரியா நாடுகளுக்கு மக்களைத் திருப்பி அனுப்புவதில்லை. </p><p>எனவே, ஏற்கனவே கனடாவிற்குள் இருப்பவர்கள் மனிதநேய அடிப்படையில் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. 
ஆனால், புதிதாக அமெரிக்க எல்லையைக் கடந்து கனடாவிற்குள் நுழைவது சாத்தியமற்றது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T04:49:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மருத்துவ உதவியுடன் உயிரை மாய்த்துக் கொண்ட டிக்டாக் பிரபலம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-tiktoker-with-young-onset-alzheimers-1785212719"></link>
            <id>https://canadamirror.com/article/bc-tiktoker-with-young-onset-alzheimers-1785212719</id>
            <summary type="text">கனடாவின் விக்டோரியா பகுதியைச் சேர்ந்த பிரபல டிக்டாக் நட்சத்திரமான ரெபெக்கா லூனா, மருத்துவ உதவியுடன் கூடிய மரணம் மூலம் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் விக்டோரியா பகுதியைச் சேர்ந்த பிரபல டிக்டாக் நட்சத்திரமான ரெபெக்கா லூனா, மருத்துவ உதவியுடன் கூடிய மரணம் மூலம் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.</p><p>
இளம் வயதிலேயே அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ரெபெக்கா லூனா, 'WhereDidBecsGo' என்ற கணக்கு மூலம் சமூக வலைத்தளங்களில் 95,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைப் பெற்றிருந்தார். </p><p>
அல்சைமர் நோயுடன் வாழும் தனது அன்றாட அனுபவங்களையும், "இறக்கும் தருவாயில் டேட்டிங் செய்வது" மற்றும் "புலப்படாத குறைபாடுகளுடன் பயணம் செய்வது" போன்ற தலைப்புகளில் வெளிப்படையாகப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0e6e5b0-85f1-4cc2-85f8-0f00aa503098/26-6a682f30e583e.webp' /></p><p>
</p><p>அண்மையிால் தனது உடலமைப்பில் ஏற்பட்ட அசௌகரியங்கள் காரணமாக, தனக்குக் குறிப்பிட்டிருந்த மருத்துவ உதவியுடனான உயிர் மாய்ப்பு திகதியை முன்கூட்டியே மாற்றி அமைப்பதாகத் தனது ஆதரவாளர்களுக்குத் தெரிவித்திருந்தார். </p><p>
என்னுடைய சொந்த விருப்பத்தின் பேரிலும், நிபுணத்துவப் பராமரிப்பு மருத்துவரின் ஆலோசனையின் பேரிலும் இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் தனது இறுதி வீடியோவில் பகிர்ந்திருந்தார்.</p><p>
தனது கடினமான சூழ்நிலையிலும் மதுப் பழக்கத்தைக் கைவிட்டு உறுதியாக இருந்ததை எண்ணிப் பெருமைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
நான் 50 வயதை எட்டுவதற்குள் இறக்க விரும்பவில்லை, ஆனால் நான் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.</p><p>
 மேலும், அனைவரும் தம்மைத் தாமே நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T04:41:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 97 வயதான முதியவர் மீது பேருந்து மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/97-year-old-kelowna-man-struck-and-killed-1785212228"></link>
            <id>https://canadamirror.com/article/97-year-old-kelowna-man-struck-and-killed-1785212228</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கெலோனா நகரில், முதியோர்களுக்கான மின்சார ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 97 வயது முதியவர் ஒருவர் பய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கெலோனா நகரில், முதியோர்களுக்கான மின்சார ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 97 வயது முதியவர் ஒருவர் பயணிகள் பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில், கெலோனாவில் உள்ள 'பென்வூலின் வீதி', 'ராம்போன் வீதி' சந்தை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. </p><p>
ஸ்கூட்டரும் பேருந்தும் மோதிக்கொண்டதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, கெலோனா பொலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e025cdca-997d-43a1-8ff6-9e619f9ebf2b/26-6a682d45db185.webp' /></p><p>
</p><p>பேருந்து மோதியதில் படுகாயமடைந்த 97 வயது முதியவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.</p><p> இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p> முதியவர் விபத்துக்குள்ளான பென்வூலின் வீதியின் அந்தப் பகுதியில், சாலையையும் அதன் ஓரப்பகுதியையும் பிரிக்கும் வகையில் எந்தவொரு பாதுகாப்புத் தடுப்புச் சுவர்களோ அல்லது உயர்த்தப்பட்ட நடைபாதைகளோ அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து கெலோனா பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> முதற்கட்ட விசாரணையில் இதில் குற்றச் செயல்களோ அல்லது போதைப்பொருள்/மதுப் பயன்பாடோ காரணமில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T04:40:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்கள் நிறைந்த பூங்காவிற்குள் ஆபத்தான முறையில் காரைச் செலுத்திய 23 வயது இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/driving-through-playground-packed-with-children-1785211628"></link>
            <id>https://canadamirror.com/article/driving-through-playground-packed-with-children-1785211628</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் அஜாக்ஸ் பகுதியில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நிறைந்திருந்த பூங்காவிற்குள் ஆபத்தான முறையில் காரைச் செலுத்தி அச்சுறுத்தல் ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் அஜாக்ஸ் பகுதியில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நிறைந்திருந்த பூங்காவிற்குள் ஆபத்தான முறையில் காரைச் செலுத்தி அச்சுறுத்தல் ஏற்படுத்திய 23 வயது இளைஞர் மீது துர்ஹாம் பிராந்திய பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
</p><p>கடந்த ஜூலை 18 அன்று மாலை 6:30 மணியளவில், 'லேக் டிரைவ்வே வெஸ்ட்' பகுதியில் உள்ள 'ரோட்டரி பூங்காவில்' வெள்ளை நிற டொயோட்டா ரக கார் ஒன்று ஆபத்தான முறையில் இயக்கப்படுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.</p><p>
சிறுமிகள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் நடமாடிக் கொண்டிருந்த விளையாட்டுக் களம், நீர் விளையாட்டுக் களம் மற்றும் நடைபாதைகளின் வழியே அந்த கார் வேகமாகச் செலுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9dd65fe-8e9c-4caf-96da-ea8285baa061/26-6a682aed951ca.webp' /></p><p> 
அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
சம்பவ இடத்தை விட்டுச் சென்ற அந்த காரை, பூங்காவிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் 'வெஸ்ட்னி வீதி தெற்கு' மற்றும் 'பேலி வீதி மேற்கு' பகுதியில் கண்டறிந்த பொலிஸார் அதை நிறுத்த முயன்றனர். </p><p>ஆனால், காரை ஓட்டிவந்த நபர் பொலிஸாரிடமிருந்து தப்பித்து, மீண்டும் அதே பூங்காவிற்குச் சென்று பாதசாரிகள் செல்லும் பாலத்தின் வழியே காரைச் செலுத்தியுள்ளார்.</p><p>
இதனைத் தொடர்ந்து, 'ஹார்வுட் அவென்யூ தெற்கு' மற்றும் 'பேலி வீதி கிழக்கு' பகுதியில் அந்த காரை பொலிஸார் மறிக்க முயன்றபோது, அவர் மீண்டும் தப்பிக்க முயன்று அருகிலிருந்த ஜி.எம்.சீ ரக வாகனம் மீது மோதியுள்ளார்.</p><p> 
உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் அவரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
</p><p>கைது செய்யப்பட்டவர் அரோரா பகுதியைச் சேர்ந்த 23 வயதான இஸ்மாயில் அப்ராஹிம்சாதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>
அவர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் பொலிஸாரின் உத்தரவை மீறி வாகனத்தை நிறுத்தாமல் தப்பியோட முயன்றமை ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T04:08:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான நடவடிக்கை ; அமெரிக்க வீரர்கள் காயம் தொடர்பில் புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/action-against-iran-new-infor-injuries-us-soldiers-1785182382"></link>
            <id>https://canadamirror.com/article/action-against-iran-new-infor-injuries-us-soldiers-1785182382</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 624க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமான பென்டகன் அறிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 624க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமான பென்டகன் அறிவித்துள்ளது.</p><p>
</p><p>
அமைதி உடன்படிக்கை முறிந்ததைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே மோதல்கள் நீடித்து வரும் நிலையில், பலியான மற்றும் காயமடைந்த வீரர்களின் புள்ளிவிபரங்களை பென்டகன் இரகசியமாக மாற்றியமைத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/569d1b08-e890-429c-853b-1232391e402a/26-6a67b8afdabe8.webp' /></p><p>பலியான வீரர்களின் பட்டியலை "வெளிநாட்டு நடவடிக்கைகள்" என்ற புதிய பிரிவின் கீழ் வகைப்படுத்தி பென்டகன் வெளியிட்டுள்ள தரவுகள், போரின் உண்மைத் தன்மையை மறைக்கும் முயற்சி என முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
</p><p>
எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இணையதளத் தரவுகளில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ள பென்டகன், அதனைச் சரிசெய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் விளக்கமளித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-28T00:45:16+00:00</updated>
        </entry>
    </feed>
