<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-01T12:36:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில், ஜோதிடர் என 8 லட்சம் டொலர் மோசடி செய்த நபர் இந்தியா தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-man-who-posed-as-psychic-1785515890"></link>
            <id>https://canadamirror.com/article/indian-man-who-posed-as-psychic-1785515890</id>
            <summary type="text">இந்தியா தப்பியோட்டம்
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா தப்பியோட்டம்
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைக்கு எதிராக நாடு முழுவதும் பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
கங்காதர் பாபு என்பவர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
 2024 ஏப்ரல் முதல் 2025 செப்டம்பர் வரை இந்த மோசடி இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
விசாரணையின்படி, "பாபு" என்ற பெயரில் சேவையாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர், தன்னை ஆன்மீக சக்தி கொண்டவராகவும், எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடராகவும், ஆன்மீக சிகிச்சையளிப்பவராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/133c6d93-1595-4152-901d-778eab4d3550/26-6a6ccf7430536.webp' /></p><p>
</p><p>பாதிக்கப்பட்டவரையும் அவரது குடும்பத்தினரையும் மரணம் அல்லது கடுமையான தீங்கு சூழும் என அச்சுறுத்தி, அதிலிருந்து காப்பாற்ற விசேட ஆன்மீக சடங்குகள் நடத்த வேண்டுமெனக் கூறி தொடர்ந்து பணம் பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>கங்காதர் பாபு மீது 5,000 டொலருக்கு மேற்பட்ட மோசடி, குற்றச்செயலில் கிடைத்த வருமானத்தை வைத்திருத்தல் மற்றும் நிதிச் சலவையில் ஈடுபடல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>
சந்தேகநபர் தற்போது இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என டொராண்டோ காவல்துறை நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கங்காதர் பாபு சுமார் 5 அடி 6 அங்குல உயரம், ஒல்லியான உடலமைப்பு, கருமையான சுருட்டை முடி, அடர் பழுப்பு நிறக் கண்கள், ஒழுங்காக வெட்டப்பட்ட தாடி மற்றும் முன்பற்களுக்கு இடையில் தெளிவான இடைவெளி கொண்டவராக விவரிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த நபரால் ஏமாற்றப்பட்டிருக்கக்கூடிய மேலும் பலர் இருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதுடன், வழக்குத் தொடர்பான தகவல்கள் இருப்பவர்கள் முன்வருமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T12:26:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினிற்குள் நுழைந்த 60,000 ஏதிலிகள்; திரும்பி சென்ற 50,000 பேர்! 57 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/60-000-refugees-entered-spain-50-000-returned-1785562207"></link>
            <id>https://canadamirror.com/article/60-000-refugees-entered-spain-50-000-returned-1785562207</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) பகுதிக்குள் நுழைந்த சுமார் 60,000 ஏதிலிகளில், 50,000 பேர் தன்னார்வமாக மீண்டும் மொராக்கோவுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) பகுதிக்குள் நுழைந்த சுமார் 60,000 ஏதிலிகளில், 50,000 பேர் தன்னார்வமாக மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட நெரிசல் மற்றும் கடலைக் கடந்து நீந்திச் செல்லும் முயற்சியின் போது, மூழ்கி மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 57 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a5545f1-ddcd-4033-a18f-00f905547841/26-6a6d84617c993.webp' /></p><p>
</p><p>
மனிதக் கடத்தல் கும்பல்கள் இந்த நிலைமையைப் பயன்படுத்தி மக்களை சட்டவிரோதமாக எல்லை தாண்டத் தூண்டியதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மனிதக் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T10:53:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீவ் மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு... 23 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-fierce-attack-on-kyiv-9-dead-23-injured-1785579145"></link>
            <id>https://canadamirror.com/article/russia-fierce-attack-on-kyiv-9-dead-23-injured-1785579145</id>
            <summary type="text">&amp;nbsp; உக்ரைனின் தலைநகரான கீவ் மீது இரவோடு இரவாக ரஷ்யா ஏவுகணைகளை வீசித் தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் காயமடைந்துள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உக்ரைனின் தலைநகரான கீவ் மீது இரவோடு இரவாக ரஷ்யா ஏவுகணைகளை வீசித் தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் மாநில அவசரகால சேவை சனிக்கிழமை காலை தெரிவித்தது.
</p><p>
ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைகள் பல வீடுகளையும் ஐந்து மாடிக் குடியிருப்பு கட்டிடம் ஒன்றையும் தாக்கியதோடு, கார்களும் தீப்பற்றி எரிந்தன.

காயமடைந்த 23 பேரில் நான்கு பேர் குழந்தைகள் என அவசர சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86b1f800-4308-43eb-ba0f-04b5042f634c/26-6a6dc68a7883c.webp' /></p><p>
</p><p>
தாக்குதலின் போது சேதமடைந்த குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் பலர் சிக்கிக்கொண்டதாக கீவ் மேயர் விட்டலி கிளிச்கோ தெரிவித்துள்ளார்.

கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளங்கள் பகுதியளவு இடிந்து விழுந்ததாகவும், அதேவேளையில் நகரிலுள்ள சில கிடங்குகளிலும் தீப்பிடித்து எரிந்ததாகவும் அவர் கூறினார்.</p><p>

ரஷ்யா ஒரே இரவில் 27 பாலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட 35 ஏவுகணைகளையும், 185 தாக்குதல் ட்ரோன்களையும் ஏவியதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். </p><p>ஒரே ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மட்டுமே இடைமறிக்கப்பட்டதாகவும், உக்ரைனின் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான இடைமறிப்பான்களின் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
</p><p>
18 குடியிருப்பு கட்டிடங்கள், ஒரு பள்ளி, லித்துவேனிய தூதரகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்தன என்றும் கீவ் மேயர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-01T10:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் ரூ.10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drugs-worth-10-crore-gift-package-from-thailand-1785573805"></link>
            <id>https://canadamirror.com/article/drugs-worth-10-crore-gift-package-from-thailand-1785573805</id>
            <summary type="text">தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p>
</p><p></p><p>பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய பொதியாக அனுப்பப்பட்ட நிலையிலேயே இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff864632-a4d2-4ae4-a6f5-ed40fe4a215e/26-6a6db1ae5c9ab.webp' /></p><p>குறிப்பிட்ட பரிசுப் பொருட்கள் அடங்கிய தொகுதி, சோதனையிடப்பட்டு விடுவிக்கப்படும் வரை களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், அந்தச் சோதனைகள் நேற்று (31) முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>

இதன்போது, உலோகக் கொள்கலன்களுக்குள் (Metal containers) மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தீன் பைகளிலிருந்து மரிஜூவானா, ஹஷீஷ் உள்ளிட்ட 10.608 கிலோ கிராம் எடையுள்ள போதைப்பொருட்களைச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். </p><p>

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாவிற்கும் (106,080,000) அதிகமெனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T08:50:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினிலிருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக எல்லைச் சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/italy-has-new-procedures-travelers-coming-spain-1785572238"></link>
            <id>https://canadamirror.com/article/italy-has-new-procedures-travelers-coming-spain-1785572238</id>
            <summary type="text">ஸ்பெயினிலிருந்து இத்தாலிக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக எல்லை அடையாளச் சோதனைகளை மீண்டும் அறிமுகப்படுத்த இத்தாலி அரசு தீர்மானித்துள்ளது.

ஸ்பெயினி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயினிலிருந்து இத்தாலிக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக எல்லை அடையாளச் சோதனைகளை மீண்டும் அறிமுகப்படுத்த இத்தாலி அரசு தீர்மானித்துள்ளது.</p><p>

ஸ்பெயினின் வெளி எல்லைகளில் அதிகரித்துள்ள ஒழுங்கற்ற குடியேற்ற முயற்சிகள் மற்றும் அதனால் உருவாகியுள்ள பாதுகாப்பு கவலைகளை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நடவடிக்கையால், ஸ்பெயினிலிருந்து நேரடியாக இத்தாலிக்கு விமானம் அல்லது பிற வழிகளில் வரும் பயணிகள், விமான நிலையம் அல்லது நுழைவு மையங்களில் அடையாள ஆவணச் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9d3efb-b070-4980-894b-2ba1b7932284/26-6a6dab9018d67.webp' /></p><p>எனினும், இது இத்தாலி Schengen ஒப்பந்தத்திலிருந்து முழுமையாக விலகியுள்ளதாக அர்த்தமல்ல. </p><p>Schengen விதிகளின் கீழ், பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு தொடர்பான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால், உறுப்பு நாடுகள் தற்காலிகமாக உள்எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தும் அதிகாரம் கொண்டுள்ளன.
</p><p>
Schengen ஒப்பந்தம் 1985ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு, 1995ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. தற்போது 29 ஐரோப்பிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. </p><p>இந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுப்பு நாடுகளுக்கிடையிலான வழக்கமான எல்லைச் சோதனைகள் நீக்கப்பட்டுள்ளதால், மக்கள் சுதந்திரமாகப் பயணிக்க முடிகிறது.
</p><p>
இந்நிலையில், தற்போதைய நடவடிக்கை Schengen ஒப்பந்தத்தை ரத்து செய்வதோ அல்லது அதிலிருந்து இத்தாலி வெளியேறுவதோ அல்ல; பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக எல்லை அடையாளச் சோதனைகளை மீண்டும் அமல்படுத்தும் நடவடிக்கையாகும்.</p>]]></content>
            <updated>2026-08-01T08:18:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடல் நுழைவாயிலில் மீண்டும் பதற்றம் ; எண்ணெய்க் கப்பல்கள் திசை மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tensions-rise-again-at-the-entrance-to-the-red-sea-1785570014"></link>
            <id>https://canadamirror.com/article/tensions-rise-again-at-the-entrance-to-the-red-sea-1785570014</id>
            <summary type="text">சௌதி அரேபியாவுக்குச் சொந்தமான 8 எண்ணெய்க் கப்பல்களை வழிமறித்து திசை திருப்பியுள்ளதாக யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா – ஈரான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சௌதி அரேபியாவுக்குச் சொந்தமான 8 எண்ணெய்க் கப்பல்களை வழிமறித்து திசை திருப்பியுள்ளதாக யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு ஈரானிய படைகள் தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. </p><p>இதற்கு ஆதரவாக யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படையும் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc6a172e-797d-4b7f-8ebf-5d53a7f1316d/26-6a6da2df7148b.webp' /></p><p>உலகின் முக்கிய வர்த்தக கடல் பாதைகளில் ஒன்றான செங்கடலுக்கான நுழைவாயிலான பாப் அல்-மண்டப் நீரிணை பகுதியை ஹௌதிகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், குறித்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் தொடர்பில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், பாப் அல்-மண்டப் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற சௌதி அரேபியாவின் 8 எண்ணெய்க் கப்பல்களை இடைமறித்து வேறு திசைக்கு திருப்பி அனுப்பியதாக ஹௌதி கிளர்ச்சிப்படையின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.</p><p>

எனினும், குறித்த கப்பல்கள் எந்த நாளில் அல்லது எப்போது இடைமறிக்கப்பட்டன என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. </p><p>இதுவரை சௌதி அரேபிய அரசாங்கத் தரப்பிலிருந்தும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
</p><p>
இதற்கு முன்னதாக, ஜூலை 20 ஆம் திகதி முதல் பாப் அல்-மண்டப் நீரிணை வழியாக சௌதி அரேபிய கப்பல்கள் பயணிப்பதற்கு ஹௌதி படைகள் தடை விதித்திருந்ததுடன், சௌதிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் எனவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-01T07:40:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நம்பிக்கை குறைந்து வருகிறது ; ஈரான் குறித்து டிரம்ப் கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-iran-conflict-trump-strongly-criticizes-iran-1785569356"></link>
            <id>https://canadamirror.com/article/us-iran-conflict-trump-strongly-criticizes-iran-1785569356</id>
            <summary type="text">ஈரான் மீதான தனது நம்பிக்கை குறைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றமான சூழ்நிலை தொடரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான தனது நம்பிக்கை குறைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றமான சூழ்நிலை தொடரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் மீண்டும் மோதல் நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a959b6b5-0ea1-413e-a4f1-fbc9ae2057ec/26-6a6da04d6152e.webp' /></p><p>இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
</p><p>
இந்நிலையில், ஈரான் தொடர்பில் கருத்து தெரிவித்த டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், ஈரானிய அதிகாரிகள் தங்களது வாக்குறுதிகளை அடிக்கடி மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

"ஈரான் குறித்து எனக்குள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது. அவர்கள் பொய் கூறுகின்றனர், தகவல்களை மாற்றிக் காட்டுகின்றனர். </p><p>பேச்சுவார்த்தைக்கு உடன்படுகின்றனர், ஆனால் பின்னர் அதனை மீறுகின்றனர்" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், ஈரான் தற்போது பலவீனமடைந்து வருவதாகவும், சில நேரங்களில் மீண்டும் வலிமை பெறலாம் என்றாலும், இறுதியில் மீண்டும் பலவீனமடைந்து மறைந்து போகும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-01T07:31:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கப் பயணம் தொடர்பில் கனேடியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-travel-advisory-to-us-over-cyclosporiasis-1785567504"></link>
            <id>https://canadamirror.com/article/canada-travel-advisory-to-us-over-cyclosporiasis-1785567504</id>
            <summary type="text">அமெரிக்க மாகாணமொன்றிற்குப் பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்காவின் மிச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க மாகாணமொன்றிற்குப் பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.</p><p>

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் ஒட்டுண்ணித் தொற்று பயங்கரமாக பரவி வருகிறது.</p><p>

ஜுலை 30 வரையிலான காலகட்டத்தில், மிச்சிகன் மாகாணத்தில், 10,700க்கும் அதிகமானவர்களுக்கு இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9ac77e-0d4f-4203-bda5-0fa83bfa38d4/26-6a6d991253a08.webp' /></p><p>
சைக்ளோஸ்போரியாசிஸ் கிருமித் தொற்றை ஏற்படுத்தக்கூடியது சைக்ளோஸ்போரா என்னும் கிருமி ஆகும்.
</p><p>
உணவு மற்றும் குடிநீர் வழியாக மட்டுமே பரவும் இந்த சைக்ளோஸ்போரா என்னும் கிருமி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம், வயிற்று வலி, லேசான காய்ச்சல், வாயுத்தொல்லை மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.
</p><p>
பல நாட்கள் அல்லது வாரங்களுக்கு நீடிக்கும் இந்த பிரச்சினைகள், முறையாக, முழுமையாக சிகிச்சை பெறாவிட்டால் மீண்டும் உருவாகும்.
</p><p>
விடயம் என்னவென்றால், மிச்சிகனை ஒட்டியுள்ள கனேடிய பகுதி வின்ஸ்டர் எசெக்ஸ்.
</p><p>
வின்ஸ்டர் எசெக்ஸிலிருந்து மக்கள் எல்லை கடந்து மிச்சிகனுக்குச் சென்றுவருவதுண்டு.
</p><p>
இந்நிலையில், பொதுவாக வின்ஸ்டர் எசெக்ஸில் அதிகபட்சமாக மூன்று பேருக்கு சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று கண்டறியப்படும் நிலையில், தற்போது வழக்கத்துக்கு மாறாக 24 பேருக்கு அந்த ஒட்டுண்ணித் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1e7c63c-57e3-4b1e-8915-7a31da6fb5a6/26-6a6d9911a1f86.webp' /></p><p>
ஆக, அமெரிக்காவுக்கு, அதாவது, மிச்சிகனுக்கு கனேடியர்கள் சென்று வருவதால், அவர்களுக்கு இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவியிருக்கலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.
</p><p>
ஆகவே, எல்லை கடந்து மிச்சிகனுக்குப் பயணிக்கும் கனேடியர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறும், லெட்டூஸ், சாலட் போன்ற உணவுகள் மூலமாக சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவுவதாக கருதப்படுவதால், அத்தகைய உணவுகளை உட்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்குமாறும் கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T06:59:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கடலில் காணமல் போனவரின் சடலம் மீட்பு; தேடப்படும் 3 படகுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/body-of-missing-person-found-in-negombo-waters-1785566450"></link>
            <id>https://canadamirror.com/article/body-of-missing-person-found-in-negombo-waters-1785566450</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு கடற் பகுதியில் மேலும் மூன்று படகுகள் காணாமல்போயுள்ள 
கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு கடற் பகுதியில் மேலும் மூன்று படகுகள் காணாமல்போயுள்ள 
கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, நீர்கொழும்பு துறைமுகத்தில் படகொன்று காணாமல் போயிருந்தது.
</p><p>
குறித்தப் படகில், 4 பேர் பயணித்துள்ள நிலையில், மூன்று பேர் காணாமல் போனதாக கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c957b76-c031-4632-b8ff-e935cf6388cb/26-6a6d94f3ed73f.webp' />]</p><p>
</p><p>
 தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவரிடன் உடலம் மீட்க்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், படகில் பயணித்த ஒருவர் பாதுகாப்பாக கரை வந்து சேர்ந்ததாக இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.
</p><p>
இதனையடுத்து, இன்றைய தினம் மேலும் மூன்று படகுகள் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் சூரியன் செய்திப் பரிவுக்கு கூறினார்.

அதற்கமைய, நீர்கொழும்பு துறைமுக கடற்பகுதியில், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-01T06:39:08+00:00</updated>
        </entry>
    </feed>
