<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-07T13:16:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெர்மனி கிழக்கு மாநிலத்தில் வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/right-wing-party-scores-major-victory-east-germany-1788784012"></link>
            <id>https://canadamirror.com/article/right-wing-party-scores-major-victory-east-germany-1788784012</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜெர்மனி கிழக்கு மாநிலமான சாக்சனி-அன்ஹால்ட்டில், தீவிர வலதுசாரி கட்சியான ‘ஜெர்மனிக்கான மாற்று’ (Alternative for Germany ), தனது முக்கிய அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜெர்மனி கிழக்கு மாநிலமான சாக்சனி-அன்ஹால்ட்டில், தீவிர வலதுசாரி கட்சியான ‘ஜெர்மனிக்கான மாற்று’ (Alternative for Germany ), தனது முக்கிய அரசியல் போட்டியாளர்களை வெகுவாகப் பின்தள்ளி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
</p><p>
 பழமைவாதக் கட்சியான சிடியு (CDU) 17.2% வாக்குகளைப் பெற்ற நிலையில், தீவிர வலதுசாரி கட்சி 43.8% வாக்குகளைப் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a631c6a-bb01-4519-ba37-c1c0e8ca596d/26-6a9ead8e4d75d.webp' /></p><h2>அறுதிப் பெரும்பான்மையை&nbsp; &nbsp;பெறவில்லை</h2><p>
</p><p>
இருப்பினும், தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையை இது பெறவில்லை என்பதால் , மாநிலத்தை யார் நிர்வகிப்பது என்பது குறித்த சிக்கலான பேச்சுவார்த்தைகள் இனி நடைபெறவுள்ளன.</p><p>

அந்த மாநிலத்தில் AfD கட்சியின் செல்வாக்குமிக்க தலைவரான உல்ரிச் சீக்மண்ட் (Ulrich Siegmund), இது ஒரு “பரபரப்பான” வெற்றி என்று கூறியதுடன், ஆட்சி செய்வதற்கான ஆணையைத் தங்கள் கட்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
</p><p>
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஜெர்மனியின் எந்தவொரு மாநிலத்திலும் தீவிர வலதுசாரி கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதில்லை.
</p><p>
மாநில அளவில் ஆட்சி அமைப்பது என்பது காவல் துறை, உள்ளூர் கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மீதான அதிகாரங்களைக் கொண்டிருப்பதாகும்.
</p><p>
சாக்சோனி-அன்ஹால்ட் 2.1 மில்லியன் என்ற சிறிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. 

83 இடங்களைக் கொண்ட மாநில நாடாளுமன்றத்தில், AfD கட்சி தற்போது 39 இடங்களைப் பெறும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. .</p>]]></content>
            <updated>2026-09-07T12:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை வென்ற தமிழ் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/taanusiya-chetty-3rd-won-the-miss-world-2026-1788766152"></link>
            <id>https://canadamirror.com/article/taanusiya-chetty-3rd-won-the-miss-world-2026-1788766152</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (வயது 24), வென்றுள்ளார்.

 ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2 ஆம் இடத்​தை​...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (வயது 24), வென்றுள்ளார்.

 ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2 ஆம் இடத்​தை​யும், மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தனுசியா செட்டி 3 ஆம் இடத்​தை​யும் பிடித்​தனர்.
</p><p>
வியட்​நாமின் காங் ஹோவா மாகாணம், நியா ட்ராங் நகரில் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதி மிஸ் வேர்ல்டு உலக அழகிப் போட்டி தொடங்​கியது. 

இதில் இந்​தி​யா​வைச் சேர்ந்த நிகிதா போர்​வால் உட்பட 111 நாடு​களைச் சேர்ந்த போட்​டி​யாளர்​கள் பங்​கேற்​றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb0d005-7f95-47ee-a99a-072ff28aaa91/26-6a9e67ca6bf76.webp' /></p><h2>மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண்</h2><p> </p><p>அவர்​களுக்கு பல்​வேறு கட்​டங்​களாக போட்​டிகள் நடத்​தப்​பட்​டன.

வியட்​நாமின் நியா ட்ராங் நகரில் நேற்று முன்​தினம் மாலை இறுதிப் போட்டி நடை​பெற்​றது. முதல்​கட்​ட​மாக 111 போட்டியாளர்களில் இருந்து 40 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர். இதில் இந்​தி​யா​வின் நிகிதா இடம் பெற்​றிருந்​தார். அதன்​பிறகு 20 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர்.</p><p>

ஆனால் அந்​தப் பட்​டியலில் இந்​திய அழகி இடம்​பெற​வில்​லை. அடுத்த கட்​ட​மாக 12 போட்​டி​யாளர்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர். அவர்​களில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்​பட்​டனர். நள்​ளிர​வில் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன.
</p><p>
அப்​போது டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா முதலிடத்​தைப் பிடித்து ‘மிஸ் வேர்ல்​டு’ உலக அழகி பட்​டத்தை வென்​றார்.

 அவருக்கு கடந்த ஆண்டு பட்​டம் வென்ற தாய்​லாந்​தின் ஓபல் சுசாடா மகுடம் சூட்​டி​னார். ஸ்பெ​யின் நாட்டை சேர்ந்த எலிசபெத் ரெய்​னெஸ் (வயது 22) இரண்​டாவது இடம் பிடித்​தார்.

மலேசி​யா​வைச் சேர்ந்த தனுசியா செட்டி (வயது 25) மூன்​றாம் இடத்தைப் பெற்​றார். </p><p>அவரது தாய்​மொழி தமிழ் ஆகும்.

 அவரது தந்தை வீர​பாண்​டியன். 14 வயதில் தாயை இழந்த தனுசியா தந்தை​யின் அரவணைப்​பில் வளர்ந்​தார். அவர் கொடுத்த ஊக்கத்தால் மிஸ் மலேசியா பட்​டம் வென்​று, மிஸ் வேர்ல்டு போட்டி​யில் நுழைந்​தார்.
</p><p>
வியட்​நாமில் நடை​பெற்ற மிஸ் வேர்ல்டு போட்​டி​யின்​போது ஆங்​கிலம், மலாய், மாண்​டரின், தமிழ் ஆகிய 4 மொழிகளில் தனுசியா சரள​மாக பேசி​னார். “மாற்​றம் என்​பது நமக்​குள் இருந்தே தொடங்க வேண்​டும்” என்று அவர் 4 மொழிகளில் பேசிய வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T12:47:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் அதிக மகிழ்ச்சியான மாகாணம் எது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/this-survey-shows-if-canadians-are-happier-1788780348"></link>
            <id>https://canadamirror.com/article/this-survey-shows-if-canadians-are-happier-1788780348</id>
            <summary type="text">கனடாவில் உள்ள அனைத்து மாகாணங்களையும் விட கியூபெக் மாகாண மக்கள் அதிக மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்வதாக &#039;லெஜர்&#039; நிறுவனத்தின் 2026-ஆம் ஆண்டிற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் உள்ள அனைத்து மாகாணங்களையும் விட கியூபெக் மாகாண மக்கள் அதிக மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்வதாக 'லெஜர்' நிறுவனத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான மகிழ்ச்சிக் குறியீடு ஆய்வில் தெரியவந்துள்ளது.
</p><p>100-க்கு 74.5 புள்ளிகளைப் பெற்று கனடாவின் 'மிகவும் மகிழ்ச்சியான மாகாணம்' என்ற பெருமையைக் கியூபெக் தட்டிச் சென்றுள்ளது.
எதிர்காலம் குறித்த நம்பிக்கைக் குறியீட்டில் கியூபெக் 72.2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.</p><p> நாட்டின் பிற பகுதிகளில் இது 66.6 ஆக மட்டுமே உள்ளது.
கியூபெக்கில் வெறும் 22% மக்கள் மட்டுமே தங்களை 'மகிழ்ச்சியற்றவர்கள்' எனக் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22d15557-a6c9-4c57-ae70-9722938cd747/26-6a9e9f3e2567c.webp' /></p><p> </p><p>நாட்டின் பிற பகுதிகளில் இந்நிலை 33% ஆக உள்ளது.
கனடாவின் பெரிய நகரங்களுக்கான தரவரிசையில் கியூபெக் மாகாணத்தில் உள்ள மொன்றியல் நகரம் 72.7 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
</p><p>கியூபெக்கிற்கு அடுத்தபடியாக நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லேப்ரடார் (71.0) இரண்டாமிடத்தையும், நியூ பிரன்சுவிக் (70.3) மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன. </p><p>
ஒன்டாரியோ மாகாணம் 69.3 புள்ளிகளுடன் நடுத்தர இடத்திலும், பிரின்ஸ் எட்வர்ட் தீவு 67.7 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.</p><p>
கனடாவின் தேசிய சராசரி மகிழ்ச்சிப் புள்ளிகள் கடந்த ஆண்டின் 68.7-லிருந்து தற்போது 70.5 ஆக உயர்ந்துள்ளது.</p><p> 
பாதுகாப்பான வாழ்வியல் சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நல்ல சமூக உறவுகளே மக்களின் மகிழ்ச்சிக்கு முதன்மைக்காரணங்களாக அமைகின்றன. </p><p>
எனினும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் நிதி நெருக்கடிகளே கியூபெக் உட்பட ஒட்டுமொத்தக் கனடியர்களின் மகிழ்ச்சிக்கு முதன்மைத் தடையாக உள்ளதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போருக்கு பணப் பற்றாக்குறை ; ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்கும் உக்ரைன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/funds-war-is-ukraine-legalizing-adult-industry-1788779170"></link>
            <id>https://canadamirror.com/article/funds-war-is-ukraine-legalizing-adult-industry-1788779170</id>
            <summary type="text">&amp;nbsp;உக்ரைன் நாட்டில்&amp;nbsp; &amp;nbsp;தற்போது சட்டவிரோதமாகக் கருதப்படும் ஆபாச உள்ளடக்கத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை சட்டப்பூர்வமாக்கி, அதற்கு வரி விதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உக்ரைன் நாட்டில்&nbsp; &nbsp;தற்போது சட்டவிரோதமாகக் கருதப்படும் ஆபாச உள்ளடக்கத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை சட்டப்பூர்வமாக்கி, அதற்கு வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயை போருக்குப் பயன்படுத்தும் திட்டம் குறித்து உக்ரைன் பரிசீலனை செய்து வருகிறது.</p><p>&nbsp;ரஷ்யாவுக்கு எதிரான போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், கூடுதல் வருவாயை திரட்ட உக்ரைன் அரசு மேற்கொள்ளும் இந்த வித்தியாசமான முயற்சி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4161efd1-876e-47e4-ad14-24952e66248e/26-6a9e9aa4395d4.webp' /></p><h2>இதன்மூலம் அரசுக்கு கணிசமான வரி வருவாய்&nbsp;</h2><p> 

உக்ரைனில் ஆபாசப் படங்களைத் தயாரித்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்டவை தற்போது குற்றமாகக் கருதப்படுகின்றன. 

இதற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. </p><p>ஆனால், ஆன்லைன் தளங்களின் வளர்ச்சியால் இந்தத் தொழில் ரகசியமாக தொடர்ந்து இயங்கி வருவதாக கூறப்படுகிறது. </p><p>

குறிப்பாக, OnlyFans தளத்தைச் சேர்ந்த தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் சுமார் 7,900 உக்ரேனியர்கள் 131 மில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
 இதன்மூலம் அரசுக்கு கணிசமான வரி வருவாய் கிடைக்கக்கூடும் என கருதப்படுகிறது. 

ஆகையால், இந்தத் துறையைச் சட்டப்பூர்வமாக்கும் மசோதாவை எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் உள்ளிட்டோர் முன்னெடுத்து வருகின்றனர். </p><p>
இதன்மூலம் ஆண்டுக்கு 25 மில்லியன் டொலர் வரை வரி வருவாய் கிடைக்கலாம் என அவர் மதிப்பிட்டுள்ளார். இந்தத் தொகை சுமார் 30,000 இராணுவ ட்ரோன்களை வாங்குவதற்குப் போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். </p><p>
 ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான விவாதம் நேரடியாக உக்ரைனின் போர் நிதி மற்றும் ட்ரோன் தேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மசோதா ஏற்கெனவே பாராளுமன்றத்தின் முதல்கட்ட வாக்கெடுப்பில் நிறைவேறி, அடுத்தகட்ட பரிசீலனைக்காக காத்திருக்கிறது. </p><p>

மேலும், இந்தத் துறையைச் சட்டவிரோதமாக வைத்திருப்பது ஊழலுக்கும் வழிவகுப்பதாக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p> 

எனினும், 30,000 ட்ரோன்களுக்கான நிதி என்பது அரசின் மொத்த பாதுகாப்புச் செலவுடன் ஒப்பிடும்போது சிறிய தொகையே. இருந்த போதிலும், போர்க்காலத்தில் உக்ரைன் தனது உள்நாட்டு வருவாய் ஆதாரங்களை அதிகரிக்க முயல்வதன் வெளிப்பாடாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது.</p><p> 

எனினும் அந்த மசோதா இன்னும் சட்டமாகவில்லை என்பதால், உக்ரைனில் ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்கும் முடிவு இறுதி செய்யப்படுமா என்பது குறித்து இன்னும் விவாதத்திலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T11:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்பர்ட்டா மாகாணம் தனி நாடாகும் விவகாரம்: அடுத்த மாதம் வாக்கெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/poll-on-alberta-separation-to-be-on-october-19-1788779227"></link>
            <id>https://canadamirror.com/article/poll-on-alberta-separation-to-be-on-october-19-1788779227</id>
            <summary type="text">Albertans go to the polls on October 19 to vote on whether Alberta should stay with Canada or leave: ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடாவுடன் இருப்பதா அல்லத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Albertans go to the polls on October 19 to vote on whether Alberta should stay with Canada or leave: ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடாவுடன் இருப்பதா அல்லது பிரிவதா என்பது தொடர்பில் அடுத்த மாதம் சில முடிவுகள் எடுக்க இருக்கிறார்கள்.
</p><p>

ஆல்பர்ட்டா மாகாணத்தை கனடாவிலிருந்து பிரித்து தனி நாடாக்குவதில் ஆல்பர்ட்டா மாகாண மக்களில் ஒரு பிரிவினர் உறுதியாக உள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12064187-7d0f-4d9d-ad64-604504f7d879/26-6a9e9adc783d8.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், கனடா மாகாணம் பிரிவது தொடர்பில் அக்டோபர் மாதம் 19ஆம் திகதி வாக்கெடுப்பு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது.
</p><p>
விடயம் என்னவென்றால், அந்த வாக்கெடுப்பில், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவதா என்னும் கேள்விகள் நேரடியாக கேட்கப்படப்போவது இல்லை.
</p><p>
மாறாக, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவது தொடர்பில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டுமா என்னும் கேள்விகள்தான் கேட்கப்பட உள்ளன.
</p><p>
இந்நிலையில், ஆல்பர்ட்டா பிரிவதற்கு ஆதரவளிக்கும் அமைப்பொன்று, வாக்கெடுப்பில் கனடாவிலிருந்து பிரிவது என ஆல்பர்ட்டா மக்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், ஆல்பர்ட்டாவில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தொடர்பான விடயங்களைக் கூறும் 214 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>
ஏற்கனவே ஆல்பர்ட்டா மாகாணம் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது, அப்படியிருக்கும் பட்சத்தில், அது பிரிவதால் எதுவும் நின்றுவிடப்போவதில்லை என்கிறார்கள் ஆதரவாளர்கள்.
</p><p>
ஆனாலும், ராணுவம், ஆல்பர்ட்டாவிலிருந்து கனடாவின் பிற பகுதிகளுக்கு போக்குவரத்து, கடன், மின்சாரம், எரிபொருள் போன்ற விடயங்கள், ஓய்வூதியம், எல்லைகள், சொத்துக்கள் போன்ற விடயங்கள் குறித்து கனடாவுடனும், பூர்வக்குடியினர் உள்ளிட்ட மற்றவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியிருக்கும் என்கிறார்கள் பிரிவதை ஆதரிப்பவர்கள்.</p><p>

எதிர்ப்பவர்களோ, பிரிந்தால் பிரிந்ததுதான், அதற்குப் பிறகு பேச்சுவார்த்தையெல்லாம் எடுபடாது என்கிறார்கள்.

ஆக, என்ன நடக்கப்போகிறது என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரியலாம்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T11:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் கேப் பிரெட்டனில் கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளத்தில் சிக்கிப் பெண் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-dead-following-flooding-in-cape-breton-1788769661"></link>
            <id>https://canadamirror.com/article/woman-dead-following-flooding-in-cape-breton-1788769661</id>
            <summary type="text">கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்திற்குட்பட்ட கேப் பிரெட்டன் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்திற்குட்பட்ட கேப் பிரெட்டன் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாநில முதலமைச்சர் டிம் ஹூஸ்டன் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>ரிச்மண்ட் கவுண்டி பொலிஸாரின் தகவல்படி, கிளீவ்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் சனிக்கிழமை காலை காணாமல் போயிருந்தார்.</p><p>
வெள்ள நீரில் மூழ்கிய பாலத்திற்கு அப்பால் அவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் பிற்பகல் 2:30 மணியளவில் அப்பகுதியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.</p><p>[WU8TR
]</p><p> </p><p>
இந்த மரணத்தில் சந்தேகத்திற்குரிய காரணங்கள் எதுவும் இல்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
வாரயிறுதியில் கேப் பிரெட்டனின் சில பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
</p><p>உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் டிம் ஹூஸ்டன், சீரற்ற வானிலை தொடர்வதால் பொதுமக்கள் வீதிப் பயணங்களைத் தவிர்த்துப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>
அத்துடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் அவசரகாலப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T09:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிசிசாகாவில் இரயில் விபத்து: லேக்சோர் வெஸ்ட் இரயில் சேவைகள் பாதிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/significant-delays-on-lakeshore-west-line-1788768552"></link>
            <id>https://canadamirror.com/article/significant-delays-on-lakeshore-west-line-1788768552</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் மிசிசாகா பகுதியில் சனிக்கிழமை இரவு நபரொருவர் ஜி.ஓ இரயிலில் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, லேக்சோர் வெஸ்ட் வழித்தடத்தின் ஒரு பகுதி சேவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் மிசிசாகா பகுதியில் சனிக்கிழமை இரவு நபரொருவர் ஜி.ஓ இரயிலில் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, லேக்சோர் வெஸ்ட் வழித்தடத்தின் ஒரு பகுதி சேவை தற்காலிகமாக முடங்கியது.</p><p>
இதன் காரணமாக போர்ட் குரெடிட் மற்றும் எக்சிபிஷன் நிலையங்களுக்கு இடையிலான இரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
</p><p>ஃபோர்த் வீதிக்கு தெற்கே உள்ள ஒக்டன் அவென்யூ இரயில் பாதைக் கடவையில் இரவு 8:00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc86750-9edb-440a-8c5b-251fc9b508f0/26-6a9e712a2000a.webp' /></p><p> </p><p>விபத்துக்கான பின்னணி குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
</p><p>லேக்சோர் வெஸ்ட் பாதையில் பெரும் சேவைத் தாமதம் ஏற்பட்டது.
பயணிகளின் வசதிக்காக போர்ட் குரெடிட் மற்றும் கிப்ளிங் நிலையங்களுக்கு இடையே விரைவுப் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன.</p><p>
இச்சம்பவத்தின் தாக்கம் காரணமாக லேக்சோர் ஈஸ்ட் வழித்தடத்தின் இரண்டு இரயில் பயணங்களும் ரத்து செய்யப்பட்டன.</p><p>
துப்புரவு மற்றும் விசாரணைப் பணிகளைத் தொடர்ந்து, இரவு 10:00 மணிக்குச் சற்று முன்னர் வழமையான இரயில் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T09:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பயணி; டேப்போட்டு கட்டிய பணியாளர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-passenger-behaved-unruly-us-flight-taped-him-up-1788764606"></link>
            <id>https://canadamirror.com/article/a-passenger-behaved-unruly-us-flight-taped-him-up-1788764606</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க உள்நாட்டு விமானம் ஒன்றில், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒரு பயணி, விமானப் பணியாளர்களால் அவரது இருக்கையில் டேப்பால் கட்டி வைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்க உள்நாட்டு விமானம் ஒன்றில், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒரு பயணி, விமானப் பணியாளர்களால் அவரது இருக்கையில் டேப்பால் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>

கடந்த வியாழக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர், உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/144d709c-d2ab-474e-a216-9544f6022f15/26-6a9e61c06bbb9.webp' /></p><p>
</p><p>
டல்லாஸிலிருந்து நியூயோர்க்கிற்கு அருகிலுள்ள நியூவார்க்கிற்குச் சென்ற விமானம் 618, பால்டிமோரில் இறங்க்கிய நிலையில் , அங்கு வந்த எப்.பி.ஐ அதிகாரிகள் அந்த நபரை விமானத்திலிருந்து வெளியேற்றியதாகவும் கூறப்படுகின்றது.</p><p>இன்னிலையில்&nbsp;&nbsp;இருக்கையில்&nbsp; பயணி&nbsp; டேப்பால் கட்டி வைக்கப்பட்ட புகைப்படம்&nbsp; சமூகவலைத்தளங்க்களில்&nbsp; வைரலாகியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T08:10:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புயலால் சேதமடைந்த வீடு: காப்புறுதி நிறுவனத்துடன் போராடும் தம்பதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/kitchener-couple-call-insurance-process-1788768082"></link>
            <id>https://canadamirror.com/article/kitchener-couple-call-insurance-process-1788768082</id>
            <summary type="text">கனடாவின் கிச்சனர் பகுதியில் வீசிய பலத்த புயலில் மரமொன்று முறிந்து வீட்டின் கூரை மீது விழுந்ததில் சேதமடைந்த வீடொன்றின் உரிமையாளர்கள், தங்களது காப்புறுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கிச்சனர் பகுதியில் வீசிய பலத்த புயலில் மரமொன்று முறிந்து வீட்டின் கூரை மீது விழுந்ததில் சேதமடைந்த வீடொன்றின் உரிமையாளர்கள், தங்களது காப்புறுதி நிறுவனத்துடன் இழப்பீடு தொடர்பாகப் போராடி வருகின்றனர்.</p><p>
டக் மற்றும் அலிசியா ஆர்னால்ட் என்ற தம்பதியரின் வீட்டின் மீது, அவர்களது தோட்டத்தில் இருந்த மரம் பாதியாகப் பிளந்து கூரையின் மீது விழுந்துள்ளது. </p><p>
25 ஆண்டுகளாகத் தவறாமல் காப்புறுதிக் கட்டணம் செலுத்தி வரும் தங்களுக்கு, முழுமையான இழப்பீடு வழங்க காப்புறுதி நிறுவனம் மறுப்பதாக அலிசியா வேதனை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26584a57-d3ae-4a74-be9f-196838ed6588/26-6a9e6f53df2b7.webp' /></p><p>
கூரை மீது விழுந்த மரத்தின் பகுதியை அகற்றுவதற்கும் கூரையைச் சீரமைப்பதற்கும் மட்டுமே காப்புறுதி நிறுவனம் நிதியளிக்க முன்வந்துள்ளது. </p><p>
ஆனால், ஆபத்தான நிலையில் எஞ்சியுள்ள மரத்தின் மறுபகுதியை அகற்றுவதற்கு இழப்பீடு வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனால் எஞ்சிய பகுதியைத் தங்களது சொந்தச் செலவிலேயே அகற்ற வேண்டிய நிலைக்குத் தம்பதியினர் தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கனடா காப்புறுதிப் பணியகத்தின் துணைத் தலைவர் அமண்டா டீன், பெரும்பாலான வீடமைப்பு காப்புறுதிக் கொள்கைகள் கட்டிடக் கட்டமைப்புக்கும் அதனால் ஏற்படும் நேரடிச் சேதங்களுக்குமே முன்னுரிமை அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மேலும், இவ்வாறான சிக்கலான சூழல்களில் காப்புறுதி ஒப்பந்தங்களின் விவரங்களைச் சரியாகப் பரிசீலிக்குமாறும், காப்புறுதி மதிப்பீட்டாளர்களிடம் தெளிவான விளக்கங்களைக் கோருமாறும் அவர் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T07:58:44+00:00</updated>
        </entry>
    </feed>
