<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-28T18:30:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்: கனடாவில் முக்கிய சூத்திரதாரி கைது !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-charged-in-drug-trafficking-1787934429"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-charged-in-drug-trafficking-1787934429</id>
            <summary type="text">சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய 24 வயது கனடிய இளைஞர் ஒருவரை வாட்டர்லூ பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது.
ஒன்டாரியோவின் கேம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய 24 வயது கனடிய இளைஞர் ஒருவரை வாட்டர்லூ பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது.
</p><p>ஒன்டாரியோவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து ஆகஸ்ட் 26 அன்று இவர் கைது செய்யப்பட்டார்.</p><p>
இவர் மீது கொக்கைன் போதைப்பொருளை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c70de98-8af7-4afc-aa2b-d291c3fb01b1/26-6a91b6df8befa.webp' /></p><p>
</p><p>கைது செய்யப்பட்ட நபரின் பெயரைப் போலீசார் வெளியிடவில்லை என்றாலும், போதைப்பொருள் கடத்தல் கும்பலில் அவர் முக்கியப் பங்காற்றியதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>
கடந்த செப்டம்பர் 2025-இல், கேம்பிரிட்ஜைச் சேர்ந்த 19 வயதான ஜேட் என்ற பெண் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் 25 கிலோ கொக்கைனுடன் பிடிபட்டார்.
கனடாவின் பியர்சன் விமான நிலையத்தின் சோதனைகளில் சிக்காமல் கொண்டு செல்லப்பட்ட இந்தப் போதைப்பொருள், ஹாங்காங் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p>நான்கு மாத காலத்தில் ஹாங்காங்கில் பிடிபட்ட 4 கனடியர்களில் ஜேடும் ஒருவர். இவர்களிடம் இருந்து மொத்தம் சுமார் 100 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.
</p><p>சர்வதேச பொதிகள் அனுப்புபவர் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
ஒரு பயணத்திற்கு 5,000 டொலர் சம்பளம் மற்றும் இலவச விமானக் கட்டணம், தங்குமிடம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>தங்களுக்குத் தெரியாமலேயே நகை அல்லது பிற பொருட்கள் என நம்ப வைக்கப்பட்டு போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகப் பிடிபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T18:03:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் கனடிய தம்பதி மாயம்: நல்ல செய்திக்காகக் காத்திருக்கும் குடும்பத்தினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missing-in-nepal-after-deadly-flash-floods-1787928115"></link>
            <id>https://canadamirror.com/article/missing-in-nepal-after-deadly-flash-floods-1787928115</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த கனடிய தம்பதியினர், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். 
இமய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த கனடிய தம்பதியினர், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர்.</p><p> 
இமயமலை பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட இந்த பேரிடரில் 30-க்கும் மேற்பட்ட கனடியர்கள் காணாமல் போயுள்ள நிலையில், இந்த தம்பதியின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் பெரும் தவிப்பில் உள்ளனர்.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவின் 'போர்ட் மூடி' பகுதியைச் சேர்ந்த தவால் ஷா மற்றும் அவரது மனைவி மேகா ஷா ஆகியோர் நேபாளத்திற்குச் சுற்றுலா சென்றிருந்த நிலையில் இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a090e0-cabc-4b01-acc0-4299c4eb9757/26-6a919e3575bc5.webp' /></p><p>
</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் அவர்களிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை என்று தவாலின் சகோதரர் கேவல் ஷா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
</p><p>அவர்கள் எப்படியாவது வெள்ளத்திலிருந்து தப்பித்து, உயிருடன் மீட்டெடுக்கப்பட்டார்கள் என்ற ஒரு நல்ல செய்தி வரக் கூடாதா என்று தான் நாங்கள் வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருக்கிறோம்.</p><p> ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என காணாமல் போன கனடியரின் சகோதரர் கேவல் ஷா தெரிவித்துள்ளார்.
</p><p>திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
</p><p>இதில் தவால்-மேகா தம்பதி உட்பட குறைந்தபட்சம் 30 கனடியர்களும், நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவர் என கனடா உலகளாவிய விவகாரங்கள் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>மலைப் பகுதியில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் பல அடி உயரத்திற்குச் சேறும் சகதியும் அடர்த்தியாகக் குவிந்துள்ளது.
</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகள் மிகவும் தொலைதூரத்தில் அமைந்திருப்பதாலும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் மீட்புக் குழுவினர் அங்குச் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. 
அடர்ந்த சேற்றுக்குள் சிக்கியவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T16:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத் தடையை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்தது கனடா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-extends-ebola-travel-restrictions-30-days-1787927479"></link>
            <id>https://canadamirror.com/article/canada-extends-ebola-travel-restrictions-30-days-1787927479</id>
            <summary type="text">எபோலா நோய்த்தொற்று பரவல் காரணமாகக் காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் கனடாவிற்குள் நுழைய விதிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எபோலா நோய்த்தொற்று பரவல் காரணமாகக் காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் கனடாவிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பதாகக் கனடா அரசு அறிவித்துள்ளது.</p><p>
கடந்த மே மாதம் முதல் அமலில் உள்ள இந்தத் தடையால் 67,000-க்கும் அதிகமான மக்களின் விசா விண்ணப்பங்கள் மற்றும் குடியிருப்பு உரிமைகள் முடங்கியுள்ளன.
</p><p>வெளிநாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 31,693 நிரந்தரக் குடியிருப்பு விண்ணப்பங்களும், 10,465 தற்காலிகக் குடியிருப்பு விண்ணப்பங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b44f7b2-4c20-499b-8ed6-33d6c9b415cd/26-6a919bb9089bb.webp' /></p><p>
</p><p>கனடாவிற்கு வெளியே உள்ள 1,534 நிரந்தரக் குடியிருப்பாளர்கள் மற்றும் 23,415 தற்காலிக விசா வைத்திருப்பவர்களும் நாட்டிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்நாடுகளிலிருந்து திரும்பும் கனடியர்களுக்கு 21 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது நிவாரண அமைப்புகளின் மனிதாபிமானப் பணிகளைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
</p><p>கெங்கோவில் 5,794 பேர் பாதிக்கப்பட்டு, 2,786 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லாத 'புண்டிபுக்யோ' என்ற அரிய வகை வைரஸால் இங்குப் பாதிப்பு மிகவேகமாகப் பரவி வருகிறது.
</p><p>உகாண்டாவில் எபோலா பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாகப் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளன. தெற்கு சூடானில் எந்தப் பாதிப்பும் பதிவாகவில்லை.</p><p>
கனடாவில் எபோலா பரவும் அபாயம் குறைவாக இருந்தாலும், நோயின் வீரியம் மற்றும் சிகிச்சை முறைகள் இல்லாத நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாகவே இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கனடா பொது சுகாதார முகமை தெரிவிக்கிறது.
</p><p>முழுமையான பயணத் தடை விதிப்பது அறிவியல் பூர்வமானதல்ல என்றும், பயத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் உலக சுகாதார நிறுவனம் கண்டித்துள்ளது.
</p><p>கனடிய குடிமக்களுக்குத் தனிமைப்படுத்தல் அனுமதியும், வெளிநாட்டினருக்கு முழுத் தடையும் விதிப்பது நியாயமற்றது என சர்வதேச சுகாதார சட்ட ஆய்வாளர் ரூஜின் ஹபீபி கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>இந்தத் தடை உண்மையான சுகாதாரப் பாதுகாப்பைக் காட்டிலும், மக்களுக்கு நம்பிக்கை தருவதற்காகச் செய்யப்பட்ட ஒரு வெளிப்புற நடவடிக்கை மட்டுமே என்று மெக்கில் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜோன் லியூ விமர்சித்துள்ளார்.</p><p>
ஃபிஃபா உலகக்கப் நிகழ்வுகளில் பங்கேற்கவிருந்த கலைக்குழுவினர் மற்றும் குடும்பங்களைப் பிரிந்து வாழும் கனடியர்கள் பலரும் இந்த முடிவால் பெரும் கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T16:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க கடல் உணவுப் பொருட்கள் மீதான வரியை நீக்கியது கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/why-fishers-asked-ottawa-to-spare-1787926303"></link>
            <id>https://canadamirror.com/article/why-fishers-asked-ottawa-to-spare-1787926303</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பழிவாங்கும் வரிப் பட்டியலிலிருந்து மீன் மற்றும் கடல் உணவுப் பொருட்களைக் கனடா கூட்டாட்சி அரசு விலக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பழிவாங்கும் வரிப் பட்டியலிலிருந்து மீன் மற்றும் கடல் உணவுப் பொருட்களைக் கனடா கூட்டாட்சி அரசு விலக்கியுள்ளது.
</p><p> நாட்டின் மீன்பிடி மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>கனடா ஆண்டுதோறும் அமெரிக்காவிலிருந்து சுமார் 1 பில்லியன் டொலர் மதிப்பிலான கடல் உணவுகளை இறக்குமதி செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363e9735-6c93-40c4-9ccc-7aa3092b0444/26-6a919721ad248.webp' /></p><p> </p><p>இதில் 40 சதவீதம் லோப்ஸ்டர் வகை நண்டுகளாகும்.
கனடாவில் அறுவடை குறைவாக இருக்கும் காலங்களில், அங்குள்ள பதப்படுத்தும் ஆலைகள் அமெரிக்க இறக்குமதியையே சார்ந்து இயங்குகின்றன.</p><p> 
வரி விதிப்பு தொடர்ந்தால் ஆலைகளும், உள்ளூர் மீன்பிடித் தொழிலும் பெரும் நிதிப் பாதிப்பைச் சந்திக்கும் என்பதால் இவ்வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.
</p><p>நோவா ஸ்கோஷியா போன்ற கடலோர மாகாணங்களில் மீன்பிடி மற்றும் கடல் உணவு ஏற்றுமதித் துறை ஆண்டுக்குச் சுமார் 8.5 பில்லியன் டொலர் வருவாயை ஈட்டித் தருகிறது.
</p><p>அமெரிக்காவுடனான வர்த்தகப் போரினால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க, கனடிய கடல் உணவுத் துறை தனது ஏற்றுமதியை ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்குப் பல்வகைப்படுத்தி வருகிறது.
</p><p>வரி நீக்கம் உள்ளூர் தொழில்துறைக்கு நிம்மதி அளித்துள்ள போதிலும், டீசல் மற்றும் தூண்டில் இரையின் விலை இருமடங்கு வரை உயர்ந்துள்ளதால், மீன்பிடித் துறை தொடர்ந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T16:03:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா ஏரியின் பெயரை மாற்றிய டிரம்ப்; சுட சுட பிரதமர் மார்க் கார்னி பதிலடி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-renames-canadian-lake-mark-carney-retort-1787897383"></link>
            <id>https://canadamirror.com/article/trump-renames-canadian-lake-mark-carney-retort-1787897383</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வின் பெயரை அமெரிக்க அரசு பயன்பாட்டில் “Lake America” என மாற்ற உத்தரவிட்டுள்ளார்.</p><p> 
 
 இந்த பெயர் மாற்றம் அமெரிக்க மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு மட்டுமே பொருந்தும். கனடா, சர்வதேச அமைப்புகள் அல்லது பிற நிறுவனங்கள் பழைய பெயரான Lake Ontario-வை தொடர்ந்து பயன்படுத்தலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5a3c4f3-b361-40c5-bf49-e174d2709d92/26-6a912628d8e21.webp' /></p><h2>நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது</h2><p>
</p><p> 
இந்த அறிவிப்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
400 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்ட இந்த ஏரியின் பெயர், கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளாக உருவாவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அத்துடன் நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுலும் “நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
</p><p> 
Lake Ontario-வின் நீர்ப்பரப்பில் சுமார் 52 சதவீதம் கனடாவிலும், மீதமுள்ள பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலும் அமைந்துள்ளது.</p><p>

 இதனால் பெயர் மாற்றம் கனடாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஏற்கனவே கனடாவுடன் பல பில்லியன் டாலர் வர்த்தக வரிகள் தொடர்பாக மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை அமெரிக்கா - கனடா உறவை மேலும் பதற்றமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-28T13:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினில் உலகப் புகழ்பெற்ற 'லா டொமாட்டினா' திருவிழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/the-world-famous-la-tomatina-festival-in-spain-1787922633"></link>
            <id>https://canadamirror.com/article/the-world-famous-la-tomatina-festival-in-spain-1787922633</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்பெயினின் உலகப் புகழ்பெற்ற &#039;லா டொமாட்டினா&#039; (La Tomatina) திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு உற்சாகமாக தக்காளி சண்டையில் ஈடுபட்டனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்பெயினின் உலகப் புகழ்பெற்ற 'லா டொமாட்டினா' (La Tomatina) திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு உற்சாகமாக தக்காளி சண்டையில் ஈடுபட்டனர்.
</p><p>
வருடந்தோறும் நடைபெறும் இந்த வித்தியாசமான திருவிழாவில், ஸ்பெயின் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் ஆர்முடன் கலந்துகொள்வது வழக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6422af49-da5a-4e4a-9787-160bac411875/26-6a9188cb8108e.webp' /></p><p>
</p><p>
தெருக்களில் திரண்ட மக்கள், ஒருவர்மீது ஒருவர் பழுத்த தக்காளிகளை வீசி மகிழ்ந்தனர். இதனால் அந்தப்பகுதி முழுவதும் தக்காளிச் சாறினால் சிவப்பு நிறமாக மாறியது.
</p><p>
களிப்பும் கொண்டாட்டமும் நிறைந்த இந்த பிரமாண்ட நிகழ்வு, உலகின் மிகவும் தனித்துவமான மற்றும் பிரபலமான திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-28T13:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[34 வயதான உகாண்டா அரசர் காலமானார்; காரணம் வெளியாகவில்லை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/34-year-old-ugandan-king-oyo-nyimba-passes-away-1787913521"></link>
            <id>https://canadamirror.com/article/34-year-old-ugandan-king-oyo-nyimba-passes-away-1787913521</id>
            <summary type="text">&amp;nbsp; உகாண்டா அரசர் ஓயோ நியம்பா தனது 34-வது வயதில் நேற்று இரவு காலமானதாக அவரது இராஜ்ஜியத்தின் பிரதமர் அறிவித்துள்ளார்.

ஓயோ நியம்பா (Oyo Nyimba), உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உகாண்டா அரசர் ஓயோ நியம்பா தனது 34-வது வயதில் நேற்று இரவு காலமானதாக அவரது இராஜ்ஜியத்தின் பிரதமர் அறிவித்துள்ளார்.

ஓயோ நியம்பா (Oyo Nyimba), உகாண்டா அரசராக 1995-ல் அரியணை ஏறியதன் மூலம் உலகின் மிக இளைய மன்னராக மாறினார்.</p><p> 


உகாண்டா ஒரு குடியரசாகும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டுத் தலைவரால் ஆளப்படுகிறது, ஆனால் அது காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போலவே தங்கள் இராஜ்ஜியங்களின் மீது தொடர்ந்து ஆட்சி புரியும் பல பாரம்பரிய அரசுகளைக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f910df0b-08cb-448c-b72d-2ee341eac6fb/26-6a91653301ab3.webp' /></p><h2>இறப்புக்கான காரணத்தை வெளியிடவில்லை</h2><p> </p><p>


அவர்களின் அரசியல் அதிகாரம் பெரிதும் அடையாளமானது, ஆனால் அவர்கள் மகத்தான கலாசார மற்றும் சமூக தாக்கத்தை கொண்டுள்ளனர்.



ஓயோ நியம்பா (Oyo Nyimba) கபாம்பா இகுரு ருகிடி IV, காங்கோ ஜனநாயக குடியரசு எல்லையின் அருகே உகாண்டாவின் மேற்கில் உள்ள ஒரு சிறிய இராஜ்ஜியமான டோரோவின் மன்னனாவார்.</p><p>



"டோரோவின் ஓமுகாமா, மன்னர் ஓயோ நியம்பா கபாம்பா இகுரு ருகிடி IV இன் மறைவை ஆழ்ந்த சோகத்தோடும் கனத்த இதயத்தோடும் அறிவிக்கிறேன்" என்று ராஜ்ஜியத்தின் பிரதமர் கால்வின் ஆம்ஸ்ட்ராங் ரூமிர் அகிகி எக்ஸ் (X) தளத்தில் வியாழக்கிழமை இரவு பதிவிட்டுள்ளார்.</p><p>



மன்னர் வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 10:00 மணி அளவில் காலமானார் என்று அகிகி கூறினார், இருப்பினும் அவர் இறப்புக்கான காரணத்தை வெளியிடவில்லை.</p><p>



அவரது தந்தை ருபிரபாசாய்ஜா பேட்ரிக் டேவிட் மேத்யூ கபோயோ ஒலிமி III இன் மறைவுக்குப் பிறகு, ருகிடி IV செப்டம்பர் 12, 1995 அன்று வெறும் மூன்று வயதில் முடிசூட்டப்பட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-28T12:53:23+00:00</updated>
        </entry>
    </feed>
