<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-04T03:49:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரில் ஆயுதங்களுக்கு பஞ்சமில்லை ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-shortage-of-weapons-for-a-war-with-iran-1788493327"></link>
            <id>https://canadamirror.com/article/no-shortage-of-weapons-for-a-war-with-iran-1788493327</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளுக்கு எந்தவித பஞ்சமும் இல்லை என்று அமெரிக்க ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளுக்கு எந்தவித பஞ்சமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்காவிடம் தங்கு தடையின்றி பயன்படுத்தக்கூடிய அளவுக்கு அதிநவீன ஆயுதங்களும் வெடிமருந்துகளும் பெருமளவில் கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7ee0587-aac0-46b3-aa80-62f0f5e1e34e/26-6a9a3e113db24.webp' /></p><p>

அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் போருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க ராணுவத்தின் ஆயுத கையிருப்பு குறைந்து வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை என்று கூறியுள்ள அவர் ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
ஈரானுடனான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அமெரிக்க ராணுவத்தின் பலம் மற்றும் ஆயுத வலிமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ட்ரம்பின் இந்த பதில் அமைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T03:45:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள அனர்த்தத்தை முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்; வைரலாகும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/priest-who-predicted-nepal-disaster-1788475887"></link>
            <id>https://canadamirror.com/article/priest-who-predicted-nepal-disaster-1788475887</id>
            <summary type="text">நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p style="text-align: justify; ">



திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பால், நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த ஒகஸ்ட் 26 ஆம் திகதி மாபெரும் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.</p><p style="text-align: justify; "><br></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தப் பேரிடரில், இதுவரை 1,200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட சுமார் 4,200 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


 

 

இந்த நிலையில்,&nbsp; யூடியூப் பக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட விடியோவில், நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படப் போவதாகக் கணித்துக் கூறியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


இதுபற்றி, கடந்த ஜூன் 12 ஆம் திகதி அவர் வெளியிட்டுள்ள விடியோவில்,



“இன்று ஜூன் 12 2026. நேபாளத்தில் ஒரு பெரிய காட்டுத் தீ எரிவதை நான் பார்க்கிறேன். நேபாளத்தின் வனப்பகுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.</p><p style="text-align: justify; "> நேபாளத்தைத் தாக்கும் நிலநடுக்கங்களை நான் பார்க்கிறேன். இந்த நிலநடுக்கம் 7 முதல் 8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்தவையாக இருக்கும். இதனால், சிலர் பலியாவதையும் நான் பார்க்கிறேன்.</p><p style="text-align: justify; ">

நான் வெள்ளத்தைப் பார்க்கிறேன், தண்ணீரைப் பார்க்கிறேன் நேபாளத்தின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. நேபாளத்துக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே கணித்த பாதிரியாரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-04T01:20:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிஸில் 'சென்' நதிக்கரையில் பரபரப்பை கிளப்பிய மோதல் ; பிடிபட்ட ஆயுததாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/clash-sparks-tension-on-seine-riverbank-in-paris-1788483123"></link>
            <id>https://canadamirror.com/article/clash-sparks-tension-on-seine-riverbank-in-paris-1788483123</id>
            <summary type="text">பாரிஸின் 1-ஆவது வட்டாரத்தில் உள்ள &#039;சென்&#039; (Seine) நதிக்கரையில், கத்தி ஏந்திய ஒருவருக்கும் சுமார் பத்து பேர் கொண்ட குழுவொன்றுக்கும் இடையே நேற்று (03) இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரிஸின் 1-ஆவது வட்டாரத்தில் உள்ள 'சென்' (Seine) நதிக்கரையில், கத்தி ஏந்திய ஒருவருக்கும் சுமார் பத்து பேர் கொண்ட குழுவொன்றுக்கும் இடையே நேற்று (03) இரவு பாரிய மோதலொன்று வெடித்துள்ளது.
</p><p>நேற்று அதிகாலை சுமார் 1 மணியளவில் நதிக்கரையிலுள்ள கடையொன்றின்&nbsp; வெளிப்புற இருக்கைப் பகுதியில்&nbsp; இந்த வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5b1a5bc-fdde-47af-9484-46296f139c3d/26-6a9a163533ff4.webp' /></p><p> கதிரைகள் மற்றும் இரும்புக்கம்பிகளைக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>இந்த வட்டகையில் மாதத்தில் பல தடவைகள், குறிப்பாக வார இறுதி நாட்களில் இவ்வாறான மோதல்கள் வழமையாக நடைபெறுவதாக அப்பகுதிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். </p><p>ஆயினும், இம்முறை நபரொருவர் கத்தியுடன் காணப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
ஆயுததாரியைக் கண்டதும் அச்சமடைந்த வாடிக்கையாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் சிற்றுண்டிச்சாலையின் உட்பகுதிக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.</p><p>இந்தச் சம்பவத்தின் போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் துணிச்சலாகச் செயற்பட்டு, குறித்த ஆயுததாரியை மடக்கிப் பிடித்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். </p><p>இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் , கத்தி ஏந்திய அந்த நபரைக் கைது செய்துள்ளனர்&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T00:52:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்ற திட்டம் ; இஸ்ரேல் அமைச்சர் கருத்தால் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-plan-to-expel-250-000-palestinians-1788482136"></link>
            <id>https://canadamirror.com/article/israel-plan-to-expel-250-000-palestinians-1788482136</id>
            <summary type="text">இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை முன்வைத்தார்.</p><p>

கடும் போட்டி நிலவிய இஸ்ரேலிய தேர்தல்களுக்கு முன்னதாக பேசிய அவர், இந்த திட்டத்தின்படி முதல் ஆண்டில் காசாவில் இருந்து 250,000 பாலஸ்தீனியர்களும், அதனை தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகளில் மீதமுள்ள சுமார் இரண்டு மில்லியன் மக்களும் வெளியேறுவார்கள் என்று கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/220d085b-9dfb-428b-9cd1-e64f5f9b038b/26-6a9a125a3aebd.webp' /></p><p>

</p><p>
"இது யதார்த்தமானதுதான்," என்று கூறிய பென் கிவிர், அந்த நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல், சில நாடுகள் காசா மக்களை ஏற்றுக்கொள்ள "தயாராக" இருப்பதாக கூறினார்.
</p><p>
"காசாவின் மக்கள் வெளியேறுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்," என்று கூறிய அவர், இந்த திட்டம் பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதை குறிக்கவில்லை என்று தாம் நம்புவதாக மேலும் கூறினார்.
</p><p>
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் பொதுமக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயர செய்வது, ஜெனீவா உடன்படிக்கைகளின்படி ஒரு போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது.


</p><p>
பாலஸ்தீனியர்களை பொறுத்தவரை, அவர்களை அவர்களின் நிலத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் எந்தவொரு முயற்சியும், 1948-இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அவர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்த 'நக்ஃபா' அல்லது பேரழிவை நினைவூட்டும்.
</p><p>
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணியில் முக்கிய அமைச்சராக உள்ள பென் கிவிர் தெரிவிக்கும் ஆத்திரமூட்டும் கருத்துக்கள், தொடர்ந்து சர்வதேச கண்டனத்தை ஈர்த்து வருகின்றன.
</p><p>
அடுத்த அரசாங்கம் அமையும்போது, ​​தனது வலதுசாரி ஜனரஞ்சக யூத சக்தி கட்சி "குடியேற்றப் பொறுப்புள்ள ஒரு அமைச்சகத்தை" கோரும் என்று பென் கிவிர் கூறினார். </p><p>மேலும், தனது திட்டம் "ஒன்றரை வருட உழைப்பின் விளைவு மற்றும்... உறுதியானது" என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-04T00:35:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் மீது வழக்கு செல்லாது ; அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா முன்னாள் ஜனாதிபதி மதுரோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/maduro-case-against-me-is-invalid-in-us-court-1788478697"></link>
            <id>https://canadamirror.com/article/maduro-case-against-me-is-invalid-in-us-court-1788478697</id>
            <summary type="text">ஒரு இறையாண்மை நாட்டின் தலைவராக தன் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் செல்லாது எனக் கூறி, அவற்றை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு இறையாண்மை நாட்டின் தலைவராக தன் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் செல்லாது எனக் கூறி, அவற்றை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மனு தாக்கல் செய்துள்ளாா்.</p><p>

அமெரிக்காவில் தொடரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கின் அடிப்படையில், வெனிசுவேலா தலைநகரில் அமெரிக்க ராணுவம்&nbsp; நடத்திய அதிரடி நடவடிக்கையின்மூலம் நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டாா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e9bf4f8-f293-47fd-be23-149fdf2405c2/26-6a9a04eb335a5.webp' /></p><p> </p><p>தற்போது புரூக்ளின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவா், தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து மறுத்து வருகிறாா். </p><p>இந்நிலையில், நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி, அவரின் வழக்குரைஞா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவராக, பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் சா்வதேச சட்டங்களின்படி இத்தகைய வழக்குகளில் இருந்து நிக்கோலஸ் மதுரோவுக்கு முழு சட்டப் பாதுகாப்பு விலக்கு உள்ளது. </p><p>மேலும், நிக்கோலஸ் மதுரோ மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன’ என்று வாதிட்டப்பட்டுள்ளது.

இந்த மனு மீது அமெரிக்க அரசுபதிலளிக்க உத்தரவிட்டுள்ள நீதிபதி, வழக்கு விசாரணையை நவ. 17-க்கு ஒத்திவைத்துள்ளாா்.</p><p> கடந்த 2019 முதல் நிக்கோலஸ் மதுரோவை வெனிசுவேலாவின் அதிபராக அமெரிக்கா அங்கீகரிக்காத நிலையில், அவா் தரப்பின் இந்த வாதம் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பு குறைவு எனச் சட்ட வல்லுநா்கள் கருதுகின்றனா்.</p><p> அந்தவகையில், வழக்கு நிராகரிக்கப்பட்டால் அடுத்தாண்டு ஜூன் முதல் நிக்கோலஸ் மதுரோ மீதான நேரடி விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டின் துணை அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் பொறுப்பேற்று, அமெரிக்காவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருகிறாா். </p><p>அண்மையில், இருநாடுகளுக்கு இடையே முக்கிய எண்ணெய் ஒப்பந்தமும் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-03T23:38:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - நிபுணர்கள் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-hazards-nepal-disaster-highlights-emerging-1788446835"></link>
            <id>https://canadamirror.com/article/new-hazards-nepal-disaster-highlights-emerging-1788446835</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பாறை மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக உண்டான பேரழிவு, கனடாவின் மாறுபடும் மலைப்பகுதிகளிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பாறை மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக உண்டான பேரழிவு, கனடாவின் மாறுபடும் மலைப்பகுதிகளிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது. </p><p>
புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதும், உறைபனி நிலம் தளர்வதும் புதிய இயற்கை பேரிடர்களை உருவாக்கி வருவதாகக் கனடாவின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p> 
சஸ்காட்செவன் பல்கலைக்கழகத்தின் 'க்ளோபல் வாட்டர் ஃபியூச்சர்ஸ் அப்சர்வேட்டரீஸ்' திட்டத்தின் இயக்குனர் ஜான் பொமரோய் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cfad184-9b0c-4d04-a78c-10e59fff7101/26-6a99887554bee.webp' /></p><p> 
உலகில் அதிக பனிப்பாறைகளையும், பரந்த உறைபனி நிலங்களையும் கொண்ட நாடான கனடாவில் பனி உருகும் வேகம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும், இதுவரை கண்டிராத புதிய ஆபத்துகள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p> 
நேபாளம் மற்றும் திபெத் எல்லையோரப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. </p><p>
இமயமலையில் உறைந்த நிலையில் இருந்த பாறைப் பாளம் உடைந்து, பனிப்பாறையோடு சேர்ந்து சுமார் 1 கிலோமீட்டர் ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்தது. </p><p>
இதனால் பனியில் தேங்கியிருந்த நீர் வெளியாகி, பாறை மற்றும் படிவுகளுடன் சேர்ந்து மணிக்கு 160 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் பாய்ந்தது.</p><p> சில இடங்களில் 50 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலை போல வெள்ளம் சீறிப்பாய்ந்து எல்லையோரச் சாவடிகளை அழித்தது.
கனடாவிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்கெனவே சிறிய அளவில் தொடங்கிவிட்டதாக பொமரோய் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>ஆற்று நீர்மட்டத்தை அளவிடும் வழக்கமான அமைப்புகளைத் தாண்டி, ஆபத்தான மலைப்பகுதிகளைக் கண்காணிக்க புதிய செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T22:51:50+00:00</updated>
        </entry>
    </feed>
