<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-26T22:45:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் 50% வரி விதிப்பு அச்சுறுத்தல்: ஆல்பர்ட்டா பிரதமரின் அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/alberta-premier-says-she-wont-retaliate-trumps-1785076499"></link>
            <id>https://canadamirror.com/article/alberta-premier-says-she-wont-retaliate-trumps-1785076499</id>
            <summary type="text">கனடியப் பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைக்குப் பதிலடியாக, அமெரிக்க மதுபானங்களுக்குத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடியப் பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைக்குப் பதிலடியாக, அமெரிக்க மதுபானங்களுக்குத் தடை விதிக்கப் போவதில்லை என ஆல்பர்ட்டா மாகாணப் பிரதமர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார். </p><p>
சனிக்கிழமை ஒளிபரப்பான வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தங்களது கடைகளில் அமெரிக்கப் பொருட்களை விற்பனைக்கு வைப்பது மற்றும் நுகர்வது குறித்த முடிவை சில்லறை வியாபாரிகளிடமும், நுகர்வோரிடமுமே விட்டுவிடுவதாகக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/824fa86f-abb5-425c-ad1b-c86a9b2e5fb1/26-6a661b14a3e13.webp' /></p><p>
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் செல்லும் எந்தவொரு பொருளுக்கும் அமெரிக்கா தடை விதிக்கவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
</p><p>எனவே பதிலுக்கு நாம் தடை விதிப்பது என்பது சற்று தீவிரமான நடவடிக்கையாகிவிடும் எனவும் நாம் இதைக் நிதானமாகவும் அமைதியாகவும் கையாள வேண்டும் எனவும் உணர்ச்சிவசப்படாமல், துறை சார்ந்த சிக்கல்களை ஒவ்வொன்றாக அணுகித் தீர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>கடந்த ஆண்டு டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் கருத்துகளுக்குப் பதிலடியாக, கனடாவின் பல மாகாண மதுபானக் கட்டுப்பாட்டு வாரியங்கள் அமெரிக்க மதுபானங்களை வாங்குவதை நிறுத்தியிருந்தன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T21:37:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெர்லின் பிரைட் பேரணி தாக்குதல் ; சந்தேகநபர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/berlin-pride-attack-suspect-killed-police-shooting-1785101722"></link>
            <id>https://canadamirror.com/article/berlin-pride-attack-suspect-killed-police-shooting-1785101722</id>
            <summary type="text">ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற பிரைட் (Pride) பேரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர், பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற பிரைட் (Pride) பேரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர், பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

மேற்கு பெர்லினிலுள்ள ஸ்பாண்டாவ் (Spandau) பகுதியில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கையின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efab52f6-8de0-40ce-94f7-b0076d9df318/26-6a667d9c48952.webp' /></p><p>உயிரிழந்தவர் அப்துல் பலூத் (Abdul Ballout) என்ற 21 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், பிரைட் பேரணியின் போது மக்கள் கூட்டத்துக்குள் வாகனத்தை செலுத்தியதுடன், கத்தியால் பலரைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
</p><p>
இந்தத் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது 29 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
லெபனான் பின்னணியைக் கொண்ட ஜேர்மன் பிரஜையான அப்துல் பலூத், ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்டவர் எனவும், ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்கு முயற்சித்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தாக்குதலைத் தொடர்ந்து, ஜேர்மனியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோன்ற தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
பிரைட் பேரணியின் கொண்டாட்டத்துக்காக தயாரான பெர்லின் நகரம், எதிர்பாராத வன்முறைச் சம்பவத்தால் அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியுள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-26T21:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் கருணைக் கொலைக்கு நாடாளுமன்றம் இறுதி ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/legal-recognition-of-euthanasia-in-france-1785090949"></link>
            <id>https://canadamirror.com/article/legal-recognition-of-euthanasia-in-france-1785090949</id>
            <summary type="text">பல ஆண்டுகளாக நீடித்த தீவிர அரசியல் மற்றும் சமூக விவாதங்களுக்குப் பிறகு, கடுமையான நிபந்தனைகளின் கீழ் &quot;கருணைக் கொலை&quot; (Assisted Dying) மற்றும் உதவியுடனான...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல ஆண்டுகளாக நீடித்த தீவிர அரசியல் மற்றும் சமூக விவாதங்களுக்குப் பிறகு, கடுமையான நிபந்தனைகளின் கீழ் "கருணைக் கொலை" (Assisted Dying) மற்றும் உதவியுடனான தற்கொலையை சட்டபூர்வமாக அனுமதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மசோதாவுக்கு பிரான்ஸ் தேசிய சட்டமன்றம் இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
</p><p>
அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் முக்கியமான சமூகச் சீர்திருத்தங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தச் சட்டம், பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக உதவியுடனான தற்கொலைக்கும், குறிப்பிட்ட விதிவிலக்கான சூழ்நிலைகளில் நேரடி கருணைக் கொலைக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குகிறது.</p><p>

தவறான பயன்பாடுகளைத் தடுப்பதற்கும், பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் கருணைக் கொலைக்காக பிரான்சுக்கு வருவதைத் தடுக்கவும் (Sterbehilfe-Tourismus), இந்தச் சட்டத்தில் பல கடுமையான தகுதிநிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fa24136-1f4d-4dbf-acbc-9464c8be50f9/26-6a66538697db2.webp' /></p><p>

அதன்படி, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு, தாங்க முடியாத உடல் அல்லது மன வேதனையை அனுபவிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.</p><p> மேலும், விண்ணப்பதாரர் முழுமையான மனநலத்துடனும், சுயநினைவுடனும் இருக்க வேண்டும். எந்தவித கட்டாயமும் இன்றி, தனது விருப்பத்தை சுதந்திரமாகவும், மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
</p><p>
அத்துடன், விண்ணப்பதாரர் பிரெஞ்சு குடிமகனாகவோ அல்லது பிரான்சில் நிரந்தரமாக வசிப்பவராகவோ இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><p>
சட்டத்தின்படி, நோயாளியே இறப்புக்கான மருந்தை உட்கொள்ளும் "உதவியுடனான தற்கொலை" முறைக்கே முதன்மை வழங்கப்படும். உடல்நிலை காரணமாக அதனைச் செய்ய இயலாதவர்களுக்கு மட்டுமே, மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் மருந்து செலுத்தி நேரடி கருணைக் கொலை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். </p><p>இதற்கான அனைத்து விண்ணப்பங்களையும் மருத்துவர்கள் அடங்கிய குழு பரிசீலித்து இறுதி முடிவெடுக்கும்.

இந்த புதிய சட்டத்தின் மூலம், பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் வரிசையில் கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய நாடாக பிரான்சும் இணைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-26T18:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு உதவ 34 தீயணைப்பு வீரர்களை அனுப்பிய சுவிட்சர்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/switzerland-sends-34-firefighters-to-help-france-1785088799"></link>
            <id>https://canadamirror.com/article/switzerland-sends-34-firefighters-to-help-france-1785088799</id>
            <summary type="text">பிரான்சின் ஜிரோண்டே (Gironde) பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு உதவுவதற்காக, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து 34 தீயணைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சின் ஜிரோண்டே (Gironde) பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு உதவுவதற்காக, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து 34 தீயணைப்பு வீரர்கள் நேற்று போர்டோவை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.</p><p>

ஜெனீவா தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை (GSIS) வெள்ளிக்கிழமை பிரெஞ்சு அதிகாரிகளுக்கு உதவி வழங்க முன்வந்ததைத் தொடர்ந்து, அந்த உதவியை பிரான்ஸ் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a4b6204-2ac0-4ae8-9d3d-3329c4f57555/26-6a664b218a01a.webp' /></p><p> இதையடுத்து, சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் மாகாணங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களைக் கொண்டு சிறப்பு செயல்பாட்டுக் குழு விரைவாக அமைக்கப்பட்டது.</p><p>

இந்தக் குழுவில் ஜெனீவாவைச் சேர்ந்த 23 தீயணைப்பு வீரர்கள், வாட் (Vaud) மாகாணத்தைச் சேர்ந்த 8 பேர், நியூஷாடெல் (Neuchâtel) மாகாணத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஹாட்-சவோய் (Haute-Savoie) பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 34 பேர் இடம்பெற்றுள்ளனர். </p><p>இவர்களில் துணை மருத்துவர் மற்றும் இயந்திரப் பராமரிப்பு நிபுணரும் அடங்குகின்றனர்.

சனிக்கிழமை நண்பகலில் ஆறு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஐந்து இலகுரக, உதவி வாகனங்கள் உட்பட மொத்தம் 11 வாகனங்களுடன் குழுவினர் புறப்பட்டு, அதே நாள் மாலை போர்டோவை அடைந்துள்ளனர்.
</p><p>
GSIS-இன் கட்டளையின் கீழ் செயல்படும் இந்தப் படைப்பிரிவு, ஜிரோண்டே பகுதியில் காட்டுத்தீயை அணைக்கும் பணிகளுக்கு ஆதரவளிப்பதுடன், நகர்ப்புற தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள உள்ளூர் தீயணைப்பு வீரர்களுக்கும் நிவாரணமாக செயல்படவுள்ளது.
</p><p>
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமைப் பாதுகாப்பு அமைப்பின் கீழ், நான்கு இலகுரக ஹெலிகொப்டர்களை அனுப்புமாறு சுவிட்சர்லாந்திடம் பிரான்ஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2220f42c-01cf-43d2-9c79-9288066d787c/26-6a664b224c501.webp' /></p><p>எனினும், சுவிட்சர்லாந்தில் நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் அதிகரித்துள்ள காட்டுத்தீ அபாயத்தை கருத்தில் கொண்டு, வான்வழி வளங்களின் இருப்பை மத்திய பாதுகாப்பு மற்றும் குடிமைப் பாதுகாப்புத் துறை தற்போது மதிப்பீடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த மதிப்பீடு நிறைவடைந்த பின்னரே ஹெலிகொப்டர்கள் அனுப்புவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், எந்த வகை இராணுவ ஹெலிகொப்டர்கள் பிரான்சுக்கு அனுப்பப்படலாம் என்பது தொடர்பில் தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பாரிஸிலிருந்து இந்த உதவிக்கான அதிகாரப்பூர்வ கோரிக்கை வெள்ளிக்கிழமை மாலை கிடைத்ததாகவும் சுவிட்சர்லாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-26T18:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 60 நாடுகளுக்கு ட்ரம்ப் புதிய வரி விதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-announce-new-12-5-percent-tariff-switzerland-1785087926"></link>
            <id>https://canadamirror.com/article/trump-announce-new-12-5-percent-tariff-switzerland-1785087926</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 60 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 12.5 சதவீதம் வரையிலான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 60 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 12.5 சதவீதம் வரையிலான புதிய வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளார்.
</p><p>
உச்ச நீதிமன்றத்தில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு அவர் அறிமுகப்படுத்திய தற்காலிக உலகளாவிய வரிகள் காலாவதியாகும் நிலையில், இன்று அதிகாலை 12:01 மணிக்கு (உள்ளூர் நேரம்) அமுலுக்கு வரும் வகையில் இந்த புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>

சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 12.5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23021951-4433-4ae0-8f2e-77925f2e5783/26-6a6647b80194c.webp' /></p><p>கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை போதுமான அளவு அமுல்படுத்தவில்லை என்பதே இதற்குக் கூறப்பட்ட காரணமாகும்.
</p><p>
ட்ரம்ப் தனது நடவடிக்கைகளை 1974 ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ஐ அடிப்படையாகக் கொண்டுள்ளார்.</p><p>

“நியாயமற்ற, பொருத்தமற்ற அல்லது பாகுபாடு காட்டும்” வர்த்தக நடைமுறைகளைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட நாடுகளுக்கு எதிராக இறக்குமதி வரிகள் மற்றும் பிற தடைகளை விதிக்க இந்தச் சட்டம் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.
</p><p>
ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் சீனா மீது விரிவான வரிகளை விதிக்க ஏற்கனவே பிரிவு 301-ஐப் பயன்படுத்தியிருந்தார். இந்த வரிகள் பின்னர் சட்டரீதியான சவால்களைத் தாங்கி நின்றன.</p>]]></content>
            <updated>2026-07-26T17:45:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுமிகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முயன்ற நபருக்குக் கத்திக்குத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-stabbed-in-craig-henry-park-on-thursday-1785084109"></link>
            <id>https://canadamirror.com/article/man-stabbed-in-craig-henry-park-on-thursday-1785084109</id>
            <summary type="text">கனடாவின் நெப்பியனின் கிரெய்க் ஹென்றி பூங்காவில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பல சிறுமிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் உருவானது என உள்ளாட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் நெப்பியனின் கிரெய்க் ஹென்றி பூங்காவில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பல சிறுமிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் உருவானது என உள்ளாட்சி மன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
</p><p>நாக்ஸ்டேல்-மெரிவேல் வார்டின் நகரமன்ற உறுப்பினரான ஷான் டிவைன், சனிக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் இச்சம்பவம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
</p><p>ஒட்டாவா காவல்துறையினர் எனக்கு அளித்த தகவலின்படி, இந்தச் சம்பவத்தில் 15 வயதுக்கு உட்பட்ட சில சிறுமிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b81da703-76ed-4319-9ad4-9f67f37f7142/26-6a6638cf0a6b8.webp' /></p><p>
</p><p> அப்போது அங்கு வந்த 55 வயதான தந்தை ஒருவர், அந்தச் சிறுமிகளின் மோதலைத் தடுத்து விலக்க முயன்றபோது, ஒரு சிறுமியால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
</p><p>காயமடைந்த நபரின் வயிற்றில் இரண்டு இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக ஒட்டாவா மருத்துவமனையின் அவசர சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டு, தற்போது சீரான நிலையில் உள்ளதாகவும் மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
இது எந்தவொரு ரவுடி கும்பலின் மோதலும் அல்ல எனவும், பொதுமக்களுக்கு உடனடியாக எந்த ஆபத்தும் இல்லை எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T17:03:51+00:00</updated>
        </entry>
    </feed>
