<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-07T16:39:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சட்டவிரோத கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/more-than-4000-plants-seized-from-marijuana-1786119864"></link>
            <id>https://canadamirror.com/article/more-than-4000-plants-seized-from-marijuana-1786119864</id>
            <summary type="text">கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிரேஸ்பிரிட்ஜ் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கஞ்சா உற்பத்தி மையம் தொடர்பான பல மாத கால விசாரணை நிறைவுக்கு வந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிரேஸ்பிரிட்ஜ் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கஞ்சா உற்பத்தி மையம் தொடர்பான பல மாத கால விசாரணை நிறைவுக்கு வந்துள்ளதாக ஒண்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
பிரேஸ்பிரிட்ஜில் உள்ள லிட்டில் ரோடு பகுதியில் சட்டவிரோத கஞ்சா தோட்டம் இயங்கி வருவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், கடந்த வசந்த காலத்தில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர். </p><p>
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 16ம் திகதி பொலிஸார் மற்றும் அரசு நிறுவனங்களின் உதவியுடன் அந்த இடத்தில் பொலிஸார் அதிரடி சோதனை நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f62cf667-7bb8-4e9e-92ab-996354705e1b/26-6a7606ba96119.webp' /></p><p> </p><p>
சோதனை ஆணைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, அங்கு வளர்க்கப்பட்டு வந்த 4,000-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் கஞ்சா சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர். </p><p>
இந்த விசாரணை நடவடிக்கையின் முடிவில், சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நார்த் யார்க் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T16:33:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலக்கு வைக்கப்பட்ட அரசுப்படையின் ராணுவ முகாம்கள் ; திடீர் தாக்குதல்களால் பறிக்கப்பட்ட உயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sudden-attacks-target-cities-many-killed-1786107522"></link>
            <id>https://canadamirror.com/article/sudden-attacks-target-cities-many-killed-1786107522</id>
            <summary type="text">ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. </p><p>இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5379e5cc-9395-452d-8ff7-5f850e9fe9c8/26-6a75d683b4e1e.webp' />&nbsp;</p><p>
</p><p>
ஏமனின் சில பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.</p><p>
ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.</p><p>

அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர் .</p><p> இந்த தாக்குதலுக்கு சவுதி பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், ஏமனில் அரசுப்படையினர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர்.
</p><p>
ஏமனின் ஹட்ரமொட், மரிப் ஆகிய நகரங்களில் அரசுப்படையினரின் ராணுவ முகாம்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். </p><p>இந்த தாக்குதலில் அரசுப்படையினர் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-07T15:45:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ மேயர் தேர்தல் கருத்துக் கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/olivia-chow-leads-toronto-mayoral-race-1786113237"></link>
            <id>https://canadamirror.com/article/olivia-chow-leads-toronto-mayoral-race-1786113237</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ மேயர் தேர்தலுக்கான ரேஸில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
 புதிதாகக் களமிறங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ மேயர் தேர்தலுக்கான ரேஸில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
</p><p> புதிதாகக் களமிறங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர் 10 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.</p><p> 
லியாசன் ஸ்ட்ராடஜீஸ் நிறுவனம் ஆகஸ்ட் 4 மற்றும் 5-ஆம் திகதிகளுக்கு இடையில் 1,000 டொராண்டோவாசிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56d96f90-6f08-46fa-9f71-e417102f0cd8/26-6a75ecd789724.webp' /></p><p>
</p><p>ஒலிவியா சௌ: 47% , பிராட் பிராட்போர்ட்: 40% , கிறிஸ் அலெக்ஸாண்டர்: 10% மற்றும் மற்ற வேட்பாளர்கள்: 3% வாக்குகள் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
</p><p>கிறிஸ் அலெக்ஸாண்டர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வில், 'மற்ற வேட்பாளர்களுக்கு' 10% ஆதரவு இருந்தது. </p><p>தற்போது அந்த ஆதரவு அலெக்ஸாண்டரை நோக்கி நகர்ந்துள்ளதாக லியாசன் ஸ்ட்ராடஜீஸ் தலைவர் டேவிட் வலன்டின் தெரிவித்துள்ளார். </p><p>
முடிவெடுக்காத வாக்காளர்கள் உட்பட அனைத்து மக்களிடமும் நடத்தப்பட்ட கணிப்பில், ஒலிவியா சௌ 38%, பிராட்போர்ட் 32%, அலெக்ஸாண்டர் 8% ஆதரவைப் பெற்றுள்ளனர்.
</p><p> இன்னும் 20 சதவீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்காமல் உள்ளனர். தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் இந்த 20% வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T15:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வோகான் பூங்காவில் தகாத செயலில் ஈடுபட்ட ஊழியர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/vaughan-amusement-park-ride-operator-charged-1786111302"></link>
            <id>https://canadamirror.com/article/vaughan-amusement-park-ride-operator-charged-1786111302</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வோகான் பகுதியில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவில், சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின் கீழ் சவாரி இயங்குனர் ஒருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வோகான் பகுதியில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவில், சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின் கீழ் சவாரி இயங்குனர் ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
</p><p>இச்சம்பவத்தில் மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>யார்க் பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மே 25 அன்று சிறுமி ஒருவர் தனது நண்பர்களுடன் பெயர் குறிப்பிடப்படாத பொழுதுபோக்கு பூங்காவிற்குச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee64b643-6cda-4305-b89d-b6b646cc1aad/26-6a75e54883ee8.webp' /></p><p> </p><p>
அங்கு அவர் சவாரி ஒன்றில் ஏற முயன்றபோது, பாதுகாப்புப் பரிசோதனைகளைச் செய்வதாகக் கூறி, அங்கிருந்த ஊழியர் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
</p><p>இச்சம்பவம் தொடர்பாக பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த ஜுகாத் தாமி என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.</p><p>
இவரிடம் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகக் கருதும் பொலிஸார், பொதுமக்கள் அடையாளம் காணும் பொருட்டு சந்தேகநபரான தாமியின் புகைப்படத்தை வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.</p><p>
இந்த விசாரணை தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், யார்க் பிராந்திய பொலிஸின் சிறப்புப் பிரிவை 1-866-876-5423 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது Crime Stoppers அமைப்பையோ அநாமதேயமாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T15:17:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் இந்த வார இறுதியில் காலைநிலை குறித்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rain-sun-and-possible-thunderstorms-1786112413"></link>
            <id>https://canadamirror.com/article/rain-sun-and-possible-thunderstorms-1786112413</id>
            <summary type="text">&amp;nbsp;இந்த வார இறுதியில் டொராண்டோவில் வெயில், மழை மற்றும் அதிக ஈரப்பதம் கலந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
கனடிய சுற்றுச்சூழல் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்த வார இறுதியில் டொராண்டோவில் வெயில், மழை மற்றும் அதிக ஈரப்பதம் கலந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>
கனடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தின் கணிப்பின்படி என இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெப்பநிலை அதிகபட்சமாக 27 பாகை செல்சியஸாக பதிவாகும். பகுதி மேகமூட்டமான வானிலையுடன் 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியக்கூறும் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab15b33-7a32-45ca-8433-598cfb1d3ad1/26-6a75e99f70750.webp' /></p><p> </p><p>
ஈரப்பதம் காரணமாக உணரும் வெப்பநிலை 34 ஆக இருக்கும். இரவில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 21பாகை செல்சியஸாக குறையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.</p><p> 
சனிக்கிழமையன்றும் இதேபோன்ற வானிலையே தொடரும். அதிகபட்ச வெப்பநிலை 29 பாகை செல்சியாக உயரும். 60 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
 இடையிடையே மேகமூட்டமான சூழல் நிலவுவதுடன், வெப்பநிலை 37 வரை எட்டக்கூடும். இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 19 பாகை செல்சியதாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
</p><p>ஞாயிற்றுக்கிழமையன்று வெப்பநிலை அதிகபட்சமாக 28 பாகை செல்சியஸ் வரை இருக்கும். 30 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அன்றைய இரவு நேரத்தில் வெப்பநிலை 18 பாகை செல்சியாககக் குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T15:15:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைக்குள் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூடு ; ஆசிரியர்கள் உட்பட 06 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/gun-attack-at-thailand-school-shocks-public-1786092173"></link>
            <id>https://canadamirror.com/article/gun-attack-at-thailand-school-shocks-public-1786092173</id>
            <summary type="text">தாய்லாந்தின் நோந்தாபுரி மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (07) வெள்ளிக்கிழமை காலை மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் நோந்தாபுரி மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (07) வெள்ளிக்கிழமை காலை மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்படக் குறைந்தது 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>


அண்மைக்காலத்தில் தாய்லாந்து பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f83e6a9-0ce8-44a5-80cd-081ca1fcca0c/26-6a759a8f1762f.webp' /></p><p>

பாங்கொக்கிற்கு வடக்கே நோந்தாபுரி மாகாணத்தில் சுமார் 3,000 மாணவர்கள் கல்வி பயிலும் பிரபல இடைநிலைப் பாடசாலையான 'டெப்சிரின் நோந்தாபுரி பாடசாலை' வளாகத்திலேயே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தாக்குதலில் 03 ஆசிரியர்கள் மற்றும் 03 மாணவர்கள் உட்பட 06 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் திரைராங் பிவ்பான் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.</p><p>
துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவன் உயிரிழந்துவிட்டதாக ஆரம்பகட்ட செய்திகள் வெளியாயினும், அவன் உயிருடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>

துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பாடசாலை வகுப்பறையின் தரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இத்துப்பாக்கி மாணவனின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமானது எனக் நம்பப்படுகிறது.
</p><p>
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T11:15:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகள் பாதுகாப்பு விவகாரம் ; மெட்டா நிறுவனத்துக்கு 567 மில்லியன் டொலர் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/meta-faces-massive-567-million-fine-1786101238"></link>
            <id>https://canadamirror.com/article/meta-faces-massive-567-million-fine-1786101238</id>
            <summary type="text">மெட்டா நிறுவனத்துக்கு ரூ.5,400 கோடி அபராதம் விதித்து அமெரிக்கா கோர்ட்டு பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெட்டா நிறுவனத்துக்கு ரூ.5,400 கோடி அபராதம் விதித்து அமெரிக்கா கோர்ட்டு பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
</p><p>
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக ஊட கங்களின் தாய் நிறுவனமான மெட்டா மீது அந்த செயலிகளால் குழந்தைகளின் மனநலம் பாதிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை மூடி மறைத்தது தொடர்பாக அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/322d63ca-441c-495b-a66f-7cfdb98e73b7/26-6a75bdf815e7d.webp' /></p><p>

இந்த வழக்கில் முதல் கட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 375 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மெட்டா நிறுவனத்திற்கு அபராதத்தை நியூமெக்சிகோ நீதிமன்றத்தில் விதித்திருந்தது.
</p><p>
இந்த நிலையில் இவ்வழக்கின் 2-ம் கட்ட தீர்ப்பை நியூமெக்சிகோ நீதிமன்ற அளித்தது. அதில் தனது சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு இழப்பீடாக 567 மில்லியன் அமெரிக்க டாலர்களை மெட்டா நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T11:14:09+00:00</updated>
        </entry>
    </feed>
