<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-05T21:35:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் ஒரே வருடத்தில் 56 பேருக்கு மரண தண்டனை ; ஐ.நா. வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-executes-56-people-within-one-year-1785963804"></link>
            <id>https://canadamirror.com/article/iran-executes-56-people-within-one-year-1785963804</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல், ஈரானில் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

2026 ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல், ஈரானில் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>

2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஈரானில் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் வோல்கர் டுர்க் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b07961ea-800f-46b6-810e-0849618f1f95/26-6a73a51e54e9a.webp' /></p><p>

</p><p>இந்தத் தரவுகளின்படி, கடந்த டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரையில் ஈரான் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் கைதான 27 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் இந்த மரண தண்டனைகள் அனைத்தும் சர்வதேச அளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.
</p><p>
இந்த மரண தண்டனைகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒடுக்கவும் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், 100-க்கும் அதிகமானோர் மரண தண்டனை நிறைவேற்றப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


</p><p>முன்னதாக, ஈரானிய அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை அரசுப்படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், தாக்குதல் நடத்தியும் ஒடுக்கினர். இதனால், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.</p><p>

இத்துடன், ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் வெளியிட்ட தகவலில் அரசுக்கு எதிராகப் போராடிய 26 பேருக்கும், அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் 26 பேருக்கும் ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-05T21:03:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் யூத எதிர்ப்பு மேலோங்குவதாகக் கூறி அமெரிக்காவில் தஞ்சம் கோர ஊக்குவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/calls-emerge-for-us-refugee-status-as-group-helps-1785946790"></link>
            <id>https://canadamirror.com/article/calls-emerge-for-us-refugee-status-as-group-helps-1785946790</id>
            <summary type="text">கனடாவில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு நடவடிக்கைகளால் அச்சுறுத்தலை உணரும் கனடிய யூதர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்காவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு நடவடிக்கைகளால் அச்சுறுத்தலை உணரும் கனடிய யூதர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்காவின் பழமைவாத சிந்தனைக் குழு மற்றும் முன்னாள் ஒன்ராறியோவாசி ஒருவர் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>கனடாவிலுள்ள யூதப் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான கனடிய யூதர்கள் தொடர் அச்சத்தில் வாழ்வதாகவும், அதிலிருந்து தப்பிக்க முயல்வதாகவும் 'ஜூயிஷ் டூல்சா' அமைப்பின் நிர்வாக இயக்குநரான ஜோ ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p>
அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜோ ராபர்ட்ஸ், 2016 இல் ஒன்ராறியோவுக்குச் சென்று குடியேறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f2b22e3-c047-49bd-971f-6e16734b0609/26-6a7362a83b52c.webp' /></p><p> 
எனினும், 2023 ஒக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியது முதல் உள்ளூர் பகுதிகளில் யூத எதிர்ப்புச் சுவரோவியங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்ததாகக் கூறி, அவர் தனது குடும்பத்துடன் ஒக்லஹோமா மாநிலத்திலுள்ள 'டூல்சா' நகருக்கு இடம்பெயர்ந்தார்.
</p><p>டூல்சா நகரில் யூதர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தின்கீழ், கனடாவைச் சேர்ந்த சுமார் 800 முதல் 900 யூதக் குடும்பங்கள் கனடாவை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துத் தங்களைத் தொடர்புகொண்டுள்ளதாக ராபர்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்காவிலும் யூத எதிர்ப்பு ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது என்பதை டிரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
</p><p>அமெரிக்க யூதக் குழுவின் 2025 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, சமீபத்திய வரலாற்றில் அமெரிக்க யூதர்களுக்கு எதிராக அதிக வன்முறைகள் பதிவான ஆண்டாக 2025 சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>
மேலும் 30 வயதிற்குட்பட்ட யூதர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தனிப்பட்ட முறையில் யூத எதிர்ப்புக் வெறுப்புப் பேச்சுகளால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
அமெரிக்க என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் என்ற சிந்தனைக் குழுவும், தங்கள் மதம் அல்லது இனத்தின் காரணமாகக் கனடாவில் துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் உள்ள கனடிய யூதர்களுக்கு அமெரிக்கா அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T19:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் ஹால்டன் ஹில்ஸில் துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-seeking-info-after-multiple-shots-fired-1785946100"></link>
            <id>https://canadamirror.com/article/police-seeking-info-after-multiple-shots-fired-1785946100</id>
            <summary type="text">கனடாவின் ஹால்டன் ஹில்ஸ் பகுதியில் குடியிருப்பு வீடு ஒன்று மற்றும் அங்கிருந்த வாகனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஹால்டன் ஹில்ஸ் பகுதியில் குடியிருப்பு வீடு ஒன்று மற்றும் அங்கிருந்த வாகனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
</p><p>ஜார்ஜ்டவுன் சமூகத்திற்கு உட்பட்ட 'எட்டாவது வீதி' மற்றும் 'ஐந்தாவது பக்க வீதி' சந்திப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
அதிகாலை 4:00 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக வந்த அழைப்புகளைத் தொடர்ந்து, ஹால்டன் பிராந்திய பொலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a8cf2a0-dd7c-42a2-b1e6-e37e323ac037/26-6a735ff60dc3d.webp' /></p><p>
</p><p>ஒரு வீட்டின் மீதும், அந்த வீட்டின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் பலமுறை துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளதைச் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
</p><p>துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் வீட்டிற்குள் மனிதர்கள் இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்கள் எதுவுமே ஏற்படவில்லை எனப் பொலிஸார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
</p><p>துப்பாக்கிச் சூடு நடந்த உடனடியாக, சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்று அப்பகுதியை விட்டு வேகமாகத் தப்பிச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p>
விசாரணைகளுக்காக 'எட்டாவது வீதியின்' குறிப்பிட்ட பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது. இச்சம்பவம் தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக நம்பப்படுவதாகவும், இதனால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவலோ அல்லது பாதுகாப்பு கேமரா பதிவுகளோ வைத்திருப்பவர்கள் உடனடியாகப் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T18:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் முக்கிய தீர்மானம் ; ஈரானும்இணக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-oman-reach-consensus-on-strait-of-hormuz-1785954070"></link>
            <id>https://canadamirror.com/article/iran-oman-reach-consensus-on-strait-of-hormuz-1785954070</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்துப் பாதைக்கான புவியியல் எல்லைகள் குறித்து ஈரானும் ஓமானும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டியுள்ளதாக தெரிவிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்துப் பாதைக்கான புவியியல் எல்லைகள் குறித்து ஈரானும் ஓமானும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

சில மூன்றாம் தரப்பினர் தலையிடாவிட்டால் இதற்கான கூட்டு அறிவிப்பொன்று இறுதி செய்யப்பட்டு வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பஹாயி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af262722-672f-45d1-9c0e-bc6225091f09/26-6a737f1864f98.webp' /></p><p> </p><p>

ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான இவ்வாறான எந்தவொரு ஒப்பந்தமும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த குறித்த நீர்வழியில் பாதுகாப்பிற்குத் தாமாகவே உத்தரவாதமளிக்காது எனவும் பஹாயி மேலும் குறிப்பிட்டார். </p><p>

ஈரானுக்கு இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய விட்டுக்கொடுப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான இந்த உத்தேச ஒப்பந்தமானது, ஹோர்முஸ் நீரிணை வழியாக வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்கள் மீதான கட்டுப்பாட்டை தெஹ்ரானுக்கு வழங்கும் என ஈரானிய சிரேஷ்ட சிரேஷ்ட அதிகாரி ஒருவரும், இரண்டு பிராந்திய அதிகாரிகளும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.</p><p> 

ஈரானின் கோரிக்கைகளுக்கு அடிபணியும் வகையிலான வெளிப்படையான நகர்வுகள் காணப்பட்ட போதிலும், முக்கிய விடயங்கள் தொடர்பில் இன்னும் உடன்பாடு எட்டப்பட வேண்டி உள்ளதாகத் தெரிவித்து, நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று உடனடியாக எட்டப்படவுள்ளது என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்றுகளை குறித்த வட்டாரங்கள் நிராகரித்தன.</p>]]></content>
            <updated>2026-08-05T18:28:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சில்லறை வணிகத் திருட்டு: 2 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்டோர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-call-armed-forces-after-suspected-grenade-1785944500"></link>
            <id>https://canadamirror.com/article/police-call-armed-forces-after-suspected-grenade-1785944500</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் சில்லறை வணிக நிறுவனங்களில் இடம்பெறும் திட்டமிட்ட திருட்டுகளைத் தடுப்பதற்காகத் தனியாகத் தொடங்கப்பட்ட &#039;திட்டமிட்ட சில்லறை குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் சில்லறை வணிக நிறுவனங்களில் இடம்பெறும் திட்டமிட்ட திருட்டுகளைத் தடுப்பதற்காகத் தனியாகத் தொடங்கப்பட்ட 'திட்டமிட்ட சில்லறை குற்றப் பிரிவு' கடந்த இரண்டு ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளதாகத் டொராண்டோ பொலிஸார் அறிவித்துள்ளனர். </p><p>
டொராண்டோ பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 23ஆம் பிரிவின் கீழ் இயங்கும் இந்த சிறப்புப் பிரிவின் பொறுப்பு அதிகாரியான ரோன் இது தொடர்பான விவரங்களை வெளியிட்டார்.</p><p> 
இச்சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது 4,000க்கும் அதிகமான வழக்குகள்/குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c89e0387-b1ec-483b-87d1-dd4c45c2e041/26-6a7359b665c0a.webp' /></p><p> </p><p>
இந்த விசாரணைகளில் திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 1.6 மில்லியன் டொலர்கள் ஆகும். 
ஒரேயொரு தனிப்பட்ட விசாரணையில் மட்டும் 20 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 400க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>இதில் ஈடுபட்டுள்ள பலரும் முதல்முறை குற்றம் செய்தவர்கள் அல்ல; தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களே இதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>இத்தகைய நபர்கள், திருடப்பட்ட பொருட்களை விநியோகிக்கும் மற்றும் மறுவிற்பனை செய்யும் பெரிய அளவிலான திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்பில் உள்ளனர்.</p><p> அதனால் தான் இக்குற்றங்களை ஒடுக்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
செய்தியாளர் சந்திப்பின் போது பொலிஸாரால் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், முகமூடி அணிந்த நபர்கள் சிலர் பெரிய பைகள் மற்றும் சூட்கேஸ்களுடன் டொராண்டோவிலுள்ள மதுபானக் கடைக்குள் நுழைந்து, பொருட்களை அள்ளிக் கொண்டு எவ்வித தடையுமின்றி வெளியேறுவது பதிவாகியிருந்தது. அவர்கள் அனைவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக டேவர்னர் உறுதிப்படுத்தினார். </p><p>
சில்லறை வணிகங்களில் நடைபெறும் இத்தகைய திருட்டுகள் சிறிய குற்றங்கள் அல்ல எனவும், இதன் மூலம் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் பில்லியன் கணக்கில் இழப்பு ஏற்படுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T18:00:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காளான் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mushrooms-sold-in-alberta-recalled-over-listeria-1785940880"></link>
            <id>https://canadamirror.com/article/mushrooms-sold-in-alberta-recalled-over-listeria-1785940880</id>
            <summary type="text">கனடாவில் &#039;ஹைலைன்&#039; நிறுவனத்தின் ஆர்கானிக் வெட்டப்பட்ட மினி பெல்லா காளான்களில் &#039;லிஸ்டீரியா&#039; பாக்டீரியா தொற்று பரவியிருக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் 'ஹைலைன்' நிறுவனத்தின் ஆர்கானிக் வெட்டப்பட்ட மினி பெல்லா காளான்களில் 'லிஸ்டீரியா' பாக்டீரியா தொற்று பரவியிருக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, அவற்றை சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக கனடிய சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>இந்தக் காளான்கள் அல்பெர்ட்டா மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.</p><p>
பொதுமக்கள் இந்த காளான்களை உட்கொள்ளவோ, பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ வேண்டாம் எனவும், அவற்றை உடனடியாகக் குப்பையில் வீசுமாறு அல்லது வாங்கிய இடத்திலேயே மீண்டும் ஒப்படைக்குமாறும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02dad946-81f8-49fa-9d37-0c9339fc4d98/26-6a734b92147e5.webp' /></p><p>
</p><p>லிஸ்டீரியா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப்போனது போலவோ அல்லது துர்நாற்றம் வீசுவது போலவோ தோற்றமளிக்காது; இருப்பினும் அவை மனிதர்களுக்குக் கடுமையான நோயை உண்டாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>வாந்தி, குமட்டல், தொடர் காய்ச்சல், தசை வலி, கடுமையான தலைவலி மற்றும் கழுத்து விறைப்பு போன்றவை இதன் முதன்மை அறிகுறிகளாகும்.
கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.
</p><p>பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்குச் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளே தென்பட்டாலும், இது முன்கூட்டிய பிரசவம், புதிதாகப் பிறந்த குழந்தைக்குத் தொற்று ஏற்படுதல் அல்லது கருவிலேயே குழந்தை உயிரிழப்பது போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
தீவிரமான பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மனித உயிர்களுக்கே ஆபத்தாக முடியலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T17:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பிற்காக இஸ்ரேல் எதையும் செய்யும் – நெதன்யாகு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-is-great-friend-says-netanyahu-1785947246"></link>
            <id>https://canadamirror.com/article/trump-is-great-friend-says-netanyahu-1785947246</id>
            <summary type="text">ஒப்பந்தங்கள் எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேல் &quot;தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்&quot; என அந்நாட்டுப் பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒப்பந்தங்கள் எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேல் "தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுக்குக் கிடைத்த மிகச்சிறந்த நண்பர் என நெதன்யாகு புகழாரம் சூட்டியுள்ளார்.
</p><p>எனினும் இஸ்ரேலின் இருப்பு மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bdfa1bd-6364-4e11-88b4-414b10e65d01/26-6a736474e9e59.webp' /></p><p>நவீன சீயோனிச அமைப்பின் நிறுவனரான தியோடோர் ஹெர்ஸலின் தாத்தா மற்றும் பாட்டியான ஷிமோன் மற்றும் ரிவ்கா ஹெர்ஸலின் உடல்கள் ஜெருசலேமிலுள்ள ஹெர்ஸல் மலையில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்ட அரசு சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நெதன்யாகு இதனைத் தெரிவித்தார்.</p><p>
இத்தாலியின் ரோம் நகரில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கிடையே "கட்டமைப்பு ஒப்பந்தம்" குறித்த பேச்சுவார்த்தைகள் தொடரும் சூழலிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை நடத்தி வரும் பின்னணியில் நெதன்யாகுவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T16:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் லவாலில் கோர வீதி விபத்து: இரு பதின்ம வயதினர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/2-teens-dead-1-in-hospital-after-car-crash-1785938993"></link>
            <id>https://canadamirror.com/article/2-teens-dead-1-in-hospital-after-car-crash-1785938993</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள லவால் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரு பதின்ம வயதினர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள லவால் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரு பதின்ம வயதினர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>
அதிகாலை 1:20 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பதிவு இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்றைக் கண்டு அதை நிறுத்துமாறு சமிக்ஞை கொடுத்துள்ளனர். </p><p>
பொலிஸார் வாகனத்தை நிறுத்த முயன்றதும், அது வேகத்தை அதிகரித்துத் தப்பிச் சென்றது. எனினும் பொலிஸார் வாகனத்தைத் துரத்திச் செல்லவில்லை" என லவால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் லோரண்ட் ஆர்செனோ தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dd87e84-5eae-4ece-8c1d-a03c3419b017/26-6a73443308879.webp' /></p><p> </p><p>
தப்பிச் சென்ற கார், சில நிமிடங்களில் லோரண்டைட்ஸ் புலேவார்ட்டில் அமைந்துள்ள 'அட்லாண்டிஸ் ஜிம்' கட்டடத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. </p><p>
வாகனத்தைச் செலுத்திய ஆண் ஓட்டுநரும், அதில் பயணித்த 19 வயது இளம் பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். </p><p>மேலும், வாகனத்திலிருந்த மற்றொரு 19 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். </p><p>
வாகனத்தில் உரிமத் தகடு இல்லை என்பதும், காரின் அதிகப்படியான வேகமே விபத்துக்கு முக்கியக் காரணம் என்பதும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>
விபத்தைத் தொடர்ந்து, செயிண்ட்-மார்ட்டின் புலேவார்ட் மற்றும் ரிச்சர்ட் தெரு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட லோரண்டைட்ஸ் புலேவார்ட் பகுதி முழுமையாக மூடப்பட்டு, பொலிஸார் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தித் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T16:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/more-than-100-structures-lost-in-bcs-pear-lake-1785938452"></link>
            <id>https://canadamirror.com/article/more-than-100-structures-lost-in-bcs-pear-lake-1785938452</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்கு உள் பகுதியில் வேகமாகப் பரவி வரும் &#039;பியர் லேக்&#039; காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விரைவு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்கு உள் பகுதியில் வேகமாகப் பரவி வரும் 'பியர் லேக்' காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விரைவு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>
இதில் வீடுகளை இழந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாகத் தகவல்கள் தெரிவிக்கப்படவுள்ளன. </p><p>
தோம்ப்சன் நிகோலா பிராந்திய மாவட்டம் வழங்கிய தகவலின்படி, சுமார் 1,100 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ள இந்த பிரம்மாண்ட காட்டுத்தீயினால், அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட சுமார் 120 சொத்துக்களிலுள்ள கட்டடங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e7af40b-cb55-4b2d-b86b-d89ad0638a6d/26-6a734215ebd73.webp' /></p><p> </p><p>
பிக் பார் லேக், சாசம், கிளண்டன் பகுதியின் தெற்கே அமைந்துள்ள நெடுஞ்சாலை 97 மற்றும் கெல்லி லேக் வீதி ஆகியவற்றில் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.</p><p> 
பாதிக்கப்பட்ட 120 சொத்துக்களில் பெரும்பாலானவை குடியிருப்பு வீடுகளாகும். சில இடங்களில் முதன்மை வீடுகள் தப்பியிருந்தாலும், அவற்றின் கேரேஜ்கள், கொட்டகைகள் மற்றும் ஏனைய வெளிப்புறக் கட்டடங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. </p><p>
இந்த கணக்கெடுப்பில் தோம்ப்சன் நிகோலா பிராந்திய மாவட்டத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே உள்ள கிளண்டன் நகர்ப்பகுதிச் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை. </p><p>காட்டுத்தீயினால் மேலும் பல கட்டடங்கள் சேதமடைந்திருக்கலாம் என நாங்கள் நம்பும் அனைத்து பகுதிகளுக்கும் இன்னும் எங்களால் செல்ல முடியவில்லை என தோம்ப்சன் நிகோலா பிராந்திய மாவட்டத்தின் தகவல் அதிகாரி கோல்டன் டேவிஸ்தெரிவித்துள்ளார்.</p><p>எதிர்வரும் நாட்களில் பாதுகாப்பு நிலைமைகள் சரியாகும் போது, முழுமையான சேத மதிப்பீட்டை மேற்கொண்டு தெளிவான தகவலக்ள பெறத் திட்டமிட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
வார இறுதியில் வீசிய பலத்த காற்றினால் காட்டுத்தீயின் வீரியம் அதிகரித்திருந்த போதிலும், தற்போது வானிலை சற்றே சீரடைந்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T16:00:03+00:00</updated>
        </entry>
    </feed>
