<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-01T06:27:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் தமிழ்ப் பொறியியலாளர் குடும்பம் உட்பட 39 அவுஸ்திரேலியர்கள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/39-australians-tamil-engineer-missing-nepal-floods-1788242956"></link>
            <id>https://canadamirror.com/article/39-australians-tamil-engineer-missing-nepal-floods-1788242956</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த தமிழ்ப் பொறியியலாளர் 47 வயது சந்திரசேகரன் முரளிதரன், 42 வயதான அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த தமிழ்ப் பொறியியலாளர் 47 வயது சந்திரசேகரன் முரளிதரன், 42 வயதான அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களின் இரு மகன்களான 14 வயதான அஷ்வின், 11 வயதான ஆருஷ் ஆகியோர் நேபாள - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமாகியுள்ளனர்.
</p><p>
கைலாஷ் மலை யாத்திரைக்காக 'ஹிமாலயன் கிளேசியர் அட்வென்ச்சர்ஸ்' அமைப்பின் மூலம் சுற்றுலாப் பயணிகளாகச் சென்ற இந்தத் குடும்பத்தினருடன், காலை உணவுக்குப் பிறகு எந்தத் தொடர்பும் இல்லை என்று உறவினர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79e4cd38-bcb2-48a8-866b-43ed56c97f81/26-6a966c0e07210.webp' /></p><h2>திபெத் - நேபாள எல்லைக்கு மாயமான&nbsp; குடும்பம்</h2><p>
</p><p>
திபெத் - நேபாள எல்லைக்கு அருகிலுள்ள குடியேற்றச் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்ல அவர்கள் தயாராக இருந்தபோதுதான் இந்தத் பேரிடர் நிகழ்ந்துள்ளது.</p><p>

இந்த வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
</p><p>
ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங், நேபாளப் பகுதியில் குறைந்தது 39 ஆஸ்திரேலியர்கள் மாயமாகியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதோடு, அவர்களைத் தேடும் பணியில் அவசர அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>
மேலும் காணாமல் போன தமிழ்க் குடும்பத்தினர் மற்றும் அனைத்துப் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பான திரும்புதலுக்காகவும், மீட்புப் பணிகளுக்காகவும் தமிழ் அவுஸ்திரேலிய சமூகமும் உலகத் தமிழர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T06:06:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் இரு இந்திய இளம் பெண்கள் கொலை; திடீரென வில்லியாக மாறிய நண்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-young-kerala-women-murdered-in-california-1788240930"></link>
            <id>https://canadamirror.com/article/two-young-kerala-women-murdered-in-california-1788240930</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் இரு இந்திய இளம் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் புலம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் இரு இந்திய இளம் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் புலம்பெயர் சமூகத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
திருச்சூர் பாணஞ்சேரி, மண்ணுத்தி, முடிக்கோடு தெக்கூட்டு வீட்டைச் சேர்ந்த ஹரிதாஸ் மற்றும் சுஷ்மா தம்பதியரின் மகள் அஞ்சனா மற்றும் கோட்டயம் சிங்கவனம் பகுதியைச் சேர்ந்த ஆன் ஆகிய இருவருமே இந்தக் கொடூர சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65df686a-bb5f-4b14-a14a-4e9c34f9c582/26-6a96642384b51.webp' /></p><h2>திடீரென&nbsp; வில்லியாக மாறிய&nbsp; நண்பி</h2><p>

இவர்கள் இருவருக்கும் நெருங்கிய தோழியும், அதே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தவருமான அனிலா என்ற பெண், இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.</p><p>

ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த இந்த மூன்று குடும்பங்களுக்கும் இடையே மிகவும் நெருக்கமான நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. 
ஆசிரியையாக பணியாற்றி வந்த அஞ்சனா கடந்த எட்டு ஆண்டுகளாக கலிபோர்னியாவில் வசித்து வந்தார். மென்பொருள் பொறியாளரான தனது கணவர் விஜீஷ் மற்றும் ஆறு வயது மகள் வாமிகாவுடன் அஞ்சனா வசித்து வந்தார்.
</p><p>
சமீபத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டங்களிலும், அஞ்சனா உள்ளிட்ட மூவரும் தங்களது நண்பர்களுடன் ஒன்றாகக் கலந்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

ஆகஸ்ட் 28ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தக் கொலைச் சம்பவங்கள் அரங்கேறின. 
 
வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அஞ்சனாவின் கணவர் விஜீஷ், சம்பவ இடத்திலிருந்து நிற்காமல் வேகமாகச் சென்ற அனிலாவின் நீல நிற காரைக் கவனித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விஜீஷ் உடனடியாக ஆனின் கணவர் ஜேக்கப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.

ஜேக்கப், ஆனுக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. </p><p>இதையடுத்து அவர் குடியிருப்புக்குச் சென்று பார்த்தபோது, ஆன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளார்.
அதேநேரத்தில், விபத்து குறித்த தகவலை அறிந்து விஜீஷ் சம்பவ இடத்துக்கு வந்து சேரும் முன்பே அஞ்சனாவும் உயிரிழந்திருந்தார்.</p><p>

இந்த சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அஞ்சனா மற்றும் விஜீஷின் ஆறு வயது மகள் வாமிகா வீட்டின் அறைக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்திற்குப் பிறகு, நீல நிற எஸ்.யு.வி. கார் ஒன்று அதிவேகமாக அங்கிருந்து சென்றதைப் பார்த்ததாக நேரில் பார்த்தவர்களும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
</p><p>
இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், அருகிலுள்ள ஒரு பார்க்கிங் பகுதியில் பலத்த சேதமடைந்த நிலையில் அந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>தொடர்ந்து அனிலாவையும் போலீசார் காவலில் எடுத்தனர்.



நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்த இந்த மூவருக்கிடையே திடீரென கொலைச் சம்பவம் நிகழும் அளவுக்கு என்ன காரணம் ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
</p><p>காவலில் உள்ள அனிலாவிடம் அமெரிக்க போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் மூலம் கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்த கூடுதல் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-01T05:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-retaliates-against-us-military-bases-jordan-1788236158"></link>
            <id>https://canadamirror.com/article/iran-retaliates-against-us-military-bases-jordan-1788236158</id>
            <summary type="text">ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.</p><p>

சுமார் ஒரு மாத காலத்தில் முதல் முறையாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் மேற்காசியாவில் போர்ச் சூழல் ஆறாவது மாதத்தை எட்டியுள்ளது. </p><p>ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள ஈரானின் சிறிய தீவு பகுதியில் உள்ள ஈரான் ஏவுகணை ஏவும் தளத்தை அமெரிக்கா தாக்கி உள்ளது. இதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் கொடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77334029-2ea0-43bb-8ae0-62970740bd72/26-6a96518064534.webp' /></p><p>அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படை இதனை உறுதி செய்துள்ளது. </p><p>இந்த மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு ஒரு டொலர் உயர்ந்துள்ளது. இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் பங்குச் சந்தை வர்த்தகம் சரிவை கண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
</p><p>
லாராக் தீவு பகுதியில் அமெரிக்கா மேற்கொண்ட அண்மைய தாக்குதலுக்கு பதிலடியாக மேற்காசியாவின் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p> இதனை ஈரானின் வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

லாராக் தீவில் தாக்குதல் மேற்கொள்ள ஜோர்டானில் உள்ள இராணுவ தளத்தை அமெரிக்கா பயன்படுத்தியதாக ஈரான் குற்றச்சாட்டு வைத்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd29b0f-f19f-480d-bfe5-8762ea5c5ba3/26-6a96518118c6a.webp' /></p><p>அமெரிக்காவின் இந்த தாக்குதலில் ஈரான் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர் ஈரான் தெரிவித்துள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த இடம் மோசமான சேதத்தை எதிர்கொண்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.</p><p> அதே நேரத்தில் சுமார் 8 ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக ஜோர்டான் கூறியுள்ளது. இருப்பினும் இந்த ஏவுகணைகள் எங்கிருந்து ஏவப்பட்டது என்பதை ஜோர்டான் தெரிவிக்கவில்லை.
</p><p>
அதேபோல ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் அல்-மின்ஹாத் ஏர் பேஸில் ட்ரோன்களை பயன்படுத்தி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதோடு அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் இராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது</p>]]></content>
            <updated>2026-09-01T04:16:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதை செய்தால் வரிகள் இல்லை ; ட்ரம்பின் மற்றொரு அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-latest-shock-announcement-1788219362"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-latest-shock-announcement-1788219362</id>
            <summary type="text">அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தது. இந்த வரிகள் 2027-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.


</p><p>
பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் 2 நாடுகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டின. அமெரிக்காவுடன் மோதலுக்குத் தங்கள் நாடு தயாராக இருப்பதாக கனடா அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/590f874a-d51d-44c7-9878-8f6aae7c3440/26-6a960fe45a461.webp' /></p><p>

புதிதாக விதிக்கப்பட்டு உள்ள வரிகளைத் தவிர்ப்பதற்காக, கனடிய நிறுவனங்கள் தங்கள் தலைமையகங்களையும் உற்பத்தி வசதிகளையும் அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
</p><p>

இதுதொடர்பாக அவர் சமூகவலைதள பதிவில் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து கனடிய நிறுவனங்களும் உடனடியாக அமெரிக்காவிற்கு இடம் பெயரட்டும்.</p><p>

அவற்றுள் பல, அமெரிக்காவின் முட்டாள்தனமான தலைமை காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறிய நிறுவனங்களாகும்.

நீங்கள் திரும்பி வரும்போது, ​​சுங்க வரிகள் எதுவும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>மற்றொரு பதிவில், கனடா அமெரிக்காவின் 2-வது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்தபோதிலும், அது அமெரிக்காவின் மிக மோசமான வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.</p><p>


அமெரிக்கப் பொருளாதாரம் கனடாவைவிடப் பல மடங்கு பெரியது. கனடாவின் ஏற்றுமதியில் சுமார் 70 சதவீதம் அமெ ரிக்காவிற்கே செல்கிறது. </p><p>அதே நேரத்தில் பல அமெரிக்க மாநிலங்களுக்கு மிக முக்கிய வாடிக்கையாள ராகக் கனடா விளங்குறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-01T00:54:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை மாளிகை தொடர்பில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-supreme-court-orders-white-house-1788223222"></link>
            <id>https://canadamirror.com/article/us-supreme-court-orders-white-house-1788223222</id>
            <summary type="text">வெள்ளை மாளிகையில் 400 மில்லியன் டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட பிரதான மண்டபம் கட்டும் பணியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து மேற்கொள்வதற்கு அமெரிக்க உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளை மாளிகையில் 400 மில்லியன் டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட பிரதான மண்டபம் கட்டும் பணியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து மேற்கொள்வதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் 5-4 என்ற பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
இந்தத் திட்டத்தின் தரைக்கு மேலான பகுதி கட்டுமானங்களை நிறுத்தியிருக்கக்கூடிய கீழ் நீதிமன்றத் தீர்ப்புகளை ரத்து செய்யக்கோரி ட்ரம்ப் நிர்வாகம் சமர்ப்பித்த அவசரகாலக் கோரிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06e9e59c-0821-42fc-905d-b21500ae97b9/26-6a961ef832082.webp' /></p><p>
</p><p>
காங்கிரஸின் நேரடி அனுமதியின்றி வெள்ளை மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்குப் பகுதியை இடித்து இந்தக் கட்டுமானத்தை மேற்கொள்வது சட்டவிரோதமானது என வாதிட்டு 'வரலாற்றுப் பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளை' தொடர்ந்த வழக்கை நிராகரித்து இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
</p><p>
தலைமை நீதிபதி மற்றும் 3 தாராளவாத நீதிபதிகள் இந்தத் திட்டத்திற்கு எதிராகத் தங்கள் மாறுபட்ட கருத்துக்களைப் பதிவு செய்த போதிலும், பெரும்பான்மை நீதிபதிகள் ட்ரம்ப் நிர்வாகத்தின் அவசரகால வாதத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளனர்.
</p><p>
இந்த நிலையில் வெள்ளை மாளிகைக்கு ஒரு பெரிய நிகழ்ச்சி அரங்கம் தேவை என்றும், அது தனது பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என்றும் ட்ரம்ப் நீண்டகாலமாக வாதிட்டு வருகிறார்.
</p><p>
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வளாகத்தில் பிரதான மண்டபக் கட்டுமானப் பணிகள் எந்தவிதத் தடையுமின்றித் தொடர்ந்து நடைபெறவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T00:40:34+00:00</updated>
        </entry>
    </feed>
