<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-20T05:41:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[படைகளை குறைக்க அமெரிக்கா திட்டம்; நேட்டோ நாடுகள் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/reduce-troops-in-europe-us-decision-1789881922"></link>
            <id>https://canadamirror.com/article/reduce-troops-in-europe-us-decision-1789881922</id>
            <summary type="text">ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாகக் குறைக்க அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.</p><p>ஐரோப்பிய நேட்டோ (NATO) நாடுகள் அமெரிக்காவிற்குத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்தது "வெட்கக்கேடானது" என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் சாடியுள்ளார்.</p><p>ஐரோப்பாவிலுள்ள 68,000 அமெரிக்க வீரர்களில் மூன்றில் ஒரு பங்கினரை (முக்கியமாக ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்) திரும்பப் பெறுவது, அல்லது 40,000 வீரர்கள் மற்றும் ஆயுதங்களை வெளியேற்றுவது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது.</p><p>இந்த நடவடிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பாதிப்பதுடன், ரஷ்யாவிற்குச் சாதகமான சமிக்ஞையை அனுப்பக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>வர்த்தக வரிகள், கிரீன்லாந்து விவகாரம் மற்றும் நேட்டோ நிதியுதவி போன்ற காரணங்களால் அமெரிக்கா-ஐரோப்பா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதேபோல தாய்வான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவும் தளர்ந்து வருவதாகக் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-20T05:25:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயார்க்கில் நிறுவப்பட்ட இலவச பொது கழிப்பறைகள் ; 10 நிமிடத்திற்கு மேல் உள்ளே இருந்தால் கதவு திறந்துவிடும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/free-public-toilets-installed-in-new-york-1789844490"></link>
            <id>https://canadamirror.com/article/free-public-toilets-installed-in-new-york-1789844490</id>
            <summary type="text">அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கழிப்பறைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. </p><p>இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கழிப்பறைகள் திறந்திருக்கும்.</p><p>இந்த கழிப்பறைகள் இருக்கும் இடத்தை கண்டறிய பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல வசதிகள் இருந்தாலும், இந்த கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஒரு முக்கியமான விதி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b50bc855-abe8-4d3b-89f4-a81c584c7d64/26-6aaedc0ca9f45.webp' /></p><p>அதாவது, கழிவறைக்கு உள்ளே சென்றுவிட்டால் 10 நிமிடத்திற்குள் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும். </p><p>கழிவறையை பயன்படுத்த தொடங்கியதில் இருந்து கவுண்ட் டவுன் ஓடத் தொடங்கிவிடும். 5 நிமிடங்கள் ஆனவுடன் ஒரு ஆடியோ எச்சரிக்கை வரும். தொடர்ந்து 8-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு எச்சரிக்கை வரும்.</p><p>இதைத் தொடர்ந்து 10-வது நிமிடத்தில் கடைசியாக ஒரு எச்சரிக்கை ஒலிக்கும். அதன் பிறகு சில வினாடிகளில் கழிப்பறையின் கதவு தானாக திறந்துவிடும். </p><p>இத்தகைய நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த கழிப்பறையை நியூயார்க் நகரில் நிறுவுவது தொடர்பான அறிவிப்பை நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி வெளியிட்டார்.
</p><p>
இது குறித்து அவர் கூறுகையில், “கழிப்பறைகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளோம். கழிப்பறை என்பது செல்போனில் ஸ்கோரல் செய்து கொண்டிருக்கும் இடமாக இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13fd3acc-a29a-4d68-af3f-0931088c64df/26-6aaedc0bf1e78.webp' /></p><p>இந்த நவீன கழிப்பறை திட்டத்திற்காக நியூயார்க் நகர நிர்வாகம் சுமார் 4 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.38 கோடி) செலவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
</p><p>
இத்தகைய கழிப்பறைகளை நிறுவுவதற்கு முன்னதாக, இது குறித்து ஆய்வுகளும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>அதாவது சராசரியாக ஒரு நபர் மூன்றரை நிமிடங்கள் கழிப்பறையை பயன்படுத்துகிறார் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், எனவே 10 நிமிடங்கள் என்பது பெரும்பாலான நபர்களுக்கு போதுமான நேரமாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T01:08:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.2,684 கோடி மோசடி குற்றச்சாட்டு ; அனில் அம்பானி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/2684crorefraud-allegation-cbi-registers-anilambani-1789861709"></link>
            <id>https://canadamirror.com/article/2684crorefraud-allegation-cbi-registers-anilambani-1789861709</id>
            <summary type="text">போலியான தகவல்களை வழங்கி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி.யிடம் இருந்து ரூ.2,684.57 கோடி முதலீட்டை பெற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலியான தகவல்களை வழங்கி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி.யிடம் இருந்து ரூ.2,684.57 கோடி முதலீட்டை பெற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) வழக்குப்பதிவு செய்துள்ளது.</p><p>

ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் 2012 முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஐந்து கடன் பத்திரங்களை வெளியிட்டிருந்தது. </p><p>அவற்றில் எல்.ஐ.சி. சுமார் ரூ.3,900 கோடியை முதலீடு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிறுவனத்தின் பொது நிதித் தேவைகள், வர்த்தகத் தேவைகள் மற்றும் ஏற்கனவே இருந்த கடன்களை குறைப்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த முதலீடுகள் திரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5724bf1d-6949-46f3-b64c-b8f47b584634/26-6aaf1f4f830fc.webp' /></p><p>எனினும், தவறான தகவல்களை வழங்கி எல்.ஐ.சி.யை முதலீடு செய்யத் தூண்டியதாகவும், பின்னர் அந்த நிதி முறைகேடான வழிகளில் வேறு நோக்கங்களுக்காகத் திருப்பி விடப்பட்டதாகவும் எல்.ஐ.சி. தனது புகாரில் குற்றஞ்சாட்டியுள்ளது.
</p><p>
இதன் காரணமாக எல்.ஐ.சி.க்கு ரூ.2,684.57 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், அதே அளவுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சட்டவிரோத ஆதாயம் கிடைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தப் புகாரைத் தொடர்ந்து அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்படும் என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.</p><p>

இதற்கு முன்னதாக, எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள், வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் எல்.ஐ.சி. ஆகியவை அளித்த புகார்களின் அடிப்படையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேப்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ. எட்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அவற்றில் ஆறு வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>இந்த வழக்குகள் தொடர்ந்து விசாரணையில் உள்ளதுடன், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பிலும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T23:48:43+00:00</updated>
        </entry>
    </feed>
