<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-03T08:33:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு மறுசீரமைக்கப்படவேண்டும்: ராயல் கனடா வங்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rbc-says-canada-needs-immigration-system-reset-1788421873"></link>
            <id>https://canadamirror.com/article/rbc-says-canada-needs-immigration-system-reset-1788421873</id>
            <summary type="text">Canada&#039;s immigration system needs to be reset, says RBC: கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு மறுசீரமைக்கப்படவேண்டும் என ராயல் கனடா வங்கி தெரிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada's immigration system needs to be reset, says RBC: கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு மறுசீரமைக்கப்படவேண்டும் என ராயல் கனடா வங்கி தெரிவித்துள்ளது.</p><p>


கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு வரலாற்று ரீதியாக நம்பகத்தன்மை கொண்டதாக இருந்து வந்துள்ளது, ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் அதன் நம்பகத்தன்மை குறைந்துள்ளது என்று கூறியுள்ளது ராயல் கனடா வங்கி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e58cb9a4-faa4-4c97-80d8-0f0611ca72b7/26-6a9926f347ada.webp' /></p><p>
ராயல் கனடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, புலம்பெயர்தல் இல்லாவிட்டால், அடுத்த நூற்றாண்டின் துவக்கத்தில், நாட்டின் மக்கள்தொகை பாதியாகக் குறைந்துவிடும் என்று கூறியுள்ளது.
</p><p>
2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, மூன்று மில்லியன். இது ஏறக்குறைய ஒரு தசாப்த கால புலம்பெயர்தலுக்குச் சமம் என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.
</p><p>
ஆனால், 2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் புலம்பெயர்தல் பெருமளவில் அதிகரித்ததைத் தொடர்ந்து, அடிக்கடி விதி மாற்றங்கள் செய்யப்பட்டன.
</p><p>
அத்துடன், வலுவிழந்த புள்ளிகள் முறையிலான புலம்பெயர்தல் அமைப்பு மற்றும் திறன்கள் மற்றும் அனுபவத்தின் மீதான முக்கியத்துவத்தைக் குறைத்ததாலும், ஒரு நிலையற்ற சூழல் உருவானது.
</p><p>
அதன் காரணமாக, 2025ஆம் ஆண்டு, மக்கள்தொகையில் ஒரு அரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இத்தகைய விடயங்கள், கனடாவின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc7797c-6bc2-45f5-a78b-caadbaa44d79/26-6a9926f403e73.webp' /></p><p>
தற்காலிக குடியிருப்பு அனுமதிக்கு வரம்புகள் விதிக்கப்பட்டது மற்றும் குறைவான புலம்பெயர்தல் இலக்குகளை நியமித்ததன் மூலம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது.
</p><p>
விடயம் என்னவென்றால், இவை அதிர்ச்சி அலைகளுக்கும் வழிவகுத்தன என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.
</p><p>
உதாரணமாக, 2024 முதல் 2026 வரையில் 25க்கும் மேற்பட்ட விதி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அவை, சர்வதேச மாணவர்களைப் பாதித்ததால், உயர்கல்வித் துறையில் 20,000க்கும் மேற்பட்ட வேலை இழப்புகள் ஏற்பட்டன.
</p><p>
ஒவ்வொரு மாதமும் 25,000க்கும் மேற்பட்ட கனேடியர்கள் ஓய்வு பெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலும், பிறப்புகளை விட இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நேரத்திலும், இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது என்கிறது அந்த அறிக்கை.</p><p>

புலம்பெயர்தல் இல்லாவிட்டால், அடுத்த நூற்றாண்டின் துவக்கத்தில் கனடாவின் மக்கள்தொகை பாதியாகக் குறைந்துவிடும் என எச்சரிக்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.
</p><p>
ஆக, கனடாவின் புலம்பெயர்தல் யுக்தி அதன் கூர்மையை இழந்துவிட்டதால், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைத்து புதிய பொருளாதார இலக்குகளை அடைய கனடா அரசு முற்படும் நிலையில், புலம்பெயர்தல் அமைப்பின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்கிறது அந்த அறிக்கை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T07:51:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெர்மனியில் உக்ரைன் விமானங்கள் மீது ரஷ்யா தாக்குதல்; கொந்தளிக்கும் ஐரோப்பா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-attack-ukrainian-plane-in-germany-1788415007"></link>
            <id>https://canadamirror.com/article/russia-attack-ukrainian-plane-in-germany-1788415007</id>
            <summary type="text">&amp;nbsp;ஜெர்மனியில் உள்ள லைப்ஸிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தில் உக்ரைனிய சரக்கு விமானங்களை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல் , ஐரோப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜெர்மனியில் உள்ள லைப்ஸிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தில் உக்ரைனிய சரக்கு விமானங்களை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல் , ஐரோப்பிய நாடுகளை கொந்தளிக்க வைத்துள்ளது. </p><p> 

 ரஷ்யாவின் தாக்குதல் முயற்சி அம்பலமானதை அடுத்து , ரஷ்யாவிற்கு எதிரான தங்களின் பாதுகாப்புக் கெடுபிடிகளை தீவிரப்படுத்த ஐரோப்பிய ஒன்றியமும் (EU) நேட்டோ (NATO) அமைப்பும் முடிவு செய்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b2dffb5-8e08-44d1-a748-430f88e741c1/26-6a990c21df27d.webp' /></p><h2>குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள&nbsp;ரஷ்யா</h2><p> </p><p>

ஜெர்மனி மண்ணில் ரஷ்ய உளவு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் ரஷ்யா நடத்திய மிக ஆபத்தான ‘கலப்பினப் போர்’ (Hybrid Warfare) அச்சுறுத்தல் என ஐரோப்பிய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த ஆகஸ்ட் மாதம் லைப்ஸிக் விமான நிலையத்தில் வெடிபொருட்களுடன் கூடிய ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்புப் படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது. 

தீவிர புலனாய்வு விசாரணைகளுக்குப் பிறகு, இந்தத் தாக்குதல் முயற்சியின் பின்னணியில் ரஷ்யாவின் அரசு ஆதரவு உளவு அமைப்புகள் நேரடியாக ஈடுபட்டிருப்பது உறுதியானதாக ஜெர்மனி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.</p><p> 

உக்ரைனுக்கு ராணுவக் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் முக்கிய நேட்டோ மையமாக விளங்கும் இந்த விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி, அதிர்ஷ்டவசமாக முறியடிக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
</p><p>
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஜெர்மனிக்குத் தங்களது முழு ஆதரவை தெரிவித்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் மற்றும் நேட்டோ தலைமைச் செயலாளர் மார்க் ரூட்டே ஆகியோர், ரஷ்யாவின் இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என எச்சரித்துள்ளனர்.
</p><p>
 உக்ரைனுக்கான தங்களின் ராணுவ ஆதரவை முடக்கும் நோக்கில் ரஷ்யா இத்தகைய எல்லைமீறிய செயல்களில் ஈடுபடுவதாகவும், அதற்குப் பதிலடியாக ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவும் ‘நிழற்படக் கப்பல்கள்’ (Shadow Fleet) மீதான தடைகள் மற்றும் ரஷ்ய குடிமக்களுக்கான விசா கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
</p><p>
அதேவேளையில், ஜெர்மனியின் பொன் (Bonn) நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூட ஜெர்மன் வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் கிரெம்ளின் மாளிகை இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளன. </p><p>

அதோடு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஜெர்மனி தூதரக உறவுகளைக் கெடுத்து வருவதாகவும், இதற்கு தகுந்த ராஜதந்திரப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T07:51:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 56 பேர் முதுகின் மீது தாவி கின்னஸ் உலக சாதனை படைத்த நாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/dog-sets-guinness-world-record-backs-in-canada-1788420024"></link>
            <id>https://canadamirror.com/article/dog-sets-guinness-world-record-backs-in-canada-1788420024</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் பகுதியில் 56 மனிதர்களின் முதுகுகளின் மீது வெறும் 16 விநாடிகளில் ஓடி, தாவிக் கடந்து ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த ‘சார்டோன்’...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் பகுதியில் 56 மனிதர்களின் முதுகுகளின் மீது வெறும் 16 விநாடிகளில் ஓடி, தாவிக் கடந்து ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த ‘சார்டோன்’ என்ற பெண் நாய் புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.
</p><p>
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஜெனிபர் பிரேசர் என்பவர் இந்த நாயை வளர்த்து வருகிறார். நாய் வளர்ப்பு மற்றும் பயிற்சியில் அனுபவம் கொண்ட ஜெனிபர், ‘சார்டோன்’ நாயின் தனித்திறமையை அடையாளம் கண்டு, இந்த உலக சாதனைக்காக அதற்கு சிறப்பு பயிற்சி அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4bf6578-5f95-4f59-b428-8af0ec527b57/26-6a991fb96e815.webp' /></p><p>&nbsp;கடந்த ஜூன் 14ஆம் திகதி கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள ‘எட்மண்டன் ரிவர்ஹாக்ஸ்’ பேஸ்பால் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்த சாதனை முயற்சி நடைபெற்றது.</p><p>

இதற்காக 56 தன்னார்வலர்கள் மைதானத்தின் புல்வெளியில் வரிசையாக, ஒருவருக்கொருவர் இடைவெளியின்றி குனிந்து நின்றனர்.
</p><p>
கின்னஸ் உலக சாதனை விதிகளின்படி, ஒரு நிமிடத்திற்குள் அனைத்து 56 பேரையும் நாய் கடந்து செல்ல வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
</p><p>
நடுவர்கள் சிக்னல் வழங்கியதும் ‘சார்டோன்’ மின்னல் வேகத்தில் பாய்ந்தது. வரிசையாக குனிந்து நின்றிருந்த 56 பேரின் முதுகுகளின் மீது வேகமாக ஓடி, தாவிக் கடந்து வெறும் 16 விநாடிகளில் இலக்கை அடைந்தது.</p><p>

இதனை நேரில் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.</p><p>‘சார்டோன்’ மிகவும் புத்திசாலித்தனமான நாய் எனத் தெரிவித்த அதன் பயிற்சியாளர் ஜெனிபர் பிரேசர், மனிதர்களுக்கு காயம் ஏற்படாத வகையிலும், அதே நேரத்தில் வேகத்தை குறைக்காமலும் ஓடுவதற்கு நாய்க்கு நுணுக்கமான பயிற்சிகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த சாதனை தொடர்பான முயற்சியை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஆய்வு செய்து, அதற்கான சான்றிதழையும் வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, ‘சார்டோன்’ நாயின் சாகசத்தைப் பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-03T07:20:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் பெயரை வையுங்கள்..மிகவும் சூடாக இருக்கும்; ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் டிரம்ப் பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strait-of-hormuz-renamed-strait-of-trump-1788418689"></link>
            <id>https://canadamirror.com/article/strait-of-hormuz-renamed-strait-of-trump-1788418689</id>
            <summary type="text">&amp;nbsp; உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல்வழிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணைக்கு ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்றம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல்வழிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணைக்கு ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்றம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இதுதொடர்பாக தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0fea80b-39b8-44bf-8908-592770c76c24/26-6a991a834a1fb.webp' /></p><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதன் காரணமாக அது முன்னர் இருந்ததைவிட “மிகவும் சூடாக” இருக்கும் என பதிவிட்டுள்ளார்</p><p>

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஹோர்முஸ் நீரிணை முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அதற்கு புதிய பெயரைச் சூட்டுவது தொடர்பான ட்ரம்பின் கருத்து சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
</p><p>
 அதேசமயம் , ஹோர்முஸ் நீரிணையின் பெயரை அதிகாரபூர்வமாக மாற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T07:14:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்க புதிய விதி ; டிரம்ப் நிர்வாகம் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-rule-to-issue-passports-to-children-born-us-1788417683"></link>
            <id>https://canadamirror.com/article/new-rule-to-issue-passports-to-children-born-us-1788417683</id>
            <summary type="text">அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கும்போது, அவர்களின் பெற்றோர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதற்கான ஆவணங்களை கட்டாயமாக சமர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கும்போது, அவர்களின் பெற்றோர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதற்கான ஆவணங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது முறையாக பதவியேற்றதன் பின்னர், குடியேற்றம் மற்றும் விசா தொடர்பான விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53be07c0-24b4-41ae-a801-75ca156e1dc3/26-6a9916954e034.webp' /></p><p>இந்த நிலையில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்பு குடியுரிமையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தற்போதைய நடைமுறையின்படி, அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்கு பாஸ்போர்ட் பெறும்போது, பெற்றோர் குழந்தையுடனான உறவை நிரூபிக்கும் ஆவணங்களையும், புகைப்பட அடையாள அட்டையையும் சமர்ப்பித்தால் போதுமானதாக உள்ளது.</p><p>

எனினும், புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், பெற்றோர் தங்களது அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தையும் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
</p><p>
அமெரிக்க அரசியலமைப்பின் 14ஆவது சட்டத்திருத்தத்தின் கீழ், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது நீண்டகாலமாக நிலவி வரும் அரசியலமைப்பு உரிமையாகக் கருதப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், பிறப்பு குடியுரிமையை கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிராக பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p><p>

புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டால், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளின் பாஸ்போர்ட் விண்ணப்ப நடைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-03T06:41:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியா கப்பல் மீது ஈரான் தாக்குதல்; மாலுமிகள் இருவர் பலி;கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-attacks-saudi-arabian-ship-two-sailors-killed-1788416343"></link>
            <id>https://canadamirror.com/article/iran-attacks-saudi-arabian-ship-two-sailors-killed-1788416343</id>
            <summary type="text">&amp;nbsp; ஹோர்முஸ் நீரிணையில் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான &#039;சித்ர்&#039; (Sidr) எனும் கப்பல் மீது திங்கள்கிழமை இரவு ஈரான் நடத்திய தாக்குதலில், கப்பலில் பணிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹோர்முஸ் நீரிணையில் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான 'சித்ர்' (Sidr) எனும் கப்பல் மீது திங்கள்கிழமை இரவு ஈரான் நடத்திய தாக்குதலில், கப்பலில் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மாலுமிகள் இருவர் உயிரிழந்துள்ளதாகச் சவூதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஓமானின் முசந்தம் தீபகற்பத்திற்கு வடக்கே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கடற்படை பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12bb7c78-cf47-41d5-a5f5-c0146aaf58a4/26-6a9911596d4e4.webp' /></p><h2>குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காத&nbsp; ஈரான் </h2><p>

தாக்குதல் தொடர்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள சவூதியின் 'பஹ்ரி' (Bahri) கப்பல் போக்குவரத்து நிறுவனம், உயிரிழந்த பிலிப்பைன்ஸ் மாலுமிகளின் குடும்பத்தினருக்குத் தேவையான ஆதரவை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p> 

 அதேவேளை, தென்கொரியாவுக்குச் சொந்தமான மற்றொரு எண்ணெய்க் கப்பலும் இதே பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஈரான் நேரடியாகப் பதிலளிக்காத போதிலும், அனுமதி பெறப்படாத கடல் வழியைப் பயன்படுத்திய இரு எண்ணெய்க் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் மோதித் தீப்பற்றியதாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
ஈரானியப் படைகள் அண்டை அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக, அமெரிக்க இராணுவம் ஈரானில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 108 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 சிரிக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் இருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டதை அடுத்து, அமெரிக்கா போர்க் குற்றம் புரிந்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T06:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென அமெரிக்காவிலிருந்த தங்கத்தை லண்டனுக்கு மாற்றிய நெதர்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/netherlands-suddenly-moved-gold-from-us-to-london-1788406801"></link>
            <id>https://canadamirror.com/article/netherlands-suddenly-moved-gold-from-us-to-london-1788406801</id>
            <summary type="text">உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில், நெதர்லாந்து மத்திய வங்கி தனது தங்கக் கையிருப்பில் மாற்றங்களை மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில், நெதர்லாந்து மத்திய வங்கி தனது தங்கக் கையிருப்பில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதன்படி, 2026 மார்ச் முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில், அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் கனடாவின் ஒட்டாவாவில் வைக்கப்பட்டிருந்த 86 டன் தங்கம் லண்டனுக்கு மாற்றப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2b4aad6-6bd0-405b-b97a-912ecef99075/26-6a98ec128007e.webp' /></p><p>இந்த நடவடிக்கை நெருக்கடி நிலைமைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாக நெதர்லாந்து மத்திய வங்கி (DNB) தெரிவித்துள்ளது.
</p><p>
உலகளாவிய நம்பிக்கைக்குரிய சொத்தாகக் கருதப்படும் தங்கம், கடுமையான நிதி அல்லது பொருளாதார நெருக்கடிகளின் போது பாதுகாப்பான கையிருப்பாக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
லண்டனில் உள்ள Bank of England-இல் சேமிக்கப்படும் தங்கம் சர்வதேச வர்த்தக தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதால், அவசர நிலை ஏற்படும் பட்சத்தில் அதனை விரைவாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக நெதர்லாந்து மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

மாற்றங்களுக்கு முன்னதாக, நெதர்லாந்தின் தங்கக் கையிருப்பில் 31.3 சதவீதம் நியூயோர்க்கிலும், 19.7 சதவீதம் ஒட்டாவாவிலும் வைக்கப்பட்டிருந்தன.
</p><p>
மாற்றங்களுக்குப் பின்னர், நியூயோர்க் மற்றும் ஒட்டாவாவில் தலா 18.5 சதவீதம் தங்கம் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது நெதர்லாந்தின் மொத்த தங்கக் கையிருப்பில் 32.1 சதவீதம் லண்டனிலும், 30.8 சதவீதம் நெதர்லாந்தின் Zeist நகரிலும், 18.5 சதவீதம் நியூயோர்க்கிலும், 18.5 சதவீதம் ஒட்டாவாவிலும் வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f141f44-445e-4e0b-a7e0-d1efe944f94e/26-6a98ec13345bf.webp' /></p><p>நெதர்லாந்திடம் மொத்தம் 612.4 டன் தங்கம் உள்ளதாகவும், 2025ஆம் ஆண்டு இறுதியில் அதன் மதிப்பு சுமார் 72.2 பில்லியன் யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதில், 27 டன் தங்கம் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து நெதர்லாந்தின் Zeist நகரில் உள்ள பாதுகாப்பான களஞ்சியத்திற்குக் கொண்டு வரப்பட்டதுடன், அதே அளவு தங்கம் Zeist-இல் இருந்து லண்டனுக்கு மாற்றப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், நியூயோர்க்கில் இருந்த 59 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டு, அதற்கு இணையான 59 டன் தங்கம் லண்டனில் புதிதாக வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலை அதிகரித்து வரும் சூழலில், நெதர்லாந்தின் இந்த நடவடிக்கை அதன் தங்கக் கையிருப்பை நெருக்கடி காலங்களில் விரைவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் மறுசீரமைக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-03T06:12:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவை விட்டு வரப்போவதில்லை; பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/will-not-leave-gaza-benjamin-netanyahu-1788415491"></link>
            <id>https://canadamirror.com/article/will-not-leave-gaza-benjamin-netanyahu-1788415491</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், காசா முனையில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் நிலையிலும், அங்கு நிலைகொண்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், காசா முனையில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் நிலையிலும், அங்கு நிலைகொண்டுள்ள இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


</p><p> பயங்கரவாத அச்சுறுத்தல்கள் முழுமையாக ஒழிக்கப்படும் வரை ராணுவப் பின்வாங்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் நெதன்யாகு கூறியுள்ளமை போர் அச்சத்தை தீவிரப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fecb62f8-cba7-481f-bcf0-6c5b31d2c260/26-6a990e0b7bea9.webp' /></p><h2>காசாவில் இஸ்ரேலியப் படைகளை நேரில் சந்தித்த&nbsp;நெதன்யாகு </h2><p>
</p><p>

 காசாவில் உள்ள இஸ்ரேலியப் படைகளை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்ட போது அவர் இந்த அதிரடி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் இஸ்ரேலிய ராணுவக் கட்டுப்பாட்டு மண்டலத்தையும் பிரிக்கும் ‘மஞ்சள் கோடு’ (Yellow Line) பகுதிக்கு அருகே வீரர்களிடம் உரையாற்றிய நெதன்யாகு,
 “நாங்கள் இந்தப் பகுதியை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்.</p><p> நாங்கள் பின்வாங்கப்போவதில்லை, இதே எல்லைக்கோட்டில் தொடர்ந்து நீடிப்போம்” என உறுதியளித்தார். 
மேலும், காசா முனையின் 60 சதவீதப் பகுதிகள் தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், தங்கள் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதக் கூறுகளைத் தினமும் அழித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் சர்வதேச மத்தியஸ்தர்கள் காசாவில் முழுமையான அமைதியைக் கொண்டு வரவும், இஸ்ரேலியப் படைகளை வெளியேற்றவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
</p><p>

அமெரிக்காவின் அமைதித் திட்டங்களுக்கு இடையே இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் நடத்தி வரும் இந்த ராணுவ நடவடிக்கைகள் மற்றும் கடுமையான நிலைப்பாடுகள், மத்திய கிழக்கில் நிரந்தர அமைதி திரும்புவதில் மீண்டும் முட்டுக்கட்டையை உருவாக்கியுள்ளன.
</p><p>
இவ்வாறான சூழலில், நெதன்யாகுவின் இந்த நேரிட விஜயமும் அறிவிப்பும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T06:02:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் ; இரு பிலிப்பைன்ஸ் மாலுமிகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/attack-on-oil-tanker-strait-hormuz-two-fili-killed-1788412128"></link>
            <id>https://canadamirror.com/article/attack-on-oil-tanker-strait-hormuz-two-fili-killed-1788412128</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்த சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான &#039;சித்ர்&#039; (Sidr) எனும் பிரம்மாண்ட எண்ணெய்க் கப்பல் மீது திங்கள்கிழமை இரவு ஈரான் நடத்திய தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்த சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான 'சித்ர்' (Sidr) எனும் பிரம்மாண்ட எண்ணெய்க் கப்பல் மீது திங்கள்கிழமை இரவு ஈரான் நடத்திய தாக்குதலில், கப்பலில் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மாலுமிகள் இருவர் உயிரிழந்துள்ளதாகச் சவூதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>
ஓமானின் முசந்தம் தீபகற்பத்திற்கு வடக்கே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கடற்படை பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ள அதேவேளை, தென்கொரியாவுக்குச் சொந்தமான மற்றொரு எண்ணெய்க் கப்பலும் இதே பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகப் பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b2c9e20-8ef6-4c45-9220-4d15cccd5816/26-6a9900e19642a.webp' /></p><p>இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஈரான் நேரடியாகப் பதிலளிக்காத போதிலும், அனுமதி பெறப்படாத கடல் வழியைப் பயன்படுத்திய இரு எண்ணெய்க் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் மோதித் தீப்பற்றியதாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
ஈரானியப் படைகள் அண்டை அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக, அமெரிக்க இராணுவம் ஈரானில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 108 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>
குறிப்பாக, தெற்கு நகரமான சிரிக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் இருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டதை அடுத்து, அமெரிக்கா போர்க் குற்றம் புரிந்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a17dbf68-0c39-4e84-add4-1e565f36c059/26-6a9900e24a916.webp' /></p><p>இந்தச் சம்பவம் குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>

இத்தாக்குதல் தொடர்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள சவூதியின் 'பஹ்ரி' (Bahri) கப்பல் போக்குவரத்து நிறுவனம், உயிரிழந்த பிலிப்பைன்ஸ் மாலுமிகளின் குடும்பத்தினருக்குத் தேவையான ஆதரவை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. </p><p>இப்போராட்டச் சூழல் காரணமாகப் பிராந்தியக் கடல் வழியிலான சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் பெரும் தடையாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-03T05:08:58+00:00</updated>
        </entry>
    </feed>
