<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-02T09:38:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் நூதன கொள்ளை ; பீர் திருட்டு குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/novel-robbery-america-rewad-information-beer-theft-1788341507"></link>
            <id>https://canadamirror.com/article/novel-robbery-america-rewad-information-beer-theft-1788341507</id>
            <summary type="text">அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரே நாளில் சுமார் 18,000 கிலோ பீர் மர்மமான முறையில் திருடப்பட்டுள்ளது.

மாண்ட்லெயார் பகுதியில் உள்ள பீர் விற்பனை மையத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரே நாளில் சுமார் 18,000 கிலோ பீர் மர்மமான முறையில் திருடப்பட்டுள்ளது.
</p><p>
மாண்ட்லெயார் பகுதியில் உள்ள பீர் விற்பனை மையத்தில், துணை ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் போல நடித்த மர்ம நபர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி இரண்டு லோடு பீர் சரக்குகளை லாரிகளில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
</p><p>
மொத்தம் சுமார் 70,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள பீர் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7267fca6-beb6-4a31-9a02-63996c135e47/26-6a97ed0479035.webp' /></p><p>சம்பவத்தையடுத்து பீர் நிறுவனமான Pabst Blue Ribbon, திருடப்பட்ட சரக்குகளை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. </p><p>மேலும், திருடர்களை கிண்டலடிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளையும் வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் விளம்பர யுக்தி அல்ல என்றும், உண்மையான திருட்டு சம்பவமே என மாண்ட்லெயார் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>

இரு திருட்டுச் சம்பவங்களும் ஒரே திட்டமிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-02T09:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[“மறைமுகத் தாக்குதலை நிறுத்துங்கள்” ; டிரம்புக்கு கார்னியின் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/stop-the-covert-attack-carney-stern-warning-trump-1788339789"></link>
            <id>https://canadamirror.com/article/stop-the-covert-attack-carney-stern-warning-trump-1788339789</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மீம்ஸ்கள் மற்றும் மறைமுகமான விமர்சனங்கள் மூலம் கனடாவை தாக்குவதை நிறுத்த வேண்டும் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மீம்ஸ்கள் மற்றும் மறைமுகமான விமர்சனங்கள் மூலம் கனடாவை தாக்குவதை நிறுத்த வேண்டும் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.</p><p>

அமெரிக்கா–கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துள்ள நிலையில், டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரி, ஏரியின் பெயர் மாற்றம் மற்றும் பென்டகன் வெளியிட்ட சில கேலிச் சித்தரிப்புகள் உள்ளிட்ட விடயங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/157a88f1-2347-403a-aad4-53e7f4ca490e/26-6a97e64ed3ee8.webp' /></p><p>இந்நிலையில், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மார்க் கார்னி, அமெரிக்கா பேச்சுவார்த்தைகளில் தீவிர கவனம் செலுத்தினால் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
கனடாவின் தொழில்துறைகள் படிப்படியாக சுருங்கி அழியும் வகையிலான நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைப்பதாகவும், அவ்வாறான நிபந்தனைகளை கனடா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், “மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள். கடுமையாக நடந்துகொள்ள முயற்சிப்பதையும் நிறுத்துங்கள்” என டிரம்ப் நிர்வாகத்துக்கு கார்னி பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>

மற்றவர்களை குறைகூறுவதையும், தங்களை வலிமையானவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிப்பதையும் அமெரிக்கா கைவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் எனவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T09:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[200 நாள் கடல் வாழ்க்கைக்கு முடிவு; ; ஓய்வெடுக்க தாய்லாந்து செல்லும் 5000 அமெரிக்க வீரர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/uss-abraham-lincoln-5-000-troops-rest-in-thailand-1788328381"></link>
            <id>https://canadamirror.com/article/uss-abraham-lincoln-5-000-troops-rest-in-thailand-1788328381</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலில் பட்டாயா அருகே உள்ள Laem Chabang துறைமுகத்தை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p> 
வீரர்களுக்கு ஓய்வு மற்றும் புத்துணர்வு அளிக்கும் வகையில் கரையோர பகுதிகளில் நேரம் செலவிட அனுமதி வழங்கப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38fd0127-c144-418b-b476-03e53012010b/26-6a97b9bee0c34.webp' /></p><h2>சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கக்கூடும்&nbsp;&nbsp;</h2><p> இதனால் பட்டாயாவில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள், கடைகள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கு குறுகிய காலத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>ஒவ்வொரு அமெரிக்க வீரரும் தினமும் சுமார் 1,000 முதல் 3,000 தாய் பாட் வரை செலவு செய்யக்கூடும் என பட்டாயா மேயர் தெரிவித்துள்ளார்.
</p><p> 
அதே நேரத்தில், வீரர்களின் வருகையால் சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் போலீசாரிடம் உள்ளது. </p><p>இதையடுத்து கடற்கரை மற்றும் முக்கிய இரவு நேர பொழுதுபோக்கு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 40 முதல் 50 பேர் பாலியல் தொழில் தொடர்பான சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
 
வியட்நாம் போர் காலத்திலிருந்தே அமெரிக்க ராணுவ வீரர்களின் ஓய்வு சுற்றுலாவுடன் பட்டாயாவுக்கு நீண்ட தொடர்பு உள்ளது. 

தற்போது 200 நாட்களுக்கும் மேலாக கடலில் இருந்த USS Abraham Lincoln வீரர்களின் வருகை, நகரின் சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தற்காலிக ஊக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-02T08:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்கால உலகை மாற்றப்போகும் ரோபோக்கள் ; எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/robots-will-change-the-future-world-elon-musk-s-1788337426"></link>
            <id>https://canadamirror.com/article/robots-will-change-the-future-world-elon-musk-s-1788337426</id>
            <summary type="text">அடுத்த 10 ஆண்டுகளில் உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வரும் என டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 10 ஆண்டுகளில் உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வரும் என டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கருத்தை அவர் தனது சமூக வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்.
</p><p>
ரோபோக்களே புதிய ரோபோக்களை உற்பத்தி செய்யத் தொடங்கும் பட்சத்தில், அவற்றின் எண்ணிக்கையும் வளர்ச்சியும் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் அதிகரிக்கும் என எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e96ec324-159c-4362-8b88-223ee1a8bee9/26-6a97dd133c415.webp' /></p><p>அத்துடன், எதிர்காலத்தில் ஒரு மனித உருவ ரோபோவின் செயல்திறன் மனிதனை விட சுமார் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் எனவும் அவர் கணித்துள்ளார்.
</p><p>
மேலும், இன்னும் ஒரு வருடத்திற்குள் செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் மனிதனின் அறிவாற்றல் திறன்களை விஞ்சிவிடும் எனவும், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் மனிதகுலத்தின் ஒட்டுமொத்த நுண்ணறிவையும் செயற்கை நுண்ணறிவு மிஞ்சக்கூடும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், இவை எலான் மஸ்க் வெளியிட்டுள்ள எதிர்காலம் தொடர்பான கணிப்புகளே என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">ELON MUSK: A billion humanoid robots will be more productive than all humans combined within 10 years.<br><br>“There will be at least a billion robots in 10 years, and each will produce at least five times the output of a human.” <a href="https://t.co/4N6etC48L5">pic.twitter.com/4N6etC48L5</a></p>&mdash; DogeDesigner (@cb_doge) <a href="https://x.com/cb_doge/status/2094793785523962255?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-02T08:24:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எகிப்தில் பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/16-killed-in-bus-accident-in-egypt-1788336769"></link>
            <id>https://canadamirror.com/article/16-killed-in-bus-accident-in-egypt-1788336769</id>
            <summary type="text">&amp;nbsp; எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p>



தஹாப்–நுவைபா வீதியில், அல்-சாதா பகுதிக்கு முன்னதாக நுவைபா நோக்கிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததாக எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 20 அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f21469c9-fb29-4833-9cbe-5eedce16fad9/26-6a97da82529c7.webp' /></p><p> காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.</p><p>



உயிரிழந்த 16 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.



காயமடைந்தவர்களுக்கு தேவையான வைத்திய சிகிச்சை, மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T08:09:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/attack-on-battaramulle-seelarathana-thero-1788336530"></link>
            <id>https://canadamirror.com/article/attack-on-battaramulle-seelarathana-thero-1788336530</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>

பத்தரமுல்ல சீலரத்ன தேரர், தற்போது வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4e95a61-133a-4da9-9bf8-499c0c378c91/26-6a97d9941051e.webp' /></p><p> </p><p>



இறுதிச் சடங்கு ஒன்றின் ஏற்பாடுகள் தொடர்பாக விகாரை வளாகத்துக்குள் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது

.</p><p> சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p>



சந்தேகநபரை கைது செய்ய வீரகுல பொலிஸார் பல விசேட பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-02T08:06:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரழிவு; ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-disaster-death-toll-crosses-1-000-1788330923"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-disaster-death-toll-crosses-1-000-1788330923</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தின் இயற்கை பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளது.



வெள்ளத்தில் காணாமல்போனோர் நேபாளத்தின் பல மாவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தின் இயற்கை பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளது.



வெள்ளத்தில் காணாமல்போனோர் நேபாளத்தின் பல மாவட்டங்களிலும் அண்டை நாடான இந்தியாவிலும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


ரசுவாவில் 45, நுவாகோட்டில் 155, தாடிங்கில் 59, சிட்வானில் 348, கோர்காவில் 66, தனாஹுனில் 38, நவல்பாசி கிழக்கில் 217, நவல்பாசி மேற்கில் 190 மற்றும் இந்தியாவில் 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff4f4d66-659d-4df8-8266-b0a24e230a4a/26-6a97c3ad4253e.webp' /></p><h2>இதுவரை &nbsp;1,113 சடலங்களுக்கு பிரேதப் பரிசோதனை&nbsp;</h2><p>
</p><p>


இதுவரை 1,113 சடலங்களுக்கு பிரேதப் பரிசோதனை மற்றும் அடையாளம் காணும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், 95 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>


மேலும், காணாமல் போனவர்களின் உறவினர்கள் அடையாளம் காண உதவும் வகையில், அடையாளம் தெரியாத 911 சடலங்களின் விவரங்கள் பொலிஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 7,912 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 6,541 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 4,858 பேரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.</p><p>



பனிப்பாறை சரிவினால் ஏற்பட்ட இந்த வெள்ளம், போட்டேகோஷி ஆற்றங்கரையில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளதுடன், குடியிருப்புகள், வீதிகள், எல்லை வர்த்தக நிலையங்கள் மற்றும் நீர்மின்சக்தி கட்டமைப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T06:32:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் லாரியுடன் பீர் திருட்டு.. கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/beer-stolen-with-a-truck-in-us-reward-offered-1788329066"></link>
            <id>https://canadamirror.com/article/beer-stolen-with-a-truck-in-us-reward-offered-1788329066</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பீர் தயாரிப்பு நிறுவனமான Pabst Brewing Company-க்கு சொந்தமான சுமார் 40,000 பவுண்ட் எடையுள்ள பீர், கலிபோர்னியாவில் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பீர் தயாரிப்பு நிறுவனமான Pabst Brewing Company-க்கு சொந்தமான சுமார் 40,000 பவுண்ட் எடையுள்ள பீர், கலிபோர்னியாவில் உள்ள விநியோக மையத்தில் இருந்து திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>&nbsp;ஆயிரக்கணக்கான Pabst Blue Ribbon பீர் கேன்கள் இருந்ததாக கூறப்படுகிறது.'

ஆகஸ்ட் 17ஆம் தேதி, திருடன் போலி ஆவணங்களை பயன்படுத்தி Montclair பகுதியில் உள்ள Anheuser-Busch விநியோக மையத்திலிருந்து சரக்கை எடுத்து சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64cc1d6a-be27-48d1-89fc-04acecc69d21/26-6a97bc6bcb5b8.webp' /></p><h2>சுமார் 25,000 அமெரிக்க டாலர் மதிப்புடையது</h2><p> </p><p>சான் டியாகோவுக்கு செல்ல வேண்டியிருந்த இந்த சரக்கு, சுமார் 25,000 அமெரிக்க டாலர் மதிப்புடையது என கூறப்படுகிறது.
 
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், Pabst நிறுவனம் சமூக வலைதளங்களில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. </p><p>

“40,000 பவுண்ட் பீர் திருடப்பட்டுள்ளது” என பதிவிட்டு, திருடப்பட்ட சரக்கை திருப்பிக் கொடுக்குமாறும் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், தகவல் கொடுத்து வழக்கை தீர்க்க உதவுபவர்களுக்கு பரிசும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
</p><p> 
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, 40,000 பவுண்ட் பீர் இருக்கும் லாரியை திருடியவர்கள், குடித்த பிறகு அந்த லாரியை எங்கே நிறுத்தினார்கள் என்பதையே மறந்துவிடுவார்கள் என&nbsp; இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-02T06:01:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் ; பதிலடியில் வளைகுடா நாடுகள் அதிர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-attacks-iran-again-gulf-countries-react-shock-1788325688"></link>
            <id>https://canadamirror.com/article/us-attacks-iran-again-gulf-countries-react-shock-1788325688</id>
            <summary type="text">ஈரான் மீது அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் வணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது. </p><p>ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே, தெற்கு ஈரானின் சிரிக் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலின் சிதைவுகள் விழுந்ததில் சிறு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஈரானிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df679668-587d-4277-869a-079867815402/26-6a97af39c736f.webp' /></p><p>
</p><p>
இதற்கு பதிலடியாக ஈரான், ஈராக் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும், குவைத் மற்றும் பஹ்ரைன் பகுதிகளிலும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஜோர்டான் 13 ஏவுகணைகளை இடைமறித்ததாகவும், தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், புதன்கிழமை அதிகாலையில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிராக குவைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயல்படுத்தியதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரான் பதிலடி கொடுத்தால் மேலும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. </p><p>இதனால் ஹார்முஸ் நீரிணை மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்த சர்வதேச கவலை அதிகரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T05:08:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் இந்திய குடும்பங்களுக்கு புதிய நெருக்கடி ; H-4 பணி அனுமதி ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crisis-indian-families-america-h-4-work-cancelled-1788325015"></link>
            <id>https://canadamirror.com/article/crisis-indian-families-america-h-4-work-cancelled-1788325015</id>
            <summary type="text">அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் துணைகளுக்கு வழங்கப்பட்டு வரும் எச்-4 (H-4) பணி அனுமதியை ரத்து செய்வதற்கான முன்மொழிவு, அந்நாட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் துணைகளுக்கு வழங்கப்பட்டு வரும் எச்-4 (H-4) பணி அனுமதியை ரத்து செய்வதற்கான முன்மொழிவு, அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) 2026ஆம் ஆண்டுக்கான நீண்டகால ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், எச்-1பி விசாதாரர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக பணியாற்றுவதற்கு வழங்கப்படும் வேலை அனுமதி பாதிக்கப்படலாம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4fe5816-df0d-4cb7-aefb-609a5fab224d/26-6a97ac989ef7b.webp' /></p><p>2015ஆம் ஆண்டு ஒபாமா நிர்வாகத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட விதியை மாற்றியமைக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக நீண்டகாலமாக காத்திருக்கும் எச்-1பி விசாதாரர்களின் குடும்பங்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

எச்-4 பணி அனுமதிகளில் பெரும்பகுதி இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டம் இந்தியக் குடும்பங்கள் மத்தியில் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> வேலை செய்து வரும் துணைகளின் வருமானம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில், பணி அனுமதி ரத்து செய்யப்பட்டால் அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப வருமானம் பாதிக்கப்படக்கூடும்.
</p><p>
இதேவேளை, தற்போது செல்லுபடியாகும் எச்-4 பணி அனுமதிகள் உடனடியாக ரத்து செய்யப்படவில்லை. இந்த நடவடிக்கை தற்போது ‘Long-Term Action’ எனும் நீண்டகால நடவடிக்கையாக மட்டுமே ஒழுங்குமுறைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baa117e1-6b1e-4018-b63c-ef44907897e6/26-6a97ad0a698b7.webp' /></p><p>அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முதலில் முறையான முன்மொழிவு விதியை வெளியிட வேண்டும். </p><p>அதன் பின்னர் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டு, சட்ட மற்றும் நிர்வாக ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் பின்னரே இறுதி விதி அமுலுக்கு வர முடியும். </p><p>எனவே, தற்போதைய எச்-4 பணி அனுமதிதாரர்கள் உடனடியாக வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கருத முடியாது.

இதனிடையே, அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த முன்மொழிவு பார்க்கப்படுகிறது.</p><p> எச்-1பி விசா தொடர்பான பிற கட்டுப்பாடுகளும் அதிகரித்து வரும் நிலையில், எச்-4 விசாதாரர்களுக்கான பணி அனுமதி விவகாரம் இந்தியக் குடும்பங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T04:57:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நாய்களைக் கட்டுப்பாடின்றி உலாவ விட்ட நபர் விதிக்கப்பட்ட தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-man-ordered-to-pay-a-woman-1788314747"></link>
            <id>https://canadamirror.com/article/bc-man-ordered-to-pay-a-woman-1788314747</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், தனது நாய்களை சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்று பெண் ஒருவரைக் கடிக்கக் காரணமான உரிமையாளருக்கு, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், தனது நாய்களை சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்று பெண் ஒருவரைக் கடிக்கக் காரணமான உரிமையாளருக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1,139 டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு சிவில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. </p><p>
கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யூசிஃப் தக்லா என்பவர் தனது இரு நாய்களையும் சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்றபோது, வீட்டின் கேட் அருகே நின்றிருந்த வெய்ஷென் வாங் என்ற பெண்ணை அந்த நாய்கள் தாக்கி கடித்தன.</p><p> 
இச்சம்பவத்தினால் காயமடைந்த பெண், ஆம்புலன்ஸ் சேவைக்கட்டணம், வருமான இழப்பு, வடு நீக்கும் சிகிச்சை மற்றும் மன உளைச்சல் என்பவற்றுக்காக மொத்தம் 3,148 டொலர்கள் இழப்பீடு கோரி தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d5bd2c4-2aff-4f11-b406-0275283e04e0/26-6a97847d45d05.webp' /></p><p> </p><p>
நாய்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறிய உரிமையாளரின் அலட்சியமே இச்சம்பவத்திற்குக் காரணம் எனத் தீர்ப்பாய உறுப்பினர் ஜெப்ரி ட்ரோஸ்டியாக் டிக்காட்டினார். </p><p>
பாதிக்கப்பட்ட பெண் கோரிய சில தொகைகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், ஆம்புலன்ஸ் சேவைக்காக 848 டொலர்கள் மற்றும் மன உளைச்சலுக்காக 150 டொலர்கள் உட்பட, தீர்ப்பாயக் கட்டணங்களுடன் சேர்த்து மொத்தம் 1,139 டொலர்களை வழங்குமாறு நாய் உரிமையாளருக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T04:22:29+00:00</updated>
        </entry>
    </feed>
