<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-11T12:39:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 43,000 டொலர் மதிப்பிலான தங்கம், வெள்ளி திருட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-woman-charged-in-alleged-gold-theft-1786447759"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-woman-charged-in-alleged-gold-theft-1786447759</id>
            <summary type="text">&amp;nbsp;கனடியப் பெண் எல்லையில் கைது
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் 43,000 கனேடிய டொலருக்கும் அதிக மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியைத் திருடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடியப் பெண் எல்லையில் கைது
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் 43,000 கனேடிய டொலருக்கும் அதிக மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர், மீண்டும் கனடாவுக்குத் திரும்ப முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>
கனடாவின் ஒன்ராறியோ, பீம்ஸ்வில் பகுதியைச் சேர்ந்த 25 வயதான கைலீ ஹோகன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார். </p><p>
கடந்த மே 11 அன்று ஃபிலடெல்ஃபியாவிலிருந்து சுமார் 40 நிமிட பயணத் தொலைவில் உள்ள பென்சலேம் டவுன்ஷிப் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0ab8a1-4cb7-4903-821c-0291bb91a99a/26-6a7b07919341c.webp' /></p><p>
</p><p> பாதிக்கப்பட்ட நபர் தங்கம் மற்றும் வெள்ளி அடங்கிய பார்சல் ஒன்றின் வருகைக்காகக் காத்திருந்தவேளையில், அஞ்சல் ஊழியரிடம் சந்தேகநபர் தாங்களே இதன் உண்மையான உரிமையாளர் எனக் கூறி பார்சலுக்குக் கையொப்பமிட்டுப் பெற்றுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.</p><p>
இதனைப் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் பார்த்துள்ளார். 
திருடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் மொத்த மதிப்பு 43,549 கனேடிய டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>
சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், வாகனப் பதிவு எண் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சந்திப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த பொலிஸார், சந்தேகநபர் பயன்படுத்திய 'நிசான்' ரக காரைக் கண்டறிந்தனர். </p><p>
விசாரணையில், மே 10 அன்று ஃபிலடெல்ஃபியா விமான நிலையத்தில் உள்ள கார் வாடகை நிறுவனத்திடமிருந்து இந்த காரை ஹோகன் வாடகைக்கு எடுத்ததும், மே 11 அன்று திருட்டை அரங்கேற்றிய கையோடு காரைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு ஏரிஸோனாவுக்கு விமானத்தில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.</p><p> 
இதனைத் தொடர்ந்து ஹோகனுக்கு எதிராகக் கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p> 
ஜூலை 5 ம் திகதி, நியூயோர்க்கின் லூயிஸ்டன் பகுதியில் உள்ள எல்லைக் கடப்பு வழியே மீண்டும் கனடாவுக்குள் நுழைய முயன்றபோது, அமெரிக்க விசா அனுமதியில் அங்கு தங்கியிருந்த ஹோகனை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.இவர் மீது ஆவணப் போலி தயாரித்தல், சட்டவிரோதமாகப் பொருட்களைக் கவர்தல் மற்றும் ஏமாற்றித் திருடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>இக்குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. 
கைது செய்யப்பட்ட ஹோகன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவருக்குப் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது பக்ஸ் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அச்சுறுத்தலால் ரகசிய விமானத்தில் ஒழித்து ஓடிய ட்ரம்ப் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-threat-trump-fled-in-a-secret-plan-uk-1786439764"></link>
            <id>https://canadamirror.com/article/iran-threat-trump-fled-in-a-secret-plan-uk-1786439764</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.</p><p>

கடந்த மாதம் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் துருக்கியின் அங்காராவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து புறப்படும்போது வழக்கமாகப் பயன்படுத்தும் எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் ஊடகங்கள் முன்னிலையில் அவர் ஏறியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e372dfa7-cf44-4b10-a9d0-f1013a257e56/26-6a7ae855affe9.webp' /></p><h2>பழைய எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த ட்ரம்ப்</h2><p>


எனினும், அந்த விமானம் புறப்படாத நிலையில், ஊடகவியலாளர்கள் அங்கிருந்து சென்ற பின்னர், கேட்டரிங் வாகனம் ஒன்றின் மூலம் ட்ரம்ப் வேறு விமானத்துக்கு இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p>



பின்னர், பாதுகாப்புத்துறை செயலாளர் ஹெக்செத் மற்றும் இரகசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சி-32ஏ இராணுவ விமானத்தில் துருக்கியிலிருந்து பிரிட்டனுக்கு அவர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


இதனிடையே, ட்ரம்ப் இல்லாமல் பழைய எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த ஊடகவியலாளர்கள் மற்றும் வெள்ளை மாளிகை ஊழியர்களிடம் விமானத்தின் ஜன்னல்களை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


அத்தோடு பிரிட்டனில் இருந்து பின்னர் ட்ரம்ப் பாதுகாப்பாக அமெரிக்கா திரும்பியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T12:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியா முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-sentence-for-former-syrian-president-1786448558"></link>
            <id>https://canadamirror.com/article/death-sentence-for-former-syrian-president-1786448558</id>
            <summary type="text">&amp;nbsp; போர்க் குற்றங்கள் தொடர்பில் சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவரது இளைய சகோதரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; போர்க் குற்றங்கள் தொடர்பில் சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவரது இளைய சகோதரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

சிரிய நீதிமன்றமொன்றினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அசாத் மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் விசாரணை நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94046756-66a3-4743-9493-5a40ca119d55/26-6a7b0ab09d64b.webp' /></p><p>
</p><p>
 

சுமார் ஐந்து இலட்சம் பேர் உயிரிழந்த 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலேயே இவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
 

2011 ஆம் ஆண்டு தாரா (Daraa) பகுதியில் இடம்பெற்ற போராட்டங்களை அடக்குவதற்கு தலைமை தாங்கிய அசாத்தின் உறவினரான ஆட்டெஃப் நஜீப் (Atef Najib) என்பவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

 

அதேசமயம் அசாத்தும் அவரது சகோதரரும் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட நஜீப் சிறைச்சாலை உடையில் நீதிமன்றக் கூண்டில் நின்றபோதே இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T12:25:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஆற்றில் சடலமாக மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/suspect-found-dead-after-shooting-at-police-1786445667"></link>
            <id>https://canadamirror.com/article/suspect-found-dead-after-shooting-at-police-1786445667</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கல்கரி நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஸ்ப்ரூஸ் க்ளிஃப் பகுதியில் திங்கள்கிழமை முற்பகல் 11:45 மணியளவில் பொலிஸார் வாகனச் சோதனையில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கல்கரி நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஸ்ப்ரூஸ் க்ளிஃப் பகுதியில் திங்கள்கிழமை முற்பகல் 11:45 மணியளவில் பொலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வாகனத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
</p><p>இந்தத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இருமுறை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தார். தாக்குதலை நடத்திய நபர் உடனடியாக எட்வர்தி பூங்காவை நோக்கித் தப்பிச் சென்றார்.
</p><p>தப்பியோடிய நபரைக் கண்டுபிடிக்க எச்.ஏ.டபிள்யூ.சி.எஸ் ஹெலிகொப்டர் உதவியுடன் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34ce2902-cf7d-480f-9bfe-18ed2e05f114/26-6a7aff6507856.webp' /></p><p> </p><p>
தப்பிச் செல்லும் வழியில் அந்த நபர் பொலிஸாரையும் அருகிலிருந்த பொதுமக்களையும் நோக்கித் தொடர்ச்சியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், வாகனம் ஒன்றை மிரட்டிப் பறித்து பூங்காவின் வழியே ஓட்டிச் சென்றுள்ளார்.</p><p> பின்னர் அந்த வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டது.
பொலிஸார் அவரை நெருங்குவதற்குள், அவர் பூங்காவிற்கு அருகில் உள்ள ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p> அவர் தனக்குத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> 
எனினும், பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் காயமடைந்தாரா என்பது குறித்து 'அல்பெர்ட்டா தீவிர சம்பவங்கள் விசாரணை குழு' விசாரணை நடத்தி வருகிறது.
</p><p>காயமடைந்த பொலிஸ் அதிகாரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான நிலையில் உள்ளதாக பொலிஸ் தலைமை அதிகாரி கேட்டி மெக்லெலன் தெரிவித்துள்ளார்.</p><p>
சம்பவத்தின் போது அப்பகுதியில் "ஆபத்தான நபர்" தொடர்பிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். 
பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T11:07:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஹெலிகொப்டர் விபத்து: 3 பேர் லேசான காயங்களுடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/three-people-injured-after-helicopter-crashed-1786444342"></link>
            <id>https://canadamirror.com/article/three-people-injured-after-helicopter-crashed-1786444342</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் &#039;நார்த்வெஸ்ட் டெரிட்டரீஸ்&#039; பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கனடிய பொலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் 'நார்த்வெஸ்ட் டெரிட்டரீஸ்' பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>
யெல்லோநைஃப் நகருக்கு வடமேற்கே சுமார் 375 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'கமேட்டி' பழங்குடியின குடியிருப்பு பகுதிக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. </p><p>
விபத்து நடந்து சுமார் மூன்று மணி நேர தேடுதலுக்குப் பிறகு, ஹெலிகொப்டரில் இருந்த மூன்று பேரும் கண்டுபிடிக்கப்பட்டு லேசான காயங்களுடன் உள்ளூர் சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/221b674e-fa6c-4d5f-9a4e-af45ffdff168/26-6a7afa389e561.webp' /></p><p> </p><p>
பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் உள்ளூர் அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் உதவிகளை வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>
இந்த விபத்துக்கான காரணம் குறித்து புலனாய்வாளர்கள் இதுவரை விவரங்களை வெளியிடவில்லை.</p><p>எனினும், விபத்து தொடர்பில் மேல் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இது கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T10:42:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிலன் விமான நிலையத்தில் வாகனம் மீது மோதிய ஜெட் விமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/private-jet-hit-by-ground-vehicle-in-milan-airport-1786426341"></link>
            <id>https://canadamirror.com/article/private-jet-hit-by-ground-vehicle-in-milan-airport-1786426341</id>
            <summary type="text">&amp;nbsp; இத்தாலியின் மிலன் லினேட் விமான நிலையத்தில், நேற்று (9) தரைவழியாகச் சென்றுகொண்டிருந்த ஹாக்கர் பீச்கிராஃப்ட் 400A தனியார் ஜெட் விமானம் மீது தரை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இத்தாலியின் மிலன் லினேட் விமான நிலையத்தில், நேற்று (9) தரைவழியாகச் சென்றுகொண்டிருந்த ஹாக்கர் பீச்கிராஃப்ட் 400A தனியார் ஜெட் விமானம் மீது தரை கையாளும் வாகனம் ஒன்று மோதியதால் அங்க்கு பரபரப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. </p><p> 

 இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், இது சில விமானச் செயல்பாடுகளில் தாமதத்தை ஏற்படுத்தியது.
அதேசமயம் வாகனம் பீரிய சீததிற்கு உள்ளாகியுள்ளதுடன், விமானத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ccea1ff-6831-4398-a55b-86c6749ee6ee/26-6a7ab3e78bfcd.webp' /></p><p> இது குறித்த புகைப்படங்க்களும் வேளியாகியுள்ளது.

அத்துடன், வரவிருந்த இரண்டு விமானங்கள் பெர்கமோ ஓரியோ அல் செரியோ மற்றும் மிலன் மால்பென்சா விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்படப்பட்டதாகவும்&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9184002-fea7-4d55-b333-9bfaf02d9f99/26-6a7ab3e84ddf1.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d53226a-1451-45ac-a366-f8b4d5773ce6/26-6a7ab3e923295.webp' /></p>]]></content>
            <updated>2026-08-11T09:16:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியா நிலநடுக்கம்; 132 பேர் பலி; அவசரநிலை பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/colombia-earthquake-state-of-emergency-declared-1786433626"></link>
            <id>https://canadamirror.com/article/colombia-earthquake-state-of-emergency-declared-1786433626</id>
            <summary type="text">&amp;nbsp; கொலம்பியாவில் திங்கட்கிழமை (10) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 132 பேர் உயிரிழந்துள்ளதுடன், 570 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொலம்பியாவில் திங்கட்கிழமை (10) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 132 பேர் உயிரிழந்துள்ளதுடன், 570 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

 இதனையடுத்து கொலம்பியா முழுவதும் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>

ரிச்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், சொக்கோ மாகாணத்தில் தரைமட்டத்திலிருந்து 103 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84f39666-5c6e-4309-b2a0-b5a1395ea8cf/26-6a7ad05bd14ba.webp' /></p><h2>அவசரநிலை பிரகடனம்</h2><p>
</p><p>
நிலநடுக்கத்தின் மையம் 'சான் ஜோஸ் டெல் பால்மர்' என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்திருந்தது. அங்குச் செல்லும் பாதைகள் சேதமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் எவ்வித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என உள்ளூர் மேயர் லியோன் பாபியோ மரின் தெரிவித்துள்ளார்
</p><p>

மேற்கு கொலம்பியா முழுவதும் நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்திற்கு நில அதிர்வுகள் கடுமையாக உணரப்பட்டன.

நிலநடுக்க மையத்திலிருந்து சுமார் 55 கி.மீ (34 மைல்கள்) தொலைவில் உள்ள காபி உற்பத்திப் பிராந்தியமான பெரெய்ரா நகரமே மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. </p><p>அதிகளவிலான உயிரிழப்புகள் இந்நகரத்திலேயே பதிவாகியுள்ளன.

பெரெய்ராவைச் சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் 'வால் டெல் காவ்கா' பிராந்தியமும் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளன.</p><p>

இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் படையினரின் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-11T07:31:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணப்பை ஒன்றிற்குள் மனித உடல்! அவுஸ்திரேலியாவில் கொலை வழக்கில் குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/suitcase-body-turns-be-lifelike-doll-australia-1786431620"></link>
            <id>https://canadamirror.com/article/suitcase-body-turns-be-lifelike-doll-australia-1786431620</id>
            <summary type="text">&amp;nbsp; அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட பயணப்பை ஒன்றிற்குள் மனித உடல் இருப்பதாகக் கருதி ஆரம்பிக்கப்பட்ட கொலை வழக்கு விசாரணை, அது மனித உருவத்தை ஒத்த பொம்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட பயணப்பை ஒன்றிற்குள் மனித உடல் இருப்பதாகக் கருதி ஆரம்பிக்கப்பட்ட கொலை வழக்கு விசாரணை, அது மனித உருவத்தை ஒத்த பொம்மை (Lifelike sex doll) என்ற உண்மை கண்டறியப்பட்ட பின்னர், முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக&nbsp; அவுஸ்திரேலியா&nbsp; ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p> 


 நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள 'ஓலன்' (Oallen) கிராமப் பகுதியில் சிற்றுந்தில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், சாலையோரத்தில் வீசப்பட்டிருந்த பயணப்பையைக் கண்டு காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95d7462f-0ce1-4b43-9119-d16bbc2ec6d2/26-6a7ac8860c757.webp' /></p><h2>தடயவியல் பரிசோதனையில், அது மனித உடல் அல்ல</h2><p>
</p><p>
ஆரம்பத்தில் இதனை ஒரு கொலைச் சம்பவமாகக் கருதிய காவல்துறை, உடனடியாக சிறப்புப் புலனாய்வுத் துப்பறியும் நிபுணர்கள் மற்றும் தடயவியல் குழுவை சம்பவ இடத்துக்கு அனுப்பி விசாரணையை துரிதப்படுத்தியது.
</p><p>
எனினும் தடயவியல் பரிசோதனையில், அது மனித உடல் அல்ல என்பதும், ஆடைகள், முடி, மூக்குத்தி அணிவிக்கப்பட்ட மனித உருவத்தை ஒத்த தத்ரூபமான பொம்மை என்பது தெரியவந்தது.</p><p>

பொம்மையில் காயங்கள் மற்றும் உராய்வுகள் போன்ற அடையாளங்கள் இருந்ததால், அது மனித உடல் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றதாகக் காவல்துறை தெரிவித்தது.
</p><p>
இது குறித்துக் கருத்து தெரிவித்த நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை கண்காணிப்பாளர் லிண்டா பிராட்பரி, "ஆரம்பத்தில் அது மனித உடல் என்றே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டார்.

மனித எச்சங்களைப் போலவே மிகவும் தத்ரூபமாக இருந்தபோதிலும், விஞ்ஞான பரிசோதனைகள் மூலம் அது பொம்மை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
</p><p>
சரியான நடைமுறைகளைப் பின்பற்றி விசாரணை நடத்தப்பட்டதால் இதில் எந்த வருத்தமும் இல்லை எனக் குறிப்பிட்ட காவல்துறை, இந்த விசித்திரச் சம்பவத்தின் விசாரணையை அதிகாரப்பூர்வமாக நிறைவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T06:58:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சிறுவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததால் ரத்து செய்யப்பட்ட விமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/flight-cancelled-boy-refused-to-wear-seatbelt-1786431159"></link>
            <id>https://canadamirror.com/article/flight-cancelled-boy-refused-to-wear-seatbelt-1786431159</id>
            <summary type="text">&amp;nbsp; கனடாவில் சிறுவன் ஒருவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததைத் தொடர்ந்து விமான பயணம் ஒன்று ரத்து செய்யப்பட்ட சம்பவம், விமானத்தில் சிறுவர்கள் பயணிக்கும் போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடாவில் சிறுவன் ஒருவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததைத் தொடர்ந்து விமான பயணம் ஒன்று ரத்து செய்யப்பட்ட சம்பவம், விமானத்தில் சிறுவர்கள் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.</p><p>

கடந்த 6ஆம் திகதி விக்டோரியாவிலிருந்து டொரண்டோ (Toronto) நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த 'போர்ட்டர் எயார்லைன்ஸ்' (Porter Airlines) வானூர்தியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 விமானம் புறப்படத் தயாரான போது, சிறுவன் ஒருவன் இருக்கையில் நின்றுகொண்டும் ஆசனப்பட்டி அணிய மறுத்தும் அடம்பிடித்துள்ளான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01965a94-9c38-4cf7-9a07-3b5dbabcaf3e/26-6a7ac6b964583.webp' /></p><h2>பயணிகள் கடும் அதிருப்தி</h2><p>

சிறுவனை ஆசனப்பட்டி அணிய வைப்பதற்கு பெற்றோர் மற்றும் வானூர்தி ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
</p><p>
பாதுகாப்பு விதிமுறைகளின்படி இத்தகைய ஆபத்தான சூழலில் வானூர்தியை செலுத்த முடியாது என்பதால், அதனை மீண்டும் முனையத்துக்கு கொண்டு சென்று அந்தச் சிறுவனையும் அவரது பெற்றோரையும் இறக்கிவிட ஊழியர்கள் தீர்மானித்தனர்.
</p><p>
இருப்பினும், இந்த தாமதம் காரணமாக நள்ளிரவுக்குப் பிறகு ஓடுபாதை (Runway) மூடப்பட்டதால், வானூர்தியை அன்றைய தினம் இயக்க முடியாமல் போனது. இதன் காரணமாக ஏனைய பயணிகள் அனைவரும் மறுநாளுக்கு வேறு விமானங்களில் மாற்றிப் பதிவு செய்யப்பட்டனர்.
</p><p>
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தகைய சூழல்களில் சிறுவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் மற்றும் வானூர்தி நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இணையத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.</p><p>

அதோடு சிறுவன் ஒருவனின் நடத்தையால் முழு வானூர்தி பயணமும் ரத்து செய்யப்பட்டிருக்கக் கூடாது என்றும், அந்த குடும்பத்தை மட்டும் உடனடியாக வெளியேற்றியிருக்க வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.</p><p>

முன்னதாக 2012 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சவுத் வெஸ்ட் எயார்லைன்ஸ் (Southwest Airlines) மற்றும் ஜெட்ப்ளூ (JetBlue) ஆகிய வானூர்தி நிறுவனங்களிலும், ஊழியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதற்காக சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் வானூர்திகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T06:50:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் இடையே இழுபறியால் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crude-oil-prices-rise-standoff-between-us-and-iran-1786430717"></link>
            <id>https://canadamirror.com/article/crude-oil-prices-rise-standoff-between-us-and-iran-1786430717</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே இழுபறியால் சர்வதேச சந்தையில் மீண்டும் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

ஹோர்முஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே இழுபறியால் சர்வதேச சந்தையில் மீண்டும் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் விதித்த நிபந்தனைகளுக்குப் பதிலாக, கடந்தகால போர்கள், தாக்குதல்கள் மற்றும் போராட்டங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ed684f-20a6-4a7d-ae17-951cb4292c5b/26-6a7ac5016400e.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், இன்று சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
</p><p>
நேற்று மசகு எண்ணெய் விலை 5 சதவீதம் வரை அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 88 டொலராகவும், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 82.45 டொலராகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T06:43:04+00:00</updated>
        </entry>
    </feed>
