<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-09T03:14:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் ; ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/five-iranian-oil-tankers-come-under-attack-1788922851"></link>
            <id>https://canadamirror.com/article/five-iranian-oil-tankers-come-under-attack-1788922851</id>
            <summary type="text">அமெரிக்கப் போர்க்கப்பலை ஈரான் இருமுறை தாக்கியதற்குப் பதிலடியாக, அந்நாட்டின் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கப் போர்க்கப்பலை ஈரான் இருமுறை தாக்கியதற்குப் பதிலடியாக, அந்நாட்டின் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) தெரிவித்துள்ளது.</p><p> 

 

ஓமன் வளைகுடாவில் ஈரானிய புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய நான்கு எண்ணெய் தாங்கிக் கப்பல்களும், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவுக்கு அருகே மற்றொரு கப்பலும் இலக்கு வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99817ad5-c382-4519-a019-cd1f0d9009d0/26-6aa0cbe57cac5.webp' /></p><p>

 

இதற்குப் பதிலடியாக ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியது. </p><p>இருப்பினும், ஈரான் செலுத்திய 20 ஏவுகணைகளில் 18 ஏவுகணைகளைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் பின்பு அறிவித்தது.</p><p>

 

கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, கடந்த வாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பரத் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. </p><p>இந்த மோதல்கள் காரணமாக ஆசியாவின் ஆரம்ப வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்தன.</p><p>

 

அமெரிக்கக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகில் உள்ள எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது மேலதிகப் பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.</p><p> 

 

துறைமுகங்களில் அல்லது நங்கூரமிட்டுள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய் தாங்கிக் கப்பல்களின் ஊழியர்களும் உடனடியாக வெளியேறுமாறு ஈரானிய புரட்சிகர காவல் படை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>

 

ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை அமெரிக்கக் கடற்படைக் கப்பல் வெற்றிகரமாகத் தவிர்த்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தச் சம்பவத்தில் அமெரிக்க வீரர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
 

தாக்கப்பட்ட ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்களும் ஈரானிய புரட்சிகர காவல் படைக்கும் அதன் பிராந்திய அமைப்புகளுக்கும் நிதியளிக்கும் பில்லியன் டொலர் நிழல் வலையமைப்பின் ஒரு பகுதி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T03:01:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பாரிய விபத்து: 4 இளைஞர்கள் பரிதாப பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271"></link>
            <id>https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271</id>
            <summary type="text">கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கிம்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
நெடுஞ்சாலை 229-ல் மேற்காகப் பயணித்த கார் ஒன்று, நெடுஞ்சாலை 8-ஐக் கடக்க முயன்றபோது, தெற்கு நோக்கி வந்த வேன் ஒன்றுடன் பலமாக மோதியது. </p><p>
இந்தச் சந்திப்பில் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு 'நிற்குமாறு' எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ca2f6d9-f1b1-4749-b10f-db90748128a8/26-6aa03d0187a1d.webp' /></p><p> 
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வீதியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டன. </p><p>அதில் ஒரு வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்தது. 
மேற்கு நோக்கிச் சென்ற காரில் பயணித்த 4 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். </p><p>
காரை ஓட்டிவந்த வின்னிபெக்கைச் சேர்ந்த 18 வயது பெண், கிம்லியைச் சேர்ந்த 18 வயது இளைஞர், சேண்டி ஹூக்கைச் சேர்ந்த 18 வயது பெண் மற்றும் ஒன்டாரியோவின் இயர் ஃபால்ஸைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>வேனில் பயணித்த வின்னிபெக்கைச் சேர்ந்த 49 வயது ஓட்டுநர், ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள் என 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வின்னிபெக் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
</p><p>இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T01:05:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் பொருளாதார தடையால் கியூபாவுக்கு ரூ.68 ஆயிரம் கோடி இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cuba-suffers-loss-68-000-crore-due-us-economic-1788915004"></link>
            <id>https://canadamirror.com/article/cuba-suffers-loss-68-000-crore-due-us-economic-1788915004</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கியூபா வெளியுறவு அமைச்சர் புருனோ ரொட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

அமெரிக்காவின் தொடர்ச்சியான பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகள் கியூபாவின் பொருளாதார நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>

குறிப்பாக, அமெரிக்கத் தடைகள் காரணமாக 2025ஆம் ஆண்டில் மட்டும் கியூபாவுக்கு 8.1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரொட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab9fc7e-880d-4144-a603-65a4f11580cd/26-6aa0ad3dbd304.webp' /></p><p> </p><p>இது முந்தைய ஆண்டை விட சுமார் 7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும், 2026ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட எண்ணெய் தடைகள் காரணமாக கியூபாவின் எரிபொருள் விநியோகமும் மின்சார உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இதன் விளைவாக நாடு முழுவதும் அடிக்கடி மின்வெட்டுகள் இடம்பெறுவதுடன், உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக சேமிப்பது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கியூபா அரசாங்கம் தெரிவித்து வருகிறது.&nbsp;</p><p>கியூபா மக்கள் நீண்ட நேர மின்வெட்டுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், இதனால் குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் ரொட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் கியூபா மக்களையே அதிகம் பாதிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அமெரிக்க நிர்வாகம் அந்தத் தடைகள் கியூபா அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காகவே விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.</p><p>இதேவேளை, கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இராஜதந்திர முன்னேற்றம் தற்போது முடங்கியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T00:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளில் 5.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/powerful-5-3-magnitude-earthquake-in-nepal-1788914322"></link>
            <id>https://canadamirror.com/article/powerful-5-3-magnitude-earthquake-in-nepal-1788914322</id>
            <summary type="text">ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பெருவெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நேபாளத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தில் சக்திவாய்ந்த நிலந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பெருவெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நேபாளத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
நேற்று இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக நேபாளத்தின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d84ad7f-5863-4ac1-85d4-d7554d88f514/26-6aa0aa93e7aeb.webp' /></p><p>தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 375 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள லோமன்தாங் பகுதியை மையமாகக் கொண்டு, இரவு 9.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் முஸ்தாங் மாவட்டத்தைத் தவிர, அண்டை மாவட்டங்களான மனாங், டோல்பா மற்றும் மியாக்டி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் தொடர்பில் இதுவரை உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p><p>

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதிகளில் நிலைமைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-09T00:38:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 மணி நேரம் பணயக்கைதி ; உயிர் தப்பிய சிறுமியின் வாழ்க்கைப் போராட்டம் 40 ஆண்டுகளுக்குப் பின் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/life-struggle-girl-who-survived-viral-40-years-1788911108"></link>
            <id>https://canadamirror.com/article/life-struggle-girl-who-survived-viral-40-years-1788911108</id>
            <summary type="text">1986ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி, விடுமுறைக்காக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தனியாகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, தாம் பயணித்த Pan Am 73 வான...</summary>
            <content type="html"><![CDATA[<p>1986ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி, விடுமுறைக்காக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தனியாகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, தாம் பயணித்த Pan Am 73 வானூர்தி கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கடத்தலுக்குப் பின்னர் பயணிகள் சுமார் 16 மணி நேரம் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தின்போது பயணிகள் வானூர்தியின் நடுப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b389c2d3-f37d-4be9-aee0-d2a6ba9eeaab/26-6aa09e05809c6.webp' /></p><p>

இந்த கொடூரமான சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வானூர்தி கடத்தப்பட்டிருந்த நிலையில், அவசரகால வெளியேறும் கதவு வழியாக தாம் தப்பியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.</p><p> வானூர்தியின் இறக்கையில் நின்றிருந்த தமக்கு பணிப்பெண் ஒருவர் உதவி செய்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வழிவகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எனினும், அந்தப் பயங்கரமான அனுபவம் தனது வாழ்க்கையை முடக்குவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன் ஒரு பகுதியாக, கரீபியன் கடலில் ஆழ்கடல் நீச்சல், சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு உள்ளிட்ட பல்வேறு சாகசப் பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தனது Instagram பக்கத்தில் காணொளி ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார்.</p><p>

“குணமடைதல் என்பது நடந்ததை மறந்துவிடுவது அல்ல. நாம் வாழத் தொடங்குவதற்கு முன்பே குணமடைய வேண்டும் என்ற அவசியம் இல்லை; நாம் வாழ்வதன் மூலமே குணமடைதல் இடம்பெறுகிறது” என்ற கருத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.</p><p>

அவரது இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
கடுமையான அனுபவத்தை எதிர்கொண்ட போதிலும், வாழ்க்கையை தைரியத்துடனும் மனவலிமையுடனும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் அவரது முயற்சிக்கு சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T23:45:23+00:00</updated>
        </entry>
    </feed>
