<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-06T22:42:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் வரிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு ; இறக்குமதியாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் மீள்கொடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/supreme-court-makes-sweeping-decision-on-trump-tax-1786052875"></link>
            <id>https://canadamirror.com/article/supreme-court-makes-sweeping-decision-on-trump-tax-1786052875</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த அதீத வரி நடவடிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த அதீத வரி நடவடிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பெரும் தொகை மீள வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களுக்கு அதிகளவிலான வரிகளை விதித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6f2faa6-7b3b-4917-b014-d693d30054df/26-6a75010d2eb7a.webp' /></p><p>இந்த வரி நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவின் சில மாகாணங்களும், பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
</p><p>
இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், குறித்த அளவிலான அதீத வரிகளை விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என தீர்ப்பளித்ததுடன், டிரம்ப் நிர்வாகம் விதித்த வரிகளை ரத்து செய்தது.
</p><p>
மேலும், அந்த வரிகளின் மூலம் இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை மீள வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
இதனையடுத்து, மொத்தமாக வசூலிக்கப்பட்ட 15.77 லட்சம் கோடி ரூபாய் தொகையில், இதுவரை சுமார் 60 சதவீதமான 9.50 லட்சம் கோடி ரூபாய் இறக்குமதியாளர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தகவலை அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு, உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
மேலும், மீதமுள்ள தொகைகளை திருப்பி வழங்குவதற்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அவையும் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T22:39:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேசத்தில் புதிய ஜனாதிபதி தேர்வு ; தேர்தல் திகதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bangladesh-elects-president-election-date-announce-1786054439"></link>
            <id>https://canadamirror.com/article/bangladesh-elects-president-election-date-announce-1786054439</id>
            <summary type="text">பங்களாதேசத்தின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான தேர்தல் வரும் 20ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பங...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேசத்தின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான தேர்தல் வரும் 20ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>

பங்களாதேச ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த முகமது ஷஹாபுதீன், தனது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில், கடந்த மாதம் 24ஆம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0f6903a-1043-479d-8e8c-cad500fa71b5/26-6a7507292721a.webp' /></p><p>முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த முகமது ஷஹாபுதீனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, நாட்டில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதி மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பங்களாதேச நாடாளுமன்ற கூட்ட அரங்கில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகள் வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பங்களாதேச அரசியல் சூழலில் முக்கியமான கட்டமாக இந்த ஜனாதிபதி தேர்தல் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-06T22:14:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதச் செயல்பாட்டிற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டவர் படையில் இருந்து நீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-armed-forces-member-charged-1786031062"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-armed-forces-member-charged-1786031062</id>
            <summary type="text">கனடாவில் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு வசதி செய்து கொடுத்ததாகக் கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட கியூபெக் பிராந்தியத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தற்போது க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு வசதி செய்து கொடுத்ததாகக் கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட கியூபெக் பிராந்தியத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தற்போது கனடிய ஆயுதப்படையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.</p><p> 
மார்க்-அவுரேல் சாபோட் என்பவரது பட விலகல் குறித்தான மேலதிக விவரங்களை வழங்கத் தேசிய பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஷெரில் ஃபாரஸ்ட் மறுத்துவிட்டார். </p><p>இந்தத் தகவல்கள் 'தனியுரிமைச் சட்டத்தின்' கீழ் பாதுகாப்பக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/642b5433-9f06-469f-a7e5-f6f46ec033a3/26-6a74abd89d635.webp' /></p><p> 
கியூபெக் சிட்டி பகுதியில் அரசிற்கு எதிரான தீவிரவாதச் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ஜூலை 2025 இல் ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸாரால் குற்றம் சாட்டப்பட்ட மூவரில் சாபோட்டும் ஒருவர் ஆவார். </p><p>
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு ஆயுதப் படையை உருவாக்கத் திட்டமிட்டதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வசதி செய்யத் தேவையான தீவிர நடவடிக்கைகளை எடுத்ததாகவும் பொலிஸ் திணைக்களம் குற்றம் சாட்டியிருந்தது. </p><p>
இதே வழக்கில் ஆயுதக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள நான்காவது சந்தேக நபர், இன்னமும் கனடிய ஆயுதப்படையில் உறுப்பினராக தொடர்கிறார்; எனினும் அவர் இராணுவப் பணிகளைச் செய்யவில்லை என்பதை செய்தித் தொடர்பாளர் ஃபாரஸ்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T18:57:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிஸ் 19-வது வட்டாரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது ; போதைப்பொருள் வலையமைப்புக்கு கடும் அடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/security-beefed-paris-19th-major-blow-drug-network-1786035454"></link>
            <id>https://canadamirror.com/article/security-beefed-paris-19th-major-blow-drug-network-1786035454</id>
            <summary type="text">பாரிஸ் மாநகரின் 19-வது வட்டாரத்தில் (19e Arrondissement) நீண்டகாலமாகத் தலைவிரித்தாடி வரும் &#039;க்ராக்&#039; (Crack) போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த காவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரிஸ் மாநகரின் 19-வது வட்டாரத்தில் (19e Arrondissement) நீண்டகாலமாகத் தலைவிரித்தாடி வரும் 'க்ராக்' (Crack) போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கைகளின் பலனாக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன், போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய சுமார் 1,940 பேர் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பாரிஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தொடருந்து நிலையங்களைச் சுற்றியுள்ள பதற்றமான சூழலைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8a9d0ce-6ecf-4a8e-b109-3949203c9880/26-6a74bcff804ee.webp' /></p><p>போதைப்பொருள் பாவனையால் அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாரிஸ் காவல்துறை (Préfecture de Police) விரிவான பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
</p><p>
இதன் ஒரு பகுதியாக, வீதிகளில் காவல்துறையினரின் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஆளில்லா வானூர்திகள் (Drones) மூலம் வான்வழிக் கண்காணிப்பும், நடமாடும் கண்காணிப்பு மையங்களும் (Postes d'accueil mobiles) களமிறக்கப்பட்டுள்ளன.</p><p>ரோசா-பார்க்ஸ் (Rosa Parks) தொடருந்து நிலையம், செசாரியா-எவோரா வீதி (Rue Cesaria-Évora) மற்றும் மக்டொனால்ட் நிழற்சாலை (Boulevard Macdonald) ஆகிய பகுதிகள் போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகம் கூடும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
இந்தப் பகுதிகளில் தினசரி முன்னெடுக்கப்படும் அதிரடிச் சோதனைகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்புகளின் காரணமாக நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> மீண்டும் அப்பகுதிகளில் ஒன்று கூட முயற்சிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து அகற்றப்படுவதால், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த இடையூறுகள் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பி.என்.பி பரிபாஸ் (BNP Paribas) வங்கி நிர்வாகமும் தனது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரோசா-பார்க்ஸ் தொடருந்து நிலையத்திற்கு அருகே தனியார் பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் அமர்த்தியுள்ளது.
</p><p>
நீண்டகாலமாக பாதுகாப்பு அச்சத்தில் வாழ்ந்து வந்த 19-வது வட்டார மக்களுக்கு, காவல்துறையின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-06T16:57:42+00:00</updated>
        </entry>
    </feed>
