<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-14T11:51:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் பயணிகள் ரயிலின் மீது ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-drone-attack-ukrainian-passenger-train-1786708007"></link>
            <id>https://canadamirror.com/article/russian-drone-attack-ukrainian-passenger-train-1786708007</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் பயணிகள் ரயிலின் இயந்திரம் மீது ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் பயணிகள் ரயிலின் இயந்திரம் மீது ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இந்தத் தாக்குதலில் ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15813f35-526a-45f7-8771-59e239e9f9b3/26-6a7f00289c006.webp' /></p><p>



தாக்குதலையடுத்து ரயிலின் முன்பகுதி தீப்பற்றி எரிந்த நிலையில், அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T11:44:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் கனமழை; 6 பேர் பலி... வீடுகளை இழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heavy-rains-in-japan-thousand-people-left-homeless-1786706107"></link>
            <id>https://canadamirror.com/article/heavy-rains-in-japan-thousand-people-left-homeless-1786706107</id>
            <summary type="text">&amp;nbsp; ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் இதுவரை சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் இதுவரை சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>


கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், 20,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9973c2af-c3ce-4a9a-9b04-2c82dcb6dd0b/26-6a7ef8bd9b9cc.webp' /></p><p>
</p><p>


மேலும், மோசமான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவின் நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 7,000 பயணிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T11:12:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவு லாரியில் ஒழிந்த டிரம்ப்; ஈரானிய ஊடகங்கள் கேலி! அமெரிக்காவிற்கு மாபெரும் அவமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-hid-in-a-food-truck-iranian-media-mocked-1786691766"></link>
            <id>https://canadamirror.com/article/trump-hid-in-a-food-truck-iranian-media-mocked-1786691766</id>
            <summary type="text">&amp;nbsp; அண்மையில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் போது, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தலுக்குப் பயந்து அமெரிக்க அதிபர் டொனால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அண்மையில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் போது, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தலுக்குப் பயந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) விமானத்திலிருந்து உணவு விநியோக லாரியில் (Catering Truck) ரகசியமாகத் தப்பிச் சென்ற சம்பவத்தை ஈரானிய அரசு ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன. </p><p>

ஈரானின் ராணுவ வலிமையைக் கண்டு டிரம்ப் அஞ்சி நடுங்குவதையே இந்நிகழ்வு வெளிப்படுத்துவதாகத் தெஹ்ரான் தொலைக்காட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/372b6ac6-7c5c-499f-82e3-e2e8ded6cbce/26-6a7ec0b79d3ce.webp' /></p><h2>அமெரிக்காவிற்கு நேர்ந்த மாபெரும் அவமானம்</h2><p>
</p><p>
துருக்கியில் டிரம்ப் தங்கியிருந்த ஹோட்டல் மற்றும் அவரது விமானத்தின் நடமாட்டங்களை ஈரானிய உளவுத்துறை துல்லியமாகக் கண்காணித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ரகசியச் சேவை அதிகாரிகள் டிரம்பை உணவு லாரி மூலம் மற்றொரு சிறிய ராணுவ விமானத்திற்கு மாற்றினர். </p><p>

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட ஈரானிய ஊடகங்கள், “ஈரானின் அச்சுறுத்தலால் டிரம்ப் உணவு லாரியில் ஒளிந்து தப்பியுள்ளார், இது அமெரிக்காவிற்கு நேர்ந்த மாபெரும் அவமானம்” எனக் கூறிப் புகைப்படங்கள் மற்றும் மீம்களைப் (Memes) பகிர்ந்து கேலி செய்து வருகின்றன.</p><p>

அதேவேளையில், ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) சர்வதேசக் கடல் பாதையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் வாதத்திற்கு ஈரான் கடும் மறுப்புத் தெரிவித்துள்ளது.</p><p>

 அதேசமயம் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றிலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது” என்ற டிரம்பின் அறிக்கையைத் தள்ளுபடி செய்துள்ள ஈரானியப் புரட்சிப் படை (IRGC) அதிகாரிகள், அப்பகுதியில் அமெரிக்கக் கடற்படையின் அதிகாரம் செல்லாது என்றும், கடல்சார் வான்வெளியும் கடல் பாதையும் தங்களது முழுக் கண்காணிப்பில் தான் இயங்கி வருகிறது என்றும் பதிலடி கொடுத்துள்ளனர்.</p><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்தச் சொல்லம்புப் போர் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

இந் நிலையில் டிரம்பின் பாதுகாப்பு விவகாரத்தை ஈரான் சர்வதேச அளவில் பகிரங்கமாகக் கேலி செய்து வருவது, அமெரிக்க அரசு மற்றும் வெள்ளை மாளிகை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T10:55:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 வருடங்களாக தாம் சகோதரிகள் என தெரியாது பழகிய நண்பிகள்; ஆச்சர்ய செய்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/friends-30-years-without-knowing-they-were-sisters-1786698595"></link>
            <id>https://canadamirror.com/article/friends-30-years-without-knowing-they-were-sisters-1786698595</id>
            <summary type="text">30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் சகோதரிகள் என்பது தெரியாமலேயே தோழிகளாக பழகியிருக்கிறார்கள்.</p><p> 

சமீபத்தில் டி.என்.ஏ சோதனையில் அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதும் அவர்கள் 30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து தத்துக் கொடுக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8e4c393-5d7f-4b2b-a243-b8ad82ffab3d/26-6a7edb650a4cd.webp' /></p><p>
 

இதையடுத்து இரு தோழிகளும் கட்டியணைத்து, கண்ணீர் மல்க தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

நாங்கள் இருவரும் முப்பது வருடங்களாக சகோதரிகளாகவே இருந்திருக்கிறோம்.</p><p> ஆனால் எங்களுக்கு அது தெரியவில்லை என உணர்ச்சி பொங்க அவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். 

இவர்கள் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-14T10:55:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேடியர் ஒருவருக்கு அரிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-man-gets-rare-liver-transplant-1786699644"></link>
            <id>https://canadamirror.com/article/canada-man-gets-rare-liver-transplant-1786699644</id>
            <summary type="text">வட அமெரிக்காவிலேயே முதன்முறையாக கனேடியர் ஒருவருக்கு ஒரு அரிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பொதுவாக, ஒருவர் கல்லீரல் தானம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட அமெரிக்காவிலேயே முதன்முறையாக கனேடியர் ஒருவருக்கு ஒரு அரிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>

பொதுவாக, ஒருவர் கல்லீரல் தானம் செய்யும்போது, மருத்துவர்கள் அந்த கல்லீரலை ஐஸில் வைத்து பாதுகாத்து, தகுதியான நோயாளி உடலில் அதை பொருத்துவார்கள்.
</p><p>
ஆனால், வட அமெரிக்காவிலேயே முதன்முறையாக கனேடியர் ஒருவருக்கு வித்தியாசமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்துள்ளார்கள் மொன்றியல் மருத்துவமனை ஒன்றின் மருத்துவர்கள்.
</p><p>
கியூபெக்கைச் சேர்ந்த ஜெரார்ட் (Gérard Landry, 65), 15 ஆண்டுகளாக கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோயால் அவதியுற்றுவந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac2773c-bc90-4362-a175-7076465eb07d/26-6a7edf7e37d84.webp' /></p><p>
இந்நிலையில், மொன்றியலிலுள்ள Centre hospitalier de l’Université de Montréal என்னும் மருத்துவமனையின் மருத்துவர்கள், ஜெரார்டுக்கு ex-vivo organ perfusion என்னும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரியவகை அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்துள்ளார்கள்.</p><p>

இந்த நவீன தொழில்நுட்பத்தின்மூலம், தானம் செய்யப்பட்ட ஒரு கல்லீரலை கருவி ஒன்றுடன் இணைப்பார்கள்.
</p><p>
ஐஸில் வைக்கப்படுவதற்கு பதிலாக, உடல் வெப்பநிலையை ஒத்த ஒரு வெப்பநிலையில் வைக்கப்படும் அந்த கல்லீரல், உடலுக்குள் எப்படி இயங்குமோ, அதேபோல, உடலுக்கு வெளியே, அதற்கு உள்ளே, ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருந்துகள் சேர்க்கப்பட்ட இரத்தம் அல்லது செயற்கை உடல் திரவங்கள் செலுத்தப்பட்டு, இயங்கும் நிலையிலேயே வைக்கப்படும்.
</p><p>
உடலுக்கு வெளியே அந்த கல்லீரல் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதை கண்காணித்து, பிரச்சினை இருந்தால் அதை சரி செய்து, தக்க நேரத்தில் அதை நோயாளியின் உடலில் பொருத்துவார்கள்.</p><p>

பொதுவாக, ஒரு நோயாளிக்கு பொருத்தப்பட்ட கல்லீரலில் பிரச்சினை ஏற்பட்டால், அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யவேண்டிவரலாம்.
</p><p>
ஆனால், இந்த அரிய முறையால், அப்படி மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்வதற்கான தேவை ஏற்படாமல் போவதுடன், குறைந்த நாட்களிலேயே நோயாளி குணமாகி வீட்டுக்குச் செல்லவும் முடியும்.
</p><p>
வட அமெரிக்காவிலேயே முதன்முறையாக ஜெரார்டுக்குதான் இந்த நவீன கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதுடன், அறுவை சிகிச்சைக்குப்பின், அவரது உடல் நிலையிலும் எதிர்பார்த்ததைவிட நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T09:27:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வே கால்பந்து வீரர் உருவம் பொறிக்கப்பட்ட கொக்கைன் பறிமுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cocaine-image-norwegian-footballer-seized-1786692229"></link>
            <id>https://canadamirror.com/article/cocaine-image-norwegian-footballer-seized-1786692229</id>
            <summary type="text">&amp;nbsp; ஈக்வடார் நாட்டின் கொலம்பிய எல்லைக்கு அருகே போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், நோர்வே நாட்டின் நட்சத்திரக் கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈக்வடார் நாட்டின் கொலம்பிய எல்லைக்கு அருகே போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், நோர்வே நாட்டின் நட்சத்திரக் கால்பந்து வீரர் எர்லிங் ஹாலாண்டின் (Erling Haaland) உருவம் பொறிக்கப்பட்ட சுமார் 469 கிலோகிராம் எடையுள்ள கொகைன் போதைப்பொருள் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>இந்தச் சம்பவத்தில் கொலம்பியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2f533cc-c731-4053-ba53-6a94879a7aae/26-6a7ec28775ed6.webp' /></p><h2>&nbsp;கொலம்பியாவைச் சேர்ந்த பெண்&nbsp; கைது</h2><p>
</p><p>
 லாரியில் இரகசிய அறையை அமைத்து ரகசியமாகக் கடத்தப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சர்வதேச் சந்தை மதிப்பு சுமார் $11 மில்லியன் டாலர்களுக்கும் மேல் (சுமார் ₹90 கோடி) இருக்கும் எனக் காவல் துறை தெரிவித்துள்ளது.</p><p>

பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த லாரி ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் பரிசோதித்த போது, அதன் அடியில் அமைக்கப்பட்டிருந்த ரகசியக் கட்டமைப்பிற்குள் 370 பச்சை நிறச் செவ்வக பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p>
 அந்தப் பாக்கெட்டுகள் ஒவ்வொன்றிலும் மான்செஸ்டர் சிட்டி மற்றும் நோர்வே அணிக்காக விளையாடி உலகளவில் புகழ்பெற்ற எர்லிங் ஹாலாண்டின் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. </p><p>சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தங்களது குறிப்பிட்ட ரகசிய நெட்வொர்க்குகள் மற்றும் வாடிக்கையாளர்களை அடையாளம் காட்டுவதற்காக இதுபோன்று சர்வதேச அளவில் பிரபலமான விளையாட்டு வீரர்கள் அல்லது பிரபலங்களின் உருவப் படங்களை ஸ்டிக்கர்களாகப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று என அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.</p><p>

அதேவேளை இதற்கு முன்னதாகவும் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் படம் ஒட்டப்பட்ட கொகைன் பாக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>
கொலம்பியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் இருந்து கடத்தப்படும் போதைப்பொருட்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் முக்கிய இடைநிலைப் பாதையாகப் (Logistical Hub) ஈக்வடார் பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><p> 

இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் ஈக்வடார் காவல் துறை சுமார் 80 டன் அளவிலான போதைப்பொருட்களைக் பறிமுதல் செய்துள்ளது. கால்பந்து உலகைக் தன் திறமையால் வசீகரித்த நட்சத்திர வீரரின் படம் போதைப்பொருள் பாக்கெட்டுகளில் இடம் பெற்றுள்ளமை பேசுபொருளாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T07:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பெண் ஒருவரை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-dog-owner-charged-after-mauling-left-woman-1786673715"></link>
            <id>https://canadamirror.com/article/bc-dog-owner-charged-after-mauling-left-woman-1786673715</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள போர்ட் மூடி பகுதியில், பெண் ஒருவரை இரண்டு பெரிய நாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தையடுத்து, அந்த நாய்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள போர்ட் மூடி பகுதியில், பெண் ஒருவரை இரண்டு பெரிய நாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தையடுத்து, அந்த நாய்களின் உரிமையாளர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
மெட்ரோ வான்கூவர் பகுதியில் உள்ள அந்த நகரத்தில், கடந்த மே 20 ஆம் திகதி பெண் ஒருவர் நாய்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
</p><p>காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். அவரது காயங்களின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், அவை மிகவும் "கடுமையானவை மற்றும் வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடியவை" என்று விவரிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48b0af45-94ab-4566-a2e3-ec61fbab3ad0/26-6a7e7a3593060.webp' /></p><p>
</p><p>தாக்குதலுக்கு முன்பே, அந்த நாய்கள் மிகவும் "ஆக்ரோஷமானவை" என நகர அதிகாரிகள் ஏற்கனவே வகைப்படுத்தியிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>அதன்படி, அந்த நாய்களுக்கு வாய்மூடி கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும், இச்சம்பவத்தின் போது நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்கப்பட்டிருக்கவில்லை என பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>
இதனையடுத்து, கவனக்குறைவாகச் செயல்பட்டு உடல்காயத்தை ஏற்படுத்தியதற்காக நாய் உரிமையாளர் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்ய பிரிட்டிஷ் கொலம்பியா அரசு வழக்குரைஞர் சேவை ஒப்புதல் அளித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T07:14:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பின் மூவருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/3-sentenced-to-death-in-the-us-after-16-years-1786690753"></link>
            <id>https://canadamirror.com/article/3-sentenced-to-death-in-the-us-after-16-years-1786690753</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க வரலாற்றில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நாளில் 3 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

அதன்படி டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க வரலாற்றில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நாளில் 3 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

அதன்படி டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய 3 மாகாணங்களில் இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட உள்ளன.
</p><p>


ஓட்டல் ஊழியரைக் கொலை செய்த என்டனி டேரல் (66), தனது காதலியை சுட்டுக்கொன்ற கார்லோஸ் (70) மற்றும் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ஜெரமி வில்லியம்ஸ் (42) ஆகிய 3 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1478a7ad-057c-4aff-97b5-6bc2cb6aca96/26-6a7ebcc2ec899.webp' /></p><p> இவர்களுக்கு ஊசி மூலம் விஷம் செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதேவேளை அமெரிக்காவில் இதற்கு முன்பு கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.</p><p> 

அதன்பிறகு சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் 3 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T06:56:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சில உணவு வகைகள் குறித்து எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/some-whole-foods-salsas-guacamoles-recalled-1786674275"></link>
            <id>https://canadamirror.com/article/some-whole-foods-salsas-guacamoles-recalled-1786674275</id>
            <summary type="text">&amp;nbsp;ஒன்டாரியோவில் இணையவழியில் விற்பனை செய்யப்பட்ட &#039;ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட்&#039; நிறுவனத்தின் சில சாஸ்கள், குவாக்கமோல் மற்றும் பிற ஆயத்த உணவுகளில் &#039;சால்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஒன்டாரியோவில் இணையவழியில் விற்பனை செய்யப்பட்ட 'ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட்' நிறுவனத்தின் சில சாஸ்கள், குவாக்கமோல் மற்றும் பிற ஆயத்த உணவுகளில் 'சால்மோனெல்லா' பாக்டீரியா தொற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவை திரும்பப் பெறப்படுவதாக கனடாவின் உணவுத் ஆய்வு முகவரகம் அறிவித்துள்ளது.</p><p>
மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார மிளகாய் மூலமாகவே இந்த பாக்டீரியா பரவியுள்ளது.</p><p> 
அமெரிக்காவில் ஏற்பட்ட நோய் பரவலுக்கும் இந்த மிளகாய்களே காரணம் எனக் கூறப்படும் நிலையில், அதன் தொடர்ச்சியாகவே கனடாவிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15bf9fa8-9665-4121-b034-7a91bc6516cd/26-6a7e7c64e009a.webp' /></p><p>எனினும், கனடாவில் இந்த உணவுகளை உட்கொண்டதால் இதுவரை யாருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை என்று கனடாவின் உணவுத் ஆய்வு முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>
திரும்பப் பெறப்படும் பொருட்களில் பல்வேறு வகையான 'சால்சா', 'குவாக்கமோல்', 'பிகோ டி காலோ' மற்றும் 'சிக்கன் கெசடிலா' போன்ற ஆயத்த உணவுகள் அடங்கும். இவை ஆகஸ்ட் 16 வரை காலாவதி திகதியைக் கொண்ட தயாரிப்புகளாகும்.
</p><p>சால்மோனெல்லா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவுகள் பார்ப்பதற்கோ அல்லது வாசனைக்கோ கெட்டுப்போனது போல் தெரியாது. </p><p>ஆனால், அவற்றை உட்கொள்வது உடல்நலக் குறைவை ஏற்படுத்தும். குறிப்பாக சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T06:12:39+00:00</updated>
        </entry>
    </feed>
