<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-20T15:45:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பாரிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/opp-seize-12m-in-drugs-weapons-and-vehicles-1787210591"></link>
            <id>https://canadamirror.com/article/opp-seize-12m-in-drugs-weapons-and-vehicles-1787210591</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள வால்போல் ஐலண்ட் ஃபர்ஸ்ட் நேஷன் பகுதியில் பல மாதங்களாக நடைபெற்ற தீவிர போதைப்பொருள் கடத்தல் தடுப்பு விசாரணையை அடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள வால்போல் ஐலண்ட் ஃபர்ஸ்ட் நேஷன் பகுதியில் பல மாதங்களாக நடைபெற்ற தீவிர போதைப்பொருள் கடத்தல் தடுப்பு விசாரணையை அடுத்து, லண்டன் நகரைச் சேர்ந்த 3 பேரை ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை கைது செய்துள்ளது.</p><p> 
'புராஜெக்ட் பிரேக்' எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் முடிவுகளை, வால்போல் ஐலண்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்துறையினர் முறைப்படி அறிவித்தனர்.</p><p> 
பல்வேறு தென்மேற்கு ஒன்ராறியோ சமூகங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில், சுமார் 1.2 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa51b19-a6ab-4df2-aadc-2b6a5224c69f/26-6a86ab61533e1.webp' /></p><p> ஃபெண்டானில், கொக்கைன், மெத்தாம்பெட்டமைன் ஆகிய ஆபத்தான போதைப்பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் 5 திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் சுமார் 20,000 கனடிய டாலர் ரொக்கம் என்பன மீட்கப்பட்டுள்ளன.</p><p>
கடந்த 2026 ஏப்ரல் மாதம் வால்போல் ஐலண்டில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியது.</p><p> லேம்ப்டன் மற்றும் சாதம்-கென்ட் பகுதிகளில் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த குழுவைக் குறிவைத்து ஜூலை 17 அன்று சோதனைகள் நடத்தப்பட்டு 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். </p><p>
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். </p><p>இந்த போதைப்பொருட்கள் கனடாவிற்குள்ளேயே விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>
சமூகத்தின் பாதுகாப்பைப் பேணவும், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என வால்போல் ஐலண்ட் ஃபர்ஸ்ட் நேஷன் தலைவர் லீலா தாமஸ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T13:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்கா தடைக்கு சீனா கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-strongly-condemns-us-sanctions-on-iran-1787230980"></link>
            <id>https://canadamirror.com/article/china-strongly-condemns-us-sanctions-on-iran-1787230980</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் &quot;பொருளாதார டி-டே&quot; பிரச்சாரத்தை சீனா கடுமையாக சாடியுள்ளதுடன், கூடுதல் பொருளாதாரத் தடைகள் நிலுவையில் உள்ள பிரச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் "பொருளாதார டி-டே" பிரச்சாரத்தை சீனா கடுமையாக சாடியுள்ளதுடன், கூடுதல் பொருளாதாரத் தடைகள் நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது என்றும் தெரிவித்துள்ளது.</p><p>



பீஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீனாவின் வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் லின் ஜியான் (Lin Jian), இதனை தெரிவித்துள்ளார்.



இதன்போது, தடைகளை விதிப்பதும் அழுத்தம் கொடுப்பதும் பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48deb9c5-8e7e-4287-9ac9-400a5f87cbb4/26-6a86fb05a28d2.webp' /></p><p> </p><p>



மேலும், பொறுப்பான நடவடிக்கைகளை எடுத்து, தூதரக மற்றும் அரசியல் வழிமுறைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க சம்பந்தப்பட்ட தரப்பினரை சீனா வலியுறுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
</p><p>


பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் (Kpler) வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, ஈரான் ஏற்றுமதி செய்யும் எண்ணெயில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை சீனா வாங்குவதால், இந்த நடவடிக்கைகள் சீனாவைப் பிரதானமாகப் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T13:00:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடையை விமர்சித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-criticizes-trump-s-new-economic-sanctions-1787219666"></link>
            <id>https://canadamirror.com/article/iran-criticizes-trump-s-new-economic-sanctions-1787219666</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடை பிரசாரத்தை ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) நிராகரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய பொருளாதாரத் தடை பிரசாரத்தை ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) நிராகரித்துள்ளார்.</p><p>



"பொருளாதார டி-டே" (Economic D-Day) என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கம் கொண்டது என்று அவர் விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b28073-44ae-463b-bc7d-dd2bc2e8e1b0/26-6a86ced9bd532.webp' /></p><p>
</p><p>


தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், வாஷிங்டனின் முன்னெப்போதும் இல்லாத கடன் மற்றும் அதிகரித்து வரும் வட்டிச் செலவுகள் மீதான கவனத்தை திசைதிருப்பவே இந்த நகர்வு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>



தோல்வியடைந்த கொள்கைகளை மீண்டும் பின்பற்றுவது மேலும் தோல்வியைத் மட்டுமே தரும் என்று எச்சரித்த அராக்சி, அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதம் உலகளாவிய பொருளாதாரத்திற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-20T09:51:58+00:00</updated>
        </entry>
    </feed>
