<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-18T12:25:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆள் மாறாட்டத்தில் சிக்கிய பிரிட்டன் பிரதமர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/british-pm-burnham-case-of-mistaken-identity-1787031998"></link>
            <id>https://canadamirror.com/article/british-pm-burnham-case-of-mistaken-identity-1787031998</id>
            <summary type="text">&amp;nbsp;பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளஆண்டி பர்ன்ஹாம் ( Andy Burnham ), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதன்மை உதவியாளரான சூசி வைல்ஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளஆண்டி பர்ன்ஹாம் ( Andy Burnham ), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதன்மை உதவியாளரான சூசி வைல்ஸ் (Susie Wiles) போல ஆள்மாறாட்டம் செய்த ஒருவருடன் குறுஞ்செய்திகளைப் பகிர்ந்து கொண்ட சம்பவம் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
ஜூலை மாத இறுதியில் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்ற ஆண்டி பர்ன்ஹாமிற்கு ( Andy Burnham ) , வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியான சூசி வைல்ஸின் பெயரில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1db1c29-2d42-4662-85c8-656cdc054347/26-6a83f1bfe964d.webp' /></p><p> 
அச்செய்தியை உண்மையானது என நம்பிய பிரதமர் பர்ன்ஹாம் ( Andy Burnham ), அந்த மர்ம நபருடன் சில குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொண்டுள்ளார்.
</p><p>
 இருப்பினும், உரையாடலின் போக்கில் எழுந்த சந்தேகத்தையடுத்து, பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் உடனேத் தகவல்தொடர்பை நிறுத்திவிட்டு பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வாஷிங்டனில் உள்ள பிரிட்டன் தூதரகம் உடனடியாக வெள்ளை மாளிகையைத் தொடர்புகொண்டு முறையிட்டது. மேலும், சூசி வைல்ஸின் கைபேசி அல்லது சாதனங்கள் ஏதேனும் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது. </p><p>

ஆனால், வெள்ளை மாளிகை தரப்பில் தங்களது அதிகாரிகளின் சாதனங்கள் எதுவும் ஊடுருவப்படவில்லை எனவும், இது தனிப்பட்ட ஆள்மாறாட்ட முயற்சி எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தகவல்தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் எதுவும் பரிமாறப்படவில்லை என்றும், வழக்கமான உரையாடல்களே நடைபெற்றதாகவும் பிரிட்டன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

“தேசியப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம்” என டவுனிங் ஸ்திரீட் வழக்கமான பதிலை அளித்துள்ள போதிலும், உயர்மட்டத் தலைவர்களிடையே நடைபெறும் இத்தகைய ஆள்மாறாட்ட சம்பவங்கள் இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T10:15:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fatality-confirmed-after-serious-collision-1787046676"></link>
            <id>https://canadamirror.com/article/fatality-confirmed-after-serious-collision-1787046676</id>
            <summary type="text">கனடாவின் லண்டன் நகரில், வெட்டரன்ஸ் மெமோரியல் பார்க்வே மற்றும் பிராட்லி அவென்யூ சந்திப்பில் கடந்த வெள்ளிக்கிழமை நேரிட்ட கொடூர கார் விபத்தில் ஒருவர் உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் லண்டன் நகரில், வெட்டரன்ஸ் மெமோரியல் பார்க்வே மற்றும் பிராட்லி அவென்யூ சந்திப்பில் கடந்த வெள்ளிக்கிழமை நேரிட்ட கொடூர கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லண்டன் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> 
முன்னதாக, இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p>
இந்நிலையில், விபத்துக்குள்ளான வாகனங்களில் ஒன்றில் பயணித்த பெண் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தற்போது தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/464ed245-167a-4134-abb2-671f9d540b5f/26-6a842b15af1d9.webp' /></p><p> </p><p>
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற மூன்று பேரின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை. </p><p>
ஆகஸ்ட் 14, 2026 அன்று இரவு 9:20 மணி முதல் 9:40 மணி வரை இந்த பகுதியில் பயணித்தவர்கள், விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் அல்லது தங்களது வாகன டேஷ்கேம், வீடுகள் மற்றும் கடைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் வைத்துள்ள பொதுமக்கள் லண்டன் காவல் துறைக்கோ அல்லது 'கிரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பிற்கோ உடனடியாகத் தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T09:55:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கான் தொடர்பில் பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pakistan-supreme-court-orders-imran-khan-hospital-1787045813"></link>
            <id>https://canadamirror.com/article/pakistan-supreme-court-orders-imran-khan-hospital-1787045813</id>
            <summary type="text">&amp;nbsp; பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உயர் நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


சிறையில் உள்ள இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பில் கவலைகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு உரிய வைத்திய சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தபோதே நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a9255cd-0b58-4def-9ea6-5a5ffdb072b4/26-6a8427b6c84e1.webp' /></p><p>
</p><p>


மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, இம்ரான் கானை வைத்தியசாலைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதுடன், அவரது உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை வழங்க வைத்தியர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>



மேலும், வைத்திய பரிசோதனை மற்றும் சிகிச்சையின்போது இம்ரான் கானின் சகோதரி மற்றும் தனிப்பட்ட வைத்தியர் ஆகியோர் உடனிருக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>


அடுத்த விசாரணை வரை அல்லது வைத்தியர்கள் அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறத் தகுதியானவர் எனத் தெரிவிக்கும் வரை இம்ரான் கான் வைத்தியசாலையில் தங்கியிருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T09:34:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் அங்கீகரிக்கப்படாத எடைக் குறைப்பு மருந்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drugmaker-warns-canadians-about-unapproved-1787045403"></link>
            <id>https://canadamirror.com/article/drugmaker-warns-canadians-about-unapproved-1787045403</id>
            <summary type="text">&amp;nbsp;அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான எடைக் குறைப்பு மருந்து கருப்புச் சந்தையில் விற்கப்படுவது குறித்து முன்னணி மருந்து உற்பத்தியாளரான &#039;லில்லி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான எடைக் குறைப்பு மருந்து கருப்புச் சந்தையில் விற்கப்படுவது குறித்து முன்னணி மருந்து உற்பத்தியாளரான 'லில்லி கனடா' கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
அந்நிறுவனம் சோதனைக் கட்டத்தில் வைத்துள்ள 'ரெடாட்ரூடைட்' என்ற மருந்து, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
ரெடாட்ரூடைட் மருந்து, ஹெல்த் கனடா அமைப்பாலோ அல்லது உலகளவில் வேறு எந்த ஒழுங்குமுறை ஆணையத்தாலோ மனித பயன்பாட்டிற்காக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deaefffe-6170-4b9f-9edc-f7e3bd099468/26-6a84261d6d580.webp' /></p><p> </p><p>
எனவே, இதை கனடாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ சட்டப்பூர்வமாக விற்க முடியாது. எனினும், சர்வதேச அளவில் இதற்கான கருப்புச் சந்தை இயங்கி வருகிறது என லில்லி கனடா தெரிவித்துள்ளது.
</p><p>அமெரிக்க மருந்து நிறுவனமான எலி லில்லி தயாரிக்கும் இந்த மருந்து, உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக உருவாக்கப்பட்டு வருகிறது. </p><p>
தற்போது 3-ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ள இம்மருந்து, உடல் எடையைக் குறைப்பதில் ஒரு "புரட்சிகரமான முன்னேற்றத்தை" வெளிப்படுத்தியுள்ளதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
</p><p>80 வாரங்கள் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில், டைப் 2 நீரிழிவு மற்றும் அதிக உடல் எடை கொண்ட நபர்கள் சராசரியாக 22.5 கிலோ (49.6 பவுண்ட்) வரை எடையைக் குறைத்துள்ளனர்.</p><p>
 மற்றொரு ஆய்வில், தீவிர உடல் பருமன் கொண்ட பெரியவர்கள் சராசரியாக 25.3 கிலோ (55.8 பவுண்ட்) எடையைக் குறைத்துள்ளது தெரியவந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T09:28:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தவறான தகவல்கள் மற்றும் வெளிநாட்டு தலையீடு குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-wildfires-being-exploited-by-bad-actors-1787042740"></link>
            <id>https://canadamirror.com/article/bc-wildfires-being-exploited-by-bad-actors-1787042740</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வீசிய கொடூரமான காட்டுத்தீயின் தாக்கம் தணிந்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வரும் நிலையில், இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வீசிய கொடூரமான காட்டுத்தீயின் தாக்கம் தணிந்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வரும் நிலையில், இந்த நெருக்கடியை சுயநலவாதிகளும் வெளிநாட்டுச் சக்திகளும் தவறாகப் பயன்படுத்துவதாகத் தகவல் தொடர்பு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்கள் மற்றும் சமூக வலைதள மீம்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. </p><p>இதன் பின்னணியில் நிதி லாபமும் அரசியல் தலையீடும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e9d7272-17e0-40e7-b16a-d3f60b195a72/26-6a841bb6697a5.webp' /></p><p>
கல்கரி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை இணைப் பேராசிரியர் ஜீன்-கிறிஸ்டோஃப் பூஷெர் இது குறித்துக் கூறுகையில்:
காட்டுத்தீ அல்லது நிலநடுக்கம் போன்ற அவசரகாலச் சூழல்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த பல தரப்பினர் முயல்கின்றனர்.</p><p> 
குறிப்பாக, கனடா அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதற்காக வெளிநாடுகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றன.</p><p>
அரசாங்கம் உக்ரைனுக்கு வழங்கும் நிதி உதவிக்கு பதிலாக உள்நாட்டு காட்டுத்தீயை அணைக்க 'வாட்டர் பாம்பர்' விமானங்களை வாங்கலாம் என பரப்பப்படும் பதிவுகள், ரஷ்யாவின் தூண்டுதலாக இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.</p><p>
சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் போலித் தகவல்களைப் பரப்பி வருமானம் ஈட்டுவதே பலரது முக்கிய நோக்கமாகும்.
</p><p>அழிவை வைத்துப் பணம் பண்ணுவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான வீடியோக்களை உருவாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என பிரிட்டிஷ் கொலம்பியாவின் வனத்துறை அமைச்சர் ரவி பார்மர் தெரிவித்தார்.
</p><p>செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
அறியப்படாத இணையதள கணக்குகள் மற்றும் போலி பதிவுகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T08:58:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fifa-chief-executive-officer-dismissed-1787042182"></link>
            <id>https://canadamirror.com/article/fifa-chief-executive-officer-dismissed-1787042182</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நிர்வாக அமைப்பின் வணிக உரிமைகள் சார்ந்த பிரிவில் ஒரு பங்கை விற்பனை செய்வதற்கான தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் சர்ச்சைக்குரிய திட்டத்தை வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நிர்வாக அமைப்பின் வணிக உரிமைகள் சார்ந்த பிரிவில் ஒரு பங்கை விற்பனை செய்வதற்கான தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் சர்ச்சைக்குரிய திட்டத்தை விமர்சித்த , ஃபிஃபாவின் (FIFA) தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (Kevin Lamour) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
ஃபிஃபாவின் தலைமைத்துவக் குழுவில் இணைவதற்கு முன்பு இன்ஃபான்டினோவின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவராகத் திகழ்ந்த மூத்த நிர்வாகி கெவின் லாமூர் (Kevin Lamour) அந்த அமைப்பிலிருந்து விலகிவிட்டதை, கால்பந்து விளையாட்டின் உலகளாவிய நிர்வாக அமைப்பு திங்களன்று (17) உறுதிப்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc15263c-462f-4f75-99e4-46b9d2e86ea3/26-6a8419882c8b3.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் அவரது பதவிக்காலம் திடீரென முடிவுக்கு வந்தது.கெவின் ஆற்றிய இரண்டு ஆண்டுகாலப் பணிக்காக ஃபிஃபா அவருக்கு நன்றி கூறியதுதடன், அவரது எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்தது.
</p><p>
லாமூர், நவம்பர் 2024-ல் ஃபிஃபாவின் உயர்மட்டத் தலைமைத்துவக் குழுவில் இணைந்தார்.

உலகக் கிண்ணம் மற்றும் பிற முக்கியப் போட்டிகள் தொடர்பான உரிமைகள் உள்ளிட்ட, ஃபிஃபாவின் மிகவும் அதிக வருவாய் ஈட்டித் தரும் சொத்துகளை உள்ளடக்கிய ஒரு புதிய வணிக அமைப்பை உருவாக்குவதற்கான இன்ஃபான்டினோவின் திட்டங்களுக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் சூழலில், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-18T08:33:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; இரு மாணவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shooting-at-a-philippine-school-2-students-killed-1787040492"></link>
            <id>https://canadamirror.com/article/shooting-at-a-philippine-school-2-students-killed-1787040492</id>
            <summary type="text">&amp;nbsp; பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சாம்போங்கா நகரின் உயர்நிலைப் பாடசாலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/253907e6-d106-4b40-ad03-8d5162d4c086/26-6a8412ee6b9f3.webp' /></p><p>

துப்பாக்கியுடன் பாடசாலைக்குள் புகுந்த மாணவர் ஒருவர், மாணவர்கள் சிலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், பின்னர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் அந்த நகர முதலவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தத் துப்பாக்கி பிரயோகத்தில் மற்றுமொரு மாணவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவத்தை அடுத்து பாடசாலை வளாகத்தை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த காவல்துறை, நிலைமை தற்போது சீரடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.</p><p>

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-18T08:05:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-tsunami-threat-to-bc-after-magnitude-46-1787039954"></link>
            <id>https://canadamirror.com/article/no-tsunami-threat-to-bc-after-magnitude-46-1787039954</id>
            <summary type="text">&amp;nbsp;அலாஸ்கா அருகே பதிவான தொடர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அவசரக்கால மேலாண்மை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அலாஸ்கா அருகே பதிவான தொடர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அவசரக்கால மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
அலாஸ்காவின் கொடியாக் நகருக்கு தென்மேற்கே 161 கிலோமீட்டர் தொலைவில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12:39 மணிக்கு 4.6 ரிக்டர் அளவில் இந்நிலநடுக்கம் பதிவானதாக மாகாணத்தின் 'EmergencyInfoBC' இணையதளம் தெரிவித்துள்ளது.</p><p> 
பூமிக்கு அடியில் 58 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 
கொடியாக் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிலர் நில அதிர்வை உணர்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f472887-6e3e-4f95-82aa-46d4033044f0/26-6a8410d478710.webp' /></p><p> 
ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், இந்தப் பிராந்தியத்திற்கு சுனாமி ஆபத்து எதுவுமில்லை என அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> 
அலாஸ்கா நிலநடுக்க மையத்தின் தகவல்படி, இப்பகுதியில் ஏற்படும் சக்திவாய்ந்த நில அதிர்வுகளுக்கு 'அலூசியன் மேகாதிரஸ்ட்' சப்டக்ஷன் மண்டலமேமுக்கிய காரணமாகும். </p><p>முன்னதாக 2020-இல் 7.8 ரிக்டர் அளவிலும், 2021-இல் 8.2 ரிக்டர் அளவிலும் பேரழிவு நிலநடுக்கங்கள் இங்கு பதிவாகியுள்ளன.</p><p> 
வட அமெரிக்க தட்டிற்கு அடியில் பசிபிக் தட்டு சரிந்து நழுவுவதனாலேயே இந்தப் பகுதியில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T07:58:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/16-year-old-girl-shot-dead-in-canada-1787039561"></link>
            <id>https://canadamirror.com/article/16-year-old-girl-shot-dead-in-canada-1787039561</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இளம்பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பொலிசார் குற்றவாளியை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

கனடாவில் ஆல்பர்ட்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இளம்பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பொலிசார் குற்றவாளியை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.</p><p>

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73359615-8bba-48dd-9ca9-bdc01f67d9ef/26-6a840f4b289c4.webp' /></p><p>
பொலிசார் அந்த வீட்டுக்கு விரைந்த நிலையில், அங்கு படுகாயமடைந்த நிலையில் 16 வயதுப்பெண்ணொருவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
</p><p>
அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்.
</p><p>
அந்தப் பெண்ணின் பெயர் ஜாஸ்மின் தேசி என்பதும் அவருக்கு இரண்டு தங்கைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் யாருக்காவது தகவல் ஏதேனும் தெரியுமானால், அல்லது, தங்கள் வாகனங்களில் உள்ள கமெராக்களில் இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் ஏதேனும் பதிவாகியிருக்குமானால், தங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T07:52:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 டாலர்கள் மட்டுமே கட்டணம் ; ‘X1’ எலக்ட்ரிக் விமானம் படைத்த சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/27-minute-just-electric-aircraft-historic-record-1787031505"></link>
            <id>https://canadamirror.com/article/27-minute-just-electric-aircraft-historic-record-1787031505</id>
            <summary type="text">&amp;nbsp;விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, உலகின் மிகப்பெரிய பேட்டரி மூலம் இயங்கும் ‘X1’ எலக்ட்ரிக் விமானம் தனது முதலாவது சோதனையோட்டப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, உலகின் மிகப்பெரிய பேட்டரி மூலம் இயங்கும் ‘X1’ எலக்ட்ரிக் விமானம் தனது முதலாவது சோதனையோட்டப் பறப்பை வெற்றி கரமாக நிறைவு செய்துள்ளது.</p><p> 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிளாட்ஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 27 நிமிடப் பறப்பிற்கு, வெறும் $5 டாலர்கள் மட்டுமே மின்சாரக் கட்டணமாகச் செலவாகியுள்ளது விமானப் போக்குவரத்துத் துறையை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0c7f7bc-c203-4c4d-b105-8b98d5a12d75/26-6a83efd3105ba.webp' /></p><h2>&nbsp; வியப்பில் விமானப் போக்குவரத்துத் துறை&nbsp;</h2><p>
</p><p>
ஸ்வீடனில் தொடங்கப்பட்டு அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் Heart Aerospace நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ‘X1’ சோதனை விமானம், சுமார் 11 டன்னுக்குக் (11,340 கிலோ) அதிகமான எடையுடன் 32 மீட்டர் இறக்கையளவைக் கொண்டுள்ளது. </p><p>

நான்கு சக்திவாய்ந்த எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் இயக்கப்பட்ட இந்த விமானம், தரைவழி இயக்கம் (Taxiing), டேக் ஆஃப் மற்றும் தரையிறக்கம் உட்பட 27 நிமிடங்கள் வான்வெளியில் பறந்து 1,100 அடி உயரத்தை எட்டிச் சாதனை படைத்தது.
</p><p>
எரிபொருள் விலையும் விமானக் கட்டணங்களும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வரும் தற்போதைய சூழலில், $5 டாலர் மட்டுமே மின்சாரச் செலவானது மிகச்சிறந்த மாற்றாகப் பார்க்கப்படுகிறது.
</p><p>
 இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 30 பயணிகள் பயணிக்கக்கூடிய ‘ES-30’ என்ற கமர்ஷியல் ஹைபிரிட்-எலக்ட்ரிக் விமானத்தைத் தயாரிப்பதே ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் முதன்மை இலக்காகும். </p><p>இந்த ‘ES-30’ விமானம் முழு எலக்ட்ரிக் முறையில் 200 கிலோமீட்டர் தூரமும், ஹைபிரிட் முறையில் 800 கிலோமீட்டர் தூரமும் பறக்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
</p><p>
இந்தச் சோதனைப் பறப்பில் பயன்படுத்தப்பட்ட $5 டாலர் கட்டணம் என்பது வெறும் மின்சாரப் பயன்பாட்டிற்கானது மட்டுமே என்றும், விமானப் பராமரிப்பு, விமானிகள் சம்பளம் மற்றும் விமான நிலையக் கட்டணங்கள் இதில் அடங்காது என்றும் கூறப்பட்டாலும், வழக்கமான ஜெட் எரிபொருளுடன் ஒப்பிடுகையில் இது இயக்கச் செலவை (Operating Costs) 40 சதவீதத்திற்கும் மேல் குறைக்கும்.</p><p>

 2031-ஆம் ஆண்டிற்குள் பயணிகள் சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள இந்த எலக்ட்ரிக் விமானங்கள், எதிர்காலப் பசுமை விமானப் போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-18T07:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகள் தொடர்பில் மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/growing-trend-among-new-parents-1787034395"></link>
            <id>https://canadamirror.com/article/growing-trend-among-new-parents-1787034395</id>
            <summary type="text">&amp;nbsp;சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான மருத்துவத் தகவல்கள் காரணமாக, பிறந்த குழந்தைகளுக்கு &#039;வைட்டமின் கே&#039; ஊசி போடுவதை மறுக்கும் பெற்றோரின் எண்ணிக்கை அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான மருத்துவத் தகவல்கள் காரணமாக, பிறந்த குழந்தைகளுக்கு 'வைட்டமின் கே' ஊசி போடுவதை மறுக்கும் பெற்றோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இது குழந்தைகள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்றும் மருத்துவ உலகம் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
இதுகுறித்து டொராண்டோவில் உள்ள சன்னிபுரூக் மருத்துவமனையின் பிறந்த குழந்தைகள் நல நிபுணர் டொக்டர் யுஜின் என்ஜி தெரிவிக்கையில், "இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பிறந்த குழந்தைகளுக்கு இயல்பாகவே இரத்த உறைவுக்குத் தேவையான 'வைட்டமின் கே' சத்து குறைவாகவே இருக்கும்.
இந்நிலையைக் கட்டுப்படுத்தத் தவறினால், குழந்தைகளுக்கு மூளை உட்பட உடலின் பல்வேறு பகுதிகளில் கடுமையான இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d5675d3-7593-4b0d-8865-0073faf30c91/26-6a83fb1c4e93c.webp' /></p><p>
</p><p>வைட்டமின் கே குறைபாட்டால் ஏற்படும் இரத்தப்போக்கு, குழந்தைகளுக்கு மூளையில் இரத்தப்போக்கு ஏற்படும் அபாயத்தை 3 மடங்கு உயர்த்துகிறது என டாக்டர் என்ஜி எச்சரிக்கிறார்.
கனடிய சிறுவர் மருத்துவச் சங்கம் (CPS), குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே இந்த வைட்டமின் கே ஊசியைச் செலுத்தப் பரிந்துரைக்கிறது.</p><p>
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இது நடைமுறையில் இருந்தாலும், அண்மைக்காலமாக இதை மறுக்கும் பெற்றோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
</p><p>சுவீடனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், 2006 முதல் 2021 வரையிலான காலத்தில் ஊசியை மறுத்த பெற்றோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>ஊசியில் உள்ள பொருட்கள், பதப்படுத்திகள் மற்றும் லுகேமியா (இரத்தப் புற்றுநோய்) ஏற்படும் என்ற முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகளைப் பெற்றோர் நம்புகின்றனர்.
</p><p>அதிக அளவில் மருந்தைப் பயன்படுத்தும் பெரியவர்களுக்கு ஏற்படும் அரிதான தீவிர பக்கவிளைவுகள் குறித்த எச்சரிக்கைகளைச் சுட்டிக்காட்டி அச்சம் பரப்பப்படுகிறது. </p><p>ஆனால், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் குறைந்தளவு டோஸினால் இத்தகைய பக்கவிளைவுகள் ஏற்படுவது மிகவும் அபூர்வமானது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T06:33:55+00:00</updated>
        </entry>
    </feed>
