<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-08T03:33:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக நாடுகளிடம் ஈரானின் கோரிக்கை ; அமெரிக்காவிற்கு காத்திருக்கும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-s-appeal-to-world-nations-1788828274"></link>
            <id>https://canadamirror.com/article/iran-s-appeal-to-world-nations-1788828274</id>
            <summary type="text">அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.

ஈரானின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.
</p><p>
ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ce44754-f7ea-4444-ad6d-34cd4ed8cb62/26-6a9f5a738d1de.webp' /></p><p>

OIC என்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் புதிய பொதுச் செயலாளரான இஸ்மாயில் உல்ட் ஷெய்க் அகமதுடன் (Ismail Ould Cheikh Ahmed) தொலைபேசியில் உரையாடியபோது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p>

பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்தும், ஈரானின் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் இதன்போது OIC தலைவரிடம் அராக்சி தனது அதிருப்தியை பகிர்ந்து கொண்டார்.
</p><p>
பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான சூழலை எதிர்கொள்ள இஸ்லாமிய நாடுகள் யாவும் தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அராக்சி இந்த தொலைபேசி உரையாடலின்போது வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-08T01:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்து மதக் குழுவினரின் வருகையால் புறக்கணிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் ; மூடப்பட்ட ஈபிள் கோபுரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ignored-female-staff-eiffel-tower-closed-1788830004"></link>
            <id>https://canadamirror.com/article/ignored-female-staff-eiffel-tower-closed-1788830004</id>
            <summary type="text">பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் லிஸ்டில் ஈபிள் கோபுரம் நிச்சயம் இருக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் லிஸ்டில் ஈபிள் கோபுரம் நிச்சயம் இருக்கும். ஆனால் நேற்று (திங்கள்கிழமை) ஈபிள் டவர் திடீரென மூடப்பட்டது. </p><p>பிரான்ஸில் புதிய கோயில் திறப்பு விழாவிற்காக வந்த சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) அமைப்பைச் சேர்ந்த 100 பேர் அடங்கிய குழுவினர் கடந்த சனிக்கிழமை ஈபிள் கோபுரத்தை பார்வையிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/934f31e0-ddf0-45b1-ae97-e0c08ba73946/26-6a9f613656654.webp' /></p><p>

இந்தக் குழுவினர் செல்லும்போது, ஈபிள் கோபுரத்தில் பணிபுரியும் பெண் ஊழியகர்கள் ஷிப்டில் இருந்து நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆண் ஊழியர்கள் மட்டுமே இருக்கும்படி செய்துள்ளது நிர்வாகம்.
</p><p>
இந்து மதக் குழுவினரின் வருகையின் போது, பெண் ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறி நேற்று ஊழியர்கள் நேற்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>

இதற்குக் காரணமாக ஈபிள் கோபுர சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று மூடப்பட்டுள்ளது.</p><p>
ஈபிள் டவரை நிர்வகிக்கும் 'SETE' நிறுவனம், "பெண்களுடனான தொடர்பை குறைக்குமாறு இந்து அமைப்பின் குழுவினர் கோரிக்கை விடுத்தது உண்மைதான், ஆனால் அந்த நிபந்தனையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது" என தன் தவறை ஒப்புக்கொண்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பாரிஸ் BAPS கோயில் நிர்வாகம், "நாங்கள் யாருடைய பிரவேசத்தையும் தடுக்கவில்லை.

மற்ற பார்வையாளர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மட்டுமே நேரத்தை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டோம். பரஸ்பர மரியாதையையே நாங்கள் நம்புகிறோம்" எனக் கூறி மன்னிப்பு கோரியுள்ளது.</p><p>
பாரிஸ் மேயர் இமானுவேல் கிரிகோயர் கூறுகையில், "பெண்களை ஒதுக்கி வைக்கும் இத்தகைய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரெஞ்சு மதிப்பீடுகளுக்கு எதிரானது" எனக் கூறி இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>

பிரான்ஸ் தேசிய பேரவைத் தலைவர் யேல் பிரவுன் பிவெட்கூறுகையில், "வெளிநாட்டுப் பார்வையாளர்களின் கோரிக்கைகளுக்காக பெண்கள் ஒதுங்கி நிற்க வேண்டும் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என சாடியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-08T01:13:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் நடுவீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 வயது இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/20-year-old-man-shot-dead-in-france-street-1788825131"></link>
            <id>https://canadamirror.com/article/20-year-old-man-shot-dead-in-france-street-1788825131</id>
            <summary type="text">பிரான்சின் எசோன்&amp;nbsp; மாவட்டத்திற்கு உட்பட்ட க்ரினி பகுதியில்&amp;nbsp; இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சின் எசோன்&nbsp; மாவட்டத்திற்கு உட்பட்ட க்ரினி பகுதியில்&nbsp; இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>

'க்ரினி 2' (Grigny 2) குடியிருப்புப் பகுதியிலுள்ள 'சுர்கூப்' (Square Surcouf) சதுக்கத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c51b6b-c245-46f3-ae7d-afa5d61b662c/26-6a9f4e2d9abe1.webp' /></p><p> </p><p>போதைப்பொருள் விற்பனை நடைபெறும் இடத்திற்கு அருகாமையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>குறைந்தது ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் படுகாயமடைந்த குறித்த இளைஞர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் அவசர மருத்துவப் பிரிவினர் மீட்பு மற்றும் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். </p><p>துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் அல்லது நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவம் குறித்த விசாரணைகளை எவ்ரி (Évry) அரச வழக்குத்தொடுனர் அலுவலகம் (Parquet) ஆரம்பித்துள்ளதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் விசேட குற்றங்களுக்கு எதிரான காவல் பிரிவினரிடம் (DCOS) மேலதிக விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-07T23:52:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிநவீன ஏவுகணை அழிப்பு கப்பலால் உலகை அச்சத்தில் ஆழ்த்தும் வடகொரியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/north-korea-alarms-with-new-missile-destroyer-1788817250"></link>
            <id>https://canadamirror.com/article/north-korea-alarms-with-new-missile-destroyer-1788817250</id>
            <summary type="text">அணுசக்தி தடுப்பு காவல்படையின் ஒரு பகுதியாக, 5,000 டன் எடைகொண்ட &#039;காங் கோன்&#039; என்ற அதிநவீன வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு கப்பலை வடகொரியா தனது கடற்படையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அணுசக்தி தடுப்பு காவல்படையின் ஒரு பகுதியாக, 5,000 டன் எடைகொண்ட 'காங் கோன்' என்ற அதிநவீன வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு கப்பலை வடகொரியா தனது கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளது.</p><p>வடகொரியா மற்றும் அமெரிக்கா - தென்கொரியா இடையே கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3df5d16d-ecb5-42c3-8914-7a15c2a33c84/26-6a9f2f646ded4.webp' /></p><p> இந்த சூழ்நிலையில், தனது ராணுவ பலத்தை உலகிற்கு நிரூபிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து புதிய ஆயுதங்களையும், போர்க்கப்பல்களையும் அறிமுகம் செய்து வருகிறது.</p><p> இதன் ஒரு பகுதியாக, வடகொரியாவின் கிழக்குக் கடல் கடற்படைப் பிரிவில் 'காங் கோன்' என்ற புதிய போர்க்கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. </p><p>'சோ ஹியோன்' வகையை சேர்ந்த இரண்டாவது போர்க்கப்பலான இது, பல கட்ட போர் மற்றும் நம்பகத்தன்மை சோதனைகளைக் கடந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>
இக்கப்பலை கடற்படையில் இணைக்கும் விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் நேரில் கலந்துகொண்டார். </p><p>அப்போது பேசிய அவர்:"போர் காலங்களில் அணுசக்தி போர் அமைப்புகளை உடனடியாக இயக்கி, எதிரிகளுக்கு பதிலடி தாக்குதல்களை நடத்த வேண்டும்.


உத்தரவு
அதற்கு ஏதுவாக ஒட்டுமொத்த கடற்படையையும் அணுசக்தி ஆயுதம் ஏந்திய படையாக மாற்ற வேண்டும்."என்று ராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-07T23:30:52+00:00</updated>
        </entry>
    </feed>
