<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-18T22:39:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் பரபரப்பு ; ஐரோப்பிய அதிகாரிகளை குறிவைக்கும் ரஷ்ய ட்ரோன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-drones-targeting-european-officials-ukrane-1789771019"></link>
            <id>https://canadamirror.com/article/russian-drones-targeting-european-officials-ukrane-1789771019</id>
            <summary type="text">கீவ் நகருக்கு வந்து செல்லும் உக்ரைன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு ரஷ்யா ஆளில்லா வானூர்திகள் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீவ் நகருக்கு வந்து செல்லும் உக்ரைன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு ரஷ்யா ஆளில்லா வானூர்திகள் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
</p><p>
ரஷ்யாவின் தரைவழிப் போர் தடுமாறி வரும் சூழலில் இந்தத் தாக்குதல்கள் வந்துள்ளன. </p><p>உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்யா முன்னர் கைப்பற்றியிருந்த 85 சதுர கிலோமீட்டர் (33 சதுர மைல்) நிலப்பரப்பை, லைமன் நகரைக் கைப்பற்றும் முயற்சியின் போது இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f9e79b0-bf9a-4081-90d9-dd7414c51d8d/26-6aadbd0d3efd8.webp' /></p><p>செப்டம்பர் 13 அன்று, போலந்து எல்லையிலிருந்து 5 கி.மீ (3 மைல்) தொலைவில் உக்ரைனின் தொடருந்து இயந்திரம் மீது ரஷ்ய ஆளில்லா வானூர்திகள் தாக்குதல் நடத்தின.</p><p>

கீவில் நடைபெற்ற யால்டா ஐரோப்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு வோர்சாவுக்குத் திரும்பிய ஐரோப்பிய அதிகாரிகளை இது ஆபத்தில் ஆழ்த்தியது.
</p><p>
பிரித்தானின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய அரசியல், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த தொடருந்தில் பயணம் செய்தனர்.</p><p>

"இந்த சம்பவம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் கதவுகளை நேரடியாகத் தட்டும் புதினின் பயங்கரவாதம்" என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மற்றொரு சம்பவத்தில், செப்டம்பர் 8 அன்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸியின் வானூர்தி கிசினாவ் நகரிலிருந்து புறப்படத் தயாரானபோது ரஷ்ய ஆளில்லா வானூர்தி ஒன்று மோல்டோவா வான்வெளிக்குள் நுழைந்து வானூர்தி போக்குவரத்தைத் தாமதப்படுத்தியது.</p><p>

இந்த தாக்குதல் ஸெலென்ஸ்கியின் வானூர்தியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும், மோல்டோவா அதனை உறுதிப்படுத்தவில்லை.</p>]]></content>
            <updated>2026-09-18T22:37:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஹவுதி ரகசிய பேச்சுவார்த்தை ; ஏமனில் தொடரும் பதற்றமும் புதிய பூகோள அரசியலும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/secret-us-houthi-talks-continuing-tensions-yemen-1789770448"></link>
            <id>https://canadamirror.com/article/secret-us-houthi-talks-continuing-tensions-yemen-1789770448</id>
            <summary type="text">ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், அமெரிக்க அதிகாரிகளும் ஹவுதி (houthi) பிரதிநிதிகளும் கடந்த வார இறுதியில் இரகசியமாகச் சந்தித்துப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், அமெரிக்க அதிகாரிகளும் ஹவுதி (houthi) பிரதிநிதிகளும் கடந்த வார இறுதியில் இரகசியமாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.</p><p>

ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கம் ஏமனில் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7ab49a5-47dd-4517-abcf-0af08dbc49f8/26-6aadbad217930.webp' /></p><p>ஏமனின் செங்கடல் கடற்கரைப் பகுதிகள் மற்றும் மிக முக்கியமான மூலோபாயத் தீவுகள் தற்போது ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.
</p><p>
அத்துடன் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பகுதியான பாப் அல்-மந்தேப் நீரிணையை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
</p><p>
அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கும் எண்ணம் தனக்கில்லை என்றும், சவுதி அரேபியாவுடன் தொடர்புடைய கப்பல்கள் மீது மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் ஹவுதிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளனர்.
</p><p>
ஹவுதிகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்துமாறு சவுதி இளவரசர் மொஹமட் பின் சல்மான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.
</p><p>
ஆனால், அமெரிக்கா நேரடித் ராணுவத் தலையீட்டை விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

எனினும், சவுதி அரேபியாவுக்காகத் தான் தலையிடத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c2d2db2-3b5c-4830-8723-f6c63bc0b94b/26-6aadbad2cd68f.webp' /></p><p>இருப்பினும், காஸா மற்றும் லெபனான் மோதல்களுக்கு மத்தியில் இது அரபு உலகில் சவுதிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் தயக்கம் நிலவுகிறது.
</p><p>
ஈரானுடன் ஏற்கனவே நீண்ட காலமாகத் தொடரும் போரினால் அமெரிக்காவின் ஆயுதக் களஞ்சியங்கள் குறைந்துள்ளதாகவும், நவம்பர் மாதம் இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ளதால் ட்ரம்ப் புதிய போரைத் தவிர்க்க விரும்புவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p>

இதற்கிடையில், அமெரிக்கா மீதான நம்பகத்தன்மை குறைந்ததால், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் இணைந்து புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டு தனது பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-18T22:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க வெள்ளை மாளிகையில் CNN மற்றும் சில ஊடகங்களுக்கு தடை ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ban-on-cnn-and-other-media-trump-announcement-1789769819"></link>
            <id>https://canadamirror.com/article/ban-on-cnn-and-other-media-trump-announcement-1789769819</id>
            <summary type="text">CNN, MSOW மற்றும் Politico ஆகிய ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் நுழைய உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அறிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>CNN, MSOW மற்றும் Politico ஆகிய ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் நுழைய உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அறிவித்துள்ளார்.</p><p>நேற்று அன்று தனது நிர்வாகத்தின் மீதான ஊடகங்களின் செய்தி வெளியீடு குறித்து தனது அதிருப்தியை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டதை அடுத்தே இந்த தடையை அவர் அறிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dd43275-fe2a-4b1a-b409-f36c1372a7ae/26-6aadb85d44953.webp' /></p><p>இந்த ஊடகங்கள் "பொய்ச் செய்திகளைப் பரப்புவதாகக்" குறிப்பிட்ட ட்ரம்ப், தன்னைப் பற்றியும் தனது நிர்வாகத்தைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் அவை செய்திகளைத் தாங்களாகவே புனைந்து கூறுவதாகக் குற்றம் சாட்டினார்.</p><p>

"இதனைப் பின்பற்றி மற்ற போலிச் செய்தி ஊடகங்களும் தடை செய்யப்படும்" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><p>
இதற்கு முன்பும் சில ஜனாதிபதிகள் ஊடகச் செய்திகள் மீது கோபம் அடைந்துள்ளனர்.</p><p>

எனினும் அவர்கள் வெள்ளை மாளிகைக்குள் ஊடகங்களை தடை செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-18T22:17:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த அத்தையைக் கழுத்தறுத்துக் கொன்ற 7 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/7-year-old-boy-slits-own-aunt-throat-and-kills-her-1789747083"></link>
            <id>https://canadamirror.com/article/7-year-old-boy-slits-own-aunt-throat-and-kills-her-1789747083</id>
            <summary type="text">பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த அத்தையை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த அத்தையை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சென்-மோர்-டெ-போஸ் (Saint-Maur-des-Fossés) நகரில் இன்று வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 18) அதிகாலை சுமார் 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். </p><p>அப்போது, வீதியில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், மற்றொரு பெண் துணியொன்றைப் பயன்படுத்தி அவரது கழுத்துப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து வெளியேறிய இரத்தத்தை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்ததையும் காவல்துறையினர் அவதானித்துள்ளனர்.
</p><p>
அவர்களுக்கு அருகில் சிறுவன் ஒருவனும் நின்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d1c20f-cd37-4965-af6c-daec0b1c07e3/26-6aad5f8ce5041.webp' /></p><p>பலத்த காயமடைந்திருந்த பெண்ணுக்கு அவசரகால மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முயன்ற போதிலும், அதிகளவான இரத்தப்போக்கு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவர் நதியா எஸ். (Nadia S.) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நதியாவுக்கு உதவி செய்ய முயன்ற பெண் அவரது சொந்த சகோதரியான யாஸ்மினா எஸ். (Yasmina S.) என்பதும், அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தது யாஸ்மினாவின் 7 வயது மகன் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p>விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, வியாழக்கிழமை இரவு யாஸ்மினாவின் வீட்டிற்கு நதியா தங்குவதற்காக சென்றுள்ளார்.
</p><p>
இதன்போது, நள்ளிரவு வேளையில் தலைமுடியை நேராக்குவது (Hair straightening) தொடர்பாக இரு சகோதரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வாக்குவாதம் பின்னர் கடும் சண்டையாக மாறியதுடன், நதியா தனது சகோதரியான யாஸ்மினாவை தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்தச் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த யாஸ்மினாவின் 7 வயது மகன், திடீரென வீட்டின் குளியலறைக்குச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு வந்து நதியாவின் கழுத்துப் பகுதியில் குத்தியதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கத்திக்குத்துக்கு உள்ளான நதியா, உதவி கோரி வீட்டிலிருந்து வெளியேறி வீதியை நோக்கி ஓடியுள்ளார். </p><p>எனினும், சிறிது தூரம் சென்ற நிலையில் அவர் இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்ததாகவும், பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97667ea-1e17-479b-b57e-3e128d426a6c/26-6aad5f8da14eb.webp' /></p><p>சம்பவத்தின் போது யாஸ்மினாவின் இடது மணிக்கட்டிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் அவசரகால மருத்துவக் குழுவினர் சிகிச்சை வழங்கியுள்ளனர்.
</p><p>
அதேவேளை, 7 வயது சிறுவனின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>எனினும், சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவன் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

ஒரு குடும்பத்திற்குள் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறு, எதிர்பாராத வகையில் வன்முறையாக மாறி, இறுதியில் 7 வயது சிறுவனின் கைகளால் அவரது சொந்த அத்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-18T20:11:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் பள்ளிவாசலில் பயங்கர வெடிப்பு ; 17 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/massive-explosion-mosque-pakistan-17-people-killed-1789754556"></link>
            <id>https://canadamirror.com/article/massive-explosion-mosque-pakistan-17-people-killed-1789754556</id>
            <summary type="text">வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42644175-ff2b-452d-aa7b-0d2012885136/26-6aad7cbd97847.webp' /></p><p>இந்த வெடிப்புச் சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இன்றையதினம் மத வழிபாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் வெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-18T18:02:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியா கடலில் நீந்திக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த துயரம் ; சுறா தாக்கி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shark-viciously-attacks-swimmer-australian-waters-1789753255"></link>
            <id>https://canadamirror.com/article/shark-viciously-attacks-swimmer-australian-waters-1789753255</id>
            <summary type="text">மேற்கு அவுஸ்ரிரேலியாவில் கடலில் நீந்திக் கொண்டிருந்த ஒருவர் சுறா மீன் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு அவுஸ்ரிரேலியாவில் கடலில் நீந்திக் கொண்டிருந்த ஒருவர் சுறா மீன் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
மேற்கு அவுஸ்ரிரேலியாவில் பெர்த் நகருக்கு அருகே அமைந்த புகழ்பெற்ற சோரெண்டோ கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த ஒருவரை எதிர்பாராத விதமாக அங்கு வந்த சுறா மீன் கொடூரமாகத் தாக்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b39c065-11ce-46c9-906e-ad6c5098a424/26-6aad77a8ea31c.webp' /></p><p>கடற்கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான நபரை மீட்கவும், தாக்குதல் நடத்திய சுறாவைக் கண்டறியவும் காவல்துறையினர் உடனடியாகக் விரைந்துள்ளனர்.
</p><p>
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியிலுள்ள கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மூடப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், காவல்துறையின் சிறப்புப் படகுகள் மற்றும் உலங்கு வானுார்திகள் மூலம் அந்த பகுதியில் தீவிரத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
</p><p>
இருப்பினும், தாக்குதல் நடத்திய சுறாவின் இனம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கண்டறியப்படவில்லை எனத் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-18T17:41:04+00:00</updated>
        </entry>
    </feed>
