<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-09T06:23:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-imposes-new-sanctions-against-canada-1788934885"></link>
            <id>https://canadamirror.com/article/us-imposes-new-sanctions-against-canada-1788934885</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகையான மதுபானங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றுக்கு அமெரிக்கா செவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகையான மதுபானங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றுக்கு அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (08) தடை விதித்தது.
</p><p>
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளிடையே ஏற்கனவே கசப்பான நிலையில் இருந்த வர்த்தக மோதலைத் தீவிரப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dca3e36-5ebe-4c4e-8648-1d0196149a78/26-6aa0fae6c09d1.webp' /></p><h2>கனடாவின் பதிலடி நடவடிக்கை</h2><p> </p><p>

செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் அமெரிக்கப் பொருட்கள் மீதான கனடாவின் பதிலடி நடவடிக்கையாக விதிக்கப்பட்ட மேலதிக வரிகள் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த இறக்குமதித் தடைகள் செப்டம்பர் 29 அன்று அமுலுக்கு வருகின்றன.</p><p>

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50% சுங்க வரியை விதித்திருந்ததைத் தொடர்ந்தே கனடாவும் இந்த வரிகளை விதித்தது.
</p><p>
மேலும், கனடாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியுடனான உறவைக் குறைத்துக்கொள்ளுமாறு கனேடியப் பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தவும், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் சாத்தியத்தன்மை குறித்த சந்தேகங்களை எழுப்பவும் இது வழிவகுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T06:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் விசித்திர உடையில் சிறுமியை துரத்திய நபருக்கு வலைவீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-teen-chased-by-someone-wearing-cat-in-the-hat-1788934264"></link>
            <id>https://canadamirror.com/article/bc-teen-chased-by-someone-wearing-cat-in-the-hat-1788934264</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் கெலோனா பகுதியில், &#039;கேட் இன் த ஹேட்&#039; கதாபாத்திர உடையில் வந்து சிறுமி ஒருவரைத் துரத்திய நபரை கனடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் கெலோனா பகுதியில், 'கேட் இன் த ஹேட்' கதாபாத்திர உடையில் வந்து சிறுமி ஒருவரைத் துரத்திய நபரை கனடிய பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><p>
ஆகஸ்ட் 24 இரவு சுமார் 9.00 மணியளவில் ஷாம்ரோக் டிரைவ் பகுதியில் நடந்து சென்ற சிறுமி ஒருவரை, விசித்திர உடையணிந்த நபர் துரத்தியுள்ளார்.</p><p>
பாதிக்கப்பட்ட சிறுமி பாதுகாப்பாக வீட்டிற்குச் சென்று சேர்ந்த நிலையில், சந்தேகநபர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32b02503-2c62-496e-81ef-5e6d4ebf3b71/26-6aa0f87a0e881.webp' /></p><p>
</p><p>இரவு வேளையில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கோடுகள் போட்ட தொப்பியுடன் கூடிய 'கேட் இன் த ஹேட்' ஆடை அணிந்து நபர் ஒருவர் நிற்கும் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை ஒரு "கவலைக்குரிய விளையாட்டுச் செயலாக" பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>இத்தகைய உடைகளை அணிவது குற்றமில்லை என்றாலும், மற்றொரு நபருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பின்தொடர்வது குற்றவியல் துன்புறுத்தலாக கருதப்படும் எனப் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p>
விளையாட்டாகச் செய்திருந்தாலும், ஒரு சிறுமியைப் பின்தொடர்ந்து அவருக்கு அச்சத்தை ஏற்படுத்துவது மிகவும் கவலைக்குரியது. இத்தகைய கேலிச் செயல்கள் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என பொலிஸ் அதிகாரி டெவோன் கெரிட்ஸ் எச்சரித்துள்ளார்.
</p><p>சம்பவப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கேமராக்கள் அல்லது வாகனங்களின் டேஷ்கேம் பதிவுகள் வைத்திருப்போர் உடனடியாகத் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>
குழந்தைகள் தங்களை யாராவது பின்தொடர்வதாக உணர்ந்தால், உடனடியாக மக்கள் நடமாட்டம் உள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் எனவும், ஆபத்தான சூழலில் 911 என்ற அவசர எண்ணிற்கு அழைக்க வேண்டும் எனவும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T06:14:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா ஒருபோதும் 51வது மாநிலமாகாது என அமெரிக்க எல்லைகளை பெயர் பலகை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/eby-announces-never-51st-state-signs-as-canada-1788933065"></link>
            <id>https://canadamirror.com/article/eby-announces-never-51st-state-signs-as-canada-1788933065</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க எல்லையோரங்களில் &quot;கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51வது மாநி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க எல்லையோரங்களில் "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறாது" என்ற வாசகம் அடங்கிய புதிய அறிவிப்புப் பலகைகளை நிறுவ உள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் ஈபி அறிவித்துள்ளார்.
</p><p>அமெரிக்க எல்லைச் சாவடிகளில் நிறுவப்படவுள்ள இந்தப் பலகைகளில் "பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு வரவேற்பு. வலிமையான, பெருமைமிக்க கனடா ஒருபோதும் 51வது மாநிலமாகாது. மன்னிக்கவும்" என்று எழுதப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும், வனவிலங்குகள் பற்றிய எச்சரிக்கைகள் மற்றும் "கனடியர்களின் அன்பை பலவீனம் எனத் தவறாக நினைக்க வேண்டாம்" போன்ற விழிப்புணர்வு செய்திகளும் அதில் இடம்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19f458b5-740a-41b9-b9d7-f99d77a06ffe/26-6aa0f3cacf2ed.webp' /></p><p>
</p><p>கனடாவின் சுமார் 28 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரி விதித்ததைத் தொடர்ந்து, கனடாவும் பதிலடியாக 27.8 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்கு 15% முதல் 50% வரை இறக்குமதி வரிகளை அமல்படுத்தியுள்ளது.
</p><p>இந்த வர்த்தகப் போரினால் இரு நாடுகளிலுமுள்ள வேலைவாய்ப்புகளும் வணிகங்களும் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்ட முதல்வர், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளூர் தயாரிப்புகளையும் சேவைகளையும் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பிரிட்டிஷ் கொலம்பிய பொருட்களை கொள்வனவு செய்யுங்கள் என்ற திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>அமெரிக்கா மீதான தங்கிவாழும் தன்மையைக் குறைப்பது பொருளாதார ரீதியாகச் சவாலானது என்றாலும், அதை ஏற்றுக்கொள்ளாமல் விடுவது அதைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கனடியப் பிரதமர் மார்க் கார்னி எச்சரித்துள்ளார்.</p><p>
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த வர்த்தகப் போரைத் தொடங்கியதைச் சுட்டிக்காட்டிய டேவிட் ஈபி, கனடியர்கள் இந்த மோதலைத் தொடங்கவில்லை என்றாலும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதியுடன் நிற்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T05:50:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் ரெனுவா அருங்காட்சியகத்தில் ஓவியங்கள் கொள்ளை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/paintings-stolen-from-the-renoir-museum-in-france-1788932188"></link>
            <id>https://canadamirror.com/article/paintings-stolen-from-the-renoir-museum-in-france-1788932188</id>
            <summary type="text">&amp;nbsp; பிரான்ஸ் ரெனுவா அருங்காட்சியகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த இரு கொள்ளையர்கள், நான்கு கலைப்படைப்புகளைத் திருடிச் சென்ற நிலையில், அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரான்ஸ் ரெனுவா அருங்காட்சியகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த இரு கொள்ளையர்கள், நான்கு கலைப்படைப்புகளைத் திருடிச் சென்ற நிலையில், அவற்றில் இரண்டு ஓவியங்களைத் தப்பிச் செல்லும்போது கைவிட்டதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.</p><p>
 அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த இரு திருடர்களும், சுமார் 9 மில்லியன் யூரோ மதிப்புடைய நான்கு கலைப்படைப்புகளை எடுத்துச் சென்றதாக மேயர் பிரையன் மாஸன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed0f042a-4dd2-42a1-89aa-7d99cc23d129/26-6aa0f05d4f849.webp' /></p><h2>&nbsp;சுமார் 9 மில்லியன் யூரோ மதிப்புடைய&nbsp; ஓவியங்கள் </h2><p>
</p><p>
நகரின் வீடியோ கண்காணிப்பு காட்சிகளின் உதவியுடன் கொள்ளையர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டு அவர்களைத் துரத்திச் சென்றனர். எனினும், இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
</p><p>
தப்பிச் செல்லும் போது திருடப்பட்ட ஓவியங்களில் ஒன்றை அவர்கள் கைவிட்டுச் சென்றதாக மேயர் தெரிவித்துள்ளார். இதனால் இரண்டு கலைப்படைப்புகள் தற்போது காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
</p><p>
திருடப்பட்டதாகக் கூறப்படும் கலைப்படைப்புகளின் முழுமையான விவரங்கள் மற்றும் அவற்றின் அடையாளங்கள் குறித்து அதிகாரிகள் உடனடியாக தகவல் வெளியிடவில்லை.&nbsp;</p><p>
இந்தக் கொள்ளைச் சம்பவம், ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் முக்கியமான கலை மற்றும் கலாச்சாரச் சொத்துத் திருட்டுகளுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
ரெனுவா அருங்காட்சியகம், பிரபல பிரெஞ்சு இம்ப்ரஷனிஸ்ட் ஓவியரான பியர்-அகஸ்ட் ரெனுவார் தனது வாழ்வின் இறுதி ஆண்டுகளைக் கழித்த முன்னாள் இல்லம் மற்றும் கலைக்கூடத்தில் அமைந்துள்ளது.
 
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம், ரெனுவாரின் வாழ்க்கை மற்றும் கலைப் பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

</p><p>சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-09T05:33:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் நுளம்பினால் ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/first-human-case-of-west-nile-virus-reported-1788930012"></link>
            <id>https://canadamirror.com/article/first-human-case-of-west-nile-virus-reported-1788930012</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹமில்டன் நகரில் இந்த பருவத்திற்கான முதலாவது மனித வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதை நகர சுகாதாரப் பிரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹமில்டன் நகரில் இந்த பருவத்திற்கான முதலாவது மனித வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதை நகர சுகாதாரப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>
இதனையடுத்து, இந்த வைரஸால் ஏற்படும் ஆபத்து மட்டத்தை 'மிதமான' நிலையிலிருந்து 'உயர்' நிலைக்கு நகர மருத்துவ சுகாதார அதிகாரி உயர்த்தியுள்ளார்.
</p><p>வெஸ்ட் நைல் வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 80 சதவீதமானோருக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படுவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fbd2bac-df3f-4f4a-8343-0f4c3f7d4ba2/26-6aa0e7dd8b44a.webp' /></p><p>
</p><p>முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்குக் காய்ச்சல் ஏற்படலாம்; மேலும் சுமார் 1 சதவீதமானோருக்கு மூளை அல்லது மூளை உறையில் வீக்கம் போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>
தொற்றுள்ள கொசு கடித்த 2 முதல் 14 நாட்களுக்குள் இதற்கான அறிகுறிகள் வெளிப்படும்.</p><p>
கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நோய் பரவாமல் தடுக்கவும் வீதிகளிலுள்ள நீர் வடிநிலங்கள் மற்றும் பொது நிலங்களிலுள்ள நீர்நிலைகளில் 3ஆம் கட்ட லார்வா ஒழிப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளன.
</p><p>பொதுமக்கள் தங்களின் வீடுகள் மற்றும் தனியார் நிலங்களில் நீர் தேங்கி நிற்பதைத் தவிர்த்து, கொசுக்கள் பெருகுவதைத் தடுக்குமாறு சுகாதாரப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>இது தொடர்பான கூடுதல் தகவல்களை இணையத்தளத்திலோ அல்லது 905-546-2489 என்ற தொலைபேசி எண்ணை அழைப்பதன் மூலமோ பெறலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T05:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க வரைபடத்தால் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-sparks-controversy-again-over-us-map-1788931621"></link>
            <id>https://canadamirror.com/article/trump-sparks-controversy-again-over-us-map-1788931621</id>
            <summary type="text">கனடா, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டும் வரைபடத்தை டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்டதால் புதிதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டும் வரைபடத்தை டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்டதால் புதிதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
</p><p>
கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ மற்றும் கரீபியன் தீவுகள் ஆகியவற்றை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டுவது போன்ற ஒரு வரைபடத்தை ஜனாதிபதி&nbsp; டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3ca46c9-a617-437d-86ee-e7fbffa95667/26-6aa0ee26bcb23.webp' /></p><p>


</p><p>இந்த வார இறுதியில், டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் சுமார் 100 செய்திகள் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்த நிலையில், இந்த விசித்திரமான வரைபடமும் அந்தப் பதிவுகளில் அடங்கும்.
</p><p>
இந்தப் புதிய வரைபடப் பதிவு குறித்து பதிலளித்த ஐஸ்லாந்து, அந்தப் படம் முற்றிலும் பொருத்தமற்றது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக அமெரிக்கத் தூதருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக செவ்வாய்க்கிழமை (செப். 8) தெரிவித்தது.
</p><p>
அந்த வரைபடத்தில் அமெரிக்கா, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ மற்றும் கரீபியன் தீவுகள் அமெரிக்கக் கொடியால் வண்ணமிடப்பட்டிருந்தது.</p><p>ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், முழு நிலப்பரப்பும் “அமெரிக்க ஐக்கிய நாடுகள்” என்று பெயரிடப்பட்டு, வேறு எந்த விளக்கமும் இன்றி பதிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-09T05:27:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் ஐவருடன் பயணித்த உலங்குவானூர்தி விபத்து !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/helicopter-carrying-5-people-crashes-in-malaysia-1788931770"></link>
            <id>https://canadamirror.com/article/helicopter-carrying-5-people-crashes-in-malaysia-1788931770</id>
            <summary type="text">&amp;nbsp; மலேசியாவில் விமானி உட்பட ஐந்து பேரை ஏற்றிச் சென்ற BO-105 ரக உலங்குவானுர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் பயணைத்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மலேசியாவில் விமானி உட்பட ஐந்து பேரை ஏற்றிச் சென்ற BO-105 ரக உலங்குவானுர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் பயணைத்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை. </p><p> 

செவ்வாய்க்கிழமை குச்சிங்கிற்கு வடக்கே சுமார் 929 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாங் லெல்லாங் குறுகிய தூர புறப்பாடு மற்றும் தரையிறங்கும் (STOL) விமான நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a24120c-aa77-4c81-ba45-2ce7a7cab6ca/26-6aa0eebc55828.webp' /></p><p>
</p><p>
மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM), பிற்பகல் 3.58 மணிக்கு விமானத் தகவல் சேவையிடமிருந்து இந்தச் சம்பவம் குறித்த அறிவிப்பைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளது.</p><p>

விமானி உட்பட ஐந்து பேருடன் அந்த உலங்குவானூர்தி, பறக்கும் மருத்துவர் சேவை விமானத்தை இயக்கிக் கொண்டிருந்ததாக CAAM ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், CAAM தனது அறிக்கையில் எந்த உயிரிழப்புகளையும் குறிப்பிடவில்லை.
</p><p>
போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள விமான விபத்து விசாரணைப் பணியகம் (AAIB), 2016 ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறைகளின் பகுதி XXVI-க்கு இணங்க சம்பவத்தை விசாரிக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T05:26:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் ; ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/five-iranian-oil-tankers-come-under-attack-1788922851"></link>
            <id>https://canadamirror.com/article/five-iranian-oil-tankers-come-under-attack-1788922851</id>
            <summary type="text">அமெரிக்கப் போர்க்கப்பலை ஈரான் இருமுறை தாக்கியதற்குப் பதிலடியாக, அந்நாட்டின் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கப் போர்க்கப்பலை ஈரான் இருமுறை தாக்கியதற்குப் பதிலடியாக, அந்நாட்டின் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) தெரிவித்துள்ளது.</p><p> 

 

ஓமன் வளைகுடாவில் ஈரானிய புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய நான்கு எண்ணெய் தாங்கிக் கப்பல்களும், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவுக்கு அருகே மற்றொரு கப்பலும் இலக்கு வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99817ad5-c382-4519-a019-cd1f0d9009d0/26-6aa0cbe57cac5.webp' /></p><p>

 

இதற்குப் பதிலடியாக ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியது. </p><p>இருப்பினும், ஈரான் செலுத்திய 20 ஏவுகணைகளில் 18 ஏவுகணைகளைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் பின்பு அறிவித்தது.</p><p>

 

கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, கடந்த வாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பரத் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. </p><p>இந்த மோதல்கள் காரணமாக ஆசியாவின் ஆரம்ப வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்தன.</p><p>

 

அமெரிக்கக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகில் உள்ள எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது மேலதிகப் பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.</p><p> 

 

துறைமுகங்களில் அல்லது நங்கூரமிட்டுள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய் தாங்கிக் கப்பல்களின் ஊழியர்களும் உடனடியாக வெளியேறுமாறு ஈரானிய புரட்சிகர காவல் படை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>

 

ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை அமெரிக்கக் கடற்படைக் கப்பல் வெற்றிகரமாகத் தவிர்த்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தச் சம்பவத்தில் அமெரிக்க வீரர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
 

தாக்கப்பட்ட ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்களும் ஈரானிய புரட்சிகர காவல் படைக்கும் அதன் பிராந்திய அமைப்புகளுக்கும் நிதியளிக்கும் பில்லியன் டொலர் நிழல் வலையமைப்பின் ஒரு பகுதி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T05:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மாணவியுடன் தகாத உறவு: ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-teacher-had-affair-with-former-student-1788929547"></link>
            <id>https://canadamirror.com/article/bc-teacher-had-affair-with-former-student-1788929547</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் ஒருவர், தனது முன்னாள் மாணவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியர் ஒருவர், தனது முன்னாள் மாணவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் ஆசிரியர் தொழில் செய்ய ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>தியோடர் டொனால்ட் எவால்ட் என்ற இந்த ஆசிரியர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, மாகாண ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையருடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளார்.</p><p> இது தொடர்பான அறிக்கை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd61d58f-87a3-43f7-88b4-68e02bd02b14/26-6aa0e60cc2309.webp' /></p><p>
</p><p>குறித்த மாணவி படிப்பை முடித்து வெளியேறிய ஐந்து மாதங்களின் பின்னர், ஆசிரியர் அவருடன் தகாத உறவைத் தொடங்கியுள்ளார். இந்த உறவு சுமார் ஆறு மாதங்கள் நீடித்துள்ளது.
</p><p>பாதிக்கப்பட்ட மாணவி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஒரு பலவீனமான சூழலில் இருந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>நிலம் சார்ந்த கல்வி கற்பிக்கும் பொறுப்பில் இருந்த ஆசிரியர், மாணவியின் பழங்குடி கலாச்சார ஆர்வத்தைப் பயன்படுத்தி நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
</p><p>பின்னர் குறித்த மாணவியை இரவுக் பயணமொன்றிற்கு அழைத்துச் சென்று தகாத உறவில் ஈடுபட்டுள்ளதுடன், உறவை முடித்துக் கொண்ட பின் மாணவியின் தொடர்புகளையும் துண்டித்துள்ளார்.</p><p>
ஆசிரியரின் இந்தச் செயல் "ஒரு ஆசிரியருக்குப் பொருத்தமற்ற நடத்தை" என ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
தனது ஆசிரியர் பதவியையும், பழங்குடியின மாணவியின் நம்பிக்கையையும் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் மாணவியின் மனநலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியது ஆகிய காரணங்களால் இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>இதன்படி, தியோடர் இனி பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆசிரியராகப் பணியாற்றவோ அல்லது சான்றிதழுக்கு விண்ணப்பிக்கவோ முடியாது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T04:54:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பாரிய விபத்து: 4 இளைஞர்கள் பரிதாப பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271"></link>
            <id>https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271</id>
            <summary type="text">கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கிம்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
நெடுஞ்சாலை 229-ல் மேற்காகப் பயணித்த கார் ஒன்று, நெடுஞ்சாலை 8-ஐக் கடக்க முயன்றபோது, தெற்கு நோக்கி வந்த வேன் ஒன்றுடன் பலமாக மோதியது. </p><p>
இந்தச் சந்திப்பில் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு 'நிற்குமாறு' எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ca2f6d9-f1b1-4749-b10f-db90748128a8/26-6aa03d0187a1d.webp' /></p><p> 
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வீதியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டன. </p><p>அதில் ஒரு வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்தது. 
மேற்கு நோக்கிச் சென்ற காரில் பயணித்த 4 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். </p><p>
காரை ஓட்டிவந்த வின்னிபெக்கைச் சேர்ந்த 18 வயது பெண், கிம்லியைச் சேர்ந்த 18 வயது இளைஞர், சேண்டி ஹூக்கைச் சேர்ந்த 18 வயது பெண் மற்றும் ஒன்டாரியோவின் இயர் ஃபால்ஸைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>வேனில் பயணித்த வின்னிபெக்கைச் சேர்ந்த 49 வயது ஓட்டுநர், ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள் என 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வின்னிபெக் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
</p><p>இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T01:05:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் பொருளாதார தடையால் கியூபாவுக்கு ரூ.68 ஆயிரம் கோடி இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cuba-suffers-loss-68-000-crore-due-us-economic-1788915004"></link>
            <id>https://canadamirror.com/article/cuba-suffers-loss-68-000-crore-due-us-economic-1788915004</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கியூபா வெளியுறவு அமைச்சர் புருனோ ரொட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

அமெரிக்காவின் தொடர்ச்சியான பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகள் கியூபாவின் பொருளாதார நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>

குறிப்பாக, அமெரிக்கத் தடைகள் காரணமாக 2025ஆம் ஆண்டில் மட்டும் கியூபாவுக்கு 8.1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரொட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab9fc7e-880d-4144-a603-65a4f11580cd/26-6aa0ad3dbd304.webp' /></p><p> </p><p>இது முந்தைய ஆண்டை விட சுமார் 7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும், 2026ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட எண்ணெய் தடைகள் காரணமாக கியூபாவின் எரிபொருள் விநியோகமும் மின்சார உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இதன் விளைவாக நாடு முழுவதும் அடிக்கடி மின்வெட்டுகள் இடம்பெறுவதுடன், உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக சேமிப்பது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கியூபா அரசாங்கம் தெரிவித்து வருகிறது.&nbsp;</p><p>கியூபா மக்கள் நீண்ட நேர மின்வெட்டுகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், இதனால் குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் ரொட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் கியூபா மக்களையே அதிகம் பாதிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அமெரிக்க நிர்வாகம் அந்தத் தடைகள் கியூபா அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காகவே விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது.</p><p>இதேவேளை, கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இராஜதந்திர முன்னேற்றம் தற்போது முடங்கியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T00:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளில் 5.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/powerful-5-3-magnitude-earthquake-in-nepal-1788914322"></link>
            <id>https://canadamirror.com/article/powerful-5-3-magnitude-earthquake-in-nepal-1788914322</id>
            <summary type="text">ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பெருவெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நேபாளத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தில் சக்திவாய்ந்த நிலந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பெருவெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நேபாளத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
</p><p>
நேற்று இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக நேபாளத்தின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d84ad7f-5863-4ac1-85d4-d7554d88f514/26-6aa0aa93e7aeb.webp' /></p><p>தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 375 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள லோமன்தாங் பகுதியை மையமாகக் கொண்டு, இரவு 9.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் முஸ்தாங் மாவட்டத்தைத் தவிர, அண்டை மாவட்டங்களான மனாங், டோல்பா மற்றும் மியாக்டி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் தொடர்பில் இதுவரை உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p><p>

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதிகளில் நிலைமைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-09T00:38:51+00:00</updated>
        </entry>
    </feed>
