<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-09T19:30:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030-க்குள் மனிதகுலத்திற்கு பேராபத்தா? ; AI நிறுவனத்தின் ஆய்வாளர் விடுத்த பகீர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-grave-threat-to-humanity-by-2030-ai-company-1788981212"></link>
            <id>https://canadamirror.com/article/a-grave-threat-to-humanity-by-2030-ai-company-1788981212</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்தில் பண...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஜேகப் காக்சன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>Anthropic மற்றும் OpenAI உள்ளிட்ட முன்னணி AI நிறுவனங்கள், போதிய கட்டுப்பாடுகள் இன்றி அதிக திறன் கொண்ட Superintelligence தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் போட்டியிட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eff1d692-baa1-4f43-80b3-d085d9be35c0/26-6aa1afddbb4eb.webp' /></p><p>

எதையும் ஹேக் செய்யும் திறன் மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் அளவிலான அதிகாரம் கொண்ட AI அமைப்புகளின் வளர்ச்சியை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்த ஆபத்தான போட்டி தொடருமானால், எதிர்காலத்தில் அதன் விளைவுகள் மிகவும் தீவிரமானதாக இருக்கக்கூடும் எனவும் ஜேகப் காக்சன் எச்சரித்துள்ளார்.
</p><p>
மேலும், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2030-க்குள் மனிதகுலமே அழியும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளதாகக் கூறப்படும் தகவல், தற்போது AI பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
</p><p>
எனினும், 2030-க்குள் மனிதகுலம் அழியும் என்ற கூற்று உறுதியான அறிவியல் கணிப்பு எனக் கருதப்பட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-09T19:14:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 14 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/14-killed-in-explosion-in-syria-1788971251"></link>
            <id>https://canadamirror.com/article/14-killed-in-explosion-in-syria-1788971251</id>
            <summary type="text">சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள சர்மாடா (Sarmada) நகருக்கு அருகே ஆயுதங்கள் மற்றும் போர்க் கழிவுகளைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள சர்மாடா (Sarmada) நகருக்கு அருகே ஆயுதங்கள் மற்றும் போர்க் கழிவுகளைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக இடம் ஒன்றில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 14 பேர் உயிரிழந்ததுள்ளனர்.</p><p> 

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51701b46-60f2-48fe-989e-9c5f94570a21/26-6aa188f55c2bf.webp' /></p><p>அந்த ஆயுதங்களும் போர்க் கழிவுகளும் வேறொரு இடத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்னர் குறித்த இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகப் பாதுகாப்பு சிரியாவின் அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p>

சிவில் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிப்புகள் தீயை அணைக்கும் முயற்சிகளுக்குத் தடையை ஏற்படுத்தியதுடன், பல மணிநேரமாக அப்பகுதியிலிருந்து அடர்ந்த புகையும் வெளியேறியது. </p><p>

ஆரம்பக்கட்ட வெடிப்புக்கான காரணம் என்னவென்று அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை. </p><p>

சிரிய அரச ஊடகங்களின் தகவலின்படி, இத்லிப் மாகாணத்தில் உள்ள பின்னீஷ் (Binnish) பகுதியிலும் செப்டம்பர் 1 ஆம் திகதி வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் மேலும் சிலர் காயமடைந்தனர்.</p>]]></content>
            <updated>2026-09-09T17:41:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மானிடோபாவில் காணாமல்போன நபர் ஒரு மாதத்தின் பின் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/body-of-missing-alberta-man-pulled-from-manitoba-1788973277"></link>
            <id>https://canadamirror.com/article/body-of-missing-alberta-man-pulled-from-manitoba-1788973277</id>
            <summary type="text">&amp;nbsp;கடந்த மாதம் கனடாவின் மானிடோபா மாகாணத்தில் காணாமல்போன அல்பெர்ட்டாவைச் சேர்ந்த 60 வயது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று உறுதிப்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடந்த மாதம் கனடாவின் மானிடோபா மாகாணத்தில் காணாமல்போன அல்பெர்ட்டாவைச் சேர்ந்த 60 வயது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>அல்பெர்ட்டாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ரெட்மண்ட் என்பவர், கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி மானிடோபாவின் கெல்சி பகுதியில் காணாமல்போயிருந்தார். </p><p>இவர் வழக்கமாக நெல்சன் ஆற்றின் கரையில் மீன்பிடிக்கச் செல்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aa06f9d-5a22-4244-9ce0-3340ab7c90de/26-6aa190df048fc.webp' /></p><p>
</p><p>ரெட்மண்டின் குடிலுக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட தேடுதலின் போது, கெல்சி மின் உற்பத்தி நிலைய அணையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அவரது மீன்பிடி உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன.</p><p>
செப்டம்பர் 1 ஆம் திகதி கெல்சி அணைப் பகுதியில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, ஆற்றங்கரைக்கு அருகே சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.</p><p>
வினிபெக் நகரத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், மீட்கப்பட்டவர் ஜேம்ஸ் ரெட்மண்ட் என்பது முறைப்படி உறுதி செய்யப்பட்டது.</p><p>
இந்த மரணத்தில் எவ்வித சந்தேகத்திற்கு இடமான சூழலும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T17:03:06+00:00</updated>
        </entry>
    </feed>
