<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-30T06:35:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் அதிகரித்துச் செல்லும் குடிவரவு வழக்குகள்: தலைமை நீதிபதி எச்சரிக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/federal-court-staff-work-weekends-on-vacation-1788066919"></link>
            <id>https://canadamirror.com/article/federal-court-staff-work-weekends-on-vacation-1788066919</id>
            <summary type="text">கை
கனடா நீதிமன்றத்தில் குடிவரவு தொடர்பான வழக்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதால், நீதிமன்றத்தின் பணிச்சுமை கட்டுக்கடங்காத நிலையை எட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கை
கனடா நீதிமன்றத்தில் குடிவரவு தொடர்பான வழக்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதால், நீதிமன்றத்தின் பணிச்சுமை கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளதாக தலைமை நீதிபதி ஆலன் டினர் தெரிவித்துள்ளார்.
</p><p>2014 ஆம் ஆண்டில் ஆண்டிற்கு 5,000 முதல் 6,000 வரை மட்டுமே பதிவான குடிவரவு வழக்குகள், 2021 இல் 9,700 ஆக உயர்ந்தன.
</p><p>நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 33,000 ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 14,000 க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 28,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff7af5e-ac1c-4019-82c8-0ed3d1ebc1b5/26-6a93bc68e0b7f.webp' /></p><p>
நீதிமன்றத்தில் உள்ள 44 நீதிபதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், 2020 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வழக்குகள் 600% வரை அதிகரித்துள்ளன.</p><p>
இதனால் நீதிபதிகளும் நீதிமன்ற ஊழியர்களும் இரவு பகலாகவும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
</p><p>மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட கனடாவின் C-12 எல்லை பாதுகாப்புச் சட்டம் நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.</p><p> கனடாவிற்கு வந்து ஒரு வருடத்திற்குப் பின்னர் அகதி உரிமை கோருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இச்சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து 2,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>
வழக்கமாக ஆண்டிற்கு 300 முதல் 400 வரை மட்டுமே பதிவாகும் நாடுகடத்தலை நிறுத்துவதற்கான கோரிக்கைகள், தற்போது 1,100 ஐத் தாண்டியுள்ளன.
</p><p>ஆவணங்களைச் செயலாக்குவதற்கான வழக்கமான 48 மணிநேர இலக்கு மாறி, தற்போது 8 வாரங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது. </p><p>நீதிமன்றப் பணிகளைச் சீரமைக்க கூடுதல் நீதிபதிகளை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T06:30:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லேக் ஒன்றாரியோ புதிய பெயர் பலகையை திறந்து வைத்து டிரம்பிற்கு அதிர்ச்சி கொடுத்த கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/well-never-ever-back-down-doug-ford-1788068254"></link>
            <id>https://canadamirror.com/article/well-never-ever-back-down-doug-ford-1788068254</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வட அமெரிக்காவின் புகழ்பெற்ற &#039;லேக் ஒன்ராறியோ&#039; ஏரியின் பெயரை &#039;லேக் அமெரிக்கா&#039; என மாற்றியதற்கு கனடா அரசு மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வட அமெரிக்காவின் புகழ்பெற்ற 'லேக் ஒன்ராறியோ' ஏரியின் பெயரை 'லேக் அமெரிக்கா' என மாற்றியதற்கு கனடா அரசு மற்றும் ஒன்ராறியோ மாகாண அரசு ஆகியவை மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளன.
</p><p>டிரம்பிற்கு பதிலடி வழங்கும் நோக்கில் ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் புதிய 'லேக் ஒன்ராறியோ' பெயர்ப்பலகையைத் திறந்து வைத்துள்ளார்.</p><p>
அதிபர் டிரம்ப் இதை என்ன பெயர் வேண்டுமானாலும் அழைக்கலாம், ஆனால் உலகம் முழுவதும் இதனை எப்போதும் 'லேக் ஒன்ராறியோ' என்றுதான் அழைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6146e12-bd08-402e-aec8-d45877a25c50/26-6a93c19fb253f.webp' /></p><p>
</p><p>கனடா தனது இறையாண்மையை எப்போதும் பாதுகாக்கும். மிரட்டல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பணியமாட்டோம் என டிரம்பிற்கு நேரடியாகவே பதிலடி கொடுத்துள்ளார்.
</p><p>கனேடிய பிரதமர் மார்க் கார்னி, டிரம்பின் இந்த அறிவிப்பை முற்றாக நிராகரித்துள்ளார்.
 'ஒன்ராறியோ' என்ற பெயர் 'வெண்டாட்' பழங்குடியின மொழியிலிருந்து வந்த 'ஒன்டாரியோ' (Ontari'io - அதாவது 'அழகான, பெரிய ஏரி') என்ற சொல்லாகும். இது கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு முன்பே, 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வரலாற்றுப் பெயர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வரைபடங்கள் மற்றும் தரவுத்தளங்களில் இந்த ஏரியின் பெயரை 'லேக் அமெரிக்கா' என மாற்றுமாறு டிரம்ப் நிறைவேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். </p><p>
முன்னதாக 'மெக்சிகோ வளைகுடா'வை 'கல்ஃப் ஆஃப் அமெரிக்கா' என மாற்ற முயன்றதன் தொடர்ச்சியாகவே இச்செயல் பார்க்கப்படுகிறது.</p><p>
அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் குறித்துப் பேசிய டக் ஃபோர்ட், கனடிய தொழிலாளர்களின் நலன்களைப் பாதிக்கும் மோசமான ஒப்பந்தத்தை விட ஒப்பந்தமே இல்லாமல் இருப்பது மேல் எனக் குறிப்பிட்டதுடன், உருக்கு மற்றும் வாகன உற்பத்தித் துறைகளைப் பாதுகாக்க கனடா அனைத்து முடிவுகளையும் எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T06:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சட்டவிரோத மீன்பிடி: இருவருக்கு அபராதம்; ஒருவருக்கு ஆயுட்காலத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lifetime-ont-fishing-ban-4k-in-fines-1788065878"></link>
            <id>https://canadamirror.com/article/lifetime-ont-fishing-ban-4k-in-fines-1788065878</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஆண்டுமுழுவதும் மீன்பிடிக்கத் தடைசெய்யப்பட்ட ஆற்றில் சட்டவிரோதமாக மீன்பிடித்த இருவரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஆண்டுமுழுவதும் மீன்பிடிக்கத் தடைசெய்யப்பட்ட ஆற்றில் சட்டவிரோதமாக மீன்பிடித்த இருவருக்கு 4,000 கனடிய டொலர்களுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
2025 செப்டம்பர் 18 அன்று 'பிளாக் ஸ்டர்ஜன்' ஆற்றுப்பகுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது, ஸ்கார்பரோவைச் சேர்ந்த சுன்யாங் லியூ மற்றும் ஈஸ்ட் க்வில்லிம்பரியைச் சேர்ந்த மிஃபெங் லீ ஆகியோர் சட்டவிரோதமாக 'வாலி' ரக மீன்களைப் பிடித்துக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.</p><p>
சோதனையின் போது மிஃபெங் லீ அங்கிருந்து தப்பியோடிய போதிலும், பொலிஸாரின் உதவியுடன் பின்னர் கைது செய்யப்பட்டார். 
தடைசெய்யப்பட்ட காலத்தில் மீன்பிடித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட லியூவுக்கு 1,050 டொலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர் பிடித்த மீன்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் நிரந்தரமாக அரசுடமையாக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d38dbab-8b1d-4e56-9615-ee3744735a3e/26-6a93b857acd65.webp' /></p><p> </p><p>
அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடித்தல், அதிகாரிக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் தப்பியோடிய குற்றங்களுக்காக லீக்கு 2,990 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.</p><p> 
மேலும், 2 ஆண்டுகள் கண்காணிப்பு உத்தரவுடன், ஒன்ராறியோ மாநிலத்தில் மீன்பிடிப்பதற்கு அவருக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> 
'லேக் சுப்பீரியர்' ஏரிப் பகுதியில் வாலி மீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றைப் பாதுகாக்கவும் 'பிளாக் ஸ்டர்ஜன்' ஆற்றில் ஆண்டுமுழுவதும் மீன்பிடிக்க முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T05:11:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-premier-calls-byelection-in-riding-1788066414"></link>
            <id>https://canadamirror.com/article/bc-premier-calls-byelection-in-riding-1788066414</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் &#039;அபோட்ஸ்போர்ட்-மிஷன்&#039; தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் டேவிட் ஈப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 'அபோட்ஸ்போர்ட்-மிஷன்' தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் டேவிட் ஈபி அறிவித்துள்ளார். </p><p>
எதிர்வரும் செப்டம்பர் 26 ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் முன்னாள் மேயருமான பாம் அலெக்சிஸ் போட்டியிடுகிறார்.</p><p> 
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான கெர்ரி-லின் ஃபின்ட்லே சட்டமன்றத்தில் உறுப்பினராவதற்காக இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ac6fc6-44d7-46d0-8388-60a0f06baf3d/26-6a93ba6fdf43b.webp' /></p><p> ஃபின்ட்லே போட்டியிடுவதற்கு வழிவிடும் வகையில், அத்தொகுதியின் கன்சர்வேடிவ் சட்டமன்ற உறுப்பினர் ரியான் காஸ்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 
கடந்த மே மாதம் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபின்ட்லேவின் தலைமையின் கீழ் கட்சியில் கடும் குழப்ப நிலை நிலவி வருகிறது.</p><p> இந்த மாதத்தில் மட்டும் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாக மாறியுள்ளனர்.</p><p>
 அத்துடன் கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் போன்ற முக்கிய அதிகாரிகளும் விலகியுள்ளனர். 
கட்சியிலிருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான பீட்டர் மிலோபார் மற்றும் ஐயன் பேட்டன் ஆகியோர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டு வருகின்றனர்.</p><p> 
எனினும், இடைத்தேர்தல் விரைவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்தலில் தங்களால் வேட்பாளரை நிறுத்த முடியாது என மிலோபார் தெரிவித்துள்ளார்.</p><p> 
இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 5 ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும், முன்கூட்டிய வாக்களிப்பு செப்டம்பர் 18 முதல் 23 வரை நடைபெறும் எனவும் 'எலக்சன்ஸ் பி.சி' அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T05:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யாவின் பயங்கர தாக்குதல் ; ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் 37 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/37-killed-in-arms-depot-explosion-1788038528"></link>
            <id>https://canadamirror.com/article/37-killed-in-arms-depot-explosion-1788038528</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கீவ் அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் குறைந்தது 37 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கீவ் அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கீவ்வின் மேற்குப் புறநகர்ப் பகுதியான மைலா பகுதியில் அமைந்துள்ள குறித்த ஆயுதக் கிடங்கு மீது வெள்ளிக்கிழமை இரவு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய தீ விபத்து மற்றும் வெடிப்பினால் அப்பகுதியில் உள்ள சுமார் 50 குடியிருப்பு வீடுகள் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75fcf5bf-095a-4db3-908e-aa157d0b598e/26-6a934d817d077.webp' /></p><p> </p><p>அத்துடன், அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 400க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்களில் டிமிட்ரிவஸ்கா கிராமத்தின் மேயர் தராஸ் டிடிச் என்பவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் ஆபத்தான ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமையே அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் கடுமையான குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயற்பட்ட பொறுப்பற்ற நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்நாட்டு பிரதமர் எச்சரித்துள்ளார்.</p><p>

இதேவேளை, உக்ரைனை இலக்காகக் கொண்டு ரஷ்யா ஒரே இரவில் இரண்டு ஏவுகணைகள் மற்றும் 267 ட்ரோன்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளையும் இலக்காகக் கொண்டு உக்ரைன் பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T01:19:51+00:00</updated>
        </entry>
    </feed>
