<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-25T08:26:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B விசா கட்டணத்தை உயர்த்த அமெரிக்கா நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-moves-to-raise-h-1b-visa-fees-1787646103"></link>
            <id>https://canadamirror.com/article/us-moves-to-raise-h-1b-visa-fees-1787646103</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; புதிய H-1B விசாக்களுக்கு 103,265 அமெரிக்க டொலர் கட்டணம் விதிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய விதிமுறையை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; புதிய H-1B விசாக்களுக்கு 103,265 அமெரிக்க டொலர் கட்டணம் விதிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய விதிமுறையை முன்மொழிந்துள்ளது.
</p><p>
முன்னதாக தற்காலிகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தக் கட்டணம், நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக தற்போது வசூலிக்க முடியாத நிலையில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e43077b-cf27-4316-b362-8898a4911a00/26-6a8d5099a2fd6.webp' /></p><h2>செப்டெம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ள&nbsp; கட்டண நடைமுறை </h2><p> 

 H-1B விசா தற்காலிக கட்டண நடைமுறை செப்டெம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ள நிலையில், அதனை நிரந்தரமாக்கும் நோக்கில் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் இந்த புதிய விதிமுறையை முன்வைத்துள்ளது.</p><p>

புதிய கட்டணம் நடைமுறைக்கு வந்தால், தொழில்நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் வெளிநாட்டு பணியாளர்களை நியமிக்கும் அமெரிக்க நிறுவனங்களின் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

எனினும், அமெரிக்காவில் ஏற்கனவே மாணவர் விசாவில் தங்கியிருப்பவர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாக்களுக்கும், ஏற்கனவே உள்ள விசாக்களைப் புதுப்பிப்பதற்கும் இந்தக் கட்டணம் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் கட்டணத்தை எதிர்த்து அமெரிக்க வர்த்தக அமைப்புகள், சில மாநில அரசுகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
</p><p>
இந்தநிலையில், H-1B திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 65,000 விசாக்களும், உயர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்களும் வழங்கப்படுகின்றன.
</p><p>
கடந்த ஆண்டு H-1B விசாக்களுக்காக அமெரிக்க நிறுவனங்கள் சுமார் 344,000 விண்ணப்பங்களைப் பதிவு செய்திருந்ததாக அமெரிக்க குடியகல்வு மற்றும் குடிவரவு சேவைத் தரவுகள் தெரிவிக்கின்றன. </p><p>இது 2024ஆம் ஆண்டை விட 25 சதவீதத்துக்கும் அதிகமான வீழ்ச்சியாகும்.

மேலும், H-1B விண்ணப்பதாரர்களுக்கான விசாரணை மற்றும் பின்னணி சரிபார்ப்பு நடவடிக்கைகளை அமெரிக்க நிர்வாகம் கடுமையாக்கியுள்ளது.</p><p>அத்துடன், அதிக திறன் கொண்ட மற்றும் அதிக ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கும் புதிய விசா தேர்வு முறையையும் முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகின்றது</p>]]></content>
            <updated>2026-08-25T08:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் புதிய மிரட்டல்; அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர் தீவிரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-canada-trade-war-intensifies-1787635466"></link>
            <id>https://canadamirror.com/article/us-canada-trade-war-intensifies-1787635466</id>
            <summary type="text">&amp;nbsp; கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
</p><p>
 கனடாவிலிருந்து வரும் சிற்றுந்துகள், கனரக வாகனங்கள், மற்றும் வாகனங்களின் உதிரி பாகங்கள் மீதான வரியை ஜனவரி 1 முதல் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/081963f2-9189-4638-858b-cb702ac79eea/26-6a8d270d4f86d.webp' /></p><h2>வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வி</h2><p>கடந்த வார இறுதியில் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடைசி நேரத்தில் இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைத்ததாக பரஸ்பரம் குற்றம் சாட்டின</p><p>.

 ட்ரம்ப்பின் இந்த புதிய வரி அச்சுறுத்தல் தனக்கு வியப்பளிக்கவில்லை என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கர்னி, கனடாவின் வாகன உற்பத்தியைக் அழிக்க ட்ரம்ப் நினைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா "சரியான அணுகுமுறையுடன்" வந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த கனடா தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>

 அத்துடன் பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆரம்பிப்பதற்கான எந்த குறிப்பிட்ட திகதியும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் இரண்டு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்.
</p><p>
கிட்டத்தட்ட 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது 50வீத வரி விதிக்கும் அமெரிக்காவின் கெடுவை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று கனடா பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறி இருந்தமை குரிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T08:12:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர நேரத்தில் வெளியேற முடியாத அபாயம் ; சீனாவில் 30 லட்சம் டெஸ்லா கார்கள் மீளப்பெறல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/3-million-tesla-cars-recalled-in-china-1787639118"></link>
            <id>https://canadamirror.com/article/3-million-tesla-cars-recalled-in-china-1787639118</id>
            <summary type="text">அவசர காலங்களில் வாகனங்களில் இருந்து வெளியேறுவதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய உட்புறக் கதவு கைப்பிடிகள் அமைப்பு காரணமாக, சீனாவில் சுமார் 3 மில்லியன் டெஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசர காலங்களில் வாகனங்களில் இருந்து வெளியேறுவதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய உட்புறக் கதவு கைப்பிடிகள் அமைப்பு காரணமாக, சீனாவில் சுமார் 3 மில்லியன் டெஸ்லா சிற்றூந்துகளை திரும்பப் பெறுவதாக அந்த நாட்டின் தேசிய சந்தை ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
</p><p>
சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட Model 3, Model Y, Model X மற்றும் Model S வகைகளைச் சேர்ந்த சுமார் 2.98 மில்லியன் டெஸ்லா மின்சார வாகனங்கள் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c38a2641-0ae7-4be0-b975-47db9b0ae149/26-6a8d354f8705c.webp' /></p><p>எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் இந்த மீளப் பெறும் நடவடிக்கை தொடங்கவுள்ளது.
</p><p>
விபத்துகள் போன்ற தீவிரமான அவசரச் சூழ்நிலைகளில் வாகனத்தின் குறைந்த மின் அழுத்த அமைப்பு செயலிழந்தால், உட்புறக் கதவு கைப்பிடிகள் இருக்கையின் நிறத்துடனேயே ஒத்துப் போவதால் அவற்றைக் கண்டறிந்து இயக்கச் சிரமமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால் பயணிகள் உடனடியாக வெளியேறுவதோ அல்லது வெளியில் உள்ளவர்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்வதோ தடைபடலாம் என்று அந்த ஆணைக்குழு எச்சரித்துள்ளது.</p><p>

டெஸ்லாவைத் தவிர, சியோமி, எக்ஸ்பெங், ஜியோகி, செரி, லீப்கோட்டார் மற்றும் BAIC உள்ளிட்ட மேலும் எட்டு முன்னணிச் சீன வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் இதே போன்ற பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாகத் தங்கள் சிற்றூந்துகளை மீளப் பெறுவதாக அறிவித்துள்ளன.
</p><p>
பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், கைப்பிடிகள் அருகே எச்சரிக்கை ஸ்டிக்கர்களை இலவசமாக ஒட்டுவதுடன், விபத்துக்குப் பிறகு சாளரங்களை தானாக இறக்கும் வசதிக்காக மென்பொருள் மேம்படுத்தல்களையும் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
</p><p>
சமீபகாலமாக நவீன சிற்றூந்துகளின் வடிவமைப்பு முறைகளால் விபத்து நேரங்களில் ஏற்படும் சிக்கல்கள் குறித்துச் சீனாவில் பாதுகாப்பு அச்சங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T06:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[47 ஆண்டுகளுக்குப் பின் பயங்கரவாத பட்டியலில் இருந்த சிரியாவை நீக்கிய அமெரிக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-removes-syria-terrorism-list-after-47-years-1787637374"></link>
            <id>https://canadamirror.com/article/us-removes-syria-terrorism-list-after-47-years-1787637374</id>
            <summary type="text">&amp;nbsp; 47 ஆண்டுகளுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது. 

இதன் மூலம், அந்நாட்டில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 47 ஆண்டுகளுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது. </p><p>

இதன் மூலம், அந்நாட்டில் தனியார் துறை முதலீட்டிற்கும், உலகப் பொருளாதாரத்துடன் அது மீண்டும் இணைவதற்கும் இருந்த "இறுதி முக்கிய தடைகள்" நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1f43599-ecff-4c47-90a9-7eb4a2883454/26-6a8d2e80f3d6a.webp' /></p><h2>சிரிய அரசாங்கத்தின் நேர்மறையான நடவடிக்கை</h2><p>
</p><p>
சர்வதேச பயங்கரவாதச் செயல்களிலிருந்து முழுமையாக விலகி இருப்பதற்கான சிரிய அரசாங்கத்தின் நேர்மறையான நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் விதமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
</p><p>
அல்-கொய்தாவின் கிளை அமைப்பொன்றின் தலைவராக இருந்தபோது, ​​ஒரு காலத்தில் அமெரிக்காவால் தேடப்படும் நபராக (தலைக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டவராக) இருந்த முன்னாள் போராளியான அகமது அல்-ஷாராவை, சிரியாவின் புதிய அதிபராக டிரம்ப் நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
</p><p>
அவரது இஸ்லாமிய அமைப்பான 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' (HTS) அமைப்பும், அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.
</p><p>
முன்னர் 'அல்-நுஸ்ரா முன்னணி' (al-Nusra Front) என்று அழைக்கப்பட்ட HTS அமைப்பு, 2016-ல் ஷாரா அந்த ஜிஹாதி அமைப்பிலிருந்து தொடர்பை முறித்துக்கொள்ளும் வரை சிரியாவில் அல்-கொய்தாவின் ஒரு பிரிவாகச் செயல்பட்டு வந்தது.

2024-ன் பிற்பகுதியில், முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்தை பதவியிலிருந்து அகற்றிய கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு HTS தலைமை தாங்கியது; தற்போது ஷாராவின் இடைக்கால நிர்வாகத்தில் இவ்வமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.</p><p>

சிரியாவை ரஷ்யா அல்லது சீனாவின் செல்வாக்கு மண்டலத்திற்குள் செல்லவிடாமல், தங்கள் பக்கம் கொண்டுவர அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், சிரியாவில் இன்னும் பாதுகாப்பு நிலைமை சீராக இல்லாததும், அங்கு மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட அரசாங்கம் இல்லாததும் குறிப்பிடத்தக்க அபாயங்களாக உள்ளன.</p><p> அத்துடன், அண்டை நாடுகளான இஸ்ரேல் மற்றும் துருக்கிக்கு இடையிலான பதற்றங்களுக்கு மத்தியிலும் சிரியா ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது.

ஜூலை மாதத்திலேயே இதற்கான அறிகுறி தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திங்களன்று எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை சிரியாவிற்கு "வளர்ச்சியை நோக்கிய பாதையை" அமைத்துத் தரும் என்று ரூபியோ கூறினார்.
</p><p>
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், "இன்றைய நடவடிக்கை சிரியாவில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்த கூடுதல் முதலீடுகளை ஈர்க்க உதவும்," என்று தெரிவித்தார்.
</p><p>
அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனமான SANA-வின் தகவலின்படி, சிரிய வெளியுறவு அமைச்சர் அசாத் ஹசன் அல்-ஷைபானி இந்தச் செய்தியை ஒரு "வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை" என்று வரவேற்றார்.
</p><p>
"தனிமைப்படுத்தப்பட்ட நிலையால் ஏற்பட்ட விளைவுகளை நீக்கவும், வெளிப்படைத்தன்மை, பரஸ்பர நலன்கள் மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சூழலை உருவாக்கவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்," என்று அவர் கூறினார்.</p><p>

கடந்த ஆண்டு, HTS அமைப்பை 'வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு' என்று வகைப்படுத்தியிருந்ததை அமெரிக்கா ரத்து செய்ததுடன், 'குறிப்பிட்ட உலகளாவிய பயங்கரவாதிகள்' பட்டியலிலிருந்தும் ஷாராவை நீக்கியிருந்தது.</p><p>

1979-ம் ஆண்டு முதல் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்த சிரியா அதிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அந்தப் பட்டியலில் கியூபா, வட கொரியா மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.</p><p> இந்தப் பட்டியலில் இடம்பெறுவது நிதித் தடைகள், அமெரிக்காவின் வெளிநாட்டு உதவி மற்றும் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி மற்றும் விற்பனை மீதான கட்டுப்பாடுகளை உள்ளடக்கியது.&nbsp; அத்துடன், தடை விதிக்கப்பட்ட நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் பிற நாடுகளையும் இது தண்டனைக்கு உள்ளாக்கக்கூடும்.</p>]]></content>
            <updated>2026-08-25T05:53:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-external-affairs-minister-meets-putin-1787632679"></link>
            <id>https://canadamirror.com/article/indian-external-affairs-minister-meets-putin-1787632679</id>
            <summary type="text">ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
</p><p>
இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவு, உலகளாவிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4641abb-140f-4059-ae98-3e6ee42b75b5/26-6a8d1c2951d4e.webp' /></p><p>ரஷ்யாவிற்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள ஜெய்சங்கர், நேற்று முன்தினம் இரவு மாஸ்கோ சென்றடைந்தார்.
</p><p>
இந்தியா - ரஷ்யா இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இரு நாடுகளும் முயற்சித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில், நேற்று ரஷ்ய ஜனாதிபதி புடினும், ஜெய்சங்கரும் சந்தித்து இந்தியா-ரஷ்யா இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச அளவிலான முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
</p><p>
செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் டில்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது</p>]]></content>
            <updated>2026-08-25T04:38:05+00:00</updated>
        </entry>
    </feed>
