<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-17T23:43:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷிய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி? டிரம்ப் மசோதாவால் வெடித்த புதிய பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-oil-new-stir-sparked-by-trump-s-bill-1789687420"></link>
            <id>https://canadamirror.com/article/russian-oil-new-stir-sparked-by-trump-s-bill-1789687420</id>
            <summary type="text">ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிசக்திப் பொருட்களை கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிசக்திப் பொருட்களை கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
இந்த மசோதா அமலுக்கு வந்தால், ரஷ்யா மீதான பொருளாதார அழுத்தம் மேலும் அதிகரிக்கும். இதனால் உக்ரைன் போருக்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d3b9a6a-0d07-4cd9-a597-bed428fe25fb/26-6aac767ddf95b.webp' /></p><p>கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷியா மீது கூடுதல் தடைகள் விதிப்பது அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேலும் கடினமாக்கும் என தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. </p><p>ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் மூன்றாம் தரப்பான அமெரிக்கா தலையிடுவதையும், பிற நாடுகளின் மீது தனது அதிகார வரம்பை விரிவுபடுத்துவதையும் ஏற்க முடியாது என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதனிடையே, குறித்த மசோதாவுக்கு டிரம்ப் இறுதி ஒப்புதல் அளிப்பாரா என்பதும், ஒப்புதல் கிடைத்தால் எந்த நாடுகளுக்கு எதிராக இந்த வரி அதிகாரம் பயன்படுத்தப்படும் என்பதும் அடுத்தகட்ட முக்கிய விடயமாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T23:23:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆஸ்திரேலியாவில் குடியேற்றம் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை ; சர்வதேச மாணவர்களுக்கு கடும் விதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drastic-measures-to-curb-immigration-in-australia-1789685494"></link>
            <id>https://canadamirror.com/article/drastic-measures-to-curb-immigration-in-australia-1789685494</id>
            <summary type="text">அமெரிக்காவை போலவே, ஆஸ்திரேலியாவிலும் அதிகரித்து வரும் குடியேற்றத்தை கட்டுப்படுத்த, சர்வதேச மாணவர்களுக்கு கடுமையான விதிகளை அந்நாடு அறிவித்து உள்ளது.ஆஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவை போலவே, ஆஸ்திரேலியாவிலும் அதிகரித்து வரும் குடியேற்றத்தை கட்டுப்படுத்த, சர்வதேச மாணவர்களுக்கு கடுமையான விதிகளை அந்நாடு அறிவித்து உள்ளது.</p><p>ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை திடீரென அதிகரித்துள்ளதால் அங்கு வீடுகள் பற்றாக்குறை, தினசரி செலவு அதிகரிப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பொது போக்கு வரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
</p><p>

அங்கு, 12 மாதங்களில் மட்டும் மக்கள் தொகை 1.4 சதவீதம் உயர்ந்து, 2.79 கோடியை எட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9daca9f2-cb78-4e18-b2a6-accc0f5dd19f/26-6aac6ef828556.webp' /></p><p> இதில், வெளிநாட்டில் இருந்து குடியேறியோர் மட்டும் 2.92 லட்சம்.


நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் குடியேற்றத்தை கட்டுப்படுத்தி, 2028ம் ஆண்டுக்குள் நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை, 2.25 லட்சமாக குறைக்க அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
</p><p>

அதன் காரணமாக, 'சர்வதேச மாணவர்கள் இனி தங்கள் குடும்பத்தினரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வர அனுமதி இல்லை' என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>

இதேபோன்று படிப்பை முடித்த பின், அங்கேயே தொடர்ந்து தங்குவதற்காக, அதே தரத்தில் அல்லது தரம் குறைந்த மற்றொரு பாடப்பிரிவில் சேர்க்கை பெறும், 'விசா ஹாப்பிங்' முறைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>

அதேசமயம் பட்டப்படிப்பை முடித்த பிறகு முதுகலை படிப்பு போன்ற உயர் தகுதிக்குச் செல்ல விரும்புவோருக்கு விசா நீட்டிப்புக்கு அனுமதி உண்டு.</p>]]></content>
            <updated>2026-09-17T22:51:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னாப்பிரிக்காவில் தொடரும் கொடூரம் ; நிர்வாண நிலையில் அடுத்தடுத்து 9 பெண்களின் சடலங்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bodies-of-9-women-recovered-in-a-naked-state-1789677130"></link>
            <id>https://canadamirror.com/article/bodies-of-9-women-recovered-in-a-naked-state-1789677130</id>
            <summary type="text">தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை காவல்துறை மீட்டுள்ளது.</p><p>

நேற்று (17) எகூர்ஹுலேனி (Ekurhuleni) நகராட்சிக்குட்பட்ட கெம்ப்டன் பார்க் (Kempton Park) பகுதியில் ஒன்பதாவது பெண்ணின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையால் அந்தப்பகுதி முடக்கப்பட்டுள்ளது (lockdown).</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5b621b8-9541-44ca-b96c-0d7c1abdd0d1/26-6aac4e4c6d983.webp' /></p><p>குறித்தப் பகுதியில் இதுபோன்ற நிர்வாணக் கோலத்திலான மூன்று உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்தத் தொடர் கொலைகள், இவை ஒரு தொடர் கொலையாளியால் (serial killer) நடத்தப்பட்டிருக்கலாமோ என்ற பொதுமக்களின் பீதியை அதிகரித்துள்ளன.
</p><p>
முதல் எட்டு படுகொலைகளில் சில ஒற்றுமைகள் "மிகவும் கவலை அளிக்கும் வகையில்" இருப்பதாக காவல்துறை முன்னதாக எச்சரித்திருந்தது.
</p><p>
இந்தநிலையில், "பல சந்தேக நபர்கள் அல்லது தனித்தனி குற்றவாளிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட அனைத்து கோணங்களிலும் விசாரணையாளர்கள் விசாரித்து வருகின்றனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இதுவரை கண்டெடுக்கப்பட்ட உடலங்கள் அனைத்தும் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட பெண்களுடையவை ஆகும்.

அனைத்து உடல்களும் நிர்வாணமாகவோ அல்லது அரைநிர்வாணமாகவோ கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>சில உடல்களில் ஒரே மாதிரியான காயங்களும் காணப்படுகின்றன.

முதல் உடல் கடந்த ஜூலை 17 அன்று நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e88cc9cd-e29b-4c22-b088-6b720bdc861f/26-6aac4e4d2416a.webp' /></p><p>தென்னாப்பிரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சத்தில் உள்ளதை இந்தக் கொலைகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.</p><p>

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் அதிக பெண் படுகொலை (femicide) விகிதங்களைக் கொண்ட நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாக கருதப்படுகிறது.

இதன்படி 2026, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் தென்னாப்பிரிக்க காவல்துறை 9,782 வன்புணர்வு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
</p><p>
கடந்த ஆண்டு நவம்பரில், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பெண்படுகொலைகளை தென்னாப்பிரிக்காவின் தேசிய பேரிடர் முகாமைத்துவ மையம் தேசிய பேரிடராக அறிவித்தது.
</p><p>
இந்தநிலையில் தற்போதைய தொடர் கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உதவும் தகவல்களுக்கு 400,000 தென்னாப்பிரிக்க ராண்ட் ($25,000) சன்மானம் வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன் குறித்த பிரதேச பெண்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T20:32:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொர்த் யோர்க்கில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை: 16 வயது சிறுவன் மீது கொலைக் குற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/arrest-made-in-fatal-shooting-of-17-year-old-boy-1789664343"></link>
            <id>https://canadamirror.com/article/arrest-made-in-fatal-shooting-of-17-year-old-boy-1789664343</id>
            <summary type="text">கனடாவின் நொர்த் யோர்க் பகுதியில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு முதலாம் நிலை கொலைக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் நொர்த் யோர்க் பகுதியில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு முதலாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் ஜேன் வீதி மற்றும் பின்ச் அவென்யூ வெஸ்ட் சந்திப்பிற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகே காஷி அகஸ்ட் என்ற சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.</p><p> 
தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bea658c8-9058-45d2-9b6f-7438807eeed2/26-6aac1c58dcaf6.webp' /></p><p>
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் மீது முதலாம் நிலை கொலைக் குற்றம் மற்றும் நன்னடத்தை உத்தரவை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>
கனடாவின் இளையோர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் சந்தேகநபரின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான பின்னணி அல்லது காரணம் குறித்து பொலிஸார் இதுவரை எவ்வித தகவலும் வெளியிடவில்லை.
</p><p>இறந்த காஷி அகஸ்டிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இந்த வாரத் தொடக்கத்தில் இடம்பெற்றதுடன், அவர் அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு நல்ல சிறுவன் என உறவினர்களும் நண்பர்களும் நினைவு கூர்ந்தனர்.
</p><p>இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிஸாரையோ அல்லது குற்றத் தடுப்புப் பிரிவையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T20:20:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 71 வாகனங்களை உடைத்து திருடிய நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mississauga-man-charged-after-71-vehicle-break-1789662804"></link>
            <id>https://canadamirror.com/article/mississauga-man-charged-after-71-vehicle-break-1789662804</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள மிசிசாகா பகுதியில் 71 வாகனங்களை உடைத்து தனியாரின் உடமைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபர் ஒருவரை பீல் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள மிசிசாகா பகுதியில் 71 வாகனங்களை உடைத்து தனியாரின் உடமைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபர் ஒருவரை பீல் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
செப்டம்பர் 3 மற்றும் 6 ஆம் திகதிகளில் அதிகாலை வேளையில் குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளில் இத்திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p> 
நிரந்தர முகவரியற்ற கோரி லவ்டன் என்ற நபரே கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். 
வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தோ அல்லது பூட்டப்படாத கதவுகள் வழியாகவோ உள்ளே நுழைந்து விலையுயர்ந்த பொருட்களைத் திருடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4159e0e-e393-4e89-a0f5-7fde25ba0e6e/26-6aac1655d53f3.webp' /></p><p> இதன்போது வாகனங்கள் எதுவும் திருடப்படவில்லை என்பதுடன், சம்பவங்களின் போது வாகனங்களுக்குள் எவரும் இருக்கவில்லை. </p><p>
வேறு இரு நிதி மோசடி வழக்குகள் தொடர்பிலும் இவர் மீது பிடியாணை நிலுவையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> தற்போது பிணை விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>
சமூக அமைதியைக் கெடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தக் கைது உறுதி செய்வதாக பொலிஸ் தலைமை அதிகாரி நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T20:05:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் செலவுகளைக் கட்டுப்படுத்தக் கடும் நடவடிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strict-measures-in-pakistan-to-curb-expenses-1789667309"></link>
            <id>https://canadamirror.com/article/strict-measures-in-pakistan-to-curb-expenses-1789667309</id>
            <summary type="text">அரசுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் எரிபொருளைச் சேமிப்பதற்கும் பாகிஸ்தான் அரசு தொடர் கடும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் எரிபொருளைச் சேமிப்பதற்கும் பாகிஸ்தான் அரசு தொடர் கடும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது. </p><p>

இன்று (17) வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பிரிவின் அறிவிப்பின்படி, அரசு வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் எரிபொருளின் அளவு 50% ஆல் குறைக்கப்பட்டுள்ளது. </p><p>

எனினும் ஆயுதப்படைகள், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் கூட்டாட்சி வருவாய் வாரியத்தின் செயல்பாடுகளுக்கு இந்த வரம்பு பொருந்தாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d4ce15c-3a0f-4dd8-ad55-cf6de34f0288/26-6aac27ef3e08c.webp' /></p><p> 

குறித்த அறிவிப்பின்படி, 2026/27 நிதியாண்டிற்கான மீண்டும் மீளாத செலவினங்களை வரவு செலவுத் திட்டத்தில் இருந்து மாதந்தோறும் 5% குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p> 

புதிய வாகனங்கள் கொள்முதல் செய்வது மற்றும் சில பயன்பாட்டுப் பொருட்களை வாங்குவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த வரம்புகள் பொருந்தாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் 3 மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசியப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பின் அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் இதர தொடர்புடைய அதிகாரிகள் விமானங்களில் சாதாரண வகுப்பிலேயே (Economy class) பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அரசு நிறுவனங்களின் கூட்டங்களை முடிந்தவரை காணொளி மாநாடு (Video Conference) முறையில் நடத்தவும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருகை தரும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்து அரசு சார்பில் அதிகாரப்பூர்வ விருந்துகளை நடத்த வேண்டாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>

அரசு நிதியில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ கருத்தரங்குகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் அரசின் கேட்போர் கூடங்கள், குழு அறைகள் மற்றும் இதர அதிகாரப்பூர்வ வசதிகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

இது தவிர, திருமண விழாக்கள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் ஒரே ஒரு வகையான உணவை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள கடைகளை மூடும் நேரங்கள் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, சாதாரண கடைகள், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 9.00 மணிக்கும், விழா மண்டபங்கள் இரவு 10.00 மணிக்கும் மூடப்பட வேண்டும்.</p><p> 

உணவகங்கள், கேஃபேக்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் இரவு 11.00 மணி வரை திறக்கப்பட்டிருக்கலாம் என்பதுடன், பொதி (takeaway) மற்றும் வீட்டிற்கு விநியோகம் செய்யும் (home delivery) சேவைகளுக்கு இந்த நேரக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. </p><p>

மருந்தகங்கள், வைத்தியசாலைகள், கிளினிக்குகள், மருத்துவ விநியோகக் கடைகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், மின்சார வாகன சார்ஜிங் மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட சில சேவைகளுக்கு இந்த வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தேவைப்படும் இடங்களில் தனிப்பட்ட விடயங்கள் அடிப்படையில் விலக்குகளைப் பரிசீலிக்க முடியும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T17:49:01+00:00</updated>
        </entry>
    </feed>
