<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-31T01:32:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் ஆசிரியையின் விபரீத செயலால் பரபரப்பு ; தன்னை தானே சித்திரவதை செய்ய 4,000 டொலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785457342"></link>
            <id>https://canadamirror.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785457342</id>
            <summary type="text">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இசை ஆசிரியை, கடுமையான மன உளைச்சல் காரணமாக விசித்திரமான இணையதளம் ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த நபருடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் ஒரு விபரீதமான முடிவை நோக்கி தள்ளியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d476b2e8-630c-41b1-b163-718f867cd963/26-6a6beac0854bb.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலை குற்றச்சாட்டுகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

விசாரணையில் வெளிவந்துள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, தன்னை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்ய வேண்டும் என்பதற்காக, சோனியா அந்த அமெரிக்க நபருக்கு 4,000 டாலர்களை கொடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அமெரிக்காவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து அந்த நபர் குறித்த ஆசிரியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். </p><p style="text-align: justify; ">அப்போது ஆசிரியைக்கு தனது தவறு புரிய வந்துள்ளது. உடனே, தனது தோழி ஒருவருக்கு, ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அடுத்த சில நாட்களில் ஆசிரியை இங்கிலாந்து திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify; ">அப்போது புளோரிடாவின் மேரியன் கவுண்டி காட்டுப் பகுதியில், 4 முறை கத்தியால் குத்தப்பட்டு, ஆழமற்ற ஒரு குழியில் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">

இதனை தொடர்ந்து, சோனியாவின் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற 53 வயதான சந்தேகநபரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
இந்த வினோதமான கொலை வழக்கு தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T01:10:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து நடத்தப்படும் தாக்குதல்கள் ; அதிரடி கொடுக்கும் அமெரிக்கப் படைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-forces-launch-major-military-operation-1785458474"></link>
            <id>https://canadamirror.com/article/us-forces-launch-major-military-operation-1785458474</id>
            <summary type="text">ஜோர்தானில் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.

சவூதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்தானில் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
சவூதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது கடந்த சில நாள்களாக ஈராக்கிலிருந்து 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இதற்குப் பதிலடியாக ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களைக் குறிவைத்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ed342e4-493f-4a41-bd1f-5eab69777a23/26-6a6bef2b9efa4.webp' /></p><p> </p><p>தொடர்ந்து ஜோர்தானில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
</p><p>
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜோர்தானில் உள்ள விமானப் படைத் தளம் மற்றும் அங்குள்ள அமெரிக்க மத்திய படைப்பிரிவின் தலைமையகத்தைக் குறிவைத்து ஈரான் பல ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலில் 5 ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து, ஜோர்தான் ராணுவம் சுட்டுவீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 


இந்த நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் தெற்குப் பகுதியைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல்களைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவில் மூன்று முறை வெடிகுண்டு சத்தம் கேட்டதாகவும், அங்கு குடியிருப்பு பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
</p><p>

 இருப்பினும் இந்தத் தாக்குதல் சேதம் மற்றும் உயிர்ப்பலிகள் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-31T00:41:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்து அச்சுறுத்தும் அமெரிக்கா ; ஹார்மூஸை திறக்கமுடியாது, ஈரான் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-rules-out-reopening-strait-of-hormuz-1785451103"></link>
            <id>https://canadamirror.com/article/iran-rules-out-reopening-strait-of-hormuz-1785451103</id>
            <summary type="text">அமெரிக்காவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களும், தலையீடுகளும் நீடிக்கும் வரை பன்னாட்டு கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கமுடியாது என ஈரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களும், தலையீடுகளும் நீடிக்கும் வரை பன்னாட்டு கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கமுடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.</p><p>

“அமெரிக்காவின் மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும், கடல்வழிப் போக்குவரத்தில் அவர்களின் தலையீடும் தொடரும் வரை, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாது” என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5a29a21-c8ff-4ca5-aa5a-103234c2e2ab/26-6a6bd2c276798.webp' /></p><p>
</p><p>
</p><p>ஹார்மூஸ் நீரிணையை அமைதியான முறையில் இரு நாடுகளும் இணைந்து (50-50 என்ற விகிதத்தில்) நிர்வகிக்கலாம் என்ற அண்டை நாடான ஓமனின் சமரச திட்டத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
</p><p>
மேலும் முன்பு இருந்ததைப்போல, அதாவது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்குவதற்கு முன்பு இருந்ததைப் போல, அனைவருக்கும் தடையற்ற சுதந்திரமான அணுகல் நிலைக்கு ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திரும்பாது என்று ஈரான் மீண்டும் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T22:38:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் ; முன்னரே எச்சரித்த ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/zelensky-warned-before-russia-s-missile-attack-1785435302"></link>
            <id>https://canadamirror.com/article/zelensky-warned-before-russia-s-missile-attack-1785435302</id>
            <summary type="text">ரஷ்யா ஒரு &quot;பெரும் தாக்குதலுக்கு&quot; தயாராகி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று (29) எச்சரித்திருந்த நிலையில், இன்று (30) அதிகாலை இந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா ஒரு "பெரும் தாக்குதலுக்கு" தயாராகி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று (29) எச்சரித்திருந்த நிலையில், இன்று (30) அதிகாலை இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
</p><p>


பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனிலேயே தயாரிக்க அனுமதி பெறுவதற்காக, இந்த வாரம் வொஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஜெலென்ஸ்கி நேரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இத்தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2bfa777-cf26-4f40-9d0d-5820645b5886/26-6a6b94a77d571.webp' /></p><p>
</p><p>


உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய சக்திவாய்ந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>



மத்திய உக்ரைனின் கிரிவி ரிஹ் நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டின் மீது வீசப்பட்ட பொலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 5 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>


தலைநகர் கீவ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று குடியிருப்பு அல்லாத கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டது என மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
</p><p>


போல்டாவா நகரில் நோவா போஷ்டா தபால் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T21:50:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவாய் தீவில் 500 அடி உயரத்திற்கு வெடித்து சிதறும் எரிமலை குழம்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/volcano-erupts-lava-soars-500-feet-high-1785441280"></link>
            <id>https://canadamirror.com/article/volcano-erupts-lava-soars-500-feet-high-1785441280</id>
            <summary type="text">ஹவாய் தீவில் உள்ள கிலாவுவே எரிமலையில் இருந்து 500 அடி உயரத்திற்கு எரிமலை குழம்பு வெடித்து சிதறுவதாக என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹவாய் தீவில் உள்ள கிலாவுவே எரிமலையில் இருந்து 500 அடி உயரத்திற்கு எரிமலை குழம்பு வெடித்து சிதறுவதாக என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.
</p><p>
ஹவாய் தீவு எனப்படும் பிக் தீவில் உள்ள கிலாவுவே எரிமலையானது, உலகின் மிக துடிப்பான எரிமலைகளில் ஒன்றாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9f59e15-0acf-409a-ac06-ca1743c29514/26-6a6bac027ed79.webp' /></p><p> </p><p>இந்த எரிமலையில், கடந்த செவ்வாய் கிழமை இரவு 7.10 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 7 மணிநேரம் நடந்த இந்த எரிமலை வெடிப்பானது, நேற்று காலை 2.36 மணி வரை நீடித்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.
</p><p>
சுமார் 500 அடி உயரத்திற்கு எரிமலை குழம்பு பீறிட்டு வெளியேறுகிறது. இதனால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.


</p><p>இந்த வெடிப்பில், வாயு மற்றும் தீப்பிழம்புகள் வெளிப்பட்டன. எரிமலையின் வடக்கு பகுதியில் இருந்து வெளிப்பட்ட எரிமலை குழம்பு விரைவாக வெளியேறி எரிமலை பள்ளத்தில் 50 சதவீதம் அளவுக்கு நிரம்பி காணப்படுகிறது. </p><p>அதனால் ஏற்பட்ட வெப்பம் மற்றும் சாம்பல் கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரம் அடி உயரத்திற்கு மேலே எழும்பியது.
</p><p>
எனினும் இந்த எரிமலை வெடிப்பின்போது, மக்கள் அதிகம் கூட கூடிய பகுதிகளில், பெரிய திடப்பாறைகளோ அல்லது மக்மா துகள்களோ வெளியேறவில்லை என்றும் ஆனால் சாம்பல் படிவங்கள் கண்டறியப்பட்டு உள்ளன என்றும் தகவல் தெரிவிக்கின்றது.</p>]]></content>
            <updated>2026-07-30T19:54:51+00:00</updated>
        </entry>
    </feed>
