<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-20T20:36:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்திற்கும் தயார் ; அமெரிக்காவிற்கு ஈரானின் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-warns-us-ready-for-any-situation-1784575498"></link>
            <id>https://canadamirror.com/article/iran-warns-us-ready-for-any-situation-1784575498</id>
            <summary type="text">ஈரானிய மண்ணில் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு ஊடுருவல் முயற்சியையும் நொடிப் பொழுதில் முறியடிக்கத் தயார் நிலையில் இருப்பதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய மண்ணில் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு ஊடுருவல் முயற்சியையும் நொடிப் பொழுதில் முறியடிக்கத் தயார் நிலையில் இருப்பதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

தங்களது தரைப்படை நவீன உபகரணங்கள், தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டுத் திறன்களைக் கொண்டு இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ள காவல்படை, அமெரிக்காவின் ஊடுருவல்களுக்கு எதிராக உயர்மட்டத் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99c5f253-f03a-41c6-8a17-3c29125503d7/26-6a5e760b8e1d1.webp' /></p><p>
</p><p>
இது குறித்து தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானிய ஆயுதப்படைகளின் தொடர்ச்சியான விழிப்புணர்வும் தயார் நிலையுமே நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், இந்தத் தயார் நிலை அனைத்துக் களங்களிலும் தீவிரமாகப் பின்பற்றப்படுவதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானியப் படைகள் எதிரிகளின் எந்தவொரு ஆக்கிரமிப்பையும் உடனடியாக முறியடிக்கத் தயார் நிலையில் உள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தரைப்படையின் துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ரூஹுல்லா நூரி சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-20T19:25:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல் மீது தாக்குதல்: 4 இந்தியர்கள் பலி;]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/four-indians-killed-in-attack-on-ship-leaving-1784567360"></link>
            <id>https://canadamirror.com/article/four-indians-killed-in-attack-on-ship-leaving-1784567360</id>
            <summary type="text">உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், மற்றொரு இந்தியர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>
கினியா-பிசாவு (Guinea-Bissau) நாட்டின் கொடியுடன் பயணித்த ‘கோல்டன் லியோ’) எனும் வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இக்கப்பலில் இந்தியா மற்றும் சிரியா நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.</p><p> 
ஞாயிற்றுக்கிழமையன்று இக்கப்பல் மீது ரஷ்யா 3 க்ரூஸ் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் கடற்படை தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7f76178-3749-4ff5-8f2f-ffbf8a2fab5e/26-6a5e5642e2aa6.webp' /></p><p> </p><p>
வணிகக் கப்பல்களை இலக்கு வைப்பதும், அப்பாவி சிவில் பணியாளர்களின் உயிர ஆபத்தில் தள்ளுவதும், கடல்சார் கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரத்தைத் தடுப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது என இந்தியா தெரிவித்துள்ளது.
</p><p>இத்தகைய தாக்குதல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையைக் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T18:46:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேன்கூவர் தீவு அருகே கடலடியில் நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/magnitude-56-earthquake-rumbles-off-bc-1784567688"></link>
            <id>https://canadamirror.com/article/magnitude-56-earthquake-rumbles-off-bc-1784567688</id>
            <summary type="text">கனடாவின் வேன்கூவர் தீவு அருகே ஆழ்கடல் பகுதியில் 5.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 11:4...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் வேன்கூவர் தீவு அருகே ஆழ்கடல் பகுதியில் 5.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 11:41 மணிக்கு இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.</p><p>
 வேன்கூவர் தீவின் வடக்கு முனையில் அமைந்துள்ள ‘போர்ட் ஹார்டி’ பகுதிக்கு தென்மேற்கே 219 கிலோமீட்டர் தொலைவில், கடற்பரப்பிற்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
</p><p>கடலடியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும், இதனால் சுனாமி ஏற்படுவதற்கான அபாயம் எதுவுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19a0878e-98f4-4b05-a572-7c3ac62ea68c/26-6a5e578a0774c.webp' /></p><p>
இந்நிலநடுக்கத்தின் மையம் வேன்கூவர் தீவின் முக்கிய நகரங்களான ‘கேம்ப்பெல் ரிவர்’ மற்றும் ‘போர்ட் ஆல்பர்னி’ ஆகியவற்றின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.</p><p>
நிலநடுக்க மையத்தில் இருந்து தென்மேற்கே 450 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள ‘மெட்ரோ வேன்கூவர்’ பகுதி வரை இந்த அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இதுதவிர, வேன்கூவர் தீவின் வடக்குப் பகுதிகளிலும் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T17:16:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்தப் பகுதியில் காட்டுத்தீ எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/more-than-9000-under-evacuation-alert-1784566989"></link>
            <id>https://canadamirror.com/article/more-than-9000-under-evacuation-alert-1784566989</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள கிம்பர்லி நகரின் மேற்குப் பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாடன்றி வேகமாகப் பரவி வருவதால், நகர் முழுவதற்கும் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள கிம்பர்லி நகரின் மேற்குப் பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாடன்றி வேகமாகப் பரவி வருவதால், நகர் முழுவதற்கும் வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>நகர எல்லைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையால், சுமார் 9,000 குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். </p><p>
இது தவிர, நகருக்கு தென்மேற்கே உள்ள ‘சென்ட் மேரி லேக்’ வீதியிலுள்ள 66 குடியிருப்புகளுக்கும் தனியாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bd2d28c-0ad6-48b6-bde9-e95647df38c7/26-6a5e54cf03eba.webp' /></p><p>
</p><p>சனிக்கிழமை கண்டறியப்பட்ட இத்தீ, பலத்த காற்று மற்றும் காய்ந்த மரங்கள் காரணமாக மிக வேகமாகப் பரவி, சுமார் 567 ஹெக்டேர் பரப்பளவை எட்டியுள்ளது.</p><p>
முறையே 250 ஹெக்டேர் மற்றும் 30 ஹெக்டேர் பரப்பளவில் மேலும் இரு காட்டுத்தீக்கள் பரவி வருகின்றன.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ சேவை அமைப்பின் தகவல்படி, இந்த மூன்று காட்டுத்தீக்களும் செங்குத்தான மலைப் பகுதிகளில் எரிந்து வருவதால், தீயணைப்பு வீரர்கள் நேரடியாகச் சென்று தீயை அணைப்பது பாதுகாப்பற்றதாக உள்ளது.</p><p>
காட்டுத்தீயின் நகர்வுகள் வான்வழியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 3 ஹெலிகாப்டர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கனரக இயந்திரங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T17:07:13+00:00</updated>
        </entry>
    </feed>
