<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-04T07:20:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர் இல்லத்தில் சிறுவனின் அந்தரங்க உறுப்புகளில் மிளகாய்த்தூள் தூவி சித்திரவதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/boy-tortured-chili-powder-sprinkled-private-parts-1788505946"></link>
            <id>https://canadamirror.com/article/boy-tortured-chili-powder-sprinkled-private-parts-1788505946</id>
            <summary type="text">கண்டி, மயிலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயதுடைய சிறுவனை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில், அந்த சிறுவர் இல்லத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி, மயிலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயதுடைய சிறுவனை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில், அந்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியும் அவரது கணவரும் தலாத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h4>மேலதிக விசாரணை</h4><p>



சந்தேகநபர்கள் குறித்த சிறுவனின் அந்தரங்க உறுப்புகளில் மிளகாய்த்தூள் தூவி சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c4a0a2e-08d2-44ce-962f-569aba1139a6/26-6a9a6f5c1dbdf.webp' /></p><p>சித்திரவதைக்கு உள்ளான சிறுவன் முதலில் மாரஸ்ஸன வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில்சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>



சந்தேகநபர்கள் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>



சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:12:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கு ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,290 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-floods-death-toll-rises-to-1-290-1788505357"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-floods-death-toll-rises-to-1-290-1788505357</id>
            <summary type="text">திபெத்- நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது.திபெத்- நேபாள எல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>திபெத்- நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது.</p><p>திபெத்- நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி அன்று பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1650b53d-1d65-41ec-9747-a76e2adb07a7/26-6a9a6d0ebdd13.webp' /></p><p>இந்த வெள்ளத்தில் பல பேர் சிக்கி உயிரிழந்ததுடன் மீட்பு பணியின்போது தொடர்ந்து சடலங்கள் மீட்கப்படுகின்றன. </p><p>உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1,290 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
மேலும் இந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கி, இந்தியர்கள் 275 பேர் உட்பட 4,700-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். </p><p>அவர்களைத் தேடும் பணியில் நேபாள ராணுவத்தினர் மற்றும் சர்வதேச பேரிடர் மீட்புக் குழுவினர் உட்பட 21,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p> பாதிக்கப்பட்ட மலைக்கிராமங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டை தடையின்றி நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T07:02:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘பிறப்புறுப்பு திருட்டு’ வதந்தி ; ஆபிரிக்காவில் 80க்கும் மேற்பட்டோர் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/genital-theft-rumor-over-80-people-killed-africa-1788504490"></link>
            <id>https://canadamirror.com/article/genital-theft-rumor-over-80-people-killed-africa-1788504490</id>
            <summary type="text">‘பிறப்புறுப்பு திருட்டு’ தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட பொய்யான வதந்திகளால், ஆபிரிக்காவின் பல நாடுகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற வன்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>‘பிறப்புறுப்பு திருட்டு’ தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட பொய்யான வதந்திகளால், ஆபிரிக்காவின் பல நாடுகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
‘Genital theft’ என அழைக்கப்படும் இந்த விசித்திரமான வதந்தி, TikTok உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்கள் ஊடாக வேகமாகப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8af0608f-c4b6-4472-8db4-4450efafbce6/26-6a9a6a976a9e4.webp' /></p><p>கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் 2026ஆம் ஆண்டு ஜூலை வரையான காலப்பகுதியில், குறைந்தது ஆறு ஆபிரிக்க நாடுகளில் இந்த வதந்தியை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொதுமக்கள் மீது கும்பல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் BBC மற்றும் அதன் Global Disinformation Unit தெரிவித்துள்ளன.
</p><p>
கும்பலால் ஒருவர் இழுத்துச் செல்லப்படுவது, பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்படுவது மற்றும் கல்லால் அடித்துக் கொல்லப்படுவது போன்ற கொடூரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காங்கோவில் கடந்த ஆண்டு இந்த வதந்தி மீண்டும் பரவத் தொடங்கியதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு முன்னரும் 2008ஆம் ஆண்டில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்ததாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p>

பின்னர் இந்த வதந்தி புருண்டி, ஜாம்பியா, தான்சானியா, மொசாம்பிக், அங்கோலா, மலாவி மற்றும் கென்யா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21a5b23d-467f-4bca-a3a0-1879fb4fc6b6/26-6a9a6a96a041b.webp' /></p><p>இந்நிலையில், இந்த வதந்தியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மொசாம்பிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு ஆறு வார காலப்பகுதியில் மட்டும் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கடந்த மே மாதம் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்தவர்களில் அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சமூக ஊடகங்கள் ஊடாக பரவும் தவறான தகவல்கள் எவ்வாறு உண்மையான வன்முறையாக மாறி மனித உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கின்றன என்பதற்கு இந்தச் சம்பவங்கள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T06:52:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரில் ஆயுதங்களுக்கு பஞ்சமில்லை ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-shortage-of-weapons-for-a-war-with-iran-1788493327"></link>
            <id>https://canadamirror.com/article/no-shortage-of-weapons-for-a-war-with-iran-1788493327</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளுக்கு எந்தவித பஞ்சமும் இல்லை என்று அமெரிக்க ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளுக்கு எந்தவித பஞ்சமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்காவிடம் தங்கு தடையின்றி பயன்படுத்தக்கூடிய அளவுக்கு அதிநவீன ஆயுதங்களும் வெடிமருந்துகளும் பெருமளவில் கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7ee0587-aac0-46b3-aa80-62f0f5e1e34e/26-6a9a3e113db24.webp' /></p><p>

அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் போருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க ராணுவத்தின் ஆயுத கையிருப்பு குறைந்து வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை என்று கூறியுள்ள அவர் ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
ஈரானுடனான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அமெரிக்க ராணுவத்தின் பலம் மற்றும் ஆயுத வலிமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ட்ரம்பின் இந்த பதில் அமைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T06:11:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரழிவு ;9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-people-rescued-alive-nepal-mins-after-9-days-1788502223"></link>
            <id>https://canadamirror.com/article/two-people-rescued-alive-nepal-mins-after-9-days-1788502223</id>
            <summary type="text">&amp;nbsp; இயற்கை கோர தாண்டவத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திரிஷூலி-3ஏ நீர்மின் நிலைய சுரங்கத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இயற்கை கோர தாண்டவத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திரிஷூலி-3ஏ நீர்மின் நிலைய சுரங்கத்தில் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது .</p><p>சஞ்சய் சாஹ் என்ற மெக்கானிக்கல் ஃபோர்மேன் மற்றும் கபீர் மகர்ஜன் என்ற மெக்கானிக்கல் சூப்பர்வைசர் ஆகிய இருவரும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51283d75-3aef-49f7-9c86-b4ceb2ff7248/26-6a9a60d0b5eb3.webp' /></p><h2>இன்னும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை..</h2><p>
</p><p> 
ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்து, திரிஷூலி-3ஏ திட்டத்தில் மட்டும் சுமார் 40 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சுரங்கத்தின் ஆழப்பகுதியில் இருந்து மேலும் பலரின் குரல்கள் கேட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். </p><p>இதனால், இன்னும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
 
நேபாள ராணுவம் மற்றும் ஆயுதம் தாங்கிய காவல் படையினர் சுரங்கத்துக்குள் தீவிரமாக சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p> 
 
அதே நேரத்தில், ரசுவா லாங்டாங் கோலா நீர்மின் திட்ட சுரங்கத்தில் இருந்து இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த திட்டத்தில் பணியாற்றிய 41 பேருடன் இதுவரை தொடர்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
</p><p>
 
மீட்புப் பணிகள் மோசமான வானிலை மற்றும் சேதமடைந்த கட்டமைப்புகளால் சவால்களை சந்தித்து வருகின்றன. 

இருப்பினும், சுரங்கத்துக்குள் இருந்து குரல்கள் கேட்பது குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T06:07:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் கொழும்பை உலுக்கிய துப்பாகிச்சூடு! பெண் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/morning-shooting-rocks-colombo-woman-injured-1788498345"></link>
            <id>https://canadamirror.com/article/morning-shooting-rocks-colombo-woman-injured-1788498345</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியின் ஆறாவது வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியின் ஆறாவது வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/203f4483-99f1-497f-89f0-23a29c3940af/26-6a9a51aac6cbf.webp' /></p><p>
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், கட்டிடத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த இரு பெண்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இச் சம்பவம் அதிகாலை சுமார் 3:00 மணியளவில் இடம்பெற்றது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்களில் ஒருவர் சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T05:11:54+00:00</updated>
        </entry>
    </feed>
