<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-03T23:31:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட காதலி ; கல்லறையில் காதலன் அரங்கேற்றிய செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-honors-girlfriend-killed-in-hamas-attack-1785799057"></link>
            <id>https://canadamirror.com/article/man-honors-girlfriend-killed-in-hamas-attack-1785799057</id>
            <summary type="text">காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
</p><p>
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c9b0f6e-99e4-412c-b180-373b3695207b/26-6a71219326ba7.webp' /></p><p> </p><p>அதேவேளை, காசாவில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர், பொதுமக்கள் என 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
</p><p>
இதனிடையே, 2023 அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியபோது இஸ்ரேலின் நிவக் பாலைவனம் பகுதியில் கிப்ருஸ் ரிம் பகுதியில் சூப்பர் நோவா இசைநிகழ்ச்சி நடைபெற்றது.</p><p> இந்த இசைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீதும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இசைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் 370 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p>

இந்த இசைநிகழ்ச்சியில் பார் அஸ்ரப் (வயது 30) தனது காதலியான லிரோன் பர்டாவுடன் பங்கேற்றார். அப்போது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் லிரோன் பர்டா படுகொலை செய்யப்பட்டார். </p><p>அவரின் உடல் எல்கனா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவால் காதலி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் பார் அஸ்ரப் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.</p><p>


இந்நிலையில், பார் அஸ்ரப் நேற்று எல்கனா நகரில் அடக்கம் செய்யப்பட்ட தனது காதலி லிரோன் பர்டாவின் கல்லறைக்கு சென்றார். அங்கு காதலியின் படுகொலையால் கடந்த 2 ஆண்டுகளுக்குமே மிகுந்த மன உளைச்சலில் இருந்த பார் அஸ்ரப் காதலி லிரோன் பர்டாவின் கல்லறை முன் நின்று துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
</p><p>
இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிசார், விரைந்து சென்று பார் அஸ்ரப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>

இஸ்ரேலில் அக்டோபர் 7ல் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காதல் ஜோடிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-03T23:17:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்கரியில் கோர வீதி விபத்து: சிறுவர் உட்பட 4 பேர் பரிதாப மரணம!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/4-dead-including-at-least-1-child-in-late-night-1785775902"></link>
            <id>https://canadamirror.com/article/4-dead-including-at-least-1-child-in-late-night-1785775902</id>
            <summary type="text">கல்கரியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள &#039;ஸ்டோனி டிரெயில்&#039; சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த கோர முக்கோண வாகன விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்கு பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்கரியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள 'ஸ்டோனி டிரெயில்' சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த கோர முக்கோண வாகன விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் '90 அவென்யூ S.W.' பகுதிக்கு சற்று வடக்கே இந்த விபத்து நடந்துள்ளது.</p><p>
வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில், தவறான திசையில் (தெற்கு நோக்கி) அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று, எதிரே சரியாக வந்த இரண்டு வாகனங்கள் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/845e7b7f-e6b7-4de1-af71-19a91deaebfc/26-6a70c72081e5d.webp' /></p><p>
</p><p>விபத்தின் தீவிரத்தில் சிறுவர் ஒருவர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
</p><p>மேலும் நால்வர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் இருவர் சிறுவர்கள் ஆவர்.
</p><p>இச்சம்பவம் குறித்து கல்கரி காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p> விபத்து காரணமாகப் பல மணி நேரம் மூடப்பட்டிருந்த அப்பாதை, திங்கள்கிழமை காலை 9:45 மணியளவில் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T22:41:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுகூட்டத்தில் ராணுவம் நடத்திய தாக்குதல் ; பொதுமக்கள் 35 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/army-attack-reported-at-public-gathering-1785792024"></link>
            <id>https://canadamirror.com/article/army-attack-reported-at-public-gathering-1785792024</id>
            <summary type="text">வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜென...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. </p><p>இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04777737-af25-4742-ac44-69d5694b4a6a/26-6a71061a4c475.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். </p><p>இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே&nbsp; கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. </p><p>துணை ராணுவம் கட்டுப்பாட்டில் இருந்த தலைநகர் கார்டூமினை கடந்த மார்ச் மாதம் ராணுவம் கைப்பற்றியது. அதேவேளை, ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. </p><p>இந்த மோதலில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.


இந்நிலையில், சூடானின் வடக்கு டர்பர் மாகாணம் ஹர அல் சவியா கிராமம் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. </p><p>இந்த கிராமத்தில் நேற்று மதியம் கிராம&nbsp; பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். </p><p>அப்போது, ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலில் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 35 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-03T21:20:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-sentences-two-alleged-israeli-spies-to-death-1785785179"></link>
            <id>https://canadamirror.com/article/iran-sentences-two-alleged-israeli-spies-to-death-1785785179</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈரான் -...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p>

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி முதல் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74f95c0d-c015-42f6-8b9b-df01ed65ed78/26-6a70eb5d5b281.webp' /></p><p> </p><p>இதனைத் தொடர்ந்து, ஈரானில் மரண தண்டனைகள் நிறைவேற்றுவதும் அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p>
இந்த நிலையில், இருவர் ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு தளங்கள் தொடர்பான தகவல்களை இஸ்ரேலின் மொசாட் உளவாளிகளுக்கு அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. </p><p>இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவருக்கும் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவர்கள் கைது செய்யப்பட்டது பற்றியோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது பற்றியோ எதிலும் குறிப்பிடவில்லை. </p><p>ஆனால், அவர்கள் இஸ்ரேலுக்கு ஒத்துழைத்து ரகசிய தகவல்களை அளித்ததாகக் குறிப்பிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
ஈரானில் கடந்தாண்டு மட்டுமே 1,639 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. </p><p>கடந்த 1989-க்குப் பிறகு பதிவான அதிக எண்ணிக்கை இதுவாகும்.

சில நாள்களுக்கு முன்பு, அரசுக்கு எதிரான போராட்டத்தில் கடந்தாண்டு அதிகாரிகளை தீயிட்டு கொளுத்திய இருவருக்கு பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-03T19:26:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலஸ்தீன நாட்டிற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது சீனா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-support-for-an-independent-palestinian-state-1785776442"></link>
            <id>https://canadamirror.com/article/china-support-for-an-independent-palestinian-state-1785776442</id>
            <summary type="text">பாலஸ்தீன விவகாரத்தில் சீனாவின் உறுதியான ஆதரவையும் பங்களிப்பையும் பாலஸ்தீனத்திற்கான சீன அலுவலகத் தலைவர் சுன் ழென் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என &#039;வாஃப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலஸ்தீன விவகாரத்தில் சீனாவின் உறுதியான ஆதரவையும் பங்களிப்பையும் பாலஸ்தீனத்திற்கான சீன அலுவலகத் தலைவர் சுன் ழென் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என 'வாஃபா' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p> 
சீனா-பாலஸ்தீனம் இடையிலான இருதரப்பு மூலோபாயக் கூட்டாண்மை உருவாக்கப்பட்டதன் 3-வது ஆண்டு நிறைவு பெறவுள்ள நிலையில், தூதர் சுன் ழென் ரமல்லாவில் உள்ள சீனத் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
</p><p>பாலஸ்தீன மக்களுக்குத் தேவையான மனிதநேய மற்றும் வளர்ச்சி உதவிகளைச் சீனா தொடர்ந்து வழங்கும் என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லச் சீனா தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1aa29d-39b2-4529-8b69-17a2f0aa5c8d/26-6a70c93c13629.webp' /></p><p>
</p><p>பாலஸ்தீன தலைவர்களுடனான சந்திப்புகளின் போது, பாலஸ்தீன மக்கள் அனுபவித்து வரும் அநீதிகளின் பரிமாணத்தை நேரடியாக உணர்ந்ததாகத் தூதர் தெரிவித்தார்.
</p><p>பாலஸ்தீன மக்கள் தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும், சுதந்திரமாக ஆட்சி செய்யவும் முழு உரிமை உண்டு என்ற சீனாவின் கொள்கை நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
</p><p>இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், சர்வதேச அரங்கில் பாலஸ்தீனத்தின் நியாயமான உரிமைகளுக்கு ஆதரவாக நின்று 'இரு நாடு தீர்வு' திட்டத்தை முன்னெடுக்கவும் சீனா தொடர்ந்து பாடுபடும் எனத் தூதர் சுன் ழென் உறுதியளித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T18:30:43+00:00</updated>
        </entry>
    </feed>
