<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-08T20:20:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் து நோர் நிலையத்தில் தொடருந்து சேவைகள் ஸ்தம்பிதம் ; பல மணிநேர தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/train-services-at-gare-du-nord-station-paralyzed-1788896772"></link>
            <id>https://canadamirror.com/article/train-services-at-gare-du-nord-station-paralyzed-1788896772</id>
            <summary type="text">ஐரோப்பாவின் பாரிஸ் &#039;கார் து நோர்&#039; (Gare du Nord) தொடருந்து நிலையத்தில் நபரொருவர் மீது தொடருந்து மோதிய விபத்துக்குள்ளானதில் சேவைகள் இரத்து செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவின் பாரிஸ் 'கார் து நோர்' (Gare du Nord) தொடருந்து நிலையத்தில் நபரொருவர் மீது தொடருந்து மோதிய விபத்துக்குள்ளானதில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பல மணிநேர தாமதமாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>தொடருந்து நிலையத்துக்கும் அராஸ் (Arras) பகுதிக்கும் இடையில் இன்று (08) காலை இடம்பெற்ற நபர் ஒருவருடன் தொடர்புடைய தொடருந்து விபத்து காரணமாக, பிரதான தொடருந்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
நபர் ஒருவர் மீது தொடருந்து மோதியதையடுத்து, சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cbfd57e-c9ca-47ce-a71a-e34f9ce0c4e2/26-6aa0660687f5e.webp' /></p><p>இதன் காரணமாக இரு திசைகளிலும் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன், பல சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

விபத்து இடம்பெற்ற இடத்தில் தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக பிரெஞ்சுத் தேசிய தொடருந்து நிறுவனமான SNCF தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் விளைவாக கார் து நோர் தொடருந்து நிலையத்தில் பெரும் பயணிகள் நெரிசலும் குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>நிலையத்தின் தகவல் பலகைகளில் பல தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பல சேவைகளுக்கு நீண்ட நேர தாமதம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக, இப்பகுதியில் இயங்கும் TGV INOUI, OUIGO மற்றும் Eurostar ஆகிய அதிவேக தொடருந்து சேவைகளின் வருகை மற்றும் புறப்பாடுகளில் சுமார் நான்கு மணி நேரம் வரை தாமதம் ஏற்படக்கூடும் என பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7704eb71-4f67-4fd6-aab7-c7a591d13549/26-6aa06605d3b49.webp' /></p><p>மேலும், தொடருந்துகள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், சில பயணங்களின் மொத்த நேரம் வழக்கத்தைவிட அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால் கார் து நோர் நிலையத்திலிருந்து பயணிக்கவுள்ள பயணிகள் தங்களது தொடருந்து சேவைகளின் தற்போதைய நிலை மற்றும் புறப்படும் நேரம் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
விபத்து தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே தொடருந்து சேவைகள் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-08T19:46:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூபெக்கை யாரும் மிரட்ட முடியாது – மாகாண முதல்வர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/frechette-responds-to-trumps-bombardier-threats-1788888512"></link>
            <id>https://canadamirror.com/article/frechette-responds-to-trumps-bombardier-threats-1788888512</id>
            <summary type="text">மொன்றியலைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பிரபல &#039;பாம்பர்டியர்&#039; (Bombardier) விமான தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனையை அமெரிக்காவில் தடை செய்யப்போவதாக அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொன்றியலைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பிரபல 'பாம்பர்டியர்' (Bombardier) விமான தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனையை அமெரிக்காவில் தடை செய்யப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், அதற்கு கியூபெக் மாகாண அரசும் பாம்பர்டியர் நிறுவனமும் வலுவான பதிலடியைக் கொடுத்துள்ளன.
</p><p>பாம்பர்டியர் தயாரிக்கும் விமானங்கள் போதுமான தரம் கொண்டவை அல்ல என்று விமர்சித்த டொனால்ட் டிரம்ப், கனடா தனது விமானங்களை அமெரிக்காவில் தொடர்ந்து விற்க வேண்டுமானால், அவற்றை அமெரிக்காவிலேயே தயாரிக்க வேண்டும் எனச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
</p><p>டிரம்பின் இந்தக் கருத்துக்குப் கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் ஃபிரெஷெட் பதிலடி கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60e2ac97-b01c-454c-bf74-d7ae8910c861/26-6aa045c2643e9.webp' /></p><p>
வம்புச்சண்டைக்கு நாங்கள் வம்புச்சண்டையால் பதிலளிக்க மாட்டோம். பாம்பர்டியர் கியூபெக்கின் பெருமை மற்றும் நமது பொருளாதாரத்தின் அடையாளம். ஆயிரக்கணக்கான கியூபெக் தொழிலாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>சந்தையைப் பெறுவதற்காக எங்கள் நிறுவனங்கள் எங்கு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை வேறு எவரும் தீர்மானிப்பதை கியூபெக் அனுமதிக்காது.</p><p> எங்கள் நிறுவனங்களையும் தொழிலாளர்களையும் உறுதியுடன் பாதுகாப்போம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T17:43:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நேர்ந்த கொடூர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பரிதாப பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/greater-sudbury-crash-claims-two-brothers-lives-1788887958"></link>
            <id>https://canadamirror.com/article/greater-sudbury-crash-claims-two-brothers-lives-1788887958</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கிரேட்டர் சட்பரி பகுதியில் நிகழ்ந்த கொடூர வீதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம் சகோதரர்கள் உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கிரேட்டர் சட்பரி பகுதியில் நிகழ்ந்த கொடூர வீதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>கடந்த செப்டம்பர் 5 அன்று காலை 9:55 மணியளவில், வேலி ஈஸ்ட் பகுதியில் உள்ள 'ஹேன்மர் வேலி ஷாப்பிங் சென்டர்' அருகே 'முனிசிபல் ரோடு 80' பாதையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p> 
கிழக்கே பயணித்த நீல நிற கார், ஷாப்பிங் சென்டர் பார்க்கிங்கில் இருந்து இடதுபுறம் திரும்பி மேற்கே செல்ல முயன்ற கருப்பு நிற எஸ்யுவி வாகனத்துடன் பலமாக மோதியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7125ac12-2e98-496c-a865-f035acc3f93c/26-6aa04397af236.webp' /></p><p> </p><p>
நீல நிற காரை ஓட்டிவந்த 21 வயது இளைஞர் ஆர்டின் யார்க் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். </p><p>
காரில் பயணித்த அவரது சகோதரரான 20 வயது இளைஞர் ட்ரேக் யார்க் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p> 
எஸ்யுவி வாகனத்தை ஓட்டிவந்த 43 வயது பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p>விபத்துக்கான காரணம் குறித்து சட்பரி பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது ‘டாஷ்கேம்’ காட்சிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக சட்பரி பொலிஸாரைத் (705-675-9171) தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T17:42:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா யாருக்கும் பணிந்து போகாது - கனடியப் பிரதமர் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-hits-back-with-counter-tariffs-1788887540"></link>
            <id>https://canadamirror.com/article/canada-hits-back-with-counter-tariffs-1788887540</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா யாருக்கும் பணிந்து போகாது என கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் கனடாவின் பதிலடி வரிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா யாருக்கும் பணிந்து போகாது என கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் கனடாவின் பதிலடி வரிகள் குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>அமெரிக்கா முன்வைத்த ஒப்பந்தத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அதேபோல் அவர்கள் கேட்டதையும் எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. </p><p>இதன் விளைவாக, எங்களைப் பாதிக்கவும், பிரிக்கவும் திட்டமிட்டு அமெரிக்கா இந்தப் புதிய வரிகளை விதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65acff90-1d1b-4c84-83a6-963cad1218a5/26-6aa041f9dec51.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து கனடா விலகுவதற்கு நிச்சயமாகச் சில விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். </p><p>ஆனால், அமெரிக்காவின் கோரிக்கைகளுக்குப் பணிந்து போவது அதைவிட மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கனடிய மக்களுக்குப் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
இந்தச் சவால்களில் இருந்து மீண்டு, கனடா மேலும் வலுவான மற்றும் உறுதியான நாடாக உருவெடுப்பதே இதன் முதன்மை நோக்கம் என தெரிவித்துள்ளார். </p><p>
அமெரிக்காவின் வர்த்தகப் போருக்குப் பதிலடி கொடுக்கும் கனடாவின் நடவடிக்கைகள் குறித்துப் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>
 இதன் மூலம் எந்தவொரு நாடும் இனி கனடாவைப் பிணைக்கைதியாகப் பிடித்து வைக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T17:13:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய படகு: கனடா சுற்றுலாப் பயணியை உயிருடன் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tourist-rescued-after-yacht-found-submerged-1788887059"></link>
            <id>https://canadamirror.com/article/tourist-rescued-after-yacht-found-submerged-1788887059</id>
            <summary type="text">இந்தியப் பெருங்கடலின் தொலைதூரப் பகுதியில் தனது படகு பகுதியளவு நீரில் மூழ்கிய நிலையில், சிறிய ரப்பர் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த கனடாவைச் சேர்ந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியப் பெருங்கடலின் தொலைதூரப் பகுதியில் தனது படகு பகுதியளவு நீரில் மூழ்கிய நிலையில், சிறிய ரப்பர் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த கனடாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியை அவுஸ்திரேலிய மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
</p><p> அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரிலிருந்து இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்குத் தெற்கே உள்ள அவுஸ்திரேலிய பிராந்தியமான 'கிறிஸ்மஸ் தீவு' நோக்கி அவர் தனது கேடமரான் வகை படகில் பயணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d3df428-eff9-4beb-b76f-05b581c2784b/26-6aa04014d7b5e.webp' /></p><p>
ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவிலுள்ள தனது குடும்பத்தினருடன் அவர் இரண்டு முறை தொடர்பு கொள்ளத் தவறியுள்ளார். </p><p>இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரர் உடனடியாக அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார்.</p><p>
தகவல் கிடைத்ததும் அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம் தேடுதல் பணியைத் தொடங்கியது.</p><p> 
கிறிஸ்மஸ் தீவுக்குக் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில், பகுதியளவு நீரில் மூழ்கிய நிலையில் அவரது படகை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.
</p><p>மாலுமி தனது படகின் சிறிய துணைப் படகில் தஞ்சமடைந்திருந்தது தெரியவந்தது.
மீட்பு ஹெலிகாப்டர் மூலம் அவருக்கு உயிர் காக்கும் 'லைஃப் ராஃப்ட்', அவசர தகவல் கருவி, உணவு மற்றும் நீர் ஆகியவை வான்வழியாக வீசப்பட்டன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T17:06:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[50க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து ஆடம்பர கார்களைத் திருடிய கும்பல்: 4 சிறுவர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/4-teens-charged-in-connection-with-50-break-ins-1788885456"></link>
            <id>https://canadamirror.com/article/4-teens-charged-in-connection-with-50-break-ins-1788885456</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டொரண்டோ பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஆடம்பர கார்களின் சாவிகளைத் திருடிச் சென்ற வலையமைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டொரண்டோ பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஆடம்பர கார்களின் சாவிகளைத் திருடிச் சென்ற வலையமைப்பைச் சேர்ந்த 4 சிறுவர்களை யோர்க் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p> 
வீடுகளின் கேரேஜ்கள் மற்றும் வீதிமுற்றங்களில் நிறுத்தப்பட்டிருந்த உயர்ரக ஆடம்பர வாகனங்களின் சாவிகளைத் திருடும் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, பொலிஸார் ‘புராஜெக்ட் ஹவ்லர்’ என்ற பெயரில் சிறப்பு விசாரணையைத் தொடங்கினர். </p><p>
பல வாரங்கள் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், இந்தத் தொடர் திருட்டுகளுக்குப் பின்னால் ஒரு சிறுவர் கும்பல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bb45a68-3131-4369-8efd-bce4c4d6c436/26-6aa039d23ff71.webp' /></p><p> </p><p>
சில சம்பவங்களின் போது, இவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீட்டின் உரிமையாளர்களை மிரட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 
ரிச்மண்ட் ஹில் பகுதியில் முந்தைய நாள் திருடப்பட்ட வாகனத்தில் சந்தேக நபர்கள் பயணிப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். 
டொரண்டோவின் 'தார்ன்க்ளிஃப் பார்க் டிரைவ்' மற்றும் 'ஓவர்லியா பூலேவார்ட்' பகுதியில் வைத்து பொலிஸார் அவ்வாகனத்தைச் சுற்றி வளைத்தனர். </p><p>
தப்பி ஓட முயன்ற 3 சிறுவர்களைத் துரத்திச் சென்று பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 7 ஆடம்பர வாகனங்கள் மீட்கப்பட்டன.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 4வது சிறுவனையும் பொலிஸார் கைது செய்தனர். </p><p>
கைது செய்யப்பட்டவர்கள் டொரண்டோவைச் சேர்ந்த 13, 14 மற்றும் இரண்டு 17 வயதுடைய சிறுவர்கள் ஆவர்.</p><p> 
கனடாவின் ‘இளையோர் குற்றவியல் நீதிச் சட்டத்தின்’ விதிகளின்படி, கைது செய்யப்பட்ட சிறுவர்களின் பெயர்களையோ அல்லது அடையாளங்களையோ வெளியிட பொலிஸாருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
இவ்வழக்கில் மேலும் பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T16:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்ப்ஸ் மலையில் மாயமான கனடா வீராங்கனை: ஒரு வார தேடுதலுக்குப் பின் மீட்புப் பணிகள் நிறுத்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/italy-suspends-search-for-canadian-skyrunner-1788885885"></link>
            <id>https://canadamirror.com/article/italy-suspends-search-for-canadian-skyrunner-1788885885</id>
            <summary type="text">&amp;nbsp;ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மாயமான கனடாவைச் சேர்ந்த &#039;ஸ்கைரன்னர்&#039; கெய்லி மெக்கிரிஸ்டலைத் தேடும் பணியை இத்தாலிய அதிகாரிகள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மாயமான கனடாவைச் சேர்ந்த 'ஸ்கைரன்னர்' கெய்லி மெக்கிரிஸ்டலைத் தேடும் பணியை இத்தாலிய அதிகாரிகள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர். </p><p>
4,478 மீட்டர் உயரமுள்ள மேட்டர்ஹார்ன் சிகரத்தின் இத்தாலி பகுதியில், திங்கள்கிழமை வரை ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாக இத்தாலி மலை மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். </p><p>
தேடுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், கெய்லி மெக்கிரிஸ்டல் பயன்படுத்திய மின்னணு சாதனங்களில் இருந்து ஏதேனும் சிக்னல்கள் வருகின்றதா என்பதை 'வால் டி ஆஸ்டா' பிராந்தியத்தைச் சேர்ந்த மலை மீட்புப் பொலிஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da6da693-1d77-4d63-b107-335858181bb7/26-6aa03b7f60878.webp' /></p><p>38 வயதான கெய்லி மெக்கிரிஸ்டல், கடினமான மற்றும் அதிக உயரமான மலைப்பகுதிகளில் ஓடிப் பழகிய பல ஆண்டுகால அனுபவம் கொண்டவர் என்று 'அத்லெடிக்ஸ் கனடா' அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p> 
மேட்டர்ஹார்ன் சிகரத்தை 5 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஏறி இறங்கி புதிய உலக சாதனை படைப்பதற்காக அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>கடந்த செப்டம்பர் 1 அன்று, சுமார் 3,800 மீட்டர் உயரத்தில் உள்ள மலை தங்குமிடத்திற்கு அருகில் செல்ஃபீ ஒன்றை எடுத்த பிறகு, சுமார் 4,250 மீட்டர் உயரத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த மலை ஏறுபவர்களால் அவர் கடைசியாகப் பார்க்கப்பட்டார். அதன்பின்னர் அவர் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T16:54:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பாரிய விபத்து: 4 இளைஞர்கள் பரிதாப பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271"></link>
            <id>https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271</id>
            <summary type="text">கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கிம்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
நெடுஞ்சாலை 229-ல் மேற்காகப் பயணித்த கார் ஒன்று, நெடுஞ்சாலை 8-ஐக் கடக்க முயன்றபோது, தெற்கு நோக்கி வந்த வேன் ஒன்றுடன் பலமாக மோதியது. </p><p>
இந்தச் சந்திப்பில் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு 'நிற்குமாறு' எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ca2f6d9-f1b1-4749-b10f-db90748128a8/26-6aa03d0187a1d.webp' /></p><p> 
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வீதியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டன. </p><p>அதில் ஒரு வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்தது. 
மேற்கு நோக்கிச் சென்ற காரில் பயணித்த 4 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். </p><p>
காரை ஓட்டிவந்த வின்னிபெக்கைச் சேர்ந்த 18 வயது பெண், கிம்லியைச் சேர்ந்த 18 வயது இளைஞர், சேண்டி ஹூக்கைச் சேர்ந்த 18 வயது பெண் மற்றும் ஒன்டாரியோவின் இயர் ஃபால்ஸைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>வேனில் பயணித்த வின்னிபெக்கைச் சேர்ந்த 49 வயது ஓட்டுநர், ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள் என 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வின்னிபெக் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
</p><p>இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T16:54:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமுடி நிறத்தை மாற்றிய ட்ரம்ப் ; சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய தோற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-changes-hair-color-new-look-goes-viral-1788885332"></link>
            <id>https://canadamirror.com/article/trump-changes-hair-color-new-look-goes-viral-1788885332</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வழக்கமான தலைமுடி தோற்றத்தை மாற்றி புதிய வண்ணத்தில் காட்சியளிப்பது இணையவாசிகளிடையேயும் சமூக ஊடகங்களிலும் பெரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வழக்கமான தலைமுடி தோற்றத்தை மாற்றி புதிய வண்ணத்தில் காட்சியளிப்பது இணையவாசிகளிடையேயும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்தைக் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அவர் காலம் காலமாகப் பராமரித்து வந்த வழக்கமான பொன்னிறம் (Blonde) நிற தலைமுடியை மாற்றி, திடீரென கருப்பு மற்றும் பழுப்பு கலந்த (Brunette) நிற முடிக்கு மாறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/007c6205-08b4-45df-9998-7ab7b9a56f46/26-6aa03955df571.webp' /></p><p>

செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ட்ரம்பின் இந்தப் புதிய தோற்றம் குறித்த நிழற்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன.
</p><p>
முன்னதாக, பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த ட்ரம்ப், "நான் செயற்கை தலைமுடி (Wick) எதுவும் அணிவதில்லை" என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>
இந்த நிலையில், அவரது இந்த திடீர் நிற மாற்றம் மீண்டும் அவர் மீதான கவனத்தை ஈர்த்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-08T16:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரீஸில் பகீர் சம்பவம்; கத்தி முனையில் 400,000 யூரோக்கள் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/goods-worth-400-000-stolen-at-knifepoint-in-paris-1788870311"></link>
            <id>https://canadamirror.com/article/goods-worth-400-000-stolen-at-knifepoint-in-paris-1788870311</id>
            <summary type="text">&amp;nbsp; பிரான்ஸ் பரிஸின் 4ஆம் வட்டாரத்தில் உள்ள Châtelet பகுதியில், கத்தியை காட்டி இரு பாதசாரிகளிடம் இருந்து 395,000 யூரோக்கள் மதிப்புள்ள ரிச்சர்ட் மில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரான்ஸ் பரிஸின் 4ஆம் வட்டாரத்தில் உள்ள Châtelet பகுதியில், கத்தியை காட்டி இரு பாதசாரிகளிடம் இருந்து 395,000 யூரோக்கள் மதிப்புள்ள ரிச்சர்ட் மில் (Richard Mille) கை கடிகாரம் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.</p><p> 

செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.10 மணியளவில் place du Châtelet பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9341d78b-eaad-4911-861c-67384d8c1516/26-6a9ffeaa04d7a.webp' /></p><h2>கத்திகளுடன் வந்த பலர்&nbsp;பாதசாரிகளை வழிமறித்து&nbsp;கொள்ளை</h2><p> கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 400,000 யூரோக்களை தாண்டுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

கத்திகளுடன் வந்த பலர் இரு பாதசாரிகளை வழிமறித்து மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, சுமார் 395,000 யூரோ மதிப்புள்ள செம்மஞ்சள் நிற ரிச்சர்ட் மில் கடிகாரம், ஐபோன் மற்றும் Louis Vuitton நிறுவனத்தின் தலைக்கவசம் ஆகியவை பறிக்கப்பட்டுள்ளன.</p><p>கொள்ளையர்கள் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒருவரை அதே நாளில் BAC குற்றத்தடுப்புப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p> மற்றொரு சந்தேகநபர் பை ஒன்றுடன் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்குள் பல தொலைபேசிகள், அதில் பாதிக்கப்பட்ட ஒருவரின் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 எனினும், விலையுயர்ந்த கடிகாரம் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் இதுவரை மீட்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட இருவரையும் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காட்டியுள்ள நிலையில், அவர்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-08T15:26:37+00:00</updated>
        </entry>
    </feed>
