<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-28T22:26:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் நில அதிர்வு ; 40,000க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/earthquake-japan-40-000-homes-without-electricity-1785271939"></link>
            <id>https://canadamirror.com/article/earthquake-japan-40-000-homes-without-electricity-1785271939</id>
            <summary type="text">ஜப்பானின் கியூசு தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வினைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவித்து வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் கியூசு தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வினைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவித்து வருவதாக கியூசு மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fedcce98-0d77-4d98-81be-d10f7a1daa4d/26-6a691684c0878.webp' /></p><p>கியூசு தீவின் உட்பகுதியில் பதிவான இந்த 7.1 ரிக்டர் அளவிலான நில அதிர்வினால், ஹிகாவா நகரில் குடிநீர் மற்றும் மின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானின் பொது ஊடகமான NHK செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள அவசரகால மின் உற்பத்தி நிலையங்களில் பழுது ஏற்பட்டுள்ளதால், ஹிகாவா நகர மண்டபம் உள்ளிட்ட பல கட்டடங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-28T20:52:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர் ; அமெரிக்காவில் டிரம்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-ukraine-war-continues-zelensky-meet-trump-1785271011"></link>
            <id>https://canadamirror.com/article/russia-ukraine-war-continues-zelensky-meet-trump-1785271011</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (ஜூலை 28) வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (ஜூலை 28) வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய ரஷ்யா–உக்ரைன் போர் மூன்றாவது ஆண்டையும் கடந்தும் தொடரும் நிலையில், இந்தச் சந்திப்பு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>போரின் ஆரம்பம் முதல் உக்ரைனுக்கு அமெரிக்கா இராணுவ, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbff646d-c1c1-47a2-a631-e1c4318ec58b/26-6a6912e53e440.webp' /></p><p>இந்த நிலையில், ஜூலை மாதத்தில் டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையே நடைபெறும் இரண்டாவது நேரடி சந்திப்பாக இது அமைகிறது.
</p><p>
இந்தச் சந்திப்பின் போது, ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான வழிமுறைகள், போர்நிறுத்தம் தொடர்பான முயற்சிகள், அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இதனிடையே, அண்மையில் ஜெலென்ஸ்கி வெளியிட்டிருந்த கருத்தும் இந்தச் சந்திப்பில் கவனம் பெறக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். </p><p>ஜூலை மாதத் தொடக்கத்திலிருந்து வளைகுடா நாடுகள் மற்றும் அங்கு அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் தொடர்பாக ரஷ்யா செயற்கைக்கோள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அந்தத் தகவல்கள் பின்னர் ஈரானுடன் பகிரப்பட்டதாக உக்ரைன் தரப்பில் பதிவாகியுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியிருந்தார்.
</p><p>
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், மத்திய கிழக்கு பாதுகாப்பு நிலைமை மற்றும் ரஷ்யாவின் பிராந்திய நடவடிக்கைகள் குறித்தும் டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையே கருத்துப் பரிமாற்றம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு இந்தச் சந்திப்பு புதிய திருப்புமுனையாக அமையுமா என்பது குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-28T20:36:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் Paris கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பெண்கள் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/3-women-injured-in-a-stabbing-attack-paris-france-1785244952"></link>
            <id>https://canadamirror.com/article/3-women-injured-in-a-stabbing-attack-paris-france-1785244952</id>
            <summary type="text">&amp;nbsp; பிரான்ஸ் தலைநகர் பரிசின் Porte de Clichy பகுதியில் ஜூலை மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 19, 24 மற்றும் 36 வயத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரான்ஸ் தலைநகர் பரிசின் Porte de Clichy பகுதியில் ஜூலை மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 19, 24 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.
</p><p>
 அவர்களில் இருவர் முதுகுப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியில் கடுமையாகக் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களின் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லை என உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b024d18f-9d14-4060-b5b5-66655020c68f/26-6a68ad1a636fa.webp' /></p><h2>உயிருக்கு ஆபத்து இல்லை&nbsp;</h2><p> </p><p>

மூன்றாவது பெண் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 31 வயதுடைய நபர், பணியில் இல்லாத காவல்துறை அதிகாரி ஒருவரின் துரித நடவடிக்கையால் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். </p><p>

அவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தற்போது எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது என்றும், கைது செய்யப்பட்ட நபர் தொடர்பற்ற மற்றும் குழப்பமான கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் அமைச்சர் Laurent Nuñez கூறியுள்ளார். </p><p>

இதுவரை இந்தச் சம்பவம் பயங்கரவாத தாக்குதலாகக் கருதப்படவில்லை என்றும், சம்பவத்தின் உண்மையான பின்னணி குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-28T16:30:42+00:00</updated>
        </entry>
    </feed>
