<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-05T09:33:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு ; 11 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-person-dies-11-missing-in-china-landslide-1788600592"></link>
            <id>https://canadamirror.com/article/one-person-dies-11-missing-in-china-landslide-1788600592</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


சௌடெல் சூறாவளியால் பெய்த கனமழையைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 4 மணியளவில் ஜியாங்சியின் சூச்சுவான் மாவட்டத்திலுள்ள காபிங் நகரில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b18bf9b-3677-4d36-8253-dd3f67931714/26-6a9be1119b3d0.webp' /></p><p>
</p><p>


இதன்போது 12 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் மண்சரிவில் சிக்கியுள்ளதாக சீன அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
</p><p>


காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-05T09:26:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைதிப் பேச்சுக்கு மத்தியில் ரஷ்யா தீவிர தாக்குதல்; உலக நாடுகள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-launches-intense-attacks-ukraine-1788590431"></link>
            <id>https://canadamirror.com/article/russia-launches-intense-attacks-ukraine-1788590431</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ரஷ்யா - உக்ரைன் போரை நுறுத்துவது தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ரஷ்யா - உக்ரைன் போரை நுறுத்துவது தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
</p><p>


ஒடேஸா மற்றும் டினிப்ரோ பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adbb28bb-ff84-49cb-8b5d-25e7ddf71fca/26-6a9bb960c5de4.webp' /></p><h2>&nbsp;ரஷ்யா வான்வழித் தாக்குதல்</h2><p>



அதேவேளை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது தொடர்ந்து 10ஆவது நாளாக ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p> வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், கீவ் நகர மையத்தில் உள்ள உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவு தலைமையகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.



இந்தத் தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர். </p><p>தாக்குதலுக்கு தக்க பதிலடி வழங்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
</p><p>


இதனிடையே, உக்ரைன்–ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் முறையே மாஸ்கோ மற்றும் கீவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


 இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளமை சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T07:37:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்தும் ஆஸ்திரேலியா !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/australia-halt-international-student-admissions-1788586345"></link>
            <id>https://canadamirror.com/article/australia-halt-international-student-admissions-1788586345</id>
            <summary type="text">&amp;nbsp;ஆஸ்திரேலியா புதிய சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

விசா முறைகேடு, அதிக நிராகரிப்பு விகிதங்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆஸ்திரேலியா புதிய சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.</p><p>

விசா முறைகேடு, அதிக நிராகரிப்பு விகிதங்கள் மற்றும் படிப்பை முடிக்காமை ஆகியவை குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, மேலாண்மை (கற்றல்) பட்டதாரி பட்டயப் படிப்பில் புதிய சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்த ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60bb08d9-4700-4fb3-9bf9-e4666861ec7b/26-6a9ba96aad8dc.webp' /></p><p>
</p><p>
ஆஸ்திரேலியாவின் சர்வதேசக் கல்வி மற்றும் மாணவர் விசா அமைப்புகளின் நேர்மை குறித்துக் கவலைகளை எழுப்பும் படிப்புகளை இடைநிறுத்த அல்லது ரத்து செய்ய, தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய அதிகாரங்களைப் பயன்படுத்தும் முதல் முடிவு இது என்று அல்பேனிய அரசாங்கம் கூறியுள்ளது.</p><p>

BSB80120 என்ற பாடக் குறியீட்டால் அடையாளம் காணப்பட்ட இந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்களின் வெளிநாட்டு மாணவர்களுக்கான நிறுவனங்கள் மற்றும் படிப்புகளின் காமன்வெல்த் பதிவேட்டில் உள்ள பதிவு தானாகவே இடைநிறுத்தப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.</p>]]></content>
            <updated>2026-09-05T07:31:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸை உலுக்கிய வெப்ப அலை ; 7,000 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heatwave-rocks-france-7-000-dead-until-july-1788586851"></link>
            <id>https://canadamirror.com/article/heatwave-rocks-france-7-000-dead-until-july-1788586851</id>
            <summary type="text">&amp;nbsp; பிரான்ஸ் நாட்டில் இந்த கோடைகாலத்தில் கொடூர வெப்ப அலை காரணமாக, ஜூலை மாத இறுதி வரை மட்டும் சுமார் 7,000 பேர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரான்ஸ் நாட்டில் இந்த கோடைகாலத்தில் கொடூர வெப்ப அலை காரணமாக, ஜூலை மாத இறுதி வரை மட்டும் சுமார் 7,000 பேர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் (Stéphanie Rist) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
 1900-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரான்ஸ் கண்ட மிக மோசமான கோடைக்காலமாக இது பதிவாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதை விட மிக அதிகமாக உள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a21d8f-887d-4fe9-9c78-c999ab174d23/26-6a9bab6546909.webp' /></p><h2>இரு வார காலப்பகுதியில் வீசிய தீவிர வெப்ப அலை</h2><p>
</p><p>
பிரெஞ்சு பொது சுகாதார அமைப்பின் (Santé publique France) பூர்வாங்க தரவுகளின்படி, ஜூன் 17 முதல் ஜூலை 2 வரையிலான இரு வார காலப்பகுதியில் வீசிய தீவிர வெப்ப அலையின் போது மட்டும் சுமார் 5,764 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p> 

இது வழக்கமான மரணங்களின் விகிதத்தை விட 36 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து வீசிய இரண்டாவது கட்ட வெப்ப அலையில் மேலும் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 7,000-ஐ கடந்துள்ளது.</p><p>

இதுகுறித்துத் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுகாதார அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட், “தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக வீசி வரும் கடுமையான வெப்ப அலையால் நமது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு பெரும் சவாலைச் சந்தித்துள்ளது. பெருநகரங்களில் தனியாக வாழ்ந்த முதியோர்கள் மற்றும் நோயாளிகளே இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறினார். </p><p>

மேலும், முழுமையான மற்றும் இறுதியான மரணப் புள்ளிவிவரங்கள் வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் (Stéphanie Rist) சுட்டிக்காட்டினார்.
</p><p>
காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவாக ஐரோப்பிய கண்டம் முழுவதிலும் வெயில் கொளுத்தி வரும் சூழலில், பிரான்சில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள் 2003-ஆம் ஆண்டு 15,000 பேர் பலியான கொடூர நிகழ்வுக்குப் பிறகு பதிவான மிக அதிகபட்ச மரண விகிதமாகப் பார்க்கப்படுகிறது

.</p><p> காட்டுத்தீ மற்றும் முன்னெப்போதும் இல்லாத வெப்பத்தால் நிலைகுலைந்துள்ள பிரான்ஸ் அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அவசரநிலையைச் சமாளிக்கப் புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-05T05:37:52+00:00</updated>
        </entry>
    </feed>
