<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-12T14:19:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்பிற்கு எதிராக நெதன்யாகு எடுத்துள்ள அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/netanyahu-s-bold-move-against-trump-for-gaza-1786512036"></link>
            <id>https://canadamirror.com/article/netanyahu-s-bold-move-against-trump-for-gaza-1786512036</id>
            <summary type="text">இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமை உகல நாடுகளில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இத் தகவலை சவூதி அரேபியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதரும் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தின் சார்ஜ் டி அஃபேர்ஸாகப் பணியாற்றியவருமான மைக்கேல் ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p>ட்ரம்ப்பிடமிருந்து எத்தகைய எதிர்வினை வந்தாலும் அதை எதிர்கொள்வதை விட, அத்திட்டத்தைப் பகிரங்கமாக நிராகரிப்பதே தனக்கு நல்லது என்று அவர் கணக்கிடுகிறார் என நான் நினைக்கிறேன் என்று ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p>இது முதன்மையாக அடுத்த சில மாதங்களில் வரவுள்ள நெதன்யாகுவின் தேர்தல் வாய்ப்புகள் பற்றியது என்று அவர் மேலும் கூறினார்.</p><p>ட்ரம்ப்புடன் அவருக்குள்ள உறவு எப்படியிருந்தது அல்லது இந்தத் திட்டத்தின் சில அம்சங்களை அவர் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமான விடயங்கள் என்றும் தனது வாக்காளர்களுக்கு அவர் பொதுவெளியில் என்ன சொல்கிறார் என்பதுதான் அவருக்கு இப்போது முக்கியம் என்றும் ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T13:33:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலூசிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல் ; 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pakistan-launches-attack-in-balochistan-30-killed-1786539946"></link>
            <id>https://canadamirror.com/article/pakistan-launches-attack-in-balochistan-30-killed-1786539946</id>
            <summary type="text">பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்டதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களில் 30க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்டதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களில் 30க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>சுராப் மாவட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், குடியிருப்புப் பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகள் மூலம் பாகிஸ்தான் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>பலூசிஸ்தான் முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வைத்திய சிகிச்சை வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் பலூச் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p>பலூசிஸ்தானில் சுதந்திரம் கோரும் ஆயுதக் குழுக்களுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நீண்டகாலமாக மோதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்தத் தாக்குதல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-12T13:06:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை உரிமை எங்களுக்கு மட்டுமே; ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/the-strait-of-hormuz-belongs-only-to-us-trump-1786538367"></link>
            <id>https://canadamirror.com/article/the-strait-of-hormuz-belongs-only-to-us-trump-1786538367</id>
            <summary type="text">தற்போது ஹோர்முஸ் நீரிணையின் மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.நாங்கள் ஹோர்மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது ஹோர்முஸ் நீரிணையின் மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>நாங்கள் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகக் கட்டுப்படுத்துகிறோம். அதன் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது.&nbsp;</p><p>ஈரானிடம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என டொனால்ட் ட்ரம்ப்&nbsp;&nbsp;செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், ஈரான் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் என்னிடம் தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-12T12:42:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவில் 250-ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/colombia-earthquake-death-toll-surpasses-250-1786528119"></link>
            <id>https://canadamirror.com/article/colombia-earthquake-death-toll-surpasses-250-1786528119</id>
            <summary type="text">கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250-ஐ கடந்துள்ளதாக&amp;nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250-ஐ கடந்துள்ளதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த 10ஆம் திகதி 7.4 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.</p><p>நிலநடுக்கத்தினால் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.</p><p>சில கட்டடங்கள் முற்றாக இடிந்து விழுந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-12T09:48:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்பாப்வே - ஏரியில் படகு கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/zimbabwe-15-dead-after-boat-capsizes-in-lake-1786527402"></link>
            <id>https://canadamirror.com/article/zimbabwe-15-dead-after-boat-capsizes-in-lake-1786527402</id>
            <summary type="text">சிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் பயணிகள் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் பயணிகள் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>மேலும் 27 பேர் மாயமாகியுள்ள நிலையில், தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 77 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள தீவு ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>90 பேர் மட்டும் பயணம் செய்யும் திறன் கொண்ட படகொன்று, அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>சிம்பாப்வேயின் சிவில் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரப்பூர்வ பயணச்சீட்டு விற்பனைத் தரவுகளின்படி, விபத்துக்குள்ளான இப்படகில் 114 பயணிகளும் 5 பணியாளர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பயணச்சீட்டு தேவையில்லாத சிறு குழந்தைகள் எத்தனை பேர் படகில் இருந்தார்கள் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T09:36:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று வானில் நிகழப் போகும் அதிசயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/meteor-shower-from-midnight-tomorrow-morning-1786523729"></link>
            <id>https://canadamirror.com/article/meteor-shower-from-midnight-tomorrow-morning-1786523729</id>
            <summary type="text">இன்று (12.08.2026) இரவு சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, வானில் உச்சத்தை அடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (12.08.2026) இரவு சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, வானில் உச்சத்தை அடையவுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
பெர்சீட் விண்கல் மழையானது, 109P/Swift-Tuttle என்ற வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசித் துகள்கள் வழியாக பூமி பயணிக்கும் போது உருவாகிறது.</p><h2>ஒளி மாசு குறைந்த பகுதிகளில்</h2><p>

இந்தச் சிறிய விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் மிக வேகமாக நுழையும்போது, வளிமண்டலத்துடனான உராய்வினால் வெப்பமடைந்து ஒளிர்கின்றன.</p><p></p><p>இரவு வானில் காணப்படும் இந்த ஒளிரும் தடங்களே பொதுவாக ‘விண்கல் மழை’ என அழைக்கப்படுகின்றன.
</p><p>
இன்றைய பெர்சீட் விண்கல் மழையின் போது, வானிலை மற்றும் வானத்தை மறைக்கும் நிலைமைகள் சாதகமாக இருந்தால், ஒரு மணி நேரத்தில் 50 முதல் 100 வரையிலான விண்கற்களைக் காணக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் வானியல் பிரியர்களுக்கு இது வானில் காணக்கூடிய குறிப்பிடத்தக்க இயற்கைக் காட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

ஒளி மாசு குறைந்த பகுதிகளிலிருந்து, நகர்ப்புற விளக்குகளிலிருந்து விலகி, திறந்த வானத்தை நோக்கிப் பார்ப்பதன் மூலம் இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T09:12:58+00:00</updated>
        </entry>
    </feed>
