<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-07T10:41:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்த 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/21-israeli-spy-suspects-detained-by-iran-1786096821"></link>
            <id>https://canadamirror.com/article/21-israeli-spy-suspects-detained-by-iran-1786096821</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்த 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது செய்யப்பட்டதாக, ஈரானிய அரசு அறிவித்துள்ளது.

ஈரானின் தென்கிழக்கு மாகாணமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்த 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது செய்யப்பட்டதாக, ஈரானிய அரசு அறிவித்துள்ளது.
</p><p>
ஈரானின் தென்கிழக்கு மாகாணமான கெர்மனில், இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாத் அமைப்பிற்காகச் செயல்பட்ட கூலிப்படையைச் சேர்ந்த 21 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bab0d533-1189-4abc-915e-570635eb61c8/26-6a75acb71c937.webp' /></p><p>



இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 21 பேரும் ஈரான் ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்து மொசாத் உளவாளிகளுக்கு அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இஸ்ரேலிய உளவாளிகளுக்கான தண்டனைக் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
</p><p>
முன்னதாக, 2026 ஜனவரி முதல் ஈரானில் 52 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T10:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-unveils-key-announcement-for-the-us-1786080270"></link>
            <id>https://canadamirror.com/article/trump-unveils-key-announcement-for-the-us-1786080270</id>
            <summary type="text">உலகளாவிய மற்றும் அமெரிக்காவின் எரிபொருள் விலைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் மீதான போர் &quot;மிக விரைவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய மற்றும் அமெரிக்காவின் எரிபொருள் விலைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் மீதான போர் "மிக விரைவில்" முடிவடையும் எனத் தாம் நினைப்பதாகத் தெரிவித்தார்.
</p><p>
"அவர்களால் இனி அதிக காலம் நீடிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்," என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7346414-12f7-4135-a12b-7c82fedaa43e/26-6a756c10215de.webp' /></p><p>
</p><p>
தற்போது, ஈரான் ஓமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
</p><p>
முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், இரு தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பாதையை முறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை எட்டும் கட்டத்தை அந்த இரண்டு நாடுகளும் நெருங்கியுள்ளன என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-07T09:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைக்குள் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூடு ; ஆசிரியர்கள் உட்பட 06 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/gun-attack-at-thailand-school-shocks-public-1786092173"></link>
            <id>https://canadamirror.com/article/gun-attack-at-thailand-school-shocks-public-1786092173</id>
            <summary type="text">தாய்லாந்தின் நோந்தாபுரி மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (07) வெள்ளிக்கிழமை காலை மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் நோந்தாபுரி மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (07) வெள்ளிக்கிழமை காலை மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்படக் குறைந்தது 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>


அண்மைக்காலத்தில் தாய்லாந்து பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f83e6a9-0ce8-44a5-80cd-081ca1fcca0c/26-6a759a8f1762f.webp' /></p><p>

பாங்கொக்கிற்கு வடக்கே நோந்தாபுரி மாகாணத்தில் சுமார் 3,000 மாணவர்கள் கல்வி பயிலும் பிரபல இடைநிலைப் பாடசாலையான 'டெப்சிரின் நோந்தாபுரி பாடசாலை' வளாகத்திலேயே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தாக்குதலில் 03 ஆசிரியர்கள் மற்றும் 03 மாணவர்கள் உட்பட 06 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் திரைராங் பிவ்பான் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.</p><p>
துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவன் உயிரிழந்துவிட்டதாக ஆரம்பகட்ட செய்திகள் வெளியாயினும், அவன் உயிருடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>

துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பாடசாலை வகுப்பறையின் தரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இத்துப்பாக்கி மாணவனின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமானது எனக் நம்பப்படுகிறது.
</p><p>
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T08:44:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கொள்ளை முயற்சியின்போது கொல்லப்பட்ட இந்தியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-dies-in-canada-robbery-attempt-1786092068"></link>
            <id>https://canadamirror.com/article/indian-dies-in-canada-robbery-attempt-1786092068</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவரைக் கொன்றதாக கனேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டன் நகரில், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவரைக் கொன்றதாக கனேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டன் நகரில், கொள்ளை முயற்சி ஒன்றின்போது இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
</p><p>
எட்மண்டனில் மதுபான விடுதி ஒன்றை நடத்திவரும் சுக்ஜீத் சிங் ரந்தாவா (48) என்பவர், புதன்கிழமை இரவு தனது விடுதியை மூடிக்கொண்டிருந்திருக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbd830f7-d72e-4cd8-9c85-671157fea5d8/26-6a759a25bf9ab.webp' /></p><p>

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சிங் கடையில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவரை சிங் தடுக்க, அந்த நபர் சிங்கை தாக்கியுள்ளார்.
</p><p>
தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, சிங் படுகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.
</p><p>
முதலுதவி சிகிச்சைக்குப் பின் சிங்கை அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில், நிக்கோலஸ் (Nicholas Butler-Chowace, 22) என்னும் கனேடியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
</p><p>
அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
சிங்கின் நண்பரான ரவி ப்ரகாஷ் என்பவர் கூறும்போது, சிங் கடையை மூடிக்கொண்டிருக்கும்போது, நிக்கோலஸ் அங்கு வந்து மதுபானம் திருட முயன்றதாகவும், அதை தடுத்த சிங் தாக்கப்பட்டதாகவும், தன் கடைக்குள்ளேயே அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
தங்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என்று கூறும் ரவி, தானும் சிறு தொழில் ஒன்றை நடத்தி வருவதாகவும், தானும் தனது ஊழியர்களும்கூட இதேபோல தாக்கப்பட்டுள்ளதாகவும், இதே நிலை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T08:43:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க குடியேற்ற விண்ணப்பங்களில் கடுமையான மாற்றங்கள் ; உடனடியாக நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/america-introduces-tough-new-immigration-rules-1786086267"></link>
            <id>https://canadamirror.com/article/america-introduces-tough-new-immigration-rules-1786086267</id>
            <summary type="text">அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) குடியேற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் விதத்தில் புதிய கடுமையான மாற்றங்களை உடனடியாக நடைமுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) குடியேற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் விதத்தில் புதிய கடுமையான மாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தியுள்ளது.</p><p>

போதிய சான்றுகளோ அல்லது தேவையான ஆவணங்களோ இல்லாமல் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக நிராகரிக்க அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aa0444d-fe12-4bcf-8d24-ffc6a477e1a6/26-6a75837cd92c1.webp' /></p><p>
</p><p>
இதற்கு முன்னர் விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் அல்லது ஆவணக் குறைபாடுகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்க 12 வாரங்கள் (3 மாதங்கள்) கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. </p><p>இனி அந்த அவகாசம் கிடையாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

புதிதாக தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமின்றி, ஏற்கனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும் என்றும் குறிப்பிடப்படுகிறது.</p><p> 


முழுமையற்ற விண்ணப்பங்களை தாக்கல் செய்து, அந்த அவகாசத்தைப் பயன்படுத்தி பணி அனுமதி உள்ளிட்ட சலுகைகளை முறையற்ற வழிகளில் சிலர் பெற்று வருவதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-07T07:04:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் வரிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு ; இறக்குமதியாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் மீள்கொடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/supreme-court-makes-sweeping-decision-on-trump-tax-1786052875"></link>
            <id>https://canadamirror.com/article/supreme-court-makes-sweeping-decision-on-trump-tax-1786052875</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த அதீத வரி நடவடிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த அதீத வரி நடவடிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பெரும் தொகை மீள வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களுக்கு அதிகளவிலான வரிகளை விதித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6f2faa6-7b3b-4917-b014-d693d30054df/26-6a75010d2eb7a.webp' /></p><p>இந்த வரி நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவின் சில மாகாணங்களும், பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
</p><p>
இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், குறித்த அளவிலான அதீத வரிகளை விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என தீர்ப்பளித்ததுடன், டிரம்ப் நிர்வாகம் விதித்த வரிகளை ரத்து செய்தது.
</p><p>
மேலும், அந்த வரிகளின் மூலம் இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை மீள வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
இதனையடுத்து, மொத்தமாக வசூலிக்கப்பட்ட 15.77 லட்சம் கோடி ரூபாய் தொகையில், இதுவரை சுமார் 60 சதவீதமான 9.50 லட்சம் கோடி ரூபாய் இறக்குமதியாளர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தகவலை அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு, உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
மேலும், மீதமுள்ள தொகைகளை திருப்பி வழங்குவதற்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அவையும் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-07T05:00:11+00:00</updated>
        </entry>
    </feed>
