<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-13T14:16:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயர்லாந்துக்கு ட்ரம்ப் திடீர் பயணம் ; போராட்டத்தில் குதித்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-makes-surprise-trip-to-ireland-1789305329"></link>
            <id>https://canadamirror.com/article/trump-makes-surprise-trip-to-ireland-1789305329</id>
            <summary type="text">அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரவிருக்கிறது. மற்றொரு பக்கம் ஈரான் நாட்டுடன் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரவிருக்கிறது. மற்றொரு பக்கம் ஈரான் நாட்டுடன் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது. </p><p>இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அயர்லாந்து நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61492a0c-e08c-48ab-ae4a-39fd350d74f9/26-6aa6a1f33b8db.webp' /></p><p>அங்குள்ள டூன்பெக் நகரில் தனது நிறுவனத்திற்குச் சொந்தமான மைதானத் தில் நடக்கும் 'ஐரிஷ் ஓபன்' கோல்ப் போட்டியை ரசிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.</p><p>


இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இறுதிப்போட்டியில் அவரே நேரில் நின்று கோப்பையையும் வழங்குகிறார்.</p><p> இது அரசுமுறைப் பயணம் இல்லை என்றாலும், அயர்லாந்து அதிபர் கேத்தரின் கான்னோலி மற்றும் பிரதமர் மைக்கேல் மார்ட்டின் ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார். </p><p>அயர்லாந்தில் ட்ரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T13:59:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானின் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-s-open-warning-to-us-and-israel-1789306818"></link>
            <id>https://canadamirror.com/article/iran-s-open-warning-to-us-and-israel-1789306818</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் தமது இராணுவம் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை ஆகியன இணைந்து உடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் தமது இராணுவம் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை ஆகியன இணைந்து உடனடி வலுவான மற்றும் புத்திசாலித்தனமான பதிலடியைக் கொடுக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
ஈரானிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹடாமி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e730095d-e143-4e80-ba01-94fa112abfd1/26-6aa6a7c4326d6.webp' /></p><p>
</p><p>
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேஜர் ஜெனரல் அமீர் ஹடாமி "தமது நாட்டின் இரண்டு படைகளுக்கும் இடையே நிலவும் ஒற்றுமை எதிரிகளின் சதித்திட்டங்களுக்கு எதிராக நாட்டைக் காக்கும் இரும்புக் கேடயமாகச் செயல்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அகமத் வஹீதி எதிரி நாடுகள் ஈரானின் இராணுவப் பலத்தை மிகவும் குறைவாகக் கணித்துத் தவறிழைத்து விட்டதை தற்போது உணர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார்.</p><p>

ஈரானிய இராணுவமும் ஐசுபுஊ அமைப்பும் அமெரிக்க எதிர்ப்புக்கான இரு முக்கியப் பெரும் படைகளாகத் திகழ்வதாகவும் அண்மைய போர்களில் பயங்கரவாதக் குழுக்களுக்கு மிகக் கடுமையான அடிகளைக் கொடுத்துள்ளதாகவும் வஹீதி தெரிவித்தார்.
</p><p>
அத்துடன், ஈரானின் உண்மையான இராணுவ வலிமை போர்க்களத்தில் வெளிப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-13T13:40:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியா படகு விபத்தில் அதிகரித்த பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indonesia-boat-accident-death-toll-rises-1789301161"></link>
            <id>https://canadamirror.com/article/indonesia-boat-accident-death-toll-rises-1789301161</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் ஜாவா கடற்பரப்பில் மோசமான வானிலை காரணமாக பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் ஜாவா கடற்பரப்பில் மோசமான வானிலை காரணமாக பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>



தற்போதைய நிலவரப்படி, இந்த கப்பல் விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 130 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adae3b52-8d36-4631-ad33-8e400fbfab04/26-6aa691aae8c71.webp' /></p><p>“Virgo Transport 8” என்ற குறித்த கப்பல் 243 பேருடன் கிழக்கு ஜாவாவில் உள்ள சுரபாயாவிலிருந்து தெற்கு கலிமந்தனில் உள்ள பஞ்சர்மசினை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.</p><p>



கடுமையான வானிலை மற்றும் கடல் சீற்றத்துக்கு மத்தியில் கப்பல் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதுவரை 113 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 107 பேர் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>



உயிரிழந்த 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து காணாமல் போன 130 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
</p><p>


கப்பல் மூழ்கியதா அல்லது கவிழ்ந்ததா என்பது தொடர்பில் ஆரம்ப தகவல்களில் குழப்பம் காணப்பட்ட நிலையில், கப்பல் கவிழ்ந்ததாகவே இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். </p><p>



விபத்துக்கான துல்லியமான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T12:06:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: ஒருவர் பலி; மூவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/commercial-ship-attacked-in-strait-of-hormuz-1789294047"></link>
            <id>https://canadamirror.com/article/commercial-ship-attacked-in-strait-of-hormuz-1789294047</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மோதல் நிலவி வரும் வேளையில், அங்கு வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மோதல் நிலவி வரும் வேளையில், அங்கு வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>இந்தத் தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0365f89c-86b9-4135-a888-91394b34588e/26-6aa675e0c40de.webp' /></p><p>

”ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஹெங்காம் மற்றும் கெஷ்ம் தீவுகளின் கடற்கரைக்கு அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒருவர் பலியானார். மூவர் காயமடைந்துள்ளனர்” என கெஷ்ம் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது போன்ற விவரங்களை அவர்கள் குறிப்பிடவில்லை.


</p><p>ஹோர்முஸ் நீரிணையில் உள்ள மிகப்பெரிய தீவான கெஷ்மைச் சுற்றி நேற்று இரவு பல தாக்குதல்கள் நடைபெற்றதாகப் பதிவாகியுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில், அதுதொடர்பாக ஓமனுக்கு ஈரானுக்கும் இடையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
</p><p>
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் 6 மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரில், ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மோதலுக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
</p><p>
அமெரிக்கா - ஈரான் இடையே சில வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த போர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.</p><p>ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் இந்த போரால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாரம் மட்டுமே கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-13T11:11:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை ; ஈரான் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-need-not-act-as-middle-east-guardian-iran-1789288321"></link>
            <id>https://canadamirror.com/article/us-need-not-act-as-middle-east-guardian-iran-1789288321</id>
            <summary type="text">மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.



இந்தியாவில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.</p><p>



இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக 11 முக்கிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் இந்தியா சென்றுள்ள நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fabb5801-c11b-44c6-b8c5-ee5525f7d00b/26-6aa65f82e71f4.webp' /></p><p>தொடர்ந்து இன்று மலேசியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>


இதன்போது கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி, ஈரான் மற்றும் அதன் பிராந்திய நாடுகளின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை பிராந்தியத்தில் உள்ள முக்கிய சக்திகளும் அந்நாடுகளும் இணைந்தே உறுதி செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
</p><p>


மேலும், மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை என்றும், ஈரான் மக்கள் பல்வேறு அநீதிகளை எதிர்கொண்ட போதிலும், தாம் போரைத் தொடர விரும்பவில்லை என்றும், அமைதிக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது.</p><p> உலகின் முக்கிய எரிபொருள் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
</p><p>


இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p> ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மோதல் காரணமாக மசகு எண்ணெய் விலையும் அதிகரித்து வருவதுடன், இந்த வாரம் ஒரு கொள்கலன் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T08:32:10+00:00</updated>
        </entry>
    </feed>
