<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-20T13:29:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் தடைகளால் இருளில் மூழ்கிய கியூபா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cuba-plunged-into-darkness-due-to-us-sanctions-1789910301"></link>
            <id>https://canadamirror.com/article/cuba-plunged-into-darkness-due-to-us-sanctions-1789910301</id>
            <summary type="text">அமெரிக்காவின் எரிசக்தித் தடையால் பாதிக்கப்பட்டுள்ள கியூபாவில், மீண்டும் ஒரு பெரும் தேசிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால்&amp;nbsp; நாடு இருளில் மூழ்கியுள்ளது.ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் எரிசக்தித் தடையால் பாதிக்கப்பட்டுள்ள கியூபாவில், மீண்டும் ஒரு பெரும் தேசிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால்&nbsp; நாடு இருளில் மூழ்கியுள்ளது.</p><p>நாட்டின் மத்திய பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த மின்கடத்திப் பாதைகளில் ஏற்பட்ட கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாகவே இந்த மின்கட்டமைப்பு முடக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>2024 பிற்பகுதிக்குப் பிறகு நிகழ்ந்த 12வது பிரதான மின்வெட்டான இது, நடப்பு ஆண்டில் மட்டும் ஏற்படும் 6வது சம்பவமாகும்.</p><p>இதனால் மக்கள் குடிநீர், சமையல் எரிவாயு மற்றும் மின்சாரமின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.</p><p>தலைநகர் ஹவானாவில் பாதிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், நிலைமைக்கேற்ப படிப்படியாக மின்சாரம் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் 'யூனியன் எலக்ட்ரிகா' (UNE) நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்காவின் இந்த எண்ணெய்த் தடையால் கியூபா ஒரு "அமைதியான காசாவாக" மாறும் அபாயம் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T13:18:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[படைகளை குறைக்க அமெரிக்கா திட்டம்; நேட்டோ நாடுகள் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/reduce-troops-in-europe-us-decision-1789881922"></link>
            <id>https://canadamirror.com/article/reduce-troops-in-europe-us-decision-1789881922</id>
            <summary type="text">ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாகக் குறைக்க அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.</p><p>ஐரோப்பிய நேட்டோ (NATO) நாடுகள் அமெரிக்காவிற்குத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்தது "வெட்கக்கேடானது" என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் சாடியுள்ளார்.</p><p>ஐரோப்பாவிலுள்ள 68,000 அமெரிக்க வீரர்களில் மூன்றில் ஒரு பங்கினரை (முக்கியமாக ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்) திரும்பப் பெறுவது, அல்லது 40,000 வீரர்கள் மற்றும் ஆயுதங்களை வெளியேற்றுவது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது.</p><p>இந்த நடவடிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பாதிப்பதுடன், ரஷ்யாவிற்குச் சாதகமான சமிக்ஞையை அனுப்பக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>வர்த்தக வரிகள், கிரீன்லாந்து விவகாரம் மற்றும் நேட்டோ நிதியுதவி போன்ற காரணங்களால் அமெரிக்கா-ஐரோப்பா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதேபோல தாய்வான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவும் தளர்ந்து வருவதாகக் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-20T13:14:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தின் 'இணை உறுப்பினர்' அழைப்பு: கனடா பிரதமருக்கு சவாலாக உருவெடுக்குமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nanos-canadians-back-closer-eu-ties-but-not-1789888046"></link>
            <id>https://canadamirror.com/article/nanos-canadians-back-closer-eu-ties-but-not-1789888046</id>
            <summary type="text">&amp;nbsp;ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவதை கனடா மக்கள் வரவேற்ற போதிலும், இந்த விவகாரம் கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அரசியல் ரீதியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவதை கனடா மக்கள் வரவேற்ற போதிலும், இந்த விவகாரம் கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அரசியல் ரீதியில் ஒரு சிக்கலான சவாலாக மாறக்கூடும் என்று பிரபல கருத்துக்கணிப்பாளர் நிக் நானோஸ் எச்சரித்துள்ளார்.</p><p>
உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியம், கனடாவை தனது முதலாவது 'இணை உறுப்பினராக' இணைவது குறித்து ஆராயுமாறு வரலாற்றுப்பூர்வ அழைப்பொன்றை விடுத்துள்ளது. </p><p>
இந்த முன்மொழிவு முழுமையான உறுப்பினர் அந்தஸ்தை உள்ளடக்கியது அல்ல என்பதுடன், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத ஒரு புதிய அந்தஸ்தாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f9b8b9-d525-4c8f-a08e-27bf3c592c3f/26-6aaf86303fcfb.webp' /></p><p>
</p><p>இந்த அழைப்பை விடுத்து உரையாற்றிய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அர்சுலா வொன் டெர் லேயன், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான பகிரப்பட்ட மதிப்புகளை சுட்டிக்காட்டினார்.</p><p> 
செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம், ஆர்க்டிக் பகுதிகள், புவிசார் அரசியல், உக்ரைன் விவகாரம், பாதுகாப்பு, மூலப்பொருட்கள் மற்றும் விநியோகச் சங்கிலி என பல துறைகளில் இரு தரப்பும் ஒரே பார்வையைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>இந்த அழைப்பை வியாழக்கிழமை வரவேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி, கனடா முழுமையான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் அந்தஸ்தைக் கோரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். </p><p>
மேலும், "கனடாவின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத வரையில்" மட்டுமே இந்த பிரத்யேக கூட்டாண்மை சாத்தியப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பிரெட் ஹவுஸ் கருத்து தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதித் தரநிலைகள் மற்றும் விதிகளை கனடா ஏற்றுக்கொள்வது அதிக செலவீனங்களை ஏற்படுத்தும் என்றார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T13:13:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்; அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/security-threat-middle-east-warning-americans-1789909956"></link>
            <id>https://canadamirror.com/article/security-threat-middle-east-warning-americans-1789909956</id>
            <summary type="text">மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,&amp;nbsp; அங்குள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க தூதரகங்கள் மற்றும் வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,&nbsp; அங்குள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க தூதரகங்கள் மற்றும் வெளியுறவுத்துறை பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.</p><p>இதன்படி, லெபனான், ஈராக், ஈரான், காசா, சிரியா மற்றும் ஏமன் உள்ளிட்ட பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், அங்கு ஏற்கனவே வசிக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பான முறையில் வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக, லெபனான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு "பயணம் செய்ய வேண்டாம்" என அமெரிக்க வெளியுறவுத்துறை கடுமையான பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளது.</p><p>மேலும், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கட்டார், குவைத் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் வானூர்தி போக்குவரத்து இடையூறுகள் ஏற்படக்கூடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T13:12:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேட்டோ இராணுவக் குழுவின் புதிய தலைவராக ஜெர்மனியின் ஜெனரல் கார்ஸ்டன் புரூயர் தேர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/commander-not-selected-for-senior-nato-post-1789890217"></link>
            <id>https://canadamirror.com/article/commander-not-selected-for-senior-nato-post-1789890217</id>
            <summary type="text">நேட்டோ அமைப்பின் மிக முக்கிய இராணுவக் குழுவின் அடுத்த தலைவராக ஜெர்மனியின் ஜெனரல் கார்ஸ்டன் புரூயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
இப்பதவிக்கான தேர்தலில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேட்டோ அமைப்பின் மிக முக்கிய இராணுவக் குழுவின் அடுத்த தலைவராக ஜெர்மனியின் ஜெனரல் கார்ஸ்டன் புரூயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். </p><p>
இப்பதவிக்கான தேர்தலில் கனடாவின் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் ஜென்னி காரிக்னனை தோற்கடித்து அவர் இப்பதவியைக் கைப்பற்றியுள்ளார்.
</p><p>டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்புப் படைகளின் தலைவர்கள் கூட்டத்தில் இத்தேர்தல் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7ffc8b2-38cd-4a11-957e-065bce7eefdc/26-6aaf8eaac9b15.webp' /></p><p> </p><p>
நேட்டோ அமைப்பில் இது மிகவும் மதிப்புமிக்க ஒரு பதவியாகும். எனினும், வழக்கமாக அமெரிக்க அதிகாரியால் வகிக்கப்படும் 'உச்ச கூட்டுப் படைத் தளபதி' பதவிக்கு உள்ள அளவிலான அதிகாரம் இப்பதவிக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>ஒருவேளை இத்தேர்தலில் ஜெனரல் ஜென்னி காரிக்னன் வெற்றி பெற்றிருந்தால், நேட்டோ இராணுவக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்கும் முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்திருப்பார். </p><p>
மேலும், 2024 முதல் வகித்து வரும் கனடா இராணுவத் தலைமைப் பதவியிலிருந்தும் அவர் விலக வேண்டியிருந்திருக்கும். வரலாற்று ரீதியாக இதுவரை மூன்று கனடியர்கள் மட்டுமே இப்பதவியை வகித்துள்ளனர். </p><p>கடைசியாக 2000-களின் மத்தியில் ஆப்கானிஸ்தான் போரின் போதே கனடிய அதிகாரி ஒருவர் இப்பதவியில் இருந்தார்.
தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி, வெற்றி பெற்ற ஜெனரல் கார்ஸ்டன் புரூயருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
</p><p>"சிறந்த தலைமைத்துவம், அனுபவம் மற்றும் கூட்டுப் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய ஜெனரல் ஜென்னி காரிக்னனை இப்பதவிக்குப் பரிந்துரைத்ததில் கனடா பெருமையடைகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தோல்வி குறித்து கருத்து தெரிவித்த ஜெனரல் ஜென்னி காரிக்னன், இத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதை ஒரு கௌரவமாகக் கருதுவதாகவும், தொடர்ந்து கனடிய ஆயுதப் படைகளின் மறுசீரமைப்பு மற்றும் தலைமைத்துவப் பணிகளில் தனது கவனம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>
தற்போது இப்பதவியிலிருக்கும் இத்தாலியின் அட்மிரல் ஜுசெப்பே காவோ டிராகோன் அடுத்த ஆண்டு ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தலைவராகத் தேர்வாகியுள்ள புரூயரின் கள அனுபவமும் திறமையும் நேட்டோ அமைப்பிற்குப் பெரிதும் உதவும் எனப் பாராட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T09:30:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்பர்ட்டாவில் காணாமல் போன சிறுவர்கள் இரண்டு மாதங்களின்பின்னர் பாதுகாப்பாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/boy-who-was-subject-of-july-amber-alert-found-1789891667"></link>
            <id>https://canadamirror.com/article/boy-who-was-subject-of-july-amber-alert-found-1789891667</id>
            <summary type="text">கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் கடந்த கோடைகாலத்தில் &#039;ஆம்பர் அலர்ட்&#039; எச்சரிக்கை விடுக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்த சிறுவன் உட்பட இரண்டு சிறுவர்களும் பத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் கடந்த கோடைகாலத்தில் 'ஆம்பர் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்த சிறுவன் உட்பட இரண்டு சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>கடந்த ஜூலை 7 ஆம் திகதி அல்பர்ட்டாவின் கிராண்ட் பிரேரி பகுதிக்கு அருகிலுள்ள வால்ஹல்லா சென்டர் என்ற கிராமத்திலிருந்து, நீதிமன்றக் காவல் உத்தரவை மீறி 6 வயதுச் சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டார். </p><p>
அச்சிறுவன் அவனது பெற்ற தாயாரான கிறிஸ்டா மோரிசன் (35), அவரின் காதலர் டேனியல் லூட்விக் (35) மற்றும் 4 வயதுடைய தம்பியுடன் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு 'ஆம்பர் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97d981ae-9a37-488b-8ac3-d3694e9fab29/26-6aaf94551452f.webp' /></p><p>
</p><p>கடந்த ஜூலை 10 ஆம் திகதி இவர்கள் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தென்பட்டதை அடுத்து, அல்பர்ட்டாவில் ஆம்பர் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது. </p><p>
எனினும், அல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, வடமேற்குப் பிராந்தியங்கள் மற்றும் யூகான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிறப்புப் பொலிஸ் பிரிவினர் சிறுவர்களைத் தேடும் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தனர்.
</p><p>இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் 'வெஸ்ட் கெலோவ்னா' பகுதியில் உள்ள கிராமப்புறப் பண்ணை ஒன்றில் வைத்து இரு சிறுவர்களும் வியாழக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.</p><p>
நீதிமன்றக் காவல் உத்தரவை மீறிய குற்றத்திற்காகக் கிறிஸ்டா மோரிசன் மற்றும் டேனியல் லூட்விக் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>அவர்களுக்கான பிணை விசாரணை பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெறவுள்ளதுடன், விசாரணைக்காக அவர்களை மீண்டும் அல்பர்ட்டாவிற்கு அழைத்து வரவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p><p>
இதேவேளை, ஆம்பர் அலர்ட் விதிகளின்படி மூத்த சிறுவனுக்கு மட்டுமே அது முதன்முதலில் விடுக்கப்பட்டதாகவும், இளைய சிறுவனுக்கான உத்தரவு குழந்தைகள் நலச் சேவையினால் பிறப்பிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p> 
தற்போது மீட்கப்பட்ட இரு சிறுவர்களும் பிரிட்டிஷ் கொலம்பியா குழந்தைகள் மற்றும் குடும்ப நலச் சேவைத் திணைக்களத்தின் பாதுகாப்பில் உள்ளதுடன், விரைவில் அல்பர்ட்டாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T08:27:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியுபெக்கில் இசை நிகழ்வு கூட்டத்திற்குள் புகுந்த வாகனம்: 6 பேர் காயம், சாரதி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/6-hospitalized-after-man-drives-vehicle-into-crowd-1789888915"></link>
            <id>https://canadamirror.com/article/6-hospitalized-after-man-drives-vehicle-into-crowd-1789888915</id>
            <summary type="text">கனடாவின் கியுபெக் மாகாணத்தில் உள்ள செயிண்ட்-டைட் பகுதியில் நடைபெற்று வரும் இசை நிகழ்வில் சனிக்கிழமை அதிகாலை வேளையில் மக்கள் கூட்டத்திற்குள் வாகனம் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கியுபெக் மாகாணத்தில் உள்ள செயிண்ட்-டைட் பகுதியில் நடைபெற்று வரும் இசை நிகழ்வில் சனிக்கிழமை அதிகாலை வேளையில் மக்கள் கூட்டத்திற்குள் வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>அதிகாலை 4:30 மணியளவில் புனித ஜோசப் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த ஆறு பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.</p><p>
பாதிக்கப்பட்டவர்களில் 18 வயதுடைய இரண்டு பெண்களும், 17 முதல் 21 வயதுடைய நான்கு ஆண்களும் அடங்குவர். அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f5b016b-86cd-4351-9fff-84c03d5c803b/26-6aaf899510a04.webp' /></p><p>
</p><p>சம்பவத்தை அடுத்து வாகனத்தைச் செலுத்திய 20 வயதுடைய நபர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், சுமார் ஒரு மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு கியுபெக் நகரில் வைத்து பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.</p><p> 
முதற்கட்ட விசாரணைகளின்படி, இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், ஓட்டுநர் மது அருந்தியிருக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>
இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்டுள்ள விழா ஏற்பாட்டாளர்கள், திட்டமிட்டபடி திருவிழா நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு உச்சகட்ட முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.</p><p>
இச்சம்பவத்திற்கு கியுபெக் மாகாண முதலமைச்சர் கிறிஸ்டின் பிரேஷெட் நேரில் வருகை தந்து நிலைமையைப் பார்வையிட்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விருப்பம் தெரிவித்துள்ளார்.</p><p>
 மேலும் மாகாணப் பாதுகாப்பு அமைச்சர் இயன் லஃப்ரெனியர் உட்படப் பல அரசியல் தலைவர்களும் இச்சம்பவத்திற்குத் தங்களது அனுதாபங்களைப் பதிவு செய்துள்ளதுடன், உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார் மற்றும் முதலுதவிப் பணியாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T08:22:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை; தெஹ்ரானின் அனுமதி கட்டாயம் ; ஈரான் அதிரடி சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strait-of-hormuz-tehran-permission-mandatory-iran-1789887109"></link>
            <id>https://canadamirror.com/article/strait-of-hormuz-tehran-permission-mandatory-iran-1789887109</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தரவு கேபிள்களை (Data cables) அமைப்பதற்குத் தெஹ்ரானின் அனுமதி கட்டாயம் என்பதை வலியுறுத்தும் சட்டப் பிரிவுக்கு ஈரானிய உயர் அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தரவு கேபிள்களை (Data cables) அமைப்பதற்குத் தெஹ்ரானின் அனுமதி கட்டாயம் என்பதை வலியுறுத்தும் சட்டப் பிரிவுக்கு ஈரானிய உயர் அதிகாரிகளின் சிறப்புக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாகப் ஃபார்ஸ் (Fars) செய்தி முகமை தெரிவித்துள்ளது.</p><p>உளவுத்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான துணைத் தலைவரின் அலுவலகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தச் சிறப்புக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.</p><p>'பிரிவு 10' (Article 10) என்று முறைப்படி அழைக்கப்படும் இந்தச் சட்டப் பிரிவு, இந்த நீரிணை வழியாகச் செல்லும் பிற தரவுத் தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் பொருந்தும் என ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.</p><p>ஈரானின் இந்தச் சட்டத்தின் துல்லியமான விவரங்கள் பல ஒழுங்குமுறை விதிகளின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-20T07:47:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரொறன்ரோ - கியுபெக் அதிவேக ரயில் திட்டத்திற்கு எதிராகப் போர்க்கொடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hundreds-rally-against-proposed-speed-rail-line-1789889507"></link>
            <id>https://canadamirror.com/article/hundreds-rally-against-proposed-speed-rail-line-1789889507</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் ரொறன்ரோ மற்றும் கியுபெக் நகருக்கு இடையே அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் ரொறன்ரோ மற்றும் கியுபெக் நகருக்கு இடையே அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் சனிக்கிழமை பிற்பகலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>
கியுபெக் மாகாணத்தில் ஒட்டாவா மற்றும் மொண்ட்ரியல் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள கிராமப்புற பகுதியான ரிகோவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p><p>இதில் பெருமளவிலான விவசாயிகள் கலந்துகொண்டு, இத்திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தையும் விவசாய நிலங்களையும் கடுமையாகப் பாதிக்கும் எனத் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e1f9098-f360-4b79-a2c8-d650de7e7a39/26-6aaf8be5427e8.webp' /></p><p>
இத்திட்டத்தின் பாதை அமைக்கும் பகுதியில் தனது குடும்பத்தின் 3,000 ஏக்கர் நிலம் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால் அது தங்கள் விவசாய வணிகத்தைப் பேரழிவிற்கு உள்ளாக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>மேலும், இது தேவையற்ற சுற்றிச்செல்லும் பாதைகளையும் கூடுதல் செலவுகளையும் ஏற்படுத்தி, எதிர்காலத்தில் விவசாயப் பண்ணைகளின் இயங்குதளத்தையே கேள்விக்குறியாக்கும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>ரொறன்ரோ முதல் கியுபெக் வரை ஒட்டாவா, மொண்ட்ரியல், லாவால் மற்றும் துரோவா-ரிவியேர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த அதிவேக ரயில் திட்டத்தை 'ஆல்டோ' நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இத்திட்டத்தின் முதற்கட்ட பாதை ஒட்டாவா மற்றும் மொண்ட்ரியல் இடையே அமைக்கப்படவுள்ளது.
</p><p>இது குறித்துப் பேசிய ஆல்டோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், "ரொறன்ரோ-கியுபெக் நகரப் பிராந்தியமானது 1.7 கோடி மக்களைக் கொண்ட கனடாவின் மிகப்பெரிய பொருளாதாரப் பகுதியாகும். </p><p>இது நாட்டின் மக்கள் தொகையில் 41 சதவீதத்தையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பையும் வழங்குகிறது. </p><p>உலகளவில் இத்தகைய பிராந்தியங்களில் அதிவேக ரயில் திட்டங்கள் பெரும் வெற்றியடைந்துள்ளன" எனக் கூறினார்.
எனினும், இத்திட்டத்தின் நிதிச் செலவு மற்றும் நம்பகத்தன்மை குறித்துப் போராட்டத்தின் போது உரையாற்றியவர்கள் பலத்த சந்தேகங்களை எழுப்பினர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T07:46:36+00:00</updated>
        </entry>
    </feed>
