<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-11T16:50:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[“4413ஆம் ஆண்டுக்குச் சென்று வந்தேன்” ; டைம் டிராவலர் எனக் கூறும் நபரின் அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/about-a-person-who-claims-to-be-a-time-traveler-1786466750"></link>
            <id>https://canadamirror.com/article/about-a-person-who-claims-to-be-a-time-traveler-1786466750</id>
            <summary type="text">“டைம் டிராவல் செய்து கி.பி. 4413ஆம் ஆண்டுக்குச் சென்று திரும்பி வந்தேன்” என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் பிரிட்டனைச் சேர்ந்த லூயிஸ் வாக்கர் என்பவரின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>“டைம் டிராவல் செய்து கி.பி. 4413ஆம் ஆண்டுக்குச் சென்று திரும்பி வந்தேன்” என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் பிரிட்டனைச் சேர்ந்த லூயிஸ் வாக்கர் என்பவரின் நேர்காணல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.</p><p>

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் மனிதகுலத்தின் எதிர்காலத்தை எவ்வாறு மாற்றும் என்ற அச்சம் உலகம் முழுவதும் நிலவி வரும் நிலையில், வாக்கர் வெளியிட்டதாகக் கூறப்படும் எதிர்காலம் குறித்த தகவல்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e24b7cf2-86a2-4129-b2e8-416db24c4247/26-6a7b51c04a511.webp' /></p><p>வாக்கரின் கூற்றுப்படி, 1977ஆம் ஆண்டு பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றியபோது, ரகசியமாக உருவாக்கப்பட்ட கால இயந்திரம் ஒன்றைச் சோதனை செய்வதற்காக தன்னைத் தேர்வு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அந்த இயந்திரம் வெற்றிகரமாக செயல்படுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் மட்டுமே இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்த போதிலும், சோதனையில் பங்கேற்க தனக்கு பெரும் தொகை வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
முதலில் தன்னை சுமார் 600 ஆண்டுகள் எதிர்காலத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் எதிர்பாராத விதமாக தான் கி.பி. 4413ஆம் ஆண்டில் விழித்தெழுந்ததாகவும் வாக்கர் தெரிவித்துள்ளார்.</p><p>4413ஆம் ஆண்டில் கண்விழித்தபோது, ஆள் அரவமற்ற மருத்துவமனை ஒன்றில் இருந்ததாகக் கூறும் வாக்கர், அங்கிருந்து வெளியே வந்தபோது கண்ட காட்சிகள் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
தனது தலைக்கு மேலே கார்கள் பறந்து கொண்டிருந்ததாகவும், தெருக்கள் முழுவதும் ரோபோக்கள் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மனிதர்களை மிகவும் குறைவாகவே காண முடிந்ததாகவும், பெரும்பாலான இடங்களில் ரோபோக்களே காணப்பட்டதாகவும் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.</p><p>வாக்கர் கூறியுள்ள மற்றொரு அதிர்ச்சித் தகவலின்படி, 2028ஆம் ஆண்டில் டைம் டிராவல் தொழில்நுட்பம் பொதுமக்களுக்கும் கிடைக்கும் நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இதன் மூலம் எதிர்காலத்தில் ஏராளமானோர் காலப்பயணம் மேற்கொள்ளும் சூழல் உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், அவரது கூற்றுகளில் மிகவும் அதிர்ச்சியூட்டும் பகுதி மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fbb226e-3198-4146-9198-8906072faf3d/26-6a7b51c1072cc.webp' /></p><p>தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து, பல்வேறு தொழில்நுட்பங்கள் ஒன்றிணையும் நிலையில், காலப்போக்கில் மனித இனம் அழியும் அபாயம் இருப்பதாக வாக்கர் எச்சரித்துள்ளார்.
</p><p>
அதன் விளைவாக, எதிர்காலத்தில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தும் உலக நாகரிகம் உருவாகக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இந்தக் கூற்று, ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் வளர்ச்சி குறித்து கவலை தெரிவித்து வரும் பலரிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>எனினும், வாக்கரின் இந்தக் கூற்றுகளை உறுதிப்படுத்த இதுவரை எந்தவொரு நம்பகமான ஆதாரமும் வெளியாகவில்லை.
</p><p>
குறிப்பாக, 1977ஆம் ஆண்டிலேயே பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் ரகசியத் திட்டத்தின் கீழ் கால இயந்திரம் உருவாக்கப்பட்டதாகவும், அதில் தான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.</p><p>

மேலும், அவரது நேர்காணலில் முக அடையாளம் மறைக்கப்பட்டிருப்பதும் அவரது கூற்றுகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
டைம் டிராவல் குறித்த கருத்துகள் அறிவியல் மற்றும் புனைகதை உலகில் நீண்டகாலமாக பேசப்பட்டு வந்தாலும், மனிதர்களை கடந்த காலத்திற்கோ எதிர்காலத்திற்கோ அனுப்பி மீண்டும் அழைத்து வரக்கூடிய இயந்திரம் உருவாக்கப்பட்டதாக இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் சான்றுகள் இல்லை.
</p><p>
இதனால், லூயிஸ் வாக்கரின் கூற்றுகளை உண்மையாக ஏற்றுக்கொள்வதற்கும், முழுமையாக நிராகரிப்பதற்கும் இடையே சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
</p><p>
எவ்வாறாயினும், கி.பி. 4413ஆம் ஆண்டில் இருந்து திரும்பி வந்ததாகக் கூறும் ஒருவர், மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையான செய்தியை விடுத்துச் செல்லாமல், மனிதர்கள் இல்லாத ரோபோக்களின் உலகம் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டிருப்பது இந்த நேர்காணலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T16:46:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 43,000 டொலர் மதிப்பிலான தங்கம், வெள்ளி திருட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-woman-charged-in-alleged-gold-theft-1786447759"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-woman-charged-in-alleged-gold-theft-1786447759</id>
            <summary type="text">&amp;nbsp;கனடியப் பெண் எல்லையில் கைது
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் 43,000 கனேடிய டொலருக்கும் அதிக மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியைத் திருடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடியப் பெண் எல்லையில் கைது
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் 43,000 கனேடிய டொலருக்கும் அதிக மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர், மீண்டும் கனடாவுக்குத் திரும்ப முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>
கனடாவின் ஒன்ராறியோ, பீம்ஸ்வில் பகுதியைச் சேர்ந்த 25 வயதான கைலீ ஹோகன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார். </p><p>
கடந்த மே 11 அன்று ஃபிலடெல்ஃபியாவிலிருந்து சுமார் 40 நிமிட பயணத் தொலைவில் உள்ள பென்சலேம் டவுன்ஷிப் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0ab8a1-4cb7-4903-821c-0291bb91a99a/26-6a7b07919341c.webp' /></p><p>
</p><p> பாதிக்கப்பட்ட நபர் தங்கம் மற்றும் வெள்ளி அடங்கிய பார்சல் ஒன்றின் வருகைக்காகக் காத்திருந்தவேளையில், அஞ்சல் ஊழியரிடம் சந்தேகநபர் தாங்களே இதன் உண்மையான உரிமையாளர் எனக் கூறி பார்சலுக்குக் கையொப்பமிட்டுப் பெற்றுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.</p><p>
இதனைப் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் பார்த்துள்ளார். 
திருடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் மொத்த மதிப்பு 43,549 கனேடிய டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>
சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், வாகனப் பதிவு எண் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சந்திப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த பொலிஸார், சந்தேகநபர் பயன்படுத்திய 'நிசான்' ரக காரைக் கண்டறிந்தனர். </p><p>
விசாரணையில், மே 10 அன்று ஃபிலடெல்ஃபியா விமான நிலையத்தில் உள்ள கார் வாடகை நிறுவனத்திடமிருந்து இந்த காரை ஹோகன் வாடகைக்கு எடுத்ததும், மே 11 அன்று திருட்டை அரங்கேற்றிய கையோடு காரைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு ஏரிஸோனாவுக்கு விமானத்தில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.</p><p> 
இதனைத் தொடர்ந்து ஹோகனுக்கு எதிராகக் கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p> 
ஜூலை 5 ம் திகதி, நியூயோர்க்கின் லூயிஸ்டன் பகுதியில் உள்ள எல்லைக் கடப்பு வழியே மீண்டும் கனடாவுக்குள் நுழைய முயன்றபோது, அமெரிக்க விசா அனுமதியில் அங்கு தங்கியிருந்த ஹோகனை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.இவர் மீது ஆவணப் போலி தயாரித்தல், சட்டவிரோதமாகப் பொருட்களைக் கவர்தல் மற்றும் ஏமாற்றித் திருடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>இக்குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. 
கைது செய்யப்பட்ட ஹோகன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவருக்குப் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது பக்ஸ் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T13:40:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/optimism-youth-unemployment-is-falling-across-1786446141"></link>
            <id>https://canadamirror.com/article/optimism-youth-unemployment-is-falling-across-1786446141</id>
            <summary type="text">கனடாவில் இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வேலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம், கடந்த 2025 ஜூலையில் 14.6 சதவீதமாக இருந்த நிலையில், 2026 ஜூலை மாதத்தில் 12.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. </p><p>
அதேபோல, கோடைகாலப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதமும் 17.5 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாகச் சரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ff4506f-4878-4a5c-9739-4b0340772efa/26-6a7b013f06ee1.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் வரிகள் குறித்த ஆரம்பக்கட்ட பொருளாதார பயம் தணிந்துள்ளதால், வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் நம்பிக்கையுடன் இளைஞர்களைப் பணியில் அமர்த்தத் தொடங்கியுள்ளன.
</p><p>கனடிய மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாகக் குறைத்ததைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு நுகர்வோர் செலவழிப்பது அதிகரித்துள்ளது.</p><p>
சுற்றுலாத் துறை, உணவகங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் கோடைகால வேலைவாய்ப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி மணப்பெண்களால் ஏமாற்றப்படும் சீன ஆண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/chinese-men-deceived-by-fake-brides-1786454858"></link>
            <id>https://canadamirror.com/article/chinese-men-deceived-by-fake-brides-1786454858</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவில் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் ஏமாற்றமடையும் ஆண்களை இலக்கு வைத்து &#039;உடனடித் திருமணம்&#039; (Flash Marriage) செய்து வைப்பதாகக் கூறி பல கோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவில் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் ஏமாற்றமடையும் ஆண்களை இலக்கு வைத்து 'உடனடித் திருமணம்' (Flash Marriage) செய்து வைப்பதாகக் கூறி பல கோடி ரூபாய் பணத்தைச் சூறையாடும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
</p><p>திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அந்தப் பெண்கள் பணத்துடன் தப்பிச் செல்வதாகவும், தங்களின் உண்மைப் பின்னணி, வயது, கடன் விபரங்கள் மற்றும் முந்தைய திருமணங்களை மறைத்துப் பொய்யான தகவல்களை வழங்கி அவர்கள் ஏமாற்றியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஆண்கள் கவலை வெளியிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4701708b-4d9d-4bc8-8cd9-efff43953490/26-6a7b234ba86b0.webp' /></p><h2>பாதிக்கப்பட்ட ஆண்கள் கவலை&nbsp;</h2><p>
</p><p>
சீனாவில் பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த 'ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை' கொள்கை மற்றும் ஆண் குழந்தைகளுக்கான முன்னுரிமை காரணமாக, பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை சுமார் 30 மில்லியனால் அதிகரித்துள்ளது.</p><p>

இதனால், கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வாழும் ஆண்களுக்குப் பெண் கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.

இதனைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில திருமணத் தரகு முகவர் நிலையங்கள், 'குறைந்த செலவில், குறுகிய காலத்தில் சிறந்த பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறோம்' என விளம்பரம் செய்து ஆண்களைக் கவர்கின்றன.</p><p>

தென்மேற்கு மாகாணமான கைசூவில் (Guizhou) இயங்கும் இவ்வாறான முகவர் நிலையங்களை நம்பிச் செல்லும் ஆண்கள், சில நாட்களிலேயே பெண்களுக்கு பெருந்தொகைப் பணத்தை வழங்கி அவசரத் திருமணம் செய்து கொள்ளும் நிலையில், திருமண்ம் ஆனதும் பெண்கள் , பணத்துடன் தப்பிச் செல்வதாக கூறப்படுகின்றது.
</p><p> 

இவ்வாறான பல மில்லியன் யுவான் மோசடிகள் குறித்து முறைப்பாடுகள் குவிந்து வரும் நிலையில், சீனக் காவல்துறை மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் இணைந்து இத்தகைய போலியான திருமணத் தரகு முகவர் நிலையங்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் கடுமையான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T13:25:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியா முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-sentence-for-former-syrian-president-1786448558"></link>
            <id>https://canadamirror.com/article/death-sentence-for-former-syrian-president-1786448558</id>
            <summary type="text">&amp;nbsp; போர்க் குற்றங்கள் தொடர்பில் சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவரது இளைய சகோதரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; போர்க் குற்றங்கள் தொடர்பில் சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவரது இளைய சகோதரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

சிரிய நீதிமன்றமொன்றினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அசாத் மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் விசாரணை நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94046756-66a3-4743-9493-5a40ca119d55/26-6a7b0ab09d64b.webp' /></p><p>
</p><p>
 

சுமார் ஐந்து இலட்சம் பேர் உயிரிழந்த 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலேயே இவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
 

2011 ஆம் ஆண்டு தாரா (Daraa) பகுதியில் இடம்பெற்ற போராட்டங்களை அடக்குவதற்கு தலைமை தாங்கிய அசாத்தின் உறவினரான ஆட்டெஃப் நஜீப் (Atef Najib) என்பவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

 

அதேசமயம் அசாத்தும் அவரது சகோதரரும் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட நஜீப் சிறைச்சாலை உடையில் நீதிமன்றக் கூண்டில் நின்றபோதே இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T13:00:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அச்சுறுத்தலால் ரகசிய விமானத்தில் ஒழித்து ஓடிய ட்ரம்ப் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-threat-trump-fled-in-a-secret-plan-uk-1786439764"></link>
            <id>https://canadamirror.com/article/iran-threat-trump-fled-in-a-secret-plan-uk-1786439764</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.</p><p>

கடந்த மாதம் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் துருக்கியின் அங்காராவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து புறப்படும்போது வழக்கமாகப் பயன்படுத்தும் எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் ஊடகங்கள் முன்னிலையில் அவர் ஏறியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e372dfa7-cf44-4b10-a9d0-f1013a257e56/26-6a7ae855affe9.webp' /></p><h2>பழைய எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த ட்ரம்ப்</h2><p>


எனினும், அந்த விமானம் புறப்படாத நிலையில், ஊடகவியலாளர்கள் அங்கிருந்து சென்ற பின்னர், கேட்டரிங் வாகனம் ஒன்றின் மூலம் ட்ரம்ப் வேறு விமானத்துக்கு இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p>



பின்னர், பாதுகாப்புத்துறை செயலாளர் ஹெக்செத் மற்றும் இரகசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சி-32ஏ இராணுவ விமானத்தில் துருக்கியிலிருந்து பிரிட்டனுக்கு அவர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


இதனிடையே, ட்ரம்ப் இல்லாமல் பழைய எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த ஊடகவியலாளர்கள் மற்றும் வெள்ளை மாளிகை ஊழியர்களிடம் விமானத்தின் ஜன்னல்களை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


அத்தோடு பிரிட்டனில் இருந்து பின்னர் ட்ரம்ப் பாதுகாப்பாக அமெரிக்கா திரும்பியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T12:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஆற்றில் சடலமாக மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/suspect-found-dead-after-shooting-at-police-1786445667"></link>
            <id>https://canadamirror.com/article/suspect-found-dead-after-shooting-at-police-1786445667</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கல்கரி நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஸ்ப்ரூஸ் க்ளிஃப் பகுதியில் திங்கள்கிழமை முற்பகல் 11:45 மணியளவில் பொலிஸார் வாகனச் சோதனையில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கல்கரி நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஸ்ப்ரூஸ் க்ளிஃப் பகுதியில் திங்கள்கிழமை முற்பகல் 11:45 மணியளவில் பொலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வாகனத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
</p><p>இந்தத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இருமுறை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தார். தாக்குதலை நடத்திய நபர் உடனடியாக எட்வர்தி பூங்காவை நோக்கித் தப்பிச் சென்றார்.
</p><p>தப்பியோடிய நபரைக் கண்டுபிடிக்க எச்.ஏ.டபிள்யூ.சி.எஸ் ஹெலிகொப்டர் உதவியுடன் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34ce2902-cf7d-480f-9bfe-18ed2e05f114/26-6a7aff6507856.webp' /></p><p> </p><p>
தப்பிச் செல்லும் வழியில் அந்த நபர் பொலிஸாரையும் அருகிலிருந்த பொதுமக்களையும் நோக்கித் தொடர்ச்சியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், வாகனம் ஒன்றை மிரட்டிப் பறித்து பூங்காவின் வழியே ஓட்டிச் சென்றுள்ளார்.</p><p> பின்னர் அந்த வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டது.
பொலிஸார் அவரை நெருங்குவதற்குள், அவர் பூங்காவிற்கு அருகில் உள்ள ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p> அவர் தனக்குத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> 
எனினும், பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் காயமடைந்தாரா என்பது குறித்து 'அல்பெர்ட்டா தீவிர சம்பவங்கள் விசாரணை குழு' விசாரணை நடத்தி வருகிறது.
</p><p>காயமடைந்த பொலிஸ் அதிகாரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான நிலையில் உள்ளதாக பொலிஸ் தலைமை அதிகாரி கேட்டி மெக்லெலன் தெரிவித்துள்ளார்.</p><p>
சம்பவத்தின் போது அப்பகுதியில் "ஆபத்தான நபர்" தொடர்பிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். 
பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T11:07:27+00:00</updated>
        </entry>
    </feed>
