<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-02T08:45:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ட்ரம்ப் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-decision-to-suspend-attacks-on-iran-1785645542"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-decision-to-suspend-attacks-on-iran-1785645542</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p> 

நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியதாக ட்ரம்ப் தனது 'டிரூத்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3704af1-e7d8-45dd-9ee2-e078ee768ae0/26-6a6ec9e80310d.webp' /></p><p>இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை ரத்து செய்ய தாம் சம்மதித்துள்ளேன் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>

ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தால், அதற்கு தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. </p><p>

பல முக்கிய உட்கட்டமைப்புகள் மீது ஈரானினால் ஏவப்பட்ட ட்ரோன்களை அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே, துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவூதி உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி நடத்திய தனித்தனி தொலைபேசி உரையாடல்களின் போது இக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.</p><p> 

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் ஈரான் தீர்க்கமாக பதிலளிக்கும் எனக் கூறிய அராக்சி, அமெரிக்காவின் பிராந்திய நிலைகுலைவு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளின் விளைவுகள் குறித்தும் விவாதித்ததாக அராக்சியின் டெலிகிராம் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T08:26:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[படகு விபத்தில் காணாமல் போன ரொறன்ரோ தம்பதியின் உடல்கள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/damaged-boat-found-two-people-missing-1785657424"></link>
            <id>https://canadamirror.com/article/damaged-boat-found-two-people-missing-1785657424</id>
            <summary type="text">கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
</p><p>உயிரிழந்தவர்கள் ரொறன்ரோவைச் சேர்ந்த 32 வயது ஆண் மற்றும் 30 வயது பெண் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.</p><p>
வெள்ளிக்கிழமை இரவு 10:40 மணியளவில், பேக்கன்ரிக் பே பகுதிக்கு அருகிலுள்ள ரொசோ ஏரியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f250ee0a-6a1e-4686-8442-5e2ae40f21b5/26-6a6ef85272f70.webp' /></p><p>சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்தபோது, பலத்த சேதமடைந்த நிலையிலிருந்த படகு ஒன்று பாறை விளிம்பில் ஆபத்தான முறையில் சமநிலை இழந்து நின்றதை அவதானித்துள்ளனர்.
</p><p>விபத்து நடந்த இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்தனர்.</p><p> சனிக்கிழமை பிற்பகலில் காணாமல் போன இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.</p><p>
இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாகத் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T08:22:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஸ்லாந்து கடற்பகுதியில் திமிங்கல வேட்டை எதிர்ப்புப் படகு பறிமுதல்: கனடிய ஆர்வலர் உட்பட 21 பேர் சிறைபிடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-activist-among-those-detained-1785657126"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-activist-among-those-detained-1785657126</id>
            <summary type="text">ஐஸ்லாந்து தலைநகர் ரெய்காவிக் கடற்பகுதியில், திமிங்கல வேட்டை எதிர்ப்பு ஆர்வலர் பால் வாட்சன் என்பவரின் அமைப்பால் இயக்கப்படும் &#039;பண்டேரோ&#039; என்ற எதிர்ப்புப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐஸ்லாந்து தலைநகர் ரெய்காவிக் கடற்பகுதியில், திமிங்கல வேட்டை எதிர்ப்பு ஆர்வலர் பால் வாட்சன் என்பவரின் அமைப்பால் இயக்கப்படும் 'பண்டேரோ' என்ற எதிர்ப்புப் படகை ஐஸ்லாந்திய கடலோரக் காவல்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>இச்சம்பவத்தில் கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலரான சான்னன் மேன் உட்படப் படகிலிருந்த 21 மாலுமிகளும் சிறைபிடிக்கப்பட்டுப் படகிலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>வியாழக்கிழமை மாலையில் 'ஹ்வாலர் 9' என்ற திமிங்கல வேட்டைப் படகின் மாலுமிகள், தங்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி ஐஸ்லாந்திய கடலோரக் காவல்படையின் உதவியைக் கோரினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65bb17e4-b39c-4bea-acf7-4a71995b68d7/26-6a6ef72836c19.webp' /></p><p>
'பண்டேரோ' படகு ஐஸ்லாந்து கடற்பகுதியை விட்டு வெளியேறுமாறும், எஞ்சினை நிறுத்துமாறும் கடலோரக் காவல்படை பிறப்பித்த உத்தரவுகளைப் புறக்கணித்ததைத் தொடர்ந்து, நள்ளிரவில் அதிரடிப்படையினர் படகில் புகுந்து அதைக் கைப்பற்றி துறைமுகத்திற்குக் கொண்டு வந்தனர்.</p><p>
'கேப்டன் பால் வாட்சன் அறக்கட்டளை' வெளியிட்ட அறிக்கையில், 21 பேரின் தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் சட்டத்தரணியைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் வாரண்ட் இன்றி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p>
நார்வே மற்றும் ஜப்பானைப் போலவே வணிக ரீதியிலான திமிங்கல வேட்டையைத் தொடர்ந்து நடத்தும் சில நாடுகளில் ஐஸ்லாந்தும் ஒன்றாகும். 'ஆப்பரேஷன் 86' என்ற திட்டத்தின் மூலம் ஆர்க்டிக் பகுதியில் நடைபெறும் இந்த திமிங்கல வேட்டையைத் தடுப்பதே 'பண்டேரோ' படகின் நோக்கமாகும்.
</p><p>75 வயதான பால் வாட்சன், திமிங்கல வேட்டைப் படகுகளுடன் கடலில் நேரடியாக மோதும் அதி தீவிரப் போராட்ட உத்திகளுக்காகப் பெயர் பெற்றவர். முன்னதாக, 2024-ஆம் ஆண்டில் ஜப்பானிய வாரண்ட் காரணமாக க்ரீன்லாந்தில் 5 மாதங்கள் சிறையிலிருந்த இவர், 2025-ஆம் ஆண்டில்தான் இன்டர்போலின் முக்கியத் தேடப்படும் நபர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார்.
</p><p>இவரது தீவிரமான போராட்ட உத்திகள் காரணமாக, திமிங்கல வேட்டை நிறுவனங்கள் இவர்களை கடல்சார் பாதுகாப்புக்கும் பிற மாலுமிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துபவர்கள் எனக் குற்றஞ்சாட்டி வருகின்றன. </p><p>இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட அந்தார்ட்டிகாவில் தொழில்துறை படகு ஒன்றுடன் பண்டேரோ படகு மோதியது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T08:22:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாய் குட்டிகளை மீட்கச் சென்ற யுவதிக்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/animal-advocate-killed-during-puppy-rescue-1785655001"></link>
            <id>https://canadamirror.com/article/animal-advocate-killed-during-puppy-rescue-1785655001</id>
            <summary type="text">&amp;nbsp;தெருவில் தவிக்கும் விலங்குகளின் துயரம் கண்டு உருகும் நெஞ்சங்களும், அவற்றைக் காக்கத் துடிக்கும் கரங்களும் தான் இந்த உலகை இன்னும் மனிதநேயத்துடன் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தெருவில் தவிக்கும் விலங்குகளின் துயரம் கண்டு உருகும் நெஞ்சங்களும், அவற்றைக் காக்கத் துடிக்கும் கரங்களும் தான் இந்த உலகை இன்னும் மனிதநேயத்துடன் இயங்க வைக்கின்றன. </p><p>
ஆனால், அதே ஜீவன்களைக் காப்பாற்றச் சென்ற ஒரு இளம் பெண்ணின் உயிர், அதே மிருகத்தனமான தாக்குதலுக்குப் பலியாகிப்போன சோகம் கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
37 வயதான அமண்டா நோபிஸ் விலங்குகள் மீது அளவில்லா அன்பு கொண்ட ஒரு தீரமிக்க ஆர்வலர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05974ee9-0caa-47ce-8555-4989c40ee744/26-6a6eeeda67dab.webp' /></p><p> </p><p>
'K9 அட்வகேசி மணிட்டோபா' அமைப்பில் தன்னார்வலராகச் செயல்பட்டு வந்த அமண்டா, மணிட்டோபா மாகாணத்தில் உள்ள சாண்டி பே ஓஜிப்வே பழங்குடியினப் பகுதிக்குத் தன் வாழ்வின் இறுதிப் பயணத்தை மேற்கொள்வார் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.
</p><p>அன்று, தாய் நாயொன்றையும் அதன் புதுப்பிறந்த குட்டிகளையும் மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வருவதற்காக அமண்டா தனியாக அங்கு சென்றிருந்தார். </p><p>ஆனால், அந்த வீட்டில் உரிமையாளர் இல்லாத நேரத்தில், அங்கிருந்த இரு ஆண் நாய்கள் எல்லை மீறிய பாதுகாப்பு உணர்ச்சியாலும் ஆக்ரோஷத்தாலும் அமண்டாவை கொடூரமாகத் தாக்கியுள்ளன.
</p><p>நாங்கள் பல வருடங்களாக இந்த சமூகங்களுக்குத் தனியாகச் சென்று விலங்குகளை மீட்டு வருகிறோம். அமண்டாவும் அப்படித்தான் எதையும் யோசிக்காமல் ஓடோடிச் சென்றாள். ஆனால், நடக்கக்கூடாத மிக மோசமான ஒரு கொடூரம் நடந்து முடிந்துவிட்டது என அந்த அமைப்பின் இயக்குநர் செலீசா கோர்க் குறிப்பிடுகின்றார்.</p><p>
பிரேதப் பரிசோதனை அறிக்கையும் அமண்டாவின் உடல் முழுவதும் நாய்கள் கடித்த கொடூரமான காயங்கள் இருந்ததை உறுதிசெய்தது. </p><p>பின்னர் அதிகாரிகளின் உத்தரவுப்படி தாக்குதல் நடத்திய இரு நாய்களும் அழிக்கப்பட்ட நிலையில், அந்தத் தாய் நாயும் குட்டிகளும் மீட்கப்பட்டன.
</p><p>அமண்டாவின் இந்த இறப்பு, வெறும் விபத்து அல்ல; அது பல காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு பெரும் சமூகப் பிரச்சினையின் கொடூரமான முகம் என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>மணிட்டோபா மாகாணத்தில் உள்ள 63 பழங்குடியினக் கிராமங்களில் மட்டும் மாதத்திற்குச் சராசரியாக 1,000 நாய் கடி சம்பவங்கள் பதிவாகின்றன. </p><p>ஆனால், அதிகாரப்பூர்வமாகப் பதிவாகாத சம்பவங்கள் இதைவிடப் பல மடங்கு அதிகம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T08:21:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா டிம்மின்ஸ் நகரில் 24 மணி நேர இடைவெளியில் இரு கொலைகள் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/timmins-police-investigate-2nd-fatal-shooting-1785654387"></link>
            <id>https://canadamirror.com/article/timmins-police-investigate-2nd-fatal-shooting-1785654387</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள டிம்மின்ஸ் நகரில், சுமார் 24 மணி நேர இடைவெளியில் இரண்டு வெவ்வேறான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் அப்பகுதியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள டிம்மின்ஸ் நகரில், சுமார் 24 மணி நேர இடைவெளியில் இரண்டு வெவ்வேறான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>இந்த இரு சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்றும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதல்களே காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
ஜூலை 31-ஆம் திகதி அதிகாலை 1:00 மணியளவில், 'பால்சம் வீதி வடக்கு' பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87411a7e-d9b4-43d2-ad31-1baa895cb287/26-6a6eec7558a93.webp' /></p><p>தீவிர காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. </p><p>இக்கொலை தெரிந்த நபர் ஒருவராலேயே செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
</p><p>இதேவேளை, ஆகஸ்ட் 01 நள்ளிரவுக்குப் பிறகு, 'ரியா வீதி தெற்கு' மற்றும் 'பெலஞ்சர் அவென்யூ' பகுதிக்கு அருகில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
சம்பவ இடத்தில் துப்பாக்கிக் சூட்டுக் காயங்களுடன் மூன்று ஆண்கள் மீட்கப்பட்டனர். </p><p>அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்ற இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன், மற்றொருவர் ஆபத்தான கட்டத்தைக் கடந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
</p><p>இந்த இரு கொடூர சம்பவங்களுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை என்றும், வெவ்வேறு நபர்கள் மற்றும் சூழ்நிலைகளில் இச்சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p>
இந்த வழக்குகள் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், முதற்கட்ட விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மேலதிக விவரங்கள் அல்லது சந்தேகநபர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T08:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வணிகக் கட்டடத்தை சட்டவிரோதமாக குடியிருப்பாக மாற்றியவர்களுக்கு அபராதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/vancouver-landlords-illegally-converted-offices-1785653934"></link>
            <id>https://canadamirror.com/article/vancouver-landlords-illegally-converted-offices-1785653934</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வான்கூவர் பகுதியில் உள்ள வணிகக் கட்டடத்தின் ஒரு பகுதியை, உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக 11 ஒற்றை அறை குடியிருப்புகளாக மாற்றியமைத்ததற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வான்கூவர் பகுதியில் உள்ள வணிகக் கட்டடத்தின் ஒரு பகுதியை, உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக 11 ஒற்றை அறை குடியிருப்புகளாக மாற்றியமைத்ததற்காக இரு நபர்களுக்கும் அவர்களின் நிறுவனத்திற்கும் 57,100 டாலர் நிர்வாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவின் குடியிருப்பு வாடகை அமைப்பின் இணக்கம் மற்றும் அமலாக்கப் பிரிவு (CEU), அக்தர் நவாஸ், சர்வர் கான் மற்றும் அவர்களின் '1460317 B.C. Ltd.' என்ற நிறுவனத்திற்கு ஜூலை 10 அன்று இந்த அபராதத்தை விதித்தது.
</p><p>குறித்த வணிகக் கட்டடத்தின் தரைதளத்தில் கடைகளும் மேல் தளங்களில் அலுவலகங்களும் செயல்பட்டு வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/122f20dd-60b2-4be9-ba0e-cdac3804b5a1/26-6a6eeab0bdecb.webp' /></p><p> 
இந்நிலையில், 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, 2-வது மற்றும் 3-வது தளங்கள் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாகத் தற்காலிகத் தடுப்புச் சுவர்கள் மூலம் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு ஆட்கள் தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.</p><p>
நகர நிர்வாகமும் தீயணைப்புப் படையும் ஆய்வு செய்து, கட்டடத்தில் கடும் தீ பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி "தங்குவதற்கு பாதுகாப்பற்றது" மற்றும் "தங்கத் தடை" உத்தரவுகளை 2025 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் பலமுறை பிறப்பித்தன.
</p><p>இத்தனை தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும், கட்டடத்தில் வாடகைக்கு ஆட்கள் தங்குவது தொடர்ந்தது.</p><p> இதன் காரணமாக, நகர நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க 2025 நவம்பர் 28 அன்று CEU தனது விசாரணையைத் தொடங்கியது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T07:06:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஸ்காட்செவன் ஆற்றில் தவறி விழுந்த பெண் மற்றும் நாய்: தொடரும் மீட்புப் பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/saskatoon-residents-shocked-and-saddened-1785653432"></link>
            <id>https://canadamirror.com/article/saskatoon-residents-shocked-and-saddened-1785653432</id>
            <summary type="text">&amp;nbsp;தெற்கு சஸ்காட்செவன் ஆற்றில் பெண்ணொருவரும் நாயொன்றும் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, அவர்களைத் தேடும் பணிகள் இரண்டாவது ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தெற்கு சஸ்காட்செவன் ஆற்றில் பெண்ணொருவரும் நாயொன்றும் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, அவர்களைத் தேடும் பணிகள் இரண்டாவது நாளாகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>
சனிக்கிழமை காலையில், அவர்கள் கடைசியாகக் காணப்பட்ட இடத்தில் மீட்புப் படகு ஒன்று ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
</p><p>வான்வழி மற்றும் மூழ்கி தேடும் சோதனைகளைத் தொடர்ந்து, தற்போது தேடுதல் பரப்பை விரிவுபடுத்துவதற்காக 'சோனார்' சாதனங்களை மீட்புக் குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f77d0a16-d529-4eec-b01d-aa99573d96fd/26-6a6ee8ba110b3.webp' /></p><p> </p><p>இத்தேடுதல் நடவடிக்கை தற்போது உடல்களை மீட்கும் பணிக்கான கூர்மையுடன் தொடர்கிறது.
சாஸ்கடூன் நாய்கள் பூங்காவை ஒட்டியுள்ள ஆற்றின் கிழக்குப் பகுதியில் இவர்கள் ஆற்றில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் மற்றும் நாய் பூங்காவிற்கு வந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
</p><p>கனடாவில் ஆண்டுதோறும் சராசரியாக 485 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.</p><p>
இதில் 27 சதவீதமான உயிரிழப்புகள் ஆறுகளிலேயே நிகழ்கின்றன.
மாகாணங்களைப் பொறுத்தவரை நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லேப்ரடார் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து சஸ்காட்செவன் மாகாணமும் அதிக உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T07:05:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பாதிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/the-single-biggest-household-bill-draining-1785652961"></link>
            <id>https://canadamirror.com/article/the-single-biggest-household-bill-draining-1785652961</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பணவீக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பணவீக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வருகிறது. </p><p>
இந்நிலையில், 'நாரடிவ் ரிசர்ச்' அமைப்பினால் நடத்தப்பட்ட புதிய தேசிய அளவிலான ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 76 சதவீதத்தினர், உணவு மற்றும் மளிகைப் பொருட்களின் அதிகப்படியான விலையேற்றமே தங்களது குடும்பப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9489e7a5-b33b-4536-86e4-ff51ee4e5fd6/26-6a6ee6e3618d0.webp' /></p><p>
47 சதவீதத்தினர் எரிபொருள் விலையேற்றத்தை இரண்டாவது பெரிய நிதி நெருக்கடியாகக் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
33 சதவீத மக்கள் வீடுகளுக்கான அடமானக் கடன் மற்றும் வாடகையைத் தங்களின் முக்கிய நிதிச் சுமையாகக் கருதுகின்றனர்.</p><p>
இது தவிர, மின்சாரக் கட்டணம், வீட்டு பராமரிப்புச் செலவுகள் மற்றும் வெப்பமூட்டும் செலவுகளும் கனடா மக்களுக்கு அதிகளவு நிதி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>மளிகைப் பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்ற அன்றாடச் செலவுகளில் வாழ்க்கைச் செலவு உயர்வு ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகவும் திடுக்கிட வைப்பதாக உள்ளது, என 'நாரடிவ் ரிசர்ச்' அமைப்பின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி மார்கரெட் சாப்மேன் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>விலையேற்றம் தொடர்வதால், கனடா மக்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் நிதி நிவாரணம் கிடைப்பது கடினம் என்றும், இந்த உயர் விலைகளே நிலையாகத் தொடருமோ என்றும் கவலையும் சோர்வும் அடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T06:44:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பொருளாதாரத்தை குறிவைத்து டிரம்ப் வெளியிட்ட புதிய பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-releases-new-post-targeting-iran-s-economy-1785651420"></link>
            <id>https://canadamirror.com/article/trump-releases-new-post-targeting-iran-s-economy-1785651420</id>
            <summary type="text">ஈரான் தற்போது கடுமையான பணவீக்கத்தை சந்தித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது &#039;டிரூத் சோஷியல்&#039; (Truth Social) சமூக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தற்போது கடுமையான பணவீக்கத்தை சந்தித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62803ad8-84d0-46ee-b0e0-9de419151b1f/26-6a6ee0de578cc.webp' /></p><p>தனது 'டிரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், ஈரானிய நாணயமான 'ரியால்' பலவீனமடைந்து வருவதைக் காட்டும் வரைபடத்தைப் பகிர்ந்துள்ளார்.
</p><p>
குறித்த பதிவில், "நான் ஈரானிய நாணயத்தை அழித்துக் கொண்டிருக்கிறேன்" என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-02T06:17:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் சுற்றுலா விமானம் விபத்து ; 13 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tourist-plane-crash-in-peru-13-dead-1785650511"></link>
            <id>https://canadamirror.com/article/tourist-plane-crash-in-peru-13-dead-1785650511</id>
            <summary type="text">பெருவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற Nazca Lines தொல்பொருள் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற Nazca Lines தொல்பொருள் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9b4caf4-4c06-472a-8cb0-9289c1c7b269/26-6a6edd50cb76c.webp' /></p><p>இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
மேலும் குறித்த வானூர்தியில் 11 பயணிகளும் 2 விமானிகளும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T06:02:19+00:00</updated>
        </entry>
    </feed>
