<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-11T12:18:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரட்டை கோபுர தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/25th-anniversary-of-the-twin-towers-attacks-1789118530"></link>
            <id>https://canadamirror.com/article/25th-anniversary-of-the-twin-towers-attacks-1789118530</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தீவிரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தீவிரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. </p><p>

நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது இரண்டு விமானங்கள் மோதி தாக்குதல் நடத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f96f3f1-6af7-4399-bb8c-8808c501b26a/26-6aa3c847d7ff4.webp' /></p><h2>இரண்டு விமானங்கள் மோதி தாக்குதல்&nbsp;</h2><p> </p><p>இரண்டாவது தாக்குதல் முதல் தாக்குதலுக்குப் பிறகு 17 நிமிடங்கள் கழித்து நிகழ்ந்தது. </p><p>

கட்டடங்கள் தீப்பிடித்ததால் மேல் தளங்களில் சிக்கிய மக்கள் அவதிப்பட்ட நிலையில், இரண்டு மணி நேரத்திற்குள் 110 மாடிகளைக் கொண்ட இரண்டு கோபுரங்களும் தூசு மண்டலமாக இடிந்து விழுந்தன. </p><p>

வொஷிங்டன் டிசி அருகில் உள்ள அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகனின் மேற்குப் பகுதியை மூன்றாவது விமானம் தகர்த்தது. 

பயணிகளின் கடுமையான எதிர்ப்பால் நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் உள்ள திறந்தவெளியொன்றில் விழுந்து நொறுங்கியது. </p><p>

இது வொஷிங்டனில் உள்ள பாராளுமன்றக் கட்டடத்தை குறிவைத்துத் தாக்கப்படவிருந்ததாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதல்களில் கடத்தல்காரர்கள் 19 பேர் தவிர்த்து மொத்தம் 2,977 பேர் உயிரிழந்தனர். </p><p>

இவர்களில் பெரும்பாலோர் நியூயோர்க்கைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், அமெரிக்க வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் 441 அவசரகால மீட்புப் பணியாளர்கள் இதில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். </p><p>

இந்தத் தாக்குதல்களும், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களுக்குரிய வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை கொள்கைகளை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p> 

இந்த நிலையில் குறித்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, தாக்குதல்கள் நடைபெற்ற நியூயோர்க், வெர்ஜீனியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய மூன்று முக்கிய இடங்களிலும் அதிகாரப்பூர்வ நினைவு சடங்குகள் இன்று இடம்பெறுகின்றன. </p><p>

அத்துடன், இன்றைய தினம் லண்டனில் உள்ள குவீன் எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவிலும் உயிரிழந்தவர்களின் நினைவாக விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.</p>]]></content>
            <updated>2026-09-11T11:48:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-police-charge-man-for-1789125288"></link>
            <id>https://canadamirror.com/article/canada-police-charge-man-for-1789125288</id>
            <summary type="text">Canada police charge man for screwdriver stabbings at gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada police charge man for screwdriver stabbings at gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் தாக்குதல் நடத்திய விடயத்தில் அந்த நபர் மீது பொலிசார் குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளார்கள்.</p><p><span style="color: inherit;">ஆகத்து மாதம் 21ஆம் திகதி, அதிகாலை 5.00 மணியளவில், எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் பிரார்த்தனை செய்யும் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார்.</span></p><p>
அவரை இரண்டு பேர் தடுக்க முயல, அவர் தன் கையில் வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் அவர்களை தாக்கியுள்ளார்.</p><p>

உடனடியாக மற்றவர்கள் அவர் மீது பாய்ந்து அவரைப் பிடித்து பொலிசார் வரும்வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b973d26-c999-4383-82bf-94015929dd8a/26-6aa3e2f216ef3.webp' /><br></p><p>காயமடைந்த 75 மற்றும் 51 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.</p><p>
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அந்த நபரைக் கைது செய்துள்ளார்கள்.</p><p>

விடயம் என்னவென்றால், ஏற்கனவே தாக்குதல் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டிருந்த அந்த 27 வயது நபர், முன் தினம்தான், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.</p><p><span style="color: inherit;">தாக்குதல் நடத்திய அந்த நபருடைய பெயர் ஆஸ்டின் (Austin Sim-Pelletier, 27) என தற்போது பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.</span></p><p>
அவர் மீது தாக்குதல், ஆயுதம் வைத்திருந்தது முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
அவர் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது இதுவரை தெரியவரவில்லை.

இந்நிலையில், இது ஒரு சிக்கலான வழக்கு என்றும், இந்த தாக்குதல் இனவெறுப்பு தொடர்பானதா என்பதை அறிவதற்காக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஆஸ்டின், இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.&nbsp; &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-11T11:17:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் ; ஒரே குடும்பத்தின் நால்வா் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israeli-airstrikes-on-gaza-kill-civilians-1789124968"></link>
            <id>https://canadamirror.com/article/israeli-airstrikes-on-gaza-kill-civilians-1789124968</id>
            <summary type="text">வடக்கு காஸா பகுதியில் ஒரு வீட்டின்மீது இஸ்ரேல் வியாழக்கிழமை அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த கணவன், மனைவி மற்றும் அவா்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு காஸா பகுதியில் ஒரு வீட்டின்மீது இஸ்ரேல் வியாழக்கிழமை அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த கணவன், மனைவி மற்றும் அவா்களின் 2 பெண் குழந்தைகள் உயிரிழந்தனா்.
</p><p>
இத்தாக்குதலில் ஆயுதக் குழுவைச் சோ்ந்த முவாமன் அகமது கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b016cb68-0601-4862-8b87-62a635b2367d/26-6aa3e1696b74a.webp' /></p><p> </p><p>எனினும், அவரின் குடும்பத்தினா் உயிரிழப்பு குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

</p><p>
கடந்த ஆண்டு எட்டப்பட்ட அமெரிக்க ஆதரவு போா்நிறுத்தத்துக்குப் பிறகும், காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.</p>]]></content>
            <updated>2026-09-11T11:09:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - உக்ரைன் இடையே 100 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pm-carney-zelenskyy-sign-100-year-partnership-1789100101"></link>
            <id>https://canadamirror.com/article/pm-carney-zelenskyy-sign-100-year-partnership-1789100101</id>
            <summary type="text">&amp;nbsp;கனடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே 100 ஆண்டுகால கூட்டாண்மைப் பிரகடனம் மற்றும் ட்ரோன் உற்பத்திக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே 100 ஆண்டுகால கூட்டாண்மைப் பிரகடனம் மற்றும் ட்ரோன் உற்பத்திக்கான ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.</p><p>
வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்த உறவு கடந்த 100 ஆண்டுகளாகச் செழித்தோங்கியுள்ளது.</p><p> இந்தப்போர் முடிந்த பின்னரும், வரவிருக்கும் நூற்றாண்டிலும் இது மேலும் வலுவடையும்" என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/926e5628-613a-415a-b4f4-a85af10ccba2/26-6aa3804726e72.webp' /></p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை 'விரிவான மூலோபாயக் கூட்டாண்மையாக' உயர்த்தவும், பாதுகாப்பு மற்றும் முக்கிய கனிமவளத் துறைகளில் இணைந்து செயல்படவும் பிரகடனம் கையெழுத்தாகியுள்ளது.
</p><p>கனடிய ஆயுதப் படைகளுக்காகத் தேசிய ட்ரோன் சந்தை ஒன்றை கனடா தொடங்கவுள்ளது. இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான ட்ரோன்களை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> இதில் உலகளவில் முன்னணி வகிக்கும் உக்ரைனிய ட்ரோன் நிறுவனங்கள் கனடிய நிறுவனங்களுடன் இணைந்து ட்ரோன்களை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைத் தடுப்புகளை உருவாக்கும் உக்ரைனின் 'புரொஜெக்ட் ஃப்ரேயா' திட்டத்திற்குக் கூடுதல் ராணுவ உதவி வழங்க கனடா உறுதியளித்துள்ளது.</p><p>
2022-இல் போர் தொடங்கியதிலிருந்து கனடா உக்ரைனுக்கு 8.5 பில்லியன் டொலர் ராணுவ உதவியையும், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 750 மில்லியன் டாலரையும் வழங்கியுள்ளது. </p><p>அத்துடன் ரஷ்யா மீது 3,500-க்கும் மேற்பட்ட தடைகளையும் கனடா விதித்துள்ளது.
கால்கரி சந்திப்பைத் தொடர்ந்து, பானிஃப் நகரில் நடைபெறும் கனடிய லிபரல் அரசின் அமைச்சரவை திட்டமிடல் மன்றத்தில் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி உரையாற்றுகிறார்.</p><p> பிரான்ஸின் ஏவியான்-லே-பைன்ஸ் நகரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் மார்க் கார்னி விடுத்த அழைப்பின் பேரிலேயே ஸெலென்ஸ்கி இதில் பங்கேற்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T11:00:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிட்னியில் திடீரென ரத்தான பல விமானங்கள்; தவித்த பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/friday-many-flights-suddenly-cancelled-in-sydney-1789122001"></link>
            <id>https://canadamirror.com/article/friday-many-flights-suddenly-cancelled-in-sydney-1789122001</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அவுஸ்திரேலியாவின் பரபரப்பான சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் பற்றாக்குறையினால் இன்று (11) வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அவுஸ்திரேலியாவின் பரபரப்பான சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் பற்றாக்குறையினால் இன்று (11) வெள்ளிக்கிழமை காலை பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், பெருமளவிலான விமானங்கள் தாமதமடைந்ததாக அந்நாட்டு வான்வழிப் போக்குவரத்து முகாமைத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
</p><p>

திடீரென ஏற்பட்ட பணியாளர்கள் தட்டுப்பாட்டினால் வான்வழிப் போக்குவரத்து பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வான்வழிப் போக்குவரத்து முகாமைத்துவ நிர்வாகம் 'ஏர்சர்வீசஸ் அவுஸ்திரேலியா' அவசரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமுல்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/422bcff2-1a41-489f-a4ee-922c6f4ea66f/26-6aa3d5d2d1dbc.webp' /></p><p>
</p><p>
ஆதன் காரணமாக வருகை தரவிருந்த சுமார் 14 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், பல விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் புறப்பட முடியாமல் தாமதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இது தொடர்பில் ஏர்சர்வீசஸ் அவுஸ்திரேலியா' பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி பீட்டர் கரன் கூறுகையில் , 

சிட்னி விமான நிலையத்திற்கு 41 கட்டுப்பாட்டாளர்கள் தேவைப்படும் நிலையில், 08 பேர் நீண்டகால விடுப்பில் உள்ளதால், திடீரென ஏற்பட்ட ஒருவரின் விடுப்புக்கூட பெரும் இடையூறை ஏற்படுத்தியது.
</p><p>
காலை 8:15 மணியளவில் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு, பிற்பகலில் விமானங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பின.
</p><p>
கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் சிட்னி விமான நிலையத்தில் சுமார் 06 முறை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் ஆபத்தான நிலைகள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
கட்டுப்பாட்டாளர்களின் பணிச்சுமை மற்றும் சோர்வினால் இந்தச் சம்பவங்கள் நடந்ததா என்பது குறித்து அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றதாகவும் தெரிவிகப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T10:17:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்டோபெக்கில் பயங்கர சூறாவளி – இரு பகுதிகளில் கடும் சேதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-person-injured-after-2-tornadoes-hit-1789058449"></link>
            <id>https://canadamirror.com/article/one-person-injured-after-2-tornadoes-hit-1789058449</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள விண்டோபெக் நகரின் ரிவர் ஹைட்ஸ் மற்றும் பெனார்ட் ஆகிய பகுதிகளைச் சூறாவளி தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள விண்டோபெக் நகரின் ரிவர் ஹைட்ஸ் மற்றும் பெனார்ட் ஆகிய பகுதிகளைச் சூறாவளி தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
போர்ட்டேஜ் லா பிரேரிக்கு கிழக்கே உள்ள பெனார்ட் பகுதியில் முதல் சூறாவளி தாக்கியது.</p><p> மணிக்கு 165 கி.மீ வேகத்தில் வீசிய காற்றினால் பல கட்டடங்களும் தானியக் கிடங்குகளும் சேதமடைந்தன.</p><p> இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p>
முதல் சூறாவளி தாக்கிய சுமார் அரை மணி நேரத்திற்குப் பின்னர் விண்டோபெக்கின் ரிவர் ஹைட்ஸ் பகுதியில் இரண்டாவது சூறாவளி தாக்கியது. இங்கு காற்றின் வேகம் மணிக்கு 155 கி.மீ வரை பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72df3743-67f6-48b3-a4d3-850d066451fd/26-6aa2dd9357574.webp' /></p><p>
</p><p>இந்த கடும் காற்றினால் மேனிடோபா ஹைட்ரோ மின் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்தனர்.</p><p> 
இதில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 3 நாட்களுக்கும் மேலாக மின்சாரமின்றி தவித்து வருகின்றன.</p><p>
ட்ரோன்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்தச் சூறாவளிகளின் பாதிப்பை என்.ரீ.பீ அமைப்பினர் மதிப்பீடு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T08:53:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து விபத்து; பலர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tourist-bus-accident-in-switzerland-many-dead-1789103854"></link>
            <id>https://canadamirror.com/article/tourist-bus-accident-in-switzerland-many-dead-1789103854</id>
            <summary type="text">&amp;nbsp; சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மலைக்கிராமத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மலைக்கிராமத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>

இந்தப் பேருந்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ததாக டச்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டச்சு சுற்றுலா நிறுவனமான OAD ஏற்பாடு செய்த பயணத்தில் அவர்கள் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2578c44-41dc-4718-a23e-13e1441df77e/26-6aa38eefe5070.webp' /></p><h2>&nbsp;நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்</h2><p>

பேருந்தில் மொத்தம் 48 பேர் இருந்ததாக ‘De Telegraaf’ செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்த எண்ணிக்கையை சுவிஸ் காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
</p><p>
சுஷ் மற்றும் அருகிலுள்ள ஜெர்னெஸ் கிராமத்திற்கு இடையேயான சாலையில், உள்ளூர் நேரப்படி மாலை 4.45 மணியளவில் பேருந்து தடுப்பு வேலியில் மோதியதாக சுவிஸ் ஒளிபரப்பு நிறுவனமான SRF தெரிவித்துள்ளது.

விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் பல ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் SRF தெரிவித்துள்ளது.</p><p>
 
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கிராபுண்டனில் இன்று ஒரு டச்சுப் பேருந்துக்கு ஏற்பட்ட துயரமான விபத்தால் நான் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன்.</p><p> 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

விபத்துக்கான காரணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சூழ்நிலைகளையும் கண்டறிய சுவிஸ் அதிகாரிகள் விரிவான விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T08:44:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னிற்கு மகன் இருக்கிறாரா? உடைந்த ரகசியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/south-korea-trying-to-learn-kim-jong-un-has-a-son-1789108803"></link>
            <id>https://canadamirror.com/article/south-korea-trying-to-learn-kim-jong-un-has-a-son-1789108803</id>
            <summary type="text">வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களுக்குப் பிறந்த மூத்த மகன் குறித்த ரகசியத் தகவல்களைச் சேகரிக்கத் தென்கொரிய தேசிய உளவுத்துறை (NIS) தீவிர முயற்சிகளை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களுக்குப் பிறந்த மூத்த மகன் குறித்த ரகசியத் தகவல்களைச் சேகரிக்கத் தென்கொரிய தேசிய உளவுத்துறை (NIS) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
</p><p>
 எனினும் , நாட்டின் அடுத்த அதிபராக கிம்மின் மகள் ‘கிம் ஜூ ஏ’ (Kim Ju Ae) நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே மிகவும் உறுதியாக உள்ளதாகப் புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a02aba-885a-4f57-a7e6-3a7b7029e0eb/26-6aa3a2453d145.webp' /></p><h2>ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரப் படிநிலை</h2><p>
</p><p>
வடகொரியாவில் தந்தை வழி சமூக அமைப்பும், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரப் படிநிலையும் ஆழமாக வேரூன்றியுள்ளது.</p><p> 

இருப்பினும், இதுவரை கிம்மின் மூத்த மகன் அல்லது மூன்றாவது குழந்தை குறித்து எவ்வித உறுதியான வரலாற்றுச் சான்றுகளோ அல்லது பொதுவெளி நகர்வுகளோ வெளியாகவில்லை.</p><p>

மாறாக, கிம் ஜோங் உன்னின் சுமார் 13 வயது நிரம்பிய மகள் ‘கிம் ஜூ ஏ’, சமீபகாலமாக நாட்டின் முக்கிய இராணுவக் கூட்டுப் பயிற்சிகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகள் மற்றும் அரசாங்க நிகழ்வுகளில் அதிபருக்கு நிகராகத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.
</p><p>
 வடகொரிய அரசு ஊடகங்களும் அவரை “மிகவும் மதிப்பிற்குரிய வழிகாட்டி” (Respected Guide) என வாரிசுக்கான சொற்களைப் பயன்படுத்திக் குறிப்பிடத் தொடங்கியுள்ளன.
</p><p>
தென்கொரிய நாடாளுமன்றத்தில் உளவுத்துறை அதிகாரிகள் அளித்த விளக்கத்தின்படி, கிம் ஜூ ஏ வாரிசுப் பயிற்சிகளை முழுமையாக நிறைவு செய்துவிட்டார் என்றும், வடகொரியாவின் நான்காம் தலைமுறை அதிகாரத்தை அவரே கைப்பற்றுவார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.</p><p> 

வடகொரியாவில் மூத்த ஆண் வாரிசு உள்ளாரா என்ற கேள்விகள் நிலவியபோதிலும், இராணுவப் படைகளின் ஆதரவு மற்றும் அதிகாரப்பூர்வ நகர்வுகள் அனைத்தும் கிம் ஜூ ஏ-வை நோக்கியே நகர்வதாகச் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-11T08:43:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பட்டிமன்ற நடுவர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/solomon-pappayya-has-passed-away-1789115436"></link>
            <id>https://canadamirror.com/article/solomon-pappayya-has-passed-away-1789115436</id>
            <summary type="text">பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தமது 90 வது வயதில் இன்று (11) காலமானார். 

வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தமது 90 வது வயதில் இன்று (11) காலமானார். </p><p style="text-align: justify; ">

வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b466916-1217-46da-a651-82737d39b30a/26-6aa3bc2e48b13.webp' /></p><p style="text-align: justify; "> 

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழ் இலக்கிய விளக்கவுரையாளருமான சாலமன் பாப்பையா, எளிய மற்றும் நகைச்சுவையான தமிழில் பேசி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆவார். </p><p style="text-align: justify; ">

அன்றாட சமூக நிகழ்வுகள் மற்றும் குடும்பச் சூழல்களை மையமாகக் கொண்டு இவர் நடத்தும் பட்டிமன்றங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. </p><p style="text-align: justify; ">

சாலமன் பாப்பையா 1936ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்காவில் உள்ள சாத்தங்குடியில் பிறந்தார். </p><p style="text-align: justify; ">

இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 

மேலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். 

</p><p style="text-align: justify; "> 

அத்துடன், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான முதல்வன், போய்ஸ் மற்றும் சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ள இவர், இலக்கியத் திறனாய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

'பட்டிமன்றமும் பாப்பையாவும்” என்ற தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார். </p><p style="text-align: justify; ">

திருக்குறள் உரை, புறநானூறு புதிய வரிசை வகை, அகநானூறு உள்ளிட்ட உரை நூல்களையும், 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: ஓர் பார்வை” என்ற இலக்கியத் திறனாய்வு நூலையும் எழுதியுள்ளார். </p><p style="text-align: justify; ">

மேலும், 'அவர்கள் கண்ட ராமன்”, 'இவர்கள் நோக்கில் கம்பன்”, 'கம்பவனத்தில் ஓர் உலா”, 'கம்பனின் தமிழமுது” போன்ற பல்வேறு நூல்களைத் தொகுத்துள்ளார். </p><p style="text-align: justify; ">&nbsp;தமிழ்த் துறைக்கும் இலக்கியத்திற்கும் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக, இந்தியாவின் நான்காவது உயரிய விருதான மத்திய அரசின் 'பத்மஸ்ரீ” விருது 2021 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">

மேலும், 2010 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 'முத்தமிழ் பேரறிஞர்” விருதும், 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசின் 'கலைமாமணி' விருதும் இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T08:34:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா மகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hasina-s-daughter-resigns-from-who-health-post-1789114878"></link>
            <id>https://canadamirror.com/article/hasina-s-daughter-resigns-from-who-health-post-1789114878</id>
            <summary type="text">உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய இயக்குநர் பதவியை, பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சய்மா வாசெத், 53, ராஜினாமா செய்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய இயக்குநர் பதவியை, பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சய்மா வாசெத், 53, ராஜினாமா செய்துள்ளார்.

</p><p>பங்களாதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இழந்து நாட்டை விட்டு தப்பியோடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41ed120d-6a36-457c-b835-465f542eeaac/26-6aa3ba0004ff4.webp' /></p><p> இந்த அரசியல் அதிரடிகளின் தொடர்ச்சியாக, தற்போது அவரது குடும்பத்தினரையும் ஊழல் புகார்கள் துரத்தத் தொடங்கியுள்ளன. </p><p>இதன் உச்சகட்டமாக, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநராகப் பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாசித், நேற்று தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.</p><p>


சீனப் பயணத்தின்போது நிதி மோசடி செய்தது மற்றும் போலி கல்விச் சான்றிதழ் சமர்ப்பித்தது உள்ளிட்ட புகார்களின் பேரில் ஐ.நா. அமைப்பும், வங்காளதேச அரசும் அவர் மீது விசாரணை நடத்தி வந்தன.</p><p> ஏற்கனவே ஓராண்டாகச் சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டிருந்த சைமா, “தலைமை மீது நம்பிக்கை இழந்துவிட்டதால் விலகுகிறேன்" என கடிதம் எழுதியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-11T08:21:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹிஸ்புல்லா சுரங்கங்களை இடித்து அழித்ததாக அறிவித்த இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-says-hezbollah-tunnels-have-been-destroyed-1789110202"></link>
            <id>https://canadamirror.com/article/israel-says-hezbollah-tunnels-have-been-destroyed-1789110202</id>
            <summary type="text">தெற்கு லெபனானில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த அலி அல்-தாஹெர் மலைத்தொடருக்கு கீழே, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழுவால் கட்டப்பட்ட முக்கிய சுரங்கங்களை இடித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு லெபனானில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த அலி அல்-தாஹெர் மலைத்தொடருக்கு கீழே, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழுவால் கட்டப்பட்ட முக்கிய சுரங்கங்களை இடித்துத் தள்ளியதாக இஸ்ரேல் தெரிவித்தது.</p><p>

"இது ஈரானின் நிதியுதவி மற்றும் திட்டமிடலுடன் இரண்டு தசாப்தங்களாக கட்டப்பட்ட ஒரு பயங்கரவாத உள்கட்டமைப்பு ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46115294-1f5a-43bc-b0ed-8043f9e810d7/26-6aa3a7ec56dea.webp' /></p><p> </p><p>இதை அழிப்பது "அலி அல்-தாஹிர் முகட்டின் மீது - தரைக்கு மேலேயும் கீழேயும் - செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை முழுமையாக்குகிறது," என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


</p><p>
லெபனானின் அரசுக்குச் சொந்தமான தேசிய செய்தி நிறுவனம், நபாத்தியே பிராந்தியத்தில் உள்ள அலி அல்-தாஹெர் முகட்டில் இஸ்ரேல் ஒரு "மாபெரும் வெடிப்பை" நடத்தியதாகவும், அது "நிலநடுக்கங்களையும் சக்திவாய்ந்த அதிர்வையும் ஏற்படுத்தியதாகவும்" செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
தெற்கு லெபனானில் உள்ள ஏ.எஃப்.பி. பத்திரிகையாளர்களும் வியாழக்கிழமை மாலை பெரும் வெடி சத்தங்களை கேட்டதாக தெரிவித்தனர். </p><p>இரண்டு கிலோமீட்டருக்கும் (1.2 மைல்கள்) அதிகமான நீளத்திற்கு விரிந்திருந்த அந்தக் கட்டமைப்பில், "ஈரானில் தயாரிக்கப்பட்ட டஜன் கணக்கான ராக்கெட்டுகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், அத்துடன் இயந்திர துப்பாக்கிகள், டஜன் கணக்கான டாங்கெதிர்ப்பு ஏவுகணைகள், மற்றும் நூற்றுக்கணக்கான கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள்" இருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.
</p><p>
அந்த நிலத்தடி வளாகத்தில் ஹிஸ்புல்லாவின் 'பத்ர்' பிரிவின் கட்டளை மையமும் அடங்கியிருந்தது என்று ராணுவம் மேலும் தெரிவித்தது.</p>]]></content>
            <updated>2026-09-11T07:05:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா: ஈஸ்ட் ஜோரா-தவிஸ்டாக்கில் சாலை விபத்து - ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-person-dies-in-east-zorra-tavistock-crash-1789101438"></link>
            <id>https://canadamirror.com/article/one-person-dies-in-east-zorra-tavistock-crash-1789101438</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள ஈஸ்ட் ஜோரா-தவிஸ்டாக் பகுதியில் நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் உயிருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள ஈஸ்ட் ஜோரா-தவிஸ்டாக் பகுதியில் நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>வியாழக்கிழமை அதிகாலை 5:10 மணியளவில், கேசல் மற்றும் நெடுஞ்சாலை 59 சந்திப்பில் இவ்விபத்து நிகழ்ந்தது.
ஒரு எஸ்.யு.வி காரும் பிக்கப் டிரக்கும் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>எஸ்.யு.வி காரை இயக்கிய லண்டன் நகரைச் சேர்ந்த 50 வயது நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea58efc4-1f2a-4f8d-afe0-40ef870ca21e/26-6aa385802c68e.webp' /></p><p>
</p><p>பிக்கப் டிரக்கை இயக்கிய கோர்ட்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 34 வயது நபர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p>
விபத்தைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை 59-ன் குறிப்பிட்ட பகுதி மூடப்பட்டு, சம்பவ இடத்தில் சிந்திய எரிபொருள் அகற்றப்பட்ட பிறகு நண்பகல் வேளையில் மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது. </p><p>விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து நெடுஞ்சாலை 59-ன் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>மே 2023-ல் இதே நெடுஞ்சாலைக்கு அருகில் நடந்த மற்றொரு விபத்தில் பள்ளிப் பேருந்து ஓட்டுநர் ஒருவரும் காவல்துறை அதிகாரியும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T06:30:21+00:00</updated>
        </entry>
    </feed>
