<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-22T15:34:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cricketer-david-warner-faces-9-months-in-prison-1784726905"></link>
            <id>https://canadamirror.com/article/cricketer-david-warner-faces-9-months-in-prison-1784726905</id>
            <summary type="text">&amp;nbsp; அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட்டில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு அணி தலைவராக செயல்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bce6201-0ed5-43cc-bf5a-94c7c6472f06/26-6a60c57b520eb.webp' /></p><p> </p><p>&nbsp;கடந்த ஏப்ரல் மாதம், ஈஸ்டர் பண்டிகை அன்று, சிட்னியில் 3 கிளாஸ் வைன் குடித்து விட்டு டேவிட் வார்னர் காரை ஓட்டிச் சென்றார். 

போக்குவரத்து பொலிஸாரின் வழக்கமான சோதனையில் டேவிட் வார்னர், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகம் மது அருந்தியது உறுதியானது. </p><p>இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, டேவிட் வார்னர் மது அருந்தியதை ஒப்புக் கொண்டதாக அவரது வழக்கறிஞர் ஹில் குறிப்பிட்டார். 

மேலும் தனது செயல் முட்டாள்தனமானது என்றும், மது அருந்தி விட்டு வாடகை காரில் செல்லாமல் தானே வாகனத்தை ஓட்டிச் சென்றது தவறு எனவும் டேவிட் வார்னர் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 18 ஆம் திகதி தண்டனை விவரங்களை அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். </p><p>

எனவே, டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனையும், 6 மாதங்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு தடையும், இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-22T13:26:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயில் பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-french-firefighters-killed-in-wildfire-1784726702"></link>
            <id>https://canadamirror.com/article/two-french-firefighters-killed-in-wildfire-1784726702</id>
            <summary type="text">&amp;nbsp; தென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயை அணைக்க முயன்றபோது இரண்டு பிரெஞ்சு தீயணைப்பு வீரர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயை அணைக்க முயன்றபோது இரண்டு பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
</p><p>
விமான நிலைய வாகன நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள ஒரு புதரில் தொடங்கிய இந்தத் தீ, பின்னர் அருகிலுள்ள ஒரு கட்டிடத்திற்கும் பரவியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcb6e380-28ff-4659-a8e0-858f318993c7/26-6a60c4b07c914.webp' /></p><p>
</p><p>
இந்தத் தீயினால் ஏற்பட்ட பெரும் புகை மண்டலத்துடன், போர்டோ விமான நிலையத்திற்கு வரும் பல விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T13:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக்கிண்ண கோப்பை ஷாப்பிங் பையில் ; சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/world-cup-shopping-bag-video-viral-social-media-1784704778"></link>
            <id>https://canadamirror.com/article/world-cup-shopping-bag-video-viral-social-media-1784704778</id>
            <summary type="text">ஸ்பெயின் அணி உலகக்கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து, வீரர் Marc Cucurella FIFA உலகக்கிண்ணத்தை ஒரு சாதாரண ஷாப்பிங் பைக்குள் வைத்தபடி எடுத்துச் செல்லும் காட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் அணி உலகக்கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து, வீரர் Marc Cucurella FIFA உலகக்கிண்ணத்தை ஒரு சாதாரண ஷாப்பிங் பைக்குள் வைத்தபடி எடுத்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
</p><p>
இந்தக் காட்சியை பார்த்த பலருக்கும் முதலில் எழுந்த கேள்வி, “உலகின் மிக மதிப்புமிக்க விளையாட்டு சின்னங்களில் ஒன்றான FIFA உலகக்கிண்ணத்தை இவ்வளவு சாதாரணமாக எடுத்துச் செல்ல முடியுமா?” என்பதாகும்.</p><p>

FIFA உலகக்கிண்ணம் சாதாரணமாக தயாரிக்கப்பட்ட ஒரு கோப்பை அல்ல. இதன் உயரம் 36.8 சென்டிமீற்றர் ஆகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12409645-74f2-4f8b-bb97-4ab112664c3c/26-6a606f0cd9ec0.webp' /></p><p>மேலும் இதன் எடை 6.175 கிலோகிராம். 6 கிலோகிராமுக்கும் அதிகமான எடையைக் கொண்ட ஒரு பொருளை, எந்தவித சிரமமும் இல்லாமல் ஒரு சாதாரண பையில் எடுத்துச் செல்வது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
</p><p>
Cucurella அந்தக் கிண்ணத்தை எடுத்துச் செல்லும் விதம், அதிக எடை கொண்ட பொருளை கையாளும் ஒருவரின் உடல் மொழியாக தெரியவில்லை. மாறாக, மிகவும் இலகுவான பொருளை எடுத்துச் செல்வது போன்ற இயல்பான தோற்றத்தை அது வழங்குகிறது.</p><p>

இதனுடன் தொடர்புடைய மற்றொரு முக்கிய விடயம், FIFA உலகக்கிண்ணத்தின் பாதுகாப்பு நடைமுறைகளாகும். </p><p>அசல் உலகக்கிண்ணம், சாம்பியன் அணி வீரர்கள் கொண்டாட்டத்தின் போது கையில் ஏந்த அனுமதிக்கப்பட்டாலும், அதன் பின்னர் அது எப்போதும் FIFA அதிகாரிகளின் கண்காணிப்பிலேயே இருக்கும்.
</p><p>
அசல் கிண்ணத்தை வீரர்கள் தங்களது விருப்பப்படி மைதானம், உடைமாற்றும் அறை அல்லது பிற இடங்களுக்கு எடுத்துச் செல்வது வழக்கமான நடைமுறை அல்ல.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd2ca693-3f04-47de-b7db-4245bb50671e/26-6a606f0c37424.webp' /></p><p>இதன் காரணமாக, வெற்றிக் கொண்டாட்டங்கள், புகைப்பட நிகழ்ச்சிகள் மற்றும் ஊடக நிகழ்வுகளுக்காக FIFA தரப்பில் Replica Trophy எனப்படும் மாதிரி கிண்ணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.</p><p> அவை தோற்றத்தில் அசல் கிண்ணத்தைப் போன்றே இருந்தாலும், வேறு பொருட்களால் தயாரிக்கப்படுவதால் எடை குறைவாக இருக்கும்.
</p><p>
எனவே, Marc Cucurella எடுத்துச் சென்றது உண்மையான FIFA உலகக்கிண்ணம் அல்லாமல், கொண்டாட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் Replica Trophy ஆக இருக்கலாம் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அந்தக் கிண்ணம் Replica Trophy என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இதுவரை வெளியாகவில்லை. </p><p>காட்சியில் தெரியும் விதம், கிண்ணத்தின் எடை மற்றும் FIFA-வின் பாதுகாப்பு நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த ஊகம் முன்வைக்கப்படுகிறது.
</p><p>
வைரலாகியுள்ள இந்தக் காட்சி, உலகக்கிண்ணம் தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அதன் உண்மையான மதிப்பு குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T13:20:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு ; டிரம்ப் ஷாக் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/very-few-soldiers-died-in-the-war-is-waged-trump-1784716347"></link>
            <id>https://canadamirror.com/article/very-few-soldiers-died-in-the-war-is-waged-trump-1784716347</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு என டிரம்ப் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா கடந்த 50 வருடங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு என டிரம்ப் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா கடந்த 50 வருடங்களுக்கு மேலாகவே பல நாடுகளிலும் போர் தொடுத்து வருகின்றன. </p><p>அந்த போர்களில் எதிரி நாடுகள் தாக்கியதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலரும் உயிரிழந்திருக்கிறார்கள். 

அமெரிக்கா இதுவரை ஆப்கானிஸ்தான், ஈராக், வியட்நாம், கொரியா, வெனிசுலா, ஈரான் போன்ற நாடுகளின் போரை நடத்தி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b2df269-5f74-4864-9ecf-a7c9a2b9d124/26-6a609c3d681f6.webp' /></p><p> </p><p>அதில் பல ஆயிரம் ராணுவ வீரர்கள் இறந்து போயிருக்கிறார்கள்.

நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கூறி அமெரிக்காவும், இஸ்ரலும் சேர்ந்து அந்த நாட்டின் மீது போரை துவங்கியது.&nbsp;</p><p>
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்திய போரால் பல்லாயிரம் வீரர்கள் இறந்து போய்விட்டதாக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட துவங்கியிருக்கிறார்கள். </p><p>அதோடு அமெரிக்காவுக்கு பல கோடி மில்லியன்கள் செலவாகிவிட்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தள பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் ,</p><p>

20 வருடங்கள் நடந்த ஆப்கானிஸ்தான் போரில் 2 ஆயிரம் வீரர்களும், 8 வருடங்கள் நடந்த ஈராக் போரில் 4,800 வீரர்களும், 19 வருடம் நடந்த வியட்நாம் போரில் 56,220 பேரும், 3 வருடங்கள் நடந்த கொரியன் போரில் 36,575 வீரர்களும், ஒரு நாள் நடந்த வெனிசுலா போரில் யாரும் இறக்கவில்லை, ஈரானுடான 4 மாத போரில் 18 அமெரிக்கா ராணுவ வீரர்கள் மட்டுமே இறந்துள்ளனர் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்</p>]]></content>
            <updated>2026-07-22T13:19:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[700 ஆண்டுகால ஸ்பெயின் அரச கல்லறைக்குள் அதிர்ச்சி; எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/discovery-inside-a-700-year-old-spanish-royal-tomb-1784699192"></link>
            <id>https://canadamirror.com/article/discovery-inside-a-700-year-old-spanish-royal-tomb-1784699192</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘சாண்டா மரியா டி பெட்ரால்பஸ்’ (Santa Maria de Pedralbes) மடாலயத்தில், 700 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘சாண்டா மரியா டி பெட்ரால்பஸ்’ (Santa Maria de Pedralbes) மடாலயத்தில், 700 ஆண்டுகள் பழமையான அரச கல்லறைகளைத் திறந்து தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. </p><p>

14-ஆம் நூற்றாண்டில் அரசி எலிசெண்டா (Queen Elisenda) என்பவரால் நிறுவப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னத்தின் 700-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், இதுவரை சொல்லப்பட்டு வந்த வரலாற்றுப் பதிவுகளுக்கு முற்றிலும் மாறான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6f636a-3b69-4db0-9d9b-484f82b56f0d/26-6a605939ec216.webp' /></p><h2>&nbsp;9 நபர்களின் எலும்புக்கூடுகள்</h2><p> 

வரலாற்று ஏடுகளின்படி, வீரத் தளபதியான ஆர்டாவ் டி ஃபோசெஸ் (Artau de Foces) என்பவரின் கல்லறை என நினைத்துத் திறக்கப்பட்ட இடத்தில், ஒரு ஆண் எலும்புக்கூடு கூடக் கிடைக்கவில்லை.</p><p>

 மாறாக, அங்கு இரண்டு பெண்களின் உடல்களும், மூன்று குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டன. அ

தில் ஒரு பெண்ணின் மண்டையோட்டுடன் 700 ஆண்டுகள் கடந்தும் சடை போட்ட கூந்தல் (Ponytail) அப்படியே சிதையாமல் மம்மியாகி இருந்தது தொல்லியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.</p><p>

அதைவிடப் பெரிய அதிர்ச்சியாக, அரசியின் உறவினரும் மடாலயத்தின் தலைவியுமான பிரான்செஸ்கா என்பவரின் கல்லறையை ஆய்வு செய்த போது, அங்குப் பல்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த 9 நபர்களின் எலும்புக்கூடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>

அதில் கூர்மையான ஆயுதங்களால் வெட்டப்பட்டு உயிரிழந்த 4 ஆண்களின் மண்டையோடுகளும், பிரசவத்தின் போதே இறந்து போன ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் மம்மியான உடலும் கண்டெடுக்கப்பட்டன. </p><p>அந்தப் பெண்ணின் பிரசவப் பாதையிலேயே 22 வாரக் கருவின் எலும்புகள் சிக்கியிருந்த காட்சி ஆராய்ச்சியாளர்களை உரைய வைத்தது.

மடாலயத்தின் நிறுவனர் அரசி எலிசெண்டாவின் உடலும் மரப்பெட்டிக்குள் வைத்துப் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p>அரச குடும்பத்துக்கான ஆடம்பரத்துடன் புதைக்கப்படாமல், எளிய துறவி உடையில் அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது, அவரது ஆன்மீக வாழ்க்கை முறைக்குச் சான்றாக உள்ளது.</p><p>

 இந் நிலையில் அரச கல்லறைகளுக்குள் கொலை செய்யப்பட்ட ஆண்களின் உடல்களும், பெண்களும், குழந்தைகளும் எப்படி வந்தார்கள் என்ற வரலாற்றுப் புதிரை அவிழ்க்க, மரபணு (DNA) மற்றும் கார்பன் ரேடியோ சோதனைகளைத் தொல்லியல் வல்லுநர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-22T11:06:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் எப்-1 மற்றும் ஜே-1 விசாவில் புதிய மாற்றம்; நெருக்கடியில் இந்திய மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-changes-to-us-f-1-and-j-1-visas-1784715685"></link>
            <id>https://canadamirror.com/article/new-changes-to-us-f-1-and-j-1-visas-1784715685</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட சர்வதேச மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளன. செப்டம்பர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட சர்வதேச மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளன. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அமெரிக்காவுக்கு திரும்புமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். </p><p>
 
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையின் புதிய விதிகளின்படி, தற்போதைய 'நிலை கால அளவு' முறையானது மாற்றப்பட உள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfe7d40b-f59f-4478-9ff6-f92482c2c85f/26-6a6099a744c4a.webp' /></p><p>இதன் மூலம் எப்-1 மற்றும் ஜே-1 விசா வைத்துள்ள மாணவர்கள் அதிகபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். </p><p>இந்த புதிய விதி செப்டம்பர் 15 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
 
படிப்பை முடிக்க நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் இளங்கலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு இந்த வரம்பு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். </p><p>

 
குறிப்பாக, இந்திய மாணவர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T10:19:56+00:00</updated>
        </entry>
    </feed>
