<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-05T18:28:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் எதிரொலி ; அமெரிக்காவில் பெற்றோல் விலை வரலாறு காணாத உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/petrol-prices-in-the-us-hit-an-all-time-high-1788632422"></link>
            <id>https://canadamirror.com/article/petrol-prices-in-the-us-hit-an-all-time-high-1788632422</id>
            <summary type="text">ஈரான் மீதான போரை தொடர்ந்து அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் காரணமாக, அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலன் (அமெரிக்காவில் 3.78 லீற்றர்) 4 டொலரைத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான போரை தொடர்ந்து அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் காரணமாக, அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலன் (அமெரிக்காவில் 3.78 லீற்றர்) 4 டொலரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

வரவிருக்கும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படும் வாரத்தில் பெற்றோல் விலை ஒரு கலன் 4.03 டொலராக இருக்கும் என கேஸ் பட்டி (GasBuddy) தரவுகள் கணித்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0271a611-7742-49d3-ba02-91b0fa61bc54/26-6a9c5d67d82c8.webp' /></p><p>இது, கடந்த 2012 ஆம் ஆண்டில் பதிவான ஒரு கலனுக்கான 3.83 டொலர் என்ற முந்தைய சாதனையை விட மிக அதிகமாகும்.
</p><p>
அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தைக் கொண்டாடும் அதிகாரப்பூர்வ விடுமுறை தினமான தொழிலாளர் தினம் (Labour Day) திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்வுள்ள நிலையில், இந்த நீண்ட வார இறுதியில் பலரும் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
GasBuddy தரவுகளின்படி, கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி நாட்டின் சராசரி பெற்றோல் விலை ஒரு கலனுக்கு சுமார் 4.13 டொலராக இருந்தது. </p><p>இது கடந்த ஆண்டின் சராசரியை விட சுமார் ஒரு டொலர் கூடுதலாகும்.</p><p>

4 டொலர் என்ற இந்த விலை எல்லையானது அமெரிக்க நுகர்வோருக்கு மிகவும் தாங்க முடியாத ஒரு புள்ளியாக (Pain Point) மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் ஏழாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் எதிர்வரும் நவம்பர் இடைக்காலத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T18:20:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளை கொன்ற பெண் விடுவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-killed-her-3-children-in-the-us-released-1788611206"></link>
            <id>https://canadamirror.com/article/woman-killed-her-3-children-in-the-us-released-1788611206</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் கைதான லிண்ட்சே கிளான்சி என்ற பெண் மீதான கொலை வழக்கில், விசாரணையை ரத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் கைதான லிண்ட்சே கிளான்சி என்ற பெண் மீதான கொலை வழக்கில், விசாரணையை ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p> 

மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பிளைமவுத் நகரில் கடந்த 2023 ஜனவரி மாதம் நடந்த இந்த சம்பவத்தில், 36 வயதான முன்னாள் செவிலியரான லிண்ட்சே கிளான்சி தனது மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c827ebe-6cdd-4d9d-b30e-b0aef3bb0af1/26-6a9c0a87d897b.webp' /></p><h2>&nbsp;கடுமையான மனநலப் பாதிப்பு</h2><p>
</p><p>
பிரசவத்திற்குப் பிந்திய கடுமையான மனநலப் பாதிப்பு காரணமாகவே அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும், எனவே அவரை மனநலப் பாதிப்பின் அடிப்படையில் குற்றமற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் அவரது தரப்பு சட்டத்தரணி வாதாடினார்.</p><p>

எனினும் கிளான்சிக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்தபோதிலும், அவர் திட்டமிட்டே தன் குழந்தைகளைக் கொன்றதாக அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
</p><p>
இந்த வழக்கு அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடர்வது குறித்து அரசு தரப்பு இன்னும் முடிவு செய்யவில்லை என்பதுடன், குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிளான்சி எதிர்வரும் 29 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T14:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தன்னை கருணைக்கொலை செய்யுமாறு கோரிய நகைச்சுவை நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-court-denies-toronto-womans-motion-1788537333"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-court-denies-toronto-womans-motion-1788537333</id>
            <summary type="text">&amp;nbsp;மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
</p><p>எனினும், இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்குப் பதிலளிக்குமாறு கனடா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>டொராண்டோவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும் நகைச்சுவைக் கலைஞருமான கிளாரி புரோஸோ , சிறுவயது முதலே கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17fafbec-6a8d-4ac7-aaaf-337e6e70589b/26-6a9ae9f6e5020.webp' /></p><p>
</p><p>பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் தனக்குக் தீராத மன உளைச்சல் நீடிப்பதால், சட்டம் வழங்கும் கருணைக்கொலைக்குத் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மே 2026-இல் அவசர மனுத் தாக்கல் செய்திருந்தார்.
</p><p>நீதிபதி கரிசிமா மாதன், புரோஸோவின் வேதனைகள் உண்மையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றபோதிலும், சட்ட விலக்கு அளிப்பது சமூகத்திலும் அரசின் கொள்கை முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மனுவை நிராகரித்தார்.
</p><p>அதேசமயம், 2024-ஆம் ஆண்டு புரோஸோ தாக்கல் செய்த அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை 14 நாட்களுக்குள் தொடங்குமாறு கனடா தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
</p><p>கனடாவில் 2021-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, தீர்க்க முடியாத நோய் மற்றும் உடல் ஊனம் உள்ளவர்கள் கருணைக்கொலை கோர முடியும்.</p><p> ஆனால், மனநலப் பிரச்சினையை மட்டுமே காரணமாகக் கொண்டு கருணைக்கொலை கோருவதற்கு அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. </p><p>இத்தடையை நீட்டிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசிய புரோஸோ, "மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களைப் போன்ற சம உரிமையோ, உடல் சார்ந்த சுய உரிமையோ இல்லை என்பதை அரசாங்கம் மீண்டும் நிரூபித்துள்ளது. </p><p>நான் தொடர்ந்து வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்" என வேதனையுடன் தெரிவித்தார்.
</p><p>அரசியலமைப்புச் உரிமைகளின்படி மனநலப் பாதிப்பு உள்ளவர்களுக்கும் கருணைக்கொலை உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்கான முதன்மை வழக்கைத் தொடர்ந்து நடத்தப்போவதாக புரோஸோவின் சட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T12:58:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள சுரங்கப்பாதையில் 10 நாட்களின் பின் மீட்கப்பட்ட மூன்றாவது நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/third-person-rescued-nepal-tunnel-after-10-days-1788607462"></link>
            <id>https://canadamirror.com/article/third-person-rescued-nepal-tunnel-after-10-days-1788607462</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாள சுரங்கப்பாதையில் 10 நாட்களின் பின்னர் இருந்து மூன்றாவது நபர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 இயற்கையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாள சுரங்கப்பாதையில் 10 நாட்களின் பின்னர் இருந்து மூன்றாவது நபர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

 இயற்கையில் திடீர் கோர தாண்டவத்தால் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 5,600க்கும் மேற்பட்டோர் காணாமல் போன 10 நாட்களுக்குப் பின்னர், நேபாளத்தில் இன்று சனிக்கிழமையன்று ஒரு சீன நாட்டவர் சுரங்கப்பாதையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f70d942-b4d3-4477-b6b6-5eb4968a7d89/26-6a9bfbe7bae91.webp' /></p><p>
</p><p>
திரிசூலி ஆற்றில் உள்ள அதே நீர்மின் சுரங்கப்பாதையிலிருந்துதான் அந்த சீன நபர் மீட்கப்பட்டதாக நேபாள இராணுவம் கூறியது. முந்தைய நாள் இதே சுரங்கப்பாதையில்தான் இரண்டு நேபாளியர்கள் ஒரு பரபரப்பான மீட்பு நடவடிக்கையில் உயிருடன் மீட்கப்பட்டனர்.
</p><p>
ஆற்றின் மேல் பகுதிகளில் ஆகஸ்ட் 26 அன்று ஒரு பனியாறு சரிந்ததால், ஆறு நீர்மின் திட்டங்கள் தொடர்பான சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் சிக்கியிருக்கலாம் என்று மீட்புப் பணியாளர்கள் நம்புவதாகக் கூறியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T12:42:15+00:00</updated>
        </entry>
    </feed>
