<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-05T23:27:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் விமானத்தில் அட்டகாசம் செய்த பயணி ; இருக்கையுடன் டேப் போட்டு கட்டி வைத்த சக பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/passenger-causes-a-scene-on-a-flight-in-the-us-1788646117"></link>
            <id>https://canadamirror.com/article/passenger-causes-a-scene-on-a-flight-in-the-us-1788646117</id>
            <summary type="text">அமெரிக்காவில், விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 67 வயதுடைய பயணி ஒருவர் சக பயணிகளால் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில், விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 67 வயதுடைய பயணி ஒருவர் சக பயணிகளால் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அமெரிக்கன் ஏர்லைன்ஸின் AA618 விமானம் கடந்த வியாழக்கிழமை டெக்சாஸின் டல்லாஸிலிருந்து நியூவர்க்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d581c9e8-412d-487a-8291-49b088d0017d/26-6a9c92e78ddd5.webp' /></p><p> </p><p>விமானத்தில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, பயணியின் கைகள் ஜிப் டைகளால் கட்டப்பட்டதுடன், அவர் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்டதாக மேரிலாந்து போக்குவரத்து ஆணைய காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
அரிசோனாவைச் சேர்ந்த 67 வயதான ஆர்தர் லண்டீன் என்பவரே இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>சம்பவத்துக்கான முழுமையான காரணங்கள் ஆரம்பத்தில் வெளியிடப்படவில்லை என்றாலும், விமானத்தில் அவரது நடத்தை கடுமையாக இருந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

நிலைமை கட்டுக்கடங்கியதைத் தொடர்ந்து விமானம் அதன் பயணப் பாதையை மாற்றி, இரவு சுமார் 10.15 மணியளவில் Baltimore/Washington International Airport (BWI) விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு காவல்துறையினர் விமானத்தில் ஏறி அவரை கைது செய்தனர்.
</p><p>
சம்பவம் தொடர்பாக Federal Aviation Administration (FAA) விசாரணை நடத்தி வருவதுடன், FBI-யும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>பயணியை அகற்றிய பின்னர் விமானம் தனது இறுதி இலக்கான நியூவர்க்கை நோக்கி தொடர்ந்து பயணித்தது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், விமானப் பயணங்களின்போது கட்டுப்பாடற்ற பயணிகளால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T22:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் எதிரொலி ; அமெரிக்காவில் பெற்றோல் விலை வரலாறு காணாத உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/petrol-prices-in-the-us-hit-an-all-time-high-1788632422"></link>
            <id>https://canadamirror.com/article/petrol-prices-in-the-us-hit-an-all-time-high-1788632422</id>
            <summary type="text">ஈரான் மீதான போரை தொடர்ந்து அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் காரணமாக, அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலன் (அமெரிக்காவில் 3.78 லீற்றர்) 4 டொலரைத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான போரை தொடர்ந்து அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் காரணமாக, அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலன் (அமெரிக்காவில் 3.78 லீற்றர்) 4 டொலரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

வரவிருக்கும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படும் வாரத்தில் பெற்றோல் விலை ஒரு கலன் 4.03 டொலராக இருக்கும் என கேஸ் பட்டி (GasBuddy) தரவுகள் கணித்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0271a611-7742-49d3-ba02-91b0fa61bc54/26-6a9c5d67d82c8.webp' /></p><p>இது, கடந்த 2012 ஆம் ஆண்டில் பதிவான ஒரு கலனுக்கான 3.83 டொலர் என்ற முந்தைய சாதனையை விட மிக அதிகமாகும்.
</p><p>
அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தைக் கொண்டாடும் அதிகாரப்பூர்வ விடுமுறை தினமான தொழிலாளர் தினம் (Labour Day) திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்வுள்ள நிலையில், இந்த நீண்ட வார இறுதியில் பலரும் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
GasBuddy தரவுகளின்படி, கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி நாட்டின் சராசரி பெற்றோல் விலை ஒரு கலனுக்கு சுமார் 4.13 டொலராக இருந்தது. </p><p>இது கடந்த ஆண்டின் சராசரியை விட சுமார் ஒரு டொலர் கூடுதலாகும்.</p><p>

4 டொலர் என்ற இந்த விலை எல்லையானது அமெரிக்க நுகர்வோருக்கு மிகவும் தாங்க முடியாத ஒரு புள்ளியாக (Pain Point) மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் ஏழாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் எதிர்வரும் நவம்பர் இடைக்காலத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T21:42:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் உருவான 3 சூறாவளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/three-cyclones-formed-simultaneously-pacific-ocean-1788642801"></link>
            <id>https://canadamirror.com/article/three-cyclones-formed-simultaneously-pacific-ocean-1788642801</id>
            <summary type="text">உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை எல் நினோ காரணி பாதித்துள்ள பின்னணியில், அது உருவான பசிபிக் பெருங்கடலில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் மூன்று சூறா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை எல் நினோ காரணி பாதித்துள்ள பின்னணியில், அது உருவான பசிபிக் பெருங்கடலில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் தீவிரமடைந்துள்ளன. </p><p>

இந்த சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ஹவாய் தீவுகளுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/616a0b6f-104b-4c8c-afea-37845860fa93/26-6a9c85f31c230.webp' /></p><p>எல் நினோ தாக்கத்தின் மத்தியில் இந்த ஆண்டில் சீனாவைப் பாதித்த 7ஆவது சூறாவளியாகக் குறிப்பிடப்படும் 'சௌடெல்' (Soudelor) சூறாவளி அந்நாட்டிற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகக் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

எல் நினோ காரணமாக கொலம்பியாவில் மழை குறைந்து வறட்சி நிலை ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள வீடுகளுக்கு பவுசர்கள் மூலம் நீர் விநியோகிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், கடந்த சில வாரங்களாக இந்தோனேசியா மற்றும் சுவிட்சர்லாந்தின் வனப்பகுதிகளில் நிலவிய வறட்சியான வானிலையுடன் கடுமையான காட்டுத்தீ பரவியது. </p><p>

உலகிற்கு இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்திய எல் நினோ நிலைமை, இலங்கையின் பல மாவட்டங்களில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

இதற்கமைய, நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் 35,000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T21:13:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் கார்க் தீவு அருகே எண்ணெய் தாங்கி கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-missile-attack-oil-tanker-iran-kharg-island-1788638933"></link>
            <id>https://canadamirror.com/article/us-missile-attack-oil-tanker-iran-kharg-island-1788638933</id>
            <summary type="text">ஈரானின் கார்க் (Kharg) தீவுப் பகுதிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கார்க் (Kharg) தீவுப் பகுதிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eac0a48-e5ba-4ece-bef3-e3f437fc16ce/26-6a9c76d775bc7.webp' /></p><p>அந்தக் கப்பல் அமெரிக்காவின் நான்கு ஏவுகணைத் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளதாகவும், தற்போது கப்பலில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் 'கபார் ஃபூரி' (Khabar Fouri) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதப் பகுதிகள் இந்த கார்க் தீவு ஊடாகவே செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-05T20:09:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையேற்ற வீரர்களின் சிறுநீரால் 154 டன் பனி உருகுகிறதா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/154-tonnes-of-snow-melt-due-to-urine-mountaineers-1788637562"></link>
            <id>https://canadamirror.com/article/154-tonnes-of-snow-melt-due-to-urine-mountaineers-1788637562</id>
            <summary type="text">இமயமலைத் தொடரில் அமைந்துள்ள உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற வீரர்களின் மனித நடவடிக்கைகளும் பனிப்பாறைகள் உருகுவதற்கு குறிப்பிடத்தக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இமயமலைத் தொடரில் அமைந்துள்ள உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற வீரர்களின் மனித நடவடிக்கைகளும் பனிப்பாறைகள் உருகுவதற்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
</p><p>
குறிப்பாக, எவரெஸ்ட் அடிவார முகாம் அமைந்துள்ள கும்பு (Khumbu) பனிப்பாறைப் பகுதியில் மலையேற்ற வீரர்கள் சிறுநீர் கழிப்பதும் அப்பகுதியில் பனி உருகுவதற்கு ஒரு காரணியாக அமைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01899476-ee45-4be9-b39e-49850eec3ddd/26-6a9c717c5c95e.webp' /></p><p>

'Regional Environmental Change' என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
நேபாள நில அளவைத் துறையின் சிரேஷ்ட ஆய்வாளர் கிம் லால் கௌதம் (Khim Lal Gautam) உள்ளிட்ட சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று, 2023ஆம் ஆண்டு வசந்த காலத்தில் கும்பு பனிப்பாறைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனித நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொண்டது.
</p><p>
இந்த ஆய்வின்படி, 2023ஆம் ஆண்டில் எவரெஸ்ட் அடிவார முகாமில் மலையேற்ற வீரர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய வழிகாட்டிகளின் பல்வேறு மனித நடவடிக்கைகளால் சுமார் 2,492 டன் பனி உருகியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதில், மலையேற்ற வீரர்கள் சிறுநீர் கழித்ததன் காரணமாக மட்டும் சுமார் 154 டன் பனி உருகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
</p><p>
எவரெஸ்ட் மலையேற்றப் பருவம் பொதுவாக சுமார் 50 நாட்கள் நீடிக்கும் நிலையில், அந்தக் காலப்பகுதியில் மலையேற்ற வீரர்கள் மற்றும் வழிகாட்டிகளால் நாளொன்றுக்கு 6,000 லீற்றருக்கும் அதிகமான சிறுநீர் வெளியேற்றப்படுவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
அதிக உயரமான பகுதிகளில் உடலின் நீர்ச்சத்தைப் பேணுவதற்காக மலையேற்ற வீரர்கள் அதிகளவில் தண்ணீர் அருந்துவதால், இவ்வாறு அதிகளவு சிறுநீர் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

திடக்கழிவுகள் பெருமளவில் அகற்றப்பட்டு வந்தாலும், சிறுநீர் நேரடியாக பனிப்பாறைகளின் மீது வெளியேற்றப்படுவது சுற்றுச்சூழல் ரீதியாக புதிய சிக்கலை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
சிறுநீரில் உள்ள திரவத்தின் வெப்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வெப்ப ஆற்றல் காரணமாக பனியின் உருகும் செயற்பாடு அதிகரிக்கக்கூடும் என ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, எவரெஸ்ட் அடிவார முகாமில் சமையல், வெப்பமூட்டுதல் மற்றும் மின்சாரத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் எரிபொருட்களிலிருந்து வெளியாகும் வெப்பமும் பனி உருகுதலுக்கு பங்களிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd934f27-e111-4a3b-a34c-9c8c3744e00d/26-6a9c717ba9214.webp' /></p><p>இவ்வாறான மனித நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த தாக்கத்தின் காரணமாகவே 2023ஆம் ஆண்டு மலையேற்றப் பருவத்தில் கும்பு பனிப்பாறைப் பகுதியில் சுமார் 2,492 டன் பனி உருகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.</p><p>

எவ்வாறாயினும், காலநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பே எவரெஸ்ட் உள்ளிட்ட இமயமலைப் பனிப்பாறைகள் உருகுவதற்கான பிரதான காரணம் என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
</p><p>
அதேநேரத்தில், எவரெஸ்ட் அடிவார முகாம் போன்ற அதிகமான மனிதர்கள் கூடும் பகுதிகளில் இடம்பெறும் அன்றாட நடவடிக்கைகள் உள்ளூர் வெப்பநிலையை அதிகரித்து, ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள பனிப்பாறைகளின் உருகும் வேகத்தை மேலும் துரிதப்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனால், எவரெஸ்ட் பகுதியில் அதிகரித்து வரும் மலையேற்ற சுற்றுலாவின் சுற்றுச்சூழல் தாக்கங்களை கருத்திற்கொண்டு, மனிதக் கழிவுகள் மற்றும் எரிபொருள் பயன்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேலும் முறையாக நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
</p><p>
உலகின் மிக உயரமான சிகரத்தைச் சுற்றியுள்ள பனிப்பாறைகள் காலநிலை மாற்றத்தால் ஏற்கனவே வேகமாக மாற்றமடைந்து வரும் நிலையில், மனித நடவடிக்கைகளின் சிறியதாகத் தோன்றும் தாக்கங்கள்கூட நீண்டகாலத்தில் முக்கியமான சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T19:46:12+00:00</updated>
        </entry>
    </feed>
