<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-31T06:30:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் 3-வது அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடாக இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sri-lanka-ranks-third-1788155971"></link>
            <id>https://canadamirror.com/article/sri-lanka-ranks-third-1788155971</id>
            <summary type="text">உலகிலேயே அதிக பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்காவின் &#039;பியூ ஆராய்ச்சி மையம்&#039; (Pew Resea...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகிலேயே அதிக பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
</p><p>அமெரிக்காவின் 'பியூ ஆராய்ச்சி மையம்' (Pew Research Center) வெளியிட்டுள்ள புதிய பகுப்பாய்வு அறிக்கையின்படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db02cdb5-aea2-48d2-95f8-0376d6d9cf05/26-6a95184461861.webp' /></p><p>மியான்மர் முதலிடத்தையும், பங்களாதேஷ் இரண்டாம் இடத்தையும் வகிக்கின்றன.
</p><p>ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 190 உறுப்பு நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலகளாவிய சராசரி விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 13 ஆகும். ஆனால், 2026-ஆம் ஆண்டில் இலங்கையில் 25 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>•	மியான்மர்: 30 நாட்கள் (முதலிடம்)
</p><p>•	பங்களாதேஷ்: 29 நாட்கள் (இரண்டாமிடம்)
</p><p>•	இலங்கை: 25 நாட்கள் (மூன்றாமிடம்)
</p><p>கம்போடியா, ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளும் 20-க்கும் மேற்பட்ட விடுமுறை நாட்களைக் கொண்டுள்ளன.
</p><p>சுவிட்சர்லாந்தில் 1 தேசிய விடுமுறை மட்டுமே உள்ளது (மாநில அளவில் குறைந்தது 8 விடுமுறைகள் உண்டு). போஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினாவில் 4 நாட்களும், உருகுவேயில் 5 நாட்களும் மட்டுமே பொது விடுமுறைகளாக உள்ளன.
</p><p>இலங்கையில் பெரும்பாலான மக்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றுவதால், சந்திர சுழற்சியின் அடிப்படையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தையும்&nbsp; அரசு பொது விடுமுறையாக அறிவிப்பதே இந்த அதிக எண்ணிக்கைக்கு முதன்மை காரணமாகும். </p><p>
பிற பௌத்த நாடுகள் விசாகப் பண்டிகைக்கு மட்டும் விடுமுறை அளிக்கும் வேளையில், இலங்கை ஒவ்வொரு பௌர்ணமிக்கும் விடுமுறை அளிக்கும் தனித்துவத்தைக் கொண்டுள்ளது.
</p><p>அத்துடன், உலகளவில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ், பெரிய வெள்ளி, ரம்ஸான் (ஈத் அல்-ஃபித்ர்), பக்ரீத் (ஈத் அல்-அதா), தீபாவளி மற்றும் விசாகப் பண்டிகை போன்ற பல்வேறு மதப் பண்டிகைகளும் இலங்கையில் பொது விடுமுறைகளாகப் பின்பற்றப்படுகின்றன.
</p><p>இலங்கையின் 1971-ஆம் ஆண்டின் 29-ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் கீழ், அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2027-ஆம் ஆண்டிற்கான விடுமுறைப் பட்டியல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>2027-ஆம் ஆண்டிலும் மொத்தம் 25 பொது மற்றும் வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>அவற்றில் 9 விடுமுறை நாட்கள் வெள்ளி அல்லது திங்கட்கிழமைகளில் வருவதால், மக்களுக்கு 9 நீண்ட வாரயிறுதி வாய்ப்புகள் கிடைக்கின்றன.</p><p>
ஜனவரி மாதத்தில் ஜனவரி 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் இருமுறை நீண்ட வாரயிறுதி அமைகிறது. மார்ச், மே, ஜூன், ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் இவ்வாய்ப்பு உள்ளது.</p><p>
மே மாதத்தில் ஹஜ் பண்டிகை திங்கட்கிழமையிலும், வெசாகப் பண்டிகை புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் வருவதால், அந்த வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும்.
</p><p>எனினும், மே தினம் மற்றும் கிறிஸ்துமஸ் உட்பட 6 விடுமுறைகள் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T05:59:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/passenger-boat-capsizes-coast-of-northern-cyprus-1788154156"></link>
            <id>https://canadamirror.com/article/passenger-boat-capsizes-coast-of-northern-cyprus-1788154156</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாக அங்குள்ள அதிகாரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


கைரேனியா கடற்கரை நகரிலிருந்து புறப்பட்ட குறித்த படகில் 259 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b09ff2e-0904-4cef-a20d-5c2a9bd04e3c/26-6a95112da786f.webp' /></p><p>

மோசமான வானிலை மற்றும் கடும் அலைகள் காரணமாக படகுக்குள் நீர் புகுந்து அது கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


பெரும்பாலான பயணிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் துருக்கி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>



இச்சம்பவம் தொடர்பில் படகின் தளபதியும் 7 பணியாளர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T05:26:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் ; திருப்பி அடித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-forces-attack-missile-launch-sites-iran-1788153668"></link>
            <id>https://canadamirror.com/article/us-forces-attack-missile-launch-sites-iran-1788153668</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானின் லராக் தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. 

ஜூலை மாத இறுதிக்குப் பின்னர் ஈரான் மீது அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானின் லராக் தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. 

ஜூலை மாத இறுதிக்குப் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட முதல் இராணுவத் தாக்குதல் இதுவாகும்.</p><p>



ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளைப் பொருத்துவதற்கான ரொக்கெட்டுகளை ஏவ ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தயாராகி வந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2838143f-f6fd-4340-a17f-2cf69569d54c/26-6a950f45e2218.webp' /></p><h2>அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது&nbsp; தாக்குதல்&nbsp;</h2><p>


ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p> இதற்குப் பதிலடியாக ஜோர்டானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.</p><p>


இதனிடையே, தமது வான்வெளிக்குள் நுழைந்த எட்டு ஏவுகணைகளை இடைமறித்ததாக ஜோர்டான் இராணுவம் அறிவித்துள்ளது.
</p><p>

லராக் தீவு ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்த நீர்வழியூடாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T05:18:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவும் இஸ்ரேலுமே உண்மையான எதிரிகள் ; ஈரான் உச்ச தலைவர் அதிரடி கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-and-israel-are-real-enemies-iran-supreme-leader-1788112414"></link>
            <id>https://canadamirror.com/article/us-and-israel-are-real-enemies-iran-supreme-leader-1788112414</id>
            <summary type="text">அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய ஒற்றுமைக்கு &quot;உண்மையான எதிரிகள்&quot; என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய ஒற்றுமைக்கு "உண்மையான எதிரிகள்" என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
</p><p>
இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் தங்களின் "உண்மையான எதிரியை" இனம் கண்டு, அதன் திட்டங்களைப் புரிந்து கொண்டு எதிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

"இஸ்லாமிய ஒற்றுமை வாரம்" குறித்த செய்தியை வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94fc2c31-5395-46d0-895a-b4af48cc5a26/26-6a946e1fa462c.webp' /></p><p>ஈரான் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளின் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு இன, கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் புவியியல் ரீதியான வேறுபாடுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் சாக்குப்போக்குகளாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன், ஈரானியர்கள் தங்களுக்குள் எந்தவித வேறுபாடுகளையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
விரும்பத்தக்க மற்றும் ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய நாகரிகத்தை அடைவதற்கு முஸ்லிம்களிடையே ஒற்றுமை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
வொஷிங்டனும் டெல் அவிவும் ஈரானின் எதிரிகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் "உண்மையான எதிரிகள்" என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்தது. இதனையடுத்து, அமெரிக்காவின் சொத்துக்கள் அமைந்துள்ள பிராந்திய நாடுகளின் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த ஜூன் மாதம் ஈரானும் அமெரிக்காவும் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், அந்த இடைக்கால ஒப்பந்தம் விரைவில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T01:04:52+00:00</updated>
        </entry>
    </feed>
