<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-13T18:20:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்கரியில் அடர்ந்த பனிமூட்டம்: சாரதிகளுக்குக் கனடா காலநிலை மையம் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fog-advisory-issued-for-calgary-1789319623"></link>
            <id>https://canadamirror.com/article/fog-advisory-issued-for-calgary-1789319623</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கல்கரி நகரில் அடர்ந்த பனிமூட்டம் நிலவியதை அடுத்து, கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கல்கரி நகரில் அடர்ந்த பனிமூட்டம் நிலவியதை அடுத்து, கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பு தனது இணையதளத்தில் மஞ்சள் நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>

சில பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாகப் பார்வைத் திறன் கிட்டத்தட்ட பூஜ்ஜிய நிலைக்குக் குறைந்துள்ளது.

காலையின் பிற்பகுதியில் இந்த பனிமூட்டம் மெல்ல மெல்ல விலகக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cd46e9e-a2c8-4aac-8386-f2502e61541d/26-6aa6d9c9760b4.webp' /></p><p>
</p><p>
சில பகுதிகளில் பயணம் செய்வது ஆபத்தானதாக இருக்க வாய்ப்புள்ளது.
சாரதிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> வேகத்தைக் குறைத்தும், முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதுமான பாதுகாப்பான இடைவெளியைப் பராமரித்தும் கவனமாக வாகனத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T17:23:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரில் செல்லப்பிராணியைப் பூட்டி வைத்த உரிமையாளருக்கு எதிராக வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/dog-left-in-hot-car-owner-charged-1789319172"></link>
            <id>https://canadamirror.com/article/dog-left-in-hot-car-owner-charged-1789319172</id>
            <summary type="text">கனடாவில், காரில் செல்லப்பிராணியான நாயை பூட்டி வைத்த உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கோடைகாலம் இன்னும் முடியாத நிலையில், &quot;உங்களுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், காரில் செல்லப்பிராணியான நாயை பூட்டி வைத்த உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.</p><p>
கோடைகாலம் இன்னும் முடியாத நிலையில், "உங்களுக்கு அதிக வெப்பமாகத் தோன்றும் வாகனம், உங்கள் செல்லப்பிராணிக்கும் ஆபத்தானது" எனச் சவுத் சிம்கோ காவல் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>திங்கட்கிழமை பிற்பகல் 1 மணியளவில், கனடாவின் குக்ஸ்டவுனில் உள்ள டாங்கர் அவுட்லெட் மாலில் நாய் ஒன்று காரில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc8b1aa5-02cf-4a17-8ea0-5bf54ebf7858/26-6aa6d805c9e11.webp' /></p><p>
</p><p>சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், காரின் பின்புறப் பகுதியில் உள்ள கூண்டில் நாய் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.</p><p> அந்த நாய்க்குக் குடிப்பதற்குத் தண்ணீரும் வைக்கப்படவில்லை.
வாகனத்தின் எஞ்சின் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது, காரின் முன்பக்கக் கண்ணாடி சுமார் ஒரு அங்குலம் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது, அப்போது வெளிப்புற வெப்பநிலை சுமார் 23 பாகை செல்சியஸாக இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>காரின் உரிமையாளரைத் தேடும் முயற்சியில் இறங்கிய அதிகாரிகள், மாலில் பொது அறிவிப்பும் செய்தனர். தேடுதல் வேட்டையின் போது உரிமையாளர் வாகனத்திற்குத் திரும்பி வந்தார். </p><p>அதற்குள் அந்த நாய் 30 நிமிடங்களுக்கும் மேலாகக் காரிலேயே அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
</p><p>இதையடுத்து, மாகாண விலங்குகள் நலச் சேவை சட்டத்தின் கீழ் காரின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>சமூக வலைதளங்களில் காவல் துறை வெளியிட்ட வீடியோவில், அதிகாரி ஒருவர் உரிமையாளரிடம் பேசுகையில், "ஒரு சூடான காரில் அரை மணி நேரம் என்னால் அமர முடியாது என்றால், எனது செல்லப்பிராணியையும் அங்கு வைக்க அனுமதிக்க மாட்டேன்" என்று கூறுவது பதிவாகியுள்ளது. </p><p>மேலும், இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து அதிக அளவில் வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
</p><p>பொதுமக்கள் பொருட்கள் வாங்கச் செல்லும்போதோ அல்லது வெளிப்புற வேலைகளுக்குச் செல்லும்போதோ செல்லப்பிராணிகளைக் காரில் விட்டுச் செல்லாமல், பாதுகாப்பாக வீட்டில் விட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T17:11:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 27 வயது இளைஞர் பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-dead-after-crashing-stolen-motorcycle-1789318666"></link>
            <id>https://canadamirror.com/article/man-dead-after-crashing-stolen-motorcycle-1789318666</id>
            <summary type="text">கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளானதில் 27 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். 
சனிக்கிழமை கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளானதில் 27 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். </p><p>
சனிக்கிழமை காலை சுமார் 6:30 மணியளவில், டிரம்ண்ட் பகுதியில் அமைந்துள்ள சடர்லேண்ட் புரூக் சாலையில் இந்த ஒற்றை வாகன விபத்து ஏற்பட்டது. </p><p>
வளைவான பாதையில் வேகமாகச் சென்றபோது மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நேரிட்டிருக்கலாம் என கனடிய அரச காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29ce2977-2c38-4659-bbf8-75bd7134b73c/26-6aa6d60bb590a.webp' /></p><p>
</p><p>சம்பவ இடத்திற்கு காவல் அதிகாரிகள் விரைந்தபோது, டிரம்ண்ட் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் தீவிர காயங்கள் காரணமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.</p><p>
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள், முன்னதாக செயிண்ட்-ஆண்ட்ரே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வசிப்பிடத்திலிருந்து திருடப்பட்ட ஒன்று என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
உயிரிழந்த இளைஞரின் இறப்பிற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உடற்கூறாய்வு நடத்தப்பட உள்ளது. 
மேலும், காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T17:10:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயர்லாந்துக்கு ட்ரம்ப் திடீர் பயணம் ; போராட்டத்தில் குதித்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-makes-surprise-trip-to-ireland-1789305329"></link>
            <id>https://canadamirror.com/article/trump-makes-surprise-trip-to-ireland-1789305329</id>
            <summary type="text">அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரவிருக்கிறது. மற்றொரு பக்கம் ஈரான் நாட்டுடன் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரவிருக்கிறது. மற்றொரு பக்கம் ஈரான் நாட்டுடன் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது. </p><p>இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அயர்லாந்து நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61492a0c-e08c-48ab-ae4a-39fd350d74f9/26-6aa6a1f33b8db.webp' /></p><p>அங்குள்ள டூன்பெக் நகரில் தனது நிறுவனத்திற்குச் சொந்தமான மைதானத் தில் நடக்கும் 'ஐரிஷ் ஓபன்' கோல்ப் போட்டியை ரசிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.</p><p>


இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இறுதிப்போட்டியில் அவரே நேரில் நின்று கோப்பையையும் வழங்குகிறார்.</p><p> இது அரசுமுறைப் பயணம் இல்லை என்றாலும், அயர்லாந்து அதிபர் கேத்தரின் கான்னோலி மற்றும் பிரதமர் மைக்கேல் மார்ட்டின் ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார். </p><p>அயர்லாந்தில் ட்ரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T16:38:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானின் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-s-open-warning-to-us-and-israel-1789306818"></link>
            <id>https://canadamirror.com/article/iran-s-open-warning-to-us-and-israel-1789306818</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் தமது இராணுவம் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை ஆகியன இணைந்து உடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் தமது இராணுவம் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை ஆகியன இணைந்து உடனடி வலுவான மற்றும் புத்திசாலித்தனமான பதிலடியைக் கொடுக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
ஈரானிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹடாமி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e730095d-e143-4e80-ba01-94fa112abfd1/26-6aa6a7c4326d6.webp' /></p><p>
</p><p>
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேஜர் ஜெனரல் அமீர் ஹடாமி "தமது நாட்டின் இரண்டு படைகளுக்கும் இடையே நிலவும் ஒற்றுமை எதிரிகளின் சதித்திட்டங்களுக்கு எதிராக நாட்டைக் காக்கும் இரும்புக் கேடயமாகச் செயல்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அகமத் வஹீதி எதிரி நாடுகள் ஈரானின் இராணுவப் பலத்தை மிகவும் குறைவாகக் கணித்துத் தவறிழைத்து விட்டதை தற்போது உணர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார்.</p><p>

ஈரானிய இராணுவமும் ஐசுபுஊ அமைப்பும் அமெரிக்க எதிர்ப்புக்கான இரு முக்கியப் பெரும் படைகளாகத் திகழ்வதாகவும் அண்மைய போர்களில் பயங்கரவாதக் குழுக்களுக்கு மிகக் கடுமையான அடிகளைக் கொடுத்துள்ளதாகவும் வஹீதி தெரிவித்தார்.
</p><p>
அத்துடன், ஈரானின் உண்மையான இராணுவ வலிமை போர்க்களத்தில் வெளிப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-13T13:40:26+00:00</updated>
        </entry>
    </feed>
