<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-10T23:48:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேச்சுக்கு தயார் ; ஆனால் போர் நிறுத்தம் முடிந்து விட்டது ; ட்ரம்பின் அறிவித்தல் ஈரானும் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ceasefire-over-iran-retaliates-trump-announcement-1783717987"></link>
            <id>https://canadamirror.com/article/ceasefire-over-iran-retaliates-trump-announcement-1783717987</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளைத் தொடர உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானுடனான போர் நிறுத்தம் &quot;ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளைத் தொடர உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானுடனான போர் நிறுத்தம் "முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ட்ரம்பின் இந்த அறிவித்தலுக்கு மத்தியில் கருத்துரைத்துள்ள ஈரான், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறினால், ஈரானிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முழு அளவிலான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa94487f-b012-43b9-b134-722322ab4f4d/26-6a516065624ea.webp' /></p><p>அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் காலம் முடிந்துவிட்டது. இது எதற்கும் தீர்வாகாது. நாங்கள் ஒருபோதும் பணிய மாட்டோம்," என்று அந்த நாட்டின் முக்கியப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பகர் காலிபாப் அறிவித்துள்ளார்.</p><p>

அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, தொடர்ந்து தாக்குதல் மிரட்டல்களை விடுத்தல், எண்ணெய் தடைகளை மீண்டும் அமுல்படுத்துதல், ஈரானின் தெற்குப் பகுதியில் தாக்குதல் நடத்துதல் மற்றும் லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஆகியவற்றை அவர் அமெரிக்காவின் முக்கிய மீறல்களாகப் பட்டியலிட்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

போரை முடிவுக்குக் கொண்டு வருவது உலக நாடுகளின் முன்னுரிமையாக இருந்தாலும், ஈரானின் சரணடைதலுடன் இந்த மோதல் முடிவுக்கு வராது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48ee704d-c601-48d6-b98a-d8b93ae0bb60/26-6a516064b1789.webp' /></p><p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே இரண்டு நாட்களாக நீடித்த தீவிர தாக்குதல்களுக்குப் பிறகு, இராஜதந்திர உறவுகளை மீண்டும் சீரமைக்கும் முயற்சியில் கட்டார் நாட்டு மத்தியஸ்தர்கள் தெஹ்ரானில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
புதிதாக முன்னெடுக்கப்பபட்ட இந்த மோதல்களால் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வரலாற்றில் இல்லாத அளவுக்கு விநியோகத் தடைகளைச் சந்தித்து வரும் எரிசக்தி சந்தைகளுக்கு, இது மேலும் ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இதேவேளை , அமெரிக்காவின் அழுத்தத்தைத் தொடர்ந்து, லெபனானின் தெற்குப் பகுதியில் "உணர்திறன் மிக்க நடவடிக்கைகளை" (sensitive operations) மேற்கொள்ள வேண்டாம் என்று தனது இராணுவத்திற்கு இஸ்ரேலிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அடுத்த வாரம் ரோமில் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே கூடுதல் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
</p><p>
இந்த நிலையில்,லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட சோதனைப் பகுதிகளில் (pilot areas) இருந்து தனது படைகளை இஸ்ரேலிய இராணுவம் திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-10T23:44:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸில் கனமழை பேரிடர் ; நிலச்சரிவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heavy-rains-wreak-philippines-death-toll-rises-15-1783723702"></link>
            <id>https://canadamirror.com/article/heavy-rains-wreak-philippines-death-toll-rises-15-1783723702</id>
            <summary type="text">ஆசிய நாடான பிலிப்பைன்ஸை &#039;பவி&#039; புயல் நெருங்கி வரும் நிலையில், அதன் தாக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிய நாடான பிலிப்பைன்ஸை 'பவி' புயல் நெருங்கி வரும் நிலையில், அதன் தாக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

தொடர்ச்சியான கனமழையால் பல மாகாணங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

சரன்கனி மாகாணத்தின் மிண்டனாவோ தீவில் உள்ள மலபடன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7c9b179-2cb9-46c3-abcb-d9ef79d323ef/26-6a5176b8924c0.webp' /></p><p> மேலும், லனாவோ டெல் சூர் மாகாணத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன் மூலம், புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் நீடிப்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-10T22:48:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளித் துறையில் சீனாவின் புதிய வரலாற்றுச் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-s-new-historic-achievement-in-space-industry-1783719988"></link>
            <id>https://canadamirror.com/article/china-s-new-historic-achievement-in-space-industry-1783719988</id>
            <summary type="text">மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ஆர்பிட்டல்’ ரக ராக்கெட் பூஸ்டரை முதன்முறையாக வெற்றிகரமாக மீட்டெடுத்து, விண்வெளித் தொழில்நுட்பத்தில் சீனா புதிய மைல்கல்லை எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ஆர்பிட்டல்’ ரக ராக்கெட் பூஸ்டரை முதன்முறையாக வெற்றிகரமாக மீட்டெடுத்து, விண்வெளித் தொழில்நுட்பத்தில் சீனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
</p><p>
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம் 2015ஆம் ஆண்டு முதன்முறையாக வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவும் இந்த தொழில்நுட்ப சாதனையைப் பதிவு செய்துள்ளது.</p><p>

தென் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வணிக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘லாங் மார்ச்-10பி’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fcaf882-7c90-4089-81cd-7289e13ccf46/26-6a516835e5cfc.webp' /></p><p>திட்டமிட்டபடி தனது செயற்கைக்கோளை நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பின்னர், ராக்கெட்டின் முதல் அடுக்கு (பூஸ்டர்) கட்டுப்பாட்டுடன் பூமியை நோக்கி திரும்பியது.
</p><p>
கடலில் அமைக்கப்பட்டிருந்த மிதவை மேடையில் பிரத்யேக வலை அமைப்பின் மூலம் அந்த பூஸ்டர் பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டு வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
</p><p>
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்டுகள் பொதுவாக தரைப்பகுதி அல்லது ஆளில்லா கப்பல்களில் செங்குத்தாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவின் ‘லாங் மார்ச்-10பி’ ராக்கெட் வலை அமைப்பில் பிடிபடும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.
</p><p>
63 மீட்டர் உயரமும், 5 மீட்டர் விட்டமும் கொண்ட இந்த ராக்கெட், திரவ எரிபொருளில் இயங்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வணிக ராக்கெட்டாகும்.</p><p> 890 டன் உந்துவிசை மற்றும் 760 டன் எடையைக் கொண்ட இந்த ராக்கெட், குறைந்த புவிச் சுற்றுப்பாதைக்கு 16 டன் வரை பயன்சுமையை எடுத்துச் செல்லும் திறன் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டு சீன நிறுவனங்கள் மேற்கொண்ட செங்குத்து தரையிறக்க சோதனைகள் தோல்வியடைந்த நிலையில், இந்த வெற்றி சீனாவின் விண்வெளிப் பயணச் செலவைக் குறைப்பதோடு, எதிர்கால நிலவுப் பயணத் திட்டங்களை வேகப்படுத்தும் என விண்வெளித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-10T21:46:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோா்முஸில் தாக்கப்பட்ட மாலுமிகள் ; கப்பல் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sailors-hormuz-case-filed-against-shipping-company-1783719163"></link>
            <id>https://canadamirror.com/article/sailors-hormuz-case-filed-against-shipping-company-1783719163</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் கடந்த மார்ச் மாதம் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான தாய்லாந்து சரக்குக் கப்பலில் பணியாற்றிய மூன்று மாலுமிகள், தங்களது உயிருக்கு ஆபத்து வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் கடந்த மார்ச் மாதம் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான தாய்லாந்து சரக்குக் கப்பலில் பணியாற்றிய மூன்று மாலுமிகள், தங்களது உயிருக்கு ஆபத்து விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டி கப்பல் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>
இந்தியா நோக்கிப் பயணித்த ‘மயூரி நாரீ’ என்ற தாய்லாந்து சரக்குக் கப்பல், கடந்த மார்ச் 11ஆம் திகதி ஓமனின் வடக்குப் பகுதியில் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இந்தச் சம்பவத்தில் மூன்று மாலுமிகள் உயிரிழந்ததுடன், எஞ்சிய 20 பேர் மீட்கப்பட்டு தாய்லாந்து திரும்பினர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee639786-ab2f-4ba3-b717-ea07a096dd58/26-6a5164fd3fafb.webp' /></p><p>இந்த நிலையில், மாலுமிகளான பனிதி தும்கேவ், நொப்படன் வாங்சுவன் மற்றும் சுரடேஸ் மன்பியூன் ஆகியோர், ‘பிரஷியஸ் ஷிப்பிங்’ நிறுவனம், அதன் இரு துணை நிறுவனங்கள் மற்றும் கப்பலின் கேப்டனுக்கு எதிராக பாங்காக்கில் உள்ள மத்திய தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.</p><p>

மேற்காசியப் பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் போர் பதற்றம் நிலவியதை அறிந்திருந்தும், மாலுமிகளின் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான கடல் பாதை வழியாக கப்பலை இயக்க நிறுவனம் உத்தரவிட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
மேலும், தாக்குதலுக்குப் பிறகு கப்பல் இயங்காத நிலை ஏற்பட்டதால், ஒன்பது மாத பணி ஒப்பந்தம் நிறைவடைவதற்கு முன்னரே தங்களை பணிநீக்கம் செய்ததுடன், வெறும் இரண்டு மாத ஊதியம் மட்டுமே இழப்பீடாக வழங்கியதாகவும் மாலுமிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதால், இனி மாலுமி தொழிலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், தலா 30 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும் அதிகமான இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக சர்வதேச கப்பல் போக்குவரத்தும், உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகமும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-10T21:32:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தன்னை குறிவைத்தால் வரலாறு காணாத பதிலடி ; ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/donald-trump-issues-stern-warning-to-iran-1783711834"></link>
            <id>https://canadamirror.com/article/donald-trump-issues-stern-warning-to-iran-1783711834</id>
            <summary type="text">ஈரான் தன்னைப் படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டால், அதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்கூட்டியே அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தன்னைப் படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டால், அதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்த அவர், ஈரானில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தன்னை இலக்காகக் கொண்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தையும் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8af2c64-c782-4bf4-bfb0-a220c997e91f/26-6a51485c70ab8.webp' /></p><p>"நான் நீண்ட காலமாக அவர்களின் இலக்குப் பட்டியலில் இருக்கிறேன். இது புதிய சூழ்நிலை அல்ல. எனக்கு ஏதேனும் நேர்ந்தால், அவர்கள் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையான தாக்குதலை மேற்கொள்ளுமாறு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்," என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், "தெஹ்ரான் பல ஆண்டுகளாக என்னை இலக்காகக் கொண்டுள்ளது.</p><p> நீங்கள் என்னை மிஸ் செய்வீர்கள் என்று நம்புகிறேன்," என்றும் அவர் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-10T19:30:41+00:00</updated>
        </entry>
    </feed>
