<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-13T15:43:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி; 13 உலகத் தலைவர்களுக்கு ஈரான் பகிரங்க மரண எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-warning-iran-newspaper-trump-world-leaders-1783929283"></link>
            <id>https://canadamirror.com/article/death-warning-iran-newspaper-trump-world-leaders-1783929283</id>
            <summary type="text">&amp;nbsp; மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஈரான் அரசுக்குச் சொந்தமான முக்கிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

 கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மரணத்திற்குப் பழிவாங்கக் கோரி ஈரானில் தீவிரப் பிரச்சாரங்கள் நடந்து வரும் வேளையில் இந்த மிரட்டல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d397bf5-8c44-4429-805a-832068d62ad5/26-6a5499c535800.webp' /></p><h2>&nbsp;13 உலகத் தலைவர்களின் புகைப்படங்கள்</h2><p>

ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ ‘ஹம்ஷஹ்ரி’ (Hamshahri) நாளிதழ், தனது இணையப் பக்கத்திலும் அச்சுப் பதிப்பிலும் ஒரு அதிரடி தகவல் வரைபடத்தை (Infographic) வெளியிட்டுள்ளது.
</p><p>
 அதில், “பழிவாங்கல் மிக விரைவில் வருகிறது; இது எங்களது தேசத்தின் விருப்பம், இது நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்ற மிக ஆக்ரோஷமான வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த மரணப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முக்கிய ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட 13 உலகத் தலைவர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது உலக நாடுகளை உலுக்கியுள்ளது.</p><p>

ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனி, தனது தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்குப் பிறகு வெளியிட்ட முதல் அதிகாரப்பூர்வ செய்தியில், “இந்தக் குற்றவாளிகள் யாரும் தங்களது படுக்கையில் நிம்மதியாக உயிரை விட முடியாது அவர்கள் தங்களது இறுதி நாட்களைக் கல்லறையில்தான் கழிக்க நேரிடும்” என ஆளுமையாகக் குறிப்பிட்டிருந்தார். </p><p>அவரது இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் அனைத்தும் “இரத்தப் பழிவாங்கலின் வெள்ளிக்கிழமைகளாக” மாற்றப்பட்டு, அமெரிக்காவிற்கு எதிரான ஜிகாத் (Jihad) முழக்கங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>

 இந்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஈரானின் 140-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்திக் குண்டுமழை பொழிந்துள்ளது. </p><p>

“ஈரான் எங்களது தலைவர்களைக் குறிவைக்க முயன்றால் அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளதால், வளைகுடாப் பகுதியில் எந்நேரமும் முழு அளவிலான உலகப்போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T13:23:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வாடகை வீடுகளில் இரகசிய கேமராக்களை பொருத்திய வீட்டு உரிமையாளர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/calgary-landlord-charged-with-voyeurism-1783927216"></link>
            <id>https://canadamirror.com/article/calgary-landlord-charged-with-voyeurism-1783927216</id>
            <summary type="text">&amp;nbsp;கல்கரி நகரில் உள்ள வாடகை வீடுகளில் பல இரகசிய கேமராக்களைப் பொருத்தி, வாடகைக்கு இருந்தவர்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளர் ஒருவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கல்கரி நகரில் உள்ள வாடகை வீடுகளில் பல இரகசிய கேமராக்களைப் பொருத்தி, வாடகைக்கு இருந்தவர்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கல்கரி கட்டடமொன்றில் வசிக்கும் வாடகைதாரர் ஒருவர், தனது குளியலறையில் இருந்த மின்கல அலை பாதுகாப்பு சாதனத்திலும் மற்றும் படுக்கையறையில் இருந்த புகை கண்டறியும் கருவியிலும் சிறிய இரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டறிந்துள்ளார்.</p><p> 
இதனை அவர் ஏனைய வாடகைதாரர்களுக்கும் தெரிவிக்க, அவர்களும் தங்களது படுக்கையறைகளில் இரகசிய கேமராக்கள் இருப்பதைக் கண்டுபிடித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17cfea96-8aea-4a9b-b312-8734796ded00/26-6a5491b182324.webp' /></p><p>
</p><p>இதனைத் தொடர்ந்து ஜூன் 12ஆம் திகதி, ஸ்பிரிங்பரோ வே பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்திய புலனாய்வு அதிகாரிகள், அங்கிருந்து பல மின்னணு சேமிப்பு சாதனங்களை பறிமுதல் செய்தனர். </p><p>
பிரெண்ட்வுட் வீதியில் உள்ள எல்பிஷ்லாவியின் மற்றொரு வாடகை வீட்டிலும் இதேபோன்ற கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>இச் சம்பவத்துடன் தொடர்புடைய 41 வயதுடைய சூரியோங் பார்க் என்ற வீட்டு உரிமையாளர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 
இவர் 'நிக் பார்க்' என்ற போலிப் பெயரையும் பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.</p><p> இவர் மீது அத்துமீறி நுழைந்தமை மற்றும் ஐந்து உளவு பார்த்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேக நபர் எதிர்வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T13:22:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு ஈராண்டு சிறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-year-prison-sentence-ex-south-korean-president-1783944445"></link>
            <id>https://canadamirror.com/article/two-year-prison-sentence-ex-south-korean-president-1783944445</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந் நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை (13) தீர்ப்பளித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந் நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை (13) தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. </p><p>

அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து 270 மில்லியன் வோன் (1,79,800 டொலர்) மதிப்புள்ள கருத்துக்கணிப்புச் சேவைகளைச் சட்டவிரோதமாக இலவசமாகப் பெற்ற குற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff4fdfbc-1b85-466c-b050-641ea3463068/26-6a54d4fec0f2a.webp' /></p><p> </p><p>

தீர்ப்பின்படி, அரசியல் தரகர் ஒருவரிடமிருந்து 14 முறை இலவசமாக கருத்துக்கணிப்பு சேவைகளைப் பெற்றதன் மூலமும், அவருக்குப் பிரதிபலனாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வேட்பாளர் நியமனத்தில் செல்வாக்கு செலுத்தியதன் மூலமும் யூன் அரசியல் நிதி தொடர்பான சட்டங்களை மீறியுள்ளதாக சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. </p><p>Politics

எனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை யூன் மறுத்துள்ளதாகவும், இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய முடியும் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை 65 வயதான முன்னாள் ஜனாதிபதி யூன் மீது எட்டு சட்டரீதியான வழக்குகள் உள்ளன. </p><p>

2024-ல் அவர் குறுகிய காலத்திற்கு அமுல்படுத்திய ராணுவச் சட்டத்துடன் தொடர்புடைய கிளர்ச்சிக்குத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பெப்ரவரி மாதம் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து அவர் தற்போது மேல்முறையீடு செய்து வருகிறார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி கைது செய்வதற்கான அதிகாரிகளின் முயற்சியைத் தடுத்ததற்காக அவருக்கு விதிக்கப்பட்ட ஏழு ஆண்டு சிறைத்தண்டனையை உறுதிசெய்து கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-13T12:06:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமார் 28 கோடி ரூபாய் சொத்துக்களை நண்பனுக்கு உயில் எழுதிய 19 வயது இளைஞன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-19-year-old-youth-bequeath-assets-friend-1783939818"></link>
            <id>https://canadamirror.com/article/china-19-year-old-youth-bequeath-assets-friend-1783939818</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சீனாவில் 19 வயதுடைய &#039;லி&#039; என்ற இளைஞன், தனது மறைவிற்குப் பிறகு சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தனது உயிர் நண்பருக்கு வழங்குமாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சீனாவில் 19 வயதுடைய 'லி' என்ற இளைஞன், தனது மறைவிற்குப் பிறகு சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தனது உயிர் நண்பருக்கு வழங்குமாறு உயில் எழுதி வைத்திருப்பது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
</p><p>
குறித்த இளைஞனின் பெற்றோர் விவாகரத்து செய்து பின்னர் தனித்தனியாக மறுமணம் செய்துகொண்ட நிலையில், குடும்பச் சூழ்நிலையே இந்த முடிவை எடுக்கக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c53e6a2e-10ea-4e16-a5e8-dc534697e259/26-6a54c2ebd4ecc.webp' /></p><p>

இந் நிலையில் தான் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவருக்கு தனது சொத்துகள் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தையே உயிலில் தெளிவாகப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 19 வயது இளைஞன் 28 கோடி ரூபாய் சொத்துக்களை நண்பனுக்கு உயில் எழுதிய சம்பவம் சீன சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-13T10:48:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்கார்பாரோ அடுக்குமாடி குடியிருப்பில் ஈ-ஸ்கூட்டர் மின்கலன் வெடித்து தீ விபத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/e-scooter-battery-fire-in-scarborough-highrise-1783928321"></link>
            <id>https://canadamirror.com/article/e-scooter-battery-fire-in-scarborough-highrise-1783928321</id>
            <summary type="text">ஸ்கார்பாரோ பகுதியில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ஈ-ஸ்கூட்டரின் லித்தியம்-அயன் மின்கலன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து மூவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்கார்பாரோ பகுதியில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ஈ-ஸ்கூட்டரின் லித்தியம்-அயன் மின்கலன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணிக்கு சற்று முன்னதாக, 4205 லோரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் அமைந்துள்ள டொரொன்டோ சமூக வீடமைப்பு கட்டடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக டொரொன்டோ தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
</p><p>தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அங்கு பரவிய அடர்ந்த கரும் புகை காரணமாக கட்டடத்தின் இரண்டாவது மாடியில் எதனையும் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான நிலை காணப்பட்டதாக தீயணைப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/796fc18a-0bc6-44c2-a3f9-8d7573ca29c4/26-6a54960389c94.webp' /></p><p>
</p><p>பின்னர், தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததோடு, தீ விபத்து ஏற்பட்ட இடத்தைத் தாண்டி புகை பரவியதால், கட்டடத்திற்குள் காற்றோட்டத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
</p><p>புகையை சுவாசித்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் டொரொன்டோ அவசர சிகிச்சை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
ஈ-பைக் மின்கலன்களால் ஏற்படும் தீ வேகமாக பரவக்கூடியது, நச்சுப் புகையை உருவாக்கக்கூடியது மற்றும் இது குடியிருப்பாளர்களுக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் கடுமையான ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என டொரொன்டோ தீயணைப்புப் பிரிவுத் தலைவர் ஜிம் ஜெசோப் சமூக வலைத்தளப் பதிவொன்றில் விபத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து எச்சரித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T10:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்களின் மனதை கொள்ளைகொண்ட Jurassic Park பட நடிகர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/jurassic-park-actor-sam-neill-passes-away-1783938430"></link>
            <id>https://canadamirror.com/article/jurassic-park-actor-sam-neill-passes-away-1783938430</id>
            <summary type="text">&amp;nbsp; ஒஸ்கார் விருது வென்ற மற்றும் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களான &#039;The Piano&#039; மற்றும் &#039;Jurassic Park&#039; போன்ற மூலம் புகழ்பெற்ற, நியூசிலாந்தின் பன்மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஒஸ்கார் விருது வென்ற மற்றும் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களான 'The Piano' மற்றும் 'Jurassic Park' போன்ற மூலம் புகழ்பெற்ற, நியூசிலாந்தின் பன்முகத்திறன் கொண்ட நடிகரான சாம் நெய்ல் (Sam Neill) தனது 78 ஆவது வயதில் காலமானார். </p><p>

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அறிக்கையொன்றின் மூலம் இந்த நடிகரின் மறைவு அறிவிக்கப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ceed6d-01f2-4080-bda7-6cc9a3324ad2/26-6a54bd7f8d66b.webp' /></p><p>

மரணத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, எனினும் 2022 ஆம் ஆண்டில் இரத்தப் புற்றுநோய் வகையான மூன்றாம் கட்ட பாதிப்பை நெய்ல் எதிர்நோக்கியிருந்தார். </p><p>

அண்மையில் தாம் புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டதாகத் தெரிவித்திருந்தார். 

சாம் நெய்ல் தனது குடும்பத்தினரால் சூழப்பட்டிருந்தார், அத்துடன் அவரது வாழ்நாள் முழுவதையும் அடையாளப்படுத்திய அதே கண்ணியத்துடன் அவர் மறைந்தார். </p><p>

இந்த இழப்பு திடீரெனவும் எதிர்பாராததாகவும் அமைந்தது. அவரது மறைவு சர்வதேச திரையுலகை கவலையில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-13T10:25:48+00:00</updated>
        </entry>
    </feed>
