<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-10T22:50:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸில் கனமழை பேரிடர் ; நிலச்சரிவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heavy-rains-wreak-philippines-death-toll-rises-15-1783723702"></link>
            <id>https://canadamirror.com/article/heavy-rains-wreak-philippines-death-toll-rises-15-1783723702</id>
            <summary type="text">ஆசிய நாடான பிலிப்பைன்ஸை &#039;பவி&#039; புயல் நெருங்கி வரும் நிலையில், அதன் தாக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிய நாடான பிலிப்பைன்ஸை 'பவி' புயல் நெருங்கி வரும் நிலையில், அதன் தாக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

தொடர்ச்சியான கனமழையால் பல மாகாணங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

சரன்கனி மாகாணத்தின் மிண்டனாவோ தீவில் உள்ள மலபடன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7c9b179-2cb9-46c3-abcb-d9ef79d323ef/26-6a5176b8924c0.webp' /></p><p> மேலும், லனாவோ டெல் சூர் மாகாணத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன் மூலம், புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் நீடிப்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-10T22:48:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளித் துறையில் சீனாவின் புதிய வரலாற்றுச் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-s-new-historic-achievement-in-space-industry-1783719988"></link>
            <id>https://canadamirror.com/article/china-s-new-historic-achievement-in-space-industry-1783719988</id>
            <summary type="text">மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ஆர்பிட்டல்’ ரக ராக்கெட் பூஸ்டரை முதன்முறையாக வெற்றிகரமாக மீட்டெடுத்து, விண்வெளித் தொழில்நுட்பத்தில் சீனா புதிய மைல்கல்லை எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ஆர்பிட்டல்’ ரக ராக்கெட் பூஸ்டரை முதன்முறையாக வெற்றிகரமாக மீட்டெடுத்து, விண்வெளித் தொழில்நுட்பத்தில் சீனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
</p><p>
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம் 2015ஆம் ஆண்டு முதன்முறையாக வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவும் இந்த தொழில்நுட்ப சாதனையைப் பதிவு செய்துள்ளது.</p><p>

தென் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வணிக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘லாங் மார்ச்-10பி’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fcaf882-7c90-4089-81cd-7289e13ccf46/26-6a516835e5cfc.webp' /></p><p>திட்டமிட்டபடி தனது செயற்கைக்கோளை நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பின்னர், ராக்கெட்டின் முதல் அடுக்கு (பூஸ்டர்) கட்டுப்பாட்டுடன் பூமியை நோக்கி திரும்பியது.
</p><p>
கடலில் அமைக்கப்பட்டிருந்த மிதவை மேடையில் பிரத்யேக வலை அமைப்பின் மூலம் அந்த பூஸ்டர் பாதுகாப்பாகப் பிடிக்கப்பட்டு வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
</p><p>
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்டுகள் பொதுவாக தரைப்பகுதி அல்லது ஆளில்லா கப்பல்களில் செங்குத்தாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவின் ‘லாங் மார்ச்-10பி’ ராக்கெட் வலை அமைப்பில் பிடிபடும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.
</p><p>
63 மீட்டர் உயரமும், 5 மீட்டர் விட்டமும் கொண்ட இந்த ராக்கெட், திரவ எரிபொருளில் இயங்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வணிக ராக்கெட்டாகும்.</p><p> 890 டன் உந்துவிசை மற்றும் 760 டன் எடையைக் கொண்ட இந்த ராக்கெட், குறைந்த புவிச் சுற்றுப்பாதைக்கு 16 டன் வரை பயன்சுமையை எடுத்துச் செல்லும் திறன் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டு சீன நிறுவனங்கள் மேற்கொண்ட செங்குத்து தரையிறக்க சோதனைகள் தோல்வியடைந்த நிலையில், இந்த வெற்றி சீனாவின் விண்வெளிப் பயணச் செலவைக் குறைப்பதோடு, எதிர்கால நிலவுப் பயணத் திட்டங்களை வேகப்படுத்தும் என விண்வெளித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-10T21:46:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேச்சுக்கு தயார் ; ஆனால் போர் நிறுத்தம் முடிந்து விட்டது ; ட்ரம்பின் அறிவித்தல் ஈரானும் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ceasefire-over-iran-retaliates-trump-announcement-1783717987"></link>
            <id>https://canadamirror.com/article/ceasefire-over-iran-retaliates-trump-announcement-1783717987</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளைத் தொடர உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானுடனான போர் நிறுத்தம் &quot;ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளைத் தொடர உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானுடனான போர் நிறுத்தம் "முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ட்ரம்பின் இந்த அறிவித்தலுக்கு மத்தியில் கருத்துரைத்துள்ள ஈரான், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறினால், ஈரானிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முழு அளவிலான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa94487f-b012-43b9-b134-722322ab4f4d/26-6a516065624ea.webp' /></p><p>அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் காலம் முடிந்துவிட்டது. இது எதற்கும் தீர்வாகாது. நாங்கள் ஒருபோதும் பணிய மாட்டோம்," என்று அந்த நாட்டின் முக்கியப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பகர் காலிபாப் அறிவித்துள்ளார்.</p><p>

அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, தொடர்ந்து தாக்குதல் மிரட்டல்களை விடுத்தல், எண்ணெய் தடைகளை மீண்டும் அமுல்படுத்துதல், ஈரானின் தெற்குப் பகுதியில் தாக்குதல் நடத்துதல் மற்றும் லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஆகியவற்றை அவர் அமெரிக்காவின் முக்கிய மீறல்களாகப் பட்டியலிட்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

போரை முடிவுக்குக் கொண்டு வருவது உலக நாடுகளின் முன்னுரிமையாக இருந்தாலும், ஈரானின் சரணடைதலுடன் இந்த மோதல் முடிவுக்கு வராது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48ee704d-c601-48d6-b98a-d8b93ae0bb60/26-6a516064b1789.webp' /></p><p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே இரண்டு நாட்களாக நீடித்த தீவிர தாக்குதல்களுக்குப் பிறகு, இராஜதந்திர உறவுகளை மீண்டும் சீரமைக்கும் முயற்சியில் கட்டார் நாட்டு மத்தியஸ்தர்கள் தெஹ்ரானில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
புதிதாக முன்னெடுக்கப்பபட்ட இந்த மோதல்களால் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வரலாற்றில் இல்லாத அளவுக்கு விநியோகத் தடைகளைச் சந்தித்து வரும் எரிசக்தி சந்தைகளுக்கு, இது மேலும் ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இதேவேளை , அமெரிக்காவின் அழுத்தத்தைத் தொடர்ந்து, லெபனானின் தெற்குப் பகுதியில் "உணர்திறன் மிக்க நடவடிக்கைகளை" (sensitive operations) மேற்கொள்ள வேண்டாம் என்று தனது இராணுவத்திற்கு இஸ்ரேலிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அடுத்த வாரம் ரோமில் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே கூடுதல் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
</p><p>
இந்த நிலையில்,லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட சோதனைப் பகுதிகளில் (pilot areas) இருந்து தனது படைகளை இஸ்ரேலிய இராணுவம் திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-10T21:44:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோா்முஸில் தாக்கப்பட்ட மாலுமிகள் ; கப்பல் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sailors-hormuz-case-filed-against-shipping-company-1783719163"></link>
            <id>https://canadamirror.com/article/sailors-hormuz-case-filed-against-shipping-company-1783719163</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் கடந்த மார்ச் மாதம் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான தாய்லாந்து சரக்குக் கப்பலில் பணியாற்றிய மூன்று மாலுமிகள், தங்களது உயிருக்கு ஆபத்து வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் கடந்த மார்ச் மாதம் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான தாய்லாந்து சரக்குக் கப்பலில் பணியாற்றிய மூன்று மாலுமிகள், தங்களது உயிருக்கு ஆபத்து விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டி கப்பல் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>
இந்தியா நோக்கிப் பயணித்த ‘மயூரி நாரீ’ என்ற தாய்லாந்து சரக்குக் கப்பல், கடந்த மார்ச் 11ஆம் திகதி ஓமனின் வடக்குப் பகுதியில் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இந்தச் சம்பவத்தில் மூன்று மாலுமிகள் உயிரிழந்ததுடன், எஞ்சிய 20 பேர் மீட்கப்பட்டு தாய்லாந்து திரும்பினர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee639786-ab2f-4ba3-b717-ea07a096dd58/26-6a5164fd3fafb.webp' /></p><p>இந்த நிலையில், மாலுமிகளான பனிதி தும்கேவ், நொப்படன் வாங்சுவன் மற்றும் சுரடேஸ் மன்பியூன் ஆகியோர், ‘பிரஷியஸ் ஷிப்பிங்’ நிறுவனம், அதன் இரு துணை நிறுவனங்கள் மற்றும் கப்பலின் கேப்டனுக்கு எதிராக பாங்காக்கில் உள்ள மத்திய தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.</p><p>

மேற்காசியப் பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் போர் பதற்றம் நிலவியதை அறிந்திருந்தும், மாலுமிகளின் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான கடல் பாதை வழியாக கப்பலை இயக்க நிறுவனம் உத்தரவிட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
மேலும், தாக்குதலுக்குப் பிறகு கப்பல் இயங்காத நிலை ஏற்பட்டதால், ஒன்பது மாத பணி ஒப்பந்தம் நிறைவடைவதற்கு முன்னரே தங்களை பணிநீக்கம் செய்ததுடன், வெறும் இரண்டு மாத ஊதியம் மட்டுமே இழப்பீடாக வழங்கியதாகவும் மாலுமிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதால், இனி மாலுமி தொழிலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், தலா 30 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும் அதிகமான இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக சர்வதேச கப்பல் போக்குவரத்தும், உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகமும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-10T21:32:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தன்னை குறிவைத்தால் வரலாறு காணாத பதிலடி ; ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/donald-trump-issues-stern-warning-to-iran-1783711834"></link>
            <id>https://canadamirror.com/article/donald-trump-issues-stern-warning-to-iran-1783711834</id>
            <summary type="text">ஈரான் தன்னைப் படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டால், அதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்கூட்டியே அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தன்னைப் படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டால், அதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்த அவர், ஈரானில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தன்னை இலக்காகக் கொண்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தையும் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8af2c64-c782-4bf4-bfb0-a220c997e91f/26-6a51485c70ab8.webp' /></p><p>"நான் நீண்ட காலமாக அவர்களின் இலக்குப் பட்டியலில் இருக்கிறேன். இது புதிய சூழ்நிலை அல்ல. எனக்கு ஏதேனும் நேர்ந்தால், அவர்கள் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையான தாக்குதலை மேற்கொள்ளுமாறு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்," என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், "தெஹ்ரான் பல ஆண்டுகளாக என்னை இலக்காகக் கொண்டுள்ளது.</p><p> நீங்கள் என்னை மிஸ் செய்வீர்கள் என்று நம்புகிறேன்," என்றும் அவர் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-10T19:30:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஈரான் மோதல் நிறுத்தப்பட வேண்டும் - சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-wants-iran-us-to-maintain-cessation-1783702389"></link>
            <id>https://canadamirror.com/article/china-wants-iran-us-to-maintain-cessation-1783702389</id>
            <summary type="text">&amp;nbsp;ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா அழைப்பு விடுத்துள்ளது.</p><p>
இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல்களை உடனடியாக நிறுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும் என ஐநா-வுக்கான சீனாவின் துணைத் தூதர் சன் லீ (Sun Lei) தெரிவித்துள்ளார்.
</p><p>இது குறித்து பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
 புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிக்க அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2fc78e6-4b5c-4df1-930c-e2f01cc9c66a/26-6a5123773fc61.webp' /></p><p> </p><p>இது கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும். மேலும், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
</p><p>அவர் மேலும் கூறுகையில், "எது சரி, எது தவறு என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவது தற்போதைய சூழலில் மிக முக்கியம். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்ற தனது வாக்குறுதியைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அதே நேரத்தில், சிவிலியன் பயன்பாட்டிற்காக அணுசக்தியை உற்பத்தி செய்துகொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது" என்றும் குறிப்பிட்டார்.</p><p>
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் சீனாவின் நடுநிலையான மற்றும் நிலையான நிலைப்பாட்டை முன்வைத்த துணைத் தூதர், இந்த விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காண சீனா தொடர்ந்து ஒரு ஆக்கப்பூர்வமான பங்கைக் வகிக்க உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T17:03:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேகமாக வாகனம் செலுத்திய சாரதிக்கு எதிராக வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-driver-caught-nearly-doubling-speed-1783701911"></link>
            <id>https://canadamirror.com/article/police-driver-caught-nearly-doubling-speed-1783701911</id>
            <summary type="text">கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை 11-இல் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை விட இரு மடங்கு வேகத்தில் ஆபத்தான முறையில் காரைச் செலுத்திய 24 வயது இள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை 11-இல் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை விட இரு மடங்கு வேகத்தில் ஆபத்தான முறையில் காரைச் செலுத்திய 24 வயது இளைஞர் மீது ஒண்டாரியோ மாகாண காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.</p><p>
ஹன்ட்ஸ்வில் பகுதியில் உள்ள கிரியர் ரோட்டிற்கு அருகே போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.</p><p>
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகம் செல்ல வேண்டிய பகுதியில், சுமார் 197 கிலோமீட்டர் வேகத்தில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுள்ளது.
இதனைப் பார்த்த போலீசார் உடனடியாக அந்த காரை மறித்து நிறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e6b56f7-e12f-43bc-9374-8895cfc4f317/26-6a5121995f968.webp' /></p><p> </p><p>காரை ஓட்டி வந்த நியூகாசில் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கியதற்கான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>
மேலும், தண்டனை நடவடிக்கையாக அந்த இளைஞரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அவரது கார் 14 நாட்களுக்குக் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. </p><p>
குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞர் வரும் செப்டம்பர் மாதம் ஒண்டாரியோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T17:03:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட 5 கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/5-inmates-mistakenly-released-from-sask-jails-1783701487"></link>
            <id>https://canadamirror.com/article/5-inmates-mistakenly-released-from-sask-jails-1783701487</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் சாஸ்காச்சுவான் மாகாணச் சிறைச்சாலைகளில் இருந்து, நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக 5 கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் சாஸ்காச்சுவான் மாகாணச் சிறைச்சாலைகளில் இருந்து, நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக 5 கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>எழுத்துப் பிழைகள், தகவல் தொடர்பு குறைபாடுகள், ஆவணக் கோளாறுகள் அல்லது தரவுச் செயலாக்கத்தில் ஏற்பட்ட தவறுகள் காரணமாகவே இந்தக் கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சாஸ்காச்சுவான் மாகாண அரசு தெரிவித்துள்ளது.</p><p>
இப்படியாகத் தவறுதலாக விடுவிக்கப்பட்டவர்களில் 26 வயதான கெலீஷா ஜாக்சன் என்ற பெண்ணும் ஒருவர். தாக்குதல் மற்றும் ஒருவரை வலுக்கட்டாயமாகச் சிறைபிடித்த குற்றத்திற்காக நார்த் பேட்டில்ஃபோர்ட் சிறையில் இவர் தண்டனை அனுபவித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3809897b-33da-4f34-a6b6-8eb71ef58183/26-6a511ff0d251e.webp' /></p><p> 
கடந்த மார்ச் 19 அன்று இவர் தவறுதலாக விடுவிக்கப்பட்டார். ஆனால், இதுகுறித்த தகவல் ஜூன் 19 வரை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
</p><p>இறுதியாக, தவறுதலாக விடுவிக்கப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்த ஜாக்சன், இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>இத்தகைய தவறுகள் மிகவும் அரிதானவை என்றும், ஒட்டுமொத்த கைதிகள் விடுதலையில் இது 0.1 சதவீதத்திற்கும் குறைவானதே என்றும் அரசுத் தரப்பு வாதிட்டுள்ளது.
</p><p>இருப்பினும், இந்த விவகாரத்தில் சாஸ்காச்சுவான் அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என எதிர்க்கட்சியான என்.டி.பி (NDP) குற்றம் சாட்டியுள்ளது. </p><p>
இதுகுறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று என்.டி.பி சட்டமன்ற உறுப்பினர் நிக்கோல் சராவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
மறுபுறம், கைதிகள் தங்களின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கப்படுவதால், சிறைச்சாலையில் அவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வுப் பயிற்சிகள் முழுமையடையாமல் போகும் என்றும், இது அவர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைவதைப் பாதிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
</p><p>தவறுதலாக நடக்கும் ஒவ்வொரு விடுதலை குறித்தும் சிறப்புக் குழு ஆய்வு செய்து வருவதாகவும், வருங்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காமல் தடுக்க உரியப் பரிந்துரைகள் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T17:03:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பெண் ஒருவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/alberta-woman-celebrating-5m-lottery-win-1783701020"></link>
            <id>https://canadamirror.com/article/alberta-woman-celebrating-5m-lottery-win-1783701020</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த மே மாதம் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் 5 மில்லியன் டாலர் வென்றுள்ளார்.
ஆல்பர்ட்டாவின் லீகல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த மே மாதம் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் 5 மில்லியன் டாலர் வென்றுள்ளார்.
</p><p>ஆல்பர்ட்டாவின் லீகல் பகுதியைச் சேர்ந்த ஷானன் கீஸ்ட் என்ற பெண், மே 27 அன்று நடைபெற்ற 'லோட்டோ 6/49 கிளாசிக் ஜாக்பாட்' (Lotto 6/49 Classic jackpot) குலுக்கலில் 5, 27, 35, 38, 44 மற்றும் 46 ஆகிய எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டை கொள்வனவு செய்திருந்தார். அந்த எண்களுக்கே தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது.
</p><p>இது குறித்து ஷானன் கீஸ்ட் கூறுகையில், "கடையில் வைத்து எனது லாட்டரி சீட்டை ஸ்கேன் செய்தபோது, நான் தான் வென்றேன் என்பதை உடனடியாக என்னால் நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2af43178-a692-4d8e-8d30-c28736324b6c/26-6a511e1e19670.webp' /></p><p>
ஒரு வித்தியாசமான சத்தம் மட்டுமே கேட்டது. உடனே பதற்றத்திலும் மகிழ்ச்சியிலும் கண்ணீருடன் எனது கணவருக்கு ஃபேஸ்டைம் மூலம் வீடியோ கால் செய்ய முயன்றேன்," என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த பரிசுப் பணத்தைக் கொண்டு சாஸ்காச்சுவான் பகுதியில் ஒரு அழகான மர இல்லம் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக கோஸ்டாரிகா நாட்டிற்குச் சிறப்புப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>"இது இன்னும் ஒரு கனவு போலவும், அதே சமயம் மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாதவாறும் உள்ளது. எங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று," என்று கீஸ்ட் மேலும் கூறினார்.
இவர் இந்த அதிர்ஷ்டகரமான லாட்டரி சீட்டை மொரின்வில் பகுதியில் உள்ள ஒரு மொபில் எரிபொருள் நிலைய கடையிலிருந்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T17:03:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடியருக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/brampton-man-sentenced-in-us-to-20-years-1783700332"></link>
            <id>https://canadamirror.com/article/brampton-man-sentenced-in-us-to-20-years-1783700332</id>
            <summary type="text">கனடிய பிரஜை ஓருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு சுமார் 17 மில்லியன் டாலர் மதிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடிய பிரஜை ஓருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
</p><p>அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு சுமார் 17 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய குற்றத்திற்காக, கனடாவின் பிராம்ப்டன் நகரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.</p><p>
63 வயதான குராம்ரித் சித்து என்ற நபர், அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு போதைப்பொருள் கடத்தும் சர்வதேச நெட்வொர்க்கை வழிநடத்தி வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15bc2fc4-3071-4f3d-ab0e-d95b8da43ee6/26-6a511b6da6011.webp' /></p><p> </p><p>
இந்த வழக்கில் நேற்று முன்தினம் அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜான் ஏ. குரோன்ஸ்டாட் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கினார்.</p><p>
அமெரிக்காவில் மொத்தமாகப் போதைப்பொருட்களை கொள்வனவு செய்யும் சித்து, அவற்றை நீண்ட தூரம் செல்லும் லாரிகள் மூலம் கனடாவிற்குள் கடத்தி வந்துள்ளார். </p><p>
குறிப்பாக, கடந்த 2022 செப்டம்பர் 13 முதல் அக்டோபர் 24 வரையிலான வெறும் ஒரு மாத காலத்திற்குள், 523 கிலோ மெத்தம்பேட்டமைன் மற்றும் 347 கிலோ கோகோயின் ஆகியவற்றை உள்ளடக்கிய 8 பெரிய போதைப்பொருள் கடத்தல்களை இவர் திட்டமிட்டு நடத்தியுள்ளார்.
</p><p>போதைப்பொருளை டெலிவரி செய்யும் போது ஆட்களை அடையாளம் காண்பதற்காக, சித்து ஒரு நூதன முறையைக் கையாண்டுள்ளார். </p><p>
கடத்தலில் ஈடுபடும் கூரியர்களிடம் குறிப்பிட்ட சில தொலைபேசி எண்களையும், பண நோட்டுகளில் இருக்கும் வரிசை எண்களையும் ரகசியக் குறியீடாக வழங்கிப் பயன்படுத்தியுள்ளார்.</p><p>இந்தக் கடத்தல் கும்பல் கடந்த 2020 செப்டம்பர் முதல் 2023 பெப்ரவரி வரை இயங்கி வந்துள்ளது.</p><p> கடந்த 2024 ஜனவரியில் கைது செய்யப்பட்ட சித்து, பின்னர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட எட்டாவது நபர் சித்து ஆவார். இவருக்கு முன்னதாகக் கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்கு 2 முதல் 9 ஆண்டுகள் வரை ஏற்கனவே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T17:02:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கக் குடியேற்றக் கொள்கைகளினால் பாதிக்கப்படும் கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/what-trumps-deportation-push-could-mean-1783699776"></link>
            <id>https://canadamirror.com/article/what-trumps-deportation-push-could-mean-1783699776</id>
            <summary type="text">அமெரிக்காவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேரை நாடுகடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, சில குடியேறிகளுக்கான பாதுகாப்பு சலுகைகளும் ரத்து செய்யப்பட உள்ளன. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேரை நாடுகடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, சில குடியேறிகளுக்கான பாதுகாப்பு சலுகைகளும் ரத்து செய்யப்பட உள்ளன. </p><p>
இதனால், அமெரிக்காவில் இருக்கும் அகதிகள் தங்களின் பாதுகாப்பிற்காக வடக்கு எல்லையைக் கடந்து கனடாவிற்குள் நுழைய முயலலாம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p>எனினும், அமெரிக்கா மற்றும் கனடா இடையே உள்ள 'பாதுகாப்பான மூன்றாவது நாடு ஒப்பந்தத்தின்' படி, அமெரிக்காவில் இருந்து எல்லை வழியாக கனடாவுக்குள் நுழையும் அகதிகள் திருப்பி அனுப்பப்பட வாய்ப்புகள் அதிகம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4830484-82e7-407f-8239-df0af8ce1ac0/26-6a51194209aa3.webp' /></p><p>
</p><p>இந்த ஒப்பந்தத்தின்படி, தஞ்சம் கோருபவர்கள் தாங்கள் முதலில் கால்பதிக்கும் பாதுகாப்பான நாட்டில்தான் அகதி அந்தஸ்து கோர வேண்டும். குறிப்பிட்ட சில விதிவிலக்குகளைத் தவிர, மற்றவர்கள் எல்லையிலேயே திருப்பி அனுப்பப்படுவர்.</p><p>
இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள குடியேற்ற விவகாரங்களுக்கான வழக்கறிஞர் ஜோயல் சாண்டலக், கனடாவிற்குள் மீண்டும் ஒரு பெரிய அகதிகள் அலை வரும் என்று தான் கருதவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p>சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து தினசரி 165 பேர் கனடாவுக்கு வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 15 ஆகக் குறைந்துள்ளது என்றார்.
</p><p>மேலும், கனடா சமீபத்தில் நிறைவேற்றியுள்ள மசோதா சி-12, அமெரிக்காவில் இருந்து வருபவர்களுக்கான அகதி பாதுகாப்பை பெருமளவில் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.</p><p> 
கியூபெக் மற்றும் நியூயார்க் இடையே உள்ள 'ராக்ஸாம் சாலை' போன்ற முறைசாரா எல்லைக் கடப்பு வழிகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. </p><p>தற்போதைய சூழலில், அமெரிக்காவின் கடுமையான கொள்கைகளால் எல்லையில் தஞ்சம் கோர முடியாமல் போகும் அகதிகள், சட்டவிரோதமாக மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று சாண்டலக் கவலை தெரிவித்துள்ளார்.</p><p>
"பாதிக்கப்படுபவர்களில் குழந்தைகளும், மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். இத்தகைய பெரிய அரசியல் கொள்கைகள், மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் துயரங்களையும் கருத்தில் கொள்வதில்லை," என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T17:02:18+00:00</updated>
        </entry>
    </feed>
