<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-18T08:42:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் டிக்டொக் செயலி தடை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tiktok-app-allowed-government-offices-in-the-us-1784361456"></link>
            <id>https://canadamirror.com/article/tiktok-app-allowed-government-offices-in-the-us-1784361456</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் அரச அலுவலகங்களுக்குச் சொந்தமான சாதனங்களில் டிக்டொக் செயலியைப் தரவிறக்கம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க நீதித் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் அரச அலுவலகங்களுக்குச் சொந்தமான சாதனங்களில் டிக்டொக் செயலியைப் தரவிறக்கம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க நீதித் திணைக்களம் நீக்கியுள்ளது.
</p><p>
2022 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு நலன் கருதி அரச சாதனங்களில் டிக்அடொக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a19dcb7-d1e1-437b-bd6a-24c63d542de0/26-6a5b31f27c60b.webp' /></p><p>
</p><p>
தற்போது டிக்டாக்கின் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் (ByteDance), அதன் அமெரிக்க பயனர் தரவு மற்றும் செயல்பாடுகளை 'டிக்டொக் யுஎஸ்டிஎஸ்' (TikTok USDS) எனும் கூட்டு நிறுவனத்துக்கு மாற்றியுள்ளதால், இந்தத் தடை நீக்கப்படுவதாக நீதித் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>

டிக்டொக்கின் அல்கரிதம் மற்றும் தரவுகள் அமெரிக்காவின் ஒரக்கிள் (Oracle) கிளவுட் மூலம் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தடையை நீக்குவது தொடர்பான முடிவை அந்தந்த அமைப்புகளின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்ளலாம் என்றும், தற்போதைய நிலையில் டிக்டொக் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இல்லை என்றும் நீதித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-18T07:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பரவும் சைக்ளோஸ்போரா தொற்று: சில தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/how-affect-cyclosporiasis-outbreak-in-canada-1784360633"></link>
            <id>https://canadamirror.com/article/how-affect-cyclosporiasis-outbreak-in-canada-1784360633</id>
            <summary type="text">கனடாவின் பல்வேறு பகுதிகளில், சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கும் அமெரிக்காவில் பரவிவரும் தொற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பல்வேறு பகுதிகளில், சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கும் அமெரிக்காவில் பரவிவரும் தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
பொதுவாக, நோய்க்கிருமிகளில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற கிருமிகள் குறித்து அதிகம் பேசப்படுவதுண்டு.
</p><p>
ஆனால், பல நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் காணப்படும் ஒட்டுண்ணி (parasite) என்னும் கிருமி குறித்து அதிகம் பேசப்படுவதில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a8243a1-39a5-440f-b9d6-b38717edeb5c/26-6a5b2eba82839.webp' /></p><p>

குடற்புழுக்கள் முதல், மலேரியாவை உண்டு பண்ணும் கிருமிகள், குடல் முதல் மூளை வரை பாதிக்கும் அமீபா என்னும் கிருமிகள், இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும் ஜியார்டியா, ட்ரைக்கோமோனாஸ் என்னும் கிருமிகள், கால் பாதத்தை துளைத்துக்கொண்டு உடலுக்குள் நுழைந்து, இரத்தக்குழாய் வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து, வாய்க்கு வந்து, பின் வயிற்றுக்குள் செல்லும் கொக்கிப்புழுக்கள் என பலவகை ஒட்டுண்ணிகள் உலகில் காணப்படுகின்றன.</p><p>

அப்படிப்பட்ட ஒட்டுண்ணிகளில் ஒன்றுதான் இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்றை ஏற்படுத்தக்கூடிய சைக்ளோஸ்போரா என்னும் கிருமி.
</p><p>
உணவு மற்றும் குடிநீர் வழியாக மட்டுமே பரவும் இந்த சைக்ளோஸ்போரா என்னும் கிருமி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம், வாயுத்தொல்லை மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.</p><p>

தற்போது அமெரிக்காவில் இந்த கிருமி அதிக அளவில் பரவிவரும் நிலையில், தற்போது கனடாவின் பல பகுதிகளிலும் அது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

என்றாலும், அமெரிக்கத் தொற்றுக்கும் கனேடிய தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-18T07:52:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டனின் புதிய பிரதமராகும் ஆன்டி புர்ன்ஹாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/andy-burnham-to-become-uk-prime-minister-1784353983"></link>
            <id>https://canadamirror.com/article/andy-burnham-to-become-uk-prime-minister-1784353983</id>
            <summary type="text">&amp;nbsp; பிரிட்​டனில் தொழிலா​ளர் கட்சி யைச் சேர்ந்த கெய்ர் ஸ்டார்​மர் பதவி​யில் இருந்​து ராஜி​னாமா செய்ய உள்​ள​தாக கடந்த மாதம் அறி​வித்​தார். 

இதைத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரிட்​டனில் தொழிலா​ளர் கட்சி யைச் சேர்ந்த கெய்ர் ஸ்டார்​மர் பதவி​யில் இருந்​து ராஜி​னாமா செய்ய உள்​ள​தாக கடந்த மாதம் அறி​வித்​தார். </p><p>

இதைத் தொடர்ந்து பிரிட்​டனின் தொழிலாளர் கட்சித் தலை​வ​ராக கட்​சி​யின் மூத்த தலை​வர் ஆன்டி புர்ன்ஹாம் தேர்வு செய்யப்பட்டுள்​ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5beba74b-f7f5-4afc-b84e-7206670eb372/26-6a5b14c15e093.webp' /></p><p> இதையடுத்து அவரே பிரதம​ராக பதவியேற்க​வுள்​ளார்.

அவர் வரும் திங்​கட்​கிழமை (ஜூலை 20) பதவி​யேற்​க​வுள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது. ஆன்டி புர்ன்​ஹாம் ஏற்​கெனவே கிரேட்​டர் மான்​செஸ்​டரின் மேய​ராக பணி​யாற்​றிய​வர்.</p><p> 

இதுகுறித்து ஆன்டி புர்ன்​ஹாம் பேசும்போது, ‘‘பொருளா​தார வளர்ச்​சி, பொதுச் சேவை​களை வலுப்​படுத்​த, பிராந்​திய ஏற்​றத்​தாழ்​வு​களைக் களை​ய​ நான் பாடு​படு​வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-18T06:53:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர் தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு ; மீண்டும் ஆரம்பித்த அமெரிக்கா மற்றும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/middle-east-rocked-by-fresh-attacks-1784346602"></link>
            <id>https://canadamirror.com/article/middle-east-rocked-by-fresh-attacks-1784346602</id>
            <summary type="text">ஈரான் மீது தொடர்ந்து ஏழாவது இரவாக தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற தாய்லாந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது தொடர்ந்து ஏழாவது இரவாக தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற தாய்லாந்து கொடி ஏற்றப்பட்ட கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் கூறுகிறது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fab93f17-74e4-4ff5-9688-fc2181aa0908/26-6a5af7ec40df5.webp' /></p><p>பிராந்தியத்தின் சில பகுதிகளில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் ஈரானிய துணை ஆளுநர் கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. </p><p>இந்த தாக்குதல்களில் மேலும் எட்டு பேர் காயமடைந்ததாக அந்த அதிகாரி கூறியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது</p><p>ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் வணிக கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் மேற்கொள்ளப்பட்டு இருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தார்.</p><p> இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
</p><p>
அமெரிக்க தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள கடல்நீர் சுத்தகரிப்பு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் மற்றும் அமெரிக்க ராணுவ கட்டமைப்புகள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
முன்னதாக, ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே பாலங்களின் மீது அமெரிக்க படைகள் அதிகாலை தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-18T06:52:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தொடர் தாக்குதல் ; மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-strikes-us-military-bases-again-1784353233"></link>
            <id>https://canadamirror.com/article/iran-strikes-us-military-bases-again-1784353233</id>
            <summary type="text">அமெரிக்கா, ஈரான் இடையே போர் மூண்டது. மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. பின்னர், பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பு இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா, ஈரான் இடையே போர் மூண்டது. மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. பின்னர், பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>&nbsp;ஆனால், உலகின் முக்கிய வர்த்தக பாதையாக திகழும் ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்தது. </p><p>மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை கடக்கும் சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74a7cb91-8fa7-461a-a9bf-b85649d42882/26-6a5b11d306b93.webp' /></p><p> </p><p>இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.&nbsp;</p><p> அந்த வகையில் இன்று 7வது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.</p><p> பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மீது ஈரான் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக ஈரான் தெரிவித்துள்ளது. </p><p>இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, ஈரானின் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-18T05:40:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு தபாலில் வரும் போதைப்பொருள்; சுங்கத்துறை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/narcotics-arriving-in-sri-lanka-via-post-customs-1784350180"></link>
            <id>https://canadamirror.com/article/narcotics-arriving-in-sri-lanka-via-post-customs-1784350180</id>
            <summary type="text">சர்வதேச தபால் உறைகள் ஊடாக நாட்டுக்குள் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



கடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச தபால் உறைகள் ஊடாக நாட்டுக்குள் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>



கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான சிறிய தபால் உறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் அனுப்பும் முறையை கையாளுவதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9d13bfe-2e33-4a42-866d-eb9aede0e97a/26-6a5b05e600b9c.webp' /></p><h2>&nbsp;83.2 கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல்</h2><p>
</p><p>


கடந்த ஜூன் மாதம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட நான்கு விசேட நடவடிக்கைகள் மற்றும் ஒன்பது தபால் உறைகள் மீதான சோதனைகளின் மூலம், மொத்தம் 83.2 கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


தினசரி அதிகளவிலான சர்வதேச தபால் பொதிகள் நாட்டிற்கு வருவதால் அனைத்தையும் முழுமையாக பரிசோதிக்க இயலாத சூழல் காணப்படுவதாகவும், எனவே சந்தேகத்திற்கிடமான பொதிகளை அடையாளம் காண நவீன ஆய்வுக் கருவி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் சுங்கத்துறை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p>



குறிப்பாக தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ வகை போதைப்பொருள் அடங்கிய தபால் உறைகள் அதிகளவில் வருவதை அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
</p><p>


தனித்தனி உறைகளில் அனுப்பப்படும் போதைப்பொருளின் அளவு குறைவாக இருந்தாலும், அவை இறுதியில் பயனாளிகளை சென்றடைந்து சமூகத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக சுங்கத்துறை பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா எச்சரித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-18T04:57:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் பயங்கர தீ விபத்து; 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/massive-fire-in-norway-over-100-homes-destroyed-1784349720"></link>
            <id>https://canadamirror.com/article/massive-fire-in-norway-over-100-homes-destroyed-1784349720</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தெற்கு நோர்வேயின் டிராஃமென் (Drammen) நகருக்கு அருகில் நேற்று (17) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தெற்கு நோர்வேயின் டிராஃமென் (Drammen) நகருக்கு அருகில் நேற்று (17) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

பலத்த காற்றுக்கு மத்தியில் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். 

ஒஸ்லோவிற்கு (Oslo) மேற்கே சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகள் உள்ள பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b727bce-65fb-4447-9f5a-8d3c4381a2aa/26-6a5b041a6edb6.webp' /></p><p> 

எனினும், இந்த விபத்தில் எவரும் காயமடைந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. </p><p>

தீயை அணைக்கும் பணியில் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதுடன், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக ஹெலிகொப்டர்கள் மூலம் தண்ணீரும் ஊற்றப்பட்டு வருகின்றது.</p><p> 

தீ தொடர்ந்து எரிந்து வருவதுடன், அது அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கும் பரவியதால், நூற்றுக்கணக்கான மக்களை பொலிஸார் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர். 

இந்த தீ விபத்து எங்கு, எப்படித் தொடங்கியது என்பது குறித்த காரணங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-18T04:40:24+00:00</updated>
        </entry>
    </feed>
