<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-15T09:52:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிட்டோபா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் ஆபத்தான பொருட்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/seize-439-guns-canada-ex-mp-inky-mark-home-1784108302"></link>
            <id>https://canadamirror.com/article/seize-439-guns-canada-ex-mp-inky-mark-home-1784108302</id>
            <summary type="text">&amp;nbsp; கனடா&amp;nbsp; மனிட்டோபா மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கி மார்க் (78) (EX MP Inky Mark ) என்பவரின் வீட்டில் பொலிஸார் மேற்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடா&nbsp; மனிட்டோபா மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கி மார்க் (78) (EX MP Inky Mark ) என்பவரின் வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், பெருமளவு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் பெருமளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பல அரசியல் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த இங்கி மார்க், பின்னர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90108855-124b-4b32-8551-cf86c092371b/26-6a5755104f7d1.webp' /></p><h2>சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வி</h2><p>

ஜூலை 7ஆம் திகதி அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில் சில கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 ஆயிரக்கணக்கான துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 300,000 கனேடிய டொலர்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இங்கி மார்க் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த வாரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இங்கி மார்க் , எதிர்வரும் ஒகஸ்ட் 11ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T09:36:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேடிய நகரமொன்று திடீரென இருளில் மூழ்கியதால் ஏற்பட்ட பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/quebec-day-light-becomes-darker-due-to-wildfire-1784103608"></link>
            <id>https://canadamirror.com/article/quebec-day-light-becomes-darker-due-to-wildfire-1784103608</id>
            <summary type="text">கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள ஒரு நகரம், பகல் நேரத்தில் திடீரென இருளில் மூழ்கியதால் திகில் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை, கனடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள ஒரு நகரம், பகல் நேரத்தில் திடீரென இருளில் மூழ்கியதால் திகில் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நேற்று காலை, கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள La Tuque நகரை திடீரென இருள் சூழ்ந்ததால் மக்கள் திகிலடைந்தனர்.
</p><p>
ஏற்கனவே காட்டுத்தீ உருவாக்கிய புகை சூரியனை மறைத்திருக்க, அதைத் தொடர்ந்து கார்மேகங்கள் சூழ, பட்டப்பகல், இரவு போல மாற, தெரு விளக்குகள் எரியத் துவங்கியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1dce5ce-4e6f-453b-8fc4-c9fc9c967043/26-6a5742b9e6432.webp' /></p><p>
35 ஆண்டுகளுக்கு முன் மொன்றியலில் நிகழ்ந்த தங்கள் நிச்சயதார்த்தத்தை நினைவுகூருவதற்காக அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு வந்த சாரா லெட்ஸ்கி, La Tuqueஇல் தான் சந்தித்த அந்த அனுபவம் திகிலூட்டுவதாக அமைந்திருந்ததாக தெரிவிக்கிறார்.
</p><p>
மரச்சாமான்களை டெலிவரி செய்யும் வேலையைச் செய்யும் மார்க் லராம் என்பவர், புகை மற்றும் வெப்பம் காரணமாக தனது வேலை கடினமானதாக இருந்ததாக தெரிவிக்கிறார்.
</p><p>
புகையிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, நாம்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாகவேண்டும், இல்லையென்றால் மயக்கம் போட்டு விழவேண்டியதுதான் என்கிறார் அவர்.
</p><p>
இதற்கிடையில், காட்டுத்தீயால் பரவிவரும் புகையால் சாலைகளில் போதுமான வெளிச்சம் இல்லை என்றும், காற்றின் தரம் மோசமாக உள்ளதாகவும் எச்சரித்திருந்த கனடாவின் சுற்றுச்சூழல் அமைப்பு, மக்கள் வீட்டுக்கு வெளியே நேரம் செலவிடுவதைக் குறைக்குமாறும், விளையாட்டு மைதானங்களில் விளையாடுவது முதலான நிகழ்ச்சிகளை குறைக்கவோ அல்லது மாற்றிவைக்கவோ செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T08:25:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/collingwood-opp-beware-of-new-cell-phone-fraud-1784101731"></link>
            <id>https://canadamirror.com/article/collingwood-opp-beware-of-new-cell-phone-fraud-1784101731</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் காலிங்வுட் மாகாண காவல்துறை, அண்மையில் புதிய கைப்பேசிகளை கொள்வனுவு செய்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய மோசடி குறித்து மக்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் காலிங்வுட் மாகாண காவல்துறை, அண்மையில் புதிய கைப்பேசிகளை கொள்வனுவு செய்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய மோசடி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>
தங்கள் புதிய கைப்பேசிகளை வாங்கிய உடனேயே, தங்களுக்கு மோசடி அழைப்புகள் வருவதாகப் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள், தாங்கள் மொபைல் சேவை வழங்கும் நிறுவனம் சார்பாகப் பேசுவதாகக் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e21e15a-f758-4dc9-bd23-2cdcb5b671db/26-6a573df2d7dea.webp' /></p><p>
</p><p> பின்னர், கைப்பேசிகளின் முழுமையான அமைப்புகளை முடிப்பதற்காக, வாங்கிய சாதனத்தைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறுகின்றனர்.
</p><p>மற்றொரு சில சம்பவங்களில், மொபைல் போனுக்கு தள்ளுபடிகள் அல்லது சலுகைகள் வழங்குவதாகக் கூறி கைப்பேசிகளைத் திருப்பி அனுப்பினால் சலுகை விலையில் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.</p><p>
காவல்துறையின் கூற்றுப்படி, இந்த ஏமாற்று வேலைகளை உண்மையென்று நம்பும் மக்கள், தங்கள் கைப்பேசிகளை கூரியர் மூலமாகவோ அல்லது நேரில் வரும் ஒரு நபரிடமோ ஒப்படைத்து விடுகின்றனர். </p><p>ஆனால், அவ்வாறு ஒப்படைக்கப்படும் போன்கள் மீண்டும் ஒருபோதும் திருப்பித் தரப்படுவதில்லை.
சமீபத்தில் வாங்கப்பட்ட மின்னணு சாதனங்கள் (Electronics) தொடர்பாக வரும் தேவையற்ற அழைப்புகள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அல்லது கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>யாராவது உங்களைத் தொடர்பு கொண்டு உங்கள் மொபைல் சேவை நிறுவனம் சார்பாகப் பேசுவதாகக் கூறினால், அதை அப்படியே நம்ப வேண்டாம். உங்கள் மொபைல் பில்லில் உள்ள எண் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி, நீங்களாகவே நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அந்த கோரிக்கையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு காவல்துறை பரிந்துரைக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T07:56:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா கடற்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-launches-missile-attack-on-us-naval-base-1784091734"></link>
            <id>https://canadamirror.com/article/iran-launches-missile-attack-on-us-naval-base-1784091734</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), பஹ்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளத்தின் மீது ஏவுகணைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), பஹ்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளத்தின் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>
இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகவும், தங்களுக்கு எதிரான "அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு" தொடர்ந்தால் இன்னும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecebb8b8-ba64-4dbc-aa99-9e50564ead9a/26-6a5714579493d.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T07:20:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா ஆயிரக்கணக்கான வாகனங்கள் மீளப்பெறல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/some-kias-told-to-park-away-from-buildings-1784099846"></link>
            <id>https://canadamirror.com/article/some-kias-told-to-park-away-from-buildings-1784099846</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா மற்றும் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான கிய டெலிரைட் எஸ்.யு.வீ Kia Telluride SUV வாகனங்களை மீளப்பெறும் நடவடிக்கையை Kia நிறுவனம் அறிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா மற்றும் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான கிய டெலிரைட் எஸ்.யு.வீ Kia Telluride SUV வாகனங்களை மீளப்பெறும் நடவடிக்கையை Kia நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p> 
இருக்கை இயக்கும் மின்மோட்டார்கள் தீப்பற்றும் அபாயம் காரணமாக,
வாகனம் நிறுத்தப்பட்டிருந்தாலும், இயந்திரம் அணைக்கப்பட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட வாகனங்களில் உள்ள இருக்கை மின்மோட்டார்கள் அதிக வெப்பமடைந்து தீ ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>கனடாவில் உள்ள Kia Telluride 2020 முதல் 2024 வரையிலான மாடல் வாகன உரிமையாளர்கள், பழுது நீக்கம் செய்யப்படும் வரை தங்களது வாகனங்களை கட்டிடங்கள் மற்றும் பிற அமைப்புகளிலிருந்து தொலைவில் வெளிப்புற இடங்களில் நிறுத்துமாறு கியா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>
பாதிக்கப்பட்ட அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் தபால் மூலம் அறிவிப்பு அனுப்பப்படும். அவர்கள் கியா விற்பனை நிலையத்துக்கு சென்று தேவையான பழுதுபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
வாகன இருக்கை சுவிட்ச் சேதமடைந்தாலோ, அதன் உள் அமைப்பு தவறான நிலையில் சென்றாலோ, இருக்கை மோட்டார் தொடர்ந்து இயங்குவதால் அதிக வெப்பம் ஏற்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72294ac1-f76e-4375-8f78-b46e0044f22e/26-6a573409b34ec.webp' /></p><p>
</p><p>இதனைத் தடுக்கும் வகையில் Kia விற்பனை நிலையங்களில் மின்னணு ஃபியூஸ் அமைப்பு பொருத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>கனடாவின் போக்குவரத்து அமைச்சு வெளியிட்ட மீளப்பெறல் அறிவிப்பின்படி, கனடாவில் மொத்தம் 20,563 வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T07:18:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் ஜெயலலிதாவின் Amma Kitchen;இந்தியர்கள் குதூகலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/amma-kitchen-in-the-us-new-jersey-indian-1784098927"></link>
            <id>https://canadamirror.com/article/amma-kitchen-in-the-us-new-jersey-indian-1784098927</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழகத்தின் முன்னாள் முதலமச்சர் ஜெயலலிதாவின் ஆதரவாளர் ஒருவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் Amma Kitchen என்கிற பெயரில் ஒரு உணவகத்தை தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழகத்தின் முன்னாள் முதலமச்சர் ஜெயலலிதாவின் ஆதரவாளர் ஒருவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் Amma Kitchen என்கிற பெயரில் ஒரு உணவகத்தை தொடங்கியிருக்கிறார்.</p><p>
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் முக்கியமானது அம்மா உணவகம், ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.&nbsp; அம்மா உணவகத்தில் மிகவும் குறைவான விலையில் உணவருந்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ebd7868-c284-4b7f-a997-3bae8a1c22f9/26-6a5730710aaf8.webp' /></p><p> </p><p>&nbsp; காலையில் இந்திய பெறுமதியில் ஒரு ரூபாய்க்கு இட்லி, மதியம் 5 ரூபாய்க்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவற்றை சாப்பிட முடியும். அதேபோல் மாலையில் 1.50 பைசாவுக்கு சப்பாத்தியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
</p><p>
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஆட்சிமாறி திமுக ஆட்சி வந்த போதும் இந்த திட்டத்தை நிறுத்தவில்லை. 

அதேபோல் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வரும் நிலையிலும் இந்த திட்டம் நிறுத்தப்படவில்லை. </p><p>&nbsp;தவெக ஆட்சியில் அம்மா உணவகம் மேலும் மெருகூட்டப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான் ஜெயலலிதாவின் ஆதரவாளர் ஒருவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் Amma Kitchen என்கிற பெயரில் ஒரு உணவகத்தை தொடங்கியிருக்கிறார்.</p><p> ஹோட்டலின் முன்பும், உள்ளேயும் பல இடங்களில் ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டிருக்கிறது. 

குறைந்த விலையில் மக்களுக்கு உணவு வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில் பரோட்டா, முட்டை, கறி போன்ற தென்னிந்திய உணவுகள் கிடைக்கிறது. </p><p>அங்கு சென்று உணவருந்திய ஒருவர் சமீபத்தில் தன் அனுபவத்தை வீடியோவாகவும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.</p>]]></content>
            <updated>2026-07-15T07:01:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீ விபத்திலிருந்து தப்ப மாடியிலிருந்து குதித்த முதியவர் பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/senior-dies-after-jumping-from-balcony-of-burning-1784097424"></link>
            <id>https://canadamirror.com/article/senior-dies-after-jumping-from-balcony-of-burning-1784097424</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற 85 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை இரவு 9.20 மணியளவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற 85 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>
திங்கட்கிழமை இரவு 9.20 மணியளவில் 132 அவென்யூ மற்றும் 82 வீதி பகுதியில் அமைந்திருந்த மூன்று மாடி அடுக்குமாடி குடியிருப்பில் தீ மற்றும் வெடிப்பு ஏற்பட்டது.
</p><p>பொலிஸாரின் தகவலின்படி, தீயில் சிக்கிய அந்த முதியவர் உயிர் தப்பும் முயற்சியில் தனது குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே குதித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba9a356d-1e08-4536-adb9-f0fea4ba65b5/26-6a572a9205b46.webp' /></p><p> </p><p>
அவசர மருத்துவ சேவையினர் (EMS) அவருக்கு சிகிச்சை அளித்த போதிலும், ஏற்பட்ட காயங்களால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அதிகாரிகளின் ஆரம்ப விசாரணைகளின்படி, ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, கட்டிடத்தின் பின்புறம் மற்றும் எரிவாயு குழாயில் மோதியுள்ளது.
</p><p>இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பால் தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வாகனத்தை ஓட்டிய 62 வயதான ஆண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>விபத்திற்கான சரியான காரணம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தீ விபத்தில் சிக்கிய பல குடியிருப்பாளர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.
</p><p>ஆரம்பத்தில் ஐந்து பேர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், பின்னர் அந்த எண்ணிக்கை ஆறாக அதிகரிக்கப்பட்டது.</p><p>
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணி நிலவரப்படி, அந்த கட்டிடத்தில் வசித்த இருவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>இந்த 16 குடியிருப்புகள் கொண்ட கட்டிடத்தில் சுமார் 35 பேர் வசித்து வந்ததாகவும், தரைத்தளத்தில் நான்கு வர்த்தக நிலையங்கள் இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T06:40:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேடிக்கைக்காக கைதிகளை சித்திரவதை செய்த பிரிட்டிஷ் சிறப்புப் படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/uk-forces-tortured-prisoners-in-afghanistan-1784097710"></link>
            <id>https://canadamirror.com/article/uk-forces-tortured-prisoners-in-afghanistan-1784097710</id>
            <summary type="text">&amp;nbsp; ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளைப் பிரிட்டிஷ் சிறப்புப் படையினர் வேடிக்கைக்காக ‘போர்க்லிஃப்ட்’ இயந்திரத்தின் மீது ஏற்றி, சித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளைப் பிரிட்டிஷ் சிறப்புப் படையினர் வேடிக்கைக்காக ‘போர்க்லிஃப்ட்’ இயந்திரத்தின் மீது ஏற்றி, சித்திரவதை செய்ததாக ஆப்கானிஸ்தான் போர்க்குற்ற விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன், சிறப்புப் படையினரால் அப்பாவி விவசாயிகள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்துக் கேள்வி எழுப்பிய இராணுவ அதிகாரி ஒருவர், “தலிபான்களை நேசிக்கும் துரோகி” என சக அதிகாரிகளால் வசைபாடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cb19c78-66f2-431f-91d2-96a321f38a5f/26-6a572bafb59e1.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த பிரிட்டிஷ் சிறப்புப் படைகள் புரிந்த போர்க்குற்றங்கள் மற்றும் அதனை மூடிமறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து லண்டனில் நீதிபதி தலைமையில் விசேட விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-15T06:40:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனிடம் கனடா மற்றும் பிரிட்டன் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/british-canadian-families-push-ukraine-1784096220"></link>
            <id>https://canadamirror.com/article/british-canadian-families-push-ukraine-1784096220</id>
            <summary type="text">கனடா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பல குடும்பங்கள், உக்ரைனில் இருந்து இணையம் வழியாக விற்பனை செய்யப்படும் உயிருக்கு ஆபத்தான இரசாயனப் பொருளின் விற்பனையை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பல குடும்பங்கள், உக்ரைனில் இருந்து இணையம் வழியாக விற்பனை செய்யப்படும் உயிருக்கு ஆபத்தான இரசாயனப் பொருளின் விற்பனையை கட்டுப்படுத்துமாறு உக்ரைன் அரசிடம் வலியுறுத்தியுள்ளன. </p><p>
இந்த இரசாயனத்தை உணவுப் பாதுகாப்புப் பொருளாகக் கூறி விற்பனை செய்ததால் பல இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
</p><p>உக்ரைன் தேசிய காவல்துறை, அந்த இரசாயனம் தற்போதைய சட்டங்களின் கீழ் சட்டவிரோதமானது அல்ல எனவும், அது உணவுப் பாதுகாப்புப் பொருளாக விற்பனை செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c090d21-339e-4466-8edc-1ab0936f95f6/26-6a5725de322de.webp' /></p><p> 
எனினும், குற்றச்செயல் தொடர்பான உறுதியான தகவல்கள் கிடைத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.</p><p>
பிரிட்டனின் சஃபோக் பகுதியைச் சேர்ந்த 23 வயதான கிரேஸ் பிரிட்சார்ட், உக்ரைனில் இருந்து அனுப்பப்பட்ட அந்த இரசாயனத்தை உட்கொண்ட பின்னர் உயிரிழந்ததாக அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.
</p><p>குடும்பத்தினரின் தகவலின்படி, பிரிட்டிஷ் காவல்துறை முன்பு இரண்டு பொதிகளை பறிமுதல் செய்து நலன்விசாரணையும் மேற்கொண்டிருந்தது.</p><p> ஆனால் பின்னர் வந்த மூன்றாவது பொதியை தடுக்க முடியாததால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கனடாவின் ஒட்டாவாவைச் சேர்ந்த 22 வயதான அன்னேகா டாலின் ஓ'கிரேடியும், உக்ரைனில் செயல்பட்ட இணையதளம் மூலம் அதே இரசாயனத்தை வாங்கி பயன்படுத்திய பின்னர் உயிரிழந்தார்.
</p><p>அவரது தாய் சூசன் டாலின் ஓ'கிரேடி, தனது மகளின் இணையச் செயல்பாடுகளை ஆய்வு செய்தபோது, தற்கொலையை ஊக்குவிக்கும் இணையக் குழுக்கள் அந்த உக்ரைன் விற்பனையாளரிடம் வழிநடத்தியது தெரியவந்ததாக தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T06:16:21+00:00</updated>
        </entry>
    </feed>
