<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-16T04:50:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் இதனை செய்யவிட்டால் ஒருவரும் மீதம் இருக்கமாட்டார்கள் ; ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-issues-public-warning-to-iran-1784173675"></link>
            <id>https://canadamirror.com/article/trump-issues-public-warning-to-iran-1784173675</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஒன்றை அவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஈரான் அதனை செய்ய தவறினால், அந்நாட்டில் ஒருவரும் மீதம் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஒன்றை அவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஈரான் அதனை செய்ய தவறினால், அந்நாட்டில் ஒருவரும் மீதம் இருக்கமாட்டார்கள் என்று ட்ரம்ப் எச்சரித்து உள்ளார்.</p><p style="text-align: justify; ">ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீது திடீரென்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்தது. ஈரானின் இந்த தாக்குதல்களை நிறுத்துவதற்காக அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/187ba0e4-4735-42f5-8689-858259bad11a/26-6a58546c39932.webp' /></p><p style="text-align: justify; ">இதனால், அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.

இதுவரை ஈரானில் 30 பேர் பலியாகி உள்ளனர். 260-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஈரான் அரசு தரப்பில், அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் உசைன் கெர்மான்பூர் தெரிவித்து உள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இந்த சூழலில், ஈரானில் உள்ள பாலங்களை குண்டுகளை வீசி தகர்க்க போவது பற்றி தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. </p><p style="text-align: justify; ">இதனை தொடர்ந்து, பென்சில்வேனியா மாகாணத்திற்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் செய்தியாளர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர்.</p><p style="text-align: justify; ">

அதற்கு அவர் பதில் அளித்து பேசும்போது, எங்களுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மீண்டும் திரும்ப வேண்டும். அப்படி இல்லையெனில், அடுத்த வாரம் ஈரானின் எல்லை பகுதிகளை தாக்கும் ஒரு பகுதியாக அதன் அணு உலைகள் மற்றும் பாலங்களை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படும் என்றார்.</p><p style="text-align: justify; ">அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஒன்றை அவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஈரான் அதனை செய்ய தவறினால், அந்நாட்டில் ஒருவரும் மீதம் இருக்கமாட்டார்கள் என்று ட்ரம்ப் எச்சரித்து உள்ளார்.</p><p style="text-align: justify; ">ஈரானை நாளை இரவு கடுமையாக தாக்க போகிறோம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட கூடிய சாத்தியமும் அதிகரித்து காணப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-16T03:47:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க நலன்களுக்கு முன்னுரிமை ; ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கையில் புதிய மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-interests-priority-new-shift-trump-foreign-1784161177"></link>
            <id>https://canadamirror.com/article/us-interests-priority-new-shift-trump-foreign-1784161177</id>
            <summary type="text">அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>இதன் மூலம், சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் பங்களிப்பு மற்றும் கூட்டணிகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

ட்ரம்ப்பின் கொள்கையின்படி, அமெரிக்காவுக்கு நேரடியாகப் பயனளிக்கும் நடவடிக்கைகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் பல்தரப்பு கூட்டணிகளில் அமெரிக்காவின் பங்களிப்பும் மறுபரிசீலனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/088aadd8-dac1-4f23-b5cf-3f85c1e1902e/26-6a58239b620fb.webp' /></p><p>

மேலும், வர்த்தகப் பாதுகாப்புக் கொள்கைகளை வலுப்படுத்துவதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி, தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதே தனது நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதாக ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அதேவேளை, பாரம்பரிய கூட்டணி நாடுகளுடனான உறவுகளை விட, அமெரிக்காவுக்கு நேரடியாகப் பலன் அளிக்கும் இருதரப்பு ஒப்பந்தங்களுக்கே அவர் முன்னுரிமை வழங்கி வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
எனினும், இந்தக் கொள்கை அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கையும், பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட சர்வதேச கூட்டணிகளையும் பாதிக்கக்கூடும் என விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
</p><p>
இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், தனது அணுகுமுறை அமெரிக்காவின் இறையாண்மை, பொருளாதார வலிமை மற்றும் தேசிய பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் என வாதிட்டுள்ளார்.
</p><p>
ட்ரம்ப்பின் இந்த வெளியுறவுக் கொள்கை, எதிர்காலத்தில் அமெரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் உலக அரசியல் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-16T01:22:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் துறைமுக நகரங்கள் மீது ரஷியா தாக்குதல் ; 3 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-attacks-ukrainian-port-cities-3-killed-1784163959"></link>
            <id>https://canadamirror.com/article/russia-attacks-ukrainian-port-cities-3-killed-1784163959</id>
            <summary type="text">உக்ரைன்–ரஷியா போர் இன்று 1,599ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

போர் ஆரம்பமானதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன்–ரஷியா போர் இன்று 1,599ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

போர் ஆரம்பமானதிலிருந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த போர் நிறுத்த முயற்சிகள் இதுவரை வெற்றியளிக்காத நிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4537ebd-d17c-480b-a950-4d58241d050a/26-6a582e78795f4.webp' /></p><p>இந்த நிலையில், உக்ரைனின் துறைமுக நகரங்களான ஒடிசா மற்றும் மைகொலைவ் பகுதிகளில் அமைந்துள்ள துறைமுக உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
இந்த தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, கருங்கடல் பகுதியில் இயங்கிய ரஷிய கடற்படை கப்பல்களை குறிவைத்து உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் நிலவுவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-16T01:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெனிசுலாவில் நிலநடுக்கம் ஏற்படுத்திய பேரழிவு ; உயிரிழப்பு 4,734 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/earthquake-disaster-venezuela-death-rises-4-734-1784163113"></link>
            <id>https://canadamirror.com/article/earthquake-disaster-venezuela-death-rises-4-734-1784163113</id>
            <summary type="text">தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த மாதம் 24ஆம் திகதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,734 ஆக உயர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த மாதம் 24ஆம் திகதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,734 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கங்கள் நாட்டின் பல பகுதிகளில் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dfd24a0-f2b8-4ce3-9b56-b4f427cee144/26-6a582b2aa1ce0.webp' /></p><p>பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்த அனர்த்தத்தில் இதுவரை 4,734 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16,740 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
மேலும், நிலநடுக்கத்தால் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளதாக வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.
</p><p>
நிலநடுக்கம் ஏற்பட்டுத் மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணிகளும், நிவாரண மற்றும் மீட்புப் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளும் அரசாங்கம் மற்றும் மீட்பு அமைப்புகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-16T00:52:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை பதற்றம் ; அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strait-hormuz-tension-us-iran-conflict-intensifies-1784162489"></link>
            <id>https://canadamirror.com/article/strait-hormuz-tension-us-iran-conflict-intensifies-1784162489</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக கடல்வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. </p><p>அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக கடல்வழி முற்றுகையை மீண்டும் அமல்படுத்தியுள்ளதுடன், அந்நாட்டின் பல்வேறு இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் அங்கீகரிக்காத கடல் வழித்தடத்தில் வணிகக் கப்பல்கள் பயணித்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையில் நிலவிய இடைக்கால அமைதி ஒப்பந்தம் முறிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/537e30e2-bf38-405b-99f8-c9d28986e8e6/26-6a5828bb651e6.webp' /></p><p>இந்த நிலையில், ஈரானின் சிஸ்தான்–பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள 388ஆவது தரைப்படைப் பிரிவின் இராணுவ முகாம் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஏழு இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், ஹோர்முஸ் நீரிணையில் வியூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கிரேட்டர் துன்ப் தீவில் அமைந்திருந்த பாதுகாப்பு மற்றும் ஏவுகணைத் தளங்களும் அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதல்களில் மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 72 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதனிடையே, ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட கடல்வழி முற்றுகைக்குப் பின்னர், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி பயணிக்க முயன்ற இரண்டு வணிகக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. </p><p>சர்வதேச கடல்சார் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
</p><p>
இதற்கு பதிலடியாக, பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் அந்நாடுகளில் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
மேலும், அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடருமானால், வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை முற்றிலுமாக முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) எச்சரித்துள்ளது.
</p><p>
இந்தப் பதற்றமான சூழ்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால் தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும், அடுத்த கட்டமாக முக்கிய உட்கட்டமைப்புகள் இலக்காகக் கொள்ளப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-16T00:42:09+00:00</updated>
        </entry>
    </feed>
