<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-18T16:36:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயோர்க்கில் நெதன்யாகுவை கைது செய்ய ஆலோசனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/move-to-arrest-netanyahu-in-new-york-1784380923"></link>
            <id>https://canadamirror.com/article/move-to-arrest-netanyahu-in-new-york-1784380923</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நியூயோர்க் நகருக்கு வருகை தந்தால், அவரை உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நியூயோர்க் நகருக்கு வருகை தந்தால், அவரை உள்ளூர் சட்டங்களின்படி கைது செய்ய முடியுமா என்பது குறித்து நியூயோர்க் மாநகர மேயர் சோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். </p><p>

செப்டம்பர் மாதம் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44591ff9-10c6-4d3c-a396-4abb610dcd27/26-6a5b7dfd74fac.webp' /></p><p>
</p><p>
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து விமர்சித்து வரும் ஜனநாயக சோசலிசக் கட்சியின் புதிய மேயர் மம்தானி, நெதன்யாகு ஒரு போர்க்குற்றவாளி என்றும் அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தப்பட வேண்டியவர் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
 சட்ட வரம்புகளுக்கு உட்பட்டே இந்த நடவடிக்கை ஆராயப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நியூயோர்க் சட்டத் துறையுடன் இது குறித்துப் பேசி வருவதாகவும் கூறியுள்ளார்.</p><p> 

இருப்பினும், அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உடன்படிக்கையில் கையெழுத்திடாத நாடு என்பதால், இத்தகைய கைது நடவடிக்கை சட்டப்பூர்வமாக சாத்தியமற்றது என சட்ட வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-18T13:20:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் சொத்தை பாதுகாப்பதாகக் கூறி 115 பேரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/multi-million-fraud-uk-115-people-swindled-assets-1784366428"></link>
            <id>https://canadamirror.com/article/multi-million-fraud-uk-115-people-swindled-assets-1784366428</id>
            <summary type="text">&amp;nbsp; பிரித்தானியாவில், குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதாக நம்பவைத்து முதியவர்களிடம் இருந்து சொத்துகளை அபகரித்த மோசடி வழக்கில், சந்தேக நபருக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரித்தானியாவில், குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதாக நம்பவைத்து முதியவர்களிடம் இருந்து சொத்துகளை அபகரித்த மோசடி வழக்கில், சந்தேக நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேக நபர் 115 பேரை ஏமாற்றி 11 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிக இழப்பை ஏற்படுத்திய நபருக்கு 8 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f752b5b9-e6d3-4b79-9522-1f27f9463846/26-6a5b455dbbde8.webp' /></p><h2>&nbsp;8 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத் தண்டனை</h2><p>
</p><p>
80 வயதான டொனால்ட் மேத்யூஸ் (Donald Matthews), 2008 ஆம் ஆண்டு தனது குடும்பச் சொத்துகளை பாதுகாக்கும் நோக்கில், யூனிவர்சல் வெல்த் பிரிசர்வேஷன் (Universal Wealth Preservation – UWP) என்ற நிறுவனத்திற்கு தனது வீட்டின் உரிமையை மாற்றி வழங்கினார். </p><p>அந்த நிறுவனம் அவரது சொத்துகள் பாதுகாப்பாக இருக்கும் என உறுதியளித்திருந்தது.
</p><p>
 டொனால்ட் மேத்யூஸ் 2016 ஆம் ஆண்டு உயிரிழந்த பின்னர், அந்த நிறுவனம் சஃபோக் (Suffolk) பகுதியில் இருந்த அவரது வீட்டை பல இலட்சம் பவுண்டுகளுக்கு விற்றுவிட்டு, அதிலிருந்து கிடைத்த பணத்தில் அவரது குடும்பத்தினருக்கு எந்தப் பகுதியையும் வழங்கவில்லை.
</p><p>
பின்னர் நடைபெற்ற விசாரணையில், UWP நிறுவனத்தின் தலைவரான 59 வயதான ஸ்டீவன் லாங் (Steven Long), டொனால்ட் மேத்யூஸை மட்டுமல்லாமல் இதேபோன்ற முறையில் மேலும் 114 பேரையும் ஏமாற்றி, மொத்தமாக 11 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிக நிதி மோசடி செய்தது தெரியவந்தது.
</p><p>
இந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, லண்டனிலுள்ள சவுத்‌வர்க் கிரவுன் நீதிமன்றம் (Southwark Crown Court) வெள்ளிக்கிழமை அவருக்கு 8 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது.
</p><p>
டொனால்ட் மேத்யூஸின் மகன் பால் மேத்யூஸ், தனது தந்தையின் நம்பிக்கையை பயன்படுத்தி மோசடி செய்த ஸ்டீவன் லாஙின் செயல் ,மிகவும் அருவருப்பானது, எனக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
</p><p>
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, சொத்துகளை பாதுகாப்பதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் நிதி மோசடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-18T13:09:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் உச்சம்; அமெரிக்காவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஈரான் ! பீதியில் உலக நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-border-will-be-safe-mohsen-rezaee-warning-us-1784380224"></link>
            <id>https://canadamirror.com/article/no-border-will-be-safe-mohsen-rezaee-warning-us-1784380224</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்கப் படைகள் தங்களின் வான்வழித் தாக்குதல்களை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தால், ஈரான் தற்காப்புப் பாணியை விடுத்து முழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்கப் படைகள் தங்களின் வான்வழித் தாக்குதல்களை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தால், ஈரான் தற்காப்புப் பாணியை விடுத்து முழு அளவிலான ஆக்கிரமிப்பு மற்றும் அழிவு என்ற புதிய அதிரடிப் போர்க்கட்டத்திற்குள் நுழையும் என ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் மூத்த ராணுவ ஆலோசகர் மோஹ்சென் ரெசாய் (mohsen rezaee) மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளமை உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் ஈரானிய இலக்குகள் மீது தொடர்ந்து ஏழாவது நாளாக அமெரிக்கா குண்டுமழை பொழிந்து வரும் சூழலில், ஈரானின் இந்த பகிரங்க மிரட்டல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது 

ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் (IRIB TV) தோன்றிப் பேசிய ராணுவ ஆலோசகர் மோஹ்சென் ரெசாய் (mohsen rezaee) ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d436f26-6966-458c-a337-e2ff360dd586/26-6a5b7b420a6d8.webp' /></p><p> “மத்திய கிழக்கில் தூதரகப் பேச்சுவார்த்தைகளுக்கான காலம் தற்பொழுது முற்றிலும் முடிந்துவிட்டது; அமெரிக்கா போரை நிறுத்தவில்லை என்றால் நாங்கள் தற்காப்புப் பதிலடிகளைத் தாண்டிப் பாய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>

 இந்த புதிய தாக்குதல் உத்தியை நாங்கள் செயல்படுத்தத் தொடங்கினால், எந்தவொரு அரசியல் எல்லையையும் நாங்கள் மதிக்க மாட்டோம்; அந்த எல்லைகள் எதுவும் எதிரிகளுக்குப் பாதுகாப்பை வழங்காது” என்று கூறி, அமெரிக்காவின் நட்பு நாடுகளையும் சேர்த்துத் தாக்கத் தயங்க மாட்டோம் என ஆக்ரோஷமாக&nbsp; (mohsen rezaee)&nbsp; எச்சரித்துள்ளார்.</p><p>மறுபுறம், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடி அறிவுறுத்தலின்படி ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைச் சிதைப்பதற்காகத் தங்களின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் துல்லியமான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p>

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் அச்சுறுத்தலாக விளங்குவதைத் தடுக்கவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அமெரிக்கா கூறுகிறது. </p><p>ஆனால், அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏவுகணை மற்றும் ட்ரோன் அலைகளை ஏவப் போவதாக ஈரான் பதிலடிப் பிரகடனம் செய்துள்ளது.
</p><p>
இதுவரை பிராந்தியத்தில் ஒரு பெரிய உலகளாவிய பாதுகாப்பு நெருக்கடி வெடிப்பதைத் தவிர்ப்பதற்காகவே தங்களின் ஏவுகணைக் கூட்டுப் படைகளைத் தடுத்து நிறுத்தி, பொறுமை காத்து வந்ததாகக் கூறியுள்ள ஈரான் ராணுவத் தலைமை, இனி தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து வந்தால் பின்வாங்கப் போவதில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. </p><p>

 இன்னிலையில் ஈரானின் இந்த “முழு அளவிலான போர்” எச்சரிக்கை ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஒரு மிகப்பெரிய உலகப்போர்ச் சூழலின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-18T13:08:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[47 கோடிக்கு மேல் ஏலம் போன பீலேயின் டி-சேர்ட்; உலகளவில் இரண்டாவது அதிகபட்ச விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pel-s-t-shirt-auctioned-for-over-47-crore-record-1784377402"></link>
            <id>https://canadamirror.com/article/pel-s-t-shirt-auctioned-for-over-47-crore-record-1784377402</id>
            <summary type="text">&amp;nbsp; பிரேசில் கால்பந்து மன்னனான பீலே (Pelé) கடந்த 1958ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டியில் அணிந்து விளையாடிய டி-சேர்ட், நியூயோர்க்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரேசில் கால்பந்து மன்னனான பீலே (Pelé) கடந்த 1958ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டியில் அணிந்து விளையாடிய டி-சேர்ட், நியூயோர்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 49 இலட்சம் அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியுள்ளது. </p><p>

கால்பந்து வீரர் ஒருவரின் டி-சேர்ட் ஏலம் போன வரிசையில், இது உலகளவில் இரண்டாவது அதிகபட்ச விலையாகப் பதிவாகி சாதனை படைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1677eb2-9424-4e7a-bec5-88d57b4ce481/26-6a5b703b91288.webp' /></p><p>
</p><p>
இதற்கு முன்னர், கடந்த 2022ஆம் ஆண்டில் ஆர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் டீகோ மரடோனாவின் (Diego Maradona) டி-சேர்ட் 93 இலட்சம் அமெரிக்க டொலருக்கு ஏலம் போனதே உலகளவில் முதலிடத்தில் உள்ளது.
</p><p>
கடந்த 1958ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், பிரேசில் அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
</p><p>
இந்த&nbsp; போட்டியில் பிரேசில் அணிக்காக விளையாடிய பீலே, 2 அதிரடி கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-18T12:21:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் ஜலசந்தியில் விபத்தில் சிக்கிய 2 எண்ணெய் கப்பல்கள் ; அமெரிக்காவை குற்றம்சாட்டும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-oil-tankers-collide-in-strait-of-hormuz-1784373081"></link>
            <id>https://canadamirror.com/article/two-oil-tankers-collide-in-strait-of-hormuz-1784373081</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடியில் மோதி வெடிவிபத்தில் சிக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் தவறான வழிகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடியில் மோதி வெடிவிபத்தில் சிக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p> மேலும், அமெரிக்காவின் தவறான வழிகாட்டுதலை பின்பற்றி, ஹார்முஸ் ஜலசந்தியில் தடை செய்யப்பட்ட ஆபத்தான பாதை வழியாக சென்றதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2648d13-7815-4215-82e2-532dbaf6be6f/26-6a5b5f5ae2d1d.webp' /></p><p>
</p><p>
ஆனால் ஈரானின் குற்றாச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. </p><p>இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் புரட்சிகர காவல்படையின் பெரும்பாலான குற்றச்சாட்டுகளைப் போலவே இதுவும் பொய்யானது" என்று பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமீபத்தில், துருக்கியின் அங்காரா நகரில் நடந்த நேட்டோ உச்சி நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, ஈரானுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டார். </p><p>இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளமை குறிப்பிடதக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T11:11:28+00:00</updated>
        </entry>
    </feed>
