<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-11T17:37:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா–ஈரான் பதற்றம் தீவிரம் ; புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதாக ஈரான் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-accuses-us-of-violating-memorandum-understand-1783789733"></link>
            <id>https://canadamirror.com/article/iran-accuses-us-of-violating-memorandum-understand-1783789733</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குற்றம் சாட்டியுள்ளார். </p><p>இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரானின் உயர்மட்டத் தலைவருடன் தொடர்புடைய ஒருவருக்கு எதிராக அமெரிக்க திறைசேரி திணைக்களம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பது, இரு நாடுகளும் ஜூன் மாதத்தில் எட்டிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறும் செயல் என அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71a82a1c-cdc3-4c47-b0d7-4ca1d62a700c/26-6a5278a638430.webp' /></p><p>ஜூன் மாதம் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பும் தற்போதைய நிலையைப் பேணுவதுடன், புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்காமல் இருக்க இணக்கம் தெரிவித்திருந்ததாகவும், தற்போதைய அமெரிக்க நடவடிக்கை அந்த உறுதிமொழிக்கு முரணானது என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்குப் பதிலடியாகவே புதிய தடைகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.</p><p> மேலும், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு ஈரானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரான் தொடர்புடைய இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், அதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நலன்கள் மற்றும் தளங்களை குறிவைத்து ஈரான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>இந்தச் சூழ்நிலையில், ஓமான் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தத்துடன் பதற்றத்தைத் தணிக்கும் இராஜதந்திர முயற்சிகளும் தொடர்கின்றன.</p>]]></content>
            <updated>2026-07-11T17:09:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது வீரர்களையே காட்டுமிராண்டித்தனமாக தண்டிக்கும் ரஷ்யா; நிர்வாணமாக்கி கொடூரம்; அதிர்ச்சியில் உலகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-punishes-own-soldiers-by-stripping-naked-1783767729"></link>
            <id>https://canadamirror.com/article/russia-punishes-own-soldiers-by-stripping-naked-1783767729</id>
            <summary type="text">&amp;nbsp; உக்ரைனுக்கு எதிரான போர் நான்கு ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், ரஷ்ய ராணுவத்தின் அக ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மற்றும் தண்டனை முறைகள் எந்த அளவிற்கு மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உக்ரைனுக்கு எதிரான போர் நான்கு ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில், ரஷ்ய ராணுவத்தின் அக ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மற்றும் தண்டனை முறைகள் எந்த அளவிற்கு மனிதாபிமானமற்ற நிலைக்குச் சென்றுள்ளன என்பதை அம்பலப்படுத்தும் நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

உக்ரைனின் முன்வரிசைப் போர்க்களப் பகுதிகளில் (Frontline Trenches) எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த 28 வினாடி வீடியோவில், ரஷ்யாவைச் சேர்ந்த இரு வீரர்கள் முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டு, மரத்தில் ஒட்டும் நாடாவால் கட்டி வைக்கப்பட்டு, அவர்களின் சொந்த நாட்டு அதிகாரிகளாலேயே மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d01caa0b-66d8-4eb8-8b41-2803f9ac8df1/26-6a5222b2c3973.webp' /></p><h2>மரத்தில் ஒட்டும் நாடாவால் கட்டி வைக்கப்பட்டு&nbsp;நிர்வாணமாக்கி கொடூரம்</h2><p>


போர்க்களத்தில் உக்ரைன் ராணுவத்தின் ‘பாபா யாகா’ (Baba Yaga) எனப்படும் அதிநவீன கனரக ட்ரோன் தாக்குதல்களுக்குப் பயந்து, தங்களின் உயிரைக் காத்துக் கொள்ளப் போர் முனையிலிருந்து பின்வாங்க முயன்ற அல்லது தாக்குதல் உத்தரவுகளை மறுத்த வீரர்களுக்குத்தான் ரஷ்ய ராணுவத் தளபதிகள் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தண்டனையை வழங்கியுள்ளனர். </p><p>

மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள அந்த வீரர்கள் தங்களை மன்னித்துவிடுமாறு அலறிக் கதறும் சத்தமும், அதற்கு அந்த அதிகாரி கடுமையான கெட்ட வார்த்தைகளால் திட்டி, அவர்களைப் பனியைக் கட்டாயப்படுத்தி உண்ணச் சொல்லித் துப்பாக்கிக் கட்டையால் தாக்கும் கொடூரமும்&nbsp; பதிவாகியுள்ளது.
</p><p>
உக்ரைனின் ஆதரவு டெலிகிராம் சேனலான ‘எக்ஸைல்நோவா+’ (Exilenova+) மூலம் முதன்முதலில் கசிந்த இந்த வீடியோவின் நம்பகத்தன்மையைச் சர்வதேச ஊடகங்கள் இன்னும் தனிச்சையாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ரஷ்ய ராணுவத்தில் இது போன்ற சித்திரவதைகள் சாதாரண ஒன்றுதான் என ரஷ்யாவின் சுதந்திர ஊடகமான ‘வெர்ஸ்ட்கா’ (Verstka) சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> 

தாக்குதலுக்குச் செல்ல மறுக்கும் அல்லது ராணுவத்தை விட்டு ஓட முயலும் ‘துரோகிகளை’ முன்வரிசை மரங்களில் கட்டி வைத்து, அவர்களை உக்ரைன் ட்ரோன்களின் நேரடித் தாக்குதலுக்கு இரையாக்கும் சடங்கு போன்ற தண்டனையை ரஷ்ய அதிகாரிகள் கையாண்டு வருவதாகச் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளன.</p><p>


ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான இளம் வீரர்களைப் போரில் இழந்து தவித்து வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ராணுவம், எஞ்சியிருக்கும் வீரர்களைக் கட்டாயப்படுத்திப் போரிட வைக்க இத்தகைய ‘பயங்கரவாத’ உத்திகளைத் தனது சொந்த படைக்குள்ளேயே பயன்படுத்தி வருகிறது. </p><p>போரின் கொடூர முகத்தையும், ரஷ்ய ராணுவத்திற்குள் நிலவும் சட்டமற்ற அராஜகத்தையும் இந்த வீடியோ அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளதால், உலக நாடுகள் பலவும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T13:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பெண் ஒருவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/alberta-woman-celebrating-5m-lottery-win-1783701020"></link>
            <id>https://canadamirror.com/article/alberta-woman-celebrating-5m-lottery-win-1783701020</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த மே மாதம் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் 5 மில்லியன் டாலர் வென்றுள்ளார்.
ஆல்பர்ட்டாவின் லீகல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த மே மாதம் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் 5 மில்லியன் டாலர் வென்றுள்ளார்.
</p><p>ஆல்பர்ட்டாவின் லீகல் பகுதியைச் சேர்ந்த ஷானன் கீஸ்ட் என்ற பெண், மே 27 அன்று நடைபெற்ற 'லோட்டோ 6/49 கிளாசிக் ஜாக்பாட்' (Lotto 6/49 Classic jackpot) குலுக்கலில் 5, 27, 35, 38, 44 மற்றும் 46 ஆகிய எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டை கொள்வனவு செய்திருந்தார். அந்த எண்களுக்கே தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது.
</p><p>இது குறித்து ஷானன் கீஸ்ட் கூறுகையில், "கடையில் வைத்து எனது லாட்டரி சீட்டை ஸ்கேன் செய்தபோது, நான் தான் வென்றேன் என்பதை உடனடியாக என்னால் நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2af43178-a692-4d8e-8d30-c28736324b6c/26-6a511e1e19670.webp' /></p><p>
ஒரு வித்தியாசமான சத்தம் மட்டுமே கேட்டது. உடனே பதற்றத்திலும் மகிழ்ச்சியிலும் கண்ணீருடன் எனது கணவருக்கு ஃபேஸ்டைம் மூலம் வீடியோ கால் செய்ய முயன்றேன்," என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த பரிசுப் பணத்தைக் கொண்டு சாஸ்காச்சுவான் பகுதியில் ஒரு அழகான மர இல்லம் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக கோஸ்டாரிகா நாட்டிற்குச் சிறப்புப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>"இது இன்னும் ஒரு கனவு போலவும், அதே சமயம் மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாதவாறும் உள்ளது. எங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று," என்று கீஸ்ட் மேலும் கூறினார்.
இவர் இந்த அதிர்ஷ்டகரமான லாட்டரி சீட்டை மொரின்வில் பகுதியில் உள்ள ஒரு மொபில் எரிபொருள் நிலைய கடையிலிருந்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T13:12:17+00:00</updated>
        </entry>
    </feed>
