<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-29T04:19:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்துக்குள் நுழைந்த நுளம்பு ; விமான ஊழியர்கள் இருவர் பலி ;4 பேர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mosquito-entered-plane-two-crew-members-killed-1787964752"></link>
            <id>https://canadamirror.com/article/mosquito-entered-plane-two-crew-members-killed-1787964752</id>
            <summary type="text">வானில் பறந்துகொண்டிருந்த விமானத்துக்குள் நுழைந்த நுளம்பு கடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் ஜெர்மனியில் இடம்பெற்றுள்ளது. 

ஜெர்மனியின் பிராங்பர்ட் விம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வானில் பறந்துகொண்டிருந்த விமானத்துக்குள் நுழைந்த நுளம்பு கடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் ஜெர்மனியில் இடம்பெற்றுள்ளது. </p><p>

ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் பணியாற்றும் விமான ஊழியர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. </p><p>

இதில் 6 விமான ஊழியர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce412184-42b8-4bdf-a595-4662bafd20ef/26-6a922d51f0e22.webp' /></p><p> </p><p>

அனோபிலஸ் என்கிற நுளம்பு கடித்ததாலேயே குறித்த 6 விமான ஊழியர்களும் மலேரியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. </p><p>


பல ஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மனியில் மலேரியா நோய்த் தாக்கத்தை முற்றாக ஒழித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.</p><p> எனினும், வெளிநாடுகளுக்கு சென்ற விமானத்துக்குள் நுழைந்த நுளம்புகளே மீண்டும் ஜெர்மனி சென்றிருக்கலாம் என்றும் அவை குறித்த விமான ஊழியர்களை கடித்ததாலேயே, அவர்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் உறுதிப்பட கூறுகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T00:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய அனர்த்தம் ; சுரங்கத்திற்குள் சிக்கிய இந்தியர்கள் ; தீவிரமாகும் மீட்பு பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-disaster-indians-trapped-inside-tunnel-1787963353"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-disaster-indians-trapped-inside-tunnel-1787963353</id>
            <summary type="text">நேபாளத்தில் பனிப்பாறை சரிவு காரணமாக&amp;nbsp; மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள், நீர்மின் நிலையம் உள்ளிட்டவைகளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் பனிப்பாறை சரிவு காரணமாக&nbsp; மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. </p><p>இதில் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள், நீர்மின் நிலையம் உள்ளிட்டவைகளில் பணியாற்றியவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30335e7b-36b6-4882-a1b6-b3d939445689/26-6a9227db5e78d.webp' /></p><p> </p><p>ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் மாயமான நிலையில் உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமான நடைபெற்று வருகிறது.
</p><p>
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சிலரின் உடல்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>
இதற்கிடையே கடுமையாக பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில நீர்மின் நிலைய சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் 450-க்கும் மேற்பட்டோர் பணியாற்றியதாக தெரியவந்தது.
</p><p>
இந்த சுரங்கமும் வெள்ளத்தால் கடுமையாக பாதித்தது. இந்த பகுதியை ராணுவம் இன்ற வானி வழியாக சென்றடைந்தது. </p><p>பின்னர், சுரங்கத்திற்குள் நுழைத்து அங்கு தவித்துக் கொண்டிருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
</p><p>
இதில் 63 இந்தியர்கள் உள்பட 350 பேரை நேபாள ராணுவம் மீட்டுள்ளது. இன்னும் சுமார் 100 பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-29T00:33:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/many-killed-in-israeli-strikes-on-gaza-family-1787960827"></link>
            <id>https://canadamirror.com/article/many-killed-in-israeli-strikes-on-gaza-family-1787960827</id>
            <summary type="text">அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட நிலையற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், நேற்று காசாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட நிலையற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், நேற்று காசாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.</p><p>&nbsp; இதற்கிடையில், ஈரான் போரினால் பாரசீக வளைகுடாவில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் சிக்கி தவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/586bb0fb-96cc-4ac2-aa75-d018a3800c87/26-6a921dfccdf75.webp' /></p><p> </p><p>இத்துடன், ரஷ்யா உடனான எரிசக்தி ஒப்பந்தத்தை ஈரான் முன்னிலைப்படுத்தி வருகிறது, மேலும் ஈரானுடனான தொடர்புகளுக்காக ஒரு முக்கிய எகிப்திய வங்கி மீது அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.</p><p>

</p><p>காசாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>

கான் யூனிஸ் (Khan Younis) பகுதிக்கு வெளியே இருந்த ஒரு குடும்பத்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு சகோதரர்களும் மற்றொரு உறவினரும் உயிரிழந்ததாக நாசர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>கான் யூனிஸில் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து தங்களுக்கு தெரியாது என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.</p><p>

நேற்று (வெள்ளிக்கிழமை) காசா நகரில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி இஸ்ரேலிய தாக்குதல்களில் தலா ஒருவர் வீதம் கொல்லப்பட்டதாக ஷிஃபா மருத்துவமனை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T00:30:21+00:00</updated>
        </entry>
    </feed>
