<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-10T13:25:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலைக்கு அடியில் ஈரானின் ரகசிய அணு உலை; டிரம்ப் எச்சரிக்கையால் அச்சத்தில் உலகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-secret-nuclear-facility-beneath-the-mountain-1789032264"></link>
            <id>https://canadamirror.com/article/iran-secret-nuclear-facility-beneath-the-mountain-1789032264</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈரானின் நட்டாண்ஸ் அணுஉலை மையத்திற்கு அருகே அமைந்துள்ள ‘பிக்ஆக்ஸ் மலை’ (Pickaxe Mountain) என்ற மிகவும் சக்திவாய்ந்த நிலத்தடி அணுஆயுதத் தளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈரானின் நட்டாண்ஸ் அணுஉலை மையத்திற்கு அருகே அமைந்துள்ள ‘பிக்ஆக்ஸ் மலை’ (Pickaxe Mountain) என்ற மிகவும் சக்திவாய்ந்த நிலத்தடி அணுஆயுதத் தளத்தின் மீது அமெரிக்கப் படைகள் மிக விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும் என 


 டிரம்ப் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

ஈரான் தனது அணுஆயுதத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கிரானைட் பாறைகளுக்கு அடியில் 300 அடிக்கும் அதிகமான ஆழத்தில் ‘பிக்ஆக்ஸ்’ நிலத்தடிப் சுரங்கப் பாதையை அமைத்து அதில் ஆயிரக்கணக்கான அதிநவீன சென்ட்ரிஃபியூஜ்களை மாற்றி அமைத்துள்ளதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9910475-09c5-43c2-8487-886c761e08b8/26-6aa27749d8ace.webp' /></p><h2>அமெரிக்கப் படைகள் மிகக் கொடூரமாகத் தாக்கி அழிக்கும்</h2><p>
</p><p>
 மேலும், அங்குச் சந்தேகத்திற்கிடமான அணுசக்தி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை அமெரிக்கச் செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
</p><p>
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “ஈரானைப் பற்றியும் பிக்ஆக்ஸ் மலையில் யார் யாருடைய நடமாட்டம் இருக்கிறது என்பதையும் நாங்கள் உளவு அமைப்புகள் மூலம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். </p><p>ஈரான் எந்தவொரு சூழ்நிலையிலும் அணுஆயுதம் தயாரிப்பதை அனுமதிக்க முடியாது. அங்கே ஏதேனும் அணுசக்தி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டால், மிக விரைவில் பிக்ஆக்ஸ் தளத்தை அமெரிக்கப் படைகள் மிகக் கொடூரமாகத் தாக்கி அழிக்கும்” என எச்சரித்துள்ளார்.</p><p>

அமெரிக்காவின் இந்த அதிரடி அச்சுறுத்தலுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் நாடாளுமன்றப் பிரதிநிதிகள், உலகின் மிகவும் பலமாகப் பாதுகாக்கப்பட்ட அணுஆயுதத் தளமான பிக்ஆக்ஸ் மலை மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியத்தையும் போர்க் களமாக மாற்றிவிடும் என எச்சரித்துள்ளனர்.
</p><p>
இந் நிலையில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடரும் இந்த மோதல் போக்கால் சர்வதேச அளவில் அணுஆயுதப் போர் அபாயம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T13:11:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/4-members-same-family-killed-israeli-attack-gaza-1789041922"></link>
            <id>https://canadamirror.com/article/4-members-same-family-killed-israeli-attack-gaza-1789041922</id>
            <summary type="text">&amp;nbsp; காசாவின் பெய்த் லஹியா பகுதியில் இன்று அதிகாலை இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காசாவின் பெய்த் லஹியா பகுதியில் இன்று அதிகாலை இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>



உயிரிழந்தவர்களில் 8 மற்றும் 12 வயதுடைய இரு குழந்தைகளும் அடங்குவதாக பாலஸ்தீனிய மருத்துவ மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c58769de-e7a8-4769-94e9-c6c77bfd3527/26-6aa29d040d3d0.webp' /></p><p> 



தாக்குதலில் வீடு ஒன்று சேதமடைந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் மோசமாக சிதைந்த நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 



சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p> 



இதேவேளை, ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு சரணடையும் வரை போரில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-10T12:02:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிமலை வெடிப்பை படம் பிடிக்கச் சென்ற 08 பேர் மாயம் ; இறுதியாக வந்த குறுஞ்செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/8-missing-after-filming-volcanic-eruption-1789038485"></link>
            <id>https://canadamirror.com/article/8-missing-after-filming-volcanic-eruption-1789038485</id>
            <summary type="text">இந்தோனேஷியாவில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 08 நடுக்கடலில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேஷியாவில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 08 நடுக்கடலில் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>

இந்தோனேஷியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே உள்ள சுண்டா நீரிணை பகுதியில் உள்ள 'அனக் கிரகடாவ்' என்ற எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:53 மணிக்கு வெடித்து சிதறியது.</p><p>

இந்நிலையில், வெடிப்புச் சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 05 புகைப்பட ஊடகவியலாளர்கள், 02 ஊழியர்கள் மற்றும் வழிகாட்டி உட்பட 08 பேர் நடுக்கடலில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.</p><p>

கடந்த திங்கட்கிழமை மாலை எரிமலைப் பகுதியை அடைந்துவிட்டதாக அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திக்குப் பின்னர் இதுவரை அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், காணாமல் போனவர்கள் முன்னணி செய்தி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ள நிலையில் நடுக் கடலில் மாயமான ஊடகவியலாளர்களைத் தேடும் பணியில் இந்தோனேஷிய கடலோரப் பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-10T11:08:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை மாளிகை பெண் உதவியாளர்களுக்கு லட்சக்கணக்கான பணத்தை பரிசாக வழங்கிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-gifts-white-house-aides-millions-in-cash-1789033551"></link>
            <id>https://canadamirror.com/article/trump-gifts-white-house-aides-millions-in-cash-1789033551</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் தனது 3 பெண் உதவியாளர்களுக்கு கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாகப் பெருந்தொகையை வழங்கியுள்ளது தெரியவந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் தனது 3 பெண் உதவியாளர்களுக்கு கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாகப் பெருந்தொகையை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது
</p><p>
வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்துள்ள ஆண்டு சொத்து விவர அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08043e87-27f1-48f3-997c-27ffd9627ccf/26-6aa27c511c4f0.webp' /></p><p>
</p><p>
வெள்ளை மாளிகையின் சிறப்பு மற்றும் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றும் நட்டாலி ஹார்ப், ஊடக ஆலோசகர் மார்கோ மார்ட்டின் மற்றும் ஓவல் அலுவலக துணை இயக்குனர் சேம்பர் லெய்ன் ஹாரிஸ் ஆகிய மூவருக்கும் இந்திய மதிப்பில் தலா ரூ.45 லட்சத்தை டிரம்ப் ரொக்கமாக வழங்கியுள்ளார்</p><p>

வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி இவர்கள் மூவரும் ஆண்டுக்கு தலா ரூ.1.35 கோடி சம்பளமாக பெற்று வருகின்றனர். ரூ.45 லட்சம் பரிசுத்தொகை அவர்களின் ஆண்டுச் சம்பளத்தில் சுமார் 30 சதவீதத்திற்கு சமமாகும்.
</p><p>&nbsp;விளக்கம்
பரிசுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
</p><p>
ட்ரம்ப் தொழில் அதிபராக இருந்த காலத்திலிருந்தே, தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் காலத்தில் சொந்தப் பணத்திலிருந்து பரிசுகளை வழங்குவது அவரது வழக்கமான ஒன்றாகும்.</p><p>

இந்தப் பரிசுகள் முழுமையாகவும் அவரது சொந்த நிதியிலிருந்தே வழங்கப்பட்டுள்ளன. அரசுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T09:46:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் ; முடிவுக்கு வரும் ஈரான் போர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/happy-news-announced-by-donald-trump-1789009998"></link>
            <id>https://canadamirror.com/article/happy-news-announced-by-donald-trump-1789009998</id>
            <summary type="text">எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>

டெக்சாஸ் செல்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abee4bb2-817f-4279-9930-5e0230e25678/26-6aa220505cea2.webp' /></p><p> 

ஈரானால் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால், தேர்தலுக்குப் பிறகு உடனடியாக போர் முடிவுக்கு வரும் என நான் நினைக்கிறேன் என்று ட்ரம்ப் கூறினார்.</p><p> 

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி தனது சொந்த குடியரசுக் கட்சிக்குள்ளிருந்தே அழுத்தத்தை எதிர்நோக்கி வருவதுடன் அவருக்கான கருத்துக் கணிப்பு ஆதரவும் குறைந்து வருகின்றது. </p><p>

பெப்ரவரியில் போர் தொடங்கியதிலிருந்து, இந்த மோதல் எப்போது முடிவடையும் என்பது குறித்து ட்ரம்ப் பல்வேறு காலக்கெடுவை முன்பு அளித்திருந்தார். </p><p>

ஆனால், போர் தொடர்ந்தும் நீடித்து வருவதால் ட்ரம்ப் மீது பல்வேறு விமர்சனங்கள் நேரடியாகவே எழுந்துள்ளன. 

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள மோதல்கள் காரணமாக, நேற்றைய தினம் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலரை கடந்து விற்பனையாகின்றது. </p><p>

இது கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஏற்பட்ட பாரிய அதிகரிப்பாகும்.</p><p> 

ஈரான் போர் சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்க நேரப்படி இன்றைய தினம் குடியரசுக் கட்சி மாநாட்டில் ட்ரம்ப் சிறப்புரை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-10T09:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடைத்தேர்தலை முன்னிட்டு 5,000 டொலர் ; ட்ரம்பின் வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-5-000-promise-ahead-of-the-by-election-1789023481"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-5-000-promise-ahead-of-the-by-election-1789023481</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியினர் காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டால் ஒவ்வொரு அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியினர் காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டால் ஒவ்வொரு அமெரிக்க வயது வந்தவருக்கும் 5,000 டொலர் உதவித் தொகை வழங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (09) கூறியுள்ளார். </p><p>

இது, வாக்காளர்களைத் தனது கட்சிக்கு ஆதரவளிக்கச் சம்மதிக்க வைப்பதற்கான ஒரு அசாதாரண முயற்சியாகும்.

 தனது குடியரசுக் கட்சியின் முதலாவது இடைக்கால மாநாட்டில் ட்ரம்ப் இக்கோரிக்கையை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aca8c9c-44f0-4372-ab8c-82d36dfed7e2/26-6aa254fb313f9.webp' /></p><p>
</p><p>
ஆனால், இந்தத் தொகையை வழங்குவது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்றோ அல்லது அது சட்டப்பூர்வமானதாக இருக்குமா என்றோ உடனடியாகத் தெரியவரவில்லை.</p><p> 

அமெரிக்காவில் சுமார் 270 மில்லியன் வயது வந்தோர் உள்ள நிலையில், இத்திட்டத்தைச் செயல்படுத்த ஏறக்குறைய 1.35 டிரில்லியன் டொலர் செலவாகும்.

 ஈரான் போர் விடயத்தில் மக்கள் மத்தியில் ட்ரம்பின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T09:08:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[132 ஆண்டு பதிவாகாத சூடு; வெப்பத்தால் தவிக்கும் அமெரிக்க மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/132-years-americans-suffering-from-the-heatwave-1789030156"></link>
            <id>https://canadamirror.com/article/132-years-americans-suffering-from-the-heatwave-1789030156</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடைக்காலம், 132 ஆண்டுகால வானிலைப் பதிவுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான கோடையாகப் பதிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடைக்காலம், 132 ஆண்டுகால வானிலைப் பதிவுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான கோடையாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration - NOAA) தகவலின்படி, நாட்டின் தொடர்ச்சியான 48 மாநிலங்களில் சராசரி வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abbcf945-b170-4587-8de9-fa2902778152/26-6aa26f0da936a.webp' /></p><h2>அமெரிக்காவின் பல பகுதிகளில் வறட்சி</h2><p>
</p><p>
இது 20ஆம் நூற்றாண்டின் சராசரியை விட 1.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். </p><p>மேலும், கடந்த ஆகஸ்ட் மாதமும் இதுவரை பதிவான மிகவும் வெப்பமான ஆகஸ்ட் மாதமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அதேவேளை, கடும் வெப்பத்துடன் அமெரிக்காவின் பல பகுதிகளில் வறட்சியும் தீவிரமடைந்துள்ளது. செப்டம்பர் 1ஆம் திகதி நிலவரப்படி, நாட்டின் சுமார் 59 சதவீதப் பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
</p><p>
குறிப்பாக, டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் மாத மழைவீழ்ச்சி வழக்கத்தைவிட 30 சதவீதத்திற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் உலகளவில் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்திலும் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை நிலவும் என NOAA கணித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T08:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூபெக் மாகாணத்தில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்த இந்திய குடும்பம் இந்தியா திரும்பியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/quebec-family-forced-to-return-india-after-8-years-1789027881"></link>
            <id>https://canadamirror.com/article/quebec-family-forced-to-return-india-after-8-years-1789027881</id>
            <summary type="text">Quebec family forced to move back to India after 8 years: கியூபெக் மாகாணத்தில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்த இந்திய குடும்பம் ஒன்று இந்தியா திரும்பும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Quebec family forced to move back to India after 8 years: கியூபெக் மாகாணத்தில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்த இந்திய குடும்பம் ஒன்று இந்தியா திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>



இந்தியாவில் தனது உயிருக்கு ஆபத்து என்பதால் கனடாவில் புகலிடம் கோரினார் இந்தியர் ஒருவர்.

ஆனால், எட்டு ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்துவந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியா திரும்பும் நிலை அவரது குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்தியாவில், அரசியல் உள்நோக்கம் காரணமாக பொலிசாரால் கைது செய்யப்பட்டு அடித்து உதைக்கப்பட்டதால், உயிருக்குத் தப்பி தன் குடும்பத்துடன் கனடா சென்றுள்ளார் ஹரிஷ் குமார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8ede495-f03a-4589-a5af-203ae83427ec/26-6aa2662a92e25.webp' /></p><p>
2018ஆம் ஆண்டிலிருந்து இதுவரை குமார், அவரது மனைவி சோனிகா, பிள்ளைகள் ஜபேஷ் மற்றும் கௌலாஷ் ஆகியோர் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் வாழ்ந்துவந்தார்கள்.
</p><p>
இந்நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் குமார் குடும்பம் கனடாவிலிருந்து வெளியேறவேண்டும் என, ஆகத்து மாதம் 4ஆம் திகதி, அவருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
</p><p>
அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி குடும்பத்துடன் கனடாவிலிருந்து வெளியேறவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
எதனால் இப்படி திடீரென ஒரு முடிவு என விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், வளவளவென, புரிந்துகொள்ள முடியாத நீண்ட வாக்கியங்களுடன் ஒரு கொள்கை விளக்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது கனடா எல்லை ஏஜன்சி.</p><p>

இதற்கிடையில், குமார் குடும்பம் இந்தியாவுக்கு விமானம் ஏறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இதற்கிடையில், கியூபெக் மாகாணம் வெளிநாட்டவர்களை வெளியேற்றுவதில் மும்முரமாக இறங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>
ஆம், ஏனென்றால், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், மொத்த கனடாவிலிருந்தும் வெளியேற்றப்பட்டவர்களில் பாதி பேர் கியூபெக் மாகாணத்திலிருந்துதான் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T08:11:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் வாகனங்கள், மதுபானங்கள் பால் பொருள்களுக்கு அமெரிக்கா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-bans-canadian-cars-alcohol-and-dairy-1789025357"></link>
            <id>https://canadamirror.com/article/us-bans-canadian-cars-alcohol-and-dairy-1789025357</id>
            <summary type="text">கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு இருசக்கர வாகனங்கள், மதுபானங்கள் மற்றும் பால்பொருள்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இத்தடை வரும் இம்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு இருசக்கர வாகனங்கள், மதுபானங்கள் மற்றும் பால்பொருள்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. </p><p>இத்தடை வரும் இம்மாதம் 29 முதல் முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe633f24-f03f-4083-beaa-a3763e7103f6/26-6aa25c4e70638.webp' /></p><h2>வா்த்தகப் பேச்சுகள்&nbsp;</h2><p>

இரு நாடுகளுக்கும் இடையே பல சுற்றுகளாக நடைபெற்ற வா்த்தகப் பேச்சுகள் எவ்வித உடன்பாடுமின்றி தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, கனடாவின் சுமாா் 2,000 கோடி டாலா் மதிப்பிலான பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீத கூடுதல் வரியை விதித்திருந்தது.


</p><p>இதையடுத்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, மரச்சாமான்கள் உள்ளிட்ட 2,000 கோடி டாலா் மதிப்பிலான பொருள்களுக்கு கனடா 15 முதல் 50 சதவீதம் வரை விதித்த பதிலடி வரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன. </p><p>இதன்தொடா்ச்சியாக, அமெரிக்கா தற்போது இந்த இறக்குமதித் தடையை அறிவித்துள்ளது.

கனடா மீதான பொருளாதார அழுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறாா். </p><p>புத்தாண்டு முதல் கனடா வாகனங்கள் மீதான வரியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயா்த்தவுள்ளதாக அவா் அச்சுறுத்தியுள்ளாா்.
</p><p>
மேலும், கனடாவின் ‘பம்பாா்டியா்’ தனியாா் விமானங்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தியைத் தொடங்காவிட்டால் அவற்றுக்குத் தடை விதிக்கப்படும் எனவும், அரசு கொள்முதல் பட்டியலிலிருந்து கனடா பொருள்களை உடனடியாக நீக்குமாறும் உத்தரவிட்டுள்ளாா்.</p>]]></content>
            <updated>2026-09-10T07:29:46+00:00</updated>
        </entry>
    </feed>
