<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-27T21:45:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளவில் விசா நேர்காணல்களை நிறுத்தியது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-suspends-visa-interviews-worldwide-1787864587"></link>
            <id>https://canadamirror.com/article/us-suspends-visa-interviews-worldwide-1787864587</id>
            <summary type="text">உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

 

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
</p><p>
 

இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், குடியேற்ற கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c2a50e-6045-4cff-81f8-2e70ad0ef667/26-6a90a60d91150.webp' /></p><p> </p><p>மாணவர்கள், வேலை பார்ப்போர், வர்த்தகம், சுற்றுலா என பல விசாக்களில் கடும் விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார்.</p><p>



அந்த வகையில் சுற்றுலா அல்லது வணிகத்திற்காக வந்து, அகதி அந்தஸ்து கோரியுள்ள, 2 இலட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.</p><p>



இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்கள் மற்றும் துாதரக அலுவலகங்களில் விசா நேர்காணல்கள் நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>


அமெரிக்க அரசு வழங்கும் நலத்திட்டங்களைச் சார்ந்து வாழும் வாய்ப்புள்ள விண்ணப்பதாரர்களை கண்டறிந்து நிராகரிப்பது மற்றும் விசா விண்ணப்பங்களை மிகவும் தீவிரமாகவும், ஒரே மாதிரியாகவும் ஆய்வு செய்வது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



நேர்காணல் எப்போது மீண்டும் தொடங்கும் என்ற விபரத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிடவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-27T21:03:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-toll-rises-after-nepal-flash-floods-1787852565"></link>
            <id>https://canadamirror.com/article/death-toll-rises-after-nepal-flash-floods-1787852565</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சில மணி நேரங...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் மரண எண்ணிக்கை 359 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 389 ஆக உயர்ந்துள்ளது</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d79db142-6087-4a71-b9a0-4dbaa0a78c45/26-6a90771722bdd.webp' /></p><p style="text-align: justify; ">இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வரும் நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா, நேபாள இராணுவம், ஆயுதப் பொலிஸ் படை மற்றும் தேசிய பொலிஸைச் சேர்ந்த 13,000க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

இன்றைய தினத்தில் மட்டும் வான்வழியாக 573 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

உயிர்களைக் காப்பாற்றுதல், காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றுக்கே அரசாங்கம் முதன்மை முக்கியத்துவம் அளிப்பதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-27T17:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புரட்டிப்போட்ட பேரழிவு; நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/disaster-1-400-people-missing-nepal-china-border-1787835381"></link>
            <id>https://canadamirror.com/article/disaster-1-400-people-missing-nepal-china-border-1787835381</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயமான நிலையில் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கபப்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கு நேபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயமான நிலையில் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கபப்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
வடக்கு நேபாளத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பலரும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dd20ade-6f69-4538-b34f-f1d94fb7b3c2/26-6a9033f88c8a9.webp' /></p><h2>&nbsp;500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்</h2><p> </p><p>

பல வீடுகளும் கட்டிடங்களும், வாகனங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><p>
 
அதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள்.</p><p>

 தமிழகத்திலிருந்து சுற்றுலாவுக்கு சென்ற 83 பேர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது.</p><p>

ஒருபக்கம் நேபாளம் - சீன எல்லையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 1400 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>

அந்த வகையில் நேபாளத்தில் 500 வெளிநாட்டினர் உட்பட 826 பேரும், சீனாவில் 260 வெளிநாட்டினர் உட்பட 558 பேரும் மாயமாகியிருப்பதாக அந்தந்த நாட்டு அரசுகள் அறிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-27T17:25:33+00:00</updated>
        </entry>
    </feed>
