<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-16T21:36:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சார ஸ்கூட்டர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/e-scooters-are-becoming-faster-amid-safety-1789569887"></link>
            <id>https://canadamirror.com/article/e-scooters-are-becoming-faster-amid-safety-1789569887</id>
            <summary type="text">மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வருவதாகக் கூறி, சர்வதேச அளவில் தீவிர பாதுகாப்பு கவலைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வருவதாகக் கூறி, சர்வதேச அளவில் தீவிர பாதுகாப்பு கவலைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. </p><p>
அண்மைய புள்ளிவிவரங்களின்படி, மின்சார ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தும்போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. </p><p>
இதில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருமே பாதிக்கப்படுகின்ற போதிலும், 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தீவிர காயமடையும் சம்பவங்கள் கிட்டத்தட்ட மும்மடங்காக உயர்ந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03a36ce4-99d5-41f0-a321-5f6bdcd05859/26-6aaaab61175f8.webp' /></p><p> </p><p>
கனடிய சுகாதார தகவல் நிறுவனத்தின் தரவுகளின்படி, ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில் மின்சார ஸ்கூட்டர் விபத்துகள் தொடர்பாக 837 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>
மேலும், 2025 ஆம் ஆண்டில் மின்சார ஸ்கூட்டர்கள் அல்லது இ-பைக்குகளைப் பயன்படுத்திய 10 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கனடிய குழந்தைகள் நல கண்காணிப்பு திட்டம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.</p><p>
மறுபுறம், மின்சார ஸ்கூட்டர்களின் வேகம் கணிசமாக அதிகரித்து வருவதே விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என நுகர்வோர் அமைப்பான 'கான்ஸியூமர் ரிப்போர்ட்ஸ்' (Consumer Reports) நடத்திய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>
2022-இல் மணிக்கு 25 கி.மீ ஆக இருந்த ஸ்கூட்டர்களின் சராசரி வேகம், 2026-இல் மணிக்கு 32 கி.மீ ஆக உயர்ந்துள்ளது. தாம் சோதித்த 13 மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றைக் கூடப் பயன்படுத்தப் பரிந்துரைக்கவில்லை என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.</p><p> 
சோதனை ஓட்டத்தின்போதே இரண்டு அனுபவமிக்க ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டை இழந்து காயமடைந்தனர். பிரேக் பிடிக்கும் போது ஓட்டுநரின் உடல் எடை இயல்பாகவே முன்பக்க சக்கரத்திற்கு மாறுவதால், பின்பக்க சக்கரத்தின் பிடிமானம் குறைந்து வளைவுகளில் வாகனம் சறுக்கி விபத்து ஏற்படுவதாக வல்லுநர்கள் விளக்கமளிக்கின்றனர்.
</p><p>இந்த விபத்துகளில் இருந்து தப்பிக்கத் தலைக்கவசம் (Helmet), முழங்கால் மற்றும் மணிக்கட்டு கவசங்களை அணிவது மிகவும் அவசியமாகும். குறிப்பாக, மூளையில் ஏற்படும் தீவிர காயங்களைத் தடுக்க தலைக்கவசம் கட்டாயம் என மருத்துவர் ரோசன்ஃபீல்ட் வலியுறுத்துகிறார்.
</p><p> அதேபோல, 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மின்சார ஸ்கூட்டர்களை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், எந்த வயதினராக இருந்தாலும் வேகத்தைக் குறைத்து, ஹெட்போன் மற்றும் மொபைல் போன்களைத் தவிர்த்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. </p><p>
ஒன்டாரியோ போன்ற இடங்களில் பொதுச் சாலைகள், நடைபாதைகள் மற்றும் சைக்கிள் பாதைகளில் மின்சார ஸ்கூட்டர்களை ஓட்ட சட்டப்படி அனுமதியில்லை என்ற போதிலும் பலர் அதை மீறி வருகின்றனர். எனவே, சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதே விபத்துகளைக் குறைக்க உதவும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T19:18:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஸாவில் திடீரென இடிந்து விழுந்த 7 மாடிக் கட்டடம் ; 5 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/20-killed-after-residential-buildin-collapses-gaza-1789586265"></link>
            <id>https://canadamirror.com/article/20-killed-after-residential-buildin-collapses-gaza-1789586265</id>
            <summary type="text">காஸாவில் இஸ்ரேலின் போர்த் தாக்குதல்களால் சேதமடைந்த 7 மாடிக் குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், 5 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸாவில் இஸ்ரேலின் போர்த் தாக்குதல்களால் சேதமடைந்த 7 மாடிக் குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், 5 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>



இந்தச் சம்பவம் இன்று (16) அதிகாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f572298-fab5-438b-911a-2f178c8aa718/26-6aaaeb5b3f743.webp' /></p><p>இதேவேளை, கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காஸாவின் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>


இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>


போதிய மீட்பு உபகரணங்கள் இல்லாமை மற்றும் இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இஸ்ரேலின் தொடர்ச்சியான போர்த் தாக்குதல்களால் காஸாவில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகளின்றி சேதமடைந்த கட்டடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T19:17:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடானில் தங்கச் சுரங்கம் விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/60-killed-in-gold-mine-accident-in-sudan-1789585881"></link>
            <id>https://canadamirror.com/article/60-killed-in-gold-mine-accident-in-sudan-1789585881</id>
            <summary type="text">ஆபிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 60 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேற்கு கோர்டோபன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 60 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


மேற்கு கோர்டோபன் மாகாணத்தில் எல்-நஹூத் நகருக்கு அருகில் அமைந்துள்ள அல்-சாரா தங்கச் சுரங்கமே நேற்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87fa0b04-6752-49cb-9783-6041986bf874/26-6aaae9dab7f0f.webp' /></p><p>


விபத்தைத் தொடர்ந்து சக தொழிலாளர்கள் தங்களிடமிருந்த கருவிகளைப் பயன்படுத்தி, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டுள்ளனர்.</p><p> எனினும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பாறைகள் மற்றும் மண்ணை அகற்றுவதற்கு கனரக இயந்திரங்கள் தேவைப்படுவதாக அங்கிருந்து தப்பிய தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>இதனால் மீட்புப் பணிகள் சிரமமடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.



சுரங்கங்கள் மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டிருப்பதே இதுபோன்ற சுரங்க விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், 2023ஆம் ஆண்டு முதல் சூடானில் நீடித்து வரும் உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, வாழ்வாதாரத்துக்காக பலர் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T19:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் வேலைக்கு ஆபத்தா? ; AI பற்றி Sam Altman சொன்ன அந்த அதிர்ச்சி உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/is-your-job-at-risk-sam-altman-revealed-about-ai-1789585537"></link>
            <id>https://canadamirror.com/article/is-your-job-at-risk-sam-altman-revealed-about-ai-1789585537</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவான AI-யின் எதிர்கால வளர்ச்சி மற்றும் அது மனிதர்களின் பணிபுரியும் முறையில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள் குறித்து OpenAI நிறுவனத்தின் தலைமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவான AI-யின் எதிர்கால வளர்ச்சி மற்றும் அது மனிதர்களின் பணிபுரியும் முறையில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள் குறித்து OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><p>அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஓராண்டில் AI மற்றும் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சாம் ஆல்ட்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e1875e0-09f9-4c57-9b1f-5c3edaa9a8d9/26-6aaae88321b9e.webp' /></p><p>

மனிதர்கள் கணினிகளுடன் நேரடியாக உரையாடும் நிலை தற்போது உருவாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இது ஒரு திரைப்படத்திற்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும், அறிவியல் புனைகதை நிஜமாக மாறியதைப் போன்ற தோற்றத்தைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், சாதாரண உரையாடலுக்கு அப்பாற்பட்டு, கணினிகளைப் பயன்படுத்தும் விதத்தையும், மனிதர்கள் பணிபுரியும் முறையையும் முற்றிலும் மாற்றியமைக்கக்கூடிய “மூன்றாம் கட்டத்திற்குள்” தற்போது நுழைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இணையம் ஆரம்பகாலத்தில் அறிமுகமானபோது மக்கள் அதனை எவ்வாறு படிப்படியாக ஏற்றுக்கொண்டார்களோ, அதேபோன்று தற்போதைய AI வளர்ச்சியையும் மக்கள் இயல்பாக ஏற்றுக்கொண்டு வருவதாக சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மனிதர்களின் பணிபுரியும் பழக்கவழக்கங்களில் இயல்பான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு காலம் தேவைப்படுவதால், இந்த புதிய தொழில்நுட்பத்துடன் பழகுவதற்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கும் சிறிது காலம் எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
எனினும், இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிபுரியும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படக்கூடும் என்றும், மனிதர்கள் வேலை செய்வதற்கு முற்றிலும் புதியதொரு முறை உருவாகும் சாத்தியம் உள்ளதாகவும் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-16T19:05:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/small-plane-makes-emergency-landing-1789576600"></link>
            <id>https://canadamirror.com/article/small-plane-makes-emergency-landing-1789576600</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் நகருக்குக் கிழக்கே, பரபரப்பான நெடுஞ்சாலையின் நடுவே சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் நகருக்குக் கிழக்கே, பரபரப்பான நெடுஞ்சாலையின் நடுவே சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
ஸ்ட்ராத்கோனா கவுண்டியில் உள்ள நெடுஞ்சாலை 16 மற்றும் பேஸ்லைன் வீதிக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலை 21-ன் தெற்கு நோக்கிய பாதையில் 'செஸ்னா 172' ரக விமானம் திடீரென அவசரமாகத் தரையிறங்கியது.
</p><p>விமானம் நெடுஞ்சாலையின் பாதையை மறித்து நின்றதால், மீட்புக் குழுவினர் அந்த இடத்தை முழுமையாகச் சீரமைக்கும் வரை காவல்துறையினர் போக்குவரத்தை மாற்றுப் பாதைகளில் திருப்பி விட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ac4c2db-1123-485c-b1b2-a0267d2d30fb/26-6aaac599b9c98.webp' /></p><p>
</p><p>விமானம் தரையிறக்கப்பட்ட சமயத்தில் அதில் இருவர் இருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>நெடுஞ்சாலையில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p>
செஸ்னா 172 ஸ்கைஹாக் என்பது பொதுவாக விமான ஓட்டுநர் பயிற்சி பெறும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானமாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T16:52:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இணைய வழி சூதாட்டத்தினால் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/more-ontarians-with-gambling-disorders-1789575917"></link>
            <id>https://canadamirror.com/article/more-ontarians-with-gambling-disorders-1789575917</id>
            <summary type="text">2022-இல் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஆன்லைன் சூதாட்டச் சந்தை தனியார் நிறுவனங்களுக்கு விரிவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, சூதாட்ட அடிமைத்தனக் கோளாறு காரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>2022-இல் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஆன்லைன் சூதாட்டச் சந்தை தனியார் நிறுவனங்களுக்கு விரிவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, சூதாட்ட அடிமைத்தனக் கோளாறு காரணமாக மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காக (99%) அதிகரித்துள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. </p><p>
இதில் குறிப்பாக 10 முதல் 29 வயதுடைய இளம் ஆண்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>வட யார்க் பொது மருத்துவமனையின் குடும்ப மற்றும் சமூக மருத்துவ ஆராய்ச்சித் தலைவரும், இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான டாக்டர் டேனியல் மைரன் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/591e1058-7c48-4842-84a5-a9ddaea54744/26-6aaac2f3be62c.webp' /></p><p>
</p><p>ஆன்லைன் சூதாட்டம் அறிமுகமான உடன் திடீர் உயர்வு ஏற்படவில்லை என்றாலும், காலப்போக்கில் படிப்படியாக அதிகரித்து தற்போது 99 சதவீத உயர்வை எட்டியுள்ளது என்றார்.
</p><p>விளையாட்டுப் பந்தயங்கள் மற்றும் அவற்றை மையமாகக் கொண்ட தீவிர விளம்பர உத்திகள் குறிப்பாக இளம் ஆண்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. </p><p>மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் போது உடனுக்குடன் பந்தயம் கட்டும் வசதிகள் போன்றவை இளைஞர்களை இதன் பக்கம் சுலபமாக ஈர்க்கின்றன.
</p><p>சூதாட்டப் பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் சமூகப் பழியுரைக்கு அஞ்சித் தொடக்கத்திலேயே சிகிச்சை பெற முன்வருவதில்லை. உடல்நலமும் சமூக வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பின்னரே அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவை நாடுகின்றனர்.</p><p>
சூதாட்டக் கோளாறுகளுக்காக அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்தவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் மனநலப் பிரச்சினைகள் அல்லது தீவிர போதைப்பொருள் பயன்பாட்டினாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். </p><p>அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மருத்துவமனையில் உள்நோயாளிகளாகவே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இத்தகைய கடுமையான சூதாட்ட அடிமைத்தனத்திற்கு உள்ளானவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் மற்றும் தீவிர மனநலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் மிகவும் அதிகம் என்பதால், உடனடி கட்டுப்பாடுகளும் விழிப்புணர்வும் அவசியமாகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T16:33:37+00:00</updated>
        </entry>
    </feed>
