<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-27T09:48:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் விமான ஓடுபாதைக்குள் சொகுசு வாகனம் விபத்து: சாரதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-arrested-after-driving-motorhome-onto-1785135908"></link>
            <id>https://canadamirror.com/article/man-arrested-after-driving-motorhome-onto-1785135908</id>
            <summary type="text">கனடாவின் விமான ஓடுபாதை ஒன்றில் சொகுசு வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள அபோட்ஸ்போர்டு சர்வதேச விமான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் விமான ஓடுபாதை ஒன்றில் சொகுசு வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள அபோட்ஸ்போர்டு சர்வதேச விமான நிலையத்தில், நபர் ஒருவர் தனது சொகுசு வாகனத்தை பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த விமான ஓடுபாதைக்குள் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>
சனிக்கிழமை மாலை சுமார் 4:30 மணியளவில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b47890f7-85ee-4f05-beea-eaa9f2634df6/26-6a670325db731.webp' /></p><p> </p><p>
பாதுகாப்பு வேலி உடைந்தவுடன் விமான நிலைய ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டனர். மேலும், அங்கு இயங்கிக் கொண்டிருந்த பிற விமானங்களைப் பாதுகாப்பாக வேறு வழிகளில் திருப்பிவிட விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் விரைந்து நடவடிக்கை எடுத்தது. </p><p>
இச்சம்பவத்தால் விமான நிலையச் செயல்பாடுகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்ட போதிலும், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பியது. </p><p>அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 
இச்சம்பவம் தொடர்பாக 53 வயதுடைய நபர் ஒருவரைக் காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். </p><p>
இது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், ஓட்டுநர் போதையில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.</p><p>
இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T09:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித மலத்தில் இருந்து மருந்து !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/uk-poop-pills-stool-to-combat-superbugs-infection-1785143014"></link>
            <id>https://canadamirror.com/article/uk-poop-pills-stool-to-combat-superbugs-infection-1785143014</id>
            <summary type="text">&amp;nbsp; ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத &#039;சுப்பர் பக்டீரியா&#039; தொற்றுகளுக்கு எதிராக புதிய சிகிச்சை முறையாக &quot;மல நுண்ணுயிர் உறையுறைகள்&quot; (Poop Pi...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத 'சுப்பர் பக்டீரியா' தொற்றுகளுக்கு எதிராக புதிய சிகிச்சை முறையாக "மல நுண்ணுயிர் உறையுறைகள்" (Poop Pills) பயன்படுத்தும் ஆய்வு இங்கிலாந்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>

இந்தச் சிகிச்சைக்காக, ஆரோக்கியமான நபர்களின் மலத்தில் உள்ள பயனுள்ள குடல் நுண்ணுயிரிகள் (Gut Microbiome) சுத்திகரிக்கப்பட்டு, உறையவைக்கப்பட்டு உறையுறை (Capsule) வடிவில் தயாரிக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26bdea3c-1a80-4e97-8c5c-89dca7c34cde/26-6a671ee7ddbf6.webp' /></p><p>
</p><p>
இந்த உறையுறைகள், நோயாளிகளின் குடல் நுண்ணுயிர் சமநிலையை மீட்டெடுத்து, ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட ஆபத்தான பக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
ஆரம்பகட்ட மருத்துவ ஆய்வுகளில், இந்தச் சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், இதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை முழுமையாக உறுதிப்படுத்த மேலும் விரிவான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, இந்த ஆய்வு வெற்றியடைந்தால், ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட தொற்றுநோய்களுக்கு எதிரான சிகிச்சைத் துறையில் இது முக்கிய முன்னேற்றமாக அமையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-27T09:42:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் தப்பியோடிய கைதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/escaped-thunder-bay-prisoner-arrested-1785138224"></link>
            <id>https://canadamirror.com/article/escaped-thunder-bay-prisoner-arrested-1785138224</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், தண்டர் பே சீர்திருத்த மையத்தில் இருந்து தப்பியோடிய 65 வயது கைதியைத் தண்டர் பே காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், தண்டர் பே சீர்திருத்த மையத்தில் இருந்து தப்பியோடிய 65 வயது கைதியைத் தண்டர் பே காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்துள்ளனர். </p><p>
சிறையிலிருந்து தப்பிய கைதி ஆந்தனி பேட்ரிக் என அடையாளம் காணப்பட்டார்.</p><p>
ஜூலை 24ம் திகத சிறையிலிருந்து தப்பியதாகத் தகவல் வெளியான நிலையில், தகவல் வெளியான சுமார் 9½ மணி நேரத்தில் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6740d320-a608-40a9-9539-bad5f1e96784/26-6a670c320deba.webp' /></p><p>சிறை நிர்வாகம் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். </p><p>
தேடுதல் வேட்டையின் போது, நகரின் தெற்குப் பகுதி மற்றும் நெடுஞ்சாலை 61 வழித்தடத்தில் பயணிக்கும் வாகன சாரதிகள், அந்நியர்களுக்கு வாகனம் நிறுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர். </p><p>
கைதியைக் கண்டால் நேரடியாக அணுக வேண்டாம் எனவும், உடனடியாக 911 அவசர எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டது.
</p><p>இந்தத் தேடுதல் வேட்டை மற்றும் விசாரணையில் ஒன்டாரியோ மாகாணக் காவல்துறையும் இணைந்து செயல்பட்டது.
</p><p>எனினும், கைதி ஃபிரிஸ்செல் எங்கு வைத்துக் கைது செய்யப்பட்டார், அவர் சிறையிலிருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பான மேலதிக விவரங்களைக் காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. </p><p>இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு உதவி செய்யக் களம் இறங்கும் 200 வெளி மாகாண வீரர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-wildfire-crews-getting-help-from-others-1785136687"></link>
            <id>https://canadamirror.com/article/bc-wildfire-crews-getting-help-from-others-1785136687</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீயின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. 
இதனைக் கட்டுப்படுத்தவும், உள்ளூர் தீயணைப்பு வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீயின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.</p><p> 
இதனைக் கட்டுப்படுத்தவும், உள்ளூர் தீயணைப்பு வீரர்களுக்கு ஓய்வு அளிக்கவும் பிற பகுதிகள் மற்றும் வெளி மாகாணங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்திற்கு வரவுள்ளனர்.
</p><p>கனடாவின் ஆல்பர்ட்டா மற்றும் யூகான் பகுதிகளில் இருந்து பல டஜன் தீயணைப்பு வீரர்கள் இந்த வாரத்திற்குள் வந்து சேரவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b790e35-7c59-47ac-baa1-5c7434a234b6/26-6a670630f3cdd.webp' /></p><p> </p><p>
ஆகஸ்ட் மாத நீண்ட விடுமுறைக்குப் பிறகு, மெக்சிகோவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் உதவிக்காக கனடா வரவுள்ளனர். 
இணைந்து செயல்படுவதன் மூலம் நிலப்பரப்பில் தீயணைப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், இடைவிடாது உழைக்கும் உள்ளூர் வீரர்களுக்குத் தேவையான ஓய்வும் கிடைக்கும்.</p><p> 
மாகாணம் முழுவதும் 145 இடங்களில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதில் 69 தீச்சம்பவங்கள் முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்து எரிகின்றன. 
பாஸ்டன் பார் மற்றும் கிளிண்டன் ஆகிய பகுதிகளில் பல கட்டடங்கள் தீயில் சேதமடைந்துள்ளன.</p><p> பல ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கைகளும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.</p><p> 
தற்போது 974 தீயணைப்பு வீரர்கள், 162 விமான ஆதாரங்கள், 130 கனரக வாகனங்கள் மற்றும் 248 கட்டடப் பாதுகாப்புப் பணியாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். </p><p>
மேலும், காட்டுத்தீ காரணமாகப் பல முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், பயணிகள் வழித்தடங்களைச் சரிபார்த்துப் பயணங்களை மேற்கோள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T08:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்துவோம்; ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/if-the-us-halts-its-attacks-we-will-too-iran-1785129428"></link>
            <id>https://canadamirror.com/article/if-the-us-halts-its-attacks-we-will-too-iran-1785129428</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்தினால் ஈரானும் தமது தாக்குதல்களை நிறுத்தும் என ஈரானிய சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்தினால் ஈரானும் தமது தாக்குதல்களை நிறுத்தும் என ஈரானிய சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. </p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர்கள் தங்களின் தாக்குதல் இலக்குகள் குறைந்து வருவதாகவும், அமெரிக்க ஆயுதக் களஞ்சியம் காலியாகி வருவது குறித்தும் கவலை தெரிவித்ததை அடுத்து, அமெரிக்கா தமது தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2019c8b7-2a47-4920-880d-96061b68593e/26-6a66e9d5d3601.webp' /></p><p> 

ஈரான் மீது 13 இரவுகள் தீவிரமாக அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், வார இறுதி நாட்களில் எவ்வித தாக்குதல்களும் பதிவாகவில்லை. </p><p>

அத்துடன் அமெரிக்கத் தளங்கள் அமைந்துள்ள அண்டை நாடுகள் மீதும் ஈரானும், கடந்த இரண்டு நாட்களாகத் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை. </p><p>

தெஹ்ரானின் நிலைப்பாடு தாக்குதலுக்குத் தாக்குதல் என்பதாகவே தொடர்வதாகவும், தாக்குதல்கள் நின்றால், ஈரானும் தனது நடவடிக்கைகளை நிறுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-27T07:53:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேடிய மாகாணமொன்றில் 12 நாட்களில் 12 விபத்துகள்: பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-police-request-after-12-accident-in-12-days-1785136220"></link>
            <id>https://canadamirror.com/article/canada-police-request-after-12-accident-in-12-days-1785136220</id>
            <summary type="text">கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் 12 நாட்களில் நிகழ்ந்த 12 விபத்துகளில் 17 பேர் பலியாகியுள்ளதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

கனடாவின் சஸ்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் 12 நாட்களில் நிகழ்ந்த 12 விபத்துகளில் 17 பேர் பலியாகியுள்ளதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில், ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையிலான 12 நாட்களில், 12 விபத்துகள் தொடர்பில் தங்களுக்கு அழைப்புகள் வந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.</p><p>

அந்த 12 விபத்துகளில், 17 பேர் பலியாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac605d0b-f630-4f57-8abe-f675df779063/26-6a67045dc74db.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், அந்த விபத்துகளில் பாதிக்கு, மது அல்லது போதைப்பொருள் அருந்திய சாரதிகளே காரணம்!
</p><p>
மது அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டிய சாரதி ஒருவர் ஏற்படுத்திய விபத்தில் தன் 17 வயது மகனான க்வினை இழந்தார் போனி ஸ்டீவென்சன் என்னும் பெண்.</p><p>

யாராவது மது அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவதைக் கண்டால், மக்கள் அவசர உதவியை அழைக்கவேண்டும் என்று கூறும் போனி, நாங்கள் எங்கள் மகனை இழந்துவிட்டோம்.
</p><p>
ஆனால், ஒரு குடும்பத்தில் இப்படி ஒரு இழப்பு ஏற்படுவதால் என்ன நடக்கும் என்பதை, விபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்று எனக்குத் தெரியவில்லை என்கிறார் அவர்.
</p><p>
இந்நிலையில், சாலையில் வாகனம் ஓட்டும் சாரதிகள், பாதுகாப்பு தொடர்பில் சரியான முடிவெடுக்கும்படி பொலிசார் வலியுறுத்தியுள்ளார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T07:14:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க வரி விதிப்புக்கு கனடா பதிலடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/giant-canadian-flag-to-fly-outside-ottawa-city-1785135338"></link>
            <id>https://canadamirror.com/article/giant-canadian-flag-to-fly-outside-ottawa-city-1785135338</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா விதித்துள்ள புதிய வர்த்தக வரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், கனடியர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், ஒட்டாவா நகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா விதித்துள்ள புதிய வர்த்தக வரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், கனடியர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், ஒட்டாவா நகர மண்டபத்தின் வெளிப்புறத்தில் பிரம்மாண்டமான கனடாக் கொடி பறக்கவிடப்படுகிறது.</p><p> 
இது குறித்து ஒட்டாவா நகர மேயர் மார்க் சட்க்ளிஃப் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>
கடந்த 18 மாதங்களில் கனடியர்களின் தேசப்பற்று வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76b136f0-11be-4b33-9e8b-b126d02d99aa/26-6a6700ec1cba1.webp' /></p><p> கனடா மற்றும் ஒட்டாவாவிலுள்ள பல வணிகங்களைப் பாதிக்கும் வகையில் அமெரிக்கா புதிய வரிகளை விதித்துள்ள நிலையில், நமது நகரும் நாடும் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும், நமது நாட்டின் மேப்பிள் இலைக் கொடியை பெருமையுடன் ஏற்றி, மிகவும் வலிமையான, சுதந்திரமான மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான நாட்டை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என அவர் வலியுறுத்தினார்.
</p><p>மேரியன் தேவார் பிளாசாவை நோக்கியுள்ள நகர மண்டபப் பகுதியில் இந்த பிரம்மாண்டக் கொடி வழக்கமாக ஜூலை 1 'கனடா தினத்தில்' மட்டுமே ஏற்றப்படும். </p><p>
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள், ஹாக்கி மட்டைகள் மற்றும் சிமேந்து உள்ளிட்ட சில பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.</p><p>
கனடாவின் வர்த்தகக் கொள்கைகள் தங்களுக்குப் பாகுபாடாக இருப்பதாகக் கூறி இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T07:01:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரையரங்கில் சத்தமாகச் சிரித்த பெண் மீது பீட்சா தட்டால் தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-laugh-as-they-are-attacked-man-pizza-tray-1785133589"></link>
            <id>https://canadamirror.com/article/woman-laugh-as-they-are-attacked-man-pizza-tray-1785133589</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் திரையரங்கில் படம் பார்க்கும்போது சத்தமாகச் சிரித்த பெண் மீது, சக பார்வையாளர் பீட்சா தட்டால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் திரையரங்கில் படம் பார்க்கும்போது சத்தமாகச் சிரித்த பெண் மீது, சக பார்வையாளர் பீட்சா தட்டால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள திரையரங்கு ஒன்றில், பெண் ஒருவர் தனது தோழிகளுடன் படம் பார்த்துக் கொண்டிருந்தார். </p><p>

அப்போது படத்தின் சில சுவாரசியமான காட்சிகளைக் கண்டு அவர்கள் தங்களை மறந்து சத்தமாகச் சிரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/531df442-ffe1-44b7-8358-16712986623a/26-6a66fa16a8721.webp' /></p><p> </p><p>இதனால் அருகில் அமர்ந்திருந்த இளைஞருக்குக் கடுமையான எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற அந்த இளைஞர், திடீரென இருக்கையை விட்டு எழுந்து அப்பெண்ணைக் கடுமையாக எச்சரித்ததுடன், தான் கையில் வைத்திருந்த கனமான பீட்சா தட்டைக் கொண்டு அப்பெண்ணின் கன்னத்தில் பலமாகத் தாக்கினார். </p><p>இதனால் நிலைகுலைந்து போன அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார்.
</p><p>
தாக்குதலை நடத்திவிட்டு எந்தவிதப் பதற்றமும் இன்றி தனது இருக்கைக்குத் திரும்பிய அந்த இளைஞர், வழக்கம் போல் அமைதியாகப் படம் பார்க்கத் தொடங்கினார். 

இந்தச் சம்பவம் முழுவதையும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழிகள் தங்கள் செல்பேசியில் காணொளியாகப் பதிவு செய்தனர்.</p><p>

தற்போது இந்தக் காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந் நிலையில் பொது இடத்தில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-27T06:24:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ரத்தக் கையிருப்பில் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadas-blood-supply-is-shrinking-faster-1785133174"></link>
            <id>https://canadamirror.com/article/canadas-blood-supply-is-shrinking-faster-1785133174</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் கடந்த ஆறு வாரங்களில் நாட்டின் ரத்த இருப்பு வழக்கத்திற்கு மாறாக 20 சதவீதம் வரை வேகமாகக் குறைந்துள்ளது. 
இதற்கான காரணம் தெளிவாகத் தெரியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் கடந்த ஆறு வாரங்களில் நாட்டின் ரத்த இருப்பு வழக்கத்திற்கு மாறாக 20 சதவீதம் வரை வேகமாகக் குறைந்துள்ளது.</p><p> 
இதற்கான காரணம் தெளிவாகத் தெரியாத நிலையில், ஆகஸ்ட் மாத நீண்ட விடுமுறைக் காலம் நெருங்குவதால், மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்கப் பொதுமக்கள் விரைந்து வந்து ரத்த தானம் செய்யுமாறு ‘கனடியன் இரத்த சேவை அமைப்பு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
</p><p>கனடாவில் ரத்த இருப்பைச் சீராகப் பராமரிக்க வாரத்திற்கு 18,000 முதல் 19,000 முன்பதிவுகள் தேவைப்படும். ஆனால், கடந்த ஆறு வாரங்களாக வாரத்திற்கு 1,500 முதல் 2,000 வரையிலான முன்பதிவுக் குறைவு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e01ba037-622c-423b-ade5-f27b9024621a/26-6a66f877896ca.webp' /></p><p>
கோடைகாலத்தில் சுற்றுலா மற்றும் அன்றாட நேர அட்டவணை மாறுவதால் ரத்த தானம் குறைவது வழக்கமானதுதான்.
</p><p>ஆனால், இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி வழக்கமான அளவை விட மிக அதிகமாக உள்ளது. ரத்த தானம் செய்யத் தகுதியானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்தும், தானம் செய்ய முன்வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதுவரை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான சிகிச்சைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.</p><p> நிலைமை தீவிரமடைந்து சிகிச்சைகள் தள்ளிப்போகும் சூழல் வருவதற்கு முன்பே ரத்த இருப்பை உயர்த்துவதே அமைப்பின் முதன்மை இலக்காகும் என அறிவிகக்ப்பட்டுள்ளது.</p><p>
கனடாவில் ரத்த தானம் செய்யத் தகுதியுடையவர்கள் 50% பேர் இருக்கும் போதிலும், தற்போது 2% மட்டுமே தானம் செய்து வருகின்றனர். </p><p>
வேறொருவர் தானம் செய்வார் என்று காத்திருக்காமல், தகுதியுள்ள கனடியர்கள் அனைவரும் முன்வந்து ரத்த தானம் செய்யுமாறு கனடியன் பிளட் சர்வீசஸ் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T06:19:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வொஷிங்டன் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு; இருவர் பலி...ஐவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shooting-at-washington-food-festival-1785128156"></link>
            <id>https://canadamirror.com/article/shooting-at-washington-food-festival-1785128156</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்கா -&amp;nbsp; வொஷிங்டன் மாநிலம், சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 2 பேர் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்கா -&nbsp; வொஷிங்டன் மாநிலம், சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
 சம்பவத்தில், சிறு குழந்தை ஒருவர் உட்பட மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68704f9c-00b3-463d-b9f1-67cc36601ea9/26-6a66e4dde6740.webp' /></p><p>

</p><p>தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய நபர் மற்றும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-27T06:14:15+00:00</updated>
        </entry>
    </feed>
