<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-10T23:42:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காங்கோவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் ; 1,900-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ebola-virus-threatens-congo-more-than-1-900-dead-1786404326"></link>
            <id>https://canadamirror.com/article/ebola-virus-threatens-congo-more-than-1-900-dead-1786404326</id>
            <summary type="text">காங்கோ அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, எபோலா பாதிப்பு தொடர்பில் 4,200-க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளதோடு1,90...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கோ அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, எபோலா பாதிப்பு தொடர்பில் 4,200-க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளதோடு1,900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நோயாளிகளை விரைவாக அடையாளம் காணுதல், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்தல், மருத்துவ சிகிச்சையை விரிவுபடுத்துதல் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/547b2fa1-5c62-4f7a-a6d1-a626243618cc/26-6a7a5de8ca631.webp' /></p><p>

எனினும், வைரஸ் ஏற்கனவே பரவத் தொடங்கியிருந்த காலம் அதிகாரப்பூர்வமாக கண்டறியப்படுவதற்கு முன்னரே இருந்திருக்கலாம் என்பதால், நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது சுகாதார அதிகாரிகளுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.</p><p>காங்கோவில் தற்போதைய எபோலா நிலைமையை WHO மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.</p><p>காங்கோவில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே தொடங்கியிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.</p><p>
கிழக்கு காங்கோவில் நிலைமையைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பணியாளர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இதுவரை பதிவான எபோலா பாதிப்புகளில் மிக வேகமாகப் பரவும் பாதிப்புகளில் ஒன்றாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4176548e-ab91-4b87-b675-152c65d2891d/26-6a7a5de8247b7.webp' /></p><p>காங்கோவில் எபோலா பாதிப்பு மே மாதத்தின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. </p><p>எனினும், மரபணு வரிசைமுறை ஆய்வுகளின் அடிப்படையில், வைரஸ் பரவல் அதற்கு பல மாதங்களுக்கு முன்பே, அதாவது பெப்ரவரி மாதத்திலேயே தொடங்கியிருக்கலாம் என WHO தெரிவித்துள்ளது.</p><p>
ஆரம்பகட்ட நோயாளிகளில் சிலருக்கு ஏற்பட்ட அறிகுறிகள் மலேரியா மற்றும் டைபாய்டு போன்ற நோய்களின் அறிகுறிகளுடன் ஒத்திருந்ததால், அவர்கள் எபோலாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஆரம்பத்தில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T23:25:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான அமெரிக்க ரீப்பர் ட்ரோன் ; காரணம் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-reaper-drone-crashes-minutes-after-takeoff-1786403208"></link>
            <id>https://canadamirror.com/article/us-reaper-drone-crashes-minutes-after-takeoff-1786403208</id>
            <summary type="text">கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டியில் அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான அதிநவீன ‘MQ-9A ரீப்பர்’ ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டியில் அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான அதிநவீன ‘MQ-9A ரீப்பர்’ ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h3>விபத்துக்கான காரணம்&nbsp;</h3><p>
</p><p>
ஜிபூட்டி நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள சாபெல்லி விமானத் தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குறித்த ட்ரோன் கீழே விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b03c032-06a9-486c-90e5-530ecac9aa85/26-6a7a598a6b7b1.webp' /></p><h3><span style="font-size: 14px;">இந்த ட்ரோன் எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட ஏதேனும் காரணத்தால் விபத்துக்குள்ளானதா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.</span></h3><p>சம்பவம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது</p>]]></content>
            <updated>2026-08-10T23:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பெண் தோழியை கொன்ற வழக்கில் இந்திய மாணவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-student-arrested-killing-america-girlfriend-1786402330"></link>
            <id>https://canadamirror.com/article/indian-student-arrested-killing-america-girlfriend-1786402330</id>
            <summary type="text">அமெரிக்காவில் 19 வயது பெண் தோழியை கொலை செய்ததாகக் கூறப்படும் 20 வயதான இந்திய மாணவர் ஒருவர், ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் 19 வயது பெண் தோழியை கொலை செய்ததாகக் கூறப்படும் 20 வயதான இந்திய மாணவர் ஒருவர், ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அரிஸோனா மாநிலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், வருண் பட்சிகாரி (20) என்ற இந்திய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அரிஸோனா பல்கலைக்கழகத்தில் பிசினஸ் அனலிட்டிக்ஸ் கற்று வந்ததாகக் கூறப்படும் வருண், தனது 19 வயது பெண் தோழியான ரூபியை கொலை செய்ததாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd941a35-e770-4c7c-bc02-e21a148a4604/26-6a7a561bdcbf2.webp' /></p><p>கடந்த ஆகஸ்ட் 6ஆம் திகதி மாலை சுமார் 4 மணியளவில் காவல்துறைக்கு அவசர அழைப்பு கிடைத்துள்ளது.
</p><p>
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், ரூபி படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆரம்பகட்ட விசாரணைகளில், அவருடன் நெருங்கிப் பழகிய வருண் இந்தக் கொலையுடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.</p><p>கொலைக்குப் பின்னர், ரூபியின் செல்போனை பயன்படுத்தி அவரது பெற்றோருக்கு, தான் நலமாக இருப்பதாகவும் குற்றமற்றவர் என்பதுபோன்றும் செய்திகள் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அந்தச் செய்திகள் தொடர்பில் சந்தேகமடைந்த ரூபியின் பெற்றோர் காவல்துறையைத் தொடர்புகொண்டு, அவரது வீட்டுக்குச் சென்று நிலைமையைச் சரிபார்க்குமாறு கோரியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே ரூபி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன</p><p>சம்பவத்துக்குப் பின்னர் வருண் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குச் சென்று, அங்கிருந்து ஜெர்மனியின் பெர்லின் நகருக்குச் சென்றதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>பின்னர் பெர்லினிலிருந்து அவர் இந்தியாவுக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a92299c-8734-456e-9fd0-3c43e6a1820e/26-6a7a561c8e2ba.webp' /></p><p>

இந்த நிலையில், அவர் டக்சான் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து இந்தியா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இதனிடையே, வருண் மீது முன்னதாகவே பல்வேறு வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
மேலும், அரிஸோனா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற காலத்தில் சண்டையில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாக அவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
அத்துடன், அண்மையில் அவர் வேலைவாய்ப்பை இழந்திருந்ததாகவும், அதன் காரணமாக வீட்டு வாடகையை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், இதனால் அவரது விசா தொடர்பிலும் சிக்கல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>விசாரணையாளர்களின் ஆரம்ப தகவல்களின்படி, வருணுடன் கொண்டிருந்த நட்புறவை முறித்துக்கொள்ள ரூபி திட்டமிட்டிருந்ததாகவும், இது தொடர்பாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னணியிலேயே கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>
மேலும், ஆகஸ்ட் 5ஆம் திகதி ரூபியின் அறைக்கு அருகில் தங்கியிருந்த சிலர், அவரது படுக்கையறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் ரூபிக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவர் நலமாக இருக்கிறாரா எனக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p>அதற்கு ரூபி நலமாக இருப்பதாகவும், அந்தச் சத்தம் ஒரு வாக்குவாதத்தினால் ஏற்பட்டதாகவும் பதிலளித்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பின்னர், அந்தக் குறுஞ்செய்திகளை ரூபி அனுப்பவில்லை என்பதும், அவரது செல்போனை பயன்படுத்தி வருண் அனுப்பியிருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. </p><p>குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T22:52:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் ; 12 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ukraine-drone-attack-on-russia-12-killed-1786401522"></link>
            <id>https://canadamirror.com/article/ukraine-drone-attack-on-russia-12-killed-1786401522</id>
            <summary type="text">உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவின் தத்தாரிஸ்தான் மாகாணத்தில் உள்ள குடியிருப்புகள் மீது உக்ரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவின் தத்தாரிஸ்தான் மாகாணத்தில் உள்ள குடியிருப்புகள் மீது உக்ரைன் மேற்கொண்டதாக கூறப்படும் டிரோன் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 39 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13092f84-98f6-4577-af71-c8d365f8858a/26-6a7a52f37f01b.webp' /></p><p>உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.
</p><p>
இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். </p><p>எனினும், இதுவரை அந்த முயற்சிகள் எதிர்பார்த்த முடிவை எட்டாத நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-10T22:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் குண்டு மிரட்டல்: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/thousands-of-people-evacuated-halifax-buildings-1786381613"></link>
            <id>https://canadamirror.com/article/thousands-of-people-evacuated-halifax-buildings-1786381613</id>
            <summary type="text">கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலையில் அங்குள்ள கட்டடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலையில் அங்குள்ள கட்டடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><p> 
அப்பர் வோட்டர் வீதியில் அமைந்துள்ள 'பேர்டிஸ் வார்ஃப்' வாகன நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில், காலை 8:45 மணியளவில் அங்கிருந்த மக்கள் முதன்முதலாக வெளியேற்றப்பட்டனர். </p><p>
குறித்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து பொலிஸார் அந்தச் சந்தேகத்திற்குரிய வாகனத்தைச் சோதனையிட்டனர். 
நிலைமையின் தீவிரத்தைக் கருதி, காலை 10:15 மணியளவில் பொதுமக்கள் வெளியேற்றப்பட வேண்டிய பகுதி&nbsp; விரிவுபடுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b2a09da-f58e-4831-bf02-3e93aab0c23f/26-6a7a052f0cabb.webp' /></p><p>பேரிங்டன் வீதி,&nbsp; அமலமேக் வழி சந்திப்பு, அப்பர் வோட்டர் வீதி,&nbsp; பிரன்ஸ்விக் வீதி / டொக்டர் ஆல்ஃப்ரெட் வேடெல் வீதி முதல் பிரன்ஸ்விக் வீதி காக்ஸ்வெல் வீதி வரை,&nbsp; டியூக் வீதி / பேரிங்டன் வீதி சந்திப்பில் இருந்து அப்பர் வோட்டர் வீதி வரையிலான பகுதிகள் மூடப்பட்டன.</p><p>இந்த வெளியேற்ற உத்தரவு அப்பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் பாதசாரிகளும் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என ஹாலிஃபாக்ஸ் பிராந்திய பொலிஸார் அறிவித்தனர்.</p><p>
இந்த வெளியேற்ற மண்டலத்தில் பல ஹோட்டல்கள், உணவகங்கள், ஸ்கோஷியா சதுக்கம் மற்றும் அரசு அலுவலகங்கள் அடங்கியுள்ளன. 
பொலிஸாரின் தேவைக்கேற்ப அருகிலுள்ள பக்கவாட்டுச் சாலைகளும் மூடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ஹாலிஃபாக்ஸ் ட்ரான்சிட் பேருந்துகள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படும் அதேவேளையில், படகு முனையம் திறந்திருக்கும் என்றும் பயணிகளுக்கு வழிகாட்ட ஊழியர்கள் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
காலை 10:30 மணியளவில் அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. </p><p>அதில், சந்தேகத்திற்குரிய வாகனம் உட்பட அப்பகுதியைப் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. </p><p>
கிளேட்டன் பூங்காவில் உள்ள கனடா கேம்ஸ் சென்டர் அருகே தோமஸ் ரேடால் டிரைவ் பகுதியில் வைத்து சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.</p><p> 
பிற்பகல் 1:30 மணியளவில் பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, அப்பகுதியில் தற்போது உடனடி அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>எனினும், விசாரணை தொடர்வதால் குறைந்த அளவிலான பொலிஸ் பாதுகாப்பு அங்கே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T22:10:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஸ்காட்செவானில் 44 மில்லியன் டொலர் லொத்தர் பரிசு: வென்ற அதிர்ஷ்டசாலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/winning-ticket-for-44-million-lotto-649-draw-1786381089"></link>
            <id>https://canadamirror.com/article/winning-ticket-for-44-million-lotto-649-draw-1786381089</id>
            <summary type="text">கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 44 மில்லியன் டொலர் பெறுமதியான &#039;கோல்ட் போல்&#039; ஜாக்பாட் பரிசை வென்று கோடீஸ்வரராகியுள்ளார். 
ஆனால், தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 44 மில்லியன் டொலர் பெறுமதியான 'கோல்ட் போல்' ஜாக்பாட் பரிசை வென்று கோடீஸ்வரராகியுள்ளார். </p><p>
ஆனால், தான் அந்தப் பரிசை வென்ற தகவல் இன்னும் அவருக்குத் தெரியவில்லை. 
சனிக்கிழமை நடைபெற்ற 'லொட்டோ 6/49' குலுக்கலிலேயே இந்த 44 மில்லியன் டொலா் ஜாக்பாட் விழுந்துள்ளது. </p><p>
வெற்றிபெற்ற இந்த லொத்தர் சீட்டு சஸ்காட்செவான் மாகாணத்தில் உள்ள சாஸ்கடூன் மற்றும் ரெஜினா ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கும் வெளியேயுள்ள ஒரு பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29dac847-6692-4188-8bad-fdb57dce6946/26-6a7a03235e673.webp' /></p><p> </p><p>
வெற்றிபெற்ற எண் 23202513-03 ஆகும். இந்த எண் முழுமையாகத் துல்லியமாகப் பொருந்தினால் மட்டுமே பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
வெற்றிபெற்ற நபர் அல்லது நபர்கள் தங்களது பரிசுத் தொகையைக் கோருவதற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T20:04:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் ; 69 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/powerful-earthquake-hits-colombia-1786376506"></link>
            <id>https://canadamirror.com/article/powerful-earthquake-hits-colombia-1786376506</id>
            <summary type="text">கொலம்பியாவின் மேற்கு பகுதிகளில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவின் மேற்கு பகுதிகளில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் பல நகரங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p>கொலம்பியாவின் சோகோ (Chocó) பிராந்தியத்தில் அமைந்துள்ள சான் ஜோசே டெல் பால்மர் (San José del Palmar) நகராட்சிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் கொலம்பிய புவியியல் சேவை தெரிவித்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b9a70e3-e9fb-4027-a173-7dd8b68631d6/26-6a79f13c53941.webp' /></p><p>கொலம்பிய தலைநகர் பொகோட்டாவிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.6 ரிக்டர் என கொலம்பிய அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதன் அளவு 7.4 என அறிவித்துள்ளது.
</p><p>
நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 107 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.</p><p>நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் சோகோ பிராந்தியத்தின் தலைநகரான கிப்டோ (Quibdó) உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சோகோ மாகாண ஆளுநர் நுபியா கரோலினா கோர்டோபா-குரி, நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதிர்வுகள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளார்.</p><p>

நிலநடுக்கத்தின் மையப்பகுதி சான் ஜோசே டெல் பால்மர் அருகில் இருந்த போதிலும், கிப்டோ நகரிலும் கட்டடங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், முதலாவது உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் பொகோட்டா வரையிலும் உணரப்பட்டுள்ளன.

பொகோட்டாவில் வாகனங்கள் மற்றும் கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரங்கள் செயல்பட்டதுடன், அச்சமடைந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
பொகோட்டா மேயர் கார்லோஸ் பெர்னாண்டோ கலான், நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே வெளியிட்ட தகவலில், நகரில் உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a862451c-bc1f-48cd-b3b9-052b290ab309/26-6a7a1362d4efd.webp' /></p><p>

எனினும், சில கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கொலம்பியா மற்றும் அண்டை நாடான ஈக்வடார் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
நிலநடுக்கத்திற்குப் பின்னர் ஏற்படக்கூடிய அதிர்வுகள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
இதனிடையே, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.</p><p>நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன், சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p>

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்தும் மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
கொலம்பியா அண்மைய காலங்களில் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய நில அதிர்வுகளில் ஒன்றாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-10T18:07:39+00:00</updated>
        </entry>
    </feed>
