<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-24T21:41:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயார்க் மேயர் மம்தானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mayor-mamdani-s-family-faces-death-threats-1784922319"></link>
            <id>https://canadamirror.com/article/mayor-mamdani-s-family-faces-death-threats-1784922319</id>
            <summary type="text">நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி மற்றும் அவரது மனைவி ரமா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், நடந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி மற்றும் அவரது மனைவி ரமா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்காவில், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக நியூயார்க் நகரத்துக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி மேயராகப் பதவி வகித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f5e2626-3365-4847-98bd-2ebba787d4bb/26-6a63c0d1331ab.webp' /></p><p>




</p><p>பெரும்பான்மையான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள மேயர் மம்தானி மற்றும் அவரது மனைவி ரமா ஆகியோர் தொடர்ந்து காஸா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் மேயர் மம்தானி வெளியிட்ட விடியோவில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகள் ஒரு இனப்படுகொலை எனவும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு போர்க்குற்றவாளி அவர் கைது செய்யப்பட வேண்டுமெனவும் கூறியிருந்தார்.</p><p>
இந்த நிலையில், அமெரிக்க செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், காஸா மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பதால் தனக்கும் தனது மனைவிக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக, மம்தானி தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T20:42:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவியை இராஜினாமா செய்த பங்களாதேஷ் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bangladesh-president-steps-down-1784925684"></link>
            <id>https://canadamirror.com/article/bangladesh-president-steps-down-1784925684</id>
            <summary type="text">பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். </p><p style="text-align: justify;">

பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் நாட்டிற்கு வர ஆயத்தமாகி வருவதாக வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f112a62a-c818-4317-94b7-55b687998a9f/26-6a63cdf60ae1e.webp' /></p><p style="text-align: justify; "><span style="color: inherit;">2024ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டங்களின் போது நபர்களைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</span></p><p style="text-align: justify; ">

அவ்வழக்குகளை எதிர்கொள்வதற்காகத் தான் மீண்டும் பங்களாதேஷிற்கு வருகை தரவுள்ளதாக ஹசீனா வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்து சில நாட்களுக்குப் பின்னரே ஜனாதிபதியின் இந்த இராஜினாமா தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.</p><p> </p><p style="text-align: justify; ">

மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்து சென்றுள்ள நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தீன் அகமட் திரும்பி வந்த பின்னர், ஜனாதிபதி தனது ராஜினாமாக் கடிதத்தைக் கையளிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.</p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-07-24T20:41:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் துப்பாக்கிச் சூடு: பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-shot-dead-in-etobicoke-toronto-1784900304"></link>
            <id>https://canadamirror.com/article/woman-shot-dead-in-etobicoke-toronto-1784900304</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள எட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள எட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>ஹம்பர்வுட் மற்றும் ரெக்ஸ்டேல் புலிவார்ட்ஸ் சந்திப்புக்கு அருகிலுள்ள குடியிருப்பு வீதியொன்றில் காலை 7:00 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
</p><p>தகவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் காணப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c057ffe7-db27-4da3-8b46-141d4427b222/26-6a636ad20cd97.webp' /></p><p>உயிரிழந்த பெண்ணின் வயது அல்லது இச்சம்பவத்திற்கு வழிவகுத்த காரணம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
பொலிஸார் வருவதற்கு முன்னரே சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>அவர் குறித்த அடையாளங்களோ அல்லது விவரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p>
இக்கொலை வழக்கை கொலை வழக்கு விசாரணைப் பிரிவு ஏற்று தீவிரமாக விசாரித்து வருகிறது.
விசாரணைகள் காரணமாக மார்னிங் ஸ்டார் டிரைவ் மற்றும் ரெக்ஸ்டேல் புலிவார்ட் இடையேயான ஹம்பர்வுட் புலிவார்ட் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.</p><p>
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், 416-808-2222 என்ற எண்ணில் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T20:17:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் வரி விதிப்பிற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/completely-unjustified-how-countries-1784903542"></link>
            <id>https://canadamirror.com/article/completely-unjustified-how-countries-1784903542</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய சுங்க வரி உயர்வு நடவடிக்கைக்கு சீனா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய வர்த்தக பங்களிப்பு நாடுகள் கடும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய சுங்க வரி உயர்வு நடவடிக்கைக்கு சீனா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய வர்த்தக பங்களிப்பு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.</p><p>
குறிப்பாக, இந்த வரி உயர்வுக்கு எவ்வித நியாயமும் இல்லை என அவுஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் சாடியுள்ளார். </p><p>
கட்டாயத் தொழிலாளர் பயன்பாட்டைத் தடுப்பதற்கான வர்த்தகத் தடைகளை சரியாகச் செயல்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறி, சுமார் 60 நாடுகளின் இறக்குமதிகள் மீது 10% முதல் 12.5% வரை கூடுதல் சுங்க வரியை அமெரிக்க நிர்வாகம் வியாழக்கிழமை இரவு அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/219f66d2-ee70-4455-ace9-682fc35f97f0/26-6a63777890c27.webp' /></p><p> 
அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு டிரம்ப் தற்காலிகமாக விதித்திருந்த வரிகளின் காலக்கெடு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு முடிந்த உடனேயே, இந்த புதிய வரிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. </p><p>
மாட்டிறைச்சி, தங்கம் மற்றும் தாமிரத்தின் முக்கிய ஏற்றுமதியாளரான அவுஸ்திரேலியா மீதான வரியை 12.5% ஆக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.</p><p> 
நவீன அடிமைமுறைக்கு எதிரான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மிகவும் தீவிரமாகவே அணுகுகிறது. இந்த கூடுதல் வரி உயர்வு முற்றிலும் நியாயமற்றது, இதைக் கைவிடுமாறு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என வர்த்தக அமைச்சர் டான் ஃபாரெல், தெரிவித்துள்ளார்.</p><p>
12.5% வரி உயர்வு மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவும், வர்த்தகத்தைப் பாதிப்பதாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.
</p><p> மேலும், அமெரிக்காவின் விசாரணையில் கட்டாயத் தொழிலாளர் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு வலுவான ஆதாரமும் இல்லை. வரிகள் வணிகங்களுக்கான செலவுகளையும் நிச்சயமற்ற தன்மையையும் மட்டுமே அதிகரிக்கும்" என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>
எங்களது தொழிலாளர் சட்டங்களை அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், எங்களது ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் சிறந்த பணிச்சூழல் வழங்கப்படுகிறது. எனவே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எவ்வித அடிப்படையுமற்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கலாஸ் விமர்சித்துள்ளார்.</p><p>
கட்டாயத் தொழிலாளர் முறையை தாம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ள சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு, இது தொடர்பாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஜப்பான் ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 12.5% வரியை எதிர்த்து அந்நாடு மேல்முறையீடு செய்துள்ளது.</p><p> ஏற்கனவே ஒப்புக்கொண்ட 10% வரியைத் தாண்டி கூடுதல் வரிகள் விதிக்கப்படாது என்று டிரம்ப் நிர்வாகம் உறுதியளித்திருந்ததை ஜப்பானிய அமைச்சரவை முதன்மைச் செயலாளர் மினோரு கிஹாரா சுட்டிக்காட்டினார். </p><p>
பரஸ்பர நன்மைகளைப் பேணும் வகையில் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது. தென் கொரியா மீதான கூட்டு வரிகள் 15%-ஐத் தாண்டக்கூடாது என அந்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>
ஒருதலைப்பட்சமாக விதிக்கப்படும் அனைத்து விதமான சுங்க வரிகளையும் சீனா எதிர்ப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார். 
வரிப் போர்களும் வர்த்தகப் போர்களும் எந்தவொரு தரப்பின் நலனுக்கும் உகந்ததல்ல எனஅவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T16:00:19+00:00</updated>
        </entry>
    </feed>
