<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-17T16:43:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 71 வாகனங்களை உடைத்து திருடிய நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mississauga-man-charged-after-71-vehicle-break-1789662804"></link>
            <id>https://canadamirror.com/article/mississauga-man-charged-after-71-vehicle-break-1789662804</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள மிசிசாகா பகுதியில் 71 வாகனங்களை உடைத்து தனியாரின் உடமைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபர் ஒருவரை பீல் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள மிசிசாகா பகுதியில் 71 வாகனங்களை உடைத்து தனியாரின் உடமைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபர் ஒருவரை பீல் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
செப்டம்பர் 3 மற்றும் 6 ஆம் திகதிகளில் அதிகாலை வேளையில் குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளில் இத்திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p> 
நிரந்தர முகவரியற்ற கோரி லவ்டன் என்ற நபரே கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். 
வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தோ அல்லது பூட்டப்படாத கதவுகள் வழியாகவோ உள்ளே நுழைந்து விலையுயர்ந்த பொருட்களைத் திருடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4159e0e-e393-4e89-a0f5-7fde25ba0e6e/26-6aac1655d53f3.webp' /></p><p> இதன்போது வாகனங்கள் எதுவும் திருடப்படவில்லை என்பதுடன், சம்பவங்களின் போது வாகனங்களுக்குள் எவரும் இருக்கவில்லை. </p><p>
வேறு இரு நிதி மோசடி வழக்குகள் தொடர்பிலும் இவர் மீது பிடியாணை நிலுவையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> தற்போது பிணை விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>
சமூக அமைதியைக் கெடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தக் கைது உறுதி செய்வதாக பொலிஸ் தலைமை அதிகாரி நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T16:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் விமான விபத்து ; 3 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/plane-crash-in-switzerland-3-killed-1789640621"></link>
            <id>https://canadamirror.com/article/plane-crash-in-switzerland-3-killed-1789640621</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.
</p><p>
சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி பகுதியில் அமைக்கப்பட்ட சியான் விமான நிலையத்தில் இருந்து சிர்ரஸ் எஸ்.ஆர்.22டி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903a360a-7e00-414f-ad16-36b28264105e/26-6aabbfaf4a0b4.webp' /></p><p>
அது புறப்பட்ட 10 நிமிடங்களில் திடீரென ஸ்விஸ் மலைப்பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. </p><p>இந்த விமான விபத்தில், இங்கிலாந்து நாட்டினர் 2 பேர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். </p><p>விபத்தின்போது விமானம் தீப்பிடித்து எரிந்ததுடன், புகையும் வெளியேறி உள்ளது. விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.
</p><p>
இதனை அடுத்து, மீட்பு அமைப்பினர்,&nbsp; மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T13:56:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சி ; சவூதிக்கு ஆதரவாக பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/makkah-drone-attack-pakistan-backs-ksa-1789650691"></link>
            <id>https://canadamirror.com/article/makkah-drone-attack-pakistan-backs-ksa-1789650691</id>
            <summary type="text">இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, சவூதி அரேபியா மற்றும் துருக்கி உடன் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, சவூதி அரேபியா மற்றும் துருக்கி உடன் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தக் கடமையை நிறைவேற்ற தயார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
</p><p>


சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீது நேற்று (16) தாக்குதல் நடத்த ஏவப்பட்ட ட்ரோன்களை இடைமறித்து தகர்த்ததாகவும், இதற்கு யேமனின் ஹௌதி அமைப்பினர்கள்தான் காரணம் எனவும் சவூதி பாதுகாப்புப் படை குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a71857-fb8f-4944-8473-733c5fb3748f/26-6aabe70461a0b.webp' /></p><p> இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஹௌதி படை மறுப்பு தெரிவித்துள்ளது.
</p><p>


இந்த நிலையில், மோதல்கள் பரவுவதைத் தடுப்பதற்கும், மக்கா பாதுகாப்பு ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பாகிஸ்தான் அரசு தயார்நிலையில் இருப்பதாக, பாகிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் இன்று கூறியுள்ளார்.</p><p>



இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:



“ஒருவேளை மக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு ஒப்பந்தமும் தேவையில்லை.</p><p> மக்கா ஒப்பந்தம் எங்களுக்கும் பொருந்தும் அந்தக் கடமையை நாங்கள் நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>


முன்னதாக, ஈரான் மீதான போரில், அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படும் சவூதி அரேபியாவுக்கு எதிராக ஹௌதி படை நடவடிக்கைகள் மேற்கொண்டு யேமனின் முக்கிய தளங்களைக் கைப்பற்றி வருகின்றது.</p><p>


இத்துடன், கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.



இதன்படி, ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்பதால் ஹௌதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T13:11:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பீஜியில் தீவிரமடையும் HIV தொற்று ; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hiv-infection-in-fiji-is-worsening-1789645196"></link>
            <id>https://canadamirror.com/article/hiv-infection-in-fiji-is-worsening-1789645196</id>
            <summary type="text">புதிய HIV தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், பீஜி (Fiji ) நாட்டு அரசு HIV நிலைமையை தேசிய நெருக்கடியாக அறிவித்துள்ளது.

பீஜி நாட்டு அரசாங்கத்தின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய HIV தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், பீஜி (Fiji ) நாட்டு அரசு HIV நிலைமையை தேசிய நெருக்கடியாக அறிவித்துள்ளது.

பீஜி நாட்டு அரசாங்கத்தின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் 2,016 பேருக்கு புதிதாக HIV தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், நாட்டில் வசிக்கும் 60 பேரில் ஒருவர் HIV தொற்றுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5d389a-d266-402b-9afe-fe844b45e3f5/26-6aabd1e54cb81.webp' /></p><p>

2025ஆம் ஆண்டில் HIV தொற்றுடன் 59 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அவர்களில் 18 பேர் ஒரு வயதை அடைவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாகவும் பீஜி நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
எனினும், மேம்படுத்தப்பட்ட பரிசோதனை முறைகள் காரணமாக HIV தொற்றுகள் அதிகளவில் கண்டறியப்படுவதுடன், தொற்றுக்குள்ளானவர்களுக்கு விரைவாக சிகிச்சை வழங்குவதற்கும் இது உதவுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனையடுத்து, இலவசமாகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், ரகசியத்தன்மையுடனும் HIV பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை விரிவுபடுத்த பீஜி நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>

அத்துடன், HIV தடுப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்துவதுடன், ஊசி மூலம் போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கான பாதிப்பு குறைப்பு சேவைகளையும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> UNAIDS தகவலின்படி, ஊசி மற்றும் சிரிஞ்ச் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>

UNAIDS அமைப்பின் தரவுகளின்படி, பீஜி நாட்டில் புதிய HIV தொற்றுகளின் எண்ணிக்கை 2010 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 12 மடங்கு அதிகரித்துள்ளது. </p><p>2025ஆம் ஆண்டில் சுமார் 9,100 பேர் HIV தொற்றுடன் வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவர்களில் 39 சதவீதம் பேர் மட்டுமே தங்களது HIV நிலையை அறிந்திருந்தனர். மேலும், 22 சதவீதம் பேர் மட்டுமே எதிர்வைரஸ் சிகிச்சையைப் பெற்று வந்தனர்.
</p><p>
தொற்று ஏற்பட்ட விதம் உறுதிப்படுத்தப்பட்ட HIV சம்பவங்களில், பாதிக்கும் மேற்பட்டவை பாலியல் தொடர்பு மூலம் பரவியுள்ளதுடன், 42 சதவீதத்துக்கும் அதிகமானவை ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவதுடன் தொடர்புடையவை என UNAIDS தெரிவித்துள்ளது.
</p><p>
இதனிடையே, பீஜி நாட்டில் HIV தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உள்ள கொள்கை மற்றும் நடைமுறைத் தடைகளை அகற்றும் நோக்கில், ஐந்து அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை துணைக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T11:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-sentence-dehiwala-businessman-drug-case-1789644513"></link>
            <id>https://canadamirror.com/article/death-sentence-dehiwala-businessman-drug-case-1789644513</id>
            <summary type="text">&amp;nbsp; ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


சிலாபம் பிரிவின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் 2017ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59449e2a-e5d6-4ce3-9071-84508c0af8bb/26-6aabcee328250.webp' /></p><p>
</p><p>


அந்த சுற்றிவளைப்பின்போது, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் எடை 211 கிலோ 818 கிராமாக இருந்ததுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரச இரசாயன பகுப்பாய்வாளர் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அதில் 136 கிலோ 99 கிராம் தூய ஹெரோயின் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
</p><p>


எவ்வாறாயினும், 2017ஆம் ஆண்டு இலங்கையில் தனிநபர் ஒருவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவாகும். இதன் பெறுமதி சுமார் 100 கோடி ரூபாவுக்கு அண்மித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T11:25:34+00:00</updated>
        </entry>
    </feed>
