<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-10T04:25:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் அமெரிக்கா விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/conservative-leader-heads-to-us-to-promote-canada-1789010158"></link>
            <id>https://canadamirror.com/article/conservative-leader-heads-to-us-to-promote-canada-1789010158</id>
            <summary type="text">கனடாவின் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லீவ்ரே புதன்கிழமை இரவு அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லீவ்ரே புதன்கிழமை இரவு அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.</p><p>
வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அவர் பங்கேற்கவுள்ளார்.</p><p>&nbsp;இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில் சுதந்திர வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை பொய்லீவ்ரே வலியுறுத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bad1e1b-6604-424f-8495-6751e936af57/26-6aa220f095903.webp' /></p><p> 
"தற்போதைய வர்த்தகத் தகராறில் கனடாவின் மிகப்பெரிய பலம் அமெரிக்க மக்களின் நன்மதிப்பாகும். சுதந்திர வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் மூலம் கனடா மக்களின் பணத்தையும் வேலைவாய்ப்புகளையும் நாம் பாதுகாக்க முடியும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>
கனடாவின் புதிய பதிலடி வர்த்தக வரிகள் செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா தயாரிப்புகளுக்குத் தடை விதித்தும், புதிய வரிகளை விதித்தும் நிறைவேற்று உத்தரவுகளில் கையெழுத்திட்டார். </p><p>
இந்த விஜயம் கனடா பிரதமர் அலுவலகத்தின் (PMO) ஆதரவுடனே மேற்கொள்ளப்படுகிறது. பொய்லீவ்ரே முன்னதாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த போதிலும், பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தலை ஏற்று தனது பயணத்தை ஒத்திவைத்திருந்தார். </p><p>
9/11 நினைவேந்தல் நிகழ்வில் தாக்குதலுக்குப் பிறகு கனடாவும் அமெரிக்காவும் இணைந்து ஆற்றிய பங்களிப்புகளை அவர் சுட்டிக்காட்டவுள்ளார். </p><p>மேலும், அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.</p><p> 
முன்னதாக, பியர் பொய்லீவ்ரே இந்த ஆண்டின் மார்ச் மாதத்திலும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்து மிச்சிகன், டெக்சாஸ் மற்றும் நியூயோர்க் ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T04:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்த வகை கோழி இறைச்சி தயாரிப்பு குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/costco-canada-recalling-select-chicken-products-1789009532"></link>
            <id>https://canadamirror.com/article/costco-canada-recalling-select-chicken-products-1789009532</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா கொஸ்கோ நிறுவனம், அறிவிக்கப்படாத &quot;சோயா&quot; கலந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், சில கோழி இறைச்சி தயாரிப்புகளை திரும்பப்பெற்று வருகிறது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா கொஸ்கோ நிறுவனம், அறிவிக்கப்படாத "சோயா" கலந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், சில கோழி இறைச்சி தயாரிப்புகளை திரும்பப்பெற்று வருகிறது. </p><p>
கொஸ்கோவின் இணையதளத் தகவல்படி, 'Rossdown Meal Starters Black Garlic Chicken Breast Chunks' (லொட் எண்: 295021) எனும் தயாரிப்பே இவ்வாறு திரும்பப்பெறப்படுகிறது.</p><p> 
இந்தத் தயாரிப்புகள் 2026 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் கனடாவில் உள்ள கொஸ்கோ விற்பனையகங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894fa97d-f476-4acc-a9f5-05ebed4c57f6/26-6aa21e7e30be2.webp' /></p><p> </p><p>
"சோயா ஒவ்வாமை அல்லது உணர்திறன் உள்ளவர்கள் இந்தத் தயாரிப்பை உட்கொள்ள வேண்டாம். ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவை உட்கொள்வது கடுமையான அல்லது உயிருக்கு ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என கொஸ்கோ எச்சரித்துள்ளது.</p><p>
பாதிக்கப்பட்ட தயாரிப்புகளை வாங்கிய வாடிக்கையாளர்கள், அவற்றை மீண்டும் கொஸ்கோ விற்பனையகத்திலேயே ஒப்படைத்து முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T03:30:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் ; முடிவுக்கு வரும் ஈரான் போர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/happy-news-announced-by-donald-trump-1789009998"></link>
            <id>https://canadamirror.com/article/happy-news-announced-by-donald-trump-1789009998</id>
            <summary type="text">எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>

டெக்சாஸ் செல்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abee4bb2-817f-4279-9930-5e0230e25678/26-6aa220505cea2.webp' /></p><p> 

ஈரானால் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால், தேர்தலுக்குப் பிறகு உடனடியாக போர் முடிவுக்கு வரும் என நான் நினைக்கிறேன் என்று ட்ரம்ப் கூறினார்.</p><p> 

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி தனது சொந்த குடியரசுக் கட்சிக்குள்ளிருந்தே அழுத்தத்தை எதிர்நோக்கி வருவதுடன் அவருக்கான கருத்துக் கணிப்பு ஆதரவும் குறைந்து வருகின்றது. </p><p>

பெப்ரவரியில் போர் தொடங்கியதிலிருந்து, இந்த மோதல் எப்போது முடிவடையும் என்பது குறித்து ட்ரம்ப் பல்வேறு காலக்கெடுவை முன்பு அளித்திருந்தார். </p><p>

ஆனால், போர் தொடர்ந்தும் நீடித்து வருவதால் ட்ரம்ப் மீது பல்வேறு விமர்சனங்கள் நேரடியாகவே எழுந்துள்ளன. 

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள மோதல்கள் காரணமாக, நேற்றைய தினம் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலரை கடந்து விற்பனையாகின்றது. </p><p>

இது கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஏற்பட்ட பாரிய அதிகரிப்பாகும்.</p><p> 

ஈரான் போர் சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்க நேரப்படி இன்றைய தினம் குடியரசுக் கட்சி மாநாட்டில் ட்ரம்ப் சிறப்புரை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-10T03:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்கா ; பதிலடியாக 20 கப்பல்களை குறிவைத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-sank-five-iranian-oil-tankers-1789001512"></link>
            <id>https://canadamirror.com/article/us-sank-five-iranian-oil-tankers-1789001512</id>
            <summary type="text">ஈரானுக்கு சொந்தமான 5 கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்கி அமெரிக்கா மூழ்கடித்துள்ளது. பதிலடி நடவடிக்கையாக ஹோா்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் 2 போா் கப்பல்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு சொந்தமான 5 கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்கி அமெரிக்கா மூழ்கடித்துள்ளது. பதிலடி நடவடிக்கையாக ஹோா்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் 2 போா் கப்பல்கள் உள்ளிட்ட 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
இதனால், மேற்காசியாவில் மீண்டும் மோதல் உக்கிரமடைந்துள்ளது. ஈரான், அமெரிக்கா இடையே சுமாா் 6 மாதங்களாக போா் நீடிக்கிறது. பாகிஸ்தான், கத்தாா் நாடுகளின் மத்தியஸ்தத்தால் இரு நாடுகள் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1d55af8-2993-4aef-af1e-3a97de93f290/26-6aa1ff2b2a306.webp' /></p><p>இதனால் 2 மாதங்களுக்கு அமைதி நிலவியது. எனினும் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் புதுப்பிக்காததால் மீண்டும் போா் தொடங்கியுள்ளது.</p><p>கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் உள்ளிட்ட 3 கப்பல்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறி, அந்த நாட்டுக்கு சொந்தமான 8 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அடுத்தடுத்து தாக்கி மூழ்கடித்தது. </p><p>அதிலிருந்த மாலுமிகள் அனைவரும் வெளியேறும்படி முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன்பிறகே கப்பல்களை மூழ்கடித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினா் இருமுறை கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் அதில் எந்த கப்பல்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என்றும், அந்த கப்பல்கள் கடல்பகுதியில் தொடா்ந்து ரோந்து சுற்றி வருவதாகவும், ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்கா்கள் யாரும் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ இல்லை என்றும் அமெரிக்க ராணுவத்தின் மத்திய தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f914c77-df28-4871-a268-53c65790203f/26-6aa1ff2a7459c.webp' /></p><p>குவைத், பஹ்ரைன் கடல்பகுதியில் நிற்கும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப் போவதாகவும், ஆதலால் அதில் இருக்கும் மாலுமிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>இதனால் குவைத், பஹ்ரைனில் கடும் பதற்றம் நிலவுகிறது.

கடல்பகுதியில் கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளாவதை பிரிட்டன் கடல்சாா் வா்த்தக நடவடிக்கை மையமும் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடா கடல்பகுதியில் ஏராளமான வா்த்தக கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளானதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T00:52:01+00:00</updated>
        </entry>
    </feed>
