<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-21T08:26:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரெஞ்சு பொலிஸார் மீது புலம்பெயர்ந்தோர் தாக்குதல்; சம்பவத்தால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/migrants-attack-french-police-1787293186"></link>
            <id>https://canadamirror.com/article/migrants-attack-french-police-1787293186</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிரான்ஸ் நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து சிறிய ரப்பர் படகுகள் (Small Boats) மூலம் இங்கிலாந்து நோக்கிக் சட்டவிரோதமாகப் பயணிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிரான்ஸ் நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து சிறிய ரப்பர் படகுகள் (Small Boats) மூலம் இங்கிலாந்து நோக்கிக் சட்டவிரோதமாகப் பயணிக்க முயன்ற புலம்பெயர்ந்தோரைத் தடுக்க முயன்ற பிரெஞ்சு காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

கடலோரக் காவல் படையினர் படகை நோக்கிச் சென்றபோது, அங்கிருந்த புலம்பெயர்ந்தோர் அவர்களைத் தடுத்து நிறுத்தி மோதலில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cf82c50-d0e5-4a6b-babd-0a2e76f635c2/26-6a87ee036fa0e.webp' /></p><h2>மனித கடத்தல்காரர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர்&nbsp;</h2><p>
</p><p>
ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாகப் பிரிட்டனை அடைய கடத்தல் கும்பல்களின் உதவியுடன் நூற்றுக்கணக்கானோர் தினமும் பிரெஞ்சு கடற்கரைகளில் திரள்கின்றனர். </p><p>

பாதுகாப்புப் படையினர் படகுகளைக் பறிமுதல் செய்யவோ அல்லது கடலுக்குள் செல்வதைத் தடுக்கவோ முயலும் போது, அவர்கள் மீது கற்களை வீசியும், தடி மற்றும் கூர்மையானப் பொருட்களைக் கொண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகப் பிரெஞ்சு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சமீபகாலமாகப் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அரசுகள் இணைந்து எல்லைக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன. </p><p>போலீசார் கடலோரப் பகுதிகளில் ரோந்துப் பணியை அதிகரித்துள்ள போதிலும், மனித கடத்தல்காரர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மிகவும் ஆக்ரோஷமான முறையில் சட்ட அமலாக்கப் படையினரை எதிர்கொண்டு படகுகளை இயக்க முயல்வது தொடர்கதையாகி வருகிறது.
</p><p>
ஆபத்தான இந்த கடல்சார் பயணங்களின் போது ஏற்படும் மோதல்கள் மற்றும் விபத்துக்களால் உயிரழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. </p><p>

இந்த வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, பிரெஞ்சு கடலோரப் பகுதிகளில் கூடுதல் காவல் படையினரைக் குவிக்கவும், கடத்தல் நெட்வொர்க்குகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் இரு நாடுகளின் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-21T08:18:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுதங்களுடன் சென்ற சரக்கு கப்பல் கடத்தல்; 6 இந்தியர்கள் உள்ளிட்ட 10 மாலுமிகள் நிலை என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/armed-cargo-ship-hijacked-near-somalia-1787295975"></link>
            <id>https://canadamirror.com/article/armed-cargo-ship-hijacked-near-somalia-1787295975</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியா அருகே சரக்கு கப்பல் ஒன்றை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.



கமரூன் நாட்டுக்குச் சொந்தமான க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியா அருகே சரக்கு கப்பல் ஒன்றை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
</p><p>


கமரூன் நாட்டுக்குச் சொந்தமான குறித்த சரக்கு கப்பல், துருக்கியில் இருந்து ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ஆப்பிரிக்க நாடொன்றை நோக்கி பயணித்துள்ளது.



இந்தக் கப்பலில் 6 இந்தியர்கள் உள்ளிட்ட 10 மாலுமிகள் பயணித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ef59c9f-539f-4daa-b3ba-f47d4c1548ff/26-6a87f8e965f90.webp' /></p><p>
</p><p>


இந்நிலையில், சோமாலியாவின் பண்ட்லெண்ட் மாகாணம், இயல் மாவட்டத்திலிருந்து சுமார் 4 கடல் மைல் தொலைவில் கப்பல் பயணித்தபோது, அதற்குள் நுழைந்த கடற்கொள்ளையர்கள் மாலுமிகளை சிறைபிடித்து கப்பலை கடத்திச் சென்றுள்ளனர்.
</p><p>


இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-21T07:03:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலாஸ்காவில் விமான விபத்தில் 8 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/8-killed-in-plane-crash-in-alaska-1787295681"></link>
            <id>https://canadamirror.com/article/8-killed-in-plane-crash-in-alaska-1787295681</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர இராணுவ ரேடார் தளத்தில் வாடகை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர இராணுவ ரேடார் தளத்தில் வாடகை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


அங்கரேஜை தளமாகக் கொண்ட செக்யூரிட்டி ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான செஸ்னா 441 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a63404e-0fba-42ff-a36d-832faf0b02ff/26-6a87f7c2a6a7e.webp' /></p><h2>கேப் நியூவென்ஹாம் நோக்கிப் பயணித்த விமானம்</h2><p>அங்கரேஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு கேப் நியூவென்ஹாம் நோக்கிப் பயணித்த விமானம், கேப் நியூவென்ஹாம் ரேடார் தளத்துக்கு மேற்கே நேற்று பிற்பகல் சுமார் 12.15 மணியளவில் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>


கேப் நியூவென்ஹாம் தளமானது அலாஸ்கா வான்வெளி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் பயணிக்கும் விமானங்களைக் கண்காணிக்கும் தொலைதூர ரேடார் தளங்களின் வலையமைப்பில் ஒன்றாகும்.
</p><p>


 இன்னிலையில் விமானம் விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-21T06:58:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டனில் கடும் வெப்ப அலைக்கு பின்னர் கொட்டும் கனமழை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heavy-rain-follows-severe-heatwave-in-britain-1787293577"></link>
            <id>https://canadamirror.com/article/heavy-rain-follows-severe-heatwave-in-britain-1787293577</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிரிட்டனில் (UK) பல வாரங்களாக நீடித்து வந்த கொளுத்தும் வெப்ப அலைக்கு பிறகு, தற்போது திடீரெனப் பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிரிட்டனில் (UK) பல வாரங்களாக நீடித்து வந்த கொளுத்தும் வெப்ப அலைக்கு பிறகு, தற்போது திடீரெனப் பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
</p><p>
 இந்த எதிர்பாராதக் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் திடீர் வெள்ளப்பெருக்கால் (Flash Floods) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6efbfebb-6d00-455c-b907-c8b99ae52cdf/26-6a87ef8b50a0d.webp' /></p><h2>தொடர்ச்சியான வெப்ப அலை</h2><p>

 சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், போக்குவரத்துச் சேவைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. </p><p>

தொடர்ச்சியான வெப்ப அலை காரணமாகப் பிரிட்டனின் நிலப்பரப்பு மிகவும் வறண்டு கடினமாக மாறியுள்ளது. 

இதனால் பெய்யும் கனமழையை நிலம் உடனடியாக உறிஞ்ச முடியாமல், நீரானது நேரடியாகச் சாலைகள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் தேங்கி திடீர் வெள்ளப்பெருக்கை உருவாக்கி வருகிறது என பிரிட்டன் வானிலை மையம் (Met Office) எச்சரித்துள்ளது.</p><p>

 அதேவேளையில், இந்தத் திடீர் மழை காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தச் சற்றே உதவினாலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்குப் போதுமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, மழை பெய்த போதிலும் பிரிட்டனில் நிலவும் கடுமையானக் குடிநீர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, குழாய் மூலம் நீர் பாய்ச்சும் ‘ஹோஸ்பைப் தடை’ (Hosepipe Ban) தொடர்ந்து அமலில் இருக்கும் என நீர் விநியோக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.</p><p> 

50 ஆண்டுகளுக்குப் பிறகு வெசெக்ஸ் வாட்டர் நிறுவனம் உள்ளிட்ட பல முன்னணி நீர் நிறுவனங்கள் சுமார் 2.7 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இந்த பயன்பாட்டுத் தடையை விதித்துள்ளன.
</p><p>
ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்ப பல வாரங்கள் தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என்பதால், பொதுமக்கள் காரை கழுவுவதற்கோ அல்லது தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கோ ஹோஸ்பைப் குழாய்களைப் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p> 

ஒரே நேரத்தில் தீவிர வெப்ப அலை, திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் குடிநீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் எனப் பிரிட்டன் மக்கள் இயற்கைச் சீற்றங்களால் பெரும் அசௌகரியங்களைச் சந்தித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-21T06:23:58+00:00</updated>
        </entry>
    </feed>
