<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-04T17:28:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தன்னை கருணைக்கொலை செய்யுமாறு கோரிய நகைச்சுவை நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-court-denies-toronto-womans-motion-1788537333"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-court-denies-toronto-womans-motion-1788537333</id>
            <summary type="text">&amp;nbsp;மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
</p><p>எனினும், இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்குப் பதிலளிக்குமாறு கனடா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>டொராண்டோவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும் நகைச்சுவைக் கலைஞருமான கிளாரி புரோஸோ , சிறுவயது முதலே கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17fafbec-6a8d-4ac7-aaaf-337e6e70589b/26-6a9ae9f6e5020.webp' /></p><p>
</p><p>பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் தனக்குக் தீராத மன உளைச்சல் நீடிப்பதால், சட்டம் வழங்கும் கருணைக்கொலைக்குத் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மே 2026-இல் அவசர மனுத் தாக்கல் செய்திருந்தார்.
</p><p>நீதிபதி கரிசிமா மாதன், புரோஸோவின் வேதனைகள் உண்மையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றபோதிலும், சட்ட விலக்கு அளிப்பது சமூகத்திலும் அரசின் கொள்கை முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மனுவை நிராகரித்தார்.
</p><p>அதேசமயம், 2024-ஆம் ஆண்டு புரோஸோ தாக்கல் செய்த அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை 14 நாட்களுக்குள் தொடங்குமாறு கனடா தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
</p><p>கனடாவில் 2021-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, தீர்க்க முடியாத நோய் மற்றும் உடல் ஊனம் உள்ளவர்கள் கருணைக்கொலை கோர முடியும்.</p><p> ஆனால், மனநலப் பிரச்சினையை மட்டுமே காரணமாகக் கொண்டு கருணைக்கொலை கோருவதற்கு அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. </p><p>இத்தடையை நீட்டிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசிய புரோஸோ, "மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களைப் போன்ற சம உரிமையோ, உடல் சார்ந்த சுய உரிமையோ இல்லை என்பதை அரசாங்கம் மீண்டும் நிரூபித்துள்ளது. </p><p>நான் தொடர்ந்து வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்" என வேதனையுடன் தெரிவித்தார்.
</p><p>அரசியலமைப்புச் உரிமைகளின்படி மனநலப் பாதிப்பு உள்ளவர்களுக்கும் கருணைக்கொலை உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்கான முதன்மை வழக்கைத் தொடர்ந்து நடத்தப்போவதாக புரோஸோவின் சட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T16:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில், சிறுவனைக் கடித்துக் கொன்ற நாய்களின் உரிமையாளருக்கு தண்டனை அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-whose-dogs-killed-11-year-old-boy-1788422224"></link>
            <id>https://canadamirror.com/article/woman-whose-dogs-killed-11-year-old-boy-1788422224</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரில் 2024 ஆம் ஆண்டு 11 வயது சிறுவனை இரண்டு நாய்கள் கடித்துக் கொன்ற வழக்கில், நாய்களின் உரிமையாளரான கிரிஸ்டல் மெக்டொனால்ட் என்பவரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரில் 2024 ஆம் ஆண்டு 11 வயது சிறுவனை இரண்டு நாய்கள் கடித்துக் கொன்ற வழக்கில், நாய்களின் உரிமையாளரான கிரிஸ்டல் மெக்டொனால்ட் என்பவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.</p><p> 
கடந்த 2024 ஏப்ரல் மாதம், கிரிஸ்டலுக்குச் சொந்தமான இரண்டு 'கேன் கோர்சோ' ரக நாய்கள் தாக்கியதில் கேச் கிரிஸ்ட் என்ற 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
</p><p> இச்சம்பவத்தில் 'மரணத்தை விளைவித்த குற்றவியல் அலட்சியம்' இழைத்ததாகக் கூறி, கடந்த மே மாதம் கிரிஸ்டலை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3e18196-06f4-4d82-90b5-7a6df6fd00bb/26-6a992852585d1.webp' /></p><p> </p><p>
புதன்கிழமை நடைபெற்ற தண்டனை தொடர்பான விசாரணையின் போது, கிரிஸ்டல் மன்றத்தில் கண்ணீருடன் பேசினார். 
சிறுவனின் இழப்பிற்குப் பிறகு தான் கடுமையான குற்ற உணர்ச்சி, துக்கம் மற்றும் அவமானத்தைச் சுமந்து வருவதாகத் தெரிவித்தார். "நான் தினமும் அவனைப் பற்றியே நினைக்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p> 
பிரிட்டிஷ் கொலம்பியாவில் தாயாருடன் வசித்து வந்த கேச், வசந்த கால விடுமுறையைக் கழிப்பதற்காக எட்மண்டனின் சம்மர்சைட் பகுதியில் வசித்து வந்த தந்தை வெஸ்லியைச் சந்திக்க வந்திருந்தான். அப்போது வெஸ்லி, கிரிஸ்டலுடன் ஒரே வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தார். </p><p>
தந்தையான வெஸ்லி வீட்டின் கரேஜில் வேலை செய்துகொண்டிருந்தபோது, சிறுவன் வீட்டிற்குள் வீடியோ கேம் விளையாடச் சென்றுள்ளான். </p><p>
45 நிமிடங்களுக்குப் பிறகு வெஸ்லி வீட்டிற்குள் சென்றபோது, சமையலறைத் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை இரு நாய்களும் சூழ்ந்திருந்தன.
</p><p>சிறுவன் கழுத்தில் ஏற்பட்ட கடுமையான கடி காயங்களால் உயிரிழந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த இரண்டு நாய்களும் தயைக்கொலை செய்யப்பட்டன.</p><p> 
சிறுவன் கேச் கொல்லப்படுவதற்கு முன்பே, இந்த நாய்கள் இரண்டு செல்லப் பிராணிகளைக் கொன்றதுடன், உரிமையாளர் கிரிஸ்டல் உட்பட மூன்று பெரியவர்களைக் கடித்துக் காயப்படுத்தியிருந்தன என்பது விசாரணையில் அம்பலமானது.</p><p> 
ஆல்பர்ட்டா உயர் நீதிமன்ற நீதிபதி எரிக் மேக்லின் பயிற்சியற்ற மற்றும் ஆபத்தான இந்த நாய்களிடமிருந்து சிறுவன் பாதிக்கப்படுவதைத் தடுக்க கிரிஸ்டல் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் கண்டித்திருந்தார். </p><p>
சிறுவனின் தந்தை வெஸ்லி நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது, கேச் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நபர் எனக் கூறி உருக்கமடைந்தார்.
</p><p> எனினும், கிரிஸ்டலைச் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். "கூடுதல் தண்டனையோ அல்லது சிறைவாசமோ ஏற்கனவே நடந்த இழப்பைச் சரிசெய்துவிடாது" என அவர் கூறினார். 
இவ்வழக்கின் இறுதித் தண்டனைத் தீர்ப்பை நீதிபதி எரிக் மேக்லின் இன்று வழங்கவுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T14:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா இணைய உளவு அமைப்பின் புதிய தலைவராக ஸ்காட் ஜோன்ஸ் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/carney-chooses-senior-bureaucrat-scott-jones-1788524000"></link>
            <id>https://canadamirror.com/article/carney-chooses-senior-bureaucrat-scott-jones-1788524000</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் இணைய வழியிலான உளவு அமைப்பான &#039;கமினிகேஷன்ஸ் செக்யூரிட்டி எஸ்டாப்ளிஷ்மென்ட்&#039; தலைவராக மூத்த அரசு அதிகாரி ஸ்காட் ஜோன்ஸை பிரதமர் மார்க் கார்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் இணைய வழியிலான உளவு அமைப்பான 'கமினிகேஷன்ஸ் செக்யூரிட்டி எஸ்டாப்ளிஷ்மென்ட்' தலைவராக மூத்த அரசு அதிகாரி ஸ்காட் ஜோன்ஸை பிரதமர் மார்க் கார்னி நியமித்துள்ளார்.</p><p> 
தற்போது ஓய்வு பெறவுள்ள கரோலின் சேவியருக்குப் பதிலாக ஸ்காட் ஜோன்ஸ் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர் 'ஷேர்டு சர்வீசஸ் கனடா' அமைப்பின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.</p><p> 
அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இணைய வழியில் வெளிநாட்டு உளவுத் தகவல்களைச் சேகரிப்பதும், இணைய அச்சுறுத்தல்களிலிருந்து கனடாவைப் பாதுகாப்பதும் சி.எஸ்.இ அமைப்பின் முதன்மைப் பணியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b6a280b-fffe-490f-abee-250d50fdb7c7/26-6a9ab5e1f0eed.webp' /></p><p> </p><p>
ஸ்காட் ஜோன்ஸ் 2018 முதல் 2021 வரை CSE அமைப்பின் கீழ் இயங்கும் 'கனடியன் சென்டர் ஃபார் சைபர் செக்யூரிட்டி' அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார். </p><p>மேலும், 2008 முதல் 2018 வரை இந்த அமைப்பில் பல்வேறு முக்கியப் பதவிகளை அவர் வகித்துள்ளார். </p><p>
ஓய்வு பெறவுள்ள கரோலின் சேவியர் கனடா நாட்டுக்கு ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைகளைப் பாராட்டிப் பிரதமர் மார்க் கார்னி தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையை கடிக்கும் வாழ்க்கை செலவு; ஐரோப்பாவிற்குப் புலம்பெயரும் பிரித்தானியர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/biting-cost-of-living-britons-emigrating-to-europe-1788509863"></link>
            <id>https://canadamirror.com/article/biting-cost-of-living-britons-emigrating-to-europe-1788509863</id>
            <summary type="text">&amp;nbsp; பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்களுக்குக் குடிபெயரும் ‘காஸ்ட் ஆஃப் லீவிங்’ (Cost of Leaving) கலாச்சாரம் பிரிட்டன்வாசிகளிடையே அதிகரித்து வருகிறமை ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p> 

பாரிஸ், ஸ்டாக்ஹோம் மற்றும் பெர்லின் போன்ற ஐரோப்பிய நகரங்களில் வாழ்க்கைச் செலவு லண்டனை விட கணிசமாகக் குறைவாக இருப்பது சர்வதேச நுகர்வோர் குறியீட்டு (Numbeo Cost of Living Index) ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64fffa31-2370-4d12-b1bd-eb7d7a9d691f/26-6a9a7ea8502ff.webp' /></p><h2>வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல்</h2><p>
</p><p>
சர்வதேச வாழ்வாதாரக் குறியீட்டின் தரவுகளின்படி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் தனிநபர் ஒருவர் சராசரியாக வாழத் தேவையான பணத்தை விட, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 11 சதவீதமும், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் 10 சதவீதமும் குறைவான செலவிலேயே வாழ முடியும் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p> 

குறிப்பாக லண்டனில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் சராசரி வாடகை ஐரோப்பிய தலைநகரங்களை விட 35 முதல் 40 சதவீதம் வரை அதிகமாக உள்ளது, பிரிட்டன் மக்களை பிற நாடுகளை நோக்கித் தள்ளும் முதன்மை காரணியாக மாறியுள்ளது.
</p><p>
வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல், பொதுப்போக்குவரத்து, மின்சாரம் மற்றும் உணவகங்களின் செலவுகளிலும் பிரிட்டனை விட ஐரோப்பிய நகரங்கள் அதிக சேமிப்பை வழங்கி வருகின்றன. </p><p>உதாரணமாக, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் மற்றும் இத்தாலியின் ரோம் ஆகிய நகரங்கள் லண்டனை விட சுமார் 45 சதவீதம் வரை மலிவான வாழ்க்கைச் சூழலை வழங்குவதால், வீட்டில் இருந்தே பணியாற்றும் (Remote Work) இளம் பிரிட்டன் ஊழியர்கள் பெருமளவில் அந்நகரங்களை நோக்கிப் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
</p><p>
கடந்த சில ஆண்டுகளாகப் பிரிட்டனில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், குறைந்த செலவில் உயர்தர வாழ்க்கை முறையைப் (Quality of Life) பெற விரும்புவோருக்குப் பாரிஸ், பர்லின், பார்சிலோனா போன்ற நகரங்கள் சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளன.</p><p>

 பிரிட்டன் அரசு வரி விதிப்புகளையும் வாழ்க்கைச் செலவுகளையும் சீரமைக்கத் தவறினால், நாட்டின் திறமைவாய்ந்த பணியாளர்கள் (Brain Drain) ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்வது மேலும் அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T13:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/officials-urge-parents-to-check-childrens-vaccines-1788523480"></link>
            <id>https://canadamirror.com/article/officials-urge-parents-to-check-childrens-vaccines-1788523480</id>
            <summary type="text">கனடாவில் பள்ளிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குரிய தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்தியுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் பள்ளிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குரிய தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்தியுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அவசரமாக வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>குளிர்காலம் தொடங்கவுள்ள சூழலில், குழந்தைகள் வகுப்பறைகளுக்குள் ஒன்றாக அதிக நேரத்தைச் செலவிடுவார்கள்.
</p><p>இதனால் காய்ச்சல், கோவிட்-19 மற்றும் ஆர்.எஸ்.வி போன்ற நோய்த்தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7011225c-7247-4a32-b4eb-732bcfb7f261/26-6a9ab3d995055.webp' /></p><p> </p><p>
குறிப்பாகத் தட்டம்மை நோய் மீண்டும் பரவுவது குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். </p><p>
அரசின் தரவுகளின்படி, கடந்த ஆண்டில் 2 வயதுக் குழந்தைகளில் 85 சதவீதம் பேர் மட்டுமே தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் ரூபெல்லா தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். </p><p>
தட்டம்மை நோய் பரவாமல் தடுக்கவும், சமூக நோய் எதிர்ப்புச் சக்தியைப் பேணவும் குறைந்தபட்சம் 95 சதவீதக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். </p><p>
ஆனால் தற்போதைய 85 சதவீத விகிதம் இந்த இலக்கை விடக் குறைவாக இருப்பதால், நோய் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது. </p><p>
பெற்றோர் பிள்ளைகளின் தடுப்பூசி குறித்து கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T13:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு லட்சம் ஊழியர்களை வேலை நீக்கும் ஜேர்மன் நிறுவனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/german-company-volkswagen-to-lay-off-100-000-1788527640"></link>
            <id>https://canadamirror.com/article/german-company-volkswagen-to-lay-off-100-000-1788527640</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உலக புகழ் பெற்ற ஜேர்மன் வாகன நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், உலகளாவிய கார் தொழிற்துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மறுசீரமைப்பாக அமையவிருக்கும் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உலக புகழ் பெற்ற ஜேர்மன் வாகன நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், உலகளாவிய கார் தொழிற்துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மறுசீரமைப்பாக அமையவிருக்கும் ஒரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் மொத்தம் 100,000 வேலைகளைக் குறைக்கப் போவதாக வியாழக்கிழமை அறிவித்தது .</p><p>

ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட 50,000 ஆட்குறைப்புகளுக்குக் கூடுதலாக, மேலும் 50,000 வேலைகளைக் குறைக்கும் திட்டத்திற்கு நிர்வாகமும் தொழிற்சங்கங்களும் ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ac5f4ad-b722-4ff9-a77f-49621b36f400/26-6a9ac41a5cfb6.webp' /></p><h2>ஒரு லட்சம் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும்&nbsp;</h2><p>
</p><p>
பொருளாதார யதார்த்தங்களுக்கு ஏற்ப பணியாளர் எண்ணிக்கையை முறையாகச் சீரமைப்பது அவசியம் என்று, ஃபோக்ஸ்வேகன் மட்டுமின்றி ஆடி மற்றும் போர்ஷே ஆகிய நிறுவனங்களையும் உள்ளடக்கிய ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அறிக்கை தெரிவித்தது. </p><p>

மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட 100,000 ஆட்குறைப்புகள், உலகெங்கிலும் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஊழியர்களில் சுமார் 15 சதவீதத்திற்குச் சமமாகும். 2009-ல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திவாலானதாக அறிவித்த பிறகு மேற்கொண்ட 50,000 ஆட்குறைப்புகளை இந்த ஆட்குறைப்பு விஞ்சியுள்ளது.</p><p>

திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு, தொழிற்சங்கங்களும் நிர்வாகமும் பகிரங்கமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டன.</p><p> ஒரு லட்சம் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என்ற தகவல் நிறுவனத்திற்குள் தெரிவிக்கப்படுவதற்கு முன்பே ஊடகங்களில் வெளியானதால், நிர்வாகம் தொழிலாளர்களிடம் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டின.
</p><p>
மேலும், ஹனோவர், எம்டன், ஸ்விக்காவ் மற்றும் நெக்கர்சுல்ம் ஆகிய இடங்களில் உள்ள நான்கு முக்கிய ஜெர்மன் ஆலைகளின் நீண்டகால எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் ஃபோக்ஸ்வேகன் கூறியுள்ளது. </p><p>அவற்றின் மூடல், ஃபோக்ஸ்வேகனின் தாய்நாட்டில் அதன் தொழிற்சாலைகள் முழு அளவில் மூடப்படும் முதல் நிகழ்வாக அமையும்.

அமெரிக்காவின் வரிகள் , சீனாவின் போட்டி மற்றும் மின்சார வாகனங்களுக்கான தேவையில் ஏற்பட்டுள்ள மந்தமான வளர்ச்சி ஆகியவற்றால் , ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் சிக்கலில் உள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T13:11:02+00:00</updated>
        </entry>
    </feed>
