<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-04T23:17:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள அனர்த்தம் ; 9 நாட்களின் பின் மண்ணுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-rescued-alive-after-9-day-burial-struggle-1788559659"></link>
            <id>https://canadamirror.com/article/two-rescued-alive-after-9-day-burial-struggle-1788559659</id>
            <summary type="text">நேபாளத்தில் பனிப்பாறை மற்றும் சேறு சரிவு ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு, மேல் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த (சஞ்சய் சா )...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் பனிப்பாறை மற்றும் சேறு சரிவு ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு, மேல் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த (சஞ்சய் சா )மற்றும் (கபீர் மகர்ஜன் )ஆகிய இரண்டு தொழிலாளர்கள் இன்று (04) உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
சுரங்கப்பாதைக்குள் இருந்து சத்தம் கேட்டதை அடுத்து, இராணுவம், காவல்துறை மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் இந்தப் பிரதான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2956721c-7e28-4168-8ad8-bc40cb51cfb2/26-6a9b412ca5266.webp' /></p><h2><span style="font-size: 14px;">மீட்கப்பட்ட இருவரும் தலைநகர் காத்மண்டுவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர்.</span></h2><p>
அத்துடன் ஆகஸ்ட் 26 அன்று நேரிட்ட இந்தப் பேரிடரால் 1,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் திட்டச் சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T22:07:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தன்னை கருணைக்கொலை செய்யுமாறு கோரிய நகைச்சுவை நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-court-denies-toronto-womans-motion-1788537333"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-court-denies-toronto-womans-motion-1788537333</id>
            <summary type="text">&amp;nbsp;மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
</p><p>எனினும், இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்குப் பதிலளிக்குமாறு கனடா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>டொராண்டோவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும் நகைச்சுவைக் கலைஞருமான கிளாரி புரோஸோ , சிறுவயது முதலே கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17fafbec-6a8d-4ac7-aaaf-337e6e70589b/26-6a9ae9f6e5020.webp' /></p><p>
</p><p>பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் தனக்குக் தீராத மன உளைச்சல் நீடிப்பதால், சட்டம் வழங்கும் கருணைக்கொலைக்குத் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மே 2026-இல் அவசர மனுத் தாக்கல் செய்திருந்தார்.
</p><p>நீதிபதி கரிசிமா மாதன், புரோஸோவின் வேதனைகள் உண்மையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றபோதிலும், சட்ட விலக்கு அளிப்பது சமூகத்திலும் அரசின் கொள்கை முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மனுவை நிராகரித்தார்.
</p><p>அதேசமயம், 2024-ஆம் ஆண்டு புரோஸோ தாக்கல் செய்த அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை 14 நாட்களுக்குள் தொடங்குமாறு கனடா தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
</p><p>கனடாவில் 2021-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, தீர்க்க முடியாத நோய் மற்றும் உடல் ஊனம் உள்ளவர்கள் கருணைக்கொலை கோர முடியும்.</p><p> ஆனால், மனநலப் பிரச்சினையை மட்டுமே காரணமாகக் கொண்டு கருணைக்கொலை கோருவதற்கு அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. </p><p>இத்தடையை நீட்டிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசிய புரோஸோ, "மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களைப் போன்ற சம உரிமையோ, உடல் சார்ந்த சுய உரிமையோ இல்லை என்பதை அரசாங்கம் மீண்டும் நிரூபித்துள்ளது. </p><p>நான் தொடர்ந்து வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்" என வேதனையுடன் தெரிவித்தார்.
</p><p>அரசியலமைப்புச் உரிமைகளின்படி மனநலப் பாதிப்பு உள்ளவர்களுக்கும் கருணைக்கொலை உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்கான முதன்மை வழக்கைத் தொடர்ந்து நடத்தப்போவதாக புரோஸோவின் சட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T21:37:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் பாதுகாப்பு சேவை தலைமையகத்தை தாக்கிய ரஷ்ய ட்ரோன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-drone-hits-ukraine-security-service-hq-1788557824"></link>
            <id>https://canadamirror.com/article/russian-drone-hits-ukraine-security-service-hq-1788557824</id>
            <summary type="text">கீவ் நகரில் உள்ள உக்ரைனின் SBU பாதுகாப்பு சேவைகளின் தலைமையகத்தை ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி&amp;nbsp; வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீவ் நகரில் உள்ள உக்ரைனின் SBU பாதுகாப்பு சேவைகளின் தலைமையகத்தை ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி&nbsp; வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். </p><p>உக்ரைன்ஸ்கா பிரவ்தா செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், கட்டிடத்தின் முன்புறத்தில் உள்ள குறைந்தது இரண்டு ஜன்னல்களில் இருந்து கருப்பு புகை வெளியேறுவது போல தெரிந்தது, அதே நேரத்தில் வெளியே ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a95f0a39-53f9-4b2a-b953-c062f897eb1e/26-6a9b3a0272357.webp' /></p><p>
</p><p>&nbsp;நகர மையத்தின் மீதான தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்தனர் என கீவ் நகர மேயர் விட்டாலி கிளிச்கோ தெரிவித்தார். </p><p>சமீபத்திய வாரங்களில் ரஷியா, உக்ரைன் மீதான தனது பகல் நேர தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>சில சமயங்களில், வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்க கடினமான ஜெட் விமானங்களையும் அது பயன்படுத்துகிறது.
</p><p>
தாக்குதலுக்கு பிறகு "SBU-வின் தலைவர் ஒலெக்சாண்டர் போக்லாடுடன்" பேசியதாக ஜெலென்ஸ்கி கூறினார்.</p><p> "துரதிர்ஷ்டவசமாக, கீவ் நகரின் வோலோடிமிர்ஸ்கா தெருவில், புனித சோபியா பேராலயத்திற்கு எதிரே உள்ள SBU-வின் மைய கட்டிடத்தின் மீது ஒரு ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியுள்ளது," என்று ஜெலென்ஸ்கி டெலிகிராமில் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-04T21:37:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வாகனம் மோதி எலக்ட்ரிக் பைக் ஓட்டுநர் பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crash-involving-motorcycle-passenger-vehicle-1788542553"></link>
            <id>https://canadamirror.com/article/crash-involving-motorcycle-passenger-vehicle-1788542553</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோவில் எல்மர் பகுதிக்குத் தெற்கே வெள்ளிக்கிழமை காலை எஸ்.யு.வீ வாகனம் மோதியதில் எலக்ட்ரிக் பைக் ஓட்டிச் சென்றவர் உயிரிழந்தார். 
மலாஹைட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோவில் எல்மர் பகுதிக்குத் தெற்கே வெள்ளிக்கிழமை காலை எஸ்.யு.வீ வாகனம் மோதியதில் எலக்ட்ரிக் பைக் ஓட்டிச் சென்றவர் உயிரிழந்தார்.</p><p> 
மலாஹைட் பகுதியில் உள்ள ஜான் வைஸ் லைன் மற்றும் இம்பீரியல் ரோடு சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 6:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. </p><p>
ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பைக் ஓட்டுநர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22b17343-544d-42f7-8730-ed07c23b9adb/26-6a9afe5b0809a.webp' /></p><p> </p><p>எஸ்.யு.வீ வாகனத்தில் ஆறு பேர் பயணித்ததாகவும், அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என குறிப்பிட்டனர்.</p><p>எனினும், அந்த காரின் பயணிகள் பக்கக் கதவு பலத்த சேதமடைந்துள்ளது. 
விபத்துக்கான காரணம் மற்றும் யார் மீது தவறு என்பதைத் துல்லியமாகக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T18:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோவில் பலத்த புயல்: சீரமைக்கப்படும் மின்சார விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cleanup-continues-after-destructive-ontario-1788539021"></link>
            <id>https://canadamirror.com/article/cleanup-continues-after-destructive-ontario-1788539021</id>
            <summary type="text">தெற்கு ஒன்டாரியோவில் இந்த வாரம் வீசிய கடும் இடிமின்னலுடன் கூடிய புயலைத் தொடர்ந்து, மின்தடை ஏற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரத்தை மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஒன்டாரியோவில் இந்த வாரம் வீசிய கடும் இடிமின்னலுடன் கூடிய புயலைத் தொடர்ந்து, மின்தடை ஏற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரத்தை மீண்டும் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p> 
இதனால் மின்சாரமின்றி இருளில் மூழ்கியிருந்த கட்டிடங்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது.</p><p> 
புதன்கிழமை சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்தது. அபாயகரமான சூறாவளிக் காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின்கம்பிகள் அறுந்து விழுந்தன, மேலும் முக்கிய நகரச் சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/486d2baa-ca51-4f11-bb06-e68fe96e6109/26-6a9af08f02165.webp' /></p><p> </p><p>
டொராண்டோ தீயணைப்புத் துறைக்கு 24 மணி நேரத்திற்குள் சுமார் 1,500 அவசர அழைப்புகள் வந்தன. 2013 பனிப்புயலுக்குப் பிறகு ஒரே நாளில் பதிவான இரண்டாவது அதிகபட்ச அவசர அழைப்பு அளவு இதுவாகும்.</p><p>
டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் புயல் பரவலான பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக நகர மேலாளர் பால் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
</p><p>மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களுள் டொராண்டோவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 50,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய ரொஜர்ஸ் மைதானமும் ஒன்றாகும்.</p><p> அங்கு வீசிய அதிவேகக் காற்றினால் பார்வையாளர் இருக்கைகள் பிடுங்கி எறியப்பட்டு, அரங்கின் சில பகுதிகள் நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளன. </p><p>
டொராண்டோவில் ஏற்பட்ட இந்தச் சேதங்கள் 'டவுன்பர்ஸ்ட்' காரணமாகவே நிகழ்ந்துள்ளதாக 'நார்தர்ன் டொர்னாடோஸ் புராஜெக்ட்' ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T17:30:52+00:00</updated>
        </entry>
    </feed>
