<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-09T14:56:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது; ஈரான் விடாப்பிடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-remands-strait-of-hormuz-not-fully-reopen-1786254202"></link>
            <id>https://canadamirror.com/article/iran-remands-strait-of-hormuz-not-fully-reopen-1786254202</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அது மட்டுமே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அது மட்டுமே போதுமானதாக இருக்காது என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>இதற்கிடையே, அப் பகுதியில் ஈரான் மற்றொரு கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையின் இருபுறமும் அமைந்துள்ள ஈரானும் ஓமானும் புதிய கப்பல் போக்குவரத்து பாதை குறித்த ஒப்பந்தத்தை நெருங்கியுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.</p><p> இருப்பினும், நீரிணையை மீண்டும் திறப்பது அமெரிக்கா ஈரானுக்கு வழங்கும் நஷ்டஈடு உள்ளிட்ட பிற நிபந்தனைகளிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>மேலும், பழைய கப்பல் போக்குவரத்துத் திட்டம் இனி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், நிரந்தரப் பாதை குறித்த சட்ட மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை தற்காலிகப் பாதை குறித்து ஓமானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறினார்.</p><p>நீரிணையின் கட்டுப்பாடு குறித்து எட்டப்படும் ஒப்பந்தம் மூலம் வழமையான எண்ணெய் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்றும், இது பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் தொடங்கிய மோதலை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.</p><p>உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு சென்ற இந்த முக்கிய நீர்வழியில் செல்லும் கப்பல்கள் மீதும், வளைகுடா பகுதியிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. </p><p>இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்ற தனது அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவன தொடர்புடைய சரக்குக் கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-09T12:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யேமனில் மூலிகை மருந்துகளால் உயிருக்கு ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/herbal-medicines-health-crisis-in-yemen-1786277745"></link>
            <id>https://canadamirror.com/article/herbal-medicines-health-crisis-in-yemen-1786277745</id>
            <summary type="text">யேமனில் நிலவும் மோதல்கள் மற்றும் சுகாதார அமைப்பின் வீழ்ச்சி காரணமாக, போதிய மருத்துவ வசதிகளின்றி இலட்சக்கணக்கான மக்கள் மாற்று மூலிகை மருத்துவங்களை நாடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமனில் நிலவும் மோதல்கள் மற்றும் சுகாதார அமைப்பின் வீழ்ச்சி காரணமாக, போதிய மருத்துவ வசதிகளின்றி இலட்சக்கணக்கான மக்கள் மாற்று மூலிகை மருத்துவங்களை நாடிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>தாஸ் பகுதியைச் சேர்ந்த ஜலீலா என்ற பெண், தனக்கு ஏற்பட்ட கல்லீரல் புற்றுநோய்க்கு முறையான சிகிச்சை பெற முடியாமல், மூலிகை மருத்துவத்தை நாடி நோய் முற்றிய நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>யேமனில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவமனைகள் இயங்காத நிலையில், போலி மூலிகை மருத்துவர்கள் மற்றும் தேன் விற்பனையாளர்கள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி வியாபாரம் செய்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>அறிவியல் பூர்வமற்ற இத்தகைய மூலிகை சிகிச்சைகளால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக சுட்டிக்காட்டும் மருத்துவ நிபுணர்கள், அரசாங்கம் இவ்வாறான மூலிகை மையங்கள் மீது உடனடி கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-09T12:25:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை வியக்க வைத்த நைஜீரியா ;1,500 தம்பதிகளுக்குத் திருமணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nigeria-amazes-world-1-500-couples-married-1786277373"></link>
            <id>https://canadamirror.com/article/nigeria-amazes-world-1-500-couples-married-1786277373</id>
            <summary type="text">வடக்கு நைஜீரியாவின் கனோ மாநில ஆளுநர் அப்பா கபீர் யூசுப் ஏற்பாடு செய்திருந்த கூட்டுத் திருமண விழாவில் சுமார் 1,500 தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர் .க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு நைஜீரியாவின் கனோ மாநில ஆளுநர் அப்பா கபீர் யூசுப் ஏற்பாடு செய்திருந்த கூட்டுத் திருமண விழாவில் சுமார் 1,500 தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர் .</p><p>குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சமூக நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்த இரண்டு நாள் நிகழ்வு ஒரு வழி என பிராந்திய அரசாங்கம் விவரித்தது.</p><p>பொருளாதார ரீதியாக நிலையற்ற நிலையில் உள்ள எங்கள் குடும்பங்களுக்கும், கணவன்மார்களாகிய எங்களுக்கும் திருமணம் செய்துகொள்ள உதவுவதே இந்தத் திருமணத்தின் முழு நோக்கமாகும். அதனால்தான் அரசாங்கம் எங்களுக்குத் திருமணம் செய்து வைக்க உதவுகிறது என்று மணமகன் அபுபக்கர் அலியு மூசா அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.</p><p>யூசுப் நிர்வாகம் கூட்டுத் திருமணத்தை ஏற்பாடு செய்வது இது இரண்டாவது முறையாகும்.கானோவின் பிராந்திய அரசாங்கத்தின்படி, ஒவ்வொரு மணமகளுக்கும் 200,000 நைரா (147 டாலர், 127 யூரோ) வரதட்சணையாகவும், ஒரு சிறு தொழிலைத் தொடங்குவதற்கான ஆதரவும் வழங்கப்பட்டது.</p><p>தம்பதியினருக்கு படுக்கைகள், மெத்தைகள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களும் வழங்கப்பட்டன. திருமணத்திற்கு முன்பு தம்பதியினர் பரிசோதனை மற்றும் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p><p>கானோவில் நம்பிக்கையை மீட்டெடுப்பதையும், கண்ணியமான குடும்ப வாழ்க்கையை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு துணிச்சலான சமூகத் தலையீடு" என இந்தத் திட்டத்தை ஆளுநர் யூசுப் விவரித்தார்.</p><p>திருமணச் செலவைச் சமாளிக்க சிரமப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக மட்டுமல்லாமல், குடும்பங்களை வலுப்படுத்தவும், மாநிலத்தில் சமூக நிலைத்தன்மையை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-09T12:09:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் மாணவர்களின் நீச்சல் உடை விற்பனைக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ban-sale-of-student-used-swimwear-in-japan-1786275814"></link>
            <id>https://canadamirror.com/article/ban-sale-of-student-used-swimwear-in-japan-1786275814</id>
            <summary type="text">ஜப்பானில் பயன்படுத்திய பாடசாலை மாணவர்களின் நீச்சல் உடைகளை இணையவழியில் விற்பனை செய்வதற்கு முன்னணி இணையவழி விற்பனை நிறுவனமான மெர்காரி திடீர் தடை விதித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் பயன்படுத்திய பாடசாலை மாணவர்களின் நீச்சல் உடைகளை இணையவழியில் விற்பனை செய்வதற்கு முன்னணி இணையவழி விற்பனை நிறுவனமான மெர்காரி திடீர் தடை விதித்துள்ளது.</p><p>தனிநபர்கள் புதிய மற்றும் பயன்படுத்திய பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் மெர்காரி இணையவழிச் சந்தையில், கடந்த 3ஆம் திகதி முதல் பயன்படுத்திய பாடசாலை நீச்சல் உடைகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜப்பானில் பாடசாலை மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி உடற்கல்வியின் ஒரு பகுதியாக வழங்கப்படுகின்றது. இதற்காக மாணவர்கள் அணியும் நீச்சல் உடைகள் பொதுவாக கருப்பு அல்லது அடர் நீல நிறத்தில் எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இவை ஜப்பானிய மொழியில் ‘ஸ்கூல் மிசுகி’ என அழைக்கப்படுகின்றன.</p><p>மாணவர்களின் பெயரை எழுதுவதற்கான இடம் உள்ளிட்ட அடையாளங்கள் சில நீச்சல் உடைகளில் இடம்பெற்றிருப்பதுடன், சில பாடசாலைகளின் சின்னங்களும் அச்சிடப்பட்டிருக்கும்.</p><p>குழந்தைகள் வளர்ச்சியடைவதால், குறுகிய காலமே பயன்படுத்தப்பட்ட நிலையில் நல்ல தரத்திலுள்ள நீச்சல் உடைகள் பல வீடுகளில் மீதமாகின்றன. இதனால், அவற்றை மீண்டும் விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் குடும்பங்கள் இணையவழிச் சந்தைகளை பயன்படுத்தி வந்துள்ளன.</p><p>எனினும், பயன்படுத்திய பாடசாலை நீச்சல் உடைகளுக்கு சிலர் தவறான நோக்கத்துடன் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்து, அவற்றின் விற்பனையை மெர்காரி நிறுவனம் தடை செய்துள்ளது.</p><p>பயன்படுத்திய பாடசாலை நீச்சல் உடைகள் குறிப்பிட்ட சிலரால் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதாகவும், குறிப்பாக அவை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவையாக இருப்பது சில வாங்குபவர்களுக்கு ஈர்ப்பாக அமைவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>இத்தகைய நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் விற்பனைப் பரிவர்த்தனைகளை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என எச்சரித்துள்ள நிறுவனம், தடையை மீறி விற்பனை செய்ய முயற்சிக்கும் நபர்களின் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T11:44:08+00:00</updated>
        </entry>
    </feed>
