<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-20T15:26:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால்ட் ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு கனடா பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-wildfires-responsible-for-much-of-the-smoke-1784541350"></link>
            <id>https://canadamirror.com/article/us-wildfires-responsible-for-much-of-the-smoke-1784541350</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் நிலவும் மோசமான காற்றுத் தரக் குறைவிற்கும் புகை மூட்டத்திற்கும், அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் நிலவும் மோசமான காற்றுத் தரக் குறைவிற்கும் புகை மூட்டத்திற்கும், அமெரிக்க-கனடா எல்லையின் தெற்குப் பகுதியில் (அமெரிக்காவில்) எரிந்து வரும் காட்டுத் தீயே முக்கியக் காரணம் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
மின்னல் காரணமாக உள்ளூர் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும், எல்லைப் பகுதியில் புகையின் அளவு அதிகரிக்க அமெரிக்காவில் எரியும் காட்டுத் தீயே பிரதான காரணம் என மாகாண காட்டுத் தீ சேவை மையம் சனிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பார்வைத் திறன் குறைவதோடு காற்றுத் தரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2901a05a-7c24-4c5c-9b55-de4f9766c8b4/26-6a5df0a7993b8.webp' /></p><p>
அதேவேளையில், எல்லை தாண்டிப் பரவும் காட்டுத் தீ புகை மூட்டம் இரு நாடுகளுக்குமிடையே அரசியல் ரீதியான காரசார விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
 அமெரிக்க நகரங்களான சிகாகோ, நியூயார்க் மற்றும் டெட்ராய்ட் ஆகியவை புகையினால் சூழப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் கனடாவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T13:28:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை மாளிகை இரகசியத் தகவல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/white-house-secret-information-exposed-iran-war-1784551892"></link>
            <id>https://canadamirror.com/article/white-house-secret-information-exposed-iran-war-1784551892</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில், வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இரகசியத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில், வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இரகசியத் தகவல் கசிந்துள்ளதாக 'பபிள்மேப்ஸ்' நிறுவனம் தொரிவித்துள்ளது.
</p><p>


இதைப்பயன்படுத்தி பொலி மார்க்கெட்' போன்ற ஒன்லைன் சூதாட்டத் தளங்களில் 3 அநாமதேயக் கணக்குகள் சரியாகப் பந்தயம் கட்டி, $6,00,000-க்கும் அதிகமாக (சுமார் ₹5.77 கோடி) இலாபம் ஈட்டியுள்ளதை 'பபிள்மேப்ஸ்' நிறுவனம் கண்டறிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deab0e6b-ac44-4c18-8e5e-3c6814820df4/26-6a5e19d6218db.webp' /></p><p>



ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டெலிப்ரொம்ப்டர் ஒபரேட்டரான கேப்ரியல் பெரெஸ், ஜனாதிபதியின் உரைகளை முன்கூட்டியே அணுகி தகவல்களைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>


இவர் இதன் மூலம் $1,00,000-க்கும் மேல் சம்பாதித்துள்ளதாக அமெரிக்காவின் (CFTC) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
</p><p>


நிதி ஆதாயங்களுக்காக இரகசியத் தகவல்களைப் பகிரக் கூடாது என்று ஏற்கனவே மார்ச் மாதம் ஊழியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில் இந்த முறேகடு நடந்துள்ளது.</p><p>



இதனால் வெள்ளை மாளிகையின் பல உயர் அதிகாரிகள் தற்போது தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-07-20T12:49:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எண்டி பர்ன்ஹாம் பிரித்தானியாவின் 59ஆவது பிரதமரானார் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/andy-burnham-became-britain-s-59th-prime-minister-1784550572"></link>
            <id>https://canadamirror.com/article/andy-burnham-became-britain-s-59th-prime-minister-1784550572</id>
            <summary type="text">&amp;nbsp; பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக எண்டி பர்ன்ஹாம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக எண்டி பர்ன்ஹாம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின் போது, புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு மன்னர் சார்ள்ஸ் III கேட்டுக்கொண்டார்.</p><p>

எண்டி பர்ன்ஹாம் பிரதமராக நியமிக்கப்பட்டதை உறுதிபடுத்தி பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3a4f455-e23b-4846-9207-502ec453b5e0/26-6a5e14adabc1d.webp' /></p><p> </p><p>

"மன்னர், கௌரவத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் எண்டி பர்ன்ஹாமைச் சந்தித்து, புதிய நிர்வாகத்தை அமைக்குமாறு கோரினார்.
</p><p>
மன்னரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட எண்டி பர்ன்ஹாம், பிரதமர் மற்றும் திறைசேரியின் முதல் பிரபுவாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ' மன்னரின் கையை முத்தமிடும்' (Kissed hands) மரபுச் சடங்கை நிறைவு செய்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

அரண்மனை அறிக்கையில் பர்ன்ஹாம் மன்னரின் "கைகளை முத்தமிட்டார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர்கள் இருவரும் உண்மையில் கைகுலுக்கிக் கொண்டதாகவே கருதப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-20T12:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூகுள் மேப்ஸ் செயலி குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/google-maps-said-a-hike-would-take-5-hours-1784547009"></link>
            <id>https://canadamirror.com/article/google-maps-said-a-hike-would-take-5-hours-1784547009</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா&amp;nbsp; மாகாணத்தில் மிகவும் சவாலான மலைப்பாதையில் ஆபத்தில் சிக்கிய மலைப்பயணிகள்&amp;nbsp; சிலர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா&nbsp; மாகாணத்தில் மிகவும் சவாலான மலைப்பாதையில் ஆபத்தில் சிக்கிய மலைப்பயணிகள்&nbsp; சிலர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். </p><p>
இவர்கள் தங்கள் பயணத்தை திட்டமிட கூகுள் மேப்ஸ் செயலியை மட்டுமே நம்பியிருந்ததே இந்த ஆபத்திற்கு முக்கியக் காரணம் என தெரியவந்துள்ளது.</p><p>
இதனைத் தொடர்ந்து, கரடுமுரடான காட்டுப் பாதைகள் மற்றும் மலைப் பகுதிகளுக்குச் செல்லும் போது கூகுள் மேப்ஸை முழுமையாக நம்ப வேண்டாம் என 'லயன்ஸ் பே தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர்' பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d21219a-ed81-4dcb-bc31-b51ee9bacd96/26-6a5e06c2f032f.webp' /></p><p>
மீட்கப்பட்ட பயணிகள் பயன்படுத்திய கூகுள் மேப்ஸ் வரைபடத்தின் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள மீட்புக் குழுவினர், கூகுள் மேப்ஸால் ஏற்படும் இதுபோன்ற ஆபத்துகள் இது முதன்முறையல்ல எனக் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>'ஹவ் சவுண்ட் கிரெஸ்ட்' பாதையின் ஒரு பகுதியைக் கடக்க 5 மணி நேரமும் 13 நிமிடங்களும் மட்டுமே ஆகும் என கூகுள் மேப்ஸ் காட்டியிருந்தது.
</p><p>18 கிலோமீட்டர் நீளமுடைய அந்தப் பாதையானது 1,300 மீட்டருக்கும் அதிகமான செங்குத்தான ஏற்ற இறக்கங்கள், பாறைகள் நிறைந்த பகுதிகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டது. </p><p>
இந்த மலையேற்றத்தை முழுமையாகக் கடக்க உண்மையில் 12 முதல் 14 மணி நேரம் வரை ஆகும்.
பயணக் காலம் குறித்து தவறான தகவல்களை நம்புவது தொடர்ச்சியான பல ஆபத்துகளுக்கு வழிவகுக்கும் என மீட்புக் குழு எச்சரித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T11:40:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கொலையுடன் தொடர்புடைய நபர்களை தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-identify-man-woman-wanted-in-niagara-1784545933"></link>
            <id>https://canadamirror.com/article/police-identify-man-woman-wanted-in-niagara-1784545933</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேகநபர்களான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேகநபர்களான இருவரைக் பொலிஸார் உத்தியோகபூர்வமாக அடையாளம் கண்டுள்ளதுடன் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
</p><p>ஜூலை 16 இரவு 9 மணியளவில் தொரோல்ட் ஸ்டோன் அமைந்துள்ள வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.</p><p>
அங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b166332-2f37-440c-ad4c-b18b6ab1477e/26-6a5e028f3dc75.webp' /></p><p>
இந்தத் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டு வருகின்றனர்:
</p><p>23வயதான மரூஃப் பாங்கி : மெலிந்த உடலமைப்பு மற்றும் இருண்ட நிறமுடைய இவர், தாடி மற்றும் தலைமுடியின் தோற்றத்தை மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
</p><p>30 வயதான ஜோஸ்டா கிரேஸ் மெக்நீல்: இவரது கழுத்தின் இடதுபுறத்தில் சிறகைக் குறிக்கும் பச்சை குத்தப்பட்ட தனித்துவமான அடையாளம் உள்ளது.</p><p>
இவர்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக தங்கள் தாடி, தலைமுடியின் நிறம், ஒப்பனை மற்றும் ஆடை அமைப்புகளை மாற்றியமைக்கக் கூடும் என புலனாய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இதுவரை கைப்பற்றப்படாததால், இவர்கள் இருவரும் ஆயுதமேந்திய ஆபத்தான நபர்களாகக் கருதப்படுகின்றனர்.
</p><p>எனவே, பொதுமக்கள் எவரும் இவர்களை அணுக வேண்டாம் என்றும், கண்டறிந்தால் உடனடியாக 911 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>
சம்பவம் தொடர்பாகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட வெள்ளை நிற நிசான் வாகனம் மற்றும் கருப்பு நிற மாஸ்டா வாகனம் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் உடனடியாக வழக்கறிஞரைத் தொடர்புகொண்டு சரணடையுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T11:11:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவில் காணாமல் போன பெண்: பொலிஸ் விசாரணையில் தெரியவந்த துயரச் செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missing-bc-women-already-dies-in-2024-1784545231"></link>
            <id>https://canadamirror.com/article/missing-bc-women-already-dies-in-2024-1784545231</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண்ணொருவரைக் காணவில்லை என அவரது உறவினர் ஒருவர் கடந்த மாதம் பொலிசில் புகாரளித்துள்ளார்.

பொலிஸ் விசாரணையில், அந்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண்ணொருவரைக் காணவில்லை என அவரது உறவினர் ஒருவர் கடந்த மாதம் பொலிசில் புகாரளித்துள்ளார்.</p><p>

பொலிஸ் விசாரணையில், அந்தப் பெண் இப்போது காணாமல் போகவில்லை, பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போய்விட்டார் என்பது தெரியவந்துள்ளதுடன், ஒரு துயரச் செய்தியும் தெரியவந்துள்ளது!
</p><p>
ஜூன் மாதம் 14ஆம் திகதி, தன் உறவினரான மேரி (Mary Gadbois) என்னும் பெண்ணைக் காணவில்லை என அவரது உறவினர் ஒருவர் பொலிசில் புகாரளித்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8ac2ba0-a843-43f0-bae6-5ecaf30d3bc0/26-6a5dffd09f8b5.webp' /></p><p>
பொலிசார் மேரியைத் தேடிவந்த நிலையில், உண்மையில் அவர் இப்போது காணாமல் போகவில்லை, அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போய்விட்டார் என்பது தெரியவந்தது.
</p><p>
அதாவது, 2021ஆம் ஆண்டு மேரி Mission என்னுமிடத்தில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.
</p><p>
அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை, சோகம் என்னவென்றால், அவரை யாரும் தேடியதாகவும் தெரியவில்லை. சமீபத்தில்தான் அவரது உறவினர் ஒருவர் அவரைத் தொடர்பு கொள்ள இயலாததால், அவரைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார்.
</p><p>
பொலிசார் மேரியைத் தீவிரமாக தெடியும் அவரைக் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
</p><p>
இதற்கிடையில், 2024ஆம் ஆண்டு Mission நகருக்கருகிலுள்ள வனப்பகுதி ஒன்றில் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. அவை யாருடைய உடல் பாகங்கள் என தெரியாமலே இருந்துள்ளது.</p><p>

இந்நிலையில், மேரியும் கடைசியாக Mission நகரில் வாழ்ந்துவந்தது தெரியவந்ததால், 2024ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்கள் மேரியுடையவையாக இருக்குமோ என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
அதைத் தொடர்ந்து நீதிமன்ற அதிகாரிகள் உட்பட பலதரப்பினரும் மேற்கொண்ட ஆய்வில், அந்த உடல் பாகங்கள் மேரியுடையவைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T11:06:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்து வரலாற்றில் பிரான்ஸ் வீரர் மப்பே படைத்த சாதனை; இதுவரை யாரும் பெறவில்லை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/french-player-mbappe-won-back-to-back-golden-boots-1784524823"></link>
            <id>https://canadamirror.com/article/french-player-mbappe-won-back-to-back-golden-boots-1784524823</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரராலும் எட்ட முடியாத ஒரு இமாலய சாதனையை பிரான்ஸின் அசுர வேக முன்களவீரர் கிலியன் மப்பே ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரராலும் எட்ட முடியாத ஒரு இமாலய சாதனையை பிரான்ஸின் அசுர வேக முன்களவீரர் கிலியன் மப்பே படைத்துள்ளார். </p><p>

2026 உலகக் கிண்ணத்தின் அதிக கோல்கள் அடித்தவர்களுக்கான புகழ்பெற்ற தங்கப் பாதணி விருதைத் தன்வசப்படுத்தியதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு முறை இந்த விருதை வென்ற முதல் வீரர் என்ற உலக மகா சாதனையை பிரான்ஸின் அசுர வேக முன்களவீரர் கிலியன் மப்பே பதிவு செய்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f92b3da4-ca6d-43cd-bd8a-1d6d6a541600/26-6a5db018bf2e9.webp' /></p><p>அதேவேளை 2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியின் முடிவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியதும், அணியின் தலைவரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி, மைதானத்தில் மனமுடைந்து கண்ணீர் விட்ட காணொளி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T10:18:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயானா கடலில் 133 பேருடன் பயணித்த படகு கவிழந்து விபத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mv-barima-133-people-capsizes-in-guyana-waters-1784542183"></link>
            <id>https://canadamirror.com/article/mv-barima-133-people-capsizes-in-guyana-waters-1784542183</id>
            <summary type="text">&amp;nbsp; தென் அமெரிக்காவின் வடக்கே அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள கயானா கடலில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த அரசுப் படகு ஒன்று கவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென் அமெரிக்காவின் வடக்கே அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள கயானா கடலில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த அரசுப் படகு ஒன்று கவிழ்ந்ததில், இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர். </p><p>

அதேவேளையில், காணாமல் போன டஜன் கணக்கானவர்களைக் கண்டறியும் வகையில் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd2e7008-3df8-4a46-9639-deb81e0f14c3/26-6a5df3e90e09b.webp' /></p><p>
</p><p>
அரசாங்கத்தின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முன்னின்று வழிநடத்தும் கயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ், ‘எம்வி பரிமா’ (MV Barima) கப்பல் தலைநகர் ஜோர்ஜ்டவுனிலிருந்து வட அட்லாண்டிக் கடற்கரை வழியாக போர்ட் கைடுமாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்துக்குள்ளானதாக கூறினார்.</p><p>
மீட்கப்பட்ட குழுவில் 41 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் இருந்ததாக பிலிப்ஸ் தெரிவித்தார். 

காணாமல் போன பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்களா என்பது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
</p><p>
 ஹெலிகொப்டர்கள், விமானங்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் மூலம் 1,000 சதுர மைல் பரப்பளவில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-20T10:08:02+00:00</updated>
        </entry>
    </feed>
