<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-03T20:37:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்கரியில் கோர வீதி விபத்து: சிறுவர் உட்பட 4 பேர் பரிதாப மரணம!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/4-dead-including-at-least-1-child-in-late-night-1785775902"></link>
            <id>https://canadamirror.com/article/4-dead-including-at-least-1-child-in-late-night-1785775902</id>
            <summary type="text">கல்கரியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள &#039;ஸ்டோனி டிரெயில்&#039; சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த கோர முக்கோண வாகன விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்கு பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்கரியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள 'ஸ்டோனி டிரெயில்' சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த கோர முக்கோண வாகன விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் '90 அவென்யூ S.W.' பகுதிக்கு சற்று வடக்கே இந்த விபத்து நடந்துள்ளது.</p><p>
வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில், தவறான திசையில் (தெற்கு நோக்கி) அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று, எதிரே சரியாக வந்த இரண்டு வாகனங்கள் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/845e7b7f-e6b7-4de1-af71-19a91deaebfc/26-6a70c72081e5d.webp' /></p><p>
</p><p>விபத்தின் தீவிரத்தில் சிறுவர் ஒருவர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
</p><p>மேலும் நால்வர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் இருவர் சிறுவர்கள் ஆவர்.
</p><p>இச்சம்பவம் குறித்து கல்கரி காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p> விபத்து காரணமாகப் பல மணி நேரம் மூடப்பட்டிருந்த அப்பாதை, திங்கள்கிழமை காலை 9:45 மணியளவில் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T20:36:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-sentences-two-alleged-israeli-spies-to-death-1785785179"></link>
            <id>https://canadamirror.com/article/iran-sentences-two-alleged-israeli-spies-to-death-1785785179</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈரான் -...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p>

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி முதல் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74f95c0d-c015-42f6-8b9b-df01ed65ed78/26-6a70eb5d5b281.webp' /></p><p> </p><p>இதனைத் தொடர்ந்து, ஈரானில் மரண தண்டனைகள் நிறைவேற்றுவதும் அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p>
இந்த நிலையில், இருவர் ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு தளங்கள் தொடர்பான தகவல்களை இஸ்ரேலின் மொசாட் உளவாளிகளுக்கு அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. </p><p>இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவருக்கும் இன்று காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவர்கள் கைது செய்யப்பட்டது பற்றியோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது பற்றியோ எதிலும் குறிப்பிடவில்லை. </p><p>ஆனால், அவர்கள் இஸ்ரேலுக்கு ஒத்துழைத்து ரகசிய தகவல்களை அளித்ததாகக் குறிப்பிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
ஈரானில் கடந்தாண்டு மட்டுமே 1,639 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. </p><p>கடந்த 1989-க்குப் பிறகு பதிவான அதிக எண்ணிக்கை இதுவாகும்.

சில நாள்களுக்கு முன்பு, அரசுக்கு எதிரான போராட்டத்தில் கடந்தாண்டு அதிகாரிகளை தீயிட்டு கொளுத்திய இருவருக்கு பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-03T19:26:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலஸ்தீன நாட்டிற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது சீனா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-support-for-an-independent-palestinian-state-1785776442"></link>
            <id>https://canadamirror.com/article/china-support-for-an-independent-palestinian-state-1785776442</id>
            <summary type="text">பாலஸ்தீன விவகாரத்தில் சீனாவின் உறுதியான ஆதரவையும் பங்களிப்பையும் பாலஸ்தீனத்திற்கான சீன அலுவலகத் தலைவர் சுன் ழென் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என &#039;வாஃப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலஸ்தீன விவகாரத்தில் சீனாவின் உறுதியான ஆதரவையும் பங்களிப்பையும் பாலஸ்தீனத்திற்கான சீன அலுவலகத் தலைவர் சுன் ழென் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என 'வாஃபா' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p> 
சீனா-பாலஸ்தீனம் இடையிலான இருதரப்பு மூலோபாயக் கூட்டாண்மை உருவாக்கப்பட்டதன் 3-வது ஆண்டு நிறைவு பெறவுள்ள நிலையில், தூதர் சுன் ழென் ரமல்லாவில் உள்ள சீனத் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
</p><p>பாலஸ்தீன மக்களுக்குத் தேவையான மனிதநேய மற்றும் வளர்ச்சி உதவிகளைச் சீனா தொடர்ந்து வழங்கும் என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லச் சீனா தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1aa29d-39b2-4529-8b69-17a2f0aa5c8d/26-6a70c93c13629.webp' /></p><p>
</p><p>பாலஸ்தீன தலைவர்களுடனான சந்திப்புகளின் போது, பாலஸ்தீன மக்கள் அனுபவித்து வரும் அநீதிகளின் பரிமாணத்தை நேரடியாக உணர்ந்ததாகத் தூதர் தெரிவித்தார்.
</p><p>பாலஸ்தீன மக்கள் தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும், சுதந்திரமாக ஆட்சி செய்யவும் முழு உரிமை உண்டு என்ற சீனாவின் கொள்கை நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
</p><p>இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், சர்வதேச அரங்கில் பாலஸ்தீனத்தின் நியாயமான உரிமைகளுக்கு ஆதரவாக நின்று 'இரு நாடு தீர்வு' திட்டத்தை முன்னெடுக்கவும் சீனா தொடர்ந்து பாடுபடும் எனத் தூதர் சுன் ழென் உறுதியளித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T18:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிட்லேண்டில் துப்பாக்கிச் சூடு: 18 வயது இளைஞர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/midland-shooting-death-deemed-homicide-1785775606"></link>
            <id>https://canadamirror.com/article/midland-shooting-death-deemed-homicide-1785775606</id>
            <summary type="text">&amp;nbsp;மிட்லேண்ட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகக் ஒன்டாரியோ மாகாணக் காவல்துற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மிட்லேண்ட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகக் ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை அறிவித்துள்ளது.</p><p>
இத்தீவிரச் சம்பவத்தில் உயிரிழந்தவர் எடோபிகோக் பகுதியைச் சேர்ந்த டிரைஸ் ஜேம்ஸ் என்ற இளைஞர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 மணி அளவில், 'கிங் ஸ்ட்ரீட்' பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7218a929-b25c-49a2-b0a1-768722ec3629/26-6a70c5f839cb1.webp' /></p><p>
</p><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், துப்பாக்கிக் காயங்களுடன் இருந்த ஒருவரைக் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
</p><p>இச்சம்பவம் ஒரு தனிப்பட்ட தாக்குதலாகக் கருதப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்தவொரு பெரிய அச்சுறுத்தலும் இல்லை என விசாரணை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
</p><p>விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அப்பகுதியில் காவல் துறையினரின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
சந்தேக நபர்கள் குறித்தோ அல்லது அவர்கள் ஆயுதம் ஏந்தியிருக்கிறார்களா என்பது குறித்தோ காவல்துறை இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது.
</p><p>இச்சம்பவம் தொடர்பான ஏதேனும் தகவல்களோ, வீடியோ பதிவுகளோ அல்லது டேஷ்கேம் காட்சிகளோ வைத்திருப்போர் உடனடியாக தெற்கு ஜார்ஜியன் பே காவல் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T17:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் திரும்பப் பெறப்படும் சாக்லேட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/this-popular-chocolate-was-recalled-1785775189"></link>
            <id>https://canadamirror.com/article/this-popular-chocolate-was-recalled-1785775189</id>
            <summary type="text">பிரபல சாக்லேட் நிறுவனமான &#039;ஹெர்ஷிஸ்&#039;, கனடாவில் விற்பனை செய்யப்பட்ட தனது &#039;ஹெர்ஷிஸ் கிஸஸ்&#039; சாக்லேட்களின் சில குறிப்பிட்ட தொகுப்புகளை சந்தையில் இருந்து அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல சாக்லேட் நிறுவனமான 'ஹெர்ஷிஸ்', கனடாவில் விற்பனை செய்யப்பட்ட தனது 'ஹெர்ஷிஸ் கிஸஸ்' சாக்லேட்களின் சில குறிப்பிட்ட தொகுப்புகளை சந்தையில் இருந்து அவசரமாகத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.</p><p>
சாக்லேட்டின் மூலப்பொருள் விபரப் பட்டியலில் குறிப்பிடப்படாமல், அவற்றில் பாதாம் பருப்பு கலந்திருக்கக்கூடும் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>கனடா உணவு ஆய்வு முகமை சனிக்கிழமை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், பாதாம் பருப்பு அலர்ஜி அல்லது ஒவ்வாமை உள்ளவர்கள் இந்தச் சாக்லேட்களை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6367424-a193-47be-9d54-c5b9ae55a254/26-6a70c457ad0d7.webp' /></p><p>
மீறி உட்கொண்டால், அது கடுமையான அல்லது உயிருக்கே ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.</p><p>
திரும்பப் பெறப்படும் சாக்லேட்களை வாடிக்கையாளர்கள் உடனடியாகக் குப்பையில் வீசிவிட வேண்டும் அல்லது வாங்கிய கடைகளிலேயே கொடுத்து முழுத் தொகையையும் ரீஃபண்ட் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p> 
மேலும், ஹெர்ஷிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியும் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.
இச்சாக்லேட்கள் 2026 மே 6 முதல் ஜூலை 28 வரை கனடாவிற்குள் மட்டுமே விநியோகிக்கப்பட்டதாக ஹெர்ஷிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>இதற்கான லார்ட் எண்கள் மற்றும் காலாவதி திகதிகள் தொடர்பான முழு விபரங்களை ஹெர்ஷிஸ் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.</p><p>
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் 'காட்பரி' நிறுவனமும் தனது 'டெய்ரி மில்க் ஓரியோ' சாக்லேட்டில், பட்டியலில் குறிப்பிடப்படாத பிஸ்தா பருப்புகள் கலந்திருந்ததால் அதனைச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T17:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் முழுவதும் கடும் வெப்பம்; 20 மாவட்டங்களுக்கு &quot;செம்மஞ்சள்&quot; எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/severe-heat-across-france-orange-alert-1785763859"></link>
            <id>https://canadamirror.com/article/severe-heat-across-france-orange-alert-1785763859</id>
            <summary type="text">பிரான்ஸ் முழுவதும் கடும் வெப்பம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், இன்று ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமை 20 மாவட்டங்களுக்கு Météo-France &quot;செம்மஞ்சள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் முழுவதும் கடும் வெப்பம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், இன்று ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமை 20 மாவட்டங்களுக்கு Météo-France "செம்மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1e64d5-82a6-4c91-b36d-ecf894b4b15a/26-6a709815748e3.webp' /></p><p> Ain, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ardèche, Corse-du-Sud, Haute-Corse, Doubs, Drôme, Gard, Isère, Jura, Loire, Rhône, Saône-et-Loire, Savoie, Haute-Savoie, Var, Vaucluse மற்றும் Territoire de Belfort ஆகியவை எச்சரிக்கை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
</p><p>
சில பகுதிகளில், குறிப்பாக Hautes-Alpes மற்றும் Alpes-de-Haute-Provence ஆகிய இடங்களில் வெப்பநிலை சற்று குறையத் தொடங்கியுள்ள போதிலும், தென்கிழக்கு பகுதியில் இன்னும் சில நாட்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என Météo-France எச்சரித்துள்ளது. </p><p>இதேவேளை, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இடியுடன் கூடிய மழை காரணமாக வெப்பநிலை குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் Ariège, Haute-Garonne, Tarn, Tarn-et-Garonne, Lot, Corrèze மற்றும் Dordogne ஆகிய 7 மாவட்டங்களுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் காரணமாக ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த எச்சரிக்கை மாலை 4 மணிமுதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை கிழக்கு பிரான்ஸ் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவியதுடன், ஞாயிறு இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை பல பகுதிகளில் வெப்பநிலை 20°C-க்கும் அதிகமாக பதிவானது; Méditerranée கடற்கரை மற்றும் Rhône பள்ளத்தாக்கில் சில இடங்களில் 25°C வரை வெப்பநிலை காணப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-08-03T16:47:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெட்டாவின் திட்டத்திற்கு ஆல்பர்ட்டாவில் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/dozens-protest-metas-plan-for-massive-data-1785774732"></link>
            <id>https://canadamirror.com/article/dozens-protest-metas-plan-for-massive-data-1785774732</id>
            <summary type="text">&amp;nbsp;உலகின் முதனிலை தொழில்நுட்ப நிறுவனமான &#039;மெட்டா&#039; நிறுவனம் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பிரம்மாண்ட டேட்டா சென்டர் ஒன்றை அமைக்கவுள்ள திட்டத்திற்கு எதிர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலகின் முதனிலை தொழில்நுட்ப நிறுவனமான 'மெட்டா' நிறுவனம் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பிரம்மாண்ட டேட்டா சென்டர் ஒன்றை அமைக்கவுள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் ஸ்டர்ஜன் கவுண்டி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>முகநூலின் தாய் நிறுவனமான மெட்டா, கடந்த மாதம் ஸ்டர்ஜன் கவுண்டியில் உள்ள மொரின்வில் நகரில் ஒரு ஜிகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்ட டேட்டா சென்டரை அமைக்கவுள்ளதாக அறிவித்தது. </p><p>
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் "நிறுவனங்களை ஒழிப்போம்" என முழக்கங்களை எழுப்பினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3453674-2dc1-4dc5-8d80-f2a24600551d/26-6a70c28e8a2ba.webp' /></p><p> மேலும், மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் படத்துடன் "பில்லியனரின் சொத்துக்களை அரவணைத்துடக்குங்கள்" என்ற வாசகம் அடங்கிய பதாகைகளையும் ஏந்திச் சென்றனர். வாகன ஓட்டிகள் ஹார்ன் அடித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
</p><p>டேட்டா சென்டர்கள் அதிகளவு மின்சாரத்தையும் நீரையும் உறிஞ்சும் தன்மை கொண்டவை என்பதால், தனது தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணம் மேலும் உயரும் என்று உள்ளூர்வாசி ஜெசிகா தோமாஷிரோ கவலை தெரிவித்தார்.
</p><p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சிக்காகக் கட்டப்படும் இத்தகைய மையங்கள் அதிகளவு இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதால் காலநிலை நெருக்கடி தீவிரமடையும் எனப் போராட்டக்காரர்கள் வாதிடுகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T16:36:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொன்றியலில் மசூதிக்கு அருகில் தீப்பிடித்த வாகனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/montreal-mosque-damaged-by-vehicle-fire-1785774081"></link>
            <id>https://canadamirror.com/article/montreal-mosque-damaged-by-vehicle-fire-1785774081</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் மொன்றியல் நகரிலுள்ள &#039;கோட்-டெஸ்-நைஜஸ்–நோட்டர்-டேம்-டி-கிராஸ்&#039; பகுதியில் உள்ள மசூதி ஒன்றின் வெளிப்புறப் பகுதி, அருகில் நிறுத்தப்பட்டிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் மொன்றியல் நகரிலுள்ள 'கோட்-டெஸ்-நைஜஸ்–நோட்டர்-டேம்-டி-கிராஸ்' பகுதியில் உள்ள மசூதி ஒன்றின் வெளிப்புறப் பகுதி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் தீப்பற்றி எரிந்ததால் சேதமடைந்துள்ளது.</p><p>
இச்சம்பவம் குறித்து மொன்றியல் தீயணைப்புத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
</p><p>வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில், 'அவென்யூ டி கோர்ட்ரை' பகுதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டிருந்த டிரக் ஒன்று தீப்பற்றி எரிவதாகத் தீயணைப்புத் துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32dbd062-9482-40b2-bf85-4469ea2ac91e/26-6a70c003563fd.webp' /></p><p>
தீ விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்த இரண்டு கட்டிடங்களில் ஒன்று 'பைத்துல் முகர்ரம்' மசூதி ஆகும்.
சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.
</p><p>வாகனத்தில் பற்றிய தீ, மசூதிக்கு அருகில் இருந்த ஒரு கொள்கலனுக்கும் பரவியது. இதனால் அந்த கொள்கலனும், மசூதியின் வெளிப்புறச் சுவரும் சேதமடைந்தன.
</p><p>இத்தீவிபத்துக்கான காரணத்தைக் கண்டறியத் தீயணைப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது.</p><p> 
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இத்தீவிபத்து சந்தேகத்திற்குரிய ஒன்றாகத் தெரியவில்லை என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T16:24:27+00:00</updated>
        </entry>
    </feed>
