<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-11T04:47:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் திடீரென உடைந்த விமானத்தின் ஜன்னல் கண்ணாடி ; சீட் பெல்டால் தப்பிய உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/plane-window-shatters-mid-air-sparks-panic-1783743996"></link>
            <id>https://canadamirror.com/article/plane-window-shatters-mid-air-sparks-panic-1783743996</id>
            <summary type="text">கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு அயர்லாந்து நாட்டின் ரயன்ஏர் விமான நிறுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் திடீரென ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பெரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு அயர்லாந்து நாட்டின் ரயன்ஏர் விமான நிறுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் திடீரென ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த விபத்தின் போது ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த செர்பிய நாட்டைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர், காற்றின் கடுமையான அழுத்தத்தால் ஜன்னல் வழியாக வெளியே இழுக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6494bd7-d565-4414-8aff-ab36ae666c42/26-6a51c5fda30bf.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,</p><p>கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு அயர்லாந்து நாட்டின் ரயன்ஏர் விமான நிறுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் செர்பியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரும் பயணித்தார். </p><p>அப்போது இவர் அருகில் இருந்து ஜன்னல் மீது ஏதோ ஒன்று வேகமாக மோதி, ஜன்னல் உடைத்துள்ளது. பின்னர் காற்றழுத்தம் காரணமாக அவரை விமானத்திற்கு வெளியே தள்ளியுள்ளது.</p><p> ஆனால், சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவரை காற்றால் வெளியே இழுத்துச் செல்ல முடியவில்லை. அவரது தோள்பட்டை மற்றும் தலை ஏறக்குறைய வெளியே சென்றுள்ளது. ஆனால், அருகில் இருந்து பயணிகள் அவரை உள்ளே இழுத்ததால் உயிர் பிழைத்துள்ளார்.</p><p>
டயர் வெடிப்பது போன்ற சத்தமும் அலறல் சத்தமும் கேட்டு தாங்கள் விழித்துக்கொண்டதாகவும், அதன்பிறகு பாதிக்கப்பட்ட பயணியின் தலையும் தோள்களும் ஜன்னலுக்கு வெளியே இருப்பதை கண்டதாகவும் பயணிகள் கூறினர்.


</p><p>'ரயன்ஏர்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பயணியின் ஜன்னல் கழன்று விழுந்ததால், அது மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. விமானம் வழக்கமான முறையில் தரையிறங்கியது. பயணிகள் முனையத்திற்குத் திரும்பினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">😱 Horrifying! A passenger was partially sucked through a shattered plane window at an altitude of 6,000 metres<br><br>Shortly after a Ryanair flight from Thessaloniki to Germany took off, a fragment broke off the engine and smashed a window.<br><br>The 61-year-old man began to be pulled… <a href="https://t.co/cax9KP96pY">pic.twitter.com/cax9KP96pY</a></p>&mdash; NEXTA (@nexta_tv) <a href="https://x.com/nexta_tv/status/2075607226245403026?ref_src=twsrc%5Etfw">July 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p> <script async="" src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>]]></content>
            <updated>2026-07-11T04:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் இதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் ; ஹோர்முஸ் குறித்து அமெரிக்காவின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-must-make-this-public-demand-raised-1783742047"></link>
            <id>https://canadamirror.com/article/iran-must-make-this-public-demand-raised-1783742047</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. 

அத்துடன் வர்த்தக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது.</p><p style="text-align: justify; "> 

அத்துடன் வர்த்தகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்த உறுதியளிக்க வேண்டும் என்றும் இன்றைய பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்கா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5b79183-d03c-4381-a848-bc3a9a653a56/26-6a51be64d488e.webp' /></p><p style="text-align: justify; "> 

அமெரிக்க மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி முன்னதாக கூறியிருந்த போதிலும் அதனை மீண்டும் தொடருவதற்கான இணக்கத்தை நேற்று வௌியிட்டிருந்தார். </p><p style="text-align: justify; ">

இதனடிப்படையிலேயே ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்க பிரதிநிதிகள் வலியுறுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

வர்த்தக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஒரு தவறு என்பதை ஈரான் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p style="text-align: justify; "> 

இருப்பினும், ஈரானுக்குள் இருக்கும் ஒரு முரண்பாடான குழுவே இதற்குப் பொறுப்பு என ஈரானியர்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T03:54:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேச்சுக்கு தயார் ; ஆனால் போர் நிறுத்தம் முடிந்து விட்டது ; ட்ரம்பின் அறிவித்தல் ஈரானும் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ceasefire-over-iran-retaliates-trump-announcement-1783717987"></link>
            <id>https://canadamirror.com/article/ceasefire-over-iran-retaliates-trump-announcement-1783717987</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளைத் தொடர உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானுடனான போர் நிறுத்தம் &quot;ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளைத் தொடர உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானுடனான போர் நிறுத்தம் "முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ட்ரம்பின் இந்த அறிவித்தலுக்கு மத்தியில் கருத்துரைத்துள்ள ஈரான், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறினால், ஈரானிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முழு அளவிலான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa94487f-b012-43b9-b134-722322ab4f4d/26-6a516065624ea.webp' /></p><p>அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் காலம் முடிந்துவிட்டது. இது எதற்கும் தீர்வாகாது. நாங்கள் ஒருபோதும் பணிய மாட்டோம்," என்று அந்த நாட்டின் முக்கியப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பகர் காலிபாப் அறிவித்துள்ளார்.</p><p>

அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, தொடர்ந்து தாக்குதல் மிரட்டல்களை விடுத்தல், எண்ணெய் தடைகளை மீண்டும் அமுல்படுத்துதல், ஈரானின் தெற்குப் பகுதியில் தாக்குதல் நடத்துதல் மற்றும் லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஆகியவற்றை அவர் அமெரிக்காவின் முக்கிய மீறல்களாகப் பட்டியலிட்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

போரை முடிவுக்குக் கொண்டு வருவது உலக நாடுகளின் முன்னுரிமையாக இருந்தாலும், ஈரானின் சரணடைதலுடன் இந்த மோதல் முடிவுக்கு வராது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48ee704d-c601-48d6-b98a-d8b93ae0bb60/26-6a516064b1789.webp' /></p><p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே இரண்டு நாட்களாக நீடித்த தீவிர தாக்குதல்களுக்குப் பிறகு, இராஜதந்திர உறவுகளை மீண்டும் சீரமைக்கும் முயற்சியில் கட்டார் நாட்டு மத்தியஸ்தர்கள் தெஹ்ரானில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
புதிதாக முன்னெடுக்கப்பபட்ட இந்த மோதல்களால் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வரலாற்றில் இல்லாத அளவுக்கு விநியோகத் தடைகளைச் சந்தித்து வரும் எரிசக்தி சந்தைகளுக்கு, இது மேலும் ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இதேவேளை , அமெரிக்காவின் அழுத்தத்தைத் தொடர்ந்து, லெபனானின் தெற்குப் பகுதியில் "உணர்திறன் மிக்க நடவடிக்கைகளை" (sensitive operations) மேற்கொள்ள வேண்டாம் என்று தனது இராணுவத்திற்கு இஸ்ரேலிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அடுத்த வாரம் ரோமில் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே கூடுதல் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
</p><p>
இந்த நிலையில்,லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட சோதனைப் பகுதிகளில் (pilot areas) இருந்து தனது படைகளை இஸ்ரேலிய இராணுவம் திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-10T23:44:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸில் கனமழை பேரிடர் ; நிலச்சரிவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heavy-rains-wreak-philippines-death-toll-rises-15-1783723702"></link>
            <id>https://canadamirror.com/article/heavy-rains-wreak-philippines-death-toll-rises-15-1783723702</id>
            <summary type="text">ஆசிய நாடான பிலிப்பைன்ஸை &#039;பவி&#039; புயல் நெருங்கி வரும் நிலையில், அதன் தாக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிய நாடான பிலிப்பைன்ஸை 'பவி' புயல் நெருங்கி வரும் நிலையில், அதன் தாக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

தொடர்ச்சியான கனமழையால் பல மாகாணங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

சரன்கனி மாகாணத்தின் மிண்டனாவோ தீவில் உள்ள மலபடன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7c9b179-2cb9-46c3-abcb-d9ef79d323ef/26-6a5176b8924c0.webp' /></p><p> மேலும், லனாவோ டெல் சூர் மாகாணத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன் மூலம், புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் நீடிப்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-10T22:48:57+00:00</updated>
        </entry>
    </feed>
