<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-14T15:52:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/90-percent-mojtaba-khomeini-will-not-survive-1784016137"></link>
            <id>https://canadamirror.com/article/90-percent-mojtaba-khomeini-will-not-survive-1784016137</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானின் ஆன்மீக தலைவர் மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானின் ஆன்மீக தலைவர் மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>


அமெரிக்கா - ஈரான் இடையே உச்சகட்டப் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், “ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்கா இனி பாதுகாப்பு அளிக்கும். ஆனால், அச்செலவினங்களுக்கு ஈடாக அவ்வழியாகக் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்” என்று ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00b633ed-6f65-4509-af10-6e12bb218a71/26-6a55ed10b40ea.webp' /></p><h2>&nbsp;இறுதிச் சடங்கு நிகழ்வில் கூட கலந்துகொள்ளவில்லை&nbsp;</h2><p>


இது தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பேசிய ட்ரம்ப் தெரிவித்ததாவது:



“ஈரானின் கடற்படை, விமானப்படை என அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்களின் வான்வழித் தடுப்பு அமைப்புகள் செயலிழந்துவிட்டன. </p><p>அவர்களின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். கொமெய்னி இறந்துவிட்டார். மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைக்க 90 சதவிகிதம் வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.
</p><p>


ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி, அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் மோஜ்தபா கொமெய்னி, புதிய ஆன்மீக தலைவராக அறிவிக்கப்பட்டார்.</p><p>



இந்நிலையில், அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் ஒன்றில் மோஜ்தபா கொமெய்னியும் பலத்த காயமடைந்ததாகவும், தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.



இதன்காரணமாக, ஈரான் மற்றும் இராக்கில் கடந்த வாரம் நடைபெற்ற அயதுல்லா அலி கொமெய்னியின் இறுதிச் சடங்கு நிகழ்வில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை.
</p><p>


இந்த சூழலில், மோஜ்தபா கொமெய்னி 90 சதவிகிதம் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T13:16:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடா பதற்றத்தால் மசகு எண்ணெய் விலைகள் ஏற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crude-oil-prices-rise-due-to-gulf-tensions-1784033042"></link>
            <id>https://canadamirror.com/article/crude-oil-prices-rise-due-to-gulf-tensions-1784033042</id>
            <summary type="text">&amp;nbsp; மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மேலும் அதிகரிப்பைப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.
</p><p>
இதன்படி, உலக சந்தையின் தற்போதைய மசகு எண்ணெய் விலை நிலவரம்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a07c9e71-b376-4cb0-8a8c-7131058e3783/26-6a562f139fb4e.webp' /></p><p> </p><p>

ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய்: ஒரு பீப்பாய் - 86.91 டொலர்கள் ஆக உள்ளது.
</p><p>
அதோடு WTI ரக மசகு எண்ணெய்: ஒரு பீப்பாய் - 80.48 டொலர்கள் ஆக உள்ளது.</p><p>அமெரிக்கா - ஈரான் இடையே உச்சகட்டப் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், மசகு எண்னெய் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-14T12:42:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர் பிழைத்த நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/survived-a-fall-over-horseshoe-falls-at-niagara-1784026220"></link>
            <id>https://canadamirror.com/article/survived-a-fall-over-horseshoe-falls-at-niagara-1784026220</id>
            <summary type="text">&amp;nbsp; கனடா மற்றும் அமெரிக்க எல்லைக்கு நடுவே அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நயாகரா நீர்வீழ்ச்சியின் ஹார்ஸ்ஷூ நீர்வீழ்ச்சியில் விழுந்த நப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடா மற்றும் அமெரிக்க எல்லைக்கு நடுவே அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நயாகரா நீர்வீழ்ச்சியின் ஹார்ஸ்ஷூ நீர்வீழ்ச்சியில் விழுந்த நபர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>

கடந்த ஜூன் 28 ஆம் திகதி இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

நபர் ஒருவர் நயாகராவின் மேல் ஆற்றுப் பகுதியில் நீந்திக் கொண்டிருந்த நிலையில், ஆற்றில் நிலவிய அதிவேக நீரோட்டம் காரணமாக, அந்த நபர் கட்டுப்படுத்த முடியாமல் இழுத்துச் செல்லப்பட்டு, நீர்வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து கீழ்நோக்கி விழுந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a78ec946-33a2-4460-98d5-d088a6b09440/26-6a56146e1e60f.webp' /></p><h2>பலத்த காயங்களுடன்&nbsp;&nbsp;மீட்டு&nbsp; மருத்துவமனையில் அனுமதி</h2><p>
</p><p>
அவர் சுமார் 52 மீற்றர் (சுமார் 170 அடி) உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சியின் அடியில் இருக்கும் பாறைகள் நிறைந்த பகுதிக்குள் விழுந்துள்ளார். </p><p>

உடனடியாக விரைந்து வந்த அவசர மீட்புக் குழுவினர், அவரை ஆற்றுப் பகுதியிலிருந்து மீட்டு பலத்த காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.
</p><p>
நயாகரா நீர்வீழ்ச்சியின் கடுமையான நீரோட்டம் மற்றும் அடியில் இருக்கும் இராட்சதப் பாறைகளின் தாக்கம் காரணமாக, இத்தகைய உயர்மட்ட ஆபத்தான பகுதியில் விழுந்து ஒருவர் உயிர் பிழைப்பது என்பது மிகவும் அரிதான விஷயம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

பாதுகாப்பு வேலி மற்றும் தடைசெய்யப்பட்ட எல்லைகளைத் தாண்டி சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பகுதிகளுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கை வழிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-14T11:12:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hundreds-of-weapons-seized-in-canada-ex-mp-house-1784022823"></link>
            <id>https://canadamirror.com/article/hundreds-of-weapons-seized-in-canada-ex-mp-house-1784022823</id>
            <summary type="text">கனடா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீட்டில் பொலிசார் நடத்திய சோதனையின்போது, நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் முதலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீட்டில் பொலிசார் நடத்திய சோதனையின்போது, நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் முதலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.</p><p>

மனித்தோபாவில் பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, கடைசியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் இங்கி மார்க் (78).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/764a9413-9328-4c4f-914e-b112ba0ad0b6/26-6a560728bedde.webp' /></p><p>

இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 7ஆம் திகதி, மார்க் வீட்டில் பொலிசார் சோதனை மேற்கொண்டனர்.
</p><p>
அப்போது, அவர் வீட்டில் நூற்றுக்கணக்கான துப்பாக்கி முதலான ஆயுதங்கள் இருப்பதும், அவை முறைப்படி பாதுகாப்பாக வைக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.
</p><p>
அவற்றில் சில, கடத்தப்பட்டவை என பொலிசார் கருதுகிறார்கள்.
</p><p>
அத்துடன், மார்க் வீட்டிலிருந்து துப்பாக்கி குண்டுகளும், 300,000 டொலர்கள் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
மார்க் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது ஆயுதக் கடத்தல் முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
அவர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், ஆகத்து மாதம் 11ஆம் திகதி, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T09:53:49+00:00</updated>
        </entry>
    </feed>
