<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-12T08:44:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை ; புதிய தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hormuz-strait-closed-again-us-launches-strikes-1783837923"></link>
            <id>https://canadamirror.com/article/hormuz-strait-closed-again-us-launches-strikes-1783837923</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா புதிய கட்டத் தாக்குதல்களை நடத்தியுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா புதிய கட்டத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. </p><p>

அங்கீகரிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச் சென்றதாகவும், அதன் கண்காணிப்பு அமைப்புகளை அணைத்துவிட்டுச் சென்றதாகவும் கூறி ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை, அந்த கப்பலைத் தாக்கியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/332c6aac-443e-4067-8cce-93a6cb13ffca/26-6a5334e5476a6.webp' /></p><p> </p><p>

மேலும், ஹோர்முஸ் நீரிணை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. </p><p>

சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றின் மீது ஈரான் "வெளிப்படையாகத் தாக்குதல்" நடத்தியதைத் தொடர்ந்து, "இந்த வாரத்தின் மூன்றாவது சுற்றுத் தாக்குதலை" நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (Centcom) தெரிவித்துள்ளது. </p><p>

இந்தத் தாக்குதலால் கப்பலின் இயந்திர அறை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அது பயணத்தைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரு மாலுமி காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

வணிகக் கப்பல்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டும், மீண்டும் அதே தவறைச் செய்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். </p><p>

"ஈரான் தவறான முடிவை எடுத்துவிட்டது, அதற்கான விளைவை இப்போது சந்திக்கிறது" என்றும் அவர் எச்சரித்துள்ளார். </p><p>

முன்னதாக, ஒரு வணிகக் கப்பல் மீது எச்சரிக்கையாகக் கப்பல் ஏவுகணையைத் தாங்கள் ஏவியதாகவும், பலமுறை எச்சரித்தும் கேட்காததால் அந்த கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>

மேலும், ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு "ஆக்கிரமிப்புக்கும்" கடும் பதிலடி கொடுக்கப்படும் என்றும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T08:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச குற்றக்குழுவுடன் தொடர்புடைய கனடியர் பிரான்சில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-man-arrested-in-france-1783839892"></link>
            <id>https://canadamirror.com/article/bc-man-arrested-in-france-1783839892</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கரீந்தர் சிங் தியோ என்ற நபர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். 
அமெரிக்க புலனாய்வு அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கரீந்தர் சிங் தியோ என்ற நபர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>
அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இன் "ஒப்பரேஷன் ஹார்ட் போல்" என்ற சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிரான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>
சந்தேக நபர் தற்போது அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd3af68c-20ae-4cec-a153-81a1dd58aa14/26-6a533e7437ac7.webp' /></p><p>
</p><p>இந்த சர்வதேச குற்றக் கும்பல்கள் மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல், கடத்தல் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p> 
குறிப்பாக, 2023 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடந்த சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையுடனும் இக்குற்றக் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
</p><p>இக்குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய 24 சந்தேகநபர்களின் கைது விபரங்களை பொலிஸார் வெளியிட்ட சில நாட்களில், ஜூலை 7 ஆம் திகதி கரீந்தர் சிங் தியோ பிரான்சில் வைத்து கைது செய்யப்பட்டார்.</p><p> இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்காவது கனடியர் இவராவார்.
தியோ, அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய இரு நிறுவனங்களுக்கு எதிராக சிவில் சொத்துப் பறிமுதல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p> சட்டவிரோத வருமானம் மூலம் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் வெஸ்ட் வன்கூவர் மற்றும் பகுதிகளில் உள்ள மூன்று சொத்துக்களை பறிமுதல் செய்ய மாகாண அரசு முயன்று வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T08:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய போர்க்கப்பலில் நவீன ஏவுகணை சோதனை வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-warship-fires-torpedoes-in-first-test-1783839238"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-warship-fires-torpedoes-in-first-test-1783839238</id>
            <summary type="text">உலகின் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியான &#039;ரிம்பக்&#039; கூட்டுப் பயிற்சியில் கலந்துகொண்டுள்ள கனடிய கடற்படையின் &#039;எச்.எம்.சி.எஸ் ஒட்டாவா&#039; போர்க்கப்பல், இந்த வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியான 'ரிம்பக்' கூட்டுப் பயிற்சியில் கலந்துகொண்டுள்ள கனடிய கடற்படையின் 'எச்.எம்.சி.எஸ் ஒட்டாவா' போர்க்கப்பல், இந்த வாரம் இரண்டு 'மார்க் 46' ரக டொர்பிடோ ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. </p><p>
கனடாவின் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் முறைமையில் மேற்கொள்ளப்பட்ட அதிநவீன மேம்படுத்தலை மதிப்பிடுவதற்கான முதலாவது வாய்ப்பாக இச்சோதனை அமைந்துள்ளது.</p><p>
ஹவாய் கடற்பரப்பில் நடைபெறும் இப்பயிற்சியில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 31 நட்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 25,000 படைவீரர்கள் பங்கேற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a44a4b6-2f5d-4e6d-afc0-e7cb8829536e/26-6a533a07b8f0b.webp' /></p><p>
"நான் கடற்படையில் 20 வருடங்களாகப் பணியாற்றுகிறேன், ஆனால் டொர்பிடோ ஏவுகணை ஒன்றை நான் ஏவுவது இதுவே முதல் முறை" என 'எச்.எம்.சி.எஸ் ஒட்டாவா' கப்பலின் கட்டளை அதிகாரி ஜஸ்டின் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். </p><p>
ஜூலை 7 ஆம் திகதி நடத்தப்பட்ட இச்சோதனை, கடற்படை வீரர்களுக்கு ஒரு அரிய போர்முறைப் பயிற்சியாக அமைந்தது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இக்கப்பலில் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள 'அண்டர்வாட்டர் வார்ஃபேர் சூட் அப்கிரேட்' என்ற அடுத்த தலைமுறை சென்சார் தொழில்நுட்பத்தை சோதிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.</p><p> நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் டொர்பிடோக்களை மிக நீண்ட தூரத்திலேயே கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது இந்த புதிய அமைப்பு.
இந்த புதிய மாற்றத்தை 'ஐபோன்' அறிமுகத்துடன் ஒப்பிட்டுக் கூறிய அதிகாரி சிம்மன்ஸ், இது கனடிய கடற்படைக்கு முற்றிலும் ஒரு புதிய திருப்புமுனை என்று விவரித்துள்ளார்.</p><p> 
இந்த தொழில்நுட்பம் 2034 ஆம் ஆண்டிற்குள் கனடாவின் 'ஹாலிஃபாக்ஸ்' ரகப் போர்க்கப்பல் கடற்படைப் பிரிவு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
</p><p>கனடிய கடற்படையின் மற்றொரு போர்க்கப்பலான 'எச்.எம்.சி.எஸ் ரெஜினா' , அடுத்த வாரம் நடைபெறும் ரிம்பக் பயிற்சியில் 'எவொல்வ்ட் சீ ஸ்பேரோ பிளொக் II' ரக ஏவுகணையை நேரடிச் சோதனைக்கு உட்படுத்தவுள்ளது.</p><p> இந்த ஏவுகணை போர்க்கப்பலின் ரேடாரை நம்பியிருக்காமல், தனது சொந்த ரேடார் மூலம் வான்வழித் தாக்குதல்களைக் கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டதாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T07:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போகிமொன் கார்டு கடையில் துப்பாக்கிமுனையில் துணிகரக் கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/gun-toting-robber-steals-30k-worth-of-pokemon-1783839057"></link>
            <id>https://canadamirror.com/article/gun-toting-robber-steals-30k-worth-of-pokemon-1783839057</id>
            <summary type="text">கனடாவின் கியூபெக் மாகாணத்தின் லானோடியர் பிராந்தியத்தில் அமைந்துள்ள போகிமொன் கார்டு விற்பனைக் கடையொன்றில் கடந்த ஜூன் மாதம் துப்பாக்கிமுனையில் இடம்பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கியூபெக் மாகாணத்தின் லானோடியர் பிராந்தியத்தில் அமைந்துள்ள போகிமொன் கார்டு விற்பனைக் கடையொன்றில் கடந்த ஜூன் மாதம் துப்பாக்கிமுனையில் இடம்பெற்ற துணிகரக் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
மொண்ட்ரியல் நகரின் வடகிழக்கே உள்ள செயின்ட்-அலெக்சிஸ் பகுதியில் இயங்கும் 'மிஸிங்நோ' என்ற சேகரிப்புப் பொருட்கள் விற்பனைக் கடையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.</p><p>
கடந்த ஜூன் 18ஆம் திகதி காலை, கையில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த மர்மநபர், அங்கிருந்த பணத்தைப் எடுக்காமல், நேரடியாக மதிப்புமிக்க போகிமொன் சேகரிப்பு கார்டுகளையே குறிவைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9975f59a-4a1a-48d4-9bd6-71a65f3361a6/26-6a533952ef1e0.webp' /></p><p>
அப்போது கடையில் இருந்த 10 வயது சிறுவன் உள்ளிட்ட வாடிக்கையாளர்களை துப்பாக்கிமுனையில் மிரட்டி, சுமார் 30,000 கனேடிய டொலர் மதிப்புள்ள போகிமொன் கார்டுகளை ஹொக்கி பை ஒன்றில் நிரப்பிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>மேலும், கடையை விட்டு வெளியேறும்போது துப்பாக்கியை கையில் வைத்தபடியே, "நன்றி... இனிய இரவு பொழுது அமையட்டும்" என்று கூறிச் சென்றதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>ஆனால், கொள்ளையனை எளிதில் தப்பவிட விரும்பாத கடையின் இணை உரிமையாளர்களான ஜீன்-பிரான்சுவா ஹெட்டு மற்றும் சார்லஸ் ப்ரூல்ட்-பாரிசோ, பேஸ்பால் மட்டைகளை எடுத்துக்கொண்டு கடையிலிருந்து வெளியே விரைந்தனர். </p><p>
கொள்ளையர் தப்பிச் சென்ற வாகனத்தை பொலிஸார் எளிதில் அடையாளம் காணும் வகையில், அந்தக் காரின் பின்விளக்குகள் மற்றும் பக்கவாட்டு கண்ணாடியை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
</p><p>அவர்களின் இந்தத் துணிச்சலான நடவடிக்கையால், சம்பவம் நடைபெற்ற இரண்டு மணித்தியாலங்களுக்குள் டானி எல்-அவர் என்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்தனர்.
</p><p>அவர் மீது இக்கொள்ளைச் சம்பவம் மட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p> 
எனினும், கொள்ளையடிக்கப்பட்ட போகிமொன் கார்டுகள் மற்றொருவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக நம்பப்படுவதால், அவை இதுவரை மீட்கப்படவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T07:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானால் இலக்கு வைக்கப்பட்ட அமெரிக்க இராணுவத் தளங்கள் ; மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-military-bases-targeted-by-iran-attacks-1783839358"></link>
            <id>https://canadamirror.com/article/us-military-bases-targeted-by-iran-attacks-1783839358</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">

இருப்பினும், அந்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இடைமறித்துச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc09cceb-d133-490a-ae96-a01143ac7ea6/26-6a533a80ae82f.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">

இதற்கிடையில், நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக கட்டார் மற்றும் பஹ்ரைன் நாடுகள் தங்களின் பாதுகாப்பு எச்சரிக்கைகளை உயர்த்தி உள்ளதுடன், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளன. </p><p style="text-align: justify; ">

இந்தத் தாக்குதல்கள் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை இலக்காகக் கொண்டே நடத்தப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

இதன்படி, ஜோர்டானில் உள்ள பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் பல பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. </p><p style="text-align: justify; ">

மேலும், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள சில அமெரிக்க இராணுவத் தளங்களையும் இலக்காகக் கொண்டு ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T06:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: 3 சந்தேகநபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/toronto-police-victim-in-targeted-triple-shooting-1783830051"></link>
            <id>https://canadamirror.com/article/toronto-police-victim-in-targeted-triple-shooting-1783830051</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள நோர்த் யார்க் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள நோர்த் யார்க் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p> 
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><p>
வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ வெஸ்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு பல அழைப்புகள் கிடைத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2181a255-6f4c-402d-b9ed-3495f230f67e/26-6a531625964ca.webp' /></p><p>
</p><p>பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, 20 மதிக்கத்தக்க மூன்று இளைஞர்கள் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் கண்டறியப்பட்டனர்.</p><p> 
அவர்களில் 22 வயதுடைய அப்திஹமீம் ஆதன் என்ற இளைஞர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இவர் 2026 ஆம் ஆண்டில் டொராண்டோவில் பதிவான 18 ஆவது கொலைச் சம்பவம் இதுவாகும்.
</p><p>காயமடைந்த மற்ற இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்களின் நிலைமை சீராக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
இந்தத் துப்பாக்கிச் சூடானது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி சான்ட்ரா அர்ருடா தெரிவித்துள்ளார். </p><p>
எனினும், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.
கருப்பு நிற ஆடைகள் மற்றும் முகமூடி அணிந்திருந்த மூன்று ஆண் சந்தேகநபர்கள், திருடப்பட்ட கருப்பு நிற ஹோண்டா சிவிக் காரில் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.</p><p> 
இந்த சந்தேகநபர்களின் கார் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பிராம்ப்டன் பகுதியில் தீப்பிடித்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. 
இக்கார் சில நாட்களுக்கு முன்பு நோர்த் யார்க் பகுதியில் திருடப்பட்ட ஒன்று என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
சம்பவ இடத்தில் வசிக்கும் செவிலியர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சுமார் 6 துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், பின்னர் உதவி கேட்டு அலறிய சத்தம் கேட்டு தான் வெளியே வந்து காயமடைந்தவர்களுக்கு உதவ முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்தக் கொடூரக் குற்றத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய பொலிஸார் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். </p><p>
சம்பவ இடத்தை கடந்து சென்ற வாகனங்களின் டேஷ்கேம் காட்சிகள் அல்லது தகவல்கள் ஏதேனும் இருந்தால், உடனடியாக தமக்கு வழங்கி உதவுமாறு டொராண்டோ பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T04:32:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ 'சல்சா' திருவிழாவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி, 6 பேர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-people-are-dead-as-salsa-festival-1783821589"></link>
            <id>https://canadamirror.com/article/two-people-are-dead-as-salsa-festival-1783821589</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘சல்சா ஆன் செயின்ட் கிளயர்’ வீதித் திருவிழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘சல்சா ஆன் செயின்ட் கிளயர்’ வீதித் திருவிழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>செயின்ட் கிளெயர் அவென்யூ வெஸ்ட் மற்றும் ஆர்லிங்டன் அவென்யூ பகுதிக்கு அருகில் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
</p><p>சனிக்கிழமை இரவு 8:12 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அழைப்பு கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d51d9a4-0a96-49d8-b281-83759f0c38cf/26-6a52f517c68e8.webp' /></p><p> </p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் ஐந்து பேரைக் கண்டறிந்தனர். அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
</p><p>விசாரணைகள் தொடர்ந்த நிலையில், இரவு 9:34 மணியளவில் காயமடைந்த ஆறாவது நபர் ஒருவரையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.</p><p> எனினும், காயமடைந்தவர்களின் நிலைமை குறித்த உடனடி விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்தை பொலிஸார் தற்போது தமது பாதுகாப்புக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். </p><p>எனினும், விசாரணைகள் தொடர்வதால் அப்பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p> துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அவர் அப்பகுதியிலிருந்து தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. </p><p>அங்கிருந்த பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>திருவிழாவில் மக்கள் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த போதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. </p><p>இதனால் அங்கு பெரும் பதற்றமும் பயமும் நிலவியதுடன், திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குப் போகுமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டனர்.
'</p><p>சல்சா ஆன் செயின்ட் கிளெயர்' திருவிழா என்பது கனடாவின் முதன்மையான 'இலத்தீன் அமெரிக்க கலாசாரக் கொண்டாட்டம்' ஆகும். 
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த வருடாந்த திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T04:31:40+00:00</updated>
        </entry>
    </feed>
