<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-18T13:25:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயோர்க்கில் நெதன்யாகுவை கைது செய்ய ஆலோசனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/move-to-arrest-netanyahu-in-new-york-1784380923"></link>
            <id>https://canadamirror.com/article/move-to-arrest-netanyahu-in-new-york-1784380923</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நியூயோர்க் நகருக்கு வருகை தந்தால், அவரை உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நியூயோர்க் நகருக்கு வருகை தந்தால், அவரை உள்ளூர் சட்டங்களின்படி கைது செய்ய முடியுமா என்பது குறித்து நியூயோர்க் மாநகர மேயர் சோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். </p><p>

செப்டம்பர் மாதம் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44591ff9-10c6-4d3c-a396-4abb610dcd27/26-6a5b7dfd74fac.webp' /></p><p>
</p><p>
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து விமர்சித்து வரும் ஜனநாயக சோசலிசக் கட்சியின் புதிய மேயர் மம்தானி, நெதன்யாகு ஒரு போர்க்குற்றவாளி என்றும் அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தப்பட வேண்டியவர் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
 சட்ட வரம்புகளுக்கு உட்பட்டே இந்த நடவடிக்கை ஆராயப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நியூயோர்க் சட்டத் துறையுடன் இது குறித்துப் பேசி வருவதாகவும் கூறியுள்ளார்.</p><p> 

இருப்பினும், அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உடன்படிக்கையில் கையெழுத்திடாத நாடு என்பதால், இத்தகைய கைது நடவடிக்கை சட்டப்பூர்வமாக சாத்தியமற்றது என சட்ட வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-18T13:20:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் சொத்தை பாதுகாப்பதாகக் கூறி 115 பேரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/multi-million-fraud-uk-115-people-swindled-assets-1784366428"></link>
            <id>https://canadamirror.com/article/multi-million-fraud-uk-115-people-swindled-assets-1784366428</id>
            <summary type="text">&amp;nbsp; பிரித்தானியாவில், குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதாக நம்பவைத்து முதியவர்களிடம் இருந்து சொத்துகளை அபகரித்த மோசடி வழக்கில், சந்தேக நபருக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரித்தானியாவில், குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதாக நம்பவைத்து முதியவர்களிடம் இருந்து சொத்துகளை அபகரித்த மோசடி வழக்கில், சந்தேக நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேக நபர் 115 பேரை ஏமாற்றி 11 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிக இழப்பை ஏற்படுத்திய நபருக்கு 8 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f752b5b9-e6d3-4b79-9522-1f27f9463846/26-6a5b455dbbde8.webp' /></p><h2>&nbsp;8 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத் தண்டனை</h2><p>
</p><p>
80 வயதான டொனால்ட் மேத்யூஸ் (Donald Matthews), 2008 ஆம் ஆண்டு தனது குடும்பச் சொத்துகளை பாதுகாக்கும் நோக்கில், யூனிவர்சல் வெல்த் பிரிசர்வேஷன் (Universal Wealth Preservation – UWP) என்ற நிறுவனத்திற்கு தனது வீட்டின் உரிமையை மாற்றி வழங்கினார். </p><p>அந்த நிறுவனம் அவரது சொத்துகள் பாதுகாப்பாக இருக்கும் என உறுதியளித்திருந்தது.
</p><p>
 டொனால்ட் மேத்யூஸ் 2016 ஆம் ஆண்டு உயிரிழந்த பின்னர், அந்த நிறுவனம் சஃபோக் (Suffolk) பகுதியில் இருந்த அவரது வீட்டை பல இலட்சம் பவுண்டுகளுக்கு விற்றுவிட்டு, அதிலிருந்து கிடைத்த பணத்தில் அவரது குடும்பத்தினருக்கு எந்தப் பகுதியையும் வழங்கவில்லை.
</p><p>
பின்னர் நடைபெற்ற விசாரணையில், UWP நிறுவனத்தின் தலைவரான 59 வயதான ஸ்டீவன் லாங் (Steven Long), டொனால்ட் மேத்யூஸை மட்டுமல்லாமல் இதேபோன்ற முறையில் மேலும் 114 பேரையும் ஏமாற்றி, மொத்தமாக 11 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிக நிதி மோசடி செய்தது தெரியவந்தது.
</p><p>
இந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, லண்டனிலுள்ள சவுத்‌வர்க் கிரவுன் நீதிமன்றம் (Southwark Crown Court) வெள்ளிக்கிழமை அவருக்கு 8 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது.
</p><p>
டொனால்ட் மேத்யூஸின் மகன் பால் மேத்யூஸ், தனது தந்தையின் நம்பிக்கையை பயன்படுத்தி மோசடி செய்த ஸ்டீவன் லாஙின் செயல் ,மிகவும் அருவருப்பானது, எனக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
</p><p>
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, சொத்துகளை பாதுகாப்பதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் நிதி மோசடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-18T13:09:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் உச்சம்; அமெரிக்காவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஈரான் ! பீதியில் உலக நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-border-will-be-safe-mohsen-rezaee-warning-us-1784380224"></link>
            <id>https://canadamirror.com/article/no-border-will-be-safe-mohsen-rezaee-warning-us-1784380224</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்கப் படைகள் தங்களின் வான்வழித் தாக்குதல்களை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தால், ஈரான் தற்காப்புப் பாணியை விடுத்து முழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்கப் படைகள் தங்களின் வான்வழித் தாக்குதல்களை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தால், ஈரான் தற்காப்புப் பாணியை விடுத்து முழு அளவிலான ஆக்கிரமிப்பு மற்றும் அழிவு என்ற புதிய அதிரடிப் போர்க்கட்டத்திற்குள் நுழையும் என ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் மூத்த ராணுவ ஆலோசகர் மோஹ்சென் ரெசாய் (mohsen rezaee) மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளமை உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் ஈரானிய இலக்குகள் மீது தொடர்ந்து ஏழாவது நாளாக அமெரிக்கா குண்டுமழை பொழிந்து வரும் சூழலில், ஈரானின் இந்த பகிரங்க மிரட்டல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது 

ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் (IRIB TV) தோன்றிப் பேசிய ராணுவ ஆலோசகர் மோஹ்சென் ரெசாய் (mohsen rezaee) ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d436f26-6966-458c-a337-e2ff360dd586/26-6a5b7b420a6d8.webp' /></p><p> “மத்திய கிழக்கில் தூதரகப் பேச்சுவார்த்தைகளுக்கான காலம் தற்பொழுது முற்றிலும் முடிந்துவிட்டது; அமெரிக்கா போரை நிறுத்தவில்லை என்றால் நாங்கள் தற்காப்புப் பதிலடிகளைத் தாண்டிப் பாய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>

 இந்த புதிய தாக்குதல் உத்தியை நாங்கள் செயல்படுத்தத் தொடங்கினால், எந்தவொரு அரசியல் எல்லையையும் நாங்கள் மதிக்க மாட்டோம்; அந்த எல்லைகள் எதுவும் எதிரிகளுக்குப் பாதுகாப்பை வழங்காது” என்று கூறி, அமெரிக்காவின் நட்பு நாடுகளையும் சேர்த்துத் தாக்கத் தயங்க மாட்டோம் என ஆக்ரோஷமாக&nbsp; (mohsen rezaee)&nbsp; எச்சரித்துள்ளார்.</p><p>மறுபுறம், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடி அறிவுறுத்தலின்படி ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைச் சிதைப்பதற்காகத் தங்களின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் துல்லியமான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p>

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் அச்சுறுத்தலாக விளங்குவதைத் தடுக்கவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அமெரிக்கா கூறுகிறது. </p><p>ஆனால், அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏவுகணை மற்றும் ட்ரோன் அலைகளை ஏவப் போவதாக ஈரான் பதிலடிப் பிரகடனம் செய்துள்ளது.
</p><p>
இதுவரை பிராந்தியத்தில் ஒரு பெரிய உலகளாவிய பாதுகாப்பு நெருக்கடி வெடிப்பதைத் தவிர்ப்பதற்காகவே தங்களின் ஏவுகணைக் கூட்டுப் படைகளைத் தடுத்து நிறுத்தி, பொறுமை காத்து வந்ததாகக் கூறியுள்ள ஈரான் ராணுவத் தலைமை, இனி தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து வந்தால் பின்வாங்கப் போவதில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. </p><p>

 இன்னிலையில் ஈரானின் இந்த “முழு அளவிலான போர்” எச்சரிக்கை ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஒரு மிகப்பெரிய உலகப்போர்ச் சூழலின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-18T13:08:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[47 கோடிக்கு மேல் ஏலம் போன பீலேயின் டி-சேர்ட்; உலகளவில் இரண்டாவது அதிகபட்ச விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pel-s-t-shirt-auctioned-for-over-47-crore-record-1784377402"></link>
            <id>https://canadamirror.com/article/pel-s-t-shirt-auctioned-for-over-47-crore-record-1784377402</id>
            <summary type="text">&amp;nbsp; பிரேசில் கால்பந்து மன்னனான பீலே (Pelé) கடந்த 1958ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டியில் அணிந்து விளையாடிய டி-சேர்ட், நியூயோர்க்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரேசில் கால்பந்து மன்னனான பீலே (Pelé) கடந்த 1958ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டியில் அணிந்து விளையாடிய டி-சேர்ட், நியூயோர்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 49 இலட்சம் அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியுள்ளது. </p><p>

கால்பந்து வீரர் ஒருவரின் டி-சேர்ட் ஏலம் போன வரிசையில், இது உலகளவில் இரண்டாவது அதிகபட்ச விலையாகப் பதிவாகி சாதனை படைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1677eb2-9424-4e7a-bec5-88d57b4ce481/26-6a5b703b91288.webp' /></p><p>
</p><p>
இதற்கு முன்னர், கடந்த 2022ஆம் ஆண்டில் ஆர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் டீகோ மரடோனாவின் (Diego Maradona) டி-சேர்ட் 93 இலட்சம் அமெரிக்க டொலருக்கு ஏலம் போனதே உலகளவில் முதலிடத்தில் உள்ளது.
</p><p>
கடந்த 1958ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், பிரேசில் அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
</p><p>
இந்த&nbsp; போட்டியில் பிரேசில் அணிக்காக விளையாடிய பீலே, 2 அதிரடி கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-18T12:21:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் ஜலசந்தியில் விபத்தில் சிக்கிய 2 எண்ணெய் கப்பல்கள் ; அமெரிக்காவை குற்றம்சாட்டும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-oil-tankers-collide-in-strait-of-hormuz-1784373081"></link>
            <id>https://canadamirror.com/article/two-oil-tankers-collide-in-strait-of-hormuz-1784373081</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடியில் மோதி வெடிவிபத்தில் சிக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் தவறான வழிகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடியில் மோதி வெடிவிபத்தில் சிக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p> மேலும், அமெரிக்காவின் தவறான வழிகாட்டுதலை பின்பற்றி, ஹார்முஸ் ஜலசந்தியில் தடை செய்யப்பட்ட ஆபத்தான பாதை வழியாக சென்றதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2648d13-7815-4215-82e2-532dbaf6be6f/26-6a5b5f5ae2d1d.webp' /></p><p>
</p><p>
ஆனால் ஈரானின் குற்றாச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. </p><p>இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் புரட்சிகர காவல்படையின் பெரும்பாலான குற்றச்சாட்டுகளைப் போலவே இதுவும் பொய்யானது" என்று பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமீபத்தில், துருக்கியின் அங்காரா நகரில் நடந்த நேட்டோ உச்சி நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, ஈரானுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டார். </p><p>இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளமை குறிப்பிடதக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T11:11:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈராக் இடையே கையெழுத்தான 48 முக்கிய ஒப்பந்தங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-and-iraq-sign-48-key-agreements-1784370054"></link>
            <id>https://canadamirror.com/article/us-and-iraq-sign-48-key-agreements-1784370054</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈராக் இடையே எண்ணெய் உற்பத்தி உள்ளிட்ட துறைகளின் கீழ் 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈராக் இடையே எண்ணெய் உற்பத்தி உள்ளிட்ட துறைகளின் கீழ் 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் பிரதமர் அலி அல்-சைதி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றார். </p><p>தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேரில் சந்தித்த அவர் இருநாடுகள் இடையேயான முக்கிய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7db65989-6c4a-4fbd-8d57-8b0806ffca54/26-6a5b538797302.webp' /></p><p>

</p><p>ஏற்கெனவே, முன்னாள் அதிபர் சதாம் உசேன் காலத்தில் நடைபெற்ற இராக் மீதான அமெரிக்காவின் போரினால் அந்நாடு கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால், வறுமை, ஊழல் போன்ற விவகாரங்களால் இராக் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இராக் ஆகிய நாடுகளின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு, ஒத்துழைப்பு உள்பட 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக, இராக் பிரதமரின் அலுவலகம் இன்று (ஜூலை 18) அறிவித்துள்ளது.
</p><p>
இத்துடன், ஈராக்கின் எண்ணெய் மற்றும் மின்சார அமைச்சகத்துக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த எக்ஸான் மொபில், கேபிஆர், ஷெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. </p><p>மேலும், இராக் மற்றும் சிரியா இடையில் கச்சா எண்ணெய் குழாய் தொடரை அமைப்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.


</p><p>
இதில், சர்வதேச செய்ற்கைக்கோள் தொலைத்தொடர்பில் முன்னணி வகிக்கும் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனத்துடன் இராக் அரசு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.</p><p>

முன்னதாக, அமெரிக்காவின் ஆதரவுடன் தொழிலதிபரான அலி அல்-சைதி கடந்த மே மாதம் இராக் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-18T10:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உகாண்டாவில் கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து ; 20 மாணவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/20-students-killed-in-school-bus-crash-1784365238"></link>
            <id>https://canadamirror.com/article/20-students-killed-in-school-bus-crash-1784365238</id>
            <summary type="text">கிழக்கு உகாண்டாவில் கல்விச் சுற்றுலாவிற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 20 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு உகாண்டாவில் கல்விச் சுற்றுலாவிற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 20 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

கப்சோவா (Kapchorwa) மாவட்டத்தின் செக்வாடிட் (Chekwatit) கிராமத்திற்கு அருகில் கடந்த வியாழக்கிழமை (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக உகாண்டா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68ed26d8-4a9f-4f83-8398-aa6234a5888c/26-6a5b40b7d49bb.webp' /></p><p>
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், வீதியை விட்டு விலகி பெரிய கல் ஒன்றில் மோதி கவிழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>


இந்த விபத்தில் 28க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் ஒன்பது பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

உயிரிழந்த சிறுவர்களின் பெயர்கள் அல்லது வயது விபரங்களை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை. இந்த விபத்தில் முதியவர் ஒருவரும் அந்தப் பாடசாலையின் நிறுவனர் மற்றும் அதிபரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
</p><p>
மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அந்நாட்டு அனைத்து பாடசாலை சுற்றுலாக்களும் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T09:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் டிக்டொக் செயலி தடை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tiktok-app-allowed-government-offices-in-the-us-1784361456"></link>
            <id>https://canadamirror.com/article/tiktok-app-allowed-government-offices-in-the-us-1784361456</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் அரச அலுவலகங்களுக்குச் சொந்தமான சாதனங்களில் டிக்டொக் செயலியைப் தரவிறக்கம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க நீதித் திணைக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் அரச அலுவலகங்களுக்குச் சொந்தமான சாதனங்களில் டிக்டொக் செயலியைப் தரவிறக்கம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க நீதித் திணைக்களம் நீக்கியுள்ளது.
</p><p>
2022 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு நலன் கருதி அரச சாதனங்களில் டிக்அடொக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a19dcb7-d1e1-437b-bd6a-24c63d542de0/26-6a5b31f27c60b.webp' /></p><p>
</p><p>
தற்போது டிக்டாக்கின் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் (ByteDance), அதன் அமெரிக்க பயனர் தரவு மற்றும் செயல்பாடுகளை 'டிக்டொக் யுஎஸ்டிஎஸ்' (TikTok USDS) எனும் கூட்டு நிறுவனத்துக்கு மாற்றியுள்ளதால், இந்தத் தடை நீக்கப்படுவதாக நீதித் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>

டிக்டொக்கின் அல்கரிதம் மற்றும் தரவுகள் அமெரிக்காவின் ஒரக்கிள் (Oracle) கிளவுட் மூலம் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தடையை நீக்குவது தொடர்பான முடிவை அந்தந்த அமைப்புகளின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்ளலாம் என்றும், தற்போதைய நிலையில் டிக்டொக் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இல்லை என்றும் நீதித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-18T07:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பரவும் சைக்ளோஸ்போரா தொற்று: சில தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/how-affect-cyclosporiasis-outbreak-in-canada-1784360633"></link>
            <id>https://canadamirror.com/article/how-affect-cyclosporiasis-outbreak-in-canada-1784360633</id>
            <summary type="text">கனடாவின் பல்வேறு பகுதிகளில், சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கும் அமெரிக்காவில் பரவிவரும் தொற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பல்வேறு பகுதிகளில், சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கும் அமெரிக்காவில் பரவிவரும் தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
பொதுவாக, நோய்க்கிருமிகளில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற கிருமிகள் குறித்து அதிகம் பேசப்படுவதுண்டு.
</p><p>
ஆனால், பல நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் காணப்படும் ஒட்டுண்ணி (parasite) என்னும் கிருமி குறித்து அதிகம் பேசப்படுவதில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a8243a1-39a5-440f-b9d6-b38717edeb5c/26-6a5b2eba82839.webp' /></p><p>

குடற்புழுக்கள் முதல், மலேரியாவை உண்டு பண்ணும் கிருமிகள், குடல் முதல் மூளை வரை பாதிக்கும் அமீபா என்னும் கிருமிகள், இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும் ஜியார்டியா, ட்ரைக்கோமோனாஸ் என்னும் கிருமிகள், கால் பாதத்தை துளைத்துக்கொண்டு உடலுக்குள் நுழைந்து, இரத்தக்குழாய் வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து, வாய்க்கு வந்து, பின் வயிற்றுக்குள் செல்லும் கொக்கிப்புழுக்கள் என பலவகை ஒட்டுண்ணிகள் உலகில் காணப்படுகின்றன.</p><p>

அப்படிப்பட்ட ஒட்டுண்ணிகளில் ஒன்றுதான் இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்றை ஏற்படுத்தக்கூடிய சைக்ளோஸ்போரா என்னும் கிருமி.
</p><p>
உணவு மற்றும் குடிநீர் வழியாக மட்டுமே பரவும் இந்த சைக்ளோஸ்போரா என்னும் கிருமி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம், வாயுத்தொல்லை மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.</p><p>

தற்போது அமெரிக்காவில் இந்த கிருமி அதிக அளவில் பரவிவரும் நிலையில், தற்போது கனடாவின் பல பகுதிகளிலும் அது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

என்றாலும், அமெரிக்கத் தொற்றுக்கும் கனேடிய தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-18T07:52:05+00:00</updated>
        </entry>
    </feed>
