<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-19T04:46:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா மீது புதிய வரிகளை விதிக்க டொனால்ட் டிரம்ப் மிரட்டல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-threatens-new-canada-tariffs-1784397117"></link>
            <id>https://canadamirror.com/article/trump-threatens-new-canada-tariffs-1784397117</id>
            <summary type="text">கனடாவில் நூற்றுக்கணக்கான இடங்களில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் வடக்குப் பகுதி முழுவதும் அடர்ந்த புகைப் போர்வைக்குள் மூழ்கியுள்ள நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் நூற்றுக்கணக்கான இடங்களில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் வடக்குப் பகுதி முழுவதும் அடர்ந்த புகைப் போர்வைக்குள் மூழ்கியுள்ள நிலையில், கனடா மீது புதிய வர்த்தக வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.</p><p>
"அமெரிக்கா தேவையின்றி அழுக்கான, மாசுபட்ட மற்றும் ஆரோக்கியமற்ற காற்றால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ள டிரம்ப், கனடாவின் "திட்டமிட்ட அலட்சியம்" காரணமாக இந்த புதிய வரிகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.</p><p> 
மேலும், காடுகள் மற்றும் புதர்களை முறையாகப் பராமரிக்காதது குறித்து விளக்கம் கேட்க கனடா பிரதமர் மார்க் கார்னியை தொடர்பு கொள்ளவிருப்பதாகவும் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59265319-8167-4c02-b523-ada271d874ec/26-6a5bbd3ecdafd.webp' /></p><p>
</p><p>கனடிய காட்டுத்தீ தகவல் அமைப்பின்படி, கனடா முழுவதும் தற்போது 888 இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து வருகிறது. 
இதில் பெரும்பாலானவை கட்டுப்பாட்டை மீறி எரிகின்றன. ஒன்டாரியோவில் மட்டும் 190-க்கும் மேற்பட்ட தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.</p><p>
 இந்த காட்டுத்தீயால் இதுவரை சுமார் 30 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் அழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இதேவேளை, குறை கூறுவதை விடுத்து காட்டுத்தீயை அணைக்க ஆதரவையும் உதவிகளையும் அனுப்புங்கள்; அமெரிக்காவில் கலிபோர்னியாவில் தீ விபத்து ஏற்பட்ட போதும், வட கரோலினாவில் சூறாவளி தாக்கிய போதும் கனடா இதே போன்ற உதவிகளைச் செய்துள்ளது" என ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T00:00:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் மீறிவிட்டது – ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-war-live-us-and-iran-exchange-attacks-1784395650"></link>
            <id>https://canadamirror.com/article/iran-war-live-us-and-iran-exchange-attacks-1784395650</id>
            <summary type="text">அமெரிக்கா-ஈரான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை குறித்து ஈரானின் வெளியுறவு அமைச்சு செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் கருத்து தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா-ஈரான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை குறித்து ஈரானின் வெளியுறவு அமைச்சு செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>
 கடந்த ஒரு வாரத்தில் இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு விதியையும் அமெரிக்கா மீறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>
ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் அதிகாரிகள் முறைப்படுத்திய கப்பல் போக்குவரத்துப் பாதையைப் பயன்படுத்தாமல், அதற்குப் பதிலாக ஒரு "இணைப் பாதையை" பயன்படுத்துமாறு கப்பல்களை அமெரிக்கா வற்புறுத்துவதாக பாகேய் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f33be2d-0053-4750-b572-5e190700444a/26-6a5bb7872d7bb.webp' /></p><p>
</p><p> அமெரிக்காவின் இந்த நடவடிக்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
மேலும், ஈரான் எப்போதும் போரை விரும்பியதில்லை என்றும், தங்களின் மீது "திணிக்கப்பட்ட" போரில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள மட்டுமே ஈரான் முயன்றுள்ளது என்றும் பாகேய் கூறினார். </p><p>
முன்னதாக, அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் வழங்கியிருந்த உறுதிமொழிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசிம் கரீபாபாடி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T23:00:15+00:00</updated>
        </entry>
    </feed>
