<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-19T18:33:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா காட்டுத்தீ புகையால் மொன்ரியல் பகுதியில் காற்றுத் தர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-wildfires-air-quality-warning-1784471113"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-wildfires-air-quality-warning-1784471113</id>
            <summary type="text">கனடாவின் காட்டுத்தீகளில் இருந்து பரவும் புகை காரணமாக, மொன்ரியல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற கனடா நிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் காட்டுத்தீகளில் இருந்து பரவும் புகை காரணமாக, மொன்ரியல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற கனடா நிறுவனம் காற்றுத் தர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
</p><p>காற்றில் புகையின் அளவு அதிகரிக்கும் போது, உடல்நல அபாயங்களும் அதிகரிக்கும். மக்கள் வெளியில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும். வெளிப்புற விளையாட்டுகள், நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க அல்லது குறைக்க பரிசீலிக்க வேண்டும் என கனடா வானிலை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>
காட்டுத்தீ புகை காரணமாக பொதுமக்களுக்கு கண், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல், தலைவலி, லேசான இருமல் போன்ற சாதாரண அறிகுறிகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc0fa72d-27f3-4d75-9812-8767c7288821/26-6a5cde4ab3406.webp' /></p><p>
</p><p>அதேவேளை, சிலருக்கு மூச்சுத்திணறல், மார்பு வலி மற்றும் கடுமையான இருமல் போன்ற தீவிர அறிகுறிகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள், ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் அல்லது நீண்டகால நோய்களைக் கொண்டவர்கள், மேலும் வெளிப்புறங்களில் பணிபுரிபவர்கள் காட்டுத்தீ புகையால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என தெரிவித்துள்ளது.
</p><p>இவர்கள் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை குறைக்க அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்றும், உடல்நல அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>காட்டுத்தீ புகை காரணமாக கனடாவின் பல நகரங்களில் வானம் புகைமூட்டத்துடன் காணப்படுவதுடன், பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாக்க அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T18:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/international-students-say-post-grad-work-permit-1784470846"></link>
            <id>https://canadamirror.com/article/international-students-say-post-grad-work-permit-1784470846</id>
            <summary type="text">கனடாவில் கல்வி கற்ற ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள், தாங்கள் தகுதியானதாக நம்பி பயின்ற கல்வித் திட்டங்களை நிறைவு செய்த பின்னரும், பட்டப்படிப்புக்குப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் கல்வி கற்ற ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள், தாங்கள் தகுதியானதாக நம்பி பயின்ற கல்வித் திட்டங்களை நிறைவு செய்த பின்னரும், பட்டப்படிப்புக்குப் பிந்தைய வேலை அனுமதிப் பத்திரம் மறுக்கப்பட்டதாக தெரிவித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
</p><p>தாங்கள் அனைவரும் 2026 ஜூன் 24-ஆம் திகதிக்கு முன்பே விண்ணப்பங்களை முழுமையாகச் சமர்ப்பித்திருந்தனர். </p><p>
ஆனால் அதே நாளில் கனடிய குடிவரவு மற்றும் ஏதிலிகள் அலுவலகம் தனது இணையதள வழிகாட்டுதலை புதுப்பித்து, "Non-credit" கல்வித் திட்டங்களை முடித்தவர்களுக்கு பொதுவாக PGWP வழங்கப்படாது என்று தெளிவுபடுத்தியது.
</p><p>இதனால், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் மதிப்பீடு செய்வது நியாயமற்றது என்று மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.
</p><p>இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் Portage Students Union அமைப்பு, நாடு முழுவதும் சுமார் 1,500 பட்டதாரிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. </p><p>
அவர்கள் அரசிடம் அவசர மறுபரிசீலனை நடத்தவும், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் திறந்து நியாயமான முடிவெடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>கால்கரியைச் சேர்ந்த குடிவரவு சட்டத்தரணி லோரா-அன் கோல்டிங், தனது அலுவலகத்திலேயே 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் வழக்குகள் தற்போது கையாளப்பட்டு வருவதாக தெரிவித்தார். </p><p>
மாணவர்கள் மறுபரிசீலனை கோருவதோடு, நீதிமன்றத்தில் நீதித்துறை மீளாய்வு கோரியும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.</p><p>
இந்நிலையில், பட்டப்படிப்புக்குப் பிந்தைய வேலை அனுமதிப் பத்திரம் வழங்கும் தகுதி விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட இணையதள புதுப்பிப்பு ஏற்கனவே இருந்த விதிமுறைகளை தெளிவுபடுத்தும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் குடிவரவு மற்றும் ஏதிலிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>எனினும், இந்த விளக்கம் மாணவர்களின் அதிருப்தியை தணிக்கவில்லை. தங்களது எதிர்காலத்தை கனடாவை நம்பி திட்டமிட்ட ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள், நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அரசின் முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T17:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய ஆய்வுகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-research-aims-to-protect-honeybees-1784470336"></link>
            <id>https://canadamirror.com/article/new-research-aims-to-protect-honeybees-1784470336</id>
            <summary type="text">கனடாவில் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கனடாவின் வேளாண் துறைக்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் இன்றியமையாத பங...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>கனடாவின் வேளாண் துறைக்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் இன்றியமையாத பங்கு வகிக்கும் மேற்கத்திய தேனீக்கள் நோய்கள், ஒட்டுண்ணிகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் அழுத்தங்கள் காரணமாக கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றன.
</p><p>இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், மனிடோபா பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் உணவு அறிவியல் பீடத்தின் பூச்சியியல் உதவிப் பேராசிரியர் டாக்டர் நூரியா மோர்ஃபின் தலைமையில் விரிவான அறிவியல் ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04b002a8-409b-4d1f-aa88-6f2a4261375d/26-6a5cdb429c080.webp' /></p><p>
தேனீக்கள் தேன் உற்பத்திக்காக மட்டுமல்லாமல், பயிர்களின் மகரந்தச் சேர்க்கை மூலம் கனடா பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் பல பில்லியன் டொலர் மதிப்பிலான பங்களிப்பை வழங்குவதோடு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகின்றன என்று டாக்டர் மோர்ஃபின் தெரிவித்துள்ளார்.
</p><p>தேனீக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக Varroa destructor என்ற ஒட்டுண்ணி பூச்சி கருதப்படுகிறது. 
இது தேனீக்களின் உடலில் ஒட்டிக்கொண்டு அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதுடன், Deformed Wing Virus உள்ளிட்ட பல வைரஸ் தொற்றுகள் பரவுவதற்கும் காரணமாகிறது.</p><p>
இந்த ஒட்டுண்ணி, நுண்ணுயிரிகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஒன்றோடொன்று இணைந்து தேனீக்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
</p><p>வெப்பநிலை மாற்றம், ஈரப்பத மாற்றம் உள்ளிட்ட காலநிலைச் சூழல்கள் தேனீக்களின் நோய் எதிர்ப்பு திறனை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் ஆய்வாளர்கள் ஆராயவுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T16:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்பர்டா பிரிவினை வாக்கெடுப்பை முன்னிட்டு கனடாவை ஒன்றுபடுத்தும் பிரசாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/conservatives-appoint-referendum-lead-as-poilievre-1784469919"></link>
            <id>https://canadamirror.com/article/conservatives-appoint-referendum-lead-as-poilievre-1784469919</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் அல்பர்டா மாகாணத்தில் நடைபெறவுள்ள பிரிவினை தொடர்பான வாக்கெடுப்பை முன்னிட்டு, நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் கன்சர்வேட்டிவ் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் அல்பர்டா மாகாணத்தில் நடைபெறவுள்ள பிரிவினை தொடர்பான வாக்கெடுப்பை முன்னிட்டு, நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளார்.
</p><p>அதன்படி, அல்பர்டா தொடர்பான வாக்கெடுப்பு பிரச்சாரத்தை ஒருங்கிணைக்கும் "Referendum Lead for Alberta" என்ற புதிய பொறுப்புக்கு பார்க்லாண்ட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேன் லொய்டை, அவர் நியமித்துள்ளார்.
</p><p>ஒன்றுபட்ட கனடாவுக்குள் வலிமையான அல்பர்டாவை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை டேன் லொய்ட் முன்னெடுக்க வேண்டுமென பொய்லிவ்ரே தெரிவித்துள்ளார்.
</p><p>அல்பர்டா மக்களின் கருத்துகளையும் கவலைகளையும் நேரடியாகக் கேட்டு, அவர்களின் பிரச்சினைகளுக்கு நம்பிக்கையூட்டும் தீர்வுகளை முன்வைத்து, கனடாவின் ஒற்றுமையை பாதுகாக்கும் பணியில் டேன் லொய்ட், அல்பர்டா கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைமையுடன் இணைந்து செயல்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அல்பர்டா மக்களின் அதிருப்திக்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகக் கூறிய பொய்லிவ்ரே, வீடு வாங்க முடியாத நிலை, வாழ்க்கைச் செலவின் உயர்வு, குடும்பத்தை நடத்தும் சிரமம் போன்ற காரணங்களால் இளைஞர்கள் கனடாவின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இழந்து வருவதாக தெரிவித்தார்.
</p><p>மேலும், லிபரல் அரசின் கொள்கைகள் அல்பர்டாவின் எரிசக்தித் துறையை பாதித்ததுடன், முக்கிய எண்ணெய் குழாய் திட்டங்களையும் தடுத்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
</p><p>"அல்பர்டா மக்களை கண்டிப்பது எங்கள் நோக்கமல்ல; அவர்களின் குரலைக் கேட்பதே எங்கள் கடமை" என பொய்லிவ்ரே வலியுறுத்தினார்.
</p><p>அல்பர்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிய வேண்டுமா என்பது குறித்து கட்டாய வாக்கெடுப்பை நடத்த வேண்டுமா என்ற கேள்வி தொடர்பாக, வரும் அக்டோபர் மாதம் மக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளனர்.</p><p>
இதற்கு முன்னரும், அல்பர்டாவில் பிரிவினை ஆதரவை எதிர்த்து கோடை காலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வதாக பொய்லிவ்ரே அறிவித்திருந்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T16:00:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் அரச பாதுகாப்பு நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spy-watchdog-do-more-to-avoid-canadian-1784471733"></link>
            <id>https://canadamirror.com/article/spy-watchdog-do-more-to-avoid-canadian-1784471733</id>
            <summary type="text">&amp;nbsp;வெளிநாடுகளுடன் தகவல்களைப் பகிரும் போது, அந்த தகவல்கள் சித்திரவதை அல்லது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்காத வகையில் கனடாவின் சில மத்திய அரச நிறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெளிநாடுகளுடன் தகவல்களைப் பகிரும் போது, அந்த தகவல்கள் சித்திரவதை அல்லது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்காத வகையில் கனடாவின் சில மத்திய அரச நிறுவனங்கள் மேலும் கவனமாக செயல்பட வேண்டும் என புதிய பாதுகாப்பு கண்காணிப்பு அறிக்கை எச்சரித்துள்ளது.
</p><p>தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை மறுஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், சர்ச்சைக்குரிய தகவல் பரிமாற்றங்களை கையாளும் சட்ட நடைமுறைகளை வலுப்படுத்த பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>வெளிநாட்டு அமைப்புகளால் ஏற்படும் தவறான நடத்தைகளில் பங்காளியாக இருப்பதைத் தவிர்க்கும் சட்டம் வெளிநாட்டு அமைப்புகளுடன் தகவல்களை பகிர்வதை அல்லது அவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை பயன்படுத்துவதை தடை செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c6c19e2-a857-4895-8a9b-0a7969699d3a/26-6a5ce0b7c4bda.webp' /></p><p> 
குறிப்பாக, அந்த நடவடிக்கை காரணமாக ஒருவர் வெளிநாட்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சித்திரவதை அல்லது மனிதாபிமானமற்ற நடத்தைக்கு உள்ளாகும் கணிசமான அபாயம் இருந்தால் அது அனுமதிக்கப்படாது.
</p><p>எனினும், அந்த அபாயங்களை மதிப்பீடு செய்து, அவற்றை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே தகவல் பகிர்வு அனுமதிக்கப்படலாம். இது அபாயத்தை குறைக்கும் நடைமுறை என அழைக்கப்படுகிறது.
</p><p>மேலும், சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனைகளை ஒழிப்பதற்கான சர்வதேச மனித உரிமை கடமைகளுக்கு ஏற்ப இந்த கடுமையான விதிமுறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
</p><p>வெளிநாட்டு தகவல் பகிர்வு தொடர்பான முடிவுகளில் இந்த சட்டத் தேவைகளை எவ்வாறு பரிசீலித்தனர் என்பதற்கான முழுமையான பதிவுகளை மத்திய அரச நிறுவனங்கள் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T15:38:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோவில் காட்டுத்தீ பரவல் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ntario-premier-visits-thunder-bay-1784469609"></link>
            <id>https://canadamirror.com/article/ntario-premier-visits-thunder-bay-1784469609</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இன்று மேலும் ஏழு இடங்களில் புதிய காட்டுத்தீகள் பதிவாகியுள்ளதால், தற்போது எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீகளின் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இன்று மேலும் ஏழு இடங்களில் புதிய காட்டுத்தீகள் பதிவாகியுள்ளதால், தற்போது எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீகளின் மொத்த எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>இயற்கை வள அமைச்சு இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது.
மேகமூட்டமான வானிலை மற்றும் அண்மையில் பெய்த மழை காரணமாக சில பகுதிகளில் தீ பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளில் நிலைமை இன்னும் மிகவும் ஆபத்தானதாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இந்நிலையில், ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தண்டர் பே நகருக்குச் சென்று தீயணைப்பு வீரர்கள், அவசரகால மீட்புப் பணியாளர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e51ac2c4-1591-4e8f-a465-cbbe6abd4b1a/26-6a5cd86ac0ec3.webp' /></p><p> </p><p>
காட்டுத்தீயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து வளங்களையும் பயன்படுத்த அரசு தயங்காது என்றும், இதற்கான செலவுகளுக்கு எந்த வரம்பும் விதிக்கப்படமாட்டாது எனவும் அவர் உறுதியளித்தார்.
</p><p>மேலும், அல்பர்டா மாகாணத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள், யூகோனிலிருந்து நீர்குண்டு வீச்சு விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களின் உதவிகளும் பெறப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
</p><p>காட்டுத்தீ நெருக்கடியை எதிர்கொள்ள அரசு போதுமான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முதல்வர் ஃபோர்ட் நிராகரித்ததுடன், அவசரநிலையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.</p><p>
இந்தக் காட்டுத்தீயால் முதன்மையாக பூர்வீக மக்களின் சமூகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிஷ்னாவ்பே அஸ்கி நேஷன் பகுதிகளில் உள்ள பல சமூகங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளன. </p><p>இந்நிலையில், மாகாண அரசின் நடவடிக்கைகள் மிகவும் தாமதமாக உள்ளதாக அந்த அமைப்பின் தலைமைத் தலைவர் ஆல்வின் ஃபிட்லர் குற்றம்சாட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T15:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ணப் போட்டி ; பரிசுவழங்கவுள்ள ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/world-cup-tournament-trump-to-present-the-prize-1784464552"></link>
            <id>https://canadamirror.com/article/world-cup-tournament-trump-to-present-the-prize-1784464552</id>
            <summary type="text">பிபா உலகக் கிண்ணக் கால்பந்து விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிபா உலகக் கிண்ணக் கால்பந்து விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ ஆகியோர் இணைந்து உலகக் கிண்ணத்தையும்&nbsp; பரிசுகளையும் வழங்கவுள்ளனர்.</p><p>&nbsp;நியூயோர்க் நகரில் புகழ்பெற்ற மெட்லைப் மைதானத்தில் இன்று (19) நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக நேருக்கு நேர் மோதுகின்றன.</p><p>இன்றைய இறுதிப் போட்டியைக் காண்பதற்காக சுமார் 80,000 பார்வையாளர்கள் மைதானத்தில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த உலகக்கிண்ணத் தொடரின் 7 முக்கிய ஆட்டங்கள் ஏற்கனவே இந்த மைதானத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.</p><p>போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்தில் இரசிகர்களை உற்சாகப்படுத்த பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கோல்ட்பிளேஸ் கிறிஸ் மார்ட்டின், மெடோனா, ஷகிரா, பி.டி.எஸ் ஜஸ்டின் பைபர் மற்றும் குஸ்டவோ டுடாமெல் ஆகியோரின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் அரங்கேறவுள்ளன.</p><p>மெட்லைப் மைதானத்தின் புல்தரை பரப்பு மிகவும் கடினமாக இருப்பதாக பெரும்பாலான வீரர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். இது ஆட்டத்தின் வேகத்திற்கு சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது.</p><p>உலகக்கிண்ணத்தை முத்தமிடப் போவது மெஸ்ஸியின் அர்ஜென்டினாவா? அல்லது ரோட்ரியின் ஸ்பெயினா? என்ற எதிர்பார்ப்பு உலகெங்கிலும் உள்ள கால்பந்து இரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-19T13:35:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் கிச்சனரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது, விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/kitchener-one-injured-in-kitchener-shooting-wrps-1784465978"></link>
            <id>https://canadamirror.com/article/kitchener-one-injured-in-kitchener-shooting-wrps-1784465978</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், கிச்சனர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வாட்டர்லூ பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், கிச்சனர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வாட்டர்லூ பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, சனிக்கிழமை காலை கோர்ட்லண்ட் அவென்யூ மற்றும் ஹேவர்ட் அவென்யூ சந்திப்புக்கு அருகிலுள்ள வீட்டொன்றில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் காயமடைந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.</p><p>
எனினும், பொலிஸார் அங்கு சென்றபோது காயமடைந்த நபர் சம்பவ இடத்தில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fdb5074-f6a6-4815-8b78-de1d07a3276b/26-6a5cca3c8f509.webp' /></p><p> </p><p>
அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்களின் தன்மை மற்றும் தீவிரம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>இருப்பினும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சூழ்நிலை குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T13:04:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக கோல் அடித்து வரலாறு படைத்த பிரான்ஸ் வீரர்; தங்கப் பாதணி யாருக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/golden-boot-football-history-france-kylian-mbapp-1784436553"></link>
            <id>https://canadamirror.com/article/golden-boot-football-history-france-kylian-mbapp-1784436553</id>
            <summary type="text">உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.மியாமி நகரில் இங்கிலாந்துக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.</p><p>மியாமி நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், தனது 22வது கால்பந்து கோலை அடித்து எம்பாப்பே புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.</p><p>விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி, கால்பந்து உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.</p><p>&nbsp;2026 உலகக் கிண்ணத்தின் தங்கப் பாதணி (Golden Boot) போட்டியில், எம்பாப்பே இதுவரை 10 கோல்களை அடித்து, பட்டியலில்&nbsp; முதலிடத்தில் உள்ளார்.</p><p>அவரைத் தொடர்ந்து லயோனல் மெஸ்ஸி 8 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.</p><p>அதேநேரம் உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் லயோனல் மெஸ்ஸி இதுவரை 21 கோல்களை அடித்துள்ளார்.</p><p>அதேவேளை&nbsp; ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி விளையாடும்போது, இந்த தங்கப் பாதணி (Golden Boot) விருதுக்கான போட்டி மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T12:36:35+00:00</updated>
        </entry>
    </feed>
