<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-16T07:42:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ண போட்டியில் தோல்வி; பிரான்ஸில் வெடித்த கலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/world-cup-defeat-riots-erupt-in-france-1784178886"></link>
            <id>https://canadamirror.com/article/world-cup-defeat-riots-erupt-in-france-1784178886</id>
            <summary type="text">&amp;nbsp; உலகக் கிண்ண உதைபந்து அரையிறுதியில் பிரான்ஸ் அணி தோற்றதைத் தொடர்ந்து பிரான்ஸில் கலவரம் வெடித்துள்ளது.

உலகக் கிண்ண உதைபந்து தொடரின் முதல் அரைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகக் கிண்ண உதைபந்து அரையிறுதியில் பிரான்ஸ் அணி தோற்றதைத் தொடர்ந்து பிரான்ஸில் கலவரம் வெடித்துள்ளது.

உலகக் கிண்ண உதைபந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நடந்து முடிந்துள்ளது. </p><p>ஸ்பெயின் - பிரான்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றிபெற்றது.

கடந்த உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிரான்ஸ் அணி, இம்முறை அரையிறுதியில் தோற்று வெளியேறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dde23f7e-90b0-4bc1-9e16-f6269a2d9b65/26-6a5868c86531b.webp' /></p><h2>அரையிறுதியில் தோற்று வெளியேறிய&nbsp;பிரான்ஸ் அணி</h2><p> </p><p>ஸ்பெயின் அணியின் சிறப்பான தடுப்பாட்டம், பிரான்ஸ் அணியின் திட்டமிடலின் போதாமை போன்ற காரணங்களால் இந்தப் போட்டியில் பிரான்ஸ் தோற்றது.

பிரான்ஸ் அணியின் தோல்விக்குப் பின்னர் அந்நாட்டின் பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது. </p><p>தோல்வியால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வாகனங்களைச் சேதப்படுத்தி, பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர்.
</p><p>
பிரான்ஸின் தலைநகரான பாரீஸ் நகரிலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத்ததால் அங்க்கு&nbsp; பதற்றம் மேலும் அதிகரித்ததாக&nbsp; சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T07:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆர்ஜென்டினா அணியிடம் தோற்ற இங்கிலாந்து ; இளவரசர் வில்லியம் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/england-loses-to-argentina-prince-william-concern-1784181316"></link>
            <id>https://canadamirror.com/article/england-loses-to-argentina-prince-william-concern-1784181316</id>
            <summary type="text">&amp;nbsp; ஆர்ஜென்டினா அணியிடம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியமை குறித்து, இளவரசர் வில்லியம் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆர்ஜென்டினா அணியிடம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியமை குறித்து, இளவரசர் வில்லியம் மற்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
கென்சிங்டன் அரண்மனை ஊடாக இளவரசர் வில்லியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தத் தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e360ba2b-c8ce-47bc-a1d6-acaef6895f8e/26-6a587245af6c8.webp' /></p><p>

இந்தப் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்திய போராட்ட குணமும் நம்பிக்கையும் அனைவரையும் ஊக்கப்படுத்தியது என்றும் இளவரசர் வில்லியம் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>

அதேசமயம் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

"இங்கிலாந்து அணியின் தோல்வி மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இருப்பினும், அணியினர் வெளிப்படுத்திய ஆர்வமும், ஆற்றலும் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-16T06:59:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[116 கப்பல்கள் மீது தாக்குதல் ; முடக்கப்பட்ட ரஷ்யாவின் கப்பல் போக்குவரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/116-ships-hit-russia-shipping-disrupted-1784184048"></link>
            <id>https://canadamirror.com/article/116-ships-hit-russia-shipping-disrupted-1784184048</id>
            <summary type="text">உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் அசோவ் கடலில் ரஷியாவின் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.

அசோவ் கடல் என்பது ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லைகளுக்கு நடுவே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் அசோவ் கடலில் ரஷியாவின் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.

அசோவ் கடல் என்பது ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லைகளுக்கு நடுவே அமைந்துள்ள, கெர்ச் நீரிணை வழியாகக் கருங்கடலுடன் இணையும் ஒரு கடலாகும்.


</p><p>
இந்நிலையில் உக்ரைனின் தொடர் ட்ரோன் தாக்குதல்களால் டான் அசோவ் கால்வாய் மற்றும் கெர்ச் நீரிணை வழியாக செல்லும் ரஷ்யக் கப்பல்களின் இயக்கம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் படங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் தரவுகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298dbc03-b5d4-4fdb-80f4-3bfeebb42994/26-6a587cf242167.webp' /></p><h2>&nbsp;ஏற்றுமதி பாதிப்பு</h2><p>


</p><p>&nbsp;கடந்த 9 நாட்களில் மட்டும் அசோவ் கடல் பகுதியில் ரஷ்யாவுக்கு சொந்தமான 116 கப்பல்களை உக்ரைனிய ட்ரோன்கள் குறிவைத்து தாக்கியுள்ளதாக உக்ரைனின் டிரோன் படைப்பிரிவுத் தளபதி ராபர்ட் ப்ரோவ்டி தெரிவித்துள்ளார். </p><p>ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் மட்டுமின்றி, சரக்குக் கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.&nbsp;</p><p> ரஷ்யாவின் எண்ணெய், கோதுமை, சூரியகாந்தி எண்ணெய், எஃகு ஏற்றுமதி இந்த அசோவ் கடல் துறைமுகங்கள் வழியாகவே நடக்கிறது. தற்போதைய கப்பல் போக்குவரத்து முடக்கத்தால் சர்வதேச சந்தையில் கோதுமைக்கான வர்த்தக விலை ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

இந்தத் முற்றுகை நீடித்தால் ரஷ்யாவுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என கணிக்கப்படுகிறது.
</p><p>
மாற்றுப் பாதையாக கருங்கடல் துறைமுகங்களை ரஷியா பயன்படுத்த நினைத்தாலும், அறுவடைக் கால ஏற்றுமதியை தாங்கும் கொள்ளளவு அந்தத் துறைமுகங்களுக்கு இல்லை எனக் கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-16T06:40:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்றோர், தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை நிறுத்தியுள்ள கனடா அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-pause-parents-grands-immigration-sponser-1784183759"></link>
            <id>https://canadamirror.com/article/canada-pause-parents-grands-immigration-sponser-1784183759</id>
            <summary type="text">கனடா அரசு, கனேடிய குடிமக்கள் அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா அரசு, கனேடிய குடிமக்கள் அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை காலவரையறையின்றி நிறுத்தியுள்ளது.</p><p>


கனடா அரசு, 2020ஆம் ஆண்டு, கனேடிய குடிமக்கள் அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3a71fde-32d8-4080-bcc6-109d8713d521/26-6a587bd15402b.webp' /></p><p>
அதைத் தொடர்ந்து, அந்த நேரத்தில் சுமார் 200,000 பேர் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
</p><p>
இந்நிலையில், தற்போது அந்த திட்டம் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கனடா ஃபெடரல் அரசின் புலம்பெயர்தல் துறை அறிவித்துள்ளது.</p><p>

அதாவது, ஸ்பான்சர் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை விட, மிக அதிகமானோர் ஸ்பான்சர் செய்ய விண்ணப்பித்துள்ளதாக புலம்பெயர்தல் துறை தெரிவித்துள்ளது.
</p><p>
ஏற்கனவே 60,500 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், அவற்றைச் செயல்படுத்துவதற்கான காத்திருப்பு காலம் சுமார் 33 மாதங்கள் ஆகும். கியூபெக்கிலோ 66 மாதங்கள் வரை ஆகலாம்.
</p><p>
ஆக, தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை பொறுப்புடன் நிர்வகிப்பதற்காகவும், காத்திருப்பு காலத்தைக் குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனடா ஃபெடரல் அரசின் புலம்பெயர்தல் துறை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T06:38:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவீதியில் பறிபோன தமிழ் அரச உத்தியோகத்தரின் உயிர் ; வேலைக்கு சென்றவருக்கு நடந்த அசம்பாவிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tamil-government-officer-faces-tragedy-1784179368"></link>
            <id>https://canadamirror.com/article/tamil-government-officer-faces-tragedy-1784179368</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>


கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து, குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8aeaefc-717a-4e87-9fb0-29cb62e58209/26-6a586aaa07766.webp' /></p><p> </p><p>விபத்தில் உயிரிழந்தவர் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>&nbsp;கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்தவராகவும், தற்போது பாண்டியிருப்பில் வசித்து வந்தவராகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>விபத்துக்கான காரணம் குறித்துப் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-16T05:23:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காங்கோவில் வேகமெடுக்கும் எபோலா வைரஸ் பரவல் ; சடுதியாக உயர்ந்த பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ebola-virus-outbreak-spreads-in-congo-1784178652"></link>
            <id>https://canadamirror.com/article/ebola-virus-outbreak-spreads-in-congo-1784178652</id>
            <summary type="text">மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோ மட்டுமின்றி உகாண்டா, லைபீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி வருகிறது.
</p><p>
எபோலா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் காங்கோ போன்ற நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449bf131-016b-47d7-968c-8b68b15496f5/26-6a5867de0a54b.webp' /></p><p>
</p><p>இந்நிலையில், காங்கோவில் 2,011 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், எபோலா வைரஸ் பாதிப்பால் 754 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.</p><p>குறிப்பாக, அந்நாட்டின் இடுரி, வடக்கு கிவு, தெற்கு கிவு ஆகிய மாகாணங்களில் எபோலா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேவேளை, காங்கோவில் மருத்துவ பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். </p><p>பணிச்சுமை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>எபோலா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மருத்துவ பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிகழ்வு அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T05:11:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் இதனை செய்யவிட்டால் ஒருவரும் மீதம் இருக்கமாட்டார்கள் ; ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-issues-public-warning-to-iran-1784173675"></link>
            <id>https://canadamirror.com/article/trump-issues-public-warning-to-iran-1784173675</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஒன்றை அவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஈரான் அதனை செய்ய தவறினால், அந்நாட்டில் ஒருவரும் மீதம் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஒன்றை அவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஈரான் அதனை செய்ய தவறினால், அந்நாட்டில் ஒருவரும் மீதம் இருக்கமாட்டார்கள் என்று ட்ரம்ப் எச்சரித்து உள்ளார்.</p><p style="text-align: justify; ">ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீது திடீரென்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்தது. ஈரானின் இந்த தாக்குதல்களை நிறுத்துவதற்காக அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/187ba0e4-4735-42f5-8689-858259bad11a/26-6a58546c39932.webp' /></p><p style="text-align: justify; ">இதனால், அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.

இதுவரை ஈரானில் 30 பேர் பலியாகி உள்ளனர். 260-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஈரான் அரசு தரப்பில், அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் உசைன் கெர்மான்பூர் தெரிவித்து உள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இந்த சூழலில், ஈரானில் உள்ள பாலங்களை குண்டுகளை வீசி தகர்க்க போவது பற்றி தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. </p><p style="text-align: justify; ">இதனை தொடர்ந்து, பென்சில்வேனியா மாகாணத்திற்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் செய்தியாளர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர்.</p><p style="text-align: justify; ">

அதற்கு அவர் பதில் அளித்து பேசும்போது, எங்களுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மீண்டும் திரும்ப வேண்டும். அப்படி இல்லையெனில், அடுத்த வாரம் ஈரானின் எல்லை பகுதிகளை தாக்கும் ஒரு பகுதியாக அதன் அணு உலைகள் மற்றும் பாலங்களை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படும் என்றார்.</p><p style="text-align: justify; ">அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஒன்றை அவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஈரான் அதனை செய்ய தவறினால், அந்நாட்டில் ஒருவரும் மீதம் இருக்கமாட்டார்கள் என்று ட்ரம்ப் எச்சரித்து உள்ளார்.</p><p style="text-align: justify; ">ஈரானை நாளை இரவு கடுமையாக தாக்க போகிறோம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட கூடிய சாத்தியமும் அதிகரித்து காணப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-16T03:47:53+00:00</updated>
        </entry>
    </feed>
