<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-16T14:36:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா தீ விபத்து: முதியவர் பலியானதைத் தொடர்ந்து அவரது மனைவியும் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missing-wife-of-senior-killed-in-northeast-1784194338"></link>
            <id>https://canadamirror.com/article/missing-wife-of-senior-killed-in-northeast-1784194338</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வடகிழக்கு எட்மண்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மேலும் ஒரு மூதாட்டி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வடகிழக்கு எட்மண்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளதாக எட்மண்டன் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>உயிரிழந்த 82 வயதுடைய அந்த மூதாட்டி, இந்த தீ விபத்தில் ஏற்கனவே பலியான 85 வயது முதியவரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது.
</p><p>தீ விபத்து ஏற்பட்ட போது, அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே குதித்ததில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/503e0aef-d7c5-49ee-ac92-eab46636ee4d/26-6a58a52473954.webp' /></p><p> 
மேலும், இடிபாடுகளில் சிக்கி காணாமல் போயிருந்த மற்றொரு நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, 82-வது தெரு மற்றும் 132-வது அவென்யூ சந்திப்பில் உள்ள இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது. </p><p>
இந்த மோதலின் போது அங்கிருந்த எரிவாயு குழாய் உடைந்ததால், பயங்கர வெடிப்புச் சத்தத்துடன் தீப்பிடித்தது.
</p><p>இந்த திடீர் வெடிப்பு மற்றும் தீ விபத்தில் சிக்கி காயமடைந்த குடியிருப்பாளர்கள் 6 பேரும், காரை ஓட்டி வந்த ஓட்டுநரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>இந்த தீ விபத்தில் உயிரிழந்த தம்பதியினரை நினைவு கூரும் வகையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே ஆண் மற்றும் பெண் உருவங்கள் அடங்கிய சிறிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p><p>
விபத்து ஏற்படுவதற்கான முழுமையான பின்னணி குறித்து புலனாய்வாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> 
மேலும், தீயணைப்புப் படையினருடன் இணைந்து கட்டடத்திற்குள் பாதுகாப்பாகச் சென்று தேடுதல் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T13:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் மாறுகிறதா நேரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/as-us-takes-steps-toward-permanent-daylight-time-1784192855"></link>
            <id>https://canadamirror.com/article/as-us-takes-steps-toward-permanent-daylight-time-1784192855</id>
            <summary type="text">அமெரிக்கா முழுவதும் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பகல் நேரத்தைப் பாதுகாக்கும் &#039;பகலொளி சேமிப்பு நேரத்தை&#039; நிரந்தரமாக்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா முழுவதும் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பகல் நேரத்தைப் பாதுகாக்கும் 'பகலொளி சேமிப்பு நேரத்தை' நிரந்தரமாக்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p> 
இதனைத் தொடர்ந்து, கனடாவின் பல மாகாணங்களும் தங்களின் கடிகார நேரத்தை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றன. </p><p>
அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு ஆதரவாக 308 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் கிடைத்தன. இந்த மசோதா இப்போது செனட் சபை மற்றும் அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d82118c-8777-4b7b-8f12-d21ad5739a27/26-6a589f58e6959.webp' /></p><p> </p><p>
கனடாவில் ஆண்டுக்கு இருமுறை கடிகார நேரத்தை மாற்றும் வழக்கத்தை சஸ்காச்சுவான், யூகோன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மூன்று பகுதிகள் ஏற்கனவே ஒழித்துவிட்டன.</p><p> 
சஸ்காச்சுவான் மாகாணம் 1966-லும், யூகோன் பகுதி 2020-லும் இந்த மாற்றத்தை மேற்கொண்டன. 
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் 2019-லேயே இதற்கான சட்டத்தை இயற்றிய போதிலும், அண்டை நாடான அமெரிக்காவின் வர்த்தக உறவுகளைக் கருத்தில் கொண்டு காத்திருந்தது.</p><p>
இறுதியாக, மார்ச் 2026 முதல் நிரந்தர பகலொளி சேமிப்பு நேரத்திற்கு அந்த மாகாணம் முழுமையாக மாறியுள்ளது. 
கடந்த ஏப்ரல் மாதம் ஆல்பர்ட்டா மாகாணம் நிரந்தர நேர மாற்றத்திற்கான சட்ட முன்வடிவைத் தாக்கல் செய்தது. ஆல்பர்ட்டாவுடன் ஒரே நேர மண்டலத்தைப் பகிர்ந்து கொள்ளும் வடமேற்கு பிராந்தியங்களும் இந்த மாற்றத்தைப் பின்பற்ற முடிவு செய்துள்ளன. </p><p>
ஒன்டாரியோ மாகாணம் 2020-லேயே இதற்கான சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், அண்டை மாகாணமான கியூபெக்கும், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலமும் மாறினால் மட்டுமே இதை அமல்படுத்துவோம் என்ற நிபந்தனையை விதித்துள்ளது. </p><p>
கியூபெக் மாகாணத்தில் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்பில் 91% மக்கள் நேர மாற்றத்தை ஒழிக்க ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், அங்கு இன்னும் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படவில்லை.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T13:27:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் படகு விபத்துகளில், 500க்கும் மேற்பட்ட ஏதிலிகள் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/500-refugees-death-boat-accidents-myanmar-waters-1784208329"></link>
            <id>https://canadamirror.com/article/500-refugees-death-boat-accidents-myanmar-waters-1784208329</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; மியன்மார் கடல் பகுதியில் கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து நிகழ்ந்ததாகக் கூறப்படும் இரண்டு பெரும் படகு விபத்துகளில், 500க்கும் மேற்பட்ட அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; மியன்மார் கடல் பகுதியில் கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து நிகழ்ந்ததாகக் கூறப்படும் இரண்டு பெரும் படகு விபத்துகளில், 500க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.</p><p> 

ஐ.நா.வின் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM) மற்றும் அகதிகள் முகமை (UNHCR) ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18a1a0b6-3e40-4916-b25c-4a0dc793f3a0/26-6a58dbcb36714.webp' /></p><h2>ரோஹிஞ்சா அகதிகளே பயணித்துள்ளனர்</h2><p>
</p><p>
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாரின் ராகைன் (Rakhine) மாநிலத்தில் இருந்து ஜூன் மாத இறுதியில் புறப்பட்ட இரு படகுகளிலும், பெரும்பான்மையாக முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிஞ்சா அகதிகளே பயணித்துள்ளனர். </p><p>இவர்களில் சிலர் பங்களாதேஷின் காக்ஸ் பஜார் (Cox’s Bazar) முகாம்களில் இருந்து பயணித்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>250 பேருடன் சென்ற ஒரு படகு புறப்பட்ட சில நாட்களிலேயே தொடர்பை இழந்த நிலையில், 280 பேருடன் சென்ற மற்றுமொரு படகு ஜூலை 08ஆம் திகதி மியான்மரின் ஐயராவடி (Ayeyarwady) கடற்பரப்பில் மூழ்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
</p><p>
மோசமான காலநிலை நிலவும் பருவத்திற்கு வெளியில், அண்மைய பெருமழை மற்றும் வெள்ளப் பெருக்குக்கு மத்தியில் இந்த ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>மியான்மரில் நீடிக்கும் உள்நாட்டு மோதல்கள், மோசமடைந்து வரும் மனிதாபிமான சூழ்நிலை மற்றும் பங்களாதேஷ் முகாம்களில் நிலவும் வரையறுக்கப்பட்ட வசதிகள் காரணமாகவே அகதிகள்&nbsp; கடத்தல்காரர்களின் வலையில் சிக்கி ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதாக ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>தேடல் மற்றும் மீட்புப் பணிகளை வலுப்படுத்துமாறும், கடத்தல் நெட்வொர்க்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் சர்வதேச சமூகத்திற்கு ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T13:23:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இசை நிகழ்ச்சி டிக்கெட் மோசடி: குற்றத்தை ஒப்புக்கொண்ட கனடிய தம்பதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-couple-pleads-guilty-to-defrauding-1784193579"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-couple-pleads-guilty-to-defrauding-1784193579</id>
            <summary type="text">உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் &#039;ஈராஸ் டூர்&#039; இசை நிகழ்ச்சிக்கு போலி டிக்கெட்டுகளை விற்று, பொதுமக்களை 265,000 டாலருக்கும் மேல் ஏமாற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் 'ஈராஸ் டூர்' இசை நிகழ்ச்சிக்கு போலி டிக்கெட்டுகளை விற்று, பொதுமக்களை 265,000 டாலருக்கும் மேல் ஏமாற்றிய கனடிய தம்பதியினர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.
</p><p>வழக்கில் டெனிஸ் டிசோர் மற்றும் அவரது கணவர் டேவிட் பிளேக் ஆகிய இருவர் மில்டன் நீதிமன்றத்தில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
</p><p>கடந்த 2024 நவம்பரில் டொராண்டோவின் ரோஜர்ஸ் சென்டரில் டெய்லர் ஸ்விஃப்ட்டின் 6 பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.</p><p> 
இதற்காக, ஆகஸ்ட் 2023 முதல் நவம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில் தெற்கு ஒன்டாரியோவைச் சேர்ந்த 107 பேர் டெனிஸ் டிசோரை நம்பி அவரிடமிருந்து டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.
</p><p>பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்களது குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக வழங்குவதற்காக இந்த டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர். </p><p>
ஆனால், கச்சேரி நெருங்கிய நிலையிலும் டிக்கெட்டுகள் வந்து சேராததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர்.</p><p>
ஆரம்பத்தில், தன்னிடம் இருந்த பணத்தை யாரோ ஒரு மூன்றாவது நபர் திருடிவிட்டதாக டெனிஸ் டிசோர் நாடகமாடினார். </p><p>ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின்படி, இதில் எந்தவொரு மூன்றாவது நபரும் சம்பந்தப்படவில்லை என்பதும், திட்டமிட்டே இந்த தம்பதி பொதுமக்களை ஏமாற்றியதும் அம்பலமாகியுள்ளது.
</p><p>மக்களிடமிருந்து ஏமாற்றிய பணத்தில் சுமார் 139,144 டொலரை பல்வேறு ஆன்லைன் சூதாட்ட தளங்களில் இவர்கள் பந்தயம் கட்டியுள்ளனர்.
</p><p> மேலும், அதே காலகட்டத்தில் ஏடிஎம் (மூலமாக 297,000 டொலருக்கும் அதிகமான தொகையை ரொக்கமாக எடுத்துப் பயன்படுத்தியுள்ளனர்.
</p><p>நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகங்களிடம் பேச மறுத்த டெனிஸ், தனது முகநூல் பக்கத்தில், "நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.</p><p> கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கடுமையான சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தேன்.</p><p> அது என் வாழ்க்கையையே முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது. அதனால் ஏற்பட்ட விளைவுகளை நினைத்து நான் தினமும் வருந்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வீசா நடைமுறையில் ஏற்படும் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-pauses-applications-for-parent-grandparent-1784192266"></link>
            <id>https://canadamirror.com/article/canada-pauses-applications-for-parent-grandparent-1784192266</id>
            <summary type="text">&amp;nbsp;குடும்பங்களை ஒன்றிணைக்கும் திட்டத்தின் கீழ், கனடாவுக்குத் தங்களது பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டியை நிரந்தரக் குடியுரிமையுடன் அழைப்பதற்கான புதிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குடும்பங்களை ஒன்றிணைக்கும் திட்டத்தின் கீழ், கனடாவுக்குத் தங்களது பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டியை நிரந்தரக் குடியுரிமையுடன் அழைப்பதற்கான புதிய விண்ணப்பங்களை இந்த ஆண்டு ஏற்கப்போவதில்லை என்று கனடா மத்திய அரசு அறிவித்துள்ளது.</p><p>
குடிவரவு அமைப்பை முறையாக நிர்வகிக்கவும், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுவதற்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனடா குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.
</p><p>இத்திட்டத்திற்கான இடங்களின் எண்ணிக்கையை விட, விண்ணப்பிப்பவர்களின் ஆர்வம் மிக அதிகமாக இருப்பதே இந்த தற்காலிகத் தடைக்குக் காரணம் என்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/048aed97-890c-4036-a82e-06b3a1db7b8b/26-6a589d0c29259.webp' /></p><p>
தற்போது ஏற்கனவே 60,500 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த விண்ணப்பங்களைச் சரிபார்த்து முடிக்க சராசரியாக 33 மாதங்கள் ஆகின்றன.
</p><p> கியூபெக் மாகாணத்தில் இந்த காத்திருப்பு காலம் 66 மாதங்கள் வரை நீடிக்கிறது.
இத்திட்டம் முதன்முதலில் 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, தங்களது பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டியை அழைக்க 2 லட்சத்திற்கும் அதிகமான கனடா குடிமக்களும் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களும் ஆர்வம் காட்டியிருந்தனர்.</p><p> 
ஒவ்வொரு ஆண்டும், இதில் இருந்து ஆயிரக்கணக்கானோர் முறைப்படி விண்ணப்பிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.
</p><p>புதிய விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், அரசின் குடிவரவு நிலை உத்தியின்படி, 2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளில் தலா 15,000 பேருக்கு நிரந்தரக் குடியுரிமை ஒப்புதல் அளிக்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று குடிவரவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>இந்த புதிய விண்ணப்பங்களுக்கான தடை "மறுஅறிவிப்பு வரும் வரை" அமலில் இருக்கும் என்றும் அரசு கூறியுள்ளது.</p><p>
எனினும், கனடா குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டியை தற்காலிகமாக கனடாவுக்கு அழைக்க "சூப்பர் விசா" (Super Visa) மூலம் விண்ணப்பிக்கலாம்.</p><p>
 இந்த விசாவைப் பயன்படுத்தி அவர்கள் ஒருமுறை வந்தால் தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை தங்க முடியும். இந்த விசா ஒட்டுமொத்தமாக 10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T12:01:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ண போட்டியில் தோல்வி; பிரான்ஸில் வெடித்த கலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/world-cup-defeat-riots-erupt-in-france-1784178886"></link>
            <id>https://canadamirror.com/article/world-cup-defeat-riots-erupt-in-france-1784178886</id>
            <summary type="text">&amp;nbsp; உலகக் கிண்ண உதைபந்து அரையிறுதியில் பிரான்ஸ் அணி தோற்றதைத் தொடர்ந்து பிரான்ஸில் கலவரம் வெடித்துள்ளது.

உலகக் கிண்ண உதைபந்து தொடரின் முதல் அரைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகக் கிண்ண உதைபந்து அரையிறுதியில் பிரான்ஸ் அணி தோற்றதைத் தொடர்ந்து பிரான்ஸில் கலவரம் வெடித்துள்ளது.

உலகக் கிண்ண உதைபந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நடந்து முடிந்துள்ளது. </p><p>ஸ்பெயின் - பிரான்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றிபெற்றது.

கடந்த உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிரான்ஸ் அணி, இம்முறை அரையிறுதியில் தோற்று வெளியேறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dde23f7e-90b0-4bc1-9e16-f6269a2d9b65/26-6a5868c86531b.webp' /></p><h2>அரையிறுதியில் தோற்று வெளியேறிய&nbsp;பிரான்ஸ் அணி</h2><p> </p><p>ஸ்பெயின் அணியின் சிறப்பான தடுப்பாட்டம், பிரான்ஸ் அணியின் திட்டமிடலின் போதாமை போன்ற காரணங்களால் இந்தப் போட்டியில் பிரான்ஸ் தோற்றது.

பிரான்ஸ் அணியின் தோல்விக்குப் பின்னர் அந்நாட்டின் பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது. </p><p>தோல்வியால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வாகனங்களைச் சேதப்படுத்தி, பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர்.
</p><p>
பிரான்ஸின் தலைநகரான பாரீஸ் நகரிலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத்ததால் அங்க்கு&nbsp; பதற்றம் மேலும் அதிகரித்ததாக&nbsp; சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T11:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களின் அழகில் மயங்காதீர்கள் ; வெளிநாடொன்றில் பிறப்பிக்கப்பட்ட அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/chinese-embassy-issues-urgent-warning-1784198737"></link>
            <id>https://canadamirror.com/article/chinese-embassy-issues-urgent-warning-1784198737</id>
            <summary type="text">சீனாவில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. 2020 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, சீனாவில் திருமண வயதுடைய பெண்களை விட சுமார் 2 கோடி ஆண்கள் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. 2020 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, சீனாவில் திருமண வயதுடைய பெண்களை விட சுமார் 2 கோடி ஆண்கள் அதிகமாக உள்ளனர்.


</p><p>
இதனால் சீனர்கள் ஏழை நாடுகளைச் சேர்ந்த இளம் பெண்களை, குறிப்பாக வங்காளதேச பெண்களைத் திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/affd0602-f828-480c-9275-4f2251d161a4/26-6a58b6532636e.webp' /></p><p>
</p><p>
சீன ஆண்கள் ஒரு மனைவியைக் கண்டுபிடிப்பதற்காக ஆயிரக்கணக்கான யுவான்களைச் செலவிடுகிறார்கள்.
</p><p>
ஆனால் வங்காள தேசம் உள்ளிட்ட வெளிநாட்டு மணப்பெண்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டம்பிடித்து விடுகின்றனர். இதனால் சீனாவில் ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர்.&nbsp;</p><p> இந்தச் சூழலில், சீனத் தூதாகம் ஓர் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. </p><p>வெளிநாடுகளில் நடக்கும் திருமண மோசடி மற்றும் ஆட்கடத்தல் கும்பல்களுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, இடைத்தரகர்களின் வார்த்தைகள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் சந்தித்த நபர்களின் அடிப்படையில் சட்ட விரோதத் திருமணங்களில் ஈடுபட வேண்டாம்.</p><p>வங்காள தேச பெண்கள் அழகில் மயங்காதீர்கள். வெளிநாட்டு பெண்களை மணப்பது உள்ளூர் சட்டங்களை மீறுவதற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T10:48:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பரபரப்பு: பொலிஸாரை தாக்க முயன்ற குற்றவாளி சுட்டுக் கொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-shot-killed-in-confrontation-with-rcmp-1784196277"></link>
            <id>https://canadamirror.com/article/man-shot-killed-in-confrontation-with-rcmp-1784196277</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் புரூக்ஸ் நகரில், பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் புரூக்ஸ் நகரில், பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
</p><p>கடந்த புதன்கிழமை மாலை 4 மணியளவில் கிரீன்புரூக் வில்லேஜ் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><p>குறிப்பிட்ட ஒரு வீட்டில் நீதிமன்ற வாரண்ட் மூலம் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஒருவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4204774-a9ee-4e3c-b5a8-d6fc64fb9148/26-6a58acb6b2d56.webp' /></p><p>
</p><p> அப்போது அங்கிருந்த குற்றவாளி தப்பியோட முயன்றுள்ளார்.
பொலிஸார் அவரைத் தடுக்க முயன்ற போது, அந்த நபர் திடீரென தன்னிடம் இருந்த ஆயுதம் ஒன்றை எடுத்து போலீசாரை நோக்கி மிரட்டி தாக்க முயன்றுள்ளார். </p><p>
இதனால் தற்காப்புக்காக அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியால் அந்த நபரை நோக்கிச் சுட்டார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சரிந்த அந்த நபருக்கு, அதிகாரிகள் உடனடியாக முதலுதவி வழங்கி உயிரைக் காப்பாற்ற முயன்றனர்.</p><p> 
எனினும், சிகிச்சை பலனின்றி அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மோதலில் பொலிஸ் அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் நபர் பலியானதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து விசாரிக்க மாகாணத்தின் காவல்துறை கண்காணிப்பு அமைப்பு வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இவற்றுடன், காவல்துறை தங்களுக்குள்ளாகவும் இது குறித்து உள்வட்டார விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T10:04:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் லாரி-கார் மோதி பெண் உட்பட இருவர் பரிதாப பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-dead-following-collision-involving-tractor-1784195291"></link>
            <id>https://canadamirror.com/article/two-dead-following-collision-involving-tractor-1784195291</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணம் கிங்ஸ்டன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 101-இல் லாரியும் காரும் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணம் கிங்ஸ்டன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 101-இல் லாரியும் காரும் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
</p><p>இது குறித்து கிங்ஸ் மாவட்ட ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸார் மற்றும் அவசரக் கால உதவிப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
</p><p>காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, நெடுஞ்சாலையில் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த 'கியா ரியோ' காரும், ஒரு பெரிய டிராக்டர் ட்ரெய்லர் லாரியும் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6cd1f0d-2c86-4521-9143-b6bde821f9c3/26-6a58a8dcdd181.webp' /></p><p>
</p><p>இந்த கொடூர விபத்தில், காரை ஓட்டிச் சென்ற 75 வயது முதிய பெண்மணியும், காரில் பயணம் செய்த 28 வயது இளைஞரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
</p><p>உயிரிழந்த இருவரும் நோவா ஸ்கோடியாவின் மிடில்டன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p> 
லாரியை ஓட்டி வந்த 33 வயது நபருக்கு லேசான காயம் ஏற்பட்டதை அடுத்து, அவசர மருத்துவக் குழுவினர் அவருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை 101-ன் எக்சிட் 17E பகுதி பல மணி நேரம் முழுமையாக மூடப்பட்டது.
</p><p>காவல்துறையின் விபத்து மறுசீரமைப்பு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடயங்களைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.
இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
</p><p>விபத்து நடந்த நேரத்தில் அந்த வழியாகச் சென்ற வாகன சாரதிகளிடம் ஏதேனும் 'டேஷ் கேம்' வீடியோ பதிவுகள் அல்லது விபத்து குறித்த தகவல்கள் இருந்தால், உடனே பொலிஸாரைத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T09:49:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் நீடிக்க இஸ்ரேல் சதி ; அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-accuses-israel-of-extending-iran-war-1784193691"></link>
            <id>https://canadamirror.com/article/us-accuses-israel-of-extending-iran-war-1784193691</id>
            <summary type="text">ஈரானுடனான போர் தொடர வேண்டும் என இஸ்ரேல் அரசில் சிலர் விரும்புகின்றனர் என்று அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.&amp;nbsp;
இந்த சூழலில், அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான போர் தொடர வேண்டும் என இஸ்ரேல் அரசில் சிலர் விரும்புகின்றனர் என்று அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.&nbsp;</p><p>
இந்த சூழலில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்,&nbsp; ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ஈரானுடன் நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தையை தடுக்கும் வகையிலும், போர் ஆனது காலவரையின்றி தொடர்ந்து நீடிக்கவும் இஸ்ரேல் அரசில் உள்ள சிலர் விரும்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/489f26d1-f903-4e3f-8ccc-73fb524eaa37/26-6a58a2a1e5188.webp' /></p><p>

சில குறிப்பிட்ட சக்திகள் அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படவும் செய்கின்றன என பகிரங்க குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார். அமெரிக்கர்களின் எண்ணங்களை போருக்கு ஆதரவாக திசை திருப்பும் வகையில், திரித்தும், மாற்றவும் முயற்சித்து வருகின்றனர்.
</p><p>
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அது எங்களுக்கு தெரிகிறது. அதற்கு இஸ்ரேல் ரகசியமாக நிதியுதவி அளித்து வருகிறது என்றும் பேசியுள்ளார். </p><p>இந்த நிதியை பெற்றுக்கொண்டு நேர்மையற்ற வகையில், சிலர், ஆன்லைன் வழியே என்னையே தாக்கி பேசி வருகின்றனர்.
</p><p>
ஆனால், அமெரிக்க மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதனையே நான் செய்ய போகிறேன். அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே நான் செயல்பட போகிறேன் என்று கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-16T09:30:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணைக் கொலை சட்டமூலத்துக்கு பிரான்ஸ் அனுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/france-approves-euthanasia-bill-1784192892"></link>
            <id>https://canadamirror.com/article/france-approves-euthanasia-bill-1784192892</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; கருணைக் கொலை சட்டமூலத்திற்குப் பிரான்ஸ் பாராளுமன்றத்தின் கீழ் அவை அனுமதி அளித்துள்ளது.

சுமார் 14 ஆண்டுகால பாராளுமன்ற விவாதங்கள் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; கருணைக் கொலை சட்டமூலத்திற்குப் பிரான்ஸ் பாராளுமன்றத்தின் கீழ் அவை அனுமதி அளித்துள்ளது.

சுமார் 14 ஆண்டுகால பாராளுமன்ற விவாதங்கள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. </p><p>

இந்தச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது அல்ல என்றும் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் மட்டுமே இது அனுமதிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.
</p><p>
பிரான்ஸ் குடிமக்கள் அல்லது அங்கு சட்டப்பூர்வமாக வசிக்கும் தகுதியுடைய, உயிருக்கு ஆபத்தான இறுதிக்கட்ட நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து கடுமையான உடல் ரீதியான துன்பங்களை அனுபவித்து வரும் நபர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd3887c-0732-4edb-bae9-38fca1a87400/26-6a589f7decc31.webp' /></p><h2>சட்டமூலத்திற்கு ஆதரவாக 291 வாக்குகளும், எதிராக 241 வாக்குகளும்</h2><p>
</p><p>
வெறும் மன ரீதியான துன்பங்கள் மட்டுமே இதற்கான தகுதியாகக் கருதப்படாது. கடுமையான மனநலக் கோளாறுகள் அல்லது அல்சைமர் போன்ற நரம்பியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தச் சட்டத்தின் கீழ் அனுமதி கிடையாது.
</p><p>
நோயாளி தனது முழு சுயநினைவோடு, சுதந்திரமாக இந்த முடிவை எடுக்க வேண்டும். மேலும், ஒரு வைத்தியரால் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் நிபுணர் குழுவினால் அவரது நிலை மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே இதற்கான அனுமதி வழங்கப்படும்.
</p><p>
தகுதியான நோயாளிக்கு நச்சுப் பொருள் வழங்கப்படும். அதனை நோயாளி தானாகவோ அல்லது ஒரு மருத்துவரின் உதவியுடனோ உட்கொள்ளலாம்.
</p><p>
பிரான்ஸ் தேசிய சபையின் கீழ் அவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 291 வாக்குகளும், எதிராக 241 வாக்குகளும் அளிக்கப்பட்டன.</p><p>இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், இது உடனடியாகச் சட்டமாகாது.

பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளபடி, இந்த சட்டமூலம் இறுதி தீர்மானத்திற்காகப் பிரான்சின் மிக உயரிய அரசியலமைப்பு அமைப்பான அரசியலமைப்பு கவுன்சிலுக்கு அனுப்பப்படும்.</p><p>

இந்த கவுன்சில் சட்டமூலத்தை முழுமையாக ஆராய்ந்து அனுமதி அளித்த பின்னரே இது உத்தியோகபூர்வ சட்டமாக நடைமுறைக்கு வரும்.</p><p>

 அதேவேளை ஐரோப்பாவில் ஏற்கனவே கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக்கியுள்ள பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் பிரான்சும் இணையும். உலகளவில் கனடா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா, அவுஸ்திரேலியாவின் சில மாநிலங்களிலும் இது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-16T09:06:39+00:00</updated>
        </entry>
    </feed>
