<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-17T10:44:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் பாராளுமன்றம் கலைப்பு; மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா பெஞ்சமின் நெதன்யாகு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-parliament-dissolved-netanyahu-regain-power-1784284797"></link>
            <id>https://canadamirror.com/article/israel-parliament-dissolved-netanyahu-regain-power-1784284797</id>
            <summary type="text">&amp;nbsp; இஸ்ரேல் பாராளுமன்றம் இன்று முறைப்படி கலைக்கப்பட்டுள்ளது. புதிய ளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இஸ்ரேல் பாராளுமன்றம் இன்று முறைப்படி கலைக்கப்பட்டுள்ளது. புதிய ளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு தனது 4 ஆண்டுகாலப் பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3f82ea4-ce3c-4e37-9070-ca7585935932/26-6a5a067f5d992.webp' /></p><p> 



இந்த புதிய பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மொத்தம் 120 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.</p><p> 

இந்தத் தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பிரதமர் நப்தலி பென்னெட் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போட்டியிட உள்ளதால், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.



இந்நிலையில், தேர்தல் முடிவடைந்த பின்னர், புதிய அரசின் தலைமையில் புதிய பாராளுமன்றம் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-17T10:39:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்தானில் அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-attacks-us-targets-in-jordan-1784282802"></link>
            <id>https://canadamirror.com/article/iran-attacks-us-targets-in-jordan-1784282802</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை, ஜோர்தானில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் போர் வானூர்திகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை, ஜோர்தானில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் போர் வானூர்திகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இருப்பினும், ஜோர்தான் நாட்டுக்கு எதிராக ஏவப்பட்ட மூன்று ஈரானிய ஏவுகணைகளைத் தாங்கள் இடைமறித்து அழித்துவிட்டதாக ஜோர்தான் இராணுவம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cb3c59f-4791-4e37-bab4-5531fff79288/26-6a59feb3e4354.webp' /></p>]]></content>
            <updated>2026-07-17T10:05:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவை வம்புக்கு இழுக்கும் ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்களின் செயல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/argentine-footballers-provoking-britain-1784282278"></link>
            <id>https://canadamirror.com/article/argentine-footballers-provoking-britain-1784282278</id>
            <summary type="text">&amp;nbsp; ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் மைதானத்தில் பதாகை ஏந்திப் போராடிய விவகாரம், தற்போது பிரித்தானிய மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் மைதானத்தில் பதாகை ஏந்திப் போராடிய விவகாரம், தற்போது பிரித்தானிய மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே பெரிய ராஜதந்திர மோதலாக உருவெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன. </p><p>

 இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி வெற்றிக்குப் பிறகு, ஆர்ஜென்டினா வீரர்கள் , ஃபாக்லாந்து தீவுகள் ஆர்ஜென்டினாவிற்குச் சொந்தமானவை என்ற பதாகையைக் காட்டியதற்கு பிரித்தானியாவின் வணிகத்துறை அமைச்சர் பீட்டர் கைல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc057dfd-6f01-4252-97f0-3a550d8df61e/26-6a59fca7d1020.webp' /></p><h2>பிரித்தானியாவின் வணிகத்துறை அமைச்சர்&nbsp; &nbsp;கடும் கண்டனம்&nbsp;</h2><p>
</p><p>
இந் நிலையில் மைதானத்திற்குள் அரசியல் குறியீடுகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் கால்பந்து சம்மேளனத்தின் விதிகளை இந்தச் செயல் அப்பட்டமாக மீறியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் கைல், இது குறித்து உலகக் கால்பந்து நிர்வாக அமைப்பு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
 "கால்பந்து செம்பியன்ஷிப் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் ஃபாக்லாந்து தீவுகள் நிச்சயமாக நமக்குத்தான் சொந்தம்" என்று டவுனிங் ஸ்ட்ரீட் பேச்சாளர் ஒருவர் ஆர்ஜென்டினாவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1320c241-0785-425b-bad0-77f87fa29780/26-6a59fca8a80cc.webp' /></p><p>
</p><p>
அரையிறுதிப் போட்டி முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே, இரண்டு நாடுகளுக்கும் இடையே மற்றொரு தூதரக மோதலும் வெடித்துள்ளது.
</p><p>
இதில் ஒரு சம்பவமாக, இருதரப்பு ஒப்பந்தங்களை மீறும் வகையில் செயற்பட்ட பிரிட்டன் கப்பலுக்கு எதிராக, பியூனஸ் அயர்ஸில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் ,ஆர்ஜென்டினா அரசாங்கம், முறைப்படி தனது தூதரக எதிர்ப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.</p><p></p><p>
</p><p>
அதேசமயம் பிரித்தானியா , ஆர்ஜென்டினா நாடுகளுக்கும் இடையில் 1982-இல் நடந்த போரின் வடுக்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் என்பன, 2026 கால்பந்து செம்பியன்ஷிப் அரையிறுதிப் போட்டியை, வெறும் கால்பந்து போட்டியாக இல்லாமல், இரு நாடுகளின் இறையாண்மை மற்றும் அரசியல் கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-17T09:56:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று இடம்பெற்ற கோர விபத்து ; 20 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/athurugiriya-blocked-bus-tipper-collision-accident-1784277703"></link>
            <id>https://canadamirror.com/article/athurugiriya-blocked-bus-tipper-collision-accident-1784277703</id>
            <summary type="text">&amp;nbsp; பொரளையிலிருந்து அத்துருகிரிய நோக்கி வந்த டிப்பர் லொறியுடன் , பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பொரளையிலிருந்து அத்துருகிரிய நோக்கி வந்த டிப்பர் லொறியுடன் , பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. </p><p>

இன்று (17) அதிகாலை 4.15 மணியளவில் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் டிப்பர் லொறியொன்றும் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தைக்கு அருகில், நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பேருந்து சாரதி உட்பட 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f29f94-50e3-4991-88ee-c94b7a82b034/26-6a59eac8b52bd.webp' /></p><h2>&nbsp;இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக கடும் வாகன நெரிசல்</h2><p> 


காயமடைந்தவர்கள் ஒறுவல மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்துருகிரிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
</p><p>
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் இரு கால்களும் முறிந்து பலத்த காயமடைந்துள்ளதால், அவர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.</p><p></p><p>
</p><p>
கொழும்பிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் பணியாளர்களை ஏற்றிச் சென்ற குறித்த பேருந்து, அத்துருகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்தது.

இதன்போது, திடீரென வீதியை விட்டு விலகிச் சென்று, டிப்பர் லொறியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்</p><p>.

இந்த விபத்தினால் கொடகம - பொரளை வீதியில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக கடும் வாகன நெரிசல் காணப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T08:44:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவப்பெட்டிக்குள் டொனால்ட் ட்ரம்ப் ; உலகை அதிர வைத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-shocks-world-with-trump-coffin-display-1784259394"></link>
            <id>https://canadamirror.com/article/iran-shocks-world-with-trump-coffin-display-1784259394</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ஜனாதிபதி ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0134cb20-414a-4291-9222-a63c893214bb/26-6a59a343ea1d3.webp' /></p><p>
ஏற்கெனவே, கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழித்தீர்ப்போம் என ஈரானின் புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி அறிவித்திருந்தார்.</p><p> மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்கா மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
</p><p>
இந்த நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சி சதுக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் உடல் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்று சித்தரிக்கப்பட்ட மிகப்பெரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


</p><p>
இந்தப் பதாகையின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதால், சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கண்டனங்களை இந்தப் பதாகை பெற்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T07:58:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளை திருடிய சீனா ; ட்ரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-accused-over-us-voter-data-theft-says-trump-1784273687"></link>
            <id>https://canadamirror.com/article/china-accused-over-us-voter-data-theft-says-trump-1784273687</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தேர்தலில் சீனா தலையிட்டதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.


அமெரிக்காவில் விரைவில் நடக்க இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தேர்தலில் சீனா தலையிட்டதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
</p><p>

அமெரிக்காவில் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 25 நிமிட உரையை ஆற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc778f62-df35-42ab-9b80-2ff74f480cdb/26-6a59db1883fc1.webp' /></p><p> </p><p>

அப்போது அவர் பேசியதாவது:-

2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், தன்னை தோற்கடிக்க சீனா பல்வேறு சதித்திட்டங்களில் ஈடுபட்டது.
</p><p>
அமெரிக்காவின் 22 கோடி வாக்காளர்களின் விவரங்களை சீனா விலை கொடுத்து சட்டவிரோதமாகப் பெற்று தனக்கு எதிராக எதிர்மறையான செய்திகளை எழுத, அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு பெருமளவில் பணம் கொடுத்தது.
</p><p>

நவம்பரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடைமுறையின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். </p><p>மேலும், புதிய வாக்காளர் அடையாள அட்டை மசோதாவை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளவேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-07-17T07:34:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டன் வானை மூடும் சகாரா புழுதி; புதிய ஆய்வில் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/saharan-dust-blanket-uk-skies-warns-air-polusion-1784273535"></link>
            <id>https://canadamirror.com/article/saharan-dust-blanket-uk-skies-warns-air-polusion-1784273535</id>
            <summary type="text">&amp;nbsp; ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பும் பிரம்மாண்ட புழுதிப் புயல் (Saharan Dust Plume) வழக்கத்திற்கு மாறான அளவில் ஐரோப்பா மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பும் பிரம்மாண்ட புழுதிப் புயல் (Saharan Dust Plume) வழக்கத்திற்கு மாறான அளவில் ஐரோப்பா மற்றும் பிரிட்டன் நோக்கிப் நகர்ந்து வருவதாகப் புதிய அறிவியல் ஆய்வுகள் எச்சரித்துள்ளன.</p><p> 

இதனால் பிரிட்டனின் வான்பகுதி முற்றிலும் மங்கலான ஆரஞ்சு நிறமாக மாறுவதுடன், அங்கு ‘இரத்த மழை’ (Blood Rain) எனப்படும் செம்பழுப்பு நிற மழை பொழிவதற்கான அபாயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16f3a270-3495-48b5-958a-20c58f50bde4/26-6a59da80d9acd.webp' /></p><h2>காற்றில் கண்ணுக்குத் தெரியாத ‘PM10’ நுண்துகள்களின் அளவு&nbsp;</h2><p> </p><p>

புவி வெப்பமயமாதல் காரணமாகச் சகாராவின் வறண்ட பரப்பளவு அதிகரித்து வருவதே இந்த அசாதாரண சூழலுக்குக் காரணம் என வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஸ்வீடனின் லண்ட் பல்கலைக்கழகம் (Lund University) மற்றும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வின்படி, </p><p>கடந்த பத்தாண்டுகளில் ஐரோப்பிய வான்வெளியில் பரவும் பாலைவனப் புழுதியின் அளவு 10% முதல் 25% வரை கணிசமாக அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

வளிமண்டலத்தில் மிதக்கும் இந்த நுண் துகள்கள், மழையோடு சேர்ந்து கீழே இறங்கும்போது கார்கள், ஜன்னல்கள் மற்றும் கட்டிடங்களின் மீது செம்பழுப்பு நிறத்திலான களிமண் போன்ற படிவுகளை ஏற்படுத்துகின்றன.
</p><p>
 அறிவியல் பூர்வமாக இது வெறும் தூசு கலந்த மழைதான் என்றாலும், இதன் அச்சுறுத்தும் தோற்றம் காரணமாகவே இது ‘இரத்த மழை’ என்று அழைக்கப்படுகிறது.</p><p>

பருவநிலை மாற்றத்தின் தீவிரம் இப்படியே தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் வான்வெளியில் பரவும் சகாரா புழுதியின் அளவு மேலும் 40% முதல் 60% வரை அதிகரிக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p> 

இந்த அதீத புழுதியால் பிரிட்டனின் காற்றுத் தரம் (Air Quality) மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, காற்றில் கண்ணுக்குத் தெரியாத ‘PM10’ நுண்துகள்களின் அளவு அபாயக் கட்டத்தைத் தாண்டும். </p><p>

இது ஆஸ்துமா போன்ற சுவாசப் பாதிப்புகள் மற்றும் இதய நோய்களைக் கொண்ட முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கடுமையான உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
மேலும், வான்வெளியில் அடர்த்தியாகப் படரும் இந்த புழுதிப் படலம் சூரிய ஒளியைத் தடுத்து, சூரிய ஆற்றல் (Solar Energy) கட்டமைப்புகளின் மின் உற்பத்தியைக் கணிசமாகக் குறைப்பதுடன், விமானப் போக்குவரத்துக்கான தொலைநோக்குத் திறனையும் (Visibility) பாதிக்கும். </p><p>

எனவே, ஐரோப்பிய நாடுகள் இந்த சுற்றுச்சூழல் அச்சுறுத்தலைக் வெறும் இயற்கை நிகழ்வாகக் கடந்து போகாமல், கூட்டு நடவடிக்கை மூலம் முன்னெச்சரிக்கை எச்சரிக்கை அமைப்புகளை (Early Warning Systems) வலுப்படுத்த வேண்டும் என இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T07:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் இந்திய இளைஞருக்கு 15 முறை கத்திக்குத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-youth-stabbed-15-times-in-us-attack-1784270500"></link>
            <id>https://canadamirror.com/article/indian-youth-stabbed-15-times-in-us-attack-1784270500</id>
            <summary type="text">அமெரிக்காவில் வணிக வளாகத்தில் வைத்து இந்தியா் ஒருவா் 15 முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவை சேர்ந்த சொஹைல் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் வணிக வளாகத்தில் வைத்து இந்தியா் ஒருவா் 15 முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

இந்தியாவை சேர்ந்த சொஹைல் என்ற வாலிபர், அமெரிக்காவின் உட்டாவின் வெஸ்ட் வேலி சிட்டியில் உள்ள Valley Fair Mall என்ற வணிக வளாகத்தில் இருக்கும் நகைக்கடையில் பணியாற்றி வந்தார்.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f82078e5-ff8b-4aa5-82fe-a85fe26a14f6/26-6a59cea5e77fd.webp' /></p><p>
</p><p>
கடந்த திங்கட்கிழமை அன்று சொஹைல் வழக்கம் போல பணியில் இருந்தபோது, அங்கு வந்த பீட்டர் மைக்கேல் லார்சன் என்ற 48 வயது நபர் குடிக்க ஒரு பாட்டில் தண்ணீர் கேட்டுள்ளார்.</p><p>

உடனே அந்த நபர், 'நீ முஸ்லிமா?' எனக் கேட்க, சொஹைல் 'ஆம்' என்று சொன்ன நிலையில், அந்த நபர் கத்தியால் அவரை கொடூரமாக குத்தியுள்ளார்.
</p><p>
காவல்துறை அறிக்கையின்படி, சொஹைலின் உடல் முழுவதும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக் குத்து விழுந்துள்ளதால் அளவுக்கு அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.</p><p>

உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த சோஹைலை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-17T06:41:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கையை விட செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/japan-pets-exceeds-the-number-of-children-1784269853"></link>
            <id>https://canadamirror.com/article/japan-pets-exceeds-the-number-of-children-1784269853</id>
            <summary type="text">&amp;nbsp; ஜப்பானில் 1 - 15 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை விட செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

 குழந்தைங்களின் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜப்பானில் 1 - 15 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை விட செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
 குழந்தைங்களின் எண்ணிக்கை 13.29 மில்லியனாக இருக்கும் நிலையில் செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை 15.67 மில்லியனை தாண்டியிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2761fa19-ece2-42d3-8b91-9e08f654488b/26-6a59cc1eb8665.webp' /></p><h2>&nbsp;திருமணம் செய்யும் ஆர்வம் இல்லை</h2><p>
</p><p>
ஜப்பான் மக்கள் ஒழுக்கம், சுத்தம், கடின உழைப்பு மற்றும் நீண்ட ஆயுளுக்கு பெயர் போனவர்கள். ஜப்பான் மக்கள் பாரம்பரியம் மற்றும் நவீன தொழில்நுட்பம் இரண்டையும் தங்கள் கலாச்சாரத்தில் கலந்து வாழ்ந்து வருபவர்கள்.</p><p> 

அதேநேரம், கடந்த பல வருடங்களாகவே ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. ஒருபகக்ம், முதியோர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வருகிறது.

 திருமணம் செய்து கொள்ளுங்கள்.</p><p> நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என ஜப்பான் அரசு தொடர்ந்து கூறியும் இளைஞர்கள் தயங்குகிறார்கள்.</p><p>

குறைந்த ஊதியம், அதிகமான வாடகை, குழந்தைகளுக்கான பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால் ஜப்பான் நாட்டு இளைஞர்களிடம் திருமணம் செய்யும் ஆர்வம் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. </p><p>

எனவே, ஜப்பானியர்கள் மன ஆறுதலை போக்குவதற்காகவும், துணைக்காகவும் பலரும் நாய் மற்றும் பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-17T06:29:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்; மிரட்டும் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/not-a-single-person-will-be-left-in-iran-trump-1784269360"></link>
            <id>https://canadamirror.com/article/not-a-single-person-will-be-left-in-iran-trump-1784269360</id>
            <summary type="text">ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்; மிரட்டும் டிரம்ப் 

ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளமை பரபரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்; மிரட்டும் டிரம்ப் 

ஈரானில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நான்கு மாதங்களுக்கு மேல் போர் நீடித்து வருகிறது. இடையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a032f0f-a159-4424-92f9-267cdf3aedbc/26-6a59ca3267869.webp' /></p><h2>&nbsp;நாட்டில் ஒருவரும் இருக்க மாட்டார்கள்&nbsp;</h2><p> </p><p>

ஆனாலும் ஹார்மூஸ் நீரினை வழியாக வரும் சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை துவங்கியிருக்கிறது..

எனவே மீண்டும் அங்கே போர் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது. </p><p>அமெரிக்க தாக்கியதில் ஈரானின் 30 பேர் இறந்துவிட்டனர். மேலும் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
</p><p>
இந்நிலையில் செய்தியாளிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனாட்ல் டிரம்ப் ‘ஈரான் மீண்டும் எங்களுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.</p><p> அப்படி இல்லை என்றால் அடுத்த வாரம் ஈரானில் உள்ள அணு உலைகள் மற்றும் பாலங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துவோம்.. அந்த நாட்டில் ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்று எச்சரித்தார். 

மேலும் ‘நாளை இரவு ஈரானை கடுமையாக தாக்கப் போகிறோம்’ எனவும் அவர் கூறியிருக்கிறார்</p>]]></content>
            <updated>2026-07-17T06:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தீவிபத்தில் இந்திய தம்பதியர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-couple-dies-in-canada-fire-incident-1784267095"></link>
            <id>https://canadamirror.com/article/indian-couple-dies-in-canada-fire-incident-1784267095</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வாழ்ந்துவந்த இந்திய தம்பதி, தீவிபத்தில் பலியான விடயம் துயரத்தை உருவாக்கியுள்ளது.

கனடாவின் எட்மண்டன் நகரில் வாழ்ந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வாழ்ந்துவந்த இந்திய தம்பதி, தீவிபத்தில் பலியான விடயம் துயரத்தை உருவாக்கியுள்ளது.
</p><p>
கனடாவின் எட்மண்டன் நகரில் வாழ்ந்துவரும் லாலி தூர் என்னும் இளைஞர், திங்கட்கிழமை இரவு, தன் குடும்பத்துடன் உணவருந்திக்கொண்டிருந்திருக்கிறார்.</p><p>

அப்போது, தொலைக்காட்சி செய்திகளில், வீட்டில் பற்றிய தீயிலிருந்து தப்ப முதியவர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்ததைக் குறித்த செய்தி ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டிருந்திருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2842df34-d391-459b-a2a1-b9b313286216/26-6a59c1597d880.webp' /></p><p>
அந்த வீடு தனது தாத்தா, பாட்டியின் வீடு என்பதை அறிந்த தூர், உடனடியாக அங்கு விரைந்துள்ளார்.
</p><p>
தாத்தா வீட்டுக்குச் சென்ற தூர், அங்கு தீயணைப்பு வீரர்கள் தன் தாத்தாவுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்.
</p><p>
அத்துடன், தன் தாத்தாவின் வீடு கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் தூர்.
</p><p>
தூரின் தாத்தாவான மேஜர் சிங் பந்தலும் (85) பாட்டியான சுரிந்தர்ஜித் கவுர் பந்தலும் (82), 30 ஆண்டுகளாக எட்மண்டனில் வாழ்ந்துவந்துள்ளார்கள்.</p><p>

திங்கட்கிழமை இரவு 9.15 மணியளவில் அவர்கள் வாழ்ந்துவந்த வீட்டின் மீது வாகனம் ஒன்று மோதியுள்ளது.
</p><p>
வாகனம் மோதியதில், அங்கிருந்த எரிவாயுக் குழாய் வெடித்து அந்தக் கட்டிடம் தீப்பற்றியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2132b684-ee5b-4eb5-9e6b-0f13af915179/26-6a59c158ccb23.webp' /></p><p>
வீடு தீப்பிடித்ததை அறிந்த மேஜர் சிங், மூன்றாவது மாடிலிருந்து குதித்துள்ளார். ஆனால், அவர் உயிர் பிழைக்கவில்லை. அதேபோல, வீட்டுக்குள்ளிருந்த அவரது மனைவியான சுரிந்தர்ஜித் கவுர், மறுநாள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.</p><p>

மேஜர் சிங், சுரிந்தர்ஜித் கவுர் தம்பதியருக்கு ஏற்பட்ட துயர முடிவு அவர்களுடைய குடும்பத்தினரை கடும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.</p><p>

இந்நிலையில், அவர்கள் வீட்டின் மீது காரை மோதிய 62 வயது நபரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், அந்த கட்டிடத்தில் வாழ்ந்துவந்த ஆறு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
இந்த துயர சம்பவம் தொடர்பில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T05:45:55+00:00</updated>
        </entry>
    </feed>
