<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-10T16:34:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பறக்கும் விமானத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விமானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/flight-school-pilot-jumps-to-his-death-1783699178"></link>
            <id>https://canadamirror.com/article/flight-school-pilot-jumps-to-his-death-1783699178</id>
            <summary type="text">அர்ஜென்டினாவில் விமானப் பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் ஒருவர், பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினாவில் விமானப் பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் ஒருவர், பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. </p><p>
குறித்த குதித்த பிறகு, விமானத்தில் இருந்த 22 வயது மாணவி தனியாக அந்த விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளார்.</p><p>
மத்திய அர்ஜென்டினாவின் டோலிடோ பகுதியில் கடந்த சனிக்கிழமை செஸ்னா 150 ரக சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b16b47d-624a-400b-90e4-f015ec7d00c8/26-6a5116ebdb854.webp' /></p><p> </p><p>
இதில் 42 வயதான அனுபவம் வாய்ந்த விமானப் பயிற்றுவிப்பாளர் லியான்ட்ரோ ஆண்ட்ரேஸ் பெர்டாஸோ மற்றும் ரொசாரியோ என்ற 22 வயது மாணவியும் இருந்துள்ளனர்.</p><p>
விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த மாணவியிடம், "உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும், தொடர்ந்து செய்" எனக் கூறிவிட்டு, பெர்டாஸோ தனது ஹெட்செட் மற்றும் சீட் பெல்ட்டைக் கழற்றியுள்ளார்.</p><p> பின்னர், விமானத்தின் கதவைத் திறந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதனால் மாணவி கடும் அதிர்ச்சியடைந்தார்.
</p><p>இருப்பினும், அந்த மாணவி மிகுந்த தைரியத்துடன் செயல்பட்டு, கட்டுப்பாட்டை இழக்காமல் விமானத்தை எவ்வித சேதமுமின்றி பத்திரமாகத் தரையிறக்கினார்.
</p><p>இது குறித்து அந்தப் பறக்கும் பள்ளியின் இயக்குனர் எடுவார்டோ ஆல்வாரெஸ் கூறுகையில், பெர்டாஸோ மிகவும் நல்ல மனிதர் என்றும், அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். </p><p>
மேலும், வேகமாகப் பறக்கும் விமானத்தின் கதவைத் திறப்பது மிகவும் கடினமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அனுபவம் வாய்ந்த இந்த விமானியின் திடீர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அந்நாட்டு அரசு வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T16:06:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து மீளப்பெறப்படும் வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/honda-has-recalled-hundreds-of-thousands-1783681274"></link>
            <id>https://canadamirror.com/article/honda-has-recalled-hundreds-of-thousands-1783681274</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் ஹோண்டா ரக வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்புறக் காட்சி (Rear-view) கேமரா திரையில் ஏற்படும் தொழில்நுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் ஹோண்டா ரக வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>பின்புறக் காட்சி (Rear-view) கேமரா திரையில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கனடா முழுவதும் 32,000-க்கும் மேற்பட்ட 'ஒடிஸி' ரக வாகனங்களை ஹோண்டா கனடா நிறுவனம் திரும்பப் பெற்றுவருகிறது. </p><p>
இதேபோன்றதொரு கோளாறினால் அமெரிக்காவிலும் 3,00,000-க்கும் அதிகமான வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0193556b-291a-4594-8b9d-e473e5a611ab/26-6a50d0fbaab9d.webp' /></p><p>
இது தொடர்பாக ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் தயாரிக்கப்பட்ட 32,289 ஒடிஸி மினிவேன் ரக வாகனங்கள் இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>வாகனத்தின் பின்புறக் கேமரா பகுதிக்குள் தண்ணீர் நுழைவதால், அங்குள்ள அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகை துருப்பிடிக்க வாய்ப்புள்ளது.
</p><p> இதனால், வாகனத்தை ரிவர்ஸ் எடுக்கும் போது பின்புறக் கேமரா திரை வேலை செய்யாமல் போகலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>
கேமரா திரை வேலை செய்யாவிட்டால், ஓட்டுநருக்குப் பின்னால் இருக்கும் பொருட்கள் சரியாகத் தெரியாது. இது விபத்துகள் ஏற்படுவதற்கான அல்லது காயங்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என ஹோண்டா எச்சரித்துள்ளது.
</p><p>கேமராவைப் பொருத்தும் போது ஏற்பட்ட பிழையே இதற்கு முக்கியக் காரணமாகும். கேமராவின் உறையிலுள்ள துளையின் அளவுக்குப் பொருந்தாத மவுண்டிங் ஸ்க்ரூ பயன்படுத்தப்பட்டதே இந்த குறைபாட்டிற்குக் காரணமாக அமைந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T13:10:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வெப்ப அலை; இங்கிலாந்து மக்களுக்கு விதிக்கப்பட்ட தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/severe-heatwave-hosepipe-ban-in-england-1783685707"></link>
            <id>https://canadamirror.com/article/severe-heatwave-hosepipe-ban-in-england-1783685707</id>
            <summary type="text">&amp;nbsp; இங்கிலாந்து நீண்ட வெப்ப அலை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், மேலும் பல மில்லியன் இங்கிலாந்து மக்களுக்கு குழாய் மூலம் நீர் பாய்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இங்கிலாந்து நீண்ட வெப்ப அலை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், மேலும் பல மில்லியன் இங்கிலாந்து மக்களுக்கு குழாய் மூலம் நீர் பாய்ச்சுவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது.</p><p>

 இன்று (10) காலை, இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தனது 50 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு, குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான (hosepipe) தடையை ‘ஆங்லியன் வாட்டர்’ (Anglian Water) நிறுவனம் அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf77bce-6589-4567-829b-3e02a81391a4/26-6a50e24d1acf8.webp' /></p><h2>இதுவே முதல் முறை...</h2><p>
</p><p>
ஒரு ஆண்டில் 34 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலை பதிவான நாட்களின் எண்ணிக்கை எட்டை எட்டியது.</p><p>

1976 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளின் கோடைக்காலத்தில் பதிவான ஏழு நாட்கள் என்ற முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையை இது கடந்துவிட்டது.

 சில பகுதிகளில் வறட்சி நிலவுவதற்கான அபாயம் அதிகரித்து வருவதாக இங்கிலாந்து அதிகாரிகள் அண்மையில் எச்சரித்துள்ளனர்.</p><p>

 ஈஸ்ட் ஆங்லியா, டெவோன் மற்றும் கார்ன்வால் ஆகிய பகுதிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், நீர் நிறுவனங்களும் பற்றாக்குறையாகி வரும் வளங்களைச் சமாளிக்கப் போராடி வருகின்றன.
</p><p>

இந் நிலையில் , சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல், வாடிக்கையாளர்கள் தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கோ, கார்களைக் கழுவுவதற்கோ அல்லது நீச்சல் மற்றும் சிறுவர் குளங்களை நிரப்புவதற்கோ குழாய்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
</p><p>
அதேநேரம், கேம்பிரிட்ஜ் வாட்டர் நிறுவனமும் தனது 350,000 வாடிக்கையாளர்களுக்கு தற்காலிக குழாய் நீர் பயன்பாட்டுத் தடையை அறிவித்துள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களில் அந்நிறுவனம் இத்தகைய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.</p><p>

இது தவிர சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனம், ஜூலை 3 அன்று கென்ட் மாகாணத்தின் பல பகுதிகளில் குழாய் நீர் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-10T13:09:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் நதியைத் திருமணம் செய்துகொண்ட பெண் ; வைரலாகும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/uk-woman-marries-a-river-in-unique-ceremony-1783683020"></link>
            <id>https://canadamirror.com/article/uk-woman-marries-a-river-in-unique-ceremony-1783683020</id>
            <summary type="text">&amp;nbsp;இங்கிலாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான மேக் என்ற பெண், அங்குள்ள &#039;ஏவோன்&#039; என்ற நதியைத் திருமணம் செய்துகொண்டு, தற்போது தனது 3-வது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இங்கிலாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான மேக் என்ற பெண், அங்குள்ள 'ஏவோன்' என்ற நதியைத் திருமணம் செய்துகொண்டு, தற்போது தனது 3-வது திருமண நாளைக் கொண்டாடியுள்ள வினோத சம்பவம் உலகளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.


</p><p>நதிக்கும் தனக்கும் உள்ள காதல் இன்னும் குறையவில்லை என்று கூறி, அண்மையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58eddf30-5a26-4d01-92af-25283bae8960/26-6a50d7cdd2849.webp' /></p><h2>&nbsp;சட்டப்பூர்வ அங்கீகாரம்</h2><p>


</p><p>இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம் பெண் 'மேகன் ரூத்-ட்ரம்ப்'. இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 17 அன்று, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி வெள்ளை நிற திருமண ஆடை அணிந்து, 'ஏவோன்' நதியைத் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். </p><p>திருமணத்திற்குப் பிறகு தனது பெயரை 'மேக் ஏவோன்' என்றும் மாற்றிக் கொண்டார்.</p><p> அண்மையில் தனது 3-வது திருமண நாளைக் கொண்டாடிய மேக், "நதிக்கும் எனக்குமான காதல் இன்னும் ஆழமாகத் தொடர்கிறது. கடுமையான குளிர்காலத்திலும் கூட வாரத்திற்கு ஒருமுறை நான் என் நதியுடன் நேரம் செலவிட (குளிக்க) தவறுவதில்லை" எனத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது ஏதோ வேடிக்கைக்காகவோ அல்லது மனநலக் குறைபாட்டாலோ செய்யப்பட்ட திருமணம் அல்ல. இங்கிலாந்தின் நீர்நிலைகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் கலக்கப்படும் 'கழிவுநீர் மற்றும் நச்சு மாசு' குறித்த விழிப்புணர்வை உலகிற்கு ஏற்படுத்தவே இந்த வினோத போராட்ட வடிவத்தை அவர் கையில் எடுத்துள்ளார்.


</p><p>
தற்போதைய சட்டப்படி ஒரு நதியை மனிதர்கள் முறைப்படி திருமணம் செய்ய முடியாது. எனவே, 'ரைட்ஸ் ஆஃப் நேச்சர்' அமைப்புகளுடன் இணைந்து, "நதிகளுக்கு மனிதர்களைப் போன்ற சட்டப்பூர்வ வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகிறார்.</p><p> இந்த உரிமை கிடைத்தால், நதியைத் தான் சட்டப்பூர்வமாக மீண்டும் திருமணம் செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார்</p>]]></content>
            <updated>2026-07-10T11:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் அமைச்சர் Ann Widdecombe காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ex-minister-ann-widdecombe-has-passed-away-1783681701"></link>
            <id>https://canadamirror.com/article/ex-minister-ann-widdecombe-has-passed-away-1783681701</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி அமைச்சர் ஆன் விடெகோம்ப் (Ann Widdecombe), தனது 78 ஆவது வயதில் காலமானார்.

அவரது மேலான்மை நிறுவனமான ‘கிளவுட் 9 மேன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி அமைச்சர் ஆன் விடெகோம்ப் (Ann Widdecombe), தனது 78 ஆவது வயதில் காலமானார்.
</p><p>
அவரது மேலான்மை நிறுவனமான ‘கிளவுட் 9 மேனேஜ்மென்ட்’ (Cloud 9 Management), இன்று (10) காலை அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25726eb6-55fa-4d65-8ecc-981e92f94f36/26-6a50d2a683047.webp' /></p><p>
</p><p>
திருமதி விட்கோம்ப், கென்ட் (Kent) பகுதியிலுள்ள மெய்ட்ஸ்டோன் (Maidstone) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 23 ஆண்டுகள் பணியாற்றினார்.</p><p>

1994 முதல் 1997 வரை இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜோன் மேஜரின் அரசாங்கத்தில் உள்துறை மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் அவர் பணியாற்றினார்.</p><p>

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதை ஆன் விடெகோம்ப் (Anne Widdecombe) உறுதியாக ஆதரித்தார்</p><p>.

மேலும் 2019 இல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ரிஃபோர்ம் யுகே கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிடவும் ஆன் விடெகோம்ப் (Ann Widdecombe) தேர்ந்தெடுக்கப்பட்டார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T11:07:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணுமின் நிலையம் அருகே தாக்குதல் நடத்திய அமெரிக்கா ; கதிர்வீச்சு அபாயம் குறித்து அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-strikes-near-nuclear-power-facility-1783681314"></link>
            <id>https://canadamirror.com/article/us-strikes-near-nuclear-power-facility-1783681314</id>
            <summary type="text">ஈரானில் அணுமின் நிலையம் அருகே அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தெற்கு ஈரானின் பந்தர் அபபாஸ், சபாஹர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் அணுமின் நிலையம் அருகே அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

நேற்று தெற்கு ஈரானின் பந்தர் அபபாஸ், சபாஹர் உள்ளிட்ட துறைமுக நகரங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/843cd225-cd05-47ea-91ef-627e741ad044/26-6a50d1243aa96.webp' /></p><p>
</p><p>
பதிலுக்கு பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது குறிவைத்து தாக்கியதாக ஈரான் தெரிவித்தது. தங்கள் நாட்டை நோக்கி வந்த டிரோன், ஏவுகணைகளை இடைமறித்து அளித்ததாக குவைத், பஹ்ரைன் நாடுகளும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளன.
</p><p>
இந்த சூழலில் ஈரானின் மிக முக்கிய புஷெஹர் அணுமின் நிலையத்தின் மிக அருகாமையில் அமெரிக்கப் படைகள் குண்டுவீசியுள்ளன.
</p><p>
ஈரான் அரசு ஊடகங்களின்படி, இந்த தாக்குதலின் தாக்கத்தால், புஷெஹர் அணுமின் நிலைய வளாகத்திற்குள் இருக்கும் ஒரு கட்டிடம் பகுதியளவு பலத்த சேதமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கதிர்வீச்சு அபாயம் குறித்த தகவல் வெளியாகவில்லை. </p><p>அணுமின் நிலையம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அணுமின் நிலையம் தவிர, ஈரானின் முக்கிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் துறைமுக நகரங்களான பந்தர் அப்பாஸ் மற்றும் கொனார ஆகிய கடலோரப் பகுதிகளும் அமெரிக்காவின் தொடர் குண்டுவீச்சுகளுக்கு உள்ளாகி வருகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T11:03:00+00:00</updated>
        </entry>
    </feed>
