<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-19T15:41:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் அரச பாதுகாப்பு நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spy-watchdog-do-more-to-avoid-canadian-1784471733"></link>
            <id>https://canadamirror.com/article/spy-watchdog-do-more-to-avoid-canadian-1784471733</id>
            <summary type="text">&amp;nbsp;வெளிநாடுகளுடன் தகவல்களைப் பகிரும் போது, அந்த தகவல்கள் சித்திரவதை அல்லது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்காத வகையில் கனடாவின் சில மத்திய அரச நிறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெளிநாடுகளுடன் தகவல்களைப் பகிரும் போது, அந்த தகவல்கள் சித்திரவதை அல்லது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்காத வகையில் கனடாவின் சில மத்திய அரச நிறுவனங்கள் மேலும் கவனமாக செயல்பட வேண்டும் என புதிய பாதுகாப்பு கண்காணிப்பு அறிக்கை எச்சரித்துள்ளது.
</p><p>தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை மறுஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், சர்ச்சைக்குரிய தகவல் பரிமாற்றங்களை கையாளும் சட்ட நடைமுறைகளை வலுப்படுத்த பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>வெளிநாட்டு அமைப்புகளால் ஏற்படும் தவறான நடத்தைகளில் பங்காளியாக இருப்பதைத் தவிர்க்கும் சட்டம் வெளிநாட்டு அமைப்புகளுடன் தகவல்களை பகிர்வதை அல்லது அவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை பயன்படுத்துவதை தடை செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c6c19e2-a857-4895-8a9b-0a7969699d3a/26-6a5ce0b7c4bda.webp' /></p><p> 
குறிப்பாக, அந்த நடவடிக்கை காரணமாக ஒருவர் வெளிநாட்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சித்திரவதை அல்லது மனிதாபிமானமற்ற நடத்தைக்கு உள்ளாகும் கணிசமான அபாயம் இருந்தால் அது அனுமதிக்கப்படாது.
</p><p>எனினும், அந்த அபாயங்களை மதிப்பீடு செய்து, அவற்றை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே தகவல் பகிர்வு அனுமதிக்கப்படலாம். இது அபாயத்தை குறைக்கும் நடைமுறை என அழைக்கப்படுகிறது.
</p><p>மேலும், சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனைகளை ஒழிப்பதற்கான சர்வதேச மனித உரிமை கடமைகளுக்கு ஏற்ப இந்த கடுமையான விதிமுறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
</p><p>வெளிநாட்டு தகவல் பகிர்வு தொடர்பான முடிவுகளில் இந்த சட்டத் தேவைகளை எவ்வாறு பரிசீலித்தனர் என்பதற்கான முழுமையான பதிவுகளை மத்திய அரச நிறுவனங்கள் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T15:38:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோவில் காட்டுத்தீ பரவல் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ntario-premier-visits-thunder-bay-1784469609"></link>
            <id>https://canadamirror.com/article/ntario-premier-visits-thunder-bay-1784469609</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இன்று மேலும் ஏழு இடங்களில் புதிய காட்டுத்தீகள் பதிவாகியுள்ளதால், தற்போது எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீகளின் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இன்று மேலும் ஏழு இடங்களில் புதிய காட்டுத்தீகள் பதிவாகியுள்ளதால், தற்போது எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீகளின் மொத்த எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>இயற்கை வள அமைச்சு இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது.
மேகமூட்டமான வானிலை மற்றும் அண்மையில் பெய்த மழை காரணமாக சில பகுதிகளில் தீ பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளில் நிலைமை இன்னும் மிகவும் ஆபத்தானதாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இந்நிலையில், ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தண்டர் பே நகருக்குச் சென்று தீயணைப்பு வீரர்கள், அவசரகால மீட்புப் பணியாளர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e51ac2c4-1591-4e8f-a465-cbbe6abd4b1a/26-6a5cd86ac0ec3.webp' /></p><p> </p><p>
காட்டுத்தீயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து வளங்களையும் பயன்படுத்த அரசு தயங்காது என்றும், இதற்கான செலவுகளுக்கு எந்த வரம்பும் விதிக்கப்படமாட்டாது எனவும் அவர் உறுதியளித்தார்.
</p><p>மேலும், அல்பர்டா மாகாணத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள், யூகோனிலிருந்து நீர்குண்டு வீச்சு விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களின் உதவிகளும் பெறப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
</p><p>காட்டுத்தீ நெருக்கடியை எதிர்கொள்ள அரசு போதுமான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முதல்வர் ஃபோர்ட் நிராகரித்ததுடன், அவசரநிலையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.</p><p>
இந்தக் காட்டுத்தீயால் முதன்மையாக பூர்வீக மக்களின் சமூகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிஷ்னாவ்பே அஸ்கி நேஷன் பகுதிகளில் உள்ள பல சமூகங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளன. </p><p>இந்நிலையில், மாகாண அரசின் நடவடிக்கைகள் மிகவும் தாமதமாக உள்ளதாக அந்த அமைப்பின் தலைமைத் தலைவர் ஆல்வின் ஃபிட்லர் குற்றம்சாட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T15:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ணப் போட்டி ; பரிசுவழங்கவுள்ள ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/world-cup-tournament-trump-to-present-the-prize-1784464552"></link>
            <id>https://canadamirror.com/article/world-cup-tournament-trump-to-present-the-prize-1784464552</id>
            <summary type="text">பிபா உலகக் கிண்ணக் கால்பந்து விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிபா உலகக் கிண்ணக் கால்பந்து விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ ஆகியோர் இணைந்து உலகக் கிண்ணத்தையும்&nbsp; பரிசுகளையும் வழங்கவுள்ளனர்.</p><p>&nbsp;நியூயோர்க் நகரில் புகழ்பெற்ற மெட்லைப் மைதானத்தில் இன்று (19) நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக நேருக்கு நேர் மோதுகின்றன.</p><p>இன்றைய இறுதிப் போட்டியைக் காண்பதற்காக சுமார் 80,000 பார்வையாளர்கள் மைதானத்தில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த உலகக்கிண்ணத் தொடரின் 7 முக்கிய ஆட்டங்கள் ஏற்கனவே இந்த மைதானத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.</p><p>போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்தில் இரசிகர்களை உற்சாகப்படுத்த பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கோல்ட்பிளேஸ் கிறிஸ் மார்ட்டின், மெடோனா, ஷகிரா, பி.டி.எஸ் ஜஸ்டின் பைபர் மற்றும் குஸ்டவோ டுடாமெல் ஆகியோரின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் அரங்கேறவுள்ளன.</p><p>மெட்லைப் மைதானத்தின் புல்தரை பரப்பு மிகவும் கடினமாக இருப்பதாக பெரும்பாலான வீரர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். இது ஆட்டத்தின் வேகத்திற்கு சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது.</p><p>உலகக்கிண்ணத்தை முத்தமிடப் போவது மெஸ்ஸியின் அர்ஜென்டினாவா? அல்லது ரோட்ரியின் ஸ்பெயினா? என்ற எதிர்பார்ப்பு உலகெங்கிலும் உள்ள கால்பந்து இரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-19T13:35:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் கிச்சனரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது, விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/kitchener-one-injured-in-kitchener-shooting-wrps-1784465978"></link>
            <id>https://canadamirror.com/article/kitchener-one-injured-in-kitchener-shooting-wrps-1784465978</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், கிச்சனர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வாட்டர்லூ பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், கிச்சனர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக வாட்டர்லூ பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, சனிக்கிழமை காலை கோர்ட்லண்ட் அவென்யூ மற்றும் ஹேவர்ட் அவென்யூ சந்திப்புக்கு அருகிலுள்ள வீட்டொன்றில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் காயமடைந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.</p><p>
எனினும், பொலிஸார் அங்கு சென்றபோது காயமடைந்த நபர் சம்பவ இடத்தில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fdb5074-f6a6-4815-8b78-de1d07a3276b/26-6a5cca3c8f509.webp' /></p><p> </p><p>
அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்களின் தன்மை மற்றும் தீவிரம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>இருப்பினும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சூழ்நிலை குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T13:04:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக கோல் அடித்து வரலாறு படைத்த பிரான்ஸ் வீரர்; தங்கப் பாதணி யாருக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/golden-boot-football-history-france-kylian-mbapp-1784436553"></link>
            <id>https://canadamirror.com/article/golden-boot-football-history-france-kylian-mbapp-1784436553</id>
            <summary type="text">உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.மியாமி நகரில் இங்கிலாந்துக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.</p><p>மியாமி நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், தனது 22வது கால்பந்து கோலை அடித்து எம்பாப்பே புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.</p><p>விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி, கால்பந்து உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.</p><p>&nbsp;2026 உலகக் கிண்ணத்தின் தங்கப் பாதணி (Golden Boot) போட்டியில், எம்பாப்பே இதுவரை 10 கோல்களை அடித்து, பட்டியலில்&nbsp; முதலிடத்தில் உள்ளார்.</p><p>அவரைத் தொடர்ந்து லயோனல் மெஸ்ஸி 8 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.</p><p>அதேநேரம் உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் லயோனல் மெஸ்ஸி இதுவரை 21 கோல்களை அடித்துள்ளார்.</p><p>அதேவேளை&nbsp; ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி விளையாடும்போது, இந்த தங்கப் பாதணி (Golden Boot) விருதுக்கான போட்டி மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T12:36:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் துறைமுக முற்றுகையை தீவிரப்படுத்தும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-intensifies-blockade-of-iranian-ports-1784458480"></link>
            <id>https://canadamirror.com/article/us-intensifies-blockade-of-iranian-ports-1784458480</id>
            <summary type="text">ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து மிகக் கடுமையாக அமுல்படுத்தப் போவதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து மிகக் கடுமையாக அமுல்படுத்தப் போவதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p>கடந்த ஜூலை 14ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கப்பட்ட இந்த முற்றுகை நடவடிக்கையை, அமெரிக்கப் படைகள் தடையின்றித் தொடர்ந்து வருகின்றன.</p><p>இந்த முற்றுகையின் ஒரு பகுதியாக, இதுவரை 5 கப்பல்களை வேறு திசைக்கு மாற்றியிருப்பதாகவும், ஒரு கப்பலை செயலிழக்கச் செய்திருப்பதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T10:54:46+00:00</updated>
        </entry>
    </feed>
