<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-17T18:31:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெக்சிகோவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் ; பசிபிக் கடலோர நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/7-3-magnitude-earthquake-mexico-tsunami-warning-1784312830"></link>
            <id>https://canadamirror.com/article/7-3-magnitude-earthquake-mexico-tsunami-warning-1784312830</id>
            <summary type="text">மெக்சிகோவின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பசிபிக் பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெக்சிகோவின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பசிபிக் பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

மெக்சிகோ மற்றும் குவாத்தமாலாவின் அருகிலுள்ள கடற்கரையோரங்களில் அலை மட்டத்திற்கு மேல் 0.3 முதல் 1 மீட்டர் (1-3 அடி) வரையிலான "அபாயகரமான சுனாமி அலைகள்" ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. </p><p>

இந்த நிலநடுக்கம் "மிதமான தீவிரத்துடன்" உணரப்பட்ட போதிலும் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஒக்சாகாவின் (Oaxaca) ஆளுநர் சலோமன் ஜாரா குரூஸ் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1625e2b-3cb6-4104-bcf1-885ac593d51a/26-6a5a73ffdded4.webp' /></p><p>இந்த நிலநடுக்கம் குவாத்தமாலா மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளிலும் கட்டிடங்களை உலுக்கியுள்ளதாகவும், குவாத்தமாலா நகரில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு சென்றுள்ளதாகவும் வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. </p><p>

மெக்சிகோவின் மீன்பிடி நகரமான புவேர்ட்டோ மடிரோவிற்கு (Puerto Madero) அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 15.2 கிலோமீட்டர் (9 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. </p><p>

கொலம்பியா, கோஸ்டாரிகா, ஈக்வடார், எல் சால்வடார், நிகரகுவா, பனாமா, பெரு மற்றும் ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளின் கடற்கரையோரங்களில் சுனாமி அலைகள் 0.3 மீட்டருக்கும் குறைவான அளவிலேயே இருக்கும் என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு கணித்துள்ளது. </p><p>

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள கடலோரப் பகுதிகளில் உள்ள அரசாங்க முகவர் நிலையங்கள் ஆபத்தில் உள்ள மக்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் "தகவல்களைப் பெறுவதில் விழிப்புடன் இருக்குமாறும், தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும்" அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T18:27:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இடம்பெற்ற பெற்ற விபத்தில் 2 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/serious-crash-west-of-edmonton-closes-roads-1784310782"></link>
            <id>https://canadamirror.com/article/serious-crash-west-of-edmonton-closes-roads-1784310782</id>
            <summary type="text">&amp;nbsp;ஆல்பெர்ட்டா&amp;nbsp; மாகாணம் எட்மண்டன் நகரின் மேற்குப் பகுதியில் வியாழக்கிழமை&amp;nbsp; அன்று மதியம் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் ஸ்டோனி பிளெயின் பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆல்பெர்ட்டா&nbsp; மாகாணம் எட்மண்டன் நகரின் மேற்குப் பகுதியில் வியாழக்கிழமை&nbsp; அன்று மதியம் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் ஸ்டோனி பிளெயின் பகுதியைச் சேர்ந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p>
காவல்துறையினரின் முதற்கட்ட தகவல்படி, வியாழக்கிழமை நெடுஞ்சாலை 627 மற்றும் நெடுஞ்சாலை 60 சந்திப்பில்&nbsp; இந்த விபத்து நேர்ந்துள்ளது. </p><p>
அங்கு வந்த ஜீப் ரக வாகனம் ஒன்றும் பிக்கப் டிரக் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2a699bd-d9ab-40ab-8679-951b5b07ce98/26-6a5a6bffe3059.webp' /></p><p>
இந்த விபத்தின் போது ஜீப்பில் பயணித்த 69 வயது முதியவர் மற்றும் 64 வயது பெண் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான பிக்கப் டிரக்கில் ஓட்டுநர் மட்டுமே இருந்துள்ளார். </p><p>பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கனடிய போலீசார் மற்றும் அவசரக் கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p> 
காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
</p><p>இந்த கொடிய விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T18:06:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காாணமல் போன நபரைத் தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/calgary-police-search-for-missing-calgary-man-1784310585"></link>
            <id>https://canadamirror.com/article/calgary-police-search-for-missing-calgary-man-1784310585</id>
            <summary type="text">கனடாவின் கல்கரி நகரின் கிரான்ஸ்டன் பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று காணாமல் போன 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரைத் தேடுவதற்குப் பொதுமக்கள் உதவுமாறு கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கல்கரி நகரின் கிரான்ஸ்டன் பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று காணாமல் போன 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரைத் தேடுவதற்குப் பொதுமக்கள் உதவுமாறு கல்கரி காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>காவல்துறையினரின் தகவல்படி, ஜோஷுவா (Joshua) என்ற 33 வயது நபர், கடந்த புதன்கிழமை மாலை 6:45 மணியளவில் 'கிரான்புரூக் ஸ்கொயர் எஸ்.இ.' பகுதியின் 400 வது பிளாக்கில் கடைசியாகக் காணப்பட்டுள்ளார். அதன் பிறகு அவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.</p><p>
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜோஷுவா தனது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளாமல் இருப்பது இதுவே முதல் முறை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89563dc1-e16d-48fd-96db-29e7ce0c72b3/26-6a5a6b3b61d59.webp' /></p><p> </p><p>எனவே, அவரது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து அவரது குடும்பத்தினரும் காவல்துறையினரும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>காணாமல் போன ஜோஷுவாவைக் கண்டறிய பின்வரும் அடையாள விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன:</p><p>
•	உயரம்: 5 அடி 10 அங்குலம் (178 செ.மீ)</p><p>
•	எடை: சுமார் 210 பவுண்டுகள் (95 கிலோ)
</p><p>•	தோற்றம்: பழுப்பு நிற கண்கள், சிவப்பு நிற முடி மற்றும் சிவப்பு நிற தாடி கொண்டவர்.
</p><p>•	அணிந்திருந்த ஆடைகள்: அவர் கடைசியாகக் காணப்பட்ட போது கருப்பு நிற தொப்பி, கருப்பு நிற சட்டை, சிவப்பு நிற அரைக்கால் சட்டை (Shorts) மற்றும் கருப்பு நிற காலணிகளை அணிந்திருந்தார்.</p><p>
ஜோஷுவா இருக்குமிடம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக 403-266-1234 என்ற எண்ணிற்கு காவல்துறையைத் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T18:05:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து செப்புக் கம்பிகளை திருடியவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nb-man-charged-for-allegedly-stealing-1784309932"></link>
            <id>https://canadamirror.com/article/nb-man-charged-for-allegedly-stealing-1784309932</id>
            <summary type="text">கனடாவின், நியூ பிரன்சுவிக் (N.B.) மாகாணத்தின் சீலீஸ் கோவ் பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து செப்புக் கம்பிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின், நியூ பிரன்சுவிக் (N.B.) மாகாணத்தின் சீலீஸ் கோவ் பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து செப்புக் கம்பிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் 38 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>சீலீஸ் கோவ் சாலையில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு கோபுரத்தில் செப்புக் கம்பிகள் திருடப்பட்டதாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கனடிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.</p><p> 
இந்த குறிப்பிட்ட கோபுரம் சமீபகாலமாக பலமுறை திருடர்களின் இலக்காக மாறியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac7bde43-e652-4aba-96cf-eab635c5ceb6/26-6a5a6e9536088.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் ரிமோட் மூலம் இயக்கப்படும் விமான அமைப்புகள் (RPAS) பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அப்பகுதியை வான்வழியாகக் கண்காணித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்தார்.
</p><p>இந்தத் தேடலின் போது, அங்குள்ள ஒரு பொழுதுபோக்கு வாகனத்திற்கு அருகில் பெருமளவிலான செப்புக் கம்பிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது ட்ரோன் கேமராவில் கண்டறியப்பட்டது.
ட்ரோன் ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கு கோடி பாபினோ (Cody Babineau) என்ற 38 வயது நபரைக் கைது செய்தனர். </p><p>
கைது செய்யப்பட்ட இந்த நபர் ஏற்கனவே ஒரு வழக்கில் வீட்டுக்காவலில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>தொடர்ந்து, இந்த விசாரணை தொடர்பாக அங்குள்ள ஒரு குடியிருப்பில் சோதனை நடத்துவதற்கான வாரண்ட்டைப் பெற்ற காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். 
இச்சோதனையில், சுமார் 16,000 டொலர் மதிப்புள்ள 1,000 மீட்டர் நீளமுள்ள செப்புக் கம்பிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T18:05:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயாகராவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/homicide-detectives-search-for-2-suspects-1784309557"></link>
            <id>https://canadamirror.com/article/homicide-detectives-search-for-2-suspects-1784309557</id>
            <summary type="text">&amp;nbsp;நயாகரா ஃபால்ஸ் பகுதியில் வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நயாகரா ஃபால்ஸ் பகுதியில் வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை நயாகரா பிராந்திய காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.</p><p>
காவல்துறையினரின் முதற்கட்ட தகவலின்படி, வியாழக்கிழமை இரவு சுமார் 8:50 மணியளவில் நயாகரா ஃபால்ஸ் நகரின் தோரோல்ட் ஸ்டோன் சாலை மற்றும் டார்செஸ்டர் சாலை சந்திப்புக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்புக்கு வந்த இரண்டு சந்தேக நபர்கள், அங்கிருந்த ஒரு நபரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ada426bc-dca3-4a97-a308-fc4de305e42f/26-6a5a6736dfa40.webp' /></p><p>
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 
எனினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.</p><p>
குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், காவல்துறையினர் அவர்களின் அடையாள விபரங்களை வெளியிட்டுள்ளனர்:
</p><p>முதல் சந்தேக நபர் (ஆண்): 25 முதல் 35 வயதிற்குட்பட்டவர், சுமார் 5 அடி 6 அங்குலம் உயரம், ஒல்லியான உடல்வாகு மற்றும் கருத்த நிறம் கொண்டவர். </p><p>இவர் டி-சர்ட், அடர் நிறப் பேண்ட், காலணிகள், கூலிங் கிளாஸ் மற்றும் தலையில் சிவப்பு நிற துண்டு (Red bandana) அணிந்திருந்தார்.
</p><p>இரண்டாம் சந்தேக நபர் (பெண்): 18 முதல் 25 வயதிற்குட்பட்டவர், அடர் பழுப்பு நிற முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர். </p><p>இவர் தளர்வான நீல நிற ஸ்வெட்பேண்ட், சாம்பல் நிற ஹூடி மற்றும் வெள்ளை நிற காலணிகளை அணிந்திருந்தார்.
</p><p>இவர்கள் இருவரும் சம்பவ இடத்திற்கு அருகில் புத்தம் புதிய மாடல் 'வெள்ளை நிற நிசான் எஸ்.யூ.வி' (White Nissan SUV) காரை நிறுத்தியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
</p><p>இக்கொலை வழக்கு குறித்துப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>
"இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகக் கருதப்பட்டாலும், ஆயுதங்களுடன் இருக்கும் சந்தேக நபர்கள் இன்னும் பிடிபடாததால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று காவல்துறை எச்சரித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T18:02:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் இந்தப் பகுதியில் வெள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/flooding-wipes-out-nearly-two-thirds-1784308907"></link>
            <id>https://canadamirror.com/article/flooding-wipes-out-nearly-two-thirds-1784308907</id>
            <summary type="text">கனடாவின் மேற்கு மேனிடோபாவில் உள்ள ஷெல் நதிக்கரையில் அமைந்துள்ள முகாம் தளம் ஒன்று, மூன்று வார இடைவெளியில் ஏற்பட்ட இரண்டு பெரிய வெள்ளப் பெருக்குகளால் கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மேற்கு மேனிடோபாவில் உள்ள ஷெல் நதிக்கரையில் அமைந்துள்ள முகாம் தளம் ஒன்று, மூன்று வார இடைவெளியில் ஏற்பட்ட இரண்டு பெரிய வெள்ளப் பெருக்குகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p> 
இதனால் அங்குள்ள 22 முகாம் தளங்களில் 14 தளங்கள் முழுமையாக அழிந்துள்ளன.
இதன் காரணமாக, இந்த கோடைகாலத்தில் முகாமை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என்று அதன் உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார். </p><p>
ரஸ்ஸல் (Russell) நகருக்கு வடக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், நெடுஞ்சாலை 83-க்கு சற்று தொலைவில் உள்ள அசெசிப்பி கடற்கரை மற்றும் முகாம் தளத்தை (Asessippi Beach and Campground) கரேன் கொராலுக் (Karen Goraluk) என்பவர் நடத்தி வருகிறார்.</p><p>
இப்பகுதியில் கடந்த ஏப்ரல் 21 அன்று வசந்த கால பனி உருகுதல் மற்றும் பலத்த மழையால் அருகில் உள்ள பியர் க்ரீக் (Bear Creek) பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. </p><p>இதனால் நெடுஞ்சாலையிலிருந்து முகாமுக்கு வரும் பாதை துண்டிக்கப்பட்டு, வணிகம் பாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஜூன் 10 அன்று ஷெல் நதியில் திடீரென நீர்மட்டம் 8 அடி வரை உயர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9fa04c7-6eaf-41fd-bf16-f31a86dc56ee/26-6a5a64ad86bc5.webp' /></p><p> </p><p>இந்த முதல் வெள்ளத்தில் முகாமின் கடற்கரைக் குடில்கள் நீரில் மூழ்கியதோடு, நதிக்கரையில் இருந்த இரண்டு முகாம் தளங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
</p><p>அதன் பின்னர், ஜூன் 30 அன்று ஏற்பட்ட இரண்டாவது வெள்ளம் மேலும் 12 தளங்களை நாசப்படுத்தியது. நதிக்கரையின் பெரும்பகுதி அரித்துச் செல்லப்பட்டு, நிலங்கள் ஆற்றுக்குள் சரிந்து விழுந்துள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T17:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் பாராளுமன்றம் கலைப்பு; மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா பெஞ்சமின் நெதன்யாகு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-parliament-dissolved-netanyahu-regain-power-1784284797"></link>
            <id>https://canadamirror.com/article/israel-parliament-dissolved-netanyahu-regain-power-1784284797</id>
            <summary type="text">&amp;nbsp; இஸ்ரேல் பாராளுமன்றம் இன்று முறைப்படி கலைக்கப்பட்டுள்ளது. புதிய ளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இஸ்ரேல் பாராளுமன்றம் இன்று முறைப்படி கலைக்கப்பட்டுள்ளது. புதிய ளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு தனது 4 ஆண்டுகாலப் பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3f82ea4-ce3c-4e37-9070-ca7585935932/26-6a5a067f5d992.webp' /></p><p> 



இந்த புதிய பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மொத்தம் 120 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.</p><p> 

இந்தத் தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பிரதமர் நப்தலி பென்னெட் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போட்டியிட உள்ளதால், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.



இந்நிலையில், தேர்தல் முடிவடைந்த பின்னர், புதிய அரசின் தலைமையில் புதிய பாராளுமன்றம் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-17T16:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்தில் உள்நாட்டுப் பறவைக்கு H5N1 பறவைக் காய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/h5n1-bird-flu-in-a-native-bird-in-new-zealand-1784294369"></link>
            <id>https://canadamirror.com/article/h5n1-bird-flu-in-a-native-bird-in-new-zealand-1784294369</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முதன்முறையாக, நியூசிலாந்தில் நாட்டின் பூர்வீகப் பறவை இனத்தைச் சேர்ந்த &#039;சுவாம்ப் ஹாரியர்&#039; (Swamp Harrier) வகை கழுகுக்கு H5N1 பறவைக் காய்ச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முதன்முறையாக, நியூசிலாந்தில் நாட்டின் பூர்வீகப் பறவை இனத்தைச் சேர்ந்த 'சுவாம்ப் ஹாரியர்' (Swamp Harrier) வகை கழுகுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
வட தீவின் வைராபா பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கழுகுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, உயிரியல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ ஹொகார்ட் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1f73ca2-9136-4bea-8f17-05fd0d438806/26-6a5a2be32d8ef.webp' /></p><p>
</p><p>
நியூசிலாந்தில் கடந்த புதன்கிழமை அன்று, வெலிங்டன் அருகே கண்டெடுக்கப்பட்ட 'ப்ரவுன் ஸ்குவா' (Brown Skua) எனும் கடல் பறவைக்கு முதன்முதலில் இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, தற்போது உள்நாட்டுப் பறவைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, வளர்ப்புப் பறவைகளிடம் (Poultry) இதுவரை நோய் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என ஆண்ட்ரூ ஹொகார்ட் உறுதிப்படுத்தினார்.
</p><p>
 நாட்டிலுள்ள மிகவும் அழிந்து வரும் நிலையில் உள்ள ஐந்து பறவை இனங்களைச் சேர்ந்த 300 முக்கிய இனப்பெருக்கப் பறவைகளுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சுகாதார அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
</p><p>
அதேவேளை இந்த மாத தொடக்கத்தில், அவுஸ்திரேலியாவிலும் உள்ளூர் கடல் பறவை ஒன்றிற்குப் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-17T13:17:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் பாரிய மண்சரிவு; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/massive-landslide-in-china-many-feared-dead-1784293891"></link>
            <id>https://canadamirror.com/article/massive-landslide-in-china-many-feared-dead-1784293891</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சீனாவின் சோங்க்சிங் நகரில் இன்று காலை திடீரென பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

 மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில், அதன் கீழ் பகுதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சீனாவின் சோங்க்சிங் நகரில் இன்று காலை திடீரென பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

 மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில், அதன் கீழ் பகுதியில் ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த பல குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இடிந்து நொறுங்கியுள்ளன.
</p><p>


இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் விரைந்த 100 மீட்புக்குழுவினரும் 200 தீயணைப்பு வீரர்களும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2507cffc-78f9-4d28-a7fb-34fdaa2482d5/26-6a5a2a0475b05.webp' /></p><p>



இடிபாடுகளில் சிக்கியிருந்த 9 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> எனினும், மேலும் பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
</p><p>


மண்சரிவின்போது பாறைகளும் இடிபாடுகளும் வீதிகளில் வந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
</p><p>


இந்த மண்சரிவு ஏற்பட்டதற்கான உடனடி காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.



வெளியாகியுள்ள சி.சி.டி.வி வான்வழிப் படக்காட்சிகளில், கட்டிடங்கள் மீது பாறைகள் விழுந்து நொறுங்குவதும், மக்கள் தப்பி ஓடுவதும் பதிவாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T13:09:57+00:00</updated>
        </entry>
    </feed>
