<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-12T22:00:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து மதுபானக் கடையில் பயங்கர தீ விபத்தில் 27 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/27-killed-in-massive-fire-at-thai-liquor-store-1783889004"></link>
            <id>https://canadamirror.com/article/27-killed-in-massive-fire-at-thai-liquor-store-1783889004</id>
            <summary type="text">தாய்லாந்தின் பேங்காக் நகரில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு கடந்த பின்னர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் பேங்காக் நகரில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

நள்ளிரவு கடந்த பின்னர் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், கட்டடம் முழுவதும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டதாகவும், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் சுமார் அரை மணி நேரப் போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2aaf990-d645-4d5b-b7f7-3b11c25ffa5a/26-6a53fc6d787ef.webp' /></p><p>

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்கிருந்த வாடிக்கையாளர்கள் கட்டடத்தின் பிரதான வாயில் வழியாக அலறியடித்துக்கொண்டு வெளியேற முயன்றதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த விபத்தில் உயிரிழந்த 27 பேரின் எண்ணிக்கையை தாய்லாந்து பிரதமர் அனுடின் சான்விராகுல் உறுதிப்படுத்தியுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், அது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதனிடையே, சம்பவம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், விபத்துக்குப் பின்னர் சிலரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T20:43:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மர்மப் பொருட்கள் ; பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mysterious-objects-found-on-australian-beach-1783878049"></link>
            <id>https://canadamirror.com/article/mysterious-objects-found-on-australian-beach-1783878049</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மமான உலோகப் பொருட்கள், விண்வெளி ஏவுகனைகளில் பயன்படுத்தப்படும் அழுத்தக் கலன்களாக (P...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மமான உலோகப் பொருட்கள், விண்வெளி ஏவுகனைகளில் பயன்படுத்தப்படும் அழுத்தக் கலன்களாக (Pressure vessels) இருக்கலாம் என்று அவுஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் (ASA) தெரிவித்துள்ளது.
</p><p>
சுமார் ஒரு கூடைப்பந்தின் அளவை விட இரு மடங்கு பெரியதாக உள்ள இந்தக் கோளங்களை, பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் தொடவோ அல்லது நகர்த்தவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b351d8-b60c-44c4-9d88-95f75e45669c/26-6a53d1a3086cc.webp' /></p><p>இவை எந்த விண்கலத்திலிருந்து விழுந்தன என்பது குறித்து சர்வதேச அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
</p><p>
விண்வெளிக் குப்பைகள் பூமியில் விழுவது அரிதான நிகழ்வு என்றாலும், விண்வெளி ஆய்வுகள் அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய அவசிதங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க விண்வெளி நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.</p><p>

இதற்கிடையில், மீட்கப்பட்ட கோளங்கள் தற்போது பாதுகாப்பானவை என அவசரகால மீட்புப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-12T20:25:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரம் ; கேஷ்ம் தீவு மீது ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-iran-conflict-inten-missile-attack-qeshm-island-1783887864"></link>
            <id>https://canadamirror.com/article/us-iran-conflict-inten-missile-attack-qeshm-island-1783887864</id>
            <summary type="text">போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்டிருந்த 60 நாள் இடைக்கால ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்டிருந்த 60 நாள் இடைக்கால ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
</p><p>
இந்த நிலையில், உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள ஈரானின் கேஷ்ம் தீவு மீது இன்று பிற்பகல் 10 முதல் 11 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51868470-f046-4182-bb19-60329c9ca224/26-6a53f7fa3444c.webp' /></p><p>

கேஷ்ம் மாவட்ட ஆளுநர் ஹொசைன் அமிர் தெய்மூரி கூறுகையில், தாக்குதலுக்கு இலக்கானவை அனைத்தும் ராணுவ நிலைகளாகும் என்றும், இதில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கிடையில், அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ஏவுகணை மற்றும் டிரோன் ஏவுதளங்கள், ஆயுதக் கிடங்குகள், தகவல் தொடர்பு மையங்கள் உள்ளிட்ட சுமார் 140 ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இந்த தாக்குதல் கடந்த சில நாட்களைக் காட்டிலும் அதிக தீவிரத்துடன் நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் திறன் குறைக்கப்படும் என்றும் அமெரிக்க மத்திய கட்டளை குறிப்பிட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தினோம்" என தெரிவித்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0627985f-3a67-432c-ab04-e54abdd661fc/26-6a53f7fadcd40.webp' /></p><p>கடந்த ஒரு வாரமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஓமன் கடற்பகுதியை ஒட்டிய வழித்தடத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
</p><p>
ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச கடல் பாதை என்றும், சட்டபூர்வமாக பயணிக்கும் அனைத்து கப்பல்களுக்கும் அது திறந்தே இருப்பதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. </p><p>கடல் போக்குவரத்து சுதந்திரத்தை உறுதி செய்ய அமெரிக்க படைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p>

இதனிடையே, அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களால் கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாகவும், பல இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-12T20:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாக அறிவித்த ஈரான் ; எரிபொருள் விலை மீண்டும் உயரும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-announce-close-strait-hormuz-fuel-prices-risk-1783887006"></link>
            <id>https://canadamirror.com/article/iran-announce-close-strait-hormuz-fuel-prices-risk-1783887006</id>
            <summary type="text">உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய கடல் பாதையாக கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய கடல் பாதையாக கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e313eadb-d096-441c-aef1-d99b6dc7d049/26-6a53f4a00229f.webp' /></p><p> இதன் காரணமாக உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, பல நாடுகளில் அவசரநிலை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
</p><p>
மேலும், கியாஸ், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் பல நாடுகளில் வேகமாக அதிகரித்தன. </p><p>பின்னர் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மீண்டும் மூடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
</p><p>
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் தாக்கமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-12T20:10:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாய உழைப்பில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ban-import-goods-produced-through-labor-sri-lanka-1783878597"></link>
            <id>https://canadamirror.com/article/ban-import-goods-produced-through-labor-sri-lanka-1783878597</id>
            <summary type="text">கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.நிதி, திட்டமிடல் மற்றும் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.</p><p>நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
</p><p>
இந்த புதிய ஒழுங்குமுறை ஜூலை 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
</p><p>
இதன்படி, கட்டாய உழைப்பின் மூலம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அகழ்ந்தெடுக்கப்பட்ட, தயாரிக்கப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்வது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81d1ce10-db37-4289-ad22-df3b380e7ea0/26-6a53d3c68b964.webp' /></p><p>சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்களை கருத்தில் கொண்டு, இந்த ஒழுங்குமுறை எந்தெந்தப் பொருட்கள் அல்லது நாடுகளுக்குப் பொருந்தும் என்பதை அரசாங்கம் அவ்வப்போது தீர்மானிக்கும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் கட்டாய உழைப்பால் தயாரிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை, இறக்குமதியாளர்கள் இலங்கைச் சுங்கத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><p>
கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுப்பதற்கான போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் கூறி, இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளின் மீது மேலதிக இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் முன்மொழிந்திருந்தார்.
</p><p>
இந்த முன்மொழிவின் கீழ், இலங்கை மீது 12.5 சதவீத மேலதிக இறக்குமதி வரி விதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டிருந்தது.
</p><p>
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, கட்டாய உழைப்பு தொடர்பான சட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T17:50:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென வந்த அவசர எச்சரிக்கை ; அடுத்தடுத்து தாக்குதல்களால் அதிர வைத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783862343"></link>
            <id>https://canadamirror.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783862343</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. </p><p>இந்த ஒப்பந்தத்தால் ஏற்கெனவே மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17fcb600-f9c2-49b1-81d1-88d9bb3b88fc/26-6a53944845c97.webp' /></p><p>

</p><p>
இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
இதனால் தாக்குதல்கள் இருபுறமும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
</p><p>
இதையடுத்து, கத்தாரில் வசித்து வரும் மக்களை வீட்டிலேயே இருக்குமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>மேலும் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களையடுத்து, அங்கு வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>ஈரான் மூலம் மத்திய கிழக்கை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகள், டிரோன் விமானங்கள் போன்றவற்றை தடுத்தி நிறுத்தி வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.</p><p>

முன்னதாக ஈரானின் 140 கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக மூடுவதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-12T17:10:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமான் கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது தாக்குதல் ; இந்திய வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-foreign-condemns-attack-merchant-gulf-oman-1783873415"></link>
            <id>https://canadamirror.com/article/indian-foreign-condemns-attack-merchant-gulf-oman-1783873415</id>
            <summary type="text">ஓமான் கடற்கரை அருகே &#039;ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி&#039; (GFS Galaxy) வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓமான் கடற்கரை அருகே 'ஜி.எஃப்.எஸ் கேலக்ஸி' (GFS Galaxy) வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>

சைப்ரஸ் கொடி ஏந்திச் சென்ற இந்த வணிகக் கப்பல், ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் பயணித்தபோது ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் (IRGC) தாக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.</p><p>இந்தத் தாக்குதலால் கப்பலின் இயந்திரம் அறை கடுமையாகச் சேதமடைந்து, கப்பலில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7f62c5b-a6fa-4be6-a019-41f41c22f08d/26-6a53bf88c0806.webp' /></p><p>இதனால் அந்தக் கப்பல் தனது பயணத்தைத் தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளது.
</p><p>
கப்பலில் பணியாற்றிய 11 இந்தியர்களில் 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
</p><p>
இது தொடர்பாக ஓமானில் உள்ள இந்திய தூதரகம், அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தீவிர மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
</p><p>
மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஓமான் அரசுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது.
</p><p>
இதனிடையே, ஈரான் தொடர்புடைய 140 ராணுவ நிலைகளை இலக்கு வைத்து அமெரிக்காவின் சென்ட்காம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-07-12T16:23:44+00:00</updated>
        </entry>
    </feed>
