<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-14T12:51:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மீன்பிடி படகு மூழ்கி விபத்து - நீரில் தவித்த இருவர் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-people-rescued-near-bc-ferry-terminal-1789386357"></link>
            <id>https://canadamirror.com/article/two-people-rescued-near-bc-ferry-terminal-1789386357</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ட்ஸவாசென் படகு முனையம் அருகே மீன்பிடிப் படகு ஒன்று மூழ்கியதில், கடலில் தவித்த இருவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிருடன் மீட்கப்பட்டனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ட்ஸவாசென் படகு முனையம் அருகே மீன்பிடிப் படகு ஒன்று மூழ்கியதில், கடலில் தவித்த இருவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிருடன் மீட்கப்பட்டனர்.
</p><p>ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:20 மணியளவில் ட்ஸவாசென் முனையம் அருகே இருவர் நீரில் தவிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p>பி.சி. ஃபெரிஸ் நிறுவனத்தின் 'ஸ்பிரிட் ஆஃப் பிரிட்டிஷ் கொலம்பியா' மற்றும் 'கோஸ்டல் ரெனடைசன்ஸ்' ஆகிய இரு கப்பல்களிலிருந்தும் மீட்புப் படகுகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b32d374b-c9c2-4516-a400-578d0e1966e8/26-6aa7de7771c64.webp' /></p><p>
</p><p>மூழ்கிய மீன்பிடிப் படகில் இருந்த இருவரையும் மீட்டு, ட்ஸவாசென் முனையத்திற்குப் பத்திரமாகக் கொண்டு வந்தனர்.
</p><p>பி.சி. அவசர மருத்துவ உதவி சேவை மற்றும் உள்ளூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். </p><p>முனையத்தில் முதலுதவி அளிக்கப்பட்ட பின், இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.</p><p> தற்போது இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கை காரணமாக ட்ஸவாசென் மற்றும் டியூக் பாயிண்ட் இடையேயான படகு சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T12:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சார வாகனங்களில் ஒட்டாவா நோக்கிப் பயணிக்கும் முதியவர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/these-canadian-seniors-are-driving-evs-1789385999"></link>
            <id>https://canadamirror.com/article/these-canadian-seniors-are-driving-evs-1789385999</id>
            <summary type="text">சுற்றுச்சூழலுக்குப் உகந்த பசுமைக் கொள்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி, கனடாவில் முதியவர்கள் சிலர் மின்சார வாகனங்களில் நாட்டின் தலைநகரான ஒட்டாவாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுச்சூழலுக்குப் உகந்த பசுமைக் கொள்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி, கனடாவில் முதியவர்கள் சிலர் மின்சார வாகனங்களில் நாட்டின் தலைநகரான ஒட்டாவாவை நோக்கிப் பேரணியாகப் பயணித்து வருகின்றனர்.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா நகரில் தொடங்கிய இந்த வாகன அணிவகுப்பு, கடந்த வார இறுதியில் சஸ்காட்செவானில் உள்ள ரெஜினா நகரை வந்தடைந்தது.</p><p>
'சீனியர்ஸ் கிளைமேட் விட்னஸ்' (Seniors’ Climate Witness) என்ற அமைப்பு இந்த விழிப்புணர்வுப் பேரணியை ஒருங்கிணைத்துள்ளது.
இவ்வணிவகுப்பு வரும் வெள்ளிக்கிழமை ஒட்டாவாவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f57388f5-b145-4d7a-a41b-3f70413d3c77/26-6aa7dd10b8be7.webp' /></p><p> </p><p>
அங்கு, அட்லாண்டிக் கனடாவில் இருந்து வரும் மற்றொரு வாகன அணிவகுப்புடன் இணைந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து மனு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். </p><p>கனடிய நாடாளுமன்றத்தின் இலையுதிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி இந்த போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பை விரிவுபடுத்த தேசிய அளவிலான புதிய திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. கொள்கைகளை அறிவிப்பதோடு நிறுத்தாமல், அவற்றை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதே தற்போதைய பிரதான கோரிக்கையாக உள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T11:47:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்திய வம்சாவளி வீட்டு உரிமையாளர் கைது: பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-lady-arrested-in-canada-harrass-tenant-1789385020"></link>
            <id>https://canadamirror.com/article/indian-lady-arrested-in-canada-harrass-tenant-1789385020</id>
            <summary type="text">Indian landlady in Canada held after harassing tenant: கனடாவில் தன் வீட்டில் குடியிருப்பவருக்கு தொல்லை கொடுத்ததாக இந்திய வம்சாவளிப்பெண்ணொருவர் கைது செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian landlady in Canada held after harassing tenant: கனடாவில் தன் வீட்டில் குடியிருப்பவருக்கு தொல்லை கொடுத்ததாக இந்திய வம்சாவளிப்பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

கனடாவில், தன் வீட்டு உரிமையாளர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக புகாரளித்துள்ள கனேடியர் ஒருவர், அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
</p><h3>
வீட்டில் குடியிருப்பவருடன் பிரச்சினை</h3><p>

ராஜ் திவானா என்னும் இந்திய வம்சாவளியினரான பெண், தனது வீட்டை கனேடியர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef5a84a1-40f3-4e56-a47c-66a0b9493912/26-6aa7d93e0bda9.webp' /></p><p>
ஆனால், அந்தக் கனேடியர் தான் வாடகைக்கு வசிக்கும் வீட்டில் தான் பார்பிக்யூ பயன்படுத்தியதைத் தொடர்ந்து பிரச்சினை உருவானதாக தெரிவித்துள்ளார்.</p><p>

பார்பிக்யூ பயன்படுத்துவதால் வீட்டுச் சுவர்களில் கரி பிடிப்பதாக அந்தப் பெண் கூற, அது கரி அல்ல துரு என்று கூறியுள்ளார் அந்தக் கனேடியர்.
</p><p>
அவர் பார்பிக்யூ முறையில் உணவு தயாரிக்கும்போது திவானா தடுக்க முயல, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
</p><p>
இப்படியே திவானா தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவதாக குற்றம் சாட்டும் அந்தக் கனேடியர் அதற்கு ஆதாரமாக வீடியோக்களை வெளியிட, ஒரு கட்டத்தில் பொலிசார் திவானாவைக் கைது செய்துள்ளார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T11:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் நிலைகுலைந்த விமானம் ; அச்சத்தில் அலறிய பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/plane-loses-control-mid-air-passengers-panic-1789383740"></link>
            <id>https://canadamirror.com/article/plane-loses-control-mid-air-passengers-panic-1789383740</id>
            <summary type="text">இஸ்தான்புல்லில் இருந்து துனிசியா நோக்கி பயணித்த துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், கடந்த 10 ஆம் திகதி மோசமான வானிலையால் நடுவானில் திடீரெனக் கீழே இறங்கியதில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்தான்புல்லில் இருந்து துனிசியா நோக்கி பயணித்த துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், கடந்த 10 ஆம் திகதி மோசமான வானிலையால் நடுவானில் திடீரெனக் கீழே இறங்கியதில் பயணிகள் பெரும் பீதியடைந்தனர்.
</p><p>
துனிஸ்-கார்த்தேஜ் சர்வதேச வானூர்தி நிலையத்தை அடையும் போது TK 661 என்ற இந்த விமானம் கடுமையான சூறாவளி மற்றும் சீரற்ற வானிலையை எதிர்கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bf56c03-ab97-425c-b64a-debd9eac4525/26-6aa7d43ea59c4.webp' /></p><p>
</p><p>
விமானத்தை தரையிறக்க விமானி 3 முறை முயன்ற போதிலும், பலத்த காற்றினாலும் புயலினாலும் விமானம் கடுமையாகக் குலுங்கி, திடீரெனக் கீழே சரியத் தொடங்கியது.
</p><p>
இதன்போது, விமானத்தில் இருந்த பயணிகள் "நாங்கள் இறக்கப் போகிறோம்" என்று அச்சத்தில் அலறியுள்ளனர். </p><p>இது தொடர்பான காட்சிகளை மேரினா மைஸ்காயா என்ற பெண் பயணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியாகப் பகிர்ந்துள்ளார்.</p><p>

பயணிகளின் கடும் பீதி மற்றும் கோரிக்கையைத் தொடர்ந்து, விமானம் துனிஸ் நகருக்கு தெற்கே 60 மைல் தொலைவில் உள்ள என்பிதா-ஹம்மாமெட் சர்வதேச விமான நிலையத்துக்குத் திருப்பி விடப்பட்டு, பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-14T11:02:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆண்டுகள் உறைந்திருந்த கரு மூலம் குழந்தை பிரசவித்த 54 வயது பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/54-year-old-woman-gives-birth-frozen-embryo-1789380066"></link>
            <id>https://canadamirror.com/article/54-year-old-woman-gives-birth-frozen-embryo-1789380066</id>
            <summary type="text">கிரேக்கத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் (Frozen Embryo) வைக்கப்பட்டிருந்த கரு மூலம் 54 வயது பெண் ஒருவர் பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரேக்கத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் (Frozen Embryo) வைக்கப்பட்டிருந்த கரு மூலம் 54 வயது பெண் ஒருவர் பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.</p><p>

கிரேக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா ரப்தி-ட்செலேபி (54) - கொன்ஸ்டான்டினோஸ் ரப்திஸ் (60) தம்பதியின் 21 வயது மகன் ஜியோர்ஜோஸ், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடந்த வீதி விபத்தொன்றில் உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd7fd9e9-8b11-4c54-83d0-e44bebe738e6/26-6aa7c5e3cfb16.webp' /></p><p>

மகனின் பிரிவால் துயருற்ற தம்பதியினர், மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க தீர்மானித்தனர்.

இதற்காக, 22 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த கருவை பயன்படுத்த முடிவு செய்தனர்.</p><p>

இருப்பினும், கிரேக்கத்தில் 54 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை அளிக்க சட்டப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>

வயது வரம்பை எட்டிய நிலையில் இருந்ததால், அந்த நாட்டின் தேசிய இனப்பெருக்க மருத்துவ அதிகார சபையிடம் விசேட அனுமதி பெற்று, ஏதென்ஸில் உள்ள மருத்துவமனையில் கிறிஸ்டினா 3.49 கிலோகிராம் எடையில் பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
</p><p>
உயிரிழந்த தங்கள் மகனின் நினைவாக இந்தக் குழந்தைக்கு 'ஜோர்ஜியா' என அவர்கள் பெயரிட்டுள்ளனர்.
</p><p>
22 ஆண்டுகள் பழமையான கரு மூலம் குழந்தை பிறந்தமை மருத்துவ உலகில் அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தநிலையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கிரேக்கத்தில் நிலவும் பிறப்பு விகிதக் குறைவைக் கருத்திற்கொண்டு, IVF சிகிச்சைக்கான 54 வயது வரம்புச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அந்த நாட்டு மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-14T10:10:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரிஸ் ஜோன்சன் புறப்பட்ட சில நிமிடங்களில் ட்ரோன் தாக்குதல் ; உக்ரைனை அதிர வைத்த ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drone-attack-minutes-after-boris-johnson-left-1789368500"></link>
            <id>https://canadamirror.com/article/drone-attack-minutes-after-boris-johnson-left-1789368500</id>
            <summary type="text">உக்ரேன்–போலந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள யஹோடின் ரயில் நிலையப் பகுதியில், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரேன்–போலந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள யஹோடின் ரயில் நிலையப் பகுதியில், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் பயணித்த ரயில் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கீவில் நடைபெற்ற ‘யால்டா ஐரோப்பிய உத்தி’ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, தூதுவர்களுக்கான ரயில் மூலம் போலந்து நோக்கிப் பயணித்த உயர்மட்டக் குழுவினரையே குறித்த தாக்குதல் இலக்கு வைத்திருக்கலாம் என உக்ரேனின் ரயில் நிறுவனமான ‘உக்ர்சலிஸ்னிட்சியா’ குற்றம் சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f5167d8-5607-4190-ba4d-1d0b3028b8b3/26-6aa798b6025d6.webp' /></p><p>
</p><p>
ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தலினால், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் உள்ளிட்டோர் பயணித்த தூதுவர் ரயில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே யஹோடின் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.</p><p>


அந்த ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற சில நிமிடங்களிலேயே, அதே பாதையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயிலின் இயந்திரத்தின் மீது ரஷ்ய ட்ரோன் ஒன்று மோதி வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தாக்குதலுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
</p><p>
இதேவேளை, யஹோடின் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ரயிலில் அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ பணிப்பாளர் டேவிட் பெட்ரேயஸ் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், அவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதல் தொடர்பாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

</p><p>
போலந்து எல்லைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரேனிய ரயில் இயந்திரத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஏன் தாக்கினார் என்பது தனக்குப் புரியவில்லை என்றும், உக்ரேனிய மக்கள் தினமும் எதிர்கொள்ளும் ‘அர்த்தமற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு’ இது மற்றுமொரு சான்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், உக்ரேனுக்குத் தேவையான வான் பாதுகாப்பு அமைப்புகளை மேலைத்தேய நாடுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இதனிடையே, “நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வாசற்படியில் புட்டின் நடத்தும் பயங்கரவாதத்தின் ஒலிப்பே இது” என உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


எல்லைக்கு மிக அருகில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அவசரப் பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
</p><p>
நேட்டோ எல்லையிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இச்சம்பவம் ஐரோப்பிய பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T09:39:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தளத்தை உளவு பார்த்ததா சீனா ; ட்ரம்ப் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/did-china-spy-on-a-us-base-1789375052"></link>
            <id>https://canadamirror.com/article/did-china-spy-on-a-us-base-1789375052</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் அமெரிக்க நிலைகள் மீது நடத்திய சமீபத்திய தாக்குதலின்போது, ஜோர்டானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் செயற்கைக்கோள் படங்களை சீன உளவு அமைப்புகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் அமெரிக்க நிலைகள் மீது நடத்திய சமீபத்திய தாக்குதலின்போது, ஜோர்டானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் செயற்கைக்கோள் படங்களை சீன உளவு அமைப்புகள் ஈரானுக்கு வழங்கியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>



கடந்த ஜூலை 17ஆம் திகதி ஜோர்டானில் உள்ள முவஃபாக் சால்டி விமானப்படைத் தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டிருந்த நிலையில், ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9126a7b2-948f-4dbb-8c99-8009850b0993/26-6aa7b24dc1427.webp' /></p><p> </p><p>இந்தத் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.



இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, குறித்த அமெரிக்க இராணுவத் தளம் தொடர்பான செயற்கைக்கோள் படங்களை சீன அமைப்புகள் ஈரானுக்கு வழங்கியதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. </p><p>எனினும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சீன அமைப்புகளின் பெயர்களை அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை.
</p><p>


இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா அமெரிக்காவை உளவு பார்ப்பதாகக் கூறப்படும் தகவல்களை மறுக்கவில்லை.</p><p> “அவர்கள் நம்மை உளவு பார்க்கிறார்கள். நாங்களும் அவர்களை உளவு பார்த்து வருகிறோம். அவர்களும் அதையே செய்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>


இதனிடையே, செயற்கைக்கோள் படங்களை ஈரானுக்கு வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சீன அதிகாரிகள் கேட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>அதேவேளை, ஈரானுக்கு சீனா உளவுத் தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை சீன தரப்பு ஏற்கவில்லை.



ஈரானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய வேண்டாம் என சீனாவை ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். </p><p>மேலும், ஈரானுக்கு உதவியதாகக் கூறி சீனாவைச் சேர்ந்த 3 செயற்கைக்கோள் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடையும் விதித்துள்ளது.
</p><p>


ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளியான சீனா, அந்நாட்டின் பெருமளவிலான எண்ணெய் உற்பத்தியை கொள்முதல் செய்து வருவதுடன், ஈரானுக்கு ஆதரவளிக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது.</p><p>



இந்நிலையில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி வெள்ளை மாளிகைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த உளவுக் குற்றச்சாட்டு அமெரிக்கா - சீனா இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T08:37:50+00:00</updated>
        </entry>
    </feed>
