<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-25T11:18:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் விமானம் மோதி ஊழியர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/montreal-airport-worker-seriously-injured-1787656010"></link>
            <id>https://canadamirror.com/article/montreal-airport-worker-seriously-injured-1787656010</id>
            <summary type="text">மொண்ட்ரியால்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் விமானம் மோதியதில், விமான நிலைய ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொண்ட்ரியால்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் விமானம் மோதியதில், விமான நிலைய ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மொண்ட்ரியால் காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>மாலை 7:30 மணியளவில், விமான நிலையத் தாரைத்தளத்தில் பின்னோக்கி நகர்ந்துகொண்டிருந்த விமானம் ஒன்று மோதியதில் ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
</p><p>தகவல் கிடைத்ததும் அவசர உதவிக் குழுவினர் விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5c2397b-e995-404e-89e8-1cb4113f8780/26-6a8d774c5485d.webp' /></p><p>
இந்தச் சம்பவம் குறித்த விசாரணை, கனடாவின் வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மொண்ட்ரியால் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>
சம்பவம் நடந்த இடத்தில் என்ன நிகழ்ந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய, காவல்துறையினரும் தடயவியல் நிபுணர்களும் தளத்தில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>இந்தச் சம்பவத்திற்கு இடையிலும் விமான நிலையத்தின் இயல்புச் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p> 
எனினும், பயணிகள் தங்களது விமானங்களின் நிலையைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் மூலம் நேரடியாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு மொண்ட்ரியால் விமான நிலைய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T11:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிராண்ட் செஸ் இறுதிப் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tamil-nadu-player-praggnanandha-wins-grand-chess-1787656077"></link>
            <id>https://canadamirror.com/article/tamil-nadu-player-praggnanandha-wins-grand-chess-1787656077</id>
            <summary type="text">கிராண்ட் செஸ் தொடரின் அரைஇறுதியின் 2-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.



ஜெர்மனியின் வின் சென்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிராண்ட் செஸ் தொடரின் அரைஇறுதியின் 2-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
</p><p>


ஜெர்மனியின் வின் சென்ட் கீமர் உடன் நடந்த இந்த போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 55-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5e81276-d983-4adb-9a92-c8b8e3b613b7/26-6a8d778f2f608.webp' /></p><p>அமெரிக்க வீரர்களான பேபியானோ கருணா-வெஸ்லி சோ இடையிலான அரைஇறுதியின் 2-வது ஆட்டம் 50வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது.</p><p> 



கிளாசிக்கல் ஆட்டம் முடிவில் பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையுடன் இறுதிப்போட்டியை நெருங்கியுள்ளார்.



கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. </p><p>



இந்த போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் 4 வீரர்கள் நேரடியாக அரை இறுதியில் மோதுகிறார்கள். </p><p>



ஒவ்வொரு அரைஇறுதியும் 2 கிளாசிக்கல், 2 ரேபிட், 4 பிளிட்ஸ் ஆட்டங்கள் கொண்டதாகும். 



மொத்தம் 28 புள்ளிகள் கொண்ட அரைஇறுதியில் 15 புள்ளிகள் எடுப்பவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்.</p>]]></content>
            <updated>2026-08-25T11:08:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா-அமெரிக்க எல்லை வர்த்தகப் போர்: 50% வரி விதிப்பால் பதற்றம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/border-communities-brace-for-more-fallout-1787655276"></link>
            <id>https://canadamirror.com/article/border-communities-brace-for-more-fallout-1787655276</id>
            <summary type="text">கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார மோதல் தீவிரமடைந்துள்ளது.

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார மோதல் தீவிரமடைந்துள்ளது.
</p><p>
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்புக்கு எதிராக டாலருக்கு டாலர் என்ற முறையில் நாங்களும் பதிலடி வழங்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
</p><p>
கார் வாகனங்கள், உதிரிபாகங்கள் மற்றும் உருக்கு மீது வரும் ஜனவரி 1 முதல் 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a46e7ca-e307-47e9-8ec6-d65799c2e44d/26-6a8d746ea3cad.webp' /></p><p>
</p><p>
ஒன்ராறியோ மாகாணத்தின் சாம்ரியா நகரின் மேயர் மைக் பிராட்லி, இந்த வர்த்தக மோதல் உள்ளூர் தொழில்துறையையும் வேலைவாய்ப்புகளையும் கடுமையாக பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.</p><p> 

பிளாஸ்டிக் உள்ளிட்ட பல ஏற்றுமதிப் பொருட்கள் இதனால் பாதிக்கப்படலாம் என்றார்.
</p><p>
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண ஆளுநர் கிரெட்சன் விட்மர் மற்றும் நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் ஆகியோர், இந்த வர்த்தகப் போர் இரு நாட்டு குடும்பங்கள், வணிகங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையை பாதிக்கும் எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>
செப்டம்பர் 8 முதல் கனடாவின் பதிலடி வர்த்தக வரிகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதாரச் சூழல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T11:01:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டனில் வரலாறு காணாத வறட்சி ; நீர் சேமிப்புக்கு அரசு புதிய ஆலோசனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/britain-faces-unprecedented-water-conservation-1787654412"></link>
            <id>https://canadamirror.com/article/britain-faces-unprecedented-water-conservation-1787654412</id>
            <summary type="text">பிரிட்டனில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, நீரை சேமிக்கும் வகையில் அரிசி கழுவுவதை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அரசு வழங்கியுள்ளது.ஐரோப்பாவில் ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரிட்டனில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, நீரை சேமிக்கும் வகையில் அரிசி கழுவுவதை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அரசு வழங்கியுள்ளது.</p><p>ஐரோப்பாவில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக, பிரிட்டனில் நீர்நிலைகள் வறண்டு பெரும்பாலான பகுதிகள் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளன.</p><p> இதனால், அங்கு நீரை சேமிக்க பொதுமக்களுக்கு புதிய விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அதன் ஒரு பகுதியாக, ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அரிசி கழுவுவதை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9d25cd9-1563-4e40-b8f0-0f9e746caee8/26-6a8d710e25c13.webp' /></p><p>ஆசிய சமூகத்தினர் பிரிட்டனில் அதிகளவில் வசித்து வரும் நிலையில், அவர்கள் சமைப்பதற்கு முன், அரிசியை 5 - 7 முறை கழுவும் பழக்கத்தை கொண்டுள்ளதால், இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக, மலேஷியாவைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் பிங் கூம்ப்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>

அரிசியை இரண்டு முறை மட்டும் கழுவினால் போதுமானது என்றும், இதன் மூலம் ஒவ்வொரு முறையும் 5 லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என்றும், 'வீடியோ' மூலம் பிங் கூம்ப்ட்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
</p><p>

அரிசி கழுவிய நீரை செடிகளுக்கு ஊற்றலாம் என்றும், அழகு சாதனப் பொருளாக முகத்திற்கும், தலைமுடிக்கு ஸ்பிரே செய்ய பயன்படுத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
</p><p>

இதேபோன்று, முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்னர் செய்யும் துாய்மை சடங்கான 'உது'விற்கு, 6 - 12 லிட்டர் வரை தண்ணீர் செலவாவதாகவும், குறைந்த தண்ணீரை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. </p><p>இந்த விழிப்புணர்வு பிரசாரங்களுக்கு, பிரிட்டன் அரசு அமைப்பான 'ஆப்வாட்' மூலம், 3.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
</p><p>

நாட்டில் உள்ள குழாய்களில் ஏற்படும் கசிவுகள் மூலமாகவே தினமும், 300 கோடி லிட்டர் தண்ணீர் வீணாகி வரும் நிலையில், பொதுமக்களுக்கு மட்டும் அறிவுரை வழங்குவது நியாயமா என்ற கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-25T10:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமன் அருகே சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missile-attack-on-oil-tanker-near-oman-1787653305"></link>
            <id>https://canadamirror.com/article/missile-attack-on-oil-tanker-near-oman-1787653305</id>
            <summary type="text">ஓமன் அருகே அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், கப்பலின் எஞ்சின் அறை கடுமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓமன் அருகே அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், கப்பலின் எஞ்சின் அறை கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஓமனின் அஷ் ஷிஷான் நகரில் இருந்து சுமார் 9 நாட்டிகல் மைல் தொலைவில், ஹர்முஸ் ஜலசந்திக்கு அருகே கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற கப்பலை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac6b07d5-1f2a-4954-9b0b-207137d61da0/26-6a8d6cbb1a695.webp' /></p><p>தாக்குதலின் போது கப்பலின் எஞ்சின் அறை முழுமையாக சேதமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் ஓமன் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
எனினும், குறித்த கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
முன்னதாக, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, ஈரான் இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாகவும் அறிவித்திருந்தது. </p><p>மேலும், அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் சரக்கு மற்றும் கச்சா எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இதேவேளை, ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும் ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளில் பயணிக்கும் சரக்கு மற்றும் கச்சா எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.</p><p>

இந்த நிலையில், ஓமன் அருகே இடம்பெற்றுள்ள புதிய ஏவுகணைத் தாக்குதல் சம்பவம், மத்திய கிழக்கு கடற்பரப்பில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T10:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் சூறாவளி தாக்குதல் ; கர்ப்பிணி பெண் உட்பட 41 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tornado-france-41-people-injured-pregnant-woman-1787652206"></link>
            <id>https://canadamirror.com/article/tornado-france-41-people-injured-pregnant-woman-1787652206</id>
            <summary type="text">பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக கர்ப்பிணி பெண் உட்பட 41 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 15 பேர் வைத்தியசாலையில் சிகிச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக கர்ப்பிணி பெண் உட்பட 41 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 15 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
தென்மேற்கு பிரான்ஸின் பொமாஸ் கிராமத்தில் நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் மணிக்கு 117 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றுடன் சூறாவளி வீசியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b35f5854-f2c0-4160-b0b0-a2945f1778ae/26-6a8d687018036.webp' /></p><p>சுமார் 1,000 பேர் வசிக்கும் இந்தக் கிராமம் சூறாவளியின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சுமார் 300 வீடுகள் சேதமடைந்துள்ளன.</p><p> மேலும், பல மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளதோடு, பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன.</p><p>

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
</p><p>
இதன்போது காயமடைந்த 41 பேர் மீட்கப்பட்ட நிலையில், கர்ப்பிணி பெண் உட்பட 15 பேர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca27bbff-06c4-4efe-8e14-7732b12a5414/26-6a8d6870bc603.webp' /></p><p>

இதேவேளை, பைரனீஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட ஆலங்கட்டி மழை காரணமாக தென்மேற்கு பிரான்ஸில் நடைபெறவிருந்த வுல்டா எஸ்பானா சைக்கிள் பந்தயமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>

மேலும், போர்டோ, மார்சேய், நைஸ் மற்றும் துலூஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் கடுமையான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகளும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> இந்த அனர்த்தம் தென்மேற்கு பிரான்ஸில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T10:03:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் புதிய மிரட்டல்; அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர் தீவிரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-canada-trade-war-intensifies-1787635466"></link>
            <id>https://canadamirror.com/article/us-canada-trade-war-intensifies-1787635466</id>
            <summary type="text">&amp;nbsp; கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
</p><p>
 கனடாவிலிருந்து வரும் சிற்றுந்துகள், கனரக வாகனங்கள், மற்றும் வாகனங்களின் உதிரி பாகங்கள் மீதான வரியை ஜனவரி 1 முதல் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/081963f2-9189-4638-858b-cb702ac79eea/26-6a8d270d4f86d.webp' /></p><h2>வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வி</h2><p>கடந்த வார இறுதியில் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடைசி நேரத்தில் இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைத்ததாக பரஸ்பரம் குற்றம் சாட்டின</p><p>.

 ட்ரம்ப்பின் இந்த புதிய வரி அச்சுறுத்தல் தனக்கு வியப்பளிக்கவில்லை என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கர்னி, கனடாவின் வாகன உற்பத்தியைக் அழிக்க ட்ரம்ப் நினைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா "சரியான அணுகுமுறையுடன்" வந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த கனடா தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>

 அத்துடன் பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆரம்பிப்பதற்கான எந்த குறிப்பிட்ட திகதியும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் இரண்டு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்.
</p><p>
கிட்டத்தட்ட 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது 50வீத வரி விதிக்கும் அமெரிக்காவின் கெடுவை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று கனடா பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறி இருந்தமை குரிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T09:28:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது - இஸபெலா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/northern-governor-requested-to-diaspora-1787649367"></link>
            <id>https://canadamirror.com/article/northern-governor-requested-to-diaspora-1787649367</id>
            <summary type="text">கனடாவில், ஈழத் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என&amp;nbsp;இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண மருத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், ஈழத் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என&nbsp;இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் தெரிவித்துள்ளார்.</p><p>வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.</p><p>இந்த நிகழ்வில் இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் மற்றும் வட மாகாண ஆளுநர் என். வேதநாயகன், இந்த குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை நன்கொடையாளர்கள்&nbsp; உள்ளிட்ட பலர் பங்கேற்று இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f666a7b6-61e7-4e9d-996b-544f447aea32/26-6a8d5f29a3b3b.webp' /></p><p>இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்த இலங்கையர்கள் அந்நாட்டுக்கு பல்வேறு வகையில் சேவைகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான கனடிய தூதுவர் இஸபெல்லா மார்டின் தெரிவித்துள்ளார்.
</p><p>
கனடாவின் வெற்றிக்கு புலம்பெயர் இலங்கையர்களின் பங்களிப்பு மகத்துவமானது என அவர் தெரிவித்துள்ளார்.</p><p> இவ்வாறு கனடிய புலம்பெயர் தமிழர்கள் தாயகத்திற்கு கொடைகளை வழங்குவதும் தங்களது திறமைகளை வழங்குவதும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
கனடாவில் பெற்றுக் கொண்டவற்றை தாயக சமூகத்திற்கு வழங்குவது போற்றுதற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தத் தருணம் பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருவதாக அவர் குறிப்பிடுகின்றார். </p><p>கனடாவின் சார்பில் இந்த நன்கொடை வழங்குவதற்கு வழங்கும் நிகழ்வுடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p>
</p><p>இதேவேளை, கனடிய வாழ் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஈழத்து தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாக வட மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.</p><p>கனடாவில் கடின உழைப்பில் பெற்றுக் கொள்ள பட்ட பணம் தாயகத்தில் தேவைகள் உடையவருக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
புலம்பெயர் சமூகத்திடம் தாம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
புலம்பெயர் சமூகத்தினர் தாயகத்திற்கு தொழில்நுட்பத்தையும் அறிவையும் வழங்க முடியும் எனவும் மருத்துவமனைகளுக்கு உதவுமாறு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
எமது மருத்துவமனைகளுக்கு காணப்படும் முக்கியமான தேவைப்பாடுகளை கண்டறிந்து பேண்தகு அடிப்படையில் அவற்றை பூர்த்தி செய்யுமாறு புலம்பெயர் சமூகத்திடம் கோருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>
கடந்த காலங்களில் புலம்பெயர் சமூகத்தினர் இலங்கையில் முதலீடு செய்வதில் எதிர்நோக்கிய நிர்வாக மற்றும் ஏனைய சிக்கல்களை களைவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.</p><p>
வட மாகாணத்தை முதலீடுகளுக்கு சிறந்த ஓர் மாகாணமாகவும் சமூக பொறுப்புடைய ஒரு மாகாணமாகவும் மாற்றுவதற்கு முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
கொடையாளர்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டுமே பெருந்தொகை பணத்தை நம்பி கொடுப்பார்கள் எனவும் தற்போதைய சமூகத்தில் ஏமாற்று பேர்வழிகள் இருக்கிறார்கள் எனவும் இந்த கொடையாளி மீது நம்பிக்கை கொண்டு பெருந்தொகை பணம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>நன்கொடையாளர்களின் சேவை தொடர வேண்டும் எனவும் வடமகாணத்திற்கு தொடர்ந்து சேவைகள் ஆற்றப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:27:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B விசா கட்டணத்தை உயர்த்த அமெரிக்கா நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-moves-to-raise-h-1b-visa-fees-1787646103"></link>
            <id>https://canadamirror.com/article/us-moves-to-raise-h-1b-visa-fees-1787646103</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; புதிய H-1B விசாக்களுக்கு 103,265 அமெரிக்க டொலர் கட்டணம் விதிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய விதிமுறையை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; புதிய H-1B விசாக்களுக்கு 103,265 அமெரிக்க டொலர் கட்டணம் விதிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய விதிமுறையை முன்மொழிந்துள்ளது.
</p><p>
முன்னதாக தற்காலிகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தக் கட்டணம், நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக தற்போது வசூலிக்க முடியாத நிலையில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e43077b-cf27-4316-b362-8898a4911a00/26-6a8d5099a2fd6.webp' /></p><h2>செப்டெம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ள&nbsp; கட்டண நடைமுறை </h2><p> 

 H-1B விசா தற்காலிக கட்டண நடைமுறை செப்டெம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ள நிலையில், அதனை நிரந்தரமாக்கும் நோக்கில் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் இந்த புதிய விதிமுறையை முன்வைத்துள்ளது.</p><p>

புதிய கட்டணம் நடைமுறைக்கு வந்தால், தொழில்நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் வெளிநாட்டு பணியாளர்களை நியமிக்கும் அமெரிக்க நிறுவனங்களின் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

எனினும், அமெரிக்காவில் ஏற்கனவே மாணவர் விசாவில் தங்கியிருப்பவர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாக்களுக்கும், ஏற்கனவே உள்ள விசாக்களைப் புதுப்பிப்பதற்கும் இந்தக் கட்டணம் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் கட்டணத்தை எதிர்த்து அமெரிக்க வர்த்தக அமைப்புகள், சில மாநில அரசுகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
</p><p>
இந்தநிலையில், H-1B திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 65,000 விசாக்களும், உயர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்களும் வழங்கப்படுகின்றன.
</p><p>
கடந்த ஆண்டு H-1B விசாக்களுக்காக அமெரிக்க நிறுவனங்கள் சுமார் 344,000 விண்ணப்பங்களைப் பதிவு செய்திருந்ததாக அமெரிக்க குடியகல்வு மற்றும் குடிவரவு சேவைத் தரவுகள் தெரிவிக்கின்றன. </p><p>இது 2024ஆம் ஆண்டை விட 25 சதவீதத்துக்கும் அதிகமான வீழ்ச்சியாகும்.

மேலும், H-1B விண்ணப்பதாரர்களுக்கான விசாரணை மற்றும் பின்னணி சரிபார்ப்பு நடவடிக்கைகளை அமெரிக்க நிர்வாகம் கடுமையாக்கியுள்ளது.</p><p>அத்துடன், அதிக திறன் கொண்ட மற்றும் அதிக ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கும் புதிய விசா தேர்வு முறையையும் முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகின்றது</p>]]></content>
            <updated>2026-08-25T08:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர நேரத்தில் வெளியேற முடியாத அபாயம் ; சீனாவில் 30 லட்சம் டெஸ்லா கார்கள் மீளப்பெறல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/3-million-tesla-cars-recalled-in-china-1787639118"></link>
            <id>https://canadamirror.com/article/3-million-tesla-cars-recalled-in-china-1787639118</id>
            <summary type="text">அவசர காலங்களில் வாகனங்களில் இருந்து வெளியேறுவதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய உட்புறக் கதவு கைப்பிடிகள் அமைப்பு காரணமாக, சீனாவில் சுமார் 3 மில்லியன் டெஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசர காலங்களில் வாகனங்களில் இருந்து வெளியேறுவதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய உட்புறக் கதவு கைப்பிடிகள் அமைப்பு காரணமாக, சீனாவில் சுமார் 3 மில்லியன் டெஸ்லா சிற்றூந்துகளை திரும்பப் பெறுவதாக அந்த நாட்டின் தேசிய சந்தை ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
</p><p>
சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட Model 3, Model Y, Model X மற்றும் Model S வகைகளைச் சேர்ந்த சுமார் 2.98 மில்லியன் டெஸ்லா மின்சார வாகனங்கள் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c38a2641-0ae7-4be0-b975-47db9b0ae149/26-6a8d354f8705c.webp' /></p><p>எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் இந்த மீளப் பெறும் நடவடிக்கை தொடங்கவுள்ளது.
</p><p>
விபத்துகள் போன்ற தீவிரமான அவசரச் சூழ்நிலைகளில் வாகனத்தின் குறைந்த மின் அழுத்த அமைப்பு செயலிழந்தால், உட்புறக் கதவு கைப்பிடிகள் இருக்கையின் நிறத்துடனேயே ஒத்துப் போவதால் அவற்றைக் கண்டறிந்து இயக்கச் சிரமமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால் பயணிகள் உடனடியாக வெளியேறுவதோ அல்லது வெளியில் உள்ளவர்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்வதோ தடைபடலாம் என்று அந்த ஆணைக்குழு எச்சரித்துள்ளது.</p><p>

டெஸ்லாவைத் தவிர, சியோமி, எக்ஸ்பெங், ஜியோகி, செரி, லீப்கோட்டார் மற்றும் BAIC உள்ளிட்ட மேலும் எட்டு முன்னணிச் சீன வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் இதே போன்ற பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாகத் தங்கள் சிற்றூந்துகளை மீளப் பெறுவதாக அறிவித்துள்ளன.
</p><p>
பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், கைப்பிடிகள் அருகே எச்சரிக்கை ஸ்டிக்கர்களை இலவசமாக ஒட்டுவதுடன், விபத்துக்குப் பிறகு சாளரங்களை தானாக இறக்கும் வசதிக்காக மென்பொருள் மேம்படுத்தல்களையும் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
</p><p>
சமீபகாலமாக நவீன சிற்றூந்துகளின் வடிவமைப்பு முறைகளால் விபத்து நேரங்களில் ஏற்படும் சிக்கல்கள் குறித்துச் சீனாவில் பாதுகாப்பு அச்சங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T06:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[47 ஆண்டுகளுக்குப் பின் பயங்கரவாத பட்டியலில் இருந்த சிரியாவை நீக்கிய அமெரிக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-removes-syria-terrorism-list-after-47-years-1787637374"></link>
            <id>https://canadamirror.com/article/us-removes-syria-terrorism-list-after-47-years-1787637374</id>
            <summary type="text">&amp;nbsp; 47 ஆண்டுகளுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது. 

இதன் மூலம், அந்நாட்டில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 47 ஆண்டுகளுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது. </p><p>

இதன் மூலம், அந்நாட்டில் தனியார் துறை முதலீட்டிற்கும், உலகப் பொருளாதாரத்துடன் அது மீண்டும் இணைவதற்கும் இருந்த "இறுதி முக்கிய தடைகள்" நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1f43599-ecff-4c47-90a9-7eb4a2883454/26-6a8d2e80f3d6a.webp' /></p><h2>சிரிய அரசாங்கத்தின் நேர்மறையான நடவடிக்கை</h2><p>
</p><p>
சர்வதேச பயங்கரவாதச் செயல்களிலிருந்து முழுமையாக விலகி இருப்பதற்கான சிரிய அரசாங்கத்தின் நேர்மறையான நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் விதமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
</p><p>
அல்-கொய்தாவின் கிளை அமைப்பொன்றின் தலைவராக இருந்தபோது, ​​ஒரு காலத்தில் அமெரிக்காவால் தேடப்படும் நபராக (தலைக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டவராக) இருந்த முன்னாள் போராளியான அகமது அல்-ஷாராவை, சிரியாவின் புதிய அதிபராக டிரம்ப் நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
</p><p>
அவரது இஸ்லாமிய அமைப்பான 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' (HTS) அமைப்பும், அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.
</p><p>
முன்னர் 'அல்-நுஸ்ரா முன்னணி' (al-Nusra Front) என்று அழைக்கப்பட்ட HTS அமைப்பு, 2016-ல் ஷாரா அந்த ஜிஹாதி அமைப்பிலிருந்து தொடர்பை முறித்துக்கொள்ளும் வரை சிரியாவில் அல்-கொய்தாவின் ஒரு பிரிவாகச் செயல்பட்டு வந்தது.

2024-ன் பிற்பகுதியில், முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்தை பதவியிலிருந்து அகற்றிய கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு HTS தலைமை தாங்கியது; தற்போது ஷாராவின் இடைக்கால நிர்வாகத்தில் இவ்வமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.</p><p>

சிரியாவை ரஷ்யா அல்லது சீனாவின் செல்வாக்கு மண்டலத்திற்குள் செல்லவிடாமல், தங்கள் பக்கம் கொண்டுவர அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், சிரியாவில் இன்னும் பாதுகாப்பு நிலைமை சீராக இல்லாததும், அங்கு மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட அரசாங்கம் இல்லாததும் குறிப்பிடத்தக்க அபாயங்களாக உள்ளன.</p><p> அத்துடன், அண்டை நாடுகளான இஸ்ரேல் மற்றும் துருக்கிக்கு இடையிலான பதற்றங்களுக்கு மத்தியிலும் சிரியா ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது.

ஜூலை மாதத்திலேயே இதற்கான அறிகுறி தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திங்களன்று எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை சிரியாவிற்கு "வளர்ச்சியை நோக்கிய பாதையை" அமைத்துத் தரும் என்று ரூபியோ கூறினார்.
</p><p>
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், "இன்றைய நடவடிக்கை சிரியாவில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்த கூடுதல் முதலீடுகளை ஈர்க்க உதவும்," என்று தெரிவித்தார்.
</p><p>
அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனமான SANA-வின் தகவலின்படி, சிரிய வெளியுறவு அமைச்சர் அசாத் ஹசன் அல்-ஷைபானி இந்தச் செய்தியை ஒரு "வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை" என்று வரவேற்றார்.
</p><p>
"தனிமைப்படுத்தப்பட்ட நிலையால் ஏற்பட்ட விளைவுகளை நீக்கவும், வெளிப்படைத்தன்மை, பரஸ்பர நலன்கள் மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சூழலை உருவாக்கவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்," என்று அவர் கூறினார்.</p><p>

கடந்த ஆண்டு, HTS அமைப்பை 'வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு' என்று வகைப்படுத்தியிருந்ததை அமெரிக்கா ரத்து செய்ததுடன், 'குறிப்பிட்ட உலகளாவிய பயங்கரவாதிகள்' பட்டியலிலிருந்தும் ஷாராவை நீக்கியிருந்தது.</p><p>

1979-ம் ஆண்டு முதல் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்த சிரியா அதிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அந்தப் பட்டியலில் கியூபா, வட கொரியா மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.</p><p> இந்தப் பட்டியலில் இடம்பெறுவது நிதித் தடைகள், அமெரிக்காவின் வெளிநாட்டு உதவி மற்றும் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி மற்றும் விற்பனை மீதான கட்டுப்பாடுகளை உள்ளடக்கியது.&nbsp; அத்துடன், தடை விதிக்கப்பட்ட நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் பிற நாடுகளையும் இது தண்டனைக்கு உள்ளாக்கக்கூடும்.</p>]]></content>
            <updated>2026-08-25T05:53:36+00:00</updated>
        </entry>
    </feed>
