<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-23T00:37:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் உட்கட்டமைப்புகளுக்கு பேராபத்து ; ட்ரம்பின் மிரள விடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-issues-a-stark-warning-1784764492"></link>
            <id>https://canadamirror.com/article/trump-issues-a-stark-warning-1784764492</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பதில் வழங்கும் நோக்கில், ஈரானின் ஒரு பாலம் அல்லது மின் உற்பத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பதில் வழங்கும் நோக்கில், ஈரானின் ஒரு பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்கா தாக்கி அழிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். </p><p>

ஈரானியத் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை இலக்கு வைக்கவுள்ளதாக அவர் மீண்டும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20a65060-2700-4001-b7c2-d00ebcfdbb04/26-6a61584e4bd66.webp' /></p><p> </p><p>

இரு தரப்பிலும் பரஸ்பரத் தாக்குதல்கள் தீவிரமடைந்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைக்கால ஒப்பந்தம் சீர்குலைந்துள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இனிமேல், ஹோர்முஸ் நீரிணையில் ஏவுகணை, ரொக்கெட், ட்ரோன் அல்லது வேறு ஏதேனும் சாதனம் அல்லது ஆயுதம் மூலம் கப்பல்கள் மீது ஈரானிய இஸ்லாமியக் குடியரசு தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு முறையும், அமெரிக்கா இந்த நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அமெரிக்கா நேற்று (22) ஈரானின் மீது மற்றொரு கட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. </p><p>

தலைநகர் தெஹ்ரானில் ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள் பதில் தாக்குதல்களை நடத்தின. அதேவேளை, இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஜோர்தானிய நகரம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியாவிலும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p> 

இராஜதந்திர முயற்சிகளில் பெரிய அளவிலான முன்னேற்றம் எதுவும் தென்படாத நிலையில், ஈரானின் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ச்சியாக 11 ஆவது இரவாகவும் நீடித்துள்ளன. </p><p>

ஈரானியத் தாக்குதல்கள் காரணமாக பெருமளவில் முடங்கியுள்ள, சர்வதேச எரிபொருள் விநியோகத்திற்கு முக்கியமான பாதையான ஹோர்முஸ் நீரிணை தொடர்பான மோதலில் இரு தரப்பு அதிகாரிகளும் தீவிர நிலைப்பாட்டை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-22T23:54:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை ; காங்கோவில் தீவிரமெடுக்கும் எபோலா வைரஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/congo-ebola-death-toll-nears-1-000-1784754610"></link>
            <id>https://canadamirror.com/article/congo-ebola-death-toll-nears-1-000-1784754610</id>
            <summary type="text">எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோ மட்டுமின்றி உகாண்டா, லைபீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி வருகிறது.எபோலா ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோ மட்டுமின்றி உகாண்டா, லைபீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி வருகிறது.</p><p style="text-align: justify; ">எபோலா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் காங்கோ போன்ற நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb3b8e2a-56b5-47c9-91be-706cbede13bd/26-6a6131b4815d1.webp' /></p><p style="text-align: justify; ">999 பேர் பலி
இந்நிலையில், காங்கோவில் 2,473 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், எபோலா வைரஸ் பாதிப்பால் 999 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் காங்கோ சுகாதாரத்துறை திணறி வருகிறது.
</p><p style="text-align: justify; ">
எபோலா ஒரு அரிதான நோய், ஆனால் மிகவும் எளிதில் பரவக்கூடியது. வாந்தி, ரத்தம் உள்ளிட்ட உடல் திரவங்கள் வழியாக இந்நோய் பரவலாம். இது பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்த்தொற்று என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-22T21:10:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மோசமான குற்றச்சாட்டில் கைதான இலங்கையர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sickkids-doctor-arrested-on-child-sexual-abuse-1784740555"></link>
            <id>https://canadamirror.com/article/sickkids-doctor-arrested-on-child-sexual-abuse-1784740555</id>
            <summary type="text">கனடாவில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இலங்கையர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் முன்னணி குழந்தைகள் மருத்துவமனையான சிக்கிட்ஸ் மருத்துவமனயைில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இலங்கையர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
கனடாவின் முன்னணி குழந்தைகள் மருத்துவமனையான சிக்கிட்ஸ் மருத்துவமனயைில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான ஆபாசப் பொருட்களை வைத்திருந்ததுடன், அவற்றை அணுகியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் டொராண்டோ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
டொராண்டோ காவல்துறையின் இணைய சிறுவர் துஸ்பிரயோக தடுப்புப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68318c47-913c-4551-8988-43cb36a5fa29/26-6a60facd1e013.webp' /></p><p>
கடந்த ஜனவரி மாதம் மின்னணு சாதனம் ஒன்றின் மூலம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.
</p><p>அதனைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரி மாதம் சிக் கிட்ஸ் மருத்துவமனை மற்றும் சந்தேகநபரின் தனியார் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு, பணியிட கணினி உட்பட பல மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
இந்த வழக்கில், டொராண்டோவைச் சேர்ந்த 44 வயதான டிலான் திஸநாயக்க என்பவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.</p><p>
சிறுவர் பாலியல் துஷ்பிரயோக மற்றும் சுரண்டல் தொடர்பான ஆபாசப் பொருட்களை வைத்திருந்தது, அவற்றை அணுகி பயன்படுத்தியது, ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>இக்குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட மருத்துவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
</p><p>எனினும், மருத்துவராக அவர் மேற்கொண்ட பணிகளுக்கும் இந்த குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்புடைய எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை" என டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>விசாரணை தொடங்கிய தகவல் கிடைத்த உடனேயே, குற்றச்சாட்டுக்கு உள்ளான மருத்துவர் பணியிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T20:26:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ ; மக்கள் வெளியேற்ற உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/wildfires-intensify-across-the-united-states-1784746231"></link>
            <id>https://canadamirror.com/article/wildfires-intensify-across-the-united-states-1784746231</id>
            <summary type="text">அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அலமேடா கவுண்டி பகுதிக்குட்பட்ட பிளசண்டன் மற்றும் சுனோல் நகர எல்லைப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் &quot;லிட்டில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அலமேடா கவுண்டி பகுதிக்குட்பட்ட பிளசண்டன் மற்றும் சுனோல் நகர எல்லைப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் "லிட்டில் ஃபயர்" எனப் பெயரிடப்பட்ட காட்டுத் தீ திடீரெனப் பற்றி எரியத் தொடங்கியது.</p><p style="text-align: justify; "> கடும் வெப்பம், உலர்ந்த புற்பகுதிகள் மற்றும் வீசி வரும் பலத்த காற்றின் காரணமாக தீ மிக வேகமாகப் பரவி, குறுகிய நேரத்திலேயே 950 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைச் சாம்பலாக்கியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcb8d9b3-e211-46c4-bb7f-3780cebfb583/26-6a6110f93f074.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">

லிட்டில் வேலி சாலை மற்றும் ஹப்பார்ட் லேன் சந்திப்பு பகுதி ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 950 ஏக்கர் எரிந்துள்ள நிலையில், 10% மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">இந்நிலையில், தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். 

ரூபி ஹில் சொகுசு குடியிருப்பு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள சுனோல் பகுதி மக்களுக்கு உடனடி வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">சுமார் 4,900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலப்பரப்பில் புல்டோசர்கள் மற்றும் எஞ்சின்கள் மூலமும், வான்வழியாக சிறப்பு ஏர்-டேங்கர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமும் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. </p><p style="text-align: justify; ">அடர்ந்த புதர் மற்றும் மலைப்பகுதிகள் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T18:50:41+00:00</updated>
        </entry>
    </feed>
