<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-20T23:57:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[900த்தை கடந்த பலி எண்ணிக்கை ; ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தும் எபோலா பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ebola-death-toll-tops-900-in-africa-1784591183"></link>
            <id>https://canadamirror.com/article/ebola-death-toll-tops-900-in-africa-1784591183</id>
            <summary type="text">ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்றுக்கு இதுவரை 930 பேர் பலியானதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எபோலா பரவல் காங்கோ, சூடான் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்றுக்கு இதுவரை 930 பேர் பலியானதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எபோலா பரவல் காங்கோ, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. </p><p>உலகின் கொடிய தொற்றுகளில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா பரவலைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edc812b9-7ded-43ea-8c11-a40df22b5600/26-6a5eb35135f50.webp' /></p><p>
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,

நாடு முழுவதும் மொத்தம் 2,344 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 930 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இது ஒரே நாளில் பதிவான அதிகபட்ச இறப்பாகும்.


</p><p>மே 15 அன்று கிழக்கு காங்கோவில் அறிவிக்கப்பட்ட எபோலா நோய்ப் பரவலானது, இதுவரை இல்லாத அளவுக்கு மிக வேகமாகப் பரவிவருகின்றது.

எபோலா நோய்த் தொற்றுக்குக் காரணமான 'புண்டிபுக்யோ' (Bundibugyo) வைரஸ் ஒரு அரிதான வகையாகும். </p><p>இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ கண்டறியப்படவில்லை.

இந்த வைரஸை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையுடன் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை தொடங்கியுள்ளனர். </p><p>நிதிப் பற்றாக்குறை, சுகாதார மையங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் நோய்த்தொற்று பரவலின் மையப்பகுதியான கிழக்கு காங்கோவில் தொடர்ந்து கொண்டிருக்கும் மோதல்கள் ஆகியவை இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-20T23:46:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டம் ; எச்சரிக்கும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-warns-as-us-eyes-seizing-kharg-island-1784580848"></link>
            <id>https://canadamirror.com/article/iran-warns-as-us-eyes-seizing-kharg-island-1784580848</id>
            <summary type="text">எண்ணெய் வளம் கொண்ட கார்க் தீவை கைப்பற்ற தரை வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.

ஈரானின் கார்க் தீவில் உள்ள முக்கிய எண்ணெய் வளம் நிறைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>எண்ணெய் வளம் கொண்ட கார்க் தீவை கைப்பற்ற தரை வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.
</p><p>
ஈரானின் கார்க் தீவில் உள்ள முக்கிய எண்ணெய் வளம் நிறைந்த பகுதியை கைப்பற்ற அமெரிக்கா முயற்சிக்கும் என தகவல் வெளியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1046204d-1ff2-4c31-91bf-b398088676c6/26-6a5e8af272295.webp' /></p><p> இதற்காக, தரைவழி தாக்குதலை நடத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்ப்பின் உத்தரவின்பேரில் அதனை தன்னுடைய கட்டுக்குள் எடுத்து கொள்வதற்கான திட்டங்களில் அமெரிக்க ராணுவம் தீவிரத்துடன் ஈடுபட்டு வருகிறது.


</p><p>இதுபற்றி ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகே கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளார். </p><p>அமெரிக்க வீரர்கள் தரை வழியே தாக்குதலில் ஈடுபட்டால், அவர்களை வரவேற்பதற்காக ஈரான் மக்கள் தயாராக காத்திருக்கின்றனர். அமெரிக்க வீரர்கள் கடுமையான விளைவுகளை சந்திப்பார்கள். அவர்களின் வருகைக்காக அந்த பகுதிகளில் நிறைய பேர் ஆவலுடன் உள்ளனர் என கூறியுள்ளார்.</p><p>ஒருபுறம் ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம் என கூறி வந்தபோதிலும், மறுபுறம் படைகளை வான், கடல், தரை என பல வழிகளில் ஈரானை நெருக்கும் வகையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது என தகவல் வெளியானது.
</p><p>
இந்த சூழலில், தற்போது மீண்டும் ஈரானை தரை வழியே நெருங்க அமெரிக்கா முயற்சிக்கிறது என்று வெளியான தகவலை தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியாகி உள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T21:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்திற்கும் தயார் ; அமெரிக்காவிற்கு ஈரானின் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-warns-us-ready-for-any-situation-1784575498"></link>
            <id>https://canadamirror.com/article/iran-warns-us-ready-for-any-situation-1784575498</id>
            <summary type="text">ஈரானிய மண்ணில் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு ஊடுருவல் முயற்சியையும் நொடிப் பொழுதில் முறியடிக்கத் தயார் நிலையில் இருப்பதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய மண்ணில் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு ஊடுருவல் முயற்சியையும் நொடிப் பொழுதில் முறியடிக்கத் தயார் நிலையில் இருப்பதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

தங்களது தரைப்படை நவீன உபகரணங்கள், தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டுத் திறன்களைக் கொண்டு இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ள காவல்படை, அமெரிக்காவின் ஊடுருவல்களுக்கு எதிராக உயர்மட்டத் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99c5f253-f03a-41c6-8a17-3c29125503d7/26-6a5e760b8e1d1.webp' /></p><p>
</p><p>
இது குறித்து தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானிய ஆயுதப்படைகளின் தொடர்ச்சியான விழிப்புணர்வும் தயார் நிலையுமே நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், இந்தத் தயார் நிலை அனைத்துக் களங்களிலும் தீவிரமாகப் பின்பற்றப்படுவதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானியப் படைகள் எதிரிகளின் எந்தவொரு ஆக்கிரமிப்பையும் உடனடியாக முறியடிக்கத் தயார் நிலையில் உள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தரைப்படையின் துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ரூஹுல்லா நூரி சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-20T19:25:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல் மீது தாக்குதல்: 4 இந்தியர்கள் பலி;]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/four-indians-killed-in-attack-on-ship-leaving-1784567360"></link>
            <id>https://canadamirror.com/article/four-indians-killed-in-attack-on-ship-leaving-1784567360</id>
            <summary type="text">உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், மற்றொரு இந்தியர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>
கினியா-பிசாவு (Guinea-Bissau) நாட்டின் கொடியுடன் பயணித்த ‘கோல்டன் லியோ’) எனும் வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இக்கப்பலில் இந்தியா மற்றும் சிரியா நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.</p><p> 
ஞாயிற்றுக்கிழமையன்று இக்கப்பல் மீது ரஷ்யா 3 க்ரூஸ் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் கடற்படை தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7f76178-3749-4ff5-8f2f-ffbf8a2fab5e/26-6a5e5642e2aa6.webp' /></p><p> </p><p>
வணிகக் கப்பல்களை இலக்கு வைப்பதும், அப்பாவி சிவில் பணியாளர்களின் உயிர ஆபத்தில் தள்ளுவதும், கடல்சார் கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரத்தைத் தடுப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது என இந்தியா தெரிவித்துள்ளது.
</p><p>இத்தகைய தாக்குதல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையைக் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T18:46:43+00:00</updated>
        </entry>
    </feed>
