<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-13T15:50:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் கணவன் தாக்குதலை தடுத்ததால் தூக்கிலிடப்பட்ட 23 வயதான இளம் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/23-year-old-marzieh-nieri-hanged-in-iran-1786598914"></link>
            <id>https://canadamirror.com/article/23-year-old-marzieh-nieri-hanged-in-iran-1786598914</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.


அந்தத் தண்டனை 2026 ஆகஸ்ட் 8 அதிகாலை கஸ்வின் மத்திய சிறையில் நிறைவேற்றப்பட்டது.
</p><p>
குடும்ப அழுத்தத்தின் காரணமாக தனது 17-வது வயதில் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் நெய்ரி, 2021 அக்டோபரில் தனக்கு 18 வயதாக இருந்தபோது, மதுபோதையில் இருந்த தனது கணவரின் தொழில் கூட்டாளி ஒருவர் தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்றதாக தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd10c2e8-b983-4edb-83d4-a96bdcbd7c7f/26-6a7d5603f3682.webp' /></p><h2>கணவரின் தொழில் கூட்டாளி&nbsp;&nbsp;பாலியல் துன்புறுத்தல்</h2><p> 

அப்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சமையலறைக் கத்தியைப் பயன்படுத்தியதாகவும், ஏற்பட்ட மோதலில் அந்த நபரும் தனது கணவரும் உயிரிழந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.</p><p> 

சம்பவத்துக்குப் பின்னர் சில நாட்களில் அதிகாரிகளிடம் சரணடைந்த அவர், தனது செயல் தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்டது என வாதிட்டபோதும், ஈரான் நீதிமன்றங்கள் அந்த வாதத்தை ஏற்கவில்லை. </p><p>

இதையடுத்து, ஈரானின் ‘கிசாஸ்’ எனப்படும் பழிக்குப் பழி சட்ட நடைமுறையின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 


 2026ஆம் ஆண்டில் இதுவரை ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறைந்தது 14 ஆக உயர்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. </p><p>

தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்ற ஒருவரைக் கொன்றதாகக் கூறப்பட்ட வழக்கில் 2014ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட ரெய்ஹானே ஜப்பாரியின் வழக்குடன் நெய்ரியின் வழக்கும் ஒப்பிடப்படுகிறது.
</p><p>
 ஈரானின் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் ‘கிசாஸ்’ உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சட்டப் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.</p><p>

 இருப்பினும், நெய்ரி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார் என்பது நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை ஆனால் அவர் முன்வைத்தது தற்காப்பு வாதம் என்று செய்திகள் கூறுகிறது</p>]]></content>
            <updated>2026-08-13T13:34:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி பதவியை தொடர விருப்பம் ..ஆனால்..;டிரம்ப் பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/willing-to-continue-as-president-trump-s-response-1786625059"></link>
            <id>https://canadamirror.com/article/willing-to-continue-as-president-trump-s-response-1786625059</id>
            <summary type="text">&amp;nbsp; &#039;எனக்கு மிகவும் விருப்பம்தான் ஆனால் சட்டம் வலுவானது&#039; என 2028 தேர்தல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 'எனக்கு மிகவும் விருப்பம்தான் ஆனால் சட்டம் வலுவானது' என 2028 தேர்தல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது,
</p><p>
 எனக்கு மிகவும் விருப்பம் தான். 2028ல் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் தடை உள்ளது. மற்றொரு முறை போட்டியிடுவதை வரவேற்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b93b5fb-5a52-4818-8151-984bb0a2e913/26-6a7dbc24c7493.webp' /></p><h2>&nbsp;டிரம்ப் போட்டியிட முடியாத சூழல்</h2><p> ஆனால் சட்ட வரம்புகள் என்னை அவ்வாறு செய்யவிடாமல் தடுக்கிறது.

எனது அரசியல் ஆதரவாளர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகள் இருந்தபோதிலும், ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்ப சட்டம் வெளிப்படையாகத் தடுக்கிறது. </p><p>எல்லோரும் என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள், மேலும் அந்த விஷயத்தில் சட்டம் மிகவும் கடுமையாக இருக்கிறது . இருந்தாலும், எனக்கு பதவிக்காலத்தைத் தொடர்வதில் ஆர்வம் இருக்கிறது என அதிபர் டிரம்ப் கூறினார்.
</p><p>அதேசமயம்&nbsp; அமெரிக்காவில்&nbsp; &nbsp;4 ஆண்டுகளுக்கு ஒருமுறை&nbsp; ஜனாதிபதி&nbsp; &nbsp;பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22வது திருத்தப்படி விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. </p><p>

இதனால் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட முடியாத சூழல் உள்ளமை&nbsp; குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-13T12:41:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு லண்டனில் 25 வயதான பேருந்து ஓட்டுநர் சுட்டுக் கொலை ; நண்பர்கள் உருக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/25-year-old-bus-driver-shot-dead-in-south-london-1786609837"></link>
            <id>https://canadamirror.com/article/25-year-old-bus-driver-shot-dead-in-south-london-1786609837</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தெற்கு லண்டனின் கிளாப்ஹாம் (Clapham) பகுதியில் உள்ள பப் ஒன்றுக்கு வெளியே 25 வயதான பேருந்து ஓட்டுநர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தெற்கு லண்டனின் கிளாப்ஹாம் (Clapham) பகுதியில் உள்ள பப் ஒன்றுக்கு வெளியே 25 வயதான பேருந்து ஓட்டுநர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

லண்டன் பெருநகரக் காவல் துறையினரால் (Metropolitan Police) ஆகஸ்ட்-மேரி பைல்-அகா அமோவா (Auguste-Marie Bile-aka Amoa) என அடையாளப்படுத்தப்பட்ட அந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95378f96-fa19-41e0-8536-d5e960c30b87/26-6a7d80aef01db.webp' /></p><h2>அவர் மிகவும் அமைதியானவர், கடின உழைப்பாளி</h2><p>
</p><p>
வில்லிங்டன் சாலையில் (Willington Road) உள்ள தி லேண்டர் (The Landor) பப் அருகே திங்கள்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. </p><p>நான்கு முறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கூறிய அப்பகுதி மக்கள், சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞருக்கு முதலுதவி செய்ய முயன்றனர். </p><p>

 மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சியையும் தாண்டி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
</p><p>
 சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, துப்பாக்கிக் காயத்துடன் மருத்துவமனைக்கு வந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கொலை சந்தேகத்தின் பேரில் போலிஸார் கைது செய்தனர். சிகிச்சை பெற்று வரும் அவர், போலிஸாரின் பலத்த காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

உயிரிழந்த இளைஞரின் நண்பர்கள் மற்றும் சக பேருந்து ஓட்டுநர்கள் தெரிவிக்கையில், “அவர் மிகவும் அமைதியானவர், கடின உழைப்பாளி. </p><p>எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லாத அவர், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததாலேயே (Wrong Place at Wrong Time) இந்த கொடூர சம்பவத்திற்குப் பலியாகியுள்ளார்” என உருக்கமாகக் கூறினர். </p><p>

கொலைக்கான முகாந்திரம் மற்றும் பின்னணி குறித்துத் தலைமை துப்பறியும் அதிகாரி கிளேர் கைவர் (Claire Guiver) தலைமையிலான சிறப்புக் குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T12:33:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொருளாதார நெருக்கடி ; பிரிக்ஸ் வங்கியில் இணையும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/economic-crisis-iran-joins-brics-bank-1786623927"></link>
            <id>https://canadamirror.com/article/economic-crisis-iran-joins-brics-bank-1786623927</id>
            <summary type="text">பிரிக்ஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் புதிய வளர்ச்சி வங்கியில் ஈரான் விரைவில் இணையவுள்ளதாக ஈரானன் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரிக்ஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் புதிய வளர்ச்சி வங்கியில் ஈரான் விரைவில் இணையவுள்ளதாக ஈரானன் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
</p><p>


அமெரிக்காவுடனான போரினால் ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், அந்நாடு தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66ee7eb1-e163-4cd3-a857-b009735d499b/26-6a7db7b98ed38.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், புதிய வளர்ச்சி வங்கியில் இணையும் முடிவை ஈரான் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



எனினும், ஈரான் இணைவது தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. </p><p>அதேவேளை, புதிய வளர்ச்சி வங்கியின் தரப்பிலிருந்தும் இது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
</p><p>


இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கிய பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கி, உறுப்பு நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது.
</p><p>


பிரிக்ஸ் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



அதேவேளை ஈரான் கடந்த 2024ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பில் அதிகாரப்பூர்வமாக இணைந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-13T12:23:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெக்சாஸ் மாநிலத்தில் இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/military-helicopter-crash-in-texas-2-died-1786623603"></link>
            <id>https://canadamirror.com/article/military-helicopter-crash-in-texas-2-died-1786623603</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் அபாசி (Apache) இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் உய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் அபாசி (Apache) இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
</p><p>


இந்த விபத்து ஆஸ்டினிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் வடக்கே உள்ள பெல் கவுண்டியில் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97866a17-b43f-49cb-a514-cc86ce500a8d/26-6a7db6748307f.webp' /></p><p>


ஃபோர்ட் ஹூட் இராணுவத் தளத்தின் நடவடிக்கைகளின்போது AH-64 அபாசி ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


ஹெலிக்கொப்டரில் பயணித்த இரு வீரர்களும் உயிரிழந்துள்ளதாக பெல் கவுண்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

எனினும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் பணிகள் நிறைவடையும் வரை அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படமாட்டாது என ஃபோர்ட் ஹூட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>


 ஹெலிக்கொப்டர் விழுந்த பகுதியில் பாரிய புல்வெளித் தீ ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.



விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T12:18:02+00:00</updated>
        </entry>
    </feed>
