<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-31T16:41:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் நுளம்புகள் தொல்லை- பொது மக்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/its-the-start-of-mosquito-season-in-toronto-1785506529"></link>
            <id>https://canadamirror.com/article/its-the-start-of-mosquito-season-in-toronto-1785506529</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் மீண்டும் நுளம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் &#039;வெஸ்ட் நைல் வைரஸ்&#039; மனித பாதிப்பு பதிவாகியுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் மீண்டும் நுளம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் 'வெஸ்ட் நைல் வைரஸ்' மனித பாதிப்பு பதிவாகியுள்ளதாக டொராண்டோ பொது சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
</p><p>இந்த வைரஸ் முதன்முதலில் 1937 ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள 'வெஸ்ட் நைல்' என்ற பகுதியில் கண்டறியப்பட்டது.</p><p>
2000-களின் தொடக்கத்தில், இடம்பெயரும் பறவைகள் (காகங்கள், மைனாக்கள் போன்றவை) மூலமாக இந்த வைரஸ் கனடாவுக்குப் பரவியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69a89072-d55e-419d-ba75-62aadeef407a/26-6a6caae31a5a3.webp' /></p><p>
</p><p>நுளம்புகள் பறவைகளைக் கடித்து, பின்னர் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது.</p><p>
ஒன்டாரியோ மாகாணம் முழுவதும் ஜூலை இறுதி நிலவரப்படி 17 நுளம்பு மாதிரிகளில் இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டொராண்டோவில் பெய்த அதிக மழை காரணமாகத் தேங்கியுள்ள நீர், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக அமைந்துள்ளது.</p><p>
கடந்த குளிர்காலத்தில் பெய்த அதிக பனிப்பொழிவு, குளிர்காலத்தில் வாழும் நுளம்புகளையும் அவற்றின் முட்டைகளையும் பாதுகாக்கும் ஒரு அரணாக அமைந்துவிட்டது.
</p><p>பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் நுளம்புகளின் எண்ணிக்கை உச்சத்தை அடையும் எனவும், செப்டம்பர் மாதம் வரை இதன் தாக்கம் இருக்கும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>பொதுவாக இந்த வைரஸால் பாதிக்கப்படும் 70% முதல் 80% பேருக்கு எந்தவொரு அறிகுறியும் வெளியே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T16:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்திய மாணவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை:]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-man-whod-been-studying-in-canada-sentenced-1785505943"></link>
            <id>https://canadamirror.com/article/indian-man-whod-been-studying-in-canada-sentenced-1785505943</id>
            <summary type="text">&amp;nbsp;முதியவர்களை இலக்கு வைத்து பல மில்லியன் டொலர் பணமோசடியில் ஈடுபட்ட இந்திய இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முதியவர்களை இலக்கு வைத்து பல மில்லியன் டொலர் பணமோசடியில் ஈடுபட்ட இந்திய இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
</p><p>கனடாவிற்கு மாணவர் விசா மூலம் வந்து கல்லூரியில் படித்து வந்த ரோஷன் ஷா என்ற இந்தியப் பிரஜை, அமெரிக்காவில் முதியவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பிரம்மாண்ட பணமோசடி வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
</p><p>அமெரிக்காவின் விஸ்கான்சின் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக இவருக்கு நீதிபதி 48 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30810a8d-7463-4044-8ab6-2c6a949f28d2/26-6a6ca898e46c8.webp' /></p><p>
கனடாவில் படித்து வந்த ரோஷன் ஷா, மோசடி மூலம் கிடைத்த பணத்தையும் தங்கத்தையும் சேகரிப்பதற்காக சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார்.</p><p>
இந்தியாவில் உள்ள இவரது நண்பர்கள் அமெரிக்காவில் உள்ள முதியவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்களின் அடையாள அட்டைகள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் பயமுறுத்தியுள்ளனர்.
</p><p>பாதுகாப்பிற்காகத் தங்களது பணம் அல்லது தங்கத்தைப் போலி கூட்டாட்சி முகவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்களை நம்ப வைத்துள்ளனர். </p><p>
இந்த போலி முகவராகவே ரோஷன் ஷா நேரில் சென்று பணத்தைச் சேகரித்துள்ளார்.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 15 முதியவர்களிடம் இருந்து மொத்தம் 3.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பணம் மற்றும் தங்கத்தை ரோஷன் ஷா திரட்டியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
விஸ்கான்சினில் உள்ள நியூ பெர்லின் பகுதியில் மீண்டும் ஒரு மோசடிப் பணத்தைச் சேகரிக்க முயன்றபோது, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் உள்ளூர் காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T16:00:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பொலிஸ் அதிகாரியைக் கொன்ற குற்றவாளிக்கு மீண்டும் பிணை மறுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/parole-denied-for-man-who-killed-toronto-police-1785504960"></link>
            <id>https://canadamirror.com/article/parole-denied-for-man-who-killed-toronto-police-1785504960</id>
            <summary type="text">சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு டொராண்டோ காவல் அதிகாரியைச் சுட்டுக்கொன்ற குற்றவாளி கிளிண்டன் கெய்ல், தாக்கல் செய்த பிணை மனு 4-வது முறையாக மீண்டும் நிராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு டொராண்டோ காவல் அதிகாரியைச் சுட்டுக்கொன்ற குற்றவாளி கிளிண்டன் கெய்ல், தாக்கல் செய்த பிணை மனு 4-வது முறையாக மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
</p><p>போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர் ஒருவரைத் துரத்திச் சென்றபோது, 25 வயதான காவல் அதிகாரி டாட் பெய்லிஸ் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
</p><p>இந்தச் சம்பவத்தின் போது அவருடன் இருந்த மற்றொரு காவல் அதிகாரியான மைக் லியோனும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/535749a3-703b-4465-8781-2d5a3b307c3d/26-6a6ca4c1e4518.webp' /></p><p>
</p><p>இக்குற்றத்திற்காக கிளிண்டன் கெய்ல் மீது முதலாம் நிலை கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிரூபிக்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு பிணை பெற முடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>இவர் தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குறைந்த பாதுகாப்பு சிறையில் தனது தண்டனையை அனுபவித்து வருகிறார்.
</p><p>குற்றவாளியின் பிணை மனு நிராகரிக்கப்பட்ட செய்திக்கு டொராண்டோ காவல்துறை சங்கம் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T15:28:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு; ஒரே நாளில் நுழைந்த 49,000 குடியேறிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/49-000-migrants-entered-spain-in-a-single-day-1785493152"></link>
            <id>https://canadamirror.com/article/49-000-migrants-entered-spain-in-a-single-day-1785493152</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயூட்டா பகுதிக்குள் ஒரே நாளில் சுமார் 49,000 குடியேறிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
சட்டவிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயூட்டா பகுதிக்குள் ஒரே நாளில் சுமார் 49,000 குடியேறிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
சட்டவிரோதமாக நுழைந்தவர்களில் குறைந்தது 7,000 பேர் சிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில், மொராக்கோவிலிருந்து சுமார் 49,000 குடியேறிகள் தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/210e20c0-e6a5-43b1-a000-2038916f7ff0/26-6a6c76a246f0d.webp' /></p><h2>கடலில் தடுத்து நிறுத்தப்படும் குடியேறிகள்</h2><p>
</p><p>
வியாழக்கிழமையன்று (30) ஆயிரக்கணக்கான மக்கள் கடர்மார்க்கமாக நீந்தி நகருக்குள் வருவதை வீடியோக்களும் படங்களும் காட்டின.

அதேவேளையில், இரவு முழுவதும் இத்தகைய வருகைகள் தொடர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. </p><p>

அண்மைய நாட்களில் அப்பகுதியை அடைய முயன்றவர்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p></p><p>
சியூட்டா (Ceuta) அல்லது மற்றொரு ஸ்பானியப் பகுதியான மெலில்லாவை (Melilla) அடைய முயலும்போது கடலில் தடுத்து நிறுத்தப்படும் குடியேறிகளை மொராக்கோவிற்கு உடனடியாகத் திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயினின் உயர் நீதிமன்றம் இந்த மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><p>
அண்மையில் எல்லை கடக்கும் முயற்சிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் அதிகாரிகள் மாட்ரிட்டிடம் உதவி கோரியிருந்தனர். </p><p>

ஆனால், வியாழக்கிழமையன்று எல்லைக் கட்டுப்பாடுகள் செயலிழந்ததால் அங்கு குழப்பமான காட்சிகள் நிலவின.

பின்னர், ஸ்பெயின் தனது ஆயுதப் படைகளை செவுட்டாவிலும், அதன் சகோதர நகரமான மெலிலாவிலும் பாதுகாப்பை வலுப்படுத்த அனுப்பியது. </p><p>

அங்கும் ஒரே இரவில் 300 முதல் 400 பேர் வரை எல்லை கடக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஸ்பானிய அதிகாரிகளின் வியக்கத்தக்க மதிப்பீட்டின்படி, கடந்த ஓரிரு நாட்களில் சியூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, அந்நகரின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாக இருக்கலாம்.\</p><p>&nbsp; உள்ளூர் புள்ளிவிவரங்களின்படி இந்நகரின் மக்கள் தொகை சுமார் 83,600 ஆகும்.


தங்கள் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அனைவரையும் முடிந்தவரை விரைவாக திருப்பி அனுப்புவதை உறுதிசெய்ய மொராக்கோவுடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T13:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொரோக்கோ–ஸ்பெயின் எல்லையில் பதற்றம் ; சியூட்டா மீண்டும் உலக கவனத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/morocco-spain-ceuta-back-in-the-world-s-attention-1785494896"></link>
            <id>https://canadamirror.com/article/morocco-spain-ceuta-back-in-the-world-s-attention-1785494896</id>
            <summary type="text">மொரோக்கோவை ஒட்டியுள்ள ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான சியூட்டா (Ceuta) பகுதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள குடியேற்ற நெருக்கடி, ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை மீண...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொரோக்கோவை ஒட்டியுள்ள ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான சியூட்டா (Ceuta) பகுதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள குடியேற்ற நெருக்கடி, ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.
</p><p>
ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்திருந்தாலும், சியூட்டா ஸ்பெயினின் தன்னாட்சி நகரமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நகரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லையாகவும் கருதப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9db3ea7-d800-48f1-9c74-4a92eeb6b68c/26-6a6c7d717ead8.webp' /></p><p>வரலாற்றுப் பதிவுகளின்படி, 1415 ஆம் ஆண்டு போர்த்துக்கல் சியூட்டாவைக் கைப்பற்றியது.</p><p>பின்னர் 1668 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட லிஸ்பன் உடன்படிக்கையின் அடிப்படையில், அந்தப் பகுதி ஸ்பெயினின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. </p><p>அதன்பின்னர் சியூட்டா தொடர்ந்து ஸ்பெயினின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது. இருப்பினும், மொரோக்கோ அரசு சியூட்டாவையும் மெலில்லா (Melilla) நகரையும் தமது இறையாண்மைக்குட்பட்ட பகுதிகளாக தொடர்ந்து உரிமைகோரி வருகிறது. </p><p>ஆனால், அந்தக் கோரிக்கையை ஸ்பெயின் நிராகரித்து வருகிறது.

அண்மையில், ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் சியூட்டாவை நோக்கி எல்லையைக் கடக்க முயன்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>அவர்களில் மொரோக்கோ நாட்டவர்களுடன், ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளும் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2b31283-cefa-45c3-a0ae-2f5f6333e684/26-6a6c7d7232280.webp' /></p><p>

இந்த நிலைமையால் எல்லைப் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள் மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகள் மீது கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதையடுத்து, எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஸ்பெயின் அரசு மேற்கொண்டுள்ளது.</p><p>

சியூட்டா விவகாரம் குடியேற்றப் பிரச்சினையை மட்டுமன்றி, வரலாறு, இறையாண்மை, சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய சிக்கலான விடயமாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
இதேவேளை, சியூட்டா தொடர்பான தமது உரிமைக் கோரிக்கையை மொரோக்கோ தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப் பகுதி ஸ்பெயினின் பிரிக்க முடியாத தன்னாட்சி நகரம் என்ற தனது நிலைப்பாட்டை ஸ்பெயின் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T10:52:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விற்பனை இலக்கை எட்டாத ஊழியர் முகத்தில் கிறீம் பூசி சித்திரவதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/comcast-workers-had-pies-smashed-face-low-sales-1785494797"></link>
            <id>https://canadamirror.com/article/comcast-workers-had-pies-smashed-face-low-sales-1785494797</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவில் விற்பனை இலக்கை எட்டாத ஊழியரை நாற்காலியில் கட்டிவைத்து, அவரது முகத்தில் கிறீம் பூசி அவமானப்படுத்தியதாக பிரபல நிறுவனத்தின் மே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவில் விற்பனை இலக்கை எட்டாத ஊழியரை நாற்காலியில் கட்டிவைத்து, அவரது முகத்தில் கிறீம் பூசி அவமானப்படுத்தியதாக பிரபல நிறுவனத்தின் மேலாளர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.</p><p>

மாதத்தின் மிகக் குறைந்த விற்பனை செய்த ஊழியரை அலுவலகத்தின் பின்பகுதியில் நாற்காலியில் கட்டிவைத்து, அதிக விற்பனை செய்த ஊழியரைக் கொண்டு அவரது முகத்தில் பையை அடிப்பதை மேலாளர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5deaa97a-4f81-4434-8140-e6c0bd17d75c/26-6a6c7d0f77c4c.webp' /></p><h2>&nbsp;மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பிற்கு நட்டஈடு</h2><p>
</p><p>
அதுமட்டுமல்லாது வாடிக்கையாளர் திருப்தி மதிப்பீடு குறைவாகக் கிடைக்கும் ஊழியர்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களை மேலாளர் பீட்டர்சன் தானே காணொளி எடுத்ததுடன், சக ஊழியர்களையும் நிழற்படம் எடுக்க வற்புறுத்தியுள்ளார். </p><p>விற்பனையை உயர்த்தவே இந்த முறை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பிற்கு நட்டஈடு கேட்டுள்ளார்.
</p><p>
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள குறித்த நிறுவனம், தங்கள் கடைகளில் ஊழியர்களை அவமதிக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் சகிப்புத்தன்மை கிடையாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-31T10:44:48+00:00</updated>
        </entry>
    </feed>
