<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-08T06:32:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெயிலில் இருந்து காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் ; வடகொரியாவில் வினோதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/north-korea-suggests-dog-soup-to-beat-heat-1786169646"></link>
            <id>https://canadamirror.com/article/north-korea-suggests-dog-soup-to-beat-heat-1786169646</id>
            <summary type="text">வடகொரியாவில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுமாறு அந்நாட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரியாவில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு ஊடகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>


கொரிய தீபகற்பம் முழுவதும் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், வடகொரியாவில் தற்போது 98 பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf35822a-a233-49a0-b4fa-747f6663cf70/26-6a76c92fd2830.webp' /></p><p>
</p><p>


இந்த நிலையில், தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் நாயிறைச்சி சூப், மீன் சூப் மற்றும் கோழி இறைச்சிச் சாறு போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் உடல் வெப்பத்தைத் தணிக்க முடியும் என வடகொரிய அரசு ஊடகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
</p><p>


நாயிறைச்சி சூப் கோடைக்காலத்தின் பாரம்பரிய உணவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதனை ஆதரிக்கும் வகையில் அந்நாட்டில் உள்ள பழமொழி ஒன்றும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
</p><p>


மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் நாயிறைச்சியைக் கொண்டு பல்வேறு உணவுகளைத் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டதாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
</p><p>


கடும் வெப்பத்தால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில், நாயிறைச்சி சூப்பை வெயிலை சமாளிப்பதற்கான உணவாக வடகொரிய அரசு ஊடகம் பரிந்துரைத்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T06:14:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் இந்திய மாணவனுக்கு நேர்ந்த துயரம் ; ஏரியில் மிதந்த சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tragedy-strikes-indian-student-in-the-us-1786165602"></link>
            <id>https://canadamirror.com/article/tragedy-strikes-indian-student-in-the-us-1786165602</id>
            <summary type="text">அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற பிக் பைன் லேக்ஸ் மலைப்பகுதிக்கு தனியாக மலையேற்றத்திற்கு சென்ற 26 வயதுடைய இந்திய வம்சாவளி மாணவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற பிக் பைன் லேக்ஸ் மலைப்பகுதிக்கு தனியாக மலையேற்றத்திற்கு சென்ற 26 வயதுடைய இந்திய வம்சாவளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p> அவரது உடல் அங்குள்ள ஏரி ஒன்றில் இருந்து சடலமாக&nbsp; மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f6eafe1-6207-476a-9dda-db7c4b0c8a3d/26-6a76b964266d5.webp' /></p><p>
</p><p>


கடந்த ஆகஸ்ட் 1-ஆம் திகதி, கலிபோர்னியாவின் சியரா நெவாடா பகுதியில் உள்ள பிக் பைன் லேக்ஸ் மலைப்பாதையில் குறித்த மாணவன் தனியாக மலையேற்றத்தில் ஈடுபட்டார்.</p><p>அன்று இரவு 8:30 மணியளவில் தனது குடும்பத்தினருக்கு ஜி.பி.எஸ் மூலம் தனது இருப்பிடத்தை கடைசியாக அனுப்பியுள்ளார். அதன் பிறகு, அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. </p><p>


இதைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மீட்புக்குழுவினர் தேசிய வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். </p><p>இரண்டு நாட்கள் தீவிரமாக தேடிய நிலையில், அங்குள்ள ஒரு ஏரியில் விக்ரம் முபாயி சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T05:06:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானை நோக்கி நகரும் ‘டால்பின்’ சூறாவளி ; விமான சேவைகள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/typhoon-dolphin-head-toward-japan-flights-cancel-1786149588"></link>
            <id>https://canadamirror.com/article/typhoon-dolphin-head-toward-japan-flights-cancel-1786149588</id>
            <summary type="text">ஜப்பானின் தென்பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி ‘டால்பின்’ சூறாவளி நகர்ந்து வருவதால், ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் மூடப்பட்டதுடன், அனைத்து உள்நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் தென்பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி ‘டால்பின்’ சூறாவளி நகர்ந்து வருவதால், ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் மூடப்பட்டதுடன், அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
</p><p>
சூறாவளி மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03da9da3-b0d7-4a96-a48b-08968b8b0504/26-6a767ad67941c.webp' /></p><p> பலத்த காற்று காரணமாக 70 வயதுடைய மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சூறாவளியின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. </p><p>இதன்படி, ஒகினாவாவில் 240 பேர் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
மேலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இதனால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், ‘டால்பின்’ சூறாவளி நாளை மறுதினம் காலை சீனாவின் கிழக்குக் கடற்கரையைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T01:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க குடியுரிமைக்காக பிரசவ சுற்றுலா? டிரம்ப் கையெழுத்திட்ட புதிய கட்டுப்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/birth-tourism-us-citizenship-trump-restrictions-1786151667"></link>
            <id>https://canadamirror.com/article/birth-tourism-us-citizenship-trump-restrictions-1786151667</id>
            <summary type="text">அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகக் குடியுரிமை வழங்கப்படும் நடைமுறையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ‘பிரசவ சுற்றுலா’வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகக் குடியுரிமை வழங்கப்படும் நடைமுறையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ‘பிரசவ சுற்றுலா’வை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டு புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்க அரசியலமைப்பின் 14ஆவது திருத்தத்தின் குடியுரிமைப் பிரிவின் கீழ், அமெரிக்க மண்ணில் பிறக்கும் பெரும்பாலானோருக்கு பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd8b286e-3319-4813-8020-86193af86a64/26-6a7682f67435e.webp' /></p><p>இதனைப் பயன்படுத்தி சில வெளிநாட்டவர்கள் சுற்றுலா அல்லது தற்காலிக விசாவில் அமெரிக்கா சென்று குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நடைமுறையே ‘பிரசவ சுற்றுலா’ என அழைக்கப்படுகிறது.
</p><p>
இந்த நடைமுறையை கட்டுப்படுத்தும் நோக்கில் டிரம்ப் ஏற்கனவே நிர்வாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார். எனினும், ஜூன் 30ஆம் திகதி அமெரிக்க உச்ச நீதிமன்றம் அவரது முந்தைய முயற்சிக்கு எதிராகத் தீர்ப்பளித்ததுடன், 14ஆவது திருத்தத்தின் கீழ் பிறப்புரிமைக் குடியுரிமைக்கான நீண்டகால சட்ட விளக்கத்தை உறுதிப்படுத்தியது.
</p><p>
இந்நிலையில், டிரம்ப் கடந்த வியாழக்கிழமை மீண்டும் இரண்டு புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். </p><p>அவற்றில் ஒன்று, குடியுரிமையைப் பெறுவதற்காக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெற்றோரின் குழந்தைகளின் குடியுரிமையை அங்கீகரிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.</p><p> மற்றொன்று, குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அமெரிக்கா வருவதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறது.
</p><p>
மேலும், வெளிநாட்டு அரசாங்க ஊழியர்கள் மற்றும் குறிப்பிட்ட வகையில் ‘எதிரி வெளிநாட்டவர்கள்’ என வகைப்படுத்தப்படுபவர்களின் குழந்தைகளுக்கான பிறப்புரிமைக் குடியுரிமை தொடர்பிலும் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த இந்த உத்தரவுகள் முயற்சிக்கின்றன.</p><p>

எனினும், இந்த புதிய நிர்வாக உத்தரவுகளும் சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ளும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமையை கட்டுப்படுத்துவதற்கான நிர்வாக அதிகாரத்தின் வரம்பு தொடர்பில் மீண்டும் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-08T01:14:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை ; காட்டுத்தீ, வறட்சியால் பல நாடுகள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heat-wave-european-countries-countries-affected-1786151263"></link>
            <id>https://canadamirror.com/article/heat-wave-european-countries-countries-affected-1786151263</id>
            <summary type="text">ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை நிலவி வரும் நிலையில், பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியசைத் தாண்டியுள்ளது. இதனால் சுகாதாரம், மின் உற்பத்தி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை நிலவி வரும் நிலையில், பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியசைத் தாண்டியுள்ளது. </p><p>இதனால் சுகாதாரம், மின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இத்தாலியில், தேசிய வெப்ப கண்காணிப்பு அமைப்பின் கீழ் உள்ள 27 முக்கிய நகரங்களும் இந்த ஆண்டில் முதன்முறையாக ஒரே நேரத்தில் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/917479f8-53bb-4563-b703-0ae2d8cda783/26-6a76816032b88.webp' /></p><p>வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் ரோம் நகரில் பொதுமக்களுக்காக நகர்ப்புற கடற்கரைப் பகுதிகளும் குளிரூட்டும் மிஸ்ட் விசிறிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ஆஸ்திரியாவில் இதுவரை இல்லாத அளவாக 41.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. </p><p>அதேபோன்று ஸ்லோவாக்கியாவிலும் 42.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
</p><p>
கடும் வறட்சி காரணமாக டான்யூப் நதியின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நீர்மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்களின் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஜெர்மனியிலும் நதிகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் நீர்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>இதேவேளை, பிரான்ஸ் மற்றும் பால்கன் நாடுகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதால், தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
தொடர்ந்து நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், குறிப்பாக முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிக வெப்பமான நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-08T01:07:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹெலிகாப்டரில் ஷாப்பிங் சென்ற 69 வயது முதியவர் ; வைரலாகும் வித்தியாசமான சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/69-year-old-man-goes-shopping-helicopter-viral-1786150697"></link>
            <id>https://canadamirror.com/article/69-year-old-man-goes-shopping-helicopter-viral-1786150697</id>
            <summary type="text">அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், சாலைப் பயணத்தைத் தவிர்ப்பதற்காக 69 வயது முதியவர் ஒருவர் தனது சொந்த ஹெலிகாப்டரில் ஷாப்பிங் செய்ய வந்த சம்பவம் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், சாலைப் பயணத்தைத் தவிர்ப்பதற்காக 69 வயது முதியவர் ஒருவர் தனது சொந்த ஹெலிகாப்டரில் ஷாப்பிங் செய்ய வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
விஸ்கான்சின் மாகாணத்தின் ரோன்ஸ்டேல் பகுதியைச் சேர்ந்த லெராய் கான்ஸ் (69) என்பவர், ரிட்ச்பீல்ட் பகுதியில் உள்ள பிரபல விளையாட்டு மற்றும் வெளிப்புற உபகரணங்கள் விற்பனை நிலையமான கபெலாஸ் கடைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbfcfffd-3019-492e-94f1-7a4db0da8301/26-6a767f2a82c50.webp' /></p><p>அங்கு காரில் பயணித்தால் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் ஆகும் என்பதால், அவர் தனது சொந்த ஹெலிகாப்டரில் செல்ல முடிவு செய்துள்ளார். </p><p>இதன்படி, ஹெலிகாப்டரில் சென்ற அவர், கடையின் பார்க்கிங் பகுதியில் அதனை பாதுகாப்பாக தரையிறக்கிவிட்டு ஷாப்பிங் செய்யச் சென்றுள்ளார்.
</p><p>
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திடீரென ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாஷிங்டன் கவுண்டி பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
</p><p>
விசாரணைகளில், லெராய் கான்ஸ் முறையான விமான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதும், அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைவாகவே ஹெலிகாப்டரை தரையிறக்கியிருப்பதும் தெரியவந்தது.
</p><p>
இதையடுத்து, அவர் எந்தவொரு விதிமீறலிலும் ஈடுபடவில்லை என உறுதி செய்யப்பட்டதால், அவர் மீது எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
</p><p>
காரில் செல்வதைத் தவிர்ப்பதற்காக சொந்த ஹெலிகாப்டரில் ஷாப்பிங் சென்ற 69 வயது முதியவரின் இந்த வித்தியாசமான செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T00:58:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/houthi-rebels-attack-saudi-arabia-1786150118"></link>
            <id>https://canadamirror.com/article/houthi-rebels-attack-saudi-arabia-1786150118</id>
            <summary type="text">ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி, ஏமனில் அரசுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. </p><p>ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி, ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. </p><p>இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5e8ded3-5168-4193-89fe-20a475560db1/26-6a767ce865138.webp' /></p><p>ஏமனின் சில பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
</p><p>
11 பேர் காயம்
அதேவேளை, ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். </p><p>இந்த தாக்குதலுக்கு சவுதி பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், சவுதி அரேபியா மீது இன்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தினர். </p><p>சவுதி அரேபியாவின் நிஜ்ரன் நகரை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 11 பேர் காயமடைந்துள்ளனர். </p><p>அந்த தாக்குதலை தொடர்ந்து ஹவுதி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று சவுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T00:48:47+00:00</updated>
        </entry>
    </feed>
