<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-09T08:01:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது; ஈரான் விடாப்பிடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-remands-strait-of-hormuz-not-fully-reopen-1786254202"></link>
            <id>https://canadamirror.com/article/iran-remands-strait-of-hormuz-not-fully-reopen-1786254202</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அது மட்டுமே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அது மட்டுமே போதுமானதாக இருக்காது என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>இதற்கிடையே, அப் பகுதியில் ஈரான் மற்றொரு கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையின் இருபுறமும் அமைந்துள்ள ஈரானும் ஓமானும் புதிய கப்பல் போக்குவரத்து பாதை குறித்த ஒப்பந்தத்தை நெருங்கியுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.</p><p> இருப்பினும், நீரிணையை மீண்டும் திறப்பது அமெரிக்கா ஈரானுக்கு வழங்கும் நஷ்டஈடு உள்ளிட்ட பிற நிபந்தனைகளிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>மேலும், பழைய கப்பல் போக்குவரத்துத் திட்டம் இனி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், நிரந்தரப் பாதை குறித்த சட்ட மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை தற்காலிகப் பாதை குறித்து ஓமானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறினார்.</p><p>நீரிணையின் கட்டுப்பாடு குறித்து எட்டப்படும் ஒப்பந்தம் மூலம் வழமையான எண்ணெய் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்றும், இது பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் தொடங்கிய மோதலை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.</p><p>உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு சென்ற இந்த முக்கிய நீர்வழியில் செல்லும் கப்பல்கள் மீதும், வளைகுடா பகுதியிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. </p><p>இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்ற தனது அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவன தொடர்புடைய சரக்குக் கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-09T07:33:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடைக்கால பிரதமர் மீது பெண் முட்டை வீச்சு; கொசோவோ பாராளுமன்றத்தில் சலசலப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-hurls-eggs-at-interim-kosovo-parliament-1786260586"></link>
            <id>https://canadamirror.com/article/woman-hurls-eggs-at-interim-kosovo-parliament-1786260586</id>
            <summary type="text">தென்கிழக்கு ஐரோப்பா நாடான கொசோவோ பாராளுமன்றக் கூட்டத்தொடரின்போது, இடைக்கால பிரதமர் அல்பின் குர்தி மீது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முட்டைகளை வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்கிழக்கு ஐரோப்பா நாடான கொசோவோ பாராளுமன்றக் கூட்டத்தொடரின்போது, இடைக்கால பிரதமர் அல்பின் குர்தி மீது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முட்டைகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் கொசோவோ பாராளுமன்றம் கூடிய நிலையில், ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு மேலதிக கால அவகாசம் தேவை என இடைக்கால பிரதமர் அல்பின் குர்தி கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>மேலும், இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் அரசாங்கம் கலந்துரையாட வேண்டும் என அவர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து சபையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>இதன்போது, கூட்டணிக் கட்சியொன்றின் நாடாளுமன்ற உறுப்பினரான டைம் காத்ரிஜாஜ், தனது கையில் வைத்திருந்த முட்டைகளை இடைக்கால பிரதமர் மீது வீசியுள்ளார்.</p><p>அத்துடன், பிரதமரை நோக்கி எதிர்க்கட்சி பெண் உறுப்பினரொருவர் “அவமானம், அவமானம்” எனக் கூறியுள்ளார்.</p><p>இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக தலையிட்டு குறித்த பெண் உறுப்பினரை அங்கிருந்து வெளியேற்றினர்.</p><p>இந்த எதிர்பாராத சம்பவத்தால் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.</p><p>சபாநாயகர் பதவிக்கான வேட்பாளரை முன்மொழிவதற்கு முன்னதாக எதிர்க்கட்சிகளுடன் மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு கால அவகாசம் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினரின் முட்டை வீச்சு சம்பவம் கொசோவோ பாராளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T07:29:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[42 ஆண்டுகளுக்குப் பின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/congo-first-national-population-census-in-42-years-1786255532"></link>
            <id>https://canadamirror.com/article/congo-first-national-population-census-in-42-years-1786255532</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டு அரசாங்கம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தத் தயாராகி வருகின்றது.இறுதியாக 1984ஆம் ஆண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டு அரசாங்கம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தத் தயாராகி வருகின்றது.</p><p>இறுதியாக 1984ஆம் ஆண்டு ஜாயிர் என்ற பெயரிலிருந்தபோதே கொங்கோவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.</p><p>அதன்பின்னர் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் அரசியல் குழப்பங்களால் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், தற்போதைய மக்கள் தொகை சுமார் 112 மில்லியனாக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.</p><p>பல தசாப்தங்களாகத் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படாததால், பல மில்லியன் மக்கள் தங்கள் நாட்டு குடியுரிமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் எதுவுமின்றியே வாழ்ந்து வருகின்றனர்.</p><p>எதிர்வரும் 2028ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தரவுகளைத் திரட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.</p><p><br></p><p>எனினும், நாட்டின் கிழக்குப் பகுதியில் நிலவும் வன்முறைகள் மற்றும் இடம்பெயர்வுகள் இந்த கணக்கெடுப்பிற்குப் பெரும் சவாலாக அமையும் எனக் கருதப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-09T06:05:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானைத் தாக்கிய ‘டொல்பின்’ புயல்; விமானச் சேவைகள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/typhoon-dolphin-hits-japan-flights-cancelled-1786254509"></link>
            <id>https://canadamirror.com/article/typhoon-dolphin-hits-japan-flights-cancelled-1786254509</id>
            <summary type="text">தெற்கு ஜப்பானின் ஒகினாவா, ககோஷிமா மாகாணங்களை ‘டொல்பின்’ புயல் சனிக்கிழமை பலத்த காற்றுடன் தாக்கியது.&amp;nbsp;அப்போது, மணிக்கு 216 கி.மீ. வேகத்தில் வீசிய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஜப்பானின் ஒகினாவா, ககோஷிமா மாகாணங்களை ‘டொல்பின்’ புயல் சனிக்கிழமை பலத்த காற்றுடன் தாக்கியது.&nbsp;</p><p>அப்போது, மணிக்கு 216 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் ஏற்பட்ட விபத்துகளில் 6 போ் காயமடைந்தனா்.</p><p>பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்ததால், 50,000-க்கும் மேற்பட்ட கட்டடங்களில் மின் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.&nbsp;</p><p>முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒகினாவாவுக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.</p><p>இப்புயல் ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கள்கிழமை அதிகாலைக்குள் சீனாவின் கிழக்குக் கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.</p><p>&nbsp;இதன்காரணமாக, அந்நாட்டு அரசும் தீவிர வானிலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.</p><p><br></p><p><br></p><p><br></p><p>இதற்கு மத்தியில், புயலையொட்டி தாய்வான் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் தங்களின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றமாறு சீனா அறிவுறுத்தியதற்கு தைவான் அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-09T05:48:35+00:00</updated>
        </entry>
    </feed>
