<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-22T17:42:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மோசமான குற்றச்சாட்டில் கைதான இலங்கையர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sickkids-doctor-arrested-on-child-sexual-abuse-1784740555"></link>
            <id>https://canadamirror.com/article/sickkids-doctor-arrested-on-child-sexual-abuse-1784740555</id>
            <summary type="text">கனடாவில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இலங்கையர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் முன்னணி குழந்தைகள் மருத்துவமனையான சிக்கிட்ஸ் மருத்துவமனயைில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இலங்கையர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
கனடாவின் முன்னணி குழந்தைகள் மருத்துவமனையான சிக்கிட்ஸ் மருத்துவமனயைில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான ஆபாசப் பொருட்களை வைத்திருந்ததுடன், அவற்றை அணுகியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் டொராண்டோ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
டொராண்டோ காவல்துறையின் இணைய சிறுவர் துஸ்பிரயோக தடுப்புப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68318c47-913c-4551-8988-43cb36a5fa29/26-6a60facd1e013.webp' /></p><p>
கடந்த ஜனவரி மாதம் மின்னணு சாதனம் ஒன்றின் மூலம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.
</p><p>அதனைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரி மாதம் சிக் கிட்ஸ் மருத்துவமனை மற்றும் சந்தேகநபரின் தனியார் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு, பணியிட கணினி உட்பட பல மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
இந்த வழக்கில், டொராண்டோவைச் சேர்ந்த 44 வயதான டிலான் திஸநாயக்க என்பவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.</p><p>
சிறுவர் பாலியல் துஷ்பிரயோக மற்றும் சுரண்டல் தொடர்பான ஆபாசப் பொருட்களை வைத்திருந்தது, அவற்றை அணுகி பயன்படுத்தியது, ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>இக்குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட மருத்துவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
</p><p>எனினும், மருத்துவராக அவர் மேற்கொண்ட பணிகளுக்கும் இந்த குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்புடைய எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை" என டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>விசாரணை தொடங்கிய தகவல் கிடைத்த உடனேயே, குற்றச்சாட்டுக்கு உள்ளான மருத்துவர் பணியிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T17:18:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு ; டிரம்ப் ஷாக் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/very-few-soldiers-died-in-the-war-is-waged-trump-1784716347"></link>
            <id>https://canadamirror.com/article/very-few-soldiers-died-in-the-war-is-waged-trump-1784716347</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு என டிரம்ப் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா கடந்த 50 வருடங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு என டிரம்ப் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா கடந்த 50 வருடங்களுக்கு மேலாகவே பல நாடுகளிலும் போர் தொடுத்து வருகின்றன. </p><p>அந்த போர்களில் எதிரி நாடுகள் தாக்கியதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலரும் உயிரிழந்திருக்கிறார்கள். 

அமெரிக்கா இதுவரை ஆப்கானிஸ்தான், ஈராக், வியட்நாம், கொரியா, வெனிசுலா, ஈரான் போன்ற நாடுகளின் போரை நடத்தி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b2df269-5f74-4864-9ecf-a7c9a2b9d124/26-6a609c3d681f6.webp' /></p><p> </p><p>அதில் பல ஆயிரம் ராணுவ வீரர்கள் இறந்து போயிருக்கிறார்கள்.

நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கூறி அமெரிக்காவும், இஸ்ரலும் சேர்ந்து அந்த நாட்டின் மீது போரை துவங்கியது.&nbsp;</p><p>
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்திய போரால் பல்லாயிரம் வீரர்கள் இறந்து போய்விட்டதாக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட துவங்கியிருக்கிறார்கள். </p><p>அதோடு அமெரிக்காவுக்கு பல கோடி மில்லியன்கள் செலவாகிவிட்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தள பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் ,</p><p>

20 வருடங்கள் நடந்த ஆப்கானிஸ்தான் போரில் 2 ஆயிரம் வீரர்களும், 8 வருடங்கள் நடந்த ஈராக் போரில் 4,800 வீரர்களும், 19 வருடம் நடந்த வியட்நாம் போரில் 56,220 பேரும், 3 வருடங்கள் நடந்த கொரியன் போரில் 36,575 வீரர்களும், ஒரு நாள் நடந்த வெனிசுலா போரில் யாரும் இறக்கவில்லை, ஈரானுடான 4 மாத போரில் 18 அமெரிக்கா ராணுவ வீரர்கள் மட்டுமே இறந்துள்ளனர் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்</p>]]></content>
            <updated>2026-07-22T16:39:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மாயமான 11 வயது சிறுவனை தேடும் பணி ஏழாவது நாளாகவும் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/search-for-missing-calgary-child-parker-1784735950"></link>
            <id>https://canadamirror.com/article/search-for-missing-calgary-child-parker-1784735950</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்டா மாகாணம் கால்கரி நகரில் காணாமல் போன 11 வயது சிறுவன் பார்கர் வெல்ஸ்ஐ கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை புதன்கிழமையுடன் ஏழாவது நாளாகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்டா மாகாணம் கால்கரி நகரில் காணாமல் போன 11 வயது சிறுவன் பார்கர் வெல்ஸ்ஐ கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை புதன்கிழமையுடன் ஏழாவது நாளாகவும் தொடர்கிறது.
</p><p>கால்கரியின் வடமேற்கு பகுதியில் உள்ள Connaught Drive N.W.-இல் அமைந்திருந்த தனது சிறுவர் பராமரிப்பு மையத்திலிருந்து பார்கர் காணாமல் போனதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;கால்கரி காவல்துறை, கண்காணிப்பு கமெரா பதிவுகளின் அடிப்படையில் பார்கர் சென்றதாக உறுதிப்படுத்தப்பட்ட பாதையை காட்டும் வரைபடத்தையும் வெளியிட்டது.
தேடுதலை கைவிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1b74d5c-977b-43cd-b7f5-961df3857e30/26-6a60e8d019010.webp' /></p><p> </p><p>இது ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகப்பெரிய துயரமான கனவாகும். இந்த கடினமான நேரத்தில் பார்கரின் குடும்பத்துடன் எங்கள் மனமும் இணைந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இதுவரை 400-க்கும் மேற்பட்ட கால்கரி காவல்துறை அதிகாரிகளும், பயிற்சி பெற்ற தன்னார்வலர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>
தேடுதல் நடவடிக்கையின் போது 7,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 5,500 மணிநேரத்திற்கும் அதிகமான தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும், பொதுமக்களிடமிருந்து 300-க்கும் மேற்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, ஒவ்வொரு தகவலும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
அதேவேளை, தனியார் வீடுகளில் அனுமதியின்றி நுழைந்து தேடுதல் நடத்தவோ, அங்குள்ள மக்களை எதிர்கொள்ளவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தனிப்பட்ட விசாரணைகளை முன்னெடுக்கவோ கூடாது என்று காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p> இத்தகைய நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வ தேடுதல் பணிகளை பாதிப்பதுடன், சமூகத்தின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T16:02:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/national-crime-rates-and-crime-severity-fell-1784734731"></link>
            <id>https://canadamirror.com/article/national-crime-rates-and-crime-severity-fell-1784734731</id>
            <summary type="text">கனடாவில் கடந்த ஆண்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் 2025-ஆம் ஆண்டில் குற்றங்களின் விகிதமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் கடந்த ஆண்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கனடாவில் 2025-ஆம் ஆண்டில் குற்றங்களின் விகிதமும் குற்றங்களின் தீவிரமும் குறைந்துள்ளதாக கனடா புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>கனடாவின் குற்றத் தீவிரக் குறியீடு கடந்த ஆண்டில் 5 சதவீதம் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/226fbfa0-156c-460d-8879-5a773b98f66e/26-6a60e40d50430.webp' /></p><p> </p><p>
அதற்கு முந்தைய 8 ஆண்டுகளாக இக்குறியீடு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சரிவைக் கண்டுள்ளது.</p><p>
குற்றங்களின் தீவிரத்தைப் பொருட்படுத்தாமல், மொத்தக் குற்றங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் வழக்கமான குற்ற விகிதம் 2025-ஆம் ஆண்டில் 2 சதவீதம் குறைந்துள்ளது.</p><p>
வீடுகளின் கதவு/பூட்டை உடைத்துத் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் குறைந்ததே குற்றத் தீவிரக் குறியீடு சரிந்ததற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.</p><p>
கொலைகள், மோட்டார் வாகனத் திருட்டுகள் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற குற்றச் செயல்களின் தேசிய விகிதமும் குறைந்துள்ளது.
அதேவேளையில், கடைகளில் பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
</p><p>2025-இல் ஏமாற்று வேலை மற்றும் மோசடி வழக்குகள் சற்றே குறைந்திருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் இத்தகைய வழக்குகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. </p><p>இதனால் 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய மோசடி விகிதம் இன்னும் 61 சதவீதம் அதிகமாகவே உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T15:45:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cricketer-david-warner-faces-9-months-in-prison-1784726905"></link>
            <id>https://canadamirror.com/article/cricketer-david-warner-faces-9-months-in-prison-1784726905</id>
            <summary type="text">&amp;nbsp; அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட்டில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு அணி தலைவராக செயல்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bce6201-0ed5-43cc-bf5a-94c7c6472f06/26-6a60c57b520eb.webp' /></p><p> </p><p>&nbsp;கடந்த ஏப்ரல் மாதம், ஈஸ்டர் பண்டிகை அன்று, சிட்னியில் 3 கிளாஸ் வைன் குடித்து விட்டு டேவிட் வார்னர் காரை ஓட்டிச் சென்றார். 

போக்குவரத்து பொலிஸாரின் வழக்கமான சோதனையில் டேவிட் வார்னர், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகம் மது அருந்தியது உறுதியானது. </p><p>இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, டேவிட் வார்னர் மது அருந்தியதை ஒப்புக் கொண்டதாக அவரது வழக்கறிஞர் ஹில் குறிப்பிட்டார். 

மேலும் தனது செயல் முட்டாள்தனமானது என்றும், மது அருந்தி விட்டு வாடகை காரில் செல்லாமல் தானே வாகனத்தை ஓட்டிச் சென்றது தவறு எனவும் டேவிட் வார்னர் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 18 ஆம் திகதி தண்டனை விவரங்களை அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். </p><p>

எனவே, டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனையும், 6 மாதங்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு தடையும், இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-22T13:26:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயில் பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-french-firefighters-killed-in-wildfire-1784726702"></link>
            <id>https://canadamirror.com/article/two-french-firefighters-killed-in-wildfire-1784726702</id>
            <summary type="text">&amp;nbsp; தென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயை அணைக்க முயன்றபோது இரண்டு பிரெஞ்சு தீயணைப்பு வீரர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயை அணைக்க முயன்றபோது இரண்டு பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
</p><p>
விமான நிலைய வாகன நிறுத்துமிடத்திற்கு அருகிலுள்ள ஒரு புதரில் தொடங்கிய இந்தத் தீ, பின்னர் அருகிலுள்ள ஒரு கட்டிடத்திற்கும் பரவியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcb6e380-28ff-4659-a8e0-858f318993c7/26-6a60c4b07c914.webp' /></p><p>
</p><p>
இந்தத் தீயினால் ஏற்பட்ட பெரும் புகை மண்டலத்துடன், போர்டோ விமான நிலையத்திற்கு வரும் பல விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T13:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக்கிண்ண கோப்பை ஷாப்பிங் பையில் ; சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/world-cup-shopping-bag-video-viral-social-media-1784704778"></link>
            <id>https://canadamirror.com/article/world-cup-shopping-bag-video-viral-social-media-1784704778</id>
            <summary type="text">ஸ்பெயின் அணி உலகக்கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து, வீரர் Marc Cucurella FIFA உலகக்கிண்ணத்தை ஒரு சாதாரண ஷாப்பிங் பைக்குள் வைத்தபடி எடுத்துச் செல்லும் காட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் அணி உலகக்கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து, வீரர் Marc Cucurella FIFA உலகக்கிண்ணத்தை ஒரு சாதாரண ஷாப்பிங் பைக்குள் வைத்தபடி எடுத்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
</p><p>
இந்தக் காட்சியை பார்த்த பலருக்கும் முதலில் எழுந்த கேள்வி, “உலகின் மிக மதிப்புமிக்க விளையாட்டு சின்னங்களில் ஒன்றான FIFA உலகக்கிண்ணத்தை இவ்வளவு சாதாரணமாக எடுத்துச் செல்ல முடியுமா?” என்பதாகும்.</p><p>

FIFA உலகக்கிண்ணம் சாதாரணமாக தயாரிக்கப்பட்ட ஒரு கோப்பை அல்ல. இதன் உயரம் 36.8 சென்டிமீற்றர் ஆகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12409645-74f2-4f8b-bb97-4ab112664c3c/26-6a606f0cd9ec0.webp' /></p><p>மேலும் இதன் எடை 6.175 கிலோகிராம். 6 கிலோகிராமுக்கும் அதிகமான எடையைக் கொண்ட ஒரு பொருளை, எந்தவித சிரமமும் இல்லாமல் ஒரு சாதாரண பையில் எடுத்துச் செல்வது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
</p><p>
Cucurella அந்தக் கிண்ணத்தை எடுத்துச் செல்லும் விதம், அதிக எடை கொண்ட பொருளை கையாளும் ஒருவரின் உடல் மொழியாக தெரியவில்லை. மாறாக, மிகவும் இலகுவான பொருளை எடுத்துச் செல்வது போன்ற இயல்பான தோற்றத்தை அது வழங்குகிறது.</p><p>

இதனுடன் தொடர்புடைய மற்றொரு முக்கிய விடயம், FIFA உலகக்கிண்ணத்தின் பாதுகாப்பு நடைமுறைகளாகும். </p><p>அசல் உலகக்கிண்ணம், சாம்பியன் அணி வீரர்கள் கொண்டாட்டத்தின் போது கையில் ஏந்த அனுமதிக்கப்பட்டாலும், அதன் பின்னர் அது எப்போதும் FIFA அதிகாரிகளின் கண்காணிப்பிலேயே இருக்கும்.
</p><p>
அசல் கிண்ணத்தை வீரர்கள் தங்களது விருப்பப்படி மைதானம், உடைமாற்றும் அறை அல்லது பிற இடங்களுக்கு எடுத்துச் செல்வது வழக்கமான நடைமுறை அல்ல.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd2ca693-3f04-47de-b7db-4245bb50671e/26-6a606f0c37424.webp' /></p><p>இதன் காரணமாக, வெற்றிக் கொண்டாட்டங்கள், புகைப்பட நிகழ்ச்சிகள் மற்றும் ஊடக நிகழ்வுகளுக்காக FIFA தரப்பில் Replica Trophy எனப்படும் மாதிரி கிண்ணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.</p><p> அவை தோற்றத்தில் அசல் கிண்ணத்தைப் போன்றே இருந்தாலும், வேறு பொருட்களால் தயாரிக்கப்படுவதால் எடை குறைவாக இருக்கும்.
</p><p>
எனவே, Marc Cucurella எடுத்துச் சென்றது உண்மையான FIFA உலகக்கிண்ணம் அல்லாமல், கொண்டாட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் Replica Trophy ஆக இருக்கலாம் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அந்தக் கிண்ணம் Replica Trophy என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இதுவரை வெளியாகவில்லை. </p><p>காட்சியில் தெரியும் விதம், கிண்ணத்தின் எடை மற்றும் FIFA-வின் பாதுகாப்பு நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த ஊகம் முன்வைக்கப்படுகிறது.
</p><p>
வைரலாகியுள்ள இந்தக் காட்சி, உலகக்கிண்ணம் தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அதன் உண்மையான மதிப்பு குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T13:20:26+00:00</updated>
        </entry>
    </feed>
