<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-08T11:51:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 சதவீதம் வரி ; அமெரிக்க செனட் சபையில் நிறைவேறிய சட்டமூலம் ; உலகிற்கு காத்திருக்கும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-senate-passes-bill-for-100-tariff-on-imports-1786188078"></link>
            <id>https://canadamirror.com/article/us-senate-passes-bill-for-100-tariff-on-imports-1786188078</id>
            <summary type="text">ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க செனட் அவையில் (U.S. Senate) 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p>

 

"லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026" என அழைக்கப்படும் இந்தச் சட்டம், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகை செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/776d4507-4b10-4ce7-9286-ad411e2fb0d7/26-6a77113004af5.webp' /></p><p> </p><p>

 

இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்டால், சீனா மற்றும் இந்தியா உட்பட ரஷ்ய எரிபொருளை இறக்குமதி செய்யும் குறைந்தது ஐந்து முக்கிய நாடுகளைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

 

மேற்கத்திய தடைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரகசிய கடல்சார் விநியோக வலையமைப்புகளையும் இந்த சட்டமூலம் குறிவைக்கிறது.
</p><p>
 

செனட் சபையில் 86–11 என்ற வாக்குக் கணக்கில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இது அடுத்து பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்படும்.</p><p>பிரதிநிதிகள் சபையின் கோடைக்கால விடுமுறை காரணமாக, அங்கு ஓகஸ்ட் மாதத்திற்குப் பிறகு (செப்டம்பர் தொடக்கத்தில்) தான் வாக்கெடுப்பு நடைபெறும்.</p><p>

 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர் நடவடிக்கைகளுக்குச் செல்லும் பணப்புழக்கத்தைத் தடுப்பதே இதன் முதன்மை நோக்கம் என அமெரிக்க அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

 

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி இந்த நடவடிக்கையை வரவேற்று அமெரிக்க செனட் சபைக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-08T11:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 கோடி ரூபாயை குப்பையில் வீசிய பெண் ; இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-throws-rs-110-million-in-trash-1786173364"></link>
            <id>https://canadamirror.com/article/woman-throws-rs-110-million-in-trash-1786173364</id>
            <summary type="text">உலகமெங்கும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு லாட்டரி சீட் வாங்கும் பழக்கம் இருக்கிறது. ஏனெனில் அதிர்ஷ்டம் நமக்கு அடித்து நாம் லட்சாதிபதியாகவோ, கோடீஸ்வரனாகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகமெங்கும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு லாட்டரி சீட் வாங்கும் பழக்கம் இருக்கிறது. ஏனெனில் அதிர்ஷ்டம் நமக்கு அடித்து நாம் லட்சாதிபதியாகவோ, கோடீஸ்வரனாகவோ மாறிவிடமாட்டோமோ என்கிற ஆசையும் எதிர்பார்ப்புமே இதற்கு காரணம்.</p><p> இந்நிலையில்தான், தெற்கு இத்தாலியில் 11 கோடி விழுந்த லாட்டரி சீட்டை ஒரு பெண் தெரியாமல் குப்பையில் விசிய சம்பவம் நடந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1f5552a-d7cc-4fc2-a879-c68c9167e4cc/26-6a76d7b59d13e.webp' /></p><p> </p><p>சமீபத்தில் ஒரு பெண் லாட்டரி சீட்டை வாங்கியிருக்கிறார். அதன்பின் தெரியாமல் அந்த லாட்டர் சீட்டை குப்பையில் போட்டுவிட்டார். </p><p>தினமும் வீட்டின் முன்பு குப்பை எடுத்து செல்பவர்கள் அதை எடுத்து சென்றுவிட்டனர்.
</p><p>
அவர் தூக்கி எறிந்த அந்த லாட்டரி சீட்டுக்கு 11 கோடி லாட்டரி விழுந்துவிட்டது. </p><p>குப்பைகளை எடுக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இரண்டு நாட்களாக தேடி அந்த லாட்டரி சீட்டை ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டார்கள். </p><p>தேடுவதற்கான மொத்த செலவையும் அந்த பெண் ஏற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-08-08T10:43:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா கொமெனி ; இஸ்ரேல் வெளியிட்ட தகவலால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/khamenei-in-critical-condition-reports-say-1786182710"></link>
            <id>https://canadamirror.com/article/khamenei-in-critical-condition-reports-say-1786182710</id>
            <summary type="text">ஈரான் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
</p><p>


ஈரான் ஆன்மீக தலைவர் மொஜ்தபா கொமெய்னி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஆட்சியின் உயர் மட்டங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவதாகவும், அவரது மறைவு குறித்த செய்தி விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3365888b-fb04-40a5-9c8f-c454d620848a/26-6a76fc37e2d91.webp' /></p><h2>உடல் நிலை&nbsp;</h2><p>
</p><p>உயர் தலைவராக பதவியேற்ற நாள் முதல், அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. எழுத்துப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தார். அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்பட்டது.
</p><p>


கொமெய்னி கொல்லப்பட்ட தாக்குதலில் மொஜ்தபா கொமெய்னியும் காயமடைந்ததாகவும், அதனால் அவரது தோற்றத்தில் சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் முன்பே செய்திகள் வெளியாகின. அதனால், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.</p><p>


அவரது நிலை பற்றி வெளியான செய்திகளை உறுதிப்படுத்தும் விதமாக, மொஜ்தபா கொமெய்னியை நேரடியாகத் தொடர்புகொள்வது கடினம் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அரசுத் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
</p><p>


மொஜ்தபா கொமெய்னியின் இருப்பிடம் மற்றும் செயல்பாடு தொடர்பாக சர்வதேச மற்றும் பிராந்திய அளவில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவர் ஈரானில் இல்லை என்று ஐக்கிய அரபு அமீரக செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டிருந்தது.
</p><p>


அதேநேரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனியார் செய்தி நிறுவன நேர்காணலில், ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். மேலும் குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கொமெய்னி 90% செயலிழந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


மொஜ்தபா கொமெய்னியின் உடல்நிலை பற்றிய ஊகங்கள் தொடர்ந்து பேசப்பட்ட நிலையிலும் ஈரான் அரசு அதிகாரிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்து வந்தனர். </p><p>அவருக்கு சாதாரண காயங்கள் ஏற்பட்டதாகவும், நாட்டின் இராணுவச் செயல்பாடுகளை அவர் மேற்பார்வையிட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கூறி வந்தனர்.
</p><p>


தற்போது இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் கொமெய்னி உடல்நிலை குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் அதன் நம்பகத்தன்மை குறித்து ஈரான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T09:52:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எட்மண்டனில் கொல்லப்பட்ட இந்தியருக்கு நகர மேயர் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/edmonton-mayor-condolence-for-indian-dies-robbery-1786171228"></link>
            <id>https://canadamirror.com/article/edmonton-mayor-condolence-for-indian-dies-robbery-1786171228</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், நகர மேயர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், நகர மேயர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>


கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டன் நகரில், கொள்ளை முயற்சி ஒன்றின்போது இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78887311-9ebc-4ac5-bee4-df5ec21808d8/26-6a76cf5d4a594.webp' /></p><p>

எட்மண்டனில் மதுபான விடுதி ஒன்றை நடத்திவரும் சுக்ஜீத் சிங் ரந்தாவா (48) என்பவர், புதன்கிழமை இரவு தனது விடுதியை மூடிக்கொண்டிருந்திருக்கிறார்.</p><p>

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சிங் கடையில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவரை சிங் தடுக்க, அந்த நபர் சிங்கை தாக்கியுள்ளார்.
</p><p>
தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, சிங் படுகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.
</p><p>
முதலுதவி சிகிச்சைக்குப் பின் சிங்கை அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில், நிக்கோலஸ் (Nicholas Butler-Chowace, 22) என்னும் கனேடியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
</p><p>

சுக்ஜீத் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள எட்மண்டன் நகர மேயரான ஆண்ட்ரூ நாக், இதுபோன்ற அர்த்தமற்ற வன்முறைச் செயல்கள் நம் சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையே பாதிக்கின்றன என்று கூறியுள்ளார்.
</p><p>
ஒவ்வொரு எட்மண்டன்வாசிக்கும் நம் நகரில் பாதுகாப்பாக உணர உரிமை உண்டு என்று கூறியுள்ள அவர், தன் சமூகத்துக்கு சேவை செய்யும் போதும், தம் கடமையை ஆற்றும்போதும், யாரும் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளார்.</p><p>

வரும் புதன்கிழமை சுக்ஜீத் சிங்குக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T06:40:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெயிலில் இருந்து காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் ; வடகொரியாவில் வினோதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/north-korea-suggests-dog-soup-to-beat-heat-1786169646"></link>
            <id>https://canadamirror.com/article/north-korea-suggests-dog-soup-to-beat-heat-1786169646</id>
            <summary type="text">வடகொரியாவில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுமாறு அந்நாட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரியாவில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு ஊடகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>


கொரிய தீபகற்பம் முழுவதும் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், வடகொரியாவில் தற்போது 98 பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf35822a-a233-49a0-b4fa-747f6663cf70/26-6a76c92fd2830.webp' /></p><p>
</p><p>


இந்த நிலையில், தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் நாயிறைச்சி சூப், மீன் சூப் மற்றும் கோழி இறைச்சிச் சாறு போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் உடல் வெப்பத்தைத் தணிக்க முடியும் என வடகொரிய அரசு ஊடகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
</p><p>


நாயிறைச்சி சூப் கோடைக்காலத்தின் பாரம்பரிய உணவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதனை ஆதரிக்கும் வகையில் அந்நாட்டில் உள்ள பழமொழி ஒன்றும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
</p><p>


மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் நாயிறைச்சியைக் கொண்டு பல்வேறு உணவுகளைத் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டதாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
</p><p>


கடும் வெப்பத்தால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில், நாயிறைச்சி சூப்பை வெயிலை சமாளிப்பதற்கான உணவாக வடகொரிய அரசு ஊடகம் பரிந்துரைத்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T06:14:10+00:00</updated>
        </entry>
    </feed>
