<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-30T17:33:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேஸ்பால் போட்டி பார்த்த இடத்தில் அடித்த அதிர்ஷ்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/10m-lotto-max-prize-he-learned-he-became-1785428664"></link>
            <id>https://canadamirror.com/article/10m-lotto-max-prize-he-learned-he-became-1785428664</id>
            <summary type="text">&amp;nbsp;பேஸ்பால் விளையாட்டுப் போட்டியைக் கண்டு களித்துக் கொண்டிருந்தபோது, தாம் 10 மில்லியன் டாலர் லாட்டரி தொகையை வென்று மில்லியனரான செய்தியை அறிந்து ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பேஸ்பால் விளையாட்டுப் போட்டியைக் கண்டு களித்துக் கொண்டிருந்தபோது, தாம் 10 மில்லியன் டாலர் லாட்டரி தொகையை வென்று மில்லியனரான செய்தியை அறிந்து ஒருவர் வியப்பில் ஆழ்ந்துள்ளார்
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் பணப்பரிசு வென்றுள்ளார்.</p><p> 
ஒன்ராறியோவின் கிங் சிட்டி பகுதியைச் சேர்ந்த பிராண்டன் ஜி, தனது உறவினர் பங்கேற்ற பேஸ்பால் தொடரைப் பார்வையாளர் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது கைபேசிக்கு 'ஒன்ராறியோ லாட்டரி மற்றும் சூதாட்டக் கழகத்திடமிருந்து' தொடர்ச்சியாகப் பல மின்னஞ்சல்கள் வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88f577be-bced-4e0b-bace-87e4c1ef4c29/26-6a6b7daed875d.webp' /></p><p> </p><p>
ஆரம்பத்தில் அவற்றில் சில தேவையற்றவை என்று அவர் நினைத்தபோதிலும், தனது கணக்கில் லாக்-இன் செய்து பார்த்தபோது உண்மை தெரியவந்தது. </p><p>
ஆரம்பத்தில் நான் 10,000 டொலர் மட்டுமே வென்றுள்ளதாக நினைத்தேன். ஆனால், பின்னர்தான் கூடுதல் பூஜ்ஜியங்களைக் கவனித்து, அது 10 மில்லியன் டொலர் என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தேன் என தெரிவித்துள்ளார். </p><p>
உடனே ஆட்டம் நடந்த இடத்தில் இருந்து தனியாகச் சென்று, தனது துணைவியாரை அழைத்து இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
</p><p> வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடப்படும் வரை இந்த அதிர்ஷ்டத்தை இருவராலும் நம்பவே முடியவில்லையாம். 
10 மில்லியன் டொலர் காசோலையைப் பெற்றுக்கொண்ட பிராண்டன், இந்த வெற்றி தமக்கு எதிர்காலத்தைப் பற்றிய மன அமைதியையும் பாதுகாப்பையும் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p> 
எனினும், பணி ஓய்வு பெற இன்னும் சில ஆண்டுகள் இருப்பதால், தொடர்ந்து பணியில் ஈடுபடவே திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T16:37:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நாயைக் காப்பாற்ற முயன்று ஏரியில் மூழ்கிய நபர்: சடலமாக மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-drowns-in-bc-lake-while-trying-to-save-dog-1785428422"></link>
            <id>https://canadamirror.com/article/man-drowns-in-bc-lake-while-trying-to-save-dog-1785428422</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கிப் பலியான நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கிப் பலியான நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> 
'எல்க் வேலி' பொலிஸாருக்கு கூகனூசா ஏரியில் நபர் ஒருவர் நீரில் மூழ்கியதாகத் தகவல் கிடைத்தது.</p><p> 
அல்பெர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த 63 வயதான நபர் ஒருவர், நீரில் தவித்துக் கொண்டிருந்த தனது நாயைக் காப்பாற்றுவதற்காக ஏரியில் குதித்துள்ளார்.அப்போது அவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e62d20a-d9c2-4062-92b9-9326d933385c/26-6a6b79c8769f7.webp' /></p><p> </p><p>
ஆரம்பத்தில் காவல் துறையினரின் படகுகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட போதிலும், அந்த நபரை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>எனினும், அவரது நாய் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்துள்ளது. 
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பலனாக, 'ஹட்டேரியன் அவசரகால நீர்சார் மீட்புக் குழுவின்' உதவியுடன் அவரது சடலம் மீட்கப்பட்டது. </p><p>உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குக் காவல் துறையினர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.</p><p> 
மாகாண அரசின் புள்ளிவிவரங்களின்படி, நடப்பு ஆண்டில் மே 1 முதல் ஜூலை 16 வரை 40 பேர் நீரில் மூழ்கி விபத்தாக உயிரிழந்துள்ளனர்.
</p><p> 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 26 பேர் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில், இந்த ஆண்டு உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T16:24:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு; தெரியாத நபர்களுடன் கட்டிலைப் பகிரும் சீன இளைஞர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rising-cost-of-living-chinese-youth-sharing-bed-1785417695"></link>
            <id>https://canadamirror.com/article/rising-cost-of-living-chinese-youth-sharing-bed-1785417695</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் காரணமாக, இளைஞர்கள் தங்களது மாதாந்தச் செலவுகளைக் குறைப்பதற்கு ஒரு புதிய வழிமுறையைக் கையாண்டு வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் காரணமாக, இளைஞர்கள் தங்களது மாதாந்தச் செலவுகளைக் குறைப்பதற்கு ஒரு புதிய வழிமுறையைக் கையாண்டு வருகின்றனர்.

முன்பின் தெரியாத நபர்களுடன் ஒரே அறையை மாத்திரமன்றி, ஒரே கட்டிலையும் பகிர்ந்துகொள்ளும் (Bed-sharing) போக்கு தற்போது சீனா இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
</p><p>
மத்திய சீன நகரமான வூஹானைச் (Wuhan) சேர்ந்த 25 வயதான வின்னி செங் (Winnie Zeng) என்ற பெண், நேரலை விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றுகிறார்.

தனது மாதாந்த வருமானமான 4,000 யுவானில் கணிசமான தொகையைச் சேமிப்பதற்காக, தனது படுக்கையறையை மற்றொரு பெண்ணுடன் பகிர்ந்துகொள்ளத் தீர்மானித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0b86aa5-491f-4bbb-be7e-e05857b499a6/26-6a6b4fe12f4a9.webp' /></p><h2>&nbsp;நாட்டின் பொருளாதார வீழ்ச்சி</h2><p>

இதன் மூலம் தனது மாதாந்த வாடகையில் 450 யுவானைச் (சுமார் 66 அமெரிக்க டொலர்) சேமிக்கும் அவர், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவே இத்தகைய கடினமான முடிவை எடுத்ததாகக் கூறுகிறார்.
</p><p>
 பீஜிங்கில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நிறுவனமொன்றில் பணியாற்றி வேலை இழந்த 39 வயதான மோர்கன் பான் (Morgan Pan) என்பவரும், கட்டுமான நிறுவனத்தின் வீழ்ச்சியால் வேலையிழந்த பல இளைஞர்களும் தங்களது மாதாந்த வாடகையை குறைப்பதற்காக அறைப் பங்கீட்டைத் தேர்வு செய்துள்ளனர்.</p><p>இந்த போக்கு குறித்து சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான ‘வெய்போ’ (Weibo) மற்றும் 'டூயின்' (Douyin) ஆகியவற்றில் "கட்டிலைப் பகிர்வது என்பது என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு துன்பம்" என்ற ஹேஷ்டேக் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.</p><p>

அத்துடன் 'சியோஹோங்ஷு' (Xiaohongshu) போன்ற செயலிகளில் அறை மற்றும் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளப் பங்காளிகளைத் தேடும் விளம்பரங்களும் அதிகரித்து வருகின்றன.
</p><p>
சீனாவில் வாழும் சுமார் 260 மில்லியன் வாடகைதாரர்கள் மத்தியில் இந்த போக்கு இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளபோதிலும், இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.</p><p>

அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய பணி மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் பணிப்பாளர் மிங்வெய் லியு இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "நகரங்களில் நிலையான வாழ்விடம், நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் தெளிவான வருமான வாய்ப்புகள் இல்லாத சூழலையே இது காட்டுகிறது. </p><p>

இளைஞர்களின் இந்த மனநிலை தொடருமானால், அது நாட்டின் நுகர்வுச் செலவுகள், சொத்து சந்தை மற்றும் திருமண வீதம் ஆகியவற்றைப் பெருமளவில் பாதித்து, நீண்டகாலப் பொருளாதாரச் சவால்களை உருவாக்கும்" என எச்சரித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T13:20:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பர்களைத் துண்டு துண்டாக வெட்டி கொடூரக் கொலை! இங்கிலாந்தை உலுக்கிய பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/uk-serial-killer-james-desborough-jailed-for-life-1785394125"></link>
            <id>https://canadamirror.com/article/uk-serial-killer-james-desborough-jailed-for-life-1785394125</id>
            <summary type="text">&amp;nbsp;இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெஸ்பரோ (40) என்ற நபர், தனது இரு நண்பர்களைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டிக் காட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெஸ்பரோ (40) என்ற நபர், தனது இரு நண்பர்களைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டிக் காட்டுப் பகுதியில் வீசிய சம்பவம் அதிர வைத்துள்ளது.
</p><p>
சந்தேக நபர் குற்றத்திற்காக ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். 

வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் இவருக்கு இறுதி மூச்சு இருக்கும் வரை சிறை தண்டனை (Whole-life Order) வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2833a5e5-0beb-4718-bc45-6d231ab07e73/26-6a6af3ce9fa14.webp' /></p><h2>&nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு</h2><p>
</p><p>
பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் உள்ள காட்டில் தனது குடிசை அருகே வாழ்ந்து வந்த டெஸ்பரோ, அங்குத் தங்கியிருந்த கிளாரியோ அகிலினோ (57) மற்றும் டேனியல் கோல்மேன் (43) ஆகிய இரு நண்பர்களை மிகக் கொடூரமாகக் கொலை செய்தார். </p><p>

கொலைக்குச் பின்னர் இருவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி, சில பாகங்களை எாித்து ஆற்றிலும், எஞ்சிய பாகங்களை ஆழமற்ற குழி தோண்டியும் மறைக்க முயன்றார்.</p><p> 

‘டெக்ஸ்டர்’ தொடரில் வருவது போல உடல்களைத் துண்டு துண்டாக வெட்டும் காட்சிகள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தடயவியல் அதிகாரிகளிடம் அவர் கூறியது விசாரணையில் அம்பலமானது.
</p><p>
போலீசார் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், காட்டில் இருந்து எரிக்கப்பட்ட 1,900 எலும்புத் துண்டுகளையும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களையும் மீட்டனர்.</p><p> 
கொலைக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் வங்கி அட்டைகளைப் பயன்படுத்திப் பணம் எடுத்த டெஸ்பரோ, அவர்கள் உயிருடன் இருப்பது போல் போலியான தகவல்களையும் பரப்ப முயன்றார். </p><p>

இந்த வழக்கு விசாரணையின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, குரட்டை விட்ட காரணத்திற்காகத் தனது சக கைதியான ஸ்டீவன் கெம்ப்ஸ்டர் என்பவரையும் அவர் கழுத்தை நெரித்துக் கொன்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.
</p><p>
மூன்று பேரைக் கொடூரமாகக் கொன்ற தொடர் கொலையாளியான ஜேம்ஸ் டெஸ்பரோ, மனித நேயமற்ற முறையில் கொடூரச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக நீதிபதி திரு. சைனி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். </p><p>

இவருக்கு மனித உயிர்கள் மீது எவ்வித மரியாதையும் இல்லை; இவர் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான நபர்” எனக் கூறி நீதிமன்றம் இவருக்குக் கருணையற்ற ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T13:10:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வயது சிறுவன் படுகொலை: தேடப்பட்டு வந்த நபர் கனடாவில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/quebec-murder-suspect-arrested-three-day-manhunt-1785400237"></link>
            <id>https://canadamirror.com/article/quebec-murder-suspect-arrested-three-day-manhunt-1785400237</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கியூபெக் மாகாணம், ஷவினிங்கன் பகுதியில் 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 41 வயதான பிலிப் பெனாய்ட் என்பவரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கியூபெக் மாகாணம், ஷவினிங்கன் பகுதியில் 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 41 வயதான பிலிப் பெனாய்ட் என்பவரைக் கியூபெக் மாகாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
நான்கு நாட்களாக தீவிரமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், ஷவினிங்கன் நகருக்கு வடக்கே சுமார் 57 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக் வேய்லெட் பகுதிக்கு அருகில் புதன்கிழமை பிற்பகல் 4:30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
</p><p>கைது செய்ய முயன்ற போது அவர் பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர் பலவந்தமாகக் கட்டுப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65959b7-de52-4cc3-b193-65a8ccee7a9f/26-6a6b0baf6e421.webp' /></p><p>
</p><p>சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு, கூர்மையற்ற கனமான பொருளால் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில், பிலிப் பெனாய்ட் மீது முதல் நிலைக்கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 201-வது அவென்யூவில் உள்ள வீடொன்றில் இருந்து சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் கொலை வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.</p><p>
பிலிப் பெனாய்ட் மனசிதைவு நோய் மற்றும் சமூக பயம் உள்ளிட்ட தீவிர மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
தேடுதல் வேட்டையின் போது, இவரைக் கண்டால் பொதுமக்கள் யாரும் நேரடியாக அணுக வேண்டாம் எனவும், உடனடியாக அவசர உதவி எண்ணான 911-ஐத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் எச்சரித்திருந்தனர்.</p><p>
கொல்லப்பட்ட சிறுவனுக்கான அஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு கியூபெக்கின் ட்ராய்ஸ்-ரிவியர்ஸ் பகுதியில் நடைபெறவுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T13:09:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அட்லாண்டிக் பெருங்கடலில் மாபெரும் கடற்பாசிப் படலம் ; சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/massive-seaweed-bloom-in-the-atlantic-ocean-1785413323"></link>
            <id>https://canadamirror.com/article/massive-seaweed-bloom-in-the-atlantic-ocean-1785413323</id>
            <summary type="text">&amp;nbsp; அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 8,500 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரவியுள்ள மாபெரும் கடற்பாசிப் படலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சூழலியல் நிபுணர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 8,500 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரவியுள்ள மாபெரும் கடற்பாசிப் படலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, NASA-வின் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

விஞ்ஞானிகளின் தகவலின்படி, வரலாற்றில் பதிவாகியுள்ள கடற்பாசி வளர்ச்சிகளில் இது இரண்டாவது மிகப்பெரிய கடற்பாசிப் படலமாகக் கருதப்படுகிறது.
</p><p>
இந்த கடற்பாசிகள் கடற்கரைகளில் கரை ஒதுங்கும்போது கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், கடல் வாழ் உயிரினங்கள், கடல்சார் சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பகுதிகளின் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
மேலும், இந்த கடற்பாசிப் படலத்தின் வளர்ச்சி மற்றும் நகர்வை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், கடலோர நாடுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T12:06:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்; ஐ.நா. பொதுச்செயலாளர் அவசர அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-iran-tensions-un-secretary-general-urgent-call-1785411484"></link>
            <id>https://canadamirror.com/article/us-iran-tensions-un-secretary-general-urgent-call-1785411484</id>
            <summary type="text">மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு, இரு தரப்பும் தூதரக ரீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு, இரு தரப்பும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்ப வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் (Antonio Guterres) வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக நியூயோர்க்கில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ஐ.நா.வின் துணைப் பேச்சாளர், "இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால், இந்த மோதல் ஒரு பெரிய போராக விரிவடையும் என்று பொதுச்செயலாளர் நீண்ட காலமாகவே கவலை கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59834829-1f55-4cf1-84ca-d8e6ea1886d1/26-6a6b379e08329.webp' /></p><p>
</p><p>
கடந்த சில மணிநேரங்களில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது, அந்த அச்சம் நிஜமாவது போலவே தோன்றுகிறது" எனக் குறிப்பிட்டார்.
</p><p>
தற்போது அரங்கேறி வரும் வன்முறைச் சம்பவங்கள் எந்த விதத்திலும் நேர்மறையானவை அல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளும் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்பதில் பொதுச்செயலாளர் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>

 பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் மத்தியஸ்த முயற்சிகளைப் பயன்படுத்தி, தூதரக வழிமுறைகள் மூலம் தீர்வுகாண முன்வர வேண்டும் என ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T11:36:07+00:00</updated>
        </entry>
    </feed>
