<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-31T20:39:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 11 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/11-killed-as-bus-overturns-in-south-africa-1785528442"></link>
            <id>https://canadamirror.com/article/11-killed-as-bus-overturns-in-south-africa-1785528442</id>
            <summary type="text">தென் ஆப்பிரிக்காவின் மத்திய ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ள என்1 நெடுஞ்சாலையில்&amp;nbsp; பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், ஐந்து குழந்தைகள் உட்பட பதினொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் ஆப்பிரிக்காவின் மத்திய ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ள என்1 நெடுஞ்சாலையில்&nbsp; பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், ஐந்து குழந்தைகள் உட்பட பதினொரு பேர் உயிரிழந்தனர்.</p><p> மேலும், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><br></p><p>

</p><p>தென் ஆப்பிரிக்காவின் ட்ராம்ப்ஸ்பர்க்கிற்கு வடக்கே சுமார் 24 கி.மீ தொலைவில், ஈடன்பர்க் செல்லும் வழியில் நேற்று இரவு 9.30 மணியளவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
</p><p>
அந்த பேருந்தில் சுமார் 60 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
</p><p>
இதில், பேருந்திற்கு வெளியே 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரவில் அனுமதிக்கப்பட்டுளதாக துறை செய்தித் தொடர்பாளர் மோண்ட்லி மவாம்பி கூறினார்.</p><p>

மேலும், வாகனத்தின் அடியில் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்புக் குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-31T20:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்திய மாணவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை:]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-man-whod-been-studying-in-canada-sentenced-1785505943"></link>
            <id>https://canadamirror.com/article/indian-man-whod-been-studying-in-canada-sentenced-1785505943</id>
            <summary type="text">&amp;nbsp;முதியவர்களை இலக்கு வைத்து பல மில்லியன் டொலர் பணமோசடியில் ஈடுபட்ட இந்திய இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முதியவர்களை இலக்கு வைத்து பல மில்லியன் டொலர் பணமோசடியில் ஈடுபட்ட இந்திய இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
</p><p>கனடாவிற்கு மாணவர் விசா மூலம் வந்து கல்லூரியில் படித்து வந்த ரோஷன் ஷா என்ற இந்தியப் பிரஜை, அமெரிக்காவில் முதியவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பிரம்மாண்ட பணமோசடி வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
</p><p>அமெரிக்காவின் விஸ்கான்சின் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக இவருக்கு நீதிபதி 48 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30810a8d-7463-4044-8ab6-2c6a949f28d2/26-6a6ca898e46c8.webp' /></p><p>
கனடாவில் படித்து வந்த ரோஷன் ஷா, மோசடி மூலம் கிடைத்த பணத்தையும் தங்கத்தையும் சேகரிப்பதற்காக சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார்.</p><p>
இந்தியாவில் உள்ள இவரது நண்பர்கள் அமெரிக்காவில் உள்ள முதியவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்களின் அடையாள அட்டைகள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் பயமுறுத்தியுள்ளனர்.
</p><p>பாதுகாப்பிற்காகத் தங்களது பணம் அல்லது தங்கத்தைப் போலி கூட்டாட்சி முகவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்களை நம்ப வைத்துள்ளனர். </p><p>
இந்த போலி முகவராகவே ரோஷன் ஷா நேரில் சென்று பணத்தைச் சேகரித்துள்ளார்.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 15 முதியவர்களிடம் இருந்து மொத்தம் 3.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பணம் மற்றும் தங்கத்தை ரோஷன் ஷா திரட்டியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
விஸ்கான்சினில் உள்ள நியூ பெர்லின் பகுதியில் மீண்டும் ஒரு மோசடிப் பணத்தைச் சேகரிக்க முயன்றபோது, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் உள்ளூர் காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T19:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான போர் வெற்றிகரமாக நடைபெறுகிறது – டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-says-war-going-well-1785516413"></link>
            <id>https://canadamirror.com/article/trump-says-war-going-well-1785516413</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>எல்லாம் நன்றாகவே நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இறுதியில் ஏதோ ஒரு முடிவு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a9fa9df-8449-4edb-8f45-2915fe50745e/26-6a6cd17eef473.webp' /></p><p>
</p><p>மேலும், எங்கள் படைகள் ஈரானை கடுமையாக தாக்கி வருகின்றன. அவர்களை முற்றிலும் தளர்ச்சியடையச் செய்து வருகிறோம். </p><p>நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம். இறுதியில் அவர்கள் பின்வாங்குவதைத் தவிர வேறு வழியிருக்காது என டிரம்ப் கூறியுள்ளார்.</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், டிரம்பின் இந்த கருத்து மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T19:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில், ஜோதிடர் என 8 லட்சம் டொலர் மோசடி செய்த நபர் இந்தியா தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-man-who-posed-as-psychic-1785515890"></link>
            <id>https://canadamirror.com/article/indian-man-who-posed-as-psychic-1785515890</id>
            <summary type="text">இந்தியா தப்பியோட்டம்
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா தப்பியோட்டம்
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைக்கு எதிராக நாடு முழுவதும் பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
கங்காதர் பாபு என்பவர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
 2024 ஏப்ரல் முதல் 2025 செப்டம்பர் வரை இந்த மோசடி இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
விசாரணையின்படி, "பாபு" என்ற பெயரில் சேவையாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர், தன்னை ஆன்மீக சக்தி கொண்டவராகவும், எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடராகவும், ஆன்மீக சிகிச்சையளிப்பவராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/133c6d93-1595-4152-901d-778eab4d3550/26-6a6ccf7430536.webp' /></p><p>
</p><p>பாதிக்கப்பட்டவரையும் அவரது குடும்பத்தினரையும் மரணம் அல்லது கடுமையான தீங்கு சூழும் என அச்சுறுத்தி, அதிலிருந்து காப்பாற்ற விசேட ஆன்மீக சடங்குகள் நடத்த வேண்டுமெனக் கூறி தொடர்ந்து பணம் பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>கங்காதர் பாபு மீது 5,000 டொலருக்கு மேற்பட்ட மோசடி, குற்றச்செயலில் கிடைத்த வருமானத்தை வைத்திருத்தல் மற்றும் நிதிச் சலவையில் ஈடுபடல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>
சந்தேகநபர் தற்போது இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என டொராண்டோ காவல்துறை நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கங்காதர் பாபு சுமார் 5 அடி 6 அங்குல உயரம், ஒல்லியான உடலமைப்பு, கருமையான சுருட்டை முடி, அடர் பழுப்பு நிறக் கண்கள், ஒழுங்காக வெட்டப்பட்ட தாடி மற்றும் முன்பற்களுக்கு இடையில் தெளிவான இடைவெளி கொண்டவராக விவரிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த நபரால் ஏமாற்றப்பட்டிருக்கக்கூடிய மேலும் பலர் இருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதுடன், வழக்குத் தொடர்பான தகவல்கள் இருப்பவர்கள் முன்வருமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T19:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காணாமல் போன நபரைத் தேடும் காவல்துறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-need-publics-help-locating-missing-alliston-1785515117"></link>
            <id>https://canadamirror.com/article/police-need-publics-help-locating-missing-alliston-1785515117</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் உள்ள அலிஸ்டன் பகுதியைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவரைப் பற்றிய தகவல் அறிந்தால் காவல்துறைக்குத் தெரிவிக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் உள்ள அலிஸ்டன் பகுதியைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவரைப் பற்றிய தகவல் அறிந்தால் காவல்துறைக்குத் தெரிவிக்குமாறு நொட்டவாசாகா ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளது.</p><p>
30 வயதான கோரி சிமான்ஸ்கி என்ற நபர், கடைசியாக ஜூலை 14 அன்று மாலை சுமார் 6:00 மணியளவில், அலிஸ்டனில் உள்ள விக்டோரியா வீதியில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இவர், வெள்ளையினத்தைச் சேர்ந்தவர் எனவும் சுமார் 6 அடி உயரம், 230 பவுண்ட் (104 கிலோ) எடை கொண்டவர் எனவும், நடுத்தர உடல்வாகு, தோள்பட்டை வரை நீண்ட பொன்னிற தலைமுடி மற்றும் நீல நிற கண்களைக் கொண்டவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca14a095-84d0-477e-a744-14931fd009f4/26-6a6ccc6eaf138.webp' /></p><p>
கோரியின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து அவரது குடும்பத்தினரும் காவல்துறையினரும் மிகுந்த கவலையடைந்துள்ளனர். </p><p>அப்பகுதியில் வசிப்பவராக இருந்தால், உங்கள் வீட்டு சிசிடிவி காட்சிகளை பார்த்து ஏதேனும் தகவல்கள் இருந்தால் பகிருமாறு கோரப்பட்டுள்ளது.</p><p>
கோரி சிமான்ஸ்கி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக 1-888-310-1122 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T18:29:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொன்ட்ரியல் குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/on-patrol-article-shots-fired-at-a-montreal-home-1785513529"></link>
            <id>https://canadamirror.com/article/on-patrol-article-shots-fired-at-a-montreal-home-1785513529</id>
            <summary type="text">கனடாவின் மொன்ட்ரியல் நகரில் உள்ள &#039;கோட்-தே-னேஜ்—நோத்ர-டாம்-தே-கிராஸ்&#039; பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீடு ஒன்றைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மொன்ட்ரியல் நகரில் உள்ள 'கோட்-தே-னேஜ்—நோத்ர-டாம்-தே-கிராஸ்' பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீடு ஒன்றைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>வெள்ளிக்கிழமை அதிகாலை 2:50 மணியளவில் பொன்சார்ட் அவென்யூ அருகே உள்ள மெரிடியன் அவென்யூவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மொன்ட்ரியல் காவல்துறையினருக்கு அவசர அழைப்பு (911) வந்துள்ளது.</p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், வீட்டின் முன்பகுதியில் பல துப்பாக்கிச் சூட்டுத் தழும்புகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2233109-3118-4e13-8f84-3c00cd008af3/26-6a6cc63b34bfc.webp' /></p><p>
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்த போது, வீட்டின் முன்பகுதியைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. </p><p>நபர் ஒருவர் வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினர் வருவதற்கு முன்பாகவே துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.</p><p> 
மேலும், இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மோப்ப நாய் படை உதவியுடன் தடயவியல் நிபுணர்கள் மற்றும் புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் சோதனைகளை மேற்கொண்டு தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். </p><p>
இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து மொன்ட்ரியல் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T17:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவில் தீவிரமடையும் காட்டுத்தீ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-firefighters-face-critical-days-as-dry-fuels-1785508468"></link>
            <id>https://canadamirror.com/article/bc-firefighters-face-critical-days-as-dry-fuels-1785508468</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வீசி வரும் பலத்த காற்று மற்றும் வறண்ட காலநிலை காரணமாக, காட்டுத்தீ மேலும் தீவிரமடைந்து மக்கள் வாழும் பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வீசி வரும் பலத்த காற்று மற்றும் வறண்ட காலநிலை காரணமாக, காட்டுத்தீ மேலும் தீவிரமடைந்து மக்கள் வாழும் பகுதிகளை அச்சுறுத்தி வருகிறது.</p><p> 
மாகாணத்தைக் கடந்து செல்லும் குளிர்காற்று முகப்பு காரணமாக, மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>
குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்குப் பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, நிலப்பரப்புகள் மிக எளிதில் தீப்பற்றக்கூடிய நிலையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0584afbf-3d55-4a0b-b38f-c3bd74e19e99/26-6a6cb2762092c.webp' /></p><p> 
தென்மேற்கு திசையிலிருந்து வீசும் காற்று, பின்னர் வடமேற்கு திசையை நோக்கி மாறக்கூடும் என்பதால், தீயணைப்பு வீரர்களுக்கு அடுத்தடுத்த நாட்கள் மிகவும் சவாலானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கிளிண்டன் பகுதிக்கு அருகே எரிந்து வரும் 'பேர் லேக்' காட்டுத்தீ, இதுவரை சுமார் 732 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குப் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இது மாகாணத்தில் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய 4 முக்கியக் காட்டுத்தீப் பகுதிகளில் ஒன்றாகும். 
கிளிண்டனுக்கு வடகிழக்கே உள்ள கிரீன் லேக் பகுதி வாசஸ்கள், எந்த நேரத்திலும் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>கிளிண்டன் கிராமப் பகுதியில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் ஆங்காங்கே எரியும் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருவதால், மக்கள் எப்போது மீண்டும் தங்களது வீடுகளுக்குத் திரும்புவார்கள் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.</p><p> 
கடுமையான காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாகப் புதிய காட்டுத்தீச் சம்பவங்கள் உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T17:00:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் நுளம்புகள் தொல்லை- பொது மக்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/its-the-start-of-mosquito-season-in-toronto-1785506529"></link>
            <id>https://canadamirror.com/article/its-the-start-of-mosquito-season-in-toronto-1785506529</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் மீண்டும் நுளம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் &#039;வெஸ்ட் நைல் வைரஸ்&#039; மனித பாதிப்பு பதிவாகியுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் மீண்டும் நுளம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் 'வெஸ்ட் நைல் வைரஸ்' மனித பாதிப்பு பதிவாகியுள்ளதாக டொராண்டோ பொது சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
</p><p>இந்த வைரஸ் முதன்முதலில் 1937 ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள 'வெஸ்ட் நைல்' என்ற பகுதியில் கண்டறியப்பட்டது.</p><p>
2000-களின் தொடக்கத்தில், இடம்பெயரும் பறவைகள் (காகங்கள், மைனாக்கள் போன்றவை) மூலமாக இந்த வைரஸ் கனடாவுக்குப் பரவியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69a89072-d55e-419d-ba75-62aadeef407a/26-6a6caae31a5a3.webp' /></p><p>
</p><p>நுளம்புகள் பறவைகளைக் கடித்து, பின்னர் மனிதர்களைக் கடிப்பதன் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது.</p><p>
ஒன்டாரியோ மாகாணம் முழுவதும் ஜூலை இறுதி நிலவரப்படி 17 நுளம்பு மாதிரிகளில் இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டொராண்டோவில் பெய்த அதிக மழை காரணமாகத் தேங்கியுள்ள நீர், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக அமைந்துள்ளது.</p><p>
கடந்த குளிர்காலத்தில் பெய்த அதிக பனிப்பொழிவு, குளிர்காலத்தில் வாழும் நுளம்புகளையும் அவற்றின் முட்டைகளையும் பாதுகாக்கும் ஒரு அரணாக அமைந்துவிட்டது.
</p><p>பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் நுளம்புகளின் எண்ணிக்கை உச்சத்தை அடையும் எனவும், செப்டம்பர் மாதம் வரை இதன் தாக்கம் இருக்கும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>பொதுவாக இந்த வைரஸால் பாதிக்கப்படும் 70% முதல் 80% பேருக்கு எந்தவொரு அறிகுறியும் வெளியே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T16:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பொலிஸ் அதிகாரியைக் கொன்ற குற்றவாளிக்கு மீண்டும் பிணை மறுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/parole-denied-for-man-who-killed-toronto-police-1785504960"></link>
            <id>https://canadamirror.com/article/parole-denied-for-man-who-killed-toronto-police-1785504960</id>
            <summary type="text">சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு டொராண்டோ காவல் அதிகாரியைச் சுட்டுக்கொன்ற குற்றவாளி கிளிண்டன் கெய்ல், தாக்கல் செய்த பிணை மனு 4-வது முறையாக மீண்டும் நிராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு டொராண்டோ காவல் அதிகாரியைச் சுட்டுக்கொன்ற குற்றவாளி கிளிண்டன் கெய்ல், தாக்கல் செய்த பிணை மனு 4-வது முறையாக மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
</p><p>போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர் ஒருவரைத் துரத்திச் சென்றபோது, 25 வயதான காவல் அதிகாரி டாட் பெய்லிஸ் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
</p><p>இந்தச் சம்பவத்தின் போது அவருடன் இருந்த மற்றொரு காவல் அதிகாரியான மைக் லியோனும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/535749a3-703b-4465-8781-2d5a3b307c3d/26-6a6ca4c1e4518.webp' /></p><p>
</p><p>இக்குற்றத்திற்காக கிளிண்டன் கெய்ல் மீது முதலாம் நிலை கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிரூபிக்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு பிணை பெற முடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
</p><p>இவர் தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குறைந்த பாதுகாப்பு சிறையில் தனது தண்டனையை அனுபவித்து வருகிறார்.
</p><p>குற்றவாளியின் பிணை மனு நிராகரிக்கப்பட்ட செய்திக்கு டொராண்டோ காவல்துறை சங்கம் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T15:28:49+00:00</updated>
        </entry>
    </feed>
