<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-11T19:42:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குடும்பங்களின் கடன் விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/statcan-says-debt-to-income-ratio-declined-1789143307"></link>
            <id>https://canadamirror.com/article/statcan-says-debt-to-income-ratio-declined-1789143307</id>
            <summary type="text">கனடாவில் குடும்ப வருமானத்தின் வளர்ச்சி கடனின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததால், இரண்டாவது காலாண்டில் கடன் மற்றும் வருமானத்திற்கு இடையிலான விகிதம் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் குடும்ப வருமானத்தின் வளர்ச்சி கடனின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததால், இரண்டாவது காலாண்டில் கடன் மற்றும் வருமானத்திற்கு இடையிலான விகிதம் குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>செலவிடக்கூடிய வருமானத்துடன் ஒப்பிடுகையில், குடும்பக் கடன் சந்தைக் கடன் பருவகால சீரமைப்பின்படி முதல் காலாண்டில் 178.6 சதவீதமாக இருந்தது, இது இரண்டாவது காலாண்டில் 176.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. </p><p>
கனடிய குடும்பங்கள் செலவிடக்கூடிய ஒவ்வொரு 1 டொலர் வருமானத்திற்கும் சராசரியாக 1.76 டொலர் கடன் வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c3d84b5-32d7-4b27-8c21-90bc5542e5ae/26-6aa4290cedfec.webp' /></p><p> 
வருமானத்தில் அசல் மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துவதற்கான வீதம் 14.68 சதவீதத்திலிருந்து 14.52 சதவீதமாகச் சரிந்துள்ளது. </p><p>
நுகர்வோர் கடன், வீட்டு அடமானக் கடன் மற்றும் அடமானம் அல்லாத கடன்கள் அடங்கிய மொத்த குடும்பக் கடன் வாங்கும் அளவு, முதல் காலாண்டில் 34.4 பில்லியன் டொலராக இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் 29.4 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. </p><p>
அடமானக் கடன் வாங்கும் வீதம் 19.4 பில்லியன் டொலராக சரிந்துள்ளது. இது 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பின்னர் பதிவான மிகக் குறைந்த அளவாகும். 
நுகர்வோர் கடன் உட்பட அடமானம் அல்லாத கடன்கள் வாங்கும் அளவு 10.0 பில்லியன் டொலராக குறைந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T19:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் புதிய சாதனை ; நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/natural-habitats-along-canada-s-niagara-river-1789152185"></link>
            <id>https://canadamirror.com/article/natural-habitats-along-canada-s-niagara-river-1789152185</id>
            <summary type="text">கனடாவில் நயகரா ஆற்றின் கரையோர ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிவடைந்ததைத் தொடர்ந்து, மீள்சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் நயகரா ஆற்றின் கரையோர ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிவடைந்ததைத் தொடர்ந்து, மீள்சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் மரக் கழிவுகளை ஆற்றுப் படுகையில் நிலைநிறுத்தி சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>

இந்தத் திட்டத்தின் மூலம், நயகரா பூங்காக்கள் நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் இணைந்து இதுவரை 1.64 கிலோமீற்றர் பரப்பளவில் நீர்வாழ் உயிரினங்களுக்கான இயற்கை வாழ்விடங்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0d2c242-4191-4e7d-a71b-88963ae7e6ab/26-6aa44bbb1b5b5.webp' /></p><p>மேலும், 2025 கோடை காலத்தில் பிளாக் கிரீக் மற்றும் பொயர்ஸ் கிரீக் நதி முகத்துவாரப் பகுதிகளில் மரக் கட்டமைப்புகள் மற்றும் பாறைகளைப் பயன்படுத்தி மேலதிகமாக 240 மீற்றர் ஈரநிலப் பகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையினால் அந்த பகுதிகளில் மீன்கள் மற்றும் கரையோரப் பறவைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதுடன், நீரின் தரமும் மேம்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-11T18:43:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரொபோக்களின் விநோத போராட்டம் ; மனிதர்களுக்குப் பதிலாக களமிறங்கி கோரிக்கை விடுத்த இயந்திர மனிதர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/androids-step-in-for-humans-to-voice-demands-1789151412"></link>
            <id>https://canadamirror.com/article/androids-step-in-for-humans-to-voice-demands-1789151412</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், வேலை வாய்ப்புப் பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்களை இயற்றுமாறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், வேலை வாய்ப்புப் பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்களை இயற்றுமாறு கோரி போலந்தின் வார்சோ நகரில் விநோதமான போராடமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>போலந்தின் டிஜிட்டல் விவகார அமைச்சுக்கு அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பல்வேறு வகையான 30-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eafeaaed-d12d-42d5-a3a1-4add7299a0f2/26-6aa448b56241f.webp' /></p><p>மனித வடிவிலான (Humanoid) ரோபோக்கள் மற்றும் நான்கு கால் விலங்குகளைப் போன்ற (Quadrupeds) ரோபோக்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர், கொடிகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி, வட்டமாகச் சென்று அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
ஒலிபெருக்கிகள் ஊடாக “வேலைத் தளங்களைப் பாதுகாத்திடுங்கள்”, “சட்டங்களை இயற்றுவதற்கான நேரம் இது” மற்றும் “தாமதிக்காமல் முறைப்படுத்துங்கள்” போன்ற கோஷங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட Agibot A3 என்ற மனித வடிவிலான ரோபோ ஒன்று AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், இந்தத் தொழில்நுட்பம் தற்போது ஒரு நடைமுறை யதார்த்தம் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே தாங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ தொழில்நுட்பம் காரணமாக வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படும் தாக்கம் குறித்துப் பொதுமக்களிடையே விவாதத்தை உருவாக்கும் நோக்கில் 'Democratism' அமைப்பினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-11T18:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலின் முழுப் பகுதியையும் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/houthi-rebels-seized-control-entire-red-sea-region-1789147457"></link>
            <id>https://canadamirror.com/article/houthi-rebels-seized-control-entire-red-sea-region-1789147457</id>
            <summary type="text">யேமனின் முக்கிய நகரமான மோகாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, உலகின் முக்கிய வர்த்தகக் கடல்வழிகளில் ஒன்றான பாப் அல்-மன்தெப் நீரிணைப் பகுதியில் தங்களது அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமனின் முக்கிய நகரமான மோகாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, உலகின் முக்கிய வர்த்தகக் கடல்வழிகளில் ஒன்றான பாப் அல்-மன்தெப் நீரிணைப் பகுதியில் தங்களது அதிகாரத்தை ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேலும் விரிவுபடுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d30a2cc7-16fb-498d-9226-8c09147bfd26/26-6aa4394387a38.webp' /></p><p>இதன் மூலம் யேமனின் ஒட்டுமொத்த செங்கடல் கடலோரப் பகுதியின் கட்டுப்பாட்டையும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதற்கிடையில், யேமனின் மோகா விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு சவூதி படைகள் இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹூதிகளுடன் தொடர்புடைய அல்-மஸீரா (Al-Masirah) தொலைக்காட்சி அலைவரிசை செய்தி வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-11T17:24:33+00:00</updated>
        </entry>
    </feed>
