<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-10T20:45:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஸ்காட்செவானில் 44 மில்லியன் டொலர் லொத்தர் பரிசு: வென்ற அதிர்ஷ்டசாலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/winning-ticket-for-44-million-lotto-649-draw-1786381089"></link>
            <id>https://canadamirror.com/article/winning-ticket-for-44-million-lotto-649-draw-1786381089</id>
            <summary type="text">கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 44 மில்லியன் டொலர் பெறுமதியான &#039;கோல்ட் போல்&#039; ஜாக்பாட் பரிசை வென்று கோடீஸ்வரராகியுள்ளார். 
ஆனால், தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 44 மில்லியன் டொலர் பெறுமதியான 'கோல்ட் போல்' ஜாக்பாட் பரிசை வென்று கோடீஸ்வரராகியுள்ளார். </p><p>
ஆனால், தான் அந்தப் பரிசை வென்ற தகவல் இன்னும் அவருக்குத் தெரியவில்லை. 
சனிக்கிழமை நடைபெற்ற 'லொட்டோ 6/49' குலுக்கலிலேயே இந்த 44 மில்லியன் டொலா் ஜாக்பாட் விழுந்துள்ளது. </p><p>
வெற்றிபெற்ற இந்த லொத்தர் சீட்டு சஸ்காட்செவான் மாகாணத்தில் உள்ள சாஸ்கடூன் மற்றும் ரெஜினா ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கும் வெளியேயுள்ள ஒரு பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29dac847-6692-4188-8bad-fdb57dce6946/26-6a7a03235e673.webp' /></p><p> </p><p>
வெற்றிபெற்ற எண் 23202513-03 ஆகும். இந்த எண் முழுமையாகத் துல்லியமாகப் பொருந்தினால் மட்டுமே பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
வெற்றிபெற்ற நபர் அல்லது நபர்கள் தங்களது பரிசுத் தொகையைக் கோருவதற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T20:04:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் ; 69 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/powerful-earthquake-hits-colombia-1786376506"></link>
            <id>https://canadamirror.com/article/powerful-earthquake-hits-colombia-1786376506</id>
            <summary type="text">கொலம்பியாவின் மேற்கு பகுதிகளில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவின் மேற்கு பகுதிகளில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் பல நகரங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p>கொலம்பியாவின் சோகோ (Chocó) பிராந்தியத்தில் அமைந்துள்ள சான் ஜோசே டெல் பால்மர் (San José del Palmar) நகராட்சிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் கொலம்பிய புவியியல் சேவை தெரிவித்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b9a70e3-e9fb-4027-a173-7dd8b68631d6/26-6a79f13c53941.webp' /></p><p>கொலம்பிய தலைநகர் பொகோட்டாவிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.6 ரிக்டர் என கொலம்பிய அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதன் அளவு 7.4 என அறிவித்துள்ளது.
</p><p>
நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 107 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.</p><p>நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் சோகோ பிராந்தியத்தின் தலைநகரான கிப்டோ (Quibdó) உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சோகோ மாகாண ஆளுநர் நுபியா கரோலினா கோர்டோபா-குரி, நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதிர்வுகள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளார்.</p><p>

நிலநடுக்கத்தின் மையப்பகுதி சான் ஜோசே டெல் பால்மர் அருகில் இருந்த போதிலும், கிப்டோ நகரிலும் கட்டடங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், முதலாவது உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் பொகோட்டா வரையிலும் உணரப்பட்டுள்ளன.

பொகோட்டாவில் வாகனங்கள் மற்றும் கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரங்கள் செயல்பட்டதுடன், அச்சமடைந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
பொகோட்டா மேயர் கார்லோஸ் பெர்னாண்டோ கலான், நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே வெளியிட்ட தகவலில், நகரில் உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a862451c-bc1f-48cd-b3b9-052b290ab309/26-6a7a1362d4efd.webp' /></p><p>

எனினும், சில கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கொலம்பியா மற்றும் அண்டை நாடான ஈக்வடார் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
நிலநடுக்கத்திற்குப் பின்னர் ஏற்படக்கூடிய அதிர்வுகள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
இதனிடையே, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.</p><p>நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன், சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p>

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்தும் மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
கொலம்பியா அண்மைய காலங்களில் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய நில அதிர்வுகளில் ஒன்றாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-10T18:07:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் குண்டு மிரட்டல்: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/thousands-of-people-evacuated-halifax-buildings-1786381613"></link>
            <id>https://canadamirror.com/article/thousands-of-people-evacuated-halifax-buildings-1786381613</id>
            <summary type="text">கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலையில் அங்குள்ள கட்டடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலையில் அங்குள்ள கட்டடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><p> 
அப்பர் வோட்டர் வீதியில் அமைந்துள்ள 'பேர்டிஸ் வார்ஃப்' வாகன நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில், காலை 8:45 மணியளவில் அங்கிருந்த மக்கள் முதன்முதலாக வெளியேற்றப்பட்டனர். </p><p>
குறித்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து பொலிஸார் அந்தச் சந்தேகத்திற்குரிய வாகனத்தைச் சோதனையிட்டனர். 
நிலைமையின் தீவிரத்தைக் கருதி, காலை 10:15 மணியளவில் பொதுமக்கள் வெளியேற்றப்பட வேண்டிய பகுதி&nbsp; விரிவுபடுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b2a09da-f58e-4831-bf02-3e93aab0c23f/26-6a7a052f0cabb.webp' /></p><p>பேரிங்டன் வீதி,&nbsp; அமலமேக் வழி சந்திப்பு, அப்பர் வோட்டர் வீதி,&nbsp; பிரன்ஸ்விக் வீதி / டொக்டர் ஆல்ஃப்ரெட் வேடெல் வீதி முதல் பிரன்ஸ்விக் வீதி காக்ஸ்வெல் வீதி வரை,&nbsp; டியூக் வீதி / பேரிங்டன் வீதி சந்திப்பில் இருந்து அப்பர் வோட்டர் வீதி வரையிலான பகுதிகள் மூடப்பட்டன.</p><p>இந்த வெளியேற்ற உத்தரவு அப்பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் பாதசாரிகளும் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என ஹாலிஃபாக்ஸ் பிராந்திய பொலிஸார் அறிவித்தனர்.</p><p>
இந்த வெளியேற்ற மண்டலத்தில் பல ஹோட்டல்கள், உணவகங்கள், ஸ்கோஷியா சதுக்கம் மற்றும் அரசு அலுவலகங்கள் அடங்கியுள்ளன. 
பொலிஸாரின் தேவைக்கேற்ப அருகிலுள்ள பக்கவாட்டுச் சாலைகளும் மூடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ஹாலிஃபாக்ஸ் ட்ரான்சிட் பேருந்துகள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படும் அதேவேளையில், படகு முனையம் திறந்திருக்கும் என்றும் பயணிகளுக்கு வழிகாட்ட ஊழியர்கள் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
காலை 10:30 மணியளவில் அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. </p><p>அதில், சந்தேகத்திற்குரிய வாகனம் உட்பட அப்பகுதியைப் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. </p><p>
கிளேட்டன் பூங்காவில் உள்ள கனடா கேம்ஸ் சென்டர் அருகே தோமஸ் ரேடால் டிரைவ் பகுதியில் வைத்து சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.</p><p> 
பிற்பகல் 1:30 மணியளவில் பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, அப்பகுதியில் தற்போது உடனடி அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>எனினும், விசாரணை தொடர்வதால் குறைந்த அளவிலான பொலிஸ் பாதுகாப்பு அங்கே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T17:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 3 வயது சிறுமியைத் தாக்கிய கரடி: அதிர்ச்சி சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shock-bc-mom-describes-bear-attack-on-toddler-1786348616"></link>
            <id>https://canadamirror.com/article/shock-bc-mom-describes-bear-attack-on-toddler-1786348616</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியைப் பாக்கரடி ஒன்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், கரடி சிறுமியின் கழுத்தைக் கவ்வ முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். </p><p>உடனடியாகச் செயல்பட்ட தந்தை, வில் மற்றும் அம்பைப் பயன்படுத்தி கரடியின் தலையில் எய்து அதைத் தாக்கி விரட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6b22b8e-f638-400e-a747-29b174259aa2/26-6a79844a6c312.webp' /></p><p> </p><p>
கரடி கடித்ததில் சிறுமியின் கழுத்து, தலை மற்றும் முதுகுப் பகுதியில் ஆழமான காயங்களும் வெட்டுக் காயங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p> உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் வான்கூவரில் உள்ள சிறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அச்சிறுமி, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. </p><p>
சம்பவ இடத்திற்குப் பொலிஸார் வந்தபோதும், அந்த இடத்தில் மிகுந்த ஆர்வம் காட்டிய கரடி மீண்டும் மீண்டும் அவ்வீட்டுப் பகுதிக்கு வந்துள்ளது. </p><p>பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அதிகாரிகள் கரடியை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். </p><p>
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கரடி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடியது. வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அதைக் கண்டுபிடித்தவுடன் அழிக்க முடிவு செய்துள்ளனர்.</p><p> 
அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும், வனவிலங்குகள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T16:26:03+00:00</updated>
        </entry>
    </feed>
