<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-19T23:26:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் ; 10 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-missile-attack-in-ukraine-10-dead-1787181237"></link>
            <id>https://canadamirror.com/article/russian-missile-attack-in-ukraine-10-dead-1787181237</id>
            <summary type="text">வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள பெசெனீஹி கிராமத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 8 பேர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள பெசெனீஹி கிராமத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். </p><p>தாக்குதலில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89aac8fe-a97b-44ae-b1a0-659a161e1dde/26-6a8638b6d4bcc.webp' /></p><p>
</p><p>


சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, பொதுமக்கள் மீது ரஷ்ய படைகள் கொடூர தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், பெசெனீஹி மீதான தாக்குதலுக்கு தகுந்த பதிலடி வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
</p><p>


இதற்கிடையில், மாஸ்கோ உள்ளிட்ட ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளை இலக்குவைத்து உக்ரைன் சுமார் 800 ட்ரோன்களை ஏவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் 791 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>



மாஸ்கோவை நோக்கி மட்டும் 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் 180 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மாஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார்.</p><p> இத்தாக்குதல்களில் பலர் காயமடைந்ததுடன், சில கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T23:14:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜாம்பியாவில் தேர்தல் ; தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/election-in-zambia-incumbent-president-wins-again-1787179832"></link>
            <id>https://canadamirror.com/article/election-in-zambia-incumbent-president-wins-again-1787179832</id>
            <summary type="text">தென்னாப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஹகைண்டே ஹிச்சிலேமா 61.4 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னாப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஹகைண்டே ஹிச்சிலேமா 61.4 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
</p><p>


அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான பிரைன் முந்துபிலே 38 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e356324a-f477-4940-9c88-657dbae5fda6/26-6a86333a4aed0.webp' /></p><p>இதேவேளை, தேர்தல் அதிகாரிகள் மீதான தாக்குதல் மற்றும் வாக்குச் சீட்டுகள் திருடப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.



பின்னர், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.</p><p>



மேலும், நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி தேர்தல் நடைபெற்ற இரவு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இதனிடையே, தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-19T22:50:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026ஆம் ஆண்டில் FIFA போட்டி ; நடுவராக ஈழத்தமிழரான அனோஜன் கனகசிங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/anojan-kanakasingham-an-eelam-tamil-fifa-match-1787160697"></link>
            <id>https://canadamirror.com/article/anojan-kanakasingham-an-eelam-tamil-fifa-match-1787160697</id>
            <summary type="text">சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற FC Basel – FC Barcelona அணிகளுக்கிடையிலான போட்டியில் நடுவராகப் பணியாற்றிய அனோஜென் கனகசிங்கம், 2026ஆம் ஆண்டில் FIFA சர்வதேச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற FC Basel – FC Barcelona அணிகளுக்கிடையிலான போட்டியில் நடுவராகப் பணியாற்றிய அனோஜென் கனகசிங்கம், 2026ஆம் ஆண்டில் FIFA சர்வதேச நடுவர் அந்தஸ்தைப் பெற்ற பின்னர் சர்வதேச அரங்கில் தனது பயணத்தை மேலும் உயர்த்தியுள்ளார்.
</p><p>
ஸ்பெயினின் முன்னணி கால்பந்து அணியான FC Barcelona பங்கேற்ற இந்தப் போட்டியில் உலகின் இளம் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லமீன் யமாலும் களமிறங்கியிருந்த நிலையில், போட்டியை நிர்வகிக்கும் பொறுப்பு அனோஜென் கனகசிங்கத்துக்கு வழங்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9347b045-2cd0-4177-98e6-e4e23ae55370/26-6a85e87b53386.webp' /></p><p>சுவிற்சர்லாந்து கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரப்பூர்வ பதிவின்படி, 1994ஆம் ஆண்டு பிறந்த அனோஜென் கனகசிங்கம், SC Ittigen கழகத்தைச் சேர்ந்தவர். </p><p>2026ஆம் ஆண்டுக்கான FIFA நடுவர்கள் பட்டியலில் அவர் இணைக்கப்பட்டுள்ளார். சுவிற்சர்லாந்தின் Super League போட்டிகளில் 2022ஆம் ஆண்டு முதல் நடுவராகப் பணியாற்றி வந்த அவர், அதுவரை நாட்டின் உயர்மட்டப் பிரிவில் 34 போட்டிகளை நிர்வகித்திருந்தார்.
</p><p>
சர்வதேச அரங்கிலும் அவரது முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 2026 ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற UEFA Europa League தகுதிச்சுற்றுப் போட்டியில் NK Aluminij மற்றும் FC Sheriff Tiraspol அணிகள் மோதிய ஆட்டத்திற்கு அனோஜென் கனகசிங்கமே பிரதான நடுவராக நியமிக்கப்பட்டிருந்தார்.</p><p>&nbsp;ஈழத்தமிழ் பின்னணியைக் கொண்ட அனோஜென் கனகசிங்கம், சுவிற்சர்லாந்தின் உயர்மட்ட கால்பந்திலிருந்து ஐரோப்பிய மற்றும் தற்போது FIFA சர்வதேச அரங்கிற்கு முன்னேறியிருப்பது, தமிழ் சமூகத்திற்கும் சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழர்களுக்கும் பெருமைக்குரிய சாதனையாக அமைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-19T22:26:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா பொருள்கள் மீதான 50% வரி ஒத்திவைப்பு ; டிரம்ப் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-announces-50-tariff-deferral-canadian-goods-1787176821"></link>
            <id>https://canadamirror.com/article/trump-announces-50-tariff-deferral-canadian-goods-1787176821</id>
            <summary type="text">கனடாவின் இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை 3 நாள்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை 3 நாள்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.</p><p>

கனடாவின் 2,000 கோடி டாலா் மதிப்பிலான பொருள்களைப் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய இந்த வரி விதிப்பு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவிருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே இறுதி நேரத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டையடுத்து ஒத்திவைக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a6ff68b-094b-416a-9c10-843ead054a27/26-6a86277766f64.webp' /></p><p>அமெரிக்காவில் வரும் நவம்பரில் நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்புதிய வரி விதிப்புகளால் ஏற்படும் விலையுயா்வு மக்களிடையே அதிருப்தி ஏற்படும் அபாயத்தை டிரம்ப் நிா்வாகம் உணா்ந்துள்ளது. </p><p>அமெரிக்க பொருள்கள் மீது பதிலடி வரி விதிக்கப்படும் என கனடா எச்சரித்திருந்தாலும், கடந்த ஆண்டு கனடாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் சுமாா் 72 சதவீதம் அமெரிக்காவுக்கே நடந்துள்ளது. </p><p>அந்தவகையில், இரு நாடுகளுமே இந்த வா்த்தகப் போரிலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன.
</p><p>
இதையடுத்து, இவ்விவகாரம் தொடா்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கனடா பிரதமா் மாா்க் காா்னி கடந்த 2 நாள்களில் இருமுறை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியதும், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடைபெற்ற இறுதி நேரப் பேச்சுவாா்த்தையுமே இந்த ஒப்பந்தம் எட்டப்பட முக்கியக் காரணமாக அமைந்தன.
</p><p>
ஒப்பந்தத்துக்கான ஆவணங்களை இறதி செய்வதில் இருதரப்பு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ள சூழலில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 3 நாள்கள் வரி ஒத்திவைப்பானது வணிகா்களுக்கு சற்று நிம்மதி அளித்தாலும், இது முழுமையான தீா்வல்ல என்றும், பேச்சுவாா்த்தையாளா்கள் விரைவாக ஒரு நிலையான ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-19T22:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்குத்தாகத் தரையிறங்கும் ரொக்கெட் ; விண்வெளித் துறையில் சாதனை படைத்த சீனத் தனியார் நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/chinese-private-company-sets-record-space-industry-1787175641"></link>
            <id>https://canadamirror.com/article/chinese-private-company-sets-record-space-industry-1787175641</id>
            <summary type="text">சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் பூஸ்டரை (Rocket Booster) வெற்றிகரமாகச் செங்குத்தாகத் தரையிறக்கி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் பூஸ்டரை (Rocket Booster) வெற்றிகரமாகச் செங்குத்தாகத் தரையிறக்கி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
</p><p>
விண்வெளித் துறையில் அமெரிக்க நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு போட்டியாகச் சீனா இந்த மைல்கல்லை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dae3cfe-2a97-4f5e-b803-5b7810a613fd/26-6a8622dacac47.webp' /></p><p>

விண்ணில் செலுத்தப்பட்ட ரொக்கெட் பூஸ்டர் பாகம், குறிப்பிட்ட உயரத்தை எட்டிய பின் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மீண்டும் பூமிக்குக் கொண்டுவரப்பட்டு, குறிப்பிட்ட தளத்தில் செங்குத்தாகத் தரை இறக்கப்பட்டது.
</p><p>
ரொக்கெட் பூஸ்டர் பாகங்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பும் செலவு பெருமளவில் குறையும்.
</p><p>
சீன விண்வெளித் துறையில் அரச நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் அதிநவீன தொழில்நுட்பங்களில் வேகமாக முன்னேறி வருவதை இந்தச் சோதனை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-19T21:40:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி ; சந்தேகத்தில் சிறுவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/youth-arrested-in-edmonton-girls-suspicious-death-1787149749"></link>
            <id>https://canadamirror.com/article/youth-arrested-in-edmonton-girls-suspicious-death-1787149749</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரில் 16 வயது சிறுமியான ஜாஸ்மின் தீசி என்பவரின் சந்தேகத்திற்கு இடமான உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை ஒரு சிறுவனைக் கைது செய்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரில் 16 வயது சிறுமியான ஜாஸ்மின் தீசி என்பவரின் சந்தேகத்திற்கு இடமான உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை ஒரு சிறுவனைக் கைது செய்துள்ளது. </p><p>
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 139 அவென்யூ மற்றும் 32 ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜாஸ்மின் தீசி உயிரிழந்தார். </p><p>
அவர் தனது நண்பரைப் பார்க்கச் சென்றிருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர். 
கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை எட்மண்டன் காவல் துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f266b227-91eb-428d-b3fc-76b5a5d9309f/26-6a85bdb7bbc99.webp' /></p><p>
அல்பெர்ட்டா தலைநகரில் நடைபெற்ற 121-வது வருடாந்த உச்சிமாநாடு மற்றும் காவல் வர்த்தகக் கண்காட்சியில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய காவல் தலைமை அதிகாரி வாரன் டிரைஷல், கைது செய்யப்பட்ட நபருக்கு 16 வயது என்று தெரிவித்தார். </p><p>
புதன்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட உள்ளதாகவும், அதன்பின்னரே கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் எட்மண்டன் காவல் துறை தெரிவித்துள்ளது. </p><p>
எட்மண்டனில் சிறுவர்களிடையே வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், அதற்குப் பதிலளிக்கும் விதமாகச் சிறுவர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அதிகரித்து வருவதாகவும் காவல் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். </p><p>
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கும்பல் குற்றங்களில் ஈடுபடும் அபாயத்தில் உள்ள சிறுவர்களுக்கு, முன்னாள் குற்றவாளிகளைக் கொண்டு வழிகாட்டுதல் வழங்கப்படும். 
இதனிடையே, மற்றொரு சிறுவன் கொல்லப்பட்டது தொடர்பாகவும் எட்மண்டன் காவல்துறையும், கனடிய மத்திய அரச காவல்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. </p><p>ஆகஸ்ட் 6 அன்று எட்மண்டனின் வடக்கு பகுதியில், ஃபைசல் உசேன் என்ற 12 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T18:51:53+00:00</updated>
        </entry>
    </feed>
