<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-06T00:22:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம் ; இலக்கு வைக்கப்படும் மத்தியக்கிழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-s-warning-sends-shockwaves-worldwide-1785975496"></link>
            <id>https://canadamirror.com/article/iran-s-warning-sends-shockwaves-worldwide-1785975496</id>
            <summary type="text">அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தால், வளைகுடா பிராந்தியத்திலுள்ள முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தால், வளைகுடா பிராந்தியத்திலுள்ள முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
ஈரானின் எரிசக்தி வலையமைப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் உயர் மட்ட இராஜதந்திர தொடர்புகள் மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf59f8ec-ebf3-4b32-a5b2-4bc20627b1fc/26-6a73d2c9e9481.webp' /></p><h2>தாக்குதல்கள்</h2><p>
</p><p>
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவூதி அரேபியா, துருக்கி, கட்டார் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.</p><p>

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளிலுள்ள எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சார விநியோகக் கட்டமைப்புகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் போக்குவரத்து வலையமைப்புகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு வளைகுடா நாடுகளை ஈரான் கேட்டுக்கொண்டுள்ளதுடன், இராஜதந்திர ரீதியில் தீர்வுகாண்பதே பிராந்திய அழிவைத் தவிர்க்கும் என்றும் வலியுறுத்தியுள்ளது.</p><p>

ஈரானின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மான், அமெரிக்க ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு இராணுவ நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் அமைதி ஏற்படுத்த வலியுறுத்தியுள்ளமை குறிப்படத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-06T00:18:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் இராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு நேர்ந்த கதி ; பலர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-military-families-face-tragic-ordeal-1785972475"></link>
            <id>https://canadamirror.com/article/us-military-families-face-tragic-ordeal-1785972475</id>
            <summary type="text">அமெரிக்காவில் தற்போது பணியில் உள்ள ராணுவ வீரா்களின் பெற்றோா் மற்றும் வாழ்க்கைத்துணைகள் 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அமெரிக்க ஜனாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் தற்போது பணியில் உள்ள ராணுவ வீரா்களின் பெற்றோா் மற்றும் வாழ்க்கைத்துணைகள் 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிா்வாகத்தின் தீவிர குடியேற்றக் கொள்கையின்ஒரு பகுதியாக, அந்நாட்டில் பல்லாண்டுகளாக ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த குடியேற்றப் பாதுகாப்புகளை ரத்து செய்து, இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25ed1fcc-20b1-4db5-b996-5a68b249d113/26-6a73c6fd4f033.webp' /></p><p>

</p><p>
ட்ரம்ப் 2-ஆவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு கைது செய்யப்பட்டவா்களில் குறைந்தது 6 போ் ஏற்கெனவே அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனா்.</p><p> மேலும் 8 போ் தற்போது மத்திய குடியேற்றக் காவல்துறையின் காவலில் உள்ளனா்.
</p><p>
ஈரானுடன் போா் பதற்றம் நிலவும் தற்போதைய சூழலில், குடும்பத்தினரின் கைது நடவடிக்கை ராணுவ வீரா்களின் மனவுறுதியையும் பணித் திறனையும் கடுமையாகப் பாதிக்கும் என நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். </p><p>அதேநேரம், ராணுவத்தில் சேருவதற்கான விளம்பரங்களில் வீரா்களின் குடும்பத்தினருக்கான குடியேற்றச் சலுகைகள் தொடா்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-05T23:28:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் முக்கிய தீர்மானம் ; ஈரானும்இணக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-oman-reach-consensus-on-strait-of-hormuz-1785954070"></link>
            <id>https://canadamirror.com/article/iran-oman-reach-consensus-on-strait-of-hormuz-1785954070</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்துப் பாதைக்கான புவியியல் எல்லைகள் குறித்து ஈரானும் ஓமானும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டியுள்ளதாக தெரிவிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்துப் பாதைக்கான புவியியல் எல்லைகள் குறித்து ஈரானும் ஓமானும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

சில மூன்றாம் தரப்பினர் தலையிடாவிட்டால் இதற்கான கூட்டு அறிவிப்பொன்று இறுதி செய்யப்பட்டு வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பஹாயி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af262722-672f-45d1-9c0e-bc6225091f09/26-6a737f1864f98.webp' /></p><p> </p><p>

ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான இவ்வாறான எந்தவொரு ஒப்பந்தமும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த குறித்த நீர்வழியில் பாதுகாப்பிற்குத் தாமாகவே உத்தரவாதமளிக்காது எனவும் பஹாயி மேலும் குறிப்பிட்டார். </p><p>

ஈரானுக்கு இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய விட்டுக்கொடுப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான இந்த உத்தேச ஒப்பந்தமானது, ஹோர்முஸ் நீரிணை வழியாக வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்கள் மீதான கட்டுப்பாட்டை தெஹ்ரானுக்கு வழங்கும் என ஈரானிய சிரேஷ்ட சிரேஷ்ட அதிகாரி ஒருவரும், இரண்டு பிராந்திய அதிகாரிகளும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.</p><p> 

ஈரானின் கோரிக்கைகளுக்கு அடிபணியும் வகையிலான வெளிப்படையான நகர்வுகள் காணப்பட்ட போதிலும், முக்கிய விடயங்கள் தொடர்பில் இன்னும் உடன்பாடு எட்டப்பட வேண்டி உள்ளதாகத் தெரிவித்து, நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று உடனடியாக எட்டப்படவுள்ளது என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்றுகளை குறித்த வட்டாரங்கள் நிராகரித்தன.</p>]]></content>
            <updated>2026-08-05T21:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்வேறு நகரங்கள் மீது சரமாரியாக நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் ; பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missile-strikes-hit-multiple-cities-1785966709"></link>
            <id>https://canadamirror.com/article/missile-strikes-hit-multiple-cities-1785966709</id>
            <summary type="text">உக்ரைன் , ரஷ்யா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் , ரஷ்யா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2653f82d-3acd-459b-8c64-ddb6e0b14d2a/26-6a73b077668f5.webp' /></p><p> </p><p>போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
</p><p>
15 பேர் பலி
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நேற்று நள்ளிரவு சரமாரியாக ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடத்தியது. </p><p>தலைநகர் கீவ் உள்பட உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 27 பேர் படுகாயமடைந்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-05T21:51:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் ஒரே வருடத்தில் 56 பேருக்கு மரண தண்டனை ; ஐ.நா. வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-executes-56-people-within-one-year-1785963804"></link>
            <id>https://canadamirror.com/article/iran-executes-56-people-within-one-year-1785963804</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல், ஈரானில் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

2026 ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல், ஈரானில் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>

2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஈரானில் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் வோல்கர் டுர்க் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b07961ea-800f-46b6-810e-0849618f1f95/26-6a73a51e54e9a.webp' /></p><p>

</p><p>இந்தத் தரவுகளின்படி, கடந்த டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரையில் ஈரான் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் கைதான 27 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் இந்த மரண தண்டனைகள் அனைத்தும் சர்வதேச அளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.
</p><p>
இந்த மரண தண்டனைகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒடுக்கவும் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், 100-க்கும் அதிகமானோர் மரண தண்டனை நிறைவேற்றப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


</p><p>முன்னதாக, ஈரானிய அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை அரசுப்படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், தாக்குதல் நடத்தியும் ஒடுக்கினர். இதனால், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.</p><p>

இத்துடன், ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் வெளியிட்ட தகவலில் அரசுக்கு எதிராகப் போராடிய 26 பேருக்கும், அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் 26 பேருக்கும் ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-05T21:03:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் யூத எதிர்ப்பு மேலோங்குவதாகக் கூறி அமெரிக்காவில் தஞ்சம் கோர ஊக்குவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/calls-emerge-for-us-refugee-status-as-group-helps-1785946790"></link>
            <id>https://canadamirror.com/article/calls-emerge-for-us-refugee-status-as-group-helps-1785946790</id>
            <summary type="text">கனடாவில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு நடவடிக்கைகளால் அச்சுறுத்தலை உணரும் கனடிய யூதர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்காவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு நடவடிக்கைகளால் அச்சுறுத்தலை உணரும் கனடிய யூதர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்காவின் பழமைவாத சிந்தனைக் குழு மற்றும் முன்னாள் ஒன்ராறியோவாசி ஒருவர் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>கனடாவிலுள்ள யூதப் பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான கனடிய யூதர்கள் தொடர் அச்சத்தில் வாழ்வதாகவும், அதிலிருந்து தப்பிக்க முயல்வதாகவும் 'ஜூயிஷ் டூல்சா' அமைப்பின் நிர்வாக இயக்குநரான ஜோ ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p>
அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜோ ராபர்ட்ஸ், 2016 இல் ஒன்ராறியோவுக்குச் சென்று குடியேறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f2b22e3-c047-49bd-971f-6e16734b0609/26-6a7362a83b52c.webp' /></p><p> 
எனினும், 2023 ஒக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியது முதல் உள்ளூர் பகுதிகளில் யூத எதிர்ப்புச் சுவரோவியங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்ததாகக் கூறி, அவர் தனது குடும்பத்துடன் ஒக்லஹோமா மாநிலத்திலுள்ள 'டூல்சா' நகருக்கு இடம்பெயர்ந்தார்.
</p><p>டூல்சா நகரில் யூதர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தின்கீழ், கனடாவைச் சேர்ந்த சுமார் 800 முதல் 900 யூதக் குடும்பங்கள் கனடாவை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துத் தங்களைத் தொடர்புகொண்டுள்ளதாக ராபர்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்காவிலும் யூத எதிர்ப்பு ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது என்பதை டிரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
</p><p>அமெரிக்க யூதக் குழுவின் 2025 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, சமீபத்திய வரலாற்றில் அமெரிக்க யூதர்களுக்கு எதிராக அதிக வன்முறைகள் பதிவான ஆண்டாக 2025 சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>
மேலும் 30 வயதிற்குட்பட்ட யூதர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தனிப்பட்ட முறையில் யூத எதிர்ப்புக் வெறுப்புப் பேச்சுகளால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
அமெரிக்க என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் என்ற சிந்தனைக் குழுவும், தங்கள் மதம் அல்லது இனத்தின் காரணமாகக் கனடாவில் துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் உள்ள கனடிய யூதர்களுக்கு அமெரிக்கா அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T19:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் ஹால்டன் ஹில்ஸில் துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-seeking-info-after-multiple-shots-fired-1785946100"></link>
            <id>https://canadamirror.com/article/police-seeking-info-after-multiple-shots-fired-1785946100</id>
            <summary type="text">கனடாவின் ஹால்டன் ஹில்ஸ் பகுதியில் குடியிருப்பு வீடு ஒன்று மற்றும் அங்கிருந்த வாகனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஹால்டன் ஹில்ஸ் பகுதியில் குடியிருப்பு வீடு ஒன்று மற்றும் அங்கிருந்த வாகனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
</p><p>ஜார்ஜ்டவுன் சமூகத்திற்கு உட்பட்ட 'எட்டாவது வீதி' மற்றும் 'ஐந்தாவது பக்க வீதி' சந்திப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
அதிகாலை 4:00 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக வந்த அழைப்புகளைத் தொடர்ந்து, ஹால்டன் பிராந்திய பொலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a8cf2a0-dd7c-42a2-b1e6-e37e323ac037/26-6a735ff60dc3d.webp' /></p><p>
</p><p>ஒரு வீட்டின் மீதும், அந்த வீட்டின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் பலமுறை துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளதைச் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
</p><p>துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் வீட்டிற்குள் மனிதர்கள் இருந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்கள் எதுவுமே ஏற்படவில்லை எனப் பொலிஸார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
</p><p>துப்பாக்கிச் சூடு நடந்த உடனடியாக, சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்று அப்பகுதியை விட்டு வேகமாகத் தப்பிச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p>
விசாரணைகளுக்காக 'எட்டாவது வீதியின்' குறிப்பிட்ட பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது. இச்சம்பவம் தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக நம்பப்படுவதாகவும், இதனால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவலோ அல்லது பாதுகாப்பு கேமரா பதிவுகளோ வைத்திருப்பவர்கள் உடனடியாகப் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T18:30:57+00:00</updated>
        </entry>
    </feed>
