<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-10T02:59:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை புரட்டிப் போட்ட ‘டொல்பின்’ சூறாவளி ; 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/typhoon-dolphin-hits-china-more-1-million-people-1786313295"></link>
            <id>https://canadamirror.com/article/typhoon-dolphin-hits-china-more-1-million-people-1786313295</id>
            <summary type="text">மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையுடன் &#039;டொல்பின்&#039; சூறாவளி, சீனாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கியுள்ளது.

1951 ஆம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையுடன் 'டொல்பின்' சூறாவளி, சீனாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கியுள்ளது.</p><p>

1951 ஆம் ஆண்டிற்குப் பிறகு கிழக்கு சீனாவைப் பாதித்த மிகப்பெரிய சூறாவளி இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் சராசரியாக 12 நாட்கள் நீடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae0328c6-de92-4fe3-8011-2d7ed4e8aa46/26-6a78fa50c5021.webp' /></p><p>கிழக்கு சீனாவின் பல பகுதிகளில் 250 - 500 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன், சிறிய ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.</p><p>

கிழக்கு சீனா முழுவதும் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பல துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலையங்களின் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதற்கிடையில், டொல்பின் சூறாவளியின் தாக்கம் பிலிப்பைன்ஸிலும் ஏற்பட்டுள்ளது.
</p><p>
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த நாட்டில் 380,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T00:26:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவை உலுக்கிய இந்திய வம்சாவளி பெண் கொலை ; 7 மாதங்களுக்குப் பின்னர் வெளிச்சத்துக்கு வந்த முக்கிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/boyfriend-arrested-in-murder-indian-woman-canada-1786319545"></link>
            <id>https://canadamirror.com/article/boyfriend-arrested-in-murder-indian-woman-canada-1786319545</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கடந்த ஏழு மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரது காதலன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கடந்த ஏழு மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரது காதலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>டொராண்டோவில் வசித்து வந்த ஹிமான்ஷி குரானா (30) கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். </p><p>சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f73c0378-39a1-44c2-ab74-5ad5dcfd7a15/26-6a7912ba9ee04.webp' /></p><p>இதனையடுத்து, ஹிமான்ஷி குரானாவின் காதலனான டொராண்டோவைச் சேர்ந்த அப்துல் கபூரி மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
</p><p>
எனினும், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் அப்துல் கபூரி தலைமறைவானார். </p><p>அவரைக் கண்டுபிடிப்பதற்காக டொராண்டோ காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு, அவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p>

இந்நிலையில், சுமார் ஏழு மாதங்களுக்குப் பின்னர், அப்துல் கபூரி கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>அவர் கனடாவுக்கு வெளியே வேறு ஒரு நாட்டுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில், அந்நாட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பின்னர் கனடாவுக்கு அழைத்துவரப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>

அப்துல் கபூரி எந்த நாட்டில் பதுங்கியிருந்தார் என்பது தொடர்பான தகவலை காவல்துறையினர் வெளியிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b62f7d6-3e1e-422b-aaef-d5a801072b58/26-6a7912bb58e5f.webp' /></p><p>டொராண்டோ காவல்துறையின் தலைமறைவுக் குற்றவாளிகளைத் தேடும் பிரிவு மற்றும் கொலை வழக்குகளை விசாரிக்கும் பிரிவு அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

அவரைக் கண்டறிந்து கைது செய்து கனடாவுக்கு அழைத்துவருவதற்காக தேசிய மற்றும் சர்வதேச காவல் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியதாக டொராண்டோ காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட அப்துல் கபூரி மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

இதேவேளை, ஹிமான்ஷி குரானாவின் மரணம் தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-09T23:52:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவகத்தில் கோடாரியுடன் மிரட்டல் விடுத்த நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/axe-wielding-man-arrested-outside-vancouver-1786286796"></link>
            <id>https://canadamirror.com/article/axe-wielding-man-arrested-outside-vancouver-1786286796</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே கோடாரியைக் காட்டி மக்களை மிரட்டிய 29 வயது இளைஞரை வியாழக்கிழமை அன்று பொலிஸார் கைது செய்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே கோடாரியைக் காட்டி மக்களை மிரட்டிய 29 வயது இளைஞரை வியாழக்கிழமை அன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
மெயின் ஸ்ட்ரீட் மற்றும் 24-வது அவென்யூ பகுதிக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
</p><p>சந்தேக நபரான அந்த இளைஞர், உணவகத்தின் வெளிப்புறப் பகுதியில் அமர்ந்திருந்த மனிதர்களை நோக்கிச் சாப்பிடும் கரண்டிகள் மற்றும் கத்திகளை வீசியும், தட்டுகளை உடைத்தும் கடுமையான அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0911a59a-c9a4-4289-b092-9381f739543a/26-6a7892cdee4cc.webp' /></p><p>
கையில் கோடாரியை வைத்துக்கொண்டு அங்கு இருந்த மக்களை வெட்டிவிடுவதாக மிரட்டியுள்ளார்.
</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வான்கூவர் பொலிஸார், தங்கள் காவல் துறை நாய் பிரிவின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.</p><p>
கைது செய்யப்பட்ட நபர் காயமடைந்திருந்ததால், முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
பின்னர், குறிப்பிட்ட தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற பிணை நிபந்தனையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வான்கூவர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T21:44:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேற்கு கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ ; பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/wildfires-western-canada-emergency-declad-colombia-1786311852"></link>
            <id>https://canadamirror.com/article/wildfires-western-canada-emergency-declad-colombia-1786311852</id>
            <summary type="text">மேற்கு கனடாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ, ஒரே இரவில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான பகுதிக்குப் பரவியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு கனடாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ, ஒரே இரவில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான பகுதிக்குப் பரவியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb89a0a5-b9b6-4303-b313-3b0bed417f71/26-6a78f4adb227e.webp' /></p><p>

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கிட்டத்தட்ட 23,500 ஏக்கர் பரப்பளவிற்கு இந்த காட்டுத்தீ பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
காட்டுத்தீ பரவும் வேகம் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், கிட்டத்தட்ட 20,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-09T21:44:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தாக்குதல் ; ஹூதிகள் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/attack-on-saudi-aramco-oil-refinery-houthis-1786310513"></link>
            <id>https://canadamirror.com/article/attack-on-saudi-aramco-oil-refinery-houthis-1786310513</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் ஜாஸானில் அமைந்துள்ள &#039;சவூதி அராம்கோ&#039; (Saudi Aramco) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஈரானிய ஆதரவு ஹூதி கிளர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் ஜாஸானில் அமைந்துள்ள 'சவூதி அராம்கோ' (Saudi Aramco) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஈரானிய ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cc86ebb-da6c-43b2-ba3c-f4754ce21e97/26-6a78ef7307f23.webp' /></p><p>

இருப்பினும், அந்தச் சுத்திகரிப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சவூதி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்த விதக் காயங்களும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-09T21:22:03+00:00</updated>
        </entry>
    </feed>
