<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-26T07:30:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் இல்லை; டிரம்ப் தகவல்! ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-mines-in-the-strait-of-hormuz-trump-1787719857"></link>
            <id>https://canadamirror.com/article/no-mines-in-the-strait-of-hormuz-trump-1787719857</id>
            <summary type="text">&amp;nbsp; ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஈரான் வைத்திருந்த அனைத்துக் கண்ணிவெடிகளையும் அமெரிக்க கடற்படை அகற்றி அழித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஈரான் வைத்திருந்த அனைத்துக் கண்ணிவெடிகளையும் அமெரிக்க கடற்படை அகற்றி அழித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

</p><p>&nbsp;மீண்டும் கண்ணிவெடி வைக்கும் கப்பல்கள் உடனடியாக அழிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். </p><p>

இருநாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c596915-6e09-4473-8479-f5d20e7ce210/26-6a8e70b3365d7.webp' /></p><h2>அமெரிக்கா அறிவிப்பை உதாசீனம் செய்யும் ஈரான்</h2><p> ஈரானுடன் நிதித் தொடர்பு வைத்துள்ள நாடுகள் தனிமைப்படுத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. 

ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்யும் முக்கிய நாடான சீனா, அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்சமான தடைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.</p><p>டன், தனது உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகக் கூறியுள்ளது. 

பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள ஈரான், ஹோர்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறது. </p><p>

ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்துடன் தற்காலிகக் கடல்வழிப் பாதை அமைப்பது குறித்து ஈரான் ஆலோசித்து வருகிறது. 

ஈரான் எல்லைக்குட்பட்ட நீர் வழியிலேயே வர்த்தகக் கப்பல்கள் பயணிக்க வேண்டும் என்றும், இராணுவக் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஈரான் தெளிவாகத் தெரிவித்துள்ளது.</p><p>

தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாக மூடப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T07:25:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கப்பூரில் மக்கள் தொகையைப் பெருக்க அரசின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/government-new-plan-increase-population-singapore-1787728511"></link>
            <id>https://canadamirror.com/article/government-new-plan-increase-population-singapore-1787728511</id>
            <summary type="text">சிங்கப்பூரில் குறைந்துவரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டால் பெற்றோருக்கு ரூ.52 லட்சம் கொடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் குறைந்துவரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டால் பெற்றோருக்கு ரூ.52 லட்சம் கொடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
</p><p>
சிங்கப்பூரில் குறைந்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க பிரதமர் லாரன்ஸ் வாங் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.</p><p>சிங்கப்பூர் அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில், சிங்கப்பூரில் அழகான குடும்பங்களை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்த வேறு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d16bb158-ca4b-4388-8857-7874ce258f65/26-6a8e92806eaa8.webp' /></p><p> குழந்தைப்பேறு, கல்வி, அடிப்படை வசதிகள் குறித்த கவலைகளால், இளம் தம்பதிகள் குழந்தைப் பேற்றை தள்ளிப்போடுகிறார்கள்.

மேலும் சிலர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். </p><p>ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை பெற்றுக் கொள்ள பெரும்பாலானோர் விரும்புவதில்லை. </p><p>எனவே, ஆகஸ்ட் 23ஆம் திகதி தேசிய நாளை முன்னிட்டு பிரதமர் அளித்த பேட்டியில், நாடு குழந்தைப் பேற்றை அதிகரிக்க விரும்புகிறது என்ற தகவலை வெளியிட்டார்.
</p><p>
2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமான குழந்தை பிறந்தால் ரொக்கப் பரிசு வழங்குவது தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. </p><p>எனவே, தற்போது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு ரூ.53 லட்சம் குழந்தை போனஸ் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இது அவர்களது 17 வயது வரை ஆண்டுதோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த ரொக்கப் பரிசு திட்டம் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதிக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

அது மட்டுமல்லாமல், குழந்தைகள் பராமரிப்பு செலவு, கல்விச் செலவுகளையும் குறைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T07:17:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/15-infants-die-in-fire-accident-in-pakistan-1787722424"></link>
            <id>https://canadamirror.com/article/15-infants-die-in-fire-accident-in-pakistan-1787722424</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழக’ (PIMS) வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழக’ (PIMS) வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் புதிதாகப் பிறந்த 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளனர் .</p><p>ஏர் கண்டிஷனர் (AC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1a9ffd1-5308-48c0-965b-ef5ca5e14cb2/26-6a8e7aba59894.webp' /></p><p> </p><p>

விபத்து நடந்த போது அந்தப் பிரிவில் 16 குழந்தைகள் இருந்த நிலையில், ஒரு குழந்தை மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. </p><p>

தீயை அணைக்கும் பணிகள் நிறைவடைந்து, தற்போது புகையைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-26T05:31:00+00:00</updated>
        </entry>
    </feed>
