<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-23T11:15:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லைபீரியா வரலாற்றிலே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/the-biggest-drug-bust-in-liberia-s-history-1784803215"></link>
            <id>https://canadamirror.com/article/the-biggest-drug-bust-in-liberia-s-history-1784803215</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையில் அமைந்துள்ள லைபீரியாவின் மன்ரோவியாவில் உள்ள சட்டவிரோத சேமிப்புக் கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், லைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையில் அமைந்துள்ள லைபீரியாவின் மன்ரோவியாவில் உள்ள சட்டவிரோத சேமிப்புக் கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், லைபீரியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை ஜூலை 21, 2026 அன்று நடைபெற்றது.
</p><p>
இதன்போது சுமார் 370 மில்லியன் டாலர் மதிப்புள்ள உயர்தர கொக்கைனைப் போலீசார் கைப்பற்றினர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காகச் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb0080d0-6bad-45a3-b4a9-b4e00ee95142/26-6a61ef90f3371.webp' /></p><p>
</p><p>
 லைபீரிய நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை பிடிபட்ட போதைப்பொருட்களின் அளவுகளில் இதுவே மிகப்பெரிய அளவாகும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-23T10:38:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கே ஆட்டம்... ரஷ்ய ராணுவத்திற்கு பெரும் பீதியை ஏற்படுத்திய உக்ரைன் Flamingo ஏவுகணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ukraine-flamingo-missile-fear-russian-military-1784788885"></link>
            <id>https://canadamirror.com/article/ukraine-flamingo-missile-fear-russian-military-1784788885</id>
            <summary type="text">&amp;nbsp;ரஷ்ய - உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன், ‘ஃபயர் பாயிண்ட்’ (Fire Point) என்ற தனது உள்நாட்டு நிறுவனத்தின் மூலம் ‘எஃப்.பி-5 ஃ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ரஷ்ய - உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன், ‘ஃபயர் பாயிண்ட்’ (Fire Point) என்ற தனது உள்நாட்டு நிறுவனத்தின் மூலம் ‘எஃப்.பி-5 ஃப்ளமிங்கோ’ (FP-5 Flamingo) தொலைதூரக் ஏவுகணையை ரகசியமாக உருவாக்கி உள்ளமை ரஷ்ய ராணுவத் தளபதிகளுக்குப் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளின் சோதனைக் மாதிரிகள் பிரகாசமான ‘இளஞ்சிவப்பு’ (Pink) நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருந்ததால், இது ‘பிங்க் ஃப்ளமிங்கோ’ என அழைக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bae922d7-2e36-449b-980f-fe40e659e119/26-6a61b796c2df2.webp' /></p><h2>அமெரிக்காவிற்கே&nbsp; ஆட்டம்...</h2><p>
</p><p>
இந்த ஏவுகணையின் மிகவும் வியப்பூட்டும் அம்சம் என்னவென்றால், இதன் என்ஜின்கள் குப்பைக்கிடங்குகளிலிருந்தும் பயன்படுத்தப்படாத பழைய பழைய கடையிருப்புகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டவை . </p><p>

சோவியத் காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுப் பயன்பாடின்றி வீசப்பட்ட ‘இவ்செங்கோ ஏஐ-25’ (Ivchenko AI-25) ரக டர்போஃபேன் என்ஜின்களை உக்ரேனியப் பொறியாளர்கள் தேடிக் கண்டுபிடித்து, அவற்றில் மலிவான உதிரிபாகங்களைப் பொருத்தி, ஏவுகணையில் இயங்கும் வகையில் வெற்றிகரமாக மாற்றியமைத்துள்ளனர்.</p><p>


அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டொமஹாக்’ (Tomahawk) ஏவுகணையை விட இரண்டு மடங்கு அதிக எடையுள்ள (சுமார் 1,150 கிலோ) வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஃப்ளமிங்கோ ஏவுகணைகள், தயாரிப்புச் செலவில் டொமஹாகை விட ஐந்து மடங்கு மலிவானவை என கூறப்படுகின்றது.
</p><p>
சிக்கலான அமைப்புகள் எதுவுமின்றி மிக எளிமையான ஃபைபர் கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் உடற்பகுதியைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஏவுகணைகளை, உக்ரைன் ராணுவம் எவ்வித மேற்கத்திய நாடுகளின் அனுமதியுமின்றி ரஷ்ய நிலப்பரப்பிற்குள் மிக ஆழமாகப் பாய்ச்சி வருகிறது.
</p><p>
ரஷ்யாவின் வோல்கோகிராட் மற்றும் செபோக்சரி ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த முக்கிய ராணுவ ஆயுத உற்பத்தி ஆலைகள் மற்றும் போர் விமான உதிரிபாகத் தொழிற்சாலைகள் மீது இந்த ஃப்ளமிங்கோ ஏவுகணைகள் வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> 

இந் நிலையில் குப்பையிலிருந்து மீட்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு ரஷ்யாவின் ஆழமான ராணுவ அமைப்புகளை உக்ரைன் துல்லியமாகத் தாக்கி வருவது, சர்வதேச ராணுவ வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-23T10:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/warning-issued-by-yemen-s-houthi-rebels-red-sea-1784802529"></link>
            <id>https://canadamirror.com/article/warning-issued-by-yemen-s-houthi-rebels-red-sea-1784802529</id>
            <summary type="text">&amp;nbsp; சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
செங்கடல் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், சவூதி அரேபியா வழியாக இந்தியாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் ஏற்றி வந்த 2 வர்த்தகச் சரக்குக் கப்பல்கள் நடுவழியிலேயே திருப்பியனுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86e2a17d-29a3-4268-9fa7-b3d0a32a506a/26-6a61ece2a7e03.webp' /></p><p>
</p><p>


காசா போருக்கு எதிர்ப்பு தெரிவித்து நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களை இலக்கு வைக்கும் ஹவுதியினர், சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என உத்தியோகபூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>


வழக்கமாகச் செங்கடல் வழியாக வரும் கப்பல்கள், இந்த அச்சுறுத்தல் காரணமாகத் தற்போது ஆப்பிரிக்க கண்டத்தைச் சுற்றி (நன்னம்பிக்கை முனை வழியாக) மிக நீண்ட சுழற்சிப் பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-23T10:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண்: பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-origin-women-arrested-in-canada-1784798331"></link>
            <id>https://canadamirror.com/article/indian-origin-women-arrested-in-canada-1784798331</id>
            <summary type="text">கனடாவில், வாடகை மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் ப்ராம்டனில் வாழும் சவ்ரீத் கௌர் (27) என்னும் பெண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், வாடகை மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கனடாவின் ப்ராம்டனில் வாழும் சவ்ரீத் கௌர் (27) என்னும் பெண், வீடு வாடகைக்கு இருப்பதாக விளம்பரம் செய்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a963008-9b09-4796-b1a6-76224cc94b77/26-6a61dc7c71162.webp' /></p><p>
அந்த விளம்பரத்தை நம்பி, பலர் கௌரை அணுகி வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன், டெபாசிட் தொகையும் செலுத்தியுள்ளனர்.</p><p>

ஆனால், அவர்கள் சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் செல்லும்போதுதான் தெரிந்துள்ளது, அந்த வீட்டில் ஏற்கனவே ஒரு குடும்பம் வாடகைக்கு இருப்பதும், அந்த வீட்டை வாடகைக்கு விடும் திட்டமே அந்த வீட்டுக்காரருக்கு இல்லை என்பதும்!
</p><p>
இதில் சிலர் தாங்கள் ஏற்கனவே வசித்த வீட்டை காலி செய்துவிட்டு தங்கள் உடைமைகளுடன் வந்துள்ளார்கள். அவர்கள் வாடகை ஒப்பந்தம் செய்து, குடியிருப்பதற்காக வந்த வீட்டில் ஏற்கனவே வேறொரு குடும்பம் வசித்துவருவது தெரியவந்ததால், என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போன சம்பவங்களும் நடந்துள்ளன.
</p><p>
இந்நிலையில், அப்படி சுமார் 17 பேரை ஏமாற்றிய சவ்ரீத் கௌர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சுமார் 60,000 டொலர்களுக்கும் அதிகமான தொகையை இந்த வகையில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
</p><p>
அவர் மீது 38 மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடயம் என்னவென்றால், வீடு வாடகைக்கு இருப்பதாக அவருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 17 பேரில் ஒருவருக்குக் கூட அவர் உறுதியளித்தபடி வீடும் கிடைக்கவில்லையாம், அவர் வாங்கிய டெபாசிட்டும் திருப்பிக் கொடுக்கப்படவில்லையாம்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T09:19:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[74 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ; 52 பேர் பலியான விமானத்தின் பாகங்கள் அட்லாண்டிக் கடலில் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/parts-plane-killed-52-people-recovered-atlantic-1784791224"></link>
            <id>https://canadamirror.com/article/parts-plane-killed-52-people-recovered-atlantic-1784791224</id>
            <summary type="text">1952ஆம் ஆண்டு இடம்பெற்ற கோரமான விமான விபத்தில் சிக்கிய விமானத்தின் பாகங்கள், 74 ஆண்டுகளுக்குப் பின்னர் அட்லாண்டிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>1952ஆம் ஆண்டு இடம்பெற்ற கோரமான விமான விபத்தில் சிக்கிய விமானத்தின் பாகங்கள், 74 ஆண்டுகளுக்குப் பின்னர் அட்லாண்டிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p>

விமானப் பயணங்களின் போது பயணிகளுக்கு அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் நடைமுறைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்த விபத்துகளில் ஒன்றாக 1952ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த விமான விபத்து குறிப்பிடப்படுகிறது.</p><p>

1952ஆம் ஆண்டு அமெரிக்காவின் தன்னாட்சி பிரதேசமாக இருந்த போர்ட்டோ ரிகோவின் சான் ஜூவான் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி பேன் ஆம் (Pan Am) நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று பயணத்தை ஆரம்பித்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ca6b9c-7acd-4a56-a593-187811ac04f4/26-6a61c0b98f781.webp' /></p><p>குறித்த விமானத்தில் 69 பயணிகள் இருந்த நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலின் வான் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு காணாமல் போனது </p><p>பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், விமானத்தின் இரு இயந்திரங்களும் செயலிழந்ததைத் தொடர்ந்து அது அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
</p><p>
விமானம் கடலில் விழுந்த பின்னர், அதிலிருந்த உயிர்காப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி 17 பேர் கடலில் மிதந்து உயிர் தப்பியுள்ளனர். எனினும், 52 பேர் விமானத்துடன் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். </p><p>உயிரிழந்தவர்களில் 13 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது கடலின் ஆழம் மற்றும் கடினமான சூழ்நிலைகள் காரணமாக விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடிக்க முடியாமல் போனது. </p><p>எனினும், தற்போது மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 2,000 அடி ஆழத்தில் விமானத்தின் இறக்கைகள் மற்றும் வால் பகுதி உள்ளிட்ட முக்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன் மூலம், பல தசாப்தங்களாக நீடித்த இந்த விமான விபத்து தொடர்பான தேடுதல் நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

74 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்துள்ள இந்த கண்டுபிடிப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-23T07:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் மாதம் டிரம்ப் அரசாங்கம் முடங்கும் அபாயம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/risk-of-trump-administration-shutdown-in-september-1784789589"></link>
            <id>https://canadamirror.com/article/risk-of-trump-administration-shutdown-in-september-1784789589</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் வரும் செப்டம்பர் மாதம் அரசாங்கம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் வரும் செப்டம்பர் மாதம் அரசாங்கம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p> 
நிதிச் செலவினங்கள் தொடர்பான மசோதாக்கள் மீது குடியரசு கட்சியினருக்கும் ஜனநாயக கட்சியினருக்கும் இடையே நாடாளுமன்றத்தில் கடும் கருத்து வேறுபாடுகளும் முட்டுக்கட்டைகளும் நீடித்து வருவதால் இந்தச் சூழல் உருவாகியுள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e2538bb-8d30-4c65-b935-6455602f217f/26-6a61ba5cc3564.webp' /></p><h2>மனநிலை சரியில்லாதவர்கள்...&nbsp;</h2><p> </p><p>
 
இந்த விவகாரத்தில் அரசு செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்களை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார். </p><p>

அவர்களை 'மனநிலை சரியில்லாதவர்கள்' என்று கடுமையான வார்த்தைகளால் டிரம்ப், விமர்சித்துள்ளதும் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
</p><p>
இரு கட்சிகளுக்கும் இடையேயான இந்த மோதல் நீண்ட காலமாக நீடித்து வருவதால், அமெரிக்க அரசின் நிதி நிலைப்பாடு மற்றும் நிர்வாக பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. </p><p>

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருமித்த முடிவுக்கு வராத வரை இந்த முடக்கம் தவிர்க்க முடியாததாக மாறும் சூழல் நிலவுவதால், அமெரிக்க அரசியல் களம் தற்போது மிகுந்த பதற்றத்துடன் காணப்படுகிறது.
</p><p>
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே அரசாங்கம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளதால், அது சர்வதேச பொருளாதாரத்திலும் பங்குச் சந்தைகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T07:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கும் அமெரிக்கா – லெபனான் நேரடி விமான சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-lebanon-flight-service-resumes-after-40-years-1784788922"></link>
            <id>https://canadamirror.com/article/us-lebanon-flight-service-resumes-after-40-years-1784788922</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையில் 40 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையில் 40 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
கடந்த 1985ஆம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் ஆட்சிக் காலத்தில், லெபனானைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் ‘பிளைட் 847’ எனப்படும் அமெரிக்க விமானம் கடத்தப்பட்டது.</p><p>

அந்த சம்பவத்தின் போது அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து லெபனானுடனான நேரடி விமான சேவையை அமெரிக்கா நிறுத்தியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bb83d41-7778-47bc-b248-8485c9fb020b/26-6a61b7bb9f262.webp' /></p><p>இதனையடுத்து, சுமார் நான்கு தசாப்தங்களாக அமெரிக்கா–லெபனான் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து இடம்பெறாமல் இருந்த நிலையில், தற்போது குறித்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் சந்தித்து கலந்துரையாடியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் கருத்து தெரிவித்த டிரம்ப், பல தசாப்தங்களாக லெபனான் பல்வேறு சவால்களையும் துன்பங்களையும் எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், லெபனானுக்கு உரிய மரியாதையும் முழுமையான ஆதரவும் கிடைப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்கா–லெபனான் இடையிலான நேரடி விமான சேவை மீள ஆரம்பிக்கப்படுவது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-23T06:42:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சிறுவர் துஸ்பிரயோகங்களுடன் தொடர்புடைய 63 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/63-arrested-213-charges-laid-in-ontario-1784788324"></link>
            <id>https://canadamirror.com/article/63-arrested-213-charges-laid-in-ontario-1784788324</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஓண்டாரியோ மாகாணம் முழுவதும் சிறுவர்களுக்கு எதிரான இணையவழி பாலியல் சுரண்டலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விரிவான நடவடிக்கையைத் தொடர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஓண்டாரியோ மாகாணம் முழுவதும் சிறுவர்களுக்கு எதிரான இணையவழி பாலியல் சுரண்டலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விரிவான நடவடிக்கையைத் தொடர்ந்து, 63 சந்தேக நபர்கள் மீது 200-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>
'புராஜெக்ட் டைம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிறப்புத் திட்டத்தின் மூலம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை தயாரித்தல், கைவசம் வைத்திருத்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களால் இலக்கு வைக்கப்பட்ட 51 பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> 
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உரிய உதவிகளும் வழங்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
264 குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e02cc4f-8d96-4f2a-9469-59f6f89b0351/26-6a61b56629850.webp' /></p><p>
</p><p>குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் "தங்கள் சமூகத்தில் பொறுப்பான மற்றும் நம்பிக்கை தரும் பதவிகளில் இருந்தவர்கள்" ஆவர். 
8 பேர் ஏற்கனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.
</p><p>மொத்தம் 814 மின்னணு சாதனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p> 
மேலும் 154 விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஓண்டாரியோ மாகாணக் காவல் துறை தெரிவித்துள்ளது.</p><p> 
சிறுவர் பாலியல் சுரண்டல் தொடர்பான ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், உள்ளூர் காவல்துறையையோ அல்லது cybertip.ca என்ற இணையதளத்தையோ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T06:40:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மோதலுக்கு பெரும் விலை கொடுக்கும் அமெரிக்கா ; வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/america-will-pay-a-heavy-price-for-iran-conflict-1784788429"></link>
            <id>https://canadamirror.com/article/america-will-pay-a-heavy-price-for-iran-conflict-1784788429</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இதுவரை சுமார் 3,750 கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ.12.58317 மில்லியன்) செலவிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இதுவரை சுமார் 3,750 கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் ரூ.12.58317 மில்லியன்) செலவிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க இராணுவத் தேவைகள் மற்றும் வெள்ளை மாளிகையின் செலவுகளுக்காக 9,500 கோடி டொலர் மதிப்பிலான அவசரகால நிதி ஒதுக்கீட்டு திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியினர் தயாரித்து வருகின்றனர்.
</p><p>
இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையின் நிதி ஒதுக்கீட்டுக் குழு முன் ஆஜரான பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத், குறித்த நிதி ஒதுக்கீட்டின் அவசியம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/981db7cd-4de0-4478-b443-ba16f9362eb8/26-6a61b5ce575ed.webp' /></p><p>அங்கு உரையாற்றிய அவர், இந்த அவசரகால நிதி ஒதுக்கீடு வழங்கப்படாவிட்டால், அமெரிக்க இராணுவம் கடுமையான நிதி நெருக்கடியையும் செயல்திறன் பாதிப்பையும் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார்.
</p><p>
எனினும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜனநாயகக் கட்சியின் மூத்த செனட்டர் பேட்டி முர்ரே, ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என ஜனாதிபதி டிரம்ப் தொடர்ச்சியாக கூறிவந்த நிலையில், தற்போது மேலும் 7,000 கோடி டொலர் நிதி கோருவது நியாயமற்றது என விமர்சித்துள்ளார்.</p><p>இதற்கிடையில், ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து 11ஆவது நாளாகவும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதல்களில் விமானப்படைத் தளங்கள் மற்றும் ட்ரோன் சேமிப்புக் கிடங்குகள் இலக்குகளாகக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 11 நாட்களில் அமெரிக்காவின் தாக்குதல்களில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் மீதும் ஈரான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98131ee3-8079-4a55-bc20-ab8ad3988ebc/26-6a61b5cf0a4df.webp' /></p><p>இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அதற்கு பதிலடியாக ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அமெரிக்காவுக்கு தற்போது ஆர்வம் இல்லை என தெரிவித்துள்ள டிரம்ப், நடான்ஸ் அணுசக்தி நிலையத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் நிலத்தடியில் அமைக்கப்பட்டு வரும் ‘பிக்ஏக்ஸ் மவுண்டன்’ எனப்படும் புதிய அணுச்செறிவூட்டல் மையம் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
</p><p>
டிரம்பின் இந்த நிலைப்பாடு, அமெரிக்கா–ஈரான் மோதலை மேலும் தீவிரப்படுத்துவதுடன், உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
</p><p>
இதேவேளை, மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பாகிஸ்தான் மேற்கொண்ட அமைதி முயற்சிகளிலும் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-23T06:33:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் பதற்றம்; ஈரான் தாக்கினால் அணுமின் நிலையங்கள் அழிக்கப்படும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nuclear-power-plants-willdestroyed-if-iran-attacks-1784786146"></link>
            <id>https://canadamirror.com/article/nuclear-power-plants-willdestroyed-if-iran-attacks-1784786146</id>
            <summary type="text">&amp;nbsp; ஹேர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் அணுமின் நிலையங்கள் அல்லது பாலங்கள் மீது அமெரிக்கா வெடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹேர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் அணுமின் நிலையங்கள் அல்லது பாலங்கள் மீது அமெரிக்கா வெடிகுண்டு வீசி அழிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>


அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் முறிந்ததையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.



இதற்குப் பதிலடியாக ஹேர்முஸ் நீரிணையை மூடியுள்ள ஈரான், அதன் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89c2633e-92c8-4859-a5e1-3909f5182f8c/26-6a61ace400b7e.webp' /></p><p>



இது குறித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், இனிவரும் காலங்களில் ஹேர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பல் மீதும் ஏவுகணை, ட்ரோன் அல்லது வேறு எந்த ஆயுதங்களைக் கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தினால், தலைநகர் தெஹ்ரானில் அல்லது அதன் அருகில் உள்ள பாலங்கள் மற்றும் மின் நிலையங்களை அமெரிக்கா குண்டுவீசி அழிக்குமென தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-23T05:54:07+00:00</updated>
        </entry>
    </feed>
