<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-13T08:34:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்தான், குவைத், பஹ்ரைனில் ...அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் ; அச்சத்தில் உலக நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-attacks-us-bases-in-jordan-kuwait-and-bahrain-1783917613"></link>
            <id>https://canadamirror.com/article/iran-attacks-us-bases-in-jordan-kuwait-and-bahrain-1783917613</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை சர்வதேசத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை சர்வதேசத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் ஜோர்தான் தளத்தில் உள்ள எரிபொருள் சேமிப்புத் தாங்கிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது தமது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deaa3417-2b82-4d32-a9dc-5a5e5e13c3d4/26-6a546c361f685.webp' /></p><p> 

ஜோர்தானின் இளவரசர் ஹசன் விமானப் படையணித் தளத்தை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கியுள்ளதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது. 

ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதில் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. </p><p>

அதேநேரம் பஹ்ரைனில் அபாய எச்சரிக்கை ஒலிகள் ஒலிக்கப்பட்டதாகவும் ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. 

பழிவாங்கும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக பஹ்ரைனின் ஷேக் ஈசாவில் உள்ள அமெரிக்கத் தளத்தைத் தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. </p><p>

எவ்வாறாயினும் இது அமெரிக்காவின் கடற்படைத் தலைமையகம் இல்லையென்ற போதிலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கும் விமானங்களுக்கும் குறித்த தளம் வசதிகளை வழங்கி வருகின்றது.</p><p> 

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்கைத் தாக்கியுள்ளதாக ஈரான் கூறுகின்ற நிலையிலும், வளைகுடா நாடான அங்கு அவசரகால எச்சரிக்கை ஒலிகள் ஒலிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவளை குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-13T07:54:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷில் சீரற்ற காலநிலையினால் 51 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heavy-rains-and-flash-floods-in-bangladesh-1783929051"></link>
            <id>https://canadamirror.com/article/heavy-rains-and-flash-floods-in-bangladesh-1783929051</id>
            <summary type="text">பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
தலைநகர் டாக்கா உட்பட நாட்டின் பெரும்பகுதியைத் தாக்கிய திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.</p><p>
இதுவரை பதிவாகியுள்ள மரணங்களில் பாதியற்கும் மேற்பட்டவை, பெருமளவிலான ரோஹிங்கியா அகதிகள் வாழும் காக்ஸ் பஜார் மாவட்டத்திலேயே நிகழ்ந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63386ec0-1f1c-4131-ba36-8222da8a4674/26-6a5498e227ebe.webp' /></p><p>
</p><p>கடந்த வாரம் இந்த மாவட்டத்தில் வெள்ள நீர் பாடசாலைக்குள் புகுந்ததில் பல மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்தனர்.</p><p>
பங்களாதேஷ் பல நதிகளைக் கொண்ட ஒரு தாழ்நில நாடாகும். இங்கு வருடாந்த பருவமழைக்காலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கமானது என்றாலும், காலநிலை மாற்றம் காரணமாக மழைப்பொழிவு வழக்கத்தை விட அதிக தீவிரமாகவும், அடிக்கடி நிகழக்கூடியதாகவும் மாறியுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p>ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்த இந்த கனமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். </p><p>
அத்துடன் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்களை வெளியேற்றியுள்ளதுடன், மாணவர்களின் பரீட்சைகளையும் ஒத்திவைத்துள்ளனர். தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் அரசாங்கத்தின் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.</p><p>
அதிகாரிகளின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>பதிவாகியுள்ள 51 மரணங்களில் 28 மரணங்கள் காக்ஸ் பஜார் பகுதியிலேயே நிகழ்ந்துள்ளன. இந்த மாவட்டத்தில் உலகின் மிகப்பெரிய அகதிகள் குடியேற்றப் பகுதியாகக் கருதப்படும் 10 இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T07:53:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி; 13 உலகத் தலைவர்களுக்கு ஈரான் பகிரங்க மரண எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-warning-iran-newspaper-trump-world-leaders-1783929283"></link>
            <id>https://canadamirror.com/article/death-warning-iran-newspaper-trump-world-leaders-1783929283</id>
            <summary type="text">&amp;nbsp; மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஈரான் அரசுக்குச் சொந்தமான முக்கிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

 கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் மரணத்திற்குப் பழிவாங்கக் கோரி ஈரானில் தீவிரப் பிரச்சாரங்கள் நடந்து வரும் வேளையில் இந்த மிரட்டல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d397bf5-8c44-4429-805a-832068d62ad5/26-6a5499c535800.webp' /></p><h2>&nbsp;13 உலகத் தலைவர்களின் புகைப்படங்கள்</h2><p>

ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ ‘ஹம்ஷஹ்ரி’ (Hamshahri) நாளிதழ், தனது இணையப் பக்கத்திலும் அச்சுப் பதிப்பிலும் ஒரு அதிரடி தகவல் வரைபடத்தை (Infographic) வெளியிட்டுள்ளது.
</p><p>
 அதில், “பழிவாங்கல் மிக விரைவில் வருகிறது; இது எங்களது தேசத்தின் விருப்பம், இது நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்ற மிக ஆக்ரோஷமான வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த மரணப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முக்கிய ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட 13 உலகத் தலைவர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது உலக நாடுகளை உலுக்கியுள்ளது.</p><p>

ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனி, தனது தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்குப் பிறகு வெளியிட்ட முதல் அதிகாரப்பூர்வ செய்தியில், “இந்தக் குற்றவாளிகள் யாரும் தங்களது படுக்கையில் நிம்மதியாக உயிரை விட முடியாது அவர்கள் தங்களது இறுதி நாட்களைக் கல்லறையில்தான் கழிக்க நேரிடும்” என ஆளுமையாகக் குறிப்பிட்டிருந்தார். </p><p>அவரது இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் அனைத்தும் “இரத்தப் பழிவாங்கலின் வெள்ளிக்கிழமைகளாக” மாற்றப்பட்டு, அமெரிக்காவிற்கு எதிரான ஜிகாத் (Jihad) முழக்கங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>

 இந்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஈரானின் 140-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்திக் குண்டுமழை பொழிந்துள்ளது. </p><p>

“ஈரான் எங்களது தலைவர்களைக் குறிவைக்க முயன்றால் அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளதால், வளைகுடாப் பகுதியில் எந்நேரமும் முழு அளவிலான உலகப்போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T07:53:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்கரிங் பகுதியில் கார் மோதி 68 வயது முதியவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/68-year-old-man-dead-after-being-struck-1783926230"></link>
            <id>https://canadamirror.com/article/68-year-old-man-dead-after-being-struck-1783926230</id>
            <summary type="text">&amp;nbsp;பிக்கரிங் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில், எஸ்.யு.வி ரக கார் ஒன்று மோதியதில் 68 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டர்ஹாம் பிராந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிக்கரிங் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில், எஸ்.யு.வி ரக கார் ஒன்று மோதியதில் 68 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> இது குறித்து அவர்கள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச் சம்பவம் சனிக்கிழமை இரவு 10 மணிக்குப் பின்னர், 1105 கிங்ஸ்டன் வீதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இடம்பெற்றுள்ளது.
</p><p> கருப்பு நிற ஃபோர்டு ரக எஸ்.யு.வி கார் ஒன்று வாகன நிறுத்துமிடத்தினூடாகச் சென்றுகொண்டிருந்த போது, அங்கு நடந்து சென்றுகொண்டிருந்த முதியவர் மீது மோதியுள்ளதுடன், அவர் காரின் அடியில் சிக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c91ab3-148e-4144-8892-8af0ba075a84/26-6a548dd7ef001.webp' /></p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள், காரின் அடியில் சிக்கியிருந்த முதியவரை மீட்பதற்காக அந்த ஃபோர்டு காரை மேலே தூக்கி, அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசர முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என பொலிஸார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
எனினும், அவசர உதவிப் பிரிவினரின் தீவிர முயற்சிகளுக்கு மத்தியிலும், அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்ததுடன், புலனாய்வு அதிகாரிகளின் விசாரணை நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p>
இந்த விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதோடு, இது தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து பொலிஸாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T07:05:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொரொன்டோவிற்கு வெப்பம் மஞ்சள் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/second-heat-event-to-hit-toronto-southern-ontario-1783924556"></link>
            <id>https://canadamirror.com/article/second-heat-event-to-hit-toronto-southern-ontario-1783924556</id>
            <summary type="text">இந்த வாரத்தில் டொரொன்டோவில் கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என்பதால், டொரொன்டோ மற்றும் தெற்கு ஒன்டாரியோவின் ஏனைய பகுதிகளுக்கு கனடா சுற்றாடல் திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வாரத்தில் டொரொன்டோவில் கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என்பதால், டொரொன்டோ மற்றும் தெற்கு ஒன்டாரியோவின் ஏனைய பகுதிகளுக்கு கனடா சுற்றாடல் திணைக்களம் மஞ்சள் நிற வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>
இவ் வாரத்தில் பகல் நேர வெப்பநிலை 30 பாகை செல்சியஸின் நடுப்பகுதியை எட்டக்கூடும் எனவும், காற்றில் உள்ள ஈரப்பதன் காரணமாக அது 45 பாகை செல்சியஸ் வரை உணரப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த வெப்ப அலையானது திங்கட்கிழமை ஆரம்பமாகி, புதன் அல்லது வியாழக்கிழமை மாலை வரை நீடிக்கும் என கனடா சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>
செவ்வாய்க்கிழமை இந்த வெப்ப அலையின் உச்சக்கட்ட நாளாக இருக்கும். சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 36 பாகை செல்சியஸை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தேசிய வானிலை நிறுவனம் தனது ஆலோசனைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
</p><p>இந்த வெப்ப அலையின் போது, ஒன்டாரியோ குடியிருப்பாளர்கள் 38 முதல் 45 வரையிலான ஈரப்பதன் மதிப்பை உணரக்கூடும். மேலும், இரவு நேரங்களிலும் வெப்பநிலை 20 பாகை செல்சியஸிற்குக் கீழ் குறையாது என்பதால், வெப்பத்திலிருந்து தப்பிப்பது கடினமாக இருக்கும்.
வெப்பம் மற்றும் ஈரப்பதன் மிக்க காற்று, காற்றின் தரத்தை மோசமடையச் செய்யலாம். </p><p>இதனால் காற்றின் தர ஆரோக்கிய குறியீடு அதிக ஆபத்துள்ள வகையை நெருங்கக்கூடும் எனவும் கனடா சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுங்கள் - கடுமையான வெப்பம் அனைவரினதும் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். முதியவர்கள், தனியாக வசிப்பவர்கள் மற்றும் ஆபத்தில் உள்ள மற்றவர்களின் உடல்நலம் குறித்து நேரில் அல்லது தொலைபேசி மூலம் தினமும் பலமுறை விசாரித்துக்கொள்ளுங்கள். என அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T06:36:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 12 வயது மாணவியின் ஸ்டார்ட்-அப் நிறுவனம்! 3 நாடுகளில் வாடிக்கையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-12-year-old-mana-jampala-ai-start-up-in-canada-1783922438"></link>
            <id>https://canadamirror.com/article/a-12-year-old-mana-jampala-ai-start-up-in-canada-1783922438</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; கனடாவில் 12 வயது மாணவி மனா ஜம்பாலா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கி சாதனை படைத்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; கனடாவில் 12 வயது மாணவி மனா ஜம்பாலா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கி சாதனை படைத்துள்ளார்.</p><p> 

ஏழாம் வகுப்பு படிக்கும் இவர், 'வோக்ஸா' என்ற நிறுவனத்தின் மூலம் கனடா, இந்தியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் உள்ள வணிகங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறார்.
 
தனது ஒன்பதாவது வயதில் பைதான் நிரலாக்க மொழியை கற்றுக் கொண்ட மனா, 11 வயதிலேயே சொந்தமாக AI தயாரிப்புகளை உருவாக்க தொடங்கிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d11df3be-243b-4654-bdc9-79d215c2d0a7/26-6a547f084fb11.webp' /></p><h2>&nbsp;24 மணி நேரமும் செயல்படும் AI குரல்</h2><p>
</p><p>
 தனது தந்தை பணிபுரியும் இடத்தில் வாடிக்கையாளர்களின் அழைப்புகள் தவறவிடப்படுவதை கவனித்த மனா, அந்த சிக்கலுக்குத் தீர்வாக 24 மணி நேரமும் செயல்படும் AI குரல் உதவியாளரை உருவாக்கினார். </p><p>

இந்த சாதனம் வாடிக்கையாளர்களின் அழைப்புகளை ஏற்று, உணவகங்களில் ஆர்டர்களை பெறுதல் மற்றும் முன்பதிவு செய்தல் போன்ற பணிகளை செய்கிறது.
</p><p> 
 அதேசமயம் தொழில்நுட்ப உதவியாளர்களை பயன்படுத்தினாலும், குறியீட்டின் ஒவ்வொரு பகுதியையும் தானே சோதனை செய்து பிழைகளை திருத்தியதாகக் கூறும் மனா, தற்போது 'வோக்ஸா ஏஜென்ட்ஸ்' என்ற புதிய முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-13T05:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் வெப்ப அலையினால் 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு! விஞ்ஞானிகள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/over-10-000-died-due-to-the-heatwave-in-europe-1783919028"></link>
            <id>https://canadamirror.com/article/over-10-000-died-due-to-the-heatwave-in-europe-1783919028</id>
            <summary type="text">&amp;nbsp; ஐரோப்பாவின் மேற்குப் பகுதியை உலுக்கிய மிகக் கடும் வெப்ப அலையினால் ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் மட்டும் 10,000-க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஐரோப்பாவின் மேற்குப் பகுதியை உலுக்கிய மிகக் கடும் வெப்ப அலையினால் ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் மட்டும் 10,000-க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>

 
ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படும் யூரோமோமோ அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 

ஜூன் 22 முதல் 28 வரையிலான ஒரே வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் 10,650 உபரி மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 9,000-க்கும் அதிகமான மரணங்கள் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/550a9c7e-5c6c-4213-8abc-791dcfbaf148/26-6a5471b5df876.webp' /></p><h2>வெப்பவாதம் , இருதய நோய், சுவாசப் பிரச்சினைகள்</h2><p> </p><p> 

கடும் வெப்பத்தினால் ஏற்படும் வெப்பவாதம் மற்றும் ஏற்கனவே இருக்கும் இருதய நோய், சுவாசப் பிரச்சினைகள் தீவிரமடைவதே மரணங்களுக்குக் காரணமாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>


 வருடத்தின் இந்தத் தட்பவெப்பக் காலத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மரணங்கள் நிகழ்வது மிகவும் அசாதாரணமானது. இதைத் தீவிர வெப்ப அலையைத் தவிர வேறு எதனாலும் விளக்க முடியாது" என டென்மார்க்கின் ஸ்டேட்டன்ஸ் செரம் நிறுவனத்தின் தலைமை வைத்தியர் லாஸ் வெஸ்டர்கார்ட் தெரிவித்துள்ளார்.
</p><p>
யூரோமோமோ அமைப்பு நாடுகள் ரீதியான தனிப்பட்ட தரவுகளை வெளியிடாவிட்டாலும், ஜூன் மாத இறுதியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் மட்டுமே "மிக மிக அதிக அளவிலான மரணங்கள்" பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. </p><p>

கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்ட பதிவுகளிலேயே, இந்த வெப்ப அலையின் போதுதான் பெல்ஜியத்தின் மிக மோசமான மரண விகிதம் பதிவாகியுள்ளதாகப் பெல்ஜியத்தின் பொது சுகாதார நிறுவனமான 'Sciensano' தெரிவித்துள்ளது. </p><p> 

பிரித்தானியாவில் மே மற்றும் ஜூன் மாத வெப்ப அலைகளால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மட்டும் சுமார் 2,700 பேர் உயிரிழந்துள்ளதாக லண்டன் இம்பீரியல் கல்லூரி நடத்திய தனி ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது</p><p>

மனிதர்களின் செயல்பாடுகளால் ஏற்படும் உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் இல்லையென்றால், ஜூன் மாத இறுதியில் நிலவிய இத்தகைய கொடூரமான வெப்ப அலை சாத்தியமே இல்லை என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.</p><p> 

அதேசமயம் இந்த வெப்ப அலையானது பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிரித்தானியாவில் மின்சார விநியோகத்தைப் பாதித்ததுடன், பாடசாலைகள் மூடப்படுவதற்கும் வழிவகுத்தது.</p>]]></content>
            <updated>2026-07-13T05:02:33+00:00</updated>
        </entry>
    </feed>
