<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-17T16:46:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் பாராளுமன்றம் கலைப்பு; மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா பெஞ்சமின் நெதன்யாகு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-parliament-dissolved-netanyahu-regain-power-1784284797"></link>
            <id>https://canadamirror.com/article/israel-parliament-dissolved-netanyahu-regain-power-1784284797</id>
            <summary type="text">&amp;nbsp; இஸ்ரேல் பாராளுமன்றம் இன்று முறைப்படி கலைக்கப்பட்டுள்ளது. புதிய ளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இஸ்ரேல் பாராளுமன்றம் இன்று முறைப்படி கலைக்கப்பட்டுள்ளது. புதிய ளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு தனது 4 ஆண்டுகாலப் பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3f82ea4-ce3c-4e37-9070-ca7585935932/26-6a5a067f5d992.webp' /></p><p> 



இந்த புதிய பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மொத்தம் 120 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.</p><p> 

இந்தத் தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பிரதமர் நப்தலி பென்னெட் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போட்டியிட உள்ளதால், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.



இந்நிலையில், தேர்தல் முடிவடைந்த பின்னர், புதிய அரசின் தலைமையில் புதிய பாராளுமன்றம் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-17T16:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்தில் உள்நாட்டுப் பறவைக்கு H5N1 பறவைக் காய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/h5n1-bird-flu-in-a-native-bird-in-new-zealand-1784294369"></link>
            <id>https://canadamirror.com/article/h5n1-bird-flu-in-a-native-bird-in-new-zealand-1784294369</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முதன்முறையாக, நியூசிலாந்தில் நாட்டின் பூர்வீகப் பறவை இனத்தைச் சேர்ந்த &#039;சுவாம்ப் ஹாரியர்&#039; (Swamp Harrier) வகை கழுகுக்கு H5N1 பறவைக் காய்ச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முதன்முறையாக, நியூசிலாந்தில் நாட்டின் பூர்வீகப் பறவை இனத்தைச் சேர்ந்த 'சுவாம்ப் ஹாரியர்' (Swamp Harrier) வகை கழுகுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
வட தீவின் வைராபா பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கழுகுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, உயிரியல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ ஹொகார்ட் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1f73ca2-9136-4bea-8f17-05fd0d438806/26-6a5a2be32d8ef.webp' /></p><p>
</p><p>
நியூசிலாந்தில் கடந்த புதன்கிழமை அன்று, வெலிங்டன் அருகே கண்டெடுக்கப்பட்ட 'ப்ரவுன் ஸ்குவா' (Brown Skua) எனும் கடல் பறவைக்கு முதன்முதலில் இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, தற்போது உள்நாட்டுப் பறவைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, வளர்ப்புப் பறவைகளிடம் (Poultry) இதுவரை நோய் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என ஆண்ட்ரூ ஹொகார்ட் உறுதிப்படுத்தினார்.
</p><p>
 நாட்டிலுள்ள மிகவும் அழிந்து வரும் நிலையில் உள்ள ஐந்து பறவை இனங்களைச் சேர்ந்த 300 முக்கிய இனப்பெருக்கப் பறவைகளுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சுகாதார அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
</p><p>
அதேவேளை இந்த மாத தொடக்கத்தில், அவுஸ்திரேலியாவிலும் உள்ளூர் கடல் பறவை ஒன்றிற்குப் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-17T13:17:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் பாரிய மண்சரிவு; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/massive-landslide-in-china-many-feared-dead-1784293891"></link>
            <id>https://canadamirror.com/article/massive-landslide-in-china-many-feared-dead-1784293891</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சீனாவின் சோங்க்சிங் நகரில் இன்று காலை திடீரென பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

 மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில், அதன் கீழ் பகுதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சீனாவின் சோங்க்சிங் நகரில் இன்று காலை திடீரென பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

 மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில், அதன் கீழ் பகுதியில் ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த பல குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இடிந்து நொறுங்கியுள்ளன.
</p><p>


இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் விரைந்த 100 மீட்புக்குழுவினரும் 200 தீயணைப்பு வீரர்களும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2507cffc-78f9-4d28-a7fb-34fdaa2482d5/26-6a5a2a0475b05.webp' /></p><p>



இடிபாடுகளில் சிக்கியிருந்த 9 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> எனினும், மேலும் பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
</p><p>


மண்சரிவின்போது பாறைகளும் இடிபாடுகளும் வீதிகளில் வந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
</p><p>


இந்த மண்சரிவு ஏற்பட்டதற்கான உடனடி காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.



வெளியாகியுள்ள சி.சி.டி.வி வான்வழிப் படக்காட்சிகளில், கட்டிடங்கள் மீது பாறைகள் விழுந்து நொறுங்குவதும், மக்கள் தப்பி ஓடுவதும் பதிவாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T13:09:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவை வம்புக்கு இழுக்கும் ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்களின் செயல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/argentine-footballers-provoking-britain-1784282278"></link>
            <id>https://canadamirror.com/article/argentine-footballers-provoking-britain-1784282278</id>
            <summary type="text">&amp;nbsp; ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் மைதானத்தில் பதாகை ஏந்திப் போராடிய விவகாரம், தற்போது பிரித்தானிய மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் மைதானத்தில் பதாகை ஏந்திப் போராடிய விவகாரம், தற்போது பிரித்தானிய மற்றும் ஆர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே பெரிய ராஜதந்திர மோதலாக உருவெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன. </p><p>

 இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி வெற்றிக்குப் பிறகு, ஆர்ஜென்டினா வீரர்கள் , ஃபாக்லாந்து தீவுகள் ஆர்ஜென்டினாவிற்குச் சொந்தமானவை என்ற பதாகையைக் காட்டியதற்கு பிரித்தானியாவின் வணிகத்துறை அமைச்சர் பீட்டர் கைல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc057dfd-6f01-4252-97f0-3a550d8df61e/26-6a59fca7d1020.webp' /></p><h2>பிரித்தானியாவின் வணிகத்துறை அமைச்சர்&nbsp; &nbsp;கடும் கண்டனம்&nbsp;</h2><p>
</p><p>
இந் நிலையில் மைதானத்திற்குள் அரசியல் குறியீடுகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் கால்பந்து சம்மேளனத்தின் விதிகளை இந்தச் செயல் அப்பட்டமாக மீறியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் கைல், இது குறித்து உலகக் கால்பந்து நிர்வாக அமைப்பு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
 "கால்பந்து செம்பியன்ஷிப் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் ஃபாக்லாந்து தீவுகள் நிச்சயமாக நமக்குத்தான் சொந்தம்" என்று டவுனிங் ஸ்ட்ரீட் பேச்சாளர் ஒருவர் ஆர்ஜென்டினாவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1320c241-0785-425b-bad0-77f87fa29780/26-6a59fca8a80cc.webp' /></p><p>
</p><p>
அரையிறுதிப் போட்டி முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே, இரண்டு நாடுகளுக்கும் இடையே மற்றொரு தூதரக மோதலும் வெடித்துள்ளது.
</p><p>
இதில் ஒரு சம்பவமாக, இருதரப்பு ஒப்பந்தங்களை மீறும் வகையில் செயற்பட்ட பிரிட்டன் கப்பலுக்கு எதிராக, பியூனஸ் அயர்ஸில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் ,ஆர்ஜென்டினா அரசாங்கம், முறைப்படி தனது தூதரக எதிர்ப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.</p><p></p><p>
</p><p>
அதேசமயம் பிரித்தானியா , ஆர்ஜென்டினா நாடுகளுக்கும் இடையில் 1982-இல் நடந்த போரின் வடுக்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் என்பன, 2026 கால்பந்து செம்பியன்ஷிப் அரையிறுதிப் போட்டியை, வெறும் கால்பந்து போட்டியாக இல்லாமல், இரு நாடுகளின் இறையாண்மை மற்றும் அரசியல் கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-17T11:25:29+00:00</updated>
        </entry>
    </feed>
