<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-09T16:23:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[85 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம்: எங்கிருந்தோ வந்த தோட்டாவினால் பலியான முதியவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/innocent-85-year-old-man-killed-in-his-home-1788938694"></link>
            <id>https://canadamirror.com/article/innocent-85-year-old-man-killed-in-his-home-1788938694</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பர்னபி நகரில், தனது வீட்டில் இருந்த 85 வயது முதியவர் ஒருவர், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தோட்டா பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பர்னபி நகரில், தனது வீட்டில் இருந்த 85 வயது முதியவர் ஒருவர், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தோட்டா பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 1:30 மணியளவில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக பர்னபி பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.</p><p>
பொலிஸார் சம்பவ இடத்திற்குச் செல்வதற்குள் சந்தேகத்திற்குரிய வாகனம் தப்பிச் சென்றதுடன், ஆரம்பக்கட்ட சோதனையில் காயமடைந்தவர்கள் எவரும் கண்டறியப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e2b1436-aa71-4c9e-b1f1-6fcaa8fcd58a/26-6aa109c859b50.webp' /></p><p>
எனினும், அன்றைய தினம் மாலை 4:00 மணியளவில், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு அருகே உள்ள குடியிருப்பில் வசிக்கும் முதியவரின் நலன் குறித்து விசாரிக்க பொலிஸார் சென்றுள்ளனர்.</p><p>
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, 85 வயதான சாங் யோங் சோ என்ற முதியவர் துப்பாக்கிக் காயத்துடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
</p><p>அப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது தவறுதலாக பாய்ந்து வந்த தோட்டாவே இவரைத் தாக்கியுள்ளது எனவும், இந்தச் சம்பவத்தில் இவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் ஒருங்கிணைந்த கொலை விசாரணைப் படை உறுதி செய்துள்ளது.</p><p>
இச்சம்பவம் கும்பல் மோதலோ அல்லது போதைப்பொருள் தொடர்பானதோ அல்ல என்றும், தனிப்பட்ட தகராறே இதற்குக் காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இதில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் குறித்த விவரங்கள் தெரிந்தவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள், பொலிஸாரைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 12:30 மணி முதல் 2:00 மணி வரை 18th and Humphries avenues பகுதிகளில் பயணித்தவர்களிடம் டேஷ்கேம் அல்லது பாதுகாப்பு கேமரா பதிவுகள் இருந்தால், 1-877-551-4448 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T13:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு; 30 நாட்கள் கெடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-orders-closure-of-british-consulate-1788945593"></link>
            <id>https://canadamirror.com/article/israel-orders-closure-of-british-consulate-1788945593</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானியாவின் துணைத் தூதரகத்தை 30 நாட்களுக்குள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானியாவின் துணைத் தூதரகத்தை 30 நாட்களுக்குள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

 காசா தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் ரமல்லாவில் பணியாற்றும் பிரித்தானிய ஊழியர்கள் 7 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14caf05c-a6d9-472f-af13-2a32c44d52c9/26-6aa124baeec29.webp' /></p><p>

இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா அண்மையில் விதித்த தடைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
</p><p>
இஸ்ரேல் மற்றும் பிரித்தானியா இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளமை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T12:53:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு லெபனானில் இஸ்ரேல் கடும் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-launches-heavy-attacks-in-southern-lebanon-1788957028"></link>
            <id>https://canadamirror.com/article/israel-launches-heavy-attacks-in-southern-lebanon-1788957028</id>
            <summary type="text">&amp;nbsp; தெற்கு லெபனானில் உள்ள ஹரூஃப் (Harouf) நகரின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சிவில் பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தெற்கு லெபனானில் உள்ள ஹரூஃப் (Harouf) நகரின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>



ஹரூஃப் - ஸெப்தீன் (Zebdine) நகரங்களை இணைக்கும் வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை இலக்குவைத்து இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02532b91-ac25-4b25-b823-bc3230d5f2f0/26-6aa15165c8606.webp' /></p><p>
</p><p>


கடந்த ஒரு வாரமாக லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை பலர் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளனர்.</p><p>



அதேவேளை, அமெரிக்கா தலைமையிலான மத்தியஸ்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும், தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்களை இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளதுடன், அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-09T12:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலி விமான நிலையத்தில் பயணியின் சூட்கேசில் காய்ந்த முதலைத் தலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crocodile-head-found-in-suitcase-at-italy-airport-1788952683"></link>
            <id>https://canadamirror.com/article/crocodile-head-found-in-suitcase-at-italy-airport-1788952683</id>
            <summary type="text">இத்தாலியின் புகழ்பெற்ற விமான நிலையம் ஒன்றில் பயணி ஒருவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் காய்ந்த நிலையில் ஒரு ராட்சத முதலைத் தலை மறைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியின் புகழ்பெற்ற விமான நிலையம் ஒன்றில் பயணி ஒருவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் காய்ந்த நிலையில் ஒரு ராட்சத முதலைத் தலை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்த நிலையில் அமெரிக்காவின் மியாமி நகரிலிருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலி வந்திறங்கிய இத்தாலிய பயணி ஒருவரின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a5cae2-d4fd-41f0-94c7-242f614107bb/26-6aa1406d72b80.webp' /></p><p>
</p><p>

துணிகளுக்கு இடையே பதுக்கல்
அப்போது, ராட்சத முதலையின் காய்ந்த தலை ஒன்று சாதாரண பரிசு காகிதத்தால் சுற்றப்பட்டு, சூட்கேசுக்குள் இருந்த துணிகளுக்கு நடுவே ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.</p><p> மேலும், விமான நிலைய பாதுகாப்பு வளையங்கள் மற்றும் ஸ்கேனர்களில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டது பொலிசாருக்கு தெரியவந்தது.

</p><p>அமெரிக்காவின் புளோரிடா போன்ற பகுதிகளில் உள்ள நினைவுப் பரிசு கடைகளில் இது போன்ற காய்ந்த முதலைத் தலைகள் பொதுவாக விற்கப்படுகின்றன. </p><p>பல சுற்றுலா பயணிகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் கடுமையான விதிமுறைகள் தெரியாமல், இவற்றைத் தங்களது சொந்த நாடுகளுக்கு நினைவுப் பரிசாக வாங்கி சென்று பெரும் சட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர்</p><p> இதனால், உரிய சர்வதேச உரிமம் அல்லது சான்றிதழ்கள் இன்றி இவற்றின் பாகங்களைக் கொண்டு செல்வது கடுமையான குற்றமாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T11:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுக் கழிப்பறைக்கு டொனால்ட் டிரம்ப் பெயர்: கனடாவில் வெளிப்பட்ட விசித்திர எதிர்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-memorial-rogue-sign-put-up-to-washroom-in-bc-1788937935"></link>
            <id>https://canadamirror.com/article/trump-memorial-rogue-sign-put-up-to-washroom-in-bc-1788937935</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்ட சம்பவம் பெரும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
விக்டோரியா நகரின் பிரபல 'கேலோப்பிங் கூஸ்' நடைபாதை அருகே அமைந்த பொதுக் கழிப்பறையின் நுழைவாயிலில், "டொனால்ட் ஜே. டிரம்ப் நினைவகம்" என்ற மரத்தாலான பலகை மர்ம நபர்களால் பொருத்தப்பட்டிருந்தது.</p><p>
ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும், மாலை 6 மணியளவில் அந்தப் பலகையை விக்டோரியா நகர சபை அதிகாரிகள் அகற்றிவிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/353e4324-d78d-420c-9a74-d5546cfc1b23/26-6aa106d134d26.webp' /></p><p> 
அந்த இடத்தில் பாதுகாப்பு கேமராக்கள் இல்லாததால் பலகையை வைத்தது யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.
</p><p> கனடா - அமெரிக்க வர்த்தகப் போரினால் ஆத்திரமுற்ற மக்கள், டிரம்ப் மீதான தங்கள் எதிர்ப்பை இத்தகைய விசித்திர வழிகளில் காட்டி வருகின்றனர். </p><p>
கடந்த கோடையில், உள்ளூர் கலைஞர் ஒருவர் குதிரைச் சாணத்தைப் பயன்படுத்தி டிரம்பின் உருவப்படத்தை வரைந்தார். </p><p>அந்த ஓவியம் 1,800 டொலருக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் மக்கள் கழிப்பறைக்குப் பெயர் சூட்டி எதிர்ப்பைப் பதிவுசெய்ய, மறுபுறம் பி.சி. மாகாண முதல்வர் டேவிட் ஈபி, அமெரிக்க எல்லைப் பகுதிகளில் "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51வது மாநிலமாகாது" என்ற எச்சரிக்கைப் பலகையை நிறுவி, டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்குத் தனது அதிகாரப்பூர்வ எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T10:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டன் விமான சேவைகள் திடீர் முடக்கம்; 1000 இற்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/britain-over-1-000-flights-cancelled-1788949451"></link>
            <id>https://canadamirror.com/article/britain-over-1-000-flights-cancelled-1788949451</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிரிட்டனின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை அமைப்பான ‘நாட்ஸ்’ (NATS) அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 100...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிரிட்டனின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை அமைப்பான ‘நாட்ஸ்’ (NATS) அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 1000 இற்கு மேற்பட்ட விமான சேவைகள் நிருத்தப்பட்டதால் பயணிகள் பெரும் திண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
</p><p>
லண்டனின் ஹித்ரூ, கேட்கவிக், மான்செஸ்டர் உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய விமான சேவைகளும் நிறுத்தப்பட்டு முடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55544911-bf69-4025-86ff-e54d3012fe03/26-6aa133cd02203.webp' /></p><h2>தொழில்நுட்பக் கோளாறு&nbsp; &nbsp;சீரமைப்புப் பணிகள்</h2><p>&nbsp;தேசிய வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் தரவு செயலாக்க அமைப்பில் (Data Processing System) ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பச் சிக்கலால், விமானங்களின் வழித்தடங்களைக் கண்காணிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டதாக ‘நாட்ஸ்’ நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் பிரிட்டனில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் இருந்து புறப்படவிருந்த விமானங்கள் அனைத்தும் ஓடுபாதையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>

லண்டனின் மிக முக்கியமான ஹித்ரூ (Heathrow) மற்றும் கேட்கவிக் (Gatwick) விமான நிலையங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் நிலையில், இந்தத் திடீர் முடக்கத்தால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே பல மணி நேரமாகத் தவித்து வருகின்றனர். </p><p>

மேலும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து லண்டன் நோக்கி வரவிருந்த பல சர்வதேச விமானங்களும் புறப்பட்ட இடங்களிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால், சர்வதேச அளவிலான வான்வழிப் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>
தொழில்நுட்பப் பொறியாளர்கள் களத்தில் இறங்கிப் பிரச்சனையைக் கண்டறிந்து சரிசெய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இருப்பினும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரும் கூட, விமானங்கள் அடுத்தடுத்து இயங்குவதில் பெரும் தாமதமும் (Delays) ரத்து நடவடிக்கைகளும் (Cancellations) நாள் முழுதும் நீடிக்கக்கூடும் என்பதால், பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு அட்டவணையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-09T10:21:10+00:00</updated>
        </entry>
    </feed>
