<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-21T03:55:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவிரவாக தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு ; எச்சரிக்கும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/middle-east-shaken-by-overnight-attacks-1784596141"></link>
            <id>https://canadamirror.com/article/middle-east-shaken-by-overnight-attacks-1784596141</id>
            <summary type="text">ஈரான் மீது தொடர்ந்து 10-வது இரவாக தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் முயற்சியின் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது தொடர்ந்து 10-வது இரவாக தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீது தொடர்ந்து 10-ஆவது இரவாக தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் நேற்று இரவு அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84cd0b58-3391-4b8a-b6b2-ff6b243e8134/26-6a5ec6ae5b30e.webp' /></p><p>

மற்றொரு அமெரிக்க ராணுவ வீரர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான குவைத், ஜோர்டான் மற்றும் அமெரிக்க கடற்படையின் 5-ஆவது கடற்படைப் பிரிவு (5th Fleet) அமைந்துள்ள பஹ்ரைன் ஆகியவற்றின் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து இந்த தாக்குதல்கள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>


ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் ஈரானின் ராணுவ திறன்களை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இந்த சமீபத்திய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் ஒரு முழு அளவிலான போரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ராஜதந்திர ரீதியில் நம்பிக்கைக்குரிய அறிகுறிகளும் தென்படுகின்றன; இமோதலில் முக்கிய மத்தியஸ்தராக செயல்படும் பாகிஸ்தானுக்கு ஈரானின் உள்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்காக சென்றுள்ளார்.
</p><p>
சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் முறிந்துவிட்டது. </p><p>உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது. </p><p>மேலும், சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பினரும் லட்சக்கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளை தங்கள் தாக்குதல்களுக்கு இலக்காக்கியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T01:29:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா பொருட்கள் மீது 50% அதிரடி வரி விதிப்பு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பால் வர்த்தகப் போர் தீவிரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-new-50-tariffs-on-canada-1784597210"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-new-50-tariffs-on-canada-1784597210</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவிற்கு எதிராக 50% புதிய வரிகளை விதிப்பதாகத் திங்கள்கிழமை அறிவித்துள்ளார். 
அமெரிக்காவின் நெருங்கிய நேச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவிற்கு எதிராக 50% புதிய வரிகளை விதிப்பதாகத் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.</p><p> 
அமெரிக்காவின் நெருங்கிய நேச நாடும் முக்கிய பொருளாதாரப் பங்காளியுமான கனடாவுடனான வர்த்தகப் பூசலை இந்த அறிவிப்பு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
</p><p> மின் சாதனங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட சில கனடியப் பொருட்கள் மீது 50% வரிகள் விதிக்கப்படவுள்ளன. டிரம்ப் நிர்வாகம் ஒரு நாட்டின் மீது விதித்துள்ள மிகக் கடுமையான வரிகளில் இதுவும் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a16d9f91-70d6-4990-8f12-b28cf8e5088c/26-6a5ecadc16c68.webp' /></p><p>
</p><p>சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனடியப் பொருட்களைப் பாதிக்கும் இந்த வரிகள், அடுத்த 30 நாட்களில் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
</p><p>அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராகக் கனடா பாகுபாடு காட்டுவதாகக் கூறி, 1930 ஆம் ஆண்டின் சுங்கவரிச் சட்டத்தின் பிரிவு 338-ஐப் பயன்படுத்தி டிரம்ப் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். எனினும், வரலாற்றில் இந்த சட்டப்பிரிவு இதற்கு முன்பு இதுவரை இவ்வாறு பயன்படுத்தப்பட்டதில்லை.
</p><p>எரிசக்தி பொருட்கள், முக்கிய தாதுக்கள், மீன் மற்றும் வாகனங்கள், உலோகம் போன்ற ஏற்கனவே துறைசார் வரிகளுக்கு உட்பட்ட சில முக்கியப் பொருட்கள் இந்த புதிய வரி விதிப்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.
</p><p>அமெரிக்காவின் வட பகுதிக்குள் பரவிய காட்டுத் தீ புகைக்காகக் கனடா மீது வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அண்மையில் எச்சரித்திருந்த போதிலும், தற்போதைய வரி விதிப்புடன் அதற்குத் தொடர்பில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.</p><p>
கனடா சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்தின் நன்மைகளை நம்புகிறது. எந்தச் சூழ்நிலையிலும் கனடிய தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகங்கள் மற்றும் குடும்பங்களை ஆதரிக்கவும், உள்நாட்டுப் பலத்தை உருவாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கனடா தீவிரமாக எடுக்கும் என கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T01:27:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் 6 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/6-killed-as-powerful-quakes-hit-peru-1784596498"></link>
            <id>https://canadamirror.com/article/6-killed-as-powerful-quakes-hit-peru-1784596498</id>
            <summary type="text">தென் அமெரிக்க நாடான பெருவின் ஜூனின் பிராந்தியத்தில் உள்ள சுபாகா மாகாணத்தில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் அமெரிக்க நாடான பெருவின் ஜூனின் பிராந்தியத்தில் உள்ள சுபாகா மாகாணத்தில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. </p><p>இவை ரிக்டர் அளவில் 5.1 மற்றும் 3.7 ஆகப் பதிவாகின. இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/786574f4-da41-4bd5-bf1c-d0c7d4a7f6b2/26-6a5ec81480446.webp' /></p><p>


</p><p>
இதில் மண் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட 48-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. மேலும் 18 வீடுகள் பலத்த சேதமடைந்தன. </p><p>இதனால் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். </p><p>பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு வரும் வேளையில், இடிபாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என மீட்புக்குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-21T01:15:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[900த்தை கடந்த பலி எண்ணிக்கை ; ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தும் எபோலா பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ebola-death-toll-tops-900-in-africa-1784591183"></link>
            <id>https://canadamirror.com/article/ebola-death-toll-tops-900-in-africa-1784591183</id>
            <summary type="text">ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்றுக்கு இதுவரை 930 பேர் பலியானதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எபோலா பரவல் காங்கோ, சூடான் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்றுக்கு இதுவரை 930 பேர் பலியானதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எபோலா பரவல் காங்கோ, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. </p><p>உலகின் கொடிய தொற்றுகளில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா பரவலைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edc812b9-7ded-43ea-8c11-a40df22b5600/26-6a5eb35135f50.webp' /></p><p>
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,

நாடு முழுவதும் மொத்தம் 2,344 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 930 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இது ஒரே நாளில் பதிவான அதிகபட்ச இறப்பாகும்.


</p><p>மே 15 அன்று கிழக்கு காங்கோவில் அறிவிக்கப்பட்ட எபோலா நோய்ப் பரவலானது, இதுவரை இல்லாத அளவுக்கு மிக வேகமாகப் பரவிவருகின்றது.

எபோலா நோய்த் தொற்றுக்குக் காரணமான 'புண்டிபுக்யோ' (Bundibugyo) வைரஸ் ஒரு அரிதான வகையாகும். </p><p>இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ கண்டறியப்படவில்லை.

இந்த வைரஸை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையுடன் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை தொடங்கியுள்ளனர். </p><p>நிதிப் பற்றாக்குறை, சுகாதார மையங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் நோய்த்தொற்று பரவலின் மையப்பகுதியான கிழக்கு காங்கோவில் தொடர்ந்து கொண்டிருக்கும் மோதல்கள் ஆகியவை இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-20T23:46:38+00:00</updated>
        </entry>
    </feed>
