<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-31T10:45:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்காக கையில் பச்சை குத்திய தாய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mother-in-canada-get-a-tattoo-keypad-son-autism-1788171473"></link>
            <id>https://canadamirror.com/article/mother-in-canada-get-a-tattoo-keypad-son-autism-1788171473</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கனடாவில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது மகனின் தாயார், தனது கையில் கீபோர்ட் வடிவத்தில் பச்சை ஒன்றை குத்திக் கொண்டார். 

இதன் மூல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கனடாவில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது மகனின் தாயார், தனது கையில் கீபோர்ட் வடிவத்தில் பச்சை ஒன்றை குத்திக் கொண்டார். 

இதன் மூலம் தனது மகன் எந்த சூழ்நிலையிலும் அவன் நினைப்பதை மற்றவர்களிடம் தெரிவிக்க முடியும் என கூறினார். </p><p>

கனாடாவில் வசித்து வரும் ஜெசிகா என்பவர், மூளை வளர்ச்சி குன்றிய நோயால் பாதிக்கப்பட்ட தனது 11 வயது மகனான ஹண்டர் உடன் சேர்ந்து ஒரு உணவகத்திற்கு உணவருந்த சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8377b620-3434-460d-9d86-ff74fee782f6/26-6a9554d2bed90.webp' /></p><h2>&nbsp;எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்பு</h2><p> </p><p>

அப்போது ஹண்டர் தனது வார்த்தைகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக, அவன் வைத்திருந்த ஒரு எலக்ட்ரிக் கருவியின் பேட்டரி திடீரென தீர்ந்து போனது. இதனால் அவன் என்ன நினைக்கிறான் என்பதை, தனது தாயிடம் வெளிப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. </p><p>

இந்த சூழ்நிலையில் ஹண்டர் ஒரு காகிதத்தை எடுத்து, அதில் ஒரு கீபோர்டை வரைந்து, பிறகு தனக்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதை தனது தாய்க்கு தெரியப்படுத்தும் வகையில், அந்த வரையப்பட்ட காகிதத்தில் எழுத்துக்களை சுட்டிக்காட்டினான். 

இந்த காட்சியை பார்த்த ஹண்டரின் தாயார், இதற்கு ஒரு மாற்று தகவல் தொடர்பு சாதனம் தேவை என்பதை உணர்ந்தார். </p><p>

இதைத்தொடர்ந்து ஜெசிகா தனது கையில் ஒரு கீபோர்டை பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தார். மேலும் அந்த கீபோர்டு வடிவிலான டாட்டூவில், ‘மகிழ்ச்சி, சோகம்’ ஆகிய ஸ்மைலி வடிவங்களும், ‘நான் உன்னை விரும்புகிறேன்’ என்ற பொத்தானும் இடம்பெற்றிருந்தன.</p><p> 

இந்த வடிவத்தை தனது கையில் பச்சை குத்திக்கொண்ட அவரின் தாயார், அதை தனது மகனிடம் முதலில் காண்பித்தார். அப்போது ஹண்டர், தனது தாயின் கையில் வரையப்பட்ட கீபோர்டில், ‘அம்மா’ என்று பதிவுசெய்தான். </p><p>

இதன்மூலம் ஹண்டர் தன்னுடன் எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்பு கொள்ளும் வீடியோவை, ஜெசிகா சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். 

இதைத்தொடர்ந்து, ஜெசிகா ஒரு ஆடை நிறுவனத்துடன் இணைந்து, கீபோர்டு வடிவிலான அச்சுகளை தனது சட்டைகளில் அச்சிட்டார்.</p><p> 

இதன்மூலம்,&nbsp; ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தங்களது எண்ணங்களை வீடுகளிலும், வைத்தியசாலைகளிலும், பாடசாலைகளிலும் வெளிப்படுத்த முடியும் என ஜெசிகா குறிப்பிட்டார். </p><p>

மேலும் தனது உடலில் ஆயிரம் தழும்புகளை பச்சை குத்திக் கொள்வதன் மூலம், தனது மகனுக்கு அவனது எண்ணங்களை வெளிக்காட்ட ஒரு வழி இருக்குமென்றால், தான் உடல் முழுவதும் பச்சை குத்திக்கொள்ள தாயாராக இருப்பதாகவும் ஜெசிகா தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-31T10:15:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் மீண்டும் மோதல் ; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crude-oil-rises-renewed-fighting-in-middle-east-1788168488"></link>
            <id>https://canadamirror.com/article/crude-oil-rises-renewed-fighting-in-middle-east-1788168488</id>
            <summary type="text">&amp;nbsp; மத்திய கிழக்கில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள புதிய போர் மோதல்கள் காரணமாகவே கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்துள்ளன.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மத்திய கிழக்கில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள புதிய போர் மோதல்கள் காரணமாகவே கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்துள்ளன.
</p><p>அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் மோதல்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில், உலகச் சந்தையிலும்&nbsp; அது எதிரொலித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e351a6d-d792-4d9b-9a47-4ecdd0a4e15f/26-6a954929e79c1.webp' /></p><p> 

இதற்கமைய, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.57% அதிகரித்து 85.54 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதுடன், ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.84% அதிகரித்து 90.60 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.</p><p> 

 மர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 4.04% என்ற சதவீதத்தில் அதிகரித்து 95.75 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. </p><p>

கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஈரான் நாட்டின் லாரக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதுடன், அதற்குப் பதிலடியாக ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈரான் பெலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T09:25:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்வி அனுமதி தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள ஒரு முக்கிய செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/study-permit-rules-changes-from-sep-1-in-canada-1788167979"></link>
            <id>https://canadamirror.com/article/study-permit-rules-changes-from-sep-1-in-canada-1788167979</id>
            <summary type="text">Canada Study Permit Rules changes from September 1: செப்டம்பர் 1ஆம் திகதி முதல், கனடா கல்வி அனுமதி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

கனடாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada Study Permit Rules changes from September 1: செப்டம்பர் 1ஆம் திகதி முதல், கனடா கல்வி அனுமதி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.</p><p>

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக கனடாவில் யாரையும் சார்ந்திருக்காமல், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக, அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்றொரு விதி உண்டு.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/249e871b-89f2-46b8-b8cb-0da55ce7bb07/26-6a95472c3c189.webp' /></p><p>
இந்நிலையில், அது தொடர்பான விதிகளில், நாளை முதல் சில மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன.
</p><p>
கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக தங்கள் வங்கிக்கணக்கில் 22,895 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
</p><p>
தற்போது மீண்டும் அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆம், இனி வெளிநாட்டு மாணவர்கள் தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்கான தங்கள் வங்கிக்கணக்கில் 23,448 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இது மாணவர்கள் கல்வி கற்பது, போக்குவரத்து போன்ற விடயங்களை உள்ளடக்கிய கல்விக் கட்டணம் அல்ல. அது, தனிச் செலவு!
</p><p>
அத்துடன், கனடாவில் கல்வி கற்பதற்காக உரிமம் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களுடன் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேரை அழைத்துவருகிறார்களோ, அதற்கேற்ப அவர்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டிய தொகையும் அதிகரிக்கும்.
</p><p>
ஒரு மாணவர் தன்னுடன் தன் உறவினர்கள் இரண்டு பேரை கனடாவுக்கு அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 29,192 டொலர்கள் வைத்திருக்கவேண்டும்.
</p><p>
மூன்று பேரை அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 35,888 டொலர்களும், நான்கு பேரை அழைத்துவர விரும்பினால் தன் வங்கிக்கணக்கில் 43,572 டொலர்களும் வைத்திருக்கவேண்டும்.
</p><p>
இப்படியே இந்த தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும். அதாவது, ஒரு மாணவர் கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வந்தால், அவர் கனடாவில் வேலை செய்யாமலே, தனது மற்றும் தன்னுடன் அழைத்துவந்துள்ள குடும்ப உறுப்பினர்களின் செலவுகளை சந்திக்கும் வகையில் தன்னிடம் போதுமான பணம் உள்ளது என்பதை நிரூபித்தாகவேண்டும் என்கிறது, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு!&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T09:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகி எட்டு மாதங்களின் பின் வெளியான வெனிசுலா முன்னாள் அதிபர் புகைப்படம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/photo-of-former-venezuelan-president-released-1788159702"></link>
            <id>https://canadamirror.com/article/photo-of-former-venezuelan-president-released-1788159702</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். </p><p>

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட பின்னர், சுமார் எட்டு மாதங்களுக்கு பிறகு அவர் காவலில் இருக்கும் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3437b06b-3db8-46e5-9f55-f1c16e93b889/26-6a9526d86761a.webp' /></p><h2>நியூயார்க்கில்&nbsp; &nbsp;புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் ...</h2><p>
 
 
ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த இரண்டு புகைப்படங்களிலும் மதுரோ சாம்பல் நிற டிராக்சூட் மற்றும் வெள்ளை நிற காலணிகள் அணிந்தபடி புன்னகையுடன் காணப்படுகிறார்.
</p><p>
 இரு கைகளாலும் வெற்றி சின்னம் காட்டும் வகையிலும் அவர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>

எனினும், அவை சமீபத்தில் எடுக்கப்பட்டவை அல்ல என்றும், ஜூன் 25, 2026 என்ற தேதி புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.
</p><p> 
தனது பேரக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அன்பையும் நம்பிக்கையையும் தெரிவிக்கும் வகையில் மதுரோ இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 தானும் தனது மனைவி சிலியா புளோரஸும் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். </p><p>மேலும், தங்களது ஆதரவாளர்களின் பிரார்த்தனைகள் மற்றும் ஒற்றுமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
மதுரோ மற்றும் அவரது மனைவி ஜனவரியில் வெனிசுலாவில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><p> 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் . எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மதுரோ மறுத்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T09:06:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் கத்திக்குத்துச் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-injured-in-stabbing-near-toronto-waterfront-1788165061"></link>
            <id>https://canadamirror.com/article/man-injured-in-stabbing-near-toronto-waterfront-1788165061</id>
            <summary type="text">&amp;nbsp;டொராண்டோ நகரின் கடற்கரை பகுதிக்கு அருகில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;டொராண்டோ நகரின் கடற்கரை பகுதிக்கு அருகில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> 
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபரைத் டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><p> 
குவீன்ஸ் குவே வெஸ்ட் மற்றும் டான் லெக்கி வே சந்திப்புக்கு அருகில், பாத்தர்ஸ்ட் வீதிக்கு சற்று மேற்கே சனிக்கிழமை மாலை 7:30 மணியளவில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56708b96-ce23-4c8b-b37c-8d9932e6f284/26-6a953bc7738b5.webp' /></p><p> 
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கத்திக் குத்துக்கு இலக்காகிக் காயமடைந்திருந்த ஆடவரைக் கண்டறிந்தனர்.</p><p> 
லோயர் ஸ்பேடினா அவென்யூவிற்கு அருகிலேயே இக்கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்த டொராண்டோ அவசர மருத்துவப் பிரிவு, தீவிர காயமடைந்த நபர் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார். 
மாநிறமுடைய ஆடவர், 5 அடி 4 அங்குல உயரம், மெலிந்த உடலமைப்பு கொண்டவர். </p><p>
நீல நிறச் சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். 
இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
</p><p>இது தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் 416-808-1400 என்ற இலக்கம் ஊடாக டொராண்டோ பொலிஸாரையோ அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பையோ இரகசியமாகத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T08:31:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[Grand Canyon பூங்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு; பலர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/flash-flood-at-grand-canyon-park-many-missing-1788161298"></link>
            <id>https://canadamirror.com/article/flash-flood-at-grand-canyon-park-many-missing-1788161298</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் (Grand Canyon) தேசியப் பூங்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காணாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் (Grand Canyon) தேசியப் பூங்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகத் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

பிரைட் ஏஞ்சல் கேன்யன் மற்றும் ஃபாண்டம் ராஞ்ச் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் நடைபாலங்கள், பாறைகள் மற்றும் உலோகக் கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7cde0cc-da83-4fe5-b531-a9ba8e8d5f30/26-6a952d14469b5.webp' /></p><p>
</p><p>
இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

மேலும், கொலராடோ ஆற்றில் இடிபாடுகள் கலந்துள்ளதால் அப்பகுதியில் படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T07:25:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் ; திருப்பி அடித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-forces-attack-missile-launch-sites-iran-1788153668"></link>
            <id>https://canadamirror.com/article/us-forces-attack-missile-launch-sites-iran-1788153668</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானின் லராக் தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. 

ஜூலை மாத இறுதிக்குப் பின்னர் ஈரான் மீது அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானின் லராக் தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. 

ஜூலை மாத இறுதிக்குப் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட முதல் இராணுவத் தாக்குதல் இதுவாகும்.</p><p>



ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளைப் பொருத்துவதற்கான ரொக்கெட்டுகளை ஏவ ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தயாராகி வந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2838143f-f6fd-4340-a17f-2cf69569d54c/26-6a950f45e2218.webp' /></p><h2>அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது&nbsp; தாக்குதல்&nbsp;</h2><p>


ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p> இதற்குப் பதிலடியாக ஜோர்டானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.</p><p>


இதனிடையே, தமது வான்வெளிக்குள் நுழைந்த எட்டு ஏவுகணைகளை இடைமறித்ததாக ஜோர்டான் இராணுவம் அறிவித்துள்ளது.
</p><p>

லராக் தீவு ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்த நீர்வழியூடாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T07:21:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் 3-வது அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடாக இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sri-lanka-ranks-third-1788155971"></link>
            <id>https://canadamirror.com/article/sri-lanka-ranks-third-1788155971</id>
            <summary type="text">உலகிலேயே அதிக பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்காவின் &#039;பியூ ஆராய்ச்சி மையம்&#039; (Pew Resea...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகிலேயே அதிக பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
</p><p>அமெரிக்காவின் 'பியூ ஆராய்ச்சி மையம்' (Pew Research Center) வெளியிட்டுள்ள புதிய பகுப்பாய்வு அறிக்கையின்படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db02cdb5-aea2-48d2-95f8-0376d6d9cf05/26-6a95184461861.webp' /></p><p>மியான்மர் முதலிடத்தையும், பங்களாதேஷ் இரண்டாம் இடத்தையும் வகிக்கின்றன.
</p><p>ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 190 உறுப்பு நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலகளாவிய சராசரி விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 13 ஆகும். ஆனால், 2026-ஆம் ஆண்டில் இலங்கையில் 25 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>•	மியான்மர்: 30 நாட்கள் (முதலிடம்)
</p><p>•	பங்களாதேஷ்: 29 நாட்கள் (இரண்டாமிடம்)
</p><p>•	இலங்கை: 25 நாட்கள் (மூன்றாமிடம்)
</p><p>கம்போடியா, ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளும் 20-க்கும் மேற்பட்ட விடுமுறை நாட்களைக் கொண்டுள்ளன.
</p><p>சுவிட்சர்லாந்தில் 1 தேசிய விடுமுறை மட்டுமே உள்ளது (மாநில அளவில் குறைந்தது 8 விடுமுறைகள் உண்டு). போஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினாவில் 4 நாட்களும், உருகுவேயில் 5 நாட்களும் மட்டுமே பொது விடுமுறைகளாக உள்ளன.
</p><p>இலங்கையில் பெரும்பாலான மக்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றுவதால், சந்திர சுழற்சியின் அடிப்படையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தையும்&nbsp; அரசு பொது விடுமுறையாக அறிவிப்பதே இந்த அதிக எண்ணிக்கைக்கு முதன்மை காரணமாகும். </p><p>
பிற பௌத்த நாடுகள் விசாகப் பண்டிகைக்கு மட்டும் விடுமுறை அளிக்கும் வேளையில், இலங்கை ஒவ்வொரு பௌர்ணமிக்கும் விடுமுறை அளிக்கும் தனித்துவத்தைக் கொண்டுள்ளது.
</p><p>அத்துடன், உலகளவில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ், பெரிய வெள்ளி, ரம்ஸான் (ஈத் அல்-ஃபித்ர்), பக்ரீத் (ஈத் அல்-அதா), தீபாவளி மற்றும் விசாகப் பண்டிகை போன்ற பல்வேறு மதப் பண்டிகைகளும் இலங்கையில் பொது விடுமுறைகளாகப் பின்பற்றப்படுகின்றன.
</p><p>இலங்கையின் 1971-ஆம் ஆண்டின் 29-ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் கீழ், அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2027-ஆம் ஆண்டிற்கான விடுமுறைப் பட்டியல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>2027-ஆம் ஆண்டிலும் மொத்தம் 25 பொது மற்றும் வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>அவற்றில் 9 விடுமுறை நாட்கள் வெள்ளி அல்லது திங்கட்கிழமைகளில் வருவதால், மக்களுக்கு 9 நீண்ட வாரயிறுதி வாய்ப்புகள் கிடைக்கின்றன.</p><p>
ஜனவரி மாதத்தில் ஜனவரி 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் இருமுறை நீண்ட வாரயிறுதி அமைகிறது. மார்ச், மே, ஜூன், ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் இவ்வாய்ப்பு உள்ளது.</p><p>
மே மாதத்தில் ஹஜ் பண்டிகை திங்கட்கிழமையிலும், வெசாகப் பண்டிகை புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் வருவதால், அந்த வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும்.
</p><p>எனினும், மே தினம் மற்றும் கிறிஸ்துமஸ் உட்பட 6 விடுமுறைகள் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T05:59:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/passenger-boat-capsizes-coast-of-northern-cyprus-1788154156"></link>
            <id>https://canadamirror.com/article/passenger-boat-capsizes-coast-of-northern-cyprus-1788154156</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாக அங்குள்ள அதிகாரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


கைரேனியா கடற்கரை நகரிலிருந்து புறப்பட்ட குறித்த படகில் 259 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b09ff2e-0904-4cef-a20d-5c2a9bd04e3c/26-6a95112da786f.webp' /></p><p>

மோசமான வானிலை மற்றும் கடும் அலைகள் காரணமாக படகுக்குள் நீர் புகுந்து அது கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


பெரும்பாலான பயணிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் துருக்கி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>



இச்சம்பவம் தொடர்பில் படகின் தளபதியும் 7 பணியாளர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T05:26:26+00:00</updated>
        </entry>
    </feed>
