<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-13T10:10:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: ஒருவர் பலி; மூவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/commercial-ship-attacked-in-strait-of-hormuz-1789294047"></link>
            <id>https://canadamirror.com/article/commercial-ship-attacked-in-strait-of-hormuz-1789294047</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மோதல் நிலவி வரும் வேளையில், அங்கு வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மோதல் நிலவி வரும் வேளையில், அங்கு வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>இந்தத் தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0365f89c-86b9-4135-a888-91394b34588e/26-6aa675e0c40de.webp' /></p><p>

”ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஹெங்காம் மற்றும் கெஷ்ம் தீவுகளின் கடற்கரைக்கு அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒருவர் பலியானார். மூவர் காயமடைந்துள்ளனர்” என கெஷ்ம் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது போன்ற விவரங்களை அவர்கள் குறிப்பிடவில்லை.


</p><p>ஹோர்முஸ் நீரிணையில் உள்ள மிகப்பெரிய தீவான கெஷ்மைச் சுற்றி நேற்று இரவு பல தாக்குதல்கள் நடைபெற்றதாகப் பதிவாகியுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில், அதுதொடர்பாக ஓமனுக்கு ஈரானுக்கும் இடையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
</p><p>
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் 6 மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரில், ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மோதலுக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
</p><p>
அமெரிக்கா - ஈரான் இடையே சில வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த போர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.</p><p>ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் இந்த போரால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாரம் மட்டுமே கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-13T10:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை ; ஈரான் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-need-not-act-as-middle-east-guardian-iran-1789288321"></link>
            <id>https://canadamirror.com/article/us-need-not-act-as-middle-east-guardian-iran-1789288321</id>
            <summary type="text">மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.



இந்தியாவில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.</p><p>



இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக 11 முக்கிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் இந்தியா சென்றுள்ள நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fabb5801-c11b-44c6-b8c5-ee5525f7d00b/26-6aa65f82e71f4.webp' /></p><p>தொடர்ந்து இன்று மலேசியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>


இதன்போது கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி, ஈரான் மற்றும் அதன் பிராந்திய நாடுகளின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை பிராந்தியத்தில் உள்ள முக்கிய சக்திகளும் அந்நாடுகளும் இணைந்தே உறுதி செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
</p><p>


மேலும், மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை என்றும், ஈரான் மக்கள் பல்வேறு அநீதிகளை எதிர்கொண்ட போதிலும், தாம் போரைத் தொடர விரும்பவில்லை என்றும், அமைதிக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது.</p><p> உலகின் முக்கிய எரிபொருள் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
</p><p>


இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p> ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மோதல் காரணமாக மசகு எண்ணெய் விலையும் அதிகரித்து வருவதுடன், இந்த வாரம் ஒரு கொள்கலன் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T08:32:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா குடியுரிமைச் சான்றிதழ் விண்ணப்பங்கள் தேக்கம்: காத்திருப்பு காலம் 33 மாதங்களாக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/proof-of-citizenship-applications-surge-estimated-1789263996"></link>
            <id>https://canadamirror.com/article/proof-of-citizenship-applications-surge-estimated-1789263996</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் புதிய சி-3 சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பரம்பரை வழியிலான குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் புதிய சி-3 சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பரம்பரை வழியிலான குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும், அவற்றுக்கான காத்திருப்பு காலமும் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளன.</p><p>
கனடா குடியேற்ற, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p>
தற்போது 1,36,000க்கும் அதிகமானோர் குடியுரிமைச் சான்றிதழ் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2ef4fb4-606e-4aae-84d3-b7c9754c385b/26-6aa6007e164fd.webp' /></p><p> </p><p>ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 14,000 விண்ணப்பங்கள் அதிகம் ஆகும்.
விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான காலம் 33 மாதங்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. </p><p>ஆகஸ்ட் மாத நிலவரப்படி 25 மாதங்களாக இருந்த இக்காலம், ஒரே மாதத்தில் மேலும் 8 மாதங்கள் உயர்ந்துள்ளது.
பிற நாடுகளிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு மேலதிகமாக 3 முதல் 4 மாதங்கள் வரை தேவைப்படும்.</p><p>
மே 31 நிலவரப்படி, புதிய விதிகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 51 சதவீதம் அமெரிக்காவில் பிறந்தவர்களுடையதாகும். </p><p>அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழலே இந்த திடீர் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் எனப்படுகிறது.
</p><p>அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மெக்சிகோ, பொலிவியா, ஐக்கிய ராஜ்யம், சீனா, இந்தியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.&nbsp;</p><p>சிக்கலான விண்ணப்பங்களுக்கு மேலதிக ஆவணப் பரிசீலனைகளும் தீவிர சரிபார்ப்புகளும் தேவைப்படுவதாலேயே காலதாமதம் ஏற்படுவதாகவும், இதர பல காரணிகளும் இந்த அதிகரிப்புக்குக் காரணம் எனவம் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T07:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[240க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மாயமான கப்பல் ; தீவிரமாகும் மீட்புபணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ship-missing-with-more-than-240-passengers-1789280219"></link>
            <id>https://canadamirror.com/article/ship-missing-with-more-than-240-passengers-1789280219</id>
            <summary type="text">மோசமான வானிலை காரணமாக 240க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் கப்பல் ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, ஜாவா கடலில் தேடுதல் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோசமான வானிலை காரணமாக 240க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் கப்பல் ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, ஜாவா கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

 

இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 140 பேர் இன்னும் காணாமல் போயுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80b04c6b-59ed-454c-a378-b1967fe64471/26-6aa63fdd7d410.webp' /></p><p>
</p><p>
 

விபத்து நடந்த நேரத்தில், குறித்த கப்பல் சுரபயாவிலிருந்து பன்ஜார்மாசின் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில் கடல்வழிப் போக்குவரத்தே பிரதான போக்குவரத்து முறையாகும்.
</p><p>
 

விமானப் பயணம் விலை உயர்ந்ததாக இருப்பதால், பொதுமக்கள் மலிவான கடல்வழிப் பாதைகளை அதிகளவில் நாடி வருகின்றனர்.
</p><p>
 

இருப்பினும், நாட்டின் கடல்சார் துறையில் பாதுகாப்புத் தரங்களும் விதிமுறைகளும் முறையாகச் செயல்படுத்தப்படாததாலேயே இதுபோன்ற உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-13T06:17:08+00:00</updated>
        </entry>
    </feed>
