<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-02T16:15:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துருக்கி அருகே இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-cargo-ships-collide-near-turkey-1788351899"></link>
            <id>https://canadamirror.com/article/two-cargo-ships-collide-near-turkey-1788351899</id>
            <summary type="text">&amp;nbsp; துருக்கியின் இஸ்தான்புல் நகரின் சிலிவ்ரி மாவட்டக் கடற்பகுதியில் இன்று அதிகாலை இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 10 மாலுமிகள் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; துருக்கியின் இஸ்தான்புல் நகரின் சிலிவ்ரி மாவட்டக் கடற்பகுதியில் இன்று அதிகாலை இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 10 மாலுமிகள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>


கோகோவெலியில் இருந்து அலியாகா நோக்கிச் சென்ற ‘அல்சு’ என்ற கப்பலும், இஸ்கெண்டருன் துறைமுகத்திலிருந்து கராடெனிஸ் எரேக்லி நோக்கிச் சென்ற ‘துக்பெர்க் இமாமோக்ளு’ என்ற கப்பலும் அதிகாலை 3 மணியளவில் மோதியதாக இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/740158ce-ddf7-4def-b0f2-d06a692f809b/26-6a98159db3a90.webp' /></p><p>



மோதலில் ‘அல்சு’ கப்பலுக்கு சிறியளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ‘துக்பெர்க் இமாமோக்ளு’ கப்பல் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்துள்ளது. அதில் இருந்த 10 மாலுமிகளே தற்போது காணாமல் போயுள்ளனர்.</p><p>



கடலோர பாதுகாப்புப் படையினரின் கப்பல்கள் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர் உதவியுடன் காணாமல் போன மாலுமிகளைத் தேடும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T13:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேங்க் ஆப் அமெரிக்கா துணைத்தலைவர் கொலை செய்த பெண் ; சம்பவத்தால் ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-kills-bank-of-america-vice-president-1788355640"></link>
            <id>https://canadamirror.com/article/woman-kills-bank-of-america-vice-president-1788355640</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயரில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்த பெண், பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவனத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயரில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்த பெண், பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவனத்தின் துணைத் தலைவர் எரின் பியாசென்டி என்பது தெரியவந்துள்ளது. </p><p>

32 வயதான அவர், சமீபத்தில் குழந்தையை பெற்றெடுத்து, மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பியிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77114bad-e0b7-4cdb-ba71-1b32c76af9f4/26-6a98243a91044.webp' /></p><h2>49 வயதான பமீலா சிஸ்னெரோஸ்</h2><p>
</p><p> 
 
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற எரின், பேங்க் ஆஃப் அமெரிக்காவின் வணிகத்தேர்வு மற்றும் மோதல் விவகாரங்கள் தொடர்பான பிரிவில் துணை தலைவராக பணியாற்றி வந்தார். </p><p>ஃபோர்டாம் சட்டப் பள்ளியில் சட்ட பட்டமும் பெற்றிருந்தார். அவரது கணவர் ஃபிராங்க் பியாசென்டியும் அதே காலகட்டத்தில் சட்டப் படிப்பை முடித்தவர்.</p><p>
 
கொலைக்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் எரின் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

குழந்தையை கவனிப்பதற்காக ஐந்து மாதங்கள் விடுப்பு எடுத்திருந்த அவர், குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>
 
தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் 49 வயதான பமீலா சிஸ்னெரோஸ் என்ற பெண்ணை போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். </p><p>

அவருக்கு கடந்த காலங்களில் மனநல பிரச்சினைகள் தொடர்பாக போலீசாருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T13:24:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் திருமண நிகழ்வில் அமெரிக்கா தாக்குதல் ; 05 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-strike-on-wedding-in-iran-5-killed-1788347450"></link>
            <id>https://canadamirror.com/article/us-strike-on-wedding-in-iran-5-killed-1788347450</id>
            <summary type="text">&amp;nbsp; ஹோர்முஸ் நீரிணை அருகிலுள்ள தெற்கு ஈரானின் சீரிக் பகுதியிலுள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் நடைபெற்ற திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹோர்முஸ் நீரிணை அருகிலுள்ள தெற்கு ஈரானின் சீரிக் பகுதியிலுள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் நடைபெற்ற திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கப் படைகள்&nbsp; தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>இந்த&nbsp; தாக்குதலில் 04 வயதுக் குழந்தை உட்பட 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35184868-e828-499e-8348-6649a3cca4c5/26-6a9804414d6e4.webp' /></p><h2>&nbsp;அமெரிக்கப் படைகள் தொடர் வான்வழித் தாக்குதல்</h2><p>
</p><p>
இந்த தாக்குதலை ஈரானிய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்தியாவிலுள்ள ஈரானியத் தூதரகம் ஆகியவை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இதனை "அமெரிக்கப் பயங்கரவாத இராணுவத்தின் கொடூரக் குற்றம்" எனச் சாடியுள்ளன.</p><p>

செவ்வாய்க்கிழமை அன்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
</p><p>
ஈரானிய வான் பாதுகாப்பு தளங்கள், ரேடார் அமைப்புகள், கடற்படை உள்கட்டமைப்புகள், கண்ணிவெடி வைக்கும் வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு மையங்கள் மீது இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
</p><p>

அமெரிக்காவின் இத்தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர காவல் படைகள் ஜோர்தான், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இலக்கு வைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

ஜோர்தானிய வான்வெளியில் நுழைந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
பஹ்ரைனில் ஈரானிய ட்ரோன்கள் அழிக்கப்பட்ட நிலையில், வடக்கு ஈராக்கின் அர்பிலில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படைகள் அறிவித்துள்ளது.</p><p>

கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடந்துள்ள மிக மோசமான நேரடி இராணுவ மோதல் இதுவாகும். இதனால் மேற்காசியாவில் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T12:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்பர்ட்டா மாகாண உணவு வங்கிகளின் மோசமான நிலைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/empty-shelves-at-alberta-food-banks-1788349364"></link>
            <id>https://canadamirror.com/article/empty-shelves-at-alberta-food-banks-1788349364</id>
            <summary type="text">Bare shelves at Alberta food banks making the organizations anxious: கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், உணவு வங்கிகள் வெறுமையாக உள்ளதால் அவற்றின் நிர்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bare shelves at Alberta food banks making the organizations anxious: கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், உணவு வங்கிகள் வெறுமையாக உள்ளதால் அவற்றின் நிர்வாகிகள் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள உணவு வங்கிகளின் சேமிப்பகங்களில், உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தட்டுகள் உயரமாக அடுக்கப்பட வேண்டிய இடங்களில், அலமாரிகள் காலியாக இருக்கின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f660bef-7388-484b-9c8e-4714ed13b364/26-6a980bb5c451d.webp' /></p><p>
வழக்கமாக, ஸ்பான்சர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று அவற்றை கிளை உணவு வங்கிகளுக்கு அனுப்புவோம். </p><p>ஆனால், இப்போது சேமிப்பகங்கள் வெறுமையாக உள்ளன என்கிறார் Food Banks Alberta அமைப்பின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான டேரில் பர்ரி.
</p><p>
இந்த அமைப்பு, ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள 112 கிளை உணவு வங்கிகளுக்கு பொருட்களை அனுப்புகிறது.
</p><p>
2025ஆம் ஆண்டு, இந்த அமைப்பு 3.36 மில்லியன் பவுண்டுகள் அளவுடைய பொருட்களை மாகாணம் முழுவதற்கும் அனுப்பியது.
</p><p>
இந்த ஆண்டிலோ, தேவை அதிகரித்துள்ளதால், ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே முந்தைய ஆண்டு அனுப்பிய அளவில் 90 சதவிகிதத்தை அனுப்பியாயிற்று.
</p><p>
விடயம் என்னவென்றால், பண்டிகை நாட்கள் நெருங்கிவரும் நிலையில், சேமிப்பகங்கள் காலியாக உள்ளதால், என்ன செய்வதென தெரியாமல் கவலையடைந்துள்ளனர் உணவு வங்கிகளின் நிர்வாகிகள்.</p><p>

அதாவது, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி, மாதம் ஒன்றிற்கு சராசரியாக 210,000 பேர் உணவு வங்கிகளுக்கு வந்து உணவுப்பொருட்களைப் பெற்றுச் சென்றுள்ளார்கள்.
</p><p>
இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 22 சதவிகிதம் அதிகம்.
</p><p>
அப்படியானால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே ஏராளமானோர் உனவு வங்கிகளைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
</p><p>
அதாவது, தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக உணவு வங்கிகளை நாடும் மக்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்பது இதன் பொருள் ஆகும்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T11:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[200 நாள் கடல் வாழ்க்கைக்கு முடிவு; ; ஓய்வெடுக்க தாய்லாந்து செல்லும் 5000 அமெரிக்க வீரர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/uss-abraham-lincoln-5-000-troops-rest-in-thailand-1788328381"></link>
            <id>https://canadamirror.com/article/uss-abraham-lincoln-5-000-troops-rest-in-thailand-1788328381</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலில் பட்டாயா அருகே உள்ள Laem Chabang துறைமுகத்தை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p> 
வீரர்களுக்கு ஓய்வு மற்றும் புத்துணர்வு அளிக்கும் வகையில் கரையோர பகுதிகளில் நேரம் செலவிட அனுமதி வழங்கப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38fd0127-c144-418b-b476-03e53012010b/26-6a97b9bee0c34.webp' /></p><h2>சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கக்கூடும்&nbsp;&nbsp;</h2><p> இதனால் பட்டாயாவில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள், கடைகள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கு குறுகிய காலத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>ஒவ்வொரு அமெரிக்க வீரரும் தினமும் சுமார் 1,000 முதல் 3,000 தாய் பாட் வரை செலவு செய்யக்கூடும் என பட்டாயா மேயர் தெரிவித்துள்ளார்.
</p><p> 
அதே நேரத்தில், வீரர்களின் வருகையால் சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் போலீசாரிடம் உள்ளது. </p><p>இதையடுத்து கடற்கரை மற்றும் முக்கிய இரவு நேர பொழுதுபோக்கு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 40 முதல் 50 பேர் பாலியல் தொழில் தொடர்பான சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
 
வியட்நாம் போர் காலத்திலிருந்தே அமெரிக்க ராணுவ வீரர்களின் ஓய்வு சுற்றுலாவுடன் பட்டாயாவுக்கு நீண்ட தொடர்பு உள்ளது. 

தற்போது 200 நாட்களுக்கும் மேலாக கடலில் இருந்த USS Abraham Lincoln வீரர்களின் வருகை, நகரின் சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தற்காலிக ஊக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-02T11:08:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 தரம் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/2026-grade-5-scholarship-examination-results-1788346535"></link>
            <id>https://canadamirror.com/article/2026-grade-5-scholarship-examination-results-1788346535</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வௌியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வௌியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>

பெறுபேறுகளை https://www.doenets.lk/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff4954d0-5bf7-4559-b3e1-220f27039525/26-6a9802c078866.webp' /></p>]]></content>
            <updated>2026-09-02T10:54:00+00:00</updated>
        </entry>
    </feed>
