<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-16T21:34:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க வீரரை பிடித்துக் கொடுத்தால் ரூ.28 இலட்சம் ; ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-announce-rs-2-8-million-capturing-us-soldier-1786900847"></link>
            <id>https://canadamirror.com/article/iran-announce-rs-2-8-million-capturing-us-soldier-1786900847</id>
            <summary type="text">அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்து ஒப்படைத்தாலோ 30,000 அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்து ஒப்படைத்தாலோ 30,000 அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>இந்தத் தொகை சுமார் 28 இலட்சம் இலங்கை ரூபாய்க்கு சமமானதாகும். பெண் ஒருவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் சன்மானத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஈரான் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தொடரும் நிலையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1973dc7d-641d-441f-a43c-9a50d5bb4e33/26-6a81f171261f1.webp' /></p><p>இந்த சன்மானத் திட்டம் குறித்து அமீர் ஹதாமி, அமெரிக்காவுக்கு எதிரான மோதலில் பங்களிக்க விருப்பம் தெரிவித்து பெருமளவானோர் முன்வைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை தொடர்பான பதற்றமும் தொடர்கிறது. </p><p>இதனால் மேற்காசியப் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.
</p><p>
இதேவேளை, ஈரானுக்குள் அமெரிக்கப் படைகள் தரையிறங்கியுள்ளனவா என்பது தொடர்பில் வெளியாகும் தகவல்கள் குறித்து மாறுபட்ட செய்திகள் வெளியாகி வருகின்றன. </p><p>முன்னதாக அமெரிக்க வீரர்கள் ஈரானில் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய பல தகவல்கள் நம்பகமான ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை என உண்மைச் சரிபார்ப்பு நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
</p><p>
தற்போது ஈரான் ராணுவம் அறிவித்துள்ள சன்மானத் திட்டம், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலின் தீவிரத்தை மேலும் வெளிப்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-16T21:31:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு ; இளைஞா் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shooting-at-american-university-youth-arrested-1786912766"></link>
            <id>https://canadamirror.com/article/shooting-at-american-university-youth-arrested-1786912766</id>
            <summary type="text">அமெரிக்காவின் விா்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக 19 வயது இளைஞரை அந்நாட்டு காவல்துறையினா் கைது செய்தனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் விா்ஜீனியா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக 19 வயது இளைஞரை அந்நாட்டு காவல்துறையினா் கைது செய்தனா்.
</p><p>
விா்ஜீனியா பல்கலைக்கழக வளாகம் சனிக்கிழமை நள்ளிரவில் பூட்டப்பட்டு இருந்தது. </p><p>அப்போது அங்கிருந்தோா் மீது மா்ம நபா் ஒருவா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போ் காயமடைந்தனா். இதில் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62720d4c-43c6-4e76-a69c-cb71acc27c69/26-6a82200085cf4.webp' /></p><p>தாக்குதலில் காயமடைந்த 5 பேரில் 4 போ் மாணவா்கள் இல்லை. அதேபோல் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் மாணவா் இல்லை. </p><p>இதுகுறித்த தகவலின்பேரில் காவல்துறையினா் தாக்குதல் நடத்திய நபரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.</p><p>

அப்போது பல்கலைக்கழகம் அருகே மறைந்திருந்த 19 வயதான கேமரூன் ஹாரீஸ் என்பவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனா். </p><p>துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த எஞ்சிய ஒருவா் பல்கலைக்கழக மாணவா் ஆவாா். அவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாா்.
</p><p>
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து தெரியவில்லை. அதுகுறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.</p>]]></content>
            <updated>2026-08-16T20:40:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹங்கேரியில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து ; போலந்து நாட்டினர் 12 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bus-overturns-hungary-12-polish-nationals-killed-1786911737"></link>
            <id>https://canadamirror.com/article/bus-overturns-hungary-12-polish-nationals-killed-1786911737</id>
            <summary type="text">ஹங்கேரியில் அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் போலந்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஹங்கேரியின் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹங்கேரியில் அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் போலந்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.</p><p>

ஹங்கேரியின் மெசோகெரெஸ்டெஸ் நகருக்கு அருகில் 57 பயணிகளுடன் போலந்து பதிவெண் கொண்ட சுற்றுலா பஸ் ஒன்று அதிகாலை பயணித்துக் கொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
</p><p>
விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1e1666f-0660-4993-904b-9263393f1b92/26-6a821bfaf3b9a.webp' /></p><p>மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
சாரதி சோர்வு மற்றும் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்பதே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
விபத்தில் உயிர் தப்பிய சாரதியை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஹங்கேரி மற்றும் போலந்து தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.</p><p>இவ்விபத்து அதிகாலை நேரத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், நீண்ட தூர இரவு மற்றும் அதிகாலைப் பயணங்களில் சாரதிகளின் சோர்வு மற்றும் தூக்கக் கலக்கம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இது மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.
</p><p>
சாரதிகள் தூக்கக் கலக்கத்தை உணரும்போது வாகனம் செலுத்துவதைத் தவிர்த்து, போதிய ஓய்வு எடுத்த பின்னரே பயணத்தைத் தொடர வேண்டும் என போக்குவரத்து பாதுகாப்பு நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
</p><p>
ஒரு சில விநாடிகளுக்கான தூக்கக் கலக்கம்கூட பாரிய விபத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், இரவு மற்றும் அதிகாலை நேரப் பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது அவசியமாகும்.</p>]]></content>
            <updated>2026-08-16T20:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோஹிங்கியா அகதிகளின் மீள்குடியேற்றத்திற்கு மியான்மார் அரசு நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/myanmar-governmen-moves-resettle-rohingya-refugees-1786903183"></link>
            <id>https://canadamirror.com/article/myanmar-governmen-moves-resettle-rohingya-refugees-1786903183</id>
            <summary type="text">மியான்மாரில் கடந்த 2017-ம் ஆண்டு இராணுவம் நடத்திய ஒடுக்குமுறை காரணமாக, லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பக்கத்து நாடான பங்களாதேஷிற்கு தப்பியோடி முகாம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியான்மாரில் கடந்த 2017-ம் ஆண்டு இராணுவம் நடத்திய ஒடுக்குமுறை காரணமாக, லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பக்கத்து நாடான பங்களாதேஷிற்கு தப்பியோடி முகாம்களில் தஞ்சமடைந்தனர். </p><p>

இந்நிலையில், பங்களாதேஷ் வழங்கிய பட்டியலின்படி முதற்கட்டமாக 3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியான்மார் அரசு தெரிவித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf606db-e55b-4bda-a199-2f46e8770a28/26-6a81fa9155c44.webp' /></p><p>அங்கு நிலவும் பாதுகாப்பு சூழல் சீரடைந்தவுடன், இந்த 3 லட்சம் அகதிகளையும் மியான்மார் மீண்டும் தனது நாட்டிற்குள் அனுமதிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>

பயங்கரவாத பின்னணி கொண்ட சிலர் தவிர, மற்றவர்களை படிப்படியாக தாய் நாட்டிற்கு அழைத்து வர பங்களாதேஷூடன் இணைந்து மியான்மார் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-16T17:59:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா தாக்கியதில் 6 பேர் பலி ; பதிலடியாக 600 ட்ரோன்களை ஏவிய உக்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/6-killed-russian-attack-ukraine-600-drone-retaliat-1786901957"></link>
            <id>https://canadamirror.com/article/6-killed-russian-attack-ukraine-600-drone-retaliat-1786901957</id>
            <summary type="text">ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில், இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள புதிய தாக்குதல்களில் உக்ரைன் மீது ரஷ்யா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில், இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள புதிய தாக்குதல்களில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இதனிடையே, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் தரப்பும் பதிலடி தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இதில் 600க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad1aa0c9-5f63-4df1-925f-162428f120f9/26-6a81f5c69d726.webp' /></p><p>

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலை மாஸ்கோ மேயர் செர்கெய் சோபியானின் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
எனினும், குறித்த ட்ரோன் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வந்து போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட தரப்புகள் மேற்கொண்ட பல்வேறு சமரச முயற்சிகள் இதுவரை எதிர்பார்த்த பலனை அளிக்காத நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p>

2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பமான ரஷ்யா – உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், தொடர்ச்சியான தாக்குதல்களால் பொதுமக்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-16T17:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷ் டெஸ்ட் வரலாற்றில் மகத்தான சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bangladesh-thrash-australia-1786878124"></link>
            <id>https://canadamirror.com/article/bangladesh-thrash-australia-1786878124</id>
            <summary type="text">டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பரபரப்பான திருப்புமுனையாக, டார்வினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டின் முன்னணி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பரபரப்பான திருப்புமுனையாக, டார்வினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டின் முன்னணி அணியான ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஷ் அணி வரலாற்றுப் பதிவை எழுதியுள்ளது.</p><p>
26 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பங்களாதேஷ் அணி ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்யும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவென்பதுடன், சர்வதேச கிரிக்கெட்டில் அந்த அணி பெற்ற மிகப்பெரிய வெற்றியாகவும் இது கொண்டாடப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc6824f8-4932-4791-9de4-266f54e7b759/26-6a81da035e48c.webp' /></p><p>போட்டியின் நான்காம் நாளில் 284 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவைச் சுருட்டிய பங்களாதேஷ் அணிக்கு வெற்றி பெற வெறும் 57 ரன்களே தேவையாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் மிராஸ் 66 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் விக்கெட் சரிவை விரைவுபடுத்தினார்.
</p><p>ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் நிதானமாக விளையாடி 104 ரன்கள் எடுத்துப் போராடிய போதிலும், ஹசன் மஹ்மூதின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்ததும் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு முற்றிலும் பறிபோனது.
</p><p>இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்திய பந்துவீச்சாளர் ஹசன் மஹ்மூத் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
</p><p>இறுதியில், மொமினுல் ஹக் மற்றும் ஷாத்மன் இஸ்லாம் ஆகியோரின் உறுதியான ஆட்டத்தால் பங்களாதேஷ் அணி 57 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T15:41:43+00:00</updated>
        </entry>
    </feed>
