<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-04T23:36:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோல்வியடைந்த ட்ரம்பின் போர் நிறுத்த முயற்சிகள் ; மாறிமாறி நடத்தப்பட்ட தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-ceasefire-efforts-end-in-failure-1785878602"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-ceasefire-efforts-end-in-failure-1785878602</id>
            <summary type="text">உக்ரைன் , ரஷ்யா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் , ரஷ்யா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae61f4ae-65cf-4900-8623-410a6ad2d86d/26-6a72584c53a01.webp' /></p><p> போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

</p><p>
இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா நேற்று மாறிமாறி ஏவுகணை, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தின. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். </p><p>அதேபோல், உக்ரைனின் சுமி நகர் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.</p><p> இதன் மூலம் இரு தரப்பு மோதலில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். அதேபோல், 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-04T21:23:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சுற்றுலா சென்ற இருவர் வனப்பகுதியில் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-people-found-dead-near-lake-east-1785859674"></link>
            <id>https://canadamirror.com/article/two-people-found-dead-near-lake-east-1785859674</id>
            <summary type="text">கனடாவின் வடக்குப் பகுதியான ஒன்டாரியோவில் முகாம் அமைத்துத் தங்குவதற்காகச் சென்று வீடு திரும்பாத இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாகாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் வடக்குப் பகுதியான ஒன்டாரியோவில் முகாம் அமைத்துத் தங்குவதற்காகச் சென்று வீடு திரும்பாத இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை தெரிவித்து உள்ளது.</p><p> 
கபுஸ்காசிங் கருக்குக் கிழக்கே அமைந்துள்ள குவெனெட் ஏரிக்கு அருகே இந்த இரண்டு திடீர் மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
</p><p> இந்தச் சம்பவத்தில் ஏதேனும் சதிச் செயல் அல்லது குற்றப் பின்னணி உள்ளதா என்பது குறித்து காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f542f9-d970-4099-a48c-a4bc6bdf4f6b/26-6a720e5c67884.webp' /></p><p> </p><p>
சுற்றுலா சென்ற இருவர் வீடு திரும்பவில்லை என்று ஆகஸ்ட் 1-ஆம் திகதி காவல்துறைக்கு அழைப்பு வந்தது.</p><p> இதையடுத்து அவசரக்கால மீட்புக் குழு, மோப்பநாய் படை, காவல்துறை விமானப் பிரிவு மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகம் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. </p><p>
தேடுதலின் முடிவில், ஆகஸ்ட் 2-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இருவரின் உடல்களும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டன. 
உயிரிழந்தவர்களின் அடையாளங்களை காவல்துறை இன்னும் வெளியிடவில்லை. </p><p>"இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்தப் அச்சுறுத்தலும் இல்லை" என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> 
உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும், இது தொடர்பான கூடுதல் தகவல்கள் விசாரணக்குப் பின்னரே வெளியாகும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p> 
ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை குவெனெட் ஏரிப் பகுதிக்கு அருகில் இருந்தவர்கள் யாரேனும் சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகளைக் கண்டிருந்தாலோ, அல்லது அது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் கேமரா பதிவுகள் வைத்திருந்தாலோ உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p> 
இந்தச் சம்பவம் குறித்து முதன்மை மரண விசாரணை அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T20:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட கொரியா பற்றிய அவதூறு ; அமெரிக்காவுக்கு கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/north-korea-slams-us-over-defamation-claims-1785872933"></link>
            <id>https://canadamirror.com/article/north-korea-slams-us-over-defamation-claims-1785872933</id>
            <summary type="text">வட கொரியாவின் ஐடி ஊழியர்களைப் பற்றித் தவறாகப் பேசி அந்நாட்டின் பிம்பத்தை அமெரிக்கா கெடுப்பதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

வட கொரியா தனது அணு ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட கொரியாவின் ஐடி ஊழியர்களைப் பற்றித் தவறாகப் பேசி அந்நாட்டின் பிம்பத்தை அமெரிக்கா கெடுப்பதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
வட கொரியா தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதி திரட்ட, அவர்களின் திறமையான ஐடி ஊழியர்களை போலி அடையாளங்களுடன் வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்ற பயன்படுத்துவதாக அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 10 நட்பு நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3cf5387-5ed5-4dbb-a1dd-4d28be35f05c/26-6a7242278482f.webp' /></p><p>
</p><p>
அதில், வட கொரிய ஐடி ஊழியர்கள் வருமானத்தைப் பெற இணையதளங்களில் பிற நாட்டுக் குடிமக்களைப் போன்று அடையாளப்படுத்திக் கொண்டு, அந்த வருமானத்தை தங்களது நாட்டு அரசுக்கு வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>
மேலும், வட கொரிய ஊழியர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களை மறைக்க செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டது.</p><p>

வடகொரியா மீது சர்வதேச அளவில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், நாட்டின் திட்டங்களுக்கு நிதி திரட்ட சைபர் குற்றங்கள், கிரிப்டோகரன்சி மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் அந்நாடு பரவலாக ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.</p><p>


இந்த நிலையில், அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்கு வடகொரியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. </p><p>அந்நாட்டின் செய்தி நிறுவனம் வெளியிட்ட மறுப்புச் செய்தியில், “எங்கள் நாட்டின் மீதான பிம்பத்தைக் கெடுக்கும் தீய நோக்கத்துடன் வைக்கப்பட்ட வழக்கமான அரசியல் குற்றச்சாட்டு இது. </p><p>இணைய வெளி தொடர்பான முக்கிய வளங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்கா, பிற நாடுகளிடம் இருந்து சைபர் அச்சுறுத்தல்கள் வருவதாகக் கூறுவது மிகவும் முரணானது.
</p><p>
இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து தனது சட்டவிரோதக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கான அமெரிக்காவின் சாக்குபோக்கு மட்டுமே இது” எனத் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T19:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா–அமெரிக்க எல்லையில் போதைப்பொருள்–துப்பாக்கி கடத்தல் சதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-officials-charge-3-akwesasne-residents-1785862272"></link>
            <id>https://canadamirror.com/article/us-officials-charge-3-akwesasne-residents-1785862272</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா–அமெரிக்க எல்லைப் பகுதியில் செயல்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாக, கனடா மற்றும் அமெரிக்காவின் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா–அமெரிக்க எல்லைப் பகுதியில் செயல்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாக, கனடா மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடியுரிமை கொண்ட அக்வேசாஸ்னே பகுதியைச் சேர்ந்த மூவர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.</p><p>
அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த வியாழக்கிழமை இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். </p><p>
கனடா, அமெரிக்கா மற்றும் அக்வேசாஸ்னே பழங்குடியினர் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசாரணையில், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தியதாகக் கூறப்படும் வலையமைப்பு அடையாளம் காணப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ee96177-8155-4a96-8dd2-e2f0f8965115/26-6a72188292c29.webp' /></p><p>
</p><p>மேலும், இந்தக் குழு போதைப்பொருளுக்கு மாற்றாக பல துப்பாக்கிகளைப் பெற திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
47 வயது மற்றும் 38 வயதுடைய இருவர், போதைப்பொருளை விநியோகிக்கும் சதியில் ஈடுபட்டதாகவும், விநியோகிக்கும் நோக்கில் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
</p><p>குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்படலாம்.
81 வயதுடைய பெண் ஒருவர், போதைப்பொருளை விநியோகிக்கும் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.</p><p> அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
</p><p>அமெரிக்க துணை தலைமை அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜான் ஏ. சார்கோன் III, கனடா மற்றும் அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுக்கிடையேயான முன்னெப்போதும் இல்லாத ஒத்துழைப்பை பாராட்டியுள்ளார்.
47 வயதுடைய சந்தேகநபர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T18:30:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வானில் மோதிய இரண்டு சிறிய விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-planes-crash-mid-air-near-chilliwack-airport-1785861717"></link>
            <id>https://canadamirror.com/article/two-planes-crash-mid-air-near-chilliwack-airport-1785861717</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சில்லிவாக் விமான நிலையத்திற்கு அருகே இரண்டு செஸ்னா வகை சிறிய விமானங்கள் வானில் மோதிக்கொண்ட சம்பவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சில்லிவாக் விமான நிலையத்திற்கு அருகே இரண்டு செஸ்னா வகை சிறிய விமானங்கள் வானில் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
</p><p>திங்கட்கிழமை இந்த விபத்து இடம்பெற்றதாக வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 
சம்பவ இடத்திற்கு விசாரணைக் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c375cd-1643-4ed5-ab39-b23c902868a4/26-6a72165712967.webp' /></p><p>சில்லிவாக் விமான நிலைய அதிகாரி கேரி அட்கின்ஸ் தெரிவித்ததாவது, இரண்டு பயணிகளுடன் சென்ற ஒரு விமானம் மோதலுக்குப் பின்னரும் பாதுகாப்பாக சில்லிவாக் விமான நிலையத்தில் தரையிறங்கியது.</p><p>மற்றொரு விமானம் அருகிலுள்ள கல் சுரங்க நீர்த்தேக்கத்தில் விழுந்து மூழ்கியதாகவும், அதில் ஒரே ஒருவர் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>திங்கட்கிழமை மாலை சுமார் 5.14 மணியளவில் வூல்ஃப் சாலை மற்றும் ஸ்க்வேயே சாலை பகுதிக்கு அவசர மருத்துவக் குழுவினர் அனுப்பப்பட்டனர். </p><p>
எனினும், சம்பவத்தில் காயமடைந்த எவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை.
</p><p>இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தாலும், உடனடி பதில் எதுவும் வெளியாகவில்லை.
சில்லிவாக் நகரம், வாங்கூவர் நகரத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் கிழக்கே அமைந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T18:00:02+00:00</updated>
        </entry>
    </feed>
