<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-18T22:23:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிபந்தனையை நிறைவேற்றினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-warns-us-over-strait-of-hormuz-1787091717"></link>
            <id>https://canadamirror.com/article/iran-warns-us-over-strait-of-hormuz-1787091717</id>
            <summary type="text">ஜூன் மாதம் கையெழுத்தான இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூன் மாதம் கையெழுத்தான இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/759d5817-7db3-4145-8951-994e45341741/26-6a84db06dd384.webp' /></p><p>ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக திறக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. </p><p>எனினும், தாக்குதல்களை நிறுத்துவதுடன், அப்பகுதியில் விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க முற்றுகையையும் நீக்க வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இரு தரப்பினரும் கடந்த ஜூன் 17ஆம் திகதி மேற்கொண்ட இடைக்கால ஒப்பந்தத்தின் அடிப்படையில், 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதி உடன்பாட்டை எட்ட வேண்டியிருந்தது.
</p><p>
எனினும், ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக இதுவரை எந்தவொரு இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை.</p><p>

இந்நிலையில், குறித்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஜூலை 7ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். </p><p>இதனையடுத்து, ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக ஈரானும் அறிவித்ததுடன், ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதற்கிடையில், ஜூன் மாதம் கைச்சாத்திடப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான் மீண்டும் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்குதல், ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குதல், முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவித்தல் மற்றும் அனைத்து முனைகளிலும் அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துதல் ஆகியவை முக்கிய நிபந்தனைகளில் அடங்குவதாக ஈரான் சார்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் கலிபாஃப் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-18T22:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் ; துபாய் மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missile-attack-threat-warning-to-dubai-residents-1787089153"></link>
            <id>https://canadamirror.com/article/missile-attack-threat-warning-to-dubai-residents-1787089153</id>
            <summary type="text">ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதை, அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்ததை அடுத்து, துபாய் மக்களுக்கு எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதை, அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்ததை அடுத்து, துபாய் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p>மேற்காசிய நாடான ஈரான் மீது அணு ஆயுத குற்றச்சாட்டின் பேரில், அமெரிக்க - இஸ்ரேலிய படைகள், கடந்த பிப்ரவரி இறுதியில் போரை தொடங்கின.</p><p> இந்த போருக்கு பதிலடி தரும் வகையில் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்கு கப்பல்களின் போக்குவரத்தை முடக்கியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d7f9f92-3618-4ece-932b-bc4ef2729fe1/26-6a84d10363270.webp' /></p><p>இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்தன. </p><p>இதையடுத்து, ஈரான் - அமெரிக்கா இடையே, கடந்த ஜூனில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது நேற்று முன்தினம் காலாவதியானது.</p><p>இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சின் வான் பாதுகாப்பு அமைப்பு, தங்கள் நாட்டுக்கு ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதை நேற்று கண்டறிந்தது.
</p><p>

இதையடுத்து, துபாய் மற்றும் எமிரேட்சின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி, தேசிய அவசரநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>

எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நிமிடங்களில், துபாயில் சைரன் ஒலிகளும், பலத்த வெடிச்சத்தங்களும் கேட்டன. </p><p>ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் உறுதி செய்தது. ஈரான் ஏவிய இரு ஏவுகணைகளும் கடலில் சுட்டு வீழ்த்தப்பட்டன.</p>]]></content>
            <updated>2026-08-18T21:39:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யப் படைகள் தாக்குதல்; மத்திய கிழக்கு உக்ரைனிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-makes-hostages-of-kherson-civilians-1787059458"></link>
            <id>https://canadamirror.com/article/russia-makes-hostages-of-kherson-civilians-1787059458</id>
            <summary type="text">ரஷ்யப் படைகள் உக்ரைனின் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்திற்குள் முன்னேறி வரும் நிலையில், அங்குள்ள 2,200 குழந்தைகள் உட்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யப் படைகள் உக்ரைனின் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்திற்குள் முன்னேறி வரும் நிலையில், அங்குள்ள 2,200 குழந்தைகள் உட்பட பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.
</p><p>


டினிப்ரோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள 16 குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பொதுமக்களை கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30a43e5e-2c43-4ebc-a5c3-a15d5adf79d7/26-6a845d0408755.webp' /></p><h2>ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள&nbsp; ரஷ்யப் படையெடுப்பு</h2><p>
</p><p>


ஒரு மாதத்திற்குள் குழந்தைகளுடன் உள்ள அனைத்து குடும்பங்களும் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய இராணுவ நிர்வாகத் தலைவர் அலெக்சாண்டர் கொன்ஷா தெரிவித்துள்ளார்.
</p><p>


இதன்படி, பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகளின் உதவியுடன் 2,177 குழந்தைகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
</p><p>


வெளியேற்றப்படும் பொதுமக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் பாதுகாப்பான புதிய குடியிருப்புகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியம் ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு தொடர்ச்சியாக இலக்காகி வருகின்றது. பிராந்தியத்தின் கிழக்குப் பகுதிகளில் மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p>



இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பு ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ளது.
</p><p>
இந் நிலையில், ரஷ்யப் படைகளின் முன்னேற்ற வேகம் குறைந்திருந்தாலும், ஆள் பற்றாக்குறை மற்றும் இராணுவ வீரர்களின் சோர்வு காரணமாக உக்ரைன் இராணுவம் தொடர்ந்து நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


மேலும், கடந்த மாதம் ரஷ்ய இராணுவத்தின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை, போரின் ஆரம்பகாலத்துக்குப் பின்னர் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T19:39:38+00:00</updated>
        </entry>
    </feed>
