<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-14T00:45:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது ; ஈரான் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strait-of-hormuz-completely-closed-iran-announces-1786662961"></link>
            <id>https://canadamirror.com/article/strait-of-hormuz-completely-closed-iran-announces-1786662961</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை தடையின்றி இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை தடையின்றி இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் நடைபெறும் அனைத்து நகர்வுகளையும் IRGC கடற்படை முழுமையாகக் கண்காணித்து வருவதாகவும், தமது அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் அந்தப் பாதையில் சுதந்திரமாக இயங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p>இதேவேளை, ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாகவும், அமெரிக்க கடற்படை அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாத்து வருவதாகவும் அமெரிக்க தரப்பு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/741d1d6b-5ac2-4457-8af1-a300988f45bf/26-6a7e50338372c.webp' /></p><p>அண்மைய தகவல்களின்படி, அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள பாதையில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து மிகவும் குறைந்த அளவிலேயே இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கு முன்னர் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை முடிவுக்கு வருதல், பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுதல் உள்ளிட்ட பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. </p><p>ஈரான் மற்றும் ஓமான் இடையே கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்பான வழித்தடம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், அந்த உடன்பாடு மட்டும் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்கு போதுமானதல்ல என ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எரிசக்தி வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகும். </p><p>இதன் ஊடான கப்பல் போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளமை உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் எரிசக்தி சந்தைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

எனவே, “நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது” என்ற ஈரானின் நிலைப்பாட்டுக்கும், “நீரிணை திறந்துள்ளது” என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கும் இடையே தொடர்ந்தும் முரண்பாடு நிலவி வருகிறது. </p><p>நடைமுறையில், நீரிணை வழியாக கப்பல்கள் செல்வது முற்றிலும் நிறுத்தப்படவில்லை என்றாலும், வழக்கமான அளவுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து கடுமையாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது</p>]]></content>
            <updated>2026-08-14T00:24:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் செயலி சேவைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lawsuit-filed-us-agains-trump-truth-social-service-1786665299"></link>
            <id>https://canadamirror.com/article/lawsuit-filed-us-agains-trump-truth-social-service-1786665299</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை ஏனைய பயனர்களைவிட மிக வேகமாகப் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை ஏனைய பயனர்களைவிட மிக வேகமாகப் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கும் ‘Truth API’ சேவைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
</p><p>
நியூயோர்க் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் The Intercept மற்றும் Freedom of the Press Foundation ஆகிய ஊடக அமைப்புகள் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.
</p><p>
Trump Media &amp; Technology Group (TMTG) அறிமுகப்படுத்தியுள்ள இந்தச் சேவை, ட்ரம்ப் உள்ளிட்ட Truth Social இன் செல்வாக்குமிக்க கணக்குகளில் வெளியாகும் பதிவுகளை நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த தாமதத்துடன் வழங்குகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3de1421d-9259-48ff-b740-2446bbb0b308/26-6a7e595626e15.webp' /></p><p>குறிப்பாக நிதி நிறுவனங்கள் மற்றும் அதிவேக வர்த்தக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக்கு மாதாந்தம் 60,000 முதல் 100,000 அமெரிக்க டொலர் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதன் மூலம் ட்ரம்பின் கொள்கை அறிவிப்புகள் அல்லது சந்தையைப் பாதிக்கக்கூடிய பதிவுகளை மற்றவர்களுக்கு முன்னதாகவே சில நிறுவனங்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதாக மனுதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
குறித்த நடைமுறை அமெரிக்க அரசியலமைப்பின் முதல் மற்றும் ஐந்தாவது திருத்தங்களுக்கு முரணானது எனவும், அரசாங்க தகவல்களை பணம் செலுத்தக்கூடியவர்களுக்கு முன்னுரிமையுடன் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.
</p><p>
இதனிடையே, Trump Media &amp; Technology Group இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. </p><p>பொதுமக்களுக்கு ஏற்கனவே கிடைக்கும் Truth Social பதிவுகளை வேகமாகவும் நேரடியாகவும் வழங்கும் தரவு சேவையே Truth API என அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களிடையேயும் முன்னதாக கவலைகள் எழுந்திருந்தன. </p><p>Truth API மூலம் ட்ரம்பின் சந்தையைப் பாதிக்கக்கூடிய பதிவுகளை மிக வேகமாகப் பெறுவதால், முதலீட்டாளர்களுக்கு சமமற்ற தகவல் முன்னிலை கிடைக்கக்கூடும் எனக் கூறி அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் (SEC) விசாரணை நடத்துமாறும் கோரப்பட்டிருந்தது.
</p><p>
இந்நிலையில், இந்த வழக்கு அமெரிக்க ஜனாதிபதியின் சமூக ஊடகப் பதிவுகளை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவது தொடர்பான சட்ட மற்றும் நெறிமுறை விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T23:55:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/three-people-executed-same-day-us-after-16-years-1786661874"></link>
            <id>https://canadamirror.com/article/three-people-executed-same-day-us-after-16-years-1786661874</id>
            <summary type="text">அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டென்னசி, அலபாமா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மூன்று மாகாணங்களில் இந்த மரண தண்டனைகள் திட்டமிடப்பட்டிருந்தன.
</p><p>
டென்னசியில் 66 வயதான அந்தோணி டேரல் ஹைன்ஸ், ஹோட்டல் பணியாளரான கேத்தரின் ஜென்கின்ஸை 1985ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3945751-b01e-4871-8b93-7a8505628f53/26-6a7e4bf59af0e.webp' /></p><p>ஓக்லஹோமாவில் 70 வயதான கார்லோஸ் குயெஸ்டா-ரோட்ரிக்ஸ், 2003ஆம் ஆண்டு தனது காதலியை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p>

அலபாமாவில் 42 வயதான ஜெரமி வில்லியம்ஸ், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் மரண தண்டனைக்கு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார். </p><p>இந்த மூவருக்கும் மரண தண்டனை விஷ ஊசி மூலம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.</p><p>

அமெரிக்காவில் இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி ஒரே நாளில் மூன்று மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருந்தன. </p><p>அதன்பின்னர் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறான மூன்று மரண தண்டனைகள் ஒரே நாளில் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-13T22:58:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர் ; 2 வீரர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/military-helicopter-crashes-us-2-soldiers-killed-1786660731"></link>
            <id>https://canadamirror.com/article/military-helicopter-crashes-us-2-soldiers-killed-1786660731</id>
            <summary type="text">அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

டெக்சாஸ் மாநிலம் சலாடோ பகுதிக்கு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>

டெக்சாஸ் மாநிலம் சலாடோ பகுதிக்கு அருகே அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான தாக்குதல் வகை அபாச்சி ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fd11f62-791a-4f4e-8295-6dd88e805f0b/26-6a7e477ccea8f.webp' /></p><p>

விபத்தைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் தீப்பற்றி வெடித்துச் சிதறியதுடன், வயல்வெளியில் இருந்த புற்களிலும் தீ பரவியுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். </p><p>எனினும், தீ சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு ராணுவ வீரர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>அதேவேளை, இந்த விபத்தில் வேறு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. </p><p>விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இந்நிலையில், உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T22:38:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாயில் வேற்றுகிரகவாசிகள் வாழ்கின்றனரா... நாசா புகைப்படம் கூறுவது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/are-aliens-living-on-mars-what-nasa-photo-say-1786660146"></link>
            <id>https://canadamirror.com/article/are-aliens-living-on-mars-what-nasa-photo-say-1786660146</id>
            <summary type="text">செவ்வாய் கோளில் இருந்து நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செவ்வாய் கோளில் இருந்து நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கடந்த ஜூலை மாதம் செவ்வாய் கோளின் மவுண்ட் ஷார்ப் பகுதியைச் சேர்ந்த பல புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f45c69a-0d8a-4e65-8eac-8a36250aad56/26-6a7e4534c9d2e.webp' /></p><p>இந்தப் புகைப்படங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பெரிய படத்தில், பாறைப் பகுதியில் கதவு போன்ற தோற்றமுடைய அமைப்பு ஒன்று தென்படுவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனை அடிப்படையாகக் கொண்டு, செவ்வாய் கோளில் வேற்றுகிரகவாசிகளின் நாகரிகம் இருந்திருக்கலாம் அல்லது இன்னும் இருக்கலாம் என்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
</p><p>
கியூரியாசிட்டி ரோவர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கோளின் கேல் பள்ளத்தில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, சுமார் 3 மைல் உயரம் கொண்ட மவுண்ட் ஷார்ப் பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் மண்ணை ஆய்வு செய்து வருகிறது.
</p><p>
பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கோளில் நுண்ணுயிர்கள் வாழ்ந்தனவா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
</p><p>
இந்நிலையில், புகைப்படத்தில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு குறித்து பறக்கும் தட்டு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் ஸ்காட் வேரிங், அது உண்மையில் ஒரு கதவு போன்றே காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08d0f8b8-fdeb-46e9-b0dd-ce29a6d48e38/26-6a7e45357cc80.webp' /></p><p>அந்த அமைப்பு சுமார் 6.6 அடி உயரமும் 3.3 அடி அகலமும் கொண்டதாக அவர் கூறியுள்ளார். எனினும், இந்த அளவீடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
</p><p>
இதனிடையே, இந்தக் காட்சி தொடர்பில் பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்ற போதிலும், செவ்வாய் கோளில் வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்ததற்கான அல்லது பழமையான நாகரிகம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என நாசா தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், செவ்வாயில் உயிரினங்கள் அல்லது பண்டைய நாகரிகம் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இதனால், தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு உண்மையில் என்ன என்பது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், அதனை வேற்றுகிரகவாசிகளின் இருப்புக்கான ஆதாரமாகக் கருத முடியாது என விஞ்ஞான ரீதியில் சுட்டிக்காட்டப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T22:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுமதியின்றி காரை எடுத்துச் சென்று விபத்து: 13 வயது சிறுமியை கைது செய்தது கனடா காவல்துறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/13-year-old-crashes-family-vehicle-after-nanaimo-1786643409"></link>
            <id>https://canadamirror.com/article/13-year-old-crashes-family-vehicle-after-nanaimo-1786643409</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நானைமோ நகரில், பெற்றோருக்குத் தெரியாமல் குடும்ப காரை எடுத்துக்கொண்டு, அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட இருமடங்கிற்கும் அதிகமான வேகத்தில் ஓட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நானைமோ நகரில், பெற்றோருக்குத் தெரியாமல் குடும்ப காரை எடுத்துக்கொண்டு, அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட இருமடங்கிற்கும் அதிகமான வேகத்தில் ஓட்டிச் சென்று சாக்கடையில் மோதி விபத்துக்குள்ளாக்கிய 13 வயது சிறுமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>ஜூலை 25 அன்று அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. டெர்மினல் அவென்யூ பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நானைமோ போலீஸ் அதிகாரி ஒருவர், மணிக்கு 50 கி.மீ வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பகுதியில், கார் ஒன்று 118 கி.மீ வேகத்தில் அதிவேகமாகச் செல்வதைக் கண்டறிந்தார்.</p><p> 
காரை நிறுத்த அதிகாரி முயன்றபோது, அது அதிவேகத்தில் தப்பிச் சென்றது. இதையடுத்து, காரின் அதிவேகம் மற்றும் ஆபத்தான பயணத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அதனைப் பின்தொடர்ந்து துரத்த வேண்டாம் என காவல்துறை முடிவு செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fd28ae0-8635-4fc9-97f6-a44c936db4e0/26-6a7e03d399d15.webp' /></p><p> </p><p>
அதிவேகம் மற்றும் காரை ஓட்டிய விதம் காரணமாக நாங்கள் அதனைப் பின்தொடர வேண்டாம் என முடிவு செய்தோம் எனபொலிஸார் தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில், அந்த கார் அருகிலுள்ள சாக்கடையில் மோதி விபத்துக்குள்ளானதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. </p><p>சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முயன்ற சிறுமியைத் தேடிக் கண்டுபிடித்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
காரை ஓட்டியவர் வெறும் 13 வயது சிறுமி என்பதைக் கண்டு அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.</p><p> காரில் அந்த சிறுமி மட்டுமே இருந்தாரென்றும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுச் சொத்துக்கள் எதுவும் சேதமடையவில்லை. சேதமடைந்த கார் மீட்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T20:27:30+00:00</updated>
        </entry>
    </feed>
