<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-22T13:38:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் தடைகள் ; பேரழிவுகரமாக இருக்கும் ; ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-sanctions-would-be-catastrophic-iran-warns-1787379771"></link>
            <id>https://canadamirror.com/article/us-sanctions-would-be-catastrophic-iran-warns-1787379771</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரான் மீது வரலாற்றில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ள நிலையில், புதிய அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அளிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரான் மீது வரலாற்றில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ள நிலையில், புதிய அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அளிக்கப்படும் பதில் "பேரழிவுகரமாக" இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>&nbsp; ஈரானுக்கு "எந்தவிதமான உயிர்நாடியையும்" வழங்கும் எந்தவொரு நாடும் பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட தடைகள் குறித்த விபரங்களை வெளியிடவுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f5a771a-35c8-42f7-a8a1-fef3bd9249a1/26-6a89403cf062f.webp' /></p><h2>ஆயுதப் படைகள்&nbsp;பேரழிவுகரமான பதில்களை வழங்கும்</h2><p> 

ஈரானின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹி, இஸ்லாமியக் குடியரசின் எதிர்வினை விரிவானதாகவும் தீர்க்கமானதாகவும் இருக்கும் என்று கூறினார். </p><p>

"நிலம், கடல், வான், வான் பாதுகாப்பு மற்றும் இணையவெளி முழுவதும் தயார் நிலையில் உள்ள ஈரானின் ஆயுதப் படைகள், எதிரியின் புதிய அச்சுறுத்தல்களுக்கு நசுக்கும், தண்டிக்கும் மற்றும் பேரழிவுகரமான பதில்களை வழங்கும்" என்று அப்தொல்லாஹியை மேற்கோள் காட்டி ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

அமெரிக்காவும் இஸ்ரேலும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போரில் இரு தரப்பினரும் இன்னும் வெற்றிபெறவில்லை என்றாலும், ஈரானியத் தலைவர்களும் டிரம்பும் வெற்றிகரமான மற்றும் அச்சுறுத்தலான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். </p><p>

இந்தப் போர் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதுடன், பிற வளைகுடா நாடுகளையும் ஈர்த்து உலகளாவிய எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது.</p><p> 

அமெரிக்கத் தாக்குதல்கள் ஈரானின் பொருளாதாரத்தையும் அதன் வழக்கமான படைகளையும் கடுமையாகக் குறைத்துள்ளன, ஆயினும் ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கி கப்பல் போக்குவரத்தைத் தடையின்றித் தடுக்கவும் பிராந்திய எதிரிகளைத் தாக்க ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் திறன்களைத் தெஹ்ரான் தொடர்ந்து தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-22T13:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகிலேயே முதல்முறை...மலைப்பாம்பிற்கு புற்றுநோய் சிகிச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-world-first-cancer-treatment-save-for-a-python-1787402012"></link>
            <id>https://canadamirror.com/article/a-world-first-cancer-treatment-save-for-a-python-1787402012</id>
            <summary type="text">&amp;nbsp; உலகிலேயே முதன்முறையாக ஒரு மலைப்பாம்பு புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளது.

இங்கிலாந்திலுள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் வாழும், &#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகிலேயே முதன்முறையாக ஒரு மலைப்பாம்பு புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளது.
</p><p>
இங்கிலாந்திலுள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் வாழும், 'ஜோடி ஃபோஸ்டர்' எனப் பெயரிடப்பட்ட 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உணவருந்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f19b7c8-053f-481d-9cce-732bdb6b7bf6/26-6a89971e8b7ac.webp' /></p><p>மருத்துவப் பரிசோதனையில், அதன் தாடை எலும்பில் 'ஃபைப்ரோசார்கோமா'என்ற புற்றுநோய்க் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. 

ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டாலும், மீண்டும் அப்புற்றுநோய் தோன்றி தாடை எலும்பைச் சேதப்படுத்தத் தொடங்கியது.</p><p>
இதனால் பாம்பைக் காப்பாற்ற, செஸ்டர் உயிரியல் பூங்கா மருத்துவர்கள் மற்றும் லிவர்பூல் பல்கலைக்கழக புற்றுநோய் நிபுணர்கள் இணைந்து மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் 'எலக்ட்ரோகீமோதெரபி' சிகிச்சையை அந்தப் பாம்பிற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து வழங்கினர்.</p><p>

பாம்பின் அளவிற்கு ஏற்ற அறுவை சிகிச்சை மேஜை இல்லாததால், இரண்டு மேஜைகளை ஒன்றாக இணைத்து, வெப்பப் போர்வைகள் மூலம் பாம்பின் உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரித்து 90 நிமிடங்கள் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
அறுவை சிகிச்சைக்குப் பின் மீதமிருந்த புற்றுநோய் செல்களை அழிக்க எலக்ட்ரோகீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த மலைப்பாம்பு மிக விரைவாகக் குணமடைந்து தற்போது நலமாக உள்ளது.

உலகிலேயே ஒரு பாம்பிற்கு இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-22T13:24:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக குத்துச்சண்டை சாம்பியன் சுட்டுக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/world-boxing-champion-shot-dead-south-africa-1787404132"></link>
            <id>https://canadamirror.com/article/world-boxing-champion-shot-dead-south-africa-1787404132</id>
            <summary type="text">&amp;nbsp; தென்னாப்பிரிக்காவின் முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஜோலானி டெட், கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள எம்தான்சேனே பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென்னாப்பிரிக்காவின் முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஜோலானி டெட், கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள எம்தான்சேனே பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
</p><p>


38 வயதான ஜோலானி தனது வீட்டிற்கு காரில் சென்றிருந்தபோது, முகமூடி அணிந்த இருவர் அவரை மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38dd1590-7d3c-41ef-bee9-33d6079729e7/26-6a899f65e7160.webp' /></p><p>



அவருடன் காரில் இருந்த 27 வயதுடைய பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p>



ஜோலானி டெட் 2007–2008ஆம் ஆண்டுகளில் டபிள்யூ.பி.எஃப். பறக்கும் எடைப் பிரிவிலும், 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் டபிள்யூ.பி.ஓ. இளம்பருவ எடைப் பிரிவிலும் உலக சாம்பியன் பட்டங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
</p><p>


இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தென்னாப்பிரிக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-22T13:06:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கும் டிக்டொக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tiktok-to-pay-400-million-in-compensation-us-1787400059"></link>
            <id>https://canadamirror.com/article/tiktok-to-pay-400-million-in-compensation-us-1787400059</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் குழந்தைகளின் இணையதள தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், டிக்டொக் நிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் குழந்தைகளின் இணையதள தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், டிக்டொக் நிறுவனம் அமெரிக்க நீதித்துறையுடன் 400 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
</p><p>


13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அனுமதியின்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்ததாகவும், பெற்றோர் கோரிய போதிலும் குழந்தைகளின் கணக்குகளை நீக்கத் தவறியதாகவும் டிக்டொக் மற்றும் அதன் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் மீது அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53262bb2-b37b-411c-8c7e-d50136264ce8/26-6a898f7d38486.webp' /></p><h2>சமரச ஒப்பந்தம்&nbsp; - பெற்றோருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி</h2><p>



இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர டிக்டொக் நிறுவனம் உடனடியாக 300 மில்லியன் டொலரை செலுத்தவுள்ளதுடன், மியூசிக்கலி நிறுவனத்துக்கு எதிரான முந்தைய உத்தரவு இரத்து செய்யப்பட்ட பின்னர் மேலும் 100 மில்லியன் டொலரை செலுத்தவுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.</p><p>



இந்த சமரச ஒப்பந்தம் அமெரிக்க குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என அமெரிக்க இணை அட்டர்னி ஜெனரல் ஸ்டான்லி இ. உட்வார்ட் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
</p><p>


இதேவேளை, நீண்டகால சட்டப் போராட்டத்தை தவிர்ப்பதற்கும் அமெரிக்க பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இந்த ஒப்பந்தத்தின் மூலம் டிக்டாக் நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளாமலேயே வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-22T11:58:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பிரிட்டனில் குடியேறும் இளவரசர் ஹாரி மற்றும் மேகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/prince-harry-and-meghan-to-settle-in-britain-again-1787392516"></link>
            <id>https://canadamirror.com/article/prince-harry-and-meghan-to-settle-in-britain-again-1787392516</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அரசு குடும்பப் பொறுப்புகளிலிருந்து விலகி கணவர் ஹாரியுடன் அமெரிக்காவில் வசித்து வந்த மேகன் மார்க்கிள், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அரசு குடும்பப் பொறுப்புகளிலிருந்து விலகி கணவர் ஹாரியுடன் அமெரிக்காவில் வசித்து வந்த மேகன் மார்க்கிள், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முழுநேர நடிப்பு வாழ்க்கைக்குத் திரும்பவுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

இயக்குநர் காய் ரிச்சியின் (Guy Ritchie) புகழ்பெற்ற ‘தி ஜென்டில்மேன்’ (The Gentlemen)&nbsp; தொடரின் 3-வது சீசனில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/228595fa-63db-4df8-925f-d73996adc2e1/26-6a89720664c75.webp' /></p><h2>நடிப்பை விட்டு விலகியிருந்த மேகனின்&nbsp; திடீர் முடிவு</h2><p>

இந்த தொடரில் பிரபுத்துவக் குடும்பத்து இளவரசர்களைத் தன் அழகால் வசியம் செய்து சிக்கலில் மாட்டிவிடும் ‘அல்டிமேட் டெம்ப்ட்ரஸ்’ (Ultimate Temptress) என்ற மிகவும் சுவாரசியமான மற்றும் சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க மேகனுக்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><p> ‘சூட்ஸ்’ (Suits) தொடருக்குப் பிறகு அரச குடும்பத்து விதிகளால் நடிப்பை விட்டு விலகியிருந்த மேகனின் இந்தத் திடீர் முடிவு, திரைத்துறையிலும் ராயல் குடும்ப வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
</p><p>
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ‘தி ஜென்டில்மேன்’ தொடரின் முக்கியப் படப்பிடிப்புகள் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்குச் சொந்தமான புகழ்பெற்ற ‘ஹைஃபுளோவ் எஸ்டேட்’ (Highgrove Estate) அருகிலேயே நடைபெற்று வருகின்றன. </p><p>அரச குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டுப் பிரிந்த மேகன், மன்னரின் இருப்பிடத்திற்கு மிக அருகிலேயே படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளது பிரிட்டன் ஊடகங்களில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
</p><p>
ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் மீண்டும் பிரிட்டனுக்கு இடம்பெயர திட்டமிட்டு வரும் சூழலில், மேகனின் இந்த செய்தி வெளியாகியுள்ளது.</p><p> அரச குடும்பத்தின் முன்னாள் உறுப்பினராக இருந்து மீண்டும் ஹாலிவுட் திரைப்பயணத்தைத் தொடங்கும் மேகனின் இந்தப் புதிய அவதாரம்,&nbsp; ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது</p>]]></content>
            <updated>2026-08-22T10:59:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே இரவில் மாஸ்கோ விமான நிலையங்களை முடக்கிய உக்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ukraine-1000-drone-cripples-moscow-airports-1787389131"></link>
            <id>https://canadamirror.com/article/ukraine-1000-drone-cripples-moscow-airports-1787389131</id>
            <summary type="text">&amp;nbsp; உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய தலைநரான மாஸ்கோவை இலக்கு வைத்து உக்ரைன் நடத்தியுள்ள பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய தலைநரான மாஸ்கோவை இலக்கு வைத்து உக்ரைன் நடத்தியுள்ள பிரம்மாண்ட ட்ரோன் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி மாஸ்கோவின் முக்கிய வான்வழிப் பாதைகளை முடக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7fff5cc-d248-447c-82d2-ce4b1620d64a/26-6a8964cd02262.webp' /></p><h2>வான்வெளி பாதுகாப்பு அச்சுறுத்தல்</h2><p> </p><p>

மாஸ்கோவை சுற்றியுள்ள வான்வெளியில் உக்ரைனின் ‘M&amp;M’ திட்டத்தின் கீழ் இந்த ஆளில்லா விமானங்கள் ஒரே நேரத்தில் ஊடுருவியதாகத் தெரிகிறது.

இந்த தொடர் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக மாஸ்கோவின் முதன்மை சர்வதேச விமான நிலையங்களான ஷெரெமெத்யேவோ, நுக்கோவோ மற்றும் டொமோடேடோவோ ஆகியவற்றின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது. </p><p>

வான்வெளி பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பல விமானங்கள் தரையிறக்கப்படாமலும், மாற்றுப் பாதைகளுக்கு திருப்பி விடப்பட்டும் திருப்பி அனுப்பப்பட்டன.</p><p>

 இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே முடங்கும் சூழல் உருவாகி, மாஸ்கோவின் வான்வழி போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்தது.</p><p>

ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி ஒரே நேரத்தில் இத்தனை ட்ரோன்கள் ஊடுருவியது மாஸ்கோவின் பாதுகாப்பு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

உக்ரைன் இந்த உத்தியின் மூலம் ரஷ்ய தலைநகரின் உள்கட்டமைப்புகளுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தி, அந்நாட்டு மக்களிடையே உளவியல் ரீதியான தாக்கத்தை உருவாக்க முயல்கிறது. 

ரஷ்யாவின் முன்னணி தளவாட மையங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல், மாஸ்கோ நகர எல்லைக்குள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T08:56:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவீடன் பாடசாலையில் பரபரப்பு சம்பவம்; ஒருவர் பலி மூவர் படுகாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/swedish-school-sword-attack-1787375495"></link>
            <id>https://canadamirror.com/article/swedish-school-sword-attack-1787375495</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மத்திய சுவீடனில் உள்ள பாடசாலை ஒன்றில் வாளுடன் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மத்திய சுவீடனில் உள்ள பாடசாலை ஒன்றில் வாளுடன் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

ஃபேகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல் (Brinell High School) மேல்நிலைப் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (21) மதியம் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. 

 தாக்குதல் நடத்திய சந்தேக நபரைக் அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7a2932-e1c0-498d-a819-477968f5ff12/26-6a892f88a1162.webp' /></p><h2>ஒருவர் பலி மூவர் படுகாயம்</h2><p> 

கோடைக்கால விடுமுறைக்குப் பிறகு பாடசாலை மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

16 முதல் 20 வயதுடைய சுமார் 450 மாணவர்கள் பயிலும் அந்தப் படசாலைக்குள் புகுந்த 18 வயது இளைஞரை அந்நாட்டு பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுக் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
</p><p>
இந்தத் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 12 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

தாக்குதல் நடத்திய நபர் அப்பாடசாலையின் முன்னாள் மாணவர் என்றும், ஹெல்மெட் அணிந்து வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்த அவர் மீது ஏற்கனவே தாக்குதல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

தாக்குதலுக்கான துல்லியமான காரணம் என்னவென்று அந்நாட்டு பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-22T07:54:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எட்மண்டன் நகரில் குருத்வாராவில் தாக்குதல் நடத்திய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-attacks-in-edmonton-gurdwara-2-injured-1787384860"></link>
            <id>https://canadamirror.com/article/man-attacks-in-edmonton-gurdwara-2-injured-1787384860</id>
            <summary type="text">Two injured in stabbing at Canada&#039;s Edmonton gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் ஒருவர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

கனடாவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two injured in stabbing at Canada's Edmonton gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் ஒருவர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
நேற்று அதிகாலை 5.00 மணியளவில், எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் பிரார்த்தனை செய்யும் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd036b62-ee72-465b-bc62-3b0581781f28/26-6a89541e20651.webp' /></p><p>
அவரை இரண்டு பேர் தடுக்க முயல, அவர் தன் கையில் வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் அவர்களை தாக்கியுள்ளார்.
</p><p>
உடனடியாக மற்றவர்கள் அவர் மீது பாய்ந்து அவரைப் பிடித்து பொலிசார் வரும்வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்கள்.
</p><p>
காயமடைந்த 75 மற்றும் 51 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அந்த நபரைக் கைது செய்துள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஏற்கனவே தாக்குதல் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டிருந்த அந்த 27 வயது நபர், முன் தினம்தான், அதாவது, வியாழக்கிழமைதான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அவர் எதற்காக அந்த குருத்வாராவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார், இது இனவெறுப்புத் தாக்குதலா என்பது தெரியவில்லை.
</p><p>
பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இந்த சம்பவம் சீக்கியர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The attack at the Nanaksar Gurdwara in Edmonton this morning is appalling. My thoughts are with the two people who were injured and the wider community that is shaken by this terrible event.<br><br>No one should ever feel unsafe in their place of worship. I want to thank the Edmonton…</p>&mdash; Mark Carney (@MarkJCarney) <a href="https://x.com/MarkJCarney/status/2090932007358652484?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்நிலையில், அந்த குருத்வாரா தாக்குதல் குறித்து அறிந்த பிரதமர் மார்க் கார்னி, காயமடைந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T07:47:52+00:00</updated>
        </entry>
    </feed>
