<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-11T16:12:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரட்டை கோபுர தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/25th-anniversary-of-the-twin-towers-attacks-1789118530"></link>
            <id>https://canadamirror.com/article/25th-anniversary-of-the-twin-towers-attacks-1789118530</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தீவிரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தீவிரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. </p><p>

நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது இரண்டு விமானங்கள் மோதி தாக்குதல் நடத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f96f3f1-6af7-4399-bb8c-8808c501b26a/26-6aa3c847d7ff4.webp' /></p><h2>இரண்டு விமானங்கள் மோதி தாக்குதல்&nbsp;</h2><p> </p><p>இரண்டாவது தாக்குதல் முதல் தாக்குதலுக்குப் பிறகு 17 நிமிடங்கள் கழித்து நிகழ்ந்தது. </p><p>

கட்டடங்கள் தீப்பிடித்ததால் மேல் தளங்களில் சிக்கிய மக்கள் அவதிப்பட்ட நிலையில், இரண்டு மணி நேரத்திற்குள் 110 மாடிகளைக் கொண்ட இரண்டு கோபுரங்களும் தூசு மண்டலமாக இடிந்து விழுந்தன. </p><p>

வொஷிங்டன் டிசி அருகில் உள்ள அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகனின் மேற்குப் பகுதியை மூன்றாவது விமானம் தகர்த்தது. 

பயணிகளின் கடுமையான எதிர்ப்பால் நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் உள்ள திறந்தவெளியொன்றில் விழுந்து நொறுங்கியது. </p><p>

இது வொஷிங்டனில் உள்ள பாராளுமன்றக் கட்டடத்தை குறிவைத்துத் தாக்கப்படவிருந்ததாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதல்களில் கடத்தல்காரர்கள் 19 பேர் தவிர்த்து மொத்தம் 2,977 பேர் உயிரிழந்தனர். </p><p>

இவர்களில் பெரும்பாலோர் நியூயோர்க்கைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், அமெரிக்க வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் 441 அவசரகால மீட்புப் பணியாளர்கள் இதில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். </p><p>

இந்தத் தாக்குதல்களும், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களுக்குரிய வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை கொள்கைகளை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p> 

இந்த நிலையில் குறித்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, தாக்குதல்கள் நடைபெற்ற நியூயோர்க், வெர்ஜீனியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய மூன்று முக்கிய இடங்களிலும் அதிகாரப்பூர்வ நினைவு சடங்குகள் இன்று இடம்பெறுகின்றன. </p><p>

அத்துடன், இன்றைய தினம் லண்டனில் உள்ள குவீன் எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவிலும் உயிரிழந்தவர்களின் நினைவாக விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.</p>]]></content>
            <updated>2026-09-11T13:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளவரசி டயானாவின் ‘Revenge Dress’ ஏலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/princess-diana-s-revenge-dress-up-for-auction-1789132585"></link>
            <id>https://canadamirror.com/article/princess-diana-s-revenge-dress-up-for-auction-1789132585</id>
            <summary type="text">&amp;nbsp; பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா அணிந்திருந்த, அரச குடும்ப வரலாற்றில் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘Revenge Dress’ என அழைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா அணிந்திருந்த, அரச குடும்ப வரலாற்றில் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘Revenge Dress’ என அழைக்கப்படும் கருப்பு நிற ஆடை ஏலத்திற்கு வரவுள்ளது.
</p><p>
1994ஆம் ஆண்டு, அப்போதைய இளவரசர் சார்லஸ் தன்னுடைய திருமணத்திற்கு வெளியான உறவை ஒப்புக்கொண்ட தொலைக்காட்சி நேர்காணல் ஒளிபரப்பான அதே இரவில், டயானா இந்த கருப்பு நிற "Christina Stambolian" ஆடையை அணிந்து பொது நிகழ்வில் கலந்துகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d567b018-4307-4bc0-9ed2-a1e765d7c943/26-6aa3ff2ab1264.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக இந்த ஆடை பின்னர் ‘Revenge Dress’ எனப் பிரபலமானது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள Sotheby’s ஏல நிறுவனத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்த ஆடை ஏலத்திற்கு விடப்படவுள்ளது.</p><p>&nbsp; இந்த ஆடை 150,000 முதல் 300,000 அமெரிக்க டொலர் வரை விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது</p>]]></content>
            <updated>2026-09-11T13:32:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-police-charge-man-for-1789125288"></link>
            <id>https://canadamirror.com/article/canada-police-charge-man-for-1789125288</id>
            <summary type="text">Canada police charge man for screwdriver stabbings at gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada police charge man for screwdriver stabbings at gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் தாக்குதல் நடத்திய விடயத்தில் அந்த நபர் மீது பொலிசார் குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளார்கள்.</p><p><span style="color: inherit;">ஆகத்து மாதம் 21ஆம் திகதி, அதிகாலை 5.00 மணியளவில், எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் பிரார்த்தனை செய்யும் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார்.</span></p><p>
அவரை இரண்டு பேர் தடுக்க முயல, அவர் தன் கையில் வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் அவர்களை தாக்கியுள்ளார்.</p><p>

உடனடியாக மற்றவர்கள் அவர் மீது பாய்ந்து அவரைப் பிடித்து பொலிசார் வரும்வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b973d26-c999-4383-82bf-94015929dd8a/26-6aa3e2f216ef3.webp' /><br></p><p>காயமடைந்த 75 மற்றும் 51 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.</p><p>
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அந்த நபரைக் கைது செய்துள்ளார்கள்.</p><p>

விடயம் என்னவென்றால், ஏற்கனவே தாக்குதல் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டிருந்த அந்த 27 வயது நபர், முன் தினம்தான், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.</p><p><span style="color: inherit;">தாக்குதல் நடத்திய அந்த நபருடைய பெயர் ஆஸ்டின் (Austin Sim-Pelletier, 27) என தற்போது பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.</span></p><p>
அவர் மீது தாக்குதல், ஆயுதம் வைத்திருந்தது முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
அவர் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது இதுவரை தெரியவரவில்லை.

இந்நிலையில், இது ஒரு சிக்கலான வழக்கு என்றும், இந்த தாக்குதல் இனவெறுப்பு தொடர்பானதா என்பதை அறிவதற்காக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஆஸ்டின், இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.&nbsp; &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-11T11:17:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் ; ஒரே குடும்பத்தின் நால்வா் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israeli-airstrikes-on-gaza-kill-civilians-1789124968"></link>
            <id>https://canadamirror.com/article/israeli-airstrikes-on-gaza-kill-civilians-1789124968</id>
            <summary type="text">வடக்கு காஸா பகுதியில் ஒரு வீட்டின்மீது இஸ்ரேல் வியாழக்கிழமை அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த கணவன், மனைவி மற்றும் அவா்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு காஸா பகுதியில் ஒரு வீட்டின்மீது இஸ்ரேல் வியாழக்கிழமை அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த கணவன், மனைவி மற்றும் அவா்களின் 2 பெண் குழந்தைகள் உயிரிழந்தனா்.
</p><p>
இத்தாக்குதலில் ஆயுதக் குழுவைச் சோ்ந்த முவாமன் அகமது கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b016cb68-0601-4862-8b87-62a635b2367d/26-6aa3e1696b74a.webp' /></p><p> </p><p>எனினும், அவரின் குடும்பத்தினா் உயிரிழப்பு குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

</p><p>
கடந்த ஆண்டு எட்டப்பட்ட அமெரிக்க ஆதரவு போா்நிறுத்தத்துக்குப் பிறகும், காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.</p>]]></content>
            <updated>2026-09-11T11:09:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - உக்ரைன் இடையே 100 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pm-carney-zelenskyy-sign-100-year-partnership-1789100101"></link>
            <id>https://canadamirror.com/article/pm-carney-zelenskyy-sign-100-year-partnership-1789100101</id>
            <summary type="text">&amp;nbsp;கனடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே 100 ஆண்டுகால கூட்டாண்மைப் பிரகடனம் மற்றும் ட்ரோன் உற்பத்திக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே 100 ஆண்டுகால கூட்டாண்மைப் பிரகடனம் மற்றும் ட்ரோன் உற்பத்திக்கான ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.</p><p>
வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்த உறவு கடந்த 100 ஆண்டுகளாகச் செழித்தோங்கியுள்ளது.</p><p> இந்தப்போர் முடிந்த பின்னரும், வரவிருக்கும் நூற்றாண்டிலும் இது மேலும் வலுவடையும்" என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/926e5628-613a-415a-b4f4-a85af10ccba2/26-6aa3804726e72.webp' /></p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை 'விரிவான மூலோபாயக் கூட்டாண்மையாக' உயர்த்தவும், பாதுகாப்பு மற்றும் முக்கிய கனிமவளத் துறைகளில் இணைந்து செயல்படவும் பிரகடனம் கையெழுத்தாகியுள்ளது.
</p><p>கனடிய ஆயுதப் படைகளுக்காகத் தேசிய ட்ரோன் சந்தை ஒன்றை கனடா தொடங்கவுள்ளது. இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான ட்ரோன்களை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> இதில் உலகளவில் முன்னணி வகிக்கும் உக்ரைனிய ட்ரோன் நிறுவனங்கள் கனடிய நிறுவனங்களுடன் இணைந்து ட்ரோன்களை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைத் தடுப்புகளை உருவாக்கும் உக்ரைனின் 'புரொஜெக்ட் ஃப்ரேயா' திட்டத்திற்குக் கூடுதல் ராணுவ உதவி வழங்க கனடா உறுதியளித்துள்ளது.</p><p>
2022-இல் போர் தொடங்கியதிலிருந்து கனடா உக்ரைனுக்கு 8.5 பில்லியன் டொலர் ராணுவ உதவியையும், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 750 மில்லியன் டாலரையும் வழங்கியுள்ளது. </p><p>அத்துடன் ரஷ்யா மீது 3,500-க்கும் மேற்பட்ட தடைகளையும் கனடா விதித்துள்ளது.
கால்கரி சந்திப்பைத் தொடர்ந்து, பானிஃப் நகரில் நடைபெறும் கனடிய லிபரல் அரசின் அமைச்சரவை திட்டமிடல் மன்றத்தில் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி உரையாற்றுகிறார்.</p><p> பிரான்ஸின் ஏவியான்-லே-பைன்ஸ் நகரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் மார்க் கார்னி விடுத்த அழைப்பின் பேரிலேயே ஸெலென்ஸ்கி இதில் பங்கேற்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T11:00:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிட்னியில் திடீரென ரத்தான பல விமானங்கள்; தவித்த பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/friday-many-flights-suddenly-cancelled-in-sydney-1789122001"></link>
            <id>https://canadamirror.com/article/friday-many-flights-suddenly-cancelled-in-sydney-1789122001</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அவுஸ்திரேலியாவின் பரபரப்பான சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் பற்றாக்குறையினால் இன்று (11) வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அவுஸ்திரேலியாவின் பரபரப்பான சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் பற்றாக்குறையினால் இன்று (11) வெள்ளிக்கிழமை காலை பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், பெருமளவிலான விமானங்கள் தாமதமடைந்ததாக அந்நாட்டு வான்வழிப் போக்குவரத்து முகாமைத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
</p><p>

திடீரென ஏற்பட்ட பணியாளர்கள் தட்டுப்பாட்டினால் வான்வழிப் போக்குவரத்து பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வான்வழிப் போக்குவரத்து முகாமைத்துவ நிர்வாகம் 'ஏர்சர்வீசஸ் அவுஸ்திரேலியா' அவசரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமுல்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/422bcff2-1a41-489f-a4ee-922c6f4ea66f/26-6aa3d5d2d1dbc.webp' /></p><p>
</p><p>
ஆதன் காரணமாக வருகை தரவிருந்த சுமார் 14 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், பல விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் புறப்பட முடியாமல் தாமதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இது தொடர்பில் ஏர்சர்வீசஸ் அவுஸ்திரேலியா' பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி பீட்டர் கரன் கூறுகையில் , 

சிட்னி விமான நிலையத்திற்கு 41 கட்டுப்பாட்டாளர்கள் தேவைப்படும் நிலையில், 08 பேர் நீண்டகால விடுப்பில் உள்ளதால், திடீரென ஏற்பட்ட ஒருவரின் விடுப்புக்கூட பெரும் இடையூறை ஏற்படுத்தியது.
</p><p>
காலை 8:15 மணியளவில் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு, பிற்பகலில் விமானங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பின.
</p><p>
கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் சிட்னி விமான நிலையத்தில் சுமார் 06 முறை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் ஆபத்தான நிலைகள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
கட்டுப்பாட்டாளர்களின் பணிச்சுமை மற்றும் சோர்வினால் இந்தச் சம்பவங்கள் நடந்ததா என்பது குறித்து அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றதாகவும் தெரிவிகப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T10:17:03+00:00</updated>
        </entry>
    </feed>
