<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-04T15:35:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில், சிறுவனைக் கடித்துக் கொன்ற நாய்களின் உரிமையாளருக்கு தண்டனை அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-whose-dogs-killed-11-year-old-boy-1788422224"></link>
            <id>https://canadamirror.com/article/woman-whose-dogs-killed-11-year-old-boy-1788422224</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரில் 2024 ஆம் ஆண்டு 11 வயது சிறுவனை இரண்டு நாய்கள் கடித்துக் கொன்ற வழக்கில், நாய்களின் உரிமையாளரான கிரிஸ்டல் மெக்டொனால்ட் என்பவரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரில் 2024 ஆம் ஆண்டு 11 வயது சிறுவனை இரண்டு நாய்கள் கடித்துக் கொன்ற வழக்கில், நாய்களின் உரிமையாளரான கிரிஸ்டல் மெக்டொனால்ட் என்பவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.</p><p> 
கடந்த 2024 ஏப்ரல் மாதம், கிரிஸ்டலுக்குச் சொந்தமான இரண்டு 'கேன் கோர்சோ' ரக நாய்கள் தாக்கியதில் கேச் கிரிஸ்ட் என்ற 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
</p><p> இச்சம்பவத்தில் 'மரணத்தை விளைவித்த குற்றவியல் அலட்சியம்' இழைத்ததாகக் கூறி, கடந்த மே மாதம் கிரிஸ்டலை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3e18196-06f4-4d82-90b5-7a6df6fd00bb/26-6a992852585d1.webp' /></p><p> </p><p>
புதன்கிழமை நடைபெற்ற தண்டனை தொடர்பான விசாரணையின் போது, கிரிஸ்டல் மன்றத்தில் கண்ணீருடன் பேசினார். 
சிறுவனின் இழப்பிற்குப் பிறகு தான் கடுமையான குற்ற உணர்ச்சி, துக்கம் மற்றும் அவமானத்தைச் சுமந்து வருவதாகத் தெரிவித்தார். "நான் தினமும் அவனைப் பற்றியே நினைக்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p> 
பிரிட்டிஷ் கொலம்பியாவில் தாயாருடன் வசித்து வந்த கேச், வசந்த கால விடுமுறையைக் கழிப்பதற்காக எட்மண்டனின் சம்மர்சைட் பகுதியில் வசித்து வந்த தந்தை வெஸ்லியைச் சந்திக்க வந்திருந்தான். அப்போது வெஸ்லி, கிரிஸ்டலுடன் ஒரே வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தார். </p><p>
தந்தையான வெஸ்லி வீட்டின் கரேஜில் வேலை செய்துகொண்டிருந்தபோது, சிறுவன் வீட்டிற்குள் வீடியோ கேம் விளையாடச் சென்றுள்ளான். </p><p>
45 நிமிடங்களுக்குப் பிறகு வெஸ்லி வீட்டிற்குள் சென்றபோது, சமையலறைத் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை இரு நாய்களும் சூழ்ந்திருந்தன.
</p><p>சிறுவன் கழுத்தில் ஏற்பட்ட கடுமையான கடி காயங்களால் உயிரிழந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த இரண்டு நாய்களும் தயைக்கொலை செய்யப்பட்டன.</p><p> 
சிறுவன் கேச் கொல்லப்படுவதற்கு முன்பே, இந்த நாய்கள் இரண்டு செல்லப் பிராணிகளைக் கொன்றதுடன், உரிமையாளர் கிரிஸ்டல் உட்பட மூன்று பெரியவர்களைக் கடித்துக் காயப்படுத்தியிருந்தன என்பது விசாரணையில் அம்பலமானது.</p><p> 
ஆல்பர்ட்டா உயர் நீதிமன்ற நீதிபதி எரிக் மேக்லின் பயிற்சியற்ற மற்றும் ஆபத்தான இந்த நாய்களிடமிருந்து சிறுவன் பாதிக்கப்படுவதைத் தடுக்க கிரிஸ்டல் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் கண்டித்திருந்தார். </p><p>
சிறுவனின் தந்தை வெஸ்லி நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது, கேச் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நபர் எனக் கூறி உருக்கமடைந்தார்.
</p><p> எனினும், கிரிஸ்டலைச் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். "கூடுதல் தண்டனையோ அல்லது சிறைவாசமோ ஏற்கனவே நடந்த இழப்பைச் சரிசெய்துவிடாது" என அவர் கூறினார். 
இவ்வழக்கின் இறுதித் தண்டனைத் தீர்ப்பை நீதிபதி எரிக் மேக்லின் இன்று வழங்கவுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T14:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா இணைய உளவு அமைப்பின் புதிய தலைவராக ஸ்காட் ஜோன்ஸ் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/carney-chooses-senior-bureaucrat-scott-jones-1788524000"></link>
            <id>https://canadamirror.com/article/carney-chooses-senior-bureaucrat-scott-jones-1788524000</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் இணைய வழியிலான உளவு அமைப்பான &#039;கமினிகேஷன்ஸ் செக்யூரிட்டி எஸ்டாப்ளிஷ்மென்ட்&#039; தலைவராக மூத்த அரசு அதிகாரி ஸ்காட் ஜோன்ஸை பிரதமர் மார்க் கார்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் இணைய வழியிலான உளவு அமைப்பான 'கமினிகேஷன்ஸ் செக்யூரிட்டி எஸ்டாப்ளிஷ்மென்ட்' தலைவராக மூத்த அரசு அதிகாரி ஸ்காட் ஜோன்ஸை பிரதமர் மார்க் கார்னி நியமித்துள்ளார்.</p><p> 
தற்போது ஓய்வு பெறவுள்ள கரோலின் சேவியருக்குப் பதிலாக ஸ்காட் ஜோன்ஸ் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர் 'ஷேர்டு சர்வீசஸ் கனடா' அமைப்பின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.</p><p> 
அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இணைய வழியில் வெளிநாட்டு உளவுத் தகவல்களைச் சேகரிப்பதும், இணைய அச்சுறுத்தல்களிலிருந்து கனடாவைப் பாதுகாப்பதும் சி.எஸ்.இ அமைப்பின் முதன்மைப் பணியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b6a280b-fffe-490f-abee-250d50fdb7c7/26-6a9ab5e1f0eed.webp' /></p><p> </p><p>
ஸ்காட் ஜோன்ஸ் 2018 முதல் 2021 வரை CSE அமைப்பின் கீழ் இயங்கும் 'கனடியன் சென்டர் ஃபார் சைபர் செக்யூரிட்டி' அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார். </p><p>மேலும், 2008 முதல் 2018 வரை இந்த அமைப்பில் பல்வேறு முக்கியப் பதவிகளை அவர் வகித்துள்ளார். </p><p>
ஓய்வு பெறவுள்ள கரோலின் சேவியர் கனடா நாட்டுக்கு ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைகளைப் பாராட்டிப் பிரதமர் மார்க் கார்னி தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையை கடிக்கும் வாழ்க்கை செலவு; ஐரோப்பாவிற்குப் புலம்பெயரும் பிரித்தானியர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/biting-cost-of-living-britons-emigrating-to-europe-1788509863"></link>
            <id>https://canadamirror.com/article/biting-cost-of-living-britons-emigrating-to-europe-1788509863</id>
            <summary type="text">&amp;nbsp; பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்களுக்குக் குடிபெயரும் ‘காஸ்ட் ஆஃப் லீவிங்’ (Cost of Leaving) கலாச்சாரம் பிரிட்டன்வாசிகளிடையே அதிகரித்து வருகிறமை ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p> 

பாரிஸ், ஸ்டாக்ஹோம் மற்றும் பெர்லின் போன்ற ஐரோப்பிய நகரங்களில் வாழ்க்கைச் செலவு லண்டனை விட கணிசமாகக் குறைவாக இருப்பது சர்வதேச நுகர்வோர் குறியீட்டு (Numbeo Cost of Living Index) ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64fffa31-2370-4d12-b1bd-eb7d7a9d691f/26-6a9a7ea8502ff.webp' /></p><h2>வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல்</h2><p>
</p><p>
சர்வதேச வாழ்வாதாரக் குறியீட்டின் தரவுகளின்படி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் தனிநபர் ஒருவர் சராசரியாக வாழத் தேவையான பணத்தை விட, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 11 சதவீதமும், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் 10 சதவீதமும் குறைவான செலவிலேயே வாழ முடியும் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p> 

குறிப்பாக லண்டனில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் சராசரி வாடகை ஐரோப்பிய தலைநகரங்களை விட 35 முதல் 40 சதவீதம் வரை அதிகமாக உள்ளது, பிரிட்டன் மக்களை பிற நாடுகளை நோக்கித் தள்ளும் முதன்மை காரணியாக மாறியுள்ளது.
</p><p>
வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல், பொதுப்போக்குவரத்து, மின்சாரம் மற்றும் உணவகங்களின் செலவுகளிலும் பிரிட்டனை விட ஐரோப்பிய நகரங்கள் அதிக சேமிப்பை வழங்கி வருகின்றன. </p><p>உதாரணமாக, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் மற்றும் இத்தாலியின் ரோம் ஆகிய நகரங்கள் லண்டனை விட சுமார் 45 சதவீதம் வரை மலிவான வாழ்க்கைச் சூழலை வழங்குவதால், வீட்டில் இருந்தே பணியாற்றும் (Remote Work) இளம் பிரிட்டன் ஊழியர்கள் பெருமளவில் அந்நகரங்களை நோக்கிப் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
</p><p>
கடந்த சில ஆண்டுகளாகப் பிரிட்டனில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், குறைந்த செலவில் உயர்தர வாழ்க்கை முறையைப் (Quality of Life) பெற விரும்புவோருக்குப் பாரிஸ், பர்லின், பார்சிலோனா போன்ற நகரங்கள் சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளன.</p><p>

 பிரிட்டன் அரசு வரி விதிப்புகளையும் வாழ்க்கைச் செலவுகளையும் சீரமைக்கத் தவறினால், நாட்டின் திறமைவாய்ந்த பணியாளர்கள் (Brain Drain) ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்வது மேலும் அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T13:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/officials-urge-parents-to-check-childrens-vaccines-1788523480"></link>
            <id>https://canadamirror.com/article/officials-urge-parents-to-check-childrens-vaccines-1788523480</id>
            <summary type="text">கனடாவில் பள்ளிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குரிய தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்தியுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் பள்ளிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குரிய தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்தியுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அவசரமாக வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>குளிர்காலம் தொடங்கவுள்ள சூழலில், குழந்தைகள் வகுப்பறைகளுக்குள் ஒன்றாக அதிக நேரத்தைச் செலவிடுவார்கள்.
</p><p>இதனால் காய்ச்சல், கோவிட்-19 மற்றும் ஆர்.எஸ்.வி போன்ற நோய்த்தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7011225c-7247-4a32-b4eb-732bcfb7f261/26-6a9ab3d995055.webp' /></p><p> </p><p>
குறிப்பாகத் தட்டம்மை நோய் மீண்டும் பரவுவது குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். </p><p>
அரசின் தரவுகளின்படி, கடந்த ஆண்டில் 2 வயதுக் குழந்தைகளில் 85 சதவீதம் பேர் மட்டுமே தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் ரூபெல்லா தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். </p><p>
தட்டம்மை நோய் பரவாமல் தடுக்கவும், சமூக நோய் எதிர்ப்புச் சக்தியைப் பேணவும் குறைந்தபட்சம் 95 சதவீதக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். </p><p>
ஆனால் தற்போதைய 85 சதவீத விகிதம் இந்த இலக்கை விடக் குறைவாக இருப்பதால், நோய் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது. </p><p>
பெற்றோர் பிள்ளைகளின் தடுப்பூசி குறித்து கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T13:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு லட்சம் ஊழியர்களை வேலை நீக்கும் ஜேர்மன் நிறுவனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/german-company-volkswagen-to-lay-off-100-000-1788527640"></link>
            <id>https://canadamirror.com/article/german-company-volkswagen-to-lay-off-100-000-1788527640</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உலக புகழ் பெற்ற ஜேர்மன் வாகன நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், உலகளாவிய கார் தொழிற்துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மறுசீரமைப்பாக அமையவிருக்கும் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உலக புகழ் பெற்ற ஜேர்மன் வாகன நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், உலகளாவிய கார் தொழிற்துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மறுசீரமைப்பாக அமையவிருக்கும் ஒரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் மொத்தம் 100,000 வேலைகளைக் குறைக்கப் போவதாக வியாழக்கிழமை அறிவித்தது .</p><p>

ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட 50,000 ஆட்குறைப்புகளுக்குக் கூடுதலாக, மேலும் 50,000 வேலைகளைக் குறைக்கும் திட்டத்திற்கு நிர்வாகமும் தொழிற்சங்கங்களும் ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ac5f4ad-b722-4ff9-a77f-49621b36f400/26-6a9ac41a5cfb6.webp' /></p><h2>ஒரு லட்சம் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும்&nbsp;</h2><p>
</p><p>
பொருளாதார யதார்த்தங்களுக்கு ஏற்ப பணியாளர் எண்ணிக்கையை முறையாகச் சீரமைப்பது அவசியம் என்று, ஃபோக்ஸ்வேகன் மட்டுமின்றி ஆடி மற்றும் போர்ஷே ஆகிய நிறுவனங்களையும் உள்ளடக்கிய ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அறிக்கை தெரிவித்தது. </p><p>

மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட 100,000 ஆட்குறைப்புகள், உலகெங்கிலும் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஊழியர்களில் சுமார் 15 சதவீதத்திற்குச் சமமாகும். 2009-ல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திவாலானதாக அறிவித்த பிறகு மேற்கொண்ட 50,000 ஆட்குறைப்புகளை இந்த ஆட்குறைப்பு விஞ்சியுள்ளது.</p><p>

திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு, தொழிற்சங்கங்களும் நிர்வாகமும் பகிரங்கமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டன.</p><p> ஒரு லட்சம் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என்ற தகவல் நிறுவனத்திற்குள் தெரிவிக்கப்படுவதற்கு முன்பே ஊடகங்களில் வெளியானதால், நிர்வாகம் தொழிலாளர்களிடம் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டின.
</p><p>
மேலும், ஹனோவர், எம்டன், ஸ்விக்காவ் மற்றும் நெக்கர்சுல்ம் ஆகிய இடங்களில் உள்ள நான்கு முக்கிய ஜெர்மன் ஆலைகளின் நீண்டகால எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் ஃபோக்ஸ்வேகன் கூறியுள்ளது. </p><p>அவற்றின் மூடல், ஃபோக்ஸ்வேகனின் தாய்நாட்டில் அதன் தொழிற்சாலைகள் முழு அளவில் மூடப்படும் முதல் நிகழ்வாக அமையும்.

அமெரிக்காவின் வரிகள் , சீனாவின் போட்டி மற்றும் மின்சார வாகனங்களுக்கான தேவையில் ஏற்பட்டுள்ள மந்தமான வளர்ச்சி ஆகியவற்றால் , ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் சிக்கலில் உள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T13:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலி பிரதமர் மெலோனி செய்த சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/giorgia-meloni-italy-longest-serving-government-1788520558"></link>
            <id>https://canadamirror.com/article/giorgia-meloni-italy-longest-serving-government-1788520558</id>
            <summary type="text">&amp;nbsp;இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அந்நாட்டின் போருக்கு பிந்தைய வரலாற்றில் தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற புதிய சாதனையை படைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அந்நாட்டின் போருக்கு பிந்தைய வரலாற்றில் தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். </p><p>

அவரது அரசு தொடர்ந்து 1,413 நாட்கள் பதவியில் இருந்து&nbsp;&nbsp; தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2a6a482-f368-4c6b-855e-28de7fedd818/26-6a9aa86f6e50f.webp' /></p><h2>பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து</h2><p>

இத்தாலியில் அரசுகள் அடிக்கடி மாறி வந்த நிலையில், மெலோனியின் ஆட்சி அந்நாட்டுக்கு குறிப்பிடத்தக்க அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்த சாதனைக்காக மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். </p><p>மெலோனியை தனது “நண்பர்” என்று குறிப்பிட்ட மோடி, இத்தாலி மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் இந்த சாதனை வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d2d584c-c553-4352-abb6-158842d9fc71/26-6a9aa87030957.webp' /></p><p>
</p><p>

 மேலும், இந்தியா–இத்தாலி சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் மெலோனியின் நட்பு முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
 
மோடி–மெலோனி சந்திப்புகள் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி கவனம் பெறுகின்றன. குறிப்பாக, இருவரது பெயர்களை இணைத்து உருவான “Melodi” என்ற வார்த்தை இணையத்தில் பிரபலமாகியுள்ளது. </p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T11:13:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவனைக் கடித்துக் கொன்ற நாய்களின் உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் வீட்டுக்காவல் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/11-year-boy-in-sentenced-to-2-years-house-arrest-1788515910"></link>
            <id>https://canadamirror.com/article/11-year-boy-in-sentenced-to-2-years-house-arrest-1788515910</id>
            <summary type="text">கனடாவின் எட்மன்டன் நகரில் கடந்த 2024-ஆம் ஆண்டு 11 வயது சிறுவனைக் கடித்துக் கொன்ற இரு நாய்களின் உரிமையாளரான கிறிஸ்டல் மெக்டொனால்டு என்பவருக்கு நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மன்டன் நகரில் கடந்த 2024-ஆம் ஆண்டு 11 வயது சிறுவனைக் கடித்துக் கொன்ற இரு நாய்களின் உரிமையாளரான கிறிஸ்டல் மெக்டொனால்டு என்பவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் வீட்டுக்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>கட்டுப்பாடற்ற அலட்சியத்தால் உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக கடந்த மே மாதம் இவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டார்.
</p><p>குறித்த நபருக்கு 2 ஆண்டுகள் வீட்டுக்காவல், 200 மணிநேரச் சமூக சேவை மற்றும் வாழ்நாள் முழுவதும் நாய் வளர்க்கத் தடை என்ற அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b23a3031-395a-451a-aa83-a5a2017e7bd2/26-6a9a9647ecadc.webp' /></p><p>
கடந்த ஏப்ரல் 2024-இல், பிரிட்டிஷ் கொலம்பிய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
கழுத்துப் பகுதியில் நாய்கள் பலமாகக் கடித்ததால் சிறுவன் உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. </p><p>தாக்குதல் நடத்திய இரு 'கேன் கோர்சோ' ரக நாய்களும் பின்னர் தயவுக்கொலை செய்யப்பட்டன.
</p><p>இந்தச் சம்பவத்திற்கு முன்னரே, அந்த இரு நாய்களும் வேறு இரண்டு செல்லப் பிராணிகளைக் கொன்றதுடன், மெக்டொனால்டு உட்பட மூன்று பெரியவர்களைக் கடித்துக் காயப்படுத்தியிருந்தன என்பது விசாரணையில் அம்பலமானது.
</p><p>அரசுத் தரப்பில் மெக்டொனால்டுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரப்பட்டது. ஆனால், பிரதிவாதி தரப்பில் மெக்டொனால்டின் பழங்குடியின பின்னணி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. </p><p>
அதில் அவரது சிறுவயது பாதிப்புகள், இனவெறி பாகுபாடுகள் மற்றும் அவற்றுக்கு மத்தியிலும் அவர் தெரிவிக்கும் ஆழ்ந்த மனவருத்தம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி குறைந்தபட்ச தண்டனை கோரப்பட்டது.
</p><p>தற்போது பி.சி-யில் உள்ள பென்டிக்டன் பகுதியில் வசித்து வரும் மெக்டொனால்டு, தன் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T10:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போப் லியோன் XIVபிரான்ஸ் பயணம்; உச்சக்கட்ட பாதுகாப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pope-leo-xiv-s-visit-to-france-maximum-security-1788516131"></link>
            <id>https://canadamirror.com/article/pope-leo-xiv-s-visit-to-france-maximum-security-1788516131</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்தை முன்னிட்டு, “விதிவிலக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்” மேற்கொள்ளப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñe...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்தை முன்னிட்டு, “விதிவிலக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்” மேற்கொள்ளப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்துள்ளார்.
</p><p>
 செப்டெம்பர் மாத இறுதியில் இடம்பெறவுள்ள இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளின்போது, மொத்தமாக 15,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0224bdfd-5557-44f5-8f5e-4abbd4e9f86a/26-6a9a97253d170.webp' /></p><h2>14,000 பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்படுவார்கள்&nbsp;</h2><p>
</p><p>
செப்டெம்பர் மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில்,&nbsp; பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. </p><p>காவல்துறையினர், ஜொந்தார்ம்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் Sentinelle இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவத்தினர் உள்ளிட்ட சுமார் 14,000 பாதுகாப்புப் படையினர் பரிஸில் களமிறக்கப்படுவார்கள் என Laurent Nuñez தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனிடையே, போப் லியோன் XIV-ன் வருகைக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக லூர்த் நகரில் சுமார் 1,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். </p><p>செப்டெம்பர் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சக்கட்டத்தில் இருக்கும் என்றும், போப்பின் பயணத்தை முன்னிட்டு பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-04T09:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதுகு சொறிவதற்கே 300 யுவான் ; சீனாவில் வைரலாகும் வித்தியாசமான தொழில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-unique-profession-goes-viral-in-china-1788514902"></link>
            <id>https://canadamirror.com/article/a-unique-profession-goes-viral-in-china-1788514902</id>
            <summary type="text">சீனாவில் முதுகு சொறியும் சேவையை வணிகமாக மாற்றிய தொழில்முனைவோர் ஒருவர், அதனை வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் ஷென்சென் நகரில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் முதுகு சொறியும் சேவையை வணிகமாக மாற்றிய தொழில்முனைவோர் ஒருவர், அதனை வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சீனாவின் ஷென்சென் நகரில் 32 வயதான ஜாங் சியாவோகியா (Zhang Xiaoqiao) என்பவர் ‘சுமா’ (Suma) என்ற பெயரில் இந்த சேவை நிலையங்களை நடத்தி வருகிறார்.
</p><p>
இங்கு ஒரு மணிநேர அமர்வுக்கு சுமார் 300 யுவான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><p> வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நகங்களைப் பயன்படுத்தி, உடலின் பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் மென்மையாக சொறிந்து விடுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1131db33-002c-4d31-8ffa-9aca7833f176/26-6a9a925736541.webp' /></p><p>இந்த சேவை மன அழுத்தத்தைக் குறைக்கவும், நிம்மதியான தூக்கத்தைப் பெறவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. இந்த சேவையைப் பெறுவோரில் சுமார் 70 சதவீதம் பேர் ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சமூக வலைத்தளத்தில் பார்த்த காணொளி ஒன்றும், தனது சிறுவயது நினைவுகளுமே இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கான உத்வேகத்தை வழங்கியதாக ஜாங் சியாவோகியா தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது இரண்டு கிளைகளுடன் இயங்கி வரும் இந்த நிறுவனம், மாதந்தோறும் சுமார் 100,000 யுவான் வரை வருமானம் ஈட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

வணிகம் தொடர்ந்து இலாபகரமாக இயங்கி வரும் நிலையில், எதிர்காலத்தில் சீனா முழுவதும் 100 கிளைகளைத் திறப்பதை இலக்காகக் கொண்டு நிறுவனம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், முதுகு சொறிவதையும் ஒரு வணிகமாக மாற்றியுள்ளமை தொடர்பாக இணையவாசிகள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T09:45:08+00:00</updated>
        </entry>
    </feed>
