<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-19T04:34:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் இந்தியருக்கு நடத்தப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி ; 17 இடங்களில் கத்திக்குத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-in-us-shocked-by-incident-1789790355"></link>
            <id>https://canadamirror.com/article/indian-in-us-shocked-by-incident-1789790355</id>
            <summary type="text">அமெரிக்காவில் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா் மீது வெள்ளை இனத்தைச் சோ்ந்த ஒருவா் 17 முறை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினாா். இதில் படுகாயமடைந்த அவா்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா் மீது வெள்ளை இனத்தைச் சோ்ந்த ஒருவா் 17 முறை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினாா்.</p><p> இதில் படுகாயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e765c029-49d5-4690-a429-b8a24355a08f/26-6aae0895413c2.webp' /></p><p>

அமெரிக்காவில் வெள்ளை இனத்தவா் ஆப்பிரிக்க மற்றும் தெற்காசிய பிராந்தியத்தைச் சோ்ந்தவா்கள் மீது இனரீதியாகவும், நிறரீதியாகவும் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
</p><p>

பென்சில்வேனியா மாகாணத்தில நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அங்குள்ள ஊடகங்களில் வெளியான செய்தியில் பென்சில்வேனியாவின் தெற்கு வியோமிங் பகுதியில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.</p><p> தாக்குதலுக்கு உள்ளானவா் இந்தியாவைச் சோ்ந்த சீக்கியா். லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த அவரை வழிமறித்த ஆண்ட்ரூ கிரிஸ் பஸ்டாக் என்ற நபா் கத்தியால் 17 இடங்களில் அவரைக் குத்தியுள்ளாா். </p><p>&nbsp;இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து தாக்குதலுக்கு உள்ளானரை மீட்டு விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
</p><p>
தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய ஆண்ட்ரூ கிரிஸ், அப்பகுதி மக்கள் உதவியுடன் கைது செய்யப்பட்டாா். அவா் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யபபட்டுள்ளன.</p><p>தெற்காசியாவைச் சோ்ந்தவா்கள் மீதான இனரீதியான வெறுப்புணா்வு அடிப்படையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-09-19T03:59:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த அத்தையைக் கழுத்தறுத்துக் கொன்ற 7 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/7-year-old-boy-slits-own-aunt-throat-and-kills-her-1789747083"></link>
            <id>https://canadamirror.com/article/7-year-old-boy-slits-own-aunt-throat-and-kills-her-1789747083</id>
            <summary type="text">பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த அத்தையை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த அத்தையை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சென்-மோர்-டெ-போஸ் (Saint-Maur-des-Fossés) நகரில் இன்று வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 18) அதிகாலை சுமார் 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். </p><p>அப்போது, வீதியில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், மற்றொரு பெண் துணியொன்றைப் பயன்படுத்தி அவரது கழுத்துப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து வெளியேறிய இரத்தத்தை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்ததையும் காவல்துறையினர் அவதானித்துள்ளனர்.
</p><p>
அவர்களுக்கு அருகில் சிறுவன் ஒருவனும் நின்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d1c20f-cd37-4965-af6c-daec0b1c07e3/26-6aad5f8ce5041.webp' /></p><p>பலத்த காயமடைந்திருந்த பெண்ணுக்கு அவசரகால மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முயன்ற போதிலும், அதிகளவான இரத்தப்போக்கு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவர் நதியா எஸ். (Nadia S.) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நதியாவுக்கு உதவி செய்ய முயன்ற பெண் அவரது சொந்த சகோதரியான யாஸ்மினா எஸ். (Yasmina S.) என்பதும், அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தது யாஸ்மினாவின் 7 வயது மகன் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p>விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, வியாழக்கிழமை இரவு யாஸ்மினாவின் வீட்டிற்கு நதியா தங்குவதற்காக சென்றுள்ளார்.
</p><p>
இதன்போது, நள்ளிரவு வேளையில் தலைமுடியை நேராக்குவது (Hair straightening) தொடர்பாக இரு சகோதரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வாக்குவாதம் பின்னர் கடும் சண்டையாக மாறியதுடன், நதியா தனது சகோதரியான யாஸ்மினாவை தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்தச் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த யாஸ்மினாவின் 7 வயது மகன், திடீரென வீட்டின் குளியலறைக்குச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு வந்து நதியாவின் கழுத்துப் பகுதியில் குத்தியதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கத்திக்குத்துக்கு உள்ளான நதியா, உதவி கோரி வீட்டிலிருந்து வெளியேறி வீதியை நோக்கி ஓடியுள்ளார். </p><p>எனினும், சிறிது தூரம் சென்ற நிலையில் அவர் இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்ததாகவும், பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97667ea-1e17-479b-b57e-3e128d426a6c/26-6aad5f8da14eb.webp' /></p><p>சம்பவத்தின் போது யாஸ்மினாவின் இடது மணிக்கட்டிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் அவசரகால மருத்துவக் குழுவினர் சிகிச்சை வழங்கியுள்ளனர்.
</p><p>
அதேவேளை, 7 வயது சிறுவனின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>எனினும், சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவன் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

ஒரு குடும்பத்திற்குள் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறு, எதிர்பாராத வகையில் வன்முறையாக மாறி, இறுதியில் 7 வயது சிறுவனின் கைகளால் அவரது சொந்த அத்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T01:04:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் பரபரப்பு ; ஐரோப்பிய அதிகாரிகளை குறிவைக்கும் ரஷ்ய ட்ரோன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-drones-targeting-european-officials-ukrane-1789771019"></link>
            <id>https://canadamirror.com/article/russian-drones-targeting-european-officials-ukrane-1789771019</id>
            <summary type="text">கீவ் நகருக்கு வந்து செல்லும் உக்ரைன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு ரஷ்யா ஆளில்லா வானூர்திகள் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீவ் நகருக்கு வந்து செல்லும் உக்ரைன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு ரஷ்யா ஆளில்லா வானூர்திகள் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
</p><p>
ரஷ்யாவின் தரைவழிப் போர் தடுமாறி வரும் சூழலில் இந்தத் தாக்குதல்கள் வந்துள்ளன. </p><p>உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்யா முன்னர் கைப்பற்றியிருந்த 85 சதுர கிலோமீட்டர் (33 சதுர மைல்) நிலப்பரப்பை, லைமன் நகரைக் கைப்பற்றும் முயற்சியின் போது இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f9e79b0-bf9a-4081-90d9-dd7414c51d8d/26-6aadbd0d3efd8.webp' /></p><p>செப்டம்பர் 13 அன்று, போலந்து எல்லையிலிருந்து 5 கி.மீ (3 மைல்) தொலைவில் உக்ரைனின் தொடருந்து இயந்திரம் மீது ரஷ்ய ஆளில்லா வானூர்திகள் தாக்குதல் நடத்தின.</p><p>

கீவில் நடைபெற்ற யால்டா ஐரோப்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு வோர்சாவுக்குத் திரும்பிய ஐரோப்பிய அதிகாரிகளை இது ஆபத்தில் ஆழ்த்தியது.
</p><p>
பிரித்தானின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய அரசியல், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த தொடருந்தில் பயணம் செய்தனர்.</p><p>

"இந்த சம்பவம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் கதவுகளை நேரடியாகத் தட்டும் புதினின் பயங்கரவாதம்" என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மற்றொரு சம்பவத்தில், செப்டம்பர் 8 அன்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸியின் வானூர்தி கிசினாவ் நகரிலிருந்து புறப்படத் தயாரானபோது ரஷ்ய ஆளில்லா வானூர்தி ஒன்று மோல்டோவா வான்வெளிக்குள் நுழைந்து வானூர்தி போக்குவரத்தைத் தாமதப்படுத்தியது.</p><p>

இந்த தாக்குதல் ஸெலென்ஸ்கியின் வானூர்தியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும், மோல்டோவா அதனை உறுதிப்படுத்தவில்லை.</p>]]></content>
            <updated>2026-09-18T22:37:06+00:00</updated>
        </entry>
    </feed>
