<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-31T06:26:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crude-oil-prices-fall-in-the-world-market-1785478875"></link>
            <id>https://canadamirror.com/article/crude-oil-prices-fall-in-the-world-market-1785478875</id>
            <summary type="text">உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (31) சற்று சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அதன்படி, WTI கச்சா எண்ணெய் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (31) சற்று சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

 

அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.71% குறைந்து 82.16 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
 

ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 1.16% குறைந்து 88 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
 

அத்துடன், முர்பான் (Murban) ரக கச்சா எண்ணெய் விலையும் 2.60% சரிவடைந்துள்ளதுடன், அதன்படி அவ்வகையான கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.71 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be458f06-66c9-42ba-aa39-fce18230e66f/26-6a6c3edcbd9b6.webp' /></p><p>இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை சூத்திரத்திற்கு அமைவாக மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) பெரும்பாலும் மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p>

 

அக்கூட்டுத்தாபனம் தற்போது பெற்றுள்ள இலாபத்தைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலை திருத்தத்தை மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் எதுவும் இல்லை என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
</p><p>
 

அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை காரணமாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-31T06:21:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் போர் முடிவு வருவதாக ட்ரம்ப் அறிவிப்பு; ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்குமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-announces-an-end-to-the-war-in-gaza-1785478341"></link>
            <id>https://canadamirror.com/article/trump-announces-an-end-to-the-war-in-gaza-1785478341</id>
            <summary type="text">&amp;nbsp; நீண்டகாலமாக நீடித்து வந்த காசா போரை முடிவுக்குக் கொண்டுவர &#039;காசா அமைதித் திணைக்களம் &#039; ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வரைவு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீண்டகாலமாக நீடித்து வந்த காசா போரை முடிவுக்குக் கொண்டுவர 'காசா அமைதித் திணைக்களம் ' ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வரைவு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>


எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களைப் படிப்படியாக ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f46ac9f6-008e-4350-a084-c59a88aa4480/26-6a6c3cc6d6409.webp' /></p><p>



காசாவின் நிர்வாகம் புதிய பாலஸ்தீன இடைக்கால நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். மேலும், இஸ்ரேலியப் படைகள் காசாவிலிருந்து வெளியேறிய பின், சர்வதேச அமைதிப்படை மற்றும் புதிய பாலஸ்தீன பொலிஸார் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கும் என தெரியவந்துள்ளது.</p><p>



இஸ்ரேல் தனது படைகளை முழுமையாக திரும்பப் பெற்ற பிறகே ஆயுதங்கள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதே வேளையில், ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்குமா என்பதில் இஸ்ரேலுக்குச் சந்தேகம் உள்ளது.</p><p>



இந் நிலையில் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்பட்டாலும், இதன் முழுமையான அமுலாக்கம் இரு தரப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T06:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-announces-attack-on-us-bases-1785477449"></link>
            <id>https://canadamirror.com/article/iran-announces-attack-on-us-bases-1785477449</id>
            <summary type="text">குவைத் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.

ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் கெஷ்ம் தீவில் அமெரிக்கா மேற்கொண்ட குண்டுவீச்சுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.</p><p>

கெஷ்ம் தீவில் அமைந்திருந்த கட்டிடம் ஒன்றின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய குண்டுவீச்சில், கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/013be207-e5b4-4bec-b229-5385ca177168/26-6a6c394a7cd9f.webp' /></p><p>மேலும், ஜஞ்சான் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
அத்துடன், ஈரானின் பல பகுதிகளில் அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, வடக்கு குவைத்தில் அமைந்துள்ள சீன நிறுவனமொன்றின் கட்டடம் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இச்சம்பவங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்புகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-31T05:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்துக்குள் இளைஞனின் விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/katunayake-garment-factory-bus-bizarre-decision-1785476502"></link>
            <id>https://canadamirror.com/article/katunayake-garment-factory-bus-bizarre-decision-1785476502</id>
            <summary type="text">கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

மாஸ்பொத, போகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவர் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் வான் சாரதியாகப் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b85f85d8-f64b-4e6d-a078-2d7f5221777f/26-6a6c3598468b0.webp' /></p><p>நேற்று நண்பகல் வேளையில், தொழிற்சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றிற்குள் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
எவரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குறித்த பேருந்துக்குள் சென்று அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கட்டுநாயக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குலதுங்கவின் பணிப்புரையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுரவீரவின் மேற்பார்வையில் பொலிஸ் கான்ஸ்டபிள் திசாநாயக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T05:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏதிலிகளை தடுக்க தேசிய அவசரநிலையை அறிவித்த ஸ்பெயின்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spain-declares-national-emergency-to-halt-migrants-1785475617"></link>
            <id>https://canadamirror.com/article/spain-declares-national-emergency-to-halt-migrants-1785475617</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஆப்பிரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஸ்பெயின் சியூட்டா (Ceuta) பகுதியின் அதிகாரிகள், மொரோக்கோ எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஆப்பிரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஸ்பெயின் சியூட்டா (Ceuta) பகுதியின் அதிகாரிகள், மொரோக்கோ எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக தேசிய அவசரநிலையை அறிவித்தனர்.
</p><p>
 எல்லையைப் பாதுகாக்க இராணுவத்தை அனுப்புமாறு வியாழக்கிழமை (31) மாட்ரிட் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44e0e401-93cf-48d8-8756-cd786d4bcd77/26-6a6c322357a8c.webp' /></p><p>
</p><p>
மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் பிரதேசங்களைப் பிரிக்கும் கடல்தடுப்புச் சுவர்களைச் சுற்றி நடந்து செல்லவும், எல்லை வேலியை ஏறிக் கடக்கவும் மக்கள் கூட்டம் முயற்சிக்கும் காட்சிகள் காணொளிகளில் வெளியாகியுள்ளது.
</p><p>
இதனையடுத்து, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), நிலைமையை சமாளிக்க “உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவளிப்பதற்காக, தங்கள் ஆயுதப் படைகளைச் சேர்ந்த பணியாளர்களைச் சியூட்டாவிற்கு (Ceuta) அனுப்பவுள்ளதாக ஸ்பெயினின் உள்துறை அமைச்சு வியாழக்கிழமை பிற்பகுதியில் தெரிவித்தது.
</p><p>
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மற்றொரு ஸ்பானியத் தன்னாட்சி நகரமான மெலில்லாவுடன் (Melilla) சேர்த்து, சியூட்டா (Ceuta) நகரமும் ஆப்பிரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே நில எல்லையாகத் திகழ்கிறது.

இந் நிலையில் ஐரோப்பாவை அடைய முற்படும் புலம்பெயர்ந்தோர் எல்லை வழியாக நுழைய முயற்சிக்கும் நிகழ்வுகள், அவ்வப்போது இவ்விரு நகரங்களிலும் அதிகரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-31T05:24:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் கடும் வெப்பம் ; இதுவரை 9,800 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heatwave-in-germany-9-800-deaths-so-far-this-year-1785473880"></link>
            <id>https://canadamirror.com/article/heatwave-in-germany-9-800-deaths-so-far-this-year-1785473880</id>
            <summary type="text">ஜேர்மனியில் இந்த ஆண்டில் இதுவரை நிலவிய வெப்ப அலைகள் மற்றும் கடும் வெப்பநிலை காரணமாக சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் ரொபர்ட் கோச் நிறுவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் இந்த ஆண்டில் இதுவரை நிலவிய வெப்ப அலைகள் மற்றும் கடும் வெப்பநிலை காரணமாக சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் ரொபர்ட் கோச் நிறுவனம் (RKI) தெரிவித்துள்ளது.</p><p>ஜேர்மனியின் பல பகுதிகளில் மீண்டும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்நிறுவனம் வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9beb3352-910e-470b-8841-1926bef9cb24/26-6a6c2b5a3d732.webp' /></p><p>

வெப்பம் தொடர்பான உயிரிழப்புகளில் அதிகமானோர் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்கள் என ரொபர்ட் கோச் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

மேலும், வாராந்திர சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸைத் தாண்டும் காலப்பகுதிகளில் உயிரிழப்பு வீதம் கணிசமாக அதிகரிப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்த கோடைகாலத்தில் ஏற்படும் வெப்ப அலைகள் மேலும் அதிக உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ள ரொபர்ட் கோச் நிறுவனம், குறிப்பாக வயோதிபர்கள் மற்றும் வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T04:58:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய அமைதி ஒப்பந்தம் ; ட்ரம்ப் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-proposes-new-peace-deal-to-end-gaza-war-1785468447"></link>
            <id>https://canadamirror.com/article/trump-proposes-new-peace-deal-to-end-gaza-war-1785468447</id>
            <summary type="text">காஸா பகுதியில் செயற்படும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும் ஏனைய ஆயுதக் குழுக்களும் முழுமையாக நிராயுதபாணியாக்கப்படுவதற்கான &quot;சமாதான சபை&quot; (Board of Peace) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸா பகுதியில் செயற்படும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும் ஏனைய ஆயுதக் குழுக்களும் முழுமையாக நிராயுதபாணியாக்கப்படுவதற்கான "சமாதான சபை" (Board of Peace) உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
தனது Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல்–காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள "ட்ரம்ப்பின் 20 அம்சத் திட்டத்தை" நடைமுறைப்படுத்துவதில் இந்த உடன்பாடு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b14d1402-e90f-4d16-a407-ef944028237d/26-6a6c1620d3e4a.webp' /></p><p>

இந்த ஒப்பந்தம் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், ஹமாஸ் மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களின் நிராயுதபாணியாக்கல் முன்னேறியபோது, இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக காஸா பகுதியிலிருந்து வெளியேறும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையினரும் புதிதாக அமைக்கப்படவுள்ள பாலஸ்தீன பொலிஸ் படையினரும் இணைந்து காஸாவின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இந்த உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளில் இடைத்தரகர்களாகச் செயற்பட்ட எகிப்து, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.</p><p>

அத்துடன், புதிய பாலஸ்தீன அரசாங்கத்தின் கீழ் காஸா நிர்வகிக்கப்படுவதற்கான அடித்தளமாக இந்த உடன்பாடு அமையும் என்றும், அந்த அரசாங்கம் "Board of Peace" அமைப்புடன் இணைந்து பாலஸ்தீன மக்களின் நலனுக்காகச் செயற்படுவதோடு, இஸ்ரேலின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f117a5ac-8766-4186-808b-0a490adc8946/26-6a6c1621a8889.webp' /></p><p>இதனிடையே, கெய்ரோவில் இடைத்தரகர்களுக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும் இடையில் அமெரிக்காவின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள காஸா அமைதித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
எனினும், முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் போதுமானதாக இல்லை என இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

அதேவேளை, வியாழக்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இரு சிறுவர்கள் உட்பட குறைந்தது ஆறு பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-31T03:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் ஆசிரியையின் விபரீத செயலால் பரபரப்பு ; தன்னை தானே சித்திரவதை செய்ய 4,000 டொலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785457342"></link>
            <id>https://canadamirror.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785457342</id>
            <summary type="text">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இசை ஆசிரியை, கடுமையான மன உளைச்சல் காரணமாக விசித்திரமான இணையதளம் ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த நபருடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் ஒரு விபரீதமான முடிவை நோக்கி தள்ளியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d476b2e8-630c-41b1-b163-718f867cd963/26-6a6beac0854bb.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலை குற்றச்சாட்டுகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

விசாரணையில் வெளிவந்துள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, தன்னை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்ய வேண்டும் என்பதற்காக, சோனியா அந்த அமெரிக்க நபருக்கு 4,000 டாலர்களை கொடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அமெரிக்காவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து அந்த நபர் குறித்த ஆசிரியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். </p><p style="text-align: justify; ">அப்போது ஆசிரியைக்கு தனது தவறு புரிய வந்துள்ளது. உடனே, தனது தோழி ஒருவருக்கு, ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அடுத்த சில நாட்களில் ஆசிரியை இங்கிலாந்து திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify; ">அப்போது புளோரிடாவின் மேரியன் கவுண்டி காட்டுப் பகுதியில், 4 முறை கத்தியால் குத்தப்பட்டு, ஆழமற்ற ஒரு குழியில் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">

இதனை தொடர்ந்து, சோனியாவின் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற 53 வயதான சந்தேகநபரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
இந்த வினோதமான கொலை வழக்கு தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T01:10:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து நடத்தப்படும் தாக்குதல்கள் ; அதிரடி கொடுக்கும் அமெரிக்கப் படைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-forces-launch-major-military-operation-1785458474"></link>
            <id>https://canadamirror.com/article/us-forces-launch-major-military-operation-1785458474</id>
            <summary type="text">ஜோர்தானில் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.

சவூதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்தானில் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
சவூதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது கடந்த சில நாள்களாக ஈராக்கிலிருந்து 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இதற்குப் பதிலடியாக ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களைக் குறிவைத்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ed342e4-493f-4a41-bd1f-5eab69777a23/26-6a6bef2b9efa4.webp' /></p><p> </p><p>தொடர்ந்து ஜோர்தானில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
</p><p>
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜோர்தானில் உள்ள விமானப் படைத் தளம் மற்றும் அங்குள்ள அமெரிக்க மத்திய படைப்பிரிவின் தலைமையகத்தைக் குறிவைத்து ஈரான் பல ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலில் 5 ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து, ஜோர்தான் ராணுவம் சுட்டுவீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 


இந்த நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் தெற்குப் பகுதியைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல்களைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவில் மூன்று முறை வெடிகுண்டு சத்தம் கேட்டதாகவும், அங்கு குடியிருப்பு பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
</p><p>

 இருப்பினும் இந்தத் தாக்குதல் சேதம் மற்றும் உயிர்ப்பலிகள் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-31T00:41:46+00:00</updated>
        </entry>
    </feed>
