<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-13T23:32:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது ; ஈரான் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strait-of-hormuz-completely-closed-iran-announces-1786662961"></link>
            <id>https://canadamirror.com/article/strait-of-hormuz-completely-closed-iran-announces-1786662961</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை தடையின்றி இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை தடையின்றி இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் நடைபெறும் அனைத்து நகர்வுகளையும் IRGC கடற்படை முழுமையாகக் கண்காணித்து வருவதாகவும், தமது அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் அந்தப் பாதையில் சுதந்திரமாக இயங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p>இதேவேளை, ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாகவும், அமெரிக்க கடற்படை அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாத்து வருவதாகவும் அமெரிக்க தரப்பு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/741d1d6b-5ac2-4457-8af1-a300988f45bf/26-6a7e50338372c.webp' /></p><p>அண்மைய தகவல்களின்படி, அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள பாதையில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து மிகவும் குறைந்த அளவிலேயே இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கு முன்னர் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை முடிவுக்கு வருதல், பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுதல் உள்ளிட்ட பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. </p><p>ஈரான் மற்றும் ஓமான் இடையே கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்பான வழித்தடம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், அந்த உடன்பாடு மட்டும் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்கு போதுமானதல்ல என ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எரிசக்தி வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகும். </p><p>இதன் ஊடான கப்பல் போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளமை உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் எரிசக்தி சந்தைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

எனவே, “நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது” என்ற ஈரானின் நிலைப்பாட்டுக்கும், “நீரிணை திறந்துள்ளது” என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கும் இடையே தொடர்ந்தும் முரண்பாடு நிலவி வருகிறது. </p><p>நடைமுறையில், நீரிணை வழியாக கப்பல்கள் செல்வது முற்றிலும் நிறுத்தப்படவில்லை என்றாலும், வழக்கமான அளவுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து கடுமையாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது</p>]]></content>
            <updated>2026-08-13T23:16:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/three-people-executed-same-day-us-after-16-years-1786661874"></link>
            <id>https://canadamirror.com/article/three-people-executed-same-day-us-after-16-years-1786661874</id>
            <summary type="text">அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டென்னசி, அலபாமா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மூன்று மாகாணங்களில் இந்த மரண தண்டனைகள் திட்டமிடப்பட்டிருந்தன.
</p><p>
டென்னசியில் 66 வயதான அந்தோணி டேரல் ஹைன்ஸ், ஹோட்டல் பணியாளரான கேத்தரின் ஜென்கின்ஸை 1985ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3945751-b01e-4871-8b93-7a8505628f53/26-6a7e4bf59af0e.webp' /></p><p>ஓக்லஹோமாவில் 70 வயதான கார்லோஸ் குயெஸ்டா-ரோட்ரிக்ஸ், 2003ஆம் ஆண்டு தனது காதலியை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p>

அலபாமாவில் 42 வயதான ஜெரமி வில்லியம்ஸ், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் மரண தண்டனைக்கு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார். </p><p>இந்த மூவருக்கும் மரண தண்டனை விஷ ஊசி மூலம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.</p><p>

அமெரிக்காவில் இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி ஒரே நாளில் மூன்று மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருந்தன. </p><p>அதன்பின்னர் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறான மூன்று மரண தண்டனைகள் ஒரே நாளில் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-13T22:58:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர் ; 2 வீரர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/military-helicopter-crashes-us-2-soldiers-killed-1786660731"></link>
            <id>https://canadamirror.com/article/military-helicopter-crashes-us-2-soldiers-killed-1786660731</id>
            <summary type="text">அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

டெக்சாஸ் மாநிலம் சலாடோ பகுதிக்கு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>

டெக்சாஸ் மாநிலம் சலாடோ பகுதிக்கு அருகே அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான தாக்குதல் வகை அபாச்சி ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fd11f62-791a-4f4e-8295-6dd88e805f0b/26-6a7e477ccea8f.webp' /></p><p>

விபத்தைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் தீப்பற்றி வெடித்துச் சிதறியதுடன், வயல்வெளியில் இருந்த புற்களிலும் தீ பரவியுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். </p><p>எனினும், தீ சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு ராணுவ வீரர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>அதேவேளை, இந்த விபத்தில் வேறு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. </p><p>விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இந்நிலையில், உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T22:38:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாயில் வேற்றுகிரகவாசிகள் வாழ்கின்றனரா... நாசா புகைப்படம் கூறுவது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/are-aliens-living-on-mars-what-nasa-photo-say-1786660146"></link>
            <id>https://canadamirror.com/article/are-aliens-living-on-mars-what-nasa-photo-say-1786660146</id>
            <summary type="text">செவ்வாய் கோளில் இருந்து நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செவ்வாய் கோளில் இருந்து நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கடந்த ஜூலை மாதம் செவ்வாய் கோளின் மவுண்ட் ஷார்ப் பகுதியைச் சேர்ந்த பல புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f45c69a-0d8a-4e65-8eac-8a36250aad56/26-6a7e4534c9d2e.webp' /></p><p>இந்தப் புகைப்படங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பெரிய படத்தில், பாறைப் பகுதியில் கதவு போன்ற தோற்றமுடைய அமைப்பு ஒன்று தென்படுவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனை அடிப்படையாகக் கொண்டு, செவ்வாய் கோளில் வேற்றுகிரகவாசிகளின் நாகரிகம் இருந்திருக்கலாம் அல்லது இன்னும் இருக்கலாம் என்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
</p><p>
கியூரியாசிட்டி ரோவர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கோளின் கேல் பள்ளத்தில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, சுமார் 3 மைல் உயரம் கொண்ட மவுண்ட் ஷார்ப் பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் மண்ணை ஆய்வு செய்து வருகிறது.
</p><p>
பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கோளில் நுண்ணுயிர்கள் வாழ்ந்தனவா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
</p><p>
இந்நிலையில், புகைப்படத்தில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு குறித்து பறக்கும் தட்டு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் ஸ்காட் வேரிங், அது உண்மையில் ஒரு கதவு போன்றே காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08d0f8b8-fdeb-46e9-b0dd-ce29a6d48e38/26-6a7e45357cc80.webp' /></p><p>அந்த அமைப்பு சுமார் 6.6 அடி உயரமும் 3.3 அடி அகலமும் கொண்டதாக அவர் கூறியுள்ளார். எனினும், இந்த அளவீடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
</p><p>
இதனிடையே, இந்தக் காட்சி தொடர்பில் பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்ற போதிலும், செவ்வாய் கோளில் வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்ததற்கான அல்லது பழமையான நாகரிகம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என நாசா தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், செவ்வாயில் உயிரினங்கள் அல்லது பண்டைய நாகரிகம் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இதனால், தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு உண்மையில் என்ன என்பது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், அதனை வேற்றுகிரகவாசிகளின் இருப்புக்கான ஆதாரமாகக் கருத முடியாது என விஞ்ஞான ரீதியில் சுட்டிக்காட்டப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T22:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுமதியின்றி காரை எடுத்துச் சென்று விபத்து: 13 வயது சிறுமியை கைது செய்தது கனடா காவல்துறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/13-year-old-crashes-family-vehicle-after-nanaimo-1786643409"></link>
            <id>https://canadamirror.com/article/13-year-old-crashes-family-vehicle-after-nanaimo-1786643409</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நானைமோ நகரில், பெற்றோருக்குத் தெரியாமல் குடும்ப காரை எடுத்துக்கொண்டு, அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட இருமடங்கிற்கும் அதிகமான வேகத்தில் ஓட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நானைமோ நகரில், பெற்றோருக்குத் தெரியாமல் குடும்ப காரை எடுத்துக்கொண்டு, அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட இருமடங்கிற்கும் அதிகமான வேகத்தில் ஓட்டிச் சென்று சாக்கடையில் மோதி விபத்துக்குள்ளாக்கிய 13 வயது சிறுமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>ஜூலை 25 அன்று அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. டெர்மினல் அவென்யூ பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நானைமோ போலீஸ் அதிகாரி ஒருவர், மணிக்கு 50 கி.மீ வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பகுதியில், கார் ஒன்று 118 கி.மீ வேகத்தில் அதிவேகமாகச் செல்வதைக் கண்டறிந்தார்.</p><p> 
காரை நிறுத்த அதிகாரி முயன்றபோது, அது அதிவேகத்தில் தப்பிச் சென்றது. இதையடுத்து, காரின் அதிவேகம் மற்றும் ஆபத்தான பயணத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அதனைப் பின்தொடர்ந்து துரத்த வேண்டாம் என காவல்துறை முடிவு செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fd28ae0-8635-4fc9-97f6-a44c936db4e0/26-6a7e03d399d15.webp' /></p><p> </p><p>
அதிவேகம் மற்றும் காரை ஓட்டிய விதம் காரணமாக நாங்கள் அதனைப் பின்தொடர வேண்டாம் என முடிவு செய்தோம் எனபொலிஸார் தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில், அந்த கார் அருகிலுள்ள சாக்கடையில் மோதி விபத்துக்குள்ளானதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. </p><p>சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முயன்ற சிறுமியைத் தேடிக் கண்டுபிடித்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
காரை ஓட்டியவர் வெறும் 13 வயது சிறுமி என்பதைக் கண்டு அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.</p><p> காரில் அந்த சிறுமி மட்டுமே இருந்தாரென்றும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுச் சொத்துக்கள் எதுவும் சேதமடையவில்லை. சேதமடைந்த கார் மீட்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T20:27:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[35 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளி: அமெரிக்காவில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-wanted-for-35-years-on-sexual-assault-1786644986"></link>
            <id>https://canadamirror.com/article/man-wanted-for-35-years-on-sexual-assault-1786644986</id>
            <summary type="text">கனடாவின் ஹேமில்டன் நகரக் காவல்துறையால் கடந்த 35 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த 64 வயது நபர் ஒருவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குடிவரவு மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஹேமில்டன் நகரக் காவல்துறையால் கடந்த 35 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த 64 வயது நபர் ஒருவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
கைது செய்யப்பட்ட சார்லஸ் பீட்டர் பில்லோன் என்ற 64 வயது நபர், கலிபோர்னியாவின் சாண்டா குரூஸ் பகுதியில் பிடிபட்டதாக ஆகஸ்ட் 4 அன்று குடிவர மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளை உறுதிப்படுத்தியது. </p><p>
இவர் 1991 ஆம் ஆண்டு முதல் கனடாவில் இருந்து தப்பி ஓடிய தலைமறைவுக் குற்றவாளியாக இருந்துவந்துள்ளார்.
பில்லோன் மீது கனடா நாடு தழுவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56b0e7b7-a8b5-4a0e-b53c-825e19d77110/26-6a7e09fbebdd2.webp' /></p><p>
</p><p> 2 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 2 பாலியல் குறுக்கீடு சிறுவர் பாலியல் அத்துமீறல்) வழக்குகள்
ஆகியவை நிலுவையில் உள்ளன. குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் தவிர, திருட்டுச் சொத்துக்களை வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளிலும் இவர் தண்டனை பெற்றவர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
தற்போது பில்லோன் அமெரிக்க குடிவரவுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்; அவரை கனடாவுக்குத் நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இது குறித்து ஹேமில்டன் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பில்லோனின் வழக்கு தொடர்பாகக் அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். இருப்பினும், தற்போதைக்கு முறையான ஒப்படைப்பு நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்படவில்லை என்றும் காவல்துறை மின்னஞ்சல் மூலம் விளக்கமளித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T18:22:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் முக்கிய சிறுவர் சுரண்டல் குற்றச்சாட்டில் 46 வயது நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/historic-child-exploitation-assault-charges-1786644062"></link>
            <id>https://canadamirror.com/article/historic-child-exploitation-assault-charges-1786644062</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் காக்ரேன் பகுதியில், நெருங்கிய துணைக்கு எதிரான வன்முறை தொடர்பாகத் தொடங்கப்பட்ட விசாரணை, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறுவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் காக்ரேன் பகுதியில், நெருங்கிய துணைக்கு எதிரான வன்முறை தொடர்பாகத் தொடங்கப்பட்ட விசாரணை, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறுவர் சுரண்டல் மற்றும் பாலியல் குற்ற வழக்ககாக உருவெடுத்துள்ளது. </p><p>
இது தொடர்பாக 46 வயது நபரைக் காவல் துறையினர் கைது செய்து பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மே 17 அன்று, முன்னாள் துணைவியார் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஒன்டாரியோ மாகாணக் காவல் துறை விசாரணையைத் தொடங்கியது.</p><p>
 இந்த விசாரணையில், பாதிக்கப்பட்டவர் சிறுமியாக இருந்த காலம் முதலே பல ஆண்டுகளாக இந்த அத்துமீறல்களும் தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது அம்பலமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc1fb474-a874-4498-b32c-adf2149c61b6/26-6a7e065fec34c.webp' /></p><p>
</p><p>கைது செய்யப்பட்ட நபர் மீது பின்வரும் பலத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
</p><p>பாலியல் சுரண்டல், கணினி மூலம் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை வலைவீசி ஈர்த்தல், சட்டவிரோதமாகச் சிறைப்பிடித்தல், குற்றவியல் துன்புறுத்தல் மற்றும் உளவு பார்த்தல், பாலியல் குறுக்கீடு மற்றும் குடும்பத் தாக்குதல், கடுமையான தாக்குதல் மற்றும் 3 பிரிவுகளின் கீழ் பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>பிணை விசாரணைக்குப் பிறகு, காக்ரேனில் உள்ள ஒன்டாரியோ நீதிமன்றத்தில் ஆஜராகும் நிபந்தனையுடன் அந்த நபர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.
விசாரணை தீவிரமடைந்த நிலையில், பழைய பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான கூடுதல் ஆதாரங்களைக் காவல்துறையினர் சேகரித்தனர். </p><p>அதன் தொடர்ச்சியாக, டிஜிட்டல் சேமிப்பக சாதனம் ஒன்றைக் கைப்பற்றி, பொலிஸாரின் டிஜிட்டல் தடயவியல் குழு பகுப்பாய்வு செய்தது.
இதன் அடிப்படையில், ஜூலை 28 அன்று அதே நபர் மீது குழந்தை ஆபாசப் படங்களை உருவாக்குதல், வைத்திருத்தல் மற்றும் வெளியிடுதல் ஆகிய கூடுதல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
</p><p>பாதிக்கப்பட்டவர்கள் உதவி மற்றும் வழிகாட்டுதலுக்கு காக்ரேன் மாவட்டப் பாதிக்கப்பட்டோர் சேவை மையத்தின் 24 மணி நேர அவசர உதவி எண்ணை (1-877-264-4208) தொடர்பு கொள்ளலாம் என்றும், அவசர நிலைகளில் உடனடியாக 911 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T18:06:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஈ-பைக் பயன்பாடு அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/0-children-died-as-a-result-of-e-scooter-incidents-1786642931"></link>
            <id>https://canadamirror.com/article/0-children-died-as-a-result-of-e-scooter-incidents-1786642931</id>
            <summary type="text">&amp;nbsp;மின்சார ஸ்கூட்டர் மற்றும் மின்சார பைக் பயன்பாடு கனடாவில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவற்றுடன் தொடர்புடைய விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மின்சார ஸ்கூட்டர் மற்றும் மின்சார பைக் பயன்பாடு கனடாவில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவற்றுடன் தொடர்புடைய விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களும் கணிசமாக உயர்ந்துள்ளது தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>ஹாலிஃபாக்ஸ் நகரின் மையப்பகுதியில் ஈ-ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் கிறிஸ் மில்லிகன் என்பவர் கூறுகையில், "வெயில் காலத்தில் நடப்பதை விட ஈ-ஸ்கூட்டரில் செல்வது மிகவும் சௌகரியமாகவும், குறைந்த செலவிலுமே அமைகிறது" என்று தெரிவித்தார்.
</p><p>இருப்பினும், இந்த வசதிக்கு மத்தியில் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன. கனடிய குழந்தை மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் ஈ-ஸ்கூட்டர் விபத்துகளால் 57 பேர் படுகாயமடைந்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50087578-1f19-4015-b3f0-715018f71609/26-6a7e01f5402f4.webp' /></p><p>
இதில் 18 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் உயிரிழந்தனர் என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். </p><p>மேலும், கனடிய சுகாதார தகவல் நிறுவனத்தின் தரவுகளின்படி, 2023 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் 498 பேர் ஈ-ஸ்கூட்டர் விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>விபத்துகளைக் கட்டுப்படுத்த கனடாவின் பல்வேறு நகரங்கள் தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன:
டொராண்டோ காவல் துறை நடத்திய இரண்டு வார போக்குவரத்து பாதுகாப்பு பிரச்சாரத்திற்கு முன்பாகவே, ஈ-ஸ்கூட்டர் மற்றும் ஈ-பைக் விதிமீறல்களுக்காக 447 அபராத செல்லான்கள் மற்றும் எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது.</p><p>
வரும் இலையுதிர் காலம் (Fall) முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஈ-பைக் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்படுவதாக நோவா ஸ்கோஷியா மாகாணம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிலேயே ஈ-ஸ்கூட்டர்களுக்கு இந்த வயதுக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
</p><p>இது குறித்து நோவா ஸ்கோஷியா பொதுப்பணித்துறை அமைச்சர் ஃப்ரெட் டில்லி கூறுகையில், "பாரம்பரிய மிதிவண்டிகளை விட இவை மணிக்கு 30 முதல் 32 கி.மீ அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் செல்லக்கூடியவை. எனவே இவற்றைக் கையாள கூடுதல் முதிர்ச்சி தேவைப்படுகிறது" என்றார்.</p><p>
14 வயதுக் கட்டுப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்த கிறிஸ் மில்லிகன், "எனக்கும் அந்த வயதில் குழந்தைகள் உள்ளனர்; 14 வயது என்பது சரியான எல்லைதான்" என்றார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T17:51:56+00:00</updated>
        </entry>
    </feed>
