<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-10T14:38:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புற்றுநோய் அபாயகட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-us-president-joe-biden-at-risk-of-cancer-1786357155"></link>
            <id>https://canadamirror.com/article/former-us-president-joe-biden-at-risk-of-cancer-1786357155</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனைத் தாக்கியுள்ள கொடிய புற்றுநோய், தற்போது அவரின் எலும்புகளையும் தாண்டி உடலின் பிற பகுதிகளுக்கும் வேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனைத் தாக்கியுள்ள கொடிய புற்றுநோய், தற்போது அவரின் எலும்புகளையும் தாண்டி உடலின் பிற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவி வருவதாக அவரது மகன் அண்டர் பைடன் (Hunter Biden) மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். </p><p> 

பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் பேசிய அண்டர் பைடன், தனது தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதை வெளிப்படுத்தினார். "புற்றுநோய் அவரது எலும்புகள் மற்றும் அதற்கும் அப்பால் பரவிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aff6e6a-5e55-4695-92e0-75ba6f11ad3b/26-6a79a5a49f42d.webp' /></p><h2>&nbsp; மிகவும் கடினமாகவும், பெருந்துயரமாகவும் உள்ளது&nbsp;</h2><p> </p><p>
இது அவருக்குக் கடுமையான வலியையும், பல வகைகளில் உடல் தளர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது" எனக் கூறிய அவர், தனது தந்தையின் தற்போதைய நிலையைப் பார்ப்பது "உண்மையிலேயே மிகவும் கடினமாகவும், பெருந்துயரமாகவும் உள்ளது" கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.</p><p> 

 83 அகவையுடைய மக்களாட்சிக் கட்சியின் தலைவரான ஜோ பைடன், 2021 முதல் 2025 வரை அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பணியாற்றினார். 

அவரது உடல்நலம் குறித்த பல்வேறு ஐயங்கள் எழுந்ததால், 2024-ஆம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. </p><p>அவருக்குப் பதிலாகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் , குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பிடம் தோற்றார். 
வெள்ளை மாளிகையிலிருந்து விடைபெற்று நான்கு மாதங்களுக்குப் பிறகு, கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் தனக்கு முன்னிற்குஞ்சுரப்பிப் புற்றுநோய் (Prostate cancer) இருப்பதை ஜோ பைடன் உலகிற்கு அறிவித்தார்.
</p><p> தொடரும் மருத்துவப் போராட்டங்கள்அதன்பின்னர் கதிர்வீச்சு மருத்துவம் மற்றும் இயக்குநீர் மருத்துவக் (Hormone therapy) கட்டமைப்புக்குள் அவர் உட்படுத்தப்பட்டார். </p><p>

கடந்த மாதம் கூட, தனது பணிக்காலம் குறித்த புதிய நூல் ஒன்றின் வெளியீட்டு அறிவிப்பின்போது, தனது மருத்துவம் "மிகவும் நன்றாக" சென்று கொண்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால், நோயின் வீரியம் தற்போது கட்டற்ற நிலையை எட்டியுள்ளதை அண்டர் பைடனின் சொற்கள் உறுதிப்படுத்துகின்றன</p>]]></content>
            <updated>2026-08-10T13:34:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 12 வயது சிறுவனின் உடல் மீட்பு: கொலை வழக்குப்பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-of-12-year-old-edmonton-boy-1786349779"></link>
            <id>https://canadamirror.com/article/death-of-12-year-old-edmonton-boy-1786349779</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அது தொடர்பில் கொலை வழக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அது தொடர்பில் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
</p><p>கடந்த ஆகஸ்ட் 6-ஆம் திகதி அதிகாலை 3:26 மணியளவில், ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
</p><p>எட்மண்டன் நகரில் ஆகஸ்ட் 7 அன்று மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பரிசோதனையின் மூலம், உயிரிழந்தவர் எட்மண்டனைச் சேர்ந்த பைசல் ஹுசைன் 12 வயது சிறுவன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac86ad2-f056-4ba7-a227-dbbf9e842053/26-6a7988d5498fe.webp' /></p><p>
</p><p>இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 'ஆர்சிஎம்பி'யின் முக்கிய குற்றப் பிரிவு விசாரணையைத் தன்வசப்படுத்தியுள்ளது.</p><p>
இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், ஆதாபாஸ்கா பொலிஸாரை 780-675-4252 என்ற எண்ணிலோ அல்லது இரகசியம் காக்கும் 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பை 1-800-222-8477 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T13:34:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈ-ஸ்கூட்டர் விதிமீறல்கள்: ஒட்டாவா பொலிஸார் தீவிர நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/underage-operation-and-misuse-of-e-scooters-1786349268"></link>
            <id>https://canadamirror.com/article/underage-operation-and-misuse-of-e-scooters-1786349268</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒட்டாவா நகரில் ஈ-ஸ்கூட்டர்களின் தவறான பயன்பாடு மற்றும் விதிமீறல்களைத் தடுக்கும் வகையில், பொலிஸார் நகரம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒட்டாவா நகரில் ஈ-ஸ்கூட்டர்களின் தவறான பயன்பாடு மற்றும் விதிமீறல்களைத் தடுக்கும் வகையில், பொலிஸார் நகரம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனைகளைத் தொடங்கியுள்ளனர்.
</p><p>குறிப்பாக ஃபைண்ட்லே க்ரீக் மற்றும் ரிவர்சைடு சவுத் ஆகிய பகுதிகளில் சிறுவர்கள் ஸ்கூட்டர் ஓட்டுவது, அதிக வேகம் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பயணிப்பது ஆகியவற்றைக் கண்காணிக்க சிறப்பு ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>ஒட்டாவாவில் ஈ-ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு குறைந்தபட்ச வயது 16 ஆகும். 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இதனைப் பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d4e4e9-8e11-41fc-864f-70fee151575f/26-6a7986d65fc16.webp' /></p><p>18 வயதுக்குட்பட்ட அனைத்துப் பயனர்களும் கட்டாயம் பாதுகாப்பு தலைக்கவசம் அணிய வேண்டும். தவறினால் 80 டாலர் அபராதம் விதிக்கப்படும்.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஈ-ஸ்கூட்டர் ஓட்டினால் சுமார் 170 டொலர் வரை அபராதம் விதிக்கப்படும்.ஈ-ஸ்கூட்டர்களின் அதிகபட்ச வேகவரம்பு மணிக்கு 24 கிலோ மீற்றராகும்.</p><p>அண்மையில் அதிகபட்சமாக மணிக்கு 52 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்த நபரை பொலிஸார் பிடித்துள்ளனர்.</p><p>அதிவேகமாகச் செல்பவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பைக் கருதி, நடைபாதைகளில் ஈ-ஸ்கூட்டர்களை ஓட்டக் கூடாது எனவும் ஒரு ஸ்கூட்டரில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். பிற வாகனங்களையோ அல்லது ஸ்கேட்போர்டுகளையோ இழுத்துச் செல்லக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஒட்டாவா கிழக்கு ஒன்டாரியோ சிறுவர் மருத்துவமனை, டோரண்டோவின் சிக்-கிட்ஸ் மற்றும் மொண்ட்ரியால் சிறுவர் மருத்துவமனைகள் வெளியிட்ட தகவலின்படி, ஈ-ஸ்கூட்டர் விபத்துகளால் காயமடைந்து வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p> 
மே 2025 வரை வரையிலான ஓராண்டு காலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது.
சிறுவர்கள் அறியாமையால் ஆபத்தான முறையில் ஸ்கூட்டர்களை இயக்கக்கூடும்.</p><p> எனவே, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஈ-ஸ்கூட்டர்களை வாங்கித் தருவதற்கு முன்பாக பெற்றோர் இருமுறை யோசிக்க வேண்டும்," என ஒட்டாவா பொலிஸ் அதிகாரி ஜோஷ் கலாஹன் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை சூறையாடிய டால்பின் புயல் ;1000க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/typhoon-dolphin-china-1000-flights-canceled-1786368494"></link>
            <id>https://canadamirror.com/article/typhoon-dolphin-china-1000-flights-canceled-1786368494</id>
            <summary type="text">சீனாவில்&amp;nbsp; டால்பின் புயல் வலுவிழந்த போதிலும், திங்கட்கிழமை அன்று சீனா முழுவதும் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கைகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில்&nbsp; டால்பின் புயல் வலுவிழந்த போதிலும், திங்கட்கிழமை அன்று சீனா முழுவதும் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன, மேலும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன .</p><p>
ஞாயிற்றுக்கிழமை சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கரையைக் கடந்த பின்னர் வலுவிழந்த புயலை அடுத்து, சீனாவின் தேசிய வானிலை மையம் (NMC) திங்கட்கிழமை காலை மிகக் குறைந்த தீவிரமான புயல் எச்சரிக்கையை விடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71cf7c4d-c7ea-4cf5-91a3-7bb4bb1bd178/26-6a79d1f739603.webp' /></p><p>
</p><p>
புயல் வலுவிழந்த போதிலும், கிழக்கு மற்றும் மத்திய சீனாவின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. </p><p>

அதேசமயம் கிழக்கு மற்றும் தெற்கு ஜெஜியாங்கின் சில பகுதிகளுக்கு திங்களன்று அதிகாரிகள் தங்களின் மிகக் கடுமையான திடீர் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்ததாக அரசு செய்தி நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது. </p>]]></content>
            <updated>2026-08-10T13:26:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து புதிய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-record-230-migrants-cross-the-english-channel-1786368055"></link>
            <id>https://canadamirror.com/article/new-record-230-migrants-cross-the-english-channel-1786368055</id>
            <summary type="text">&amp;nbsp; பிரான்ஸில் இருந்து ஒரு சிறிய ரப்பர் படகில் 230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை அடைந்து புதிய சாதனையைப் பதிவுசெய்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரான்ஸில் இருந்து ஒரு சிறிய ரப்பர் படகில் 230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை அடைந்து புதிய சாதனையைப் பதிவுசெய்துள்ளனர்.</p><p>

போயிங் 737 பயணிகள் விமானத்தின் கொள்ளளவுக்குச் சமமான எண்ணிக்கையிலான மக்களை ஏற்றி சென்ற மெகா படகு எனவும் , பிரித்தானியாவை நோக்கிய சட்டவிரோதப் பயணங்களில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய எண்ணிக்கையாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aace4260-0148-4632-bb46-140adc0d14e6/26-6a79d03937119.webp' /></p><h2>&nbsp;2026 ஆம் ஆண்டில் 15,049 சட்டவிரோதக் குடியேறிகள்</h2><p> </p><p>

அதேசமயம் கடந்த ஜூலை மாதம் ஒரே படகில் 165 பேர் பயணித்ததே இதுவரை அதிகளவானவர்கள் பயணித்ததாக இருந்தது. தற்போதைய 230 பேர் பயணம் அந்த சாதனையை முறியடித்துள்ளது.
</p><p>
இந்த புதிய வருகையுடன், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 224 சிறிய படகுகள் மூலம் மொத்தம் 15,049 சட்டவிரோதக் குடியேறிகள் பிரித்தானியாவை அடைந்துள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையினரும் RNLI உயிர் மீட்புக் படகுகளும் இப் படகைக் கடலிலேயே இடைமறித்து டோவர் துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளன. </p><p>கடந்த வார இறுதியில் மட்டும் சுமார் 950 குடியேற்றவாசிகள் டோவர் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


இது குறித்து பிரித்தானிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கூறுகையில்,
</p><p>
"மனித கடத்தல் கும்பல்கள் மக்களின் உயிரைப் பணைய வைத்து, கடல் பயணத்திற்கு ஒத்துவராத படகுகளில் அதிகளவு மக்களைக் திணித்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதையே இது காட்டுகிறது. எனினும், கடந்த ஜூலை மாதத்தில் 2020க்குப் பின்னரான குறைந்தபட்ச வருகையே பதிவாகியுள்ளது. </p><p>பிரெஞ்சு கடற்கரைகளில் மேலதிகப் படைகளை நிறுத்துவதற்கு பிரான்ஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.



இச்சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரித்தானியாவின் ரிஃபார்ம் யூகே கட்சித் தலைவர் நைஜல் பரேஜ் ,</p><p> "இந்தச் சட்டவிரோத ஊடுருவல் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட பெரும் அவசரநிலை என்பதற்கான மற்றொரு சான்றாகும்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-10T13:18:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக டிரம்ப் எடுக்கும் அதிரடி நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-moves-to-increase-economic-pressure-on-iran-1786343949"></link>
            <id>https://canadamirror.com/article/trump-moves-to-increase-economic-pressure-on-iran-1786343949</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரான் கடும் கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், அதற்கு எதிரான கூடுதல் ராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவதைத் தவிர்த்துவிட்டு, பொருளாதார அழுத்தத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரான் கடும் கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், அதற்கு எதிரான கூடுதல் ராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவதைத் தவிர்த்துவிட்டு, பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.</p><p>



ஈரானின் நடவடிக்கைகளை நாங்கள் சாதாரணமாகக் கையாளுகிறோம் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.



ஈரானில் நிலவும் கடுமையான பணவீக்கம் மற்றும் அவர்களிடம் பணம் இல்லாததை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/527ff231-5d80-49bd-8f9d-ee8348301068/26-6a7977bd352c8.webp' /></p><p>
</p><p>


போர் தொடங்கியதிலிருந்து ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால் எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ளது.</p><p> 



இருப்பினும், அமெரிக்க நுகர்வோர் இந்தப் போரினால் பெரியளவில் சிரமத்தை எதிர்நோக்கும் அளவிற்கு அமெரிக்கா எண்ணெய் விலைகளை உயர்த்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T11:26:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேங்கொக் அரச அலுவலகம் ஒன்றில் துப்பாக்கி சூடு; சம்பவத்தால் பெரும் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shooting-at-a-government-office-in-bangkok-1786361212"></link>
            <id>https://canadamirror.com/article/shooting-at-a-government-office-in-bangkok-1786361212</id>
            <summary type="text">&amp;nbsp; தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அரச அலுவலகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிரேஷ்ட அதிகாரி ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அரச அலுவலகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் அவரது ஓட்டுநரும் காயமடைந்துள்ளனர்.
</p><p>
இன்று இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59d38f5d-2fd6-44c6-996a-a21c5088dbdb/26-6a79b57ddc10d.webp' /></p><p>
</p><p>
அதேசமயம் கடந்த வெள்ளிக்கிழமை நோந்தபுரி பாடசாலை ஒன்றில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்ட சோகம் தணிவதற்குள், அதே பிராந்தியத்தில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை உடனடியாகத் தீவிரப்படுத்துமாறு தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்ன்விரகுல் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

 இன்று மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டதை அடுத்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு உலோகக் கண்டறிதல் கருவிகள் மூலம் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T11:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய அமைதிப்படை வீரர்களுக்கு ஒட்டாவாவில் கௌரவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-peacekeepers-honoured-1786354410"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-peacekeepers-honoured-1786354410</id>
            <summary type="text">&amp;nbsp;உலக நாடுகளின் அமைதியைக் காக்கும் சர்வதேசப் பணிகளில் ஈடுபட்டுச் சேவையாற்றிய கனடிய அமைதிப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஒட்டாவாவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலக நாடுகளின் அமைதியைக் காக்கும் சர்வதேசப் பணிகளில் ஈடுபட்டுச் சேவையாற்றிய கனடிய அமைதிப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஒட்டாவாவில் உள்ள 'நல்லிணக்க அமைதிப்படை நினைவுச் சின்னத்தில்' சிறப்பு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. </p><p>
தேசிய அமைதிப்படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள், தற்போதைய இராணுவ வீரர்கள், கனடிய அரச பொலிஸார், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். </p><p>
1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்த 9 கனடியப் படை வீரர்கள் பயணித்த 'பஃப்பலோ' விமானம் சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அனைவரும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b15f66b6-82ca-4402-bc71-35fc8d3820a3/26-6a799aec85b51.webp' /></p><p> கனடிய அமைதிப்படை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிக மோசமான உயிரிழப்பு இதுவாகும். </p><p>
இந்தத் தியாகத்தை நினைவு கூரும் வகையில், கனடாவில் 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி 'தேசிய அமைதிப்படை வீரர்கள் தினமாக' அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.</p><p> 
1948 ஆம் ஆண்டு முதல், 1,25,000-க்கும் மேற்பட்ட கனடிய ஆயுதப்படை வீரர்களும் 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் உலகின் 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>சர்வதேச அமைதிப் பணிகளின் போது இதுவரை மொத்தம் 130 கனடியப் படை வீரர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.</p><p> 
மேலும், அடுத்த தலைமுறை இளைஞர்களும் நாட்டின் அமைதிப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது நம்பிக்கையளிப்பதாக நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T09:44:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 3 வயது சிறுமியைத் தாக்கிய கரடி: அதிர்ச்சி சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shock-bc-mom-describes-bear-attack-on-toddler-1786348616"></link>
            <id>https://canadamirror.com/article/shock-bc-mom-describes-bear-attack-on-toddler-1786348616</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியைப் பாக்கரடி ஒன்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், கரடி சிறுமியின் கழுத்தைக் கவ்வ முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். </p><p>உடனடியாகச் செயல்பட்ட தந்தை, வில் மற்றும் அம்பைப் பயன்படுத்தி கரடியின் தலையில் எய்து அதைத் தாக்கி விரட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6b22b8e-f638-400e-a747-29b174259aa2/26-6a79844a6c312.webp' /></p><p> </p><p>
கரடி கடித்ததில் சிறுமியின் கழுத்து, தலை மற்றும் முதுகுப் பகுதியில் ஆழமான காயங்களும் வெட்டுக் காயங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p> உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் வான்கூவரில் உள்ள சிறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அச்சிறுமி, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. </p><p>
சம்பவ இடத்திற்குப் பொலிஸார் வந்தபோதும், அந்த இடத்தில் மிகுந்த ஆர்வம் காட்டிய கரடி மீண்டும் மீண்டும் அவ்வீட்டுப் பகுதிக்கு வந்துள்ளது. </p><p>பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அதிகாரிகள் கரடியை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். </p><p>
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கரடி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடியது. வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அதைக் கண்டுபிடித்தவுடன் அழிக்க முடிவு செய்துள்ளனர்.</p><p> 
அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும், வனவிலங்குகள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானைக் முடக்க டிரம்ப் வகுக்கும் புதிய வியூகம்! விரைவில் அதிரடித் தாக்குதல் நடத்தக்கூடும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-plans-to-destroy-iran-s-pickaxe-mountain-1786346250"></link>
            <id>https://canadamirror.com/article/trump-plans-to-destroy-iran-s-pickaxe-mountain-1786346250</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானைக் முடக்க டிரம்ப் வகுக்கும் புதிய வியூகம் குறித்த தகவல் வெளியாகி மீண்டும் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 அதன்படி ஈரானின் நிலத்தடி அணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானைக் முடக்க டிரம்ப் வகுக்கும் புதிய வியூகம் குறித்த தகவல் வெளியாகி மீண்டும் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 அதன்படி ஈரானின் நிலத்தடி அணுஆயுதத் திட்டங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதைத் தடுப்பதற்காக, அந்நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ‘பிக்ஏக்ஸ்’ (Pickaxe Mountain) மலைப்பகுதி சுரங்கப் பாதைகளின் நுழைவாயில்களைத் தாக்கித் தகர்ப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகப் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01aba7eb-de2c-470b-a439-08ed1830b015/26-6a797b0c0cba1.webp' /></p><h2>&nbsp; அமெரிக்கப் படைகள் விரைவில் அதிரடித் தாக்குதல் நடத்தக்கூடும்</h2><p> </p><p>

ஈரானின் நடான்ஸ் (Natanz) அணு உலையை அடுத்துள்ள இமயமலை போன்ற கடினமான பாறைப்பகுதியில் அமைந்துள்ள இந்த மையத்தை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் விரைவில் அதிரடித் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

ஈரானிய மொழியில் ‘கூ-எ கோலங் காஸ் லா’ (Kuh-e Kolang Gaz La) என அழைக்கப்படும் இந்த பிக்ஏக்ஸ் மலை மையம், பூமிக்கு அடியில் சுமார் 100 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் கிரானைட் பாறைகளுக்கு நடுவே கட்டப்பட்டுள்ளது. </p><p>

இங்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உருவாக்கப் பயன்படும் பல்லாயிரக்கணக்கான சென்ட்ரிஃபியூஜ் (Centrifuge) இயந்திரங்களை ஈரான் மறைத்து வைத்திருப்பதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.
</p><p>
 மிகக் கடினமான பாறைத் தளங்களுக்கு அடியில் அமைந்துள்ளதால், வழக்கமான பங்கர் பாஸ்டர் (Bunker Buster) குண்டுகளால் கூட இந்த மையத்தை முழுமையாக அழிக்க முடியாது என ராணுவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>

இந்நிலையில், இந்த நிலத்தடி மையத்தை முழுமையாக அழிக்க முடியாவிட்டாலும், அங்கு அமைந்துள்ள சுரங்கப் பாதைகளின் நுழைவாயில்கள் (Tunnel Entrances) மற்றும் காற்றோட்ட அமைப்புகளைச் சக்திவாய்ந்த ஏவுகணைகள் மூலம் தகர்ப்பதன் மூலம், அந்த மையத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்க முடியும் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் கணித்துள்ளனர். </p><p>

இதன்மூலம் சென்ட்ரிஃபியூஜ் இயந்திரங்களை வெளியே கொண்டு வரவோ அல்லது அணுஆயுதப் பணிகளைத் தொடரவோ முடியாதவாறு ஈரானைக் முடக்க முடியும் என வாஷிங்டன் திட்டமிட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தொடர் தாக்குதல்கள் மற்றும் வான்வழி மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், “ஈரான் அணுஆயுதத் திட்டத்தில் முன்னேற்றம் அடைவதைச் சகித்துக் கொள்ள முடியாது என்றும், பிக்ஏக்ஸ் மலைப் பகுதியை மிக விரைவில் கடுமையாகத் தாக்குவோம்” என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். </p><p>

நிலத்தடி அணுஆயுத மையங்களை இலக்கு வைத்து அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கும் இந்த அடுத்தகட்டப் போர்த் திட்டம், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளமை உலகில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T08:51:59+00:00</updated>
        </entry>
    </feed>
