<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-24T18:39:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஒப்பந்தம் கனடாவிற்குப் பயனளித்திருக்காது –மார்க் கார்னி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/carney-says-canada-could-not-accept-1787590987"></link>
            <id>https://canadamirror.com/article/carney-says-canada-could-not-accept-1787590987</id>
            <summary type="text">அமெரிக்காவுடன் முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் கனேடிய மக்களுக்குப் எவ்வித பயனையும் அளித்திருக்காது என்பதால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கனேடியப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடன் முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் கனேடிய மக்களுக்குப் எவ்வித பயனையும் அளித்திருக்காது என்பதால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கனேடியப் பிரதமர் மார்க் கார்னி மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>கியூபெக்கின் லெவிஸ் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
</p><p>அமெரிக்காவுடனான எங்களது வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமே கனேடிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் சிறந்த ஒப்பந்தத்தைப் பெற்றுத் தருவதுதானே தவிர, எந்தவொரு காலக்கெடுவுக்குள்ளும் அல்லது எந்த நிபந்தனையிலும் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்வது அல்ல என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f26eb10-0674-4779-82d3-cc13ce389a8a/26-6a8c79508b3a9.webp' /></p><p>
</p><p>கடந்த சில வாரங்களில் பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அந்த வேகம் தலைகீழாக மாறியது. </p><p>அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதுடன், அவர்கள் கேட்ட சலுகைகளையும் எங்களால் வழங்க முடியாமல்போனது என பிரதமர் கார்னி தெளிவுபடுத்தினார்.
</p><p>அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, கனடாவின் தேசிய நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது என்ற தனது அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை பிரதமர் மார்க் கார்னி இதன் மூலம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T17:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏரியில் நீந்திய 8 வயது சிறுமி அரிய வகை தொற்றினால் பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/8-year-old-dies-from-rare-brain-eating-amoeba-1787573932"></link>
            <id>https://canadamirror.com/article/8-year-old-dies-from-rare-brain-eating-amoeba-1787573932</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ஏரியில் நீந்தியபோது அரிய வகை உயிர்க்கொல்லி அமீபா தொற்றுக்கு உள்ளானதாகக் கருதப்படும் 8 வயது சிறுமி உயிரிழந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ஏரியில் நீந்தியபோது அரிய வகை உயிர்க்கொல்லி அமீபா தொற்றுக்கு உள்ளானதாகக் கருதப்படும் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.</p><p>
வடக்கு லூசியானாவின் ருஸ்டொன் பகுதியைச் சேர்ந்த லில்லியன் ஸ்மார்ட் என்ற சிறுமி, தனது 8ஆவது பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளான சனிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>Naegleria fowleri எனப்படும் இந்த நுண்ணுயிரி பொதுவாக “மூளையை உண்ணும் அமீபா” என அழைக்கப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8309194-fb6e-46ca-a985-13365b716517/26-6a8c36ae0ece3.webp' /></p><p>
லிலியன் இந்த அமீபா தொற்றை க்ளேய்போர்ன் ஏரியில் நீந்தியபோது பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. அந்த ஏரி ருஸ்டன் நகரிலிருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.</p><p>
குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், அமீபா தொற்றினால் சிறுமியின் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்ததால் அவர் குணமடைய முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
</p><p>லிலியன் கடந்த ஆகஸ்ட் 15ஆம் திகதி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்து, இரட்டைப் பார்வை உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>Naegleria fowleri பொதுவாக வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற இடங்களில் காணப்படும். அமீபா கலந்த நீர் மூக்கின் வழியாக உடலுக்குள் சென்று மூளையை அடையும் போது தீவிர மூளைத் தொற்று ஏற்படலாம்.</p><p>
இந்தத் தொற்று நீரை விழுங்குவதன் மூலம் ஏற்படாது என்பதுடன், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் பரவாது.
ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை காணப்படலாம்.</p><p> பின்னர் கழுத்து இறுக்கம், குழப்பநிலை, சமநிலை இழப்பு உள்ளிட்ட தீவிர அறிகுறிகள் வேகமாக உருவாகக்கூடும்.
</p><p>அண்மைய ஆண்டுகளில் வெப்பநிலை அதிகரிப்பால் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிலும் வெப்பமான நன்னீர் பரவலாகி வருவதால், இந்த அமீபா காணப்படும் பகுதிகள் விரிவடையக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் பிரபல நிழல் உலக தாதா சுட்டுக்கொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-underworld-don-yanis-yushvaev-shot-dead-1787576498"></link>
            <id>https://canadamirror.com/article/israel-underworld-don-yanis-yushvaev-shot-dead-1787576498</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இஸ்ரேலின் பிரபல நிழல் உலக தாதாவும், “காகசஸ் மாஃபியா” (Caucasian Jewish Mafia) அமைப்பின் தலைவருமான யானிஸ் யுஷ்வேவ் (Yanis Yushvaev – 40) ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இஸ்ரேலின் பிரபல நிழல் உலக தாதாவும், “காகசஸ் மாஃபியா” (Caucasian Jewish Mafia) அமைப்பின் தலைவருமான யானிஸ் யுஷ்வேவ் (Yanis Yushvaev – 40) சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

கிசாரியா (Caesarea) பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியறியபோது, மர்ம நபர் ஒருவரால் மிக அருகில் வைத்துத் தலையில் சுடப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15c822b7-abd3-4540-bba3-19c917549912/26-6a8c40b40aade.webp' /></p><p><span style="font-size: 28px;">&nbsp;</span><span style="color: inherit; font-size: 1.75rem;">தப்பியோடிய கொலையாளி</span></p><p>
</p><p>
ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட யானிஸ் யுஷ்வேவ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p><p> 

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்க இஸ்ரேல் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது.</p><p> 

இக்கொலை சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

 40 வயதான யானிஸ் யுஷ்வேவ், இஸ்ரேலிய காவல்துறையின் குற்றப் பட்டியலில் முக்கிய நபராக இருந்துவந்துள்ளார்.</p><p> 

துப்பாக்கிச் சூடு, கையெறி குண்டு வீச்சு மற்றும் வாகனங்களுக்குத் தீ வைப்பு உள்ளிட்ட பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் இவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் எந்த வழக்குகளிலும் அவர் தண்டிக்கப்படவில்லை.
</p><p>

கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில், தான் ஒரு நேர்மையான தொழிலதிபர் என்றும், சொகுசு கார்களைப் பயன்படுத்துவதால் காவல்துறை தன் மீது வீண் சந்தேகம் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.</p><p> 

இருப்பினும், இஸ்ரேலில் இயங்கி வரும் காகசியன் யூத மாஃபியா கும்பலின் தலைவராகச் செயல்பட்டு வந்த இவரின் படுகொலை, போட்டியின் காரணமாக நடந்திருக்கலாம் என இஸ்‌ரேல் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T13:38:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் மீளப்பெறப்படும் 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nearly-three-million-teslas-recalled-1787569790"></link>
            <id>https://canadamirror.com/article/nearly-three-million-teslas-recalled-1787569790</id>
            <summary type="text">மின்சார வாகனங்களின் நவீன வடிவமைப்பின் முக்கிய அடையாளமாக மாறியுள்ள மறைவு கதவுக் கைப்பிடிகள் தற்போது சீனாவின் மிகப்பெரிய வாகன மீளப்பெறும் நடவடிக்கைக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்சார வாகனங்களின் நவீன வடிவமைப்பின் முக்கிய அடையாளமாக மாறியுள்ள மறைவு கதவுக் கைப்பிடிகள் தற்போது சீனாவின் மிகப்பெரிய வாகன மீளப்பெறும் நடவடிக்கைக்கு காரணமாகியுள்ளன.</p><p>
சீனாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 29.8 இலட்சம் டெஸ்லா வாகனங்கள் உட்பட மொத்தம் 40 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இந்த நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
டெஸ்லா, ஸிபஙெ், ஸியோமி மற்றும் ஜீலி உள்ளிட்ட நிறுவனங்களின் சில மின்சார வாகனங்கள் இதில் அடங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/295d0a80-a144-4194-ad41-181e2a8b9c1e/26-6a8c268101a4a.webp' /></p><p>
</p><p>விபத்து அல்லது அவசரநிலை ஏற்படும் போது, வாகனத்தின் உட்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கதவுக் கைப்பிடிகளை கண்டுபிடித்து திறப்பது கடினமாக இருக்கலாம் என்ற பாதுகாப்பு கவலைகள் எழுந்துள்ளன.</p><p>
குறிப்பாக, கடுமையான மோதலின் காரணமாக வாகனத்தின் குறைந்த மின்னழுத்த மின்சார அமைப்பு செயலிழந்தால், பயணிகள் விரைவாக வாகனத்திலிருந்து வெளியேறுவதற்கு இது தடையாக இருக்கலாம் என்றும், வெளியில் இருந்து மீட்புப் பணியில் ஈடுபடுவோருக்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம் என்றும் டெஸ்லா தெரிவித்துள்ளது.</p><p>
மீளப்பெறப்படும் வாகனங்களில் உட்புறக் கதவுகளில் பாதுகாப்பு எச்சரிக்கை ஒட்டிகள் பொருத்தப்படுவதுடன், விபத்து ஏற்பட்டால் வாகனத்தின் ஜன்னல்கள் தானாகக் கீழிறங்கும் வகையில் மென்பொருள் புதுப்பிப்பு வழங்கப்பட உள்ளது.</p><p>
சீனாவில் ஸியோமி நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் தொடர்பான இரண்டு உயிரிழப்பு விபத்துகளுக்குப் பின்னரும் இந்த கதவுக் கைப்பிடி வடிவமைப்பு தொடர்பான பாதுகாப்பு கேள்விகள் தீவிரமடைந்துள்ளன.
</p><p> அந்த சம்பவங்களில் மின்சார அமைப்பு செயலிழந்ததால் கதவுகளைத் திறக்க முடியாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.
இந்த மீளப்பெறும் நடவடிக்கை சீனாவுக்கு வெளியே விற்பனை செய்யப்பட்ட இதே வகை வாகனங்களுக்கும் பொருந்துமா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T13:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் புதிய வரிகளால் கனடாவில் வேலை இழப்புகள் தவிர்க்க முடியாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/job-loss-is-inevitable-bc-chamber-of-commerce-1787573247"></link>
            <id>https://canadamirror.com/article/job-loss-is-inevitable-bc-chamber-of-commerce-1787573247</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனேடியப் பொருட்களுக்கு புதிய கடுமையான இறக்குமதி வரிகளை விதித்துள்ள நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனேடியப் பொருட்களுக்கு புதிய கடுமையான இறக்குமதி வரிகளை விதித்துள்ள நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வேலை இழப்புகள் “தவிர்க்க முடியாதவை” எனவும், சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாகவும் பிரிட்டிஷ் கொலம்பிய வர்த்தக சம்மேளனம் எச்சரித்துள்ளது.</p><p>
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கனடா பிரதமர் மார்க் கார்னி முடிவெடுத்துள்ள நிலையில், புதிய வர்த்தக நடவடிக்கைகளை தொழில் துறையினர் கவலையுடன் அவதானித்து வருகின்றனர்.</p><p>
வர்த்தகப் போரில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றம் மீண்டும் அதே நிச்சயமற்ற சூழ்நிலைக்கே தொழில் துறையை கொண்டு சென்றுள்ளதாக வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஜென் ரெய்லி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48892baa-92a0-45b8-8c70-30dae2f57391/26-6a8c3400e7bbc.webp' /></p><p>
</p><p>கடந்த 21 மாதங்களில் வர்த்தக நிலைப்பாட்டில் 15 மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் தொடர்ச்சியான மாற்றங்கள் காரணமாக வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து நிச்சயமற்ற சூழலில் இயங்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே புதிய வரிகளால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என ஜென் தெரிவித்துள்ளார்.</p><p>
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில கனேடியப் பொருட்களுக்கு தற்போது 50 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், அந்த அளவிலான வரியை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் தாங்கிக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.</p><p>
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்தச் சூழ்நிலையிலிருந்து பாதிப்பின்றி வெளியேற முடியுமா என்பது குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டு வரும் சொப்ட்வுட் லும்பர் எனப்படும் மென்மரத் தொழில்துறையும் புதிய வரிகளால் மேலும் பாதிக்கப்படுவதாக வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.</p><p>
மென்மர ஏற்றுமதிக்கு ஏற்கனவே மொத்தமாக 45 சதவீத வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதன் காரணமாக வேலை இழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.</p><p>
எனினும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் கனடாவின் இறையாண்மை தொடர்பான விடயங்களும் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி எடுத்த முடிவு சரியானது என்றே தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் மகனை இலக்குவைக்கும் ஈரான்; 10 மில்லியன் டாலர் வெகுமதி ; உலக அரங்கில் பதற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iranian-state-tv-broadcast-target-barron-trump-1787575851"></link>
            <id>https://canadamirror.com/article/iranian-state-tv-broadcast-target-barron-trump-1787575851</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இளைய மகனான பரோன் டிரம்பைக் இலக்கு வைத்து, ஈரான் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ள வீடியோ சர்வதேச அளவில் பெரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இளைய மகனான பரோன் டிரம்பைக் இலக்கு வைத்து, ஈரான் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ள வீடியோ சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

சுமார் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தத் தொகுப்பில், பரோன் டிரம்பைக் கண்காணிப்பது போன்ற அனிமேஷன் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><p> 

மேலும், அவரை நெருங்குவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சிகள் விவரிக்கப்பட்டு, அவரைப் பற்றியத் தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19b30361-46ff-4ad5-bad4-79cd614089eb/26-6a8c3e2d3d607.webp' /></p><h2>&nbsp;10 மில்லியன் டாலர் வெகுமதி</h2><p>
</p><p>

இந்த வீடியோவில் பரோன் டிரம்ப் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள், அவர் அடிக்கடி செல்லும் இடங்கள் மற்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அமெரிக்கச் சீக்ரெட் சர்வீஸ் (Secret Service) பாதுகாப்பு வளையங்களை ஊடுருவுவது போன்ற கிராபிக்ஸ் சித்தரிப்புகள் இடம்பெற்றுள்ளன. </p><p>

அமெரிக்க அதிபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை நேரடியாகவே இலக்கு வைத்து ஈரான் அரசு ஊடகம் இத்தகைய பகிரங்க மிரட்டலை விடுத்திருப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
</p><p>
ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) மற்றும் அதன் ஆதரவு பெற்ற அமைப்புகள் ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது முக்கிய அதிகாரிகளுக்கு எதிராகப் பல்வேறு மிரட்டல்களை விடுத்து வந்த சூழலில், தற்போது டொனால்ட் டிரம்பின் குடும்ப உறுப்பினர் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.</p><p>

முன்னதாக 2020-ஆம் ஆண்டு ஈரான் தளபதி காசெம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு ஈரான் மிரட்டல் விடுத்து வந்தது.
</p><p>

ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த அச்சுறுத்தல் வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் அதன் பின்னணியில் உள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன

.</p><p> ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் போர் மற்றும் பொருளாதாரத் தடைகள் சார்ந்த மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் சர்வதேச அரசியல் அரங்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-24T12:48:12+00:00</updated>
        </entry>
    </feed>
