<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-25T18:25:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வான்கூவரில் வரலாறு காணாத மின்னல் தாக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/record-1725-lightning-strikes-in-metro-vancouver-1787668502"></link>
            <id>https://canadamirror.com/article/record-1725-lightning-strikes-in-metro-vancouver-1787668502</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த வார இறுதியில் வீசிய கடுமையான இடியுடன் கூடிய புயலின்போது, மெட்ரோ வான்கூவர் பகுதியில் 1,725 மின்னல் தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த வார இறுதியில் வீசிய கடுமையான இடியுடன் கூடிய புயலின்போது, மெட்ரோ வான்கூவர் பகுதியில் 1,725 மின்னல் தாக்கங்கள் பதிவாகியுள்ளன.</p><p>
சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்த இந்த புயல், தற்போது பயன்படுத்தப்படும் மின்னல் கண்காணிப்பு அமைப்பின் வரலாற்றில் மெட்ரோ வான்கூவர் பகுதியில் பதிவான அதிகபட்ச மின்னல் தாக்கமாக அமைந்துள்ளது.
</p><p>கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் வானிலை ஆய்வாளர் ஜெனிபர் கோவல் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அதிகபட்சமாக 869 மின்னல் தாக்கங்கள் பதிவாகியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2005eb43-410e-4c6c-828d-d562f976b968/26-6a8da818631bd.webp' /></p><p> </p><p>அது 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பதிவானதாக கோவல் கூறியுள்ளார்.
இந்த கோடைக்காலத்தில் முன்னதாக ஏற்பட்ட இடியுடன் கூடிய புயல்களில் முறையே 128 மற்றும் 139 மின்னல் தாக்கங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன.</p><p> 
இதனுடன் ஒப்பிடுகையில், அண்மைய புயல் மிகவும் தீவிரமாக இருந்ததாக வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இந்த புயலின்போது குறுகிய காலத்திற்குள் அதிகளவு மழையும் பெய்துள்ளது.
</p><p>விமான நிலையப் பகுதியில் ஒரு மணி நேரத்தில் மட்டும் 24 மில்லிமீட்டர் மழை பெய்ததாக கோவல் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த புயல் வழக்கத்திற்கு மாறாக இருந்ததற்கு அது வந்த திசையும் முக்கிய காரணமாக அமைந்ததாக வானிலை ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
பொதுவாக வான்கூவர் பகுதிக்கு மேற்கிலிருந்து அல்லது தென்மேற்கிலிருந்து ஈரப்பதம் கொண்ட காற்று வரும் நிலையில், இந்த முறை தெற்கிலிருந்து அதிக ஈரப்பதம் கொண்ட வெப்பமான காற்று வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதன் காரணமாக அதிக மழை மற்றும் அதிகளவான மின்னல் தாக்கங்களுடன் கூடிய மிகவும் தீவிரமான புயல் உருவானதாக அவர் கூறியுள்ளார்.
</p><p>இந்த மின்னல் தாக்கங்களில் ஒன்று லயன்ஸ் பே அருகே சிறிய காட்டுத்தீ ஏற்படுவதற்கும் காரணமாகியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T17:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 5 மில்லியன் லொத்தர் சீட்டு பரிசை வென்ற பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-woman-looking-forward-to-suite-on-a-cruise-1787667535"></link>
            <id>https://canadamirror.com/article/bc-woman-looking-forward-to-suite-on-a-cruise-1787667535</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றபோது தான் 5 மில்லியன் டொலர் லொட்டோ 6/49 ஜாக்பாட் பரிசை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றபோது தான் 5 மில்லியன் டொலர் லொட்டோ 6/49 ஜாக்பாட் பரிசை வென்றிருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
</p><p>ஜேன் டி. என்பவர் ஆகஸ்ட் 8ஆம் திகதி நடைபெற்ற லொட்டோ0 குலுக்கலில் கிளாசிக் ஜாக்பாட் பரிசை வென்றதாக பிரிட்டிஷ் கொலம்பியா லாட்டரி கழகம் திங்கட்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.</p><p>
எப்படி எதிர்வினையாற்றுவது என்றே எனக்குத் தெரியவில்லை. பணியாளர் என்னைவிட அதிக உற்சாகத்தில் இருந்தார் என ஜேன் டி. தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33e2a9b5-59e6-4e6a-85e4-abcda8584785/26-6a8da45148b37.webp' /></p><p>
</p><p>தாம் வெற்றி பெற்ற செய்தியை அறிந்த பின்னர் காருக்குத் திரும்பிச் சென்று தனது கணவரிடம் கூறியபோது, அவர் முதலில் அதை நம்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் அவர் என்னை நம்பவில்லை.</p><p> பின்னர் வெற்றிச் சீட்டின் சரிபார்ப்பு ரசீதைக் காட்டினேன். அதில் இருந்த பூஜ்ஜியங்களை அவர் எண்ணிப் பார்த்தார் என ஜேன் கூறியுள்ளார்.
</p><p>இந்த எதிர்பாராத பெரும் தொகை கிடைத்துள்ளதால், இனி தனது வாழ்க்கையில் “அதிக சுதந்திரத்துடன்” செயல்பட முடியும் என ஜேன் தெரிவித்துள்ளார்.
</p><p>தனது வீட்டில் சில புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதுடன், பணத்தின் ஒரு பகுதியை முதலீடு செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். </p><p>
அதேவேளை, தன்னை மகிழ்விக்கும் வகையில் சொகுசுக் கப்பல் பயணத்தின்போது ஒரு தனிப்பட்ட ஸ்யூட் அறையில் தங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T16:44:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு; மூவர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-person-killed-in-two-vehicle-crash-1787668004"></link>
            <id>https://canadamirror.com/article/one-person-killed-in-two-vehicle-crash-1787668004</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள சட்பரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள சட்பரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>
இந்த விபத்து ஆகஸ்ட் 22ஆம் திகதி மாலை 4 மணியளவில், நொட்ரே டேம் பகுதியில் இடம்பெற்றதாக சட்பரி பொலிஸார் ஆகஸ்ட் 24ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
</p><p>நெட்ரே டேம் மற்றும் லாசேல் போல்வொர்ட் சந்திப்புக்கு வடக்கே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a3d99f5-a08c-49ac-a80d-27a497d82fda/26-6a8da6262b795.webp' /></p><p>
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தெற்கு நோக்கிப் பயணித்த வாகனம் ஒன்று திடீரென வடக்கு நோக்கிய பாதைக்குள் நுழைந்து, எதிரே வந்த மற்றொரு வாகனத்துடன் மோதியுள்ளது.</p><p>
தெற்கு நோக்கிப் பயணித்த வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>அதே வாகனத்தில் பயணித்த இளம் பயணி ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
</p><p>மேலும், வடக்கு நோக்கிப் பயணித்த வாகனத்தில் இருந்த சாரதியும் பயணியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தங்களது வாகனத்தின் டாஷ்கேம் காட்சிகளை வைத்திருப்பவர்கள், 705-675-9171 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சட்பரி பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T16:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோ ஏரியின் பெயரை மாற்ற டிரம்ப் பரிசீலனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-threatens-to-change-name-of-lake-ontario-1787666752"></link>
            <id>https://canadamirror.com/article/trump-threatens-to-change-name-of-lake-ontario-1787666752</id>
            <summary type="text">அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியாக உள்ள புகழ்பெற்ற &#039;ஒன்டாரியோ ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியாக உள்ள புகழ்பெற்ற 'ஒன்டாரியோ ஏரியின் பெயரை 'அமெரிக்கா ஏரி' என மாற்றப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துடன் இனி பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ள மாட்டோம் என்பதால், ஒன்டாரியோ ஏரியின் பெயரை 'அமெரிக்கா ஏரி' என மாற்றுவது குறித்து அமெரிக்கா தீவிரமாக பரிசீலித்து வருகிறது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>முன்னதாக மெக்சிகோ வளைகுடாவின் பெயரை 'அமெரிக்க வளைகுடா' என டிரம்ப் மாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82f44eca-8f44-4ce7-a1bf-846bbdcaf0f6/26-6a8da14288628.webp' /></p><p>
</p><p>புத்தாண்டு முதல் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்கள், டிரக்குகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் உருக்குப் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.</p><p>
இதற்குப் பதிலடியாக, கனடா தரப்பிலிருந்தும் அமெரிக்கப் பொருட்களுக்கு இணையான வரிகள் விதிக்கப்படும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T15:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் வரி எச்சரிக்கைக்கு ஒன்டாரியோ முதல்வர் காரசாரமான பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-premier-says-trump-can-kiss-my-ass-1787666273"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-premier-says-trump-can-kiss-my-ass-1787666273</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீது அடுத்த ஆண்டு முதல் 50 சதவீதம் வரி விதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீது அடுத்த ஆண்டு முதல் 50 சதவீதம் வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார். </p><p>இதற்கு ஒன்டாரியோ மாகாண முதல்வர் டோக் ஃபோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய ஃபோர்ட், டிரம்பின் இந்த அச்சுறுத்தலைச் சற்றும் பொருட்படுத்தப்போவதில்லை என்று மிகக் கடுமையான வார்த்தைகளில் பதிலடி கொடுத்தார். </p><p>
டிரம்பின் பதிவுக்குப் பிறகு பேசிய ஃபோர்ட், கனடா அனைத்து வளங்களையும் பயன்படுத்தி டிரம்பை எதிர்த்துப் போராடும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9b9815b-f403-44d1-99a5-4f9b2e08d73b/26-6a8d9f63156ac.webp' /></p><p>அவர் ஒரு அடாவடிக்காரர், சர்வாதிகாரி மற்றும் தொழில் நஷ்டங்களின் ராஜா. அவருக்கு நான் பதிலளித்து அவரது வலையில் விழப்போவதில்லை. அவர் ஒரு தோல்வியாளர்" என்று ஃபோர்ட் சாடினார்.</p><p> 
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய், பொட்டாஷ், யுரேனியம் மற்றும் அரிதான உலோகங்களின் விலையை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் அல்லது அவற்றை நிறுத்தி அமெரிக்காவிற்குச் செல்லும் எண்ணெய் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித்திடம் வலியுறுத்தப்போவதாக ஃபோர்ட் கூறினார். </p><p>
அமெரிக்காவிற்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தின் மீது ஏற்றுமதி வரியை உயர்த்த வேண்டும் என்றும், அனைத்து மாகாண முதல்வர்களும் இதில் ஒன்றாக இணைய வேண்டும் என போர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T14:58:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது - இஸபெலா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/northern-governor-requested-to-diaspora-1787649367"></link>
            <id>https://canadamirror.com/article/northern-governor-requested-to-diaspora-1787649367</id>
            <summary type="text">கனடாவில், ஈழத் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என&amp;nbsp;இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண மருத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், ஈழத் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என&nbsp;இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் தெரிவித்துள்ளார்.</p><p>வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.</p><p>இந்த நிகழ்வில் இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் மற்றும் வட மாகாண ஆளுநர் என். வேதநாயகன், இந்த குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை நன்கொடையாளர்கள்&nbsp; உள்ளிட்ட பலர் பங்கேற்று இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f666a7b6-61e7-4e9d-996b-544f447aea32/26-6a8d5f29a3b3b.webp' /></p><p>இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்த இலங்கையர்கள் அந்நாட்டுக்கு பல்வேறு வகையில் சேவைகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான கனடிய தூதுவர் இஸபெல்லா மார்டின் தெரிவித்துள்ளார்.
</p><p>
கனடாவின் வெற்றிக்கு புலம்பெயர் இலங்கையர்களின் பங்களிப்பு மகத்துவமானது என அவர் தெரிவித்துள்ளார்.</p><p> இவ்வாறு கனடிய புலம்பெயர் தமிழர்கள் தாயகத்திற்கு கொடைகளை வழங்குவதும் தங்களது திறமைகளை வழங்குவதும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
கனடாவில் பெற்றுக் கொண்டவற்றை தாயக சமூகத்திற்கு வழங்குவது போற்றுதற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தத் தருணம் பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருவதாக அவர் குறிப்பிடுகின்றார். </p><p>கனடாவின் சார்பில் இந்த நன்கொடை வழங்குவதற்கு வழங்கும் நிகழ்வுடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p>
</p><p>இதேவேளை, கனடிய வாழ் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஈழத்து தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாக வட மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.</p><p>கனடாவில் கடின உழைப்பில் பெற்றுக் கொள்ள பட்ட பணம் தாயகத்தில் தேவைகள் உடையவருக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
புலம்பெயர் சமூகத்திடம் தாம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
புலம்பெயர் சமூகத்தினர் தாயகத்திற்கு தொழில்நுட்பத்தையும் அறிவையும் வழங்க முடியும் எனவும் மருத்துவமனைகளுக்கு உதவுமாறு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
எமது மருத்துவமனைகளுக்கு காணப்படும் முக்கியமான தேவைப்பாடுகளை கண்டறிந்து பேண்தகு அடிப்படையில் அவற்றை பூர்த்தி செய்யுமாறு புலம்பெயர் சமூகத்திடம் கோருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>
கடந்த காலங்களில் புலம்பெயர் சமூகத்தினர் இலங்கையில் முதலீடு செய்வதில் எதிர்நோக்கிய நிர்வாக மற்றும் ஏனைய சிக்கல்களை களைவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.</p><p>
வட மாகாணத்தை முதலீடுகளுக்கு சிறந்த ஓர் மாகாணமாகவும் சமூக பொறுப்புடைய ஒரு மாகாணமாகவும் மாற்றுவதற்கு முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
கொடையாளர்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டுமே பெருந்தொகை பணத்தை நம்பி கொடுப்பார்கள் எனவும் தற்போதைய சமூகத்தில் ஏமாற்று பேர்வழிகள் இருக்கிறார்கள் எனவும் இந்த கொடையாளி மீது நம்பிக்கை கொண்டு பெருந்தொகை பணம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>நன்கொடையாளர்களின் சேவை தொடர வேண்டும் எனவும் வடமகாணத்திற்கு தொடர்ந்து சேவைகள் ஆற்றப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T13:23:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சை புரட்டிப்போட்ட சூறாவளி ; கடும் சேதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cyclone-batters-france-tornado-severe-damage-1787664336"></link>
            <id>https://canadamirror.com/article/cyclone-batters-france-tornado-severe-damage-1787664336</id>
            <summary type="text">&amp;nbsp; பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமான கார்கசோன் (Carcassonne) நகருக்கு அருகில் திடீரென உருவான அரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமான கார்கசோன் (Carcassonne) நகருக்கு அருகில் திடீரென உருவான அரிதான சூறாவளி (Tornado) காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்த பகுதியில் ஏற்பட்ட சூப்பர்செல் (Supercell) இடியுடன் கூடிய பருவநிலை மாற்றம் காரணமாக இந்தச் சூறாவளி உருவாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/459df4d7-36a6-4299-938a-39fb2cec2069/26-6a8d97d2235af.webp' /></p><p>
சூறாவளியின் கோரத் தாண்டவத்தால் அந்த பகுதியில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
</p><p>
இந்த இயற்கை பேரிடரின் காரணமாக குறைந்தபட்சம் 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந் நிலையில் சூறாவளி தாக்கிய பகுதிகளின் காட்சியமைப்புகளுடன் கூடிய காணொளிகளும் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T13:22:55+00:00</updated>
        </entry>
    </feed>
