<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-23T15:20:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் 1.3 மில்லியன் யூரோ மதிப்புள்ள நகைகளுடன் கைப்பை மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-man-hand-bag-worth-jewelry-missing-in-france-1784809089"></link>
            <id>https://canadamirror.com/article/us-man-hand-bag-worth-jewelry-missing-in-france-1784809089</id>
            <summary type="text">அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தொழிலதிபர், பரிசில் உள்ள ஆடம்பர தங்கும் விடுதியில் தான் கொண்டு வந்த கைப்பை மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக முறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தொழிலதிபர், பரிசில் உள்ள ஆடம்பர தங்கும் விடுதியில் தான் கொண்டு வந்த கைப்பை மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
 காணமல் போன பையில் மொத்தம் 1.3 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள உயர்தர நகைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d813559d-6fb9-4bae-9f89-d9c69153718b/26-6a62068283293.webp' /></p><h2>&nbsp;8 இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள வைர மோதிரம்</h2><p>
</p><p>
காணாமல் போன பொருட்களில் சுமார் 8 இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள வைர மோதிரம் உள்ளிட்ட பல விலையுயர்ந்த நகைகள் இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

பயணத்தின் எந்தக் கட்டத்தில் கைப்பை மாயமானது என்பது இதுவரை உறுதியாகத் தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

இந்த மர்மமான நகை மாயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>விமான நிலையம், பயண வழித்தடங்கள் மற்றும் தங்கும் விடுதியின் பாதுகாப்பு காட்சிப்பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. 

கைப்பையை கண்டுபிடிக்கவும், சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக்கொணரவும் பிரான்ஸ் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T13:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கே ஆட்டம்... ரஷ்ய ராணுவத்திற்கு பெரும் பீதியை ஏற்படுத்திய உக்ரைன் Flamingo ஏவுகணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ukraine-flamingo-missile-fear-russian-military-1784788885"></link>
            <id>https://canadamirror.com/article/ukraine-flamingo-missile-fear-russian-military-1784788885</id>
            <summary type="text">&amp;nbsp;ரஷ்ய - உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன், ‘ஃபயர் பாயிண்ட்’ (Fire Point) என்ற தனது உள்நாட்டு நிறுவனத்தின் மூலம் ‘எஃப்.பி-5 ஃ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ரஷ்ய - உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன், ‘ஃபயர் பாயிண்ட்’ (Fire Point) என்ற தனது உள்நாட்டு நிறுவனத்தின் மூலம் ‘எஃப்.பி-5 ஃப்ளமிங்கோ’ (FP-5 Flamingo) தொலைதூரக் ஏவுகணையை ரகசியமாக உருவாக்கி உள்ளமை ரஷ்ய ராணுவத் தளபதிகளுக்குப் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளின் சோதனைக் மாதிரிகள் பிரகாசமான ‘இளஞ்சிவப்பு’ (Pink) நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருந்ததால், இது ‘பிங்க் ஃப்ளமிங்கோ’ என அழைக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bae922d7-2e36-449b-980f-fe40e659e119/26-6a61b796c2df2.webp' /></p><h2>அமெரிக்காவிற்கே&nbsp; ஆட்டம்...</h2><p>
</p><p>
இந்த ஏவுகணையின் மிகவும் வியப்பூட்டும் அம்சம் என்னவென்றால், இதன் என்ஜின்கள் குப்பைக்கிடங்குகளிலிருந்தும் பயன்படுத்தப்படாத பழைய பழைய கடையிருப்புகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டவை . </p><p>

சோவியத் காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுப் பயன்பாடின்றி வீசப்பட்ட ‘இவ்செங்கோ ஏஐ-25’ (Ivchenko AI-25) ரக டர்போஃபேன் என்ஜின்களை உக்ரேனியப் பொறியாளர்கள் தேடிக் கண்டுபிடித்து, அவற்றில் மலிவான உதிரிபாகங்களைப் பொருத்தி, ஏவுகணையில் இயங்கும் வகையில் வெற்றிகரமாக மாற்றியமைத்துள்ளனர்.</p><p>


அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டொமஹாக்’ (Tomahawk) ஏவுகணையை விட இரண்டு மடங்கு அதிக எடையுள்ள (சுமார் 1,150 கிலோ) வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஃப்ளமிங்கோ ஏவுகணைகள், தயாரிப்புச் செலவில் டொமஹாகை விட ஐந்து மடங்கு மலிவானவை என கூறப்படுகின்றது.
</p><p>
சிக்கலான அமைப்புகள் எதுவுமின்றி மிக எளிமையான ஃபைபர் கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் உடற்பகுதியைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஏவுகணைகளை, உக்ரைன் ராணுவம் எவ்வித மேற்கத்திய நாடுகளின் அனுமதியுமின்றி ரஷ்ய நிலப்பரப்பிற்குள் மிக ஆழமாகப் பாய்ச்சி வருகிறது.
</p><p>
ரஷ்யாவின் வோல்கோகிராட் மற்றும் செபோக்சரி ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த முக்கிய ராணுவ ஆயுத உற்பத்தி ஆலைகள் மற்றும் போர் விமான உதிரிபாகத் தொழிற்சாலைகள் மீது இந்த ஃப்ளமிங்கோ ஏவுகணைகள் வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> 

இந் நிலையில் குப்பையிலிருந்து மீட்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு ரஷ்யாவின் ஆழமான ராணுவ அமைப்புகளை உக்ரைன் துல்லியமாகத் தாக்கி வருவது, சர்வதேச ராணுவ வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-23T12:17:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் புதிய துப்பாக்கிச் சூட்டுச் சட்டம் ; புலம்பெயர் சமூகத்தினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-gun-laws-france-warning-immigrant-communities-1784804456"></link>
            <id>https://canadamirror.com/article/new-gun-laws-france-warning-immigrant-communities-1784804456</id>
            <summary type="text">பிரான்சில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை விரிவுபடுத்தும் புதிய சட்டமூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் வழங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை விரிவுபடுத்தும் புதிய சட்டமூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அது இந்த ஆண்டின் இறுதிக்குள் சட்டமாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்தச் சட்டம் தொடர்பாக பிரான்சில் கடும் அரசியல் மற்றும் சமூக விவாதங்கள் எழுந்துள்ளன. அதிகரித்து வரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த இந்தச் சட்டம் அவசியம் என வலதுசாரி அரசியல் தரப்புகள் வலியுறுத்துகின்றன. </p><p>அதேவேளை, இது மனித உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாக இடதுசாரி கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p>

இந்தச் சட்டத்திற்கு எதிராக சுமார் 7 இலட்சத்து 30 ஆயிரம் பேர் கையொப்பமிட்ட மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அது ஏற்கப்படவில்லை. </p><p>இதையடுத்து, செப்டம்பர் 19 ஆம் திகதி நாடளாவிய அளவில் எதிர்ப்புப் பேரணி நடத்த மனித உரிமை அமைப்புகளும் பல்வேறு அரசியல் அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1614ba55-2349-447f-be36-10329fe2fcae/26-6a61f46a27baa.webp' /></p><p>இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், பிரான்சில் வாழும் புலம்பெயர் சமூகங்கள், குறிப்பாக தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
ஒருபுறம், வீதி வன்முறை, கொள்ளை, வழிப்பறி மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் கிடைப்பதால், வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மேம்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
</p><p>
மறுபுறம், நிறவெறி, தவறான அடையாளம் காணல் அல்லது காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் போன்ற காரணங்களால் சிறுபான்மையினருக்கு தேவையற்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
</p><p>
குறிப்பாக, மொழிப் பிரச்சினை அல்லது பதற்றம் காரணமாக காவல்துறையின் உத்தரவுகளை சரியாகப் பின்பற்றத் தவறினால், அதனால் கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, புலம்பெயர் குடும்பங்கள் தங்களது பிள்ளைகளுக்கு சட்டங்களை மதித்து நடந்து கொள்வதன் அவசியத்தை விளக்க வேண்டும் என்றும், காவல்துறையினருடன் மோதல்களைத் தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/759086fb-0a70-4453-a99c-98c1ab33eb4d/26-6a61f89789920.webp' /></p><p>அதேபோன்று, வெளியே செல்லும் போது செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும், சட்டவிரோத பொருட்கள் அல்லது ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது, காவல்துறையினரின் அறிவுறுத்தல்களை அமைதியாகப் பின்பற்ற வேண்டும், தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இரவு நேரங்களில் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பதுடன், இளைஞர்களின் நட்பு வட்டம் மற்றும் அவர்கள் செல்லும் இடங்கள் குறித்து பெற்றோர் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரான்சில் வாழும் புலம்பெயர் சமூகத்தினர் புதிய சட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, நடைமுறையில் அமல்படுத்தப்படும் விதிமுறைகளைப் பின்பற்றி சட்டத்திற்குள் பாதுகாப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-23T11:14:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லைபீரியா வரலாற்றிலே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/the-biggest-drug-bust-in-liberia-s-history-1784803215"></link>
            <id>https://canadamirror.com/article/the-biggest-drug-bust-in-liberia-s-history-1784803215</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையில் அமைந்துள்ள லைபீரியாவின் மன்ரோவியாவில் உள்ள சட்டவிரோத சேமிப்புக் கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், லைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையில் அமைந்துள்ள லைபீரியாவின் மன்ரோவியாவில் உள்ள சட்டவிரோத சேமிப்புக் கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், லைபீரியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை ஜூலை 21, 2026 அன்று நடைபெற்றது.
</p><p>
இதன்போது சுமார் 370 மில்லியன் டாலர் மதிப்புள்ள உயர்தர கொக்கைனைப் போலீசார் கைப்பற்றினர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காகச் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb0080d0-6bad-45a3-b4a9-b4e00ee95142/26-6a61ef90f3371.webp' /></p><p>
</p><p>
 லைபீரிய நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை பிடிபட்ட போதைப்பொருட்களின் அளவுகளில் இதுவே மிகப்பெரிய அளவாகும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-23T10:38:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/warning-issued-by-yemen-s-houthi-rebels-red-sea-1784802529"></link>
            <id>https://canadamirror.com/article/warning-issued-by-yemen-s-houthi-rebels-red-sea-1784802529</id>
            <summary type="text">&amp;nbsp; சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
செங்கடல் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், சவூதி அரேபியா வழியாக இந்தியாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் ஏற்றி வந்த 2 வர்த்தகச் சரக்குக் கப்பல்கள் நடுவழியிலேயே திருப்பியனுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86e2a17d-29a3-4268-9fa7-b3d0a32a506a/26-6a61ece2a7e03.webp' /></p><p>
</p><p>


காசா போருக்கு எதிர்ப்பு தெரிவித்து நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களை இலக்கு வைக்கும் ஹவுதியினர், சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என உத்தியோகபூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>


வழக்கமாகச் செங்கடல் வழியாக வரும் கப்பல்கள், இந்த அச்சுறுத்தல் காரணமாகத் தற்போது ஆப்பிரிக்க கண்டத்தைச் சுற்றி (நன்னம்பிக்கை முனை வழியாக) மிக நீண்ட சுழற்சிப் பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-23T10:27:04+00:00</updated>
        </entry>
    </feed>
