<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-04T19:28:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வாகனம் மோதி எலக்ட்ரிக் பைக் ஓட்டுநர் பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crash-involving-motorcycle-passenger-vehicle-1788542553"></link>
            <id>https://canadamirror.com/article/crash-involving-motorcycle-passenger-vehicle-1788542553</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோவில் எல்மர் பகுதிக்குத் தெற்கே வெள்ளிக்கிழமை காலை எஸ்.யு.வீ வாகனம் மோதியதில் எலக்ட்ரிக் பைக் ஓட்டிச் சென்றவர் உயிரிழந்தார். 
மலாஹைட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோவில் எல்மர் பகுதிக்குத் தெற்கே வெள்ளிக்கிழமை காலை எஸ்.யு.வீ வாகனம் மோதியதில் எலக்ட்ரிக் பைக் ஓட்டிச் சென்றவர் உயிரிழந்தார்.</p><p> 
மலாஹைட் பகுதியில் உள்ள ஜான் வைஸ் லைன் மற்றும் இம்பீரியல் ரோடு சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 6:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. </p><p>
ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பைக் ஓட்டுநர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22b17343-544d-42f7-8730-ed07c23b9adb/26-6a9afe5b0809a.webp' /></p><p> </p><p>எஸ்.யு.வீ வாகனத்தில் ஆறு பேர் பயணித்ததாகவும், அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என குறிப்பிட்டனர்.</p><p>எனினும், அந்த காரின் பயணிகள் பக்கக் கதவு பலத்த சேதமடைந்துள்ளது. 
விபத்துக்கான காரணம் மற்றும் யார் மீது தவறு என்பதைத் துல்லியமாகக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T18:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தன்னை கருணைக்கொலை செய்யுமாறு கோரிய நகைச்சுவை நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-court-denies-toronto-womans-motion-1788537333"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-court-denies-toronto-womans-motion-1788537333</id>
            <summary type="text">&amp;nbsp;மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
</p><p>எனினும், இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்குப் பதிலளிக்குமாறு கனடா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>டொராண்டோவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும் நகைச்சுவைக் கலைஞருமான கிளாரி புரோஸோ , சிறுவயது முதலே கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17fafbec-6a8d-4ac7-aaaf-337e6e70589b/26-6a9ae9f6e5020.webp' /></p><p>
</p><p>பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் தனக்குக் தீராத மன உளைச்சல் நீடிப்பதால், சட்டம் வழங்கும் கருணைக்கொலைக்குத் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மே 2026-இல் அவசர மனுத் தாக்கல் செய்திருந்தார்.
</p><p>நீதிபதி கரிசிமா மாதன், புரோஸோவின் வேதனைகள் உண்மையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றபோதிலும், சட்ட விலக்கு அளிப்பது சமூகத்திலும் அரசின் கொள்கை முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மனுவை நிராகரித்தார்.
</p><p>அதேசமயம், 2024-ஆம் ஆண்டு புரோஸோ தாக்கல் செய்த அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை 14 நாட்களுக்குள் தொடங்குமாறு கனடா தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
</p><p>கனடாவில் 2021-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, தீர்க்க முடியாத நோய் மற்றும் உடல் ஊனம் உள்ளவர்கள் கருணைக்கொலை கோர முடியும்.</p><p> ஆனால், மனநலப் பிரச்சினையை மட்டுமே காரணமாகக் கொண்டு கருணைக்கொலை கோருவதற்கு அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. </p><p>இத்தடையை நீட்டிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசிய புரோஸோ, "மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களைப் போன்ற சம உரிமையோ, உடல் சார்ந்த சுய உரிமையோ இல்லை என்பதை அரசாங்கம் மீண்டும் நிரூபித்துள்ளது. </p><p>நான் தொடர்ந்து வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்" என வேதனையுடன் தெரிவித்தார்.
</p><p>அரசியலமைப்புச் உரிமைகளின்படி மனநலப் பாதிப்பு உள்ளவர்களுக்கும் கருணைக்கொலை உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்கான முதன்மை வழக்கைத் தொடர்ந்து நடத்தப்போவதாக புரோஸோவின் சட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T17:32:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோவில் பலத்த புயல்: சீரமைக்கப்படும் மின்சார விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cleanup-continues-after-destructive-ontario-1788539021"></link>
            <id>https://canadamirror.com/article/cleanup-continues-after-destructive-ontario-1788539021</id>
            <summary type="text">தெற்கு ஒன்டாரியோவில் இந்த வாரம் வீசிய கடும் இடிமின்னலுடன் கூடிய புயலைத் தொடர்ந்து, மின்தடை ஏற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரத்தை மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஒன்டாரியோவில் இந்த வாரம் வீசிய கடும் இடிமின்னலுடன் கூடிய புயலைத் தொடர்ந்து, மின்தடை ஏற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரத்தை மீண்டும் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p> 
இதனால் மின்சாரமின்றி இருளில் மூழ்கியிருந்த கட்டிடங்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது.</p><p> 
புதன்கிழமை சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்தது. அபாயகரமான சூறாவளிக் காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின்கம்பிகள் அறுந்து விழுந்தன, மேலும் முக்கிய நகரச் சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/486d2baa-ca51-4f11-bb06-e68fe96e6109/26-6a9af08f02165.webp' /></p><p> </p><p>
டொராண்டோ தீயணைப்புத் துறைக்கு 24 மணி நேரத்திற்குள் சுமார் 1,500 அவசர அழைப்புகள் வந்தன. 2013 பனிப்புயலுக்குப் பிறகு ஒரே நாளில் பதிவான இரண்டாவது அதிகபட்ச அவசர அழைப்பு அளவு இதுவாகும்.</p><p>
டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் புயல் பரவலான பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக நகர மேலாளர் பால் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
</p><p>மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களுள் டொராண்டோவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 50,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய ரொஜர்ஸ் மைதானமும் ஒன்றாகும்.</p><p> அங்கு வீசிய அதிவேகக் காற்றினால் பார்வையாளர் இருக்கைகள் பிடுங்கி எறியப்பட்டு, அரங்கின் சில பகுதிகள் நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளன. </p><p>
டொராண்டோவில் ஏற்பட்ட இந்தச் சேதங்கள் 'டவுன்பர்ஸ்ட்' காரணமாகவே நிகழ்ந்துள்ளதாக 'நார்தர்ன் டொர்னாடோஸ் புராஜெக்ட்' ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T17:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில், சிறுவனைக் கடித்துக் கொன்ற நாய்களின் உரிமையாளருக்கு தண்டனை அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-whose-dogs-killed-11-year-old-boy-1788422224"></link>
            <id>https://canadamirror.com/article/woman-whose-dogs-killed-11-year-old-boy-1788422224</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரில் 2024 ஆம் ஆண்டு 11 வயது சிறுவனை இரண்டு நாய்கள் கடித்துக் கொன்ற வழக்கில், நாய்களின் உரிமையாளரான கிரிஸ்டல் மெக்டொனால்ட் என்பவரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரில் 2024 ஆம் ஆண்டு 11 வயது சிறுவனை இரண்டு நாய்கள் கடித்துக் கொன்ற வழக்கில், நாய்களின் உரிமையாளரான கிரிஸ்டல் மெக்டொனால்ட் என்பவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.</p><p> 
கடந்த 2024 ஏப்ரல் மாதம், கிரிஸ்டலுக்குச் சொந்தமான இரண்டு 'கேன் கோர்சோ' ரக நாய்கள் தாக்கியதில் கேச் கிரிஸ்ட் என்ற 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
</p><p> இச்சம்பவத்தில் 'மரணத்தை விளைவித்த குற்றவியல் அலட்சியம்' இழைத்ததாகக் கூறி, கடந்த மே மாதம் கிரிஸ்டலை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3e18196-06f4-4d82-90b5-7a6df6fd00bb/26-6a992852585d1.webp' /></p><p> </p><p>
புதன்கிழமை நடைபெற்ற தண்டனை தொடர்பான விசாரணையின் போது, கிரிஸ்டல் மன்றத்தில் கண்ணீருடன் பேசினார். 
சிறுவனின் இழப்பிற்குப் பிறகு தான் கடுமையான குற்ற உணர்ச்சி, துக்கம் மற்றும் அவமானத்தைச் சுமந்து வருவதாகத் தெரிவித்தார். "நான் தினமும் அவனைப் பற்றியே நினைக்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p> 
பிரிட்டிஷ் கொலம்பியாவில் தாயாருடன் வசித்து வந்த கேச், வசந்த கால விடுமுறையைக் கழிப்பதற்காக எட்மண்டனின் சம்மர்சைட் பகுதியில் வசித்து வந்த தந்தை வெஸ்லியைச் சந்திக்க வந்திருந்தான். அப்போது வெஸ்லி, கிரிஸ்டலுடன் ஒரே வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தார். </p><p>
தந்தையான வெஸ்லி வீட்டின் கரேஜில் வேலை செய்துகொண்டிருந்தபோது, சிறுவன் வீட்டிற்குள் வீடியோ கேம் விளையாடச் சென்றுள்ளான். </p><p>
45 நிமிடங்களுக்குப் பிறகு வெஸ்லி வீட்டிற்குள் சென்றபோது, சமையலறைத் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை இரு நாய்களும் சூழ்ந்திருந்தன.
</p><p>சிறுவன் கழுத்தில் ஏற்பட்ட கடுமையான கடி காயங்களால் உயிரிழந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த இரண்டு நாய்களும் தயைக்கொலை செய்யப்பட்டன.</p><p> 
சிறுவன் கேச் கொல்லப்படுவதற்கு முன்பே, இந்த நாய்கள் இரண்டு செல்லப் பிராணிகளைக் கொன்றதுடன், உரிமையாளர் கிரிஸ்டல் உட்பட மூன்று பெரியவர்களைக் கடித்துக் காயப்படுத்தியிருந்தன என்பது விசாரணையில் அம்பலமானது.</p><p> 
ஆல்பர்ட்டா உயர் நீதிமன்ற நீதிபதி எரிக் மேக்லின் பயிற்சியற்ற மற்றும் ஆபத்தான இந்த நாய்களிடமிருந்து சிறுவன் பாதிக்கப்படுவதைத் தடுக்க கிரிஸ்டல் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் கண்டித்திருந்தார். </p><p>
சிறுவனின் தந்தை வெஸ்லி நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது, கேச் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நபர் எனக் கூறி உருக்கமடைந்தார்.
</p><p> எனினும், கிரிஸ்டலைச் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். "கூடுதல் தண்டனையோ அல்லது சிறைவாசமோ ஏற்கனவே நடந்த இழப்பைச் சரிசெய்துவிடாது" என அவர் கூறினார். 
இவ்வழக்கின் இறுதித் தண்டனைத் தீர்ப்பை நீதிபதி எரிக் மேக்லின் இன்று வழங்கவுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T14:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா இணைய உளவு அமைப்பின் புதிய தலைவராக ஸ்காட் ஜோன்ஸ் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/carney-chooses-senior-bureaucrat-scott-jones-1788524000"></link>
            <id>https://canadamirror.com/article/carney-chooses-senior-bureaucrat-scott-jones-1788524000</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் இணைய வழியிலான உளவு அமைப்பான &#039;கமினிகேஷன்ஸ் செக்யூரிட்டி எஸ்டாப்ளிஷ்மென்ட்&#039; தலைவராக மூத்த அரசு அதிகாரி ஸ்காட் ஜோன்ஸை பிரதமர் மார்க் கார்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் இணைய வழியிலான உளவு அமைப்பான 'கமினிகேஷன்ஸ் செக்யூரிட்டி எஸ்டாப்ளிஷ்மென்ட்' தலைவராக மூத்த அரசு அதிகாரி ஸ்காட் ஜோன்ஸை பிரதமர் மார்க் கார்னி நியமித்துள்ளார்.</p><p> 
தற்போது ஓய்வு பெறவுள்ள கரோலின் சேவியருக்குப் பதிலாக ஸ்காட் ஜோன்ஸ் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர் 'ஷேர்டு சர்வீசஸ் கனடா' அமைப்பின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.</p><p> 
அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இணைய வழியில் வெளிநாட்டு உளவுத் தகவல்களைச் சேகரிப்பதும், இணைய அச்சுறுத்தல்களிலிருந்து கனடாவைப் பாதுகாப்பதும் சி.எஸ்.இ அமைப்பின் முதன்மைப் பணியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b6a280b-fffe-490f-abee-250d50fdb7c7/26-6a9ab5e1f0eed.webp' /></p><p> </p><p>
ஸ்காட் ஜோன்ஸ் 2018 முதல் 2021 வரை CSE அமைப்பின் கீழ் இயங்கும் 'கனடியன் சென்டர் ஃபார் சைபர் செக்யூரிட்டி' அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார். </p><p>மேலும், 2008 முதல் 2018 வரை இந்த அமைப்பில் பல்வேறு முக்கியப் பதவிகளை அவர் வகித்துள்ளார். </p><p>
ஓய்வு பெறவுள்ள கரோலின் சேவியர் கனடா நாட்டுக்கு ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைகளைப் பாராட்டிப் பிரதமர் மார்க் கார்னி தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T13:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
