<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-30T22:57:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பேரழிவு ; நீர்மின் நிலைய சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க தீவிர தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/search-and-rescue-operation-underway-in-nepal-1788130196"></link>
            <id>https://canadamirror.com/article/search-and-rescue-operation-underway-in-nepal-1788130196</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து திரிசூலி-3ஏ (Trishuli-3A) நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து திரிசூலி-3ஏ (Trishuli-3A) நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
இந்த மீட்புப் பணிகளில் முப்படை வீரர்கள் காவல்துறையினர் மற்றும் பயிற்சி பெற்ற நாய்களுடன் கூடிய 90 பேர் கொண்ட சிறப்பு மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ecd5ddc-9692-4b1d-a5f3-7c3a238e96d6/26-6a94b3963e050.webp' /></p><p>

சுரங்கத்தின் மேற்பகுதியில் (Crown) 2அல்லது3 அடி அளவில் துளையிடப்பட்டு கயிறுகள் மூலம் மீட்புப் படையினர் உள்ளே இறங்கிச் சோதனைகளை மேற்கொண்டனர்.</p><p>எனினும் உள்ளிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில், கடுமையான மற்றும் ஆபத்தான சூழலிலும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து 24 மணி நேரமும் அயராது உழைத்து வருவதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்தச் பேரிடரில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில் நீர்மின் நிலையச் சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
</p><p>
வெள்ளத்தால் வீதிகள் அடித்துச் செல்லப்பட்டதாலும் பாலங்கள் சேதமடைந்ததாலும் ரசுவா மாவட்டம் இன்னும் வெளி உலகத்துடன் தொடர்பில்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தப் பகுதியில் உணவுப் பொருட்கள் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவில் இருப்பதாகவும் சமையல் எரிவாயு முற்றிலுமாக தீர்ந்துவிட்டதாகவும் சுகாதாரப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
மின்சார விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளதால் மக்கள் உறவினர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.
</p><p>
வீதிகள் சாலைகள் சீரமைக்கப்பட்டு வரும் பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் துண்டிக்கப்பட்டுள்ள சமூகங்களை விரைந்து சென்றடைய மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் முகாமை ஆணையம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை இந்த பேரிடரில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 800 ஐ அண்மித்துள்ளது.
அதேநேரம் 2500 பேரை இன்னும் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T22:50:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக ஐஸ்லாந்து மக்கள் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/icelanders-take-deci-action-against-european-union-1788125491"></link>
            <id>https://canadamirror.com/article/icelanders-take-deci-action-against-european-union-1788125491</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவை ஐஸ்லாந்து நாட்டு மக்கள் பொது வாக்கெடுப்பில் நிராகரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவை ஐஸ்லாந்து நாட்டு மக்கள் பொது வாக்கெடுப்பில் நிராகரித்துள்ளனர்.
</p><p>
இதன்படி, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 52.8 சதவீத மக்கள் "இல்லை" என்றும் 47.2 சதவீத மக்கள் "ஆம்" என்றும் வாக்களித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a3730af-9864-480d-a3f5-642617c1ef38/26-6a94a1347f9a8.webp' /></p><p>இந்தநிலையில் பொதுமக்களின் இந்த முடிவை மதிப்பதாக ஐஸ்லாந்து பிரதமர் கிரிஸ்ட்ருன் ஃப்ரொஸ்டாடோட்டீர் (Kristrun Frostadottir) தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன் தனது பதவிக்காலம் 2028 இல் முடியும் வரை ஐரோப்பிய ஒன்றிய விவகாரம் மீண்டும் அரசியல் திட்டத்துக்குள் வராது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
</p><p>
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தால் நாட்டின் இறையாண்மை மற்றும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என்று பொது வாக்கெடுப்பில் "இல்லை" என்று வாக்களித்தவர்கள் தெரிவித்து வந்தனர்.
</p><p>
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தால், நாடு சிறப்பான இடத்துக்கு செல்லும் என்று ஆம் என்று வாக்களித்தவர்கள் தெரிவித்து வந்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T21:31:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவும் இஸ்ரேலுமே உண்மையான எதிரிகள் ; ஈரான் உச்ச தலைவர் அதிரடி கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-and-israel-are-real-enemies-iran-supreme-leader-1788112414"></link>
            <id>https://canadamirror.com/article/us-and-israel-are-real-enemies-iran-supreme-leader-1788112414</id>
            <summary type="text">அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய ஒற்றுமைக்கு &quot;உண்மையான எதிரிகள்&quot; என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய ஒற்றுமைக்கு "உண்மையான எதிரிகள்" என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
</p><p>
இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் தங்களின் "உண்மையான எதிரியை" இனம் கண்டு, அதன் திட்டங்களைப் புரிந்து கொண்டு எதிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

"இஸ்லாமிய ஒற்றுமை வாரம்" குறித்த செய்தியை வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94fc2c31-5395-46d0-895a-b4af48cc5a26/26-6a946e1fa462c.webp' /></p><p>ஈரான் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளின் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு இன, கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் புவியியல் ரீதியான வேறுபாடுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் சாக்குப்போக்குகளாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன், ஈரானியர்கள் தங்களுக்குள் எந்தவித வேறுபாடுகளையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
விரும்பத்தக்க மற்றும் ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய நாகரிகத்தை அடைவதற்கு முஸ்லிம்களிடையே ஒற்றுமை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
வொஷிங்டனும் டெல் அவிவும் ஈரானின் எதிரிகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் "உண்மையான எதிரிகள்" என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்தது. இதனையடுத்து, அமெரிக்காவின் சொத்துக்கள் அமைந்துள்ள பிராந்திய நாடுகளின் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த ஜூன் மாதம் ஈரானும் அமெரிக்காவும் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், அந்த இடைக்கால ஒப்பந்தம் விரைவில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-30T21:08:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் பாரிஸில் சிக்கிய 58 அகதிகள் ; பிரித்தானியா செல்லும் வழியில் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/58-refugees-trapped-in-paris-rescued-route-britain-1788123514"></link>
            <id>https://canadamirror.com/article/58-refugees-trapped-in-paris-rescued-route-britain-1788123514</id>
            <summary type="text">பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் 18ஆவது வட்டாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆளில்லா பாரவூர்தியொன்றிலிருந்து 58 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் 18ஆவது வட்டாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆளில்லா பாரவூர்தியொன்றிலிருந்து 58 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 'இம்பாஸ் மார்ட்டோ' (Impasse Marteau) பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சாரதி எவருமின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்திக்குள் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 58 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தமை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1376bbfc-dcdc-4aca-aa18-ad64005bc77a/26-6a94997bef64a.webp' /></p><p>

மீட்கப்பட்டவர்களில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் அகதித் தஞ்சம் கோரியதற்கான ஆவணங்களை வைத்திருந்தவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

எனினும், சட்டபூர்வ வதிவிட ஆவணங்கள் எதுவும் இல்லாத 26 வெளிநாட்டவர்கள் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டு, நிர்வாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இதனிடையே, அகதிகள் மீட்கப்பட்ட பாரவூர்தி சென்-எ-மார்ன் (Seine-et-Marne) மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றுக்குச் சொந்தமானது என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், சம்பவ இடத்துக்கு அருகில் கதவுகள் திறந்த நிலையில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பாரவூர்தியும் காவல்துறையினரின் கவனத்திற்கு வந்துள்ளது.</p><p> அந்த வாகனம் வாடகை வாகன சேவை வழங்கும் நிறுவனமொன்றுக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, மீட்கப்பட்ட அகதிகள் பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் குறித்த பாரவூர்தியில் ஏற்றப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அகதிகளை யார் ஏற்றிச் சென்றனர், அவர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-30T20:58:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு ; 22 வயது இளம்பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shooting-in-switzerland-22-year-old-woman-killed-1788121169"></link>
            <id>https://canadamirror.com/article/shooting-in-switzerland-22-year-old-woman-killed-1788121169</id>
            <summary type="text">வடக்கு சுவிட்சர்லாந்தில் இரவு நேர இசை நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு சுவிட்சர்லாந்தில் இரவு நேர இசை நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 05 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>

சுரிச் நகருக்கு அருகில் உள்ள ஆராவ் எனும் நகரில் அமைந்துள்ள குதிரைப் பந்தய மைதானத்தில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85e32d4b-7d15-45d5-aadb-46e35d6e9b2e/26-6a949052750c0.webp' /></p><p>உயிரிழந்த 22 வயது பெண்ணைத் தவிர, 24 முதல் 27 வயதுக்குட்பட்ட 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 05 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

நிகழ்ச்சியில் இசை அமைத்துக்கொண்டிருந்த 'டேக்கிபோ' என்ற சுவிஸ் டிஜே , இந்த தாக்குதலில் தனது நெருங்கிய நண்பரை இழந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.</p><p>துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற நபர் யார்? அவரது பின்னணி அல்லது தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
</p><p>
கொலையாளியைக் கைது செய்வதற்காகச் சுவிஸ் பொலிஸார் அப்பகுதி முழுவதையும் தீவிரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.</p><p>


நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஆர்காவ் ரேசிங் கிளப் இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவசரக்காலச் சேவையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T20:19:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைப்ரஸ் அருகே கவிழ்ந்த பயணிகள் கப்பல் ; 7 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/passenger-ship-capsizes-near-cyprus-7-dead-1788111934"></link>
            <id>https://canadamirror.com/article/passenger-ship-capsizes-near-cyprus-7-dead-1788111934</id>
            <summary type="text">வட சைப்ரஸ் அருகே சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற பயணிகள் கப்பல் கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட சைப்ரஸ் அருகே சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற பயணிகள் கப்பல் கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள், தலைகீழாக கவிழ்ந்த கப்பலின் அடிப்பகுதியில் பற்றிக் கொண்டு தப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d383723f-d7c6-4329-b7da-1a39b131b501/26-6a946c3fe8af3.webp' /></p><p>தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கப்பல் கெரினியா துறைமுகத்திலிருந்து பிற்பகல் 12:30 க்கு (0930 GMT) புறப்பட்டுள்ளது.
</p><p>
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ன காரணம் என்று தெரியாத நிலையில் அது தண்ணீரை உள்வாங்கத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள துருக்கியின் மெர்சின் மாகாணத்தில் உள்ள தாசுசு துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T17:45:42+00:00</updated>
        </entry>
    </feed>
