<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-15T19:36:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ; 7 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-attacks-lebanon-7-killed-1786820388"></link>
            <id>https://canadamirror.com/article/israel-attacks-lebanon-7-killed-1786820388</id>
            <summary type="text">லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் ஆதரவு பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் நபடிஹா மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d90e8d3-bec5-4fd3-9853-10db7eb9583e/26-6a80b7266bade.webp' /></p><p>தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துக்கு லெபனான் அதிபர் ஜோசப் அரோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இஸ்ரேல்–ஹிஸ்புல்லா இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இரு தரப்புக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-15T18:59:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா பல்கலைக்கழக வளாகம் அருகே துப்பாக்கி சூடு ; 5 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shooting-near-american-university-campus-5-injured-1786812765"></link>
            <id>https://canadamirror.com/article/shooting-near-american-university-campus-5-injured-1786812765</id>
            <summary type="text">அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள விர்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் விடுதி அருகே இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் 5 பேர் காயமடைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள விர்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் விடுதி அருகே இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் 5 பேர் காயமடைந்தனர்.
</p><p>
பல்கலைக்கழகத்தின் Quad Annexes பகுதியில், விடுதிகளுக்கு வெளியே துப்பாக்கிக் காயங்களுடன் 5 பேரை பொலிஸார் கண்டெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/637f5495-7dab-49b0-88dd-55aed7c26ff7/26-6a80995ed1f89.webp' /></p><p>உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாணவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.</p><p> பின்னர் ஊரடங்கு நீக்கப்பட்டாலும், வளாகத்தில் தொடர்ந்து பலத்த பொலிஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. </p><p>துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T16:53:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்த குழந்தைக்கு உரிமை கொண்டாடிய வாடகை தாய்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/surrogate-mother-claim-rights-to-the-newborn-us-1786798720"></link>
            <id>https://canadamirror.com/article/surrogate-mother-claim-rights-to-the-newborn-us-1786798720</id>
            <summary type="text">அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்த பெற்றோர்கள், ஒரு கட்டத்தில் வாடகை தாயிடம் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதை தொடர்ந்து, கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்த பெற்றோர்கள், ஒரு கட்டத்தில் வாடகை தாயிடம் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதை தொடர்ந்து, குழந்தை பெற்றுக்கொண்ட&nbsp; பெண், குழந்தை தனக்கு தான் சொந்தம் என்று கூறி நீதிமன்றத்தை நாடியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த தம்பதிகளான ஓமர் அகமது மற்றும் நெளஷீன் கில்கர் ஆகியோர், செவிலியரான மெக்கென்னா வெஸ்ட் என்ற வாடகை தாயை அணுகி, தங்களது குழந்தையை பெற்றுத் தருமாறு கூறியுள்ளனர்.&nbsp;</p><h2>20 ஆவது வாரத்தில், குழந்தைக்கு இதய நோய்</h2><p>&nbsp;அது தொடர்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தில், சிசுவில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அந்த சிசுவை கலைப்பதற்கான ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.&nbsp;</p><p>இதையடுத்து சிசுவின் 20 ஆவது வாரத்தில், குழந்தைக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது.&nbsp;</p><p>குழந்தையின் இதயம் இடது பக்கத்தில் முழுமையாக வளர்ச்சியடையாமல், போதுமான அளவு செயல்பட தவறும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக வைத்திய அறிக்கைகள் தெரிவித்தன.&nbsp;</p><p>இதய நோய் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைக்கு, பிறந்த உடனேயே சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும் என்றும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.&nbsp;</p><p>இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர்கள், வாடகை தாயிடம் சிசுவை கலைக்க கூறியுள்ளனர். ஆனால் அவரோ, குழந்தையை நானே வைத்துக்கொள்கிறேன் என்று கூறி, டெல்லாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளியூருக்கு தப்பி செல்ல முயன்றுள்ளார்.&nbsp;</p><p>பின்னர் அந்த வாடகை தாய் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். பிறந்த அந்த குழந்தைக்கு இதய கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.&nbsp;</p><p>இதையடுத்து பிறந்த குழந்தையுடன் வாடகைத் தாய் டெக்சாஸ் மாகாணத்திற்கு தப்பிச் செல்ல முயன்றதனால், குழந்தையின் பெற்றோர்கள் டெல்லாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.&nbsp;</p><p>நீதிமன்றத்தில், தாங்கள் கருவை கலைக்க கூறவில்லை என அவர்கள் வாதிட்டனர். மேலும் இந்த நிகழ்வை ஒரு அரசியல் நாடகாக வாடகைத் தாய் மாற்றிவிட்டதாக கூறினர்.&nbsp;</p><p>இதைத்தொடர்ந்து டெல்லாஸ் நீதிமன்றம், குழந்தையின் வாடகை தாயை மாகாணத்தை விட்டு வெளியேற தடை விதித்து, குழந்தைக்கு தேவையான அனைத்து உயிர் காக்கும் சிகிச்சையை வழங்குமாறு உத்தரவிட்டார்.&nbsp;</p><p>மேலும் பிறந்த குழந்தைக்கு, அதன் உயிரியல் பெற்றொர்களே பொறுப்பானவர்கள் எனக் கூறி, வாடகை தாய்க்கு குழந்தை மீதான அதிகாரத்திற்கு தடை விதித்து தீர்ப்பளித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T13:37:30+00:00</updated>
        </entry>
    </feed>
