<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-27T03:23:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை உலுக்கிய சம்பவம் ; உறவினர்கள் 8 பேரை கொன்று இளைஞன் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-shocked-as-youth-kills-8-relatives-1787787960"></link>
            <id>https://canadamirror.com/article/us-shocked-as-youth-kills-8-relatives-1787787960</id>
            <summary type="text">அமெரிக்காவில் உறவினர்கள் 8 பேரை கொன்று விட்டு இளைஞர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பில்லிங்ஸ் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் உறவினர்கள் 8 பேரை கொன்று விட்டு இளைஞர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p>

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பில்லிங்ஸ் என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்து நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3288095d-eff0-4daa-8ae4-9f1000bc5b8b/26-6a8f7aba7e850.webp' /></p><p> </p><p>அப்போது 4 சிறுவர்கள் உள்பட உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு வாலிபர் தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


</p><p>அவர்களில் 90 வயதுடைய பாட்டி முதல் 7 வயது கொண்ட சிறுமி வரை அடக்கம். </p><p>விருந்து நடக்க இருந்த வீடும் தீப்பிடித்து முற்றிலும் எரிந்துள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T01:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்ஜியத்தின் புகழ்பெற்ற 'பிரெஞ்சுப் பொரியல்' உற்பத்திக்குப் பேராபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/belgium-s-famous-fries-face-production-crisis-1787792859"></link>
            <id>https://canadamirror.com/article/belgium-s-famous-fries-face-production-crisis-1787792859</id>
            <summary type="text">பெல்ஜியத்தில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அங்குப் பயிரிடப்படும் உருளைக்கிழங்குகளின் பருமன் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. இதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அங்குப் பயிரிடப்படும் உருளைக்கிழங்குகளின் பருமன் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. </p><p>இதனால், அந்நாட்டின் புகழ்பெற்ற 'பிரெஞ்சுப் பொரியல்' (Frites) உற்பத்திக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2938a0f8-4f68-4257-8042-c09c701ed6c7/26-6a8f8ddd7b892.webp' /></p><p> </p><p>வசந்த காலத்தின் இறுதியில் பெய்த கடும் மழையினால் மண்வளம் பாதிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து கோடைகாலத்தில் நிலவிய அதீத வெப்பமும் வறட்சியுமே உருளைக்கிழங்குகளின் வளர்ச்சி குன்றியமைக்குப் பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

</p><p>ஏற்றுமதி மற்றும் விநியோகத்திற்கான ஒப்பந்தங்களை முன்கூட்டியே செய்துள்ள விவசாயிகள், தங்களது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காகக் கடந்த ஆண்டின் மேலதிக விளைச்சலில் சேமிக்கப்பட்ட உருளைக்கிழங்குகளைக் கொண்டே தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.</p><p>

பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்குப் பொரியல்களை (Frites surgelées) ஏற்றுமதி செய்வதில் பெல்ஜியம் உலகளவில் முதலிடம் வகிக்கின்றது.</p><p> ஆண்டுதோறும் சுமார் ஆறு மில்லியன் தொன் உருளைக்கிழங்குகளைப் பதப்படுத்தும் இந்நாடு, தமது உற்பத்தியில் 90 விழுக்காட்டை 120-இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது.</p><p> இந்நிலையில், தற்போதைய விளைச்சல் வீழ்ச்சியால் உருளைக்கிழங்குகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை, நுகர்வோர் மத்தியில் பாரிய விலையேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p> பொரியல் தயாரிப்பதற்கு ஏற்ற நீளமான மற்றும் பெரிய உருளைக்கிழங்குகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், எதிர்வரும் நாட்களில் இதன் விலைகள் அதிகரிக்கக்கூடும் என 4,500 உணவகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெல்ஜிய தேசியப் பொரியல் தயாரிப்பாளர் சங்கம் (Association nationale belge des frituristes) எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T01:08:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான விளைவுகள் உண்டு ; ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரானின் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-hits-back-at-trump-warning-with-threat-1787791286"></link>
            <id>https://canadamirror.com/article/iran-hits-back-at-trump-warning-with-threat-1787791286</id>
            <summary type="text">புதிதாக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் அமெரிக்கா எதையும் சாதிக்கப் போவதில்லை என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

ஈரான் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிதாக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் அமெரிக்கா எதையும் சாதிக்கப் போவதில்லை என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரான் பொருளாதாரத்தை முடக்குவதற்கு அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed6ab37d-e325-49cc-b18c-602fde6a08c6/26-6a8f87b7c33a2.webp' /></p><p> </p><p>மேலும், ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்றும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.



</p><p>
1979 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் பல ஆண்டுகளாக ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p> அவற்றைத் தொடர்ந்து எதிர்கொண்டு வந்துள்ள ஈரான் தலைவர்கள் தற்போதைய அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளின் தாக்கத்தை நிராகரித்துள்ளனர்.
</p><p>
இதுதொடர்பாகப் பேசிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், “பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல் மூலமாக பிரச்னைகளைத் தீர்ப்பதே எங்களின் கொள்கை. அதேநேரம், இதுவரை நாங்கள் பிரச்னைகளில் உறுதியாக இருந்தது போன்று, இனிவரும் பொருளாதார அழுத்தங்களுக்கு எதிராகவும் உறுதியாக நிற்போம்.
</p><p>
போரின் மூலம் எதையும் சாதிக்க முடியாததைப் போன்று தற்போதைய பொருளாதாரத் தடை நடவடிக்கைகளாலும் அமெரிக்காவால் எதையும் சாதிக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T00:41:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்கும் உலகின் தடகள ஜாம்பவான் உசைன் போல்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/usain-bolt-to-marry-longtime-girlfriend-1787780459"></link>
            <id>https://canadamirror.com/article/usain-bolt-to-marry-longtime-girlfriend-1787780459</id>
            <summary type="text">உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட், தனது 40-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நீண்டநாள் காதலியான காசி பென்னட்டுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட், தனது 40-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நீண்டநாள் காதலியான காசி பென்னட்டுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.


</p><p>&nbsp;ஜமைக்கா நாட்டின் கிங்ஸ்டன் நகரில் உசைன் போல்ட்டின் பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழா மேடையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், உசைன் போல்ட் கையில் மைக்ரோ போனுடன் திடீரென மண்டியிட்டு காசி பென்னட்டிடம் தனது திருமண விருப்பத்தைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f4aa505-6de2-4cd6-a52d-4bdd82656be3/26-6a8f5d6d9f3d6.webp' /></p><p>உசைன் போல்ட்டின் இந்த திடீர் அறிவிப்பைக் காசி பென்னட் ஆச்சரியத்தில் உறைந்து போன அவர், மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தைக் கூறினார்.</p><p> இதுகுறித்து காசி பென்னட் போல்ட்டின் கைகளில் உணர்ச்சிவசப்பட்டு அழுதபடி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "என் முகம் ஆச்சரியத்தில் உறைந்துவிட்டது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

13 ஆண்டுகால காதல் பயணம்
உசைன் போல்ட் மற்றும் காசி பென்னட் ஆகிய 2 பேரின் காதல் பயணம் 2013-ம் ஆண்டு தொடங்கியது.</p><p> ஆனால் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது தான் இவர்கள் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அறிவித்தனர். திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தனர்.</p><p>இவர்களுக்கு 6 வயதில் ஒலிம்பியா லைட்னிங் என்ற மகளும், 5 வயதில் தண்டர் மற்றும் செயின்ட் லியோ என்ற இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
</p><p>

ஒலிம்பிக்கில் 8 முறை தங்கப் பதக்கம் வென்று தடகள உலகின் ஜாம்பவானாகத் திகழும் உசைன் போல்ட், விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது குடும்ப வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T22:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய அசம்பாவிதம்; காணாமல்போனோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sudden-tragedy-579-including-troops-missing-1787779659"></link>
            <id>https://canadamirror.com/article/sudden-tragedy-579-including-troops-missing-1787779659</id>
            <summary type="text">நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காணாமல் போனவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>காணாமல் போனவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p>

</p><h2>சுற்றுலாப் பயணிகள்</h2><p>அவர்களில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்களும், 54 அமெரிக்கர்களும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் அடங்குகின்றனர்.</p><p> </p><p>

திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை, இன்று (26) காலை போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளம் அடித்து சென்றதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95-ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> 

இந்த திடீர் வெள்ளத்தால் வீதிகள், நீர்மின் திட்டங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. </p><p>

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள இராணுவம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T21:27:45+00:00</updated>
        </entry>
    </feed>
