<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-07T07:15:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியாமி விமான நிலையத்தில் அமேசான் சரக்கு விமானம் விபத்து: 5 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/at-least-5-dead-after-amazon-cargo-plane-1788743502"></link>
            <id>https://canadamirror.com/article/at-least-5-dead-after-amazon-cargo-plane-1788743502</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி, வாகனங்கள் மீது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி, வாகனங்கள் மீது மோதித் தீப்பற்றி எரிந்ததில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவானில் இருந்து வந்த 'அமேசான் பிரைம் ஏர்' அமைப்பின் போயிங் 767 ரக சரக்கு விமானம், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஓடுபாதையைத் தாண்டிச் சென்று அருகிலிருந்த வீதியில் பயணித்த வாகனங்கள் மீது மோதித் தீப்பற்றி எரிந்தது.</p><p>
இவ்விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்தும் 2 பேர் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/596b9564-fd32-421c-8a69-d17039d0a7aa/26-6a9e0f501b918.webp' /></p><p> </p><p>
விமானத்தின் காக்பிட்டில் சிக்கிய விமானிகள் மற்றும் வாகனங்களில் சிக்கியவர்கள் சுமார் 200 மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டனர். </p><p>
உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா அல்லது வாகனங்களில் இருந்தவர்களா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியாகவில்லை.
</p><p>இந்த விபத்து காரணமாக மியாமி விமான நிலையத்தில் 160க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 325க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.</p><p>
விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. </p><p>
விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் இடியுடன் கூடிய மழையும் மணிக்கு 48 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T07:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒரு பயணி; டேப்போட்டு கட்டிய பணியாளர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-passenger-behaved-unruly-us-flight-taped-him-up-1788764606"></link>
            <id>https://canadamirror.com/article/a-passenger-behaved-unruly-us-flight-taped-him-up-1788764606</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க உள்நாட்டு விமானம் ஒன்றில், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒரு பயணி, விமானப் பணியாளர்களால் அவரது இருக்கையில் டேப்பால் கட்டி வைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்க உள்நாட்டு விமானம் ஒன்றில், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒரு பயணி, விமானப் பணியாளர்களால் அவரது இருக்கையில் டேப்பால் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>

கடந்த வியாழக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர், உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/144d709c-d2ab-474e-a216-9544f6022f15/26-6a9e61c06bbb9.webp' /></p><p>
</p><p>
டல்லாஸிலிருந்து நியூயோர்க்கிற்கு அருகிலுள்ள நியூவார்க்கிற்குச் சென்ற விமானம் 618, பால்டிமோரில் இறங்க்கிய நிலையில் , அங்கு வந்த எப்.பி.ஐ அதிகாரிகள் அந்த நபரை விமானத்திலிருந்து வெளியேற்றியதாகவும் கூறப்படுகின்றது.</p><p>இன்னிலையில்&nbsp;&nbsp;இருக்கையில்&nbsp; பயணி&nbsp; டேப்பால் கட்டி வைக்கப்பட்ட புகைப்படம்&nbsp; சமூகவலைத்தளங்க்களில்&nbsp; வைரலாகியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T07:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எவரெஸ்ட்டில் பனிப்பாறைகள் உருக மனித சிறுநீரும் காரணம்; ஆய்வில் அதிர்ச்சித்தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/human-urine-melting-glaciers-on-everest-1788760095"></link>
            <id>https://canadamirror.com/article/human-urine-melting-glaciers-on-everest-1788760095</id>
            <summary type="text">&amp;nbsp; எவரெஸ்ட்டில் உள்ள பனிப்பாறைகள் உருக மனித சிறுநீரும் ஒரு காரணம் என நேபாளம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; எவரெஸ்ட்டில் உள்ள பனிப்பாறைகள் உருக மனித சிறுநீரும் ஒரு காரணம் என நேபாளம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உலகில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதாவும், அதன் மூலம் கடல் மட்டம் உயர்ந்து பல நாடுகள் மூழ்கும் வாய்ப்பிருப்பதாக&nbsp; &nbsp;ஆய்வாளர்கள் எச்சரித்து வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f992e70e-f247-4935-9cb5-6cb69f44cdee/26-6a9e5024d8195.webp' /></p><h2>&nbsp;தினமும் சராசரியாக 6 ஆயிரம் லிட்டர் சிறுநீர்</h2><p> சமீபத்தில் கூட கடல் மட்டம் உயர்வதால் மும்பை கொல்கத்தா போன்ற நகரங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும்.. இரண்டு லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்தது.
</p><p>
அதாவது மெல்லின போன்ற காரணங்களால் வெப்பம் அதிகரித்து பனிப்பாறை வருவதால் கடல் மட்டம் உயர்கிறது அப்படி கடல் மட்டம் உயரும்போது அந்த அதிலிருந்து வெளியேறும் போது நகரங்களில் வசிக்கும் மக்களை பாதிக்கும் என சொல்லப்படுகிறது.</p><p>&nbsp;னிப்பாறை உருகி அதிலிருந்து வெளியேறிய வெள்ளத்தால் நேபாளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போனவர்கள். 200க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை.
</p><p>
எவரெஸ்ட் அடிவாரம் முகாமில் தங்கும் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்களும்,வழிகாட்டிகளும் தினமும் சராசரியாக 6 ஆயிரம் லிட்டர் சிறுநீரை பனியில் கழிக்கின்றனர்.</p><p> இதனால் ஒரு சீசனில் மட்டும் தோராயமாக 154 டன் பனிப்பாறைகள் உருகுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T05:45:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் மாயமான 5,000 பேர் தொடர்பில் தகவல் இல்லை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-information-5-000-people-missing-in-nepal-flood-1788758335"></link>
            <id>https://canadamirror.com/article/no-information-5-000-people-missing-in-nepal-flood-1788758335</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுமார் 5,000 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. அவர்களைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுமார் 5,000 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. </p><p>அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70564e68-4906-4efc-8574-ee4aaea3b781/26-6a9e4940ee848.webp' /></p><h2>இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது</h2><p> இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களில் சுமார் 600 பேர் வெளிநாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 275 பேர் இந்தியர்களாவார்.
</p><p>


நேபாள இராணுவத்தினர் உள்ளிட்ட 20,000-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேதமடைந்த நீர்மின் நிலையங்களின் சுரங்கப் பாதைகளிலும் இந்திய நிபுணர்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>



மீட்கப்பட்ட உடல்களில் 500-க்கும் மேற்பட்டவை உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், அவற்றை அடையாளம் காண்பதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இதுவரை 98 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. </p><p>காணாமல் போனவர்களின் உறவினர்களிடமிருந்து மரபணு பரிசோதனைக்கான மாதிரிகளை நேபாள பொலிஸ் சேகரித்து வருகிறது.



இதனிடையே, பெருவெள்ளத்தால் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரண முகாம்களில் போதிய வசதிகள் இல்லாததால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் உள்ளிட்டோர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>


மேலும், திபெத் பகுதியில் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதுடன், 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் நம்ரங் கோலா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 4 வீடுகளும் ஒரு தொங்கு பாலமும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இரண்டு சிறிய நீர்மின் நிலையங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-09-07T05:15:52+00:00</updated>
        </entry>
    </feed>
