<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-10T17:46:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் குண்டு மிரட்டல்: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/thousands-of-people-evacuated-halifax-buildings-1786381613"></link>
            <id>https://canadamirror.com/article/thousands-of-people-evacuated-halifax-buildings-1786381613</id>
            <summary type="text">கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலையில் அங்குள்ள கட்டடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலையில் அங்குள்ள கட்டடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><p> 
அப்பர் வோட்டர் வீதியில் அமைந்துள்ள 'பேர்டிஸ் வார்ஃப்' வாகன நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில், காலை 8:45 மணியளவில் அங்கிருந்த மக்கள் முதன்முதலாக வெளியேற்றப்பட்டனர். </p><p>
குறித்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து பொலிஸார் அந்தச் சந்தேகத்திற்குரிய வாகனத்தைச் சோதனையிட்டனர். 
நிலைமையின் தீவிரத்தைக் கருதி, காலை 10:15 மணியளவில் பொதுமக்கள் வெளியேற்றப்பட வேண்டிய பகுதி&nbsp; விரிவுபடுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b2a09da-f58e-4831-bf02-3e93aab0c23f/26-6a7a052f0cabb.webp' /></p><p>பேரிங்டன் வீதி,&nbsp; அமலமேக் வழி சந்திப்பு, அப்பர் வோட்டர் வீதி,&nbsp; பிரன்ஸ்விக் வீதி / டொக்டர் ஆல்ஃப்ரெட் வேடெல் வீதி முதல் பிரன்ஸ்விக் வீதி காக்ஸ்வெல் வீதி வரை,&nbsp; டியூக் வீதி / பேரிங்டன் வீதி சந்திப்பில் இருந்து அப்பர் வோட்டர் வீதி வரையிலான பகுதிகள் மூடப்பட்டன.</p><p>இந்த வெளியேற்ற உத்தரவு அப்பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் பாதசாரிகளும் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என ஹாலிஃபாக்ஸ் பிராந்திய பொலிஸார் அறிவித்தனர்.</p><p>
இந்த வெளியேற்ற மண்டலத்தில் பல ஹோட்டல்கள், உணவகங்கள், ஸ்கோஷியா சதுக்கம் மற்றும் அரசு அலுவலகங்கள் அடங்கியுள்ளன. 
பொலிஸாரின் தேவைக்கேற்ப அருகிலுள்ள பக்கவாட்டுச் சாலைகளும் மூடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ஹாலிஃபாக்ஸ் ட்ரான்சிட் பேருந்துகள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படும் அதேவேளையில், படகு முனையம் திறந்திருக்கும் என்றும் பயணிகளுக்கு வழிகாட்ட ஊழியர்கள் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
காலை 10:30 மணியளவில் அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. </p><p>அதில், சந்தேகத்திற்குரிய வாகனம் உட்பட அப்பகுதியைப் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. </p><p>
கிளேட்டன் பூங்காவில் உள்ள கனடா கேம்ஸ் சென்டர் அருகே தோமஸ் ரேடால் டிரைவ் பகுதியில் வைத்து சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.</p><p> 
பிற்பகல் 1:30 மணியளவில் பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, அப்பகுதியில் தற்போது உடனடி அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>எனினும், விசாரணை தொடர்வதால் குறைந்த அளவிலான பொலிஸ் பாதுகாப்பு அங்கே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T17:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஸ்காட்செவானில் 44 மில்லியன் டொலர் லொத்தர் பரிசு: வென்ற அதிர்ஷ்டசாலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/winning-ticket-for-44-million-lotto-649-draw-1786381089"></link>
            <id>https://canadamirror.com/article/winning-ticket-for-44-million-lotto-649-draw-1786381089</id>
            <summary type="text">கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 44 மில்லியன் டொலர் பெறுமதியான &#039;கோல்ட் போல்&#039; ஜாக்பாட் பரிசை வென்று கோடீஸ்வரராகியுள்ளார். 
ஆனால், தான...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 44 மில்லியன் டொலர் பெறுமதியான 'கோல்ட் போல்' ஜாக்பாட் பரிசை வென்று கோடீஸ்வரராகியுள்ளார். </p><p>
ஆனால், தான் அந்தப் பரிசை வென்ற தகவல் இன்னும் அவருக்குத் தெரியவில்லை. 
சனிக்கிழமை நடைபெற்ற 'லொட்டோ 6/49' குலுக்கலிலேயே இந்த 44 மில்லியன் டொலா் ஜாக்பாட் விழுந்துள்ளது. </p><p>
வெற்றிபெற்ற இந்த லொத்தர் சீட்டு சஸ்காட்செவான் மாகாணத்தில் உள்ள சாஸ்கடூன் மற்றும் ரெஜினா ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கும் வெளியேயுள்ள ஒரு பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29dac847-6692-4188-8bad-fdb57dce6946/26-6a7a03235e673.webp' /></p><p> </p><p>
வெற்றிபெற்ற எண் 23202513-03 ஆகும். இந்த எண் முழுமையாகத் துல்லியமாகப் பொருந்தினால் மட்டுமே பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
வெற்றிபெற்ற நபர் அல்லது நபர்கள் தங்களது பரிசுத் தொகையைக் கோருவதற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T17:28:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 3 வயது சிறுமியைத் தாக்கிய கரடி: அதிர்ச்சி சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shock-bc-mom-describes-bear-attack-on-toddler-1786348616"></link>
            <id>https://canadamirror.com/article/shock-bc-mom-describes-bear-attack-on-toddler-1786348616</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியைப் பாக்கரடி ஒன்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், கரடி சிறுமியின் கழுத்தைக் கவ்வ முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். </p><p>உடனடியாகச் செயல்பட்ட தந்தை, வில் மற்றும் அம்பைப் பயன்படுத்தி கரடியின் தலையில் எய்து அதைத் தாக்கி விரட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6b22b8e-f638-400e-a747-29b174259aa2/26-6a79844a6c312.webp' /></p><p> </p><p>
கரடி கடித்ததில் சிறுமியின் கழுத்து, தலை மற்றும் முதுகுப் பகுதியில் ஆழமான காயங்களும் வெட்டுக் காயங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p> உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் வான்கூவரில் உள்ள சிறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அச்சிறுமி, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. </p><p>
சம்பவ இடத்திற்குப் பொலிஸார் வந்தபோதும், அந்த இடத்தில் மிகுந்த ஆர்வம் காட்டிய கரடி மீண்டும் மீண்டும் அவ்வீட்டுப் பகுதிக்கு வந்துள்ளது. </p><p>பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அதிகாரிகள் கரடியை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். </p><p>
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கரடி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடியது. வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அதைக் கண்டுபிடித்தவுடன் அழிக்க முடிவு செய்துள்ளனர்.</p><p> 
அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும், வனவிலங்குகள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T16:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/powerful-earthquake-hits-colombia-1786376506"></link>
            <id>https://canadamirror.com/article/powerful-earthquake-hits-colombia-1786376506</id>
            <summary type="text">மேற்கு கொலம்பியாவில் இன்று (10) 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. 

 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு கொலம்பியாவில் இன்று (10) 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. </p><p>

 

நாட்டின் பல நகரங்களில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டன.
</p><p>
 

இந்த நிலநடுக்கத்தின் மையம் சாஃகோ திணைக்களத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மரில், போகொடாவுக்கு மேற்கே சுமார் 280 கிலோமீட்டர் தொலைவில், 107 கிலோமீற்றர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி காலை 7:34 மணிக்கு பதிவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b9a70e3-e9fb-4027-a173-7dd8b68631d6/26-6a79f13c53941.webp' /></p><p>

 

சாஃகோ பிராந்தியத்தின் ஆளுநர் நுபியா கரோலினா கோர்டோபா கூரி, பிராந்தியத் தலைநகரான கிப்டோவில் "காயங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது" என்பதை உறுதிப்படுத்தினார்.
</p><p>
 

மேலும் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய தொடர் அதிர்வுகள் குறித்து கவலை தெரிவித்தார்.
</p><p>
 

நாட்டின் தலைநகரான போகொடாவில், அதிர்வு பலமாக உணரப்பட்டது. </p><p>

 

எச்சரிக்கை மணிகள் ஒலிக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலர் கட்டிடங்களை விட்டு வீதிகளுக்கு வெளியேறினர்.</p><p> 

 

"தற்போது வரை காயங்களோ அல்லது பெரிய அளவிலான கட்டமைப்புச் சேதங்களோ பதிவாகவில்லை, சில கட்டிடங்களில் சிறிய விரிசல்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன" என்று போகொடா மேயர் கார்ட்லோஸ் கெலன் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-10T15:42:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புற்றுநோய் அபாயகட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-us-president-joe-biden-at-risk-of-cancer-1786357155"></link>
            <id>https://canadamirror.com/article/former-us-president-joe-biden-at-risk-of-cancer-1786357155</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனைத் தாக்கியுள்ள கொடிய புற்றுநோய், தற்போது அவரின் எலும்புகளையும் தாண்டி உடலின் பிற பகுதிகளுக்கும் வேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனைத் தாக்கியுள்ள கொடிய புற்றுநோய், தற்போது அவரின் எலும்புகளையும் தாண்டி உடலின் பிற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவி வருவதாக அவரது மகன் அண்டர் பைடன் (Hunter Biden) மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். </p><p> 

பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் பேசிய அண்டர் பைடன், தனது தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதை வெளிப்படுத்தினார். "புற்றுநோய் அவரது எலும்புகள் மற்றும் அதற்கும் அப்பால் பரவிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aff6e6a-5e55-4695-92e0-75ba6f11ad3b/26-6a79a5a49f42d.webp' /></p><h2>&nbsp; மிகவும் கடினமாகவும், பெருந்துயரமாகவும் உள்ளது&nbsp;</h2><p> </p><p>
இது அவருக்குக் கடுமையான வலியையும், பல வகைகளில் உடல் தளர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது" எனக் கூறிய அவர், தனது தந்தையின் தற்போதைய நிலையைப் பார்ப்பது "உண்மையிலேயே மிகவும் கடினமாகவும், பெருந்துயரமாகவும் உள்ளது" கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.</p><p> 

 83 அகவையுடைய மக்களாட்சிக் கட்சியின் தலைவரான ஜோ பைடன், 2021 முதல் 2025 வரை அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பணியாற்றினார். 

அவரது உடல்நலம் குறித்த பல்வேறு ஐயங்கள் எழுந்ததால், 2024-ஆம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. </p><p>அவருக்குப் பதிலாகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் , குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பிடம் தோற்றார். 
வெள்ளை மாளிகையிலிருந்து விடைபெற்று நான்கு மாதங்களுக்குப் பிறகு, கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் தனக்கு முன்னிற்குஞ்சுரப்பிப் புற்றுநோய் (Prostate cancer) இருப்பதை ஜோ பைடன் உலகிற்கு அறிவித்தார்.
</p><p> தொடரும் மருத்துவப் போராட்டங்கள்அதன்பின்னர் கதிர்வீச்சு மருத்துவம் மற்றும் இயக்குநீர் மருத்துவக் (Hormone therapy) கட்டமைப்புக்குள் அவர் உட்படுத்தப்பட்டார். </p><p>

கடந்த மாதம் கூட, தனது பணிக்காலம் குறித்த புதிய நூல் ஒன்றின் வெளியீட்டு அறிவிப்பின்போது, தனது மருத்துவம் "மிகவும் நன்றாக" சென்று கொண்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால், நோயின் வீரியம் தற்போது கட்டற்ற நிலையை எட்டியுள்ளதை அண்டர் பைடனின் சொற்கள் உறுதிப்படுத்துகின்றன</p>]]></content>
            <updated>2026-08-10T13:34:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 12 வயது சிறுவனின் உடல் மீட்பு: கொலை வழக்குப்பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-of-12-year-old-edmonton-boy-1786349779"></link>
            <id>https://canadamirror.com/article/death-of-12-year-old-edmonton-boy-1786349779</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அது தொடர்பில் கொலை வழக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அது தொடர்பில் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
</p><p>கடந்த ஆகஸ்ட் 6-ஆம் திகதி அதிகாலை 3:26 மணியளவில், ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
</p><p>எட்மண்டன் நகரில் ஆகஸ்ட் 7 அன்று மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பரிசோதனையின் மூலம், உயிரிழந்தவர் எட்மண்டனைச் சேர்ந்த பைசல் ஹுசைன் 12 வயது சிறுவன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac86ad2-f056-4ba7-a227-dbbf9e842053/26-6a7988d5498fe.webp' /></p><p>
</p><p>இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 'ஆர்சிஎம்பி'யின் முக்கிய குற்றப் பிரிவு விசாரணையைத் தன்வசப்படுத்தியுள்ளது.</p><p>
இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், ஆதாபாஸ்கா பொலிஸாரை 780-675-4252 என்ற எண்ணிலோ அல்லது இரகசியம் காக்கும் 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பை 1-800-222-8477 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T13:34:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈ-ஸ்கூட்டர் விதிமீறல்கள்: ஒட்டாவா பொலிஸார் தீவிர நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/underage-operation-and-misuse-of-e-scooters-1786349268"></link>
            <id>https://canadamirror.com/article/underage-operation-and-misuse-of-e-scooters-1786349268</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒட்டாவா நகரில் ஈ-ஸ்கூட்டர்களின் தவறான பயன்பாடு மற்றும் விதிமீறல்களைத் தடுக்கும் வகையில், பொலிஸார் நகரம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒட்டாவா நகரில் ஈ-ஸ்கூட்டர்களின் தவறான பயன்பாடு மற்றும் விதிமீறல்களைத் தடுக்கும் வகையில், பொலிஸார் நகரம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனைகளைத் தொடங்கியுள்ளனர்.
</p><p>குறிப்பாக ஃபைண்ட்லே க்ரீக் மற்றும் ரிவர்சைடு சவுத் ஆகிய பகுதிகளில் சிறுவர்கள் ஸ்கூட்டர் ஓட்டுவது, அதிக வேகம் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பயணிப்பது ஆகியவற்றைக் கண்காணிக்க சிறப்பு ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>ஒட்டாவாவில் ஈ-ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு குறைந்தபட்ச வயது 16 ஆகும். 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இதனைப் பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d4e4e9-8e11-41fc-864f-70fee151575f/26-6a7986d65fc16.webp' /></p><p>18 வயதுக்குட்பட்ட அனைத்துப் பயனர்களும் கட்டாயம் பாதுகாப்பு தலைக்கவசம் அணிய வேண்டும். தவறினால் 80 டாலர் அபராதம் விதிக்கப்படும்.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஈ-ஸ்கூட்டர் ஓட்டினால் சுமார் 170 டொலர் வரை அபராதம் விதிக்கப்படும்.ஈ-ஸ்கூட்டர்களின் அதிகபட்ச வேகவரம்பு மணிக்கு 24 கிலோ மீற்றராகும்.</p><p>அண்மையில் அதிகபட்சமாக மணிக்கு 52 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்த நபரை பொலிஸார் பிடித்துள்ளனர்.</p><p>அதிவேகமாகச் செல்பவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பைக் கருதி, நடைபாதைகளில் ஈ-ஸ்கூட்டர்களை ஓட்டக் கூடாது எனவும் ஒரு ஸ்கூட்டரில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். பிற வாகனங்களையோ அல்லது ஸ்கேட்போர்டுகளையோ இழுத்துச் செல்லக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஒட்டாவா கிழக்கு ஒன்டாரியோ சிறுவர் மருத்துவமனை, டோரண்டோவின் சிக்-கிட்ஸ் மற்றும் மொண்ட்ரியால் சிறுவர் மருத்துவமனைகள் வெளியிட்ட தகவலின்படி, ஈ-ஸ்கூட்டர் விபத்துகளால் காயமடைந்து வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p> 
மே 2025 வரை வரையிலான ஓராண்டு காலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது.
சிறுவர்கள் அறியாமையால் ஆபத்தான முறையில் ஸ்கூட்டர்களை இயக்கக்கூடும்.</p><p> எனவே, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஈ-ஸ்கூட்டர்களை வாங்கித் தருவதற்கு முன்பாக பெற்றோர் இருமுறை யோசிக்க வேண்டும்," என ஒட்டாவா பொலிஸ் அதிகாரி ஜோஷ் கலாஹன் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை சூறையாடிய டால்பின் புயல் ;1000க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/typhoon-dolphin-china-1000-flights-canceled-1786368494"></link>
            <id>https://canadamirror.com/article/typhoon-dolphin-china-1000-flights-canceled-1786368494</id>
            <summary type="text">சீனாவில்&amp;nbsp; டால்பின் புயல் வலுவிழந்த போதிலும், திங்கட்கிழமை அன்று சீனா முழுவதும் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கைகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில்&nbsp; டால்பின் புயல் வலுவிழந்த போதிலும், திங்கட்கிழமை அன்று சீனா முழுவதும் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன, மேலும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன .</p><p>
ஞாயிற்றுக்கிழமை சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கரையைக் கடந்த பின்னர் வலுவிழந்த புயலை அடுத்து, சீனாவின் தேசிய வானிலை மையம் (NMC) திங்கட்கிழமை காலை மிகக் குறைந்த தீவிரமான புயல் எச்சரிக்கையை விடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71cf7c4d-c7ea-4cf5-91a3-7bb4bb1bd178/26-6a79d1f739603.webp' /></p><p>
</p><p>
புயல் வலுவிழந்த போதிலும், கிழக்கு மற்றும் மத்திய சீனாவின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. </p><p>

அதேசமயம் கிழக்கு மற்றும் தெற்கு ஜெஜியாங்கின் சில பகுதிகளுக்கு திங்களன்று அதிகாரிகள் தங்களின் மிகக் கடுமையான திடீர் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்ததாக அரசு செய்தி நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது. </p>]]></content>
            <updated>2026-08-10T13:26:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து புதிய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-record-230-migrants-cross-the-english-channel-1786368055"></link>
            <id>https://canadamirror.com/article/new-record-230-migrants-cross-the-english-channel-1786368055</id>
            <summary type="text">&amp;nbsp; பிரான்ஸில் இருந்து ஒரு சிறிய ரப்பர் படகில் 230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை அடைந்து புதிய சாதனையைப் பதிவுசெய்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரான்ஸில் இருந்து ஒரு சிறிய ரப்பர் படகில் 230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை அடைந்து புதிய சாதனையைப் பதிவுசெய்துள்ளனர்.</p><p>

போயிங் 737 பயணிகள் விமானத்தின் கொள்ளளவுக்குச் சமமான எண்ணிக்கையிலான மக்களை ஏற்றி சென்ற மெகா படகு எனவும் , பிரித்தானியாவை நோக்கிய சட்டவிரோதப் பயணங்களில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய எண்ணிக்கையாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aace4260-0148-4632-bb46-140adc0d14e6/26-6a79d03937119.webp' /></p><h2>&nbsp;2026 ஆம் ஆண்டில் 15,049 சட்டவிரோதக் குடியேறிகள்</h2><p> </p><p>

அதேசமயம் கடந்த ஜூலை மாதம் ஒரே படகில் 165 பேர் பயணித்ததே இதுவரை அதிகளவானவர்கள் பயணித்ததாக இருந்தது. தற்போதைய 230 பேர் பயணம் அந்த சாதனையை முறியடித்துள்ளது.
</p><p>
இந்த புதிய வருகையுடன், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 224 சிறிய படகுகள் மூலம் மொத்தம் 15,049 சட்டவிரோதக் குடியேறிகள் பிரித்தானியாவை அடைந்துள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையினரும் RNLI உயிர் மீட்புக் படகுகளும் இப் படகைக் கடலிலேயே இடைமறித்து டோவர் துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளன. </p><p>கடந்த வார இறுதியில் மட்டும் சுமார் 950 குடியேற்றவாசிகள் டோவர் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


இது குறித்து பிரித்தானிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கூறுகையில்,
</p><p>
"மனித கடத்தல் கும்பல்கள் மக்களின் உயிரைப் பணைய வைத்து, கடல் பயணத்திற்கு ஒத்துவராத படகுகளில் அதிகளவு மக்களைக் திணித்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதையே இது காட்டுகிறது. எனினும், கடந்த ஜூலை மாதத்தில் 2020க்குப் பின்னரான குறைந்தபட்ச வருகையே பதிவாகியுள்ளது. </p><p>பிரெஞ்சு கடற்கரைகளில் மேலதிகப் படைகளை நிறுத்துவதற்கு பிரான்ஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.



இச்சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரித்தானியாவின் ரிஃபார்ம் யூகே கட்சித் தலைவர் நைஜல் பரேஜ் ,</p><p> "இந்தச் சட்டவிரோத ஊடுருவல் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட பெரும் அவசரநிலை என்பதற்கான மற்றொரு சான்றாகும்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-10T13:18:39+00:00</updated>
        </entry>
    </feed>
