<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-01T05:46:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினிற்குள் நுழைந்த 60,000 ஏதிலிகள்; திரும்பி சென்ற 50,000 பேர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/60-000-refugees-entered-spain-50-000-returned-1785562207"></link>
            <id>https://canadamirror.com/article/60-000-refugees-entered-spain-50-000-returned-1785562207</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) பகுதிக்குள் நுழைந்த சுமார் 60,000 ஏதிலிகளில், 50,000 பேர் தன்னார்வமாக மீண்டும் மொராக்கோவுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) பகுதிக்குள் நுழைந்த சுமார் 60,000 ஏதிலிகளில், 50,000 பேர் தன்னார்வமாக மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட நெரிசல் மற்றும் கடலைக் கடந்து நீந்திச் செல்லும் முயற்சியின் போது, மூழ்கி மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 57 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a5545f1-ddcd-4033-a18f-00f905547841/26-6a6d84617c993.webp' /></p><p>
</p><p>
மனிதக் கடத்தல் கும்பல்கள் இந்த நிலைமையைப் பயன்படுத்தி மக்களை சட்டவிரோதமாக எல்லை தாண்டத் தூண்டியதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மனிதக் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T05:29:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய இலங்கை ஈஸ்டர் தாக்குதல்; இருவருக்கு மரண தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sl-easter-attacks-death-sentence-pujith-hemasiri-1785560506"></link>
            <id>https://canadamirror.com/article/sl-easter-attacks-death-sentence-pujith-hemasiri-1785560506</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் 2019 ஆம் ஆண்டு&amp;nbsp; இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் பொறுப்பைத் தட்டிக்கழித்த குற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் 2019 ஆம் ஆண்டு&nbsp; இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் பொறுப்பைத் தட்டிக்கழித்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர கொழும்பு நிரந்தர மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.</p><p>

போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே மூவரடங்கிய விசேட உயர்நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d9677d6-4e48-4946-9a05-fea43ab48b7b/26-6a6d7dbc5eb6e.webp' /></p><h2>&nbsp;தாக்குதலை தடுக்கவில்லை</h2><p>
</p><p>
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை தொடர்பான தீர்ப்பை இன்று அறிவிக்கும் போதே மரணதண்டனை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகவும், முன்கூட்டியே கிடைத்த உளவுத்துறை தகவல்களைப் பொருட்படுத்தாமல் கடமையை மீறியதாகவும் குற்றஞ்சாட்டி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
</p><p>
அதன்படி நேற்றைய தினம் வழக்கு விசாரணையில் போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சட்டமா அதிபர் தரப்பினால் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது.
</p><p>
தீர்ப்பை அறிவித்த நீதியரசர்கள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னைய தினம் மாலை, அரச புலனாய்வு சேவையின் அப்போதைய பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, மறுநாள் இடம்பெறவிருந்த தாக்குதல் தொடர்பான தகவல்களை ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு அறிவித்திருந்ததாக தெரிவித்தனர்.</p><p>

அந்த தகவல்களைப் பெற்றிருந்த போதிலும், தாக்குதலைத் தடுப்பதற்கான எந்தவொரு பயனுள்ள நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.
</p><p>
மேலும், புலனாய்வு அதிகாரிகளின் கூட்டமொன்றை கூட்டி தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியிருக்க முடியும் என்றும், முப்படையினருடன் இணைந்து தாக்குதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் அவருக்கு இருந்ததாகவும் பெரும்பான்மை நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர்.
</p><p>
மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவின் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில், மரண தண்டனை தீர்ப்பு விதிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-01T04:59:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து ; மோட்டார் சைக்கிள் பயணி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fatal-accident-in-tamil-area-motorcycle-rider-dies-1785557104"></link>
            <id>https://canadamirror.com/article/fatal-accident-in-tamil-area-motorcycle-rider-dies-1785557104</id>
            <summary type="text">வவுனியா புளியங்குளம் சந்திப் பகுதியில் இன்று இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா புளியங்குளம் சந்திப் பகுதியில் இன்று இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adeecbdd-550e-4bfc-a235-f8c5b4e14fd8/26-6a6d70717cd4d.webp' /></p><p>விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

உயிரிழந்த நபரின் அடையாளம் மற்றும் விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-01T04:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று சாதனை படைத்த இலங்கை வீரர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rumesh-tharanga-wins-commonwealth-gold-1785546621"></link>
            <id>https://canadamirror.com/article/rumesh-tharanga-wins-commonwealth-gold-1785546621</id>
            <summary type="text">பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 
இதன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். </p><p>
இதன் மூலம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தங்கப் பதக்கம் வெல்வதற்கான 20 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
</p><p>இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா உட்பட உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற கடுமையான போட்டியில், ருமேஷ் தரங்க 89.75 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடத்தைப் பிடித்து தங்கத்தைக் கைப்பற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c0038c8-fc1e-470b-a503-8e64f8c9f1e2/26-6a6d477f9ce18.webp' /></p><p>
</p><p>2006-ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதல் வீரர் சிந்தன விதானகே தங்கம் வென்றதற்குப் பின்னர், பொதுநலவாய மேடையில் இலங்கை பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
</p><p>இந்த வெற்றியின் மூலம் பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் இலங்கை வெல்லும் 5-வது தங்கப் பதக்கமாக இது பதிவாகியுள்ளது.
</p><p>சர்வதேச தடகள அரங்கில் இலங்கை பெற்ற மிகச் சிறந்த மற்றும் மகத்தான சாதனைகளில் ஒன்றாக ருமேஷ் தரங்கவின் இந்த வெற்றி கருதப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T03:09:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக மீண்டும் பாரிய தாக்குதல்களை நடத்த டிரம்ப் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-plans-launch-anot-major-attack-against-iran-1785552913"></link>
            <id>https://canadamirror.com/article/trump-plans-launch-anot-major-attack-against-iran-1785552913</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக மீண்டும் பாரிய தாக்குதல்களை நடத்தத் தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

பேச்சுவார்த்தைகளுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக மீண்டும் பாரிய தாக்குதல்களை நடத்தத் தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>

பேச்சுவார்த்தைகளுக்கு ஈரானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இதன்படி, ஈரானுக்கு எதிராகப் புதிய தாக்குதலைத் தொடங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது இராணுவத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ae334cf-5b40-4290-a3a1-7e777c9f62d0/26-6a6d601283ee2.webp' /></p><p>இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், "நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம்.</p><p>ஒரு கட்டத்தில் அவர்களால் இதை இனி தாங்க முடியாது என்று அவர்களே கூறுவார்கள்.." எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இதனிடையே, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற எரிசக்தி வசதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்துவதில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

இருப்பினும், உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் போர்க் குற்றங்களின் கீழ் வரக்கூடும் என மனித உரிமைகள் மற்றும் ஆலோசனை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-01T02:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடித்துச் சிதறிய அமெரிக்க போர் விமானம் ; இராணுவ தளத்தில் அரங்கேறி சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/american-warplane-explodes-in-mid-air-1785542969"></link>
            <id>https://canadamirror.com/article/american-warplane-explodes-in-mid-air-1785542969</id>
            <summary type="text">சான் டியாகோவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு அருகே அமெரிக்காவின் எஃப்-35 ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது, ஆனால் விமானம் தரையில் மோதுவதற்கு மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சான் டியாகோவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு அருகே அமெரிக்காவின் எஃப்-35 ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது, ஆனால் விமானம் தரையில் மோதுவதற்கு முன்பே விமானி வெளியேறிவிட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>
மிராமர் கடற்படை விமான தளத்தின் அருகாமையில், காலை 10:00 மணியளவில், கடற்படையை சேர்ந்த F-35B ரக விமானம் விபத்தில் சிக்கியதாக அத்தளத்தின் செய்தி தொடர்பாளர் வெளிநாட்டு ஊடகத்திடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53516ebb-dd1d-47ff-94ea-3fd6d5c8aedd/26-6a6d393ae039b.webp' /></p><p>

</p><p>விமானி வெளியே தூக்கி எறியப்பட்டார்; அவரது உடல் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் விமானி காயமடைந்தாரா அல்லது வேறு யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா என்பதை குறிப்பிடவில்லை.</p><p>ஆனால், அமெரிக்க இராணுவம் இது குறித்த விவரங்களை பின்னர் வழங்கும் என்று அவர் கூறினார்.

தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்ட நிலையில், விமானத்தில் இருந்து புகை மண்டலம் எழுவதை காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.</p><p>F-35B என்பது மரைன் கார்ப்ஸ், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றால் இயக்கப்படும் அதிநவீன 'ஸ்டெல்த்' ரக போர் விமானத்தின் பல வகைகளில் ஒன்றாகும். </p><p>இதன் 'B' வகையானது, குறுகிய தூரத்திலேயே வானில் எழும்பி செல்லும் வகையிலும், செங்குத்தாக தரையிறங்கும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரத்தை கொண்டுள்ளது.</p><p>

சான் டியாகோ தீயணைப்பு துறையின் செய்தி தொடர்பாளர் கேண்டஸ் ஹேட்லி, விபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஏற்பட்ட தாவர தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறினார். அவர் இந்த சம்பவம் குறித்த இதர கேள்விகளை மிராமாரிடம் கேட்குமாறு குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-01T01:09:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் வேலை பார்க்க விரும்பும் மாணவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல் ; ட்ரம்பின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-work-dream-faces-new-hurdles-for-students-1785545769"></link>
            <id>https://canadamirror.com/article/us-work-dream-faces-new-hurdles-for-students-1785545769</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வரி விதிப்பு, குடியேற்ற கொள்கையில் மாற்றம் என ட்ரம்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.</p><p> வரி விதிப்பு, குடியேற்ற கொள்கையில் மாற்றம் என ட்ரம்ப் கடுமையான கெடுபிடிகளை விதித்துவரும் நிலையில், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்த பிறகு அந்நாட்டில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு மாணவர்களிடம் 1 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4116dad-ab71-4359-8f55-70e7ab9066e8/26-6a6d4430253f3.webp' /></p><p>
</p><p>

இந்த புதிய கட்டணம், வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த பிறகு தற்காலிகமாக அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கும் ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெயினிங் திட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. </p><p>இந்த திட்டத்தின் மூலம் தற்போது தகுதியான மாணவர்கள் 1 முதல் 3 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் பணியாற்ற முடிகிறது.


சமீபத்தில் எச்-1பிவிசாவுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிக்கு அமெரிக்க கோர்ட் தடை விதித்தது. </p><p>இதையடுத்து, அதே அளவிலான கட்டணத்தை புதிய திட்டத்தின் மூலம் அமல்படுத்தும் வாய்ப்பை ட்ரம்ப் நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>இந்த திட்டம் அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் உயர் கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படலாம். </p><p>அதுமட்டுமின்றி வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கையை பெரிதும் நம்பியுள்ள அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.</p><p> இருப்பினும், இந்த கட்டணம் குறித்து இறுதி முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-01T00:56:18+00:00</updated>
        </entry>
    </feed>
