<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-09T17:19:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மானிடோபாவில் காணாமல்போன நபர் ஒரு மாதத்தின் பின் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/body-of-missing-alberta-man-pulled-from-manitoba-1788973277"></link>
            <id>https://canadamirror.com/article/body-of-missing-alberta-man-pulled-from-manitoba-1788973277</id>
            <summary type="text">&amp;nbsp;கடந்த மாதம் கனடாவின் மானிடோபா மாகாணத்தில் காணாமல்போன அல்பெர்ட்டாவைச் சேர்ந்த 60 வயது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று உறுதிப்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடந்த மாதம் கனடாவின் மானிடோபா மாகாணத்தில் காணாமல்போன அல்பெர்ட்டாவைச் சேர்ந்த 60 வயது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>அல்பெர்ட்டாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ரெட்மண்ட் என்பவர், கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி மானிடோபாவின் கெல்சி பகுதியில் காணாமல்போயிருந்தார். </p><p>இவர் வழக்கமாக நெல்சன் ஆற்றின் கரையில் மீன்பிடிக்கச் செல்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aa06f9d-5a22-4244-9ce0-3340ab7c90de/26-6aa190df048fc.webp' /></p><p>
</p><p>ரெட்மண்டின் குடிலுக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட தேடுதலின் போது, கெல்சி மின் உற்பத்தி நிலைய அணையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அவரது மீன்பிடி உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன.</p><p>
செப்டம்பர் 1 ஆம் திகதி கெல்சி அணைப் பகுதியில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, ஆற்றங்கரைக்கு அருகே சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.</p><p>
வினிபெக் நகரத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், மீட்கப்பட்டவர் ஜேம்ஸ் ரெட்மண்ட் என்பது முறைப்படி உறுதி செய்யப்பட்டது.</p><p>
இந்த மரணத்தில் எவ்வித சந்தேகத்திற்கு இடமான சூழலும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T17:03:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 14 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/14-killed-in-explosion-in-syria-1788971251"></link>
            <id>https://canadamirror.com/article/14-killed-in-explosion-in-syria-1788971251</id>
            <summary type="text">சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள சர்மாடா (Sarmada) நகருக்கு அருகே ஆயுதங்கள் மற்றும் போர்க் கழிவுகளைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள சர்மாடா (Sarmada) நகருக்கு அருகே ஆயுதங்கள் மற்றும் போர்க் கழிவுகளைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக இடம் ஒன்றில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 14 பேர் உயிரிழந்ததுள்ளனர்.</p><p> 

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51701b46-60f2-48fe-989e-9c5f94570a21/26-6aa188f55c2bf.webp' /></p><p>அந்த ஆயுதங்களும் போர்க் கழிவுகளும் வேறொரு இடத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்னர் குறித்த இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகப் பாதுகாப்பு சிரியாவின் அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p>

சிவில் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிப்புகள் தீயை அணைக்கும் முயற்சிகளுக்குத் தடையை ஏற்படுத்தியதுடன், பல மணிநேரமாக அப்பகுதியிலிருந்து அடர்ந்த புகையும் வெளியேறியது. </p><p>

ஆரம்பக்கட்ட வெடிப்புக்கான காரணம் என்னவென்று அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை. </p><p>

சிரிய அரச ஊடகங்களின் தகவலின்படி, இத்லிப் மாகாணத்தில் உள்ள பின்னீஷ் (Binnish) பகுதியிலும் செப்டம்பர் 1 ஆம் திகதி வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் மேலும் சிலர் காயமடைந்தனர்.</p>]]></content>
            <updated>2026-09-09T16:27:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[85 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம்: எங்கிருந்தோ வந்த தோட்டாவினால் பலியான முதியவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/innocent-85-year-old-man-killed-in-his-home-1788938694"></link>
            <id>https://canadamirror.com/article/innocent-85-year-old-man-killed-in-his-home-1788938694</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பர்னபி நகரில், தனது வீட்டில் இருந்த 85 வயது முதியவர் ஒருவர், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தோட்டா பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பர்னபி நகரில், தனது வீட்டில் இருந்த 85 வயது முதியவர் ஒருவர், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தோட்டா பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 1:30 மணியளவில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக பர்னபி பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.</p><p>
பொலிஸார் சம்பவ இடத்திற்குச் செல்வதற்குள் சந்தேகத்திற்குரிய வாகனம் தப்பிச் சென்றதுடன், ஆரம்பக்கட்ட சோதனையில் காயமடைந்தவர்கள் எவரும் கண்டறியப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e2b1436-aa71-4c9e-b1f1-6fcaa8fcd58a/26-6aa109c859b50.webp' /></p><p>
எனினும், அன்றைய தினம் மாலை 4:00 மணியளவில், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு அருகே உள்ள குடியிருப்பில் வசிக்கும் முதியவரின் நலன் குறித்து விசாரிக்க பொலிஸார் சென்றுள்ளனர்.</p><p>
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, 85 வயதான சாங் யோங் சோ என்ற முதியவர் துப்பாக்கிக் காயத்துடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
</p><p>அப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது தவறுதலாக பாய்ந்து வந்த தோட்டாவே இவரைத் தாக்கியுள்ளது எனவும், இந்தச் சம்பவத்தில் இவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் ஒருங்கிணைந்த கொலை விசாரணைப் படை உறுதி செய்துள்ளது.</p><p>
இச்சம்பவம் கும்பல் மோதலோ அல்லது போதைப்பொருள் தொடர்பானதோ அல்ல என்றும், தனிப்பட்ட தகராறே இதற்குக் காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இதில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் குறித்த விவரங்கள் தெரிந்தவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள், பொலிஸாரைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 12:30 மணி முதல் 2:00 மணி வரை 18th and Humphries avenues பகுதிகளில் பயணித்தவர்களிடம் டேஷ்கேம் அல்லது பாதுகாப்பு கேமரா பதிவுகள் இருந்தால், 1-877-551-4448 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T13:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு; 30 நாட்கள் கெடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-orders-closure-of-british-consulate-1788945593"></link>
            <id>https://canadamirror.com/article/israel-orders-closure-of-british-consulate-1788945593</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானியாவின் துணைத் தூதரகத்தை 30 நாட்களுக்குள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானியாவின் துணைத் தூதரகத்தை 30 நாட்களுக்குள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

 காசா தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் ரமல்லாவில் பணியாற்றும் பிரித்தானிய ஊழியர்கள் 7 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14caf05c-a6d9-472f-af13-2a32c44d52c9/26-6aa124baeec29.webp' /></p><p>

இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா அண்மையில் விதித்த தடைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
</p><p>
இஸ்ரேல் மற்றும் பிரித்தானியா இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளமை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T12:53:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு லெபனானில் இஸ்ரேல் கடும் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-launches-heavy-attacks-in-southern-lebanon-1788957028"></link>
            <id>https://canadamirror.com/article/israel-launches-heavy-attacks-in-southern-lebanon-1788957028</id>
            <summary type="text">&amp;nbsp; தெற்கு லெபனானில் உள்ள ஹரூஃப் (Harouf) நகரின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சிவில் பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தெற்கு லெபனானில் உள்ள ஹரூஃப் (Harouf) நகரின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>



ஹரூஃப் - ஸெப்தீன் (Zebdine) நகரங்களை இணைக்கும் வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை இலக்குவைத்து இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02532b91-ac25-4b25-b823-bc3230d5f2f0/26-6aa15165c8606.webp' /></p><p>
</p><p>


கடந்த ஒரு வாரமாக லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை பலர் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளனர்.</p><p>



அதேவேளை, அமெரிக்கா தலைமையிலான மத்தியஸ்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும், தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்களை இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளதுடன், அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-09T12:27:20+00:00</updated>
        </entry>
    </feed>
