<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-29T11:35:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக் மீது அமெரிக்க - சவூதி வான்வழித் தாக்குதல்; மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/u-s-and-saudi-arabia-strike-iran-backed-in-iraq-1785303129"></link>
            <id>https://canadamirror.com/article/u-s-and-saudi-arabia-strike-iran-backed-in-iraq-1785303129</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈராக்கில் உள்ள,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

கடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈராக்கில் உள்ள,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த 72 மணித்தியாலங்களில் அமெரிக்கப் படைகள் மற்றும் சவூதி எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு, ஈரான் புரட்சிகரக் காவல்படை 30 க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை நடத்தி இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3796d8ed-8e84-489f-98c4-98d2abf4eea0/26-6a69905b730d7.webp' /></p><p>
</p><p>
இந் நிலையில் அடந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, ,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T11:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் 22 வயது இலங்கை தமிழ் இளைஞருக்கு சிறை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sri-lankan-tamil-youth-8-months-prision-australia-1785320265"></link>
            <id>https://canadamirror.com/article/sri-lankan-tamil-youth-8-months-prision-australia-1785320265</id>
            <summary type="text">&amp;nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூன்று மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞர் 22 வயதான சரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar) மற்றும் அவருடன் குற்றத்தில் ஈடுபட்ட பாட்லி மாஹ்வினி (Baddeley Mawhinney) ஆகியோர் ஏப்ரல் 25 அன்று கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் கொடூரமான தாக்குதலை நடத்தியது சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6795bdcd-90ba-4dfe-a7b1-74e26aed1aba/26-6a69d34b504d9.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கொடூரமான தாக்குதல்&nbsp;</span></p><p>
</p><p>
தாக்குதலில் தனது பங்கிற்காக மாவின்னிக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட சிவகுமார், திங்களன்று காவலில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கிளீவ்லேண்ட் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
</p><p>
தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த பாதிக்கப்பட்ட நபரை சிவகுமாரும் மாஹினியும் அணுகிப் பேசத் தொடங்கியதாகவும், ஆனால் அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>அவ்விருவரும் அந்த நபரின் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியதுடன், மூடிக் கொண்டிருந்த ரயில் கதவுகள் வழியாக அவரை இழுத்துச் சென்று அவர் வெளியேறுவதைத் தடுத்த பின்னர் மற்றொரு பெட்டிக்குச் சென்றனர்.</p><p>

 அவர்கள் விரைவில் திரும்பி வந்து அந்த நபரின் பையைப் பறிக்க முயன்ற போது சிவகுமார் ஒரு கண்ணாடிப் போத்தலால் அந்த நபரின் தலையில் தாக்கியதில் அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டது.</p><p>

இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனால் அவர் குயின்ஸ்லாந்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>தாக்க முற்பட்டவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அவ்வாறு செய்ததாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்டார். எனினும் இந்தத் தாக்குதலுக்காக சிவகுமாருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது,

ஏற்கனவே 89 நாட்கள் சிறைக்காவலில் இருந்ததால், அவர் கண்காணிப்புடன் கூடிய நிபந்தனையில் விடுவிக்கப்பட்டார்.</p><p>
அதேசமயம் சிவகுமார் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியக் குடிமகனாக மாறியதாகவும், வேலை தேடி மெல்போர்னிலிருந்து பிரிஸ்பேனுக்குச் சென்ற அவர், வீடின்றியும் வேலையின்றியும் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T11:20:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் காதலிக்கு 860 கோடி சொத்து எழுதிய எப்ஸ்டீன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/jeffrey-epstein-assets-860-crore-ex-girlfrien-1785317171"></link>
            <id>https://canadamirror.com/article/jeffrey-epstein-assets-860-crore-ex-girlfrien-1785317171</id>
            <summary type="text">&amp;nbsp; ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தனது முன்னாள் காதலியாக கூறப்படும் பல் மருத்துவர் கரீனா ஷூலியாக் என்பவருக்கு 860 கோடி சொத்து எழுதி வைத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தனது முன்னாள் காதலியாக கூறப்படும் பல் மருத்துவர் கரீனா ஷூலியாக் என்பவருக்கு 860 கோடி சொத்து எழுதி வைத்துள்ளமை தற்போது பெசுபொருளாகியுள்ளது.
</p><p>
சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க சிறையில் இருந்த போது ஜெஃப்ரி எப்ஸ்டீன் மர்மமான முறையில் இறந்து போனார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73fb806a-823a-4464-bbaa-1b12f3bcdcb1/26-6a69c735174fc.webp' /></p><h2>பல நாடுகளிலும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்&nbsp; அதிர்வலை&nbsp;&nbsp;</h2><p> 

அவரது இறப்பின் பின் பல்வேறு உலகை உலுக்கும் பல்வேரு தகவல்&nbsp; வெளியாகி இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்&nbsp; இந்த விவகாரம் அமெரிக்காவில் மட்டுமல்லாது பல நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
</p><p>
அதற்கு காரணம், அமெரிக்காவில் உள்ள பெரும் பணக்காரர்களை தன் வலைக்குள் கொண்டு வந்து கடலுக்கு நடுவில் ஒரு தனித்தீவை உருவாக்கி அங்கு உல்லாச விடுதிகளை கட்டி அங்கு சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை கொண்டு வந்து பணக்காரர்களுடன் உல்லாசமாக இருக்க வைத்து அது தொடர்பான வழக்கில் சிக்கியவர்தான் இந்த எப்ஸ்டீன் (Jeffrey Epstein).</p><p>



Epstein தொடர்பான ஆவணங்கள் Epstein Files என்கிற பெயரில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்தது. 

அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆகியோர்களின் பெயர்கள் அடிபட்டதோடு, அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியானது.</p><p>

ஆனால், எப்ஸ்டீனூடன் நட்பாக பழகியதாக மட்டுமே அவர்கள் சொன்னர்கல். </p><p> இந்நிலையில்தான் அமெரிக்க பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் உயில் தொடர்பான புதிய ஆவணங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் அவர் முன்னாள் காதலியாக கூறப்படும் பல் மருத்துவர் கரீனா ஷூலியாக் என்பவருக்கு சுமார் ரூ.860 கோடி மதிப்பிலான சொத்தும், 33 காரட் வைர மோதிரமும் கிடைக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-29T09:24:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசியப் பாதுகாப்பிற்கு அபாயம்; சீன ரோபோக்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-administration-bans-chinese-robots-1785316616"></link>
            <id>https://canadamirror.com/article/trump-administration-bans-chinese-robots-1785316616</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அபாயங்கள் இருப்பதாகக் கூறி, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட புதிய மனித உருவ ரோபோக்களை அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அபாயங்கள் இருப்பதாகக் கூறி, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட புதிய மனித உருவ ரோபோக்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதற்குத் தடை விதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் செவ்வாயன்று (28) அறிவித்தது.
</p><p>

இந்த நடவடிக்கை, மனித உருவம் கொண்ட மற்றும் நான்கு கால்களைக் கொண்ட இயந்திரங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ரோபோக்களுக்குப் பொருந்தும். இவற்றில் பல சீனாவில் தயாரிக்கப்படுபவை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14bb95e6-c9a1-48f3-a392-c90b267b81d1/26-6a69c50a02c72.webp' /></p><p>அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சாதனங்களாக இவை இருக்கக்கூடும் எனக் கூறியே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக FCC தெரிவித்துள்ளது.</p><p>

ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் வளர்ச்சியை எட்டுவதில் சீனா அமெரிக்காவுடன் போட்டியிட்டு வரும் நிலையில் இந்த தடை உத்தரவு வந்துள்ளது.
</p><p>
அத்துடன், தரவு மையங்கள் மற்றும் சூரிய மின்கலத் தகடுகளில் பயன்படுத்தப்படும் மின்சக்தி மாற்றிகள் (Power Inverters) இறக்குமதிக்கும் அமெரிக்க கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணையம் (FCC) தடை விதித்துள்ளது.
</p><p>வொஷிங்டனின் இந்த நடவடிக்கைக்கு பதிலளித்துள்ள சீனத் தூதரகம், வர்த்தக விவகாரங்களை அமெரிக்கா அரசியல்மயமாக்குவதையும், அடிப்படையற்ற காரணங்களை முன்வைத்துத் தடைகள் விதிப்பதையும் பெய்ஜிங் நீண்டகாலமாக எதிர்த்து வருவதாகக் கூறியுள்ளது.</p><p>
அத்துடன், தனது நலன்களுக்குப் பொருள்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் பதிலடியாக, சீன அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று தூதரகம் கூறியது.</p>]]></content>
            <updated>2026-07-29T09:15:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா, சீனா மீது 100 சதவீத வரி; டிரம்ப் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-senate-passes-100-tariff-on-india-and-china-1785309254"></link>
            <id>https://canadamirror.com/article/us-senate-passes-100-tariff-on-india-and-china-1785309254</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு , 100 சதவீத கூடுதல் வரியை விதிக்கும் முயற்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு , 100 சதவீத கூடுதல் வரியை விதிக்கும் முயற்சியில் டிரம்ப் இறங்கியிருக்கிறார். </p><p>

இது தொடர்பாக புதிய மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7697fa53-446b-4990-b871-ca976749d994/26-6a69a8487389e.webp' /></p><p>
</p><p>
 இந்த புதிய மசோதா அமெரிக்க செனட் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் நிறைவேறியிருக்கிறது. </p><p>

அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி முன்னிலையில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா அமெரிக்காவின் இரு கட்சிகளின் ஆதரவுடன் சட்டமாவதற்கான முதல் படியை எட்டியிருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-07-29T07:12:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மாணவர்கள் வேலை செய்வது தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-govt-warn-regard-int-students-working-1785308495"></link>
            <id>https://canadamirror.com/article/canada-govt-warn-regard-int-students-working-1785308495</id>
            <summary type="text">சர்வதேச மாணவர்கள் கனடாவில் வேலை செய்வது தொடர்பில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச மாணவர்கள் கனடாவில் வேலை செய்வது தொடர்பில், கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>

சமீபத்தில், கனடாவில் படித்து பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களுக்கு பணி அனுமதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/391752d6-9f29-4181-8558-96e43061869a/26-6a69a5510b6a5.webp' /></p><p>
பணம் செலவு செய்து முறைப்படி கனடாவில் கல்வி கற்றும், தங்களுக்கு பணி அனுமதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால், மாணவ மாணவியர் உண்ணாவிரதம் இருந்த சம்பங்களும் நடைபெற்றன.
</p><p>
இந்நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Important information for international students who plan to work while studying:<br>• You can only work in Canada as an international student if your study permit conditions say you can.<br>• If you are eligible to work off campus, you can only work up to 24 hours per week while…</p>&mdash; IRCC (@CitImmCanada) <a href="https://x.com/CitImmCanada/status/2081545178309853251?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
அந்த அறிவிப்பின்படி, சர்வதேச மாணவர்களின் கல்வி அனுமதியில் அவர்களுக்கு வேலை செய்ய அனுமதி உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும்.
</p><p>
தாங்கள் கல்வி கற்கும் கல்லூரி வளாகத்திற்கு வெளியே பணிபுரியத் தகுதியுள்ள மாணவர்கள், வகுப்புகள் நடைபெறும் நாட்களில் மட்டும், வாரத்திற்கு 24 மணி நேரம் வரை மட்டுமே வேலை செய்யலாம்.</p><p>

அனுமதிக்கப்பட்ட வேலை வரம்பை மீறுவது கனடாவில் ஒரு மாணவரின் மாணவர் நிலையை பாதிக்கலாம், எதிர்காலக் கல்வி அல்லது பணி அனுமதி விண்ணப்பங்களைப் பாதிக்கலாம், அத்துடன், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் கட்டாயப்படுத்தலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

அதாவது, சர்வதேச மாணவர்கள், தங்கள் கல்வி அனுமதியில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கவனத்தில் கொள்ளுமாறும், அவற்றை சரியாக பின்பற்றுமாறும் நினைவூட்டப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T07:01:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு; மீட்பு பணி தீவிரம்; இருளில் மூழ்கிய வீடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-toll-rises-in-japan-earthquake-1785305518"></link>
            <id>https://canadamirror.com/article/death-toll-rises-in-japan-earthquake-1785305518</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜப்பானில் கியூஷு தீவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜப்பானில் கியூஷு தீவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

நேற்று (28) அதிகாலை ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஜப்பானில் பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தது.</p><p>

 

 நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d67ad7a-055c-4259-96b2-d18983b1f6f8/26-6a6999afb7d1c.webp' /></p><h2>40,000 வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு</h2><p>
</p><p>
 

தற்போது 10 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



பூமிக்கு அடியில் குறைந்த ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால், கியூஷுவில் உள்ள பல மாகாணங்களுக்கு அதிகாரிகள் அவசரகால நிலநடுக்க எச்சரிக்கைகளை வெளியிட்டனர். </p><p>



முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 1.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதுடன் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, இரண்டு மணி நேரத்துக்கு பின் திரும்பப் பெறப்பட்டது.</p><p>

 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 40,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், சில பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p> 



நிலநடுக்கத்தால் காணாமல் போனவர்களை மீட்புப் படையினர் தேடிவரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதுடன், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சியும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-29T06:10:05+00:00</updated>
        </entry>
    </feed>
