<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-14T06:32:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சில உணவு வகைகள் குறித்து எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/some-whole-foods-salsas-guacamoles-recalled-1786674275"></link>
            <id>https://canadamirror.com/article/some-whole-foods-salsas-guacamoles-recalled-1786674275</id>
            <summary type="text">&amp;nbsp;ஒன்டாரியோவில் இணையவழியில் விற்பனை செய்யப்பட்ட &#039;ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட்&#039; நிறுவனத்தின் சில சாஸ்கள், குவாக்கமோல் மற்றும் பிற ஆயத்த உணவுகளில் &#039;சால்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஒன்டாரியோவில் இணையவழியில் விற்பனை செய்யப்பட்ட 'ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட்' நிறுவனத்தின் சில சாஸ்கள், குவாக்கமோல் மற்றும் பிற ஆயத்த உணவுகளில் 'சால்மோனெல்லா' பாக்டீரியா தொற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவை திரும்பப் பெறப்படுவதாக கனடாவின் உணவுத் ஆய்வு முகவரகம் அறிவித்துள்ளது.</p><p>
மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார மிளகாய் மூலமாகவே இந்த பாக்டீரியா பரவியுள்ளது.</p><p> 
அமெரிக்காவில் ஏற்பட்ட நோய் பரவலுக்கும் இந்த மிளகாய்களே காரணம் எனக் கூறப்படும் நிலையில், அதன் தொடர்ச்சியாகவே கனடாவிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15bf9fa8-9665-4121-b034-7a91bc6516cd/26-6a7e7c64e009a.webp' /></p><p>எனினும், கனடாவில் இந்த உணவுகளை உட்கொண்டதால் இதுவரை யாருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை என்று கனடாவின் உணவுத் ஆய்வு முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>
திரும்பப் பெறப்படும் பொருட்களில் பல்வேறு வகையான 'சால்சா', 'குவாக்கமோல்', 'பிகோ டி காலோ' மற்றும் 'சிக்கன் கெசடிலா' போன்ற ஆயத்த உணவுகள் அடங்கும். இவை ஆகஸ்ட் 16 வரை காலாவதி திகதியைக் கொண்ட தயாரிப்புகளாகும்.
</p><p>சால்மோனெல்லா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவுகள் பார்ப்பதற்கோ அல்லது வாசனைக்கோ கெட்டுப்போனது போல் தெரியாது. </p><p>ஆனால், அவற்றை உட்கொள்வது உடல்நலக் குறைவை ஏற்படுத்தும். குறிப்பாக சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T06:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பெண் ஒருவரை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-dog-owner-charged-after-mauling-left-woman-1786673715"></link>
            <id>https://canadamirror.com/article/bc-dog-owner-charged-after-mauling-left-woman-1786673715</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள போர்ட் மூடி பகுதியில், பெண் ஒருவரை இரண்டு பெரிய நாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தையடுத்து, அந்த நாய்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள போர்ட் மூடி பகுதியில், பெண் ஒருவரை இரண்டு பெரிய நாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தையடுத்து, அந்த நாய்களின் உரிமையாளர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
மெட்ரோ வான்கூவர் பகுதியில் உள்ள அந்த நகரத்தில், கடந்த மே 20 ஆம் திகதி பெண் ஒருவர் நாய்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
</p><p>காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். அவரது காயங்களின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், அவை மிகவும் "கடுமையானவை மற்றும் வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடியவை" என்று விவரிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48b0af45-94ab-4566-a2e3-ec61fbab3ad0/26-6a7e7a3593060.webp' /></p><p>
</p><p>தாக்குதலுக்கு முன்பே, அந்த நாய்கள் மிகவும் "ஆக்ரோஷமானவை" என நகர அதிகாரிகள் ஏற்கனவே வகைப்படுத்தியிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>அதன்படி, அந்த நாய்களுக்கு வாய்மூடி கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும், இச்சம்பவத்தின் போது நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்கப்பட்டிருக்கவில்லை என பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p>
இதனையடுத்து, கவனக்குறைவாகச் செயல்பட்டு உடல்காயத்தை ஏற்படுத்தியதற்காக நாய் உரிமையாளர் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்ய பிரிட்டிஷ் கொலம்பியா அரசு வழக்குரைஞர் சேவை ஒப்புதல் அளித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T06:12:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏடிஎம் இயந்திரங்களில் மோசடி; இரண்டு ருமேனியர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/2-romanians-accused-of-installing-cash-trap-device-1786672336"></link>
            <id>https://canadamirror.com/article/2-romanians-accused-of-installing-cash-trap-device-1786672336</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வரும் பாதையை அடைத்து மோசடி செய்த சம்பவம் தொடர்பாக ருமேனியாவைச் சேர்ந்த இருவர் மீது 30...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வரும் பாதையை அடைத்து மோசடி செய்த சம்பவம் தொடர்பாக ருமேனியாவைச் சேர்ந்த இருவர் மீது 30-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>கடந்த ஜூன் 17 முதல் ஜூலை 27 வரையிலான காலப்பகுதியில் இவ்வாறான 14 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நிதி நிறுவனங்கள் முறையிட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
சந்தேகநபர்கள் ஏடிஎம் இயந்திரங்களின் பணம் வெளிவரும் பகுதிக்குள் இருபுறமும் ஒட்டும் தன்மையுடைய 'டேப்'களைப் பொருத்தி, வாடிக்கையாளர்களுக்கு பணம் கிடைக்காதவாறு தடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73012fc4-e4c6-4a26-8978-26fc57c3e6a2/26-6a7e74d1ac72c.webp' /></p><p> </p><p>பின்னர் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து சென்றதும், அங்கு சிக்கிய பணத்தை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p>
இது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கடந்த வாரம் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p> அவர்களிடம் இருந்து அதிகளவிலான இருபக்க ஒட்டு நாடாக்கள் மற்றும் இயந்திரங்களில் பயன்படுத்தப்பட்ட உலோகத் தகடுகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>கைது செய்யப்பட்டவர்கள் ருமேனியாவைச் சேர்ந்த ரஸ்வான் செனிகா (41) மற்றும் வாசில் ஸ்டோயன் (52) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p> இவர்கள் இருவர் மீதும் திருட்டு மற்றும் சேதப்படுத்துதல் உள்ளிட்ட தலா 19 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>
இவர்கள் தென்மேற்கு ஒன்டாரியோ பகுதி முழுவதும் பயணித்து இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளதால், மேலும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T04:29:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய விமான நிறுவனத்தின் தடைகளை நீக்கும் கோரிக்கை நிராகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/judge-denies-russian-cargo-airline-sanction-1786673080"></link>
            <id>https://canadamirror.com/article/judge-denies-russian-cargo-airline-sanction-1786673080</id>
            <summary type="text">உக்ரைன் போர் தொடங்கியதை அடுத்து கனடாவினால் பறிமுதல் செய்யப்பட்ட பிரம்மாண்ட சரக்கு விமானத்தின் உரிமையாளரான ரஷ்ய விமான நிறுவனம் தாக்கல் செய்த தடை நிவாரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் போர் தொடங்கியதை அடுத்து கனடாவினால் பறிமுதல் செய்யப்பட்ட பிரம்மாண்ட சரக்கு விமானத்தின் உரிமையாளரான ரஷ்ய விமான நிறுவனம் தாக்கல் செய்த தடை நிவாரண மனுவை கனடாவின் மத்திய அரசாங்க நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.</p><p>
ரஷ்யாவின் மிகப்பெரிய சரக்கு விமான நிறுவனமான 'வோல்கா டினெப்ர் ஏர்லைன்ஸ்', நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் தலைவர் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தொடர்வதற்கான கனேடிய கூட்டாட்சி அரசின் முடிவை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
</p><p>2018 ஆம் ஆண்டு முதல் இராணுவப் பொருட்களை ஏற்றிச் செல்வதை நிறுத்திவிட்டதாகக் கூறி, 2023 ஆம் ஆண்டில் கனடாவின் தடைப் பட்டியலிலிருந்து தங்கள் பெயரை நீக்குமாறு அந்த நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ff3c6f4-becc-4982-af6d-b2bb9e750246/26-6a7e77ba7187b.webp' /></p><p> 
எனினும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
ரஷ்ய அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்கள் மூலம் இந்த நிறுவனம் பலனடைந்துள்ளதாகவும், அதிபர் விளாடிமிர் புடினின் அரசு மீதான தடைகளை மீற உதவியதாகவும் கனேடிய அரசு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
கடந்த 2023 ஆம் ஆண்டு ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 'அன்டோனோவ்-124' ரக மிகப்பெரிய சரக்கு விமானத்தை கனடா பறிமுதல் செய்தது. அந்த விமானம் இதுவரை அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>இதற்கிடையில், சர்வதேச மத்தியஸ்த செயல்முறை மூலமாக அந்தச் சரக்கு விமானத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற அந்நிறுவனம் முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T04:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்த் பே சூதாட்ட விடுதியில் வன்முறை 44 வயது நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-arrested-violent-robbery-at-north-bay-casino-1786675267"></link>
            <id>https://canadamirror.com/article/man-arrested-violent-robbery-at-north-bay-casino-1786675267</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோவிலுள்ள நோர்த் பே பகுதியில் அமைந்துள்ள &#039;காஸ்கேட்ஸ் கேசினோ&#039; சூதாட்ட விடுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து, ஸ்டர்ஜன் ஃ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோவிலுள்ள நோர்த் பே பகுதியில் அமைந்துள்ள 'காஸ்கேட்ஸ் கேசினோ' சூதாட்ட விடுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து, ஸ்டர்ஜன் ஃபால்ஸ் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>பைன்வுட் பார்க் டிரைவில் உள்ள அந்தச் சூதாட்ட விடுதிக்குள் இரண்டு ஆயுதங்களுடன் நபர் ஒருவர் நுழைந்துள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து, நேற்று முன்தினம் அதிகாலை 12:15 மணியளவில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
</p><p>"அந்த நபர் சூதாட்டப் பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதுடன், ஊழியர் ஒருவரைப் பலமுறை தாக்கியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc23e35a-153a-45dc-b35d-78f156427a25/26-6a7e804522e12.webp' /></p><p>மேலும், 'ஸ்லாட் மெஷின்' மற்றும் கணினி ஆகியவற்றை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்திய அவர், ஊழியரிடம் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளார்" என்று நோர்த் பே பொலிஸார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
</p><p>குறிப்பிட்ட அளவு ரொக்கப் பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், அவர் சூதாட்ட விடுதியை விட்டு வெளியேற முயன்றுள்ளார். </p><p>ஆனால், அங்கு வந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளைக் கண்டதும், மீண்டும் கட்டிடத்திற்குள் ஓடி, அங்கிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்துத் தப்பிக்க முயன்றுள்ளார்.
எனினும், அதிகாரிகள் அவரை உடனடியாகக் கைது செய்தனர்.</p><p> பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதனையிட்டதில், அவரிடம் பித்தளை கைக்கவசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், திருடப்பட்ட கனேடியப் பணம் முழுவதும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட மேலதிக விவரங்கள் விசாரணைக்குப் பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், அவர் தற்போது பிணை விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T04:27:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மகன்களைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sentencing-hearing-underway-for-new-brunswick-man-1786675932"></link>
            <id>https://canadamirror.com/article/sentencing-hearing-underway-for-new-brunswick-man-1786675932</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி அதிகாலை, காமிஷ்னி தனது 10 மற்றும் 17 வயதுடைய இரு மகன்களையும் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.</p><p> 
பின்னர், 'நெயில் கன்' ஆணி அடிக்கும் கருவி மூலம் தனது தலையில் தானே அடித்துக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார்.
கடந்த ஜூன் 24 அன்று இவர் மீதான முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், தற்போது இவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, அவை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c13f2e43-2828-4500-9573-9d5cb3d0fccd/26-6a7e82de9aefe.webp' /></p><p> </p><p>கனடாவின் சட்டப்படி முதல் நிலை கொலைக் குற்றவாளிக்கு 25 ஆண்டுகளுக்குப் பிணை பெற முடியாது.
</p><p>விவாகரத்து செய்த தனது மனைவியைப் பழிவாங்குவதற்காகவும், அவருக்குத் தண்டனை அளிப்பதற்காகவுமே காமிஷ்னி இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
</p><p>கொலை செய்வதற்கு முன்பாக, "நான் அனைவரையும் கொன்றுவிட்டேன், பொலிஸாரையும் ஆம்புலன்ஸையும் வரச் சொல்" என்று மனைவிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி மற்றும் கடிதங்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.
</p><p>எனினும், நீதிமன்றத்தில் பேசிய காமிஷ்னி, "எனக்கு அன்றைய தினம் நடந்தது எதுவும் நினைவில் இல்லை, என் குழந்தைகளைக் கொல்லும் திட்டம் எனக்கு இருக்கவில்லை" என்று வாதிட்டார்.
</p><p>இதைக் கேட்ட நீதிபதி டேரல் ஸ்டீபன்சன், "உம்மீது மேலும் வார்த்தைகளை வீணடிக்க விரும்பவில்லை. நீர் ஒரு திட்டமிட்டு அதைச் செயல்படுத்தியுள்ளீர், அதற்கான தண்டனையை அனுபவிக்கும் நேரம் இது" என்று கூறி தண்டனையை அறிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T03:34:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோவா ஸ்கோடியாவில் மனித எச்சங்கள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/human-remains-found-near-debert-ns-rcmp-1786674694"></link>
            <id>https://canadamirror.com/article/human-remains-found-near-debert-ns-rcmp-1786674694</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்திலுள்ள கோல்செஸ்டர் கவுன்டீ பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்திலுள்ள கோல்செஸ்டர் கவுன்டீ பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>டெபர்ட் பகுதிக்கு அருகிலுள்ள காடடர்ந்த பகுதியில் மனித எச்சங்கள் இருப்பதாகக் கடந்த ஜூலை 22 ஆம் திகதி கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர்.
</p><p>மீட்கப்பட்ட எச்சங்கள் ஒரு ஆணுடையது என்றும், அவரது மரணத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் அடங்கியிருக்கலாம் என நம்புவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aca255e7-b81f-45de-9b58-8d5ed9432b0b/26-6a7e7e08729d3.webp' /></p><p>
</p><p>எனினும், நோவா ஸ்கோடியா மருத்துவ பரிசோதனை சேவையின் உதவியுடன், உயிரிழந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் புலனாய்வாளர்கள் முயன்று வருகின்றனர்.</p><p>
அந்த நபரின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதில் இருந்து, அப்பகுதியில் விரிவான தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன. </p><p>இந்த சம்பவம் குறித்து மக்களிடையே பல்வேறு வதந்திகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளதை நாங்கள் அறிவோம். ஆனால், எங்கள் முதன்மைப் பொறுப்பு விசாரணையின் நிமித்தம் தகவல்களைப் பாதுகாப்பதே ஆகும் என நோவா ஸ்கோடியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இவ்விசாரணை இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதால், தற்போதைக்கு மேலதிக விவரங்கள் எதையும் வெளியிட முடியாது என பொலிஸார் கூறியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T03:06:12+00:00</updated>
        </entry>
    </feed>
