<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-09T13:26:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு; 30 நாட்கள் கெடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-orders-closure-of-british-consulate-1788945593"></link>
            <id>https://canadamirror.com/article/israel-orders-closure-of-british-consulate-1788945593</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானியாவின் துணைத் தூதரகத்தை 30 நாட்களுக்குள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானியாவின் துணைத் தூதரகத்தை 30 நாட்களுக்குள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

 காசா தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் ரமல்லாவில் பணியாற்றும் பிரித்தானிய ஊழியர்கள் 7 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14caf05c-a6d9-472f-af13-2a32c44d52c9/26-6aa124baeec29.webp' /></p><p>

இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா அண்மையில் விதித்த தடைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
</p><p>
இஸ்ரேல் மற்றும் பிரித்தானியா இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளமை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T12:53:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[85 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம்: எங்கிருந்தோ வந்த தோட்டாவினால் பலியான முதியவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/innocent-85-year-old-man-killed-in-his-home-1788938694"></link>
            <id>https://canadamirror.com/article/innocent-85-year-old-man-killed-in-his-home-1788938694</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பர்னபி நகரில், தனது வீட்டில் இருந்த 85 வயது முதியவர் ஒருவர், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தோட்டா பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பர்னபி நகரில், தனது வீட்டில் இருந்த 85 வயது முதியவர் ஒருவர், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தோட்டா பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 1:30 மணியளவில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக பர்னபி பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.</p><p>
பொலிஸார் சம்பவ இடத்திற்குச் செல்வதற்குள் சந்தேகத்திற்குரிய வாகனம் தப்பிச் சென்றதுடன், ஆரம்பக்கட்ட சோதனையில் காயமடைந்தவர்கள் எவரும் கண்டறியப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e2b1436-aa71-4c9e-b1f1-6fcaa8fcd58a/26-6aa109c859b50.webp' /></p><p>
எனினும், அன்றைய தினம் மாலை 4:00 மணியளவில், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு அருகே உள்ள குடியிருப்பில் வசிக்கும் முதியவரின் நலன் குறித்து விசாரிக்க பொலிஸார் சென்றுள்ளனர்.</p><p>
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, 85 வயதான சாங் யோங் சோ என்ற முதியவர் துப்பாக்கிக் காயத்துடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
</p><p>அப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது தவறுதலாக பாய்ந்து வந்த தோட்டாவே இவரைத் தாக்கியுள்ளது எனவும், இந்தச் சம்பவத்தில் இவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் ஒருங்கிணைந்த கொலை விசாரணைப் படை உறுதி செய்துள்ளது.</p><p>
இச்சம்பவம் கும்பல் மோதலோ அல்லது போதைப்பொருள் தொடர்பானதோ அல்ல என்றும், தனிப்பட்ட தகராறே இதற்குக் காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இதில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் குறித்த விவரங்கள் தெரிந்தவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள், பொலிஸாரைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 12:30 மணி முதல் 2:00 மணி வரை 18th and Humphries avenues பகுதிகளில் பயணித்தவர்களிடம் டேஷ்கேம் அல்லது பாதுகாப்பு கேமரா பதிவுகள் இருந்தால், 1-877-551-4448 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T12:52:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு லெபனானில் இஸ்ரேல் கடும் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-launches-heavy-attacks-in-southern-lebanon-1788957028"></link>
            <id>https://canadamirror.com/article/israel-launches-heavy-attacks-in-southern-lebanon-1788957028</id>
            <summary type="text">&amp;nbsp; தெற்கு லெபனானில் உள்ள ஹரூஃப் (Harouf) நகரின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சிவில் பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தெற்கு லெபனானில் உள்ள ஹரூஃப் (Harouf) நகரின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>



ஹரூஃப் - ஸெப்தீன் (Zebdine) நகரங்களை இணைக்கும் வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை இலக்குவைத்து இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02532b91-ac25-4b25-b823-bc3230d5f2f0/26-6aa15165c8606.webp' /></p><p>
</p><p>


கடந்த ஒரு வாரமாக லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை பலர் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளனர்.</p><p>



அதேவேளை, அமெரிக்கா தலைமையிலான மத்தியஸ்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும், தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்களை இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளதுடன், அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-09T12:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலி விமான நிலையத்தில் பயணியின் சூட்கேசில் காய்ந்த முதலைத் தலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crocodile-head-found-in-suitcase-at-italy-airport-1788952683"></link>
            <id>https://canadamirror.com/article/crocodile-head-found-in-suitcase-at-italy-airport-1788952683</id>
            <summary type="text">இத்தாலியின் புகழ்பெற்ற விமான நிலையம் ஒன்றில் பயணி ஒருவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் காய்ந்த நிலையில் ஒரு ராட்சத முதலைத் தலை மறைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியின் புகழ்பெற்ற விமான நிலையம் ஒன்றில் பயணி ஒருவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் காய்ந்த நிலையில் ஒரு ராட்சத முதலைத் தலை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்த நிலையில் அமெரிக்காவின் மியாமி நகரிலிருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலி வந்திறங்கிய இத்தாலிய பயணி ஒருவரின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a5cae2-d4fd-41f0-94c7-242f614107bb/26-6aa1406d72b80.webp' /></p><p>
</p><p>

துணிகளுக்கு இடையே பதுக்கல்
அப்போது, ராட்சத முதலையின் காய்ந்த தலை ஒன்று சாதாரண பரிசு காகிதத்தால் சுற்றப்பட்டு, சூட்கேசுக்குள் இருந்த துணிகளுக்கு நடுவே ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.</p><p> மேலும், விமான நிலைய பாதுகாப்பு வளையங்கள் மற்றும் ஸ்கேனர்களில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டது பொலிசாருக்கு தெரியவந்தது.

</p><p>அமெரிக்காவின் புளோரிடா போன்ற பகுதிகளில் உள்ள நினைவுப் பரிசு கடைகளில் இது போன்ற காய்ந்த முதலைத் தலைகள் பொதுவாக விற்கப்படுகின்றன. </p><p>பல சுற்றுலா பயணிகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் கடுமையான விதிமுறைகள் தெரியாமல், இவற்றைத் தங்களது சொந்த நாடுகளுக்கு நினைவுப் பரிசாக வாங்கி சென்று பெரும் சட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர்</p><p> இதனால், உரிய சர்வதேச உரிமம் அல்லது சான்றிதழ்கள் இன்றி இவற்றின் பாகங்களைக் கொண்டு செல்வது கடுமையான குற்றமாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T11:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுக் கழிப்பறைக்கு டொனால்ட் டிரம்ப் பெயர்: கனடாவில் வெளிப்பட்ட விசித்திர எதிர்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-memorial-rogue-sign-put-up-to-washroom-in-bc-1788937935"></link>
            <id>https://canadamirror.com/article/trump-memorial-rogue-sign-put-up-to-washroom-in-bc-1788937935</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்ட சம்பவம் பெரும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
விக்டோரியா நகரின் பிரபல 'கேலோப்பிங் கூஸ்' நடைபாதை அருகே அமைந்த பொதுக் கழிப்பறையின் நுழைவாயிலில், "டொனால்ட் ஜே. டிரம்ப் நினைவகம்" என்ற மரத்தாலான பலகை மர்ம நபர்களால் பொருத்தப்பட்டிருந்தது.</p><p>
ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும், மாலை 6 மணியளவில் அந்தப் பலகையை விக்டோரியா நகர சபை அதிகாரிகள் அகற்றிவிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/353e4324-d78d-420c-9a74-d5546cfc1b23/26-6aa106d134d26.webp' /></p><p> 
அந்த இடத்தில் பாதுகாப்பு கேமராக்கள் இல்லாததால் பலகையை வைத்தது யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.
</p><p> கனடா - அமெரிக்க வர்த்தகப் போரினால் ஆத்திரமுற்ற மக்கள், டிரம்ப் மீதான தங்கள் எதிர்ப்பை இத்தகைய விசித்திர வழிகளில் காட்டி வருகின்றனர். </p><p>
கடந்த கோடையில், உள்ளூர் கலைஞர் ஒருவர் குதிரைச் சாணத்தைப் பயன்படுத்தி டிரம்பின் உருவப்படத்தை வரைந்தார். </p><p>அந்த ஓவியம் 1,800 டொலருக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் மக்கள் கழிப்பறைக்குப் பெயர் சூட்டி எதிர்ப்பைப் பதிவுசெய்ய, மறுபுறம் பி.சி. மாகாண முதல்வர் டேவிட் ஈபி, அமெரிக்க எல்லைப் பகுதிகளில் "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51வது மாநிலமாகாது" என்ற எச்சரிக்கைப் பலகையை நிறுவி, டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்குத் தனது அதிகாரப்பூர்வ எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T10:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டன் விமான சேவைகள் திடீர் முடக்கம்; 1000 இற்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/britain-over-1-000-flights-cancelled-1788949451"></link>
            <id>https://canadamirror.com/article/britain-over-1-000-flights-cancelled-1788949451</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிரிட்டனின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை அமைப்பான ‘நாட்ஸ்’ (NATS) அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 100...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிரிட்டனின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை அமைப்பான ‘நாட்ஸ்’ (NATS) அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 1000 இற்கு மேற்பட்ட விமான சேவைகள் நிருத்தப்பட்டதால் பயணிகள் பெரும் திண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
</p><p>
லண்டனின் ஹித்ரூ, கேட்கவிக், மான்செஸ்டர் உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய விமான சேவைகளும் நிறுத்தப்பட்டு முடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55544911-bf69-4025-86ff-e54d3012fe03/26-6aa133cd02203.webp' /></p><h2>தொழில்நுட்பக் கோளாறு&nbsp; &nbsp;சீரமைப்புப் பணிகள்</h2><p>&nbsp;தேசிய வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் தரவு செயலாக்க அமைப்பில் (Data Processing System) ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பச் சிக்கலால், விமானங்களின் வழித்தடங்களைக் கண்காணிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டதாக ‘நாட்ஸ்’ நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் பிரிட்டனில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் இருந்து புறப்படவிருந்த விமானங்கள் அனைத்தும் ஓடுபாதையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>

லண்டனின் மிக முக்கியமான ஹித்ரூ (Heathrow) மற்றும் கேட்கவிக் (Gatwick) விமான நிலையங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் நிலையில், இந்தத் திடீர் முடக்கத்தால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே பல மணி நேரமாகத் தவித்து வருகின்றனர். </p><p>

மேலும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து லண்டன் நோக்கி வரவிருந்த பல சர்வதேச விமானங்களும் புறப்பட்ட இடங்களிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால், சர்வதேச அளவிலான வான்வழிப் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>
தொழில்நுட்பப் பொறியாளர்கள் களத்தில் இறங்கிப் பிரச்சனையைக் கண்டறிந்து சரிசெய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இருப்பினும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரும் கூட, விமானங்கள் அடுத்தடுத்து இயங்குவதில் பெரும் தாமதமும் (Delays) ரத்து நடவடிக்கைகளும் (Cancellations) நாள் முழுதும் நீடிக்கக்கூடும் என்பதால், பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு அட்டவணையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-09T10:21:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா - வடகொரியாவை இணைக்கும் புதிய பாலம் திறப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-bridge-russia-and-north-korea-opened-1788948877"></link>
            <id>https://canadamirror.com/article/new-bridge-russia-and-north-korea-opened-1788948877</id>
            <summary type="text">ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளையும் இணைக்கும் முதலாவது புதிய பாலம் ஒன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



இரு நாடுகளுக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளையும் இணைக்கும் முதலாவது புதிய பாலம் ஒன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
</p><p>


இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் ராணுவக் கூட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7208279-8a5b-4bac-86e7-d2d76420b745/26-6aa1318e55d15.webp' /></p><h2>1 கி.மீ. நீளமுள்ள இருவழி வீதிப் பாலம்</h2><p>



 பாலத்தின் திறப்பு விழா, காணொளி மூலம் நடைபெற்ற நிலையில் ரஷிய பிரதமர் மிக்ஹைல் மிஷுஸ்டின் (Mikhail Mishustin) மற்றும் வடகொரிய பிரதமர் பாக் தே சோங் (Pak Thae-song) ஆகியோர் கலந்துகொண்டனர்.
</p><p>


துமேன் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த 1 கி.மீ. நீளமுள்ள இருவழிச் வீதிப் பாலம், வடகொரியாவின் ராசான் நகரையும், ரஷ்யாவின் காசான் நகரையும் நேரடியாக இணைக்கிறது. </p><p>



இதன் மூலம் தினசரி 300 வாகனங்கள் வரை இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்க முடியும் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.</p><p>



சோவியத் இராணுவ அதிகாரியான யாகோவ் நோவிசென்கோவின் நினைவாக இந்தப் பாலத்திற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>


கடந்த 1946-ம் ஆண்டு வடகொரியாவின் நிறுவனரான கிம் இல் சுங்கை (தற்போதைய ஜனாதிபதி கிம் ஜாங் வுன்னின் தாத்தா) படுகொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியவரே சோவியத் இராணுவ அதிகாரியான யாகோவ் நோவிசென்கோவின் ஆவார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T10:11:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியா மீது தாக்குதல் ; பற்றியெறிந்த ஆலைகள்; 73 போ் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/saudi-arabia-attack-factories-engulfed-in-flames-1788948662"></link>
            <id>https://canadamirror.com/article/saudi-arabia-attack-factories-engulfed-in-flames-1788948662</id>
            <summary type="text">சவூதி அரேபியா மீது யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியா மீது யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 73 போ் காயமடைந்துள்ளனர்.</p><p>
சவூதியின் தெற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள அப்ஹா, ஜஸான், நஜ்ரான், கமீஸ் முஷைத் ஆகிய நகரங்களில் உள்ள முக்கிய எண்ணெய் ஆலைகள் மற்றும் மின்சாரம், குடிநீா் போன்ற பொது விநியோகக் கட்டமைப்புகள் இத்தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de5b0438-6674-45e2-8f27-9a63d5799a7a/26-6aa130b7b2bfe.webp' /></p><p>


</p><p>
‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இத்தாக்குதல்களால், எண்ணெய் ஆலைகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.</p><p> இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதிகளில் எண்ணெய் உற்பத்தி மற்றும் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
யேமனின் ஜாவ்ஃப் மாகாண சிறைச்சாலை மீது சவூதி நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவன் உள்பட 7 போ் உயிரிழந்ததற்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக ஹூதிக்கள் தெரிவித்துள்ளனா்.</p><p>

ஆனால், ‘இத்தாக்குதல் மிகக் கடுமையான அத்துமீறல். இதற்கு உரிய பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும்’ என்று சவூதி தலைமையிலான கூட்டுப் படை எச்சரித்துள்ளது.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:11:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை; ரஷ்ய தூதர அதிகாரிகளை வெளியேற்றிய ஹங்கேரி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hungary-expels-russian-diplomatic-officials-1788945287"></link>
            <id>https://canadamirror.com/article/hungary-expels-russian-diplomatic-officials-1788945287</id>
            <summary type="text">&amp;nbsp; தூதரக நிலைமைக்கு முரணான &quot;ஏற்றுக்கொள்ள முடியாத&quot; நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ரஷ்யாவைச் சேர்ந்த 10 தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தூதரக நிலைமைக்கு முரணான "ஏற்றுக்கொள்ள முடியாத" நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ரஷ்யாவைச் சேர்ந்த 10 தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு ஹங்கேரி உத்தரவிட்டுள்ளது.</p><p>

ஹங்கேரியின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான இந்த முடிவு, ரஷ்யாவுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக அர்த்தப்படாது என்று ஹங்கேரியின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அனிதா ஓர்பன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8258778-e0d0-4813-b295-744763e2c4ed/26-6aa1238886720.webp' /></p><h2>ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை</h2><p>
</p><p>
எனினும், ஹங்கேரியின் இந்த நடவடிக்கைக்கு "கடுமையான மற்றும் வேதனையான" பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்திப்பலகை மரியா சகாரோவா தெரிவித்தார்.</p><p>

2022 இல் யுக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்புக்குப் பிறகு, ரஷ்யாவின் ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளில் ஹங்கேரியும் ஒன்றாக இருந்தது.
</p><p>
இது ஒரு "சட்டபூர்வமான முடிவு" என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் கிறிஸ்டியன் விகாண்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அத்துடன், நிலைமையை ஐரோப்பிய ஒன்றியம் "தொடர்ந்து நெருக்கமாக ஒருங்கிணைக்கும்" என்றும் கூறினார்.</p><p>

யுக்ரைன் மீதான முழு அளவிலான போரைத் தொடர்ந்து பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ரஷ்ய தூதர்களை வெளியேற்றியிருந்தபோதும், இதுவரை ஹங்கேரி மாத்திரம் அந்த நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ரஷ்ய தூதர அதிகாரிகளை ஹங்கேரி வெளியேற்றியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T09:41:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபருக்குச் சிறைத்தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-sentenced-in-organized-crime-gun-smuggling-1788936564"></link>
            <id>https://canadamirror.com/article/man-sentenced-in-organized-crime-gun-smuggling-1788936564</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் கனடா எல்லைக்கு இடையே துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பிரையன் ஹேமில்டன்-ஹையட் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் கனடா எல்லைக்கு இடையே துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பிரையன் ஹேமில்டன்-ஹையட் என்பவருக்குக் கனடிய நீதிமன்றம் 6 ஆண்டுகள் மற்றும் 9 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.</p><p>
எல்லை தாண்டிய துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த லண்டன் பொலிஸார் மேற்கொண்ட புரெஜெக்ட் சேப் என்ற கூட்டுப் பொலிஸ் நடவடிக்கையின் கீழ் 2023 ஜூலையில் 41 வயதான பிரையன் கைது செய்யப்பட்டார்.
</p><p>திட்டமிட்ட குற்றக் குழுவில் அங்கம் வகித்தமை, சட்டவிரோத துப்பாக்கிக் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளை இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்புக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01c37e6c-d50f-4e60-85fd-22a2c7c82b4d/26-6aa10175f2a33.webp' /></p><p>
</p><p>அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்களின் கூட்டுப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நீதிபதி அலிசா மிட்செல், இவருக்கு 6 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தார்.
</p><p>எளிதாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டது தீவிரமான குற்றமாகும் என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
</p><p>ஏற்கனவே காவலில் கழித்த காலம் கணக்கிடப்பட்டதன் அடிப்படையில், இவர் மேலும் 2 ஆண்டுகள் வரை மட்டுமே சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
முன்னர் எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாத பிரையன், இச்சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக நீதிமன்றத்தில் தனது ஆழந்த மனவருத்தத்தைத் தெரிவித்தார்.
</p><p>இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவருக்கு ஏற்கனவே தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நபருக்கான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/list-of-products-to-be-affect-in-canada-tariff-1788942406"></link>
            <id>https://canadamirror.com/article/list-of-products-to-be-affect-in-canada-tariff-1788942406</id>
            <summary type="text">&amp;nbsp;List of products from the United States subject to counter tariffs: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள் குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;List of products from the United States subject to counter tariffs: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள் குறித்த விவரம்.</p><p>

கனடா அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப்போர் மும்முரமாகிவருகிறது.</p><p>

27.6 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான கனேடியப் பொருட்கள் மீது 50 சதவிகித சுங்க வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b954e07-952e-43de-bc16-2acf238e8dd5/26-6aa118476b422.webp' /></p><p>
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே 27.6 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 15 முதல் 50 சதவிகித சுங்க வரி விதிக்க கனடா முடிவு செய்துள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இந்த வரிவிதிப்பால் கனேடிய மக்களும்தான் பாதிக்கப்பட உள்ளார்கள். ஏனென்றால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அந்தப் பொருட்களை கனேடியர்கள்தான் வாங்கப்போகிறார்கள்!
</p><p>
கனடாவின் பதிலடி வரி விதிப்பால் அதிக அளவில் பாதிக்கப்படப்போவது உணவு மற்றும் பானங்கள்தான். உணவு தயாரிக்கத் தேவையான பொருட்கள், பால் பொருட்கள், ஆகியவை அதிகம் பாதிக்கப்பட உள்ளன.
</p><p>
அடுத்தபடியாக, வீட்டு உபயோகப் பொருட்களும், விவசாயத்துக்குத் தேவையான பொருட்களும் விலை உயர இருக்கின்றன.
</p><p>
விவசாயத்துக்குத் தேவையான பொருட்கள் விலை உயர உள்ளதால், அதுவும் உணவுப்பொருட்கள் விலையை பாதிக்கக்கூடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59688694-c407-4c94-8971-595e740a1c43/26-6aa11848202b1.webp' /></p><p>
மேலும், கடல் உணவுகள், மரச்சாமான்கள், அழகு சாதனப்பொருட்கள், ஆண்களுக்கான உடைகள், பாதுகாப்பு உடைகள் போன்றவையும் விலை அதிகரிக்கலாம்.</p><p>

இதுபோக, கிரேன்கள், ஜாக் மற்றும் ஃபோர்க்லிஃப்ட், ரயில் பெட்டிகள், இயந்திரங்களில் பொருத்தப்படும் பம்புகள், மின்விசிறிகள் ஆகியவையும் விலை உயரலாம்.</p><p>

இவற்றை எல்லா பொதுமக்களும் வாங்குவதில்லை என்பது உண்மைதான். ஆனால், அவற்றை வாங்கும் நிறுவனங்கள் அவற்றிற்கான செலவை நுகர்வோர் மீதுதான் திணிக்கும். ஆக, அதிலும் மக்கள்தான் பாதிக்கப்பட உள்ளார்கள்.
</p><p>
மேலும், அமெரிக்க ஸ்டீல், காப்பர் தயாரிப்புகளும் விலை அதிகமாக உள்ளன.
</p><p>
ட்ரம்ப் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, அமெரிக்கா கனடா மீது வரிகள் விதிக்கத் துவங்கியதிலிருந்தே கனேடிய மக்கள் பலர் கனேடிய தயாரிப்புகளையே வாங்கத் துவங்கியுள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இந்த வரிப்போரால், அவைகளும் விலை உயர உள்ளன.
</p><p>
ஆனாலும், தாங்கள் கனேடியப் பொருட்களையே வாங்கப்போகிறோம் என உறுதியாகக் கூறுகிறார்களாம் 60 சதவிகித கனேடியர்கள்!</p>]]></content>
            <updated>2026-09-09T08:26:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிடம் சிக்கிய அமெரிக்க இராணுவத்தின் அதி நவீன ஆளில்லா நீர்மூழ்கி வாகனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-captures-advanced-us-unmanned-submarine-1788938184"></link>
            <id>https://canadamirror.com/article/iran-captures-advanced-us-unmanned-submarine-1788938184</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க இராணுவத்தின் மிக நவீன மற்றும் நுண்ணறிவு திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கி வாகனங்களில் ஒன்று தங்களிடம் சிக்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க இராணுவத்தின் மிக நவீன மற்றும் நுண்ணறிவு திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கி வாகனங்களில் ஒன்று தங்களிடம் சிக்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
</p><p>


அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான குறித்த நவீன ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை, ஹோர்முஸ் ஜலசந்தியின் நுழைவுப் பகுதியில் கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fb1f9a7-f4e2-425c-8e66-63983b038d75/26-6aa107ca58894.webp' /></p><p> </p><p>



சிக்கலான உளவுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் இந்த நீர்மூழ்கி வாகனம் கைப்பற்றப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படையின் கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், அதனை கைப்பற்றிய காட்சிகளையும் ஈரான் வெளியிட்டுள்ளது.</p><p> இதற்கு விளக்கமளித்த அமெரிக்கா இராணுவம், ஈரான் கைப்பற்றியதாக கூறப்படும் நீர்மூழ்கி கப்பல் ஒரு நாளுக்கு முன்பே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
</p><p>


மேலும், அதில் இரகசிய தகவல்களை சேகரிக்கும் கருவிகளோ, ரகசிய சோனார் அல்லது ரேடார் சாதனங்களோ இல்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T07:30:32+00:00</updated>
        </entry>
    </feed>
