<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-31T04:50:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய அமைதி ஒப்பந்தம் ; ட்ரம்ப் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-proposes-new-peace-deal-to-end-gaza-war-1785468447"></link>
            <id>https://canadamirror.com/article/trump-proposes-new-peace-deal-to-end-gaza-war-1785468447</id>
            <summary type="text">காஸா பகுதியில் செயற்படும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும் ஏனைய ஆயுதக் குழுக்களும் முழுமையாக நிராயுதபாணியாக்கப்படுவதற்கான &quot;சமாதான சபை&quot; (Board of Peace) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸா பகுதியில் செயற்படும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும் ஏனைய ஆயுதக் குழுக்களும் முழுமையாக நிராயுதபாணியாக்கப்படுவதற்கான "சமாதான சபை" (Board of Peace) உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
தனது Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல்–காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள "ட்ரம்ப்பின் 20 அம்சத் திட்டத்தை" நடைமுறைப்படுத்துவதில் இந்த உடன்பாடு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b14d1402-e90f-4d16-a407-ef944028237d/26-6a6c1620d3e4a.webp' /></p><p>

இந்த ஒப்பந்தம் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், ஹமாஸ் மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களின் நிராயுதபாணியாக்கல் முன்னேறியபோது, இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக காஸா பகுதியிலிருந்து வெளியேறும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையினரும் புதிதாக அமைக்கப்படவுள்ள பாலஸ்தீன பொலிஸ் படையினரும் இணைந்து காஸாவின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இந்த உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளில் இடைத்தரகர்களாகச் செயற்பட்ட எகிப்து, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.</p><p>

அத்துடன், புதிய பாலஸ்தீன அரசாங்கத்தின் கீழ் காஸா நிர்வகிக்கப்படுவதற்கான அடித்தளமாக இந்த உடன்பாடு அமையும் என்றும், அந்த அரசாங்கம் "Board of Peace" அமைப்புடன் இணைந்து பாலஸ்தீன மக்களின் நலனுக்காகச் செயற்படுவதோடு, இஸ்ரேலின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f117a5ac-8766-4186-808b-0a490adc8946/26-6a6c1621a8889.webp' /></p><p>இதனிடையே, கெய்ரோவில் இடைத்தரகர்களுக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும் இடையில் அமெரிக்காவின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள காஸா அமைதித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
எனினும், முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் போதுமானதாக இல்லை என இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

அதேவேளை, வியாழக்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இரு சிறுவர்கள் உட்பட குறைந்தது ஆறு பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-31T03:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் ஆசிரியையின் விபரீத செயலால் பரபரப்பு ; தன்னை தானே சித்திரவதை செய்ய 4,000 டொலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785457342"></link>
            <id>https://canadamirror.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785457342</id>
            <summary type="text">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இசை ஆசிரியை, கடுமையான மன உளைச்சல் காரணமாக விசித்திரமான இணையதளம் ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த நபருடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் ஒரு விபரீதமான முடிவை நோக்கி தள்ளியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d476b2e8-630c-41b1-b163-718f867cd963/26-6a6beac0854bb.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலை குற்றச்சாட்டுகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

விசாரணையில் வெளிவந்துள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, தன்னை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்ய வேண்டும் என்பதற்காக, சோனியா அந்த அமெரிக்க நபருக்கு 4,000 டாலர்களை கொடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அமெரிக்காவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து அந்த நபர் குறித்த ஆசிரியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். </p><p style="text-align: justify; ">அப்போது ஆசிரியைக்கு தனது தவறு புரிய வந்துள்ளது. உடனே, தனது தோழி ஒருவருக்கு, ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அடுத்த சில நாட்களில் ஆசிரியை இங்கிலாந்து திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify; ">அப்போது புளோரிடாவின் மேரியன் கவுண்டி காட்டுப் பகுதியில், 4 முறை கத்தியால் குத்தப்பட்டு, ஆழமற்ற ஒரு குழியில் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">

இதனை தொடர்ந்து, சோனியாவின் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற 53 வயதான சந்தேகநபரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
இந்த வினோதமான கொலை வழக்கு தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T01:10:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து நடத்தப்படும் தாக்குதல்கள் ; அதிரடி கொடுக்கும் அமெரிக்கப் படைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-forces-launch-major-military-operation-1785458474"></link>
            <id>https://canadamirror.com/article/us-forces-launch-major-military-operation-1785458474</id>
            <summary type="text">ஜோர்தானில் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.

சவூதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்தானில் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
சவூதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது கடந்த சில நாள்களாக ஈராக்கிலிருந்து 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.


இதற்குப் பதிலடியாக ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களைக் குறிவைத்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ed342e4-493f-4a41-bd1f-5eab69777a23/26-6a6bef2b9efa4.webp' /></p><p> </p><p>தொடர்ந்து ஜோர்தானில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
</p><p>
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜோர்தானில் உள்ள விமானப் படைத் தளம் மற்றும் அங்குள்ள அமெரிக்க மத்திய படைப்பிரிவின் தலைமையகத்தைக் குறிவைத்து ஈரான் பல ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலில் 5 ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து, ஜோர்தான் ராணுவம் சுட்டுவீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 


இந்த நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் தெற்குப் பகுதியைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல்களைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவில் மூன்று முறை வெடிகுண்டு சத்தம் கேட்டதாகவும், அங்கு குடியிருப்பு பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
</p><p>

 இருப்பினும் இந்தத் தாக்குதல் சேதம் மற்றும் உயிர்ப்பலிகள் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-31T00:41:46+00:00</updated>
        </entry>
    </feed>
