<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-30T11:31:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சியில் அரங்கேறிய சம்பவம் ; இளம்பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/incident-unfolds-at-music-event-in-switzerland-1788087479"></link>
            <id>https://canadamirror.com/article/incident-unfolds-at-music-event-in-switzerland-1788087479</id>
            <summary type="text">வடக்கு சுவிட்சர்லாந்தில் இரவு நேர இசை நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு சுவிட்சர்லாந்தில் இரவு நேர இசை நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 05 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
சுரிச் நகருக்கு அருகில் உள்ள ஆராவ் எனும் நகரில் அமைந்துள்ள குதிரைப் பந்தய மைதானத்தில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fccece70-6460-419a-922c-0b7d93efd3da/26-6a940cb956e40.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்த 22 வயது பெண்ணைத் தவிர, 24 முதல் 27 வயதுக்குட்பட்ட 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 05 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நிகழ்ச்சியில் இசை அமைத்துக்கொண்டிருந்த 'டேக்கிபோ' என்ற சுவிஸ் டிஜே , இந்த தாக்குதலில் தனது நெருங்கிய நண்பரை இழந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.</p><p>சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்றல்

துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற நபர் யார்? அவரது பின்னணி அல்லது தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
</p><p>
கொலையாளியைக் கைது செய்வதற்காகச் சுவிஸ் பொலிஸார் அப்பகுதி முழுவதையும் தீவிரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.</p><p>

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஆர்காவ் ரேசிங் கிளப் இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவசரக்காலச் சேவையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T10:58:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அதிரடி காட்டிய நீதிமன்றம் ; மாணவர்களை நாடுகடத்த முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/court-delivers-blow-to-trump-1788079740"></link>
            <id>https://canadamirror.com/article/court-delivers-blow-to-trump-1788079740</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், சர்வதேச மாணவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறியுள்ளதாக அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் தீர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், சர்வதேச மாணவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறியுள்ளதாக அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
காஸா மீதான இஸ்ரேலின் போரைக் விமர்சித்த சர்வதேச மாணவர்களின் விசாக்களை ரத்து செய்து, அவர்களை நாடுகடத்த முயன்றமை தொடர்பான வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58dfbde7-0bcc-4502-ba63-abb4765ecaba/26-6a93ee82b0b32.webp' /></p><p>

கலிபோர்னியா மாவட்ட நீதிபதி நோயல் வைஸ் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.</p><p>

90 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில், அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் என்பது மக்களுக்குச் சொந்தமானது என்றும், அதனைப் பறிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
மேலும், அரசாங்கத்தையும் அதன் தலைவர்களையும் விமர்சித்து வெளிப்படையாகப் பேசுவது, நாட்டின் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் முக்கிய அம்சம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவரும், மாணவர் அமைப்புகளின் முக்கியப் பேச்சாளருமான மஹ்மூத் கலீல் 2025 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களுக்கு எதிரான நிர்வாகத்தின் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தன்னை நாடுகடத்துவதற்கு எதிராகத் தனியான வழக்கில் போராடி வரும் மஹ்மூத் கலீல், தற்போது வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-30T08:49:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மரத்தில் மோதி கார் விபத்து: 35 வயதுப் பெண் பலி; மகள் உட்பட 3 சிறுமிகள் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/35-year-old-woman-killed-three-girls-injured-1788069118"></link>
            <id>https://canadamirror.com/article/35-year-old-woman-killed-three-girls-injured-1788069118</id>
            <summary type="text">கனடாவின் லவால் நகரில் இடம்பெற்ற கோரக் கார் விபத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று சிறுமிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் லவால் நகரில் இடம்பெற்ற கோரக் கார் விபத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று சிறுமிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>லவாலின் 'செயிண்ட்-தொரோதே' பகுதியில் அமைந்துள்ள 'செயிண்ட்-மார்ட்டின் பூலேவார்ட் வெஸ்ட்' வீதியில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a3de205-97d6-4b95-8195-df13513a924f/26-6a93c4ff69b08.webp' /></p><p>
காரைச் செலுத்திய 35 வயதுடைய பெண் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
</p><p>காரில் பயணித்த உயிரிழந்த பெண்ணின் மகள் மற்றும் அவரது இரண்டு தோழிகள் ஆகிய மூன்று சிறுமிகள் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
</p><p> எனினும் அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>விபத்து ஏற்பட்டதற்கான பின்னணி மற்றும் சூழ்நிலைகள் குறித்து லவால் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T08:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிம்பாப்வேவில் பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து ; 27 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/zimbabwe-bus-truck-crash-kills-27-1788076471"></link>
            <id>https://canadamirror.com/article/zimbabwe-bus-truck-crash-kills-27-1788076471</id>
            <summary type="text">தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஜிம்பாப்வே. இந்நாட்டின் கிழக்கு மாஷோனாலெண்ட் மாகாணம் டிமா பகுதியில் இருந்து மிட்லேண்ட்ஸ் மாகாணம் மவுமா நகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஜிம்பாப்வே. இந்நாட்டின் கிழக்கு மாஷோனாலெண்ட் மாகாணம் டிமா பகுதியில் இருந்து மிட்லேண்ட்ஸ் மாகாணம் மவுமா நகருக்கு பஸ் சென்றுகொண்டிருந்தது.</p><p> அதில் 35 பேர் பயணித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cabb8ad3-a392-4be1-80cf-4c07ddd20835/26-6a93e1b8559a7.webp' /></p><p> </p><p>இவர்கள் அனைவரும் கிறிஸ்தவ மத நிகழ்ச்சியில் பங்கேற்க மவுமா நகருக்கு சென்றுள்ளனர்.
</p><p>
விபத்து - 27 பேர் பலி
இந்நிலையில், ஹராரே - மஸ்விங்கோ தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சென்றபோது எதிரே வந்த லாரி பஸ் மீது வேகமாக மோதியது.</p><p> இந்த கோர விபத்தில் பஸ் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 27 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.
</p><p>
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். </p><p>மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T07:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சிறிய ரக தனிநபர் விமானம் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/aircraft-crash-sends-one-to-hospital-1788068793"></link>
            <id>https://canadamirror.com/article/aircraft-crash-sends-one-to-hospital-1788068793</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள &#039;கிளியர்வியூ&#039; பகுதியில் சனிக்கிழமை சிறிய ரக தனிநபர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதன் விமானி லேசான காயங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள 'கிளியர்வியூ' பகுதியில் சனிக்கிழமை சிறிய ரக தனிநபர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதன் விமானி லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
</p><p>கிளியர்வியூ நகரியத்தில் உள்ள கிரீமோர் பகுதிக்கு அருகில் 'கவுண்டி வீதி 9' பாதைக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>
இரண்டு இருக்கைகளைக் கொண்ட இந்த சிறிய ரக விமானத்தில் விபத்து நடந்த போது விமானி மட்டுமே பயணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9953a337-32f0-4d55-a91a-74d2e3f18e92/26-6a93c3ba80a1b.webp' /></p><p> </p><p>விபத்து நிகழ்ந்த உடனே அவர் தானாகவே விமானத்திலிருந்து வெளியேறியுள்ளார்.</p><p>
விபத்தில் லேசான காயங்களுக்குள்ளான விமானி, உடனடியாக 'கொலிங்வுட் ஜெனரல் அண்ட் மரைன்' மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
</p><p>இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கிளியர்வியூ தீயணைப்புப் படையினர், அவசர மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஒன்ராறியோ மாநிலப் பொலிஸார் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T07:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குற்றவாளிகளுக்கு ரகசியத் தகவல் வழங்கிய முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-surrey-rcmp-officer-sentenced-to-18-months-1788067532"></link>
            <id>https://canadamirror.com/article/former-surrey-rcmp-officer-sentenced-to-18-months-1788067532</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், பொலிஸ் ரகசியத் தரவுத்தளங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளுக்குத் தகவல்களைப் பகிர்ந்து நம்பிக்கை மோசடியில் ஈடுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், பொலிஸ் ரகசியத் தரவுத்தளங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளுக்குத் தகவல்களைப் பகிர்ந்து நம்பிக்கை மோசடியில் ஈடுபட்ட முன்னாள் சர்ரே பொலிஸ் அதிகாரி தாவூட் அலாஎல்டின் சுகாரிக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>
பிரிட்டிஷ் கொலம்பிய உயர் நீதிமன்ற நீதிபதி முர்ரே பி. பிளாக், அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்கள் இணைந்து முன்வைத்த பரிந்துரையை ஏற்று இத்தீர்ப்பை வழங்கினார்.</p><p> 
2020 ஆம் ஆண்டில் சுர்ரி பொலிஸ் பிரிவில் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றிய சுகாரி, குற்றவாளிகளுக்காக போதைப்பொருள் வாங்குவதில் ஈடுபட்டதாக பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01981800-41b8-4926-8056-45836b636c7d/26-6a93becda65bc.webp' /></p><p> 
மேலும், கண்காணிப்பின்றி பணியாற்றத் தொடங்கும் போது பொலிஸ் தரவுத்தளங்களை குற்றவாளிகளுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்தது. </p><p>
இதனையடுத்து, அவரைப் பொறிவைத்துச் பிடிக்க பொலிஸ் சிறப்பு ரகசிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. போலி போதைப்பொருள் வியாபாரி மற்றும் ஊழல் நிறைந்த பொலிஸ் அதிகாரி போன்று நடித்த மற்றொரு அதிகாரி ஆகியோரைக் கொண்டு 59 போலி சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன. </p><p>
போலி போதைப்பொருள் வாங்குவதற்காக வழங்கப்பட்ட 72,000 டொலர்களில், சுகாரி பேரம் பேசி 63,000 டொலருக்குப் பொருட்களை வாங்கிவிட்டு, எஞ்சிய பணத்தில் 8,000 டொலர்களைத் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக எடுத்துக்கொண்ட போது கைது செய்யப்பட்டார்.
</p><p>சுகாரியின் கைப்பேசியைச் சோதனையிட்டதில், பொலிஸ் தரவுத்தளத்தில் இருந்த ரகசியத் தகவல்கள் மற்றும் ஆவணங்களைப் புகைப்படமெடுத்து குற்றவாளிகளுக்கு அவர் குறுஞ்செய்தி மூலம் அனுப்பிவைத்தது உறுதி செய்யப்பட்டது.</p><p> 
குற்றத்தை ஒப்புக்கொண்டமை, வாலிப வயது மற்றும் முன்னர் குற்றப் பின்னணி இல்லாதமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவருக்கு 18 மாத சிறைத்தண்டனை, மரபணு மாதிரி வழங்குதல் மற்றும் 200 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் மீதான ஏனைய 12 குற்றச்சாட்டுகளும் அரசுத் தரப்பினால் கைவிடப்பட்டன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T07:00:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் அதிகரித்துச் செல்லும் குடிவரவு வழக்குகள்: தலைமை நீதிபதி எச்சரிக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/federal-court-staff-work-weekends-on-vacation-1788066919"></link>
            <id>https://canadamirror.com/article/federal-court-staff-work-weekends-on-vacation-1788066919</id>
            <summary type="text">கை
கனடா நீதிமன்றத்தில் குடிவரவு தொடர்பான வழக்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதால், நீதிமன்றத்தின் பணிச்சுமை கட்டுக்கடங்காத நிலையை எட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கை
கனடா நீதிமன்றத்தில் குடிவரவு தொடர்பான வழக்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதால், நீதிமன்றத்தின் பணிச்சுமை கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளதாக தலைமை நீதிபதி ஆலன் டினர் தெரிவித்துள்ளார்.
</p><p>2014 ஆம் ஆண்டில் ஆண்டிற்கு 5,000 முதல் 6,000 வரை மட்டுமே பதிவான குடிவரவு வழக்குகள், 2021 இல் 9,700 ஆக உயர்ந்தன.
</p><p>நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 33,000 ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 14,000 க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 28,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff7af5e-ac1c-4019-82c8-0ed3d1ebc1b5/26-6a93bc68e0b7f.webp' /></p><p>
நீதிமன்றத்தில் உள்ள 44 நீதிபதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், 2020 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வழக்குகள் 600% வரை அதிகரித்துள்ளன.</p><p>
இதனால் நீதிபதிகளும் நீதிமன்ற ஊழியர்களும் இரவு பகலாகவும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
</p><p>மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட கனடாவின் C-12 எல்லை பாதுகாப்புச் சட்டம் நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.</p><p> கனடாவிற்கு வந்து ஒரு வருடத்திற்குப் பின்னர் அகதி உரிமை கோருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இச்சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து 2,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>
வழக்கமாக ஆண்டிற்கு 300 முதல் 400 வரை மட்டுமே பதிவாகும் நாடுகடத்தலை நிறுத்துவதற்கான கோரிக்கைகள், தற்போது 1,100 ஐத் தாண்டியுள்ளன.
</p><p>ஆவணங்களைச் செயலாக்குவதற்கான வழக்கமான 48 மணிநேர இலக்கு மாறி, தற்போது 8 வாரங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது. </p><p>நீதிமன்றப் பணிகளைச் சீரமைக்க கூடுதல் நீதிபதிகளை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T06:30:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லேக் ஒன்றாரியோ புதிய பெயர் பலகையை திறந்து வைத்து டிரம்பிற்கு அதிர்ச்சி கொடுத்த கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/well-never-ever-back-down-doug-ford-1788068254"></link>
            <id>https://canadamirror.com/article/well-never-ever-back-down-doug-ford-1788068254</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வட அமெரிக்காவின் புகழ்பெற்ற &#039;லேக் ஒன்ராறியோ&#039; ஏரியின் பெயரை &#039;லேக் அமெரிக்கா&#039; என மாற்றியதற்கு கனடா அரசு மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வட அமெரிக்காவின் புகழ்பெற்ற 'லேக் ஒன்ராறியோ' ஏரியின் பெயரை 'லேக் அமெரிக்கா' என மாற்றியதற்கு கனடா அரசு மற்றும் ஒன்ராறியோ மாகாண அரசு ஆகியவை மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளன.
</p><p>டிரம்பிற்கு பதிலடி வழங்கும் நோக்கில் ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் புதிய 'லேக் ஒன்ராறியோ' பெயர்ப்பலகையைத் திறந்து வைத்துள்ளார்.</p><p>
அதிபர் டிரம்ப் இதை என்ன பெயர் வேண்டுமானாலும் அழைக்கலாம், ஆனால் உலகம் முழுவதும் இதனை எப்போதும் 'லேக் ஒன்ராறியோ' என்றுதான் அழைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6146e12-bd08-402e-aec8-d45877a25c50/26-6a93c19fb253f.webp' /></p><p>
</p><p>கனடா தனது இறையாண்மையை எப்போதும் பாதுகாக்கும். மிரட்டல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பணியமாட்டோம் என டிரம்பிற்கு நேரடியாகவே பதிலடி கொடுத்துள்ளார்.
</p><p>கனேடிய பிரதமர் மார்க் கார்னி, டிரம்பின் இந்த அறிவிப்பை முற்றாக நிராகரித்துள்ளார்.
 'ஒன்ராறியோ' என்ற பெயர் 'வெண்டாட்' பழங்குடியின மொழியிலிருந்து வந்த 'ஒன்டாரியோ' (Ontari'io - அதாவது 'அழகான, பெரிய ஏரி') என்ற சொல்லாகும். இது கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு முன்பே, 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வரலாற்றுப் பெயர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வரைபடங்கள் மற்றும் தரவுத்தளங்களில் இந்த ஏரியின் பெயரை 'லேக் அமெரிக்கா' என மாற்றுமாறு டிரம்ப் நிறைவேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். </p><p>
முன்னதாக 'மெக்சிகோ வளைகுடா'வை 'கல்ஃப் ஆஃப் அமெரிக்கா' என மாற்ற முயன்றதன் தொடர்ச்சியாகவே இச்செயல் பார்க்கப்படுகிறது.</p><p>
அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் குறித்துப் பேசிய டக் ஃபோர்ட், கனடிய தொழிலாளர்களின் நலன்களைப் பாதிக்கும் மோசமான ஒப்பந்தத்தை விட ஒப்பந்தமே இல்லாமல் இருப்பது மேல் எனக் குறிப்பிட்டதுடன், உருக்கு மற்றும் வாகன உற்பத்தித் துறைகளைப் பாதுகாக்க கனடா அனைத்து முடிவுகளையும் எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T06:02:43+00:00</updated>
        </entry>
    </feed>
