<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-02T15:36:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[படகு விபத்தில் காணாமல் போன ரொறன்ரோ தம்பதியின் உடல்கள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/damaged-boat-found-two-people-missing-1785657424"></link>
            <id>https://canadamirror.com/article/damaged-boat-found-two-people-missing-1785657424</id>
            <summary type="text">கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
</p><p>உயிரிழந்தவர்கள் ரொறன்ரோவைச் சேர்ந்த 32 வயது ஆண் மற்றும் 30 வயது பெண் என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.</p><p>
வெள்ளிக்கிழமை இரவு 10:40 மணியளவில், பேக்கன்ரிக் பே பகுதிக்கு அருகிலுள்ள ரொசோ ஏரியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f250ee0a-6a1e-4686-8442-5e2ae40f21b5/26-6a6ef85272f70.webp' /></p><p>சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்தபோது, பலத்த சேதமடைந்த நிலையிலிருந்த படகு ஒன்று பாறை விளிம்பில் ஆபத்தான முறையில் சமநிலை இழந்து நின்றதை அவதானித்துள்ளனர்.
</p><p>விபத்து நடந்த இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்தனர்.</p><p> சனிக்கிழமை பிற்பகலில் காணாமல் போன இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.</p><p>
இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாகத் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T13:40:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுக்கு உதவிக்கரம் நீட்டிய கத்தார் ; 129 நிபுணர்கள் களமிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/qatar-extends-helping-hand-spain-129-experts-deplo-1785673995"></link>
            <id>https://canadamirror.com/article/qatar-extends-helping-hand-spain-129-experts-deplo-1785673995</id>
            <summary type="text">ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, கத்தார் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவை (Qatar International Search...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, கத்தார் சர்வதேச தேடல் மற்றும் மீட்புக் குழுவை (Qatar International Search and Rescue Team) கத்தார் அரசு அனுப்பியுள்ளது.</p><p>

கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியின் வழிகாட்டுதலின் பேரில், இந்த சிறப்பு மீட்புக் குழு தோஹாவிலிருந்து ஸ்பெயினின் டொரெஜோன் விமான நிலையத்திற்குப் புறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbcc7d01-23ac-44b7-8879-d5b19e798b65/26-6a6f390d2632d.webp' /></p><p>இந்தக் குழுவில் 129 காட்டுத்தீ நிபுணர்கள் இடம்பெற்றுள்ளதுடன், தொழில்நுட்ப மற்றும் தளவாட ஆதரவுக்குத் தேவையான மேம்பட்ட தீயணைப்பு வாகனங்கள், லாரிகள் மற்றும் நவீன உபகரணங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், காட்டுத்தீயை அணைக்கும் பணிகளுக்காக ஒரு ஹெலிகாப்டரும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்காக மற்றொரு ஹெலிகாப்டரும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/526a286d-de51-4ec4-bdf0-b7e91a6c55c8/26-6a6f390dcda3f.webp' /></p><p>இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கும் தனது நீண்டகால கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
</p><p>
பேரழிவுகள் மற்றும் அவசரநிலைகளின் போது சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க கத்தார் உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T12:33:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 மாத குழந்தையை மீட்க நீதிமன்றத்தை நாடிய 13 வயது தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/13-year-old-mother-court-rescue-7-month-child-1785668641"></link>
            <id>https://canadamirror.com/article/13-year-old-mother-court-rescue-7-month-child-1785668641</id>
            <summary type="text">பங்களாதேஷில் 13 வயது சிறுமி ஒருவர், தனது 7 மாத குழந்தையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

தகவல்களின்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஷில் 13 வயது சிறுமி ஒருவர், தனது 7 மாத குழந்தையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>

தகவல்களின்படி, குறித்த சிறுமி 11 வயதாக இருந்தபோது, சமூக வலைத்தளமான முகப்புத்தகம் (Facebook) மூலம் 22 வயதுடைய நபருடன் அறிமுகமானதாக கூறப்படுகிறது.</p><p>

பின்னர் அந்த அறிமுகம் திருமணமாக மாறியதாகவும், திருமணமான ஓராண்டுக்குப் பிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6e5503d-8201-4e70-9dc4-5ce1bb6eabd7/26-6a6f2422bfbf7.webp' /></p><p>எனினும், குழந்தை பிறந்த சில காலத்திலேயே, சிறுமியை அவரது கணவரும் மாமியாரும் வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
</p><p>
அப்போது, தனது பச்சிளம் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதையடுத்து, தனது குழந்தையை மீண்டும் பெறும் நோக்கில் சிறுமி சட்டரீதியான உதவியை நாடினார்.</p><p> வழக்கை விசாரித்த நீதிமன்றம், குழந்தையை தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன் அடிப்படையில், 7 மாத குழந்தை மீண்டும் தனது தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்தச் சம்பவம், குழந்தைத் திருமணத்தின் பாதிப்புகள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T11:04:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கான் பயிற்சி மையத்தில் புதிய விதிமுறை ; கைபேசிகளுக்கு முழுத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-rule-at-khan-training-center-ban-mobile-phones-1785667176"></link>
            <id>https://canadamirror.com/article/new-rule-at-khan-training-center-ban-mobile-phones-1785667176</id>
            <summary type="text">பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பேயின் தாயார் பைசா லாமாரி, நோர்மண்டி பகுதியில் உள்ள கான் (Caen) கால்பந்து மன்றத்தின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பேயின் தாயார் பைசா லாமாரி, நோர்மண்டி பகுதியில் உள்ள கான் (Caen) கால்பந்து மன்றத்தின் பயிற்சி மையத்தில் இளம் வீரர்களின் கைபேசிப் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளமை விளையாட்டு உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
கான் கால்பந்து மன்றத்தின் பெரும்பான்மை பங்குதாரராக கிலியன் எம்பாப்பே உள்ள நிலையில், மன்றத்தின் நிர்வாக மற்றும் இளம் வீரர்களின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அவரது தாயார் பைசா லாமாரி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16aaf11c-83f4-4b17-86f2-1fb6a4342d2f/26-6a6f1e6a318c1.webp' /></p><p>மன்றத்தின் புதிய கால்பந்து இயக்குநரான மாத்தியூ போட்மர், இந்த முடிவை வரவேற்று, இளம் வீரர்களின் ஒழுக்கம் மற்றும் தனிமனித வளர்ச்சிக்கு இது முக்கியமான நடவடிக்கையாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
பிரெஞ்சு ஊடகமான L'Équipe நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் அவர், "இளைஞர்களுக்கான திட்டம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. கல்வி, தங்குமிடம், ஊட்டச்சத்து மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டார்.</p><p>

மேலும், "பயிற்சி மையத்தில் கைபேசிகளுக்கு பைசா லாமாரி தடை விதித்துள்ளார். இது மிகவும் சிறந்த முடிவு. </p><p>இதன் மூலம் இளம் வீரர்கள் ஒருவருடன் ஒருவர் நேரடியாக உரையாடி, குழுவாக இணைந்து வாழவும் பழகுகின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
ஜூலை 2024 ஆம் ஆண்டு எம்பாப்பே குடும்பம் கான் கால்பந்து மன்றத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அணி மூன்றாம் நிலை லீக்கிற்கு தரம் தாழ்த்தப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3cd32ab-3ea4-4a7b-9340-f8ccc1f16ef9/26-6a6f1e6ad89c7.webp' /></p><p>எனினும், அந்த விமர்சனங்கள் நியாயமற்றவை எனக் குறிப்பிட்ட மாத்தியூ போட்மர், எம்பாப்பே குடும்பம் பொறுப்பேற்கும் முன்னரே மன்றம் பல சவால்களை எதிர்கொண்டதாகவும், தற்போது மன்றத்தை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், கடினமான காலகட்டத்தில் கான் கால்பந்து மன்றத்தில் கிலியன் எம்பாப்பே முதலீடு செய்தமைக்கு தாம் பெரும் மரியாதை கொள்வதாகவும், அவரது பங்களிப்பு மன்றத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இளம் வீரர்களின் கவனச்சிதறலைக் குறைத்து, ஒழுக்கம், பொறுப்பு மற்றும் குழு உணர்வை வளர்க்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, விளையாட்டு உலகில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T10:42:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் வித்தியாசமான தொழில் வழக்கு ; 20 ஆண்டுகள் பணி இன்றி இருந்த பெண்ணின் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/the-case-of-a-woman-who-was-unemployed-20-years-1785665733"></link>
            <id>https://canadamirror.com/article/the-case-of-a-woman-who-was-unemployed-20-years-1785665733</id>
            <summary type="text">பிரான்ஸின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான Orange நிறுவனத்தில் பணியாற்றிய லாரன்ஸ் வான் வாசன்ஹோவ் (Laurence Van Wassenhove) என்ற பெண், எந்தவிதமான பணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான Orange நிறுவனத்தில் பணியாற்றிய லாரன்ஸ் வான் வாசன்ஹோவ் (Laurence Van Wassenhove) என்ற பெண், எந்தவிதமான பணிகளும் வழங்கப்படாமல் கடந்த 20 ஆண்டுகளாக முழுச் சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
</p><p>
வலிப்பு நோய் மற்றும் பக்கவாத பாதிப்புகளைக் கொண்ட லாரன்ஸ், 1993 ஆம் ஆண்டு பிரான்ஸ் டெலிகாம் நிறுவனத்தில் (பின்னர் Orange என மாற்றப்பட்டது) மனிதவளத் துறை மற்றும் செயலாளர் பணிகளில் இணைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfde7621-3472-4071-8f9a-dfd6c370cd33/26-6a6f18c804507.webp' /></p><p>

2002 ஆம் ஆண்டு தனது குழந்தைகளுக்கு அருகில் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் அவர் பணியிட மாற்றம் கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட புதிய பணிச்சூழல் தனது உடல்நிலை தேவைகளுக்கு பொருத்தமானதாக இல்லை என அவர் தெரிவித்தார்.</p><p>

இதன் பின்னர், அவர் பணியில் இருந்து விலக்கப்பட்டு காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டதாகவும், இருப்பினும் நிறுவன ஊழியராகத் தொடர்ந்து இருந்து முழுச் சம்பளம் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>ஆனால், நீண்ட காலமாக தனக்கு எந்தவிதமான முறையான பணிகளும் வழங்கப்படவில்லை என லாரன்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

"வீட்டில் இருந்து எதுவும் செய்யாமல் சம்பளம் பெறுவது ஒரு சலுகை அல்ல. </p><p>இந்த நிலைமையை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது" என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5bdcbc8-d713-4fd3-89db-625d9f990d16/26-6a6f18c7555c8.webp' /></p><p>

பணிகள் வழங்கப்படாததன் காரணமாக தொழில் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதாகவும், தனது திறமைகளையும் அனுபவத்தையும் பயன்படுத்த முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

இதேவேளை, Orange நிறுவனம் தரப்பில், லாரன்ஸின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பொருத்தமான பணியை வழங்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் தொடர்ச்சியான மருத்துவ விடுப்புகள் காரணமாக அது நடைமுறையில் சாத்தியமாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வெளிப்படையாக பார்க்கும்போது வேலை செய்யாமல் சம்பளம் பெறுவது சாதகமான நிலை போலத் தோன்றினாலும், பணியிடத்தில் ஒருவருக்கான பொறுப்பு, சமூக தொடர்பு, சுயமரியாதை மற்றும் பங்களிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T10:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் பயணிகளுக்கு எச்சரிக்கை ; தொடருந்து சேவைகளில் பல இடையூறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/france-travelers-many-disruptions-train-services-1785663967"></link>
            <id>https://canadamirror.com/article/france-travelers-many-disruptions-train-services-1785663967</id>
            <summary type="text">பிரான்ஸின் தலைநகர் பரிஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள Île-de-France பிராந்தியங்களில் கோடை கால பராமரிப்பு பணிகள் காரணமாக பொதுப் போக்குவரத்து சேவைகளில் பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் தலைநகர் பரிஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள Île-de-France பிராந்தியங்களில் கோடை கால பராமரிப்பு பணிகள் காரணமாக பொதுப் போக்குவரத்து சேவைகளில் பல்வேறு இடையூறுகள் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

RATP மற்றும் SNCF நிர்வாகங்கள் தங்களது தொடருந்து மற்றும் நகரப் போக்குவரத்து வலையமைப்புகளில் புதுப்பிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை முன்னெடுத்து வருவதால், எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி வரை பல வழித்தடங்களில் சேவைகள் தடைப்படும் அல்லது மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>RER A சேவையில், ஆகஸ்ட் 30 வரை Nation நிலையத்தில் தொடருந்துகள் நிற்காது. மேலும், ஆகஸ்ட் 8 முதல் 23 வரை Vincennes மற்றும் Noisy-le-Grand – Mont d'Est இடையிலான சேவைகள் முற்றாக நிறுத்தப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6623bcdd-1c49-4407-a548-7bec12b0a8c0/26-6a6f11e102384.webp' /></p><p>RER B சேவையில், ஆகஸ்ட் 16 வரை இரவு 10.45 மணிக்குப் பின்னர் Gare du Nord மற்றும் Aéroport Charles de Gaulle 2 – TGV / Mitry – Claye இடையிலான போக்குவரத்து இடம்பெறாது.</p><p> அதேவேளை, Bourg-la-Reine மற்றும் Gare du Nord இடையிலான சேவைகளும் குறிப்பிட்ட நாட்களில் பாதிக்கப்படும்.

RER C வழித்தடத்தில், ஆகஸ்ட் 22 வரை Gare d’Austerlitz மற்றும் Pontoise, Versailles Château Rive Gauche, Saint-Quentin en Yvelines – Montigny-le-Bretonneux ஆகிய பகுதிகளுக்கிடையிலான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>

RER D சேவையில், Gare du Nord மற்றும் Gare de Lyon இடையிலான போக்குவரத்து ஆகஸ்ட் 16 வரை நிறுத்தப்படும். மேலும், Stade de France Saint-Denis நிலையத்தில் தொடருந்துகள் நிற்காது.

RER E வழித்தடத்திலும் பல வார இறுதி மற்றும் இரவு நேர சேவைகள் நிறுத்தப்பட்டு, பயணிகளுக்காக மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h3>Transilien தொடருந்து சேவைகளில் மாற்றங்கள்</h3><p>

Ligne H, Ligne J, Ligne K, Ligne L உள்ளிட்ட Transilien சேவைகளிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு இடையூறுகள் ஏற்படும்.

Ligne K சேவையில், ஆகஸ்ட் 16 வரை Gare du Nord மற்றும் Mitry – Claye இடையிலான தொடருந்து சேவைகள் இயங்காது.
</p><p>
Ligne L சேவையில், ஆகஸ்ட் 7 வரை வார நாட்களில் இரவு 10.10 மணிக்குப் பின்னர் Gare Saint-Lazare மற்றும் La Défense இடையிலான சேவை நிறுத்தப்படும்.

மேலும், Ligne N, P மற்றும் R வழித்தடங்களில் இரவு நேர மற்றும் வார இறுதி சேவைகள் பல்வேறு நாட்களில் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3>Tramway மற்றும் Metro சேவைகளிலும் பாதிப்பு
</h3><p>
Tramway T1 சேவையில், L'Île-Saint-Denis பகுதியில் ஏற்பட்ட சேதம் காரணமாக Asnières – Quatre Routes மற்றும் Gare de Saint-Denis இடையிலான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு 2026 கோடை காலம் நிறைவடையும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

T2 நகரத் தொடருந்து சேவையில், Charlebourg மற்றும் Puteaux இடையிலான போக்குவரத்து ஆகஸ்ட் 23 வரை நிறுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebc606c1-0af2-4e19-9e82-64a00bedb993/26-6a6f11e1ac972.webp' /></p><p>

Metro Ligne 8 சேவையில், புதுப்பிப்பு பணிகள் காரணமாக République நிலையத்தில் தொடருந்துகள் நிற்காது. இந்த நிலை 2027 ஏப்ரல் 22 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Metro Ligne 13 சேவையில், ஆகஸ்ட் 17 வரை Saint-Denis – Université மற்றும் La Fourche இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. </p><p>மேலும், ஆகஸ்ட் 2 ஆம் திகதி நண்பகல் வரை முழு வழித்தடத்திலும் சேவை இயங்காது.

போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள பெரும்பாலான பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக மாற்றுப் பேருந்து சேவைகள் (Bus de remplacement) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

பயணிகள் தங்களது பயணங்களைத் திட்டமிடுவதற்கு முன் சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்களின் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகளைப் பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-02T09:46:14+00:00</updated>
        </entry>
    </feed>
