<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-19T21:33:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி ; சந்தேகத்தில் சிறுவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/youth-arrested-in-edmonton-girls-suspicious-death-1787149749"></link>
            <id>https://canadamirror.com/article/youth-arrested-in-edmonton-girls-suspicious-death-1787149749</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரில் 16 வயது சிறுமியான ஜாஸ்மின் தீசி என்பவரின் சந்தேகத்திற்கு இடமான உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை ஒரு சிறுவனைக் கைது செய்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரில் 16 வயது சிறுமியான ஜாஸ்மின் தீசி என்பவரின் சந்தேகத்திற்கு இடமான உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை ஒரு சிறுவனைக் கைது செய்துள்ளது. </p><p>
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 139 அவென்யூ மற்றும் 32 ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜாஸ்மின் தீசி உயிரிழந்தார். </p><p>
அவர் தனது நண்பரைப் பார்க்கச் சென்றிருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர். 
கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை எட்மண்டன் காவல் துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f266b227-91eb-428d-b3fc-76b5a5d9309f/26-6a85bdb7bbc99.webp' /></p><p>
அல்பெர்ட்டா தலைநகரில் நடைபெற்ற 121-வது வருடாந்த உச்சிமாநாடு மற்றும் காவல் வர்த்தகக் கண்காட்சியில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய காவல் தலைமை அதிகாரி வாரன் டிரைஷல், கைது செய்யப்பட்ட நபருக்கு 16 வயது என்று தெரிவித்தார். </p><p>
புதன்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட உள்ளதாகவும், அதன்பின்னரே கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் எட்மண்டன் காவல் துறை தெரிவித்துள்ளது. </p><p>
எட்மண்டனில் சிறுவர்களிடையே வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், அதற்குப் பதிலளிக்கும் விதமாகச் சிறுவர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அதிகரித்து வருவதாகவும் காவல் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். </p><p>
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கும்பல் குற்றங்களில் ஈடுபடும் அபாயத்தில் உள்ள சிறுவர்களுக்கு, முன்னாள் குற்றவாளிகளைக் கொண்டு வழிகாட்டுதல் வழங்கப்படும். 
இதனிடையே, மற்றொரு சிறுவன் கொல்லப்பட்டது தொடர்பாகவும் எட்மண்டன் காவல்துறையும், கனடிய மத்திய அரச காவல்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. </p><p>ஆகஸ்ட் 6 அன்று எட்மண்டனின் வடக்கு பகுதியில், ஃபைசல் உசேன் என்ற 12 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T18:51:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026ஆம் ஆண்டில் FIFA போட்டி ; நடுவராக ஈழத்தமிழரான அனோஜன் கனகசிங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/anojan-kanakasingham-an-eelam-tamil-fifa-match-1787160697"></link>
            <id>https://canadamirror.com/article/anojan-kanakasingham-an-eelam-tamil-fifa-match-1787160697</id>
            <summary type="text">சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற FC Basel – FC Barcelona அணிகளுக்கிடையிலான போட்டியில் நடுவராகப் பணியாற்றிய அனோஜென் கனகசிங்கம், 2026ஆம் ஆண்டில் FIFA சர்வதேச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற FC Basel – FC Barcelona அணிகளுக்கிடையிலான போட்டியில் நடுவராகப் பணியாற்றிய அனோஜென் கனகசிங்கம், 2026ஆம் ஆண்டில் FIFA சர்வதேச நடுவர் அந்தஸ்தைப் பெற்ற பின்னர் சர்வதேச அரங்கில் தனது பயணத்தை மேலும் உயர்த்தியுள்ளார்.
</p><p>
ஸ்பெயினின் முன்னணி கால்பந்து அணியான FC Barcelona பங்கேற்ற இந்தப் போட்டியில் உலகின் இளம் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லமீன் யமாலும் களமிறங்கியிருந்த நிலையில், போட்டியை நிர்வகிக்கும் பொறுப்பு அனோஜென் கனகசிங்கத்துக்கு வழங்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9347b045-2cd0-4177-98e6-e4e23ae55370/26-6a85e87b53386.webp' /></p><p>சுவிற்சர்லாந்து கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரப்பூர்வ பதிவின்படி, 1994ஆம் ஆண்டு பிறந்த அனோஜென் கனகசிங்கம், SC Ittigen கழகத்தைச் சேர்ந்தவர். </p><p>2026ஆம் ஆண்டுக்கான FIFA நடுவர்கள் பட்டியலில் அவர் இணைக்கப்பட்டுள்ளார். சுவிற்சர்லாந்தின் Super League போட்டிகளில் 2022ஆம் ஆண்டு முதல் நடுவராகப் பணியாற்றி வந்த அவர், அதுவரை நாட்டின் உயர்மட்டப் பிரிவில் 34 போட்டிகளை நிர்வகித்திருந்தார்.
</p><p>
சர்வதேச அரங்கிலும் அவரது முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 2026 ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற UEFA Europa League தகுதிச்சுற்றுப் போட்டியில் NK Aluminij மற்றும் FC Sheriff Tiraspol அணிகள் மோதிய ஆட்டத்திற்கு அனோஜென் கனகசிங்கமே பிரதான நடுவராக நியமிக்கப்பட்டிருந்தார்.</p><p>&nbsp;ஈழத்தமிழ் பின்னணியைக் கொண்ட அனோஜென் கனகசிங்கம், சுவிற்சர்லாந்தின் உயர்மட்ட கால்பந்திலிருந்து ஐரோப்பிய மற்றும் தற்போது FIFA சர்வதேச அரங்கிற்கு முன்னேறியிருப்பது, தமிழ் சமூகத்திற்கும் சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழர்களுக்கும் பெருமைக்குரிய சாதனையாக அமைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-19T17:31:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கென்யாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/seven-killed-in-helicopter-crash-in-kenya-1787157568"></link>
            <id>https://canadamirror.com/article/seven-killed-in-helicopter-crash-in-kenya-1787157568</id>
            <summary type="text">கென்யாவின் சம்புரு மாநிலத்தில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த விமானி மற்றும் ஆறு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் இன்று (19)உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கென்யாவின் சம்புரு மாநிலத்தில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த விமானி மற்றும் ஆறு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் இன்று (19)உயிரிழந்தனர்.</p><p> </p><p>ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் பார்வையிடப்பட்ட ஆர்ச்சர்ஸ் போஸ்ட் (Archers Post) பொலிஸ் நிலையத்தின் முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த ஹெலிகொப்டர் லோய்சாபா காப்பகத்தை நோக்கிப் பறந்துகொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d0b624d-8265-4f9f-82cb-2bb0eec296d2/26-6a85dc4174e63.webp' /></p><p>பொலிஸார் தெரிவிக்கையில், உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் குடியுரிமை தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை. </p><p>

தங்களது விருந்தினர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒலோலோக்வே மலைக்கு அருகில் விபத்துக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-19T16:39:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் 24 மணிநேரத்தில் 20 பலஸ்தீனர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-kills-20-palestinians-in-gaza-in-24-hours-1787155994"></link>
            <id>https://canadamirror.com/article/israel-kills-20-palestinians-in-gaza-in-24-hours-1787155994</id>
            <summary type="text">காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் வான்வழி மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 20 பலஸ்தீனர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் வான்வழி மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>2025 ஒக்டோபரில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
</p><p>இதேவேளை, 2024 ஜனவரியில் ஐந்து வயது சிறுமி ஹிந்த் ராஜப் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இஸ்ரேல் இராணுவம் தற்போது குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dad94ee4-ce55-4b1a-917d-bfce25c46fdb/26-6a85d61c1a2c7.webp' /></p><p>
ஹிந்த் ராஜப்பின் குடும்பத்தினர் அப்பகுதியிலிருந்து வெளியேற முயன்றபோது, அவர்களின் வாகனத்தின் பாதையை இஸ்ரேலிய இராணுவ டாங்கி ஒன்று தடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>வாகனத்திற்குள் சிக்கியிருந்த அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஹிந்தின் 15 வயது உறவினரான லயானும் அடங்கினார். தாக்குதலின்போது உதவிக்காக அவசர மருத்துவப் பணியாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர், பின்னர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
ஹிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டபோது சம்பவ இடத்தில் தங்களது டாங்கிகளோ அல்லது இராணுவ வீரர்களோ இருக்கவில்லை என இஸ்ரேல் ஆரம்பத்தில் மறுத்திருந்தது.</p><p>
காசாவில் தொடர்ந்து இடம்பெறும் தாக்குதல்கள் குறித்து சர்வதேச அளவில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:26:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்குள் துப்பாக்கிகளை கடத்த முயன்ற 57 வயது நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nb-man-charged-for-smuggling-firearms-1787155633"></link>
            <id>https://canadamirror.com/article/nb-man-charged-for-smuggling-firearms-1787155633</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவுக்குள் துப்பாக்கிகள் மற்றும் மெகசின்களை சட்டவிரோதமாகக் கடத்த முயன்றதாக 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கனடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவுக்குள் துப்பாக்கிகள் மற்றும் மெகசின்களை சட்டவிரோதமாகக் கடத்த முயன்றதாக 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (CBSA) அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>
அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குத் திரும்பியபோது, நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள ரிவர் டி சுட் எல்லை நுழைவுப் பகுதியில் குறித்த நபர் மேலதிக சோதனைக்காகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.</p><p>
திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சோதனையின்போது, அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் குழுவினர் இணைந்து வாகனத்தை சோதனையிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4001916f-537c-451e-8005-db35a603e8b9/26-6a85d4b3a7d01.webp' /></p><p>
</p><p>நான்கு துப்பாக்கிகள், அதிக கொள்ளளவு கொண்ட 12 தோட்டாக் களஞ்சியங்கள், மேலும் இரண்டு தோட்டாக் களஞ்சியங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.</p><p>
கெய்லோன் ஸ்மித் என அடையாளம் காணப்பட்ட குறித்த நபருக்கு கடத்தல் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுகளும், தவறான தகவலை வழங்கியமை தொடர்பில் ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>அவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த விசாரணை செப்டெம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
</p><p>சுங்கச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கனடா எல்லை சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:25:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரி தொடர்பில் கனடிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-manufacturers-say-tariff-delay-1787152309"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-manufacturers-say-tariff-delay-1787152309</id>
            <summary type="text">அமெரிக்காவின் புதிய வரிகள் அமல்படுத்தப்படுவதைத் தற்காலிகமாக ஒத்திவைக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு கனடிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமைப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் புதிய வரிகள் அமல்படுத்தப்படுவதைத் தற்காலிகமாக ஒத்திவைக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு கனடிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. </p><p>
எனினும், வரிகள் குறித்த இந்தத் தொடர் அச்சுறுத்தல், நிறுவனங்களையும் அவற்றின் தொழிலாளர்களையும் பேரழிவை ஏற்படுத்தும் அதே அபாயநிலைக்குத் தள்ளுவதாகக் கவலை வெளியிட்டுள்ளது. </p><p>
எதிர்கால வரிக் கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியாமல், வர்த்தக நிறுவனங்களால் நீண்டகால திட்டமிடல் மற்றும் முதலீட்டு முடிவுகளைத் தெளிவான நம்பிக்கையுடன் எடுக்க முடியாது என்று கனடாவின் உற்பத்தித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அமைப்பு கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91731b8d-e362-4f28-a491-223a0a7c95af/26-6a85c7b7c45e5.webp' /></p><p>
புதிய வர்த்தக ஒப்பந்தத்தைச் இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சுமார் 28 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த புதிய 50 சதவீத வரியை மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். </p><p>
இதனிடையே, பேச்சுவார்த்தைகளில் "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டுள்ள போதிலும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் மீதமுள்ளதாகப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். </p><p>
புதிய வரிகள் விதிக்கப்பட்டால் அது கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளையுமே பலவீனப்படுத்தும், செலவுகளை அதிகரிக்கும் மற்றும் உலக அளவில் இரு நாட்டு நிறுவனங்களின் போட்டியிடும் திறனைக் குறைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>எனவே, பேச்சுவார்த்தையாளர்கள் இந்த கூடுதல் நேரத்தைப் பயன்படுத்தி ஒரு முழுமையான வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முயற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:13:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்ஜியத்தில் 10 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கம் கண்டெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/construction-workers-strike-gold-at-belgian-1787151773"></link>
            <id>https://canadamirror.com/article/construction-workers-strike-gold-at-belgian-1787151773</id>
            <summary type="text">பெல்ஜியத்தில் கட்டடப் பணி நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் தொடர்பாக, அப்பகுதிக்கு வர வேண்டாம் எனப் புதையல் தேடுபவர்களுக்குப் பெல்ஜியம் காவல்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தில் கட்டடப் பணி நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் தொடர்பாக, அப்பகுதிக்கு வர வேண்டாம் எனப் புதையல் தேடுபவர்களுக்குப் பெல்ஜியம் காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>
கிழக்கு பிளெமிஷ் நகரமான டென்டர்மொண்டே பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.</p><p> அப்போது, வடிகால் குழாய் அமைப்பதற்காகத் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், தற்செயலாகப் பெருமளவிலான தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களைக் கண்டெடுத்தனர். </p><p>
இதுகுறித்துத் தகவலறிந்த காவல்துறை, சுமார் 50 தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களை மீட்டு, தங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களாகப் பகிர்ந்தனர். 
சிஏடபிள்யூ ஈஸ்ட்-ப்ளாண்டர்ஸ் என்ற உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கட்டடத்தின் அடித்தளச் சுவரில் சுமார் 10.4 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள இந்தத் தங்கக் கட்டிகளும் நாணயங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது. </p><p>
ஆரம்பத்தில் அதிர்ச்சியும் வியப்புமாக இருந்தது. கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியின் போதுதான் இதைக் கண்டெடுத்தோம்; நிச்சயமாகத் தங்கம் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என கோபி என்ற கட்டுமானத் தொழிலாளி க் கூறியுள்ளார்.
</p><p>கண்டெடுக்கப்பட்ட தங்கம் அனைத்தும் விரைவாகப் கணக்கெடுக்கப்பட்டு, பெல்ஜியம் அரசாங்கத்திற்குச் சொந்தமான உயர்பாதுகாப்பு பெட்டகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> 
இதனிடையே, ஃபேஸ்புக் பக்கத்தின் சுயவிவரப் படத்தை (Profile picture) தங்க நாணயத்தின் படமாக மாற்றிய காவல்துறை, "இந்தப் பகுதிக்கு மீண்டும் வருகை தரப் பல புதையல் வேட்டைக்காரர்கள் விரும்புவது தெரிகிறது. உங்களுக்கு ஒரு 'தங்கமான அறிவுரை': இங்கு வருவது முற்றிலும் வீண் முயற்சி" என்று குறிப்பிட்டுள்ளதுடன், வேலி அமைக்கப்பட்டுள்ள அந்தப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.</p><p> 
இந்தத் தங்கப் புதையல் சட்டப்பூர்வமாக யாருக்குச் சொந்தமானது, இதை யார் வைத்துக்கொள்வார்கள் என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. "இந்தச் செல்வம் சரியான நபர்களின் கரங்களைச் சென்றடையும் என நம்புவோம்" என்றும் காவல்துறை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:13:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூட்டப்படாத காரில் மாட்டிக்கொண்ட கரடி பரிதாமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bear-dies-after-becoming-trapped-inside-car-1787151341"></link>
            <id>https://canadamirror.com/article/bear-dies-after-becoming-trapped-inside-car-1787151341</id>
            <summary type="text">அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில், பூட்டப்படாத காரில் சிக்கிக்கொண்ட கரடி ஒன்று, வெளியே வர முடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில், பூட்டப்படாத காரில் சிக்கிக்கொண்ட கரடி ஒன்று, வெளியே வர முடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சில நாட்களுக்குப் பிறகே அந்தப் பிணம் கண்டெடுக்கப்பட்டது.
சுமார் 113 கிலோ எடையுள்ள அந்தப் கறுங்கரடி, பூட்டப்படாத காரின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளது. </p><p>
கதவு தானாக மூடிக்கொண்டதால் வெளியே வர முடியாமல் காரை சேதப்படுத்திய நிலையில், அதிக வெப்பம் காரணமாகக் காரின் உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82825382-7190-4d79-a21d-93eb4e545344/26-6a85c3eed01b4.webp' /></p><p>
இச்சம்பவத்தையடுத்து, கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குத் துறை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. </p><p>கார் கதவுகளை எப்போதும் பூட்டி வைக்கவும், வாகனங்களுக்குள் உணவுகள் மற்றும் குப்பைகளை வைக்க வேண்டாம் என்றும், ஜன்னல்களை முழுமையாக மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
நடப்பு ஆண்டில் இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட கரடி நடமாட்டங்கள் குறித்துப் புகார்கள் வந்துள்ளதாக கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது. </p><p>
இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட இருமடங்காகும். வறட்சி காரணமாகக் காடுகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உணவைத் தேடி கரடிகள் மலைப் பகுதிகளிலிருந்து மக்கள் வாழும் குடியிருப்புகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.</p><p>
மனிதர்களும் வனவிலங்குகளும் பாதுகாப்பாக இணைந்து வாழ்வது குறித்தும், கரடிகளின் பழக்கவழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குத் துறை தனது இணையதளத்தில் 'Living with Bears' என்ற சிறப்புப் பிரிவைத் தொடங்கியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ நகரசபை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-mp-erskine-smith-expected-to-run-toronto-1787150716"></link>
            <id>https://canadamirror.com/article/former-mp-erskine-smith-expected-to-run-toronto-1787150716</id>
            <summary type="text">முன்னாள் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நெய்ட் எர்ஸ்கைன்-ஸ்மித் டொராண்டோ நகரசபை உறுப்பினராகப் போட்டியிடுவதற்காகத் தனது வேட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நெய்ட் எர்ஸ்கைன்-ஸ்மித் டொராண்டோ நகரசபை உறுப்பினராகப் போட்டியிடுவதற்காகத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.</p><p> 
வழக்கறிஞராக இருந்து அரசியல்வாதியான 42 வயதான எர்ஸ்கைன்-ஸ்மித், 'பீச்சஸ்-ஈஸ்ட் யார்க்' தொகுதி நகரசபை இடத்திற்கு போட்டியிடுவதற்காகக் கடந்த புதன்கிழமை காலை டொராண்டோ சிட்டி ஹாலில் ஆவணங்களைச் சமர்ப்பித்தார். </p><p>
2015-ஆம் ஆண்டு இதே தொகுதியிலிருந்து கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், வீடமைப்பு அமைச்சராகக் குறுகிய காலம் பணியாற்றினார். மே மாதம் பிரதமர் மார்க் கார்னி அமைச்சரவையை மாற்றியமைத்தபோது இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0e566e6-5c27-4957-ab02-9148b76c9d44/26-6a85c17e53e86.webp' /></p><p> </p><p>
புதன்கிழமை சிட்டி ஹாலில் செய்தியாளர்களிடம் பேசிய எர்ஸ்கைன்-ஸ்மித், டொராண்டோ மேயர் ஒலிவியா சோ தன்னை தேர்தலில் போட்டியிடுமாறு ஊக்குவித்ததாகத் தெரிவித்தார்.
</p><p>ஒட்டாவாவில் வீடமைப்புத் துறையில் பணியாற்றிய காலத்தில் தாமும் மேயர் ஒலிவியா சோவும் மிக நெருக்கமாகப் பணியாற்றியதாக அவர் குறிப்பிட்டார். 
"நாங்கள் இருவரும் இணைந்து நமது நகரத்திற்காகப் பல நன்மைகளைச் செய்துள்ளோம். இணைந்து செயல்படுவதற்கான நல்ல வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது. மேயர் சோவுடன் இணைந்து எனது தொகுதி மற்றும் நகரத்தின் வளர்ச்சிக்காகப் பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்," என்று அவர் கூறினார்.</p><p>
முன்னதாக மாகாண அரசியலில் கவனம் செலுத்திய எர்ஸ்கைன்-ஸ்மித், 'ஸ்கார்பரோ சவுத்வெஸ்ட்' இடைத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட முயன்றார். ஆனால் அந்த உட்கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தார். அதை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:12:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் பாஃன்ப் தேசிய பூங்கா ஏரியில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/second-person-drowns-in-12-hours-in-rocky-mountain-1787150224"></link>
            <id>https://canadamirror.com/article/second-person-drowns-in-12-hours-in-rocky-mountain-1787150224</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் அல்பெர்ட்டாவில் உள்ள புகழ்பெற்ற பாஃன்ப் தேசிய பூங்காவில் உள்ள பிரபல நீச்சல் பகுதியில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் அல்பெர்ட்டாவில் உள்ள புகழ்பெற்ற பாஃன்ப் தேசிய பூங்காவில் உள்ள பிரபல நீச்சல் பகுதியில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>
பாஃன்ப் நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜான்சன் ஏரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>
இந்த உயிரிழப்பில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கார்ப்பரல் ஜினா ஸ்லேனி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08bc07af-7c34-40c5-bf2f-0d7de486a245/26-6a85bf9222b55.webp' /></p><p> </p><p>
இதனிடையே செவ்வாய்க்கிழமை காவல்துறை வெளியிட்ட புதிய தகவலின்படி, உயிரிழந்தவர் பாஃன்ப் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>
ராக்கி மலைத்தொடர் நீர்வழிப்பாதைகளில் வார இறுதியில் இடம்பெற்ற இரண்டாவது நீரில் மூழ்கிய சம்பவம் இதுவாகும். ஞாயிற்றுக்கிழமை காலையில் போ ஆற்றில் 52 வயதான கேன்மோர் பகுதியைச் சேர்ந்த ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> 
கண்டெடுக்கப்பட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ள காவல்துறையினர், அவரது உயிரிழப்பிற்கான சூழல் குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T15:39:34+00:00</updated>
        </entry>
    </feed>
