<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-31T14:47:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு; ஒரே நாளில் நுழைந்த 49,000 குடியேறிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/49-000-migrants-entered-spain-in-a-single-day-1785493152"></link>
            <id>https://canadamirror.com/article/49-000-migrants-entered-spain-in-a-single-day-1785493152</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயூட்டா பகுதிக்குள் ஒரே நாளில் சுமார் 49,000 குடியேறிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
சட்டவிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயூட்டா பகுதிக்குள் ஒரே நாளில் சுமார் 49,000 குடியேறிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
சட்டவிரோதமாக நுழைந்தவர்களில் குறைந்தது 7,000 பேர் சிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில், மொராக்கோவிலிருந்து சுமார் 49,000 குடியேறிகள் தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/210e20c0-e6a5-43b1-a000-2038916f7ff0/26-6a6c76a246f0d.webp' /></p><h2>கடலில் தடுத்து நிறுத்தப்படும் குடியேறிகள்</h2><p>
</p><p>
வியாழக்கிழமையன்று (30) ஆயிரக்கணக்கான மக்கள் கடர்மார்க்கமாக நீந்தி நகருக்குள் வருவதை வீடியோக்களும் படங்களும் காட்டின.

அதேவேளையில், இரவு முழுவதும் இத்தகைய வருகைகள் தொடர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. </p><p>

அண்மைய நாட்களில் அப்பகுதியை அடைய முயன்றவர்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p></p><p>
சியூட்டா (Ceuta) அல்லது மற்றொரு ஸ்பானியப் பகுதியான மெலில்லாவை (Melilla) அடைய முயலும்போது கடலில் தடுத்து நிறுத்தப்படும் குடியேறிகளை மொராக்கோவிற்கு உடனடியாகத் திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயினின் உயர் நீதிமன்றம் இந்த மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><p>
அண்மையில் எல்லை கடக்கும் முயற்சிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் அதிகாரிகள் மாட்ரிட்டிடம் உதவி கோரியிருந்தனர். </p><p>

ஆனால், வியாழக்கிழமையன்று எல்லைக் கட்டுப்பாடுகள் செயலிழந்ததால் அங்கு குழப்பமான காட்சிகள் நிலவின.

பின்னர், ஸ்பெயின் தனது ஆயுதப் படைகளை செவுட்டாவிலும், அதன் சகோதர நகரமான மெலிலாவிலும் பாதுகாப்பை வலுப்படுத்த அனுப்பியது. </p><p>

அங்கும் ஒரே இரவில் 300 முதல் 400 பேர் வரை எல்லை கடக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஸ்பானிய அதிகாரிகளின் வியக்கத்தக்க மதிப்பீட்டின்படி, கடந்த ஓரிரு நாட்களில் சியூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, அந்நகரின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாக இருக்கலாம்.\</p><p>&nbsp; உள்ளூர் புள்ளிவிவரங்களின்படி இந்நகரின் மக்கள் தொகை சுமார் 83,600 ஆகும்.


தங்கள் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அனைவரையும் முடிந்தவரை விரைவாக திருப்பி அனுப்புவதை உறுதிசெய்ய மொராக்கோவுடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T13:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொரோக்கோ–ஸ்பெயின் எல்லையில் பதற்றம் ; சியூட்டா மீண்டும் உலக கவனத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/morocco-spain-ceuta-back-in-the-world-s-attention-1785494896"></link>
            <id>https://canadamirror.com/article/morocco-spain-ceuta-back-in-the-world-s-attention-1785494896</id>
            <summary type="text">மொரோக்கோவை ஒட்டியுள்ள ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான சியூட்டா (Ceuta) பகுதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள குடியேற்ற நெருக்கடி, ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை மீண...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொரோக்கோவை ஒட்டியுள்ள ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான சியூட்டா (Ceuta) பகுதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள குடியேற்ற நெருக்கடி, ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.
</p><p>
ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்திருந்தாலும், சியூட்டா ஸ்பெயினின் தன்னாட்சி நகரமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நகரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லையாகவும் கருதப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9db3ea7-d800-48f1-9c74-4a92eeb6b68c/26-6a6c7d717ead8.webp' /></p><p>வரலாற்றுப் பதிவுகளின்படி, 1415 ஆம் ஆண்டு போர்த்துக்கல் சியூட்டாவைக் கைப்பற்றியது.</p><p>பின்னர் 1668 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட லிஸ்பன் உடன்படிக்கையின் அடிப்படையில், அந்தப் பகுதி ஸ்பெயினின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. </p><p>அதன்பின்னர் சியூட்டா தொடர்ந்து ஸ்பெயினின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது. இருப்பினும், மொரோக்கோ அரசு சியூட்டாவையும் மெலில்லா (Melilla) நகரையும் தமது இறையாண்மைக்குட்பட்ட பகுதிகளாக தொடர்ந்து உரிமைகோரி வருகிறது. </p><p>ஆனால், அந்தக் கோரிக்கையை ஸ்பெயின் நிராகரித்து வருகிறது.

அண்மையில், ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் சியூட்டாவை நோக்கி எல்லையைக் கடக்க முயன்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>அவர்களில் மொரோக்கோ நாட்டவர்களுடன், ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளும் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2b31283-cefa-45c3-a0ae-2f5f6333e684/26-6a6c7d7232280.webp' /></p><p>

இந்த நிலைமையால் எல்லைப் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள் மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகள் மீது கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதையடுத்து, எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஸ்பெயின் அரசு மேற்கொண்டுள்ளது.</p><p>

சியூட்டா விவகாரம் குடியேற்றப் பிரச்சினையை மட்டுமன்றி, வரலாறு, இறையாண்மை, சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய சிக்கலான விடயமாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
இதேவேளை, சியூட்டா தொடர்பான தமது உரிமைக் கோரிக்கையை மொரோக்கோ தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப் பகுதி ஸ்பெயினின் பிரிக்க முடியாத தன்னாட்சி நகரம் என்ற தனது நிலைப்பாட்டை ஸ்பெயின் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T10:52:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விற்பனை இலக்கை எட்டாத ஊழியர் முகத்தில் கிறீம் பூசி சித்திரவதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/comcast-workers-had-pies-smashed-face-low-sales-1785494797"></link>
            <id>https://canadamirror.com/article/comcast-workers-had-pies-smashed-face-low-sales-1785494797</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவில் விற்பனை இலக்கை எட்டாத ஊழியரை நாற்காலியில் கட்டிவைத்து, அவரது முகத்தில் கிறீம் பூசி அவமானப்படுத்தியதாக பிரபல நிறுவனத்தின் மே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவில் விற்பனை இலக்கை எட்டாத ஊழியரை நாற்காலியில் கட்டிவைத்து, அவரது முகத்தில் கிறீம் பூசி அவமானப்படுத்தியதாக பிரபல நிறுவனத்தின் மேலாளர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.</p><p>

மாதத்தின் மிகக் குறைந்த விற்பனை செய்த ஊழியரை அலுவலகத்தின் பின்பகுதியில் நாற்காலியில் கட்டிவைத்து, அதிக விற்பனை செய்த ஊழியரைக் கொண்டு அவரது முகத்தில் பையை அடிப்பதை மேலாளர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5deaa97a-4f81-4434-8140-e6c0bd17d75c/26-6a6c7d0f77c4c.webp' /></p><h2>&nbsp;மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பிற்கு நட்டஈடு</h2><p>
</p><p>
அதுமட்டுமல்லாது வாடிக்கையாளர் திருப்தி மதிப்பீடு குறைவாகக் கிடைக்கும் ஊழியர்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களை மேலாளர் பீட்டர்சன் தானே காணொளி எடுத்ததுடன், சக ஊழியர்களையும் நிழற்படம் எடுக்க வற்புறுத்தியுள்ளார். </p><p>விற்பனையை உயர்த்தவே இந்த முறை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பிற்கு நட்டஈடு கேட்டுள்ளார்.
</p><p>
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள குறித்த நிறுவனம், தங்கள் கடைகளில் ஊழியர்களை அவமதிக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் சகிப்புத்தன்மை கிடையாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-31T10:44:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏதிலிகளை தடுக்க தேசிய அவசரநிலையை அறிவித்த ஸ்பெயின்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spain-declares-national-emergency-to-halt-migrants-1785475617"></link>
            <id>https://canadamirror.com/article/spain-declares-national-emergency-to-halt-migrants-1785475617</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஆப்பிரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஸ்பெயின் சியூட்டா (Ceuta) பகுதியின் அதிகாரிகள், மொரோக்கோ எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஆப்பிரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஸ்பெயின் சியூட்டா (Ceuta) பகுதியின் அதிகாரிகள், மொரோக்கோ எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக தேசிய அவசரநிலையை அறிவித்தனர்.
</p><p>
 எல்லையைப் பாதுகாக்க இராணுவத்தை அனுப்புமாறு வியாழக்கிழமை (31) மாட்ரிட் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44e0e401-93cf-48d8-8756-cd786d4bcd77/26-6a6c322357a8c.webp' /></p><p>
</p><p>
மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் பிரதேசங்களைப் பிரிக்கும் கடல்தடுப்புச் சுவர்களைச் சுற்றி நடந்து செல்லவும், எல்லை வேலியை ஏறிக் கடக்கவும் மக்கள் கூட்டம் முயற்சிக்கும் காட்சிகள் காணொளிகளில் வெளியாகியுள்ளது.
</p><p>
இதனையடுத்து, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), நிலைமையை சமாளிக்க “உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவளிப்பதற்காக, தங்கள் ஆயுதப் படைகளைச் சேர்ந்த பணியாளர்களைச் சியூட்டாவிற்கு (Ceuta) அனுப்பவுள்ளதாக ஸ்பெயினின் உள்துறை அமைச்சு வியாழக்கிழமை பிற்பகுதியில் தெரிவித்தது.
</p><p>
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மற்றொரு ஸ்பானியத் தன்னாட்சி நகரமான மெலில்லாவுடன் (Melilla) சேர்த்து, சியூட்டா (Ceuta) நகரமும் ஆப்பிரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே நில எல்லையாகத் திகழ்கிறது.

இந் நிலையில் ஐரோப்பாவை அடைய முற்படும் புலம்பெயர்ந்தோர் எல்லை வழியாக நுழைய முயற்சிக்கும் நிகழ்வுகள், அவ்வப்போது இவ்விரு நகரங்களிலும் அதிகரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-31T10:18:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைக்கவசம் இல்லாமல் மின்னுருளி ஓட்டினால் கடும் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heavy-fines-for-riding-a-scooter-without-a-helmet-1785492995"></link>
            <id>https://canadamirror.com/article/heavy-fines-for-riding-a-scooter-without-a-helmet-1785492995</id>
            <summary type="text">மின்னுருளி (Electric Scooter) விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், பிரான்சின் ஓ-து-சென் (Hauts-de-Seine) மாவட்டத்தில் மின்னுருளி உள்ளிட்ட தனிநபர் மின...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்னுருளி (Electric Scooter) விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், பிரான்சின் ஓ-து-சென் (Hauts-de-Seine) மாவட்டத்தில் மின்னுருளி உள்ளிட்ட தனிநபர் மின்சாரப் போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><p>
மாவட்ட ஆட்சியர் அலெக்சாண்டர் ப்ரூஜெர் (Alexandre Brugère) கையெழுத்திட்டுள்ள புதிய அவசர உத்தரவின் மூலம் இந்தச் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. </p><p>பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு 1,500 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய விதிகளின்படி, மின்னுருளிகள், ஒற்றைச் சக்கர மின்வாகனங்கள் மற்றும் பிற தனிநபர் மின்சாரப் போக்குவரத்து சாதனங்களை இயக்குபவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e30e37c2-b634-4151-ab2a-edf247aa5301/26-6a6c760473609.webp' /></p><p>மேலும், பகல் மற்றும் இரவு நேரங்களில் தொலைவிலிருந்தே தெளிவாகக் காணக்கூடிய ஒளிரும் பாதுகாப்பு மேலாடை அல்லது ஒளிரும் பட்டை அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், இந்த வாகனங்களை இயக்குபவர்கள் குறைந்தது 14 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன், வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோமீட்டரைத் தாண்டக் கூடாது எனவும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>
"ஒவ்வொரு விபத்தும் தவிர்க்கப்பட வேண்டிய துயரமான நிகழ்வு" எனக் குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர், புதிய சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் காவல்துறையின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
அண்மையில் அண்டை மாவட்டமான சென்-எ-மார்னில் (Seine-et-Marne) இடம்பெற்ற 45 மின்னுருளி விபத்துகளில் ஒருவர் உயிரிழந்ததுடன், 51 பேர் காயமடைந்திருந்தனர். </p><p>அந்த விபத்துகளில் சிக்கியவர்களில் ஐந்து பேர் மட்டுமே தலைக்கவசம் அணிந்திருந்ததாக வெளியான புள்ளிவிவரங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க காரணமாகியுள்ளன.</p><p>

மேலும், ரூவேல்-மால்மேசோன் (Rueil-Malmaison) நகரில் 'சீசர்' என்ற சிறுவன் மின்னுருளி விபத்தில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நகரிலும் ஏற்கனவே தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
</p><p>
இதனிடையே, பிரான்சின் பல நகராட்சிகள் இதேபோன்ற பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், இந்த நடைமுறையை நாடு முழுவதும் பொதுச் சட்டமாக்குவது தொடர்பாக பிரான்ஸ் அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T10:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-missile-entered-polish-airspace-1785492356"></link>
            <id>https://canadamirror.com/article/russian-missile-entered-polish-airspace-1785492356</id>
            <summary type="text">&amp;nbsp; போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை ஒன்று நுழைந்து வீழ்ந்து நொறுங்கியதால், அங்கு நேட்டோ போர் வானூர்திகள் அவசரமாக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை ஒன்று நுழைந்து வீழ்ந்து நொறுங்கியதால், அங்கு நேட்டோ போர் வானூர்திகள் அவசரமாக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
வியாழக்கிழமை அதிகாலையில் போலந்து வான்வெளிக்குள் நுழைந்த இந்த ஏவுகணை, இரவோடு இரவாக யுக்ரைன் மீது ரஷ்யா ஏவிய பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதலின் ஒரு பகுதி என்று கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a6b34d7-f5a1-4dfc-82e9-24591aad282a/26-6a6c7385ac678.webp' /></p><p>

இதில் சிறுவர்கள் உட்பட குறைந்தது எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஏவுகணை தென்பட்டதைத் தொடர்ந்து, போலந்து உட்பட நேட்டோ உறுப்பு நாடுகள், ஜெட் வானூர்திகளையும்,வான்வழி எரிபொருள் நிரப்பும் வானூர்தியையும், வான்வழி முன்னெச்சரிக்கை வானூர்தியையும் களமிறக்கியதாக நேட்டோ கூட்டணியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p>

அத்துடன் தனது பிராந்தியத்தைப் பாதுகாக்க நேட்டோ அனைத்துத் தேவையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-31T10:04:04+00:00</updated>
        </entry>
    </feed>
