<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-16T16:21:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷ் டெஸ்ட் வரலாற்றில் மகத்தான சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bangladesh-thrash-australia-1786878124"></link>
            <id>https://canadamirror.com/article/bangladesh-thrash-australia-1786878124</id>
            <summary type="text">டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பரபரப்பான திருப்புமுனையாக, டார்வினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டின் முன்னணி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பரபரப்பான திருப்புமுனையாக, டார்வினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டின் முன்னணி அணியான ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஷ் அணி வரலாற்றுப் பதிவை எழுதியுள்ளது.</p><p>
26 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பங்களாதேஷ் அணி ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்யும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவென்பதுடன், சர்வதேச கிரிக்கெட்டில் அந்த அணி பெற்ற மிகப்பெரிய வெற்றியாகவும் இது கொண்டாடப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc6824f8-4932-4791-9de4-266f54e7b759/26-6a81da035e48c.webp' /></p><p>போட்டியின் நான்காம் நாளில் 284 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவைச் சுருட்டிய பங்களாதேஷ் அணிக்கு வெற்றி பெற வெறும் 57 ரன்களே தேவையாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் மிராஸ் 66 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் விக்கெட் சரிவை விரைவுபடுத்தினார்.
</p><p>ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் நிதானமாக விளையாடி 104 ரன்கள் எடுத்துப் போராடிய போதிலும், ஹசன் மஹ்மூதின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்ததும் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு முற்றிலும் பறிபோனது.
</p><p>இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்திய பந்துவீச்சாளர் ஹசன் மஹ்மூத் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
</p><p>இறுதியில், மொமினுல் ஹக் மற்றும் ஷாத்மன் இஸ்லாம் ஆகியோரின் உறுதியான ஆட்டத்தால் பங்களாதேஷ் அணி 57 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T15:41:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கார் கொள்ளையுடன் தொடர்புடைய இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nb-rcmp-arrest-wanted-man-accused-of-assault-1786880260"></link>
            <id>https://canadamirror.com/article/nb-rcmp-arrest-wanted-man-accused-of-assault-1786880260</id>
            <summary type="text">கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாகப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கனடிய அரச காவல்துறை கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாகப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கனடிய அரச காவல்துறை கைது செய்துள்ளது.</p><p>
நிக்கோலஸ் கெல்லி என்ற இந்த நபரை ரிச்சிபுக்டோ பகுதியில் பொலிஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். அவர் கடைசியாக ஆகஸ்ட் 4 ஆம் திகதி கென்ட் கவுண்டியில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
</p><p>கைது செய்யப்பட்ட 25 வயதான நிக்கோலஸ் கெல்லி மீது, ஆட்களைத் தாக்குதல், ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டுதல், வாகனத் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2b134ad-a959-4ac8-8325-3dc35edd111a/26-6a81a1068e183.webp' /></p><p>
சந்தேகநபர் எந்த இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்ற விவரங்களைப் பொலிஸார் வெளியிடவில்லை.</p><p>
எனினும், சந்தேகநபரைப் பிடிப்பதற்குத் தேவையான தகவல்களை வழங்கி உதவிய பொதுமக்களுக்குச் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் பொலிஸார் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T12:23:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் கத்திக்குத்து தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/toronto-police-identify-suspect-wanted-in-stabbing-1786880704"></link>
            <id>https://canadamirror.com/article/toronto-police-identify-suspect-wanted-in-stabbing-1786880704</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து ஊழியர் ஒருவர் மீது எவ்வித காரணமுமின்றி நடத்தப்பட்ட கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாகத் தேடப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து ஊழியர் ஒருவர் மீது எவ்வித காரணமுமின்றி நடத்தப்பட்ட கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை டொராண்டோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
</p><p>வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் புளோர் மற்றும் யோங் வீதிகளுக்கு அருகே குறித்த ஊழியர் நடைபாதையில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>சம்பவத்தின் போது அந்த ஊழியர் தனது இடைவேளையில் இருந்ததாக ரீ.ரீ.சீ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கத்திக்குத்துத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஊழியர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3d6599a-1f17-44fa-b641-37a2ecad38db/26-6a81a2c1e922f.webp' /></p><p> அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 
பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டில் நலமடைந்து வருவதாக ரீ.ரீ.சீ தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் 36 வயதான அந்தோணி கிறிஸ்டோபர் டேவிட் மெக்லாலின் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். </p><p>ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியமை மற்றும் படுகாயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் தேடப்பட்டு வருகிறார்.
</p><p>5 அடி 8 அங்குலம் முதல் 5 அடி 10 அங்குலம் வரை உயரம் கொண்ட நடுத்தர உடல்வாகு உடையவர். முகம் மற்றும் கைகளில் பல பச்சைக் குத்தல்கள் மற்றும் முழுமையான தாடி வைத்துள்ளார் என குறித்த நபர் பற்றிய அடையாள விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>சாம்பல் நிற டி-சர்ட், நீல நிற வெஸ்ட் ஜோக்கெட், சாம்பல் நிறப் பேன்ட், பழுப்பு நிற லெதர் காலணிகள் மற்றும் பின்புறமாகத் திருப்பி வைக்கப்பட்டக் கருப்பு நிற தொப்பி (வெள்ளை எழுத்துகளில் "We The North" என எழுதப்பட்டது).
</p><p>இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் 416-808-5300 என்ற எண்ணில் பொலிஸாரையோ அல்லது 416-222-TIPS (8477) என்ற எண்ணில் குற்றத் தடுப்புப் பிரிவையோ (Crime Stoppers) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T12:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூபெக்கில் பொலிஸார் சந்தேக நபர்களை துரத்திய போது ஒருவர் பலியான விடயம் தொடர்பில் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-chase-leaves-1-dead-and-1-injured-quebec-1786881179"></link>
            <id>https://canadamirror.com/article/police-chase-leaves-1-dead-and-1-injured-quebec-1786881179</id>
            <summary type="text">கனடாவின் கியூபெக் மாகாணத்தில், லேவிஸ் பகுதிக்கு அருகே பொலிஸார் சந்தேக நபர்களை துரத்திச் சென்ற சம்பவத்தின் போது நபர் ஒருவர் உயிரிழந்தது குறித்து கியூபெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கியூபெக் மாகாணத்தில், லேவிஸ் பகுதிக்கு அருகே பொலிஸார் சந்தேக நபர்களை துரத்திச் சென்ற சம்பவத்தின் போது நபர் ஒருவர் உயிரிழந்தது குறித்து கியூபெக்கின் சுயாதீன பொலிஸ் கண்காணிப்புக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p>
வெள்ளிக்கிழமை இரவு 11:21 மணியளவில், கியூபெக்கில் உள்ள பியர் லபோர்ட் பாலத்தில் வாகன விபத்து மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் விரைந்தனர்.
</p><p>விபத்தை ஏற்படுத்திய நபர், மற்றொருவரைப் பலத்த காயப்படுத்திவிட்டு வாகனத்தில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7828b564-cb12-4471-98b2-ce3d4d7d463b/26-6a81a49dcbc60.webp' /></p><p>
</p><p>இதையடுத்து, கியூபெக் மாகாண பொலிஸார் அதிகாலை 1:25 மணியளவில் நெடுஞ்சாலை 20-இல் அந்த நபரின் வாகனத்தைக் கண்டுபிடித்துத் துரத்தத் தொடங்கினர்.</p><p>சக்கரங்களின் காற்றைப் போக்கும் ஸ்பைக் கீற்றுகளைப் பயன்படுத்தி வாகனத்தை நிறுத்த அவர்கள் முயன்றனர்.
இறுதியில், லேவிஸில் உள்ள ரூட் 132-இல் அந்த நபர் வாகனத்தை நிறுத்தினார்.</p><p>எனினும், அவர் வாகனத்திற்குள்ளேயே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
</p><p>சம்பவம் நடந்த இடத்தை கியூபெக் மாகாண பொலிஸார், கியூபெக் நகரப் பொலிஸார் மற்றும் லேவிஸ் பொலிஸார் இணைந்து சுற்றி வளைத்துப் பாதுகாத்தனர்.
</p><p>இச்சம்பவம் தொடர்பான சூழ்நிலைகளை ஆராய, சுயாதீன புலனாய்வு அமைப்பான BEI-ன் ஏழு விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T12:16:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹங்கேரியில் பஸ் விபத்து: போலந்து யாத்ரீகர்கள் 12 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/twelve-killed-as-polish-bus-veers-off-hungari-1786881580"></link>
            <id>https://canadamirror.com/article/twelve-killed-as-polish-bus-veers-off-hungari-1786881580</id>
            <summary type="text">ஹங்கேரியின் நெடுஞ்சாலையில் போலந்து நாட்டினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹங்கேரியின் நெடுஞ்சாலையில் போலந்து நாட்டினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.</p><p>
தலைநகர் புடாபெஸ்ட்டை வடகிழக்கு நகரமான நைரேகிஹாசாவுடன் இணைக்கும் எம்3 நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 01:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>பஸ் ஓட்டுநர் தூங்கியதே விபத்துக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அவரைப் பொலிஸார் காவலில் எடுத்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72475b50-c7ea-4171-bd77-cd89ef9e6683/26-6a81a62ded399.webp' /></p><p>பஸ்ஸில் மொத்தம் 57 பயணிகளும் இரண்டு ஓட்டுநர்களும் இருந்த நிலையில், இதுவரை 35 பேரைத் தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளதாக ஹங்கேரிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
 24 தொன் எடையுள்ள பஸ்ஸை முழுமையாக உயர்த்த கிரேன்கள் வரும் வரை, அதற்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்க அவசர உதவிப் பிரிவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
</p><p>விபத்தில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 9 பேர் பலத்த காயங்களுடனும், 37 பேர் சிறு காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>இந்தச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள ஹங்கேரியப் பிரதமர் பீட்டர் மகியர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>போலந்துப் பிரதமர் டொனால்ட் டஸ்க் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் அடங்கிய சிறப்பு விமானம் ஒன்றை ஹங்கேரிக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவிலிருந்து திரும்பி வந்த இந்த பஸ்ஸில், போலந்தின் போட்கார்பாசி பிராந்தியத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் பயணித்துள்ளதாகப் போலந்து செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p> விபத்து தொடர்பில் ஓட்டுநரிடம் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T12:16:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் 'முழுமையான தோல்வி' உறுதி: ஈரானிய ஆயுதப் படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-war-live-talks-on-hormuz-strait-continue-1786882129"></link>
            <id>https://canadamirror.com/article/iran-war-live-talks-on-hormuz-strait-continue-1786882129</id>
            <summary type="text">&amp;nbsp;பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய எதிரிப் படைகள் &#039;முழுமையான தோல்வியை&#039; தழுவும் வரை தாங்கள் பின்வாங்கப்போவதில்லை என்று ஈரானிய ஆயுதப் படைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய எதிரிப் படைகள் 'முழுமையான தோல்வியை' தழுவும் வரை தாங்கள் பின்வாங்கப்போவதில்லை என்று ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைப் பணியாளர்கள் உறுதியளித்துள்ளனர். </p><p>
1990 ஆம் ஆண்டு ஈராக்கிலிருந்து ஈரானிய போர்க்கைதிகள் தாயகம் திரும்பியதன் நினைவாண்டைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "எதிர்ப்பின்" பாரம்பரியம் ஈரானின் புதிய தலைமுறைக்குக் கடத்தப்பட்டுள்ளதாகவும், உலகின் அதிநவீன இராணுவக் கருவிகளைக் கொண்ட படைகளுக்கு எதிராக அவர்கள் உறுதியுடன் நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
எதிரி படைகள் சரணடையும் வரை, நாட்டின் நியாயமான உரிமைகளையும் தலைமையின் கோரிக்கைகளையும் ஈரான் தொடர்ந்து முன்னெடுக்கும் என ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a892676d-7649-476c-9cef-a6d48dcce3fb/26-6a81a8538dbd1.webp' /></p><p> </p><p>
மேலும், ஈரானிய ஆயுதப் படைகளுக்குப் பொதுமக்கள் அளித்து வரும் ஆதரவைப் பாராட்டியுள்ள இராணுவம், பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிக்கப் போக்கைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T12:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கோர வாகன விபத்து: ஒன்ராறியோவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-man-dies-in-rollover-on-sask-highway-1786875061"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-man-dies-in-rollover-on-sask-highway-1786875061</id>
            <summary type="text">கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள லா லோச் பகுதிக்கு தெற்கே சனிக்கிழமை அதிகாலை நடந்த ஒற்றை வாகன விபத்தில், ஒன்ராறியோவின் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள லா லோச் பகுதிக்கு தெற்கே சனிக்கிழமை அதிகாலை நடந்த ஒற்றை வாகன விபத்தில், ஒன்ராறியோவின் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>
அதிகாலை 2:20 மணியளவில், வடக்கு சஸ்காட்செவன் பகுதியிலிருந்து தெற்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலை 155-இல் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p> 
இது குறித்துத் தகவல் கிடைத்ததும் லா லோச் பொலிஸார், உள்ளூர் தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2063f97b-4efb-40b4-b813-37ad34234ace/26-6a818cb743e71.webp' /></p><p> 
வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அவசர மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
அத்துடன், வாகனத்தில் பயணித்த மேலும் நான்கு பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். </p><p>அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>விபத்துக்கான காரணம் குறித்து சஸ்காட்செவன் பொலிஸ் பிரிவின் விபத்து மறுசீரமைப்பு நிபுணரின் உதவியுடன் லா லோச் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T10:56:44+00:00</updated>
        </entry>
    </feed>
