<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-27T18:36:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-toll-rises-after-nepal-flash-floods-1787852565"></link>
            <id>https://canadamirror.com/article/death-toll-rises-after-nepal-flash-floods-1787852565</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சில மணி நேரங...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் மரண எண்ணிக்கை 359 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 389 ஆக உயர்ந்துள்ளது</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d79db142-6087-4a71-b9a0-4dbaa0a78c45/26-6a90771722bdd.webp' /></p><p style="text-align: justify; ">இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வரும் நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா, நேபாள இராணுவம், ஆயுதப் பொலிஸ் படை மற்றும் தேசிய பொலிஸைச் சேர்ந்த 13,000க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

இன்றைய தினத்தில் மட்டும் வான்வழியாக 573 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

உயிர்களைக் காப்பாற்றுதல், காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றுக்கே அரசாங்கம் முதன்மை முக்கியத்துவம் அளிப்பதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-27T17:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புரட்டிப்போட்ட பேரழிவு; நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/disaster-1-400-people-missing-nepal-china-border-1787835381"></link>
            <id>https://canadamirror.com/article/disaster-1-400-people-missing-nepal-china-border-1787835381</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயமான நிலையில் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கபப்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கு நேபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயமான நிலையில் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கபப்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
வடக்கு நேபாளத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பலரும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dd20ade-6f69-4538-b34f-f1d94fb7b3c2/26-6a9033f88c8a9.webp' /></p><h2>&nbsp;500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்</h2><p> </p><p>

பல வீடுகளும் கட்டிடங்களும், வாகனங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><p>
 
அதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள்.</p><p>

 தமிழகத்திலிருந்து சுற்றுலாவுக்கு சென்ற 83 பேர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது.</p><p>

ஒருபக்கம் நேபாளம் - சீன எல்லையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 1400 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>

அந்த வகையில் நேபாளத்தில் 500 வெளிநாட்டினர் உட்பட 826 பேரும், சீனாவில் 260 வெளிநாட்டினர் உட்பட 558 பேரும் மாயமாகியிருப்பதாக அந்தந்த நாட்டு அரசுகள் அறிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-27T17:25:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வே மன்னரின் உடல்நிலை கவலைக்கிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/norway-king-in-critical-condition-1787831104"></link>
            <id>https://canadamirror.com/article/norway-king-in-critical-condition-1787831104</id>
            <summary type="text">நோர்வே நாட்டின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட்டின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை அறிவித்துள்ளது.மன்னர் ஹரால்ட்டின் இரத்தத்தில் பாக்டீரியா தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வே நாட்டின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட்டின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை அறிவித்துள்ளது.</p><p>மன்னர் ஹரால்ட்டின் இரத்தத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் நோர்வே அரச மாளிகை இன்று (27) அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5938f2c-0c08-4f68-a55d-bfbd56084ca2/26-6a90234268953.webp' /></p><p>



89 வயதான மன்னர் ஐந்தாம் ஹரால்ட், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் நோர்வே நாட்டின் மன்னராக பதவி வகித்து வருகிறார். </p><p>

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள அவர், கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.



இதன் தொடர்ச்சியாக, ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் தலைநகர் ஒஸ்லோவில் உள்ள தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மன்னர் ஹரால்ட், சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார்.
</p><p>தொடர்ச்சியாக உடல்நலக் குறைவு காரணமாக மன்னர் ஹரால்ட் ஓய்வில் இருந்து வரும் நிலையில், அவரது மகனும் நோர்வே நாட்டின் பட்டத்து இளவரசருமான ஹாக்கோன் அரசுப் பிரதிநிதியாகச் செயல்பட்டு வருகிறார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T13:21:01+00:00</updated>
        </entry>
    </feed>
