<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-24T19:05:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் துப்பாக்கிச் சூடு: பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-shot-dead-in-etobicoke-toronto-1784900304"></link>
            <id>https://canadamirror.com/article/woman-shot-dead-in-etobicoke-toronto-1784900304</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள எட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள எட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>ஹம்பர்வுட் மற்றும் ரெக்ஸ்டேல் புலிவார்ட்ஸ் சந்திப்புக்கு அருகிலுள்ள குடியிருப்பு வீதியொன்றில் காலை 7:00 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
</p><p>தகவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் காணப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c057ffe7-db27-4da3-8b46-141d4427b222/26-6a636ad20cd97.webp' /></p><p>உயிரிழந்த பெண்ணின் வயது அல்லது இச்சம்பவத்திற்கு வழிவகுத்த காரணம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
பொலிஸார் வருவதற்கு முன்னரே சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>அவர் குறித்த அடையாளங்களோ அல்லது விவரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p>
இக்கொலை வழக்கை கொலை வழக்கு விசாரணைப் பிரிவு ஏற்று தீவிரமாக விசாரித்து வருகிறது.
விசாரணைகள் காரணமாக மார்னிங் ஸ்டார் டிரைவ் மற்றும் ரெக்ஸ்டேல் புலிவார்ட் இடையேயான ஹம்பர்வுட் புலிவார்ட் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.</p><p>
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், 416-808-2222 என்ற எண்ணில் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T16:46:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் வரி விதிப்பிற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/completely-unjustified-how-countries-1784903542"></link>
            <id>https://canadamirror.com/article/completely-unjustified-how-countries-1784903542</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய சுங்க வரி உயர்வு நடவடிக்கைக்கு சீனா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய வர்த்தக பங்களிப்பு நாடுகள் கடும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய சுங்க வரி உயர்வு நடவடிக்கைக்கு சீனா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய வர்த்தக பங்களிப்பு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.</p><p>
குறிப்பாக, இந்த வரி உயர்வுக்கு எவ்வித நியாயமும் இல்லை என அவுஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் சாடியுள்ளார். </p><p>
கட்டாயத் தொழிலாளர் பயன்பாட்டைத் தடுப்பதற்கான வர்த்தகத் தடைகளை சரியாகச் செயல்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறி, சுமார் 60 நாடுகளின் இறக்குமதிகள் மீது 10% முதல் 12.5% வரை கூடுதல் சுங்க வரியை அமெரிக்க நிர்வாகம் வியாழக்கிழமை இரவு அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/219f66d2-ee70-4455-ace9-682fc35f97f0/26-6a63777890c27.webp' /></p><p> 
அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு டிரம்ப் தற்காலிகமாக விதித்திருந்த வரிகளின் காலக்கெடு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு முடிந்த உடனேயே, இந்த புதிய வரிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. </p><p>
மாட்டிறைச்சி, தங்கம் மற்றும் தாமிரத்தின் முக்கிய ஏற்றுமதியாளரான அவுஸ்திரேலியா மீதான வரியை 12.5% ஆக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.</p><p> 
நவீன அடிமைமுறைக்கு எதிரான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மிகவும் தீவிரமாகவே அணுகுகிறது. இந்த கூடுதல் வரி உயர்வு முற்றிலும் நியாயமற்றது, இதைக் கைவிடுமாறு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என வர்த்தக அமைச்சர் டான் ஃபாரெல், தெரிவித்துள்ளார்.</p><p>
12.5% வரி உயர்வு மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவும், வர்த்தகத்தைப் பாதிப்பதாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.
</p><p> மேலும், அமெரிக்காவின் விசாரணையில் கட்டாயத் தொழிலாளர் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு வலுவான ஆதாரமும் இல்லை. வரிகள் வணிகங்களுக்கான செலவுகளையும் நிச்சயமற்ற தன்மையையும் மட்டுமே அதிகரிக்கும்" என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>
எங்களது தொழிலாளர் சட்டங்களை அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், எங்களது ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் சிறந்த பணிச்சூழல் வழங்கப்படுகிறது. எனவே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எவ்வித அடிப்படையுமற்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கலாஸ் விமர்சித்துள்ளார்.</p><p>
கட்டாயத் தொழிலாளர் முறையை தாம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ள சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு, இது தொடர்பாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஜப்பான் ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 12.5% வரியை எதிர்த்து அந்நாடு மேல்முறையீடு செய்துள்ளது.</p><p> ஏற்கனவே ஒப்புக்கொண்ட 10% வரியைத் தாண்டி கூடுதல் வரிகள் விதிக்கப்படாது என்று டிரம்ப் நிர்வாகம் உறுதியளித்திருந்ததை ஜப்பானிய அமைச்சரவை முதன்மைச் செயலாளர் மினோரு கிஹாரா சுட்டிக்காட்டினார். </p><p>
பரஸ்பர நன்மைகளைப் பேணும் வகையில் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது. தென் கொரியா மீதான கூட்டு வரிகள் 15%-ஐத் தாண்டக்கூடாது என அந்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>
ஒருதலைப்பட்சமாக விதிக்கப்படும் அனைத்து விதமான சுங்க வரிகளையும் சீனா எதிர்ப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார். 
வரிப் போர்களும் வர்த்தகப் போர்களும் எந்தவொரு தரப்பின் நலனுக்கும் உகந்ததல்ல எனஅவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T16:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்கரியில் காற்றுத் தரம் மிக மோசமான நிலைக்குச் சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/wildfire-smoke-pushes-calgary-air-quality-1784902666"></link>
            <id>https://canadamirror.com/article/wildfire-smoke-pushes-calgary-air-quality-1784902666</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கல்கரி நகரில் காற்றுத் தரம் மிக மோசமான நிலைக்குச் சரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கல்கரி நகரில் காற்றுத் தரம் மிக மோசமான நிலைக்குச் சரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் காற்றுத் தர சுகாதாரக் குறியீடு, வெள்ளிக்கிழமை காலை 6:30 மணி நிலவரப்படி 10-பிளஸ் (10+) என்ற அளவில் பதிவாகியுள்ளது. </p><p>
இது ஆரோக்கியத்திற்கு மிகக் கடுமையான ஆபத்தை விளைவிக்கும் நிலையாகும்.
பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் எரிந்து வரும் காட்டுத்தீயிலிருந்து எழும் புகையே இதற்குக் காரணமாகும்.</p><p>கல்கரி மட்டுமின்றி, ஏர்ட்ரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் காற்றுத் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d9e208e-0364-43de-9975-17ba10a8950b/26-6a63740b6aec0.webp' /></p><p>
</p><p>இந்தப் புகை மூட்டம் மெதுவாக அப்பகுதியை விட்டு விலகும் என்பதால், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை முழுவதும் இப்போக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>
வெள்ளிக்கிழமை காலையில் காற்றுத் தரக் குறியீடு தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்றாலும், பிற்பகலில் 'மிதமான ஆபத்து' என்ற நிலைக்குச் சற்று மேம்பட வாய்ப்புள்ளது.
எனினும், மாலையில் மீண்டும் காற்றுத் தரம் மோசமடையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>தற்போது கல்கரியில் சுமார் இரண்டு வார கால வெப்ப அலை நீடித்து வருகிறது. பெரும்பாலான நாட்களில் வெப்பநிலை 30 பாகை செல்சியஸை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>வெள்ளிக்கிழமை வெப்பநிலை 32°C வரை உயரக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டிருந்தாலும், தடிமனான புகைமூட்டம் சூரிய ஒளியைத் தடுப்பதால் இந்நகரம் அந்த வெப்பநிலையை எட்டுவது தடைப்படலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T15:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க வர்த்தகப் போர் தொடர்பில் -கனடிய பிரதமர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/verything-is-on-the-table-in-us-trade-talks-pm-1784899697"></link>
            <id>https://canadamirror.com/article/verything-is-on-the-table-in-us-trade-talks-pm-1784899697</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் விவகாரத்தில் எல்லா வாய்ப்புகளும் மேசையில் உள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
நாட்டின் குடும்பங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் விவகாரத்தில் எல்லா வாய்ப்புகளும் மேசையில் உள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
நாட்டின் குடும்பங்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க கனடா என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும் என உறுதியளித்துள்ளார்.
</p><p>சார்லட்டவுனில் வியாழக்கிழமை நடைபெற்ற மாகாண மற்றும் பிராந்திய முதல்வர்களின் வருடாந்தக் கூட்டத்தின் இறுதி நாளில் கலந்துகொண்ட பின்னர், ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடியப் பொருட்கள் மீது புதிய வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தி வரும் நிலையில், அடுத்த மாதம் புதிய வரிகள் அமலுக்கு வரும் முன் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் அமெரிக்காவிற்கு எதிரான பதிலடி நடவடிக்கைகளை அவர் மறுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fefba37e-ae6f-4644-afe3-f27e77fb85fd/26-6a63687654127.webp' /></p><p>
</p><p>கனடா எவ்வாறு பதிலளிக்கிறது என்பதில் தெளிவாக இருப்போம். வரி தொடர்பான அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.</p><p>
பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், எங்களிடம் முழுமையான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், முன்கூட்டியே பதிலடி கொடுப்பது தற்போதைய சூழலில் எதிர்மறையான விளைவையே தரும். மாகாண முதல்வர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் ஒரே திசையிலும், ஒரே நோக்கத்திலும், தீவிரமான உறுதியுடனும் கைகோர்த்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அமெரிக்காவின் 30 நாள் கெடு தொடர்பாகக் கேட்டபோது, அது ஒரே நேரத்தில் "அழுத்தக் காரணியாகவும் வாய்ப்பாகவும்" உள்ளது எனப் பிரதமர் குறிப்பிட்டதுடன், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதும், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஒற்றுமையைப் பேணுவதுமே முக்கிய இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T13:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய இராஜாங்க அமைச்சராக இலங்கை தமிழ்ப் பெண் உமா குமரன்; முதல் வரலாற்றுச் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lanka-tamils-uma-kumaran-uk-new-cabinet-minister-1784871247"></link>
            <id>https://canadamirror.com/article/lanka-tamils-uma-kumaran-uk-new-cabinet-minister-1784871247</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை புலமபெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில் (Foreign, Commonwealth and Development Office) வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54d46103-9b72-4b51-bd41-d15ac82db539/26-6a62f95118016.webp' /></p><h2>பிரித்தானிய அரசாங்கத்தில்&nbsp; முதல் தமிழ் பெண்</h2><p> </p><p>இதன் மூலம் பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
</p><p>
இலங்கையில் உள்நாட்டுப் போரின் காரணமாக பிரித்தானியாவில் குடியேறிய தமிழ் பெற்றோருக்கு பிறந்த உமா குமரன், அண்மைய பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.</p><p> தற்போது அமைச்சுப் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து, தனது சமூக ஊடகப் பதிவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அவர், “எனது பெற்றோருக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்த பிரித்தானியா, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வாய்ப்பை வழங்கியது.</p><p> இன்று அந்த நாட்டிற்கு அமைச்சராக சேவையாற்றுவது பெருமைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.


பிரித்தானிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைப்பில் இராஜாங்க அமைச்சர் பதவி, நாடாளுமன்ற துணைச் செயலாளர் பதவியை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p> அமைச்சரவை அமைச்சருக்கு அடுத்த முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் ஒன்றாக இந்தப் பதவி விளங்குகிறது.

இதற்கு முன்னர் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜயவர்தன, லிஸ் ட்ரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்.</p><p>

உமா குமரனின் நியமனம், பிரித்தானிய அரசியலில் இலங்கைத் தமிழ் சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கும், அந்நாட்டின் பல்வகைமை மற்றும் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் முக்கிய முன்னேற்றமாகவும் அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T13:10:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைப் பராமரிப்புப் பணம் வழங்க மறுப்பு: தந்தைக்கு தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/father-ordered-to-spend-time-behind-bars-1784875118"></link>
            <id>https://canadamirror.com/article/father-ordered-to-spend-time-behind-bars-1784875118</id>
            <summary type="text">&amp;nbsp;தனது குழந்தைப் பராமரிப்பிற்காக வழங்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான டொலர்கள் தொகையை வழங்கத் தவறிய தந்தை ஒருவருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தனது குழந்தைப் பராமரிப்பிற்காக வழங்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான டொலர்கள் தொகையை வழங்கத் தவறிய தந்தை ஒருவருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகப் பிரசுரத் தடையின் கீழ் "திரு. M" (Mr. M) எனக் குறிப்பிடப்படும் அந்த நபர், நீதிமன்ற விசாரணையின் போது மொத்தமாக 37,312.54 டொலர்களை நிலுவையாக வைத்திருக்க வேண்டியிருந்தது.
</p><p>குழந்தையின் தாயாரான "திருமதி. C" (Ms. C) மற்றும் பிரதிவாதியான திரு. M ஆகிய இருவரும் சட்டப்பூர்வமாகத் திருமண பந்தத்தில் இணையவில்லை. குழந்தை பிறந்த நாள் முதல் வளர்ப்புச் செலவுகள் முழுவதையும் தாயாரே கவனித்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5775e50-e1ad-4e9a-b832-c3af6d93710e/26-6a63086fc2aa8.webp' /></p><p>
ஆண்டிற்கு 297,700 டொலர்கள் வருமானம் ஈட்டும் திரு. M, குழந்தைப் பராமரிப்பிற்காக மாதம் 2,500 டொலர்களையும், நிலுவைத் தொகையாக 16,429 டொலர்களையும் வழங்குவதாகச் சட்டப்பூர்வ ஒப்பந்தம் செய்தார்.</p><p>
நிலுவைத் தொகை 50,000 டொலர்களை நெருங்கியதையடுத்து, மாதம் 7,500 டொலர்கள் செலுத்த வேண்டும் எனவும், தவறினால் ஒவ்வொரு தவறும் தவறும்போதும் 3 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>எனினும், அவர் இருமுறை மட்டுமே பணத்தை வழங்கிவிட்டு, அதன் பின்னர் பணத்தைச் செலுத்தத் தவறியுள்ளார். </p><p>இதனால் தனக்குக் கடும் கடன்பாடும், வாழ்க்கைத் தரத்தில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதாகத் தாயார் நீதிமன்றத்தில் விவரித்தார்.</p><p>
தனக்கு போதிய வருமானம் இல்லை எனவும், நிதி நெருக்கடி நிலவுவதாகவும் தந்தை சார்பில் வாதிடப்பட்டது. </p><p>மேலும், தனது நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 52,000 டொலர்களைத் தன்னால் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.
</p><p>ஆனால், அந்த வங்கிக் கணக்கிலிருந்து 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏராளமான ஆடம்பரச் செலவுகள் செய்யப்பட்டுள்ளதை நீதிபதி மைக்கா ரான்கின் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T13:09:30+00:00</updated>
        </entry>
    </feed>
