<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-25T15:33:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 5 மில்லியன் லொத்தர் சீட்டு பரிசை வென்ற பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-woman-looking-forward-to-suite-on-a-cruise-1787667535"></link>
            <id>https://canadamirror.com/article/bc-woman-looking-forward-to-suite-on-a-cruise-1787667535</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றபோது தான் 5 மில்லியன் டொலர் லொட்டோ 6/49 ஜாக்பாட் பரிசை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றபோது தான் 5 மில்லியன் டொலர் லொட்டோ 6/49 ஜாக்பாட் பரிசை வென்றிருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
</p><p>ஜேன் டி. என்பவர் ஆகஸ்ட் 8ஆம் திகதி நடைபெற்ற லொட்டோ0 குலுக்கலில் கிளாசிக் ஜாக்பாட் பரிசை வென்றதாக பிரிட்டிஷ் கொலம்பியா லாட்டரி கழகம் திங்கட்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.</p><p>
எப்படி எதிர்வினையாற்றுவது என்றே எனக்குத் தெரியவில்லை. பணியாளர் என்னைவிட அதிக உற்சாகத்தில் இருந்தார் என ஜேன் டி. தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33e2a9b5-59e6-4e6a-85e4-abcda8584785/26-6a8da45148b37.webp' /></p><p>
</p><p>தாம் வெற்றி பெற்ற செய்தியை அறிந்த பின்னர் காருக்குத் திரும்பிச் சென்று தனது கணவரிடம் கூறியபோது, அவர் முதலில் அதை நம்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் அவர் என்னை நம்பவில்லை.</p><p> பின்னர் வெற்றிச் சீட்டின் சரிபார்ப்பு ரசீதைக் காட்டினேன். அதில் இருந்த பூஜ்ஜியங்களை அவர் எண்ணிப் பார்த்தார் என ஜேன் கூறியுள்ளார்.
</p><p>இந்த எதிர்பாராத பெரும் தொகை கிடைத்துள்ளதால், இனி தனது வாழ்க்கையில் “அதிக சுதந்திரத்துடன்” செயல்பட முடியும் என ஜேன் தெரிவித்துள்ளார்.
</p><p>தனது வீட்டில் சில புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதுடன், பணத்தின் ஒரு பகுதியை முதலீடு செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். </p><p>
அதேவேளை, தன்னை மகிழ்விக்கும் வகையில் சொகுசுக் கப்பல் பயணத்தின்போது ஒரு தனிப்பட்ட ஸ்யூட் அறையில் தங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T15:16:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோ ஏரியின் பெயரை மாற்ற டிரம்ப் பரிசீலனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-threatens-to-change-name-of-lake-ontario-1787666752"></link>
            <id>https://canadamirror.com/article/trump-threatens-to-change-name-of-lake-ontario-1787666752</id>
            <summary type="text">அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியாக உள்ள புகழ்பெற்ற &#039;ஒன்டாரியோ ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியாக உள்ள புகழ்பெற்ற 'ஒன்டாரியோ ஏரியின் பெயரை 'அமெரிக்கா ஏரி' என மாற்றப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துடன் இனி பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ள மாட்டோம் என்பதால், ஒன்டாரியோ ஏரியின் பெயரை 'அமெரிக்கா ஏரி' என மாற்றுவது குறித்து அமெரிக்கா தீவிரமாக பரிசீலித்து வருகிறது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>முன்னதாக மெக்சிகோ வளைகுடாவின் பெயரை 'அமெரிக்க வளைகுடா' என டிரம்ப் மாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82f44eca-8f44-4ce7-a1bf-846bbdcaf0f6/26-6a8da14288628.webp' /></p><p>
</p><p>புத்தாண்டு முதல் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்கள், டிரக்குகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் உருக்குப் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.</p><p>
இதற்குப் பதிலடியாக, கனடா தரப்பிலிருந்தும் அமெரிக்கப் பொருட்களுக்கு இணையான வரிகள் விதிக்கப்படும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T15:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் வரி எச்சரிக்கைக்கு ஒன்டாரியோ முதல்வர் காரசாரமான பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-premier-says-trump-can-kiss-my-ass-1787666273"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-premier-says-trump-can-kiss-my-ass-1787666273</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீது அடுத்த ஆண்டு முதல் 50 சதவீதம் வரி விதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீது அடுத்த ஆண்டு முதல் 50 சதவீதம் வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார். </p><p>இதற்கு ஒன்டாரியோ மாகாண முதல்வர் டோக் ஃபோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய ஃபோர்ட், டிரம்பின் இந்த அச்சுறுத்தலைச் சற்றும் பொருட்படுத்தப்போவதில்லை என்று மிகக் கடுமையான வார்த்தைகளில் பதிலடி கொடுத்தார். </p><p>
டிரம்பின் பதிவுக்குப் பிறகு பேசிய ஃபோர்ட், கனடா அனைத்து வளங்களையும் பயன்படுத்தி டிரம்பை எதிர்த்துப் போராடும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9b9815b-f403-44d1-99a5-4f9b2e08d73b/26-6a8d9f63156ac.webp' /></p><p>அவர் ஒரு அடாவடிக்காரர், சர்வாதிகாரி மற்றும் தொழில் நஷ்டங்களின் ராஜா. அவருக்கு நான் பதிலளித்து அவரது வலையில் விழப்போவதில்லை. அவர் ஒரு தோல்வியாளர்" என்று ஃபோர்ட் சாடினார்.</p><p> 
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய், பொட்டாஷ், யுரேனியம் மற்றும் அரிதான உலோகங்களின் விலையை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் அல்லது அவற்றை நிறுத்தி அமெரிக்காவிற்குச் செல்லும் எண்ணெய் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித்திடம் வலியுறுத்தப்போவதாக ஃபோர்ட் கூறினார். </p><p>
அமெரிக்காவிற்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தின் மீது ஏற்றுமதி வரியை உயர்த்த வேண்டும் என்றும், அனைத்து மாகாண முதல்வர்களும் இதில் ஒன்றாக இணைய வேண்டும் என போர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T14:58:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது - இஸபெலா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/northern-governor-requested-to-diaspora-1787649367"></link>
            <id>https://canadamirror.com/article/northern-governor-requested-to-diaspora-1787649367</id>
            <summary type="text">கனடாவில், ஈழத் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என&amp;nbsp;இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண மருத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், ஈழத் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என&nbsp;இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் தெரிவித்துள்ளார்.</p><p>வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.</p><p>இந்த நிகழ்வில் இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் மற்றும் வட மாகாண ஆளுநர் என். வேதநாயகன், இந்த குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை நன்கொடையாளர்கள்&nbsp; உள்ளிட்ட பலர் பங்கேற்று இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f666a7b6-61e7-4e9d-996b-544f447aea32/26-6a8d5f29a3b3b.webp' /></p><p>இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்த இலங்கையர்கள் அந்நாட்டுக்கு பல்வேறு வகையில் சேவைகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான கனடிய தூதுவர் இஸபெல்லா மார்டின் தெரிவித்துள்ளார்.
</p><p>
கனடாவின் வெற்றிக்கு புலம்பெயர் இலங்கையர்களின் பங்களிப்பு மகத்துவமானது என அவர் தெரிவித்துள்ளார்.</p><p> இவ்வாறு கனடிய புலம்பெயர் தமிழர்கள் தாயகத்திற்கு கொடைகளை வழங்குவதும் தங்களது திறமைகளை வழங்குவதும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
கனடாவில் பெற்றுக் கொண்டவற்றை தாயக சமூகத்திற்கு வழங்குவது போற்றுதற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தத் தருணம் பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருவதாக அவர் குறிப்பிடுகின்றார். </p><p>கனடாவின் சார்பில் இந்த நன்கொடை வழங்குவதற்கு வழங்கும் நிகழ்வுடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p>
</p><p>இதேவேளை, கனடிய வாழ் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஈழத்து தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாக வட மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.</p><p>கனடாவில் கடின உழைப்பில் பெற்றுக் கொள்ள பட்ட பணம் தாயகத்தில் தேவைகள் உடையவருக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
புலம்பெயர் சமூகத்திடம் தாம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
புலம்பெயர் சமூகத்தினர் தாயகத்திற்கு தொழில்நுட்பத்தையும் அறிவையும் வழங்க முடியும் எனவும் மருத்துவமனைகளுக்கு உதவுமாறு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
எமது மருத்துவமனைகளுக்கு காணப்படும் முக்கியமான தேவைப்பாடுகளை கண்டறிந்து பேண்தகு அடிப்படையில் அவற்றை பூர்த்தி செய்யுமாறு புலம்பெயர் சமூகத்திடம் கோருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>
கடந்த காலங்களில் புலம்பெயர் சமூகத்தினர் இலங்கையில் முதலீடு செய்வதில் எதிர்நோக்கிய நிர்வாக மற்றும் ஏனைய சிக்கல்களை களைவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.</p><p>
வட மாகாணத்தை முதலீடுகளுக்கு சிறந்த ஓர் மாகாணமாகவும் சமூக பொறுப்புடைய ஒரு மாகாணமாகவும் மாற்றுவதற்கு முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
கொடையாளர்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டுமே பெருந்தொகை பணத்தை நம்பி கொடுப்பார்கள் எனவும் தற்போதைய சமூகத்தில் ஏமாற்று பேர்வழிகள் இருக்கிறார்கள் எனவும் இந்த கொடையாளி மீது நம்பிக்கை கொண்டு பெருந்தொகை பணம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>நன்கொடையாளர்களின் சேவை தொடர வேண்டும் எனவும் வடமகாணத்திற்கு தொடர்ந்து சேவைகள் ஆற்றப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T13:23:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சை புரட்டிப்போட்ட சூறாவளி ; கடும் சேதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cyclone-batters-france-tornado-severe-damage-1787664336"></link>
            <id>https://canadamirror.com/article/cyclone-batters-france-tornado-severe-damage-1787664336</id>
            <summary type="text">&amp;nbsp; பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமான கார்கசோன் (Carcassonne) நகருக்கு அருகில் திடீரென உருவான அரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமான கார்கசோன் (Carcassonne) நகருக்கு அருகில் திடீரென உருவான அரிதான சூறாவளி (Tornado) காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்த பகுதியில் ஏற்பட்ட சூப்பர்செல் (Supercell) இடியுடன் கூடிய பருவநிலை மாற்றம் காரணமாக இந்தச் சூறாவளி உருவாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/459df4d7-36a6-4299-938a-39fb2cec2069/26-6a8d97d2235af.webp' /></p><p>
சூறாவளியின் கோரத் தாண்டவத்தால் அந்த பகுதியில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
</p><p>
இந்த இயற்கை பேரிடரின் காரணமாக குறைந்தபட்சம் 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந் நிலையில் சூறாவளி தாக்கிய பகுதிகளின் காட்சியமைப்புகளுடன் கூடிய காணொளிகளும் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T13:22:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரபிக்கடலில் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missile-attack-on-a-ship-in-the-arabian-sea-1787653447"></link>
            <id>https://canadamirror.com/article/missile-attack-on-a-ship-in-the-arabian-sea-1787653447</id>
            <summary type="text">&amp;nbsp; ஓமன் அருகே அரபிக்கடலில் சென்ற கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 



குறித்த கச்சா எண்ணெய் கப்பல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஓமன் அருகே அரபிக்கடலில் சென்ற கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>



குறித்த கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது யார்? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a99206f-001e-496e-b54f-d0039ac783b1/26-6a8d6d4923605.webp' /></p><p>


ஓமனின் அஷ் ஷிஷான் நகரில் இருந்து 9 நாட்டிகல் மைல் தொலைவில் ஹோர்முஸ் நீரிணை அருகே இன்று அதிகாலை கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு கப்பல் சென்றுள்ளது.</p><p>



அந்த கப்பலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கப்பலின் எஞ்சின் அறை முழுவதும் சேதமடைந்துள்ளது.



இதையடுத்து, கப்பலில் இருந்த மாலுமிகள் ஒமன் கடற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டததாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T11:53:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் விமானம் மோதி ஊழியர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/montreal-airport-worker-seriously-injured-1787656010"></link>
            <id>https://canadamirror.com/article/montreal-airport-worker-seriously-injured-1787656010</id>
            <summary type="text">மொண்ட்ரியால்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் விமானம் மோதியதில், விமான நிலைய ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொண்ட்ரியால்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் விமானம் மோதியதில், விமான நிலைய ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மொண்ட்ரியால் காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>மாலை 7:30 மணியளவில், விமான நிலையத் தாரைத்தளத்தில் பின்னோக்கி நகர்ந்துகொண்டிருந்த விமானம் ஒன்று மோதியதில் ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
</p><p>தகவல் கிடைத்ததும் அவசர உதவிக் குழுவினர் விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5c2397b-e995-404e-89e8-1cb4113f8780/26-6a8d774c5485d.webp' /></p><p>
இந்தச் சம்பவம் குறித்த விசாரணை, கனடாவின் வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மொண்ட்ரியால் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>
சம்பவம் நடந்த இடத்தில் என்ன நிகழ்ந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய, காவல்துறையினரும் தடயவியல் நிபுணர்களும் தளத்தில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>இந்தச் சம்பவத்திற்கு இடையிலும் விமான நிலையத்தின் இயல்புச் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p> 
எனினும், பயணிகள் தங்களது விமானங்களின் நிலையைச் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் மூலம் நேரடியாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு மொண்ட்ரியால் விமான நிலைய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T11:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிராண்ட் செஸ் இறுதிப் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tamil-nadu-player-praggnanandha-wins-grand-chess-1787656077"></link>
            <id>https://canadamirror.com/article/tamil-nadu-player-praggnanandha-wins-grand-chess-1787656077</id>
            <summary type="text">கிராண்ட் செஸ் தொடரின் அரைஇறுதியின் 2-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.



ஜெர்மனியின் வின் சென்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிராண்ட் செஸ் தொடரின் அரைஇறுதியின் 2-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
</p><p>


ஜெர்மனியின் வின் சென்ட் கீமர் உடன் நடந்த இந்த போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 55-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5e81276-d983-4adb-9a92-c8b8e3b613b7/26-6a8d778f2f608.webp' /></p><p>அமெரிக்க வீரர்களான பேபியானோ கருணா-வெஸ்லி சோ இடையிலான அரைஇறுதியின் 2-வது ஆட்டம் 50வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது.</p><p> 



கிளாசிக்கல் ஆட்டம் முடிவில் பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையுடன் இறுதிப்போட்டியை நெருங்கியுள்ளார்.



கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. </p><p>



இந்த போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் 4 வீரர்கள் நேரடியாக அரை இறுதியில் மோதுகிறார்கள். </p><p>



ஒவ்வொரு அரைஇறுதியும் 2 கிளாசிக்கல், 2 ரேபிட், 4 பிளிட்ஸ் ஆட்டங்கள் கொண்டதாகும். 



மொத்தம் 28 புள்ளிகள் கொண்ட அரைஇறுதியில் 15 புள்ளிகள் எடுப்பவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்.</p>]]></content>
            <updated>2026-08-25T11:08:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா-அமெரிக்க எல்லை வர்த்தகப் போர்: 50% வரி விதிப்பால் பதற்றம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/border-communities-brace-for-more-fallout-1787655276"></link>
            <id>https://canadamirror.com/article/border-communities-brace-for-more-fallout-1787655276</id>
            <summary type="text">கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார மோதல் தீவிரமடைந்துள்ளது.

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார மோதல் தீவிரமடைந்துள்ளது.
</p><p>
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்புக்கு எதிராக டாலருக்கு டாலர் என்ற முறையில் நாங்களும் பதிலடி வழங்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
</p><p>
கார் வாகனங்கள், உதிரிபாகங்கள் மற்றும் உருக்கு மீது வரும் ஜனவரி 1 முதல் 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a46e7ca-e307-47e9-8ec6-d65799c2e44d/26-6a8d746ea3cad.webp' /></p><p>
</p><p>
ஒன்ராறியோ மாகாணத்தின் சாம்ரியா நகரின் மேயர் மைக் பிராட்லி, இந்த வர்த்தக மோதல் உள்ளூர் தொழில்துறையையும் வேலைவாய்ப்புகளையும் கடுமையாக பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.</p><p> 

பிளாஸ்டிக் உள்ளிட்ட பல ஏற்றுமதிப் பொருட்கள் இதனால் பாதிக்கப்படலாம் என்றார்.
</p><p>
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண ஆளுநர் கிரெட்சன் விட்மர் மற்றும் நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் ஆகியோர், இந்த வர்த்தகப் போர் இரு நாட்டு குடும்பங்கள், வணிகங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையை பாதிக்கும் எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>
செப்டம்பர் 8 முதல் கனடாவின் பதிலடி வர்த்தக வரிகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதாரச் சூழல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T11:01:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டனில் வரலாறு காணாத வறட்சி ; நீர் சேமிப்புக்கு அரசு புதிய ஆலோசனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/britain-faces-unprecedented-water-conservation-1787654412"></link>
            <id>https://canadamirror.com/article/britain-faces-unprecedented-water-conservation-1787654412</id>
            <summary type="text">பிரிட்டனில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, நீரை சேமிக்கும் வகையில் அரிசி கழுவுவதை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அரசு வழங்கியுள்ளது.ஐரோப்பாவில் ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரிட்டனில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, நீரை சேமிக்கும் வகையில் அரிசி கழுவுவதை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அரசு வழங்கியுள்ளது.</p><p>ஐரோப்பாவில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக, பிரிட்டனில் நீர்நிலைகள் வறண்டு பெரும்பாலான பகுதிகள் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளன.</p><p> இதனால், அங்கு நீரை சேமிக்க பொதுமக்களுக்கு புதிய விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அதன் ஒரு பகுதியாக, ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அரிசி கழுவுவதை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9d25cd9-1563-4e40-b8f0-0f9e746caee8/26-6a8d710e25c13.webp' /></p><p>ஆசிய சமூகத்தினர் பிரிட்டனில் அதிகளவில் வசித்து வரும் நிலையில், அவர்கள் சமைப்பதற்கு முன், அரிசியை 5 - 7 முறை கழுவும் பழக்கத்தை கொண்டுள்ளதால், இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக, மலேஷியாவைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் பிங் கூம்ப்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>

அரிசியை இரண்டு முறை மட்டும் கழுவினால் போதுமானது என்றும், இதன் மூலம் ஒவ்வொரு முறையும் 5 லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என்றும், 'வீடியோ' மூலம் பிங் கூம்ப்ட்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
</p><p>

அரிசி கழுவிய நீரை செடிகளுக்கு ஊற்றலாம் என்றும், அழகு சாதனப் பொருளாக முகத்திற்கும், தலைமுடிக்கு ஸ்பிரே செய்ய பயன்படுத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
</p><p>

இதேபோன்று, முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்னர் செய்யும் துாய்மை சடங்கான 'உது'விற்கு, 6 - 12 லிட்டர் வரை தண்ணீர் செலவாவதாகவும், குறைந்த தண்ணீரை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. </p><p>இந்த விழிப்புணர்வு பிரசாரங்களுக்கு, பிரிட்டன் அரசு அமைப்பான 'ஆப்வாட்' மூலம், 3.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
</p><p>

நாட்டில் உள்ள குழாய்களில் ஏற்படும் கசிவுகள் மூலமாகவே தினமும், 300 கோடி லிட்டர் தண்ணீர் வீணாகி வரும் நிலையில், பொதுமக்களுக்கு மட்டும் அறிவுரை வழங்குவது நியாயமா என்ற கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-25T10:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமன் அருகே சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missile-attack-on-oil-tanker-near-oman-1787653305"></link>
            <id>https://canadamirror.com/article/missile-attack-on-oil-tanker-near-oman-1787653305</id>
            <summary type="text">ஓமன் அருகே அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், கப்பலின் எஞ்சின் அறை கடுமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓமன் அருகே அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், கப்பலின் எஞ்சின் அறை கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஓமனின் அஷ் ஷிஷான் நகரில் இருந்து சுமார் 9 நாட்டிகல் மைல் தொலைவில், ஹர்முஸ் ஜலசந்திக்கு அருகே கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற கப்பலை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac6b07d5-1f2a-4954-9b0b-207137d61da0/26-6a8d6cbb1a695.webp' /></p><p>தாக்குதலின் போது கப்பலின் எஞ்சின் அறை முழுமையாக சேதமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் ஓமன் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
எனினும், குறித்த கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
முன்னதாக, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, ஈரான் இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாகவும் அறிவித்திருந்தது. </p><p>மேலும், அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் சரக்கு மற்றும் கச்சா எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இதேவேளை, ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும் ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளில் பயணிக்கும் சரக்கு மற்றும் கச்சா எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.</p><p>

இந்த நிலையில், ஓமன் அருகே இடம்பெற்றுள்ள புதிய ஏவுகணைத் தாக்குதல் சம்பவம், மத்திய கிழக்கு கடற்பரப்பில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T10:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் சூறாவளி தாக்குதல் ; கர்ப்பிணி பெண் உட்பட 41 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tornado-france-41-people-injured-pregnant-woman-1787652206"></link>
            <id>https://canadamirror.com/article/tornado-france-41-people-injured-pregnant-woman-1787652206</id>
            <summary type="text">பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக கர்ப்பிணி பெண் உட்பட 41 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 15 பேர் வைத்தியசாலையில் சிகிச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக கர்ப்பிணி பெண் உட்பட 41 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 15 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
தென்மேற்கு பிரான்ஸின் பொமாஸ் கிராமத்தில் நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் மணிக்கு 117 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றுடன் சூறாவளி வீசியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b35f5854-f2c0-4160-b0b0-a2945f1778ae/26-6a8d687018036.webp' /></p><p>சுமார் 1,000 பேர் வசிக்கும் இந்தக் கிராமம் சூறாவளியின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சுமார் 300 வீடுகள் சேதமடைந்துள்ளன.</p><p> மேலும், பல மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளதோடு, பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன.</p><p>

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
</p><p>
இதன்போது காயமடைந்த 41 பேர் மீட்கப்பட்ட நிலையில், கர்ப்பிணி பெண் உட்பட 15 பேர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca27bbff-06c4-4efe-8e14-7732b12a5414/26-6a8d6870bc603.webp' /></p><p>

இதேவேளை, பைரனீஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட ஆலங்கட்டி மழை காரணமாக தென்மேற்கு பிரான்ஸில் நடைபெறவிருந்த வுல்டா எஸ்பானா சைக்கிள் பந்தயமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>

மேலும், போர்டோ, மார்சேய், நைஸ் மற்றும் துலூஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் கடுமையான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகளும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> இந்த அனர்த்தம் தென்மேற்கு பிரான்ஸில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T10:03:48+00:00</updated>
        </entry>
    </feed>
