<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-17T21:24:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ChatGPT-ஐப் பயன்படுத்திய பின், தாய், சகோதரனைக் கொன்ற 17 வயது இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/youth-kills-mother-brother-after-using-chatgpt-1786999828"></link>
            <id>https://canadamirror.com/article/youth-kills-mother-brother-after-using-chatgpt-1786999828</id>
            <summary type="text">அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் ஆக்டன் நகரில், 17 வயது சிறுவன் ஒருவர் தனது தாயையும் 14 வயது தம்பியையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அர்ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் ஆக்டன் நகரில், 17 வயது சிறுவன் ஒருவர் தனது தாயையும் 14 வயது தம்பியையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
</p><p>
அர்ஜுன் அரவிந்த் (17) மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள், குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் வன்முறை தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b595cea-57e0-4af1-8aef-13ae0525a38a/26-6a837416c81c8.webp' /></p><p>செவ்வாய்க்கிழமை மாலை 6.40 மணியளவில் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாததால், அர்ஜுனின் தந்தை காவல்துறைக்கு தகவல் அளித்தார். </p><p>வீட்டிற்கு வரவிருந்த ஆசிரியரும் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், வீட்டின் முதல் தளத்தில் 14 வயது சிறுவனின் உடலையும், அடித்தளத்தில் அவரது தாயின் உடலையும் கண்டெடுத்தனர்.
</p><p>
இதையடுத்து தலைமறைவான அர்ஜுனை காவல்துறையினர் தேடி வந்தனர். அவர் தனது தாயின் 2014ஆம் ஆண்டு பச்சை நிற ஹோண்டா அக்கார்டு காரில் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>பின்னர் புதன்கிழமை காலை, வேறு ஒரு அலாரம் அழைப்பை விசாரிக்கச் சென்ற காவல்துறையினர் அர்ஜுனைக் கண்டுபிடித்தனர்.
</p><p>
குடும்பத்தினரைக் கொல்வது தொடர்பான கற்பனைகள் மற்றும் கருத்துகளை இணையத்திலும் ChatGPT-யிலும் தேடியது உள்ளிட்ட ஆபத்தான நடத்தைகளை சிறுவன் சமீபத்தில் வெளிப்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69bf8d88-7d07-4c10-a392-f1a44a7fe51f/26-6a83741610752.webp' /></p><p>உயிரிழந்தவர்களின் மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை முதன்மை மருத்துவப் பரிசோதகர் தீர்மானிக்க உள்ளார். இருவரும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஆயுதம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
</p><p>
மேலும், வாகனத்தை அனுமதியின்றி பயன்படுத்தியமை மற்றும் மோட்டார் வாகனத் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளும் அர்ஜுன் மீது சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>
அவர் வியாழக்கிழமை கான்கார்ட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கொலை மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள உள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-17T20:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 16 வயதுச் சிறுமி சுட்டுக்கொலை: காவல்துறை தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/investigating-suspicious-death-of-16-year-old-girl-1786984972"></link>
            <id>https://canadamirror.com/article/investigating-suspicious-death-of-16-year-old-girl-1786984972</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள 139 அவென்யூ மற்றும் 32 ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகில் 16 வயதுச் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள 139 அவென்யூ மற்றும் 32 ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகில் 16 வயதுச் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>
அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தீவிர காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 16 வயதுச் சிறுமியைக் கண்டறிந்தனர். </p><p>
காவல்துறையினர் அச்சிறுமிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும், அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தபோது அச்சிறுமி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. </p><p>
இச்சம்பவத்தை மர்ம மரணமாகக் கருதி எட்மண்டன் காவல்துறையின் கொலை வழக்கு விசாரணைப் பிரிவு விசாரணையைக் கையில் எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b98d73c-9f8c-45b4-841c-8287ce25aa16/26-6a833a0e62678.webp' /></p><p> மரணத்திற்கான பின்னணி மற்றும் சூழ்நிலைகளைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
கூடுதல் விவரங்கள் கிடைக்கும் பட்சத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 780-423-4567 என்ற எண்ணிலோ அல்லது கைபேசி மூலம் #377 என்ற எண்ணிலோ எட்மண்டன் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T19:50:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/7-killed-in-ukraine-attack-on-russia-1786995995"></link>
            <id>https://canadamirror.com/article/7-killed-in-ukraine-attack-on-russia-1786995995</id>
            <summary type="text">உக்ரைன் , ரஷ்யா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.



இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் , ரஷ்யா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. </p><p>இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>


இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c693834a-5acd-43ff-82d3-da792f1e36bd/26-6a83651cdf148.webp' /></p><p> </p><p>போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டார். </p><p>ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>



இந்நிலையில், ரஷ்யா மீது உக்ரைன் இன்று ட்ரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. </p><p>ரஷ்யாவின் பெல்கொரோட், அஸ்ட்ராகான் மாகாணங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. </p><p>இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T19:46:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் கொள்கையை தீவிரப்படுத்தும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-intensifies-offensive-policy-against-the-us-1786991677"></link>
            <id>https://canadamirror.com/article/iran-intensifies-offensive-policy-against-the-us-1786991677</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், தனது இராணுவக் கொள்கையை தற்காப்பு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், தனது இராணுவக் கொள்கையை தற்காப்பு நிலையிலிருந்து “முழுமையான தாக்குதல்” நிலைக்கு மாற்ற ஈரான் தீர்மானித்துள்ளதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>

ரொய்ட்டர்ஸிடம் திங்கட்கிழமை தெரிவித்த அந்த அதிகாரி, ஹோர்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சூழ்ந்த பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளுக்கு ஈரானிய அமைப்புகள் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c881e94-95e4-42fc-af62-8f78042dd865/26-6a8354404811d.webp' /></p><p>இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால், அமெரிக்க கடற்படை முற்றுகையை முறியடிக்கும் வகையில் “சரியான நேரத்தில் துல்லியமான” இராணுவத் தாக்குதலை நடத்த ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் மற்றும் நிரந்தர சமாதானத்துக்கான முன்னேற்றம் தற்போது முடங்கியுள்ளதுடன், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் கப்பல் போக்குவரத்தையும் மீள ஆரம்பிப்பதில் முன்னேற்றம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஜூன் 17ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான உடன்பாட்டை எட்டுவதற்கு 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. </p><p>இந்தக் கால அவகாசம் பரஸ்பர இணக்கத்தின் அடிப்படையில் நீடிக்கக்கூடியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த ஒப்பந்தம் நடைமுறையில் சிக்கலை எதிர்கொண்டது.
</p><p>
ஒப்பந்தத்தின் ஐந்தாவது சரத்து நீர்வழியை நிர்வகிக்கும் உரிமையை ஈரானுக்கு வழங்குவதாக தெஹ்ரான் தெரிவித்த நிலையில், அமெரிக்கா அந்த விளக்கத்தை நிராகரித்துள்ளது.</p><p>

மேலும், அமெரிக்கா தனது ஒப்பந்தப் பொறுப்புகளை தொடர்ந்து மீறி வருவதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ae074a5-fa78-401d-a251-ddaea3ef5fd3/26-6a83543f99570.webp' /></p><p>அமெரிக்கா சில வாரங்களுக்குள் ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஈரான் காலக்கெடு ஒன்றை நிர்ணயிக்க உள்ளதாகவும், இது அமெரிக்காவுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளுக்கான முன்நிபந்தனையாக இருக்கும் எனவும் அந்த ஈரானிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் இடையிலான வார்த்தைப் போர் கடந்த வாரத்தில் தீவிரமடைந்துள்ளது.
</p><p>
ஈரானிடம் எந்தவொரு வகையிலும் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதே அமெரிக்காவின் பிரதான இலக்கு என ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தொடர்பிலும் ட்ரம்ப் கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-17T18:34:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமன் மீது குண்டுவீசுவோம்: டொனால்ட் டிரம்ப் மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-threatens-to-bomb-us-ally-oman-1786986765"></link>
            <id>https://canadamirror.com/article/trump-threatens-to-bomb-us-ally-oman-1786986765</id>
            <summary type="text">ஈரானுடன் அமெரிக்க நிர்வாகம் மேற்கொண்டு வரும் அமைத்துப் பேச்சுவார்த்தைகளுக்குத் தடையாய் இருந்தால், அமெரிக்காவின் நட்பு நாடான ஓமன் மீதும் குண்டுவீசித் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் அமெரிக்க நிர்வாகம் மேற்கொண்டு வரும் அமைத்துப் பேச்சுவார்த்தைகளுக்குத் தடையாய் இருந்தால், அமெரிக்காவின் நட்பு நாடான ஓமன் மீதும் குண்டுவீசித் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p>
உலகப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான 'ஹோர்முஸ் நீரிணையை' மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளும் ஈரானுடன் தனித்தனியாகப் பேசி வருகின்றன. </p><p>
அமெரிக்க-ஈரான் போரால் கடந்த ஆறு மாதங்களாக இந்தப் கடல்வழிப் போக்குவரத்துப் பாதை பெரும்பாலான அளவில் முடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e628bc15-87ab-4800-9f22-a0474a0547d3/26-6a83410fc1d86.webp' /></p><p> </p><p>
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் ஓமன் குறுக்கே நின்றால், அவர்கள் மீது குண்டுவீசி அழித்துவிடுவோம் எனத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். </p><p>
ஓமனுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் கட்டத்தில் இருப்பதாக ஈரான் கூறிய சில மணி நேரங்களிலேயே டிரம்பின் இந்த மிரட்டல் வெளிவந்துள்ளது.</p><p>அதேவேளையில், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையுடன் நேரடித் தொடர்பு இருப்பதாக டிரம்ப் கூறியதை ஈரான் மறுத்துள்ளது. </p><p>
இதேவேளை, அமெரிக்க அதிகாரிகளுக்கும் IRGC-க்கும் இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை; டிரம்பின் கூற்று போரில் சந்தித்த தோல்விகளால் ஏற்பட்ட கற்பனையே" என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T17:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஓன்டாரியோ ஏரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-dead-after-being-swept-into-the-water-1786986318"></link>
            <id>https://canadamirror.com/article/woman-dead-after-being-swept-into-the-water-1786986318</id>
            <summary type="text">கனடாவின் மிசிசாகா நகரில் உள்ள ஓன்டாரியோ ஏரியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மிசிசாகா நகரில் உள்ள ஓன்டாரியோ ஏரியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>
சனிக்கிழமை இரவு சுமார் 10:30 மணியளவில் மிசிசாகா வீதிக்கு மேற்கே உள்ள 'ஜாக் டார்லிங் மெமோரியல் பார்க்' பூங்காவில் பெண் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக அவசர உதவி மையத்திற்குத் தகவல் கிடைத்தது. </p><p>
22 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்தப் பூங்காவில் சுற்றுலாப் பகுதிகள், விளையாட்டுக் களங்கள், நடைபாதைகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் இல்லாத கடற்கரைப்பகுதி போன்றவை அமைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/278a3b2b-b8a3-4e9e-adc0-69676f10db57/26-6a833f4fbd8f4.webp' /></p><p> </p><p>
தகவல் அறிந்தவுடன் மிசிசாகா தீயணைப்புப் படையினர் மற்றும் பீல் பிராந்தியக் காவல்துறையினர் இணைந்து தீவிரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 
சுமார் 45 நிமிடத் தேடுதலுக்குப் பிறகு, இரவு 11:15 மணியளவில் தீயணைப்பு வீரர்களால் அப்பெண் நீரிலிருந்து மீட்கப்பட்டார். </p><p>
ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. </p><p>
உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தைக் கண்டறியும் மற்றும் அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும் வரை அப்பெண் குறித்த கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது என்று காவல்துறையின் ஊடகப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T17:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் எரிபொருள் வரி விலக்கை நீட்டிக்கக் கன்சர்வேடிவ் கட்சி வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/conservatives-call-for-extension-of-temporary-1786985894"></link>
            <id>https://canadamirror.com/article/conservatives-call-for-extension-of-temporary-1786985894</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் எரிபொருட்களுக்கான மத்திய அரசின் எரிபொருள் வரி விலக்கை மேலும் 10 மாதங்களுக்கு நீட்டித்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கன்சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் எரிபொருட்களுக்கான மத்திய அரசின் எரிபொருள் வரி விலக்கை மேலும் 10 மாதங்களுக்கு நீட்டித்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லீவ்ரே அரசை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>ஈரானில் ஏற்பட்ட அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் கனடா அரசு எரிபொருள் வரியைத் தற்காலிகமாக நீக்கியது.</p><p> 
இந்நடவடிக்கை 'தொழிலாளர் தினம்' வரை அமலில் இருக்கும் என்றும், இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு சராசரியாக 10 சென்ட்களும், டீசல் விலை 4 சென்ட்களும் குறைந்ததாகவும் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d67329b3-bb9b-4424-814f-e848c6357a3e/26-6a833da7a2cfc.webp' /></p><p> </p><p>
வேன்கூவர் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பியர் பொய்லீவ்ரே, எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், அடுத்த மாதம் வரவிருக்கும் லிட்டருக்கு 10 சென்ட் விலை உயர்வைக் கனடா மக்களால் தாங்க முடியாது என்று கூறினார்.</p><p> 
"எரிபொருள் வரியைக் குறைப்பது பெட்ரோல் நிலையங்களில் விலையைக் குறைப்பதுடன், மளிகைப் பொருட்கள், வீடு கட்டும் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவைக் குறைத்து மக்களுக்கு மலிவான விலையில் கிடைக்க உதவும்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>எண்ணெய் விலையேற்றத்தின் காரணமாக கனடா அரசிற்கு சுமார் $6 பில்லியன் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாகக் கணித்துள்ள கன்சர்வேடிவ் கட்சி, அந்தப் பணத்தைப் பயன்படுத்தி இந்த வரி விலக்கு நிவாரணத்தைத் தொடர்ந்து வழங்கலாம் எனப் பரிந்துரைத்துள்ளது.</p><p>
பிரதமர் மார்க் கார்னிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த கலால் வரி விலக்கை குறைந்தபட்சம் 2027 ஜூலை 1 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் நிலைமையை மதிப்பாய்வு செய்யலாம் என்றும் பொய்லீவ்ரே கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T16:59:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பயிர்களைத் தாக்கும் பூஞ்சை நோய்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-farmers-fight-heavy-disease-threat-1786983990"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-farmers-fight-heavy-disease-threat-1786983990</id>
            <summary type="text">கனடாவில், தீவிரப் பயிர் நோய்களால் கேனோலா, டூரம் கோதுமை, வசந்தகாலக் கோதுமை மற்றும் பருப்பு வகைப் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 
இந்தத் தசாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், தீவிரப் பயிர் நோய்களால் கேனோலா, டூரம் கோதுமை, வசந்தகாலக் கோதுமை மற்றும் பருப்பு வகைப் பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p> 
இந்தத் தசாப்தத்தின் முதல் அதிக மழைப் பொழிவு கொண்ட ஆண்டாக இது அமைந்துள்ள நிலையில் நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது.
நோய்த் தாக்கத்திலிருந்து பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் பெரும் தொகையைச் செலவிட்டு பூஞ்சைக் கொல்லிகளை தெளித்து வருகின்றனர். </p><p>
வசந்த காலத்தின் இறுதியிலும் கோடையின் தொடக்கத்திலும் பெய்த அதிக மழையால் மண்ணில் ஈரப்பதம் அதிகரித்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff65eb7b-b991-4004-a35f-7c611dc33de2/26-6a8336385eada.webp' /></p><p>அதைத் தொடர்ந்து நிலவிய அதிக வெப்பம் மற்றும் புழுக்கமான வானிலை, பூஞ்சை நோய்கள் வேகமாகப் பரவுவதற்குச் சாதகமான சூழலை உருவாக்கியது. </p><p>
உரம் உள்ளிட்ட பொருட்களின் அதிக விலை காரணமாக நடப்பு ஆண்டில் விவசாயத்தில் போதிய லாபம் கிடைக்காது என எதிர்பார்க்கப்படும் நிலையிலும், பயிர்களைக் காப்பாற்ற பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். </p><p>
சாஸ்காட்செவன் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஏக்கருக்கு $6 முதல் $20 வரை கூடுதல் தொகையை பூஞ்சைக் கொல்லிகளுக்காகச் செலவிட்டுள்ளனர்.</p><p> 
அதிகளவில் கடன் வாங்கி பூஞ்சைக் கொல்லிகளைத் தெளித்துள்ள போதிலும், அறுவடை முழுமையாக நிறைவடைந்த பிறகே விளைச்சலின் தரம் மற்றும் அளவைச் துல்லியமாகக் கணிக்க முடியும் எனப் பயிர் ஆலோசகர்களும் விவசாயிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.
</p><p>கனடா உலக அளவில் கேனோலா, டூரம் கோதுமை மற்றும் உலர் பட்டாணி ஆகியவற்றின் முன்னணி ஏற்றுமதியாளராகத் திகழ்வதால், இந்நோய் தாக்கம் உலகளாவிய பயிர் ஏற்றுமதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T16:57:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குளத்துச் சேற்றில் சிக்கிய பெண்: தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ottawa-firefighters-rescue-woman-trapped-1786984658"></link>
            <id>https://canadamirror.com/article/ottawa-firefighters-rescue-woman-trapped-1786984658</id>
            <summary type="text">கனடாவின் ஒட்டாவா நகருக்கு அருகிலுள்ள கனாட்டா பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற 27 வயதுப் பெண் ஒருவர் குளத்துச் சேற்றில் சிக்கிய நிலையில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒட்டாவா நகருக்கு அருகிலுள்ள கனாட்டா பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற 27 வயதுப் பெண் ஒருவர் குளத்துச் சேற்றில் சிக்கிய நிலையில், தீயணைப்புப் படையினரால் மீட்புப் பணிய மேற்கொண்டு பாதுகாப்பாக மீட்கப்பட்டார். </p><p>
சவுத் மார்ச் ஹைலேண்ட்ஸ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள 'ரெபெக்கா குளத்தில்' 27 வயதுப் பெண் ஒருவர் சேற்றில் சிக்கியிருப்பதாக பிற்பகல் 3 மணியளவில் ஒட்டாவா தீயணைப்புத் துறைக்கு 911 அவசர அழைப்பு வந்தது. </p><p>
பிளாஸ்டிக் வடிகால் குழாய் மீது நின்று மீன்பிடித்துக் கொண்டிருந்த தனது மகள், நிலைதடுமாறி குளத்தில் விழுந்துவிட்டதாக அவளது தந்தை தீயணைப்புத் துறையினரிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01b11a8b-bb01-40a6-81a1-9bb85ac168c9/26-6a8338d431d5d.webp' /></p><p> </p><p>சேற்றில் இடுப்பளவு மூழ்கிய அந்தப் பெண், நகர முயன்ற ஒவ்வொரு முறையும் மேலும் ஆழமாகச் மூழ்கத் தொடங்கினார். </p><p>
அவசர அழைப்பு விடுத்த தந்தையின் கைபேசி ஜி.பி.எஸ் (GPS) தகவலைப் பயன்படுத்தி, தீயணைப்புப் படையினர் அப்பெண் இருக்கும் இடத்தை விரைவாகக் கண்டறிந்தனர்.</p><p> வனப்பகுதியின் நுழைவாயிலில் தந்தையைச் சந்தித்த வீரர்கள், அவரோடு சென்று அப்பெண் இருக்கும் இடத்தை அடைந்தனர். </p><p>
அப்பெண்ணின் இடது கால் இடுப்பு வரை சேற்றில் பலமாகச் சிக்கியிருந்ததை உறுதிசெய்த தீயணைப்பு வீரர்கள், 'பைக் போல்' என்ற கருவியைப் பயன்படுத்தி அவரைச் சீராகப் பிடித்துக்கொண்டு, காலைச் சுற்றியிருந்த சேற்றைக் கவனமாகத் தோண்டி எடுத்து அவரை வெளியே மீட்டனர். </p><p>
அவசர அழைப்பு வந்த 15 நிமிடங்களுக்குள் அந்தப் பெண் சேற்றிலிருந்து மீட்கப்பட்டார்.
மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்ததில் அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T16:56:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் 'லிஜியோனைர்ஸ்' சுவாச நோய் பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/health-officials-investigating-legionnaires-1786985404"></link>
            <id>https://canadamirror.com/article/health-officials-investigating-legionnaires-1786985404</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதிக்கு அருகில் &#039;லிஜியோனைர்ஸ்&#039; என்ற சுவாச நோய் பரவி வருவதாக டொராண்டோ பொதுச்சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
பாத்ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதிக்கு அருகில் 'லிஜியோனைர்ஸ்' என்ற சுவாச நோய் பரவி வருவதாக டொராண்டோ பொதுச்சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
</p><p>பாத்ஹர்ஸ்ட் மற்றும் டுபாண்ட் வீதிகளின் சந்திப்பில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் சுற்றளவில் இந்நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>
அப்பகுதியில் வசிக்கும், பணிபுரியும் அல்லது வந்து சென்ற 6 பேருக்கு இந்நோய் பாதிப்பு இருப்பது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bf240da-6946-4a3a-9ccb-da0a615c1ff3/26-6a833bbe8a311.webp' /></p><p> 
ஜூலை 2 முதல் ஜூலை 26 வரையிலான காலக்கட்டத்தில் இவர்களுக்கு இந்நோய்க்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
</p><p>மேலும், அருகில் உள்ள 'கேஸ்டில்வியூ விச்வுட் டவர்ஸ்' முதியோர் பராமரிப்பு இல்லத்தில் கண்டறியப்பட்ட 5 லிஜியோனைர்ஸ் நோய் பாதிப்புகளுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
</p><p>இந்நோய் 'லிஜியோனெல்லா' என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது நீர் ஆதாரங்கள், குளிர்விக்கும் கோபுரங்கள், வெந்நீர்த் தொட்டிகள், தெளிப்பான்கள் மற்றும் அலங்கார நீரூற்றுகள் போன்ற செயற்கை நீர் அமைப்புகளில் காணப்படுகிறது.</p><p>
பாக்டீரியா கலந்த நுண்ணிய நீர் துளிகளைச் சுவாசிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகப் பரவாது என்பதால், மக்களுக்குப் பெரிய அளவில் ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் தசை வலி போன்றவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.</p><p> முதியவர்கள், புகைபிடிப்பவர்கள் மற்றும் ஏற்கனவே உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்நோய் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
</p><p>நோய் பரவலுக்கான முதன்மைக் காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதுடன், கூடுதல் பாதிப்புகளை உடனடியாக அடையாளம் காண உள்ளூர் மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T16:54:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வரிக் கொள்கை மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-needs-tax-reform-relieving-small-business-1786956630"></link>
            <id>https://canadamirror.com/article/canada-needs-tax-reform-relieving-small-business-1786956630</id>
            <summary type="text">கனடாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் வரிக் கொள்கை சீர்திருத்தங்களை ஒட்டாவா அரசு &quot;படிப்படியாக&quot; அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் சிறு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் வரிக் கொள்கை சீர்திருத்தங்களை ஒட்டாவா அரசு "படிப்படியாக" அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் சிறு வணிகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பிரதமர் மார்க் கார்னியின் வரவுசெலவுத் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேய்ன் லாங் தெரிவித்துள்ளார். </p><p>
கனடாவின் சிக்கலான வரி அமைப்பை எளிமையாக்கி, மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என பல வரி நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
</p><p>தற்போதைய வரி முறையின் விதிமுறைகள் அடுக்கடுக்காக அதிகரித்து, வணிகங்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சுமையாக மாறியுள்ளதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c391352-f9e4-4f27-9727-ee44885b8810/26-6a82cb57ee108.webp' /></p><p> </p><p>
கனடாவின் சிக்கலான வரி விதிகளால் சில முக்கிய சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குவதாகவும், இந்தத் தடைகளைக் குறைத்து முதலீடுகளை ஈர்ப்பதே அரசின் நோக்கம் என்றும் வேய்ன் லாங் குறிப்பிட்டார்.</p><p>
பிரதமர் மார்க் கார்னியின் தலைமையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இரண்டாவது இலையுதிர் கால வரவுசெலவுத் திட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் "இரண்டாம் கட்ட நடவடிக்கையாக" இருக்கும். 
கனடாவில் பெரிய அளவிலான வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.</p><p> தற்போதைய அரசு சிறு மாற்றங்களை மட்டுமே செய்து வருவதாகவும், பொருளாதாரத்தை முடக்கும் பழைய வரி முறையை முழுமையாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கன்சர்வேடிவ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.</p><p>
சிறு வணிகர்களுக்கான வரி விதிப்பு நடைமுறைகளை எளிமையாக்கி, அறிக்கை சமர்ப்பிக்கும் சுமையைக் குறைப்பதே அரசின் முதன்மை இலக்காக உள்ளது. </p><p>
அரசின் இந்த முடிவை கனடிய சுதந்திர வணிக கூட்டமைப்பு வரவேற்றுள்ள அதே வேளையில், நிஜமான மாற்றம் வரவுசெலவுத் திட்டத்தில் பிரதிபலித்தால் மட்டுமே சிறு வணிகர்கள் பலனடைவர் என்று சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T16:10:13+00:00</updated>
        </entry>
    </feed>
