<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-11T05:23:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாட்டரியில் 20 ஆண்டுகளாக ஒரே இலக்கங்கள் ; அமெரிக்காவில் பெண்ணுக்கு அடித்த ஜாக்பொட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-wins-us-jackpot-with-same-numbers-1789097837"></link>
            <id>https://canadamirror.com/article/woman-wins-us-jackpot-with-same-numbers-1789097837</id>
            <summary type="text">அமெரிக்காவில் மேரிலாண்டின் ஒயிட் பிளைன்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 20 வருடங்களாக &#039;போனஸ் மேட்ச் 5&#039; என்ற லாட்டரி விளையாட்டில் தனக்கென சில கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் மேரிலாண்டின் ஒயிட் பிளைன்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 20 வருடங்களாக 'போனஸ் மேட்ச் 5' என்ற லாட்டரி விளையாட்டில் தனக்கென சில குறிப்பிட்ட எண்களைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து அதே எண்களையே பயன்படுத்தி வந்துள்ளார்.</p><p>

சமீபத்தில் அங்குள்ள உள்ளூர் மதுபானக் கடையில் அதே எண்களைப் பயன்படுத்தி, ஒரே குலுக்கலுக்காக மூன்று வெவ்வேறு டிக்கெட்டுகளை அவர் வாங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ed6d1f-9bbb-4767-93f6-8dadb8030b8e/26-6aa3776f21654.webp' /></p><p>


</p><p>&nbsp;குலுக்கல் முடிவுகள் வெளியானபோது, அந்தப் பெண் தேர்ந்தெடுத்த எண்கள் அப்படியே பொருந்திப் பரிசு விழுந்திருந்தது. ஆனால், தனுக்குத்தான் பரிசு விழுந்துள்ளதா என்பதை அவரால் உடனடியாக நம்ப முடியவில்லை.</p><p>

இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு லாட்டரி எண்களைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.


உடனே லாட்டரி விளையாடும் பழக்கமுள்ள என் சகோதரியை அழைத்து, எண்களைச் சரியாகப் படிக்குமாறு கூறினேன்" என்றார்.
</p><p>
அவரது சகோதரி சரிபார்த்துவிட்டு, அவர் வாங்கிய மூன்று டிக்கெட்டுகளுக்குமே தலா ரூ. 45 லட்சத்திற்கும் மேல் மொத்தம் ரூ.1.30 கோடி ஜாக்பாட் அடித்துள்ளதை உறுதிப்படுத்தினார்.</p>]]></content>
            <updated>2026-09-11T05:14:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பேருந்து விபத்து; பலர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tourist-bus-accident-in-switzerland-many-dead-1789103854"></link>
            <id>https://canadamirror.com/article/tourist-bus-accident-in-switzerland-many-dead-1789103854</id>
            <summary type="text">&amp;nbsp; சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மலைக்கிராமத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மலைக்கிராமத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>

இந்தப் பேருந்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ததாக டச்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டச்சு சுற்றுலா நிறுவனமான OAD ஏற்பாடு செய்த பயணத்தில் அவர்கள் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2578c44-41dc-4718-a23e-13e1441df77e/26-6aa38eefe5070.webp' /></p><h2>&nbsp;நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்</h2><p>

பேருந்தில் மொத்தம் 48 பேர் இருந்ததாக ‘De Telegraaf’ செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்த எண்ணிக்கையை சுவிஸ் காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
</p><p>
சுஷ் மற்றும் அருகிலுள்ள ஜெர்னெஸ் கிராமத்திற்கு இடையேயான சாலையில், உள்ளூர் நேரப்படி மாலை 4.45 மணியளவில் பேருந்து தடுப்பு வேலியில் மோதியதாக சுவிஸ் ஒளிபரப்பு நிறுவனமான SRF தெரிவித்துள்ளது.

விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் பல ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் SRF தெரிவித்துள்ளது.</p><p>
 
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கிராபுண்டனில் இன்று ஒரு டச்சுப் பேருந்துக்கு ஏற்பட்ட துயரமான விபத்தால் நான் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன்.</p><p> 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

விபத்துக்கான காரணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சூழ்நிலைகளையும் கண்டறிய சுவிஸ் அதிகாரிகள் விரிவான விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T05:14:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோ ஏரியின் பெயரை மாற்ற மறுப்பு!: பிரபல நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mapquest-posts-billboard-in-chicago-1789099316"></link>
            <id>https://canadamirror.com/article/mapquest-posts-billboard-in-chicago-1789099316</id>
            <summary type="text">&#039;ஒன்டாரியோ ஏரி&#039; என்ற பெயரைத் தனது இணைய வரைபடத்தில் தொடர்ந்து வைத்திருக்கப்போவதாக &#039;மேப்க்வெஸ்ட்&#039; நிறுவனம் உறுதியளித்துள்ளது.
தனது முடிவை மீண்டும் வலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>'ஒன்டாரியோ ஏரி' என்ற பெயரைத் தனது இணைய வரைபடத்தில் தொடர்ந்து வைத்திருக்கப்போவதாக 'மேப்க்வெஸ்ட்' நிறுவனம் உறுதியளித்துள்ளது.
</p><hr><p>தனது முடிவை மீண்டும் வலியுறுத்தும் வகையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 6 அடி உயரப் பிரம்மாண்ட விளம்பரப் பலகை ஒன்றை அந்நிறுவனம் நிறுவியுள்ளது.
</p><hr><p>சிகாகோவின் ஸ்டேட் மற்றும் ஹப்பார்ட் தெருக்களின் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகையில், அங்கிருந்து ஒன்டாரியோ ஏரிக்குச் செல்வதற்கான வழிமுறைகளுடன், "இது இன்னமும் ஒன்டாரியோ ஏரிதான். நாங்களும் இன்னமும் இங்கேயே இருக்கிறோம்" என்ற பிரச்சார வாசகம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8a2864a-308a-471f-a03a-14ed2ce63db1/26-6aa37d3589a4a.webp' /></p><hr><p>
கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஒன்டாரியோ ஏரியின் பெயரை 'அமெரிக்கா ஏரி' என பெயர் மாற்றம் செய்வதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.</p><hr><p> 
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே மேப்க்வெஸ்ட் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.</p><p></p><p>இது குறித்துப் பேசிய பிரதமர் மார்க் கார்னி, ஒன்டாரியோ ஏரி என்பது அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனத்தை விடவும் மிகவும் பழைமையானது என்றும், "யதார்த்தத்தை அதன் பெயரால் அழைப்பது என்பது அதை ஒன்டாரியோ ஏரி என்று அழைப்பதே ஆகும்" என்றும் குறிப்பிட்டார்.</p><hr><p>
ஒன்டாரியோ ஏரியின் பெயரை மாற்ற மறுத்ததைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் மேப்க்வெஸ்ட் வரைபடச் செயலியின் பயன்பாடும் பிரபலமும் மீண்டும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T05:00:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த கனடிய பூனைகளின் நெகிழ்ச்சிக் கதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/outdoor-loving-northern-ontario-cats-take-1789102216"></link>
            <id>https://canadamirror.com/article/outdoor-loving-northern-ontario-cats-take-1789102216</id>
            <summary type="text">கனடாவின் டெமிஸ்காமிங் பகுதியைச் சேர்ந்த ஹெய்டி கோர்டே என்பவரால் வளர்க்கப்படும் &#039;பிளாடி&#039; மற்றும் &#039;ஃபிட்ஸ்&#039; ஆகிய இரு பூனைகளும், வீடுகளுக்குள் அடைந்துகிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டெமிஸ்காமிங் பகுதியைச் சேர்ந்த ஹெய்டி கோர்டே என்பவரால் வளர்க்கப்படும் 'பிளாடி' மற்றும் 'ஃபிட்ஸ்' ஆகிய இரு பூனைகளும், வீடுகளுக்குள் அடைந்துகிடைக்கும் வழக்கமான வாழ்க்கையைத் துறந்து, காயாக்கிங் படகுச் சாகசம், மலைப் பாதைகளில் நடைப்பயணம் என வெளிக்களச் சாகசங்களில் ஈடுபட்டு 10 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களின் இதயங்களை வென்றுள்ளன.
</p><p>சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பாடகியாக வேண்டும் என்ற தனது கனவை ஒத்திவைத்துவிட்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையைக் கவனித்துக் கொள்வதற்காக ஹெய்டி தனது சொந்த ஊருக்குத் திரும்பினார்.</p><p> 
அப்போது ஒரு துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக, உள்ளூர் விலங்குகள் காப்பகத்திலிருந்து 'ஃபிட்ஸ்' என்ற 8 வாரக் குட்டிப் பூனையைத் தத்தெடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0cca6c6-6562-4f6d-8cb1-eb5926a0703a/26-6aa38889d499c.webp' /></p><p>
தந்தையின் நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும்போது, குளிர்காற்றில் பூனையின் காதுகள் உறைந்துவிடக் கூடாது என்பதற்காக ஃபிட்ஸைச் சிறிய பையினுள் வைத்து எடுத்துச் சென்றார். 3 மாதங்களுக்குள், அந்தப் பூனை நாயுடன் தானாகவே பக்கவாட்டில் நடக்கத் தொடங்கியது.
</p><p>இதன்பின்னர், யாராலும் தத்தெடுக்க முடியாது என ஒதுக்கப்பட்ட 'பிளாடி' என்ற மற்றொரு மீட்புப் பூனையையும் ஹெய்டி தத்தெடுத்தார்.</p><p> 
வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு மீட்புக் காப்பகத்திற்குக் கொண்டுவரப்பட்ட பிளாடி, அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கும் அளவுக்குக் கடுமையான கோபமும் முரட்டுத்தனமும் கொண்டிருந்தது. </p><p>
ஆனால், சரியான பராமரிப்பும் அன்பும் கிடைத்தால் அது மாறும் என்ற நம்பிக்கையில் ஹெய்டி அதைத் தனது பராமரிப்பில் ஏற்றுக்கொண்டார்.
</p><p>தற்போது இந்த இரு பூனைகளுக்கும் பிரத்யேக மழைக் கோட்டுகள் மற்றும் இத்தாலிய வடிவமைப்பாளர் ஒருவரால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் "பூனைகளுக்கான பனி உடை" ஆகியவை உள்ளன.
</p><p>இவற்றின் சாகச வீடியோக்கள் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளித்து வருகின்றன. </p><p>கடந்த மே மாதம் ஹெய்டியின் தாயாருக்குத் தோள்பட்டை முறிவு ஏற்பட்டபோது, உலகெங்கிலும் உள்ள முன்பின் தெரியாத ரசிகர்கள் கையால் பின்னப்பட்ட கையுறைகள், சாக்லேட்டுகள் மற்றும் வாழ்த்து அட்டைகளை அனுப்பி ஆதரவு தெரிவித்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T04:51:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுத் துறை இணை அமைச்சராக விஜய் தணிகாசலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/vijay-thanikasalam-appointed-deputy-ai-minister-1789101443"></link>
            <id>https://canadamirror.com/article/vijay-thanikasalam-appointed-deputy-ai-minister-1789101443</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டுத் துறைக்கான இணை அமைச்சராக ஸ்கார்பரோ–ரூஜ் பார்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டுத் துறைக்கான இணை அமைச்சராக ஸ்கார்பரோ–ரூஜ் பார்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>

தமது நியமனம் தொடர்பாக வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், இந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டமை தமக்கு மிகுந்த பணிவையும் பெருமையையும் அளிப்பதாக விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa43eee4-fa89-4aa8-b336-51b6cdd9513c/26-6aa385846be7a.webp' /></p><p>அத்துடன், ஒன்ராறியோ அரசாங்கத்தில் தொடர்ந்து பணியாற்றுவதற்கான நம்பிக்கையை வழங்கிய பிரதமர் டக் ஃபோர்டுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.</p><p>
புதிய பொறுப்பில், பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வர்த்தக அமைச்சராக உள்ள விக்டர் ஃபெடெலியுடன் இணைந்து பிரதமர் டக் ஃபோர்டின் தலைமையில் பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5e5c198-ce7f-408f-a6ef-349a16a1cd51/26-6aa385f7394e5.webp' /></p><p>
</p><p>
“ஒன்ராறியோ செயற்கை நுண்ணறிவின் பிறப்பிடமாகும்” எனக் குறிப்பிட்ட விஜய் தணிகாசலம், செயற்கை நுண்ணறிவுத் துறையில் மாகாணத்திற்குள் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளிலிருந்து ஒன்ராறியோவைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்துடன் இணைந்து, மாகாணத்திற்குள் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பொருளாதார வாய்ப்புகளை மேலும் வளர்ப்பதே தமது நோக்கங்களில் ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

“ஒன்ராறியோவை கனடாவின் செயற்கை நுண்ணறிவு தலைநகராக உருவாக்குவோம்” என விஜய் தணிகாசலம் தனது பதிவில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
</p><p>
விஜய் தணிகாசலம் தற்போது ஸ்கார்பரோ–ரூஜ் பார்க் ( Scarborough–Rouge Park) தொகுதியின் மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும், ஒன்ராறியோவின் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுத் துறைக்கான இணை அமைச்சராகவும் செயற்படவுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T04:37:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனமழையால் கடும் பாதிப்பில் கனடிய விவசாயிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/how-torrential-rain-is-pushing-this-years-harvest-1789098851"></link>
            <id>https://canadamirror.com/article/how-torrential-rain-is-pushing-this-years-harvest-1789098851</id>
            <summary type="text">கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் பருவகாலத்தின் இறுதிக்கட்டத்தில் பெய்து வரும் கனமழை, ஏற்கனவே பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் விவசாயிகளை மேலும் கடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் பருவகாலத்தின் இறுதிக்கட்டத்தில் பெய்து வரும் கனமழை, ஏற்கனவே பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் விவசாயிகளை மேலும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.</p><p> 
நிலங்களில் அதிகளவில் ஈரம் தேங்கியுள்ளதால் மாகாணத்தின் பல பகுதிகளில் அறுவடைப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>அரசாங்கம் வெளியிட்டுள்ள அண்மைய பயிர் அறிக்கையின்படி, சஸ்காட்செவனில் இதுவரை 27 சதவீதம் பயிர்கள் மட்டுமே அறுவடை செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c5cf2f8-94d0-4773-aa17-dbc807d70017/26-6aa37b654ead2.webp' /></p><p> 
வழக்கமாக இக்காலக்கட்டத்தில் சராசரியாக 58 சதவீதம் அறுவடை முடிந்திருக்கும் நிலையில், தற்போதைய நிலைமை மிக மோசமாகப் பின்தங்கியுள்ளது.</p><p>
இவ்வாண்டின் தொடக்கத்தில் தாமதமான பனிப்பொழிவு மற்றும் வசந்த கால வெள்ளப்பெருக்கு காரணமாக விதைப்பதே தாமதமானது. </p><p>தற்போது பெய்யும் மழை அறுவடையை மேலும் நீடிக்கச் செய்துள்ளது என சஸ்காட்செவன் விவசாய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பில் பிரிபில்ஸ்கி தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும், இந்த மழைக்கால தாமதம் காலத்தை விரயமாக்குவதுடன், கோதுமை மற்றும் பருப்பு வகைகளின் தரத்தைக் குறைத்து, விளைச்சலையும் லாபத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
ஒருபுறம் மழைக்கால பாதிப்புகள் நிலவ, மறுபுறம் சுங்கவரிகள் மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மை காரணமாக எரிபொருள், உரம், விவசாய இயந்திரங்கள் மற்றும் பழுதுபார்ப்புச் செலவுகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T04:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadians-under-federal-disability-program-1789098291"></link>
            <id>https://canadamirror.com/article/canadians-under-federal-disability-program-1789098291</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா மாற்றுத்திறனாளிகளுக்கான நலத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளி வரிச் சலுகை பெறும்போது ஏற்படும் மருத்துவச் சான்றிதழ் கட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா மாற்றுத்திறனாளிகளுக்கான நலத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளி வரிச் சலுகை பெறும்போது ஏற்படும் மருத்துவச் சான்றிதழ் கட்டணங்களை ஈடுசெய்யும் வகையில், 150 கனடிய டாலர் ஒருமுறை நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>வரும் செப்டம்பர் 17 முதல் இந்த நிதியுதவித் தொகை பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக மத்திய அரச அறிவித்துள்ளது. </p><p>
அனைவருக்கும் தேவையான உதவிகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்யவும், எவரும் கைவிடப்படாத ஒரு கனடாவை உருவாக்கவும் தடைகளை நீக்கி வருகிறோம் என வேலைவாய்ப்பு மற்றும் குடும்பங்கள் நலத்துறை அமைச்சர் பட்டி ஹஜ்டு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec924da3-13a7-43c3-9506-46452ba9eec5/26-6aa37934f4120.webp' /></p><p>
</p><p>இந்த 150 டொலர் நிதியுதவியைப் பெறப் பயனாளிகள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தகுதி நிலைக்கு ஏற்ப நேரடியாகவே வழங்கப்படும்.</p><p> 
ஜூலை 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலக்கட்டத்தில் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள் வரும் செப்டம்பர் 17 அன்று இத்தொகையைப் பெறுவார்கள்.</p><p> 
ஜூலை 2027-க்குப் பிறகு தகுதிபெறுபவர்கள் மற்றும் புதிய சான்றிதழ் ஒப்புதல் பெற்றவர்களுக்கு 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இத்தொகை வழங்கப்படும்.</p><p> 
இத்திட்டத்தின் கீழ் முழுத் தொகையையும் ஒரே தவணையில் பெற்றவர்கள், கடந்த காலத்தில் பயனடைந்தவர்கள் மற்றும் தற்போது இத்திட்டத்திற்குத் தகுதி பெறாத நிலைக்கு மாறியவர்களுக்கும் கூட இந்த 150 கூடுதல் உதவித்தொகை வழங்கப்படும்.</p><p> 
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் நிதி ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. </p><p>
எனினும், நிதி வழங்குவதில் தாமதம் மற்றும் சிக்கலான விண்ணப்ப நடைமுறைகள் காரணமாகப் பயனாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T03:54:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா – சீனா வர்த்தக உறவில் புதிய முன்னேற்றம் ; வரிக் குறைப்புக்கு பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-development-in-us-china-trade-relations-1789073989"></link>
            <id>https://canadamirror.com/article/new-development-in-us-china-trade-relations-1789073989</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் சீனா இடையே இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பில் இரு நாடுகளும் விரைவில் உடன்பாட்டை எட்டக்கூடும் என சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் சீனா இடையே இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பில் இரு நாடுகளும் விரைவில் உடன்பாட்டை எட்டக்கூடும் என சீனா தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பாக இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக சீன தரப்பு தெரிவித்துள்ளது.</p><p>

இரு நாட்டு தலைவர்களும் விரைவில் சந்திக்கவுள்ள நிலையில், வரிக் குறைப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a08221a3-489b-4627-a037-b4344d398c7b/26-6aa31a47f2811.webp' /></p><p>சீன செய்தித் தொடர்பாளர் ஹுவாங் லிங், செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், சுமார் 30 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளைக் குறைப்பது தொடர்பில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான இந்த ஆண்டின் மூன்றாவது சந்திப்பு செப்டம்பர் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையில், இந்த சந்திப்பை முன்னிட்டு வரிக் குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கு முன்னர் மே மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற இரு தலைவர்களின் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நிர்வாகத்தை மேம்படுத்த வர்த்தக வாரியம் மற்றும் முதலீட்டு வாரியம் அமைப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டிருந்தது.</p><p>

சீனப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவும் பதிலடியாக அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a7893e5-501f-4611-9ffd-87b323520e70/26-6aa31a4747470.webp' /></p><p>இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமான வர்த்தகப் போர் உருவானது.

இந்த நிலையில், பதற்றத்தைத் தணித்து வர்த்தக உறவுகளை சீரமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளில் வரி குறைப்பு முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது.</p><p>இரு நாடுகளிலும் அதிக வரி விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பொருட்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கான வரிகளை குறைப்பதே பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, அமெரிக்கா மற்றும் சீனா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள தற்போதைய தற்காலிக வர்த்தக சமாதான ஒப்பந்தம் நவம்பர் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
</p><p>
இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே விரிவான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும், அதற்கு பதிலாக குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும் வரிக் குறைப்புகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் பார்க்லேஸ் வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-11T00:42:23+00:00</updated>
        </entry>
    </feed>
