<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-02T06:19:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[200 நாள் கடல் வாழ்க்கைக்கு முடிவு; ; ஓய்வெடுக்க தாய்லாந்து செல்லும் 5000 அமெரிக்க வீரர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/uss-abraham-lincoln-5-000-troops-rest-in-thailand-1788328381"></link>
            <id>https://canadamirror.com/article/uss-abraham-lincoln-5-000-troops-rest-in-thailand-1788328381</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலில் பட்டாயா அருகே உள்ள Laem Chabang துறைமுகத்தை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p> 
வீரர்களுக்கு ஓய்வு மற்றும் புத்துணர்வு அளிக்கும் வகையில் கரையோர பகுதிகளில் நேரம் செலவிட அனுமதி வழங்கப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38fd0127-c144-418b-b476-03e53012010b/26-6a97b9bee0c34.webp' /></p><h2>சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கக்கூடும்&nbsp;&nbsp;</h2><p> இதனால் பட்டாயாவில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள், கடைகள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கு குறுகிய காலத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>ஒவ்வொரு அமெரிக்க வீரரும் தினமும் சுமார் 1,000 முதல் 3,000 தாய் பாட் வரை செலவு செய்யக்கூடும் என பட்டாயா மேயர் தெரிவித்துள்ளார்.
</p><p> 
அதே நேரத்தில், வீரர்களின் வருகையால் சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் போலீசாரிடம் உள்ளது. </p><p>இதையடுத்து கடற்கரை மற்றும் முக்கிய இரவு நேர பொழுதுபோக்கு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 40 முதல் 50 பேர் பாலியல் தொழில் தொடர்பான சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
 
வியட்நாம் போர் காலத்திலிருந்தே அமெரிக்க ராணுவ வீரர்களின் ஓய்வு சுற்றுலாவுடன் பட்டாயாவுக்கு நீண்ட தொடர்பு உள்ளது. 

தற்போது 200 நாட்களுக்கும் மேலாக கடலில் இருந்த USS Abraham Lincoln வீரர்களின் வருகை, நகரின் சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தற்காலிக ஊக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-02T06:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் லாரியுடன் பீர் திருட்டு.. கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/beer-stolen-with-a-truck-in-us-reward-offered-1788329066"></link>
            <id>https://canadamirror.com/article/beer-stolen-with-a-truck-in-us-reward-offered-1788329066</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பீர் தயாரிப்பு நிறுவனமான Pabst Brewing Company-க்கு சொந்தமான சுமார் 40,000 பவுண்ட் எடையுள்ள பீர், கலிபோர்னியாவில் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பீர் தயாரிப்பு நிறுவனமான Pabst Brewing Company-க்கு சொந்தமான சுமார் 40,000 பவுண்ட் எடையுள்ள பீர், கலிபோர்னியாவில் உள்ள விநியோக மையத்தில் இருந்து திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>&nbsp;ஆயிரக்கணக்கான Pabst Blue Ribbon பீர் கேன்கள் இருந்ததாக கூறப்படுகிறது.'

ஆகஸ்ட் 17ஆம் தேதி, திருடன் போலி ஆவணங்களை பயன்படுத்தி Montclair பகுதியில் உள்ள Anheuser-Busch விநியோக மையத்திலிருந்து சரக்கை எடுத்து சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64cc1d6a-be27-48d1-89fc-04acecc69d21/26-6a97bc6bcb5b8.webp' /></p><h2>சுமார் 25,000 அமெரிக்க டாலர் மதிப்புடையது</h2><p> </p><p>சான் டியாகோவுக்கு செல்ல வேண்டியிருந்த இந்த சரக்கு, சுமார் 25,000 அமெரிக்க டாலர் மதிப்புடையது என கூறப்படுகிறது.
 
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், Pabst நிறுவனம் சமூக வலைதளங்களில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. </p><p>

“40,000 பவுண்ட் பீர் திருடப்பட்டுள்ளது” என பதிவிட்டு, திருடப்பட்ட சரக்கை திருப்பிக் கொடுக்குமாறும் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், தகவல் கொடுத்து வழக்கை தீர்க்க உதவுபவர்களுக்கு பரிசும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
</p><p> 
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, 40,000 பவுண்ட் பீர் இருக்கும் லாரியை திருடியவர்கள், குடித்த பிறகு அந்த லாரியை எங்கே நிறுத்தினார்கள் என்பதையே மறந்துவிடுவார்கள் என&nbsp; இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-02T06:01:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் ; பதிலடியில் வளைகுடா நாடுகள் அதிர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-attacks-iran-again-gulf-countries-react-shock-1788325688"></link>
            <id>https://canadamirror.com/article/us-attacks-iran-again-gulf-countries-react-shock-1788325688</id>
            <summary type="text">ஈரான் மீது அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் வணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது. </p><p>ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே, தெற்கு ஈரானின் சிரிக் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலின் சிதைவுகள் விழுந்ததில் சிறு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஈரானிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df679668-587d-4277-869a-079867815402/26-6a97af39c736f.webp' /></p><p>
</p><p>
இதற்கு பதிலடியாக ஈரான், ஈராக் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும், குவைத் மற்றும் பஹ்ரைன் பகுதிகளிலும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஜோர்டான் 13 ஏவுகணைகளை இடைமறித்ததாகவும், தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், புதன்கிழமை அதிகாலையில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிராக குவைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயல்படுத்தியதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரான் பதிலடி கொடுத்தால் மேலும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. </p><p>இதனால் ஹார்முஸ் நீரிணை மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்த சர்வதேச கவலை அதிகரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T05:08:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் இந்திய குடும்பங்களுக்கு புதிய நெருக்கடி ; H-4 பணி அனுமதி ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crisis-indian-families-america-h-4-work-cancelled-1788325015"></link>
            <id>https://canadamirror.com/article/crisis-indian-families-america-h-4-work-cancelled-1788325015</id>
            <summary type="text">அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் துணைகளுக்கு வழங்கப்பட்டு வரும் எச்-4 (H-4) பணி அனுமதியை ரத்து செய்வதற்கான முன்மொழிவு, அந்நாட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் துணைகளுக்கு வழங்கப்பட்டு வரும் எச்-4 (H-4) பணி அனுமதியை ரத்து செய்வதற்கான முன்மொழிவு, அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) 2026ஆம் ஆண்டுக்கான நீண்டகால ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், எச்-1பி விசாதாரர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக பணியாற்றுவதற்கு வழங்கப்படும் வேலை அனுமதி பாதிக்கப்படலாம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4fe5816-df0d-4cb7-aefb-609a5fab224d/26-6a97ac989ef7b.webp' /></p><p>2015ஆம் ஆண்டு ஒபாமா நிர்வாகத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட விதியை மாற்றியமைக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக நீண்டகாலமாக காத்திருக்கும் எச்-1பி விசாதாரர்களின் குடும்பங்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

எச்-4 பணி அனுமதிகளில் பெரும்பகுதி இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டம் இந்தியக் குடும்பங்கள் மத்தியில் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> வேலை செய்து வரும் துணைகளின் வருமானம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில், பணி அனுமதி ரத்து செய்யப்பட்டால் அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப வருமானம் பாதிக்கப்படக்கூடும்.
</p><p>
இதேவேளை, தற்போது செல்லுபடியாகும் எச்-4 பணி அனுமதிகள் உடனடியாக ரத்து செய்யப்படவில்லை. இந்த நடவடிக்கை தற்போது ‘Long-Term Action’ எனும் நீண்டகால நடவடிக்கையாக மட்டுமே ஒழுங்குமுறைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baa117e1-6b1e-4018-b63c-ef44907897e6/26-6a97ad0a698b7.webp' /></p><p>அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முதலில் முறையான முன்மொழிவு விதியை வெளியிட வேண்டும். </p><p>அதன் பின்னர் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டு, சட்ட மற்றும் நிர்வாக ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் பின்னரே இறுதி விதி அமுலுக்கு வர முடியும். </p><p>எனவே, தற்போதைய எச்-4 பணி அனுமதிதாரர்கள் உடனடியாக வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கருத முடியாது.

இதனிடையே, அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த முன்மொழிவு பார்க்கப்படுகிறது.</p><p> எச்-1பி விசா தொடர்பான பிற கட்டுப்பாடுகளும் அதிகரித்து வரும் நிலையில், எச்-4 விசாதாரர்களுக்கான பணி அனுமதி விவகாரம் இந்தியக் குடும்பங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T04:57:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நாய்களைக் கட்டுப்பாடின்றி உலாவ விட்ட நபர் விதிக்கப்பட்ட தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-man-ordered-to-pay-a-woman-1788314747"></link>
            <id>https://canadamirror.com/article/bc-man-ordered-to-pay-a-woman-1788314747</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், தனது நாய்களை சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்று பெண் ஒருவரைக் கடிக்கக் காரணமான உரிமையாளருக்கு, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், தனது நாய்களை சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்று பெண் ஒருவரைக் கடிக்கக் காரணமான உரிமையாளருக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1,139 டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு சிவில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. </p><p>
கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யூசிஃப் தக்லா என்பவர் தனது இரு நாய்களையும் சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்றபோது, வீட்டின் கேட் அருகே நின்றிருந்த வெய்ஷென் வாங் என்ற பெண்ணை அந்த நாய்கள் தாக்கி கடித்தன.</p><p> 
இச்சம்பவத்தினால் காயமடைந்த பெண், ஆம்புலன்ஸ் சேவைக்கட்டணம், வருமான இழப்பு, வடு நீக்கும் சிகிச்சை மற்றும் மன உளைச்சல் என்பவற்றுக்காக மொத்தம் 3,148 டொலர்கள் இழப்பீடு கோரி தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d5bd2c4-2aff-4f11-b406-0275283e04e0/26-6a97847d45d05.webp' /></p><p> </p><p>
நாய்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறிய உரிமையாளரின் அலட்சியமே இச்சம்பவத்திற்குக் காரணம் எனத் தீர்ப்பாய உறுப்பினர் ஜெப்ரி ட்ரோஸ்டியாக் டிக்காட்டினார். </p><p>
பாதிக்கப்பட்ட பெண் கோரிய சில தொகைகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், ஆம்புலன்ஸ் சேவைக்காக 848 டொலர்கள் மற்றும் மன உளைச்சலுக்காக 150 டொலர்கள் உட்பட, தீர்ப்பாயக் கட்டணங்களுடன் சேர்த்து மொத்தம் 1,139 டொலர்களை வழங்குமாறு நாய் உரிமையாளருக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T04:22:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம் ; உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/middle-east-tensions-crude-oil-prices-rise-again-1788318858"></link>
            <id>https://canadamirror.com/article/middle-east-tensions-crude-oil-prices-rise-again-1788318858</id>
            <summary type="text">2026 ஜூன் 8 ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக பிரென்ட் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றுக்கு 96 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.இன்று காலை நிலவரப்படி பிரென்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஜூன் 8 ஆம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக பிரென்ட் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றுக்கு 96 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.</p><p>இன்று காலை நிலவரப்படி பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 2.19% உயர்ந்து, பெரல் ஒன்றுக்கு $ 96.13 டொலரை எட்டியுள்ளது. </p><p>

இது முந்தைய விலை விட 1.96% அதிகமாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a774c17d-b6ad-4237-9f68-ba0131a8dba8/26-6a97948bb5b5c.webp' /></p><p>மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்றம், ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் விநியோகம் குறைதல் ஆகியவற்றின் காரணமாக, நடப்பு ஆண்டின் நான்காவது காலாண்டில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பெரல் ஒன்றுக்கு 120 டொலரைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 

அதேவேளை, உக்ரைன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் நிலவும் மோதல்கள், உலகளாவிய பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் சந்தையில் பேரழிவு அபாயத்தை அதிகரித்து வருவதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-02T03:14:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும் ; ஈரான் உச்சத் தலைவரின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-leader-us-will-be-taught-unforgettable-lesson-1788310819"></link>
            <id>https://canadamirror.com/article/iran-leader-us-will-be-taught-unforgettable-lesson-1788310819</id>
            <summary type="text">அமெரிக்க எதிரிக்கு ஈரான் மறக்க முடியாத பாடங்களைக் கற்பிக்கும் என ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார். தமது எக்ஸ் (x) த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க எதிரிக்கு ஈரான் மறக்க முடியாத பாடங்களைக் கற்பிக்கும் என ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார்.</p><p> தமது எக்ஸ் (x) தளத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6924a39-27ad-4627-8647-343b138b12b2/26-6a97752448ac5.webp' /></p><p>
</p><p>
அத்துடன்,அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு கடுமையான மற்றும் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளை மற்றும் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>

இந்தநிலையில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>

அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள தளங்கள் மற்றும் ரேடார் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>

ஜோர்டான் வான்வெளிக்குள் நுழைந்த 13 பெலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளை ஜோர்டான் நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன.
</p><p>எனினும், ஜோர்டானில் உள்ள கேம்ப் டிடின் அமெரிக்க முகாம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் புரட்சிக்கர காவல்படை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T01:00:30+00:00</updated>
        </entry>
    </feed>
