<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-19T14:23:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/10-killed-in-russian-missile-attack-in-ukraine-1787146147"></link>
            <id>https://canadamirror.com/article/10-killed-in-russian-missile-attack-in-ukraine-1787146147</id>
            <summary type="text">&amp;nbsp; வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள பெசெனீஹி கிராமத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள பெசெனீஹி கிராமத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

அத்துடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். </p><p>தாக்குதலில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96915569-a7bb-4b66-91d9-63ae2d9abb04/26-6a85afa4c81be.webp' /></p><p>
</p><p>


சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலென்ஸ்கி, பொதுமக்கள் மீது ரஷ்ய படைகள் கொடூர தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், பெசெனீஹி மீதான தாக்குதலுக்கு தகுந்த பதிலடி வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
</p><p>


இதற்கிடையில், மாஸ்கோ உள்ளிட்ட ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளை இலக்குவைத்து உக்ரைன் சுமார் 800 ட்ரோன்களை ஏவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> அவற்றில் 791 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



மாஸ்கோவை நோக்கி மட்டும் 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் 180 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மாஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T13:27:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளவரசி டயானா தொடர்பில் புதிய புத்தகம்; வெளிவரவுள்ள உண்மைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-new-book-princess-diana-swan-song-my-sister-1787140674"></link>
            <id>https://canadamirror.com/article/a-new-book-princess-diana-swan-song-my-sister-1787140674</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானாவின் சகோதரரான சார்லஸ் ஸ்பென்சர், தனது சகோதரி டயானாவை பற்றிய உண்மைகளை உலகிற்கு சொல்லும் வகையில் புதிய புத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானாவின் சகோதரரான சார்லஸ் ஸ்பென்சர், தனது சகோதரி டயானாவை பற்றிய உண்மைகளை உலகிற்கு சொல்லும் வகையில் புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளதாக அறிவித்துள்ளார். </p><p>
 
டயானாவின் மறைவு நெருங்கி வரும் நிலையில், அவரது நினைவாக Swan Song: Diana, My Sister என்ற புத்தகம் வரும் செப்டம்பர் 22-ம் தேதி பிரிட்டன் மற்றும் பல நாடுகளில் வெளியிடப்பட உள்ளது. இது 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/893351c1-0bcc-4b7b-a7ef-5f0513fc2c78/26-6a859a4377171.webp' /></p><h2>பல பொய்களை தகர்த்து, உண்மையை வெளிப்படுத்தும் நோக்கம்</h2><p> 
டயானா குறித்து காலப்போக்கில் பரவிய பல பொய்களை தகர்த்து, உண்மையை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு இந்த புத்தகத்தை எழுதியுள்ளதாக சார்லஸ் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார். </p><p>

1997-ல் பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா காலமான பிறகு, அவரது இறுதிச்சடங்கில் உருக்கமான உரையாற்றிய அவர், டயானாவின் மகன்களான வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோருடன் இன்றும் நெருக்கமான உறவை பேணி வருகிறார்.</p><p>
 
தற்போதைய ராஜ குடும்பத்தின் சூழ்நிலைகள் மற்றும் டயானாவின் உண்மையான வாழ்க்கை முறையை அவரது சொந்த சகோதரரின் கண்ணோட்டத்தில் இந்த புத்தகம் விவரிக்கிறது.</p><p> 

டயானாவின் நினைவை போற்றுபவர்களுக்கும், அவரை நேரில் அறியாத இளம் தலைமுறையினருக்கும் இந்த புத்தகம் ஒரு வரலாற்று ஆவணமாக இருக்கும் என்று பதிப்பகம் தெரிவித்துள்ளது.
 
அன்பு, கவர்ச்சி மற்றும் சுய சந்தேகங்கள் நிறைந்த ஒரு தனித்துவமான மனிதராக இளவரசி டயானா எப்படிப்பட்டவர் என்பதை இந்த புத்தகம் வெளிச்சம் போட்டு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-19T12:54:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் காலதாமதமாக வந்த ஊழியரை பணிநீக்கம் செய்த ஏஐ; புயலை கிளப்பிய விவாதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ai-fires-employee-in-the-us-for-arriving-late-1787144216"></link>
            <id>https://canadamirror.com/article/ai-fires-employee-in-the-us-for-arriving-late-1787144216</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவில் ஊழியர் ஒருவரை, ஏஐ, முகாமையாளர் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தொழில்நுட்ப வரலாற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவில் ஊழியர் ஒருவரை, ஏஐ, முகாமையாளர் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><p> 

தொழில்நுட்ப வரலாற்றில் ஏஐ முகவர் ஒருவர் மனித ஊழியரின் வேலைவாய்ப்பைப் பறித்த முதல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. 

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இயங்கி வரும் 'ஆண்டன் லேப்ஸ்' என்ற நிறுவனம், சோதனைக் கடை ஒன்றை நடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3598172-db6f-4d89-8e8c-d7c5cc247ef5/26-6a85a81a7b466.webp' /></p><h2>&nbsp;23 ஷிப்ட்களில், 17 முறை தாமதம்&nbsp; ஏஐ&nbsp; கண்காணித்துப் பதிவு&nbsp;</h2><p> </p><p>

இந்த கடையை முழுமையாக நிர்வகிக்கும் பொறுப்பு, 'ஆந்த்ரோபிக்' நிறுவனத்தின் கிளாட் தொழில்நுட்பத்தில் இயங்கும் 'லூனா' என்ற ஏஐ முகாமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. </p><p>

பிடிவாரண்ட் கொடுத்த ஏஐ இந்த கடையில் பணிபுரிந்து வந்த மனித ஊழியர் ஒருவர், தொடர்ந்து பணிக்குத் தாமதமாக வந்துள்ளார். 

ஒட்டுமொத்தமாக அவர் வேலை பார்த்த 23 ஷிப்ட்களில், 17 முறை தாமதமாக வந்ததை லூனா ஏஐ துல்லியமாகக் கண்காணித்துப் பதிவு செய்துள்ளது. </p><p>

ஊழியரின் இந்த அலட்சியப் போக்கால் கடையின் செயல்பாடுகள் மற்றும் லாபம் பாதிக்கப்படுவதை ஏஐ கணக்கிட்டது. </p><p>

தொடர் எச்சரிக்கைகளுக்குப் பிறகும் ஊழியர் மாறாததால், அவரை உடனடியாகப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று நிறுவனத்தின் மனித முகாமைத்துவ உயர் அதிகாரிகளுக்கு 'லூனா' ஏஐ பரிந்துரை கடிதம் அனுப்பியது. </p><p>

ஏஐ முகாமையாளரின் தரவுகள் மற்றும் நினைவகக் குறிப்புகளை ஆய்வு செய்த மனித முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள், அந்த ஊழியரைப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர். </p><p>

இந்தச் சம்பவம் வேலைவாய்ப்புச் சந்தையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-19T12:54:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவு சென்ற பிரிட்டிஷ் தம்பதி உலங்கு வானூர்தி விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/honeymooning-uk-couple-killed-helicopter-crash-1787115636"></link>
            <id>https://canadamirror.com/article/honeymooning-uk-couple-killed-helicopter-crash-1787115636</id>
            <summary type="text">&amp;nbsp; தேனிலவு சென்ற இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது.

கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தேனிலவு சென்ற இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
கிறீஸ் சிஃப்னோஸ் தீவில் நேற்றுத் திங்கள்கிழமை நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், 

புதுமணத் தம்பதிகளான அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபர்ட் ஆகியோர் தங்களது தேனிலவுக்காக கிரீஸில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b2be035-9e04-48b5-947c-e7d1eec7e723/26-6a8538761fc0d.webp' /></p><h2>தேனிலவுக்காக கிரீஸில் இருந்ததாக அடையாளம்</h2><p>
</p><p>

தனியார் உலங்கு வானூர்தி தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த இருவரும் மற்றும் அவர்களது கிரேக்க நாட்டவரான விமானியும் உயிரிழந்தனர்.
</p><p>
அந்தத் தம்பதியினர், ஏதென்ஸுக்கு அருகிலுள்ள மார்கோபோலோ கிராமத்திலிருந்து பிரபலமான விடுமுறைத் தீவுக்கு ஹெலிகாப்டரில் சென்றதாகக் கூறப்படுகிறது.
</p><p>
கிரீஸின் விமானப் பாதுகாப்பு ஆணையம், இந்த விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும், அதன் புலனாய்வாளர்கள் ஆதாரங்களைச் சேகரிக்கவும் சாட்சிகளிடம் பேசவும் செவ்வாயன்று சம்பவ இடத்திற்குச் செல்லவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T11:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்த கைக்குழந்தை வழக்கு: சமீபத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sues-on-owners-baby-fall-from-toronto-apartment-1787133340"></link>
            <id>https://canadamirror.com/article/sues-on-owners-baby-fall-from-toronto-apartment-1787133340</id>
            <summary type="text">Family of toddler who died in fall from Toronto apartment sues building owners: ரொரன்றோ அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறு குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Family of toddler who died in fall from Toronto apartment sues building owners: ரொரன்றோ அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறு குழந்தையின் குடும்பத்தினர், கட்டிட உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
</p><p>

கனடாவின் ரொரன்றோ நகரிலுள்ள வடக்கு யார்க் பகுதியில் அமைந்துள்ளது 50 Graydon Hall Drive என்னும் அடுக்குமாடிக் குடியிருப்பு.</p><p>

அந்த குடியிருப்பின் 19ஆவது மாடியில், ரக்‌ஷித் சௌஹான், தீபாலி காஷ்யப் தம்பதியர் தங்கள் கைக்குழந்தையுடன் வாழ்ந்துவந்த நிலையில், மே மாதம் ஒரு நாள் தங்கள் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.</p><p>

இரண்டு வயதை எட்டாத அந்தக் குழந்தை, விளையாடும்போது ஜன்னல் கண்ணாடியைத் தொட்டதாகவும், திடீரென அந்தக் கண்ணாடி உடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள் ரக்‌ஷித், தீபாலி தம்பதியர்.
</p><p>
ஒரு நொடிப்பொழுதில், கண்ணாடி உடைந்த ஜன்னல் வழியாக குழந்தை வெளியே விழுந்திருக்கிறாள்.
</p><p>
குழந்தை தங்கள் கண் முன்னே விழுந்து உயிரிழந்ததைக் கண்டு திகிலடைந்த பெற்றோர், சொல்லொணா அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ftoronto.culture%2Fposts%2Fpfbid02B2pTC8fk5cW2qjL3xSwALeGsfRnu6PWSUY58MKgmLvidQPuxTMEicLTFeRSxHoU3l&show_text=true&width=500" width="500" height="776" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>இந்நிலையில், அந்தக் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கட்டிட நிர்வாகம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள் அந்தக் குழந்தையின் பெற்றோரும் தாத்தா பாட்டியும்.</p><p>

அந்தக் கட்டிடத்தில் ஏற்கனவே இதுபோல கண்ணாடி உடைந்ததால் அங்கு குடியிருக்கும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது தெரிந்த நிலையிலும், அதை சீர் செய்ய கட்டிட உரிமையாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்கள் அவர்கள்.</p><p>

அத்துடன், குழந்தை இறந்ததும், அந்தக் கட்டிட உரிமையாளர்கள் குடும்பம் எதையோ மறைக்க முயல்வதாக அவதூறு பரப்பியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
</p><p>
ஆகவே, அந்தக் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கட்டிட நிர்வாகம் தங்களுக்கு 18 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது அந்தக் குழந்தையின் குடும்பம்.
</p><p>
இதற்கிடையில், அதே வடக்கு யார்க் பகுதியில் அமைந்துள்ள மற்றொரு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து, ஞாயிற்றுக்கிழமையன்று, ஒரு ஆறு வயது சிறுமி விழுந்து உயிரிழந்துள்ளாள் என்னும் துயரச் செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-19T09:57:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் விமான நிலையத்தில் பெரும் தொகை போதைப்பொருளுடன் பிடிபட்ட பயணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/swiss-passenger-caught-france-airport-144-kg-khat-1787128498"></link>
            <id>https://canadamirror.com/article/swiss-passenger-caught-france-airport-144-kg-khat-1787128498</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிரான்ஸ் Roissy-Charles-de-Gaulle விமான நிலையத்தில் இஸ்ரேலின் Tel Aviv நகரிலிருந்து வந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 28 வயது நபர் ஒருவர் 144 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிரான்ஸ் Roissy-Charles-de-Gaulle விமான நிலையத்தில் இஸ்ரேலின் Tel Aviv நகரிலிருந்து வந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 28 வயது நபர் ஒருவர் 144 கிலோ ‘காத்’ (khat) தாவரத்துடன் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

பிரான்ஸில் போதைப்பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ள ‘காத்’ தாவரம், நாட்டுக்குள் கொண்டு வரத் தடை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/267f941b-71ff-4116-a0ec-1d42c68eb5e7/26-6a856ab42d285.webp' /></p><h2>ஆப்பிரிக்க நாடுகளின்&nbsp; &nbsp;பரவலாக உள்ள&nbsp;‘காத்’ இலை</h2><p> 

அந்த நபர், ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை Bobigny நீதிமன்றத்தில் உடனடியாக விசாரணைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>
ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த 144 கிலோ ‘காத்’ கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பயணி சுங்கக் காவலில் வைக்கப்பட்டார்.</p><p> 

‘காத்’ இலைகளை மென்று பயன்படுத்தும் பழக்கம் Yemen மற்றும் Ethiopia, Somalia உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளின் பகுதிகளில் பரவலாக உள்ளது. இதன் தாக்கம் ஆம்பெட்டமைன் போன்ற தூண்டுதல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சுங்கத்துறை தரவுகளின்படி, கடந்த 2025ஆம் ஆண்டு 3.5 தொன் ‘காத்’ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. </p><p>இது 2024ஆம் ஆண்டில் 5 தொன்னுக்கும் அதிகமாகவும், 2023ஆம் ஆண்டில் 7 தொன்னாகவும், 2022ஆம் ஆண்டில் சுமார் 16 தொன்னாகவும் இருந்தது. 

</p><p>, 2022ஆம் ஆண்டு Spain-ல் ஐரோப்பாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ‘காத்’ பறிமுதல் செய்யப்பட்டிருந்தது; அதன் மதிப்பு சுமார் 61 மில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-08-19T09:54:20+00:00</updated>
        </entry>
    </feed>
