<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-07T11:08:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்பர்ட்டா மாகாணம் தனி நாடாகும் விவகாரம்: அடுத்த மாதம் வாக்கெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/poll-on-alberta-separation-to-be-on-october-19-1788779227"></link>
            <id>https://canadamirror.com/article/poll-on-alberta-separation-to-be-on-october-19-1788779227</id>
            <summary type="text">Albertans go to the polls on October 19 to vote on whether Alberta should stay with Canada or leave: ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடாவுடன் இருப்பதா அல்லத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Albertans go to the polls on October 19 to vote on whether Alberta should stay with Canada or leave: ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடாவுடன் இருப்பதா அல்லது பிரிவதா என்பது தொடர்பில் அடுத்த மாதம் சில முடிவுகள் எடுக்க இருக்கிறார்கள்.
</p><p>

ஆல்பர்ட்டா மாகாணத்தை கனடாவிலிருந்து பிரித்து தனி நாடாக்குவதில் ஆல்பர்ட்டா மாகாண மக்களில் ஒரு பிரிவினர் உறுதியாக உள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12064187-7d0f-4d9d-ad64-604504f7d879/26-6a9e9adc783d8.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், கனடா மாகாணம் பிரிவது தொடர்பில் அக்டோபர் மாதம் 19ஆம் திகதி வாக்கெடுப்பு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது.
</p><p>
விடயம் என்னவென்றால், அந்த வாக்கெடுப்பில், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவதா என்னும் கேள்விகள் நேரடியாக கேட்கப்படப்போவது இல்லை.
</p><p>
மாறாக, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவது தொடர்பில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டுமா என்னும் கேள்விகள்தான் கேட்கப்பட உள்ளன.
</p><p>
இந்நிலையில், ஆல்பர்ட்டா பிரிவதற்கு ஆதரவளிக்கும் அமைப்பொன்று, வாக்கெடுப்பில் கனடாவிலிருந்து பிரிவது என ஆல்பர்ட்டா மக்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், ஆல்பர்ட்டாவில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தொடர்பான விடயங்களைக் கூறும் 214 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>
ஏற்கனவே ஆல்பர்ட்டா மாகாணம் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது, அப்படியிருக்கும் பட்சத்தில், அது பிரிவதால் எதுவும் நின்றுவிடப்போவதில்லை என்கிறார்கள் ஆதரவாளர்கள்.
</p><p>
ஆனாலும், ராணுவம், ஆல்பர்ட்டாவிலிருந்து கனடாவின் பிற பகுதிகளுக்கு போக்குவரத்து, கடன், மின்சாரம், எரிபொருள் போன்ற விடயங்கள், ஓய்வூதியம், எல்லைகள், சொத்துக்கள் போன்ற விடயங்கள் குறித்து கனடாவுடனும், பூர்வக்குடியினர் உள்ளிட்ட மற்றவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியிருக்கும் என்கிறார்கள் பிரிவதை ஆதரிப்பவர்கள்.</p><p>

எதிர்ப்பவர்களோ, பிரிந்தால் பிரிந்ததுதான், அதற்குப் பிறகு பேச்சுவார்த்தையெல்லாம் எடுபடாது என்கிறார்கள்.

ஆக, என்ன நடக்கப்போகிறது என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரியலாம்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T11:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை வென்ற தமிழ் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/taanusiya-chetty-3rd-won-the-miss-world-2026-1788766152"></link>
            <id>https://canadamirror.com/article/taanusiya-chetty-3rd-won-the-miss-world-2026-1788766152</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (வயது 24), வென்றுள்ளார்.

 ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2 ஆம் இடத்​தை​...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (வயது 24), வென்றுள்ளார்.

 ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2 ஆம் இடத்​தை​யும், மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தனுசியா செட்டி 3 ஆம் இடத்​தை​யும் பிடித்​தனர்.
</p><p>
வியட்​நாமின் காங் ஹோவா மாகாணம், நியா ட்ராங் நகரில் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதி மிஸ் வேர்ல்டு உலக அழகிப் போட்டி தொடங்​கியது. 

இதில் இந்​தி​யா​வைச் சேர்ந்த நிகிதா போர்​வால் உட்பட 111 நாடு​களைச் சேர்ந்த போட்​டி​யாளர்​கள் பங்​கேற்​றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb0d005-7f95-47ee-a99a-072ff28aaa91/26-6a9e67ca6bf76.webp' /></p><h2>மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண்</h2><p> </p><p>அவர்​களுக்கு பல்​வேறு கட்​டங்​களாக போட்​டிகள் நடத்​தப்​பட்​டன.

வியட்​நாமின் நியா ட்ராங் நகரில் நேற்று முன்​தினம் மாலை இறுதிப் போட்டி நடை​பெற்​றது. முதல்​கட்​ட​மாக 111 போட்டியாளர்களில் இருந்து 40 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர். இதில் இந்​தி​யா​வின் நிகிதா இடம் பெற்​றிருந்​தார். அதன்​பிறகு 20 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர்.</p><p>

ஆனால் அந்​தப் பட்​டியலில் இந்​திய அழகி இடம்​பெற​வில்​லை. அடுத்த கட்​ட​மாக 12 போட்​டி​யாளர்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர். அவர்​களில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்​பட்​டனர். நள்​ளிர​வில் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன.
</p><p>
அப்​போது டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா முதலிடத்​தைப் பிடித்து ‘மிஸ் வேர்ல்​டு’ உலக அழகி பட்​டத்தை வென்​றார்.

 அவருக்கு கடந்த ஆண்டு பட்​டம் வென்ற தாய்​லாந்​தின் ஓபல் சுசாடா மகுடம் சூட்​டி​னார். ஸ்பெ​யின் நாட்டை சேர்ந்த எலிசபெத் ரெய்​னெஸ் (வயது 22) இரண்​டாவது இடம் பிடித்​தார்.

மலேசி​யா​வைச் சேர்ந்த தனுசியா செட்டி (வயது 25) மூன்​றாம் இடத்தைப் பெற்​றார். </p><p>அவரது தாய்​மொழி தமிழ் ஆகும்.

 அவரது தந்தை வீர​பாண்​டியன். 14 வயதில் தாயை இழந்த தனுசியா தந்தை​யின் அரவணைப்​பில் வளர்ந்​தார். அவர் கொடுத்த ஊக்கத்தால் மிஸ் மலேசியா பட்​டம் வென்​று, மிஸ் வேர்ல்டு போட்டி​யில் நுழைந்​தார்.
</p><p>
வியட்​நாமில் நடை​பெற்ற மிஸ் வேர்ல்டு போட்​டி​யின்​போது ஆங்​கிலம், மலாய், மாண்​டரின், தமிழ் ஆகிய 4 மொழிகளில் தனுசியா சரள​மாக பேசி​னார். “மாற்​றம் என்​பது நமக்​குள் இருந்தே தொடங்க வேண்​டும்” என்று அவர் 4 மொழிகளில் பேசிய வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T09:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் கேப் பிரெட்டனில் கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளத்தில் சிக்கிப் பெண் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-dead-following-flooding-in-cape-breton-1788769661"></link>
            <id>https://canadamirror.com/article/woman-dead-following-flooding-in-cape-breton-1788769661</id>
            <summary type="text">கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்திற்குட்பட்ட கேப் பிரெட்டன் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்திற்குட்பட்ட கேப் பிரெட்டன் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாநில முதலமைச்சர் டிம் ஹூஸ்டன் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>ரிச்மண்ட் கவுண்டி பொலிஸாரின் தகவல்படி, கிளீவ்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் சனிக்கிழமை காலை காணாமல் போயிருந்தார்.</p><p>
வெள்ள நீரில் மூழ்கிய பாலத்திற்கு அப்பால் அவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் பிற்பகல் 2:30 மணியளவில் அப்பகுதியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.</p><p>[WU8TR
]</p><p> </p><p>
இந்த மரணத்தில் சந்தேகத்திற்குரிய காரணங்கள் எதுவும் இல்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
வாரயிறுதியில் கேப் பிரெட்டனின் சில பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
</p><p>உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் டிம் ஹூஸ்டன், சீரற்ற வானிலை தொடர்வதால் பொதுமக்கள் வீதிப் பயணங்களைத் தவிர்த்துப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>
அத்துடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் அவசரகாலப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T09:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிசிசாகாவில் இரயில் விபத்து: லேக்சோர் வெஸ்ட் இரயில் சேவைகள் பாதிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/significant-delays-on-lakeshore-west-line-1788768552"></link>
            <id>https://canadamirror.com/article/significant-delays-on-lakeshore-west-line-1788768552</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் மிசிசாகா பகுதியில் சனிக்கிழமை இரவு நபரொருவர் ஜி.ஓ இரயிலில் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, லேக்சோர் வெஸ்ட் வழித்தடத்தின் ஒரு பகுதி சேவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் மிசிசாகா பகுதியில் சனிக்கிழமை இரவு நபரொருவர் ஜி.ஓ இரயிலில் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, லேக்சோர் வெஸ்ட் வழித்தடத்தின் ஒரு பகுதி சேவை தற்காலிகமாக முடங்கியது.</p><p>
இதன் காரணமாக போர்ட் குரெடிட் மற்றும் எக்சிபிஷன் நிலையங்களுக்கு இடையிலான இரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
</p><p>ஃபோர்த் வீதிக்கு தெற்கே உள்ள ஒக்டன் அவென்யூ இரயில் பாதைக் கடவையில் இரவு 8:00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc86750-9edb-440a-8c5b-251fc9b508f0/26-6a9e712a2000a.webp' /></p><p> </p><p>விபத்துக்கான பின்னணி குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
</p><p>லேக்சோர் வெஸ்ட் பாதையில் பெரும் சேவைத் தாமதம் ஏற்பட்டது.
பயணிகளின் வசதிக்காக போர்ட் குரெடிட் மற்றும் கிப்ளிங் நிலையங்களுக்கு இடையே விரைவுப் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன.</p><p>
இச்சம்பவத்தின் தாக்கம் காரணமாக லேக்சோர் ஈஸ்ட் வழித்தடத்தின் இரண்டு இரயில் பயணங்களும் ரத்து செய்யப்பட்டன.</p><p>
துப்புரவு மற்றும் விசாரணைப் பணிகளைத் தொடர்ந்து, இரவு 10:00 மணிக்குச் சற்று முன்னர் வழமையான இரயில் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T09:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பயணி; டேப்போட்டு கட்டிய பணியாளர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-passenger-behaved-unruly-us-flight-taped-him-up-1788764606"></link>
            <id>https://canadamirror.com/article/a-passenger-behaved-unruly-us-flight-taped-him-up-1788764606</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க உள்நாட்டு விமானம் ஒன்றில், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒரு பயணி, விமானப் பணியாளர்களால் அவரது இருக்கையில் டேப்பால் கட்டி வைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்க உள்நாட்டு விமானம் ஒன்றில், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒரு பயணி, விமானப் பணியாளர்களால் அவரது இருக்கையில் டேப்பால் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>

கடந்த வியாழக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர், உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/144d709c-d2ab-474e-a216-9544f6022f15/26-6a9e61c06bbb9.webp' /></p><p>
</p><p>
டல்லாஸிலிருந்து நியூயோர்க்கிற்கு அருகிலுள்ள நியூவார்க்கிற்குச் சென்ற விமானம் 618, பால்டிமோரில் இறங்க்கிய நிலையில் , அங்கு வந்த எப்.பி.ஐ அதிகாரிகள் அந்த நபரை விமானத்திலிருந்து வெளியேற்றியதாகவும் கூறப்படுகின்றது.</p><p>இன்னிலையில்&nbsp;&nbsp;இருக்கையில்&nbsp; பயணி&nbsp; டேப்பால் கட்டி வைக்கப்பட்ட புகைப்படம்&nbsp; சமூகவலைத்தளங்க்களில்&nbsp; வைரலாகியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T08:10:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புயலால் சேதமடைந்த வீடு: காப்புறுதி நிறுவனத்துடன் போராடும் தம்பதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/kitchener-couple-call-insurance-process-1788768082"></link>
            <id>https://canadamirror.com/article/kitchener-couple-call-insurance-process-1788768082</id>
            <summary type="text">கனடாவின் கிச்சனர் பகுதியில் வீசிய பலத்த புயலில் மரமொன்று முறிந்து வீட்டின் கூரை மீது விழுந்ததில் சேதமடைந்த வீடொன்றின் உரிமையாளர்கள், தங்களது காப்புறுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கிச்சனர் பகுதியில் வீசிய பலத்த புயலில் மரமொன்று முறிந்து வீட்டின் கூரை மீது விழுந்ததில் சேதமடைந்த வீடொன்றின் உரிமையாளர்கள், தங்களது காப்புறுதி நிறுவனத்துடன் இழப்பீடு தொடர்பாகப் போராடி வருகின்றனர்.</p><p>
டக் மற்றும் அலிசியா ஆர்னால்ட் என்ற தம்பதியரின் வீட்டின் மீது, அவர்களது தோட்டத்தில் இருந்த மரம் பாதியாகப் பிளந்து கூரையின் மீது விழுந்துள்ளது. </p><p>
25 ஆண்டுகளாகத் தவறாமல் காப்புறுதிக் கட்டணம் செலுத்தி வரும் தங்களுக்கு, முழுமையான இழப்பீடு வழங்க காப்புறுதி நிறுவனம் மறுப்பதாக அலிசியா வேதனை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26584a57-d3ae-4a74-be9f-196838ed6588/26-6a9e6f53df2b7.webp' /></p><p>
கூரை மீது விழுந்த மரத்தின் பகுதியை அகற்றுவதற்கும் கூரையைச் சீரமைப்பதற்கும் மட்டுமே காப்புறுதி நிறுவனம் நிதியளிக்க முன்வந்துள்ளது. </p><p>
ஆனால், ஆபத்தான நிலையில் எஞ்சியுள்ள மரத்தின் மறுபகுதியை அகற்றுவதற்கு இழப்பீடு வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனால் எஞ்சிய பகுதியைத் தங்களது சொந்தச் செலவிலேயே அகற்ற வேண்டிய நிலைக்குத் தம்பதியினர் தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கனடா காப்புறுதிப் பணியகத்தின் துணைத் தலைவர் அமண்டா டீன், பெரும்பாலான வீடமைப்பு காப்புறுதிக் கொள்கைகள் கட்டிடக் கட்டமைப்புக்கும் அதனால் ஏற்படும் நேரடிச் சேதங்களுக்குமே முன்னுரிமை அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மேலும், இவ்வாறான சிக்கலான சூழல்களில் காப்புறுதி ஒப்பந்தங்களின் விவரங்களைச் சரியாகப் பரிசீலிக்குமாறும், காப்புறுதி மதிப்பீட்டாளர்களிடம் தெளிவான விளக்கங்களைக் கோருமாறும் அவர் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T07:58:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியாமி விமான நிலையத்தில் அமேசான் சரக்கு விமானம் விபத்து: 5 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/at-least-5-dead-after-amazon-cargo-plane-1788743502"></link>
            <id>https://canadamirror.com/article/at-least-5-dead-after-amazon-cargo-plane-1788743502</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி, வாகனங்கள் மீது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி, வாகனங்கள் மீது மோதித் தீப்பற்றி எரிந்ததில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவானில் இருந்து வந்த 'அமேசான் பிரைம் ஏர்' அமைப்பின் போயிங் 767 ரக சரக்கு விமானம், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஓடுபாதையைத் தாண்டிச் சென்று அருகிலிருந்த வீதியில் பயணித்த வாகனங்கள் மீது மோதித் தீப்பற்றி எரிந்தது.</p><p>
இவ்விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்தும் 2 பேர் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/596b9564-fd32-421c-8a69-d17039d0a7aa/26-6a9e0f501b918.webp' /></p><p> </p><p>
விமானத்தின் காக்பிட்டில் சிக்கிய விமானிகள் மற்றும் வாகனங்களில் சிக்கியவர்கள் சுமார் 200 மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டனர். </p><p>
உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா அல்லது வாகனங்களில் இருந்தவர்களா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியாகவில்லை.
</p><p>இந்த விபத்து காரணமாக மியாமி விமான நிலையத்தில் 160க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 325க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.</p><p>
விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. </p><p>
விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் இடியுடன் கூடிய மழையும் மணிக்கு 48 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T07:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எவரெஸ்ட்டில் பனிப்பாறைகள் உருக மனித சிறுநீரும் காரணம்; ஆய்வில் அதிர்ச்சித்தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/human-urine-melting-glaciers-on-everest-1788760095"></link>
            <id>https://canadamirror.com/article/human-urine-melting-glaciers-on-everest-1788760095</id>
            <summary type="text">&amp;nbsp; எவரெஸ்ட்டில் உள்ள பனிப்பாறைகள் உருக மனித சிறுநீரும் ஒரு காரணம் என நேபாளம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; எவரெஸ்ட்டில் உள்ள பனிப்பாறைகள் உருக மனித சிறுநீரும் ஒரு காரணம் என நேபாளம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உலகில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதாவும், அதன் மூலம் கடல் மட்டம் உயர்ந்து பல நாடுகள் மூழ்கும் வாய்ப்பிருப்பதாக&nbsp; &nbsp;ஆய்வாளர்கள் எச்சரித்து வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f992e70e-f247-4935-9cb5-6cb69f44cdee/26-6a9e5024d8195.webp' /></p><h2>&nbsp;தினமும் சராசரியாக 6 ஆயிரம் லிட்டர் சிறுநீர்</h2><p> சமீபத்தில் கூட கடல் மட்டம் உயர்வதால் மும்பை கொல்கத்தா போன்ற நகரங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும்.. இரண்டு லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்தது.
</p><p>
அதாவது மெல்லின போன்ற காரணங்களால் வெப்பம் அதிகரித்து பனிப்பாறை வருவதால் கடல் மட்டம் உயர்கிறது அப்படி கடல் மட்டம் உயரும்போது அந்த அதிலிருந்து வெளியேறும் போது நகரங்களில் வசிக்கும் மக்களை பாதிக்கும் என சொல்லப்படுகிறது.</p><p>&nbsp;னிப்பாறை உருகி அதிலிருந்து வெளியேறிய வெள்ளத்தால் நேபாளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போனவர்கள். 200க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை.
</p><p>
எவரெஸ்ட் அடிவாரம் முகாமில் தங்கும் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்களும்,வழிகாட்டிகளும் தினமும் சராசரியாக 6 ஆயிரம் லிட்டர் சிறுநீரை பனியில் கழிக்கின்றனர்.</p><p> இதனால் ஒரு சீசனில் மட்டும் தோராயமாக 154 டன் பனிப்பாறைகள் உருகுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T05:45:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் மாயமான 5,000 பேர் தொடர்பில் தகவல் இல்லை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-information-5-000-people-missing-in-nepal-flood-1788758335"></link>
            <id>https://canadamirror.com/article/no-information-5-000-people-missing-in-nepal-flood-1788758335</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுமார் 5,000 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. அவர்களைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுமார் 5,000 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. </p><p>அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70564e68-4906-4efc-8574-ee4aaea3b781/26-6a9e4940ee848.webp' /></p><h2>இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது</h2><p> இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களில் சுமார் 600 பேர் வெளிநாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 275 பேர் இந்தியர்களாவார்.
</p><p>


நேபாள இராணுவத்தினர் உள்ளிட்ட 20,000-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேதமடைந்த நீர்மின் நிலையங்களின் சுரங்கப் பாதைகளிலும் இந்திய நிபுணர்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>



மீட்கப்பட்ட உடல்களில் 500-க்கும் மேற்பட்டவை உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், அவற்றை அடையாளம் காண்பதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இதுவரை 98 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. </p><p>காணாமல் போனவர்களின் உறவினர்களிடமிருந்து மரபணு பரிசோதனைக்கான மாதிரிகளை நேபாள பொலிஸ் சேகரித்து வருகிறது.



இதனிடையே, பெருவெள்ளத்தால் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரண முகாம்களில் போதிய வசதிகள் இல்லாததால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் உள்ளிட்டோர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>


மேலும், திபெத் பகுதியில் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதுடன், 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் நம்ரங் கோலா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 4 வீடுகளும் ஒரு தொங்கு பாலமும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இரண்டு சிறிய நீர்மின் நிலையங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-09-07T05:15:52+00:00</updated>
        </entry>
    </feed>
