<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-20T11:35:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கொலையுடன் தொடர்புடைய நபர்களை தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-identify-man-woman-wanted-in-niagara-1784545933"></link>
            <id>https://canadamirror.com/article/police-identify-man-woman-wanted-in-niagara-1784545933</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேகநபர்களான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேகநபர்களான இருவரைக் பொலிஸார் உத்தியோகபூர்வமாக அடையாளம் கண்டுள்ளதுடன் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
</p><p>ஜூலை 16 இரவு 9 மணியளவில் தொரோல்ட் ஸ்டோன் அமைந்துள்ள வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.</p><p>
அங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b166332-2f37-440c-ad4c-b18b6ab1477e/26-6a5e028f3dc75.webp' /></p><p>
இந்தத் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டு வருகின்றனர்:
</p><p>23வயதான மரூஃப் பாங்கி : மெலிந்த உடலமைப்பு மற்றும் இருண்ட நிறமுடைய இவர், தாடி மற்றும் தலைமுடியின் தோற்றத்தை மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
</p><p>30 வயதான ஜோஸ்டா கிரேஸ் மெக்நீல்: இவரது கழுத்தின் இடதுபுறத்தில் சிறகைக் குறிக்கும் பச்சை குத்தப்பட்ட தனித்துவமான அடையாளம் உள்ளது.</p><p>
இவர்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக தங்கள் தாடி, தலைமுடியின் நிறம், ஒப்பனை மற்றும் ஆடை அமைப்புகளை மாற்றியமைக்கக் கூடும் என புலனாய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இதுவரை கைப்பற்றப்படாததால், இவர்கள் இருவரும் ஆயுதமேந்திய ஆபத்தான நபர்களாகக் கருதப்படுகின்றனர்.
</p><p>எனவே, பொதுமக்கள் எவரும் இவர்களை அணுக வேண்டாம் என்றும், கண்டறிந்தால் உடனடியாக 911 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>
சம்பவம் தொடர்பாகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட வெள்ளை நிற நிசான் வாகனம் மற்றும் கருப்பு நிற மாஸ்டா வாகனம் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் உடனடியாக வழக்கறிஞரைத் தொடர்புகொண்டு சரணடையுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T11:11:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவில் காணாமல் போன பெண்: பொலிஸ் விசாரணையில் தெரியவந்த துயரச் செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missing-bc-women-already-dies-in-2024-1784545231"></link>
            <id>https://canadamirror.com/article/missing-bc-women-already-dies-in-2024-1784545231</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண்ணொருவரைக் காணவில்லை என அவரது உறவினர் ஒருவர் கடந்த மாதம் பொலிசில் புகாரளித்துள்ளார்.

பொலிஸ் விசாரணையில், அந்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண்ணொருவரைக் காணவில்லை என அவரது உறவினர் ஒருவர் கடந்த மாதம் பொலிசில் புகாரளித்துள்ளார்.</p><p>

பொலிஸ் விசாரணையில், அந்தப் பெண் இப்போது காணாமல் போகவில்லை, பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போய்விட்டார் என்பது தெரியவந்துள்ளதுடன், ஒரு துயரச் செய்தியும் தெரியவந்துள்ளது!
</p><p>
ஜூன் மாதம் 14ஆம் திகதி, தன் உறவினரான மேரி (Mary Gadbois) என்னும் பெண்ணைக் காணவில்லை என அவரது உறவினர் ஒருவர் பொலிசில் புகாரளித்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8ac2ba0-a843-43f0-bae6-5ecaf30d3bc0/26-6a5dffd09f8b5.webp' /></p><p>
பொலிசார் மேரியைத் தேடிவந்த நிலையில், உண்மையில் அவர் இப்போது காணாமல் போகவில்லை, அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போய்விட்டார் என்பது தெரியவந்தது.
</p><p>
அதாவது, 2021ஆம் ஆண்டு மேரி Mission என்னுமிடத்தில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.
</p><p>
அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை, சோகம் என்னவென்றால், அவரை யாரும் தேடியதாகவும் தெரியவில்லை. சமீபத்தில்தான் அவரது உறவினர் ஒருவர் அவரைத் தொடர்பு கொள்ள இயலாததால், அவரைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார்.
</p><p>
பொலிசார் மேரியைத் தீவிரமாக தெடியும் அவரைக் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
</p><p>
இதற்கிடையில், 2024ஆம் ஆண்டு Mission நகருக்கருகிலுள்ள வனப்பகுதி ஒன்றில் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. அவை யாருடைய உடல் பாகங்கள் என தெரியாமலே இருந்துள்ளது.</p><p>

இந்நிலையில், மேரியும் கடைசியாக Mission நகரில் வாழ்ந்துவந்தது தெரியவந்ததால், 2024ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்கள் மேரியுடையவையாக இருக்குமோ என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
அதைத் தொடர்ந்து நீதிமன்ற அதிகாரிகள் உட்பட பலதரப்பினரும் மேற்கொண்ட ஆய்வில், அந்த உடல் பாகங்கள் மேரியுடையவைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T11:06:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்து வரலாற்றில் பிரான்ஸ் வீரர் மப்பே படைத்த சாதனை; இதுவரை யாரும் பெறவில்லை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/french-player-mbappe-won-back-to-back-golden-boots-1784524823"></link>
            <id>https://canadamirror.com/article/french-player-mbappe-won-back-to-back-golden-boots-1784524823</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரராலும் எட்ட முடியாத ஒரு இமாலய சாதனையை பிரான்ஸின் அசுர வேக முன்களவீரர் கிலியன் மப்பே ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரராலும் எட்ட முடியாத ஒரு இமாலய சாதனையை பிரான்ஸின் அசுர வேக முன்களவீரர் கிலியன் மப்பே படைத்துள்ளார். </p><p>

2026 உலகக் கிண்ணத்தின் அதிக கோல்கள் அடித்தவர்களுக்கான புகழ்பெற்ற தங்கப் பாதணி விருதைத் தன்வசப்படுத்தியதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு முறை இந்த விருதை வென்ற முதல் வீரர் என்ற உலக மகா சாதனையை பிரான்ஸின் அசுர வேக முன்களவீரர் கிலியன் மப்பே பதிவு செய்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f92b3da4-ca6d-43cd-bd8a-1d6d6a541600/26-6a5db018bf2e9.webp' /></p><p>அதேவேளை 2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியின் முடிவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியதும், அணியின் தலைவரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி, மைதானத்தில் மனமுடைந்து கண்ணீர் விட்ட காணொளி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T10:18:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயானா கடலில் 133 பேருடன் பயணித்த படகு கவிழந்து விபத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mv-barima-133-people-capsizes-in-guyana-waters-1784542183"></link>
            <id>https://canadamirror.com/article/mv-barima-133-people-capsizes-in-guyana-waters-1784542183</id>
            <summary type="text">&amp;nbsp; தென் அமெரிக்காவின் வடக்கே அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள கயானா கடலில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த அரசுப் படகு ஒன்று கவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென் அமெரிக்காவின் வடக்கே அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள கயானா கடலில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த அரசுப் படகு ஒன்று கவிழ்ந்ததில், இதுவரை 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர். </p><p>

அதேவேளையில், காணாமல் போன டஜன் கணக்கானவர்களைக் கண்டறியும் வகையில் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd2e7008-3df8-4a46-9639-deb81e0f14c3/26-6a5df3e90e09b.webp' /></p><p>
</p><p>
அரசாங்கத்தின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முன்னின்று வழிநடத்தும் கயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ், ‘எம்வி பரிமா’ (MV Barima) கப்பல் தலைநகர் ஜோர்ஜ்டவுனிலிருந்து வட அட்லாண்டிக் கடற்கரை வழியாக போர்ட் கைடுமாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்துக்குள்ளானதாக கூறினார்.</p><p>
மீட்கப்பட்ட குழுவில் 41 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் இருந்ததாக பிலிப்ஸ் தெரிவித்தார். 

காணாமல் போன பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்களா என்பது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
</p><p>
 ஹெலிகொப்டர்கள், விமானங்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் மூலம் 1,000 சதுர மைல் பரப்பளவில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-20T10:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால்ட் ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு கனடா பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-wildfires-responsible-for-much-of-the-smoke-1784541350"></link>
            <id>https://canadamirror.com/article/us-wildfires-responsible-for-much-of-the-smoke-1784541350</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் நிலவும் மோசமான காற்றுத் தரக் குறைவிற்கும் புகை மூட்டத்திற்கும், அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் நிலவும் மோசமான காற்றுத் தரக் குறைவிற்கும் புகை மூட்டத்திற்கும், அமெரிக்க-கனடா எல்லையின் தெற்குப் பகுதியில் (அமெரிக்காவில்) எரிந்து வரும் காட்டுத் தீயே முக்கியக் காரணம் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
மின்னல் காரணமாக உள்ளூர் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும், எல்லைப் பகுதியில் புகையின் அளவு அதிகரிக்க அமெரிக்காவில் எரியும் காட்டுத் தீயே பிரதான காரணம் என மாகாண காட்டுத் தீ சேவை மையம் சனிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பார்வைத் திறன் குறைவதோடு காற்றுத் தரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2901a05a-7c24-4c5c-9b55-de4f9766c8b4/26-6a5df0a7993b8.webp' /></p><p>
அதேவேளையில், எல்லை தாண்டிப் பரவும் காட்டுத் தீ புகை மூட்டம் இரு நாடுகளுக்குமிடையே அரசியல் ரீதியான காரசார விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
 அமெரிக்க நகரங்களான சிகாகோ, நியூயார்க் மற்றும் டெட்ராய்ட் ஆகியவை புகையினால் சூழப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் கனடாவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T09:56:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேல்ஸில் முகாம் தளத்தில் இளைஞர் மரணம்; மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/youth-dies-at-campsite-in-wales-three-arrested-1784539292"></link>
            <id>https://canadamirror.com/article/youth-dies-at-campsite-in-wales-three-arrested-1784539292</id>
            <summary type="text">&amp;nbsp; பிரித்தானியாவின் புகழ்பெற்ற ‘ரோயல் வேல்ஸ்’ (Royal Welsh) கண்காட்சி திடலுக்கு அருகே உள்ள முகாம் தளம் ஒன்றில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் மர்மமான மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரித்தானியாவின் புகழ்பெற்ற ‘ரோயல் வேல்ஸ்’ (Royal Welsh) கண்காட்சி திடலுக்கு அருகே உள்ள முகாம் தளம் ஒன்றில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இச்சம்பவம் தொடர்பாகப் போதைப்பொருள் விவகாரங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று ஆண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdc8d32d-c3c6-4747-ae09-d2af656eccfa/26-6a5de89de8c72.webp' /></p><p>

போவிஸ் (Powys) பகுதியில் உள்ள லான்எல்வெத் (Llanelwedd) கிராமத்தின் பென்மேனவ் பண்ணை (Penmaenau Farm) முகாம் தளத்தில் சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவ இடத்திற்கு அவசரமாக அழைக்கப்பட்ட அவசர மருத்துவ உதவியாளர்கள் (Paramedics) அந்த இளைஞரைக் காப்பாற்றக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், துரதிர்ஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

 இச்சம்பவம் ஒரு தனிப்பட்ட விவகாரம் என்றும், இந்த மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை (Unexplained) என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களும் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T09:19:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளியில் குழந்தை பெற்றுக்கொள்வது சவாலானது; ஆய்வாளர்கள் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/giving-birth-in-space-is-challenging-1784536945"></link>
            <id>https://canadamirror.com/article/giving-birth-in-space-is-challenging-1784536945</id>
            <summary type="text">&amp;nbsp; விண்வெளியில் மனிதர்கள் நிரந்தரமாகக் குடியேறி, அங்கு குழந்தை பெற்றுக்கொள்வது எதிர்பார்த்ததை விட மிகவும் சவாலானதாக இருக்கும் என புதிய ஆய்வில் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; விண்வெளியில் மனிதர்கள் நிரந்தரமாகக் குடியேறி, அங்கு குழந்தை பெற்றுக்கொள்வது எதிர்பார்த்ததை விட மிகவும் சவாலானதாக இருக்கும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூருகின்றனர்.
</p><p>
ஆய்வின்படி, விண்வெளியில் நிலவும் பூஜ்ய ஈர்ப்புவிசை (Microgravity) மற்றும் அதிக கதிர்வீச்சு காரணமாக, இனப்பெருக்கத்திற்குத் தேவையான விந்து மற்றும் கருமுட்டை (அணு) உருவாக்கும் செல்களின் செயல்திறன் 50 சதவீதம் வரை குறையக்கூடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3be5d50-fcee-483a-b4cb-409fab35e9d8/26-6a5ddf7304dd0.webp' /></p><p>
</p><p>
உடலின் செல்கள் பெருகும் வேகம் 25 சதவீதம் வரை மந்தமடைவதால், கர்ப்பம், கருவின் வளர்ச்சி மற்றும் மனித இனப்பெருக்கம் தொடர்பான செயல்முறைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
மேலும், எதிர்காலத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்களில் மனிதக் குடியிருப்புகளை அமைக்கும் திட்டங்களுக்கு, இந்த ஆய்வு முக்கியமான சவால்கள் எடுத்துக்காட்டுவதாகக் கருதப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-20T08:40:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[photobomb செய்த டிரம்ப்; ஃபிஃபா உலகக் கோப்பை மேடையில் சுவாரஸ்யம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-photobomb-moments-fifa-world-cup-stage-1784531888"></link>
            <id>https://canadamirror.com/article/trump-photobomb-moments-fifa-world-cup-stage-1784531888</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 உலகக் கோப்பையை ஸ்பெயின் வென்றதைக் கொண்டாடியபோது, ​​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேடையிலேயே இருந்ததால், ஃபிஃபா உலகக் கோப்பைக் கோப்பை வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 உலகக் கோப்பையை ஸ்பெயின் வென்றதைக் கொண்டாடியபோது, ​​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேடையிலேயே இருந்ததால், ஃபிஃபா உலகக் கோப்பைக் கோப்பை வழங்கும் விழாவில் டிரம்ப் கவனத்தையும் ஈர்த்தார். </p><p> 

மெட்லைஃப் ஸ்டேடியத்தில் கூடுதல் நேரத்தில் நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஸ்பெயின் அணி தனது இரண்டாவது ஃபிஃபா உலகக் கோப்பை பட்டத்தை வென்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45c9ebe7-2451-43d7-b462-264e2658ebb0/26-6a5dcbb1a85ab.webp' /></p><h2>'புகைப்பட இடையூறு' (photobomb)</h2><p> </p><p>இறுதி விசில் ஒலித்ததைத் தொடர்ந்து, 

டிரம்ப், ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ மற்றும் பிற முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து வீரர்களுக்குப் பதக்கங்களையும் உலகக் கோப்பைக் கோப்பையையும் வழங்கினார்.</p><p>

 கோப்பையை ஒப்படைத்த பிறகு, ஸ்பெயின் கேப்டன் ரோட்ரி அதை உயர்த்தத் தயாரானபோதும் டிரம்ப் மேடையிலேயே தங்கியிருந்தார். 

இது அணியின் கொண்டாட்டங்களின் போது ஒரு சங்கடமான தருணத்தை உருவாக்கியது. </p><p>கோப்பை உயர்த்தப்படுவதற்குச் சில கணங்களுக்கு முன்பு, இன்ஃபான்டினோ தலையிட்டு, டிரம்பை அங்கிருந்து அழைத்துச் செல்வது போல் தோன்றியதை தொலைக்காட்சி காட்சிகள் காட்டின.
</p><p>
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவியது, பல பயனர்கள் இதை ஸ்பெயினின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோப்பையை உயர்த்தும் நிகழ்வின்போது செய்யப்பட்ட ஒரு 'புகைப்பட இடையூறு' (photobomb) என்று வர்ணித்தனர். </p><p>

அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விருந்தினராகக் கலந்துகொண்டு, ஃபிஃபா அதிகாரிகள் மற்றும் பிற உலகத் தலைவர்களுடன் போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவிலும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-20T07:16:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துருக்கியில் 119 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/119-is-terrorists-arrested-in-turkey-1784528741"></link>
            <id>https://canadamirror.com/article/119-is-terrorists-arrested-in-turkey-1784528741</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;துருக்கியில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் ஐ.எஸ். பயங்கரவாத ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;துருக்கியில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
துருக்கியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியிருப்பதும், அவர்கள் நாட்டில் பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டி வருவதும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்திற்குத் தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74529880-5df2-4d53-8f77-7ec0b5531f97/26-6a5dbf669c57f.webp' /></p><p> </p><p>

இதனைத் தொடர்ந்து, உளவுத்துறை மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்டு ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தத் தனிப்படையினர், இஸ்தான்புல் மற்றும் அங்காரா உள்ளிட்ட துருக்கியின் 30 மாகாணங்களில் ஒருங்கிணைந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.</p><p> பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் இந்தத் துரிதமான நடவடிக்கையில், ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்:

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தீவிர உறுப்பினர்களாகச் செயல்பட்டு வந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p> மேலும், இவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக அந்த அமைப்பின் தீவிரவாதக் கொள்கைகளைப் பரப்பியும், பயங்கரவாதச் செயல்களுக்கு ஆள் சேர்ப்பதற்கான பிரசாரங்களில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது.</p><p>

நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்தத் தொடர் சோதனைகள், துருக்கியில் நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-07-20T06:24:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் இருந்து வருபவர்களிற்கு கனடா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-bans-travellers-from-congo-ebola-virus-1784526092"></link>
            <id>https://canadamirror.com/article/canada-bans-travellers-from-congo-ebola-virus-1784526092</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;எபோலா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கடந்த 21 நாட்களில் கொங்கோவிற்குச் சென்று வந்த வெளிநாட்டினருக்குத் தங்கள் நாட்டுக்குள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;எபோலா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கடந்த 21 நாட்களில் கொங்கோவிற்குச் சென்று வந்த வெளிநாட்டினருக்குத் தங்கள் நாட்டுக்குள் நுழையக் கனடா தற்காலிகத் தடை விதித்துள்ளது.
</p><p>
இப்புதிய தடை உத்தரவு திங்கட்கிழமை (20) இரவு 11:59 மணி முதல் அமுலுக்கு வருவதுடன் இது வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7649ee37-f0b3-4f4e-854f-e242e42c5ad1/26-6a5db50e56926.webp' /></p><h2>உலக சுகாதரா ஸ்தாபனம் எச்சரிக்கை</h2><p>

கொங்கோவிற்குச் சென்று வந்த வெளிநாட்டுப் பயணிகளைக் கனடாவிற்கு வரும் வணிக ரீதியிலான மற்றும் தனியார் விமானங்களில் ஏற்றுவதற்கு விமான நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கனடியக் குடிமக்கள், நிரந்தர வதிவிடவுரிமை பெற்றவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

எனினும், அவர்கள் கனடா வந்தடைந்தவுடன் கட்டாய 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கனடாவின் இந்தத் தடை உத்தரவு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக அமைந்துள்ளது.</p><p>பரவி வரும் நோய்த்தொற்றின் போது குறிப்பிட்ட நாடுகளுக்குப் பயணத் தடையோ அல்லது வர்த்தகத் தடையோ விதிப்பது, அந்த நாட்டு மக்கள் மீதான சமூக ஒதுக்கல்/அபகீர்த்தியை (Stigma) உருவாக்குவதுடன், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் சர்வதேச முயற்சிகளை மேலும் கடினமாக்கும் என உலக சுகாதரா ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
எபோலா வைரஸ் பரவுவது ஒருவரின் குடியுரிமையையோ அல்லது இனத்தையோ பொறுத்தது அல்ல என்றும், சர்வதேச அளவில் இந்த நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
கொங்கோவில் இதுவரை 2,100-க்கும் மேற்பட்ட எபோலா பாதிப்புகள் பதிவாகியுள்ளதுடன், 828 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
அமெரிக்காவும் கடந்த வாரம் கொங்கோவிற்குச் சென்று வந்த தங்கள் நாட்டுப் பயணிகள் வணிக ரீதியிலான விமானங்கள் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-20T05:39:54+00:00</updated>
        </entry>
    </feed>
