<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-24T03:56:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் புதிய வரி கொள்கை அமுல் ; இலங்கை உள்ளிட்ட நாடுகளின் 10% வரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-new-tax-policy-come-effect-10-tax-sri-lankan-1784862532"></link>
            <id>https://canadamirror.com/article/trump-new-tax-policy-come-effect-10-tax-sri-lankan-1784862532</id>
            <summary type="text">அமெரிக்காவின் தற்காலிக 10% உலகளாவிய இறக்குமதி வரி நடைமுறை காலாவதியாகும் நிலையில், இலங்கை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வர்த்தக கூட்டாளி நாடுகளிலிருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தற்காலிக 10% உலகளாவிய இறக்குமதி வரி நடைமுறை காலாவதியாகும் நிலையில், இலங்கை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வர்த்தக கூட்டாளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.
</p><p>
கட்டாய உழைப்புத் தடைச் சட்டங்கள் (Forced Labor Laws) போதுமான அளவில் அமுல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அமெரிக்காவின் வர்த்தக நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய வரி நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c13edde8-309c-44c4-bc0e-ce7c561b6d94/26-6a62d7461d1c2.webp' /></p><p>புதிய அறிவிப்பின்படி, இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளது. </p><p>இதேபோன்று ஆர்ஜென்டினா, பங்களாதேஷ், பிரித்தானியா, கம்போடியா, கனடா, ஈக்வடோர், குவாத்தமாலா, ஒண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட பல நாடுகளின் பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சீனா உள்ளிட்ட 38 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 12.5% இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது. அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மொத்தம் 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்களுக்கும் இந்த புதிய வரி நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் 10% முதல் 50% வரையிலான "பரஸ்பர இறக்குமதி வரிகள்" (Reciprocal Tariffs) அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. </p><p>எனினும், அந்த வரி நடைமுறையை அமெரிக்க உயர்நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் செல்லுபடியாகாது எனத் தீர்ப்பளித்து ரத்து செய்தது.

அதனைத் தொடர்ந்து, இடைக்கால நடவடிக்கையாக 150 நாட்கள் காலத்திற்கு அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக 10% தற்காலிக இறக்குமதி வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். </p><p>அந்த தற்காலிக வரி நடைமுறை இன்று நிறைவடையும் நிலையில், அதற்குப் பதிலாக நாடுவாரியாக புதிய வரி அமைப்பை அமெரிக்க நிர்வாகம் அமுல்படுத்தியுள்ளது.</p><p>

இந்த புதிய நடவடிக்கை, அமெரிக்க உற்பத்தித் துறையை வலுப்படுத்துதல், வர்த்தகப் பற்றாக்குறையை கட்டுப்படுத்துதல் மற்றும் "உலகளாவிய வரி" தொடர்பான தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய பொருளாதாரக் கொள்கை முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
</p><p>
இதனிடையே, புதிய இறக்குமதி வரிகள் அமுலுக்கு வந்ததன் பின்னர் இலங்கை உள்ளிட்ட பல ஏற்றுமதி நாடுகளின் ஆடை, விவசாயம் மற்றும் உற்பத்திப் பொருட்கள் அமெரிக்க சந்தையில் எந்தளவு பாதிப்பை எதிர்கொள்ளும் என்பது குறித்து சர்வதேச வர்த்தக வட்டாரங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-24T03:19:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்களால் முடியாவிட்டால், யாராலும் முடியாது ; ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/world-shaken-by-iran-s-stark-warning-1784853562"></link>
            <id>https://canadamirror.com/article/world-shaken-by-iran-s-stark-warning-1784853562</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘தங்களால் கச்சா எண்ணெய் விற்க முடியாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள எந்த நாடும் விற்க முடியாது’ என ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘தங்களால் கச்சா எண்ணெய் விற்க முடியாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள எந்த நாடும் விற்க முடியாது’ என ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும், அந்நாட்டின் தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/333bd9ab-2ce3-42b3-9ad1-5e36c9830e5d/26-6a62b43c11e2c.webp' /></p><p>

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,
</p><p>

“இந்த போரின் நிலைப்பாடு மிகத் தெளிவானது: ஒன்று அனைத்தும் அல்லது எதுவுமே இல்லை. நாங்கள் எண்ணெய் விற்க முடியாத ஒரு பிராந்தியத்தில், வேறு யாரும் எண்ணெய் விற்க முடியாது. ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால், எந்தவொரு உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது.
</p><p>
அதேவேளையில், அமெரிக்கப் படைகள் இல்லாத சூழலில்தான் அந்த ஹார்மூஸ் நீரிணை பாதுகாப்பானதாக இருக்கும். அந்த நீரிணையின் நிலைமை மீண்டும் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது என்பதை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் வர்த்தக கப்பல்களை தெஹ்ரான் தாக்கும் ஒவ்வொரு நேரமும், ஈரானியப் பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என ட்ரம்ப் எச்சரித்த சில மணிநேரங்களில் ஈரானின் இந்த எச்சரிக்கை வந்தது.</p>]]></content>
            <updated>2026-07-24T01:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் காட்டுத்தீ ; அவசர வெளியேற்றப்பபட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/france-wildfire-forces-10-000-evacuations-1784850966"></link>
            <id>https://canadamirror.com/article/france-wildfire-forces-10-000-evacuations-1784850966</id>
            <summary type="text">பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள லேஜ் கேப்-பெரெட் என்ற கடலோர சுற்றுலா நகரின் அருகே இரவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள லேஜ் கேப்-பெரெட் என்ற கடலோர சுற்றுலா நகரின் அருகே இரவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.</p><p> காற்றின் வேகம் காரணமாக இந்த தீ சுமார் 4 ஆயிரத்து 900 ஏக்கர் வனப்பரப்பிற்கு&nbsp; பரவியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78c3e2c7-223e-447f-bcaf-a41704f77d84/26-6a62aa1818971.webp' /></p><p> இதையடுத்து, அங்குள்ள 8 சுற்றுலா முகாம்களில் தங்கியிருந்த பயணிகள் மற்றும் காடுகளின் ஓரமாக வசித்த பொது மக்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.


</p><p>
தகவலறிந்து விரைந்து வந்த 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர். </p><p>எனினும், கடுமையான வறட்சி மற்றும் வெயில் காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் கடும் சவால் நீடிக்கிறது.</p><p> காலநிலை மாற்றத்தால் நடப்பாண்டில் மட்டும் பிரான்சில் 44 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் காட்டுத்தீயால் நாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-23T23:56:11+00:00</updated>
        </entry>
    </feed>
