<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-17T13:25:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சி ; சவூதிக்கு ஆதரவாக பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/makkah-drone-attack-pakistan-backs-ksa-1789650691"></link>
            <id>https://canadamirror.com/article/makkah-drone-attack-pakistan-backs-ksa-1789650691</id>
            <summary type="text">இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, சவூதி அரேபியா மற்றும் துருக்கி உடன் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, சவூதி அரேபியா மற்றும் துருக்கி உடன் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தக் கடமையை நிறைவேற்ற தயார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
</p><p>


சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீது நேற்று (16) தாக்குதல் நடத்த ஏவப்பட்ட ட்ரோன்களை இடைமறித்து தகர்த்ததாகவும், இதற்கு யேமனின் ஹௌதி அமைப்பினர்கள்தான் காரணம் எனவும் சவூதி பாதுகாப்புப் படை குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a71857-fb8f-4944-8473-733c5fb3748f/26-6aabe70461a0b.webp' /></p><p> இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஹௌதி படை மறுப்பு தெரிவித்துள்ளது.
</p><p>


இந்த நிலையில், மோதல்கள் பரவுவதைத் தடுப்பதற்கும், மக்கா பாதுகாப்பு ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பாகிஸ்தான் அரசு தயார்நிலையில் இருப்பதாக, பாகிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் இன்று கூறியுள்ளார்.</p><p>



இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:



“ஒருவேளை மக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு ஒப்பந்தமும் தேவையில்லை.</p><p> மக்கா ஒப்பந்தம் எங்களுக்கும் பொருந்தும் அந்தக் கடமையை நாங்கள் நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>


முன்னதாக, ஈரான் மீதான போரில், அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படும் சவூதி அரேபியாவுக்கு எதிராக ஹௌதி படை நடவடிக்கைகள் மேற்கொண்டு யேமனின் முக்கிய தளங்களைக் கைப்பற்றி வருகின்றது.</p><p>


இத்துடன், கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.



இதன்படி, ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்பதால் ஹௌதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T13:11:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பீஜியில் தீவிரமடையும் HIV தொற்று ; தேசிய நெருக்கடியாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hiv-infection-in-fiji-is-worsening-1789645196"></link>
            <id>https://canadamirror.com/article/hiv-infection-in-fiji-is-worsening-1789645196</id>
            <summary type="text">புதிய HIV தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், பீஜி (Fiji ) நாட்டு அரசு HIV நிலைமையை தேசிய நெருக்கடியாக அறிவித்துள்ளது.

பீஜி நாட்டு அரசாங்கத்தின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய HIV தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், பீஜி (Fiji ) நாட்டு அரசு HIV நிலைமையை தேசிய நெருக்கடியாக அறிவித்துள்ளது.

பீஜி நாட்டு அரசாங்கத்தின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் 2,016 பேருக்கு புதிதாக HIV தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், நாட்டில் வசிக்கும் 60 பேரில் ஒருவர் HIV தொற்றுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5d389a-d266-402b-9afe-fe844b45e3f5/26-6aabd1e54cb81.webp' /></p><p>

2025ஆம் ஆண்டில் HIV தொற்றுடன் 59 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அவர்களில் 18 பேர் ஒரு வயதை அடைவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாகவும் பீஜி நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
எனினும், மேம்படுத்தப்பட்ட பரிசோதனை முறைகள் காரணமாக HIV தொற்றுகள் அதிகளவில் கண்டறியப்படுவதுடன், தொற்றுக்குள்ளானவர்களுக்கு விரைவாக சிகிச்சை வழங்குவதற்கும் இது உதவுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனையடுத்து, இலவசமாகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், ரகசியத்தன்மையுடனும் HIV பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை விரிவுபடுத்த பீஜி நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>

அத்துடன், HIV தடுப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்துவதுடன், ஊசி மூலம் போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கான பாதிப்பு குறைப்பு சேவைகளையும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> UNAIDS தகவலின்படி, ஊசி மற்றும் சிரிஞ்ச் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>

UNAIDS அமைப்பின் தரவுகளின்படி, பீஜி நாட்டில் புதிய HIV தொற்றுகளின் எண்ணிக்கை 2010 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 12 மடங்கு அதிகரித்துள்ளது. </p><p>2025ஆம் ஆண்டில் சுமார் 9,100 பேர் HIV தொற்றுடன் வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவர்களில் 39 சதவீதம் பேர் மட்டுமே தங்களது HIV நிலையை அறிந்திருந்தனர். மேலும், 22 சதவீதம் பேர் மட்டுமே எதிர்வைரஸ் சிகிச்சையைப் பெற்று வந்தனர்.
</p><p>
தொற்று ஏற்பட்ட விதம் உறுதிப்படுத்தப்பட்ட HIV சம்பவங்களில், பாதிக்கும் மேற்பட்டவை பாலியல் தொடர்பு மூலம் பரவியுள்ளதுடன், 42 சதவீதத்துக்கும் அதிகமானவை ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவதுடன் தொடர்புடையவை என UNAIDS தெரிவித்துள்ளது.
</p><p>
இதனிடையே, பீஜி நாட்டில் HIV தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உள்ள கொள்கை மற்றும் நடைமுறைத் தடைகளை அகற்றும் நோக்கில், ஐந்து அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை துணைக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T11:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-sentence-dehiwala-businessman-drug-case-1789644513"></link>
            <id>https://canadamirror.com/article/death-sentence-dehiwala-businessman-drug-case-1789644513</id>
            <summary type="text">&amp;nbsp; ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


சிலாபம் பிரிவின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் 2017ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59449e2a-e5d6-4ce3-9071-84508c0af8bb/26-6aabcee328250.webp' /></p><p>
</p><p>


அந்த சுற்றிவளைப்பின்போது, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப்பொருளின் எடை 211 கிலோ 818 கிராமாக இருந்ததுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட அரச இரசாயன பகுப்பாய்வாளர் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அதில் 136 கிலோ 99 கிராம் தூய ஹெரோயின் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
</p><p>


எவ்வாறாயினும், 2017ஆம் ஆண்டு இலங்கையில் தனிநபர் ஒருவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவாகும். இதன் பெறுமதி சுமார் 100 கோடி ரூபாவுக்கு அண்மித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T11:25:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா பிரதமா் மாா்க் காா்னி ஐரோப்பா பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/prime-minister-mark-carney-s-visit-to-europe-1789641682"></link>
            <id>https://canadamirror.com/article/prime-minister-mark-carney-s-visit-to-europe-1789641682</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஐரோப்பிய யூனியனுடனான ஒத்துழைப்பை மேலும் வலப்படுத்தும் நோக்கில் கனடா பிரதமா் மாா்க் காா்னி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஐரோப்பிய யூனியனுடனான ஒத்துழைப்பை மேலும் வலப்படுத்தும் நோக்கில் கனடா பிரதமா் மாா்க் காா்னி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.
</p><p>
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிா்வாகத்துடன் வரி மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், ஐரோப்பிய யூனியனுடனான ஒத்துழைப்பை மேலும் வலப்படுத்தும் நோக்கில் கனடா பிரதமா் மாா்க் காா்னி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30dbe2b3-d040-403f-9160-eaff23ee9573/26-6aabc3d3ddc3d.webp' /></p><h2>புதிய கூட்டணிகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்</h2><p>

கனடாவின் மொத்த ஏற்றுமதியில் சுமாா் 70 சதவீதம் அமெரிக்காவை மட்டுமே சாா்ந்துள்ள நிலையில், அந்த அதீத சாா்புநிலையைக் குறைக்கும் நோக்கில் ஐரோப்பாவுடனான வா்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு மாா்க் காா்னி முன்னுரிமை அளித்து வருகிறாா்.</p><p>

அமெரிக்காவுடன் தொடா்ந்து வா்த்தகம் மேற்கொண்டாலும், மாற்றமடைந்து வரும் புவிசாா் அரசியல் சூழலுக்கு ஏற்ப புதிய கூட்டணிகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என்று கனடா தெரிவித்துள்ளது.
</p><p>
அந்தவகையில், கனடாவின் 2-ஆவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாக விளங்கும் ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றம் ஒட்டாவாவில் புதிய அலுவலகத்தைத் திறக்கவுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய பாதுகாப்பு தளவாடக் கொள்முதல் திட்டத்திலும் கனடா இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T10:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் விமான விபத்து ; 3 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/plane-crash-in-switzerland-3-killed-1789640621"></link>
            <id>https://canadamirror.com/article/plane-crash-in-switzerland-3-killed-1789640621</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.
</p><p>
சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி பகுதியில் அமைக்கப்பட்ட சியான் விமான நிலையத்தில் இருந்து சிர்ரஸ் எஸ்.ஆர்.22டி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903a360a-7e00-414f-ad16-36b28264105e/26-6aabbfaf4a0b4.webp' /></p><p>
அது புறப்பட்ட 10 நிமிடங்களில் திடீரென ஸ்விஸ் மலைப்பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. </p><p>இந்த விமான விபத்தில், இங்கிலாந்து நாட்டினர் 2 பேர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். </p><p>விபத்தின்போது விமானம் தீப்பிடித்து எரிந்ததுடன், புகையும் வெளியேறி உள்ளது. விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.
</p><p>
இதனை அடுத்து, மீட்பு அமைப்பினர்,&nbsp; மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T10:23:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா ஹாரர் ஹவுஸ் ; 16 குழந்தைகளின் தாய் கர்ப்பிணியாக நீதிமன்றத்தில் ஆஜர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mom-16-feral-kids-house-horrors-appears-pregnant-1789630957"></link>
            <id>https://canadamirror.com/article/mom-16-feral-kids-house-horrors-appears-pregnant-1789630957</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் “ஹாரர் ஹவுஸ்” என வர்ணிக்கப்படும் கொடூர சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட 16 குழந்தைகளின் தாய், மீண்டும் கர்ப்பிணியாக நீதிமன்றத்தில் ஆஜரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் “ஹாரர் ஹவுஸ்” என வர்ணிக்கப்படும் கொடூர சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட 16 குழந்தைகளின் தாய், மீண்டும் கர்ப்பிணியாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
 முறையான உணவு, பராமரிப்பு மற்றும் அடிப்படை மனித வசதிகள் இன்றி சுகாதாரமற்ற சூழலில் பூட்டி வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் அண்மையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99125c4e-c28b-42bf-aeae-484fb9195957/26-6aab99eeae9e0.webp' /></p><h2>பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பு</h2><p> </p><p>

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர் மீதான விசாரணை தீவிரமடைந்து வருகிறது.</p><p>


நீதிமன்ற விசாரணையின் போது, தாய் மீண்டும் கர்ப்பமாக இருப்பது போன்ற அறிகுறிகளுடன் ஆஜரான காட்சி, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

ஏற்​கெனவே மீட்கப்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய தகவலானது வழக்கின் தீவிரத்தை மேலும் கூட்டியுள்ளது. </p><p>

குழந்தைகளின் தற்போதைய நிலை மற்றும் அவர்களின் எதிர்கால பாதுகாப்பு குறித்து குழந்தைகள் நல அமைப்புகள் கவனம் செலுத்தி வருகின்றன.
</p><p> 
 இந்தச் சம்பவத்தில், பெற்றோர் மீது குழந்தை சித்திரவதை, கவனக்குறைவு மற்றும் முறையற்ற பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>

குழந்தைகளின் உரிமைகளை மீறி, அவர்களை வெளி உலகத் தொடர்பின்றி தனிமைப்படுத்தி வைத்திருந்த இந்த விவகாரம் தொடர்பான மேலதிக ஆதாரங்களை காவல்துறை அதிகாரிகள் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகின்றனர்</p><p>

இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கையாண்டு வரும் நீதிமன்றம், மீட்கப்பட்ட 16 குழந்தைகளுக்கும் உடனடியாக மருத்துவ உதவிகள் மற்றும் உளவியல் ஆலோசனைகளை வழங்க உத்தரவிட்டுள்ளது.</p><p> 

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்கள் தற்காலிகமாக காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

மேலும், குழந்தைகளின் பெற்றோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-17T10:21:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷில் தட்டம்மை நோய் பரவல் தீவிரம்; நாளாந்தம் 1,000 பேர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/severe-measles-outbreak-in-bangladesh-1789635660"></link>
            <id>https://canadamirror.com/article/severe-measles-outbreak-in-bangladesh-1789635660</id>
            <summary type="text">&amp;nbsp; பங்களாதேஷில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதுவரை ஒரு கோடியே 98 இலட்சத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பங்களாதேஷில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p><p>

இதுவரை ஒரு கோடியே 98 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள போதிலும், நாளாந்தம் புதிதாக சுமார் 1,000 பேருக்கு தட்டம்மை நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1735a2a7-50b9-48e7-bfde-05c05274f741/26-6aabac4e334cd.webp' /></p><h2>&nbsp;நாளாந்தம் புதிதாக சுமார் 1,000 பேருக்கு தட்டம்மை&nbsp;</h2><p>
</p><p>
எதிர்வரும் 26ஆம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தத் தவறிய அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.</p><p>

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை ஒரு இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2016 ஆண்டில் உலகளவில் அதிகளவான தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ள நாடுகளில் பங்களாதேஷும் ஒன்றாகியுள்ளது.

அதிக மக்கள் தொகை நெருக்கம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட காரணிகள் தட்டம்மை பரவல் தீவிரமடைவதற்கு முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.</p><p>

கடந்த 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியதையடுத்து, இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றது.
</p><p>
அதன்பின்னர், புதிய தடுப்பூசி விநியோகஸ்தர்களைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதமே தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு காரணமாக அமைந்ததாக யுனிசெஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , பங்களாதேஷ் சுகாதார அமைச்சகம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T08:57:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-seeks-full-membership-in-uk-led-military-c-1789614938"></link>
            <id>https://canadamirror.com/article/canada-seeks-full-membership-in-uk-led-military-c-1789614938</id>
            <summary type="text">&amp;nbsp;பிரித்தானியா தலைமையிலான &#039;கூட்டுப் படைப் பிரிவில்&#039; முழுநேர உறுப்பினராக இணைவதற்கு கனடா உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்துள்ளதாகவும், இதற்கு பிரித்தானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரித்தானியா தலைமையிலான 'கூட்டுப் படைப் பிரிவில்' முழுநேர உறுப்பினராக இணைவதற்கு கனடா உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்துள்ளதாகவும், இதற்கு பிரித்தானியா தனது ஆதரவை வழங்கியுள்ளதாகவும் கனடா பிரதமர் மார்க் கர்னி தெரிவித்துள்ளார்.
</p><p>அவசர காலங்களில் விரைவாகச் செயற்படும் நோக்கில் 10 நேட்டோ நட்பு நாடுகளைக் கொண்டு 2014 ஆம் ஆண்டு இந்த இராணுவக் கூட்டணி உருவாக்கப்பட்டது.
</p><p>கனடிய இராணுவம் இதுவரை இந்த கூட்டுப் படையின் பல்தேசியப் பயிற்சிகளில் மட்டுமே பங்கேற்று வந்துள்ள நிலையில், தற்போது நிரந்தர உறுப்பினராக இணைய விண்ணப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d96ac307-bd89-498d-a837-c5bf8f399417/26-6aab5b5c76cdb.webp' /></p><p>
கியர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, பிரித்தானிய பிரதமராகப் பதவியேற்ற ஆண்டி பர்ன்ஹாமை , கனடா பிரதமர் மார்க் கர்னி புதன்கிழமை முதன்முறையாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>
பிரித்தானியாவும் கனடாவும் தங்களது பாதுகாப்பு நிதி சார்ந்த திட்டங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு அமைப்பை உருவாக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
</p><p>இவ்விரு திட்டங்களையும் ஒன்றிணைப்பது தொடர்பான இறுதி முடிவு இந்த வாரக் கூட்டங்களில் உடனடியாக வெளிவராவிட்டாலும், விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்பதில் கனடா அரசு உறுதியான நம்பிக்கையுடன் உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T08:00:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: புதிய தகவல் ஒன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/charges-drop-against-man-in-pearson-gold-heist-1789630576"></link>
            <id>https://canadamirror.com/article/charges-drop-against-man-in-pearson-gold-heist-1789630576</id>
            <summary type="text">Crown drops charge against Toronto man accused in Pearson airport gold heist: பியர்சன் விமான நிலைய கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Crown drops charge against Toronto man accused in Pearson airport gold heist: பியர்சன் விமான நிலைய கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர் ஒருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>

கனடா விமான நிலையமொன்றிலிருந்து 400 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் விலக்கிக்கொண்டுள்ளார்கள்.
</p><p>
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5f33921-84fc-4e2c-9368-e282b90e5f2f/26-6aab9872ecfe9.webp' /></p><p>
கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தக்க ஆவணங்களுடன் வந்த ஒருவர் அந்த பார்சல்களை தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
</p><p>
அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ள வேறு சிலர் வந்துள்ளார்கள். அவர்கள் அந்த பார்சல்களுக்கான ஆவணங்களைக் கொடுக்க, அப்புறம்தான் தெரியவந்துள்ளது, ஏற்கனவே வந்த நபர் மோசடியாளர் என்பது.
</p><p>
அந்த பார்சல்களில், 6,600 தங்கக் கட்டிகள் இருந்துள்ளன. 400 கிலோ எடையுள்ள அவற்றின் மதிப்பு அப்போதே சுமார் 20 மில்லியன் டொலர்கள். அத்துடன், மற்றொரு பார்சலில் 2 மில்லியன் டொலர்கள் கரன்சியும் இருந்துள்ளது.&nbsp;</p><p>

சினிமா பாணியில் நடந்த அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 9 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.&nbsp;</p><p>
இந்நிலையில், ரொரன்றோவைச் சேர்ந்த Ali Raza (40) என்னும் நபர், அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24b074cb-ca9b-4a29-bcc1-9ff26c7e7e5d/26-6aab987242be9.webp' /></p><p>
நேற்று புதன்கிழமை, Ali Razaவுக்கு எதிரான வழக்கு, சூழ்நிலை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி, அரசுத் தரப்பு அவர் மீதான குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
</p><p>
தீர்ப்பைக் கேட்ட Ali Raza, தான் நிரபராதி என்றும், தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
என்றாலும், இந்த வழக்கு, நகைத் தொழில் செய்யும் Ali Razaவின் நற்பெயருக்கு களங்கத்தை உருவாக்கிவிட்டது என்றும், அவருக்கு தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றும் கூறியுள்ள அவரது சட்டத்தரணியான Brij Mohan என்பவர், அவர் தனது நற்பெயரை திரும்பப் பெற மேலும் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T07:36:31+00:00</updated>
        </entry>
    </feed>
