<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-13T09:13:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை ; ஈரான் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-need-not-act-as-middle-east-guardian-iran-1789288321"></link>
            <id>https://canadamirror.com/article/us-need-not-act-as-middle-east-guardian-iran-1789288321</id>
            <summary type="text">மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.



இந்தியாவில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.</p><p>



இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக 11 முக்கிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் இந்தியா சென்றுள்ள நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fabb5801-c11b-44c6-b8c5-ee5525f7d00b/26-6aa65f82e71f4.webp' /></p><p>தொடர்ந்து இன்று மலேசியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>


இதன்போது கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி, ஈரான் மற்றும் அதன் பிராந்திய நாடுகளின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை பிராந்தியத்தில் உள்ள முக்கிய சக்திகளும் அந்நாடுகளும் இணைந்தே உறுதி செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
</p><p>


மேலும், மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை என்றும், ஈரான் மக்கள் பல்வேறு அநீதிகளை எதிர்கொண்ட போதிலும், தாம் போரைத் தொடர விரும்பவில்லை என்றும், அமைதிக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது.</p><p> உலகின் முக்கிய எரிபொருள் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
</p><p>


இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p> ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மோதல் காரணமாக மசகு எண்ணெய் விலையும் அதிகரித்து வருவதுடன், இந்த வாரம் ஒரு கொள்கலன் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T08:32:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா குடியுரிமைச் சான்றிதழ் விண்ணப்பங்கள் தேக்கம்: காத்திருப்பு காலம் 33 மாதங்களாக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/proof-of-citizenship-applications-surge-estimated-1789263996"></link>
            <id>https://canadamirror.com/article/proof-of-citizenship-applications-surge-estimated-1789263996</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் புதிய சி-3 சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பரம்பரை வழியிலான குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் புதிய சி-3 சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பரம்பரை வழியிலான குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும், அவற்றுக்கான காத்திருப்பு காலமும் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளன.</p><p>
கனடா குடியேற்ற, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p>
தற்போது 1,36,000க்கும் அதிகமானோர் குடியுரிமைச் சான்றிதழ் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2ef4fb4-606e-4aae-84d3-b7c9754c385b/26-6aa6007e164fd.webp' /></p><p> </p><p>ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 14,000 விண்ணப்பங்கள் அதிகம் ஆகும்.
விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான காலம் 33 மாதங்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. </p><p>ஆகஸ்ட் மாத நிலவரப்படி 25 மாதங்களாக இருந்த இக்காலம், ஒரே மாதத்தில் மேலும் 8 மாதங்கள் உயர்ந்துள்ளது.
பிற நாடுகளிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு மேலதிகமாக 3 முதல் 4 மாதங்கள் வரை தேவைப்படும்.</p><p>
மே 31 நிலவரப்படி, புதிய விதிகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 51 சதவீதம் அமெரிக்காவில் பிறந்தவர்களுடையதாகும். </p><p>அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழலே இந்த திடீர் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் எனப்படுகிறது.
</p><p>அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மெக்சிகோ, பொலிவியா, ஐக்கிய ராஜ்யம், சீனா, இந்தியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.&nbsp;</p><p>சிக்கலான விண்ணப்பங்களுக்கு மேலதிக ஆவணப் பரிசீலனைகளும் தீவிர சரிபார்ப்புகளும் தேவைப்படுவதாலேயே காலதாமதம் ஏற்படுவதாகவும், இதர பல காரணிகளும் இந்த அதிகரிப்புக்குக் காரணம் எனவம் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T07:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[240க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மாயமான கப்பல் ; தீவிரமாகும் மீட்புபணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ship-missing-with-more-than-240-passengers-1789280219"></link>
            <id>https://canadamirror.com/article/ship-missing-with-more-than-240-passengers-1789280219</id>
            <summary type="text">மோசமான வானிலை காரணமாக 240க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் கப்பல் ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, ஜாவா கடலில் தேடுதல் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோசமான வானிலை காரணமாக 240க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் கப்பல் ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, ஜாவா கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

 

இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 140 பேர் இன்னும் காணாமல் போயுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80b04c6b-59ed-454c-a378-b1967fe64471/26-6aa63fdd7d410.webp' /></p><p>
</p><p>
 

விபத்து நடந்த நேரத்தில், குறித்த கப்பல் சுரபயாவிலிருந்து பன்ஜார்மாசின் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில் கடல்வழிப் போக்குவரத்தே பிரதான போக்குவரத்து முறையாகும்.
</p><p>
 

விமானப் பயணம் விலை உயர்ந்ததாக இருப்பதால், பொதுமக்கள் மலிவான கடல்வழிப் பாதைகளை அதிகளவில் நாடி வருகின்றனர்.
</p><p>
 

இருப்பினும், நாட்டின் கடல்சார் துறையில் பாதுகாப்புத் தரங்களும் விதிமுறைகளும் முறையாகச் செயல்படுத்தப்படாததாலேயே இதுபோன்ற உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-13T06:17:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொன்றியலில் ரயில் மோதி 30 வயது ஊழியர் பலி: காவல்துறை விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-say-30-year-old-railroad-worker-killed-1789263625"></link>
            <id>https://canadamirror.com/article/police-say-30-year-old-railroad-worker-killed-1789263625</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் மொன்றியல் நகரில் தண்டவாளத்தில் ரயில் மோதியதில் 30 வயதுடைய ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் மொன்றியல் நகரில் தண்டவாளத்தில் ரயில் மோதியதில் 30 வயதுடைய ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>நகரின் வில்லே-மேரி பகுதியில், ஜாக்-கார்ட்டியர் பாலத்திற்கு அருகில் உள்ள டு லோரிமியர் அவென்யூ மற்றும் நோட்ரே-டேம் தெரு சந்திப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>தண்டவாளத்தில் ஊழியர் பணியில் இருந்தபோது ரயில் நகரத் தொடங்கியதே விபத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மொன்றியல் காவல்துறை செய்தி தொடர்பாளர் மானுவல் குடூர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1203d4c5-f6f6-4d79-9d9c-b931dc03c78b/26-6aa5ff0b79ae6.webp' /></p><p>
உயிரிழந்தவர் 'கனடியன் பசிபிக் கேன்சஸ் சிட்டி' நிறுவனத்தில் மொன்றியல் துறைமுகப் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த 30 வயதுடைய ஊழியர் ஆவார்.
</p><p>பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கும் சக ஊழியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்துயரமான சூழலில் அவர்களுக்கு ஆதரவாக நிற்பதே எங்களின் முதன்மை இலக்கு. ரயில்வே ஊழியர்களின் பாதுகாப்பே எங்களின் உயரிய முன்னுரிமை" என கனடியன் பசிபிக் கேன்சஸ் சிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு பணிக்குச் சென்ற ரயில்வே ஊழியர் மீண்டும் வீடு திரும்பவில்லை.</p><p> இன்று இதைவிட வேறு எதுவும் முக்கியமில்லை. விசாரணை தீவிரமடையும் போது, அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்திடமிருந்து முறையான பதில்களைப் பெற அழுத்தம் கொடுப்போம் என டீம்ஸ்டர்ஸ் கனடா தொழிற்சங்கத் தலைவர்கள் பிரான்சுவா லாபோர்ட் மற்றும் போல் புஷே தெரிவித்துள்ளனர்.
</p><p>விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய மொன்றியல் காவல்துறையின் தெற்குப் பிரிவும், குற்றவியல் தொழில்நுட்பக் குழுவினரும் களத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T04:10:29+00:00</updated>
        </entry>
    </feed>
