<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-24T02:47:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்களால் முடியாவிட்டால், யாராலும் முடியாது ; ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/world-shaken-by-iran-s-stark-warning-1784853562"></link>
            <id>https://canadamirror.com/article/world-shaken-by-iran-s-stark-warning-1784853562</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘தங்களால் கச்சா எண்ணெய் விற்க முடியாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள எந்த நாடும் விற்க முடியாது’ என ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘தங்களால் கச்சா எண்ணெய் விற்க முடியாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள எந்த நாடும் விற்க முடியாது’ என ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும், அந்நாட்டின் தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/333bd9ab-2ce3-42b3-9ad1-5e36c9830e5d/26-6a62b43c11e2c.webp' /></p><p>

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,
</p><p>

“இந்த போரின் நிலைப்பாடு மிகத் தெளிவானது: ஒன்று அனைத்தும் அல்லது எதுவுமே இல்லை. நாங்கள் எண்ணெய் விற்க முடியாத ஒரு பிராந்தியத்தில், வேறு யாரும் எண்ணெய் விற்க முடியாது. ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால், எந்தவொரு உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது.
</p><p>
அதேவேளையில், அமெரிக்கப் படைகள் இல்லாத சூழலில்தான் அந்த ஹார்மூஸ் நீரிணை பாதுகாப்பானதாக இருக்கும். அந்த நீரிணையின் நிலைமை மீண்டும் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது என்பதை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் வர்த்தக கப்பல்களை தெஹ்ரான் தாக்கும் ஒவ்வொரு நேரமும், ஈரானியப் பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என ட்ரம்ப் எச்சரித்த சில மணிநேரங்களில் ஈரானின் இந்த எச்சரிக்கை வந்தது.</p>]]></content>
            <updated>2026-07-24T01:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் காட்டுத்தீ ; அவசர வெளியேற்றப்பபட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/france-wildfire-forces-10-000-evacuations-1784850966"></link>
            <id>https://canadamirror.com/article/france-wildfire-forces-10-000-evacuations-1784850966</id>
            <summary type="text">பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள லேஜ் கேப்-பெரெட் என்ற கடலோர சுற்றுலா நகரின் அருகே இரவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள லேஜ் கேப்-பெரெட் என்ற கடலோர சுற்றுலா நகரின் அருகே இரவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.</p><p> காற்றின் வேகம் காரணமாக இந்த தீ சுமார் 4 ஆயிரத்து 900 ஏக்கர் வனப்பரப்பிற்கு&nbsp; பரவியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78c3e2c7-223e-447f-bcaf-a41704f77d84/26-6a62aa1818971.webp' /></p><p> இதையடுத்து, அங்குள்ள 8 சுற்றுலா முகாம்களில் தங்கியிருந்த பயணிகள் மற்றும் காடுகளின் ஓரமாக வசித்த பொது மக்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.


</p><p>
தகவலறிந்து விரைந்து வந்த 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர். </p><p>எனினும், கடுமையான வறட்சி மற்றும் வெயில் காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் கடும் சவால் நீடிக்கிறது.</p><p> காலநிலை மாற்றத்தால் நடப்பாண்டில் மட்டும் பிரான்சில் 44 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் காட்டுத்தீயால் நாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-23T23:56:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் இந்திய தம்பதி செய்த மோசமான செயல் ; நீதிமன்றின் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-couple-s-shocking-act-abroad-1784835467"></link>
            <id>https://canadamirror.com/article/indian-couple-s-shocking-act-abroad-1784835467</id>
            <summary type="text">கொரோனா சமயத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் மோசடியின் மூலம் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இந்திய வம்சாவளி தம்பதியை குற்றவாளி என்று பிரித்தானிய நீதிமன்றம் அறிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொரோனா சமயத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் மோசடியின் மூலம் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இந்திய வம்சாவளி தம்பதியை குற்றவாளி என்று பிரித்தானிய நீதிமன்றம் அறிவித்தது.
</p><p style="text-align: justify; ">&nbsp;இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்று பரவலின் போது, பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உபகரணங்களின் தேவை அதிகரித்து காணப்பட்ட போது அந்த சமயத்தில் இந்தியர் , புதிதாக கையுறை மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை துவங்கியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4450214-9e73-41e5-bd75-75a024e354a4/26-6a626d8c64345.webp' /></p><p style="text-align: justify; ">

மேலும், கொரோனா மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டை சாதகமாக பயன்படுத்தி, பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டார். </p><p style="text-align: justify; ">அதாவது, ஆர்டர்களுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு விட்டு, மருத்துவ உபகரணங்களை வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டார். இதன்மூலம், சுமார் ரூ.26 கோடி வரை பெற்றுள்ளார்.</p><p style="text-align: justify; "> 
இந்தப் பணத்தை வைத்து ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான போர்ஷே சொகுசு காரையும், பல லட்சம் மதிப்பிலான ரோலக்ஸ் வாட்சுகளையும் வாங்கியுள்ளார். மேலும், வீடுகளை புதுப்பித்தது, ஆடம்பரச் சுற்றுலா செல்வது என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">


இந்த நிலையில், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஜோகேஷ் பண்டாரி மற்றும் அவரது மனைவி மீனாட்சி பண்டாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. </p><p style="text-align: justify; ">மேலும், கடந்த 5 வாரங்களாக லெய்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தம்பதிகள் இருவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-07-23T21:45:34+00:00</updated>
        </entry>
    </feed>
