<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-03T23:32:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - நிபுணர்கள் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-hazards-nepal-disaster-highlights-emerging-1788446835"></link>
            <id>https://canadamirror.com/article/new-hazards-nepal-disaster-highlights-emerging-1788446835</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பாறை மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக உண்டான பேரழிவு, கனடாவின் மாறுபடும் மலைப்பகுதிகளிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பாறை மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக உண்டான பேரழிவு, கனடாவின் மாறுபடும் மலைப்பகுதிகளிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது. </p><p>
புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதும், உறைபனி நிலம் தளர்வதும் புதிய இயற்கை பேரிடர்களை உருவாக்கி வருவதாகக் கனடாவின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p> 
சஸ்காட்செவன் பல்கலைக்கழகத்தின் 'க்ளோபல் வாட்டர் ஃபியூச்சர்ஸ் அப்சர்வேட்டரீஸ்' திட்டத்தின் இயக்குனர் ஜான் பொமரோய் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cfad184-9b0c-4d04-a78c-10e59fff7101/26-6a99887554bee.webp' /></p><p> 
உலகில் அதிக பனிப்பாறைகளையும், பரந்த உறைபனி நிலங்களையும் கொண்ட நாடான கனடாவில் பனி உருகும் வேகம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும், இதுவரை கண்டிராத புதிய ஆபத்துகள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p> 
நேபாளம் மற்றும் திபெத் எல்லையோரப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. </p><p>
இமயமலையில் உறைந்த நிலையில் இருந்த பாறைப் பாளம் உடைந்து, பனிப்பாறையோடு சேர்ந்து சுமார் 1 கிலோமீட்டர் ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்தது. </p><p>
இதனால் பனியில் தேங்கியிருந்த நீர் வெளியாகி, பாறை மற்றும் படிவுகளுடன் சேர்ந்து மணிக்கு 160 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் பாய்ந்தது.</p><p> சில இடங்களில் 50 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலை போல வெள்ளம் சீறிப்பாய்ந்து எல்லையோரச் சாவடிகளை அழித்தது.
கனடாவிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்கெனவே சிறிய அளவில் தொடங்கிவிட்டதாக பொமரோய் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>ஆற்று நீர்மட்டத்தை அளவிடும் வழக்கமான அமைப்புகளைத் தாண்டி, ஆபத்தான மலைப்பகுதிகளைக் கண்காணிக்க புதிய செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T22:51:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள அனர்த்தத்தை முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்; வைரலாகும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/priest-who-predicted-nepal-disaster-1788475887"></link>
            <id>https://canadamirror.com/article/priest-who-predicted-nepal-disaster-1788475887</id>
            <summary type="text">நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p style="text-align: justify; ">



திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பால், நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த ஒகஸ்ட் 26 ஆம் திகதி மாபெரும் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.</p><p style="text-align: justify; "><br></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தப் பேரிடரில், இதுவரை 1,200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட சுமார் 4,200 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


 

 

இந்த நிலையில்,&nbsp; யூடியூப் பக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட விடியோவில், நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படப் போவதாகக் கணித்துக் கூறியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


இதுபற்றி, கடந்த ஜூன் 12 ஆம் திகதி அவர் வெளியிட்டுள்ள விடியோவில்,



“இன்று ஜூன் 12 2026. நேபாளத்தில் ஒரு பெரிய காட்டுத் தீ எரிவதை நான் பார்க்கிறேன். நேபாளத்தின் வனப்பகுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.</p><p style="text-align: justify; "> நேபாளத்தைத் தாக்கும் நிலநடுக்கங்களை நான் பார்க்கிறேன். இந்த நிலநடுக்கம் 7 முதல் 8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்தவையாக இருக்கும். இதனால், சிலர் பலியாவதையும் நான் பார்க்கிறேன்.</p><p style="text-align: justify; ">

நான் வெள்ளத்தைப் பார்க்கிறேன், தண்ணீரைப் பார்க்கிறேன் நேபாளத்தின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. நேபாளத்துக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே கணித்த பாதிரியாரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-03T22:51:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை ; அமெரிக்க தரப்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-warns-of-tough-action-against-iran-supporters-1788463134"></link>
            <id>https://canadamirror.com/article/us-warns-of-tough-action-against-iran-supporters-1788463134</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானுக்கு உதவும் வகையில் செயற்படும் நாடுகள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானுக்கு உதவும் வகையில் செயற்படும் நாடுகள் மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க கிர்கிஸ்தான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனை சந்தித்து கலந்துரையாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a5e7ecf-36c7-4cba-a053-9f4ec30aca77/26-6a99c820142d2.webp' /></p><p>
</p><p>


இந்த சந்திப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மார்கோ ரூபியோ, இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தாம் கருதவில்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><p>



அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறி ஈரானுக்கு வருவாய் ஈட்ட உதவும் நாடுகள் மீதும் அமெரிக்க அரசு தடைகளை விதிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p>



ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், ஈரானுடனும் அமெரிக்காவுடனும் உறவுகளைப் பேணிவரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு நிலைமை சவாலாக அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>


ஈரானின் அணுசக்தித் திட்டத்தை மையமாகக் கொண்டு தொடங்கிய மோதல் தற்போது ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றத்தையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-03T20:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோ மாகாண இடைத்தேர்தல்: 3 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/polls-today-in-three-ontario-byelections-1788452548"></link>
            <id>https://canadamirror.com/article/polls-today-in-three-ontario-byelections-1788452548</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 
குறைந்தது ஒரு தொகுதியிலாவது மிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. </p><p>
குறைந்தது ஒரு தொகுதியிலாவது மிகவும் நெருக்கமான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>
சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் வாழ்வாதாரச் செலவுகள் (அஃபோர்டபிலிட்டி) போன்ற நீண்டகால மாகாணப் பிரச்சினைகளுடன், அமெரிக்காவுடனான வர்த்தகப் போரும் வாக்காளர்களிடையே முக்கிய கவலையாக எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d82e2508-8c02-46b4-ac67-bf1c6b1ffa5a/26-6a999ec887f36.webp' /></p><p> </p><p>
முதலமைச்சர் டக் ஃபோர்ட்டின் புரோகிரசிவ் கன்சர்வேடிவ் கட்சி தங்களின் இரண்டு இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கிறது. புதிய ஜனநாயகக் கட்சி எஞ்சிய ஒரு இடத்தைத் தக்கவைக்கும் நோக்கில் களமிறங்கியுள்ளது.</p><p> 
கன்சர்வேடிவ் பிரதிநிதி நீல் லம்ஸ்டன் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றதை அடுத்து, இங்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 
இங்கு புதிய ஜனநாயகக் கட்சிக்கும் லிபரல் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. </p><p>
கரோலின் முல்ரோனியின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இத்தொகுதியை புரோகிரசிவ் கன்சர்வேடிவ் கட்சியே மீண்டும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
வாக்குப்பதிவு மையம் காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை செயல்படும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T19:31:32+00:00</updated>
        </entry>
    </feed>
