<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-28T09:31:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள மக்களுக்கு அவுஸ்திரேலியா 3.6 மில்லியன் டொலர் நிதியுதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/australia-provides-3-6-million-financial-aid-nepal-1787909162"></link>
            <id>https://canadamirror.com/article/australia-provides-3-6-million-financial-aid-nepal-1787909162</id>
            <summary type="text">&amp;nbsp; இயற்கை பேரிடரால் எற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இயற்கை பேரிடரால் எற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
</p><p>
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் மற்றும் அவுஸ்திரேலியாவின் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/876d10ca-3198-48f6-bf75-338ff171868a/26-6a91542c130d6.webp' /></p><p>நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 469 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
 

இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>


காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக நேபாள இராணுவத்தினரும் மீட்புக் குழுவினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-28T09:23:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வே மன்னர் ஹரால்ட் V காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/king-harald-v-of-norway-has-passed-away-1787904194"></link>
            <id>https://canadamirror.com/article/king-harald-v-of-norway-has-passed-away-1787904194</id>
            <summary type="text">&amp;nbsp; நோர்வேயின் மன்னர் ஹரால்ட் V (King Harald V ), அரிதான ரத்தக் கோளாறுக்கான சிகிச்சைக்காக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனத...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://canadamirror.com/article/norway-king-in-critical-condition-1787831104" target="_blank">&nbsp; நோர்வேயின் மன்னர் ஹரால்ட் V</a> (King Harald V ), அரிதான ரத்தக் கோளாறுக்கான சிகிச்சைக்காக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது 89-வது வயதில் காலமானார்.
</p><p>
ஓஸ்லோவில் உள்ள தேசிய மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 06:35 மணிக்கு (04:35 GMT) அவர் அமைதியாக உயிர்நீத்ததாக ஓஸ்லோவில் உள்ள அரச மாளிகை அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e8c3a1b-6c52-415a-bb99-4d52ba87ad59/26-6a9140c429662.webp' /></p><h2>புகழ்பெற்ற மற்றும் சீர்திருத்தவாதி</h2><p>

மன்னர் மறைவை அடுத்து அரச மாளிகையின் கூரையில் உள்ள அரசக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
</p><p> 

14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு நார்வேயில் பிறந்த முதல் நார்வே மன்னர் ஹரால்ட்&nbsp; (King Harald V ) ஆவார். அவருக்குப் பிறகு அவரது மகன் ஹாகோன் (வயது 53) மன்னராகப் பொறுப்பேற்கிறார்.
</p><p> 
35 ஆண்டுகள் அரியணையில் இருந்த ஹரால்ட் (King Harald V ), முடியாட்சியை நவீனப்படுத்தியவர், சாதாரணக் குடிமகளைத் திருமணம் செய்துகொண்டு மரபுகளை உடைத்தவர்.</p><p> மற்றும் நார்வேயின் மிகக் கடினமான தருணங்களில் மக்களை ஒன்றிணைத்தவர் எனப் புகழ்பெற்ற மற்றும் சீர்திருத்தவாதியான ஒரு தலைவராக&nbsp; (King Harald V ) நினைவுகூரப்படுவார்.
</p><p>
அரச குடும்ப நிகழ்வுகளைக் கவனிப்பவர்கள் அவரை எளிமையானவர், மரியாதைக்குரியவர் மற்றும் அன்புக்குரியவர் என்று குறிப்பிடுகின்றனர்&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T08:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான கனேடிய தம்பதியரைக் காணாமல் தவிக்கும் உறவினர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-couple-missed-in-nepal-floods-1787903660"></link>
            <id>https://canadamirror.com/article/canada-couple-missed-in-nepal-floods-1787903660</id>
            <summary type="text">Canadian couple missing after flash flooding on Nepal Tibet border: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான கனேடிய தம்பதியரைக் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் சோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canadian couple missing after flash flooding on Nepal Tibet border: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான கனேடிய தம்பதியரைக் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
</p><p>
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த, தவல், மேகா ஷா தம்பதியர், நேபாளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2ae8ece-560a-4dff-a789-31f31cb63a91/26-6a913eadcb6e7.webp' /></p><p>
புதன்கிழமையன்று நேபாள திபெத் எல்லையில், திடீரென பனிப்பாறைச் சரிவு ஏற்பட, பனி, சேறு மற்றும் பாறைகள் பெயர்ந்து நதியாக உருமாற, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p>

பெருவெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாக, 1,400க்கும் அதிகமானோர் மாயமாகிவிட்டார்கள்.</p><p>

அப்படி மாயமானவர்களில், தவல், மேகா ஷா தம்பதியரும் அடங்குவர். இந்நிலையில், தம்பதியரைக் காணாமல் அவர்களுடைய உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.</p><p>

தவலின் சகோதரி உறவு முறையினரான நிகிதா ஷா இது குறித்துக் கூறும்போது, தங்கள் உறவினர்கள் ஹொட்டல் கைலாஷ் என்னும் ஹொட்டலில் தங்கியிருந்ததாகவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
</p><p>
அத்துடன், தாங்கள் கனடா அரசின் உதவியை நாடியதாகவும், அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், ஏதாவது தகவல் கிடைத்தால் தெரிவிப்பதாகவும் கூறிவிட்டதாகவும் தெரிவிக்கிறார் நிகிதா.
</p><p>
அவர்களைப் பொருத்தவரை, எதுவும் தெரியவில்லை என்று கூறுவது மிகவும் எளிது என்றும், ஆனால், ஏதாவது உறுதியான தகவல் கிடைத்தால் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறுகிறார் நிகிதா.
</p><p>
இதற்கிடையில், நேபாளப் பெருவெள்ளத்தில் காணாமல் போன கனேடியர்களின் எண்ணிக்கை 25இலிருந்து 30ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T07:56:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் மீது மோதியகார்; இருவர் உயிரிழப்பு 9 பேர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/car-crashes-into-crowd-at-french-bus-stop-two-dead-1787893423"></link>
            <id>https://canadamirror.com/article/car-crashes-into-crowd-at-french-bus-stop-two-dead-1787893423</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வடமேற்கு பிரெஞ்சு நகரமான கேனில், புதன்கிழமை (26) மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று புகுந்ததில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததுடன் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வடமேற்கு பிரெஞ்சு நகரமான கேனில், புதன்கிழமை (26) மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று புகுந்ததில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் காயமடைந்த&nbsp; நிலையில் அவர்களில் ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அன்னாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p> 

 விபத்து குரித்த விசாரணை இப்போதுதான் தொடங்கியுள்ளது என்று துணை அரசு வழக்கறிஞர் பிலிப் லியோனார்டோ வியாழக்கிழமை அதிகாலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adfec840-8ec6-433e-b23c-9945e5a6f99c/26-6a9116b15d011.webp' /></p><h2>விபத்தை ஏற்படுத்திய ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர்&nbsp;</h2><p>

விபத்தை ஏற்படுத்திய ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர் என விவரிக்கப்பட்ட 26 வயது நபர் ஒருவர், புதன்கிழமை இரவு நகரின் பிரதான ரயில் நிலையம் அருகே மக்கள் கூட்டத்தின் மீது காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்பட்டதை அடுத்து, காவலில் வைக்கப்பட்டார்.
</p><p>
சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், விபத்தில் ஏற்பட்ட காயங்களால் மற்றொருவர் பின்னர் உயிரிழந்ததாகவும் பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>

விபத்தை அடுத்து ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் சம்பவ இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் கைது செய்யப்பட்டார் என்று பிரெஞ்சு ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்கு ஒரு தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. 

தாக்குதலுக்குப் பிறகு, சந்தேக நபர் உளவுத்துறைக்கு அறிமுகமானவர் அல்ல என்றும், ஆனால் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக அவருக்கு முன்பு காவல்துறையுடன் தொடர்பு இருந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-28T07:16:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா ஏரியின் பெயரை மாற்றிய டிரம்ப்; சுட சுட பிரதமர் மார்க் கார்னி பதிலடி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-renames-canadian-lake-mark-carney-retort-1787897383"></link>
            <id>https://canadamirror.com/article/trump-renames-canadian-lake-mark-carney-retort-1787897383</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வின் பெயரை அமெரிக்க அரசு பயன்பாட்டில் “Lake America” என மாற்ற உத்தரவிட்டுள்ளார்.</p><p> 
 
 இந்த பெயர் மாற்றம் அமெரிக்க மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு மட்டுமே பொருந்தும். கனடா, சர்வதேச அமைப்புகள் அல்லது பிற நிறுவனங்கள் பழைய பெயரான Lake Ontario-வை தொடர்ந்து பயன்படுத்தலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5a3c4f3-b361-40c5-bf49-e174d2709d92/26-6a912628d8e21.webp' /></p><h2>நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது</h2><p>
</p><p> 
இந்த அறிவிப்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
400 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்ட இந்த ஏரியின் பெயர், கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளாக உருவாவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அத்துடன் நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுலும் “நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
</p><p> 
Lake Ontario-வின் நீர்ப்பரப்பில் சுமார் 52 சதவீதம் கனடாவிலும், மீதமுள்ள பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலும் அமைந்துள்ளது.</p><p>

 இதனால் பெயர் மாற்றம் கனடாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஏற்கனவே கனடாவுடன் பல பில்லியன் டாலர் வர்த்தக வரிகள் தொடர்பாக மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை அமெரிக்கா - கனடா உறவை மேலும் பதற்றமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-28T07:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் அரிய வகை மலேரியா பாதிப்பு ; இரு ஊழியர்கள் பலி; தீவிர விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/malaria-at-frankfurt-airport-two-employees-dead-1787896882"></link>
            <id>https://canadamirror.com/article/malaria-at-frankfurt-airport-two-employees-dead-1787896882</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள அரிய வகை மலேரியா பாதிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில் பணியாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள அரிய வகை மலேரியா பாதிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில் பணியாற்றிய ஆறு ஆண் ஊழியர்களுக்கு “மலேரியா டிராபிகா” எனப்படும் தீவிரமான மலேரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p> இவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

மற்ற நான்கு பேரும் தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0e796b9-1805-4111-9d62-d3ec77261754/26-6a912433ee341.webp' /></p><h2>விமானம் மூலம்&nbsp; &nbsp;கொசுக்கள் ஜெர்மனிக்குள் வந்திருக்கலாம்&nbsp;</h2><p>&nbsp;பாதிக்கப்பட்ட எந்த ஊழியரும் சமீபத்தில் மலேரியா அதிகமாக காணப்படும் நாடுகளுக்கு பயணம் செய்யவில்லை. இதனால் விமானம் மூலம் பாதிக்கப்பட்ட கொசுக்கள் ஜெர்மனிக்குள் வந்திருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.</p><p> விமானத்தில் வந்த கொசுக்கள் விமான நிலைய ஊழியர்களை கடித்ததன் மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற சம்பவம் “Airport Malaria” என அழைக்கப்படுகிறது.
</p><p> 
ஜெர்மனியில் கடந்த பல ஆண்டுகளாக உள்ளூரிலேயே மலேரியா பரவுவது மிகவும் அரிதானதாக உள்ளது. எனவே பயண வரலாறு இல்லாதவர்களுக்கு மலேரியா இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் உடனடியாக சந்தேகிக்காமல் போகும் அபாயம் உள்ளது.</p><p> இதனால் நோய் கண்டறிதலில் தாமதம் ஏற்பட்டு, தீவிர பாதிப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கலாம் என ராபர்ட் கோச் நிறுவனம் எச்சரித்துள்ளது.
</p><p> 
பிராங்க்பர்ட் விமான நிலையத்தைச் சுற்றிலும் தற்போது கொசுப் பொறிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிடிபடும் கொசுக்கள் பெல்ஜியத்தில் உள்ள வெப்பமண்டல மருத்துவ நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு மரபணு பரிசோதனை செய்யப்பட உள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T05:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தைப் போன்று இலங்கையிலும் அனர்த்தங்கள் ஏற்படலாம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/warning-about-disasters-like-nepal-1787884134"></link>
            <id>https://canadamirror.com/article/warning-about-disasters-like-nepal-1787884134</id>
            <summary type="text">&amp;nbsp;நேபாளத்தில் இடம்பெற்ற பேரழிவைப் போன்ற அசம்பாவிதங்கள் சிறிய அளவிலேனும் இலங்கையிலும் எந்நேரத்திலும் நிகழக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நேபாளத்தில் இடம்பெற்ற பேரழிவைப் போன்ற அசம்பாவிதங்கள் சிறிய அளவிலேனும் இலங்கையிலும் எந்நேரத்திலும் நிகழக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன எச்சரித்துள்ளார்.</p><p>
நேபாளப் பேரழிவு இலங்கைக்கு நேரடிப் படிப்பினையைத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட 'திட்வா' சூறாவளியின் போது சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு இதற்கு சிறந்த உதாரணமாகும். </p><p>அந்த மண்சரிவினால் அப்பகுதியின் கால்வாய் அடைக்கப்பட்டு, முழு கிராமமும் நீரில் மூழ்கியதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6fdf022-49ff-43ff-9b5a-a6fd38a3dec6/26-6a90f268c972c.webp' /></p><p>
</p><p>ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் உள்ள சிதைவடைந்த பாறைகளும் பெரிய மண் அடுக்குகளும் சரிந்து வீழும் போது நீர்நிலைகள் அடைபடக்கூடும். இதனால் தேங்கும் பெருமளவிலான நீர் திடீரென தடையை உடைத்துக்கொண்டு கீழ்நோக்கிப் பாய்வதால் எதிர்பாராத பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>
சாதாரண மண்சரிவுப் பகுதிகளை வரைபடமாக்குவது போல, நீர்நிலைகள் அடைக்கப்பட்டு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயகரமான பகுதிகளையும் விரைவாக வரைபடமாக்கி, முன்அறிவிப்புகளை விடுப்பது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் சரசவிகம பகுதியில் இடம்பெற்ற பேரழிவு போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும் என பேராசிரியர் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T04:24:15+00:00</updated>
        </entry>
    </feed>
