<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-21T10:17:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயானா படகு விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலி, 83 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/27-dead-83-missing-in-guyana-ferry-accident-1784622951"></link>
            <id>https://canadamirror.com/article/27-dead-83-missing-in-guyana-ferry-accident-1784622951</id>
            <summary type="text">தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால் இடம்பெற்ற பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால் இடம்பெற்ற பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>கடந்த சனிக்கிழமை (18) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மீட்புப் பணியாளர்கள் இதுவரை 69 பேரை உயிருடன் மீட்டுள்ள நிலையில், மேலும் 83 பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்பத்தில் குறித்த படகில் 133 பேர் பயணித்ததாக பதிவுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. எனினும், மீட்கப்பட்டவர்களில் பலரின் பெயர்கள் உத்தியோகபூர்வ பயணிகள் பட்டியலில் இடம்பெறாததால், படகில் 179 பேர் வரை பயணித்திருக்கலாம் என கயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e31e2509-a985-4b19-8233-a0aca0028196/26-6a5f2f69080db.webp' /></p><p>விபத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், படகின் ஓட்டுநர் மற்றும் ஊழியர் ஒருவர் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்திய பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுவான் எட்ஜில் தெரிவித்துள்ளார்.
</p><p>
பணிநேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியமை மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், படகோட்டி மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>கயானா தலைநகர் ஜோர்ஜ்டவுனில் இருந்து போர்ட் கைடூமா பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த படகு, சனிக்கிழமை இரவு 11.01 மணியளவில் ஆபத்து சமிக்ஞையை அனுப்புவதற்கு முன்பே கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விபத்தில் உயிர் தப்பிய பயணி எலினா மூன்சாமி, மிகப்பெரிய அலை ஒன்று மோதிய சில விநாடிகளிலேயே படகுக்குள் நீர் புகுந்து அது கவிழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

"மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்றைப் பிடித்துக்கொண்டு உயிர் பிழைத்தேன்.</p><p>ஆனால், எனது 2 வயது குழந்தையின் கையை பிடித்திருந்தபோதும், அலையின் வேகத்தில் எனது கை நழுவி குழந்தை நீரில் மூழ்கியது" என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b6b2ae4-5462-443a-94da-3fa3c7573fa9/26-6a5f2f69ad7b1.webp' /></p><p>மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக அருகிலுள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து பிரெஞ்சு இராணுவம் 12 அனுபவமிக்க உயிர்காப்புப் பணியாளர்கள், இரண்டு வைத்தியர்கள் மற்றும் ஒரு மெக்கானிக் ஆகியோரை அனுப்பியுள்ளது.
</p><p>
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சிறிய தனியார் மீன்பிடிப் படகுகள் கடலில் மிதந்து கொண்டிருந்த 17-க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளன.
</p><p>
மீட்கப்பட்ட 69 பேரில் 15 சிறுவர்களும் அடங்குகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் மார்க் பிலிப்ஸ்,

"காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதே எங்களின் முழு கவனமாக உள்ளது. இன்னும் நம்பிக்கை உள்ளது. </p><p>இந்த துயரச் சம்பவத்திற்கு அதிகாரிகளின் அலட்சியம், விதிமீறல் அல்லது குற்றவியல் தவறுகள் காரணமாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்" என எச்சரித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-21T08:36:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விளையாட்டு வீரர்: இருவர் பலியான பரிதாபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/2-dies-in-candian-footballer-drives-car-accident-1784622047"></link>
            <id>https://canadamirror.com/article/2-dies-in-candian-footballer-drives-car-accident-1784622047</id>
            <summary type="text">கனடாவில் கார் விபத்தொன்றில் இருவர் பலியான நிலையில், அவர்களில் ஒருவர் இந்தியர் என்பதும் மற்றவர் கனேடிய கால்பந்து விளையாட்டு வீரர் என்பதும் தெரியவந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் கார் விபத்தொன்றில் இருவர் பலியான நிலையில், அவர்களில் ஒருவர் இந்தியர் என்பதும் மற்றவர் கனேடிய கால்பந்து விளையாட்டு வீரர் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p>
கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலை 11இல், சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில், தவறான திசையில் சென்ற ஒரு கார், எதிரே வந்துகொண்டிருந்த கார் மீது மோதியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e4b8f61-af96-40fc-8463-3ec26e978754/26-6a5f2be0cca81.webp' /></p><p>
அந்த கோர விபத்தில், இரண்டு கார்களின் சாரதிகளும் பலியானார்கள். </p><p>அவர்களில், தவறான திசையில் காரை செலுத்தியவர் ஒரு கனேடியர். அவரது பெயர் ஜேடன் (Jayden Dalke, 30). ஜேடன், பிரபல கால்பந்து அணியான Saskatchewan Roughriders அணி வீரர்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஜேடனின் காரில் கஞ்சாவும், மதுபானமும் இருந்துள்ளன. அவர் பெட்ரோல் நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமலே அங்கிருந்து சென்றுவிட்டதாக பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆனால், அவர் போதையிலிருந்தாரா என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2313f198-1971-4a56-8c3e-b77c8a3b2eb1/26-6a5f2be027975.webp' /></p><p>
ஜேடனின் கார் மோதி உயிரிழந்தவர், பீஷ்மா ராஜ்யகுரு (22) என்னும் இந்தியர். பொலிசார் ராஜ்யகுருவைக் குறித்து தெரிவித்த தகவல் அவ்வளவே!</p><p>

இதற்கிடையில், இந்தியாவிலிருக்கும் ராஜ்யகுருவின் பெற்றோர், தங்கள் மகனுடைய மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது நண்பர்கள், எப்படியாவது பணம் திரட்டி அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
ராஜ்யகுருவின் பெற்றோருக்கு தங்கள் மகனை அணைத்துக்கொள்ளும் ஒரு இறுதி வாய்ப்பையும், அவருக்கு இறுதிச்சடங்கு செய்யும் வாய்ப்பையும் எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுவது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-21T08:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் பொருட்கள் மீது 50% வரி விதித்தார் டொனால்ட் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/donald-trump-imposes-50-tariff-on-canadian-goods-1784615421"></link>
            <id>https://canadamirror.com/article/donald-trump-imposes-50-tariff-on-canadian-goods-1784615421</id>
            <summary type="text">அமெரிக்க சிற்றூந்துகள், பால் மற்றும் மதுபானப் பொருட்கள் மீதான &quot;சீரற்ற நடத்தையை&quot; கண்டிக்கும் வகையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க சிற்றூந்துகள், பால் மற்றும் மதுபானப் பொருட்கள் மீதான "சீரற்ற நடத்தையை" கண்டிக்கும் வகையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகையான பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 50% வரியை விதித்துள்ளார்.</p><p>

இந்த புதிய வரிகள் 30 நாட்களில் அமுலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e7f5c7d-c572-4352-8e5d-043c203287c1/26-6a5f11ff31773.webp' /></p><p>

இருப்பினும், எரிசக்தி, கனிம வளங்கள் மற்றும் மீன் உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதிகள் இந்த வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதேவேளை, அமெரிக்காவின் இந்த ஒருபக்க நடவடிக்கையானது கனடா - அமெரிக்கா - மெக்சிகோ ஒப்பந்தத்தை மீறுவதாகவும், கனடாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கனடிய பிரதமர் மார்க் கார்னி கண்டனம் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
வாகனங்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் தொடர்பான வர்த்தக முரண்பாடுகளே இந்த புதிய வரி விதிப்புக்கு முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-21T06:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் ; ஈரானை குறிவைக்கும் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tensions-in-strait-of-hormuz-trump-targets-iran-1784609296"></link>
            <id>https://canadamirror.com/article/tensions-in-strait-of-hormuz-trump-targets-iran-1784609296</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்கா தொடர்ந்து 10-ஆவது நாளாக இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.</p><p> சமீபத்தில் ஜோர்தான் மற்றும் ஈராக்கில் நடைபெற்ற தாக்குதல்களில் மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக இந்த இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c36f43e-4742-4dcb-ab28-28890e988357/26-6a5efa1229bc2.webp' /></p><p>இந்தச் சம்பவத்தையடுத்து, ஈரான் தனது நடவடிக்கைகளுக்கு "கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். </p><p>அதனைத் தொடர்ந்து, ஈரானின் இராணுவத் தளங்கள் மற்றும் தகவல் தொடர்பு மையங்களை இலக்கு வைத்து அமெரிக்கா பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
</p><p>
மறுபுறம், பஹ்ரைன், ஜோர்தான் மற்றும் சிரியாவில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. </p><p>மேலும், அமெரிக்காவுடன் தமது நாடு தற்போது "பெரிய அளவிலான போரில்" ஈடுபட்டுள்ளதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
</p><p>
பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்தான் தனது வான்வெளிக்குள் நுழைந்த மூன்று ஈரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> அதேபோல், குவைத் இராணுவமும் ஈரானிய ட்ரோன்களை இடைமறித்து செயலிழக்கச் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு எண்ணெய் தாங்கி கப்பல்கள் வெடித்துச் சிதறியதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. </p><p>எனினும், இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம் (CENTCOM) மறுத்து, அத்தகைய தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது.</p><p>

இதனால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை மேலும் பதற்றமடைந்துள்ளதுடன், சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-21T04:48:29+00:00</updated>
        </entry>
    </feed>
