<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-15T16:32:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடைக்கால முகாமில் சிறுவனுடன் தகாத செயலில் ஈடுபட்ட 46 வயது பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cook-charged-for-sexually-assaulting-youth-1789482285"></link>
            <id>https://canadamirror.com/article/cook-charged-for-sexually-assaulting-youth-1789482285</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், 16 வயதிற்குட்பட்ட சிறுவனுடன் தகாத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 46 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், 16 வயதிற்குட்பட்ட சிறுவனுடன் தகாத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 46 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார்.</p><p>
நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள ஜான்ஸ்டன் பாயிண்ட் பகுதியில் இயங்கி வந்த கோடைக்கால முகாம் ஒன்றில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், அங்கிருந்த சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக ஆகஸ்ட் 24ம் திகதி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், செப்டம்பர் 8 அன்று போர்ட் எல்கின் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் வைத்து ஜெனிஃபர் காலன் அபோட் என்ற பெண்ணைக் கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db9d871-8468-49c5-a27a-4219bc0fc88e/26-6aa9552ef232e.webp' /></p><p> </p><p>
செப்டம்பர் 9 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெனிஃபர் மீது மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>
பாலியல் தாக்குதல், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தலையீடு, 16 வயதிற்குட்பட்ட சிறுவர் முன் அநாகரீகமாக நடந்துகொள்ளுதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>தற்போது சில நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இவர், அக்டோபர் 7 அன்று மாங்க்டன் மாகாண நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>
இந்தச் சம்பவத்தில் வேறு ஏதேனும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும், பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை எந்த நேரத்திலும் பொதுமக்கள் காவல்துறைக்குத் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் அறிந்தவர்கள் உள்ளூர் காவல்துறையையோ அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' (1-800-222-8477) அமைப்பையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T16:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஜோதிடரிடம் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்த பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-devastated-after-losing-96k-in-1789481669"></link>
            <id>https://canadamirror.com/article/woman-devastated-after-losing-96k-in-1789481669</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் கடுமையான உடல்நலப் பாதிப்பிலும் குடும்ப உறுப்பினர்களின் இழப்பிலும் தவித்த தருணத்தைப் பயன்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் கடுமையான உடல்நலப் பாதிப்பிலும் குடும்ப உறுப்பினர்களின் இழப்பிலும் தவித்த தருணத்தைப் பயன்படுத்தி, ஜோதிடர் ஒருவர் தன்னிடம் இருந்து சுமார் 96,000 டாலர்களை ஏமாற்றிவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
</p><p>தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்தப் பெண், தன்னை 'நேன்சி' என்ற பெயரில் ஊடகத்திடம் தனது துயரத்தைப் பகிர்ந்துள்ளார்.
</p><p>இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கடுமையான இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்த நேன்சி, அதே காலகட்டத்தில் தனது தந்தை மற்றும் சகோதரரை அடுத்தடுத்து இழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c8cbb6-aed5-4504-b8c5-e986bb822035/26-6aa952c7685b1.webp' /></p><p> </p><p>
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்தபோது, இன்ஸ்டாகிராமில் வெறும் 30 கட்டணத்தில் ஜோதிடம் பார்க்கப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்து அந்த ஜோதிடரை அணுகியுள்ளார்.</p><p>
ஜோதிடத்தைச் சந்தித்தபோது, நேன்சியைச் சுற்றிப் பொல்லாத ஆவிகளும், கடுமையான பில்லி சூனியமும் இருப்பதாக அச்சமூட்டப்பட்டுள்ளது.
</p><p>இந்தச் சூனியத்தினால் விரைவில் நீங்கள் முடங்கி, சக்கர நாற்காலியில் அமர நேரிடும்; இறுதியில் உயிரிழப்பீர்கள்" என்று ஜோதிடர் அச்சுறுத்தியுள்ளார்.</p><p>
ஒரு துர்சக்தியை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து ஏரியில் புதைக்க 25,000 டொலர் வேண்டும் எனக் கேட்டுப் பெற்றுள்ளார்.
</p><p>அதன் பின்னர் மேலும் 7 துர்சக்திகள் இருப்பதாகக் கூறி, சிறுகச் சிறுக நேன்சியின் வாழ்நாள் சேமிப்பான மொத்தம் 96,000 டெலாலர்களை பறித்துள்ளார்.</p><p>
தனது சேமிப்பு முழுவதையும் கொடுத்த பிறகும் நேன்சியின் உடல்நலத்திலோ பிரச்சினைகளிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை.</p><p> "இறுதியில் எதுவுமே நடக்கவில்லை. நான் மிகப்பெரிய முட்டாள்தனம் செய்துவிட்டேன். தினமும் அழுதுகொண்டிருக்கிறேன்" என நேன்சி கதறியுள்ளார்.
</p><p>இத்தகைய ஜோதிட மோசடிகள் பயம், அச்சுறுத்தல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சூழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை என கனடா மோசடி எதிர்ப்பு மையம் எச்சரித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T16:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து 111 பேர் நாடு கடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cbsa-has-deported-amid-extortion-1789472113"></link>
            <id>https://canadamirror.com/article/cbsa-has-deported-amid-extortion-1789472113</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவிலிருந்து 111 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் கப்பம் கோரல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவிலிருந்து 111 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கனடாவில் கப்பம் கோரல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிரான நாடு தழுவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 111 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது. </p><p>
கடந்த ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட 188 வெளியேற்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த நாடுகடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31411d4b-d3c1-4f24-aae0-f6818fcf0d9a/26-6aa92d72b302d.webp' /></p><p>இவற்றில் பெரும்பாலான வெளியேற்றங்கள் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் டொராண்டோ பெரும்பாக பகுதியில் நிகழ்ந்துள்ளன.</p><p> 
குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவில் வசிக்கத் தகுதியற்றவர்களைக் கண்டறிந்து, விசாரித்து, வெளியேற்ற கனடா முழுவதிலும் உள்ள சட்ட அமலாக்கப் பங்காளிகளுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>இத்திட்டம் ஆகஸ்ட் 2025-இல் பசிபிக் மற்றும் பிரெய்ரி பிராந்தியங்களில் தொடங்கப்பட்டு, மூன்று மாதங்களுக்குப் பின்னர் டொராண்டோ பகுதிக்கு விரிவாக்கப்பட்டது.</p><p>பசிபிக் பிராந்தியத்தில் 91 வெளியேற்ற உத்தரவுகள் – 58 பேர் நாடுகடத்தல், பிரெய்ரி பிராந்தியம் 47 வெளியேற்ற உத்தரவுகள் – 30 பேர் நாடுகடத்தல், கிரேட்டர் தொரண்டோ பகுதி 50 வெளியேற்ற உத்தரவுகள் – 23 பேர் நாடுகடத்தல் என விபரிக்கப்பட்டுள்ளது.</p><p>
கடந்த ஆண்டில் மட்டும் தீவிர குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் கொண்ட 1,010 பேர் உட்பட மொத்தம் 23,160 தகுதியற்ற நபர்களை கனடா நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.</p><p> 
தற்போது எல்லை முகமையகத்தை விரிவாக்கம் செய்ய 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 30.4 மில்லியன் டொலர் நிதி மூலம் மேலும் 1,000 புதிய அதிகாரிகளை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - ஐரோப்பிய ஒன்றியம் புதிய கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-european-union-new-partnership-1789467851"></link>
            <id>https://canadamirror.com/article/canada-european-union-new-partnership-1789467851</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவுடன் நிலவும் கடும் வர்த்தகப் பதற்றத்துக்கு மத்தியில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையிலான உத்திசார் கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவுடன் நிலவும் கடும் வர்த்தகப் பதற்றத்துக்கு மத்தியில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையிலான உத்திசார் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.
</p><p>


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் கனடா மீது வர்த்தக அழுத்தங்களை அதிகரித்து வருவதுடன், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு புதிய வரிகளை விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe86ee2c-3ded-40d8-8ca5-44e4e9777752/26-6aa91ccc5ac78.webp' /></p><h2>ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பினராக இணையப் போவதில்லை</h2><p>
</p><p>


இந்த நிலையில், கனடா தனது வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை பல்வகைப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றது.
</p><p>


கனடா, ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பினராக இணையப் போவதில்லை என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக, இரு தரப்புக்கும் இடையே விசேட உத்திசார் கூட்டணியை உருவாக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p><p>



பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி மற்றும் முக்கியத் தாதுக்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதும், தொழிலாளர்கள் மற்றும் சேவைகள் எல்லைகளை கடந்து செல்வதற்கான தடைகளை குறைப்பதும் இந்த கூட்டணியின் முக்கிய நோக்கங்களாகவுள்ளன.
</p><p>


மேலும், கடலுக்கு அடியில் தகவல் தொடர்பு கேபிள்களை அமைத்தல், பிரமாண்ட தரவு மையங்களை இணைந்து உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களும் பரிசீலிக்கப்படுகின்றன. 

கனடா குடிமக்கள் ஐரோப்பாவில் விசா இன்றி வாழவும் பணியாற்றவும் வாய்ப்பளிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இந்த புதிய கூட்டணியை இறுதி செய்வதற்காக கனடா பிரதமர் மார்க் கார்னி அடுத்த வாரம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.</p><p> அப்போது ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.



எனினும், இத்தகைய ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சில உறுப்பு நாடுகளில் உள்ளூர் அரசியல் எதிர்ப்புகள் எழலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-15T13:38:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன நபரின் இதயம், சிறுநீரகத்தில் தையல் ஊசி; அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/surgical-needles-found-china-man-heart-and-kidney-1789479231"></link>
            <id>https://canadamirror.com/article/surgical-needles-found-china-man-heart-and-kidney-1789479231</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவில் சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரில் இரத்தம் வெளியேறும் பிரச்சனையுடன் மருத்துவமனைக்குச் சென்ற 35 வயது நபர் ஒருவரின் இதயத்தில் 36 மி.மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவில் சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரில் இரத்தம் வெளியேறும் பிரச்சனையுடன் மருத்துவமனைக்குச் சென்ற 35 வயது நபர் ஒருவரின் இதயத்தில் 36 மி.மீ நீளமுள்ள தையல் ஊசி ஒன்று புதைந்திருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
</p><p>
 பாதிக்கப்பட்ட சீனருக்கு&nbsp; அறிவுசார் குறைபாடு உள்ள நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சி.டி பரிசோதனையில் இதயத்தைத் தவிர வயிற்றுப் பகுதி, இடுப்பு எலும்பு, சிறுநீர்ப்பை மற்றும் ஆணுறுப்பு உள்ளிட்ட பல இடங்களிலும் உலோகப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca77265-f43d-4d97-8b9d-fb03e778169b/26-6aa94940c3ce2.webp' /></p><h2>உடலின் பல இடங்களிலும் உலோகப் பொருட்கள்</h2><p>&nbsp; இதயத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்புப் பையைத் துளைத்துக்கொண்டு அதன் கூர்மையான முனை இடது வென்ட்ரிகிளுக்குள் சென்று இதயத்துடிப்போடு சேர்ந்து இயங்கி வந்த அந்த ஊசியை அகற்ற மருத்துவர்கள் உடனடியாகச் அறுவை சிகிச்சை செய்தனர். </p><p>

மேலும், அவரது சிறுநீர்ப்பையில் நீண்ட நாட்களாக இருந்திருக்கக் கூடிய மற்ற ஊசிகளையும் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.</p><p>
 
 சிகிச்சைக்குப் பின் அவர் நலம் பெற்றுள்ள போதிலும், இந்த ஊசிகள் அவரது உடலுக்குள் எப்படிச் சென்றன என்பது குறித்து அவராலோ அல்லது அவரது குடும்பத்தினராலோ எந்தத் தெளிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T13:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன அழுத்தத்தை போக்க கடலை நோக்கி சத்தமிட்ட சென் பிரான்சிஸ்கோ மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/san-francisco-crowns-a-screaming-champion-1789471703"></link>
            <id>https://canadamirror.com/article/san-francisco-crowns-a-screaming-champion-1789471703</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ நகரில்,&amp;nbsp; &amp;nbsp;நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலை நோக்கி ஒரே நேரத்தில் உரக்கச் சத்தமிட்ட வினோத நிகழ்வு இடம்பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ நகரில்,&nbsp; &nbsp;நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலை நோக்கி ஒரே நேரத்தில் உரக்கச் சத்தமிட்ட வினோத நிகழ்வு இடம்பெற்றுள்ளது.</p><p>மக்களின் மன அழுத்தத்தை வெளிப்படுத்துவதற்கான வித்தியாசமான முயற்சியாக இந்த நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/801c1f2d-6439-4076-9e9f-704dd54f8741/26-6aa92bd8963a7.webp' /></p><h2>கடலை நோக்கி அடிவயிற்றிலிருந்து அலறும் நிகழ்வு</h2><p>

சென் பிரான்சிஸ்கோவின் ஓஷன் பீச் கடற்கரையை ஒட்டியுள்ள ‘விஸ்டா டெல் மார்’ (Vista del Mar )பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
</p><p>
“கடலை நோக்கி அடிவயிற்றிலிருந்து அலறும் நிகழ்வு” என்ற பெயரில் சென் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த டேனியல் ஈகன் (Daniel Egan ) என்பவரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p>

நவீன வாழ்க்கை முறையில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அழுத்தங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, வீட்டு வாடகை உயர்வு, செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சியால் உருவாகும் வேலைவாய்ப்பு குறித்த அச்சம், தனிமை, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரச் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன அழுத்தத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்துவதற்காக மக்கள் இதில் பங்குபற்றனர்.
</p><p>

இந்த நிகழ்வுக்கு முன்னதாக, குரலின் ஒலி அளவு, நீடிக்கும் காலம் மற்றும் கத்தும் பாணி ஆகியவற்றின் அடிப்படையில் போட்டியொன்றும் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஒலிம்பியா குக்லியெமோட்டோ என்ற பெண் 121.9 டெசிபல் அளவில் உரக்கச் சத்தமிட்டதன் மூலம் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு சிறிய ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
உரக்கச் சத்தமிடும் போட்டிக்கு முன்னதாக, பங்கேற்பாளர்களுக்கு குரல் தசைகளைத் தயார்படுத்தும் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இறுதியாக, மாலை வேளையில் போடிடியில் பங்கேற்ற அனைவரும் ஒன்றிணைந்து கடலை நோக்கி ஒரே நேரத்தில் உரக்கக் சத்தமிட்டுள்ளனர்.
</p><p>
நிகழ்வின் நிறைவில், பங்கேற்பாளர்கள் தாங்கள் கொண்டு வந்த பழங்களைப் பகிர்ந்து உண்டு, சமூக ரீதியாக ஒன்றிணைந்து இந்த நிகழ்வை நிறைவு செய்தனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T11:25:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் அதிரடி; புடினின் முதன்மை ஜெனரல் கொல்லப்பட்டதாகத் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/putin-s-top-general-has-been-killed-ukraine-attack-1789450911"></link>
            <id>https://canadamirror.com/article/putin-s-top-general-has-been-killed-ukraine-attack-1789450911</id>
            <summary type="text">&amp;nbsp; உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் நடத்திய அதிநவீன ஏவுகணைத் தாக்குதலில், ரஷ்ய அதிபர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் நடத்திய அதிநவீன ஏவுகணைத் தாக்குதலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினால் ‘ரஷ்யாவின் வீரன்’ (Hero of Russia) என நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் செர்ஜி மில்சாகோவ் (Sergei Milchakov) கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>

ரஷ்ய ராணுவத்தின் தெற்கு ராணுவ மண்டலத்திற்குட்பட்ட 51-வது ஒருங்கிணைந்த படைகளின் (51st Combined Arms Army) தளபதியாகச் செயல்பட்டு வந்த செர்ஜி மில்சாகோவ், உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் அவ்டிவ்கா உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றுவதற்கான ராணுவ நகர்வுகளுக்குத் தலைமை தாங்கி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d955ac7-d78f-4fff-b935-90731f3acd6d/26-6aa8daa06f163.webp' /></p><p> </p><p>

உக்ரைன் படையினரின் ஏவுகணைகள் ரஷ்யாவின் முதன்மை மற்றும் மாற்று ராணுவக் கட்டுப்பாட்டு மையங்களை மிகத் துல்லியமாகத் தாக்கி அழித்ததில் மில்சாகோவ் உட்படப் பல உயர் ராணுவ அதிகாரிகள் பலியானதாகக் கூறப்படுகிறது.</p><h2>&nbsp;பல உயர் ராணுவ அதிகாரிகள் பலி</h2><p>
</p><p>
உக்ரைனின் மறைமுக ஆதரவு இயக்கமான ‘அதேஷ்’ (Atesh) மற்றும் ரஷ்யாவின் சுதந்திர ஊடகங்கள் இந்த மரணச் செய்தியைப் பரப்பி வருகின்றன. தாக்குதல் நடந்த ராணுவ முகாமின் துல்லியமான இருப்பிடம் ரஷ்ய ராணுவத்திற்குள் இருந்தே கசிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ரஷ்ய ஆதரவுப் பிரச்சாரகர்களும் எழுப்பியுள்ளனர்.
</p><p>
 உக்ரைன் மீதான முழு அளவிலான போரில் இதுவரை 23-க்கும் மேற்பட்ட ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், மில்சாகோவின் இழப்பு ரஷ்ய ராணுவத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
</p><p>

இருப்பினும், இந்தத் தாக்குதல் மற்றும் ஜெனரல் செர்ஜி மில்சாகோவின் மரணம் குறித்த அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலை மாஸ்கோவில் உள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை வெளியிடவில்லை. </p><p>

உக்ரைன் படைகளின் இந்தத் திடீர் ஏவுகணைத் தாக்குதலால், கிழக்கு உக்ரைன் போர்க்களத்தில் மீண்டும் பதற்றமும் மோதல் சூழலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-15T10:56:03+00:00</updated>
        </entry>
    </feed>
