<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-01T11:33:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய தயாரிப்புகளுக்கு நுகர்வோரிடையே அதிகரிக்கும் வரவேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/local-demand-surges-for-canadian-made-food-1788261071"></link>
            <id>https://canadamirror.com/article/local-demand-surges-for-canadian-made-food-1788261071</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் நீடித்து வரும் நிலையில், கனடாவில் உள்ளூர் உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக உற்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் நீடித்து வரும் நிலையில், கனடாவில் உள்ளூர் உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p> 
மளிகைக் கடைகளில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளபோதிலும், கனடா முழுவதும் உள்ள நுகர்வோர்கள் தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கே முன்னுரிமை அளித்துத் தேடிச் சென்று வாங்கி வருகின்றனர்.</p><p> 
அமெரிக்காவின் வர்த்தக வரிகளால் தங்களது நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ஒன்டாரியோவின் போமன்வில் பகுதியில் பாய்ச்ச்மென்ட் காகிதம் விநியோகிக்கும் 'ஏவென்கோ லிமிடெட்' நிறுவனத்தின் தலைவர் கேத்லீன் சேப்மேன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04795de-0631-4945-bd9c-888eac22e040/26-6a96b2d116f8a.webp' /></p><p> 
சுமார் 40 சதவீத வாடிக்கையாளர்களை அமெரிக்காவில் கொண்டுள்ள இந்நிறுவனம், பிரான்ஸிலிருந்து மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதால் ஆரம்பத்தில் ஐரோப்பிய பொருட்கள் மீதான அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்டது. </p><p>
தற்போது அப்பொருட்கள் கனடாவில் தயாரிக்கப்பட்டு மாற்றியமைக்கப்படுவதால், மேலும் 50 சதவீத கூடுதல் வரியை எதிர்கொண்டுள்ளது. </p><p>
எனினும், கனடிய மக்கள் நேரடியாகத் தங்கள் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவிப்பதுடன், ஆன்லைன் மூலமாக நேரடியாக ஆர்டர்களையும் வழங்கி வருகின்றனர்.</p><p>
இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் வெறும் 20 ஆக இருந்த நேரடி வாடிக்கையாளர் ஆர்டர்களின் எண்ணிக்கை, புதிய அமெரிக்க வரிகள் அமலுக்கு வந்த ஒரே வாரத்தில் நூற்றுக்கணக்கில் உயர்ந்துள்ளது. </p><p>
நுகர்வோர்கள் உள்நாட்டுப் பொருட்களை கொள்வனவு விரைவாக மாறிவரும் நிலையில், சில்லறை விற்பனைக் கடைகள் தங்களது விற்பனை அலமாரிகளில் கனடிய தயாரிப்புகளுக்குப் போதிய இட ஒதுக்கீட்டை வழங்குவதில் இன்னும் தாமதம் காட்டி வருவதாக சேப்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T11:10:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க இராணுவ செயலாளர் இராஜினாமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-army-secretary-resigns-1788259556"></link>
            <id>https://canadamirror.com/article/us-army-secretary-resigns-1788259556</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க இராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல்(Dan Driscoll), தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் சமர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க இராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல்(Dan Driscoll), தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் சமர்ப்பித்துள்ளார்.
</p><p>


இராணுவத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்புடன் கலந்துரையாடிய பின்னரே டிரிஸ்கோல் (Dan Driscoll)&nbsp; தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6b987a8-044f-4f00-9877-a1bbcc210ce7/26-6a96ace633f90.webp' /></p><p>



டிரிஸ்கோலுக்கும் (Dan Driscoll) அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கும் இடையில், இராணுவத்தை நவீனமயமாக்குதல் மற்றும் இராணுவத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக பல மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>



இராணுவத்தின் தயார் நிலை மற்றும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக டிரிஸ்கோல் தனது இராஜினாமாவில் கவலை தெரிவித்ததாகவும் தகவல்&nbsp; வெளியாகியுள்ளன.
</p><p>


டிரிஸ்கோல்&nbsp;(Dan Driscoll) கடந்த 2025 பெப்ரவரி முதல் அமெரிக்க இராணுவ செயலாளராகப் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-01T11:05:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமை நேரத்தில் காவல்துறை உத்தியோகத்தரின் தகாத செயல்: விதிக்கப்பட்ட தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/on-duty-opp-officer-driving-drunk-3x-legal-limit-1788258434"></link>
            <id>https://canadamirror.com/article/on-duty-opp-officer-driving-drunk-3x-legal-limit-1788258434</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், கடமை நேரத்தில் கைத்துப்பாக்கியுடன் தீவிர மதுபோதையில் பொலிஸ் ரோந்து வாகனத்தைச் செலுத்தி, கடுமையான தகாத செயலில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், கடமை நேரத்தில் கைத்துப்பாக்கியுடன் தீவிர மதுபோதையில் பொலிஸ் ரோந்து வாகனத்தைச் செலுத்தி, கடுமையான தகாத செயலில் ஈடுபட்ட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
ஒன்ராறியோ மாகாண பொலிஸ் பிரிவில் 17 ஆண்டுகள் சேவையாற்றிய 40 வயதான கிறிஸ்டோபர் புரூட் என்ற உத்தியோகத்தரே இவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொண்டவராவார்.
</p><p>கடந்த ஜனவரி மாதம், கிறிஸ்டோபர் தனது வீட்டில் மது அருந்திவிட்டு, இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் பொலிஸ் ரோந்து வாகனத்தை ஓட்டிச் சென்று மிட்லேண்டில் உள்ள தென் ஜோர்ஜியன் பே பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற பணி மதிப்பீட்டுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52eaadd5-5e3f-4c06-b56d-650bf8de7bf2/26-6a96a8842a65a.webp' /></p><p> 
இதன்போது அவருடன் கூட்டத்தில் பங்கேற்ற சக அதிகாரிகள் அவரிடம் மது மணம் வீசுவதைக் கண்டுபிடித்தனர்.
அதன்பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட அளவை விட 3 மடங்குக்கும் அதிகமான மது அவரது உடலில் இருந்தது உறுதியானது.</p><p> பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய ஒரு பொலிஸ் அதிகாரி, கடமை நேரத்தில் சீருடையுடன் இத்தகைய ஆபத்தான மற்றும் தகாத செயலில் ஈடுபட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>
வழக்கை விசாரித்த நீதிபதி எட்வர்ட் புருட்சியி, "இவரது பொறுப்பற்ற செயலால் அவரோ அல்லது வீதியில் சென்ற மற்றவர்களோ உயிரிழக்கும் வகையில் பெரும் விபத்து ஏற்படாமல் தப்பியது வெறும் அதிர்ஷ்டமும் தெய்வாதீனமும் தான்" எனக் கடுமையாகக் சாடினார்.</p><p>
குறித்த பொலிஸ் அதிகாரிக்கு, 3,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன் 2 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
மேலும், 2 ஆண்டுகள் நன்னடத்தைக் கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டது.
</p><p>எதிரித் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், தனது நீண்டகால பொலிஸ் சேவையில் கண்ட கொடூரமான சம்பவங்களால் கிறிஸ்டோபர் 'அதிர்ச்சிக்குப் பிந்தைய மன உளைச்சல் நோயால்' பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் மதுவுக்கு அடிமையானதாகவும் குறிப்பிட்டார்.</p><p>
நீதிமன்றத்தில் உரையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் கிறிஸ்டோபர், தனது செயலுக்காகத் வெட்கப்படுவதாகவும், தனது பொலிஸ் குழுவிற்கு ஏற்படுத்திய களங்கத்திற்கு ஆழ்ந்த மனவருத்தத்தைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T10:31:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கு: பாதிக்கப்பட்ட கனடியர்களுக்கு உதவ 10 அதிகாரிகள் அனுப்பி வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ottawa-sends-officials-to-nepal-as-search-1788257833"></link>
            <id>https://canadamirror.com/article/ottawa-sends-officials-to-nepal-as-search-1788257833</id>
            <summary type="text">&amp;nbsp;நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கனடியர்களுக்கு உதவுவதற்காகக் கனடிய கூட்டாட்சி அரசாங்கத்தின் 10 அதிகாரிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கனடியர்களுக்கு உதவுவதற்காகக் கனடிய கூட்டாட்சி அரசாங்கத்தின் 10 அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
</p><p>கனடிய அரச பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இந்த அதிகாரிகள், காணாமல் போன கனடியர்களைக் கண்டுபிடிப்பதற்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர் என அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நேபாளம் மற்றும் சீனா இடையிலான இமயமலை எல்லைப் பகுதியில் பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இதுவரை சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளதுடன், கிட்டத்தட்ட 3,000 பேர் காணாமல் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c81214d-524f-48b1-90c9-524baba8c6b7/26-6a96a63225c27.webp' /></p><p>
இச்சம்பவத்தில் முன்னதாகத் தொடர்பை இழந்திருந்த கனடியர் ஒருவர் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்திருந்தார்.
</p><p>எனினும், மேலும் 30 கனடியர்கள் மற்றும் நிரந்தர வசிப்பாளர்கள் இன்னமும் காணாமல் போயுள்ளதாகவும், கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது இந்த எண்ணிக்கை மாறக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு அவசர மனிதநேய உதவியாக 5 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு கனடிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T10:31:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர் 'களு மல்லி' டுபாய் அதிகாரிகளால் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crime-group-member-kalu-malli-arrested-dubai-autho-1788257301"></link>
            <id>https://canadamirror.com/article/crime-group-member-kalu-malli-arrested-dubai-autho-1788257301</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஷெஹான் சத்சர என்ற &quot;தெஹிபாலே மல்லி&quot;யின் இளைய சகோதரரான பட்டபெதிகே துஷான் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஷெஹான் சத்சர என்ற "தெஹிபாலே மல்லி"யின் இளைய சகோதரரான பட்டபெதிகே துஷான் சத்சர என்ற "களு மல்லி" என்பவர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
 

படபெதிகே துஷான் சத்சர என்ற 25 வயதுடைய இச்சந்தேகநபருக்கு எதிராக, தென் மாகாணத்தில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இன்டர்போல் (சர்வதேச பொலிஸ்) மூலம் சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/309d7863-6186-4016-a7ca-f36ed58f7c82/26-6a96a416642e8.webp' /></p><p>இலங்கை பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:09:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் இரு இந்திய இளம் பெண்கள் கொலை; திடீரென வில்லியாக மாறிய நண்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-young-kerala-women-murdered-in-california-1788240930"></link>
            <id>https://canadamirror.com/article/two-young-kerala-women-murdered-in-california-1788240930</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் இரு இந்திய இளம் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் புலம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் இரு இந்திய இளம் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் புலம்பெயர் சமூகத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
திருச்சூர் பாணஞ்சேரி, மண்ணுத்தி, முடிக்கோடு தெக்கூட்டு வீட்டைச் சேர்ந்த ஹரிதாஸ் மற்றும் சுஷ்மா தம்பதியரின் மகள் அஞ்சனா மற்றும் கோட்டயம் சிங்கவனம் பகுதியைச் சேர்ந்த ஆன் ஆகிய இருவருமே இந்தக் கொடூர சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65df686a-bb5f-4b14-a14a-4e9c34f9c582/26-6a96642384b51.webp' /></p><h2>திடீரென&nbsp; வில்லியாக மாறிய&nbsp; நண்பி</h2><p>

இவர்கள் இருவருக்கும் நெருங்கிய தோழியும், அதே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தவருமான அனிலா என்ற பெண், இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.</p><p>

ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த இந்த மூன்று குடும்பங்களுக்கும் இடையே மிகவும் நெருக்கமான நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. 
ஆசிரியையாக பணியாற்றி வந்த அஞ்சனா கடந்த எட்டு ஆண்டுகளாக கலிபோர்னியாவில் வசித்து வந்தார். மென்பொருள் பொறியாளரான தனது கணவர் விஜீஷ் மற்றும் ஆறு வயது மகள் வாமிகாவுடன் அஞ்சனா வசித்து வந்தார்.
</p><p>
சமீபத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டங்களிலும், அஞ்சனா உள்ளிட்ட மூவரும் தங்களது நண்பர்களுடன் ஒன்றாகக் கலந்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

ஆகஸ்ட் 28ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தக் கொலைச் சம்பவங்கள் அரங்கேறின. 
 
வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அஞ்சனாவின் கணவர் விஜீஷ், சம்பவ இடத்திலிருந்து நிற்காமல் வேகமாகச் சென்ற அனிலாவின் நீல நிற காரைக் கவனித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விஜீஷ் உடனடியாக ஆனின் கணவர் ஜேக்கப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.

ஜேக்கப், ஆனுக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. </p><p>இதையடுத்து அவர் குடியிருப்புக்குச் சென்று பார்த்தபோது, ஆன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளார்.
அதேநேரத்தில், விபத்து குறித்த தகவலை அறிந்து விஜீஷ் சம்பவ இடத்துக்கு வந்து சேரும் முன்பே அஞ்சனாவும் உயிரிழந்திருந்தார்.</p><p>

இந்த சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அஞ்சனா மற்றும் விஜீஷின் ஆறு வயது மகள் வாமிகா வீட்டின் அறைக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்திற்குப் பிறகு, நீல நிற எஸ்.யு.வி. கார் ஒன்று அதிவேகமாக அங்கிருந்து சென்றதைப் பார்த்ததாக நேரில் பார்த்தவர்களும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
</p><p>
இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், அருகிலுள்ள ஒரு பார்க்கிங் பகுதியில் பலத்த சேதமடைந்த நிலையில் அந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>தொடர்ந்து அனிலாவையும் போலீசார் காவலில் எடுத்தனர்.



நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்த இந்த மூவருக்கிடையே திடீரென கொலைச் சம்பவம் நிகழும் அளவுக்கு என்ன காரணம் ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
</p><p>காவலில் உள்ள அனிலாவிடம் அமெரிக்க போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் மூலம் கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்த கூடுதல் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-01T09:34:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்ணே இல்லாமல் 30 மாடிகளில் விவசாயம் ; சிங்கப்பூரின் வியக்க வைக்கும் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/farming-30-floors-without-soil-singapore-amazing-1788254572"></link>
            <id>https://canadamirror.com/article/farming-30-floors-without-soil-singapore-amazing-1788254572</id>
            <summary type="text">சிங்கப்பூரில் நிலப்பரப்பின் பற்றாக்குறைக்கு மத்தியில் விவசாயத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது&amp;nbsp;சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 30 மாடி உயரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் நிலப்பரப்பின் பற்றாக்குறைக்கு மத்தியில் விவசாயத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது&nbsp;</p><p>சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 30 மாடி உயரமான செங்குத்து விவசாயப் பண்ணையில், மண் இல்லாமல் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு வகையான காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af77704-ebed-4c1d-9cc1-1742ede13e05/26-6a96996e09027.webp' /></p><p>வழமையான விவசாய முறைக்கு மாறாக, குறித்த பண்ணையில் ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) முறையில் தண்ணீரில் கரைக்கப்பட்ட சத்துக்களைப் பயன்படுத்தி பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.</p><p>மேலும், தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான வெளிச்சம் LED விளக்குகள் மூலம் வழங்கப்படுகிறது.
</p><p>
இதன் மூலம் பாரம்பரிய விவசாய முறைகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 95 சதவீதம் வரை தண்ணீரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

மேலும், காலநிலை மாற்றம், அதிக வெப்பம், மழை உள்ளிட்ட இயற்கை காரணிகளின் தாக்கம் குறைவாக இருப்பதால், ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக காய்கறிகளை உற்பத்தி செய்யக்கூடிய வசதி காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc4bd587-d532-478a-864a-2c0785972b80/26-6a9699fb83ad6.webp' /></p><p>
</p><p>
குறித்த செங்குத்து விவசாயப் பண்ணையில் நாளொன்றுக்கு சுமார் ஒரு தொன் வரையான புதிய காய்கறிகள் அறுவடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நிலப்பரப்பு குறைவாக உள்ள நாடுகளில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கான மாற்று வழியாக செங்குத்து விவசாயம் உலகளவில் கவனம் பெற்று வரும் நிலையில், சிங்கப்பூரின் இந்த முயற்சி நவீன விவசாயத் தொழில்நுட்பத்தின் முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
</p><p>
நிலத்தை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, கிடைக்கும் இடத்தை செங்குத்தாகப் பயன்படுத்தி உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பதை இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-01T09:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம் ; 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/warning-issued-for-more-than-30-districts-in-nepal-1788249544"></link>
            <id>https://canadamirror.com/article/warning-issued-for-more-than-30-districts-in-nepal-1788249544</id>
            <summary type="text">நேபாளத்தில் உள்ள கிழக்கு, மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள அபாயம் குறித்து புதிய எச்சரிக்கையை நேபாள அதிகாரிகள் விடுத்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் உள்ள கிழக்கு, மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள அபாயம் குறித்து புதிய எச்சரிக்கையை நேபாள அதிகாரிகள் விடுத்துள்ளனர்.</p><p>

நேபாளம் - திபெத்தில் கடந்த ஆகஸ்ட் 26 பனிப்பாறைகள் உடைந்து போடே கோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள கிராமங்கள் அனைத்தும் சூறையாடியது. </p><p>இந்த பெருவெள்ளத்துக்கு இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 4,500 பேர் வரை மாயமாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44873895-c232-4249-9d3a-08e5322939dd/26-6a9685ca22997.webp' /></p><p>இந்த நிலையில், நேபாளத்தின் கிழக்கு, மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் புதிய வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளனர். </p><p>மேலும், ஆறுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>

தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நுவாகோட், ரசுவா மாவட்டங்களில் சிறிய ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
</p><p>
கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தில் உள்ள டாப்லேஜங், சங்க்ஹுவாசாபா, சோலுகும்பு, கோடாங், ஓகல்டுங்கா, ராமேச்சாப், டோலகா, சிந்துபால்சோக், கவ்ரேபலன்சோக், லலித்பூர், பக்தபூர், காத்மாண்டு மற்றும் தாடிங் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் நீர்மட்டம் உயரும் அபாயமும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளது.
</p><p>
மேற்கு நேபாளத்தில் கோர்கா, லாம்ஜங், டோல்பா, ருகும் கிழக்கு, ருகும் மேற்கு, ஜஜார்கோட், தார்ச்சுலா, பைடாடி, டாடெல்டுரா, டோட்டி, கைலாலி மற்றும் கஞ்சன்பூர் ஆகிய மாவட்டங்களும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பட்டியலில் உள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, ஆற்றங்கரையோரங்களிலும் பிற பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T07:59:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் நெகிழ்ச்சி ; பாதுகாப்பாக மீட்கப்பட்ட ஒன்றரை மாத குழந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-month-baby-rescued-safely-from-nepal-floods-1788248703"></link>
            <id>https://canadamirror.com/article/one-month-baby-rescued-safely-from-nepal-floods-1788248703</id>
            <summary type="text">நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய ஒன்றரை மாதக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திபெத்-நேபாள எல்லையில் பெரும் பனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய ஒன்றரை மாதக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
திபெத்-நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் ஆகஸ்ட் 26-ஆம் திகதி ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf43a2f7-e04d-4868-aadf-4f0a4f788547/26-6a968280a6e4c.webp' /></p><p> சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. </p><p>வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.</p><p>ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி, கோா்கா, தனாஹு ஆகிய மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளைப் புரட்டிப் போட்ட இந்தப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 939-ஆக உயா்ந்துள்ளது. </p><p>வெள்ளத்தில் சிக்கி 85 பாதுகாப்பு அதிகாரிகள், 320 வெளிநாட்டவா் உள்பட 4,250 போ் மாயமாகினா்.
</p><p>
இதனிடையே, பெரு வெள்ளத்தில் சிக்கி, அதிருஷ்டவசமாக உயிருடன் தப்பிய ஒன்றரை மாதக் குழந்தையை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
பத்திரமாக மீட்கப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தையை, ரசுவா தாங்கே முகாமில் மீட்புப் படையினர் சேர்த்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T07:51:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆர்ஜென்டீனா அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/messi-announces-retirement-argentina-team-1788245900"></link>
            <id>https://canadamirror.com/article/messi-announces-retirement-argentina-team-1788245900</id>
            <summary type="text">&amp;nbsp; உலக கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி ஆர்ஜென்டீனா கால்பந்து அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.



சுமார் 20 ஆண்டுகளாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலக கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி ஆர்ஜென்டீனா கால்பந்து அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
</p><p>


சுமார் 20 ஆண்டுகளாக ஆர்ஜென்டீனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, அந்த அணியின் மிக முக்கியமான வீரராக திகழ்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ec302e7-826d-4d76-ae4e-d35cba6ef5fe/26-6a96778e0d531.webp' /></p><p> </p><p>அவரது தலைமையில் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா வென்றது.



மேலும், ஆர்ஜென்டீனா அணிக்காக 6 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து அரங்கில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
</p><p>


தனது ஓய்வு அறிவிப்பில், கடந்த 20 ஆண்டுகளாக ஆர்ஜென்டீனா மக்களிடம் இருந்து கிடைத்த அன்புக்கு நன்றி தெரிவித்துள்ள மெஸ்ஸி, இனி இரசிகராக இருந்து அணிக்கு ஆதரவளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>


சர்வதேச போட்டிகளிலுருந்து ஓய்வு பெற்றாலும், கிளப் மட்டத்திலான போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவர் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.</p><p>



அதேவேளை இதற்கு முன்னர் பார்சிலோனா மற்றும் பாரிஸ் செயின்ட் - ஜெர்மைன் அணிகளுக்காகவும் மெஸ்ஸி விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T06:55:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு; உலகின் கவனம் ஈர்க்கும் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/meeting-between-chinese-and-russian-leaders-1788245259"></link>
            <id>https://canadamirror.com/article/meeting-between-chinese-and-russian-leaders-1788245259</id>
            <summary type="text">&amp;nbsp; சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் கிர்கிஸ்தான் பிஷ்கெக்கில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையேஇ ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் கிர்கிஸ்தான் பிஷ்கெக்கில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையேஇ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.</p><p>கடந்த மே மாதத்திற்குப் பிறகு இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

சர்வதேச ஒழுங்கில் நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்திருந்தாலும்பீய்ஜிங் மற்றும் மொஸ்கோ இடையேயான உறவுகள் மேலும் உறுதியடைந்துள்ளதாக ஜின்பிங் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77f345a3-1dd7-4269-b500-522cf196d2c9/26-6a96750d37f3b.webp' /></p><p>.

யுக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையிலும் இரு நாடுகளுக்குடையேயான ஒத்துழைப்பு அனைத்து துறைகளிலும் வெற்றிகரமாக வளர்ந்து வருவதாக புடின் தெரிவித்தார்.</p><p>

இந்த இரண்டு நாள் உச்சி மாநாடு பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அமைப்பான ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.</p><p>

இதில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்துவான் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T06:44:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா இடைத்தேர்தல்கள்: பெரும்பான்மை பெற்றது மார்க் கார்னி கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/liberal-party-got-majority-by-won-3-byelections-1788244331"></link>
            <id>https://canadamirror.com/article/liberal-party-got-majority-by-won-3-byelections-1788244331</id>
            <summary type="text">Liberal party sweeps all three byelections: கனடா இடைத்தேர்தல்கள் மூன்றிலும் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.


திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Liberal party sweeps all three byelections: கனடா இடைத்தேர்தல்கள் மூன்றிலும் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
</p><p>

திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று இடைத்தேர்தல்களிலும் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி, முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.</p><p>

திங்கட்கிழமையன்று, ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், மூன்றிலுமே பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71680174-1c00-4e6a-8b5f-8f21df081902/26-6a96716c92979.webp' /></p><p>

தேர்தலில், லிபரல் கோட்டைகளான ஒன்ராறியோவின் Beaches–East York தொகுதியையும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் North Vancouver–Capilano தொகுதியையும் லேபர் கட்சி தக்கவைத்துக்கொண்டுள்ளதுடன், பியர் பொய்லியேவின் கன்சர்வேடிவ் கட்சியிடமிருந்து கியூபெக்கின் Chicoutimi–Le Fjord தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.</p><p>

விடயம் என்னவென்றால், கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த தொடர் ராஜினாமாக்களுக்குப் பிறகு, திங்கட்கிழமை இரவு நிலவரப்படி, ஆளும் லிபரல் கட்சி 170 இருக்கைகளைக் கொண்டிருந்தது.</p><p>

இந்நிலையில், தற்போது இந்த மூன்று தொகுதிகளில் கிடைத்துள்ள வெற்றியால் லிபரல் கட்சிக்கு 173 இருக்கைகள் கிடைத்துள்ளன.
</p><p>
173 இருக்கைகள் என்பது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறத் தேவையானதை விட ஒரு இடம் கூடுதலாகும்.
</p><p>
ஆக, இந்தப் பெரும்பான்மையுடன், லிபரல் கட்சியினர் எதிர்க்கட்சியால் கவிழ்க்கப்படும் அபாயம் இன்றி 2029 வரை ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T06:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் தமிழ்ப் பொறியியலாளர் குடும்பம் உட்பட 39 அவுஸ்திரேலியர்கள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/39-australians-tamil-engineer-missing-nepal-floods-1788242956"></link>
            <id>https://canadamirror.com/article/39-australians-tamil-engineer-missing-nepal-floods-1788242956</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த தமிழ்ப் பொறியியலாளர் 47 வயது சந்திரசேகரன் முரளிதரன், 42 வயதான அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த தமிழ்ப் பொறியியலாளர் 47 வயது சந்திரசேகரன் முரளிதரன், 42 வயதான அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களின் இரு மகன்களான 14 வயதான அஷ்வின், 11 வயதான ஆருஷ் ஆகியோர் நேபாள - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமாகியுள்ளனர்.
</p><p>
கைலாஷ் மலை யாத்திரைக்காக 'ஹிமாலயன் கிளேசியர் அட்வென்ச்சர்ஸ்' அமைப்பின் மூலம் சுற்றுலாப் பயணிகளாகச் சென்ற இந்தத் குடும்பத்தினருடன், காலை உணவுக்குப் பிறகு எந்தத் தொடர்பும் இல்லை என்று உறவினர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79e4cd38-bcb2-48a8-866b-43ed56c97f81/26-6a966c0e07210.webp' /></p><h2>திபெத் - நேபாள எல்லைக்கு மாயமான&nbsp; குடும்பம்</h2><p>
</p><p>
திபெத் - நேபாள எல்லைக்கு அருகிலுள்ள குடியேற்றச் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்ல அவர்கள் தயாராக இருந்தபோதுதான் இந்தத் பேரிடர் நிகழ்ந்துள்ளது.</p><p>

இந்த வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
</p><p>
ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங், நேபாளப் பகுதியில் குறைந்தது 39 ஆஸ்திரேலியர்கள் மாயமாகியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதோடு, அவர்களைத் தேடும் பணியில் அவசர அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>
மேலும் காணாமல் போன தமிழ்க் குடும்பத்தினர் மற்றும் அனைத்துப் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பான திரும்புதலுக்காகவும், மீட்புப் பணிகளுக்காகவும் தமிழ் அவுஸ்திரேலிய சமூகமும் உலகத் தமிழர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T06:06:28+00:00</updated>
        </entry>
    </feed>
