<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-18T15:29:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மற்றொரு பெண்ணைச் சந்தித்ததாக காதலனை கொலை செய்த பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/murdered-banker-he-flirted-with-colleague-london-1789714590"></link>
            <id>https://canadamirror.com/article/murdered-banker-he-flirted-with-colleague-london-1789714590</id>
            <summary type="text">&amp;nbsp;பெண் ஒருவர் காதலனை கொலை செய்த்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் லண்டனின் ஓல்ட் பெய்லி (Old Bailey) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பெண் ஒருவர் காதலனை கொலை செய்த்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் லண்டனின் ஓல்ட் பெய்லி (Old Bailey) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. </p><p> 

மற்றொரு பெண்ணைச் சந்தித்ததாகத் தெரிவித்த தனது காதலனைக் கத்தியால் குத்திக் கொன்றதாகவும், பின்னர் அவர்கள் ஒன்றாக வசித்து வந்த குடியிருப்பிலேயே அவரது உடலை ஒன்பது நாட்களுக்கு மறைத்து வைத்திருந்ததாகவும் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58f85310-027c-4d9b-986b-d6c60603a25e/26-6aace09fa9908.webp' /></p><h2>பெண் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக&nbsp; மின்னஞ்சல்</h2><p> </p><p>

உயிரிழந்தவர் ஹென்ரிக் ஸ்லோத்சா (Henrik Slothsa) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சிட்டிபேங்கில் (Citibank) பணியாற்றிய 52 வயதுடைய டேனிஷ் வங்கி அதிகாரி ஆவார்.

 காதலனை கொலை செய்ததாகக் கூறப்படும் காதலி 50 வயதுடைய போலந்து நாட்டவருமான ஜோனா சியர்ப்கா (Joanna Sierpka) ஆவார்.</p><p>
மார்ச் 15 அன்று, குற்றம் சாட்டப்பட்ட பெண் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் குறிப்பால் உணர்த்தும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதைத் தொடர்ந்து, தெற்கு லண்டனில் உள்ள அந்த குடியிருப்பின் கதவை உடைத்துக்கொண்டு போலீசார் உள்ளே நுழைந்தனர். </p><p>

போலீசார் உள்ளே சென்றபோது, ​​அவர் எட்டு அங்குல சமையலறை கத்தியால் தனது கழுத்தை அறுக்க முயன்று கொண்டிருந்தார்.
</p><p>
அதேவேளையில், வீட்டின் படுக்கையறையில் திரு. ஸ்லோத்சாவின் சிதைந்த நிலையில் இருந்த உடலையும் அவர்கள் கண்டெடுத்தனர். அப்போது, ​​உடலுக்கு அருகில் காய்ந்த ரத்தப் படலம் ஒன்றும் காணப்பட்டது.
</p><p>
தனது காதலனைக் கொலை செய்ததில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் டேனி ராபின்சன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தனது மனநிலை காரணமாகவே இச்செயலைச் செய்ததாகக் கூறி 'கொலைக்குற்றமற்ற மரணத்தை' (manslaughter) ஒப்புக்கொண்டாலும், அரசுத் தரப்பு அவர் மீது திட்டமிட்ட கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.</p><p> 

மேலும், கடந்த சில மாதங்களாகவே அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டு வந்ததும் நீதிமன்றத்தில் தெரியவந்தது. நவம்பர் 2025-ல் நடைபெற்ற ஒரு நிறுவன நிகழ்வில் சந்தித்த மற்றொரு ஊழியருடன் ஸ்லோத்சா நெருக்கமாகியிருந்தார்&nbsp; சியர்ப்காவின் பிறந்தநாளன்று, தனது பணியிடத்தில் வேறொரு பெண்ணைச் சந்தித்திருப்பதாக அவரிடம் அவர் கூறியிருந்தார்.</p><p>

பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ (British American Tobacco) நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவில் முன்பு பணியாற்றிய சியர்ப்காவின் நண்பர்கள், வேலையை இழந்த பிறகு அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.
</p><p>
 ஸ்லோத்சாவைக் கொன்ற பிறகு, அவரது மொபைல் போன் மூலம் அவரது மேலாளருக்கு வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகளை அனுப்பிய அவர், ஸ்லோத்சாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகப் பொய்யான தகவலைத் தெரிவித்திருந்தார். </p><p>

வீட்டிற்குள் காலி மது பாட்டில்களையும் போலீசார் கண்டெடுத்தனர்; இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது</p>]]></content>
            <updated>2026-09-18T13:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே எண்களை நம்பியதனால் ஒருவருக்கு அடித்த அதிர்ஸ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lucky-numbers-win-innisfil-man-25-million-1789714073"></link>
            <id>https://canadamirror.com/article/lucky-numbers-win-innisfil-man-25-million-1789714073</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், இன்னிஸ்ஃபில் நகரைச் சேர்ந்த ஸ்டான்லி ஜே என்ற பிளம்பர், &#039;லொட்டோ மேக்ஸ்&#039; குலுக்கலில் 2.5 மில்லியன் கனடிய டாலர்கள் பரிசாக வென...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், இன்னிஸ்ஃபில் நகரைச் சேர்ந்த ஸ்டான்லி ஜே என்ற பிளம்பர், 'லொட்டோ மேக்ஸ்' குலுக்கலில் 2.5 மில்லியன் கனடிய டாலர்கள் பரிசாக வென்றுள்ளார். </p><p>
40 ஆண்டுகளாகப் பிளம்பராகப் பணியாற்றி வரும் ஸ்டான்லி, கடந்த ஜூலை 24 அன்று வுட்ஸ்டாக் நகரில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தனது காதலியைச் சந்திக்கச் சென்றபோது இந்த லொட்டரி சீட்டை கொள்வனவு செய்துள்ளார். </p><p>
பல ஆண்டுகளுக்கு முன்பு 'க்விக் பிக்' முறையில் தனக்குக் கிடைத்த அதே எண்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததே இவருக்கு இந்த மாபெரும் வெற்றியைத் தந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76a556c8-d241-4f7c-b55c-82945cd59769/26-6aacde9aa880b.webp' /></p><p> </p><p>
லொட்டரி முடிவுகளைச் செயலி மூலம் சரிபார்த்தபோது, தான் 25,000 டொலர் மட்டுமே வென்றதாக ஸ்டான்லி நினைத்துள்ளார்.</p><p> 
ஆனால் அவரது காதலி சரிபார்த்த போதே அது 25 மில்லியன் டொலர் என்பது தெரியவந்தது. 
அந்தத் தொகை தனது வங்கிச் கணக்கிற்கு வந்த பிறகே, தான் உண்மையாகவே கோடீஸ்வரனாகிவிட்டதை அவரால் நம்ப முடிந்தது.
</p><p>ஏரிக்கரையில் ஒரு புதிய வீடு மற்றும் கிளாசிக் 'ஹாட்-ராட்' (hot-rod) கார் கொள்வனவு செய்தல், சூரிய ஒளியும் கடற்கரையும் நிறைந்த சுற்றுலாத் தலங்களுக்குத் தனது காதலியை அழைத்துச் செல்வது மற்றும் தனது மகள் மற்றும் பேத்தியைப் பரிசுகளால் மகிழ்விப்பது என இந்த பரிசுப் பணத்தில் செய்யப் போகும் விடயங்களை பட்டியலிட்டுள்ளார்.</p><p>
தனது நெருங்கிய வட்டாரத்திற்கு மட்டும் இந்தத் தகவலை மெதுவாகத் தெரிவிக்க நினைத்த போதிலும், இந்த செய்தி நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே வேகமாகப் பரவி, அனைவரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். </p><p>
இந்த வெற்றி தனது வாழ்க்கைக்குப் பெரிய பாதுகாப்பையும் நிம்மதியையும் தந்துள்ளதாக ஸ்டான்லி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T13:35:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நைஜீரியா சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த 33 கைதிகள் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/33-prisoners-die-mysteriously-in-nigeria-jail-1789731164"></link>
            <id>https://canadamirror.com/article/33-prisoners-die-mysteriously-in-nigeria-jail-1789731164</id>
            <summary type="text">நைஜீரியாவில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 33 கைதிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜீரியாவில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 33 கைதிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் பல்வேறு சட்டவிரோத சுரங்கள் செயல்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21a889bb-e329-47f4-bb92-1740bc135fdd/26-6aad215e53ec3.webp' /></p><p> </p><p>தங்கம், கனிம வளங்களை வெட்டி எடுக்கும் இந்த சுரங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
</p><p>&nbsp;இந்நிலையில், அந்நாட்டின் நைஜர் மாகாணத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சுரங்கத்தில் பணியாற்றி வந்த 65 பேரை பாதுகாப்புப்படையினர் நேற்று முன் தினம் கைது செய்துள்ளனர்.</p><p> கைது செய்யப்பட்ட அனைவரும் அம்மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். </p><p>இதில் 33 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதிகளை மர்ம நோய் தாக்கியதால் அவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அதேவேளை, சிறிய சிறையில் அதிக அளவிலான கைதிகளை அடைத்ததால் பலரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T11:32:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் மகன்களுடன் பாகிஸ்தான் இராணுவ ட்ரோன் ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drone-contract-pakistan-companies-trump-s-sons-1789728793"></link>
            <id>https://canadamirror.com/article/drone-contract-pakistan-companies-trump-s-sons-1789728793</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான Powerus, பாகிஸ்தான் இராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ட்ரோன் தொடர்பான ஆரம்பகட்ட ஓர்டரையும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான Powerus, பாகிஸ்தான் இராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ட்ரோன் தொடர்பான ஆரம்பகட்ட ஓர்டரையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 



ஒப்பந்தத்தின் மதிப்பு மற்றும் ட்ரோன்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5744c3c0-8166-4b54-92df-c9539031fd8e/26-6aad181adc67e.webp' /></p><p>
</p><p>


Powerus, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன்களான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் ட்ரம்ப் முதலீடு செய்துள்ள Aureus Greenway Holdings நிறுவனத்துடன் அக்டோபரில் இணையத் திட்டமிட்டுள்ளது.
</p><p>


பாகிஸ்தானில் ட்ரோன் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் எதிர்காலத்தில் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக Powerus தெரிவித்துள்ளது.</p><p> 



அதேவேளை, ட்ரம்பின் மகன்களுக்கு ஒப்பந்தத்தில் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை என நிறுவனத் தரப்பு கூறியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T11:28:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் வெடிகுண்டு தாக்குதல் ; 15 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bomb-blast-near-mosque-in-pakistan-1789728958"></link>
            <id>https://canadamirror.com/article/bomb-blast-near-mosque-in-pakistan-1789728958</id>
            <summary type="text">பாகிஸ்தானில், மசூதி அருகில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின் கோஹட் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானில், மசூதி அருகில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைபர் பக்துன்குவா மாகாணத்தின் கோஹட் மாவட்டத்தில் காவல் துறையினரின் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள மசூதியின் அருகில் இன்று (18) மதியம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceea49d4-140e-49a6-954f-305a4058185f/26-6aad18c04b5a1.webp' /></p><p>


</p><p>இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புத் தொழுகையின்போது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்தத் தாக்குதலால், அந்தப் பகுதியில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், கூடுதல் பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாகிஸ்தானிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
</p><p>
இத்துடன், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பெறுப்பேற்கவில்லை. மேலும், சமீபகாலமாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.</p><p>

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட 199 பயங்கரவாதத் தாக்குதகளில் 158 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-18T10:56:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் கிரேவன்ஹர்ஸ்ட்டில் வாகனங்கள் மீது கல்வீச்சு: 3 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/teens-charged-in-connection-with-throwing-rocks-1789714698"></link>
            <id>https://canadamirror.com/article/teens-charged-in-connection-with-throwing-rocks-1789714698</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், கிரேவன்ஹர்ஸ்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்திய சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், கிரேவன்ஹர்ஸ்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்திய சம்பவத்தில் மூன்று சிறுவர்களைக் காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். </p><p>
புதன்கிழமை அதிகாலை கிரேவன்ஹர்ஸ்ட்டில் உள்ள பல தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 10 வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டு அவற்றின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டன. </p><p>
இச்சம்பவம் தொடர்பாகப் போர்ட் சிட்னி பகுதியைச் சேர்ந்த 14, 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d324882-9ff8-4792-8e87-d9d5c297f30b/26-6aace10bb7292.webp' /></p><p> </p><p>
10 வாகனங்களைச் சேதப்படுத்திய குற்றத்திற்காக, இவர்கள் ஒவ்வொருவர் மீதும் தலா 10 'குறும்புத்தனமான குற்றம்' வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p> 
கைது செய்யப்பட்ட சிறுவர்கள் அனைவரும் பின்னர் ஒரு குறிப்பிட்ட திகதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.</p><p> 
இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவலோ அல்லது கண்காணிப்பு கேமரா காட்சிகளோ வைத்திருப்பவர்கள் பிரேஸ்பிரிட்ஜ் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு புலனாய்வு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T10:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லொட்டரியால் ஒரே நாளில் கோடீஸ்வரரான கனேடியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-man-snags-25m-lotto-max-jackpot-1789723723"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-man-snags-25m-lotto-max-jackpot-1789723723</id>
            <summary type="text">Ontario man snags $25M Lotto Max jackpot: கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த ஒருவருக்கு லொட்டரில் 25 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.


ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ontario man snags $25M Lotto Max jackpot: கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த ஒருவருக்கு லொட்டரில் 25 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.
</p><p>

ஒன்ராறியோவைச் சேர்ந்த ஸ்டான்லி என்பவர், பல ஆண்டுகளாக ஒரே எண் வரிசை கொண்ட லொட்டரிச் சீட்டு வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f23e0ccd-3b45-42cd-a700-63abae978b10/26-6aad044d7a20c.webp' /></p><p>

இந்நிலையில், சமீபத்தில் ஸ்டான்லி வாங்கிய லொட்டரிச் சீட்டுக்கு 25 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.
</p><p>
25 மில்லியன் கனேடிய டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 5,92,33,40,855.00 ரூபாய் ஆகும்.
</p><p>
தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையில் ஒரு பெரும் தொகையை தன் மகளுக்கும் பேத்திக்கும் கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
ஒரு பிளம்பராக இவ்வளவு ஆண்டுகள் பணி செய்துவந்த நிலையில், தனக்கென ஒரு சொந்த வீடு வாங்கவேண்டும், கார் வாங்கவேண்டும் என்னும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார் ஸ்டான்லி.
</p><p>
அத்துடன், தன் காதலியுடன் உலகம் சுற்றிப் பார்க்கவும் திட்டமிட்டுள்ளார் ஸ்டான்லி!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T09:37:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு பிலிப்பைன்ஸிலுள்ள பாடசாலையில் துப்பாக்கிச்சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/gunfire-erupts-at-school-in-southern-philippines-1789723918"></link>
            <id>https://canadamirror.com/article/gunfire-erupts-at-school-in-southern-philippines-1789723918</id>
            <summary type="text">தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் இன்று (18) துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் இன்று (18) துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2df7c53-c7b5-4260-96d2-2d4caeda73ac/26-6aad051043979.webp' /></p><p> </p><p>காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட மேலதிக விவரங்களை அதிகாரிகள் தற்போது சரிபார்த்து வருகின்றனர்.
</p><p>


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T09:32:17+00:00</updated>
        </entry>
    </feed>
