<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-20T02:23:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயார்க்கில் நிறுவப்பட்ட இலவச பொது கழிப்பறைகள் ; 10 நிமிடத்திற்கு மேல் உள்ளே இருந்தால் கதவு திறந்துவிடும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/free-public-toilets-installed-in-new-york-1789844490"></link>
            <id>https://canadamirror.com/article/free-public-toilets-installed-in-new-york-1789844490</id>
            <summary type="text">அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கழிப்பறைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. </p><p>இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கழிப்பறைகள் திறந்திருக்கும்.</p><p>இந்த கழிப்பறைகள் இருக்கும் இடத்தை கண்டறிய பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல வசதிகள் இருந்தாலும், இந்த கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஒரு முக்கியமான விதி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b50bc855-abe8-4d3b-89f4-a81c584c7d64/26-6aaedc0ca9f45.webp' /></p><p>அதாவது, கழிவறைக்கு உள்ளே சென்றுவிட்டால் 10 நிமிடத்திற்குள் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும். </p><p>கழிவறையை பயன்படுத்த தொடங்கியதில் இருந்து கவுண்ட் டவுன் ஓடத் தொடங்கிவிடும். 5 நிமிடங்கள் ஆனவுடன் ஒரு ஆடியோ எச்சரிக்கை வரும். தொடர்ந்து 8-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு எச்சரிக்கை வரும்.</p><p>இதைத் தொடர்ந்து 10-வது நிமிடத்தில் கடைசியாக ஒரு எச்சரிக்கை ஒலிக்கும். அதன் பிறகு சில வினாடிகளில் கழிப்பறையின் கதவு தானாக திறந்துவிடும். </p><p>இத்தகைய நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த கழிப்பறையை நியூயார்க் நகரில் நிறுவுவது தொடர்பான அறிவிப்பை நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி வெளியிட்டார்.
</p><p>
இது குறித்து அவர் கூறுகையில், “கழிப்பறைகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளோம். கழிப்பறை என்பது செல்போனில் ஸ்கோரல் செய்து கொண்டிருக்கும் இடமாக இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13fd3acc-a29a-4d68-af3f-0931088c64df/26-6aaedc0bf1e78.webp' /></p><p>இந்த நவீன கழிப்பறை திட்டத்திற்காக நியூயார்க் நகர நிர்வாகம் சுமார் 4 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.38 கோடி) செலவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
</p><p>
இத்தகைய கழிப்பறைகளை நிறுவுவதற்கு முன்னதாக, இது குறித்து ஆய்வுகளும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>அதாவது சராசரியாக ஒரு நபர் மூன்றரை நிமிடங்கள் கழிப்பறையை பயன்படுத்துகிறார் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், எனவே 10 நிமிடங்கள் என்பது பெரும்பாலான நபர்களுக்கு போதுமான நேரமாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T01:08:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.2,684 கோடி மோசடி குற்றச்சாட்டு ; அனில் அம்பானி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/2684crorefraud-allegation-cbi-registers-anilambani-1789861709"></link>
            <id>https://canadamirror.com/article/2684crorefraud-allegation-cbi-registers-anilambani-1789861709</id>
            <summary type="text">போலியான தகவல்களை வழங்கி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி.யிடம் இருந்து ரூ.2,684.57 கோடி முதலீட்டை பெற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலியான தகவல்களை வழங்கி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி.யிடம் இருந்து ரூ.2,684.57 கோடி முதலீட்டை பெற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) வழக்குப்பதிவு செய்துள்ளது.</p><p>

ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் 2012 முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஐந்து கடன் பத்திரங்களை வெளியிட்டிருந்தது. </p><p>அவற்றில் எல்.ஐ.சி. சுமார் ரூ.3,900 கோடியை முதலீடு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிறுவனத்தின் பொது நிதித் தேவைகள், வர்த்தகத் தேவைகள் மற்றும் ஏற்கனவே இருந்த கடன்களை குறைப்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த முதலீடுகள் திரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5724bf1d-6949-46f3-b64c-b8f47b584634/26-6aaf1f4f830fc.webp' /></p><p>எனினும், தவறான தகவல்களை வழங்கி எல்.ஐ.சி.யை முதலீடு செய்யத் தூண்டியதாகவும், பின்னர் அந்த நிதி முறைகேடான வழிகளில் வேறு நோக்கங்களுக்காகத் திருப்பி விடப்பட்டதாகவும் எல்.ஐ.சி. தனது புகாரில் குற்றஞ்சாட்டியுள்ளது.
</p><p>
இதன் காரணமாக எல்.ஐ.சி.க்கு ரூ.2,684.57 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், அதே அளவுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சட்டவிரோத ஆதாயம் கிடைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தப் புகாரைத் தொடர்ந்து அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்படும் என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.</p><p>

இதற்கு முன்னதாக, எஸ்.பி.ஐ. உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள், வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் எல்.ஐ.சி. ஆகியவை அளித்த புகார்களின் அடிப்படையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேப்பிடல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ. எட்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அவற்றில் ஆறு வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>இந்த வழக்குகள் தொடர்ந்து விசாரணையில் உள்ளதுடன், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பிலும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T23:48:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் ஏற்பட்ட தீப்பரவல் ; கே.எல்.எம் விமானம் அவசரமாக தரையிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fire-breaks-out-mid-air-flight-emergency-landing-1789858192"></link>
            <id>https://canadamirror.com/article/fire-breaks-out-mid-air-flight-emergency-landing-1789858192</id>
            <summary type="text">நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கரீபியன் தீவான குராசாவோ நோக்கிப் புறப்பட்ட கே.எல்.எம். விமானத்தில் பயணியொருவரின் கையடக்க மின்னேற்றி (Power Ban...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கரீபியன் தீவான குராசாவோ நோக்கிப் புறப்பட்ட கே.எல்.எம். விமானத்தில் பயணியொருவரின் கையடக்க மின்னேற்றி (Power Bank) நடுவானில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>
கடந்த வியாழக்கிழமை (செப்டெம்பர் 17) அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலாக விமானம் பறந்துகொண்டிருந்தபோது, வணிக வகுப்புப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4be1cb54-a510-464b-a6a7-178ce72ef5e1/26-6aaf1192e556c.webp' /></p><p>கையடக்க மின்னேற்றி தீப்பிடித்ததைத் தொடர்ந்து விமானப் பணியாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். </p><p>இதனால் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என டச்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு விமானி, விமானத்தை குராசாவோ நோக்கிய பயணத்தைத் தொடராமல் மீண்டும் ஆம்ஸ்டர்டாமை நோக்கித் திருப்பியுள்ளார்.
</p><p>
ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்பட்ட சுமார் 5 மணி 30 நிமிடங்களுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>மொத்தமாக சுமார் 11 மணி நேரம் வானில் பயணித்த விமானம், குராசாவோவை சென்றடையாமல் இரவு 8.40 மணியளவில் மீண்டும் ஆம்ஸ்டர்டாமின் ஸ்கிபோல் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.</p><p>

இதனிடையே, தீப்பிடித்த கையடக்க மின்னேற்றி கே.எல்.எம். நிறுவனத்தின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி கமியல் யூர்லிங்ஸுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என சில டச்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இதுகுறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p>இந்தச் சம்பவம் விமானப் பயணங்களின்போது லித்தியம்-அயன் மின்கலங்களைக் கொண்ட சாதனங்களை எடுத்துச் செல்வது தொடர்பான பாதுகாப்பு விதிகளை மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e3a54d7-6c24-4022-bdc5-0180ee4c3720/26-6aaf119233db7.webp' /></p><p>

கே.எல்.எம். நிறுவனத்தின் விதிகளின்படி, ஒரு பயணி அதிகபட்சம் இரண்டு கையடக்க மின்னேற்றிகளை எடுத்துச் செல்ல முடியும். அவற்றை பதிவு செய்யப்பட்ட பயணப் பொதிகளில் வைக்கக் கூடாது; கைப்பையில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.
</p><p>
மேலும், விமானப் பயணத்தின்போது கையடக்க மின்னேற்றிகளைப் பயன்படுத்துவதற்கும் அல்லது அவற்றின் மூலம் சாதனங்களை மின்னேற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விதிமுறைகள் பயணத்தின் தொடக்கத்திலேயே பயணிகளுக்கு அறிவிக்கப்படுவதாகவும், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தற்போதைய நிலையில் அபராதம் விதிக்கும் நடைமுறை இல்லை என்றும் கே.எல்.எம். தெரிவித்துள்ளது.
</p><p>
கையடக்க மின்னேற்றிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம் மின்கலங்கள் சேதமடைந்தாலோ அல்லது அதிக வெப்பமடைந்தாலோ தீப்பற்றும் அபாயம் இருப்பதால், விமானப் பயணங்களில் அவற்றை முறையாகக் கையாள்வது முக்கியத்துவம் பெறுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-19T22:50:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவீடன் நாட்டு எம்.பி.யாக இந்திய வம்சாவளி பெண் தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-origin-woman-elected-as-swedish-mp-1789851374"></link>
            <id>https://canadamirror.com/article/indian-origin-woman-elected-as-swedish-mp-1789851374</id>
            <summary type="text">சுவீடனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஸ்டாக்ஹோம் சிட்டி தொகுதியில் பசுமைக்கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிலா விகே பாட்டீல் (41)...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவீடனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஸ்டாக்ஹோம் சிட்டி தொகுதியில் பசுமைக்கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிலா விகே பாட்டீல் (41) வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
</p><p>
மராட்டியத்தைச் சேர்ந்த பிரபல கல்வியாளர் அசோக் விகே பாட்டீலின் மகளான நிலா விகே பாட்டீல், மராட்டியத்தின் முக்கிய அரசியல் மற்றும் கூட்டுறவுத் துறை குடும்பத்தைச் சேர்ந்தவர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96169be7-aa33-4baf-87b3-a7603148f5a1/26-6aaef6ef7b543.webp' /></p><p>ஆசியாவின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நிறுவிய விதல்ராவ் விகே பாட்டீலின் கொள்ளுப் பேத்தியும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலசாகேப் விகே பாட்டீலின் பேத்தியும் ஆவார். மேலும், தற்போதைய பா.ஜனதா அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் அண்ணன் மகளும் ஆவார்.
</p><p>
சுவீடனில் பிறந்த நிலா, தனது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியை மராட்டிய மாநிலம் அகமதுநகரில் கழித்துள்ளார். சுவீடனில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ள அவர், கடந்த 25 ஆண்டுகளாக அந்நாட்டின் பசுமைக்கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார்.
</p><p>
இதற்கு முன்னர், முன்னாள் சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் தலைமையிலான அரசில் நிதி மற்றும் வீட்டுவசதி துறைகளுக்கான அரசியல் ஆலோசகராகவும் நிலா விகே பாட்டீல் பணியாற்றியுள்ளார்.
</p><p>
தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த நிலா, 349 உறுப்பினர்களைக் கொண்ட சுவீடன் நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.</p><p> மேலும், தனது 15 வயதில் மராட்டிய மாநில பட்ஜெட்டை படிக்கச் செய்த தனது தாத்தா பாலசாகேப் விகே பாட்டீல் உயிருடன் இருந்திருந்தால், தனது வெற்றியைப் பார்த்து பெருமைப்பட்டிருப்பார் என்றும் கூறினார்.
</p><p>
“இந்தியாவை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
சுவீடன் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 176 இடங்களைப் பெற்று பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மராட்டிய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T20:56:21+00:00</updated>
        </entry>
    </feed>
