<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-27T10:14:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் உள்ளாரா? ; டிரம்ப் வெளியிட்ட புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-supreme-leader-mojtaba-khamenei-alive-trump-1787822261"></link>
            <id>https://canadamirror.com/article/iran-supreme-leader-mojtaba-khamenei-alive-trump-1787822261</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மொஜ்தபா கமேனி உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “மொஜ்தபா கமேன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மொஜ்தபா கமேனி உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “மொஜ்தபா கமேனி உயிரிழந்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் மிகவும் கடுமையாக காயமடைந்திருக்கலாம்.
</p><p>
அவரது உடலின் இடதுபக்கம், முழங்கை மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கலாம். எனினும், அவர் உயிரிழந்துவிட்டார் என்று நான் நம்பவில்லை” எனக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaae3f01-489b-4113-868c-28a5324e417b/26-6a9000b721118.webp' /></p><p>
</p><p>
மேலும், “ஒருவேளை மொஜ்தபா கமேனி உயிருடன் இல்லை என்றால், ஈரான் மிகச் சிறந்த ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது” என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் மொஜ்தபா கமேனி படுகாயமடைந்ததாகவும், அதன்பின்னர் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
எனினும், அவரது தற்போதைய உடல்நிலை அல்லது இருப்பிடம் குறித்து ஈரான் தரப்பில் தெளிவான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதனிடையே, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.</p><p>போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான பொருளாதார அழுத்தங்களையும் அவரது நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/487971f6-33f9-4f6b-be20-bc4a81045d56/26-6a9000b7c63c5.webp' /></p><p>
</p><p>
இந்த பொருளாதார நடவடிக்கைகள் பலன் அளித்து வருவதாகத் தெரிவித்துள்ள டிரம்ப், “விரைவில் மிகப்பெரிய வெற்றியைப் பெறப்போகிறோம்” எனவும் கூறியுள்ளார்.
</p><p>
அத்துடன், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை தற்போது முழுமையாக திறக்கப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
மொஜ்தபா கமேனியின் உடல்நிலை மற்றும் அவர் பொதுவெளியில் தோன்றாததன் பின்னணி தொடர்பில் பல்வேறு ஊகங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T09:17:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க மதுபானங்களுக்கு 50% வரி விதிக்கும் கனடிய மாகாணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/saskatchewan-premier-announces-50-tariff-on-1787814605"></link>
            <id>https://canadamirror.com/article/saskatchewan-premier-announces-50-tariff-on-1787814605</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீது 50 சதவீத பரஸ்பர வரியை விதிக்கத் தமது அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கனடாவின் சஸ்காட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீது 50 சதவீத பரஸ்பர வரியை விதிக்கத் தமது அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கனடாவின் சஸ்காட்செவன் மாகாண முதல்வர் ஸ்காட் மோ அறிவித்துள்ளார்.</p><p> 
இந்த வர்த்தக நடவடிக்கை வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
கனடா மற்றும் சஸ்காட்செவன் மாகாணப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரி உயர்வு மற்றும் அதற்குப் பதிலாக மேற்கொள்ளப்படும் எதிரடி வர்த்தக நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f789167-e6ac-4f89-ae61-bac6645c9339/26-6a8fe2cef2d54.webp' /></p><p> </p><p>
கடந்த ஆகஸ்ட் 22 அன்று கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மதுபானங்கள் மீது 50 சதவீத வரியைச் சுமத்தியதற்குப் பதிலடியாகவே சஸ்காட்செவன் மாகாணத்தின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.</p><p>
அமெரிக்க மதுபானங்களை கடைகளின் அலமாரிகளிலிருந்து முற்றிலுமாக அகற்றும் திட்டம் எதுவும் மாகாண அரசிடம் இல்லை என்பதை ஸ்காட் மோ தெளிவுபடுத்தியுள்ளார்.
மக்கள் தங்களுக்கான தேர்வை தாங்களே மேற்கொள்வதற்கு சுதந்திரம் அளிப்பதே எங்களது அரசின் முதன்மையான கொள்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
சஸ்காட்செவனில் அமெரிக்க மதுபானங்களின் விற்பனை ஏற்கனவே 40 சதவீதம் சரிவடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அரசாங்கம் விதிக்கும் தடையை விட நுகர்வோரின் இந்தத் தீர்மானமே வலுவான செய்தியை அமெரிக்காவிற்கு உணர்த்தும் என அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T09:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கிய பார்வையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spectators-trapped-swing-ride-in-germany-hamburg-1787807638"></link>
            <id>https://canadamirror.com/article/spectators-trapped-swing-ride-in-germany-hamburg-1787807638</id>
            <summary type="text">ஜேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கியிருந்த திருவிழா பார்வையாளர்கள் மீட்கப்பட்டனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, 70 மீட்டர் (230 அடி) நீளமுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கியிருந்த திருவிழா பார்வையாளர்கள் மீட்கப்பட்டனர்.
</p><p>
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, 70 மீட்டர் (230 அடி) நீளமுள்ள அந்த சவாரி வாகனம் பழுதடைந்து நகர்வதை நிறுத்தியதால், 23 பயணிகள் பாதி வழியில் சிக்கிக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62cbea48-8ccf-4cb6-843f-355919b18e08/26-6a8fc797cb7f9.webp' /></p><p>
மத்திய ஹாம்பர்க்கில் உள்ள ஊஞ்சல் இராட்டினத்தில் 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் சிக்கிக்கொண்டிருந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட திருவிழா பார்வையாளர்கள், 90 நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டனர்.
</p><p>
ஹம்பர்கர் டோம் திருவிழா, நகரின் செயிண்ட்-பாலி பகுதியில் ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படுகிறது.</p><p> இது ஜேர்மனியின் மிக நீண்ட காலமாக நடைபெறும் மற்றும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட கேளிக்கைச் சந்தைகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் விருந்தினர்களை இது ஈர்க்கிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T09:08:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் மகனைக் கொல்ல சதி; அச்சத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israeli-netanyahu-fears-plot-to-kill-his-son-1787815159"></link>
            <id>https://canadamirror.com/article/israeli-netanyahu-fears-plot-to-kill-his-son-1787815159</id>
            <summary type="text">&amp;nbsp; தனது மகன்களில் ஒருவரைக் படுகொலை செய்ய ஈரான் அரசுத் திட்டம் தீட்டித் தாக்குதல் நடத்த முயன்றதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளமை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தனது மகன்களில் ஒருவரைக் படுகொலை செய்ய ஈரான் அரசுத் திட்டம் தீட்டித் தாக்குதல் நடத்த முயன்றதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளமை சர்வதேச அளவில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

இஸ்ரேலின் தொலைக்காட்சி ஊடகத்திற்குத் அளித்த பேட்டியில், நெதன்யாகு பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். 

 இதன்போது யாராலும் நம்ப முடியாத அளவுக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f14039e-6e7a-4602-b421-8c3b25d89be2/26-6a8fe4f91173b.webp' /></p><h2>&nbsp;ஈரானிய உளவு அமைப்பைச் சேர்ந்த உளவாளிகள்</h2><p> ஈரானிய அமைப்புகள் என் மகனை இலக்கு வைத்து அவரைக் படுகொலை செய்யத் தீவிர முயற்சி மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

 35 வயதான நெதன்யாகுவின் மூத்த மகன் யாயிர் நெதன்யாகுவே (Yair Netanyahu) இந்தச் சதியில் இலக்காக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி பகுதியில் தங்கியிருந்த யாயிர் நெதன்யாகுவை ஈரானிய உளவு அமைப்பைச் சேர்ந்த உளவாளிகள் ரகசியமாகக் கண்காணித்து வந்ததை இஸ்ரேலின் ‘ஷின் பெட்’ (Shin Bet) உளவுத்துறை கண்டறிந்து அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனங்களை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.</p><p>

இந்த ஆபத்தான தகவலைத் தொடர்ந்து, உயிருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் யாயிர் நெதன்யாகு தனது உடமைகளைக்கூட எடுக்காமல் உடனடியாகப் புளோரிடாவில் இருந்து இஸ்ரேலுக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுப் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார். </p><p>

இஸ்ரேலில் விரைவில் தேர்தல் வரவுள்ள சூழலில், அனைத்து முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு முழு அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் எதிரி நாடுகள் தங்களது சதித்திட்டத்தில் வெற்றி பெற்றுவிடும் என்றும் நெதன்யாகு இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
மறுபுறம், ஈரானிய ஊடகங்கள் சமீபத்தில் அமெரிக்கத் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைக் இலக்கு வைக்கும் விடியோக்களை வெளியிட்டு அச்சுறுத்தி வருகின்றது.</p><p>

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமரின் மகனுக்கும் இத்தகைய ஆபத்து நேர்ந்துள்ள தகவல் இரு நாடுகளுக்கும் இடையேயான உளவுத்துறைப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T08:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை முடக்கம் ; தற்காலிக கடற்பாதைக்கு ஈரான் அதிரடி திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strait-of-hormuz-iran-plans-temporary-sea-route-1787818715"></link>
            <id>https://canadamirror.com/article/strait-of-hormuz-iran-plans-temporary-sea-route-1787818715</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான மோதல் நிலைமை தொடரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியாக இடம்பெறும் கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஈரானும் ஓமானும் புதிய பேச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான மோதல் நிலைமை தொடரும் சூழலில், ஹோர்முஸ் நீரிணை வழியாக இடம்பெறும் கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஈரானும் ஓமானும் புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன.
</p><p>
இதன் மூலம் கப்பல் போக்குவரத்திற்கான தற்காலிகப் பாதையொன்றை விரைவில் அறிவிக்க முடியும் என ஓமான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4f697c8-b580-470e-bbec-f791d60c2517/26-6a8ff2dd24896.webp' /></p><p>கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து உருவான போர் சூழல் காரணமாக, உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுப் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுப் போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாக நடைபெறுவதால், அதன் தொடர்ச்சியான முடக்கம் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த நிலையில், பாதுகாப்பான கடற்பயணத்தை மீளமைக்கும் நோக்கில் கூட்டுத் தற்காலிக கடற்பாதையொன்றை அமைப்பது தொடர்பாக ஈரானும் ஓமானும் உடன்பாடு கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், அப்பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பிலும் இரு நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இதனிடையே, ஈரான் மீது தற்போதைக்கு புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தும் திட்டம் அமெரிக்காவிடம் இல்லை எனவும், அதற்கு பதிலாக பொருளாதார ரீதியிலான அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்த அமெரிக்கா முயன்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/884a6ac8-0929-4fc6-b45c-91ed2a06976e/26-6a8ff2ddcbe95.webp' /></p><p>இதன் ஒரு பகுதியாக, ஈரானால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட கப்பல்கள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
எனினும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாத நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் பயணிப்பது தொடர்ந்தும் ஆபத்து நிறைந்ததாகவே காணப்படுகின்றது.
</p><p>
இந்த நிலைமையில், ஈரான்–ஓமான் பேச்சுவார்த்தையின் முடிவாக அறிவிக்கப்படவுள்ள தற்காலிக கடற்பாதை, சர்வதேச கடல் போக்குவரத்து மற்றும் உலக எரிசக்திச் சந்தையின் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-27T08:18:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு டொலரின் பெறுமதி 2 மில்லியன் ஈரான் ரியால்கள்: கடும் பெறுமதி வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-us-dollar-now-costs-2-million-rials-1787817560"></link>
            <id>https://canadamirror.com/article/one-us-dollar-now-costs-2-million-rials-1787817560</id>
            <summary type="text">அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் போரினால் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக, ஈரானின் நாணயமான ரியால் வரலாறு காணாத சரிவைச் சந்தித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் போரினால் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக, ஈரானின் நாணயமான ரியால் வரலாறு காணாத சரிவைச் சந்தித்து திறந்த சந்தையில் ஒரு அமெரிக்க டொலருக்கு 2 மில்லியன் ரியால்களாகத் தாழ்ந்துள்ளது.</p><p>
சுமார் 9.2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஈரானில், இந்த நாணய வீழ்ச்சி மற்றும் தீவிர பணவீக்கம் காரணமாக மக்களின் கொள்வனவு திறன் கடுமையாகக் குறைந்துள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
</p><p>போர் தொடங்குவதற்கு முன்பிருந்த விலைகளுடன் ஒப்பிடுகையில் அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய சராசரி விலையேற்ற விவரம்:
சமையல் எண்ணெய்: 177% உயர்வு, கோழி இறைச்சி : 74% உயர்வு, தக்காளி: 71% உயர்வு, இன்சுலின் மருந்து (சர்க்கரை நோய் சிகிச்சை): 642% கடும் உயர்வு, குழந்தைகளுக்கான பால் மாவு: 95% உயர்வு, பாரசிட்டமால் மற்றும் அடிப்படை மருந்துகள்: 93% உயர்வு என தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e391755f-0a3f-4280-ac70-f22fc043482c/26-6a8fee5a13e0d.webp' /></p><p>
தலைநகர் தெஹ்ரானில் வசிக்கும் குடும்பங்களின் வாராந்திர மளிகைச் செலவுகள் 20% முதல் 30% வரை அதிகரித்துள்ளன. </p><p>
குழந்தைகளுக்கான பராமரிப்பு நிலையக் கட்டணம் நாளொன்றுக்கு 50 லட்சம் ரியால்கள் வரை உயர்ந்துள்ளதால் சாதாரண குடும்பங்கள் பெரும் நிதிச் சுமையை எதிர்நோக்கியுள்ளன. </p><p>
ஆடை மற்றும் சில்லறை வர்த்தகத் துறையில் விற்பனை 40% வரை சரிவடைந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை, தொழிலாளர் ஊதியம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் உயர்ந்துள்ளதால், வரவிருக்கும் குளிர்காலத்திற்குள் பல சிறு வர்த்தகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p>
ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் பல தசாப்தங்களாக விதித்து வரும் பொருளாதாரத் தடைகள், அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக ஏற்பட்ட துறைமுக முற்றுகைகள் மற்றும் உற்பத்தி முடக்கங்கள் என்பன நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக முடக்கியுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T08:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற உணவகத்திற்கு நீதிமன்றம் பிறபித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/jaffna-restaurant-fined-rs-9-5-lakh-1787816712"></link>
            <id>https://canadamirror.com/article/jaffna-restaurant-fined-rs-9-5-lakh-1787816712</id>
            <summary type="text">போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 950,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.</p><p></p><p>நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட விசாரணை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 1 லீற்றர் குடிநீர் போத்தலொன்றுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 120 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக 200 ரூபாவிற்கு நுகர்வோர் ஒருவருக்கு குறித்த உணவகத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a462196-615b-4fe0-8368-b69a43cc606c/26-6a8feb093b80b.webp' /></p><p>இதற்கமைவாக, குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதேவேளை, ஒரு பொருளைக் கொள்வனவு செய்யும் போது அதிலுள்ள அச்சிடப்பட்ட விலை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்க்குமாறும், செலுத்தும் பணத்திற்கான சரியான பற்றுச்சீட்டைப் பெற்று அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. </p><p>

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்தல் அல்லது வேறு ஏதேனும் நுகர்வோர் சட்டங்களை மீறும் செயற்பாடுகள் குறித்த தகவல்கள் தெரிந்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு அந்த அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T07:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் சிக்கிய 24 கனடியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/24-canadians-reportedly-among-the-missing-1787815303"></link>
            <id>https://canadamirror.com/article/24-canadians-reportedly-among-the-missing-1787815303</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு பேரழிவு ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு பேரழிவு ஏற்பட்டுள்ளது.
</p><p> போதேகோசி ஆற்றுப் பகுதியில் பேரிரைச்சலுடன் சீறிப் பாய்ந்த வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் அடித்துச் செல்லப்பட்ட பயங்கரக் காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தில் 24 கனடியர்கள் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> 
மேலும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/887cecda-9aea-4354-9707-6f2c21fe6e6d/26-6a8fe58888b14.webp' /></p><p>
</p><p>இந்த பேரழிவு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி நேபாளத்தின் போதேகோசி ஆற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளம் மிகவும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.</p><p>
துயரத்தில் இருக்கும் மக்கள், அன்பானவர்களை இழந்தவர்கள் மற்றும் உறவுகளின் தகவல்களுக்காகக் காத்திருப்பவர்கள் அனைவருக்கும் கனடியர்களின் எண்ணங்கள் துணையாக இருக்கும். எங்களது அரசாங்கம் இந்தச் சூழ்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>கனடாவின் வெளியுறவுத் துறை தூதரக அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட கனடியர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்தச் சம்பவத்தால் கனடாவில் வாழும் நேபாள மற்றும் திபெத்திய சமூகத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T07:23:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கின்னஸ் உலக சாதனையை வியக்க வைத்த கைபேசி சோதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mobile-phone-test-surprised-guinness-world-record-1787814944"></link>
            <id>https://canadamirror.com/article/mobile-phone-test-surprised-guinness-world-record-1787814944</id>
            <summary type="text">கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் வியக்கும் ஒரு விசித்திரமான சாதனை சுவீடன் நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
நிலப்பரப்பில் இருந்து சுமார் 30 ஆயிரத்து 607 மீற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் வியக்கும் ஒரு விசித்திரமான சாதனை சுவீடன் நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p>நிலப்பரப்பில் இருந்து சுமார் 30 ஆயிரத்து 607 மீற்றர் உயரத்தில் இருந்து, கைபேசி உறைக்குள் வைக்கப்பட்ட கைபேசியொன்று கீழே வீசப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்தும் அந்தக் கைபேசி எந்தச் சேதமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/523c864d-7042-4f38-9366-4ba629ebf217/26-6a8fe4219e6c5.webp' /></p><p>'ரைனோஷீல்ட்' மற்றும் 'சென்ட் இன் டூ ஸ்பேஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து, சுவீடன் நாட்டின் கிருனா பகுதியில் அமைந்துள்ள விண்வெளி மையத்துக்கு மேலாகப் பலூன் மூலம் இந்தச் சோதனையை செய்துள்ளன.
</p><p>
விமானங்கள் பறக்கும் உயரத்தை விடவும், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விடவும் மூன்று மடங்கு அதிகமான உயரத்திலிருந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.</p><p>

சிற்றூந்துகளில் உள்ள ஏர்பேக்குகள் மற்றும் விளையாட்டு பாதணிகளில் பயன்படுத்தப்படும் காற்றுமெத்தைகளில் இருந்து யோசனை பெற்று, அதிர்வுகளைத் தாங்கும் வகையில் இந்த விசேட கைபேசி உறை வடிவமைக்கப்பட்டுள்ளது. </p><p>மறுசுழற்சி செய்யக்கூடிய இந்தப் பொருளின் தரத்தை நிரூபிக்கவே இந்தச் சோதனை செய்யப்பட்டுள்ளது.</p><p>

கின்னஸ் சாதனையின் விதிகள்படி, பரசூட் எதையும் பயன்படுத்தக் கூடாது என்பதால் கைபேசி உறை நேரடியாகத் தரையில் மோதியது.
</p><p>
எவ்வாறாயினும், கீழே விழுந்த கைபேசியைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுவினருக்கு ஐந்து மணி நேரத்திற்கும் மேல் ஆகியுள்ளது.
</p><p>
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத இதுபோன்ற பொருள்கள் அதிக நீடித்து உழைக்கும் என்பதை உலகிற்கு உணர்த்துவதே இந்தச் சாதனையின் நோக்கம் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-27T07:16:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகெங்கும் அமெரிக்க விசா நேர்காணல்கள் தற்காலிக நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-visa-interviews-temporarily-suspended-worldwide-1787813635"></link>
            <id>https://canadamirror.com/article/us-visa-interviews-temporarily-suspended-worldwide-1787813635</id>
            <summary type="text">உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

 

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.</p><p>

 

இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், குடியேற்ற கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0f175c4-38b8-458b-bcbe-1b919735de58/26-6a8fdf052a3a3.webp' /></p><p>மாணவர்கள், வேலை பார்ப்போர், வர்த்தகம், சுற்றுலா என பல விசாக்களில் கடும் விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார்.
</p><p>


அந்த வகையில் சுற்றுலா அல்லது வணிகத்திற்காக வந்து, அகதி அந்தஸ்து கோரியுள்ள, 2 இலட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.</p><p>



இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்கள் மற்றும் துாதரக அலுவலகங்களில் விசா நேர்காணல்கள் நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>


அமெரிக்க அரசு வழங்கும் நலத்திட்டங்களைச் சார்ந்து வாழும் வாய்ப்புள்ள விண்ணப்பதாரர்களை கண்டறிந்து நிராகரிப்பது மற்றும் விசா விண்ணப்பங்களை மிகவும் தீவிரமாகவும், ஒரே மாதிரியாகவும் ஆய்வு செய்வது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


நேர்காணல் எப்போது மீண்டும் தொடங்கும் என்ற விபரத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிடவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-27T06:54:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திபெத் பனிப்பாறை சரிவே நேபாள பெரும் வெள்ளப்பெருக்குக்கு காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/collapse-tibetan-glacier-cause-floods-in-nepal-1787813443"></link>
            <id>https://canadamirror.com/article/collapse-tibetan-glacier-cause-floods-in-nepal-1787813443</id>
            <summary type="text">&amp;nbsp; திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவே , நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்குக்கு காரணம் எனஅமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவே , நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்குக்கு காரணம் எனஅமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
</p><p>
செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6ec9225-979c-4716-9629-2f886e3beaee/26-6a8fde4498266.webp' /></p><p>
</p><p>
திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவின் தாக்கத்தால் 5.2 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து உருவான சேற்றாற்று வெள்ளமே நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுக்குக் காரணமாக அமைந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T06:47:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொன்றியல் விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் – ஏர் கனடா ஊழியர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-air-canada-employees-arrested-i-1787810763"></link>
            <id>https://canadamirror.com/article/two-air-canada-employees-arrested-i-1787810763</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் மொன்றியல்–பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையம் ஊடாக கொக்கெய்ன் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் மொன்றியல்–பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையம் ஊடாக கொக்கெய்ன் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஏர் கனடா நிறுவனத்தின் இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, புதன்கிழமை காலை மொன்றியல் பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்புகள் மற்றும் ஒரு வாகனத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p>
மேலும், ஏர் கனடாவின் ஒத்துழைப்புடன், டொர்வால் பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊழியர்கள் பணியாற்றும் இடத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff85c9f5-e716-4470-846d-53e827db3257/26-6a8fd3cc8a00c.webp' /></p><p>
</p><p>கைது செய்யப்பட்ட இருவரும் ஏர் கனடாவின் விமான நிலைய தரைத்தள செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு பதவிகளில் பணியாற்றி வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>விமான நிலையம் தொடர்பான விசாரணைப் பிரிவினரின் விசாரணையில், பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ள விமான நிலையப் பகுதிகளுக்கு பயணப் பொதிகளை கொண்டு செல்வதற்கும், அங்கிருந்து அவற்றை நகர்த்துவதற்கும் குறித்த இருவரும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.</p><p>
பொதிகளின் பயணச் சீட்டுகள் மாற்றப்பட்டு, போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகளை குறிப்பிட்ட நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு அவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T06:23:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு உதவ களமிறங்கிய ஐக்கிய நாடுகள் சபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/united-nations-steps-in-to-help-nepal-1787806112"></link>
            <id>https://canadamirror.com/article/united-nations-steps-in-to-help-nepal-1787806112</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தாம் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6f61fab-e960-4fda-b2ef-c179e808abd7/26-6a8fc1a1ea33c.webp' /></p><p>அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையத் தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

பாதிக்கப்பட்ட அனைவருடனும் நான் துணை நிற்கிறேன் என்று கூறியுள்ள அவர், நேபாள அரசாங்கத்தின் தலைமையிலான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. குழுக்களும் அதன் பங்காளர்களும் தேவையான நிவாரண பொருட்களையும் பணியாளர்களையும் திரட்டி வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-27T04:49:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ள அனர்த்தத்தில் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-flood-killed-160-1787805506"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-flood-killed-160-1787805506</id>
            <summary type="text">நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். </p><p>
இமயமலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பனி மற்றும் பாறைச் சரிவினால் லெண்டே ஆற்றின் குறுக்கே உருவாகிய தற்காலிக இயற்கை அணை உடைந்ததே இந்த பேரழிவுக்கு முக்கியக் காரணமாகும்.
</p><p>இதனால் போதே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் வெள்ளநீர் பேரிரைச்சலுடன் சீறிப் பாய்ந்து கரையோர கிராமங்களைச் சூறையாடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54d69449-e621-4bf9-8878-7fa7bed8a700/26-6a8fbf4bbb467.webp' /></p><p>
இந்த எதிர்பாராத வெள்ளப்பெருக்கில் நேபாளத்தின் ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. </p><p>கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட சுமார் 600 பயணிகள் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகிறது.
</p><p> மேலும், சீனா-நேபாள எல்லையிலுள்ள கியிரோங் வர்த்தகக் கணவாய், முக்கிய சர்வதேசப் பாலங்கள் மற்றும் பல நீர்மின் திட்டங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அப்பகுதியின் உள்கட்டமைப்பு முற்றிலும் முடங்கியுள்ளது.</p><p>
தொடர் மழை மற்றும் தடிமனான சேறு காரணமாகப் பாதிக்கப்பட்ட மலைப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் மற்றும் ஹெலிகாப்டர்கள் செல்வதில் கடும் சிரமம் நிலவி வருகிறது.
</p><p> அதேவேளையில், நேபாள ஆறுகளில் இருந்து பெருக்கெடுக்கும் மேலதிக நீர் காரணமாக இந்தியாவின் பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச எல்லைப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T04:41:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திபெத் மண்சரிவு பேரிடர் ; காணாமல் போனோர் எண்ணிக்கை 558 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tibet-landslide-number-missing-people-rises-to-558-1787805315"></link>
            <id>https://canadamirror.com/article/tibet-landslide-number-missing-people-rises-to-558-1787805315</id>
            <summary type="text">திபெத்தின் கைராங் (Gyirong) மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு பேரிடரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் அரச ஒளிபரப்பு நிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திபெத்தின் கைராங் (Gyirong) மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு பேரிடரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் அரச ஒளிபரப்பு நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>

இவர்களில் 260 பேர் வெளிநாட்டவர்கள் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அனர்த்தம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0345131-8cef-4110-abf8-8fe7472851b9/26-6a8fbe8505dde.webp' /></p><p>கைராங் எல்லையானது சீனா மற்றும் நேபாளத்திற்கு இடையிலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய எல்லைக் கடக்கும் இடமாக உள்ளது. </p><p>

இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் எல்லையில் மண்சரிவு ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே, பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.</p><p> 

அதேநேரம் நேபாளத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. 

அத்துடன் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போனவர்களில் 341 வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.</p><p>

அவர்களில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்களும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 34 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் எந்த நாடுகள் என உறுதிப்படுத்தப்படாத 100 பேரும் அடங்குவதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T04:35:25+00:00</updated>
        </entry>
    </feed>
