<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-21T19:39:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த தாய்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sentencing-for-mother-who-burned-down-1787322975"></link>
            <id>https://canadamirror.com/article/sentencing-for-mother-who-burned-down-1787322975</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் பேஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள தனது மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த குற்றத்திற்காக சோனியா லார்சன் என்பவருக்கு 12 மாதங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் பேஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள தனது மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த குற்றத்திற்காக சோனியா லார்சன் என்பவருக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>
சிறைத் தண்டனையுடன் இரண்டு ஆண்டுகள் கண்காணிப்புப் பிணை மற்றும் 60 மணி நேரச் சமூக சேவையும் அவருக்கு தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.</p><p>
அக்டோபர் 17, 2023 அன்று 'தி ஹப் ஆன் தி டாக்ஸ்'உணவகத்தில் ஏற்பட்ட பெருந்தீயில் கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்தது. இதனால் சுமார் 1.7 மில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/663d78f2-013a-4d46-98e2-022590330be3/26-6a886261210ba.webp' /></p><p>
</p><p>அக்டோபர் 13 மற்றும் 16 ஆகிய திகதிகளிலும் சோனியா உணவகத்திற்குள் புகுந்து தீ வைக்க முயன்றது கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தெரியவந்தது. </p><p>
அக்டோபர் 17 ம் திகதி பாதுகாப்பு அலாரம் அமைப்பை முடக்கிவிட்டு திட்டமிட்டுத் தீ வைத்துள்ளார்.
திட்டமிட்டு இந்தத் தீவைப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது, இது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று நீதிபதி டி.ஜி. மெக்டொனால்ட் சுட்டிக்காட்டினார்.
</p><p>சோனியா இதற்கான தெளிவான காரணத்தைக் கூறவில்லை என்றாலும், அந்தச் சமயத்தில் தான் மனதளவில் கடுமையான பின்னடைவைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பாதிக்கப்பட்ட உணவகத்தின் உரிமையாளரும் சோனியாவின் மகனுமான கெவின் லார்சன், காப்பீட்டுத் தொகை போகத் தான் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இழந்துவிட்டதாகவும், வணிகத்தை மீண்டும் தொடங்க முடியாமல் போய்விட்டது என்றும் தெரிவித்தார்.
</p><p>எனினும், தனது தாயை மன்னித்து அவருடனான உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்புவதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T19:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[9.5 மில்லியன் பவுண்ஸ் செலுத்த இளவரசர் ஹெரி உள்ளிட்டோருக்கு உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/prince-harry-and-others-ordered-pay-9-5-million-1787334239"></link>
            <id>https://canadamirror.com/article/prince-harry-and-others-ordered-pay-9-5-million-1787334239</id>
            <summary type="text">பிரித்தானியாவின் &#039;டெய்லி மெயில்&#039; பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு ஆரம்ப சட்டச் செலவாக 9.5 மில்லியன் பவுண்ஸ்களைச் செலுத்துமாறு இளவரசர் ஹெரி உட்பட ஆறு பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் 'டெய்லி மெயில்' பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு ஆரம்ப சட்டச் செலவாக 9.5 மில்லியன் பவுண்ஸ்களைச் செலுத்துமாறு இளவரசர் ஹெரி உட்பட ஆறு பிரமுகர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட தனியுரிமை மீறல் வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afef7610-2f8b-4752-950c-f7adf97f27c1/26-6a888e617122f.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T17:44:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - கனடா இடையே எல்லை தாண்டிய பயணம் அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadians-and-americans-are-crossing-the-border-1787323518"></link>
            <id>https://canadamirror.com/article/canadians-and-americans-are-crossing-the-border-1787323518</id>
            <summary type="text">அரசியல் மற்றும் வர்த்தக ரீதியிலான பதற்றங்கள் நீடித்து வரும் நிலையிலும், கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான எல்லை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல் மற்றும் வர்த்தக ரீதியிலான பதற்றங்கள் நீடித்து வரும் நிலையிலும், கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான எல்லை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் இருபுறமும் அதிகரித்துள்ளதாகக் கனடா புள்ளிவிவர திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>கனடாவைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குச் சென்று திரும்பிய பயணங்களின் எண்ணிக்கை 2.3 மில்லியனாக உயர்ந்துள்ளது.இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் அதிகமாகும்.
</p><p>அதேபோல, அமெரிக்க வாழ் மக்கள் கனடாவிற்கு மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை 3 மில்லியன் ஆக உயர்ந்து, 6.1 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd7ac0cc-5364-4de9-b423-6f007533e7a3/26-6a886481092a4.webp' /></p><p>சாலை வழியாக வாகனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. </p><p>அதேசமயம், இரு நாடுகளுக்கும் இடையேயான வான்வழிப் பயணம் சற்று குறைந்துள்ளது.
சில சுற்றுலாப் பயணிகள் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை ஆதரித்துச் சுற்றுலா மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். </p><p>
எனினும், அரசியல் சூழல் காரணமாகக் கனடாவின் உள்ளூர் இடங்களிலேயே விடுமுறையைக் கழிக்க விரும்புவதாகச் சிலர் கூறியுள்ளனர்.</p><p>
நீண்டகாலப் புள்ளிவிவரங்களின்படி, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரிப்பதற்கு முன்பிருந்த அளவை விட, கனடியர்களின் அமெரிக்கப் பயணம் இன்னமும் 24.6 சதவீதம் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T15:42:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மனிதக் கடத்தல்: சோமாலிய அகதிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/somali-refugee-gets-4-years-for-transporting-1787322524"></link>
            <id>https://canadamirror.com/article/somali-refugee-gets-4-years-for-transporting-1787322524</id>
            <summary type="text">கனடாவின் மனிட்டோபா எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்குப் பணத்திற்காக உதவிய சோமாலிய அகதி அப்தி ஹாசன் அலிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மனிட்டோபா எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்குப் பணத்திற்காக உதவிய சோமாலிய அகதி அப்தி ஹாசன் அலிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>
பிணையில் வெளிவந்த நிலையிலும் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் அகதிகள் சட்டத்தை மீறி, முறையான விசா அல்லது பாஸ்போர்ட் இல்லாதவர்களை எல்லை தாண்டி அழைத்துச் சென்ற குற்றத்தை அப்தி ஹாசன் அலி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
</p><p>2024 பிப்ரவரி மாதம் அமெரிக்க எல்லையிலிருந்து கடுங்குளிரில் பல மணி நேரம் நடந்து வந்த 8 வெளிநாட்டினரை வாகனத்தில் அழைத்துச் சென்றபோது முதல்முறை சிக்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8597ddb3-6eed-4950-a46d-1eb30a8ae37d/26-6a88609e2b892.webp' /></p><p> </p><p>பின்னர் பிணையில் வெளிவந்த அவர், அதே ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் 5 வெளிநாட்டினரை வாடகை வாகனத்தில் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
</p><p>-20 முதல் -25 பாகை செல்சியஸ் வரையிலான கடுமையான குளிர்காலச் சூழ்நிலையில் இந்த மனிதக் கடத்தல் நடந்துள்ளது. </p><p>
அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் தவிர்க்கப்பட்டுள்ளதாக நீதிபதி ரேச்சல் ரூசன் தெரிவித்துள்ளார்.
அரசு தரப்பு மற்றும் வழக்கறிஞரின் கூட்டுப் பரிந்துரையை ஏற்று நீதிபதி 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கினார்.</p><p> 
ஏற்கனவே சிறையில் கழித்த நாட்களைக் கணக்கில் கொண்டால், இன்னும் 500 நாட்கள் அவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும். </p><p>மேலும் இவருக்கு நாடு கடத்தப்படும் அபாயமும் உள்ளது.
சோமாலியாவில் அரசியல் வன்முறையிலிருந்து தப்பிப் பிழைத்த இவர், மற்றவர்களும் பாதுகாப்பான இடத்தை அடைய உதவ வேண்டும் என்ற எண்ணத்திலும், நிதிச் சிக்கல் காரணமாகவுமே இதைச் செய்ததாகத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T15:40:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நான்கு வயது சிறுவனின் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/calgary-4-year-old-scores-160-on-1787321940"></link>
            <id>https://canadamirror.com/article/calgary-4-year-old-scores-160-on-1787321940</id>
            <summary type="text">கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த அலி அல்தாலவி என்ற 5 வயது சிறுவன், தனது 4 வயதிலேயே ஐக்யூ தேர்வில் 160 புள்ளிகள் பெற்று உலகளவில் உள்ள 0.1 சதவீத முன்னணி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த அலி அல்தாலவி என்ற 5 வயது சிறுவன், தனது 4 வயதிலேயே ஐக்யூ தேர்வில் 160 புள்ளிகள் பெற்று உலகளவில் உள்ள 0.1 சதவீத முன்னணி அறிவுத்திறன் கொண்ட சிறுவர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.</p><p>
உலகின் பழமையான மற்றும் புகழ்பெற்ற உயர் ஐக்யூ அமைப்பான 'மென்சா'வில் இணைவதற்கு 130 அல்லது அதற்கு மேற்பட்ட ஐக்யூ புள்ளிகள் தேவை. 160 புள்ளிகள் பெற்ற அலி, கடந்த ஆண்டு கனடாவில் மென்சா அமைப்பில் சேர்க்கப்பட்ட இரு 4 வயது சிறுவர்களில் ஒருவர் ஆவார்.
</p><p>அலீயின் சகோதரி லமீஸ் (7) மற்றும் சகோதரன் உமர் (10) ஆகிய இருவருமே ஏற்கெனவே மென்சா அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d03b7cc8-af21-4162-8b95-77305b81fe3e/26-6a885e565b271.webp' /></p><p>
</p><p>கணிதம் மற்றும் வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்ட அலி, பல்வேறு நாடுகளின் கொடிகளைப் பார்த்து அவற்றின் பெயர்களைத் துல்லியமாகக் கூறுகிறார்.
</p><p>அலிக்கு 2 வயதாக இருக்கும்போதே புதிர் விளையாட்டுகள் மற்றும் புதிய விஷயங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் இருந்ததாகத் அவரது தாய் அலா ஹாசன் தெரிவித்துள்ளார்.
</p><p>கணிதத்தைத் தவிர, அலிக்கு கால்பந்து விளையாட்டிலும் அதிக ஆர்வம் உண்டு. அவருக்கு விருப்பமான வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பதால், அவரைப் போலவே தலைமுடியை அலங்கரித்துக் கொண்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T15:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் வாகனம் மீது மோதி விபத்து: ஒருவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/1-dead-after-plane-makes-emergency-l-1787305766"></link>
            <id>https://canadamirror.com/article/1-dead-after-plane-makes-emergency-l-1787305766</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் பொதுச் சாலையில் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் பொதுச் சாலையில் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>
நேற்று பிற்பகல் 2:20 மணியளவில், 'பீச் கிங் ஏர் 200' ரக சிறிய ரக விமானம் ஒன்று பிரின்ஸ் ஜார்ஜ் பகுதியில் உள்ள 'ஃபூட்ஹில்ஸ் போல்வர்டு' சாலையில் அவசரமாகத் தரையிறங்கியது. </p><p>அப்போது எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விமானம் மோதியது. 
விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதை வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். உயிரிழந்தவர் சாலையில் சென்ற வாகனத்தில் இருந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72cd50ff-4dd2-44f5-ae29-be7fd0f2f021/26-6a881f2814e18.webp' /></p><p>
</p><p>மேலும், விபத்து நடந்த ஃபூட்ஹில்ஸ் பகுதி, நகர மையப்பகுதியையும் ஹாட் குடியிருப்புப் பகுதியையும் இணைக்கும் மிக முக்கிய மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை என்றும், இந்த சம்பவத்தில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>சம்பவ இடத்திற்கு வந்த அவசர மருத்துவக் குழுவினர் காயமடைந்தவர்களுக்குப் முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர்.</p><p> எனினும், விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் வாகனங்களில் இருந்தவர்களில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற முழுமையான விவரங்களை காவல்துறை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.</p><p> 
இதேவேளை, இந்தச் சோகமான சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதலமைச்சர் டேவிட் எபி "இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு ; இரண்டு பெண்களுக்கும் இரண்டு ஆண்களுக்கும் தலா 100 பிரம்படிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sexual-relations-100-lashes-2-men-2women-indonesia-1787309599"></link>
            <id>https://canadamirror.com/article/sexual-relations-100-lashes-2-men-2women-indonesia-1787309599</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தோனேசியாவின் தீவிர இஸ்லாமிய மாகாணமான ஆச்சேவில், திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக இரண்டு பெண்களுக்கும் இரண்டு ஆண்களுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தோனேசியாவின் தீவிர இஸ்லாமிய மாகாணமான ஆச்சேவில், திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக இரண்டு பெண்களுக்கும் இரண்டு ஆண்களுக்கும் தலா 100 பிரம்படிகள் என அதிகாரிகள் பகிரங்கமாகத் தண்டிக்கப்பட்டனர்.
</p><p>


வயது வெளியிடப்படாத அந்த நால்வரும், மாகாணத் தலைநகரான பண்டா ஆச்சேவில் உள்ள ஒரு பொதுப் பூங்காவில், டஜன் கணக்கானோர் பார்க்கக் கூடியிருக்க, பிரம்படி வாங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/addb105f-1375-4c30-bcae-5ca2746c6634/26-6a882e20db38d.webp' /></p><h2>கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல்</h2><p>
</p><p>
குழந்தைகள் உட்பட கூட்டத்தில் இருந்த சிலர், பிரம்படி மீண்டும் மீண்டும் விழுந்தபோது இன்னும் கடுமையாக என்று கத்தினார்கள்.
</p><p>
வியாழக்கிழமை நடந்த பிரம்படித் தாக்குதலில், கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய உடல்ரீதியான நெருக்கம் என்ற சிறிய குற்றத்திற்காக மேலும் நான்கு பேருக்கு தலா 22 பிரம்படிகள் வழங்கப்பட்டன.
</p><p>
ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததற்காக இதில் கைகோர்ப்பதும் அடங்கும். மற்ற இருவருக்குத் தலா ஏழு கசையடிகள் வழங்கப்பட்டன. அதேசமயம் மது அருந்திய ஒருவருக்கு 20 முறை பிரம்படி கொடுக்கப்பட்டது.
</p><p>
இவை அனைத்தும் ஆச்சேவில் நிகழும் குற்றங்களாகும். இந்தோனேசியாவின் இந்த மாகாணத்தில்தான், 2002 முதல் அமலில் உள்ள ஷரியா இஸ்லாமியச் சட்டத்தின் ஒரு வடிவம் பின்பற்றப்படுகிறது, மேலும் இது 2015-இல் மேலும் கடுமையாக்கப்பட்டது.</p><p>

தென்கிழக்கு ஆசிய நாடான ஆச்சேவில் பிரம்படி சட்டப்பூர்வமான தண்டனை முறையாக இல்லாவிட்டாலும், சூதாட்டம் மற்றும் ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைத் தண்டிப்பதற்காக அதற்கு வலுவான ஆதரவு உள்ளது.</p><p>

மாகாணத்தில் 30 ஆண்டுகால பிரிவினைவாதக் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 2005-ல் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு சுயாட்சியை ஆச்சே அனுபவித்து வருகிறது.</p><p>

இந்தோனேசியா உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடாக இருந்தாலும், அது அதிகாரப்பூர்வமாக ஆறு மதங்களையும் பழங்குடி நம்பிக்கைகளையும் அங்கீகரிக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T13:40:45+00:00</updated>
        </entry>
    </feed>
