<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-27T15:24:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களை மீட்க புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/alberta-aims-to-get-gambling-websites-1785150658"></link>
            <id>https://canadamirror.com/article/alberta-aims-to-get-gambling-websites-1785150658</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம், ஆன்லைன் சூதாட்ட தளங்களை சட்டப்பூர்வ முறைப்படுத்துதலின் கீழ் கொண்டுவந்து, அதன் மூலம் பெறப்படும் வரி வருவாயைக் கொண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம், ஆன்லைன் சூதாட்ட தளங்களை சட்டப்பூர்வ முறைப்படுத்துதலின் கீழ் கொண்டுவந்து, அதன் மூலம் பெறப்படும் வரி வருவாயைக் கொண்டு சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.</p><p>
கடந்த ஜூலை 13 முதல் ஆல்பர்ட்டாவில் தனியார் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சட்டப்பூர்வமாகச் செயல்பட அனுமதி அளிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டன.
மக்களின் சூதாட்டப் பழக்கத்தைத் தடுத்து நிறுத்துவது கடினம். </p><p>முன்னதாக பெரும்பாலான ஆன்லைன் சூதாட்டங்கள் கட்டுப்பாடின்றி இயங்கி வந்ததாக ஆல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18760aa9-e2e2-42cb-9493-e7eb4aed1dc2/26-6a673cc40c0ac.webp' /></p><p>
</p><p> அரசாங்கத்திற்கு எந்தவித வரி வருவாயும் கிடைக்கவில்லை. எனவே, இவற்றை முறைப்படுத்தி அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவசியம் எனக் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
ஆல்பர்ட்டா சந்தையில் இயங்க விரும்பும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பின்வரும் கட்டுப்பாடுகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
ஒருவர் தான் சூதாட்டத்திற்கு அடிமையாகியிருப்பதாக உணர்ந்து தன்னைத் தடுத்துக் கொள்ளக் கோரினால், அனைத்து ஆன்லைன் மற்றும் நேரடி சூதாட்டத் தளங்களிலும் அவருக்குத் தடை விதிக்கப்படும்.
</p><p>பயனர்கள் தங்களுக்குத்தானே பண வரம்பு மற்றும் நேர வரம்புகளை நிர்ணயித்துக் கொள்ளும் வசதிகள் அளிக்கப்படும்.</p><p>
தொழிலும் சார்ந்த விளையாட்டு வீரர்கள் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>
மேலும் இளைஞர்கள் மற்றும் சூதாட்டத்தைக் கைவிட முயல்பவர்களைக் குறிவைத்து விளம்பரம் செய்யக் கூடாது.</p><p>இதேவேளை, ஆல்பர்ட்டாவில் நடைபெறும் ஆன்லைன் சூதாட்டத்தில் 70% பகுதி சட்டவிரோத அல்லது கட்டுப்பாடற்ற வெளிநாட்டு தளங்களிலேயே நடைபெற்று வந்தது.</p><p>
புதிய சட்டப்பூர்வ சந்தை மூலம் முதல் ஆண்டில் சுமார் 76 மில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் எனவும், முதல் இரண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்தப் சந்தை மதிப்பு 2.8 பில்லியன் டொலரை எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியைக் கொண்டு, சூதாட்டப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய விழிப்புணர்வும், மருத்துவ மறுவாழ்வு சிகிச்சைகளும் வழங்கப்படும் என மாகாண அரசு உறுதியளித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T13:28:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/dispute-indefinite-curfew-in-nepal-1785158448"></link>
            <id>https://canadamirror.com/article/dispute-indefinite-curfew-in-nepal-1785158448</id>
            <summary type="text">&amp;nbsp; கிழக்கு நேபாளத்தில் நேற்றிரவு (26) இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கடும் மோதல், வன்முறையாக மாறியதையடுத்து, காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிழக்கு நேபாளத்தில் நேற்றிரவு (26) இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கடும் மோதல், வன்முறையாக மாறியதையடுத்து, காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>

மோதல், வன்முறையாக மாறியதையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e99ec3f-01a6-4390-9ef9-5d30a948b5b2/26-6a675b31dfdc4.webp' /></p><p>நேற்றிரவு (26) கிழக்கு நேபாளத்தின் சுன்சரி மாவட்டத்தில் உள்ள திவான்கஞ்ச், கப்தன்கஞ்ச் பஜார் பகுதி வழியாக சிலர் சப்தகோஷி நதியை நோக்கிப் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளபோது, ஒரு தரப்பினர் உரத்த சத்தத்துடன் இசைக்கச்சேரி நடத்தியபடி சென்றுள்ளனர்.
</p><p>


இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது வன்முறை மோதலாக வெடித்துள்ளது.</p><p>



இந்த மோதலின் போது வன்முறையாளர்கள் வீடுகள், வைத்தியசாலைகள் வாகனங்கள் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் சொத்துக்களைச் சூறையாடியதுடன், தீவைத்தும் கொளுத்தியுள்ளனர். 

இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த பலர் காயமடைந்துள்ளனர்.</p><p> தகவலறிந்து விரைந்த பொலிஸார் , கலவரக்காரர்களைக் கலைக்கக் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடும் நடத்தி இருந்ததாக கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-27T13:19:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்ஜியத்தில், கனடிய பெண் அதிகாரி உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-nato-intern-arrested-on-suspicions-1785032737"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-nato-intern-arrested-on-suspicions-1785032737</id>
            <summary type="text">பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ இராணுவ அமைப்பின் தலைமை அலுவலகத்தில் பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்த கனடா நாட்டுப் பெண் ஒருவர், உளவு பார்த்த சந்தேகத்தின் பேரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ இராணுவ அமைப்பின் தலைமை அலுவலகத்தில் பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்த கனடா நாட்டுப் பெண் ஒருவர், உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>
நேட்டோவின் பாதுகாப்புப் பிரிவு அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பெல்ஜியம் இராணுவ உளவுத்துறையும் காவல்துறையும் இணைந்து இந்த விசாரணையைத் தொடங்கின. 
கைது செய்யப்பட்ட நபர் சீன வம்சாவளியைக் கொண்ட கனடா நாட்டவர் என பெல்ஜியம் அரசாங்கம் தெரிவித்துள்ளது. </p><p>
சந்தேக நநபரின் வீடு மற்றும் நேட்டோ தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது பணி இடத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சோதனையைத் தொடர்ந்து அந்தப் பெண் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3747c6d3-a3e9-4786-a0e3-54cfd86485da/26-6a657022a1f60.webp' /></p><p> </p><p>
மூன்றாம் நாடு ஒன்றிற்காக உளவு பார்த்தல் மற்றும் சட்டவிரோத குற்றவியல் அமைப்பில் உறுப்பினராக இருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>
இந்தச் சம்பவம் பெல்ஜியத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மான்ஸ் நகரில் அமைந்துள்ள நேட்டோவின் ‘ஐரோப்பிய கூட்டுப் படைகளின் மூலோபாயத் தலைமை அலுவலகத்தில்’ (SHAPE) நடைபெற்றுள்ளது. </p><p>
இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சு வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதாகக் கூறியுள்ளது. </p><p>
எனினும், கனடாவின் உளவுத்துறை மற்றும் சட்ட அமலாக்க முகமைகள் சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து இத்தகைய அச்சுறுத்தல்களைக் கையாண்டு வருவதாக அதன் செய்தித் தொடர்பாளர் மார்கோ போயில் உறுதி அளித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T12:55:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித மலத்தில் இருந்து மருந்து !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/uk-poop-pills-stool-to-combat-superbugs-infection-1785143014"></link>
            <id>https://canadamirror.com/article/uk-poop-pills-stool-to-combat-superbugs-infection-1785143014</id>
            <summary type="text">&amp;nbsp; ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத &#039;சுப்பர் பக்டீரியா&#039; தொற்றுகளுக்கு எதிராக புதிய சிகிச்சை முறையாக &quot;மல நுண்ணுயிர் உறையுறைகள்&quot; (Poop Pi...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத 'சுப்பர் பக்டீரியா' தொற்றுகளுக்கு எதிராக புதிய சிகிச்சை முறையாக "மல நுண்ணுயிர் உறையுறைகள்" (Poop Pills) பயன்படுத்தும் ஆய்வு இங்கிலாந்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>

இந்தச் சிகிச்சைக்காக, ஆரோக்கியமான நபர்களின் மலத்தில் உள்ள பயனுள்ள குடல் நுண்ணுயிரிகள் (Gut Microbiome) சுத்திகரிக்கப்பட்டு, உறையவைக்கப்பட்டு உறையுறை (Capsule) வடிவில் தயாரிக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26bdea3c-1a80-4e97-8c5c-89dca7c34cde/26-6a671ee7ddbf6.webp' /></p><p>
</p><p>
இந்த உறையுறைகள், நோயாளிகளின் குடல் நுண்ணுயிர் சமநிலையை மீட்டெடுத்து, ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட ஆபத்தான பக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
ஆரம்பகட்ட மருத்துவ ஆய்வுகளில், இந்தச் சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், இதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை முழுமையாக உறுதிப்படுத்த மேலும் விரிவான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, இந்த ஆய்வு வெற்றியடைந்தால், ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட தொற்றுநோய்களுக்கு எதிரான சிகிச்சைத் துறையில் இது முக்கிய முன்னேற்றமாக அமையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-27T11:22:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ அமெரிக்கத் தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lanes-around-us-consulate-closed-for-shooting-1785149575"></link>
            <id>https://canadamirror.com/article/lanes-around-us-consulate-closed-for-shooting-1785149575</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டொராண்டோ நகரிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பகுதிக்கு அருகே இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது குறித்துக் காவல்துறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டொராண்டோ நகரிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பகுதிக்கு அருகே இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>
பல்கலைக்கழகம் மற்றும் குயின் வீதிகளுக்கு அருகில் அமைந்துள்ள தூதரகக் கட்டடத்திற்கு வெளியே, அதிகாலை 4:45 மணியளவில் பயன்படுத்தப்பட்ட ஒரு தோட்டாவின் உறை கண்டெடுக்கப்பட்டது.
</p><p>காவல்துறையின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், யுனிவர்சிட்டி அவென்யூவின் தெற்கு நோக்கிய சாலை வழிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/390331df-c10b-407c-a729-606236f2e03c/26-6a673888cd8cd.webp' /></p><p>
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
துப்பாக்கிச்சூடு நேரடியாகத் தூதரகக் கட்டடத்தின் மீது நடத்தப்பட்டதா அல்லது அருகில் நிகழ்ந்ததா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
</p><p>கடந்த மார்ச் 10 அன்று இதே அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><p>மார்ச் மாதம் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, இளைஞர்களைக் கூலிக்கு அமர்த்தித் தூதரகக் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட கூலிப்படை சதித் திட்டம் என்பதை உறுதி செய்த காவல்துறையினர், அதில் தொடர்புடைய பல சந்தேகநபர்களைக் கைது செய்து காவலில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T11:04:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் விமான ஓடுபாதைக்குள் சொகுசு வாகனம் விபத்து: சாரதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-arrested-after-driving-motorhome-onto-1785135908"></link>
            <id>https://canadamirror.com/article/man-arrested-after-driving-motorhome-onto-1785135908</id>
            <summary type="text">கனடாவின் விமான ஓடுபாதை ஒன்றில் சொகுசு வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள அபோட்ஸ்போர்டு சர்வதேச விமான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் விமான ஓடுபாதை ஒன்றில் சொகுசு வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள அபோட்ஸ்போர்டு சர்வதேச விமான நிலையத்தில், நபர் ஒருவர் தனது சொகுசு வாகனத்தை பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த விமான ஓடுபாதைக்குள் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>
சனிக்கிழமை மாலை சுமார் 4:30 மணியளவில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b47890f7-85ee-4f05-beea-eaa9f2634df6/26-6a670325db731.webp' /></p><p> </p><p>
பாதுகாப்பு வேலி உடைந்தவுடன் விமான நிலைய ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டனர். மேலும், அங்கு இயங்கிக் கொண்டிருந்த பிற விமானங்களைப் பாதுகாப்பாக வேறு வழிகளில் திருப்பிவிட விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் விரைந்து நடவடிக்கை எடுத்தது. </p><p>
இச்சம்பவத்தால் விமான நிலையச் செயல்பாடுகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்ட போதிலும், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பியது. </p><p>அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 
இச்சம்பவம் தொடர்பாக 53 வயதுடைய நபர் ஒருவரைக் காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். </p><p>
இது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், ஓட்டுநர் போதையில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.</p><p>
இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T09:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் தப்பியோடிய கைதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/escaped-thunder-bay-prisoner-arrested-1785138224"></link>
            <id>https://canadamirror.com/article/escaped-thunder-bay-prisoner-arrested-1785138224</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், தண்டர் பே சீர்திருத்த மையத்தில் இருந்து தப்பியோடிய 65 வயது கைதியைத் தண்டர் பே காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், தண்டர் பே சீர்திருத்த மையத்தில் இருந்து தப்பியோடிய 65 வயது கைதியைத் தண்டர் பே காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்துள்ளனர். </p><p>
சிறையிலிருந்து தப்பிய கைதி ஆந்தனி பேட்ரிக் என அடையாளம் காணப்பட்டார்.</p><p>
ஜூலை 24ம் திகத சிறையிலிருந்து தப்பியதாகத் தகவல் வெளியான நிலையில், தகவல் வெளியான சுமார் 9½ மணி நேரத்தில் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6740d320-a608-40a9-9539-bad5f1e96784/26-6a670c320deba.webp' /></p><p>சிறை நிர்வாகம் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். </p><p>
தேடுதல் வேட்டையின் போது, நகரின் தெற்குப் பகுதி மற்றும் நெடுஞ்சாலை 61 வழித்தடத்தில் பயணிக்கும் வாகன சாரதிகள், அந்நியர்களுக்கு வாகனம் நிறுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர். </p><p>
கைதியைக் கண்டால் நேரடியாக அணுக வேண்டாம் எனவும், உடனடியாக 911 அவசர எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டது.
</p><p>இந்தத் தேடுதல் வேட்டை மற்றும் விசாரணையில் ஒன்டாரியோ மாகாணக் காவல்துறையும் இணைந்து செயல்பட்டது.
</p><p>எனினும், கைதி ஃபிரிஸ்செல் எங்கு வைத்துக் கைது செய்யப்பட்டார், அவர் சிறையிலிருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பான மேலதிக விவரங்களைக் காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. </p><p>இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T09:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
