<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-04T14:18:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா இணைய உளவு அமைப்பின் புதிய தலைவராக ஸ்காட் ஜோன்ஸ் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/carney-chooses-senior-bureaucrat-scott-jones-1788524000"></link>
            <id>https://canadamirror.com/article/carney-chooses-senior-bureaucrat-scott-jones-1788524000</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் இணைய வழியிலான உளவு அமைப்பான &#039;கமினிகேஷன்ஸ் செக்யூரிட்டி எஸ்டாப்ளிஷ்மென்ட்&#039; தலைவராக மூத்த அரசு அதிகாரி ஸ்காட் ஜோன்ஸை பிரதமர் மார்க் கார்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் இணைய வழியிலான உளவு அமைப்பான 'கமினிகேஷன்ஸ் செக்யூரிட்டி எஸ்டாப்ளிஷ்மென்ட்' தலைவராக மூத்த அரசு அதிகாரி ஸ்காட் ஜோன்ஸை பிரதமர் மார்க் கார்னி நியமித்துள்ளார்.</p><p> 
தற்போது ஓய்வு பெறவுள்ள கரோலின் சேவியருக்குப் பதிலாக ஸ்காட் ஜோன்ஸ் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர் 'ஷேர்டு சர்வீசஸ் கனடா' அமைப்பின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.</p><p> 
அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இணைய வழியில் வெளிநாட்டு உளவுத் தகவல்களைச் சேகரிப்பதும், இணைய அச்சுறுத்தல்களிலிருந்து கனடாவைப் பாதுகாப்பதும் சி.எஸ்.இ அமைப்பின் முதன்மைப் பணியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b6a280b-fffe-490f-abee-250d50fdb7c7/26-6a9ab5e1f0eed.webp' /></p><p> </p><p>
ஸ்காட் ஜோன்ஸ் 2018 முதல் 2021 வரை CSE அமைப்பின் கீழ் இயங்கும் 'கனடியன் சென்டர் ஃபார் சைபர் செக்யூரிட்டி' அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார். </p><p>மேலும், 2008 முதல் 2018 வரை இந்த அமைப்பில் பல்வேறு முக்கியப் பதவிகளை அவர் வகித்துள்ளார். </p><p>
ஓய்வு பெறவுள்ள கரோலின் சேவியர் கனடா நாட்டுக்கு ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைகளைப் பாராட்டிப் பிரதமர் மார்க் கார்னி தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையை கடிக்கும் வாழ்க்கை செலவு; ஐரோப்பாவிற்குப் புலம்பெயரும் பிரித்தானியர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/biting-cost-of-living-britons-emigrating-to-europe-1788509863"></link>
            <id>https://canadamirror.com/article/biting-cost-of-living-britons-emigrating-to-europe-1788509863</id>
            <summary type="text">&amp;nbsp; பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்களுக்குக் குடிபெயரும் ‘காஸ்ட் ஆஃப் லீவிங்’ (Cost of Leaving) கலாச்சாரம் பிரிட்டன்வாசிகளிடையே அதிகரித்து வருகிறமை ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p> 

பாரிஸ், ஸ்டாக்ஹோம் மற்றும் பெர்லின் போன்ற ஐரோப்பிய நகரங்களில் வாழ்க்கைச் செலவு லண்டனை விட கணிசமாகக் குறைவாக இருப்பது சர்வதேச நுகர்வோர் குறியீட்டு (Numbeo Cost of Living Index) ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64fffa31-2370-4d12-b1bd-eb7d7a9d691f/26-6a9a7ea8502ff.webp' /></p><h2>வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல்</h2><p>
</p><p>
சர்வதேச வாழ்வாதாரக் குறியீட்டின் தரவுகளின்படி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் தனிநபர் ஒருவர் சராசரியாக வாழத் தேவையான பணத்தை விட, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 11 சதவீதமும், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் 10 சதவீதமும் குறைவான செலவிலேயே வாழ முடியும் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p> 

குறிப்பாக லண்டனில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் சராசரி வாடகை ஐரோப்பிய தலைநகரங்களை விட 35 முதல் 40 சதவீதம் வரை அதிகமாக உள்ளது, பிரிட்டன் மக்களை பிற நாடுகளை நோக்கித் தள்ளும் முதன்மை காரணியாக மாறியுள்ளது.
</p><p>
வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல், பொதுப்போக்குவரத்து, மின்சாரம் மற்றும் உணவகங்களின் செலவுகளிலும் பிரிட்டனை விட ஐரோப்பிய நகரங்கள் அதிக சேமிப்பை வழங்கி வருகின்றன. </p><p>உதாரணமாக, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் மற்றும் இத்தாலியின் ரோம் ஆகிய நகரங்கள் லண்டனை விட சுமார் 45 சதவீதம் வரை மலிவான வாழ்க்கைச் சூழலை வழங்குவதால், வீட்டில் இருந்தே பணியாற்றும் (Remote Work) இளம் பிரிட்டன் ஊழியர்கள் பெருமளவில் அந்நகரங்களை நோக்கிப் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
</p><p>
கடந்த சில ஆண்டுகளாகப் பிரிட்டனில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், குறைந்த செலவில் உயர்தர வாழ்க்கை முறையைப் (Quality of Life) பெற விரும்புவோருக்குப் பாரிஸ், பர்லின், பார்சிலோனா போன்ற நகரங்கள் சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளன.</p><p>

 பிரிட்டன் அரசு வரி விதிப்புகளையும் வாழ்க்கைச் செலவுகளையும் சீரமைக்கத் தவறினால், நாட்டின் திறமைவாய்ந்த பணியாளர்கள் (Brain Drain) ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்வது மேலும் அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T13:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/officials-urge-parents-to-check-childrens-vaccines-1788523480"></link>
            <id>https://canadamirror.com/article/officials-urge-parents-to-check-childrens-vaccines-1788523480</id>
            <summary type="text">கனடாவில் பள்ளிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குரிய தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்தியுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் பள்ளிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குரிய தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்தியுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அவசரமாக வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>குளிர்காலம் தொடங்கவுள்ள சூழலில், குழந்தைகள் வகுப்பறைகளுக்குள் ஒன்றாக அதிக நேரத்தைச் செலவிடுவார்கள்.
</p><p>இதனால் காய்ச்சல், கோவிட்-19 மற்றும் ஆர்.எஸ்.வி போன்ற நோய்த்தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7011225c-7247-4a32-b4eb-732bcfb7f261/26-6a9ab3d995055.webp' /></p><p> </p><p>
குறிப்பாகத் தட்டம்மை நோய் மீண்டும் பரவுவது குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். </p><p>
அரசின் தரவுகளின்படி, கடந்த ஆண்டில் 2 வயதுக் குழந்தைகளில் 85 சதவீதம் பேர் மட்டுமே தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் ரூபெல்லா தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். </p><p>
தட்டம்மை நோய் பரவாமல் தடுக்கவும், சமூக நோய் எதிர்ப்புச் சக்தியைப் பேணவும் குறைந்தபட்சம் 95 சதவீதக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். </p><p>
ஆனால் தற்போதைய 85 சதவீத விகிதம் இந்த இலக்கை விடக் குறைவாக இருப்பதால், நோய் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது. </p><p>
பெற்றோர் பிள்ளைகளின் தடுப்பூசி குறித்து கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T13:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு லட்சம் ஊழியர்களை வேலை நீக்கும் ஜேர்மன் நிறுவனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/german-company-volkswagen-to-lay-off-100-000-1788527640"></link>
            <id>https://canadamirror.com/article/german-company-volkswagen-to-lay-off-100-000-1788527640</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உலக புகழ் பெற்ற ஜேர்மன் வாகன நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், உலகளாவிய கார் தொழிற்துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மறுசீரமைப்பாக அமையவிருக்கும் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உலக புகழ் பெற்ற ஜேர்மன் வாகன நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், உலகளாவிய கார் தொழிற்துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மறுசீரமைப்பாக அமையவிருக்கும் ஒரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் மொத்தம் 100,000 வேலைகளைக் குறைக்கப் போவதாக வியாழக்கிழமை அறிவித்தது .</p><p>

ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட 50,000 ஆட்குறைப்புகளுக்குக் கூடுதலாக, மேலும் 50,000 வேலைகளைக் குறைக்கும் திட்டத்திற்கு நிர்வாகமும் தொழிற்சங்கங்களும் ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ac5f4ad-b722-4ff9-a77f-49621b36f400/26-6a9ac41a5cfb6.webp' /></p><h2>ஒரு லட்சம் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும்&nbsp;</h2><p>
</p><p>
பொருளாதார யதார்த்தங்களுக்கு ஏற்ப பணியாளர் எண்ணிக்கையை முறையாகச் சீரமைப்பது அவசியம் என்று, ஃபோக்ஸ்வேகன் மட்டுமின்றி ஆடி மற்றும் போர்ஷே ஆகிய நிறுவனங்களையும் உள்ளடக்கிய ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அறிக்கை தெரிவித்தது. </p><p>

மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட 100,000 ஆட்குறைப்புகள், உலகெங்கிலும் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஊழியர்களில் சுமார் 15 சதவீதத்திற்குச் சமமாகும். 2009-ல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திவாலானதாக அறிவித்த பிறகு மேற்கொண்ட 50,000 ஆட்குறைப்புகளை இந்த ஆட்குறைப்பு விஞ்சியுள்ளது.</p><p>

திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு, தொழிற்சங்கங்களும் நிர்வாகமும் பகிரங்கமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டன.</p><p> ஒரு லட்சம் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என்ற தகவல் நிறுவனத்திற்குள் தெரிவிக்கப்படுவதற்கு முன்பே ஊடகங்களில் வெளியானதால், நிர்வாகம் தொழிலாளர்களிடம் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டின.
</p><p>
மேலும், ஹனோவர், எம்டன், ஸ்விக்காவ் மற்றும் நெக்கர்சுல்ம் ஆகிய இடங்களில் உள்ள நான்கு முக்கிய ஜெர்மன் ஆலைகளின் நீண்டகால எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் ஃபோக்ஸ்வேகன் கூறியுள்ளது. </p><p>அவற்றின் மூடல், ஃபோக்ஸ்வேகனின் தாய்நாட்டில் அதன் தொழிற்சாலைகள் முழு அளவில் மூடப்படும் முதல் நிகழ்வாக அமையும்.

அமெரிக்காவின் வரிகள் , சீனாவின் போட்டி மற்றும் மின்சார வாகனங்களுக்கான தேவையில் ஏற்பட்டுள்ள மந்தமான வளர்ச்சி ஆகியவற்றால் , ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் சிக்கலில் உள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T13:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலி பிரதமர் மெலோனி செய்த சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/giorgia-meloni-italy-longest-serving-government-1788520558"></link>
            <id>https://canadamirror.com/article/giorgia-meloni-italy-longest-serving-government-1788520558</id>
            <summary type="text">&amp;nbsp;இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அந்நாட்டின் போருக்கு பிந்தைய வரலாற்றில் தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற புதிய சாதனையை படைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அந்நாட்டின் போருக்கு பிந்தைய வரலாற்றில் தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். </p><p>

அவரது அரசு தொடர்ந்து 1,413 நாட்கள் பதவியில் இருந்து&nbsp;&nbsp; தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2a6a482-f368-4c6b-855e-28de7fedd818/26-6a9aa86f6e50f.webp' /></p><h2>பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து</h2><p>

இத்தாலியில் அரசுகள் அடிக்கடி மாறி வந்த நிலையில், மெலோனியின் ஆட்சி அந்நாட்டுக்கு குறிப்பிடத்தக்க அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்த சாதனைக்காக மெலோனிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். </p><p>மெலோனியை தனது “நண்பர்” என்று குறிப்பிட்ட மோடி, இத்தாலி மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் ஆதரவையும் இந்த சாதனை வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d2d584c-c553-4352-abb6-158842d9fc71/26-6a9aa87030957.webp' /></p><p>
</p><p>

 மேலும், இந்தியா–இத்தாலி சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் மெலோனியின் நட்பு முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
 
மோடி–மெலோனி சந்திப்புகள் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி கவனம் பெறுகின்றன. குறிப்பாக, இருவரது பெயர்களை இணைத்து உருவான “Melodi” என்ற வார்த்தை இணையத்தில் பிரபலமாகியுள்ளது. </p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T11:13:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவனைக் கடித்துக் கொன்ற நாய்களின் உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் வீட்டுக்காவல் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/11-year-boy-in-sentenced-to-2-years-house-arrest-1788515910"></link>
            <id>https://canadamirror.com/article/11-year-boy-in-sentenced-to-2-years-house-arrest-1788515910</id>
            <summary type="text">கனடாவின் எட்மன்டன் நகரில் கடந்த 2024-ஆம் ஆண்டு 11 வயது சிறுவனைக் கடித்துக் கொன்ற இரு நாய்களின் உரிமையாளரான கிறிஸ்டல் மெக்டொனால்டு என்பவருக்கு நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மன்டன் நகரில் கடந்த 2024-ஆம் ஆண்டு 11 வயது சிறுவனைக் கடித்துக் கொன்ற இரு நாய்களின் உரிமையாளரான கிறிஸ்டல் மெக்டொனால்டு என்பவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் வீட்டுக்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>கட்டுப்பாடற்ற அலட்சியத்தால் உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக கடந்த மே மாதம் இவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டார்.
</p><p>குறித்த நபருக்கு 2 ஆண்டுகள் வீட்டுக்காவல், 200 மணிநேரச் சமூக சேவை மற்றும் வாழ்நாள் முழுவதும் நாய் வளர்க்கத் தடை என்ற அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b23a3031-395a-451a-aa83-a5a2017e7bd2/26-6a9a9647ecadc.webp' /></p><p>
கடந்த ஏப்ரல் 2024-இல், பிரிட்டிஷ் கொலம்பிய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
கழுத்துப் பகுதியில் நாய்கள் பலமாகக் கடித்ததால் சிறுவன் உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. </p><p>தாக்குதல் நடத்திய இரு 'கேன் கோர்சோ' ரக நாய்களும் பின்னர் தயவுக்கொலை செய்யப்பட்டன.
</p><p>இந்தச் சம்பவத்திற்கு முன்னரே, அந்த இரு நாய்களும் வேறு இரண்டு செல்லப் பிராணிகளைக் கொன்றதுடன், மெக்டொனால்டு உட்பட மூன்று பெரியவர்களைக் கடித்துக் காயப்படுத்தியிருந்தன என்பது விசாரணையில் அம்பலமானது.
</p><p>அரசுத் தரப்பில் மெக்டொனால்டுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரப்பட்டது. ஆனால், பிரதிவாதி தரப்பில் மெக்டொனால்டின் பழங்குடியின பின்னணி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. </p><p>
அதில் அவரது சிறுவயது பாதிப்புகள், இனவெறி பாகுபாடுகள் மற்றும் அவற்றுக்கு மத்தியிலும் அவர் தெரிவிக்கும் ஆழ்ந்த மனவருத்தம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி குறைந்தபட்ச தண்டனை கோரப்பட்டது.
</p><p>தற்போது பி.சி-யில் உள்ள பென்டிக்டன் பகுதியில் வசித்து வரும் மெக்டொனால்டு, தன் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T10:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போப் லியோன் XIVபிரான்ஸ் பயணம்; உச்சக்கட்ட பாதுகாப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pope-leo-xiv-s-visit-to-france-maximum-security-1788516131"></link>
            <id>https://canadamirror.com/article/pope-leo-xiv-s-visit-to-france-maximum-security-1788516131</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்தை முன்னிட்டு, “விதிவிலக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்” மேற்கொள்ளப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñe...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்தை முன்னிட்டு, “விதிவிலக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்” மேற்கொள்ளப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்துள்ளார்.
</p><p>
 செப்டெம்பர் மாத இறுதியில் இடம்பெறவுள்ள இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளின்போது, மொத்தமாக 15,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0224bdfd-5557-44f5-8f5e-4abbd4e9f86a/26-6a9a97253d170.webp' /></p><h2>14,000 பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்படுவார்கள்&nbsp;</h2><p>
</p><p>
செப்டெம்பர் மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில்,&nbsp; பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. </p><p>காவல்துறையினர், ஜொந்தார்ம்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் Sentinelle இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவத்தினர் உள்ளிட்ட சுமார் 14,000 பாதுகாப்புப் படையினர் பரிஸில் களமிறக்கப்படுவார்கள் என Laurent Nuñez தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனிடையே, போப் லியோன் XIV-ன் வருகைக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக லூர்த் நகரில் சுமார் 1,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். </p><p>செப்டெம்பர் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சக்கட்டத்தில் இருக்கும் என்றும், போப்பின் பயணத்தை முன்னிட்டு பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-04T09:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதுகு சொறிவதற்கே 300 யுவான் ; சீனாவில் வைரலாகும் வித்தியாசமான தொழில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-unique-profession-goes-viral-in-china-1788514902"></link>
            <id>https://canadamirror.com/article/a-unique-profession-goes-viral-in-china-1788514902</id>
            <summary type="text">சீனாவில் முதுகு சொறியும் சேவையை வணிகமாக மாற்றிய தொழில்முனைவோர் ஒருவர், அதனை வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் ஷென்சென் நகரில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் முதுகு சொறியும் சேவையை வணிகமாக மாற்றிய தொழில்முனைவோர் ஒருவர், அதனை வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சீனாவின் ஷென்சென் நகரில் 32 வயதான ஜாங் சியாவோகியா (Zhang Xiaoqiao) என்பவர் ‘சுமா’ (Suma) என்ற பெயரில் இந்த சேவை நிலையங்களை நடத்தி வருகிறார்.
</p><p>
இங்கு ஒரு மணிநேர அமர்வுக்கு சுமார் 300 யுவான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><p> வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நகங்களைப் பயன்படுத்தி, உடலின் பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் மென்மையாக சொறிந்து விடுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1131db33-002c-4d31-8ffa-9aca7833f176/26-6a9a925736541.webp' /></p><p>இந்த சேவை மன அழுத்தத்தைக் குறைக்கவும், நிம்மதியான தூக்கத்தைப் பெறவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. இந்த சேவையைப் பெறுவோரில் சுமார் 70 சதவீதம் பேர் ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சமூக வலைத்தளத்தில் பார்த்த காணொளி ஒன்றும், தனது சிறுவயது நினைவுகளுமே இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கான உத்வேகத்தை வழங்கியதாக ஜாங் சியாவோகியா தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது இரண்டு கிளைகளுடன் இயங்கி வரும் இந்த நிறுவனம், மாதந்தோறும் சுமார் 100,000 யுவான் வரை வருமானம் ஈட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

வணிகம் தொடர்ந்து இலாபகரமாக இயங்கி வரும் நிலையில், எதிர்காலத்தில் சீனா முழுவதும் 100 கிளைகளைத் திறப்பதை இலக்காகக் கொண்டு நிறுவனம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், முதுகு சொறிவதையும் ஒரு வணிகமாக மாற்றியுள்ளமை தொடர்பாக இணையவாசிகள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T09:45:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரழிவு ;9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-people-rescued-alive-nepal-mins-after-9-days-1788502223"></link>
            <id>https://canadamirror.com/article/two-people-rescued-alive-nepal-mins-after-9-days-1788502223</id>
            <summary type="text">&amp;nbsp; இயற்கை கோர தாண்டவத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திரிஷூலி-3ஏ நீர்மின் நிலைய சுரங்கத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இயற்கை கோர தாண்டவத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திரிஷூலி-3ஏ நீர்மின் நிலைய சுரங்கத்தில் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது .</p><p>சஞ்சய் சாஹ் என்ற மெக்கானிக்கல் ஃபோர்மேன் மற்றும் கபீர் மகர்ஜன் என்ற மெக்கானிக்கல் சூப்பர்வைசர் ஆகிய இருவரும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51283d75-3aef-49f7-9c86-b4ceb2ff7248/26-6a9a60d0b5eb3.webp' /></p><h2>இன்னும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை..</h2><p>
</p><p> 
ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்து, திரிஷூலி-3ஏ திட்டத்தில் மட்டும் சுமார் 40 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சுரங்கத்தின் ஆழப்பகுதியில் இருந்து மேலும் பலரின் குரல்கள் கேட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். </p><p>இதனால், இன்னும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
 
நேபாள ராணுவம் மற்றும் ஆயுதம் தாங்கிய காவல் படையினர் சுரங்கத்துக்குள் தீவிரமாக சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p> 
 
அதே நேரத்தில், ரசுவா லாங்டாங் கோலா நீர்மின் திட்ட சுரங்கத்தில் இருந்து இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த திட்டத்தில் பணியாற்றிய 41 பேருடன் இதுவரை தொடர்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
</p><p>
 
மீட்புப் பணிகள் மோசமான வானிலை மற்றும் சேதமடைந்த கட்டமைப்புகளால் சவால்களை சந்தித்து வருகின்றன. 

இருப்பினும், சுரங்கத்துக்குள் இருந்து குரல்கள் கேட்பது குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T08:39:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் வலையில் வீழ்த்தி 10 லட்சம் டொலர் மோசடி செய்த நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/41old-ontario-man-who-allegedly-duped-5-women-1788510477"></link>
            <id>https://canadamirror.com/article/41old-ontario-man-who-allegedly-duped-5-women-1788510477</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் ஐந்து பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி, 10 லட்சம் டாலருக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த 41 வயது நபரை காவல்துறையின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் ஐந்து பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி, 10 லட்சம் டாலருக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த 41 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>
"புராஜெக்ட் மரூன்" என்ற சிறப்பு விசாரணை நடவடிக்கையின் முடிவுகள் குறித்து காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.</p><p>2025 நவம்பரில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரிலேயே இந்தத் திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.
 எனினும், சந்தேகநபர் 2020 முதலே இதுபோன்ற பொய் வாக்குறுதிகள் மற்றும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12582e03-f35c-4106-a614-a3788b0a3e48/26-6a9a810f1d229.webp' /></p><p>இந்தச் சம்பவத்தில் ஒன்டாரியோவின் மார்மோரா பகுதியைச் சேர்ந்த சால்வடோர் மலான்ட்ரினோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் மீது 5,000 டொலருக்கும் அதிகமான பணமோசடி (5 வழக்குகள்), சட்டவிரோதப் பணப் பரிமாற்றம், பிணை உத்தரவை மீறியது மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தது உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>பொதுவாக நடக்கும் ஆன்லைன் காதல் மோசடிகளைப் போலன்றி, மலான்ட்ரினோ பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து வலையில் வீழ்த்தியுள்ளார்.</p><p> 
தனது "ஃபிரண்ட்லி கே9" என்ற நாய் பயிற்சி மையம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றின் மூலம் பெண்களுடன் நட்பு ஏற்படுத்தியுள்ளார்.
</p><p>தன்னை ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகக் காட்டிக்கொண்ட மலான்ட்ரினோ, தொழில் முதலீடு, கடன்கள் மற்றும் அவசர தேவைகள் எனக் கூறி பெருந்தொகையைப் பெற்றுள்ளார். </p><p>பதிலுக்குத் திருமணம் செய்துகொள்வதாகவும், தொழிலில் பங்கு தருவதாகவும் உறுதியளித்து ஏமாற்றியுள்ளார்.</p><p>
காவல்துறையினர் அவரது ஆயிரக்கணக்கான வங்கிப் பக்கங்களை ஆய்வு செய்ததில், பெண்களிடம் வாங்கிய பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது அம்பலமானது.</p><p> தனித்தனியாக ஏமாற்றப்பட்ட பல பெண்களின் வாக்குமூலங்கள் ஒரே மாதிரியாக இருந்ததால், இது ஒரு திட்டமிடப்பட்ட மோசடி என்பது உறுதி செய்யப்பட்டது.
</p><p>மலான்ட்ரினோவால் ஏமாற்றப்பட்ட வேறு யாரேனும் இருந்தால், உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர் தற்போது காவல் பிணையில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T08:25:18+00:00</updated>
        </entry>
    </feed>
