<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-22T04:24:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய விமானம் ; எட்டு பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/plane-crashes-in-us-eight-dead-1787360204"></link>
            <id>https://canadamirror.com/article/plane-crashes-in-us-eight-dead-1787360204</id>
            <summary type="text">அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில், விமானிகள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட எட்டு பேர் பலியாகினர்.

அலாஸ்காவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில், விமானிகள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட எட்டு பேர் பலியாகினர்.</p><p>

அலாஸ்காவின் தலைநகரான ஆங்கரேஞ்சில் இருந்து, ‘செக்யூரிட்டி ஏவியேஷன்’ நிறுவனத்தின், ‘செஸ்னா 441’ இரட்டை இன்ஜின் கொண்ட விமானம் ஒன்று, கேப் நியூஎன்ஹாம் ரேடார் தள விமான நிலையத்துக்கு சென்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2b54b79-852e-4855-bb37-fe36cd65bffc/26-6a88f3ce688a3.webp' /></p><p>இந்த விமானத்தை அமெரிக்க ராணுவத்தின் பொறியாளர் பிரிவினர் வாடகைக்கு எடுத்தனர். </p><p>
இதில், இரண்டு விமானிகள், இரண்டு ராணுவ பொறியாளர்கள் உட்பட மொத்தம் எட்டு பேர் பயணித்தனர். </p><p>

விமானம், கேப் நியூஎன்ஹாம் தளத்தை நெருங்கும் போது திடீரென விழுந்து நொறுங்கியது.

 இதில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்தனர். </p><p>விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.</p>]]></content>
            <updated>2026-08-22T00:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த தாய்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sentencing-for-mother-who-burned-down-1787322975"></link>
            <id>https://canadamirror.com/article/sentencing-for-mother-who-burned-down-1787322975</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் பேஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள தனது மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த குற்றத்திற்காக சோனியா லார்சன் என்பவருக்கு 12 மாதங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் பேஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள தனது மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த குற்றத்திற்காக சோனியா லார்சன் என்பவருக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>
சிறைத் தண்டனையுடன் இரண்டு ஆண்டுகள் கண்காணிப்புப் பிணை மற்றும் 60 மணி நேரச் சமூக சேவையும் அவருக்கு தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.</p><p>
அக்டோபர் 17, 2023 அன்று 'தி ஹப் ஆன் தி டாக்ஸ்'உணவகத்தில் ஏற்பட்ட பெருந்தீயில் கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்தது. இதனால் சுமார் 1.7 மில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/663d78f2-013a-4d46-98e2-022590330be3/26-6a886261210ba.webp' /></p><p>
</p><p>அக்டோபர் 13 மற்றும் 16 ஆகிய திகதிகளிலும் சோனியா உணவகத்திற்குள் புகுந்து தீ வைக்க முயன்றது கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தெரியவந்தது. </p><p>
அக்டோபர் 17 ம் திகதி பாதுகாப்பு அலாரம் அமைப்பை முடக்கிவிட்டு திட்டமிட்டுத் தீ வைத்துள்ளார்.
திட்டமிட்டு இந்தத் தீவைப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது, இது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று நீதிபதி டி.ஜி. மெக்டொனால்ட் சுட்டிக்காட்டினார்.
</p><p>சோனியா இதற்கான தெளிவான காரணத்தைக் கூறவில்லை என்றாலும், அந்தச் சமயத்தில் தான் மனதளவில் கடுமையான பின்னடைவைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பாதிக்கப்பட்ட உணவகத்தின் உரிமையாளரும் சோனியாவின் மகனுமான கெவின் லார்சன், காப்பீட்டுத் தொகை போகத் தான் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இழந்துவிட்டதாகவும், வணிகத்தை மீண்டும் தொடங்க முடியாமல் போய்விட்டது என்றும் தெரிவித்தார்.
</p><p>எனினும், தனது தாயை மன்னித்து அவருடனான உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்புவதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T00:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் வர்த்தகக் கொள்கைக்கு எதிர்ப்பு ; கார்னியை கடுமையாக சாடிய வேன்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/vance-slams-carney-over-trump-trade-policy-1787356208"></link>
            <id>https://canadamirror.com/article/vance-slams-carney-over-trump-trade-policy-1787356208</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் கனடிய பிரதமர் மார்க் கார்னியை, அமெரிக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் கனடிய பிரதமர் மார்க் கார்னியை, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
நியூயோர்க்கில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்வொன்றில் வேன்ஸ் இந்தக் கருத்துகளை வெளியிட்டதாகவும், அந்த நிகழ்வில் அவர் தெரிவித்த கருத்துகள் பின்னர் வெளியாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/641dc155-6aa3-4ae9-a2ba-aaf964357f85/26-6a88e43291a30.webp' /></p><p>
</p><p>
கார்னி, ட்ரம்பை விட வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் தான் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளப் போவதாகக் காட்டிக்கொள்வதாக வேன்ஸ் விமர்சித்துள்ளார்.
</p><p>
எனினும், பல்வேறு முக்கியமான விடயங்களில் இறுதியில் கார்னி விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்வதாகவும், அதனை கனடாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அவர் சித்தரிப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் வேன்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் புதிய வர்த்தக உடன்பாட்டை எட்டுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. </p><p>குறிப்பாக கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கத் திட்டமிட்டுள்ள 50 சதவீத வரி தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>
அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக கனடாவில் அமெரிக்க மதுபானங்களுக்கான சந்தை அணுகல் தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்குவதும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/784d7326-bad9-4c6e-a0b2-74af8199205f/26-6a88e433426a9.webp' /></p><p>இதனையடுத்து, அமெரிக்க மதுபானங்களுக்கான மாகாண ரீதியிலான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கனடிய மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.</p><p>

இதனிடையே, கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவும் அமெரிக்க அதிகாரிகளும் வாஷிங்டனில் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர். புதிய அமெரிக்க வரிகள் அமுலுக்கு வருவதற்கு முன்னர் உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>

கனடா மேலும் பல விடயங்களில் அமெரிக்காவிடம் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளக் கூடாது என அந்நாட்டில் ஒரு பகுதியினர் வலியுறுத்தி வருகின்ற நிலையில், கார்னி அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும் அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது.</p><p>

இந்நிலையில், ஜே.டி. வேன்ஸின் விமர்சனம் அமெரிக்கா–கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் நிலவும் பதற்றத்தை மேலும் வெளிப்படுத்துவதாக சர்வதேச அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-21T23:50:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியான்மரில் மீது போர் விமானம் குண்டுகள் வீச்சு ; 3 பெண்கள் உள்பட 14 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/warplanes-bomb-buddhist-monaste-myanmar-killing-14-1787355426"></link>
            <id>https://canadamirror.com/article/warplanes-bomb-buddhist-monaste-myanmar-killing-14-1787355426</id>
            <summary type="text">மியான்மரில் பவுத்த மடாலயத்தில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.மியான்மரில் 2வது பெரிய நகரமான மாண்டலே நகரில் இருந்து மேற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியான்மரில் பவுத்த மடாலயத்தில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>மியான்மரில் 2வது பெரிய நகரமான மாண்டலே நகரில் இருந்து மேற்கே 75 கிலோமீட்டர் தொலைவில் ஸ்வெல்லேஓ என்ற கிராமம் உள்ளது.</p><p>இங்கு பவுத்த மடாலயம் ஒன்று உள்ளது.


அதில் ஒரு வார கால தியான பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1fc1153-f913-4d62-90ed-45871a2f187b/26-6a88e123ba1f7.webp' /></p><p>அதன் படி, அங்கு பலரும் தியான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மியான்மர் ராணுவத்தின் போர் விமானங்கள் வான்வழியாக தாக்குதல் நடத்தியது. </p><p>இதில் 3 பெண்கள் உள்பட14 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


தாக்குதல் குறித்து ஊர்மக்கள் கூறுகையில்,' ஜெட் விமானம்15 நிமிட இடைவெளியில் இரண்டு குண்டுகளை வீசியது. </p><p>பவுத்த நோன்பு காலம் என்பதால் மடாலயத்தில் 100க்கும் மேற்பட்டோர் தியான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த மடாலயம் அருகில் உள்ள ஒரு வீட்டை இரண்டாவது குண்டு சேதப்படுத்தியது' என்றனர்.
</p><p>

மியான்மரில் ராணுவம், ஜனநாயக ஆதரவு படைகள் மற்றும் இன ஆயுதக்குழுக்கள் இடையே தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. </p><p>இதுபோன்ற தாக்குதலில் பொதுமக்களும் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-21T23:37:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனப்படுகொலை ; நெதன்யாகு உள்ளிட்டோருக்கு எதிராக துருக்கி பிடியாணை நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/turkey-issues-arrest-warrant-against-netanyahu-1787354560"></link>
            <id>https://canadamirror.com/article/turkey-issues-arrest-warrant-against-netanyahu-1787354560</id>
            <summary type="text">இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில், இன்டர்போல் ரெட் நோட்டீஸ் கோரும் நடவடிக்கையை துருக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில், இன்டர்போல் ரெட் நோட்டீஸ் கோரும் நடவடிக்கையை துருக்கி ஆரம்பித்துள்ளது.
</p><p>
காஸா நோக்கிப் பயணித்த மனிதாபிமான உதவி கப்பல் தொடரணி மீது இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.</p><p>

துருக்கி நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய அதிகாரி அஃபெக் மோஸ்கோவிச் ஆகியோருக்கு எதிராக கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc60e97a-b3df-459f-854a-9b5d82371bcd/26-6a88ddc39d4a8.webp' /></p><p> </p><p>இதனைத் தொடர்ந்து, இருவரையும் சர்வதேச ரீதியில் தேடும் வகையில் இன்டர்போல் ரெட் நோட்டீஸ் கோரப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் சென்ற Global Sumud Flotilla எனப்படும் கப்பல் தொடரணி சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கில் மொத்தம் 35 பேர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.</p><p> நெதன்யாகு மற்றும் மோஸ்கோவிச் மீது இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை மற்றும் சட்டவிரோதமாக சுதந்திரத்தைப் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்வதற்காக புறப்பட்ட கப்பல் தொடரணியை இஸ்ரேல் படைகள் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதேவேளை, துருக்கியின் இந்த நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40965143-ee77-41e5-96c4-01ac51663d11/26-6a88ddc2e5436.webp' /></p><p>துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை விமர்சித்துள்ள நெதன்யாகுவின் அலுவலகம், இந்த நடவடிக்கை இஸ்ரேலிய தலைமையை அச்சுறுத்தும் முயற்சி எனக் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
இன்டர்போல் ரெட் நோட்டீஸ் என்பது ஒருவரை உலகளாவிய ரீதியில் கைது செய்வதற்கான தன்னிச்சையான சர்வதேச பிடியாணை அல்ல. </p><p>மாறாக, குறித்த நபரை கண்டறிந்து, தற்காலிகமாக கைது செய்யுமாறு உறுப்பு நாடுகளின் சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் கோரும் அறிவிப்பாகும். ரெட் நோட்டீஸ் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் இன்டர்போல் தனித்தனியாக பரிசீலனை செய்யும்.
</p><p>
காஸா போர் தொடர்பில் இஸ்ரேலுக்கு எதிராக துருக்கி தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் நிலையில், நெதன்யாகுவுக்கு எதிரான இந்த புதிய சட்ட நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-21T23:23:14+00:00</updated>
        </entry>
    </feed>
