<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-10T11:35:09+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 12 வயது சிறுவனின் உடல் மீட்பு: கொலை வழக்குப்பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-of-12-year-old-edmonton-boy-1786349779"></link>
            <id>https://canadamirror.com/article/death-of-12-year-old-edmonton-boy-1786349779</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அது தொடர்பில் கொலை வழக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அது தொடர்பில் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
</p><p>கடந்த ஆகஸ்ட் 6-ஆம் திகதி அதிகாலை 3:26 மணியளவில், ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
</p><p>எட்மண்டன் நகரில் ஆகஸ்ட் 7 அன்று மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பரிசோதனையின் மூலம், உயிரிழந்தவர் எட்மண்டனைச் சேர்ந்த பைசல் ஹுசைன் 12 வயது சிறுவன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac86ad2-f056-4ba7-a227-dbbf9e842053/26-6a7988d5498fe.webp' /></p><p>
</p><p>இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 'ஆர்சிஎம்பி'யின் முக்கிய குற்றப் பிரிவு விசாரணையைத் தன்வசப்படுத்தியுள்ளது.</p><p>
இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், ஆதாபாஸ்கா பொலிஸாரை 780-675-4252 என்ற எண்ணிலோ அல்லது இரகசியம் காக்கும் 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பை 1-800-222-8477 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக டிரம்ப் எடுக்கும் அதிரடி நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-moves-to-increase-economic-pressure-on-iran-1786343949"></link>
            <id>https://canadamirror.com/article/trump-moves-to-increase-economic-pressure-on-iran-1786343949</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரான் கடும் கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், அதற்கு எதிரான கூடுதல் ராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவதைத் தவிர்த்துவிட்டு, பொருளாதார அழுத்தத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரான் கடும் கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், அதற்கு எதிரான கூடுதல் ராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவதைத் தவிர்த்துவிட்டு, பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.</p><p>



ஈரானின் நடவடிக்கைகளை நாங்கள் சாதாரணமாகக் கையாளுகிறோம் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.



ஈரானில் நிலவும் கடுமையான பணவீக்கம் மற்றும் அவர்களிடம் பணம் இல்லாததை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/527ff231-5d80-49bd-8f9d-ee8348301068/26-6a7977bd352c8.webp' /></p><p>
</p><p>


போர் தொடங்கியதிலிருந்து ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால் எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ளது.</p><p> 



இருப்பினும், அமெரிக்க நுகர்வோர் இந்தப் போரினால் பெரியளவில் சிரமத்தை எதிர்நோக்கும் அளவிற்கு அமெரிக்கா எண்ணெய் விலைகளை உயர்த்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T11:26:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புற்றுநோய் அபாயகட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-us-president-joe-biden-at-risk-of-cancer-1786357155"></link>
            <id>https://canadamirror.com/article/former-us-president-joe-biden-at-risk-of-cancer-1786357155</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனைத் தாக்கியுள்ள கொடிய புற்றுநோய், தற்போது அவரின் எலும்புகளையும் தாண்டி உடலின் பிற பகுதிகளுக்கும் வேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனைத் தாக்கியுள்ள கொடிய புற்றுநோய், தற்போது அவரின் எலும்புகளையும் தாண்டி உடலின் பிற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவி வருவதாக அவரது மகன் அண்டர் பைடன் (Hunter Biden) மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். </p><p> 

பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் பேசிய அண்டர் பைடன், தனது தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதை வெளிப்படுத்தினார். "புற்றுநோய் அவரது எலும்புகள் மற்றும் அதற்கும் அப்பால் பரவிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aff6e6a-5e55-4695-92e0-75ba6f11ad3b/26-6a79a5a49f42d.webp' /></p><h2>&nbsp; மிகவும் கடினமாகவும், பெருந்துயரமாகவும் உள்ளது&nbsp;</h2><p> </p><p>
இது அவருக்குக் கடுமையான வலியையும், பல வகைகளில் உடல் தளர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது" எனக் கூறிய அவர், தனது தந்தையின் தற்போதைய நிலையைப் பார்ப்பது "உண்மையிலேயே மிகவும் கடினமாகவும், பெருந்துயரமாகவும் உள்ளது" கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.</p><p> 

 83 அகவையுடைய மக்களாட்சிக் கட்சியின் தலைவரான ஜோ பைடன், 2021 முதல் 2025 வரை அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பணியாற்றினார். 

அவரது உடல்நலம் குறித்த பல்வேறு ஐயங்கள் எழுந்ததால், 2024-ஆம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. </p><p>அவருக்குப் பதிலாகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் , குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பிடம் தோற்றார். 
வெள்ளை மாளிகையிலிருந்து விடைபெற்று நான்கு மாதங்களுக்குப் பிறகு, கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் தனக்கு முன்னிற்குஞ்சுரப்பிப் புற்றுநோய் (Prostate cancer) இருப்பதை ஜோ பைடன் உலகிற்கு அறிவித்தார்.
</p><p> தொடரும் மருத்துவப் போராட்டங்கள்அதன்பின்னர் கதிர்வீச்சு மருத்துவம் மற்றும் இயக்குநீர் மருத்துவக் (Hormone therapy) கட்டமைப்புக்குள் அவர் உட்படுத்தப்பட்டார். </p><p>

கடந்த மாதம் கூட, தனது பணிக்காலம் குறித்த புதிய நூல் ஒன்றின் வெளியீட்டு அறிவிப்பின்போது, தனது மருத்துவம் "மிகவும் நன்றாக" சென்று கொண்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால், நோயின் வீரியம் தற்போது கட்டற்ற நிலையை எட்டியுள்ளதை அண்டர் பைடனின் சொற்கள் உறுதிப்படுத்துகின்றன</p>]]></content>
            <updated>2026-08-10T11:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேங்கொக் அரச அலுவலகம் ஒன்றில் துப்பாக்கி சூடு; சம்பவத்தால் பெரும் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shooting-at-a-government-office-in-bangkok-1786361212"></link>
            <id>https://canadamirror.com/article/shooting-at-a-government-office-in-bangkok-1786361212</id>
            <summary type="text">&amp;nbsp; தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அரச அலுவலகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிரேஷ்ட அதிகாரி ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அரச அலுவலகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் அவரது ஓட்டுநரும் காயமடைந்துள்ளனர்.
</p><p>
இன்று இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59d38f5d-2fd6-44c6-996a-a21c5088dbdb/26-6a79b57ddc10d.webp' /></p><p>
</p><p>
அதேசமயம் கடந்த வெள்ளிக்கிழமை நோந்தபுரி பாடசாலை ஒன்றில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்ட சோகம் தணிவதற்குள், அதே பிராந்தியத்தில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை உடனடியாகத் தீவிரப்படுத்துமாறு தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்ன்விரகுல் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

 இன்று மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டதை அடுத்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு உலோகக் கண்டறிதல் கருவிகள் மூலம் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T11:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய அமைதிப்படை வீரர்களுக்கு ஒட்டாவாவில் கௌரவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-peacekeepers-honoured-1786354410"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-peacekeepers-honoured-1786354410</id>
            <summary type="text">&amp;nbsp;உலக நாடுகளின் அமைதியைக் காக்கும் சர்வதேசப் பணிகளில் ஈடுபட்டுச் சேவையாற்றிய கனடிய அமைதிப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஒட்டாவாவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலக நாடுகளின் அமைதியைக் காக்கும் சர்வதேசப் பணிகளில் ஈடுபட்டுச் சேவையாற்றிய கனடிய அமைதிப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஒட்டாவாவில் உள்ள 'நல்லிணக்க அமைதிப்படை நினைவுச் சின்னத்தில்' சிறப்பு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. </p><p>
தேசிய அமைதிப்படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள், தற்போதைய இராணுவ வீரர்கள், கனடிய அரச பொலிஸார், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். </p><p>
1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்த 9 கனடியப் படை வீரர்கள் பயணித்த 'பஃப்பலோ' விமானம் சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அனைவரும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b15f66b6-82ca-4402-bc71-35fc8d3820a3/26-6a799aec85b51.webp' /></p><p> கனடிய அமைதிப்படை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிக மோசமான உயிரிழப்பு இதுவாகும். </p><p>
இந்தத் தியாகத்தை நினைவு கூரும் வகையில், கனடாவில் 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி 'தேசிய அமைதிப்படை வீரர்கள் தினமாக' அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.</p><p> 
1948 ஆம் ஆண்டு முதல், 1,25,000-க்கும் மேற்பட்ட கனடிய ஆயுதப்படை வீரர்களும் 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் உலகின் 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>சர்வதேச அமைதிப் பணிகளின் போது இதுவரை மொத்தம் 130 கனடியப் படை வீரர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.</p><p> 
மேலும், அடுத்த தலைமுறை இளைஞர்களும் நாட்டின் அமைதிப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது நம்பிக்கையளிப்பதாக நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T09:44:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 3 வயது சிறுமியைத் தாக்கிய கரடி: அதிர்ச்சி சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shock-bc-mom-describes-bear-attack-on-toddler-1786348616"></link>
            <id>https://canadamirror.com/article/shock-bc-mom-describes-bear-attack-on-toddler-1786348616</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியைப் பாக்கரடி ஒன்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், கரடி சிறுமியின் கழுத்தைக் கவ்வ முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். </p><p>உடனடியாகச் செயல்பட்ட தந்தை, வில் மற்றும் அம்பைப் பயன்படுத்தி கரடியின் தலையில் எய்து அதைத் தாக்கி விரட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6b22b8e-f638-400e-a747-29b174259aa2/26-6a79844a6c312.webp' /></p><p> </p><p>
கரடி கடித்ததில் சிறுமியின் கழுத்து, தலை மற்றும் முதுகுப் பகுதியில் ஆழமான காயங்களும் வெட்டுக் காயங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p> உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் வான்கூவரில் உள்ள சிறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அச்சிறுமி, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. </p><p>
சம்பவ இடத்திற்குப் பொலிஸார் வந்தபோதும், அந்த இடத்தில் மிகுந்த ஆர்வம் காட்டிய கரடி மீண்டும் மீண்டும் அவ்வீட்டுப் பகுதிக்கு வந்துள்ளது. </p><p>பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அதிகாரிகள் கரடியை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். </p><p>
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கரடி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடியது. வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அதைக் கண்டுபிடித்தவுடன் அழிக்க முடிவு செய்துள்ளனர்.</p><p> 
அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும், வனவிலங்குகள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானைக் முடக்க டிரம்ப் வகுக்கும் புதிய வியூகம்! விரைவில் அதிரடித் தாக்குதல் நடத்தக்கூடும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-plans-to-destroy-iran-s-pickaxe-mountain-1786346250"></link>
            <id>https://canadamirror.com/article/trump-plans-to-destroy-iran-s-pickaxe-mountain-1786346250</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானைக் முடக்க டிரம்ப் வகுக்கும் புதிய வியூகம் குறித்த தகவல் வெளியாகி மீண்டும் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 அதன்படி ஈரானின் நிலத்தடி அணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானைக் முடக்க டிரம்ப் வகுக்கும் புதிய வியூகம் குறித்த தகவல் வெளியாகி மீண்டும் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 அதன்படி ஈரானின் நிலத்தடி அணுஆயுதத் திட்டங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதைத் தடுப்பதற்காக, அந்நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ‘பிக்ஏக்ஸ்’ (Pickaxe Mountain) மலைப்பகுதி சுரங்கப் பாதைகளின் நுழைவாயில்களைத் தாக்கித் தகர்ப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகப் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01aba7eb-de2c-470b-a439-08ed1830b015/26-6a797b0c0cba1.webp' /></p><h2>&nbsp; அமெரிக்கப் படைகள் விரைவில் அதிரடித் தாக்குதல் நடத்தக்கூடும்</h2><p> </p><p>

ஈரானின் நடான்ஸ் (Natanz) அணு உலையை அடுத்துள்ள இமயமலை போன்ற கடினமான பாறைப்பகுதியில் அமைந்துள்ள இந்த மையத்தை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் விரைவில் அதிரடித் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

ஈரானிய மொழியில் ‘கூ-எ கோலங் காஸ் லா’ (Kuh-e Kolang Gaz La) என அழைக்கப்படும் இந்த பிக்ஏக்ஸ் மலை மையம், பூமிக்கு அடியில் சுமார் 100 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் கிரானைட் பாறைகளுக்கு நடுவே கட்டப்பட்டுள்ளது. </p><p>

இங்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உருவாக்கப் பயன்படும் பல்லாயிரக்கணக்கான சென்ட்ரிஃபியூஜ் (Centrifuge) இயந்திரங்களை ஈரான் மறைத்து வைத்திருப்பதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.
</p><p>
 மிகக் கடினமான பாறைத் தளங்களுக்கு அடியில் அமைந்துள்ளதால், வழக்கமான பங்கர் பாஸ்டர் (Bunker Buster) குண்டுகளால் கூட இந்த மையத்தை முழுமையாக அழிக்க முடியாது என ராணுவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>

இந்நிலையில், இந்த நிலத்தடி மையத்தை முழுமையாக அழிக்க முடியாவிட்டாலும், அங்கு அமைந்துள்ள சுரங்கப் பாதைகளின் நுழைவாயில்கள் (Tunnel Entrances) மற்றும் காற்றோட்ட அமைப்புகளைச் சக்திவாய்ந்த ஏவுகணைகள் மூலம் தகர்ப்பதன் மூலம், அந்த மையத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்க முடியும் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் கணித்துள்ளனர். </p><p>

இதன்மூலம் சென்ட்ரிஃபியூஜ் இயந்திரங்களை வெளியே கொண்டு வரவோ அல்லது அணுஆயுதப் பணிகளைத் தொடரவோ முடியாதவாறு ஈரானைக் முடக்க முடியும் என வாஷிங்டன் திட்டமிட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தொடர் தாக்குதல்கள் மற்றும் வான்வழி மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், “ஈரான் அணுஆயுதத் திட்டத்தில் முன்னேற்றம் அடைவதைச் சகித்துக் கொள்ள முடியாது என்றும், பிக்ஏக்ஸ் மலைப் பகுதியை மிக விரைவில் கடுமையாகத் தாக்குவோம்” என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். </p><p>

நிலத்தடி அணுஆயுத மையங்களை இலக்கு வைத்து அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கும் இந்த அடுத்தகட்டப் போர்த் திட்டம், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளமை உலகில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T08:51:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கரடி தாக்கியதால் சிறுமி காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/child-injured-by-bear-attack-in-maple-ridge-1786350658"></link>
            <id>https://canadamirror.com/article/child-injured-by-bear-attack-in-maple-ridge-1786350658</id>
            <summary type="text">கனடாவில் சிறுமி ஒருத்தியை கரடி ஒன்று தாக்கியதில் அவள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், மூன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் சிறுமி ஒருத்தியை கரடி ஒன்று தாக்கியதில் அவள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.
</p><p>
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், மூன்று வயது சிறுமி ஒருத்தி கரடியால் தாக்கப்பட்டுள்ளாள்.
</p><p>
நேற்று காலை 11.30 மணியளவில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Maple Ridge நகரில் அமைந்துள்ள வீடொன்றின் வெளியே மூன்று வயது சிறுமி ஒருத்தி விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c51066-a4f9-4571-8e25-4e9c12b68171/26-6a798c449274e.webp' /></p><p>
அப்போது அங்கு வந்த கரடி ஒன்று சிறுமியைத் தாக்கியுள்ளது. குழந்தையில் அலறல் சத்தம் கேட்டு அவளது தந்தை வந்து கரடியைத் துரத்தியுள்ளார்.</p><p>

காயமடைந்த அந்தச் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவளது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதற்கிடையில், தகவலறிந்து அங்கு வந்த பொலிசார், மீண்டும் மீண்டும் அந்தக் கரடி அங்கு வர முயற்சிப்பதைக் கவனித்துள்ளனர்.</p><p>

மதியம் வாக்கில் மீண்டும் அந்தக் கரடி ஆக்ரோஷமாக அங்குவர, பொலிசார் அதை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
</p><p>
ஆனால், குண்டு பாய்ந்தும் அந்தக் கரடி காட்டுக்குள் ஓடிவிட்டிருக்கிறது.
</p><p>
கரடியைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுவரும் நிலையில், மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருக்குமாறும், யாராவது கரடியைப் பார்த்தால் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவலளிக்குமாறும் பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-10T08:31:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லித்தியம்-அயன் பேட்டரிகளால் அதிகரிக்கும் தீ விபத்துகள்: எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lithium-ion-battery-fires-on-rise-canadian-cities-1786347142"></link>
            <id>https://canadamirror.com/article/lithium-ion-battery-fires-on-rise-canadian-cities-1786347142</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பல்வேறு நகரங்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள் வெடித்து ஏற்படும் தீ விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தீயணைப்புத் துறையினர் தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பல்வேறு நகரங்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள் வெடித்து ஏற்படும் தீ விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தீயணைப்புத் துறையினர் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>ஆல்பர்ட்டா மற்றும் ஒன்டாரியோ மாகாணங்களில் கடந்த வாரத்தில் மட்டும் பல விபத்துகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக கல்கரி நகரில் 24 மணி நேரத்திற்குள் 3 இடங்களில் இத்தகைய விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
</p><p>மெடிசின் ஹாட் பகுதியைச் சேர்ந்த ஃப்ரெட் டென்னிஸ் என்பவரது வீட்டின் பின்புறத்தில் இருந்த 'சோலார் லைட்' பேட்டரி வெடித்ததில் வீடு கடுமையாகச் சேதமடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ac5ebd-3191-4537-b84c-72eabe11ba81/26-6a797e880b5a0.webp' /></p><p> </p><p>
தம்பதியினர் வெளியே சென்றிருந்த நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் அவர்களின் வளர்ப்பு நாயும் பூனையும் தீயில் கருகி உயிரிழந்தன.
</p><p>ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், மின்சார சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர்களில் இந்தப் பேட்டரிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.</p><p> 
சார்ஜ் செய்யும்போது பேட்டரி அதிக வெப்பமடைந்து 'தெர்மல் ரன்அவே' எனும் நிலையை அடையும் போது மிக வேகமாகவும் பேரழிவை ஏற்படுத்தும் வகையிலும் தீ பரவுகிறது.</p><p>
நகரத்தின் பொதுப் பாதுகாப்புக்கு மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய அச்சுறுத்தல் லித்தியம்-அயன் பேட்டரி தீ விபத்துகளே என டோரண்டோ நகரின் தீயணைப்புத் தலைவர் ஜிம் ஜெஸப் தெரிவித்துள்ளார்.
</p><p>சாதனம் 100% சார்ஜ் ஆனவுடன் சார்ஜரிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், பாதுகாப்புத் தரச் சான்றிதழ் பெறாத சாதனங்கள் மற்றும் போலி சார்ஜர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>சேதமடைந்த பேட்டரிகளை வீட்டுக்குப்பைகளுடன் வீசாமல், உரிய முறையில் மறுசுழற்சி மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>கனடாவில் விற்பனை செய்யப்படும் லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்புகள் மீது கடுமையான தேசியக் கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறை விதிகளையும் கொண்டு வர வேண்டும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T07:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காட்டுத்தீ: வீட்டை விட்டு வெளியேற முயன்ற 80 வயது மூதாட்டி உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/wildfire-claims-the-life-of-80-year-old-woman-1786345803"></link>
            <id>https://canadamirror.com/article/wildfire-claims-the-life-of-80-year-old-woman-1786345803</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சம்மர்லேண்ட் பகுதியில் வேகமாகப் பரவி வரும் &#039;பால்ட் ரேஞ்ச்&#039; காட்டுத்தீ காரணமாக 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சம்மர்லேண்ட் பகுதியில் வேகமாகப் பரவி வரும் 'பால்ட் ரேஞ்ச்' காட்டுத்தீ காரணமாக 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கனடிய அரச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
மேடோ வேலி பகுதியில் காட்டுத்தீ பரவியதையடுத்து, தனது குடும்ப உறுப்பினருடன் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோதே அந்த மூதாட்டி திடீரென உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c36b0cf-1c4a-43ab-947d-8115d6cf0ae2/26-6a797b9dc271c.webp' /></p><p> </p><p>
சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில், தீயிலிருந்து தப்பிக்க முயன்ற மற்றொரு நபர் மூதாட்டியின் உடலைப் பார்த்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
</p><p>மூதாட்டியின் இறப்பிற்கு காட்டுத்தீயே காரணம் எனப் பொலிஸார் நம்பும் போதிலும், மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனைச் சேவை விசாரணையைத் தொடங்கியுள்ளது. </p><p>வேறு எவரும் இக்காட்டுத்தீயில் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை. 
வெள்ளிக்கிழமை மாலை 5:15 மணியளவில் பற்றிய இக்காட்டுத்தீ, மிகக் குறுகிய காலத்தில் பிரம்மாண்டமாகப் பரவி, ஒகனகன் ஏரியை நோக்கி நகர்ந்தது.</p><p> இதில் ஃபோல்டர் மற்றும் மேடோ வேலி பகுதிகள் கடுமையாக எாிந்து சேதமடைந்துள்ளன. 
காட்டுத்தீயின் தீவிரத்தால் சம்மர்லேண்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T07:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் காதலியை கொலை செய்து தப்பி ஓடிய இந்தியர்; ஜேர்மனியில் மடக்கிய FBI அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-man-arrested-germany-murder-girl-friend-us-1786342395"></link>
            <id>https://canadamirror.com/article/indian-man-arrested-germany-murder-girl-friend-us-1786342395</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவியான தனது காதலியைப் படுகொலை செய்துவிட்டு, தாயகமான இந்தியாவிற்குத் தப்பியோட முயன்ற 20 வயது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவியான தனது காதலியைப் படுகொலை செய்துவிட்டு, தாயகமான இந்தியாவிற்குத் தப்பியோட முயன்ற 20 வயது இந்திய இளைஞர் ஜெர்மனி தலைநகர் பெர்லின் விமான நிலையத்தில் வைத்து சர்வதேசக் காவல் துறை மற்றும் FBI&nbsp; அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கைது செய்யப்பட்ட வாலிபர் வருண் பேட்சிஹாரி (என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


அமெரிக்காவின் டியூக்சன் (Tucson) நகரில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் வணிகப் பகுப்பாய்வு (Business Analytics) படித்து வந்த வருண் பேட்சிஹாரியும், 19 வயதான ஜூலிசா ரூபி சலசார் (Julissa Rubi Salazar) என்ற மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23535d90-4177-4ed6-b6ff-82f8091241e0/26-6a796bfd25453.webp' /></p><h2>ஜேர்மனியில் மடக்கிய FBI அதிகாரிகள்</h2><p> </p><p>

வருணின் வன்முறைப் போக்கால் அதிருப்தியடைந்த ஜூலிசா, அவருடனான உறவை முறித்துக் கொள்ளத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஜூலிசாவை வருண் கழுத்தை நெரித்துக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளார்.</p><p>

கொலைக்குப் பிறகு தப்பிப்பதற்காக, ஜூலிசாவின் செல்போன் மற்றும் வங்கிக் கார்டுகளைத் திருடிய வருண், கொலையை மறைக்க ஜூலிசாவின் தாயாருக்குத் தவறான குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளார். </p><p>

தொடர்ந்து ஜூலிசாவின் பணத்தைப் பயன்படுத்தி டியூக்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து ஹூஸ்டன் வழியாக ஜெர்மனிக்கு விமானத்தில் ஏறியுள்ளார். 

ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்குப் பறக்க அவர் திட்டமிட்டிருந்ததாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனிடையே ஜூலிசாவின் உடலைக் கைப்பற்றிய டியூக்சன் காவல் துறையினர், வருண் மீது முதல் நிலைக்கொலை (First-degree murder) மற்றும் கடத்தல் வழக்குப்பதிவு செய்து சர்வதேச அளவில் தேடுதல் எச்சரிக்கை விடுத்தனர்.
</p><p>
 FBI&nbsp; அமைப்பும் ஜெர்மன் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டதால், ஜெர்மனியில் விமானம் தரையிறங்கிய உடனேயே வருண் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

 தற்போது ஜெர்மனி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை விரைவில் அமெரிக்காவிற்கு நாடுகடத்தி வழக்கு விசாரணை நடத்த அரிசோனா காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-10T07:01:28+00:00</updated>
        </entry>
    </feed>
