<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-24T13:33:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய இராஜாங்க அமைச்சராக இலங்கை தமிழ்ப் பெண் உமா குமரன்; முதல் வரலாற்றுச் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lanka-tamils-uma-kumaran-uk-new-cabinet-minister-1784871247"></link>
            <id>https://canadamirror.com/article/lanka-tamils-uma-kumaran-uk-new-cabinet-minister-1784871247</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை புலமபெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில் (Foreign, Commonwealth and Development Office) வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54d46103-9b72-4b51-bd41-d15ac82db539/26-6a62f95118016.webp' /></p><h2>பிரித்தானிய அரசாங்கத்தில்&nbsp; முதல் தமிழ் பெண்</h2><p> </p><p>இதன் மூலம் பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
</p><p>
இலங்கையில் உள்நாட்டுப் போரின் காரணமாக பிரித்தானியாவில் குடியேறிய தமிழ் பெற்றோருக்கு பிறந்த உமா குமரன், அண்மைய பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.</p><p> தற்போது அமைச்சுப் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து, தனது சமூக ஊடகப் பதிவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அவர், “எனது பெற்றோருக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்த பிரித்தானியா, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வாய்ப்பை வழங்கியது.</p><p> இன்று அந்த நாட்டிற்கு அமைச்சராக சேவையாற்றுவது பெருமைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.


பிரித்தானிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைப்பில் இராஜாங்க அமைச்சர் பதவி, நாடாளுமன்ற துணைச் செயலாளர் பதவியை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p> அமைச்சரவை அமைச்சருக்கு அடுத்த முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் ஒன்றாக இந்தப் பதவி விளங்குகிறது.

இதற்கு முன்னர் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜயவர்தன, லிஸ் ட்ரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்.</p><p>

உமா குமரனின் நியமனம், பிரித்தானிய அரசியலில் இலங்கைத் தமிழ் சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கும், அந்நாட்டின் பல்வகைமை மற்றும் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் முக்கிய முன்னேற்றமாகவும் அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T13:10:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைப் பராமரிப்புப் பணம் வழங்க மறுப்பு: தந்தைக்கு தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/father-ordered-to-spend-time-behind-bars-1784875118"></link>
            <id>https://canadamirror.com/article/father-ordered-to-spend-time-behind-bars-1784875118</id>
            <summary type="text">&amp;nbsp;தனது குழந்தைப் பராமரிப்பிற்காக வழங்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான டொலர்கள் தொகையை வழங்கத் தவறிய தந்தை ஒருவருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தனது குழந்தைப் பராமரிப்பிற்காக வழங்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான டொலர்கள் தொகையை வழங்கத் தவறிய தந்தை ஒருவருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகப் பிரசுரத் தடையின் கீழ் "திரு. M" (Mr. M) எனக் குறிப்பிடப்படும் அந்த நபர், நீதிமன்ற விசாரணையின் போது மொத்தமாக 37,312.54 டொலர்களை நிலுவையாக வைத்திருக்க வேண்டியிருந்தது.
</p><p>குழந்தையின் தாயாரான "திருமதி. C" (Ms. C) மற்றும் பிரதிவாதியான திரு. M ஆகிய இருவரும் சட்டப்பூர்வமாகத் திருமண பந்தத்தில் இணையவில்லை. குழந்தை பிறந்த நாள் முதல் வளர்ப்புச் செலவுகள் முழுவதையும் தாயாரே கவனித்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5775e50-e1ad-4e9a-b832-c3af6d93710e/26-6a63086fc2aa8.webp' /></p><p>
ஆண்டிற்கு 297,700 டொலர்கள் வருமானம் ஈட்டும் திரு. M, குழந்தைப் பராமரிப்பிற்காக மாதம் 2,500 டொலர்களையும், நிலுவைத் தொகையாக 16,429 டொலர்களையும் வழங்குவதாகச் சட்டப்பூர்வ ஒப்பந்தம் செய்தார்.</p><p>
நிலுவைத் தொகை 50,000 டொலர்களை நெருங்கியதையடுத்து, மாதம் 7,500 டொலர்கள் செலுத்த வேண்டும் எனவும், தவறினால் ஒவ்வொரு தவறும் தவறும்போதும் 3 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>எனினும், அவர் இருமுறை மட்டுமே பணத்தை வழங்கிவிட்டு, அதன் பின்னர் பணத்தைச் செலுத்தத் தவறியுள்ளார். </p><p>இதனால் தனக்குக் கடும் கடன்பாடும், வாழ்க்கைத் தரத்தில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதாகத் தாயார் நீதிமன்றத்தில் விவரித்தார்.</p><p>
தனக்கு போதிய வருமானம் இல்லை எனவும், நிதி நெருக்கடி நிலவுவதாகவும் தந்தை சார்பில் வாதிடப்பட்டது. </p><p>மேலும், தனது நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 52,000 டொலர்களைத் தன்னால் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.
</p><p>ஆனால், அந்த வங்கிக் கணக்கிலிருந்து 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏராளமான ஆடம்பரச் செலவுகள் செய்யப்பட்டுள்ளதை நீதிபதி மைக்கா ரான்கின் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T13:09:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்களுக்கு நீதி கோரி லண்டனில் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/protest-london-demanding-justice-tamils-black-july-1784894892"></link>
            <id>https://canadamirror.com/article/protest-london-demanding-justice-tamils-black-july-1784894892</id>
            <summary type="text">இலங்கையில்&amp;nbsp; &amp;nbsp; 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில்&nbsp; &nbsp; 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், கறுப்பு யூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (23) லண்டனில் நடைபெற்றுள்ளது.
</p><p>


தமிழீழ சுயநிர்ணய அமைப்பு, சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் மற்றும் பல தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வு, பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக (13Hyde Park Gardens, Tyburnia, London W2 2LU) இடம்பெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d66084cc-409d-4d9a-a040-391af66979a0/26-6a6355ae0d61b.webp' /></p><p>
</p><p>


இதன்போது இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/681dadfb-91cb-4376-b0d9-7b805ac64e77/26-6a6355aeb9f2c.webp' /></p><p>
</p><p>

 போராட்டத்தில் ஈழதமிழ்மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்ததுடன், நீதிக்கான கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளை ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T12:06:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் இம்ரான் கானின் உடல்நிலை மோசம் ; சர்வதேச உதவி கோரும் மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/imran-khan-s-health-deteriorating-in-prison-1784892992"></link>
            <id>https://canadamirror.com/article/imran-khan-s-health-deteriorating-in-prison-1784892992</id>
            <summary type="text">பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் கண்பார்வை தொடர்ந்து மோசமடைந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் கண்பார்வை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகக் கூறி, அவரது மகன் காசிம் கான் சர்வதேச நாடுகளிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
73 வயதான இம்ரான் கான், 1,100 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் நிலையில், அவருக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படுவதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14778dda-4402-4adf-a42d-401d89ad1a23/26-6a634e416cf09.webp' /></p><p>பல வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இம்ரான் கான், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்கு அவரை நேரில் சந்திப்பதற்கும் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

“எனது தந்தைக்கு உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.</p><p> ஆனால், பாகிஸ்தான் அரசு அவருக்கு உரிய சிகிச்சையை வழங்க மறுத்து வருகிறது. அவரது உயிரைக் காப்பாற்ற தேவையான மருத்துவ வசதிகளை வழங்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என காசிம் கான் தெரிவித்துள்ளார்.
</p><p>
இம்ரான் கான் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் திகதி கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

இந்நிலையில், இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பில் அவரது மகன் விடுத்துள்ள கோரிக்கை தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-24T11:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் பெரும் காட்டுத்தீ; படகுகளில் தப்பியோடும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/massive-wildfires-in-france-people-fleeing-by-boat-1784892410"></link>
            <id>https://canadamirror.com/article/massive-wildfires-in-france-people-fleeing-by-boat-1784892410</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மேற்கு பிரான்சில் உள்ள ஒரு தீபகற்பத்தை காலி செய்ய அதிகாரிகள் பொது மக்களுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் மக்கள் படகுகளில் தப்பியோடுவதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மேற்கு பிரான்சில் உள்ள ஒரு தீபகற்பத்தை காலி செய்ய அதிகாரிகள் பொது மக்களுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் மக்கள் படகுகளில் தப்பியோடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதனால், வெள்ளிக்கிழமையன்று (24) நூற்றுக்கணக்கான மக்கள் படகுகள் மூலம் அங்கிருந்து வெளியேறினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1b1dc84-1478-4c41-94b7-84500c04bde0/26-6a634bfc3de01.webp' /></p><h2>&nbsp;தீவிரமாக போராடி வரும்&nbsp; தீயணைப்பு வீரர்கள்</h2><p>

போர்டோ (Bordeaux) நகருக்கு மேற்கே பிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரையோரம் அமைந்துள்ள கேப் ஃபெரெட் (Cap Ferret) தீபகற்பத்திலிருந்து இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் படகுகள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக நகர அதிகாரிகள் கூறியதை மேற்கோள்காட்டி ஏஎஃப்பி (AFP) செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>

கோடை விடுமுறைக்காலம் நிலவும் வேளையில் பிரான்ஸில் பரவி வரும் பல காட்டுத்தீக்களில் ஒன்றாக, அந்நாட்டின் புகழ்பெற்ற வைன் உற்பத்திப் பகுதிகளில் ஒன்றின் அருகே கொழுந்துவிட்டு எரியும் தீ, இதுவரை மன்ஹாட்டன் பகுதியைப் போல ஏறக்குறைய ஒன்றரை மடங்கு பரப்பளவை அழித்துள்ளது.</p><p>

 இன்னிலையில் காட்டுதீயை அழிக்க நீர் குண்டு வீசும் விமானங்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
</p><p>
தென்மேற்கு அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை முகாம்கள் மற்றும் விடுமுறை இல்லங்களிலிருந்து வெளியேறுமாறு பிரெஞ்சு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p><p>

 இந் நிலையில் காட்டுதீயால் நெருக்கடி நிலை இன்னும் “மிகவும் தீவிரமாக” இருப்பதாக எச்சரித்துள்ள ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், உதவி கோருவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமைப் பாதுகாப்பு வழிமுறையை பிரான்ஸ் செயல்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T11:25:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பிய பனிப்பாறை விபத்தில் 20 கனடிய இராணுவ வீரர்கள் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-army-members-injured-1784888663"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-army-members-injured-1784888663</id>
            <summary type="text">&amp;nbsp;கொலம்பியா பனிப்பகுதியில் உள்ள அத்தாபாஸ்கா பனிப்பாறையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கனடா இராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள், பனிப்பாறைப் பிளவுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொலம்பியா பனிப்பகுதியில் உள்ள அத்தாபாஸ்கா பனிப்பாறையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கனடா இராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள், பனிப்பாறைப் பிளவுக்குள் விழுந்து காயமடைந்துள்ளனர்.</p><p>
கனடிய ஆயுதப்படைகளின் மேம்பட்ட போர் மையத்தைச் சேர்ந்த இந்த வீரர்கள், பனிப்பாறைப் பிளவுகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான கடினமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து நேரிட்டுள்ளது.
</p><p>சிக்கலான நிலப்பரப்புப் பாதையில் கயிறு மூலம் இணைந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, மூன்று பேரடங்கிய அந்தக் குழு எதிர்பாராதவிதமாக சுமார் 20 மீட்டர் ஆழத்திலிருந்த பனிப் பிளவுக்குள் விழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de98e271-f509-46e7-a38e-e0a2b2b228a4/26-6a633d58ae641.webp' /></p><p>
இது குறித்துக் கனடிய இராணுவக் கோட்பாடு மற்றும் பயிற்சி மையத்தின் சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் மேஜர் பிராட்லி ரோய் தகவல் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான பனிப் பிளவு மீட்புப் பயிற்சிகள் இயற்கையிலேயே அதிக ஆபத்து நிறைந்தவை.</p><p> இதனாலேயே, எதிர்பாராத வீழ்ச்சிகள் அல்லது விபத்துகள் நிகழும்போது உடனடியாகச் செயல்படக் கூடிய அனுபவமிக்க மீட்புக் குழுவினர் எப்போதும் இப்பயிற்சிகளில் உடன் இருப்பார்கள். இந்த பாதுகாப்பு நடைமுறையே பாதிக்கப்பட்ட வீரர்களை விரைவாக மீட்கவும் அவர்களுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் உதவியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>காயமடைந்த மூன்று வீரர்களும் விமான ஆம்புலன்ஸ் மூலம் ஜாஸ்பரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.</p><p> அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்களின் தன்மை மற்றும் அவற்றின் தீவிரம் குறித்த மேலதிக விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T10:31:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் நடைபெற்றத் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் 5 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/five-killed-in-gaza-shooting-1784888916"></link>
            <id>https://canadamirror.com/article/five-killed-in-gaza-shooting-1784888916</id>
            <summary type="text">காசாவின் மேற்கு கரையில் நப்லஸ் பகுதி அருகே நடைபெற்றத் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.



இந்நிலையில், உயிரிழந்தவர்களில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசாவின் மேற்கு கரையில் நப்லஸ் பகுதி அருகே நடைபெற்றத் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>


இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 4 பேர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் இஸ்ரேலைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4185d17-d407-4f03-ab17-10707a903044/26-6a633e55688ea.webp' /></p><p>இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 4 பாலஸ்தீனியர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், அவர்களில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகப் பாலஸ்தீனிய சுகாதாரத்துறை தெரிவித்தள்ளது. </p><p>



இதேவேளை, காயமடைந்த 2 இஸ்ரேலியர்கள் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்புக் கூறியுள்ளது.
</p><p>


மேலும், இந்தத் திடீர் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலுக்கான உடனடி காரணம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.</p><p> இஸ்ரேலிய படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்தப் பகுதியில் அண்மைக்காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-24T10:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மற்றுமொரு நாட்டிலும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக பயன்பாட்டுக்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ban-on-social-media-us-children-under-16-vietnam-1784887528"></link>
            <id>https://canadamirror.com/article/ban-on-social-media-us-children-under-16-vietnam-1784887528</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வியட்நாமில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் பதிவுகள் இடுவது, கருத்துகள் தெரிவிப்பது மற்றும் விருப்பப் பதிவுகளை மேற்கொள்வது ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வியட்நாமில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் பதிவுகள் இடுவது, கருத்துகள் தெரிவிப்பது மற்றும் விருப்பப் பதிவுகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்குத் தடை விதிக்க வியட்நாம் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. </p><p>


சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உலகளவில் அதிகரித்து வரும் சர்வதேச முயற்சிகளின் ஒரு பகுதியாகவே வியட்நாம் இந்த முடிவை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c679390-58db-4e1b-b32d-7670374c38ff/26-6a6338e96c753.webp' /></p><h2>சிறுவர்கள் பார்வையிடும் உள்ளடக்கங்கள்</h2><p>
</p><p>
16 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகக் கணக்குகள், அவர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் தகவல்களைக் கொண்டே பதிவு செய்யப்பட வேண்டும்.</p><p> 

சிறுவர்கள் பார்வையிடும் உள்ளடக்கங்கள் மற்றும் அவர்கள் செலவிடும் நேரத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோரையே சாரும்.

சமூக ஊடக நிறுவனங்கள் சிறுவர்களை அடையாளம் காணத் தேவையான தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்க வேண்டும்.</p><p> மேலும், அவர்களின் வயதுக்குப் பொருத்தமான உள்ளடக்கங்கள் மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

வன்முறை, ஆபாசம், சூதாட்டம், போதைப்பொருட்கள் மற்றும் தற்கொலை தொடர்பான தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கண்டறிந்து, எச்சரித்து, அவற்றுக்கான அணுகலைத் தடை செய்ய நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>

அதேவேளை அண்மையில், பிரான்ஸ் நாடாளுமன்றம் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைத் தடை செய்ய ஒப்புதல் அளித்ததுடன், அவுஸ்திரேலியா இத்தகைய தடையை முதன்முதலில் அமுல்படுத்திய நாடு என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-24T10:03:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் வெப்ப அலையால் ஆண்களுக்கு Shorts அணிய சலுகை; பாரபட்சம் என பெண்கள் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/japan-allows-men-to-wear-shorts-office-heatwave-1784886160"></link>
            <id>https://canadamirror.com/article/japan-allows-men-to-wear-shorts-office-heatwave-1784886160</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; ஜப்பானில் தொடர்ந்து வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் அரைகாற்சட்டை (Shorts) அணிந்து வர சில ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; ஜப்பானில் தொடர்ந்து வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் அரைகாற்சட்டை (Shorts) அணிந்து வர சில நிறுவனங்கள் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இந்த நிலையில் ஜப்பானின் உடை கட்டுப்பாட்டு தளர்வு தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கவும் ஊழியர்களின் பணிச்சூழலை எளிதாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5214fc52-52ee-45fa-a270-0e464026caed/26-6a633391a296b.webp' /></p><h2>பெண்கள் விசனம்</h2><p>
</p><p>
இந்த முடிவுக்குச் சிலர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பல பெண்கள் இது ஒருதலைப்பட்சமானது என விமர்சித்து வருகின்றனர்.</p><p>

அலுவலகங்களில் பெண்களுக்கு ஏற்கனவே பலவிதமான உடைக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், ஆண்களுக்கு மட்டும் இத்தகைய தளர்வுகள் வழங்கப்படுவது பாரபட்சமானது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>


இதனிடையே, அலுவலகத்திற்கு அரைகாற்சட்டை அணிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தங்களின் தோற்றப் பொலிவைக் கருத்தில் கொண்டு ஆண்கள் பலர் தங்களது கால்களில் உள்ள மூடிகளை நீக்குவதற்காக லேசர் அறுவை சிகிச்சைகளை (Laser hair removal) நாடும் போக்கு அங்கு கணிசமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-24T09:41:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் பலியான 5 பேர் வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-pleads-guilty-in-5-death-while-enter-us-1784882144"></link>
            <id>https://canadamirror.com/article/woman-pleads-guilty-in-5-death-while-enter-us-1784882144</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் ரொமேனியாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ஆற்றில் மூழ்கி பலியான விடயம் நினைவிருக்கலாம்.

அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் ரொமேனியாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ஆற்றில் மூழ்கி பலியான விடயம் நினைவிருக்கலாம்.</p><h3>

அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில்...
</h3><p>
 2023ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 29ஆம் திகதி, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், ரொமேனியாவைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதியரும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளும் பலியானார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dce0d43-7b99-4f05-9fe8-76a8aeb79549/26-6a6323e16eac2.webp' /></p><p>மோசமான வானிலை காரணமாக அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அந்த பயணிகளுடன் படகின் சாரதியான கேஸி ஓக்ஸ் என்பவரும் உயிரிழந்தார்.</p><h3>

குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்
</h3><p>
இந்நிலையில், ரொமேனியாவைச் சேர்ந்த இளம் தம்பதியர் மற்றும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளும், படகு சாரதியும் பலியான வழக்கில் ஸ்டெஃபனி ஸ்க்வேர் (Stephanie Square, 53) என்னும் பெண், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c7e72a8-e6d4-49fb-822c-80a3c23e6ed5/26-6a6323e21f0e2.webp' /></p><p>இந்த ஸ்டெஃபனி, கனேடிய அமெரிக்க இரட்டைக் குடியுரிமை கொண்டவர் ஆவார்.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆட்கடத்தல் கும்பலின் தலைவிதான் இந்த ஸ்டெஃபனி என அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.</p><p>

அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட அவர், அமெரிக்காவில் வழக்கை எதிர்கொள்கிறார்.
</p><p>
இந்நிலையில், அந்த ரொமேனியக் குடும்பம் மற்றும் படகு சாரதி உயிரிழந்த வழக்கில், தான் குற்றவாளி என ஸ்டெஃபனி ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
அதாவது, சம்பவம் நடந்த அன்று மோசமான வானிலை நிலவியுள்ளது. பலத்த காற்று, கடும் குளிர் மற்றும் படகை செலுத்த போதுமான வெளிச்சம் இல்லாத நிலையிலும், பணத்துக்கு ஆசைப்பட்டு, தனக்கு பணம் கிடைத்தால் போதும் என முடிவு செய்து, அவர் அந்த ரொமேனியக் குடும்பத்தை படகில் பயணிக்க வலியுறுத்தியுள்ளார் ஸ்டெஃபனி.
</p><p>
ஆனால், மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்து, அந்த ரொமேனியக் குடும்பமும் படகின் சாரதியும் உயிரிழந்துவிட்டார்கள்.</p><p>

இந்த வழக்கில் நவம்பர் மாதம் 25ஆம் திகதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்டெஃபனிக்கு குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T08:35:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 11 பேருடன் பயணித்த விமானம் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/kenmore-seaplane-crashes-near-sucia-island-1784881208"></link>
            <id>https://canadamirror.com/article/kenmore-seaplane-crashes-near-sucia-island-1784881208</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் 11 பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று, அவசரமாக நீரிலிறக்க முயன்றபோது விபத்துக்குள்ளாகித் தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியதில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் 11 பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று, அவசரமாக நீரிலிறக்க முயன்றபோது விபத்துக்குள்ளாகித் தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியதில் பயணிகள் பலர் காயமடைந்ததுடன், ஒருவர் உயிருக்குப் போராடி வருகின்றதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 
வாஷிங்டனில் உள்ள சுசியா தீவுக்கு (Sucia Island) அருகே உள்ள 'ஷாலோ பே' (Shallow Bay) பகுதியில், உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 5:15 மணியளவில் விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e06cebed-0afe-4786-96d2-02007a6a70c6/26-6a63203a64943.webp' /></p><h2>&nbsp;புறப்பட்ட 45 நிமிடங்களில்&nbsp;விமானம் விபத்து</h2><p> </p><p>இது சீயட்டில் (Seattle) நகரிலிருந்து புறப்பட்ட 45 நிமிடங்களில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

 

'கென்மோர் எயார்' (Kenmore Air) நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம், 'ரோச் ஹார்பர்' (Roche Harbor) நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அதன் விமானி அவசரமாகத் தரையிறக்க முயன்றதாகவும், அதன்பின்னரே விமானம் தீப்பிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 

 

 விமானம் எரிந்து சாம்பலான போதிலும், அதிர்ஷ்டவசமாக, விமானி உட்பட பயணித்த 11 பேரும் ஆல்ஃபா (உயிருடன்) மீட்கப்பட்டுள்ளனர்.

 

 

விமான விபத்து தொடர்பில் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்: "விபத்தில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.</p><p> மற்றவர்களுக்குத் தலைக்காயம், எலும்பு முறிவுகள் மற்றும் வெட்டுக் காயங்கள் உள்ளிட்ட பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ளன" என்று தெரிவித்தனர்.

 

 

காயமடைந்த பயணிகளில் இருவர் அமெரிக்கக் கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர் மூலம் 'பெல்லிங்ஹாம்' (Bellingham) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.</p><p> மேலும் இருவர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அருகில் உள்ள 'ஒர்காஸ் தீவுக்கு' (Orcas Island) அழைத்துச் செல்லப்பட்டனர்.
</p><p>
 

அமெரிக்கக் கடலோரக் காவல்படை மற்றும் 'சான் ஜுவான் கவுண்டி' ஷெரிப் அலுவலகம் உள்ளிட்ட பல அவசர கால மீட்பு முகமைகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக 'ஒர்காஸ் தீவு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை' தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T08:18:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்க வரி; பல நாடுகள் அதிருப்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-imposes-new-tariffs-on-60-countries-1784880519"></link>
            <id>https://canadamirror.com/article/us-imposes-new-tariffs-on-60-countries-1784880519</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்க வரிகளை விதித்துள்ளமை உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜப்பான் மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்க வரிகளை விதித்துள்ளமை உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் , அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
</p><p>
ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர், அமெரிக்காவின் புதிய சுங்க வரி நடவடிக்கை குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb476aef-aebb-46fe-8173-d7a0a60b3e9a/26-6a631d8914aab.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, அவுஸ்திரேலியாவின் வர்த்தக அமைச்சர், தமது நாட்டிற்கு 12.5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டிருப்பது முற்றிலும் நியாயமற்றது என விமர்சித்துள்ளார்.
</p><p>
60 நாடுகளுக்கு புதிய சுங்க வரிகளை அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளுக்கு 10 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இலங்கையுடன் இணைந்து 10 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, கனடா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளும் அடங்குகின்றன.

அமெரிக்காவின் இந்த புதிய சுங்க வரிகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட நாடுகள் தொடர்ந்து தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-24T08:06:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pillayan-s-remand-extended-court-oder-1784878680"></link>
            <id>https://canadamirror.com/article/pillayan-s-remand-extended-court-oder-1784878680</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, பிள்ளையானை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (24) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7d6d9c5-1a2f-4f34-9a67-a31598493a8b/26-6a631659b4795.webp' /></p><p>
</p><p>
ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கில், சிவநேசதுரை சந்திரகாந்தன் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
இன்றைய தினம் (24) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T07:36:31+00:00</updated>
        </entry>
    </feed>
