<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-24T07:44:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pillayan-s-remand-extended-court-oder-1784878680"></link>
            <id>https://canadamirror.com/article/pillayan-s-remand-extended-court-oder-1784878680</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, பிள்ளையானை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (24) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7d6d9c5-1a2f-4f34-9a67-a31598493a8b/26-6a631659b4795.webp' /></p><p>
</p><p>
ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கில், சிவநேசதுரை சந்திரகாந்தன் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
இன்றைய தினம் (24) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T07:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க அதிபருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது; ஈரானிய ஆலோசகர் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-has-gone-mad-mojtaba-khamenei-advisor-warns-1784878317"></link>
            <id>https://canadamirror.com/article/trump-has-gone-mad-mojtaba-khamenei-advisor-warns-1784878317</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கியப் பாலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்போவதாக ட்ரம்ப் விடுத்தஎச்சரிக்கைக்கு, ஈரானிய உயர்மட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கியப் பாலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்போவதாக ட்ரம்ப் விடுத்தஎச்சரிக்கைக்கு, ஈரானிய உயர்மட்ட தலைவரின் ஆலோசகர்கள் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர். </p><p>

அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடர்ந்தால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நலன்சார்ந்த உட்கட்டமைப்புகள் மற்றும் மின் நிலையங்கள் மீது ஈரானிய ஏவுகணைகள் பாயும் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f91dbd0-d204-4920-a671-b8c176dfd227/26-6a6314eef00b1.webp' /></p><h2>பிரமையில் வாழும் நபரின் பேச்சுகள்</h2><p>
</p><p>
அமெரிக்க அதிபரின் அச்சுறுத்தல்களை “பிரமையில் வாழும் நபரின் பேச்சுகள்” என வர்ணித்துள்ள ஈரானிய உச்ச தலைவரின் ஆலோசகர் மோஹ்சன் ரெசாய், ஈரான் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பன்மடங்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். </p><p>

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானியப் படைகள் தொடர்ந்து தங்களின் இறையாண்மையை நிலைநாட்டும் என்றும், அமெரிக்காவின் எந்தவொரு தவறான கணக்கீடும் அவர்களுக்குப் பெரும் இழப்பையே ஏற்படுத்தும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
கடந்த சில நாட்களாக ஈரானின் தெற்குப் மாகாணங்களிலுள்ள முக்கியப் பாலங்கள், மின் நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. </p><p>

இதன் காரணமாகப் போக்குவரத்துத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் சூழலில், பதிலடி தாக்குதலாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகளின் தளங்கள் மீதும் ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையே முந்தைய அமைதி உடன்படிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், அமெரிக்கா தனது தாக்குதல் எல்லையை விரிவாக்க முயல்வது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் மீள முடியாத முழு அளவிலான போருக்குள் தள்ளும் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T07:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய இராஜாங்க அமைச்சராக இலங்கை தமிழ்ப் பெண் உமா குமரன்; முதல் வரலாற்றுச் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lanka-tamils-uma-kumaran-uk-new-cabinet-minister-1784871247"></link>
            <id>https://canadamirror.com/article/lanka-tamils-uma-kumaran-uk-new-cabinet-minister-1784871247</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை புலமபெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில் (Foreign, Commonwealth and Development Office) வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54d46103-9b72-4b51-bd41-d15ac82db539/26-6a62f95118016.webp' /></p><h2>பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண்</h2><p> </p><p>இதன் மூலம் பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
</p><p>
இலங்கையில் உள்நாட்டுப் போரின் காரணமாக பிரித்தானியாவில் குடியேறிய தமிழ் பெற்றோருக்கு பிறந்த உமா குமரன், அண்மைய பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.</p><p> தற்போது அமைச்சுப் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து, தனது சமூக ஊடகப் பதிவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அவர், “எனது பெற்றோருக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்த பிரித்தானியா, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வாய்ப்பை வழங்கியது.</p><p> இன்று அந்த நாட்டிற்கு அமைச்சராக சேவையாற்றுவது பெருமைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.


பிரித்தானிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைப்பில் இராஜாங்க அமைச்சர் பதவி, நாடாளுமன்ற துணைச் செயலாளர் பதவியை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p> அமைச்சரவை அமைச்சருக்கு அடுத்த முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் ஒன்றாக இந்தப் பதவி விளங்குகிறது.

இதற்கு முன்னர் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜயவர்தன, லிஸ் ட்ரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்.</p><p>

உமா குமரனின் நியமனம், பிரித்தானிய அரசியலில் இலங்கைத் தமிழ் சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கும், அந்நாட்டின் பல்வகைமை மற்றும் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் முக்கிய முன்னேற்றமாகவும் அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T07:22:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் புதிய வரிக்கு எதிர்ப்பு அலை ; அமெரிக்க முடிவுக்கு கூட்டணி நாடுகள் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/opposition-to-trump-s-new-tax-allies-us-decision-1784877493"></link>
            <id>https://canadamirror.com/article/opposition-to-trump-s-new-tax-allies-us-decision-1784877493</id>
            <summary type="text">இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்க வரிகளை விதித்துள்ள நிலையில், அதற்கு ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் அதிருப்தி த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்க வரிகளை விதித்துள்ள நிலையில், அதற்கு ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.</p><p>

ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர், அமெரிக்காவின் புதிய சுங்க வரி நடவடிக்கை குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/627bafe9-c33d-4343-b9e2-f6db07a909a8/26-6a6311b6ab49f.webp' /></p><p>அதேவேளை, அவுஸ்திரேலியாவின் வர்த்தக அமைச்சர், தமது நாட்டிற்கு 12.5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டிருப்பது முற்றிலும் நியாயமற்றது என விமர்சித்துள்ளார்.
</p><p>
60 நாடுகளுக்கு புதிய சுங்க வரிகளை அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளுக்கு 10 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கையுடன் இணைந்து 10 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, கனடா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளும் அடங்குகின்றன.</p><p>

இந்த புதிய சுங்க வரிகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட நாடுகள் தொடர்ந்து தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-24T07:18:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைப் பராமரிப்புப் பணம் வழங்க மறுப்பு: தந்தைக்கு தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/father-ordered-to-spend-time-behind-bars-1784875118"></link>
            <id>https://canadamirror.com/article/father-ordered-to-spend-time-behind-bars-1784875118</id>
            <summary type="text">&amp;nbsp;தனது குழந்தைப் பராமரிப்பிற்காக வழங்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான டொலர்கள் தொகையை வழங்கத் தவறிய தந்தை ஒருவருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தனது குழந்தைப் பராமரிப்பிற்காக வழங்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான டொலர்கள் தொகையை வழங்கத் தவறிய தந்தை ஒருவருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகப் பிரசுரத் தடையின் கீழ் "திரு. M" (Mr. M) எனக் குறிப்பிடப்படும் அந்த நபர், நீதிமன்ற விசாரணையின் போது மொத்தமாக 37,312.54 டொலர்களை நிலுவையாக வைத்திருக்க வேண்டியிருந்தது.
</p><p>குழந்தையின் தாயாரான "திருமதி. C" (Ms. C) மற்றும் பிரதிவாதியான திரு. M ஆகிய இருவரும் சட்டப்பூர்வமாகத் திருமண பந்தத்தில் இணையவில்லை. குழந்தை பிறந்த நாள் முதல் வளர்ப்புச் செலவுகள் முழுவதையும் தாயாரே கவனித்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5775e50-e1ad-4e9a-b832-c3af6d93710e/26-6a63086fc2aa8.webp' /></p><p>
ஆண்டிற்கு 297,700 டொலர்கள் வருமானம் ஈட்டும் திரு. M, குழந்தைப் பராமரிப்பிற்காக மாதம் 2,500 டொலர்களையும், நிலுவைத் தொகையாக 16,429 டொலர்களையும் வழங்குவதாகச் சட்டப்பூர்வ ஒப்பந்தம் செய்தார்.</p><p>
நிலுவைத் தொகை 50,000 டொலர்களை நெருங்கியதையடுத்து, மாதம் 7,500 டொலர்கள் செலுத்த வேண்டும் எனவும், தவறினால் ஒவ்வொரு தவறும் தவறும்போதும் 3 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>எனினும், அவர் இருமுறை மட்டுமே பணத்தை வழங்கிவிட்டு, அதன் பின்னர் பணத்தைச் செலுத்தத் தவறியுள்ளார். </p><p>இதனால் தனக்குக் கடும் கடன்பாடும், வாழ்க்கைத் தரத்தில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதாகத் தாயார் நீதிமன்றத்தில் விவரித்தார்.</p><p>
தனக்கு போதிய வருமானம் இல்லை எனவும், நிதி நெருக்கடி நிலவுவதாகவும் தந்தை சார்பில் வாதிடப்பட்டது. </p><p>மேலும், தனது நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 52,000 டொலர்களைத் தன்னால் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.
</p><p>ஆனால், அந்த வங்கிக் கணக்கிலிருந்து 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏராளமான ஆடம்பரச் செலவுகள் செய்யப்பட்டுள்ளதை நீதிபதி மைக்கா ரான்கின் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T07:15:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ICC தலைமை சட்டத்தரணிக்கு நெருக்கடி ; கரீம் கான் பதவி குறித்து தீர்மானிக்கும் வாக்கெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/vote-to-decide-karim-khan-s-position-1784872813"></link>
            <id>https://canadamirror.com/article/vote-to-decide-karim-khan-s-position-1784872813</id>
            <summary type="text">சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை சட்டத்தரணி கரீம் கானை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது தொடர்பான முக்கிய வாக்கெடுப்பு இன்று (24) நிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை சட்டத்தரணி கரீம் கானை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது தொடர்பான முக்கிய வாக்கெடுப்பு இன்று (24) நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
</p><p>
பிரிட்டிஷ் சட்டத்தரணியான கரீம் கான், தனது பெண் உதவியாளரிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) வெளியிட்ட அறிக்கைகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efdcaa8f-6dd1-4d50-80c6-6f6eb7908c0b/26-6a62ff6ee3dc4.webp' /></p><p>எனினும், தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைப்பாடுகளை கரீம் கான் முழுமையாக மறுத்துள்ளார்.
</p><p>
இந்நிலையில், அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக, நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கரீம் கான் நேரடியாக கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் பங்கேற்கும் இந்த வாக்கெடுப்பு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இடம்பெறாத முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
</p><p>
கரீம் கான் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விவாதங்களை முன்னெடுத்து, அவர் தொடர்ந்தும் தலைமை சட்டத்தரணி பதவியில் நீடிக்க வேண்டுமா அல்லது பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டுமா என்பது குறித்து உலக நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களித்து தீர்மானிக்கவுள்ளனர்.
</p><p>
இந்த வாக்கெடுப்பின் முடிவு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதன் நம்பகத்தன்மை தொடர்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-24T06:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பதற்றம் எதிரொலி ; ரூ.111 இலட்சம் கோடி இராணுவத் திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-echo-us-appro-111-lakh-crore-military-project-1784872099"></link>
            <id>https://canadamirror.com/article/iran-echo-us-appro-111-lakh-crore-military-project-1784872099</id>
            <summary type="text">ஈரானுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் போர் மற்றும் சர்வதேச பதற்றங்களுக்கு மத்தியில், தனது இராணுவ பலத்தை அதிகரிக்க 111 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பிரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் போர் மற்றும் சர்வதேச பதற்றங்களுக்கு மத்தியில், தனது இராணுவ பலத்தை அதிகரிக்க 111 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட இராணுவ வரவுசெலவுத்திட்ட சட்டமூலத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>


இதனால் அமெரிக்காவிற்கு தினசரி சராசரியாக 8,000 கோடி வரை செலவாவதாகவும், இதுவரை மொத்தம் 3 இலட்சம் கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் அதிநவீன ஏவுகணைகள் மற்றும் ஆயுத இருப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இராணுவப் பலத்தை மீட்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தில் சில முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc0d502b-cd64-4819-b9d2-fd708f6cafaa/26-6a62fca42bd8a.webp' /></p><p>இஸ்ரேலின் உலகப்புகழ் பெற்ற 'அயர்ன் டோம்' பாணியில், அமெரிக்காவைப் பாதுகாக்க 'கோல்டன் டோம்' என்ற புதிய வான்வழி ஏவுகணை தடுப்பு அமைப்பை உருவாக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
</p><p>


அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே இராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
</p><p>


அத்துடன், அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு 5 விகிதம் முதல் 7 விகிதம் வரை ஊதிய உயர்வு வழங்கவும் இதில் முன்மொழியப்பட்டுள்ளது.
</p><p>


தற்போது பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெற்றுள்ள இந்த சட்டமூலம், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T05:48:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-who-killed-top-democrat-her-husband-sentenced-1784870768"></link>
            <id>https://canadamirror.com/article/man-who-killed-top-democrat-her-husband-sentenced-1784870768</id>
            <summary type="text">அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில முன்னாள் சபாநாயகரும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் மார்க் ஹார்ட்மேன் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில முன்னாள் சபாநாயகரும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் மார்க் ஹார்ட்மேன் ஆகியோரைப் படுகொலை செய்த வழக்கில், குற்றவாளியான வான்ஸ் போல்டருக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் மேலதிகமாக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கின் இறுதி விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், துப்பாக்கிச் சூட்டில் தப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தில் உணர்ச்சிப்பூர்வமாக சாட்சியளித்தனர்.
</p><p>கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று அதிகாலை 3:30 மணியளவில், பொலிஸ் அதிகாரி போல முகமூடி மற்றும் சீருடை அணிந்து வந்த குற்றவாளி போல்டர், மெலிசா ஹார்ட்மேனின் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59fab932-9eea-4f5d-bd33-d064d2a424ff/26-6a62f7722805c.webp' /></p><p> </p><p>கதவைத் திறந்த கணவர் மார்க்கை சுட்டு வீழ்த்திய பின், வீட்டிற்குள் புகுந்து மாடிக்கு ஓடிய நாடாளுமன்ற உறுப்பினர் மெலிசாவையும் சுட்டுக்கொன்றார். </p><p>அவர்களின் செல்லப் பிராணியான நாயையும் அவர் விட்டுவைக்கவில்லை.
இதற்கு முன்பாக, அதே இரவில் மாநில செனட்டர் ஜான் ஹோஃப்மேன் மற்றும் அவரது மனைவி யுவெட் ஆகியோரின் வீட்டிற்குச் சென்று அவர்களைச் சுட்டுப் படுகாயப்படுத்தியுள்ளார்.
மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் அவர் சென்றுள்ளார். </p><p>இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், மாநில வரலாற்றிலேயே மிகப்பெரிய பொலிஸ் தேடுதல் வேட்டைக்கு வழிவகுத்தது.
மரண தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக, குற்றவாளி போல்டர் ஜூன் மாதத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார். </p><p>இதனைத் தொடர்ந்து, அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜான் ஆர். டன்ஹெய்ம் தீர்ப்பளிக்கும் போது:
"எனது பல ஆண்டுகால நீதித்துறை அனுபவத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகளை விசாரித்த பிறகு நான் வழங்கும் மிக நீண்ட தண்டனை இதுவாகும்.</p><p> ஆனால் இந்தத் தண்டனை அவருக்கு மிகவும் தகுதியானது தான்" எனக் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தில் சாட்சியளித்த மெலிசாவின் மகள் சோஃபி மற்றும் மகன் காலின் ஆகியோர், தங்கள் பெற்றோர் மற்றும் செல்லப் பிராணியை இழந்து வாழும் வேதனையை விவரித்து கண்ணீர் விட்டனர்.
</p><p>செனட்டர் ஜான் ஹோஃப்மேன் மற்றும் அவரது மனைவி கூறுகையில், அந்த கொடூர இரவுக்குப் பிறகு தங்கள் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டதாகவும், பாதுகாப்பிற்காக வீட்டின் கதவுகளை இரும்பால் மாற்றியிருப்பதாகவும், ஒவ்வொரு நாளும் பயத்துடனேயே வாழ்வதாகவும் குறிப்பிட்டனர்.
</p><p>அதேவேளை, வரி செலுத்தும் மக்களின் பணத்தில் குற்றவாளிக்கு ஆயுள் முழுவதும் உணவு அளிப்பதற்குப் பதிலாக அவருக்கு மரண தண்டனை வழங்கப்படாதது குறித்து மார்க் ஹார்ட்மேனின் குடும்பத்தினர் கடும் அதிருப்தி வெளியிட்டனர்.</p><p>
நீதிமன்றத்தில் பேசிய குற்றவாளி போல்டர், "என்னால் இழப்பு, வலி, சோகம் மற்றும் தனிமையைச் சந்தித்த ஒவ்வொரு நபரிடமும் நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T05:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றத்தால் 100 அமெரிக்க டொலரை தாண்டிய மசகு எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/oil-prices-cross-100-on-middle-east-tensions-1784868688"></link>
            <id>https://canadamirror.com/article/oil-prices-cross-100-on-middle-east-tensions-1784868688</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இரு மாத வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இரு மாத வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.</p><p>இதன் காரணமாக, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலரைக் கடந்து அதிகரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f83ee7e6-9e70-4493-8cb6-90bbb35a2385/26-6a62ef525c3c9.webp' /></p><p>இதன்படி, சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100.60 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோன்று, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் விலையும் அதிகரித்து 92.13 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-24T04:52:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் புதிய வரி கொள்கை அமுல் ; இலங்கை உள்ளிட்ட நாடுகளின் 10% வரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-new-tax-policy-come-effect-10-tax-sri-lankan-1784862532"></link>
            <id>https://canadamirror.com/article/trump-new-tax-policy-come-effect-10-tax-sri-lankan-1784862532</id>
            <summary type="text">அமெரிக்காவின் தற்காலிக 10% உலகளாவிய இறக்குமதி வரி நடைமுறை காலாவதியாகும் நிலையில், இலங்கை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வர்த்தக கூட்டாளி நாடுகளிலிருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தற்காலிக 10% உலகளாவிய இறக்குமதி வரி நடைமுறை காலாவதியாகும் நிலையில், இலங்கை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வர்த்தக கூட்டாளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.
</p><p>
கட்டாய உழைப்புத் தடைச் சட்டங்கள் (Forced Labor Laws) போதுமான அளவில் அமுல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அமெரிக்காவின் வர்த்தக நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய வரி நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c13edde8-309c-44c4-bc0e-ce7c561b6d94/26-6a62d7461d1c2.webp' /></p><p>புதிய அறிவிப்பின்படி, இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளது. </p><p>இதேபோன்று ஆர்ஜென்டினா, பங்களாதேஷ், பிரித்தானியா, கம்போடியா, கனடா, ஈக்வடோர், குவாத்தமாலா, ஒண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட பல நாடுகளின் பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சீனா உள்ளிட்ட 38 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 12.5% இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது. அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மொத்தம் 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்களுக்கும் இந்த புதிய வரி நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் 10% முதல் 50% வரையிலான "பரஸ்பர இறக்குமதி வரிகள்" (Reciprocal Tariffs) அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. </p><p>எனினும், அந்த வரி நடைமுறையை அமெரிக்க உயர்நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் செல்லுபடியாகாது எனத் தீர்ப்பளித்து ரத்து செய்தது.

அதனைத் தொடர்ந்து, இடைக்கால நடவடிக்கையாக 150 நாட்கள் காலத்திற்கு அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக 10% தற்காலிக இறக்குமதி வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். </p><p>அந்த தற்காலிக வரி நடைமுறை இன்று நிறைவடையும் நிலையில், அதற்குப் பதிலாக நாடுவாரியாக புதிய வரி அமைப்பை அமெரிக்க நிர்வாகம் அமுல்படுத்தியுள்ளது.</p><p>

இந்த புதிய நடவடிக்கை, அமெரிக்க உற்பத்தித் துறையை வலுப்படுத்துதல், வர்த்தகப் பற்றாக்குறையை கட்டுப்படுத்துதல் மற்றும் "உலகளாவிய வரி" தொடர்பான தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய பொருளாதாரக் கொள்கை முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
</p><p>
இதனிடையே, புதிய இறக்குமதி வரிகள் அமுலுக்கு வந்ததன் பின்னர் இலங்கை உள்ளிட்ட பல ஏற்றுமதி நாடுகளின் ஆடை, விவசாயம் மற்றும் உற்பத்திப் பொருட்கள் அமெரிக்க சந்தையில் எந்தளவு பாதிப்பை எதிர்கொள்ளும் என்பது குறித்து சர்வதேச வர்த்தக வட்டாரங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-24T03:19:28+00:00</updated>
        </entry>
    </feed>
