<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-18T05:35:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ராணுவத்தின் எஃப்-16 ரக போர் விமானத்திற்கு நேர்ந்த கதி ; பயிற்சியின் போது விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/what-happened-to-us-military-s-f-16-fighter-jet-1789702501"></link>
            <id>https://canadamirror.com/article/what-happened-to-us-military-s-f-16-fighter-jet-1789702501</id>
            <summary type="text">டெக்சாஸை தளமாக கொண்ட அமெரிக்க ராணுவத்தின் எஃப்-16 ரக போர் விமானம் ஒன்று, மிச்சிகனில் நடந்த பயிற்சி நடவடிக்கையின் போது விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெக்சாஸை தளமாக கொண்ட அமெரிக்க ராணுவத்தின் எஃப்-16 ரக போர் விமானம் ஒன்று, மிச்சிகனில் நடந்த பயிற்சி நடவடிக்கையின் போது விபத்துக்குள்ளானது. </p><p>விபத்தைத் தொடர்ந்து போர் விமானத்தில் இருந்த விமானி வெளியேற முடிந்ததாக, அந்த விமானத்திற்கு சொந்தமான பிரிவு தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92766bc1-b9c0-4100-98b2-b6fde6121ee7/26-6aacb1672d139.webp' /></p><p>

"149-ஆவது ஃபைட்டர் விங்கிற்கு ஒதுக்கப்பட்ட டெக்சாஸ் ஏர் நேஷனல் கார்டின் எஃப்-16 ஃபைட்டிங் ஃபால்கன் விமானம், டிராவர்ஸ் சிட்டி அருகே வழக்கமான பயிற்சி பணியின் போது விபத்துக்குள்ளானது," என்று அந்தப் பிரிவு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>
"விமானி விமானத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறினார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று அது மேலும் விவரங்கள் அளிக்காமல் தெரிவித்தது.
</p><p>
மேலும், அந்த வடக்கு மாகாணத்தின் இரண்டு அமெரிக்க செனட்டர்களில் ஒருவரான கேரி பீட்டர்ஸ், பேசும் போது, "டிராவர்ஸ் சிட்டிக்கு அருகே நடந்த விமான விபத்து குறித்து நான் அறிந்திருக்கிறேன். </p><p>இந்தச் சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற நாங்கள் பணியாற்றி வருவதால், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்" என்றும் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-09-18T03:35:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவீடன் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/opposition-wins-swedish-parliamentary-election-1789691010"></link>
            <id>https://canadamirror.com/article/opposition-wins-swedish-parliamentary-election-1789691010</id>
            <summary type="text">சுவீடனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவீடனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><p>

சுவீடன் நாடாளுமன்றமான ரிக்ஸ்டாகில் உள்ள 349 இடங்களுக்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.</p><p> வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், முன்னாள் பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 176 இடங்களை கைப்பற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6df895aa-59ea-4f5a-838f-454dfa367763/26-6aac848469c25.webp' /></p><p> </p><p>பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனின் கூட்டணிக்கு 173 இடங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் எதிர்க்கட்சி கூட்டணி மூன்று இடங்கள் வித்தியாசத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
</p><p>
இரு தரப்பினருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமாக இருந்த நிலையில், இறுதி எண்ணிக்கையில் சுமார் 50,359 வாக்குகள் மட்டுமே வித்தியாசமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பிரதமர் கிறிஸ்டர்சன் தனது ராஜினாமாவை அறிவித்ததுடன், நாடாளுமன்ற சபாநாயகரிடம் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தையும் சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாடாளுமன்ற சபாநாயகர் முன்னெடுக்க உள்ளார். அதன்படி, கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.</p><p>

எனினும், தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும், அதில் இடம்பெறும் கட்சிகளுக்கு இடையிலான கொள்கை வேறுபாடுகள் காரணமாக புதிய அரசாங்கத்தை அமைப்பதில் பேச்சுவார்த்தைகள் சவாலாக அமையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

முன்னாள் பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி தனிப்பட்ட கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை ஆண்டர்சன் முன்னெடுக்க உள்ளார்.
</p><p>
இதனிடையே, புதிய பிரதமர் தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பு செப்டெம்பர் 29ஆம் திகதிக்கு முன்னதாக நடைபெற வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> அதுவரை தற்போதைய அமைச்சரவை புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை தொடர்ந்தும் பணியாற்றும்.</p>]]></content>
            <updated>2026-09-18T00:25:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னாப்பிரிக்காவில் தொடரும் கொடூரம் ; நிர்வாண நிலையில் அடுத்தடுத்து 9 பெண்களின் சடலங்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bodies-of-9-women-recovered-in-a-naked-state-1789677130"></link>
            <id>https://canadamirror.com/article/bodies-of-9-women-recovered-in-a-naked-state-1789677130</id>
            <summary type="text">தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை காவல்துறை மீட்டுள்ளது.</p><p>

நேற்று (17) எகூர்ஹுலேனி (Ekurhuleni) நகராட்சிக்குட்பட்ட கெம்ப்டன் பார்க் (Kempton Park) பகுதியில் ஒன்பதாவது பெண்ணின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையால் அந்தப்பகுதி முடக்கப்பட்டுள்ளது (lockdown).</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5b621b8-9541-44ca-b96c-0d7c1abdd0d1/26-6aac4e4c6d983.webp' /></p><p>குறித்தப் பகுதியில் இதுபோன்ற நிர்வாணக் கோலத்திலான மூன்று உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்தத் தொடர் கொலைகள், இவை ஒரு தொடர் கொலையாளியால் (serial killer) நடத்தப்பட்டிருக்கலாமோ என்ற பொதுமக்களின் பீதியை அதிகரித்துள்ளன.
</p><p>
முதல் எட்டு படுகொலைகளில் சில ஒற்றுமைகள் "மிகவும் கவலை அளிக்கும் வகையில்" இருப்பதாக காவல்துறை முன்னதாக எச்சரித்திருந்தது.
</p><p>
இந்தநிலையில், "பல சந்தேக நபர்கள் அல்லது தனித்தனி குற்றவாளிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட அனைத்து கோணங்களிலும் விசாரணையாளர்கள் விசாரித்து வருகின்றனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இதுவரை கண்டெடுக்கப்பட்ட உடலங்கள் அனைத்தும் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட பெண்களுடையவை ஆகும்.

அனைத்து உடல்களும் நிர்வாணமாகவோ அல்லது அரைநிர்வாணமாகவோ கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>சில உடல்களில் ஒரே மாதிரியான காயங்களும் காணப்படுகின்றன.

முதல் உடல் கடந்த ஜூலை 17 அன்று நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e88cc9cd-e29b-4c22-b088-6b720bdc861f/26-6aac4e4d2416a.webp' /></p><p>தென்னாப்பிரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சத்தில் உள்ளதை இந்தக் கொலைகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.</p><p>

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் அதிக பெண் படுகொலை (femicide) விகிதங்களைக் கொண்ட நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாக கருதப்படுகிறது.

இதன்படி 2026, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் தென்னாப்பிரிக்க காவல்துறை 9,782 வன்புணர்வு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
</p><p>
கடந்த ஆண்டு நவம்பரில், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பெண்படுகொலைகளை தென்னாப்பிரிக்காவின் தேசிய பேரிடர் முகாமைத்துவ மையம் தேசிய பேரிடராக அறிவித்தது.
</p><p>
இந்தநிலையில் தற்போதைய தொடர் கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உதவும் தகவல்களுக்கு 400,000 தென்னாப்பிரிக்க ராண்ட் ($25,000) சன்மானம் வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன் குறித்த பிரதேச பெண்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T00:13:30+00:00</updated>
        </entry>
    </feed>
