<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-19T05:30:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவு சென்ற பிரிட்டிஷ் தம்பதி உலங்கு வானூர்தி விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/honeymooning-uk-couple-killed-helicopter-crash-1787115636"></link>
            <id>https://canadamirror.com/article/honeymooning-uk-couple-killed-helicopter-crash-1787115636</id>
            <summary type="text">&amp;nbsp; தேனிலவு சென்ற இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது.

கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தேனிலவு சென்ற இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
கிறீஸ் சிஃப்னோஸ் தீவில் நேற்றுத் திங்கள்கிழமை நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், 

புதுமணத் தம்பதிகளான அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபர்ட் ஆகியோர் தங்களது தேனிலவுக்காக கிரீஸில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b2be035-9e04-48b5-947c-e7d1eec7e723/26-6a8538761fc0d.webp' /></p><h2>தேனிலவுக்காக கிரீஸில் இருந்ததாக அடையாளம்</h2><p>
</p><p>

தனியார் உலங்கு வானூர்தி தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த இருவரும் மற்றும் அவர்களது கிரேக்க நாட்டவரான விமானியும் உயிரிழந்தனர்.
</p><p>
அந்தத் தம்பதியினர், ஏதென்ஸுக்கு அருகிலுள்ள மார்கோபோலோ கிராமத்திலிருந்து பிரபலமான விடுமுறைத் தீவுக்கு ஹெலிகாப்டரில் சென்றதாகக் கூறப்படுகிறது.
</p><p>
கிரீஸின் விமானப் பாதுகாப்பு ஆணையம், இந்த விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும், அதன் புலனாய்வாளர்கள் ஆதாரங்களைச் சேகரிக்கவும் சாட்சிகளிடம் பேசவும் செவ்வாயன்று சம்பவ இடத்திற்குச் செல்லவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T04:58:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் ; துபாய் மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missile-attack-threat-warning-to-dubai-residents-1787089153"></link>
            <id>https://canadamirror.com/article/missile-attack-threat-warning-to-dubai-residents-1787089153</id>
            <summary type="text">ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதை, அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்ததை அடுத்து, துபாய் மக்களுக்கு எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதை, அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்ததை அடுத்து, துபாய் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p>மேற்காசிய நாடான ஈரான் மீது அணு ஆயுத குற்றச்சாட்டின் பேரில், அமெரிக்க - இஸ்ரேலிய படைகள், கடந்த பிப்ரவரி இறுதியில் போரை தொடங்கின.</p><p> இந்த போருக்கு பதிலடி தரும் வகையில் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்கு கப்பல்களின் போக்குவரத்தை முடக்கியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d7f9f92-3618-4ece-932b-bc4ef2729fe1/26-6a84d10363270.webp' /></p><p>இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்தன. </p><p>இதையடுத்து, ஈரான் - அமெரிக்கா இடையே, கடந்த ஜூனில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது நேற்று முன்தினம் காலாவதியானது.</p><p>இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சின் வான் பாதுகாப்பு அமைப்பு, தங்கள் நாட்டுக்கு ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதை நேற்று கண்டறிந்தது.
</p><p>

இதையடுத்து, துபாய் மற்றும் எமிரேட்சின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி, தேசிய அவசரநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>

எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நிமிடங்களில், துபாயில் சைரன் ஒலிகளும், பலத்த வெடிச்சத்தங்களும் கேட்டன. </p><p>ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் உறுதி செய்தது. ஈரான் ஏவிய இரு ஏவுகணைகளும் கடலில் சுட்டு வீழ்த்தப்பட்டன.</p>]]></content>
            <updated>2026-08-19T01:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிமலையில் ஏறியபோது மின்னல் தாக்கி சுற்றுலா பயணி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tourist-killed-by-lightning-while-climbing-volcano-1787097456"></link>
            <id>https://canadamirror.com/article/tourist-killed-by-lightning-while-climbing-volcano-1787097456</id>
            <summary type="text">இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள மவுண்ட் எட்னா எரிமலையில் மின்னல் தாக்கியதில் 29 வயதுடைய அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள மவுண்ட் எட்னா எரிமலையில் மின்னல் தாக்கியதில் 29 வயதுடைய அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை எரிமலையில் நடைபயணம் மேற்கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட இடியுடன் கூடிய மழையின் போது அவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளானதாக இத்தாலிய தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb0c8be4-eb8d-4ff3-93bb-f05413816893/26-6a84f1725a94b.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து மீட்புக் குழுவினர் ஹெலிகொப்டர் மூலம் சென்று அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். </p><p>எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

சம்பவம் இடம்பெற்ற பகுதி எரிமலையின் அண்மைய செயற்பாடுகள் காரணமாக பார்வையாளர்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> மவுண்ட் எட்னாவில் அண்மைக்காலமாக எரிமலைச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-18T23:57:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக கப்பல் போக்குவரத்தில் புதிய மாற்றம் ; முக்கியத்துவம் பெறும் வடக்கு கடல் வழித்தடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/northern-sea-gaining-importance-global-shipping-1787096408"></link>
            <id>https://canadamirror.com/article/northern-sea-gaining-importance-global-shipping-1787096408</id>
            <summary type="text">உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு திட்டங்கள் காரணமாக வடக்கு கடல் வழித்தடத்தின் (Northern Sea Ro...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு திட்டங்கள் காரணமாக வடக்கு கடல் வழித்தடத்தின் (Northern Sea Route) மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ரஷ்யாவின் ஆர்டிக் கடற்கரையில் பாரண்ட்ஸ் கடல் முதல் பெரிங் நீரிணை வரை சுமார் 5,600 கிலோமீற்றர் நீளத்தில் அமைந்துள்ள இந்த வழித்தடம், காலநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகி வருவதால் முன்னைய காலங்களைவிட அதிகமாகப் பயன்படுத்தக்கூடியதாக மாறியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6da98b3a-47aa-4e58-9c87-5fed706ad6e2/26-6a84ed5a1ca38.webp' /></p><p>செங்கடல் தாக்குதல்கள், சூயஸ் கால்வாய் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட முக்கிய கடல்வழிகளில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் காரணமாக, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு வடக்கு கடல் வழித்தடம் மாற்றுப் பாதையாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p>

சீனாவிலிருந்து ஐரோப்பாவை சென்றடைய இந்த வழித்தடம் சுமார் 30 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் நிலையில், சூயஸ் கால்வாய் வழியாக சுமார் 45 நாட்களும், நன்னம்பிக்கை முனை வழியாக சுமார் 60 நாட்களும் ஆகின்றன.
</p><p>
எனினும், வடக்கு கடல் வழித்தடம் பொதுவாக ஜூலை முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் மட்டுமே செயல்படுவதுடன், சூயஸ் கால்வாயுடன் ஒப்பிடுகையில் இதன் சரக்கு போக்குவரத்து அளவு இன்னும் குறைவாகவே காணப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-18T23:40:27+00:00</updated>
        </entry>
    </feed>
