<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-15T06:32:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலங்கார செலவுகளுக்காக பல கோடி பணத்தை வீணடித்த நெதன்யாகு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-pm-netanyahu-grooming-costs-470-000-dollar-1789453946"></link>
            <id>https://canadamirror.com/article/israel-pm-netanyahu-grooming-costs-470-000-dollar-1789453946</id>
            <summary type="text">&amp;nbsp; அலங்கார செலவுகளுக்காக பல கோடி அரச பணத்தை இஸ்‌ரேல் பிரதமர் நெதன்யாகு வீணடித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இஸ்ரேலிய பிரதமர்களின் தலைமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அலங்கார செலவுகளுக்காக பல கோடி அரச பணத்தை இஸ்‌ரேல் பிரதமர் நெதன்யாகு வீணடித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
</p><p>
இஸ்ரேலிய பிரதமர்களின் தலைமுடி அலங்காரம், ஒப்பனை மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவ செலவுகளுக்காக 2019 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் சுமார் 4,70,000 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba21e8de-2480-4372-bdbc-10604f6e5379/26-6aa8e67c50b67.webp' /></p><h2>90 சதவீதத்தை தற்போதைய பிரதமர் பெஞ்சமின்</h2><p>

தகவல் அறியும் உரிமை அமைப்பால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகே இந்த விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி ஒட்டுமொத்த ஒப்பனைச் செலவில் சுமார் 90 சதவீதத்தை தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோரே பயன்படுத்தியுள்ளனர்.</p><p>

2022-ஆம் ஆண்டில் பென்னட் மற்றும் லாபிட் பிரதமர்களாக இருந்தபோது ஒப்பனைச் செலவு சுமார் 84,000 ஷேகல்களாக (ரூ. 26.34 லட்சம்) இருந்த நிலையில், 2023-இல் நெதன்யாகு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அது 3,11,000 ஷேகல்களாக (ரூ. 97.52 லட்சம்) அதிகரித்தது.
</p><p>
2023 ஒக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்த மாதத்தில் மட்டும் நெதன்யாகுவின் தலைமுடி அலங்காரத்திற்காக சுமார் 77,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
</p><p>
2025 பெப்ரவரியில் நெதன்யாகு வோஷிங்டனுக்கு மேற்கொண்ட 4 நாள் பயணத்தின் போது ஒப்பனைக்காக மட்டும் சுமார் 13,500 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

ஆடைகள் மற்றும் உபசரிப்பு தொடர்பான பிரதிநிதித்துவச் செலவுகளாக நெதன்யாகு 134,000 டொலர்களைப் பதிவு செய்துள்ளார்.
ஆனால், பென்னட் 19,000 டொலர்களையும், லாபிட் 2,600 டொலர்களையும் மட்டுமே செலவிட்டுள்ளனர்.
</p><p>
அரசுப் பணம் என்பது தனிப்பட்ட நிதி அல்ல என்பதை அதிகாரிகள் உணர வேண்டும் எனத் தகவல் அறியும் உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ளன.

 அதேசமயம் , "தேசிய பாதுகாப்பு" காரணங்களைக் கூறி ஒப்பனைக் கலைஞர்களின் பெயர்களை அரசு இன்னும் மறைத்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-15T06:29:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துருக்கியில் தரையிறங்கும்போது ஜெட் விமானம் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/jet-crashes-while-landing-in-turkey-istanbul-1789451425"></link>
            <id>https://canadamirror.com/article/jet-crashes-while-landing-in-turkey-istanbul-1789451425</id>
            <summary type="text">&amp;nbsp; துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து லிபியாவின் மிஸ்ராதா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற தனியார் ஜெட் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து லிபியாவின் மிஸ்ராதா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற தனியார் ஜெட் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகள் மற்றும் ஒரு விமானப் பணியாளர் என மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
</p><p>

Cessna Citation Latitude ரகத்தைச் சேர்ந்த குறித்த தனியார் விமானம், தரையிறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகியதைத் தொடர்ந்து தீப்பிடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1c0b61-7bb5-42f8-8f0c-7cefc90631e3/26-6aa8dca367da6.webp' /></p><p>

விமான நிலைய அவசர தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
</p><p>துருக்கி ஊடகங்களின் தகவலின்படி, இந்த தனியார் ஜெட் துருக்கியின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Akfen Holding நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான பிரபல தொழிலதிபர் Hamdi Akın என்பவருக்கு சொந்தமானதாகும்.</p><p>

TC-AKF என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட இந்த விமானம் செப்டம்பர் 14 ஆம் திகதி அதிகாலை சுமார் 5.45 மணியளவில் இஸ்தான்புல் அதாதுர்க் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக லிபியா நோக்கிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T05:47:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உகரைன் அதிரடி; புடினின் முதன்மை ஜெனரல் கொல்லப்பட்டதாகத் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/putin-s-top-general-has-been-killed-ukraine-attack-1789450911"></link>
            <id>https://canadamirror.com/article/putin-s-top-general-has-been-killed-ukraine-attack-1789450911</id>
            <summary type="text">&amp;nbsp; உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் நடத்திய அதிநவீன ஏவுகணைத் தாக்குதலில், ரஷ்ய அதிபர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் நடத்திய அதிநவீன ஏவுகணைத் தாக்குதலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினால் ‘ரஷ்யாவின் வீரன்’ (Hero of Russia) என நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் செர்ஜி மில்சாகோவ் (Sergei Milchakov) கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>

ரஷ்ய ராணுவத்தின் தெற்கு ராணுவ மண்டலத்திற்குட்பட்ட 51-வது ஒருங்கிணைந்த படைகளின் (51st Combined Arms Army) தளபதியாகச் செயல்பட்டு வந்த செர்ஜி மில்சாகோவ், உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் அவ்டிவ்கா உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றுவதற்கான ராணுவ நகர்வுகளுக்குத் தலைமை தாங்கி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d955ac7-d78f-4fff-b935-90731f3acd6d/26-6aa8daa06f163.webp' /></p><p> </p><p>

உக்ரைன் படையினரின் ஏவுகணைகள் ரஷ்யாவின் முதன்மை மற்றும் மாற்று ராணுவக் கட்டுப்பாட்டு மையங்களை மிகத் துல்லியமாகத் தாக்கி அழித்ததில் மில்சாகோவ் உட்படப் பல உயர் ராணுவ அதிகாரிகள் பலியானதாகக் கூறப்படுகிறது.</p><h2>&nbsp;பல உயர் ராணுவ அதிகாரிகள் பலி</h2><p>
</p><p>
உக்ரைனின் மறைமுக ஆதரவு இயக்கமான ‘அதேஷ்’ (Atesh) மற்றும் ரஷ்யாவின் சுதந்திர ஊடகங்கள் இந்த மரணச் செய்தியைப் பரப்பி வருகின்றன. தாக்குதல் நடந்த ராணுவ முகாமின் துல்லியமான இருப்பிடம் ரஷ்ய ராணுவத்திற்குள் இருந்தே கசிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ரஷ்ய ஆதரவுப் பிரச்சாரகர்களும் எழுப்பியுள்ளனர்.
</p><p>
 உக்ரைன் மீதான முழு அளவிலான போரில் இதுவரை 23-க்கும் மேற்பட்ட ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், மில்சாகோவின் இழப்பு ரஷ்ய ராணுவத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
</p><p>

இருப்பினும், இந்தத் தாக்குதல் மற்றும் ஜெனரல் செர்ஜி மில்சாகோவின் மரணம் குறித்த அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலை மாஸ்கோவில் உள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை வெளியிடவில்லை. </p><p>

உக்ரைன் படைகளின் இந்தத் திடீர் ஏவுகணைத் தாக்குதலால், கிழக்கு உக்ரைன் போர்க்களத்தில் மீண்டும் பதற்றமும் மோதல் சூழலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-15T05:38:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தில் கோய் மீன்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 51 வயது முதியவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/elderly-man-sexually-harassed-koi-fish-1789419453"></link>
            <id>https://canadamirror.com/article/elderly-man-sexually-harassed-koi-fish-1789419453</id>
            <summary type="text">தாய்லாந்தில் அண்டை வீட்டாரின் தனியார் கோய் மீன் வளர்ப்புத் தொட்டிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் 51 வயது நபர் ஒருவர், மீன்களுக்கு பாலியல் துஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தில் அண்டை வீட்டாரின் தனியார் கோய் மீன் வளர்ப்புத் தொட்டிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் 51 வயது நபர் ஒருவர், மீன்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

தாய்லாந்தின் துங் சோங் ஹோங் பகுதியில் உள்ள தனியார் குளமொன்றில் கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e024373a-87ef-4dd7-b0b8-b8bfd1eaf57f/26-6aa85fbe930c2.webp' /></p><p>குறித்த நபர் மிதிவண்டியில் அப்பகுதிக்கு வந்த பின்னர், குளத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அங்கு வளர்க்கப்பட்டிருந்த கோய் மீன்களுக்கு துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவத்தை வீட்டுப் பணியாளரும் குளத்தின் உரிமையாளரும் அவதானித்து அவரை எதிர்கொண்டபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>இதனையடுத்து உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், குளத்தில் வளர்க்கப்பட்ட கோய் மீன்கள் தொடர்ச்சியாக விசித்திரமான முறையில் உயிரிழந்ததை அவதானித்த உரிமையாளர், காரணம் தொடர்பில் சந்தேகமடைந்துள்ளார்.
</p><p>
மேலும், குளத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோதே சம்பவத்தின் பின்னணி தெரியவந்துள்ளது.

இதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபரை மறுநாள் லாக் சி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். </p><p>கைது செய்யப்பட்டபோது, சம்பவத்தன்று அணிந்திருந்த ஆடைகளையே அவர் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ac78282-8bc1-448c-a744-93b27c474e82/26-6aa85fbf47e2a.webp' /></p><p>விசாரணைகளின்போது குறித்த நபர் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>
மேலும், கடந்த காலங்களிலும் விலங்குகள் மற்றும் பொருட்கள் தொடர்பில் இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>

சுமார் ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக கோய் மீன்களை வளர்த்து வரும் குளத்தின் உரிமையாளர், மீன்கள் வித்தியாசமான நிலையில் உயிரிழந்ததைக் கண்டு ஆரம்பத்தில் அவை ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கருதியதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், CCTV காட்சிகளை ஆய்வு செய்த பின்னரே உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் விலங்கு வதை, சொத்து சேதம், ஒழுக்கக்கேடான செயற்பாடு மற்றும் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தாய்லாந்து பொலிஸார் பரிசீலித்து வருகின்றனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-15T01:34:46+00:00</updated>
        </entry>
    </feed>
