<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-04T10:33:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவனைக் கடித்துக் கொன்ற நாய்களின் உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் வீட்டுக்காவல் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/11-year-boy-in-sentenced-to-2-years-house-arrest-1788515910"></link>
            <id>https://canadamirror.com/article/11-year-boy-in-sentenced-to-2-years-house-arrest-1788515910</id>
            <summary type="text">கனடாவின் எட்மன்டன் நகரில் கடந்த 2024-ஆம் ஆண்டு 11 வயது சிறுவனைக் கடித்துக் கொன்ற இரு நாய்களின் உரிமையாளரான கிறிஸ்டல் மெக்டொனால்டு என்பவருக்கு நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மன்டன் நகரில் கடந்த 2024-ஆம் ஆண்டு 11 வயது சிறுவனைக் கடித்துக் கொன்ற இரு நாய்களின் உரிமையாளரான கிறிஸ்டல் மெக்டொனால்டு என்பவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் வீட்டுக்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>கட்டுப்பாடற்ற அலட்சியத்தால் உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக கடந்த மே மாதம் இவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டார்.
</p><p>குறித்த நபருக்கு 2 ஆண்டுகள் வீட்டுக்காவல், 200 மணிநேரச் சமூக சேவை மற்றும் வாழ்நாள் முழுவதும் நாய் வளர்க்கத் தடை என்ற அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b23a3031-395a-451a-aa83-a5a2017e7bd2/26-6a9a9647ecadc.webp' /></p><p>
கடந்த ஏப்ரல் 2024-இல், பிரிட்டிஷ் கொலம்பிய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
கழுத்துப் பகுதியில் நாய்கள் பலமாகக் கடித்ததால் சிறுவன் உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. </p><p>தாக்குதல் நடத்திய இரு 'கேன் கோர்சோ' ரக நாய்களும் பின்னர் தயவுக்கொலை செய்யப்பட்டன.
</p><p>இந்தச் சம்பவத்திற்கு முன்னரே, அந்த இரு நாய்களும் வேறு இரண்டு செல்லப் பிராணிகளைக் கொன்றதுடன், மெக்டொனால்டு உட்பட மூன்று பெரியவர்களைக் கடித்துக் காயப்படுத்தியிருந்தன என்பது விசாரணையில் அம்பலமானது.
</p><p>அரசுத் தரப்பில் மெக்டொனால்டுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரப்பட்டது. ஆனால், பிரதிவாதி தரப்பில் மெக்டொனால்டின் பழங்குடியின பின்னணி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. </p><p>
அதில் அவரது சிறுவயது பாதிப்புகள், இனவெறி பாகுபாடுகள் மற்றும் அவற்றுக்கு மத்தியிலும் அவர் தெரிவிக்கும் ஆழ்ந்த மனவருத்தம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி குறைந்தபட்ச தண்டனை கோரப்பட்டது.
</p><p>தற்போது பி.சி-யில் உள்ள பென்டிக்டன் பகுதியில் வசித்து வரும் மெக்டொனால்டு, தன் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T10:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போப் லியோன் XIVபிரான்ஸ் பயணம்; உச்சக்கட்ட பாதுகாப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pope-leo-xiv-s-visit-to-france-maximum-security-1788516131"></link>
            <id>https://canadamirror.com/article/pope-leo-xiv-s-visit-to-france-maximum-security-1788516131</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்தை முன்னிட்டு, “விதிவிலக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்” மேற்கொள்ளப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñe...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்தை முன்னிட்டு, “விதிவிலக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்” மேற்கொள்ளப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்துள்ளார்.
</p><p>
 செப்டெம்பர் மாத இறுதியில் இடம்பெறவுள்ள இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளின்போது, மொத்தமாக 15,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0224bdfd-5557-44f5-8f5e-4abbd4e9f86a/26-6a9a97253d170.webp' /></p><h2>14,000 பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்படுவார்கள்&nbsp;</h2><p>
</p><p>
செப்டெம்பர் மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில்,&nbsp; பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. </p><p>காவல்துறையினர், ஜொந்தார்ம்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் Sentinelle இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவத்தினர் உள்ளிட்ட சுமார் 14,000 பாதுகாப்புப் படையினர் பரிஸில் களமிறக்கப்படுவார்கள் என Laurent Nuñez தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனிடையே, போப் லியோன் XIV-ன் வருகைக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக லூர்த் நகரில் சுமார் 1,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். </p><p>செப்டெம்பர் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சக்கட்டத்தில் இருக்கும் என்றும், போப்பின் பயணத்தை முன்னிட்டு பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-04T09:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதுகு சொறிவதற்கே 300 யுவான் ; சீனாவில் வைரலாகும் வித்தியாசமான தொழில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-unique-profession-goes-viral-in-china-1788514902"></link>
            <id>https://canadamirror.com/article/a-unique-profession-goes-viral-in-china-1788514902</id>
            <summary type="text">சீனாவில் முதுகு சொறியும் சேவையை வணிகமாக மாற்றிய தொழில்முனைவோர் ஒருவர், அதனை வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் ஷென்சென் நகரில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் முதுகு சொறியும் சேவையை வணிகமாக மாற்றிய தொழில்முனைவோர் ஒருவர், அதனை வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சீனாவின் ஷென்சென் நகரில் 32 வயதான ஜாங் சியாவோகியா (Zhang Xiaoqiao) என்பவர் ‘சுமா’ (Suma) என்ற பெயரில் இந்த சேவை நிலையங்களை நடத்தி வருகிறார்.
</p><p>
இங்கு ஒரு மணிநேர அமர்வுக்கு சுமார் 300 யுவான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><p> வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நகங்களைப் பயன்படுத்தி, உடலின் பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் மென்மையாக சொறிந்து விடுகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1131db33-002c-4d31-8ffa-9aca7833f176/26-6a9a925736541.webp' /></p><p>இந்த சேவை மன அழுத்தத்தைக் குறைக்கவும், நிம்மதியான தூக்கத்தைப் பெறவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. இந்த சேவையைப் பெறுவோரில் சுமார் 70 சதவீதம் பேர் ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சமூக வலைத்தளத்தில் பார்த்த காணொளி ஒன்றும், தனது சிறுவயது நினைவுகளுமே இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கான உத்வேகத்தை வழங்கியதாக ஜாங் சியாவோகியா தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது இரண்டு கிளைகளுடன் இயங்கி வரும் இந்த நிறுவனம், மாதந்தோறும் சுமார் 100,000 யுவான் வரை வருமானம் ஈட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

வணிகம் தொடர்ந்து இலாபகரமாக இயங்கி வரும் நிலையில், எதிர்காலத்தில் சீனா முழுவதும் 100 கிளைகளைத் திறப்பதை இலக்காகக் கொண்டு நிறுவனம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், முதுகு சொறிவதையும் ஒரு வணிகமாக மாற்றியுள்ளமை தொடர்பாக இணையவாசிகள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T09:45:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரழிவு ;9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-people-rescued-alive-nepal-mins-after-9-days-1788502223"></link>
            <id>https://canadamirror.com/article/two-people-rescued-alive-nepal-mins-after-9-days-1788502223</id>
            <summary type="text">&amp;nbsp; இயற்கை கோர தாண்டவத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திரிஷூலி-3ஏ நீர்மின் நிலைய சுரங்கத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இயற்கை கோர தாண்டவத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திரிஷூலி-3ஏ நீர்மின் நிலைய சுரங்கத்தில் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது .</p><p>சஞ்சய் சாஹ் என்ற மெக்கானிக்கல் ஃபோர்மேன் மற்றும் கபீர் மகர்ஜன் என்ற மெக்கானிக்கல் சூப்பர்வைசர் ஆகிய இருவரும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51283d75-3aef-49f7-9c86-b4ceb2ff7248/26-6a9a60d0b5eb3.webp' /></p><h2>இன்னும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை..</h2><p>
</p><p> 
ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்து, திரிஷூலி-3ஏ திட்டத்தில் மட்டும் சுமார் 40 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சுரங்கத்தின் ஆழப்பகுதியில் இருந்து மேலும் பலரின் குரல்கள் கேட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். </p><p>இதனால், இன்னும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
 
நேபாள ராணுவம் மற்றும் ஆயுதம் தாங்கிய காவல் படையினர் சுரங்கத்துக்குள் தீவிரமாக சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p> 
 
அதே நேரத்தில், ரசுவா லாங்டாங் கோலா நீர்மின் திட்ட சுரங்கத்தில் இருந்து இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த திட்டத்தில் பணியாற்றிய 41 பேருடன் இதுவரை தொடர்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
</p><p>
 
மீட்புப் பணிகள் மோசமான வானிலை மற்றும் சேதமடைந்த கட்டமைப்புகளால் சவால்களை சந்தித்து வருகின்றன. 

இருப்பினும், சுரங்கத்துக்குள் இருந்து குரல்கள் கேட்பது குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T08:39:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையை கடிக்கும் வாழ்க்கை செலவு; ஐரோப்பாவிற்குப் புலம்பெயரும் பிரித்தானியர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/biting-cost-of-living-britons-emigrating-to-europe-1788509863"></link>
            <id>https://canadamirror.com/article/biting-cost-of-living-britons-emigrating-to-europe-1788509863</id>
            <summary type="text">&amp;nbsp; பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்களுக்குக் குடிபெயரும் ‘காஸ்ட் ஆஃப் லீவிங்’ (Cost of Leaving) கலாச்சாரம் பிரிட்டன்வாசிகளிடையே அதிகரித்து வருகிறமை ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p> 

பாரிஸ், ஸ்டாக்ஹோம் மற்றும் பெர்லின் போன்ற ஐரோப்பிய நகரங்களில் வாழ்க்கைச் செலவு லண்டனை விட கணிசமாகக் குறைவாக இருப்பது சர்வதேச நுகர்வோர் குறியீட்டு (Numbeo Cost of Living Index) ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64fffa31-2370-4d12-b1bd-eb7d7a9d691f/26-6a9a7ea8502ff.webp' /></p><h2>வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல்</h2><p>
</p><p>
சர்வதேச வாழ்வாதாரக் குறியீட்டின் தரவுகளின்படி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் தனிநபர் ஒருவர் சராசரியாக வாழத் தேவையான பணத்தை விட, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 11 சதவீதமும், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் 10 சதவீதமும் குறைவான செலவிலேயே வாழ முடியும் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p> 

குறிப்பாக லண்டனில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் சராசரி வாடகை ஐரோப்பிய தலைநகரங்களை விட 35 முதல் 40 சதவீதம் வரை அதிகமாக உள்ளது, பிரிட்டன் மக்களை பிற நாடுகளை நோக்கித் தள்ளும் முதன்மை காரணியாக மாறியுள்ளது.
</p><p>
வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல், பொதுப்போக்குவரத்து, மின்சாரம் மற்றும் உணவகங்களின் செலவுகளிலும் பிரிட்டனை விட ஐரோப்பிய நகரங்கள் அதிக சேமிப்பை வழங்கி வருகின்றன. </p><p>உதாரணமாக, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் மற்றும் இத்தாலியின் ரோம் ஆகிய நகரங்கள் லண்டனை விட சுமார் 45 சதவீதம் வரை மலிவான வாழ்க்கைச் சூழலை வழங்குவதால், வீட்டில் இருந்தே பணியாற்றும் (Remote Work) இளம் பிரிட்டன் ஊழியர்கள் பெருமளவில் அந்நகரங்களை நோக்கிப் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
</p><p>
கடந்த சில ஆண்டுகளாகப் பிரிட்டனில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், குறைந்த செலவில் உயர்தர வாழ்க்கை முறையைப் (Quality of Life) பெற விரும்புவோருக்குப் பாரிஸ், பர்லின், பார்சிலோனா போன்ற நகரங்கள் சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளன.</p><p>

 பிரிட்டன் அரசு வரி விதிப்புகளையும் வாழ்க்கைச் செலவுகளையும் சீரமைக்கத் தவறினால், நாட்டின் திறமைவாய்ந்த பணியாளர்கள் (Brain Drain) ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்வது மேலும் அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T08:31:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் வலையில் வீழ்த்தி 10 லட்சம் டொலர் மோசடி செய்த நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/41old-ontario-man-who-allegedly-duped-5-women-1788510477"></link>
            <id>https://canadamirror.com/article/41old-ontario-man-who-allegedly-duped-5-women-1788510477</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் ஐந்து பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி, 10 லட்சம் டாலருக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த 41 வயது நபரை காவல்துறையின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் ஐந்து பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி, 10 லட்சம் டாலருக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த 41 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>
"புராஜெக்ட் மரூன்" என்ற சிறப்பு விசாரணை நடவடிக்கையின் முடிவுகள் குறித்து காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.</p><p>2025 நவம்பரில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரிலேயே இந்தத் திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.
 எனினும், சந்தேகநபர் 2020 முதலே இதுபோன்ற பொய் வாக்குறுதிகள் மற்றும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12582e03-f35c-4106-a614-a3788b0a3e48/26-6a9a810f1d229.webp' /></p><p>இந்தச் சம்பவத்தில் ஒன்டாரியோவின் மார்மோரா பகுதியைச் சேர்ந்த சால்வடோர் மலான்ட்ரினோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் மீது 5,000 டொலருக்கும் அதிகமான பணமோசடி (5 வழக்குகள்), சட்டவிரோதப் பணப் பரிமாற்றம், பிணை உத்தரவை மீறியது மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தது உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>பொதுவாக நடக்கும் ஆன்லைன் காதல் மோசடிகளைப் போலன்றி, மலான்ட்ரினோ பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து வலையில் வீழ்த்தியுள்ளார்.</p><p> 
தனது "ஃபிரண்ட்லி கே9" என்ற நாய் பயிற்சி மையம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றின் மூலம் பெண்களுடன் நட்பு ஏற்படுத்தியுள்ளார்.
</p><p>தன்னை ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகக் காட்டிக்கொண்ட மலான்ட்ரினோ, தொழில் முதலீடு, கடன்கள் மற்றும் அவசர தேவைகள் எனக் கூறி பெருந்தொகையைப் பெற்றுள்ளார். </p><p>பதிலுக்குத் திருமணம் செய்துகொள்வதாகவும், தொழிலில் பங்கு தருவதாகவும் உறுதியளித்து ஏமாற்றியுள்ளார்.</p><p>
காவல்துறையினர் அவரது ஆயிரக்கணக்கான வங்கிப் பக்கங்களை ஆய்வு செய்ததில், பெண்களிடம் வாங்கிய பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது அம்பலமானது.</p><p> தனித்தனியாக ஏமாற்றப்பட்ட பல பெண்களின் வாக்குமூலங்கள் ஒரே மாதிரியாக இருந்ததால், இது ஒரு திட்டமிடப்பட்ட மோசடி என்பது உறுதி செய்யப்பட்டது.
</p><p>மலான்ட்ரினோவால் ஏமாற்றப்பட்ட வேறு யாரேனும் இருந்தால், உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர் தற்போது காவல் பிணையில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T08:25:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர் இல்லத்தில் சிறுவனின் அந்தரங்க உறுப்புகளில் மிளகாய்த்தூள் தூவி சித்திரவதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/boy-tortured-chili-powder-sprinkled-private-parts-1788505946"></link>
            <id>https://canadamirror.com/article/boy-tortured-chili-powder-sprinkled-private-parts-1788505946</id>
            <summary type="text">கண்டி, மயிலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயதுடைய சிறுவனை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில், அந்த சிறுவர் இல்லத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி, மயிலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயதுடைய சிறுவனை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில், அந்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியும் அவரது கணவரும் தலாத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h4>மேலதிக விசாரணை</h4><p>



சந்தேகநபர்கள் குறித்த சிறுவனின் அந்தரங்க உறுப்புகளில் மிளகாய்த்தூள் தூவி சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c4a0a2e-08d2-44ce-962f-569aba1139a6/26-6a9a6f5c1dbdf.webp' /></p><p>சித்திரவதைக்கு உள்ளான சிறுவன் முதலில் மாரஸ்ஸன வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில்சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>



சந்தேகநபர்கள் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>



சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:12:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கு ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,290 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-floods-death-toll-rises-to-1-290-1788505357"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-floods-death-toll-rises-to-1-290-1788505357</id>
            <summary type="text">திபெத்- நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது.திபெத்- நேபாள எல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>திபெத்- நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது.</p><p>திபெத்- நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி அன்று பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1650b53d-1d65-41ec-9747-a76e2adb07a7/26-6a9a6d0ebdd13.webp' /></p><p>இந்த வெள்ளத்தில் பல பேர் சிக்கி உயிரிழந்ததுடன் மீட்பு பணியின்போது தொடர்ந்து சடலங்கள் மீட்கப்படுகின்றன. </p><p>உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1,290 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
மேலும் இந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கி, இந்தியர்கள் 275 பேர் உட்பட 4,700-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். </p><p>அவர்களைத் தேடும் பணியில் நேபாள ராணுவத்தினர் மற்றும் சர்வதேச பேரிடர் மீட்புக் குழுவினர் உட்பட 21,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p> பாதிக்கப்பட்ட மலைக்கிராமங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டை தடையின்றி நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T07:02:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[‘பிறப்புறுப்பு திருட்டு’ வதந்தி ; ஆபிரிக்காவில் 80க்கும் மேற்பட்டோர் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/genital-theft-rumor-over-80-people-killed-africa-1788504490"></link>
            <id>https://canadamirror.com/article/genital-theft-rumor-over-80-people-killed-africa-1788504490</id>
            <summary type="text">‘பிறப்புறுப்பு திருட்டு’ தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட பொய்யான வதந்திகளால், ஆபிரிக்காவின் பல நாடுகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற வன்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>‘பிறப்புறுப்பு திருட்டு’ தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட பொய்யான வதந்திகளால், ஆபிரிக்காவின் பல நாடுகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
‘Genital theft’ என அழைக்கப்படும் இந்த விசித்திரமான வதந்தி, TikTok உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்கள் ஊடாக வேகமாகப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8af0608f-c4b6-4472-8db4-4450efafbce6/26-6a9a6a976a9e4.webp' /></p><p>கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் 2026ஆம் ஆண்டு ஜூலை வரையான காலப்பகுதியில், குறைந்தது ஆறு ஆபிரிக்க நாடுகளில் இந்த வதந்தியை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொதுமக்கள் மீது கும்பல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் BBC மற்றும் அதன் Global Disinformation Unit தெரிவித்துள்ளன.
</p><p>
கும்பலால் ஒருவர் இழுத்துச் செல்லப்படுவது, பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்படுவது மற்றும் கல்லால் அடித்துக் கொல்லப்படுவது போன்ற கொடூரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காங்கோவில் கடந்த ஆண்டு இந்த வதந்தி மீண்டும் பரவத் தொடங்கியதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு முன்னரும் 2008ஆம் ஆண்டில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்ததாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p>

பின்னர் இந்த வதந்தி புருண்டி, ஜாம்பியா, தான்சானியா, மொசாம்பிக், அங்கோலா, மலாவி மற்றும் கென்யா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21a5b23d-467f-4bca-a3a0-1879fb4fc6b6/26-6a9a6a96a041b.webp' /></p><p>இந்நிலையில், இந்த வதந்தியால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக மொசாம்பிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு ஆறு வார காலப்பகுதியில் மட்டும் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கடந்த மே மாதம் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்தவர்களில் அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சமூக ஊடகங்கள் ஊடாக பரவும் தவறான தகவல்கள் எவ்வாறு உண்மையான வன்முறையாக மாறி மனித உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கின்றன என்பதற்கு இந்தச் சம்பவங்கள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T06:52:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரில் ஆயுதங்களுக்கு பஞ்சமில்லை ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-shortage-of-weapons-for-a-war-with-iran-1788493327"></link>
            <id>https://canadamirror.com/article/no-shortage-of-weapons-for-a-war-with-iran-1788493327</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளுக்கு எந்தவித பஞ்சமும் இல்லை என்று அமெரிக்க ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளுக்கு எந்தவித பஞ்சமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்காவிடம் தங்கு தடையின்றி பயன்படுத்தக்கூடிய அளவுக்கு அதிநவீன ஆயுதங்களும் வெடிமருந்துகளும் பெருமளவில் கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7ee0587-aac0-46b3-aa80-62f0f5e1e34e/26-6a9a3e113db24.webp' /></p><p>

அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் போருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க ராணுவத்தின் ஆயுத கையிருப்பு குறைந்து வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை என்று கூறியுள்ள அவர் ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
ஈரானுடனான மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அமெரிக்க ராணுவத்தின் பலம் மற்றும் ஆயுத வலிமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ட்ரம்பின் இந்த பதில் அமைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T06:11:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் கொழும்பை உலுக்கிய துப்பாகிச்சூடு! பெண் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/morning-shooting-rocks-colombo-woman-injured-1788498345"></link>
            <id>https://canadamirror.com/article/morning-shooting-rocks-colombo-woman-injured-1788498345</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியின் ஆறாவது வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியின் ஆறாவது வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/203f4483-99f1-497f-89f0-23a29c3940af/26-6a9a51aac6cbf.webp' /></p><p>
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், கட்டிடத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த இரு பெண்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இச் சம்பவம் அதிகாலை சுமார் 3:00 மணியளவில் இடம்பெற்றது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்களில் ஒருவர் சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T05:11:54+00:00</updated>
        </entry>
    </feed>
