<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-06T05:31:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் திடீர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/families-of-military-suddenly-arrested-in-the-us-1785994044"></link>
            <id>https://canadamirror.com/article/families-of-military-suddenly-arrested-in-the-us-1785994044</id>
            <summary type="text">அமெரிக்காவில்&amp;nbsp; 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில்&nbsp; 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>&nbsp;அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் தீவிர குடியேற்ற கொள்கையின் விளைவாக, பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு குடியேற்ற பாதுகாப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>&nbsp;இதன் காரணமாக, கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், பலர் குடியேற்ற காவல்துறையின் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>&nbsp;நாட்டிற்காக உயிரை பணயம் வைத்து எல்லையில் சேவை செய்யும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரையே கைது செய்து வெளியனுப்புவது, அமெரிக்க வீரர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் மன உளைச்சலையும் உருவாக்கியுள்ளது.</p><p> இந்த நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புக்கும் வீரர்களின் மன உறுதிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T05:27:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேரலையில் சமூக ஊடகப் பிரபலம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு; சம்பவத்தால் ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mexican-tiktok-influencer-shot-dead-during-live-1785993637"></link>
            <id>https://canadamirror.com/article/mexican-tiktok-influencer-shot-dead-during-live-1785993637</id>
            <summary type="text">மெக்சிகோவில் தனது நண்பர்களுடன் டிக்டொக் நேரலையில் உரையாடிக்கொண்டிருந்த சமூக ஊடகப் பிரபலம் சீசர் காஸ்டெலம் (Cesar Gastelum) துப்பாக்கியால் துப்பாக்கிச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெக்சிகோவில் தனது நண்பர்களுடன் டிக்டொக் நேரலையில் உரையாடிக்கொண்டிருந்த சமூக ஊடகப் பிரபலம் சீசர் காஸ்டெலம் (Cesar Gastelum) துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>வடமேற்கு நகரமான குலியாகானில் (Culiacan) உள்ள துரித உணவு விற்பனை நிலையம் ஒன்றுக்கு வெளியே செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>நகைச்சுவை காணொளிகள் மூலம் டிக்டொக்கில் சுமார் 600,000 பின்தொடர்பாளர்களைக் கொண்ட காஸ்டெலம், குறித்த உணவகத்துக்கு வெளியே தனது நண்பர்களுடன், நேரலையில் பேசிக்கொண்டிருந்தபோது, உந்துருளிகளில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் அவர்களை நெருங்கியுள்ளனர்.</p><p>இதில் உந்துருளியை ஓட்டி வந்த நபர் ஒருவர் காஸ்டெலமை நோக்கி நேரடியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வது நேரலையில் பதிவாகியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.</p><p>இந்த சம்பவத்தை சினாலோவா (Sinaloa) மாநில பாதுகாப்பு அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளதுடன், அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>சினாலோவா மாநிலத்தின் தலைநகரான குலியாகானில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையே கட்டுப்பாட்டைப் பிடிப்பதற்காக நிலவி வரும் மோதல்களுக்கு மத்தியிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.</p><p>இதேவேளை, கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் மெக்சிகோவில் ஜாலிஸ்கோ மாநிலத்தில் உள்ள அழகு நிலையமொன்றில் டிக்டொக் நேரலையில் இருந்தபோது, 23 வயதான அழகுக் கலை நிபுணர் வலேரியா மார்க்வெஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.</p><p>குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 'எல் ஆர்-1' (El R-1) என அழைக்கப்படும் ராமான் ஏஞ்சல் அல்வாரெஸ் அயாலா என்ற குற்றக் குழுத் தலைவனை மெக்சிகோ அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-06T05:20:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம் ; இலக்கு வைக்கப்படும் மத்தியக்கிழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-s-warning-sends-shockwaves-worldwide-1785975496"></link>
            <id>https://canadamirror.com/article/iran-s-warning-sends-shockwaves-worldwide-1785975496</id>
            <summary type="text">அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தால், வளைகுடா பிராந்தியத்திலுள்ள முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தால், வளைகுடா பிராந்தியத்திலுள்ள முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
ஈரானின் எரிசக்தி வலையமைப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் உயர் மட்ட இராஜதந்திர தொடர்புகள் மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf59f8ec-ebf3-4b32-a5b2-4bc20627b1fc/26-6a73d2c9e9481.webp' /></p><h2>தாக்குதல்கள்</h2><p>
</p><p>
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவூதி அரேபியா, துருக்கி, கட்டார் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.</p><p>

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளிலுள்ள எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சார விநியோகக் கட்டமைப்புகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் போக்குவரத்து வலையமைப்புகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு வளைகுடா நாடுகளை ஈரான் கேட்டுக்கொண்டுள்ளதுடன், இராஜதந்திர ரீதியில் தீர்வுகாண்பதே பிராந்திய அழிவைத் தவிர்க்கும் என்றும் வலியுறுத்தியுள்ளது.</p><p>

ஈரானின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மான், அமெரிக்க ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு இராணுவ நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் அமைதி ஏற்படுத்த வலியுறுத்தியுள்ளமை குறிப்படத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-06T01:17:40+00:00</updated>
        </entry>
    </feed>
