<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-04T07:32:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலியல் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை; மக்கள் கொந்தளிப்பால் பின் வாங்கிய அரசாங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/early-release-of-sex-offenders-public-outrage-uk-1785824471"></link>
            <id>https://canadamirror.com/article/early-release-of-sex-offenders-public-outrage-uk-1785824471</id>
            <summary type="text">&amp;nbsp; பிரித்தானியாவில் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறார்களைச் சீரழித்த கொடூர குற்றவாளிகளை, முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை செய்யும் திட்டத்திலிருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரித்தானியாவில் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறார்களைச் சீரழித்த கொடூர குற்றவாளிகளை, முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை செய்யும் திட்டத்திலிருந்து பிரிட்டன் அரசாங்கம் அதிரடியாகப் பின்வாங்கியுள்ளது.


​</p><p>பிரிட்டனில் உள்ள சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகளவில் நிரம்பி உள்ளதால் நெருக்கடியைச் சமாளிக்கவும், சிறை அறைகளில் இடவசதியை ஏற்படுத்தவும், குற்றவாளிகளின் தண்டனைக் காலத்தைக் குறைத்து, அவர்களை முன்கூட்டியே விடுவிக்க பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6afea10f-87e0-4056-94f5-603d50fe4b96/26-6a7184d8c7e83.webp' /></p><p>

 இந்தத் திட்டத்தில் பாலியல் குற்றவாளிகளும் பயன்பெறக்கூடும் என்ற தகவல் வெளியானதும், நாடு முழுதும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. </p><p>

இதனையடுத்து கொடூர மனப்பான்மை கொண்ட குற்றவாளிகளை இப்படி சட்டத்தின் பிடியிலிருந்து சீக்கிரமாக வெளியே விட்டால், சமுதாயத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை எனப் போராட்டத்தில் குதித்தனர்.
</p><p>


மக்களின் இந்த பலத்த எதிர்ப்பைத் தொடர்ந்து, பிரிட்டன் அரசு உடனடியாகத் தன் முடிவை மாற்றிக்கொண்டது.

 ​கற்பழிப்பு, சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற படுபாதகச் செயல்களில் ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளுக்கு, இந்த முன்கூட்டியே விடுதலை சலுகை கிடையாது என்றும், அவர்கள் தண்டனைக் காலம் முழுவதும் சிறையிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T06:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டன் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஜல்லி மீன்கள்; பேரழிவுக்கான அறிகுறி ; அச்சத்தில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hundreds-of-alien-jellyfish-on-british-beaches-1785823774"></link>
            <id>https://canadamirror.com/article/hundreds-of-alien-jellyfish-on-british-beaches-1785823774</id>
            <summary type="text">&amp;nbsp; பிரித்தானிய கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஏலியன் ஜல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருப்பது பிரிட்டன் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அசாதாரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரித்தானிய கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஏலியன் ஜல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருப்பது பிரிட்டன் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

அசாதாரண காலங்களில் மட்டுமே இப்படி நடக்கும் என்றும், இவ்வாறு ஏலியன் ஜல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருப்பது பேரழிவுக்கான அறிகுறியாக இது இருக்கலாம் எனவும் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/601b065f-1887-4937-9a8d-e137b30bde07/26-6a71822007214.webp' /></p><h2>ஆபத்தான உயிரினத்துடன் தொடர்புடையது.</h2><p>
</p><p>
 பிரிட்டனில்&nbsp; நிலவும் கடும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, பிரிட்டன் கடற்கரையில் ஏலியன் ஜல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. 

இவ்வாறு கரை ஒதுங்க்கியுள்ள இந்த ஜல்லி மீன்கள் பார்ப்பதற்கு ஏலியன்கள் மாதிரி இருப்பதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டிருக்கிறது.</p><p>

 இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இந்த வகை மீன்கள் 'வெலெல்லா வெலெல்லா' என அழைக்கப்படுகின்றன. கடல் பட்டம் என்றும் இது அழைக்கப்படுகிறது. வடமேற்கு பிரிட்டனின் கும்பிரியா பகுதியில் உள்ள செயின்ட் பீஸ் பீச் மற்றும் வேல்ஸ் பீச்சில் தற்போது இவை அதிக அளவில் கரை ஒதுங்கியிருக்கின்றன.</p><p> 

டார்க் ப்ளூ கலரில் இருப்பதால் மக்கள் கிட்ட நெருங்கவே பயப்படுகின்றனர். பார்ப்பதற்கு ஜல்லி மீன்கள் போன்று இருந்தாலும், இது ஜல்லி மீன்கள் கிடையாது. ஒருவகை சிறிய உயிரினம். இது மேன் ஓ வார் என்கிற ஆபத்தான உயிரினத்துடன் தொடர்புடையது.</p><p> 

எனவே இவற்றை தொட கூடாது. மீறி தொட்டால் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படும். இந்த வகை உயிரினங்களால் நீந்த முடியாது. </p><p>கடலின் அலைக்கு ஏற்ப நகர்ந்து செல்லும். தற்போது இதன் இனப்பெருக்கம் அதிகமாக இருப்பதால், அதிக அளவில் கரை ஒதுங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்லதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T06:07:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதலில் கொல்லப்பட்ட காதலி ; கல்லறையில் காதலன் அரங்கேற்றிய செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-honors-girlfriend-killed-in-hamas-attack-1785799057"></link>
            <id>https://canadamirror.com/article/man-honors-girlfriend-killed-in-hamas-attack-1785799057</id>
            <summary type="text">காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
</p><p>
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c9b0f6e-99e4-412c-b180-373b3695207b/26-6a71219326ba7.webp' /></p><p> </p><p>அதேவேளை, காசாவில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர், பொதுமக்கள் என 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
</p><p>
இதனிடையே, 2023 அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியபோது இஸ்ரேலின் நிவக் பாலைவனம் பகுதியில் கிப்ருஸ் ரிம் பகுதியில் சூப்பர் நோவா இசைநிகழ்ச்சி நடைபெற்றது.</p><p> இந்த இசைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீதும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இசைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் 370 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p>

இந்த இசைநிகழ்ச்சியில் பார் அஸ்ரப் (வயது 30) தனது காதலியான லிரோன் பர்டாவுடன் பங்கேற்றார். அப்போது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் லிரோன் பர்டா படுகொலை செய்யப்பட்டார். </p><p>அவரின் உடல் எல்கனா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவால் காதலி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் பார் அஸ்ரப் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.</p><p>


இந்நிலையில், பார் அஸ்ரப் நேற்று எல்கனா நகரில் அடக்கம் செய்யப்பட்ட தனது காதலி லிரோன் பர்டாவின் கல்லறைக்கு சென்றார். அங்கு காதலியின் படுகொலையால் கடந்த 2 ஆண்டுகளுக்குமே மிகுந்த மன உளைச்சலில் இருந்த பார் அஸ்ரப் காதலி லிரோன் பர்டாவின் கல்லறை முன் நின்று துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
</p><p>
இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிசார், விரைந்து சென்று பார் அஸ்ரப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>

இஸ்ரேலில் அக்டோபர் 7ல் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காதல் ஜோடிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-04T01:33:00+00:00</updated>
        </entry>
    </feed>
