<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-17T05:29:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்; மக்கள் அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/5-9-earthquake-strikes-indonesia-again-1786942656"></link>
            <id>https://canadamirror.com/article/5-9-earthquake-strikes-indonesia-again-1786942656</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5ef5754-a058-4fa5-857d-726e158c4988/26-6a8294c19df44.webp' /></p><h2>சேத விபரங்கள்&nbsp;வௌியாகவில்லை</h2><p> </p><p>

எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.</p><p> 

இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் ஏற்பட்டன. 

இதனால் 53 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பலரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. </p><p>

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் 9,200 இற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.</p><p> 

நிலநடுக்கத்தின் பின்னர் அந்நாட்டின் சுற்றுலாப் பகுதிகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், இந்தோனேசிய துறைமுக அதிகாரசபையினால் கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. </p><p>

இதற்கிடையில், நிலநடுக்கம் காரணமாக குறித்த மாகாணங்களில் மின்தடை ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது அதனை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-17T04:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க வீரரை பிடித்துக் கொடுத்தால் ரூ.28 இலட்சம் ; ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-announce-rs-2-8-million-capturing-us-soldier-1786900847"></link>
            <id>https://canadamirror.com/article/iran-announce-rs-2-8-million-capturing-us-soldier-1786900847</id>
            <summary type="text">அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்து ஒப்படைத்தாலோ 30,000 அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்து ஒப்படைத்தாலோ 30,000 அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>இந்தத் தொகை சுமார் 28 இலட்சம் இலங்கை ரூபாய்க்கு சமமானதாகும். பெண் ஒருவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் சன்மானத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஈரான் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தொடரும் நிலையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1973dc7d-641d-441f-a43c-9a50d5bb4e33/26-6a81f171261f1.webp' /></p><p>இந்த சன்மானத் திட்டம் குறித்து அமீர் ஹதாமி, அமெரிக்காவுக்கு எதிரான மோதலில் பங்களிக்க விருப்பம் தெரிவித்து பெருமளவானோர் முன்வைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை தொடர்பான பதற்றமும் தொடர்கிறது. </p><p>இதனால் மேற்காசியப் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.
</p><p>
இதேவேளை, ஈரானுக்குள் அமெரிக்கப் படைகள் தரையிறங்கியுள்ளனவா என்பது தொடர்பில் வெளியாகும் தகவல்கள் குறித்து மாறுபட்ட செய்திகள் வெளியாகி வருகின்றன. </p><p>முன்னதாக அமெரிக்க வீரர்கள் ஈரானில் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய பல தகவல்கள் நம்பகமான ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை என உண்மைச் சரிபார்ப்பு நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
</p><p>
தற்போது ஈரான் ராணுவம் அறிவித்துள்ள சன்மானத் திட்டம், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலின் தீவிரத்தை மேலும் வெளிப்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-17T00:17:42+00:00</updated>
        </entry>
    </feed>
