<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-09T16:33:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹமில்டனில் கத்திக்குத்து: 21 வயது இளைஞா பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/21-year-old-man-dead-after-stabbing-in-hamilton-1786288518"></link>
            <id>https://canadamirror.com/article/21-year-old-man-dead-after-stabbing-in-hamilton-1786288518</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் உள்ள ஹமில்டன் நகரில் இன்று அதிகாலை கத்திக் குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட 21 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் உள்ள ஹமில்டன் நகரில் இன்று அதிகாலை கத்திக் குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட 21 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.</p><p>
ஹமில்டன் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிகாலை 2:30 மணியளவில் மெயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஃபிரிட் ஸ்ட்ரீட் சந்திப்பிற்கு அருகே டாக்ஸி ஓட்டுநர் ஒருவரால் இந்த இளைஞர் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
டாக்ஸி ஓட்டுநர் தகவலளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் படுகாயமடைந்த இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/973a6cf4-738d-4848-af00-3a84330bb065/26-6a789987f1138.webp' /></p><p> எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞர், மெயின் ஸ்ட்ரீட்டில் மீட்கப்படுவதற்கு முன்பு 'கிங் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் பாரடைஸ் ரோடு நார்த்' பகுதிக்கு அருகே மற்றொரு தரப்புடன் தகராறில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>
இச்சம்பவம் அல்லது அதற்கு முன்பாக நடந்த தகராறைக் கண்ட சாட்சிகள் யாரேனும் இருந்தால், உடனடியாக புலனாய்வு அதிகாரி அலேக்ஸ் பக்கை (905-546-4123) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
மேலும், இன்று அதிகாலை 2:00 மணி முதல் 2:45 மணிக்குள் அப்பகுதியில் பயணித்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் 'டாஷ்கேம்' அல்லது பிற வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து, அது தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் பொலிஸாரிடம் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T15:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில், தவறான தகவல்களை சமர்ப்பித்த அடைமானத் தரகருக்கு வாழ்நாள் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lifetime-ban-for-former-bc-mortgage-broker-1786288188"></link>
            <id>https://canadamirror.com/article/lifetime-ban-for-former-bc-mortgage-broker-1786288188</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், வாடிக்கையாளர்களின் அடமானக் கடன் விண்ணப்பங்களில் போலியான மற்றும் தவறான தகவல்களைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், வாடிக்கையாளர்களின் அடமானக் கடன் விண்ணப்பங்களில் போலியான மற்றும் தவறான தகவல்களைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக, முன்னாள் அடமானத் தரகர் கூர்ஷெர் சிங் பெயின்ஸ் தொழிலில் ஈடுபட ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியா நிதிச் சேவைகள் ஆணையம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் கையாண்ட அனைத்து விண்ணப்பங்களிலுமே முறைகேடுகள் செய்தது அம்பலமாகியுள்ளது.
</p><p>வாடிக்கையாளர் வாங்க முயன்ற வீடு என்ற தகவலைக் கடன் வழங்கும் வங்கிக்குத் தெரிவிக்காமல் பெயின்ஸ் மறைத்துள்ளார்.
வங்கி ஆய்வில் இது தெரியவந்ததும் கடன் நிராகரிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/384b3b1f-40d8-4316-8ca6-6d6ee50d6a6d/26-6a78983e1e30d.webp' /></p><p> இதனால், ஒப்பந்தக் காலத்தை நீட்டிக்க வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமாக 5,000 டொலா் வழங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.</p><p>
வாடிக்கையாளர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளாமல், மூன்றாம் நபர் கொடுத்த தகவல்களை அப்படியே சரிபார்க்காமல் வங்கிக்கு அனுப்பியதை பெயின்ஸ் ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 2022 மே முதல் 2024 ஏப்ரல் வரை அவர் கையாண்ட 8 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.</p><p>
அவை அனைத்திலும் போலியான தகவல்கள் இருந்தது கண்டறியப்பட்டது:
5 கோப்புகளில் வாடிக்கையாளர்களின் வருமானம் மற்றும் சொத்து மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காகப் போலி வரி ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன.</p><p>
சர்ரே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அடமான விண்ணப்பத்தில் இணைக்கப்பட்ட வரி ஆவணங்கள் பற்றி அந்த வாடிக்கையாளரிடம் கேட்டபோது, "எனக்கு இந்த ஆவணங்கள் பற்றி எதுவுமே தெரியாது; பெயின்ஸை நான் நேரில் சந்தித்ததே இல்லை" எனக் கூறி அதிர்ச்சியளித்தார்.
</p><p>ஒரு சொத்தின் மீது ஏற்கனவே முதல் அடமானக் கடன் இருப்பதை மறைத்து, இரண்டாவது கடனுக்கு விண்ணப்பித்தது உட்பட பல தவறான தகவல்களை வங்கிகளுக்கு அளித்திருந்தார்.
</p><p>பொதுமக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டது, அடமானத் தரகர்கள் சட்டத்தை மீறியது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றங்களை ஒப்புக்கொண்ட பெயின்ஸ், டிசம்பர் 2, 2025 அன்று தனது உரிமத்தை ரத்து செய்தார்.
</p><p>இனிமேல் அவர் பி.சி. மாநிலத்தில் அடமானத் தரகராகப் பணியாற்றவோ, உரிமத்திற்கு விண்ணப்பிக்கவோ முடியாது.
25,000 டொலர் நிர்வாக அபராதம் மற்றும் 5,000 டெலார் விசாரணைச் செலவு என மொத்தம் 30,000 டொலர் தொகையை அடுத்த மூன்று மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T15:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரொறன்ரோவின் நார்த் யார்க் பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-person-rushed-to-hospital-after-two-groups-1786287683"></link>
            <id>https://canadamirror.com/article/one-person-rushed-to-hospital-after-two-groups-1786287683</id>
            <summary type="text">கனடாவின் ரொறன்ரோவில் உள்ள நார்த் யார்க் பகுதியில் வெள்ளி இரவு இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் படுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ரொறன்ரோவில் உள்ள நார்த் யார்க் பகுதியில் வெள்ளி இரவு இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>
ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஷோர்ஹாம் டிரைவ் சந்திப்பிற்கு அருகே இரவு 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கிடைத்த தகவலை அடுத்து, ரொறன்ரோ பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
</p><p>சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவரைக் கண்டறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fb48086-9f13-4e26-9f9d-62355edc8a51/26-6a78964547295.webp' /></p><p> </p><p>அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர் ஆபத்து எதுவுமில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு குழுக்கள் பரஸ்பர துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் அனைவரும் சம்பவ இடத்திலிருந்து கால்நடையாகத் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் நடந்த சுற்றுவட்டாரப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான பல்வேறு ஆதாரங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p>
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள் யாரேனும் இருந்தால் உடனடியாகத் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு ரொறன்ரோ பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T15:37:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெய்லர் ஸ்விஃப்ட் கச்சேரி டிக்கெட் மோசடி: 2.65 லட்சம் டொலர் திருடிய ஒன்டாரியோ தம்பதிக்கு தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-couple-to-be-sentenced-in-265k-taylor-1786287328"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-couple-to-be-sentenced-in-265k-taylor-1786287328</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோவைச் சேர்ந்த தம்பதியொன்று, பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசைக்கச்சேரி டிக்கெட்டுகளைத் தருவதாகக் கூறி பலரிடம் சுமார் 265,00...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோவைச் சேர்ந்த தம்பதியொன்று, பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசைக்கச்சேரி டிக்கெட்டுகளைத் தருவதாகக் கூறி பலரிடம் சுமார் 265,000 கனடிய டாலர்கள் மோசடி செய்த வழக்கில், அவர்களுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் திகதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன.
</p><p>டெனிஸ் டிசோர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணை டேவிட் பிளேக் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p>
டிசோர் பொதுமக்கள் மீது மோசடி செய்த குற்றத்தையும், பிளேக் குற்றவியல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருந்த குற்றத்தையும் ஏற்றுக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/026842df-cd36-42a6-b022-486923f2acc6/26-6a7894e23f5d4.webp' /></p><p>
</p><p>ரொறன்ரோவில் 2024 நவம்பரில் நடைபெற்ற டெய்லர் ஸ்விஃப்ட்டின் 6 கச்சேரிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக 107 பேர் டிசோரிடம் பணம் கொடுத்துள்ளனர்.
</p><p>சிலர் 2023 ஆகஸ்ட் மாதத்திலேயே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அந்த ஆண்டின் கிறிஸ்மஸ் பண்டிகைக்குத் தங்கள் குழந்தைகளுக்குப் பரிசளிக்கத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.</p><p>
கச்சேரி தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என டிசோர் உறுதியளித்திருந்தார். </p><p>ஆனால், கச்சேரி நாளில் டிக்கெட்டுகளைப் பெற முயன்றபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை மக்கள் உணர்ந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, மூன்றாம் தரப்பினர் யாரோ பணத்தைத் திருடிவிட்டதாக டிசோர் பொய் கூறியுள்ளார்.</p><p> ஆனால், இதில் வேறு எந்த நபரும் சம்பந்தப்படவில்லை என்பதும், திட்டமிட்டே இவர்கள் ஏமாற்றியுள்ளனர் என்பதும் விசாரணையில் அம்பலமானது.
மேலும், இவர்கள் மோசடி செய்த தொகையைக் கொண்டு 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு ஆன்லைன் சூதாட்டத் தளங்களில் பந்தயம் கட்டியது தெரியவந்துள்ளது.
</p><p> இதே காலகட்டத்தில், இவர்கள் ஏடிஎம் மூலம் சுமார் 297,000 டொலர் ரொக்கப் பணத்தை 350 முறைகளாக எடுத்துப் பயன்படுத்தியுள்ளனர்.
</p><p>இணையதளங்களில் "பிளாக்ஹாக் டெனிஸ்" என்ற பெயரில் வலம் வந்த டிசோர், நீதிமன்றத்தில் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியதுடன், அந்தச் சமயத்தில் தான் தீவிர ஆன்லைன் சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்ததாகத் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T15:37:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காலநிலை சீற்றத்தினால் பெரு நட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-day-prairie-storm-cost-840-million-1786285766"></link>
            <id>https://canadamirror.com/article/two-day-prairie-storm-cost-840-million-1786285766</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் மேனிடோபா மற்றும் சாஸ்காட்செவான் ஆகிய மாகாணங்களில் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 840 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் மேனிடோபா மற்றும் சாஸ்காட்செவான் ஆகிய மாகாணங்களில் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 840 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கனமழை, புயல், ஆலங்கட்டி மழை மற்றும் காட்டுத்தீ போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் காரணமாக பில்லியன் கணக்கில் காப்பீட்டு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>டொராண்டோவை மையமாகக் கொண்ட வானிலை பகுப்பாய்வு நிறுவனமொன்றும்கனடாவின் காப்பீட்டுப் பணியகமும் வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b98a34f-c25d-4774-8106-fa051e2f5131/26-6a788ec899034.webp' /></p><p>
</p><p>கடந்த ஜூன் மாதம் மேனிடோபா மற்றும் சாஸ்காட்செவான் ஆகிய மாநிலங்களில் இரு நாட்கள் நீடித்த கடுமையான காற்று, ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை காரணமாகப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>2025-இல் இவ்விரு மாநிலங்களிலும் காப்பீடு செய்யப்பட்ட மொத்த இழப்பு சுமார் $760 மில்லியன் ஆகும். இதில் $430 மில்லியன் காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதங்கள் மட்டுமே.
</p><p>2021-ஆம் ஆண்டு முதல் இவ்விரு பிராந்தியங்களிலும் 30 பேரிடர் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இதனால் ஏற்பட்ட மொத்த இழப்பு $2.5 பில்லியனுக்கும் அதிகமானது.</p><p>
கடந்த 5 ஆண்டுகளில் இப்பகுதியில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் சராசரியாக $1,000 காப்பீட்டு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது முந்தைய ஐந்து ஆண்டு காலக்கட்டத்தை விட 140 சதவீதம் அதிகம் ஆகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T15:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் சட்பரி பகுதியில் கடும் கரப்பான் பூச்சித் தொல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sudbury-woman-says-her-building-is-chronically-1786286404"></link>
            <id>https://canadamirror.com/article/sudbury-woman-says-her-building-is-chronically-1786286404</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் உள்ள சட்பரி நகரில் அமைந்துள்ள பான் தெரு அடுக்குமாடி குடியிருப்பில், கடுமையான கரப்பான் பூச்சித் தொல்லை காரணமாக மக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் உள்ள சட்பரி நகரில் அமைந்துள்ள பான் தெரு அடுக்குமாடி குடியிருப்பில், கடுமையான கரப்பான் பூச்சித் தொல்லை காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
</p><p>ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக மருந்து தெளிப்பதற்குப் பதிலாக, கட்டடம் முழுமைக்கும் ஒரே நேரத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் திரண்டு நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.</p><p>
குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தன் மகனுடன் வசித்து வரும் மிராண்டா தார்ன்டன் என்பவர், பூச்சிப் பொறிகளில் சிக்கிய கரப்பான் பூச்சிகளின் படங்களையும், கொசு வலைக்கூடாரத்திற்குள் உறங்கும் தன் மகனின் படங்களையும் பகிர்ந்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b898f996-2a90-479f-b5a4-129723c9389d/26-6a789146273a1.webp' /></p><p>
</p><p>கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு கரப்பான் பூச்சித் தொல்லை உள்ளது.</p><p> ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது என தெரிவித்துள்ளார்.
</p><p>கடந்த ஜூலை மாதம் எனது வீட்டிற்கு மட்டும் வந்து மருந்து தெளித்தார்கள். </p><p>ஆனால், முழு கட்டடத்திற்கும் தெளிக்காத வரை பூச்சிகள் மீண்டும் வந்துகொண்டே தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T15:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவகத்தில் கோடாரியுடன் மிரட்டல் விடுத்த நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/axe-wielding-man-arrested-outside-vancouver-1786286796"></link>
            <id>https://canadamirror.com/article/axe-wielding-man-arrested-outside-vancouver-1786286796</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே கோடாரியைக் காட்டி மக்களை மிரட்டிய 29 வயது இளைஞரை வியாழக்கிழமை அன்று பொலிஸார் கைது செய்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே கோடாரியைக் காட்டி மக்களை மிரட்டிய 29 வயது இளைஞரை வியாழக்கிழமை அன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
மெயின் ஸ்ட்ரீட் மற்றும் 24-வது அவென்யூ பகுதிக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
</p><p>சந்தேக நபரான அந்த இளைஞர், உணவகத்தின் வெளிப்புறப் பகுதியில் அமர்ந்திருந்த மனிதர்களை நோக்கிச் சாப்பிடும் கரண்டிகள் மற்றும் கத்திகளை வீசியும், தட்டுகளை உடைத்தும் கடுமையான அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0911a59a-c9a4-4289-b092-9381f739543a/26-6a7892cdee4cc.webp' /></p><p>
கையில் கோடாரியை வைத்துக்கொண்டு அங்கு இருந்த மக்களை வெட்டிவிடுவதாக மிரட்டியுள்ளார்.
</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வான்கூவர் பொலிஸார், தங்கள் காவல் துறை நாய் பிரிவின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.</p><p>
கைது செய்யப்பட்ட நபர் காயமடைந்திருந்ததால், முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
பின்னர், குறிப்பிட்ட தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற பிணை நிபந்தனையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வான்கூவர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T15:35:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது; ஈரான் விடாப்பிடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-remands-strait-of-hormuz-not-fully-reopen-1786254202"></link>
            <id>https://canadamirror.com/article/iran-remands-strait-of-hormuz-not-fully-reopen-1786254202</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அது மட்டுமே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அது மட்டுமே போதுமானதாக இருக்காது என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>இதற்கிடையே, அப் பகுதியில் ஈரான் மற்றொரு கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையின் இருபுறமும் அமைந்துள்ள ஈரானும் ஓமானும் புதிய கப்பல் போக்குவரத்து பாதை குறித்த ஒப்பந்தத்தை நெருங்கியுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.</p><p> இருப்பினும், நீரிணையை மீண்டும் திறப்பது அமெரிக்கா ஈரானுக்கு வழங்கும் நஷ்டஈடு உள்ளிட்ட பிற நிபந்தனைகளிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>மேலும், பழைய கப்பல் போக்குவரத்துத் திட்டம் இனி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், நிரந்தரப் பாதை குறித்த சட்ட மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை தற்காலிகப் பாதை குறித்து ஓமானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறினார்.</p><p>நீரிணையின் கட்டுப்பாடு குறித்து எட்டப்படும் ஒப்பந்தம் மூலம் வழமையான எண்ணெய் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்றும், இது பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் தொடங்கிய மோதலை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.</p><p>உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு சென்ற இந்த முக்கிய நீர்வழியில் செல்லும் கப்பல்கள் மீதும், வளைகுடா பகுதியிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. </p><p>இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்ற தனது அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவன தொடர்புடைய சரக்குக் கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-09T12:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யேமனில் மூலிகை மருந்துகளால் உயிருக்கு ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/herbal-medicines-health-crisis-in-yemen-1786277745"></link>
            <id>https://canadamirror.com/article/herbal-medicines-health-crisis-in-yemen-1786277745</id>
            <summary type="text">யேமனில் நிலவும் மோதல்கள் மற்றும் சுகாதார அமைப்பின் வீழ்ச்சி காரணமாக, போதிய மருத்துவ வசதிகளின்றி இலட்சக்கணக்கான மக்கள் மாற்று மூலிகை மருத்துவங்களை நாடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமனில் நிலவும் மோதல்கள் மற்றும் சுகாதார அமைப்பின் வீழ்ச்சி காரணமாக, போதிய மருத்துவ வசதிகளின்றி இலட்சக்கணக்கான மக்கள் மாற்று மூலிகை மருத்துவங்களை நாடிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>தாஸ் பகுதியைச் சேர்ந்த ஜலீலா என்ற பெண், தனக்கு ஏற்பட்ட கல்லீரல் புற்றுநோய்க்கு முறையான சிகிச்சை பெற முடியாமல், மூலிகை மருத்துவத்தை நாடி நோய் முற்றிய நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>யேமனில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவமனைகள் இயங்காத நிலையில், போலி மூலிகை மருத்துவர்கள் மற்றும் தேன் விற்பனையாளர்கள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி வியாபாரம் செய்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>அறிவியல் பூர்வமற்ற இத்தகைய மூலிகை சிகிச்சைகளால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக சுட்டிக்காட்டும் மருத்துவ நிபுணர்கள், அரசாங்கம் இவ்வாறான மூலிகை மையங்கள் மீது உடனடி கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-09T12:25:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை வியக்க வைத்த நைஜீரியா ;1,500 தம்பதிகளுக்குத் திருமணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nigeria-amazes-world-1-500-couples-married-1786277373"></link>
            <id>https://canadamirror.com/article/nigeria-amazes-world-1-500-couples-married-1786277373</id>
            <summary type="text">வடக்கு நைஜீரியாவின் கனோ மாநில ஆளுநர் அப்பா கபீர் யூசுப் ஏற்பாடு செய்திருந்த கூட்டுத் திருமண விழாவில் சுமார் 1,500 தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர் .க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு நைஜீரியாவின் கனோ மாநில ஆளுநர் அப்பா கபீர் யூசுப் ஏற்பாடு செய்திருந்த கூட்டுத் திருமண விழாவில் சுமார் 1,500 தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர் .</p><p>குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சமூக நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்த இரண்டு நாள் நிகழ்வு ஒரு வழி என பிராந்திய அரசாங்கம் விவரித்தது.</p><p>பொருளாதார ரீதியாக நிலையற்ற நிலையில் உள்ள எங்கள் குடும்பங்களுக்கும், கணவன்மார்களாகிய எங்களுக்கும் திருமணம் செய்துகொள்ள உதவுவதே இந்தத் திருமணத்தின் முழு நோக்கமாகும். அதனால்தான் அரசாங்கம் எங்களுக்குத் திருமணம் செய்து வைக்க உதவுகிறது என்று மணமகன் அபுபக்கர் அலியு மூசா அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.</p><p>யூசுப் நிர்வாகம் கூட்டுத் திருமணத்தை ஏற்பாடு செய்வது இது இரண்டாவது முறையாகும்.கானோவின் பிராந்திய அரசாங்கத்தின்படி, ஒவ்வொரு மணமகளுக்கும் 200,000 நைரா (147 டாலர், 127 யூரோ) வரதட்சணையாகவும், ஒரு சிறு தொழிலைத் தொடங்குவதற்கான ஆதரவும் வழங்கப்பட்டது.</p><p>தம்பதியினருக்கு படுக்கைகள், மெத்தைகள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களும் வழங்கப்பட்டன. திருமணத்திற்கு முன்பு தம்பதியினர் பரிசோதனை மற்றும் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p><p>கானோவில் நம்பிக்கையை மீட்டெடுப்பதையும், கண்ணியமான குடும்ப வாழ்க்கையை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு துணிச்சலான சமூகத் தலையீடு" என இந்தத் திட்டத்தை ஆளுநர் யூசுப் விவரித்தார்.</p><p>திருமணச் செலவைச் சமாளிக்க சிரமப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக மட்டுமல்லாமல், குடும்பங்களை வலுப்படுத்தவும், மாநிலத்தில் சமூக நிலைத்தன்மையை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-09T12:09:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் மாணவர்களின் நீச்சல் உடை விற்பனைக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ban-sale-of-student-used-swimwear-in-japan-1786275814"></link>
            <id>https://canadamirror.com/article/ban-sale-of-student-used-swimwear-in-japan-1786275814</id>
            <summary type="text">ஜப்பானில் பயன்படுத்திய பாடசாலை மாணவர்களின் நீச்சல் உடைகளை இணையவழியில் விற்பனை செய்வதற்கு முன்னணி இணையவழி விற்பனை நிறுவனமான மெர்காரி திடீர் தடை விதித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் பயன்படுத்திய பாடசாலை மாணவர்களின் நீச்சல் உடைகளை இணையவழியில் விற்பனை செய்வதற்கு முன்னணி இணையவழி விற்பனை நிறுவனமான மெர்காரி திடீர் தடை விதித்துள்ளது.</p><p>தனிநபர்கள் புதிய மற்றும் பயன்படுத்திய பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் மெர்காரி இணையவழிச் சந்தையில், கடந்த 3ஆம் திகதி முதல் பயன்படுத்திய பாடசாலை நீச்சல் உடைகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஜப்பானில் பாடசாலை மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி உடற்கல்வியின் ஒரு பகுதியாக வழங்கப்படுகின்றது. இதற்காக மாணவர்கள் அணியும் நீச்சல் உடைகள் பொதுவாக கருப்பு அல்லது அடர் நீல நிறத்தில் எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இவை ஜப்பானிய மொழியில் ‘ஸ்கூல் மிசுகி’ என அழைக்கப்படுகின்றன.</p><p>மாணவர்களின் பெயரை எழுதுவதற்கான இடம் உள்ளிட்ட அடையாளங்கள் சில நீச்சல் உடைகளில் இடம்பெற்றிருப்பதுடன், சில பாடசாலைகளின் சின்னங்களும் அச்சிடப்பட்டிருக்கும்.</p><p>குழந்தைகள் வளர்ச்சியடைவதால், குறுகிய காலமே பயன்படுத்தப்பட்ட நிலையில் நல்ல தரத்திலுள்ள நீச்சல் உடைகள் பல வீடுகளில் மீதமாகின்றன. இதனால், அவற்றை மீண்டும் விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் குடும்பங்கள் இணையவழிச் சந்தைகளை பயன்படுத்தி வந்துள்ளன.</p><p>எனினும், பயன்படுத்திய பாடசாலை நீச்சல் உடைகளுக்கு சிலர் தவறான நோக்கத்துடன் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்து, அவற்றின் விற்பனையை மெர்காரி நிறுவனம் தடை செய்துள்ளது.</p><p>பயன்படுத்திய பாடசாலை நீச்சல் உடைகள் குறிப்பிட்ட சிலரால் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதாகவும், குறிப்பாக அவை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவையாக இருப்பது சில வாங்குபவர்களுக்கு ஈர்ப்பாக அமைவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>இத்தகைய நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் விற்பனைப் பரிவர்த்தனைகளை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என எச்சரித்துள்ள நிறுவனம், தடையை மீறி விற்பனை செய்ய முயற்சிக்கும் நபர்களின் கணக்குகள் முடக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T11:44:08+00:00</updated>
        </entry>
    </feed>
