<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-21T17:51:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்ப்பின் புதிய வரி அச்சுறுத்தல்: நியாயமற்றது கியூபெக் முதல்வர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/quebec-premier-calls-trumps-new-tariff-threat-1784650327"></link>
            <id>https://canadamirror.com/article/quebec-premier-calls-trumps-new-tariff-threat-1784650327</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வைன், ஹாக்கி மட்டைகள் மற்றும் சிமெண்ட் உட்படப் பல பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 சதவீத புதிய வரியை விதிக்கப்போவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வைன், ஹாக்கி மட்டைகள் மற்றும் சிமெண்ட் உட்படப் பல பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 சதவீத புதிய வரியை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.</p><p>
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை "நியாயமற்றது மற்றும் கவலையளிப்பது" என கனடாவின் கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
</p><p>அமெரிக்க மதுபானங்களுக்குக் கனடா மாகாணங்கள் விதித்துள்ள தடைகள், அமெரிக்க சீஸ் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் மற்றும் கார்கள் மீதான வரிகளுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76968c1b-49db-4cde-b8d2-02f299999766/26-6a5f9a594e2c2.webp' /></p><p>
அமெரிக்காவின் இந்த புதிய அச்சுறுத்தல் குறித்து எக்ஸ் (X) தளத்தில் கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட் பதிவிட்டுள்ளார்.</p><p>
டிரம்ப் நிர்வாகத்தின் புதிய வரி அச்சுறுத்தல்கள் நியாயமற்றவை மற்றும் கவலையளிப்பவை. நமது பொருளாதாரம், தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க நான் தொடர்ந்து போராடுவேன் என தெரிவித்துள்ளார்.
</p><p>விநியோக நிர்வாக அமைப்பைச் தளர்த்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை, அதில் நாங்கள் எந்த சமரசமும் இன்றித் உறுதியாக நிற்போம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும், கியூபெக் வணிகங்களுக்குத் தீர்க்கமான சூழல் தேவைப்படும் இந்த நேரத்தில், பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவது மிகவும் தவறான அணுகுமுறை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T17:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 வயது சிறுவன் மீது கத்திக்குத்து —இளம் பெண் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/17-year-old-critically-injured-in-stabbing-1784651080"></link>
            <id>https://canadamirror.com/article/17-year-old-critically-injured-in-stabbing-1784651080</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் மிசிசாகா நகரில் பேருந்து ஒன்றுக்குள்ளேயே 17 வயது சிறுவனைக் கத்தியால் குத்திக் கொடூரமாகத் தாக்க முயன்ற குற்றத்திற்காக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் மிசிசாகா நகரில் பேருந்து ஒன்றுக்குள்ளேயே 17 வயது சிறுவனைக் கத்தியால் குத்திக் கொடூரமாகத் தாக்க முயன்ற குற்றத்திற்காக 18 வயது இளம் பெண்ணைக் காவல் துறையினர் கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். </p><p>
செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 1:50 மணியளவில் ஹூரோன்டாரியோ தெரு மற்றும் வாட்லைன் டிரைவ் அருகே இயங்கிக் கொண்டிருந்த 'மிவே' பேருந்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. </p><p>
செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பீல் பிராந்திய காவல் துறை அதிகாரிகள் இதுகுறித்த விவரங்களை வெளியிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df964a1-8ffe-4d4d-9b9e-217faa9f1e29/26-6a5f9d4a270d1.webp' /></p><p>தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுவனும், கத்தியால் குத்திய 18 வயது இளம் பெண்ணும் முன்பே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
பேருந்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அந்தப் பெண் சிறுவனைக் கத்தியால் குத்தியுள்ளார். </p><p>
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அச்சிறுவன் டொராண்டோவில் உள்ள அதி தீவிர சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டார்.</p><p>
 தொடக்கத்தில் அவரது நிலை சீராக இருந்தபோதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 
சம்பவ இடத்திலேயே 18 வயது பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது பின்வரும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இது இருவருக்குள் தனிப்பட்ட முறையில் நடந்த சம்பவம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு வேறு எந்தப் அச்சுறுத்தலும் இல்லை என்றும் புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கும் இடையிலான உறவின் தன்மை என்ன என்பது குறித்தும், அவர்கள் இருவரும் ஒன்றாகப் பேருந்தில் ஏறினார்களா என்பது குறித்தும் இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T17:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ண FIFA இறுதிப் போட்டி முடிந்ததும் அடிதடி! மைதானத்தில் நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/what-happened-on-the-field-after-world-cup-final-1784639529"></link>
            <id>https://canadamirror.com/article/what-happened-on-the-field-after-world-cup-final-1784639529</id>
            <summary type="text">2026 ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இரு அணிகளின் வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் ஏற்பட்ட கடும் மோதல் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இரு அணிகளின் வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் ஏற்பட்ட கடும் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இறுதிப் போட்டி முடிவடைந்த சில நிமிடங்களிலேயே ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா வீரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. </p><p>இந்தச் சம்பவத்தில் அர்ஜென்டினாவின் நடுகள வீரர் லியாண்ட்ரோ பரேடேஸ் (Leandro Paredes) தொடர்பாக ஆரம்பத்தில் சிவப்பு அட்டை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41eb95e0-1d56-4021-a148-f79823ae9e89/26-6a5f702a9d353.webp' /></p><p>எனினும், பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில், பரேடேஸுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>போட்டி முடிவடைந்த பின்னர் சம்பவம் இடம்பெற்றதால், நடுவர்கள் அதில் அதிகாரபூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p>போட்டியின் இறுதி விசில் ஒலித்த சில நிமிடங்களில், இரு அணிகளின் வீரர்களும் ஒருவரை ஒருவர் எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளிகளில், பரேடேஸ் ஸ்பெயின் பின்கள வீரர் எரிக் கார்சியாவுடன் மோதலில் ஈடுபடுவதும், அவரை தள்ளுவதும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஸ்பெயின் வீரர் காவியையும் (Gavi) அவர் தள்ளியதாகவும், இதன்போது காவி தரையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>பல ஊடக அறிக்கைகளின்படி, இந்த மோதலுக்கு ஆரம்ப காரணமாக அமைந்தது அர்ஜென்டினா வீரர் நஹுயல் மோலினாவின் செயற்பாடாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e1b392e-a1eb-415d-955d-427e54ce681b/26-6a5f702b4ee4a.webp' /></p><p>

ஸ்பெயின் வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, மோலினா ஸ்பெயின் அணித் தலைவர் ரோட்ரியை நோக்கி ஆவேசமாகச் சென்றதாகவும், இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p>

நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஸ்பெயின் வீரர்கள் எரிக் கார்சியா உள்ளிட்டோர் ரோட்ரிக்கு ஆதரவாக வந்ததாகவும், அதன் பின்னரே மோதல் அதிகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றபோது, அர்ஜென்டினா அணியின் தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி வீரர்களை அமைதிப்படுத்த முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
உலகக் கிண்ணம் போன்ற மிகப்பெரிய போட்டியின் இறுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், வீரர்களின் நடத்தை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-21T17:28:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு மனித கடத்தல்: சிக்கிய மெக்சிக்கோ பிரஜைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/3-mexicans-admit-being-part-of-group-smuggling-1784649473"></link>
            <id>https://canadamirror.com/article/3-mexicans-admit-being-part-of-group-smuggling-1784649473</id>
            <summary type="text">கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக மக்களை அழைத்து வந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த மெக்சிகோவைச் சேர்ந்த மூவர் தங்களது குற்றத்தை நீதிமன்றத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக மக்களை அழைத்து வந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த மெக்சிகோவைச் சேர்ந்த மூவர் தங்களது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>நூற்றுக்கணக்கான நபர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவச் செய்த சர்வதேசக் கும்பலில் இந்த மூவருக்கும் தொடர்பிருப்பது அமெரிக்க நீதித் துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>
சட்டவிரோதமாக நபர்களைக் கடத்துவதற்கான சதித்திட்டம் தீட்டியது மற்றும் நிதி ஆதாயத்திற்காக நபர்களைக் கடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளை இவர்கள் மூவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db9343ae-e7cd-4232-a311-65e787829e11/26-6a5f97033a2a7.webp' /></p><p>
</p><p>இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்படவுள்ளது. 
குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு 5 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.</p><p>
இதே வழக்கில் தொடர்புடைய மற்றொரு இணை குற்றவாளி கடந்த மே மாதமே தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்குச் செப்டம்பர் மாதத்தில் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
</p><p>வடக்கு நியூயார்க் மாநிலத்தில் இயங்கி வரும் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி இன்வெஸ்டிகேஷன்ஸ் மற்றும் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவை இணைந்து இந்த விரிவான விசாரணையை மேற்கொண்டன. </p><p>
கனடா எல்லை வழியே நடைபெறும் சட்டவிரோதக் கடத்தல்களைத் தடுக்கும் நோக்கில் தீவிர நடவடிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T17:00:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்கேட்டிங் செய்த 10 வயது சிறுமி விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/10-year-old-girl-dies-in-wellesley-collision-1784645266"></link>
            <id>https://canadamirror.com/article/10-year-old-girl-dies-in-wellesley-collision-1784645266</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வெல்ஸ்லி டவுன்ஷிப்பில் ரோலர்பிளேடிங் எனப்படும் சக்கர காலணிகளுடன் ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்த 10 வயது சிறும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வெல்ஸ்லி டவுன்ஷிப்பில் ரோலர்பிளேடிங் எனப்படும் சக்கர காலணிகளுடன் ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்த 10 வயது சிறுமி, வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.</p><p>
ஏமென்ட் லைன் பகுதியில் ரோடு 116 அருகில் சிறுமி ஒருவர் வேன் மோதி விபத்தில் சிக்கியதாக அவசரக்கால மீட்புக் குழுவினருக்குத் தகவல் கிடைத்தது.
</p><p>விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி, உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ac1cf5a-d254-4848-b183-feb8ceab433d/26-6a5f8693ad0d5.webp' /></p><p>
</p><p>அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக வாட்டர்லூ பிராந்திய காவல் துறை அறிவித்தது.</p><p>
 விபத்தை ஏற்படுத்திய வேனை ஓட்டி வந்த 71 வயதான ஹூரான் கவுண்டியைச் சேர்ந்த நபருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து வாட்டர்லூ பிராந்திய காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T16:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்பர்ட்டாவில் காட்டுத்தீப் புகை மூட்டம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/air-quality-advisories-blanketing-1784644991"></link>
            <id>https://canadamirror.com/article/air-quality-advisories-blanketing-1784644991</id>
            <summary type="text">&amp;nbsp;அல்பர்ட்டா மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அளவிலான காற்றுத் தர எச்சரிக்கைகளை தூண்டியுள்ளது.
 கனடாவின் பிரிட்டிஷ் கொலம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அல்பர்ட்டா மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அளவிலான காற்றுத் தர எச்சரிக்கைகளை தூண்டியுள்ளது.
</p><p> கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா, வடமேற்குப் பகுதிகள் மற்றும் வடக்கு அல்பர்ட்டா ஆகிய பகுதிகளில் பரவி வரும் கடும் காட்டுத்தீ காரணமாக உருவான அடர்ந்த புகை மூட்டம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>
இந்த அடர்ந்த புகையினால் கல்கரி மக்களுக்குச் சுவாசப் பிரச்சினைகள் மற்றும் சுகாதார ஆபத்துகள் ஏற்படுவதுடன், பார்வைத்திறனும் வெகுவாகக் குறையக்கூடும் என 'கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை' எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/783bbd9c-a27e-4d55-947e-86e8458a2d3d/26-6a5f8580e4225.webp' /></p><p>
செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, கல்கரியின் காற்றுத் தரக் குறியீடு 6 ஆகப் பதிவாகியுள்ளது. </p><p>இது மிதமான ஆபத்து நிலவரத்தைக் குறிக்கிறது. 
செவ்வாய்க்கிழமை கல்கரியில் 25°C வரை வெப்பநிலை உயரும் எனக் கணிக்கப்பட்டிருந்தாலும், புகை மூட்டம் அதிகமாக இருந்தால் சூரியக் கதிர்கள் புவியின் மேற்பரப்பை அடைவது தடுக்கப்பட்டு வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது.</p><p> 
மேற்பரப்புக் காற்று தென்கிழக்கிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி மணிக்கு 15 - 25 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.</p><p> எனினும், மேல் அடுக்குக் காற்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி கல்கரியை நோக்கி வீசுவதால், காட்டுத்தீ தீவிரமாக இருக்கும் பகுதிகளிலிருந்து மேலும் புகை நகர்ந்து வரக்கூடும்.
செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T16:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காணாமல் போன சிறுவர்கள்— சோகத்தில் மூழ்கிய குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-boys-missing-at-nutimik-lake-1784643970"></link>
            <id>https://canadamirror.com/article/two-boys-missing-at-nutimik-lake-1784643970</id>
            <summary type="text">கனடாவின் மணிடோபா மாகாணத்தில் உள்ள நூடிமிக் ஏரியில் வார இறுதியில் நீரில் மூழ்கி மாயமான இரு சிறுவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மணிடோபா மாகாணத்தில் உள்ள நூடிமிக் ஏரியில் வார இறுதியில் நீரில் மூழ்கி மாயமான இரு சிறுவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>10 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்கள் சனிக்கிழமையன்று ஸ்டர்ஜன் நீர்வீழ்ச்சியின் வேகமான நீர்ரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>10 வயது சிறுவன் பாறைகளில் நழுவி நீரில் விழுந்துள்ளான். அவனைக் காப்பாற்றும் நோக்கில், 13 வயது சிறுவனும் உடனடியாக நீரில் குதித்துள்ளான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e8a64e7-a692-43c8-9749-cf6ff90f8790/26-6a5f818419c7e.webp' /></p><p>
</p><p> ஆனால், துரதிர்ஷ்டவசமாக இருவருமே நீரோட்டத்தில் சிக்கி நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
ஸ்ரெகன் பால்ஸ் ட்ரெயல் பகுதியில் நபர் நீரில் மூழ்கியதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p>
லாக் டு பொன்னெட் பிரிவின் அதிகாரிகள், ஹட்டேரியன் அவசர நீர் மீட்புக் குழு மற்றும் மணிடோபா கடற்படைப் பிரிவு ஆகியவை இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
</p><p>நீர்நிலைகள் மற்றும் கரைப் பகுதிகளைக் கண்காணிக்க டிரோன்கள் மற்றும் சோனார் பொருத்தப்பட்ட படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>
அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்களும் தங்களது சொந்தப் படகுகள் மூலம் தேடுதல் நடவடிக்கைக்கு உதவி வருகின்றனர்.</p><p>
தொடர்ந்து இரண்டு நாட்களாகத் தேடியும் சிறுவர்கள் கண்டறியப்படாததால், இந்த நடவடிக்கை தற்போது உடல்களை மீட்பதற்கான செயல்பாடாக மாறியிருக்கக் கூடும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>கோடைகாலத்தில் நீர்நிலைகள் மற்றும் சாலைகளுக்குச் செல்லும்போது பொதுமக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T15:27:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயானா படகு விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலி, 83 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/27-dead-83-missing-in-guyana-ferry-accident-1784622951"></link>
            <id>https://canadamirror.com/article/27-dead-83-missing-in-guyana-ferry-accident-1784622951</id>
            <summary type="text">தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால் இடம்பெற்ற பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால் இடம்பெற்ற பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>கடந்த சனிக்கிழமை (18) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மீட்புப் பணியாளர்கள் இதுவரை 69 பேரை உயிருடன் மீட்டுள்ள நிலையில், மேலும் 83 பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்பத்தில் குறித்த படகில் 133 பேர் பயணித்ததாக பதிவுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. எனினும், மீட்கப்பட்டவர்களில் பலரின் பெயர்கள் உத்தியோகபூர்வ பயணிகள் பட்டியலில் இடம்பெறாததால், படகில் 179 பேர் வரை பயணித்திருக்கலாம் என கயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e31e2509-a985-4b19-8233-a0aca0028196/26-6a5f2f69080db.webp' /></p><p>விபத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், படகின் ஓட்டுநர் மற்றும் ஊழியர் ஒருவர் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்திய பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுவான் எட்ஜில் தெரிவித்துள்ளார்.
</p><p>
பணிநேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியமை மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், படகோட்டி மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>கயானா தலைநகர் ஜோர்ஜ்டவுனில் இருந்து போர்ட் கைடூமா பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த படகு, சனிக்கிழமை இரவு 11.01 மணியளவில் ஆபத்து சமிக்ஞையை அனுப்புவதற்கு முன்பே கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விபத்தில் உயிர் தப்பிய பயணி எலினா மூன்சாமி, மிகப்பெரிய அலை ஒன்று மோதிய சில விநாடிகளிலேயே படகுக்குள் நீர் புகுந்து அது கவிழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

"மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்றைப் பிடித்துக்கொண்டு உயிர் பிழைத்தேன்.</p><p>ஆனால், எனது 2 வயது குழந்தையின் கையை பிடித்திருந்தபோதும், அலையின் வேகத்தில் எனது கை நழுவி குழந்தை நீரில் மூழ்கியது" என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b6b2ae4-5462-443a-94da-3fa3c7573fa9/26-6a5f2f69ad7b1.webp' /></p><p>மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக அருகிலுள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து பிரெஞ்சு இராணுவம் 12 அனுபவமிக்க உயிர்காப்புப் பணியாளர்கள், இரண்டு வைத்தியர்கள் மற்றும் ஒரு மெக்கானிக் ஆகியோரை அனுப்பியுள்ளது.
</p><p>
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சிறிய தனியார் மீன்பிடிப் படகுகள் கடலில் மிதந்து கொண்டிருந்த 17-க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளன.
</p><p>
மீட்கப்பட்ட 69 பேரில் 15 சிறுவர்களும் அடங்குகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் மார்க் பிலிப்ஸ்,

"காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதே எங்களின் முழு கவனமாக உள்ளது. இன்னும் நம்பிக்கை உள்ளது. </p><p>இந்த துயரச் சம்பவத்திற்கு அதிகாரிகளின் அலட்சியம், விதிமீறல் அல்லது குற்றவியல் தவறுகள் காரணமாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்" என எச்சரித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-21T13:21:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் துறைமுகத்தில் கொடூர தாக்குதல் ; 4 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/brutal-attack-at-ukrainian-port-10-4-indian-killed-1784635533"></link>
            <id>https://canadamirror.com/article/brutal-attack-at-ukrainian-port-10-4-indian-killed-1784635533</id>
            <summary type="text">தெற்கு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 4 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 4 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசௌவின் கொடியுடன் பயணித்த ‘எம்.வி. கோல்டன் லியோ’ என்ற சரக்குக் கப்பல், ஒடேசா துறைமுகத்தில் இருந்து சோளம் ஏற்றிக்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டுள்ளது.
</p><p>
அப்போது, கப்பலை இலக்காகக் கொண்டு ரஷ்யா மூன்று ‘க்ரூஸ்’ ஏவுகணைகளை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aff64e7-e711-4f93-9325-4e6d979cbdb2/26-6a5f608ea659d.webp' /></p><p>தாக்குதலையடுத்து கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளின் போது, கப்பலில் பணியாற்றிய 17 மாலுமிகளில் 8 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
எனினும், 9 மாலுமிகள் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த கடல்வழி வழிகாட்டி ஒருவர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 4 பேர் இந்தியர்கள் என இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>மேலும், காயமடைந்த மற்றொரு இந்தியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், வணிகக் கப்பல்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.</p><p>

“சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், சர்வதேச கடல் போக்குவரத்து சுதந்திரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது” என இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, கருங்கடல் மற்றும் அசோவ் கடல் பகுதிகளில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.
</p><p>
ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உக்ரைன் இலக்காகக் கொண்டு தாக்கி வரும் நிலையில், உக்ரைனின் தானிய ஏற்றுமதி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கப்பல்களை ரஷியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எனினும், ‘எம்.வி. கோல்டன் லியோ’ கப்பல் மீதான தாக்குதல் தொடர்பாக ரஷ்யா இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-21T12:05:43+00:00</updated>
        </entry>
    </feed>
