<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-02T13:28:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேங்க் ஆப் அமெரிக்கா துணைத்தலைவர் கொலை செய்த பெண் ; சம்பவத்தால் ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-kills-bank-of-america-vice-president-1788355640"></link>
            <id>https://canadamirror.com/article/woman-kills-bank-of-america-vice-president-1788355640</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயரில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்த பெண், பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவனத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயரில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்த பெண், பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவனத்தின் துணைத் தலைவர் எரின் பியாசென்டி என்பது தெரியவந்துள்ளது. </p><p>

32 வயதான அவர், சமீபத்தில் குழந்தையை பெற்றெடுத்து, மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பியிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77114bad-e0b7-4cdb-ba71-1b32c76af9f4/26-6a98243a91044.webp' /></p><h2>49 வயதான பமீலா சிஸ்னெரோஸ்</h2><p>
</p><p> 
 
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற எரின், பேங்க் ஆஃப் அமெரிக்காவின் வணிகத்தேர்வு மற்றும் மோதல் விவகாரங்கள் தொடர்பான பிரிவில் துணை தலைவராக பணியாற்றி வந்தார். </p><p>ஃபோர்டாம் சட்டப் பள்ளியில் சட்ட பட்டமும் பெற்றிருந்தார். அவரது கணவர் ஃபிராங்க் பியாசென்டியும் அதே காலகட்டத்தில் சட்டப் படிப்பை முடித்தவர்.</p><p>
 
கொலைக்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் எரின் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

குழந்தையை கவனிப்பதற்காக ஐந்து மாதங்கள் விடுப்பு எடுத்திருந்த அவர், குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.</p><p>
 
தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் 49 வயதான பமீலா சிஸ்னெரோஸ் என்ற பெண்ணை போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். </p><p>

அவருக்கு கடந்த காலங்களில் மனநல பிரச்சினைகள் தொடர்பாக போலீசாருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T13:24:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் திருமண நிகழ்வில் அமெரிக்கா தாக்குதல் ; 05 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-strike-on-wedding-in-iran-5-killed-1788347450"></link>
            <id>https://canadamirror.com/article/us-strike-on-wedding-in-iran-5-killed-1788347450</id>
            <summary type="text">&amp;nbsp; ஹோர்முஸ் நீரிணை அருகிலுள்ள தெற்கு ஈரானின் சீரிக் பகுதியிலுள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் நடைபெற்ற திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹோர்முஸ் நீரிணை அருகிலுள்ள தெற்கு ஈரானின் சீரிக் பகுதியிலுள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் நடைபெற்ற திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கப் படைகள்&nbsp; தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>இந்த&nbsp; தாக்குதலில் 04 வயதுக் குழந்தை உட்பட 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35184868-e828-499e-8348-6649a3cca4c5/26-6a9804414d6e4.webp' /></p><h2>&nbsp;அமெரிக்கப் படைகள் தொடர் வான்வழித் தாக்குதல்</h2><p>
</p><p>
இந்த தாக்குதலை ஈரானிய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்தியாவிலுள்ள ஈரானியத் தூதரகம் ஆகியவை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இதனை "அமெரிக்கப் பயங்கரவாத இராணுவத்தின் கொடூரக் குற்றம்" எனச் சாடியுள்ளன.</p><p>

செவ்வாய்க்கிழமை அன்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
</p><p>
ஈரானிய வான் பாதுகாப்பு தளங்கள், ரேடார் அமைப்புகள், கடற்படை உள்கட்டமைப்புகள், கண்ணிவெடி வைக்கும் வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு மையங்கள் மீது இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
</p><p>

அமெரிக்காவின் இத்தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர காவல் படைகள் ஜோர்தான், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இலக்கு வைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

ஜோர்தானிய வான்வெளியில் நுழைந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
பஹ்ரைனில் ஈரானிய ட்ரோன்கள் அழிக்கப்பட்ட நிலையில், வடக்கு ஈராக்கின் அர்பிலில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படைகள் அறிவித்துள்ளது.</p><p>

கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடந்துள்ள மிக மோசமான நேரடி இராணுவ மோதல் இதுவாகும். இதனால் மேற்காசியாவில் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T12:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துருக்கி அருகே இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-cargo-ships-collide-near-turkey-1788351899"></link>
            <id>https://canadamirror.com/article/two-cargo-ships-collide-near-turkey-1788351899</id>
            <summary type="text">&amp;nbsp; துருக்கியின் இஸ்தான்புல் நகரின் சிலிவ்ரி மாவட்டக் கடற்பகுதியில் இன்று அதிகாலை இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 10 மாலுமிகள் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; துருக்கியின் இஸ்தான்புல் நகரின் சிலிவ்ரி மாவட்டக் கடற்பகுதியில் இன்று அதிகாலை இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 10 மாலுமிகள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>


கோகோவெலியில் இருந்து அலியாகா நோக்கிச் சென்ற ‘அல்சு’ என்ற கப்பலும், இஸ்கெண்டருன் துறைமுகத்திலிருந்து கராடெனிஸ் எரேக்லி நோக்கிச் சென்ற ‘துக்பெர்க் இமாமோக்ளு’ என்ற கப்பலும் அதிகாலை 3 மணியளவில் மோதியதாக இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/740158ce-ddf7-4def-b0f2-d06a692f809b/26-6a98159db3a90.webp' /></p><p>



மோதலில் ‘அல்சு’ கப்பலுக்கு சிறியளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ‘துக்பெர்க் இமாமோக்ளு’ கப்பல் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்துள்ளது. அதில் இருந்த 10 மாலுமிகளே தற்போது காணாமல் போயுள்ளனர்.</p><p>



கடலோர பாதுகாப்புப் படையினரின் கப்பல்கள் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர் உதவியுடன் காணாமல் போன மாலுமிகளைத் தேடும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T12:56:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்பர்ட்டா மாகாண உணவு வங்கிகளின் மோசமான நிலைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/empty-shelves-at-alberta-food-banks-1788349364"></link>
            <id>https://canadamirror.com/article/empty-shelves-at-alberta-food-banks-1788349364</id>
            <summary type="text">Bare shelves at Alberta food banks making the organizations anxious: கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், உணவு வங்கிகள் வெறுமையாக உள்ளதால் அவற்றின் நிர்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bare shelves at Alberta food banks making the organizations anxious: கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், உணவு வங்கிகள் வெறுமையாக உள்ளதால் அவற்றின் நிர்வாகிகள் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள உணவு வங்கிகளின் சேமிப்பகங்களில், உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தட்டுகள் உயரமாக அடுக்கப்பட வேண்டிய இடங்களில், அலமாரிகள் காலியாக இருக்கின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f660bef-7388-484b-9c8e-4714ed13b364/26-6a980bb5c451d.webp' /></p><p>
வழக்கமாக, ஸ்பான்சர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று அவற்றை கிளை உணவு வங்கிகளுக்கு அனுப்புவோம். </p><p>ஆனால், இப்போது சேமிப்பகங்கள் வெறுமையாக உள்ளன என்கிறார் Food Banks Alberta அமைப்பின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான டேரில் பர்ரி.
</p><p>
இந்த அமைப்பு, ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள 112 கிளை உணவு வங்கிகளுக்கு பொருட்களை அனுப்புகிறது.
</p><p>
2025ஆம் ஆண்டு, இந்த அமைப்பு 3.36 மில்லியன் பவுண்டுகள் அளவுடைய பொருட்களை மாகாணம் முழுவதற்கும் அனுப்பியது.
</p><p>
இந்த ஆண்டிலோ, தேவை அதிகரித்துள்ளதால், ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே முந்தைய ஆண்டு அனுப்பிய அளவில் 90 சதவிகிதத்தை அனுப்பியாயிற்று.
</p><p>
விடயம் என்னவென்றால், பண்டிகை நாட்கள் நெருங்கிவரும் நிலையில், சேமிப்பகங்கள் காலியாக உள்ளதால், என்ன செய்வதென தெரியாமல் கவலையடைந்துள்ளனர் உணவு வங்கிகளின் நிர்வாகிகள்.</p><p>

அதாவது, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி, மாதம் ஒன்றிற்கு சராசரியாக 210,000 பேர் உணவு வங்கிகளுக்கு வந்து உணவுப்பொருட்களைப் பெற்றுச் சென்றுள்ளார்கள்.
</p><p>
இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 22 சதவிகிதம் அதிகம்.
</p><p>
அப்படியானால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே ஏராளமானோர் உனவு வங்கிகளைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
</p><p>
அதாவது, தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக உணவு வங்கிகளை நாடும் மக்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்பது இதன் பொருள் ஆகும்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T11:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[200 நாள் கடல் வாழ்க்கைக்கு முடிவு; ; ஓய்வெடுக்க தாய்லாந்து செல்லும் 5000 அமெரிக்க வீரர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/uss-abraham-lincoln-5-000-troops-rest-in-thailand-1788328381"></link>
            <id>https://canadamirror.com/article/uss-abraham-lincoln-5-000-troops-rest-in-thailand-1788328381</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலில் பட்டாயா அருகே உள்ள Laem Chabang துறைமுகத்தை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p> 
வீரர்களுக்கு ஓய்வு மற்றும் புத்துணர்வு அளிக்கும் வகையில் கரையோர பகுதிகளில் நேரம் செலவிட அனுமதி வழங்கப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38fd0127-c144-418b-b476-03e53012010b/26-6a97b9bee0c34.webp' /></p><h2>சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கக்கூடும்&nbsp;&nbsp;</h2><p> இதனால் பட்டாயாவில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள், கடைகள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கு குறுகிய காலத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>ஒவ்வொரு அமெரிக்க வீரரும் தினமும் சுமார் 1,000 முதல் 3,000 தாய் பாட் வரை செலவு செய்யக்கூடும் என பட்டாயா மேயர் தெரிவித்துள்ளார்.
</p><p> 
அதே நேரத்தில், வீரர்களின் வருகையால் சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் போலீசாரிடம் உள்ளது. </p><p>இதையடுத்து கடற்கரை மற்றும் முக்கிய இரவு நேர பொழுதுபோக்கு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 40 முதல் 50 பேர் பாலியல் தொழில் தொடர்பான சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
 
வியட்நாம் போர் காலத்திலிருந்தே அமெரிக்க ராணுவ வீரர்களின் ஓய்வு சுற்றுலாவுடன் பட்டாயாவுக்கு நீண்ட தொடர்பு உள்ளது. 

தற்போது 200 நாட்களுக்கும் மேலாக கடலில் இருந்த USS Abraham Lincoln வீரர்களின் வருகை, நகரின் சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தற்காலிக ஊக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-02T11:08:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 தரம் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/2026-grade-5-scholarship-examination-results-1788346535"></link>
            <id>https://canadamirror.com/article/2026-grade-5-scholarship-examination-results-1788346535</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வௌியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வௌியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>

பெறுபேறுகளை https://www.doenets.lk/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff4954d0-5bf7-4559-b3e1-220f27039525/26-6a9802c078866.webp' /></p>]]></content>
            <updated>2026-09-02T10:54:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் நூதன கொள்ளை ; பீர் திருட்டு குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/novel-robbery-america-rewad-information-beer-theft-1788341507"></link>
            <id>https://canadamirror.com/article/novel-robbery-america-rewad-information-beer-theft-1788341507</id>
            <summary type="text">அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரே நாளில் சுமார் 18,000 கிலோ பீர் மர்மமான முறையில் திருடப்பட்டுள்ளது.

மாண்ட்லெயார் பகுதியில் உள்ள பீர் விற்பனை மையத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரே நாளில் சுமார் 18,000 கிலோ பீர் மர்மமான முறையில் திருடப்பட்டுள்ளது.
</p><p>
மாண்ட்லெயார் பகுதியில் உள்ள பீர் விற்பனை மையத்தில், துணை ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் போல நடித்த மர்ம நபர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி இரண்டு லோடு பீர் சரக்குகளை லாரிகளில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
</p><p>
மொத்தம் சுமார் 70,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள பீர் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7267fca6-beb6-4a31-9a02-63996c135e47/26-6a97ed0479035.webp' /></p><p>சம்பவத்தையடுத்து பீர் நிறுவனமான Pabst Blue Ribbon, திருடப்பட்ட சரக்குகளை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. </p><p>மேலும், திருடர்களை கிண்டலடிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளையும் வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் விளம்பர யுக்தி அல்ல என்றும், உண்மையான திருட்டு சம்பவமே என மாண்ட்லெயார் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>

இரு திருட்டுச் சம்பவங்களும் ஒரே திட்டமிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-02T09:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[“மறைமுகத் தாக்குதலை நிறுத்துங்கள்” ; டிரம்புக்கு கார்னியின் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/stop-the-covert-attack-carney-stern-warning-trump-1788339789"></link>
            <id>https://canadamirror.com/article/stop-the-covert-attack-carney-stern-warning-trump-1788339789</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மீம்ஸ்கள் மற்றும் மறைமுகமான விமர்சனங்கள் மூலம் கனடாவை தாக்குவதை நிறுத்த வேண்டும் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மீம்ஸ்கள் மற்றும் மறைமுகமான விமர்சனங்கள் மூலம் கனடாவை தாக்குவதை நிறுத்த வேண்டும் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.</p><p>

அமெரிக்கா–கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துள்ள நிலையில், டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரி, ஏரியின் பெயர் மாற்றம் மற்றும் பென்டகன் வெளியிட்ட சில கேலிச் சித்தரிப்புகள் உள்ளிட்ட விடயங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/157a88f1-2347-403a-aad4-53e7f4ca490e/26-6a97e64ed3ee8.webp' /></p><p>இந்நிலையில், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மார்க் கார்னி, அமெரிக்கா பேச்சுவார்த்தைகளில் தீவிர கவனம் செலுத்தினால் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
கனடாவின் தொழில்துறைகள் படிப்படியாக சுருங்கி அழியும் வகையிலான நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைப்பதாகவும், அவ்வாறான நிபந்தனைகளை கனடா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், “மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள். கடுமையாக நடந்துகொள்ள முயற்சிப்பதையும் நிறுத்துங்கள்” என டிரம்ப் நிர்வாகத்துக்கு கார்னி பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>

மற்றவர்களை குறைகூறுவதையும், தங்களை வலிமையானவர்களாக காட்டிக்கொள்ள முயற்சிப்பதையும் அமெரிக்கா கைவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் எனவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T09:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்கால உலகை மாற்றப்போகும் ரோபோக்கள் ; எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/robots-will-change-the-future-world-elon-musk-s-1788337426"></link>
            <id>https://canadamirror.com/article/robots-will-change-the-future-world-elon-musk-s-1788337426</id>
            <summary type="text">அடுத்த 10 ஆண்டுகளில் உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வரும் என டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 10 ஆண்டுகளில் உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வரும் என டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கருத்தை அவர் தனது சமூக வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்.
</p><p>
ரோபோக்களே புதிய ரோபோக்களை உற்பத்தி செய்யத் தொடங்கும் பட்சத்தில், அவற்றின் எண்ணிக்கையும் வளர்ச்சியும் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் அதிகரிக்கும் என எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e96ec324-159c-4362-8b88-223ee1a8bee9/26-6a97dd133c415.webp' /></p><p>அத்துடன், எதிர்காலத்தில் ஒரு மனித உருவ ரோபோவின் செயல்திறன் மனிதனை விட சுமார் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் எனவும் அவர் கணித்துள்ளார்.
</p><p>
மேலும், இன்னும் ஒரு வருடத்திற்குள் செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் மனிதனின் அறிவாற்றல் திறன்களை விஞ்சிவிடும் எனவும், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் மனிதகுலத்தின் ஒட்டுமொத்த நுண்ணறிவையும் செயற்கை நுண்ணறிவு மிஞ்சக்கூடும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், இவை எலான் மஸ்க் வெளியிட்டுள்ள எதிர்காலம் தொடர்பான கணிப்புகளே என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">ELON MUSK: A billion humanoid robots will be more productive than all humans combined within 10 years.<br><br>“There will be at least a billion robots in 10 years, and each will produce at least five times the output of a human.” <a href="https://t.co/4N6etC48L5">pic.twitter.com/4N6etC48L5</a></p>&mdash; DogeDesigner (@cb_doge) <a href="https://x.com/cb_doge/status/2094793785523962255?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-02T08:24:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எகிப்தில் பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/16-killed-in-bus-accident-in-egypt-1788336769"></link>
            <id>https://canadamirror.com/article/16-killed-in-bus-accident-in-egypt-1788336769</id>
            <summary type="text">&amp;nbsp; எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p>



தஹாப்–நுவைபா வீதியில், அல்-சாதா பகுதிக்கு முன்னதாக நுவைபா நோக்கிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததாக எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 20 அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f21469c9-fb29-4833-9cbe-5eedce16fad9/26-6a97da82529c7.webp' /></p><p> காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.</p><p>



உயிரிழந்த 16 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.



காயமடைந்தவர்களுக்கு தேவையான வைத்திய சிகிச்சை, மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T08:09:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/attack-on-battaramulle-seelarathana-thero-1788336530"></link>
            <id>https://canadamirror.com/article/attack-on-battaramulle-seelarathana-thero-1788336530</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>

பத்தரமுல்ல சீலரத்ன தேரர், தற்போது வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4e95a61-133a-4da9-9bf8-499c0c378c91/26-6a97d9941051e.webp' /></p><p> </p><p>



இறுதிச் சடங்கு ஒன்றின் ஏற்பாடுகள் தொடர்பாக விகாரை வளாகத்துக்குள் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது

.</p><p> சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p>



சந்தேகநபரை கைது செய்ய வீரகுல பொலிஸார் பல விசேட பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-02T08:06:29+00:00</updated>
        </entry>
    </feed>
