<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-03T10:38:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் விமானத்திற்கு எதிரே திடீரென தோன்றிய பறக்கும் தட்டு; விமானி அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pilot-spots-flying-saucer-near-london-gatwick-1785741617"></link>
            <id>https://canadamirror.com/article/pilot-spots-flying-saucer-near-london-gatwick-1785741617</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இங்கிலாந்தில் நடுவானில் விமானம் வந்தபோது, 300 அடி தொலைவில் பறக்கும் தட்டு நெருங்கி விமானிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 லண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இங்கிலாந்தில் நடுவானில் விமானம் வந்தபோது, 300 அடி தொலைவில் பறக்கும் தட்டு நெருங்கி விமானிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>



 லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்தில் எயார்பஸ் ஏ319 என்ற பயணிகள் விமானம் தரையிறங்க வேண்டி இருந்தது. இதற்காக கேட்விக் பகுதிக்கு தெற்கே 7 மைல்கள் தொலைவில், சசெக்ஸ் கவுன்டி பகுதியில் ஹேங்கிராஸ் அருகே நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9377229-cd5a-4269-abb1-6d94091857f4/26-6a704133588aa.webp' /></p><h2>திடீரென மர்ம பொருள்</h2><p>
</p><p>


விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும்போது, அந்த சம்பவம் நடந்தது. திடீரென மர்ம பொருள் ஒன்று மெதுவாக மேலே எழும்பி வந்தது. </p><p>

விமானிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், விமானத்தின் வலது இறக்கை பகுதியருகே வட்ட வடிவிலான அந்த பறக்கும் தட்டு 100 முதல் 300 அடி இடைவெளியில் விமானத்திற்கு மிக நெருங்கிய தொலைவில் வந்துள்ளது.
</p><p>


தூரத்திலேயே விமானி அதனை கவனித்து விட்டார். வேறு திசைக்கு செல்வதற்கு ஏற்ப விமானமும், முன்பே திசை திருப்பப்பட்டு விட்டது. இதனால், பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. </p><p>எனினும், விமானம் தரையிறங்கியதும் இதுபற்றி உயரதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்து உள்ளார்.


அது ஒரு வட்ட தட்டு அல்லது பறக்கும் தட்டு அல்லது டிரோனாக இருக்க கூடும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.</p><p> அது, விமானத்திற்கு எதிர் திசையில் மிக நெருக்கத்தில், விமானத்தின் மட்டத்திற்கு இணையாக அதே மட்டத்தில் வந்தது. வலது இறக்கை பகுதியில் கடந்து சென்றது என கூறியுள்ளார்.
</p><p>


அந்த தட்டின் வெளிப்புற விளிம்பு பகுதிகளில் கருப்பு நிறத்தில் அடையாளங்கள் இருந்தன. அது நவீன டிரோனாக இருக்க கூடும். ஆனால், அதன் சரியான அடையாளமோ அல்லது எந்த பகுதியில் இருந்து வந்தது என்றோ தெரியவில்லை என கூறியுள்ளார்.</p><p>


 
இது தொடர்பில் எனினும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். இதுபற்றி இங்கிலாந்தின் எயார்பிராக்ஸ் என்ற தனியார் அமைப்பு தீவிர கவனம் கொண்டு நிலைமையை பற்றி கண்காணித்து, தீர விசாரித்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-03T10:01:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக நாடுகள் பலவற்றில் மாயமாகும் பூச்சி வகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/researcher-found-insects-decline-worldewide-1785749480"></link>
            <id>https://canadamirror.com/article/researcher-found-insects-decline-worldewide-1785749480</id>
            <summary type="text">உலக நாடுகள் பலவற்றில், பல வகை பூச்சிகள் மாயமாகிக்கொண்டே வருகின்றன.

இரவு நேரத்தில் தெரு விளக்குகளின் அருகே வகைவகையான பூச்சிகள் பறப்பதையும், வாகனத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக நாடுகள் பலவற்றில், பல வகை பூச்சிகள் மாயமாகிக்கொண்டே வருகின்றன.
</p><p>
இரவு நேரத்தில் தெரு விளக்குகளின் அருகே வகைவகையான பூச்சிகள் பறப்பதையும், வாகனத்தில் செல்லும்போது, பறந்துவரும் பல வகை பூச்சிகள் வாகனங்களின் கண்ணாடியில் மோதுவதையும் கண்ணால் கண்டவர்கள் நாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dde43102-32bc-407a-a2d0-08547910040d/26-6a705fe9df7b4.webp' /></p><p>ஆனால், அந்த பூச்சி வகைகளில் பல இப்போது மாயமாகிவருகின்றன.</p><p>
கனடாவின் யார்க் பல்கலையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் ஹடில் எல்சயத் (Hadil Elsayed) என்னும் மாணவி, பாதுகாக்கப்பட்ட இரண்டு இடங்களில் பூச்சிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b60732b-c15b-445b-b386-ab92f4184a7f/26-6a705fea904d6.webp' /></p><p>
அப்போது, 1990களில் இருந்ததைவிட, பூச்சிகளின் எண்ணிக்கை தற்போது பாதியாகக் குறைந்துள்ளதை அவர் கண்டறிந்துள்ளார்.</p><p>

இந்த கண்டுபிடிப்பு கனடாவில் மட்டுமல்ல, பிரித்தானியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து என பல நாடுகளில் பூச்சிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்துவருவது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70280aa4-5e7b-4e1c-98ae-7ac567c5c8da/26-6a705feb3ee73.webp' /></p><p>

பூச்சிகளைப் பொருத்தவரை, அவை மீன்கள் போன்ற உயிரினங்களுக்கு உணவாக பயன்படுவதுடன், தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும், இறந்த விலங்குகள், தாவரங்கள் மட்குவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.</p><p>

ஆக, இந்த பூச்சிகள் அழிந்துவருவதால் பிற உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் அதனால் பெரும் பாதிப்பு உள்ளது.

மக்கள் அதிக தாவரங்களை வளர்ப்பது, பூச்சி மருந்துகள் பயன்பாட்டைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளால் பூச்சி இனங்கள் அழிந்துவருவதை தடுக்கலாம் என்கிறார்கள் எல்சயத் முதலான ஆய்வாளர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T09:31:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ; 14 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/suicide-bombing-in-pakistan-14-people-killed-1785748951"></link>
            <id>https://canadamirror.com/article/suicide-bombing-in-pakistan-14-people-killed-1785748951</id>
            <summary type="text">&amp;nbsp;பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள காபல் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெற்ற அமைதிப் பேரணியில் தற்கொலை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள காபல் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) நடைபெற்ற அமைதிப் பேரணியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

</p><p> தாக்குதலில் ஒரு குழந்தை, பொதுமக்களில் 3 பேர், அதிகாரி ஒருவர், 5 பொலிஸார் உட்பட 14 பேர் உயிரிழந்ததோடு 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10493ce0-abb2-41df-8752-64259930a2d1/26-6a705dd95612c.webp' /></p><p> </p><p>

குறித்த பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொலிஸாரின் அசமந்தப் போக்கை கண்டித்தும் இந்த பேரணி நடத்தப்பட்டது.</p><p> 

இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு குழுவோ அல்லது நபரோ பொறுப்பேற்காத நிலையில், அங்கு பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். </p>]]></content>
            <updated>2026-08-03T09:21:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எகிப்து கடற்கரைக்கு அப்பால் நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/5-0-magnitude-earthquake-off-the-coast-of-egypt-1785742402"></link>
            <id>https://canadamirror.com/article/5-0-magnitude-earthquake-off-the-coast-of-egypt-1785742402</id>
            <summary type="text">&amp;nbsp; எகிப்து கடற்கரைக்கு அப்பால் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது.

இன்று (03) அதிகாலை 5.4 மெக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; எகிப்து கடற்கரைக்கு அப்பால் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
</p><p>
இன்று (03) அதிகாலை 5.4 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இடம்பெற்றுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a4a1d50-8df2-4497-ab38-d15179e7fbe9/26-6a7044443e835.webp' /></p><p>
</p><p>
இந்த நிலநடுக்கத்தின் மையம் சூயஸ் (Suez) நகரிலிருந்து 38 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்ததாக எகிப்து அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதங்களோ அல்லது சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தவொரு தகவலும் பதிவாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-03T07:31:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு உலங்கு வானூர்திகள் மோதி விபத்து; இருவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/helicopter-collision-in-greece-two-dead-1785733850"></link>
            <id>https://canadamirror.com/article/helicopter-collision-in-greece-two-dead-1785733850</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிரீஸில் பரவி வரும் மிகப்பரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு உலங்கு வானூர்திகள் நடுவானில் மோதி விபத்துக்குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிரீஸில் பரவி வரும் மிகப்பரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு உலங்கு வானூர்திகள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
</p><p>
நேற்று (02) நடந்த இந்த விபத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவரும், கிரேக்க நாட்டைச் சேர்ந்த பணியாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8755f394-6281-43d4-bfca-23cb54f04885/26-6a7022dc39a69.webp' /></p><p>
</p><p>
விபத்து நடந்த நேரத்தில் உலங்கு வானூர்திகளில் இருந்த பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவரும், மற்றொரு கிரேக்க பணியாளரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
தற்போது ஐரோப்பா முழுவதும் நிலவும் கடுமையான வெப்பமான வானிலையால் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தீயணைக்கும் சவாலான நடவடிக்கைகளின் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T07:09:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் புதிய பேச்சு வார்த்தைக்கு செல்லும் டிரம்ப்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-to-enter-into-new-talks-with-iran-1785734480"></link>
            <id>https://canadamirror.com/article/trump-to-enter-into-new-talks-with-iran-1785734480</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரான் மீதான &quot;மிகப்பெரிய&quot; தாக்குதல்களை நிறுத்தியதைத் தொடர்ந்து, அந்த நாட்டுடனான புதிய பேச்சுவார்த்தைகள் இன்று (3) தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரான் மீதான "மிகப்பெரிய" தாக்குதல்களை நிறுத்தியதைத் தொடர்ந்து, அந்த நாட்டுடனான புதிய பேச்சுவார்த்தைகள் இன்று (3) தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
எயார் போர்ஸ் வன் வானூர்தியில் பயணித்தபோது கருத்து தெரிவித்த அவர், "நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை வடிவில் உரையாடி வருகிறோம். அது நாளை பிற்பகல் தொடங்கும்" என டொனால்ட் ட்ரம்ப் கூறியதாகவும்&nbsp; அந்த&nbsp; தகவல்கள் கூறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11c084f7-6898-4553-bc47-7ae12bbab822/26-6a7025521f06d.webp' /></p>]]></content>
            <updated>2026-08-03T05:19:16+00:00</updated>
        </entry>
    </feed>
