<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-26T15:47:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கு: உயிரிழப்பு 95 ஆக உயர்வு :தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கான இந்தியர்களை மீட்க தீவிர நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-floods-1787755083"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-floods-1787755083</id>
            <summary type="text">&amp;nbsp;நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளின் நிலவரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த முழுமையான அதிகாரப்பூர்வ விவரங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளின் நிலவரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த முழுமையான அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.</p><p>எனினும், இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சுமார் 95 பேர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.</p><p>
வழக்கமான கனமழை ஏதும் இல்லாத நிலையில், இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை சரிவே (Glacial Avalanche) இந்த அசாதாரண வெள்ளத்திற்குக் காரணம் என சர்வதேச மலை வளர்ச்சி மையத்தின் (ICIMOD) பருவநிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a73a653d-bf15-4352-bbde-4fb082b5413e/26-6a8efa4ee6f34.webp' /></p><p>
</p><p>பனி மற்றும் பாறைச் சிதைவுகள் ஆற்றின் குறுக்கே தற்காலிக அடைப்பை ஏற்படுத்தி, பின்னர் அது திடீரென உடைந்து பேரிரைச்சலுடன் பெருக்கெடுத்ததால் கீழ்நிலைப் பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. </p><p>
மேலும், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் தீவிர பருவநிலை மாற்றமும் இத்தகைய தொடர் இயற்கைச் சீற்றங்களுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
</p><p>நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, காணாமல் போனவர்களில் 341 பேர் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஆவர்.
காணாமல் போனவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்றும், குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் இதில் அடங்குவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>அமெரிக்கா, நெதர்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் மாயமாகியுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கிய 100-க்கும் மேற்பட்டோரை நேபாள மீட்புக் குழுவினர் இதுவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.</p><p>
காணாமல் போன இந்தியர்களை மீட்க இந்திய அரசும், தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.</p><p> குறிப்பாக, பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கத் தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>
</p><p>தற்போது நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் இந்து மற்றும் பௌத்த யாத்திரிகர்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்ளும் பருவக்காலமாகும். </p><p>இதன் காரணமாக, நேபாளத்தில் உள்ள தங்களது நாட்டுப் பிரஜைகள் அந்நாட்டு அரசின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், நார்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.</p><p>இதற்கு முன்னர் கடந்த 2015-ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட கொடூர நிலநடுக்கத்தில் 9,000 பேர் உயிரிழந்தனர். அதுவே நேபாள வரலாற்றில் பதிவான மிக மோசமான இயற்கைப் பேரழிவாகக் கருதப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T15:30:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவெள்ளத்தில் சிக்கிய நேபாளம்: 95 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-flood-1787754040"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-flood-1787754040</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களை நிலைகுலையச் செய்துள்ள பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 95 பேர் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களை நிலைகுலையச் செய்துள்ள பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>மேலும் 291 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட 384 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஓடும் போதே கோஷி நதியில் ஏற்பட்ட இந்தச் சீற்றத்தினால் ஏராளமான வீடுகள், முக்கியச் சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.</p><p> 
நேபாளப் பகுதியில் வழக்கமான கனமழை ஏதும் இல்லாத நிலையில், இமயமலையின் பனிப்பாறை சரிவினால் (Glacial Avalanche) ஆற்றில் ஏற்பட்ட அடைப்பு திடீரென உடைந்து பெருக்கெடுத்ததே இந்த வெள்ளத்திற்குக் காரணம் என பருவநிலை வல்லுநர்கள் கணித்துள்ளனர். </p><p>ரசுவா மாவட்டத்தில் உள்ள சயாப்ரு பேசி மற்றும் திமுரே பகுதிகளில் வெள்ளநீர் ஆபத்தான மட்டத்தில் பாய்வதால், மீட்பு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாத சூழல் நிலவுகிறது.</p><h2>உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு</h2><p> மேலும், சுமார் 430 மெகாவாட் மின் உற்பத்தியை வழங்கும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் மின் விநியோகம் முற்றிலும் முடங்கியுள்ளது. </p><p>
எல்லைக்கு மறுபுறம் அமைந்துள்ள சீனாவின் திபெத் பகுதியிலும் பேரழிவு தரும் நிலச்சரிவு ஏற்பட்டு, கயிராங் துறைமுகப் பகுதியில் சாலை, மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa254891-7ec9-47b7-bebf-f691e8a04c4d/26-6a8ef77ef2dd3.webp' /></p><p> மாயமானவர்களை மீட்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்குமாறு சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.</p><p> அதேபோன்று, நீர்மின் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த 8 பணியாளர்கள் வெள்ளத்தில் மாயமாகியுள்ளனர்; மேலும் 10 பேர் சிக்கியுள்ளனர்.</p><p>அவர்களை மீட்க தென் கொரிய அரசு சிறப்பு மீட்புக் குழுவை நேபாளத்திற்கு அனுப்பவுள்ளது.
</p><p>இந்த விபரீத நிலை குறித்து நேபாள பிரதமர் பாலேந்திர ஷா அவசரக் கூட்டத்தைக் கூட்டி, இராணுவம், ஆயுதப்படை மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தினரை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார். </p><p>போதே கோஷி மற்றும் திரிசூலி நதிக்கரையோரம் வாழும் பொதுமக்கள் உடனடியாக மேடான பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T14:33:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு பதிலடி: 700 பொருட்களுக்கு வரி விதித்த கனடா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-hits-us-imposes-tariffs-on-700-products-1787732836"></link>
            <id>https://canadamirror.com/article/canada-hits-us-imposes-tariffs-on-700-products-1787732836</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரிக்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரிக்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்க கனடா தீர்மானித்துள்ளது.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில், அமெரிக்கா திடீரென கனடா மீது 50 சதவீத வரியை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4623198e-4434-4fa9-bc67-89cf7ef3be6f/26-6a8ea36652568.webp' /></p><h2>அமெரிக்கா – கனடா உறவில் மேலும் விரிசல்&nbsp;</h2><p> இதனால் ஏற்கனவே பதற்றமடைந்திருந்த அமெரிக்கா – கனடா உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கடுமையான நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
</p><p>
இந்த வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வு காணவும், அமெரிக்கா விதித்துள்ள வரியை தவிர்ப்பது தொடர்பிலும் வொஷிங்டனில் இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. </p><p>எனினும், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதனையடுத்து, கனடா மீது 50 சதவீத சுங்கவரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். </p><p>அத்துடன், கனடா தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
</p><p>
இந்த புதிய வரி நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவுடன் முன்னர் காணப்பட்ட உறவு மீண்டும் அதே நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என கனடா பிரதமர் மார்க் கார்னி முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் நீண்டகாலமாக நெருக்கமான வர்த்தக உறவுகளை கொண்டுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக மோதல் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-26T13:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிடோபாவில் 19 மாத தீவிர சோதனை: 15 பேர் மீது வழக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/15-arrested-drugs-and-guns-seized-manitoba-1787748133"></link>
            <id>https://canadamirror.com/article/15-arrested-drugs-and-guns-seized-manitoba-1787748133</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் மனிடோபா மாகாணத்தில் சுமார் 19 மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, பெருமளவிலான சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் மனிடோபா மாகாணத்தில் சுமார் 19 மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, பெருமளவிலான சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.</p><p>
'புராஜெக்ட் டோலர்' எனப் பெயரிடப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கையை ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் மற்றும் விங்க்ளர் பொலிஸ் பிரிவு இணைந்து மேற்கொண்டன. </p><p>இது தொடர்பான விவரங்கள் ஆகஸ்ட் 25, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3167ee54-8d7d-4997-a08b-6a674c77231a/26-6a8edf273d1fc.webp' /></p><p>
கார்மன், விங்க்ளர், வின்னிபெக், மோர்டன் உள்ளிட்ட 10 நகரங்களைச் சேர்ந்த 15 பேர் மீது போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் தொடர்பாக மொத்தம் 67 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>இவர்களில் கார்மன் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது மட்டுமே 29 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>இவர் கடந்த பெப்ரவரி மாதம் காரில் கொகைன் மற்றும் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>கடந்த 2024 டிசம்பர் மாதம், உள்ளூர் வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு பல கிலோகிராம் கொகைன் கடத்தப்பட்டதை விங்க்ளர் பொலிஸார் கண்டறிந்தனர்.</p><p> அதன்பின்னரே பொலிஸாரின் உதவியுடன் இந்த பிரம்மாண்ட கூட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
</p><p>சட்டவிரோத போதைப்பொருட்களையும் ஆயுதங்களையும் அகற்றுவதையே ஒரே இலக்காகக் கொண்டு அனைத்துக் குழுக்களும் இணைந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T12:40:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயர் அரேபியா விமானச் சக்கரத்தில் இருந்த சடலம் ; விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/body-found-in-airplane-wheel-inquest-underway-1787730612"></link>
            <id>https://canadamirror.com/article/body-found-in-airplane-wheel-inquest-underway-1787730612</id>
            <summary type="text">லண்டன் கேட்விக் (Gatwick) விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஒன்றின் சக்கரப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டன் கேட்விக் (Gatwick) விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஒன்றின் சக்கரப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>

கடந்த ஜூன் 16ஆம் திகதி மொராக்கோவின் டான்ஜியர் (Tangier) நகரிலிருந்து கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்த ‘எயர் அரேபியா’ (Air Arabia) விமானத்தின் லேண்டிங் கியர் பகுதியில் குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/033bd060-586d-4a56-8ce5-11f954c3e2e9/26-6a8e9ab5bd5d2.webp' /></p><p>விமானத்தை பரிசோதித்துக் கொண்டிருந்த தரைக்கட்டுப்பாட்டு பொறியாளர் ஒருவர் சடலத்தை கண்டுபிடித்ததையடுத்து, குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>

இந்நிலையில், ஹார்ஷாம் (Horsham) மரண விசாரணை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த மரணம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

அப்பகுதியின் மரண விசாரணை அதிகாரி ஜோசப் டர்னர் (Joseph Turner) முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
</p><p>
அதன்படி, ஹைபோக்சியா (Hypoxia – உடலுக்கு போதியளவு ஒட்சிசன் கிடைக்காத நிலை), ஹைபோதெர்மியா (Hypothermia – உடல் வெப்பநிலை கடுமையாகக் குறைதல்) மற்றும் மாரடைப்பு ஆகியவை மரணத்திற்கான முக்கிய காரணிகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விமானத்தின் சக்கரப் பகுதி பயணத்தின் போது கடுமையான குளிர் மற்றும் குறைந்தளவிலான ஒட்சிசன் கொண்ட சூழலாக இருந்திருக்கலாம் என மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், குறித்த மரணம் இயற்கையான முறையில் ஏற்பட்டதாகக் கருத முடியாததற்கான போதுமான காரணங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T11:10:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/8-killed-in-flash-floods-in-nepal-1787739047"></link>
            <id>https://canadamirror.com/article/8-killed-in-flash-floods-in-nepal-1787739047</id>
            <summary type="text">நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.&amp;nbsp;மேகவெடிப்பு காரணமாக நே...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.&nbsp;மேகவெடிப்பு காரணமாக நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>இதனால், கிராமத்திற்குள் புகுந்த வெள்ள நீரால் வீடுகள் அடியோடு அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36364756-c637-4b0d-ab4f-08ad88df2eb9/26-6a8ebbd9c6e1a.webp' /></p><p>இதில், ஏராளமான பொதுமக்களும் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.தொடர்ந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளான சியாப்ரு மற்றும் திமுரே ஆகிய இடங்களில் மீட்பு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாததால், மீட்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
</p><p>

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், கரையோரம் வசிப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பிரதமர் பாலேந்திர ஷா அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>

மேலும், நேபாளத்தை கடந்து திபெத்தில் உள்ள கியிரோங் பகுதியில் பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பலர் காணாமல் போனதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T10:12:26+00:00</updated>
        </entry>
    </feed>
