<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-29T00:42:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய அனர்த்தம் ; சுரங்கத்திற்குள் சிக்கிய இந்தியர்கள் ; தீவிரமாகும் மீட்பு பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-disaster-indians-trapped-inside-tunnel-1787963353"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-disaster-indians-trapped-inside-tunnel-1787963353</id>
            <summary type="text">நேபாளத்தில் பனிப்பாறை சரிவு காரணமாக&amp;nbsp; மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள், நீர்மின் நிலையம் உள்ளிட்டவைகளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் பனிப்பாறை சரிவு காரணமாக&nbsp; மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. </p><p>இதில் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள், நீர்மின் நிலையம் உள்ளிட்டவைகளில் பணியாற்றியவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30335e7b-36b6-4882-a1b6-b3d939445689/26-6a9227db5e78d.webp' /></p><p> </p><p>ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் மாயமான நிலையில் உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமான நடைபெற்று வருகிறது.
</p><p>
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சிலரின் உடல்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>
இதற்கிடையே கடுமையாக பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தில நீர்மின் நிலைய சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் 450-க்கும் மேற்பட்டோர் பணியாற்றியதாக தெரியவந்தது.
</p><p>
இந்த சுரங்கமும் வெள்ளத்தால் கடுமையாக பாதித்தது. இந்த பகுதியை ராணுவம் இன்ற வானி வழியாக சென்றடைந்தது. </p><p>பின்னர், சுரங்கத்திற்குள் நுழைத்து அங்கு தவித்துக் கொண்டிருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
</p><p>
இதில் 63 இந்தியர்கள் உள்பட 350 பேரை நேபாள ராணுவம் மீட்டுள்ளது. இன்னும் சுமார் 100 பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-29T00:33:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/many-killed-in-israeli-strikes-on-gaza-family-1787960827"></link>
            <id>https://canadamirror.com/article/many-killed-in-israeli-strikes-on-gaza-family-1787960827</id>
            <summary type="text">அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட நிலையற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், நேற்று காசாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட நிலையற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், நேற்று காசாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.</p><p>&nbsp; இதற்கிடையில், ஈரான் போரினால் பாரசீக வளைகுடாவில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் சிக்கி தவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/586bb0fb-96cc-4ac2-aa75-d018a3800c87/26-6a921dfccdf75.webp' /></p><p> </p><p>இத்துடன், ரஷ்யா உடனான எரிசக்தி ஒப்பந்தத்தை ஈரான் முன்னிலைப்படுத்தி வருகிறது, மேலும் ஈரானுடனான தொடர்புகளுக்காக ஒரு முக்கிய எகிப்திய வங்கி மீது அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.</p><p>

</p><p>காசாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>

கான் யூனிஸ் (Khan Younis) பகுதிக்கு வெளியே இருந்த ஒரு குடும்பத்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு சகோதரர்களும் மற்றொரு உறவினரும் உயிரிழந்ததாக நாசர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>கான் யூனிஸில் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து தங்களுக்கு தெரியாது என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.</p><p>

நேற்று (வெள்ளிக்கிழமை) காசா நகரில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி இஸ்ரேலிய தாக்குதல்களில் தலா ஒருவர் வீதம் கொல்லப்பட்டதாக ஷிஃபா மருத்துவமனை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T00:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் கொத்துக் கொத்தாக மீட்கப்படும் சடலங்கள் ; நிரம்பி வழியும் சவக்கிடங்குகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bodies-recovered-in-large-numbers-in-nepal-1787954698"></link>
            <id>https://canadamirror.com/article/bodies-recovered-in-large-numbers-in-nepal-1787954698</id>
            <summary type="text">நேபாளத்தில் தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் அதிகளவில் மீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>



வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் அதிகளவில் மீட்கப்படுவதால் சவக்கிடங்கில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1acb90bd-3682-44da-900b-093c94b8807c/26-6a92060c50b6d.webp' /></p><p>
</p><p>


பலரின் உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



அத்துடன், மாயமான 1,500 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
</p><p>


நேபாளத்தைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளத்தால் பல கிராமங்கள், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T22:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்க தயார் ; ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-us-ready-to-provide-all-assistance-to-nepal-1787952122"></link>
            <id>https://canadamirror.com/article/trump-us-ready-to-provide-all-assistance-to-nepal-1787952122</id>
            <summary type="text">நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.&amp;nbsp; நேபாளத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட காட்டாற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.&nbsp;</p><p> நேபாளத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், அங்குள்ள மத்திய மாவட்டங்களை உருக்குலைந்து உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf3331ed-a2ad-458e-9775-88c9971107b2/26-6a91fbfcb01e7.webp' /></p><p>

இந்த காட்டாற்று வெள்ளத்தில் 32 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அடித்து செல்லப்பட்டனர். </p><p>இதனையடுத்து மீட்புப்பணிகளில் நேபாள ராணுவம், போலீசார் மற்றும் மீட்புக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.</p><p>

</p><p>
இந்தநிலையில், நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார். </p><p>இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,

வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்து உள்ள நேபாளத்தை நாங்கள் தொடர்புகொண்டு அவர்களுக்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்குவதாக கூறியுள்ளோம். நேபாளத்துடன் எங்களுக்கு மிக சிறந்த உறவு உள்ளது.
</p><p>
இது ஒரு கொடூரமான நிகழ்வு. அது வெறும் வெள்ளம் மட்டுமல்ல, சேறும் நீரும் கலந்த ஒரு பேரழிவு. இதுபோன்ற ஒன்றை யாரும் பார்த்திருக்க முடியாது. மிகவும் வலிமையான உறுதியான கட்டிடங்கள் கூட தீக்குச்சிகளை போல அடித்து செல்லப்பட்டன. </p><p>இது மிகவும் மோசமான ஒரு நிகழ்வு. நாங்கள் உதவிகளை அனுப்பி வருகிறோம். அவர்களுக்கு என்ன தேவையோ அதை வழங்குவோம் என்று அந்நாட்டு தலைவர்களிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.</p>]]></content>
            <updated>2026-08-28T21:22:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் கனடிய தம்பதி மாயம்: நல்ல செய்திக்காகக் காத்திருக்கும் குடும்பத்தினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missing-in-nepal-after-deadly-flash-floods-1787928115"></link>
            <id>https://canadamirror.com/article/missing-in-nepal-after-deadly-flash-floods-1787928115</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த கனடிய தம்பதியினர், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். 
இமய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த கனடிய தம்பதியினர், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர்.</p><p> 
இமயமலை பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட இந்த பேரிடரில் 30-க்கும் மேற்பட்ட கனடியர்கள் காணாமல் போயுள்ள நிலையில், இந்த தம்பதியின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் பெரும் தவிப்பில் உள்ளனர்.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவின் 'போர்ட் மூடி' பகுதியைச் சேர்ந்த தவால் ஷா மற்றும் அவரது மனைவி மேகா ஷா ஆகியோர் நேபாளத்திற்குச் சுற்றுலா சென்றிருந்த நிலையில் இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a090e0-cabc-4b01-acc0-4299c4eb9757/26-6a919e3575bc5.webp' /></p><p>
</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் அவர்களிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை என்று தவாலின் சகோதரர் கேவல் ஷா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
</p><p>அவர்கள் எப்படியாவது வெள்ளத்திலிருந்து தப்பித்து, உயிருடன் மீட்டெடுக்கப்பட்டார்கள் என்ற ஒரு நல்ல செய்தி வரக் கூடாதா என்று தான் நாங்கள் வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருக்கிறோம்.</p><p> ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என காணாமல் போன கனடியரின் சகோதரர் கேவல் ஷா தெரிவித்துள்ளார்.
</p><p>திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
</p><p>இதில் தவால்-மேகா தம்பதி உட்பட குறைந்தபட்சம் 30 கனடியர்களும், நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவர் என கனடா உலகளாவிய விவகாரங்கள் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>மலைப் பகுதியில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் பல அடி உயரத்திற்குச் சேறும் சகதியும் அடர்த்தியாகக் குவிந்துள்ளது.
</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகள் மிகவும் தொலைதூரத்தில் அமைந்திருப்பதாலும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் மீட்புக் குழுவினர் அங்குச் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. 
அடர்ந்த சேற்றுக்குள் சிக்கியவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T19:56:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் பயங்கரத் தீ விபத்து! 5 வாகனங்கள் முற்றிலும் சேதம் – தீவிர விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/the-car-exploded-5-vehicles-damaged-in-northeast-1787935049"></link>
            <id>https://canadamirror.com/article/the-car-exploded-5-vehicles-damaged-in-northeast-1787935049</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கால்கரி நகரிலுள்ள &#039;சிட்டிஸ்கேப்&#039; பகுதியில் அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் ஐந்து வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
அதிகாலை 2 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கால்கரி நகரிலுள்ள 'சிட்டிஸ்கேப்' பகுதியில் அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் ஐந்து வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
</p><p>அதிகாலை 2 மணியளவில் 'சிட்டிலைன் காமன் பகுதியில் தீப்பற்றி எரிவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, கால்கரி காவல்துறையும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தி, விசாரணையைத் தொடங்குவதற்காக அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டது.</p><p> 
சேதமடைந்த நான்கு வாகனங்கள் கபேன் மூலமாக அகற்றப்பட்ட நிலையில், கடுமையாக எரிந்த வெள்ளை நிற வேன் ஒன்று சம்பவ இடத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ca21d11-0f71-455a-9cfa-b5d7285ba74a/26-6a91b94ad96d6.webp' /></p><p>
</p><p>சம்பவ இடத்திற்கு அருகில் வசிக்கும் லக் சாது என்பவர் கூறுகையில், நள்ளிரவில் கேட்ட பலத்த சத்தம் ஏதோ வாகன விபத்தினால் ஏற்பட்டது என்று முதலில் நினைத்ததாகத் தெரிவித்தார்.
</p><p>இந்தப் பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. கார் வெடித்துச் சிதறியது போல் இருந்தது என குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>இது திட்டமிட்டு வைக்கப்பட்ட தீயா என்பதை ஆராயக் கால்கரி காவல்துறையின் 'தீவைப்புப் பிரிவு' விசாரணைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.</p><p> 
எனினும், தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T19:00:12+00:00</updated>
        </entry>
    </feed>
