<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-29T19:48:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளம் ; பலி எண்ணிக்கை 675ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-floods-death-toll-rises-to-675-1788025840"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-floods-death-toll-rises-to-675-1788025840</id>
            <summary type="text">மத்திய நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (29) 675 ஆக உயர்ந்தது. 

பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் மீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (29) 675 ஆக உயர்ந்தது. 

பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து உடல்களை மீட்டு வருகின்றனர். </p><p>

ஒகஸ்ட் 26 அன்று நேபாளத்தைத் தாக்கிய இந்த பேரிடரைத் தொடர்ந்து, 2,400-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர். </p><p>

நேபாள பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களிலும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ac97ab9-165c-4bc1-92a4-55e1e39880d6/26-6a931bf197831.webp' /></p><p>சித்வான் மாவட்டத்தில் அதிகபட்சமாக 248 சடலங்கள் மீட்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நவல்ப்பராசி கிழக்கு (158), நவல்ப்பராசி மேற்கு (75) மற்றும் கோர்கா (54) ஆகிய மாவட்டங்களில் சடலங்கள் மீட்கப்பட்டன. </p><p>

மேலும், தாடிங் (49), நுவாகோட் (41), தனஹு (31) மற்றும் ரசுவா (13) ஆகிய மாவட்டங்களிலிருந்தும் சடலங்கள் மீட்கப்பட்டதாகக் தெரிவித்துள்ளது. </p><p>

நேபாள - திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து நிகழ்ந்த பனி மற்றும் பாறைச் சரிவு காரணமாக இந்த பேரிடர் ஏற்பட்டது. </p><p>

இதன் விளைவாக உருவான நீர், சேறு மற்றும் குப்பைகள் கலந்த பெருவெள்ளம் கீழ்நோக்கிப் பாய்ந்து, நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சீரழித்தது. </p><p>சாலைகள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியதுடன், நீர்மின் நிலையங்களையும் அழித்தது. 

பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தபோதிலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. </p><p>

பேரிடர் பாதித்த பகுதிகளிலிருந்து 163 வெளிநாட்டினர் உட்பட சுமார் 2,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். </p><p>

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் 5,000-க்கும் மேற்பட்ட நேபாள ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 11,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p> 

காணாமல் போனவர்களைக் கண்டறியவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சென்றடையவும் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் முகாமைத்துவ ஆணைக்குழுவின் (NDRRMA) தலைமையிலான குழுக்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3eb2bc5-6a24-42aa-8848-d5dabde23e24/26-6a931bf24b4d6.webp' /></p><p>வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை தொடர்ந்து, இதுவரை 184 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மூவருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேபாள சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p>

இந்தத் தகவல்களின்படி, மொத்தம் 187 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர் அல்லது அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். </p><p>

அதேவேளையில், 420 வெளிநாட்டினர் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. 

மீட்கப்பட்டவர்களில் 114 இந்தியர்கள், 27 சீனர்கள் மற்றும் 20 தென் கொரிய சுற்றுலாப் பயணிகள் அடங்குவர்.</p><p> 

மீதமுள்ளவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் பல உடல்களை மீட்கவும், காணாமல் போனவர்களைக் கண்டறியவும், பரவலான பாதிப்புகளுக்குள்ளான மக்களுக்கு உதவிகளை வழங்கவும் அதிகாரிகள் பணியாற்றி வருவதால், தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-29T17:50:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய பேரழிவு; உடல்களை அடக்கம் செய்யவுள்ளதாக நேபாள அரசு அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepa-announces-plans-to-bury-the-bodies-flood-1788007730"></link>
            <id>https://canadamirror.com/article/nepa-announces-plans-to-bury-the-bodies-flood-1788007730</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாள வெள்ளத்தில் பலியாகி இதுவரை அடையாளம் கண்டறியபடாத நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாள வெள்ளத்தில் பலியாகி இதுவரை அடையாளம் கண்டறியபடாத நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
</p><p>


திபெத் எல்லையில் அமைந்துள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில், கடந்த 26 ஆம் திகதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டதில் 600 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன் 2000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2a68e27-d0bf-4e15-92e3-5392bcdef3a8/26-6a92d5340c906.webp' /></p><h2>600 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு</h2><p>
</p><p>


காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
</p><p>


இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இன்று (29) காலை 10 மணி நிலவரப்படி 626 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதிகப்படியாக சித்வான் பகுதியில் மட்டும் 233 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>



இதையடுத்து, மீட்கப்படும் உடல்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு சித்வான் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதிய இடவசதியும் கட்டமைப்பு வசதியும் இல்லை எனக் கூறப்படுகிறது.</p><p> மேலும், மீட்கப்பட்டு வரும் உடல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உடல்கள் சிதைவடைவதைத் தடுப்பது மிகுந்த சிரமம் என்றும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>


இதனால், சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு புதிய தொற்றுகள் உருவாகக் கூடும் என்பதால் அடையாளம் காணப்படாத உடல்களை தேவ்காட் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் அடக்கம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T17:37:13+00:00</updated>
        </entry>
    </feed>
