<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-29T07:29:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருநங்கை வீரர் அனயா பங்கருக்கு அவுஸ்திரேலியா அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/australian-approval-transgender-athlete-anaya-1787986190"></link>
            <id>https://canadamirror.com/article/australian-approval-transgender-athlete-anaya-1787986190</id>
            <summary type="text">திருநங்கை கிரிக்கெட் வீரரான அனயா பங்கருக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளதை, தென்னாப்பிரிக்க அண...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருநங்கை கிரிக்கெட் வீரரான அனயா பங்கருக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளதை, தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீராங்கனை மரிசான் கப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>
மகளிர் பிக்பேஷ் லீக் (WBBL) தொடரில் அனயா பங்கர் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியான பதிவுக்கு பதிலளித்துள்ள மரிசான் கப், "இது முற்றிலும் அபத்தமானது, இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2b1378c-5a2c-4251-98b8-d4d6e39d7d10/26-6a92810fe0776.webp' /></p><p>
</p><p>
இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரின் மகளான அனயா பங்கர், அவுஸ்திரேலியாவில் உள்ள மகளிர் உள்ளூர் மற்றும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் உடனடியாக விளையாட கிரிக்கெட் அவுஸ்திரேலியாவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கொள்கையின்படி, திருநங்கைகள் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி இல்லை.

இருப்பினும், கிரிக்கெட் அவுஸ்திரேலியா தனது உள்நாட்டுப் போட்டிகளுக்காகத் தனித்துவமான கொள்கையைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-29T06:47:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-toll-from-the-floods-in-nepal-crossed-600-1787985747"></link>
            <id>https://canadamirror.com/article/death-toll-from-the-floods-in-nepal-crossed-600-1787985747</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தைத் தாக்கிய முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தைத் தாக்கிய முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த திடீர் பேரழிவின் விளைவாக குறைந்தது 1,924 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95b1a0cd-2b9a-49c7-8088-4095fcf10959/26-6a927f547a9ee.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியை நாட வேண்டாம் என்ற தனது முடிவை நேபாளம் மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளது.
</p><p>
பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளைத் தாங்களே ஒருங்கிணைப்பதாகவும், வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை என்றும் நேபாள வெளியுறவு அமைச்சகம் ஆரம்பத்தில் கூறியிருந்தது.
</p><p>
இருப்பினும், வெள்ளத்தில் காணாமல் போனவர்களில் வெளிநாட்டினரும் இருப்பதால், சம்பந்தப்பட்ட நாடுகளின் இராஜதந்திர அழுத்தத்தின் காரணமாக நேபாள அரசாங்கம் அந்த முடிவை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது.
</p><p>
அதன்படி, சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் சிக்கலான நடவடிக்கைகளுக்கும், உடல்களை அடையாளம் காணும் தொழில்நுட்பப் பணிகளுக்கும் சர்வதேச நிபுணர் குழுக்களுக்கு நேபாள அதிகாரிகள் தற்போது அனுமதி வழங்கியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T06:39:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெனிசுலா மீது கைவைத்த டிரம்ப்; எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்த ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-control65-billion-barrels-oil-venezuela-1787980866"></link>
            <id>https://canadamirror.com/article/us-control65-billion-barrels-oil-venezuela-1787980866</id>
            <summary type="text">&amp;nbsp; வெனிசுலாவின் 6,500 கோடி கொள்கலன் எண்ணெய் இருப்பை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வெனிசுலாவின் 6,500 கோடி கொள்கலன் எண்ணெய் இருப்பை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>


இந்த ஒப்பந்தம் தொடர்பில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55b7cb08-9c2c-40bc-ad65-d478ce664f11/26-6a926c43e0660.webp' /></p><h2>&nbsp;சர்வதேச எண்ணெய் சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்</h2><p>



தனது வழிகாட்டுதலின் கீழ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸுடன் இணைந்து இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>




இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் எண்ணெய் இருப்பு இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரிக்கும் என்றும், நாட்டின் எண்ணெய் விநியோகம் விரிவடையும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
</p><p>


இதன் காரணமாக எதிர்காலத்தில் அமெரிக்க மக்களுக்கான எரிபொருள் விலையை கணிசமாகக் குறைக்க முடியும் எனவும், வெனிசுலாவை பொருளாதார ரீதியாக செழிப்பான பாதைக்கு கொண்டு செல்ல இது உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>



 இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே வளர்ந்து வரும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


உலகளாவிய மசகு எண்ணெய் இருப்பில் சுமார் 17 சதவீதத்தை வெனிசுலா கொண்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த ஒப்பந்தம் சர்வதேச எண்ணெய் சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-29T05:18:20+00:00</updated>
        </entry>
    </feed>
