<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-13T11:45:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் கணவன் தாக்குதலை தடுத்ததால் தூக்கிலிடப்பட்ட 23 வயதான இளம் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/23-year-old-marzieh-nieri-hanged-in-iran-1786598914"></link>
            <id>https://canadamirror.com/article/23-year-old-marzieh-nieri-hanged-in-iran-1786598914</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.


அந்தத் தண்டனை 2026 ஆகஸ்ட் 8 அதிகாலை கஸ்வின் மத்திய சிறையில் நிறைவேற்றப்பட்டது.
</p><p>
குடும்ப அழுத்தத்தின் காரணமாக தனது 17-வது வயதில் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் நெய்ரி, 2021 அக்டோபரில் தனக்கு 18 வயதாக இருந்தபோது, மதுபோதையில் இருந்த தனது கணவரின் தொழில் கூட்டாளி ஒருவர் தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்றதாக தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd10c2e8-b983-4edb-83d4-a96bdcbd7c7f/26-6a7d5603f3682.webp' /></p><h2>கணவரின் தொழில் கூட்டாளி&nbsp;&nbsp;பாலியல் துன்புறுத்தல்</h2><p> 

அப்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சமையலறைக் கத்தியைப் பயன்படுத்தியதாகவும், ஏற்பட்ட மோதலில் அந்த நபரும் தனது கணவரும் உயிரிழந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.</p><p> 

சம்பவத்துக்குப் பின்னர் சில நாட்களில் அதிகாரிகளிடம் சரணடைந்த அவர், தனது செயல் தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்டது என வாதிட்டபோதும், ஈரான் நீதிமன்றங்கள் அந்த வாதத்தை ஏற்கவில்லை. </p><p>

இதையடுத்து, ஈரானின் ‘கிசாஸ்’ எனப்படும் பழிக்குப் பழி சட்ட நடைமுறையின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 


 2026ஆம் ஆண்டில் இதுவரை ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறைந்தது 14 ஆக உயர்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. </p><p>

தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்ற ஒருவரைக் கொன்றதாகக் கூறப்பட்ட வழக்கில் 2014ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட ரெய்ஹானே ஜப்பாரியின் வழக்குடன் நெய்ரியின் வழக்கும் ஒப்பிடப்படுகிறது.
</p><p>
 ஈரானின் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் ‘கிசாஸ்’ உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சட்டப் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.</p><p>

 இருப்பினும், நெய்ரி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார் என்பது நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை ஆனால் அவர் முன்வைத்தது தற்காப்பு வாதம் என்று செய்திகள் கூறுகிறது</p>]]></content>
            <updated>2026-08-13T09:27:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு லண்டனில் 25 வயதான பேருந்து ஓட்டுநர் சுட்டுக் கொலை ; நண்பர்கள் உருக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/25-year-old-bus-driver-shot-dead-in-south-london-1786609837"></link>
            <id>https://canadamirror.com/article/25-year-old-bus-driver-shot-dead-in-south-london-1786609837</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தெற்கு லண்டனின் கிளாப்ஹாம் (Clapham) பகுதியில் உள்ள பப் ஒன்றுக்கு வெளியே 25 வயதான பேருந்து ஓட்டுநர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தெற்கு லண்டனின் கிளாப்ஹாம் (Clapham) பகுதியில் உள்ள பப் ஒன்றுக்கு வெளியே 25 வயதான பேருந்து ஓட்டுநர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

லண்டன் பெருநகரக் காவல் துறையினரால் (Metropolitan Police) ஆகஸ்ட்-மேரி பைல்-அகா அமோவா (Auguste-Marie Bile-aka Amoa) என அடையாளப்படுத்தப்பட்ட அந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95378f96-fa19-41e0-8536-d5e960c30b87/26-6a7d80aef01db.webp' /></p><h2>அவர் மிகவும் அமைதியானவர், கடின உழைப்பாளி</h2><p>
</p><p>
வில்லிங்டன் சாலையில் (Willington Road) உள்ள தி லேண்டர் (The Landor) பப் அருகே திங்கள்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. </p><p>நான்கு முறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கூறிய அப்பகுதி மக்கள், சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞருக்கு முதலுதவி செய்ய முயன்றனர். </p><p>

 மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சியையும் தாண்டி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
</p><p>
 சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, துப்பாக்கிக் காயத்துடன் மருத்துவமனைக்கு வந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கொலை சந்தேகத்தின் பேரில் போலிஸார் கைது செய்தனர். சிகிச்சை பெற்று வரும் அவர், போலிஸாரின் பலத்த காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

உயிரிழந்த இளைஞரின் நண்பர்கள் மற்றும் சக பேருந்து ஓட்டுநர்கள் தெரிவிக்கையில், “அவர் மிகவும் அமைதியானவர், கடின உழைப்பாளி. </p><p>எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லாத அவர், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததாலேயே (Wrong Place at Wrong Time) இந்த கொடூர சம்பவத்திற்குப் பலியாகியுள்ளார்” என உருக்கமாகக் கூறினர். </p><p>

கொலைக்கான முகாந்திரம் மற்றும் பின்னணி குறித்துத் தலைமை துப்பறியும் அதிகாரி கிளேர் கைவர் (Claire Guiver) தலைமையிலான சிறப்புக் குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T09:05:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/6-indians-2-indians-in-top-25-canada-immigrants-1786607542"></link>
            <id>https://canadamirror.com/article/6-indians-2-indians-in-top-25-canada-immigrants-1786607542</id>
            <summary type="text">டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.


புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு ஆற்றிய பங்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.</p><p>


புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது என்னும் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது.</p><p>

2026ஆம் ஆண்டுக்கான டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றோர் பட்டியலில், 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.
</p><p>
விருது பெற்றவர்களில் ஒருவரான Prabath Pullay, வான்கூவரிலுள்ள, சால்வேஷன் ஆர்மி என்னும் திருச்சபை மற்றும் சமூக சேவை அமைப்பு நடத்தும் Belkin Communities of Hope என்னும் அமைப்பில் எக்சிகியூட்டிவ் இயக்குநராக உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa827e2-d11d-4341-88f5-f1c690e2ebad/26-6a7d77b7a60d8.webp' /></p><p>
இவர், 1996ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர் ஆவார்.
</p><p>
இலங்கைத் தமிழரான Roy Ratnavel என்பவரும் 2026ஆம் ஆண்டுக்கான டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.</p><p>

தனது 18ஆவது வயதில் கனடாவுக்கு புலம்பெயர்ந்த Roy Ratnavel, ஏற்கனவே 2025ஆம் ஆண்டுக்கான Tamil American Pioneer (TAP) Award மற்றும் 2020ஆம் ஆண்டு, Best Executive Award ஆகிய விருதுகளைப் பெற்றவர் ஆவார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1897f89-bb8e-43e4-9a20-43cbe79d03c7/26-6a7d77b85a3b4.webp' /></p><p>
இந்தியர்களைப் பொறுத்தவரை, ஷிவானிஸ் கிச்சன் என்னும் உணவு தயாரிப்பு நிறுவனத்தை நிறுவிய Shivani Dhamija, Fraser Health அமைப்பில் Regional director பொறுப்பு வகிக்கும் Sneha Jain,
</p><p>

கலையுலகைச் சேர்ந்த Aparna Rangnekar, Irrigation Industry Association of British Columbia அமைப்பில் Executive director பொறுப்பு வகிக்கும் Poshak Sachdeva, தொழிலதிபரான Jatinder Pal Singh மற்றும் நடிகர் மற்றும் எழுத்தாளரான Supinder Wraich ஆகியோருக்கு டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றோர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T07:52:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவில் 38 மணி நேரத்தின் பின் மீட்கப்பட்ட பெண்; மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-rescued-colombia-after-38-hours-earthquake-1786602636"></link>
            <id>https://canadamirror.com/article/woman-rescued-colombia-after-38-hours-earthquake-1786602636</id>
            <summary type="text">&amp;nbsp; தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அண்மையில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் 38 மணித்தியாலங்களுக்கும் மேலாகச் சிக்கியிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அண்மையில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் 38 மணித்தியாலங்களுக்கும் மேலாகச் சிக்கியிருந்த பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை 7.4 மெக்னிடியூட் அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

 இந்த நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 250 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவானோர் காயமடைந்ததோடு, காணாமலும் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11847d98-c2cb-4208-aac3-ab42cf8e725a/26-6a7d648de5c17.webp' /></p><h2>மகனின்&nbsp; பிறந்தநாளைக் கொண்டாட ஆயத்தமான வேளை&nbsp;நிலநடுக்கம்</h2><p>
</p><p>
இந்த நிலையில், பெரெய்ரா (Pereira) நகரில் நிலநடுக்கத்தினால் நான்கு மாடிக் கட்டடம் ஒன்று முழுமையாக இடிந்து விழுந்தது. இதில் டேனியேலா (Daniela) என்ற 32 வயதுடைய தாய் ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.
</p><p>
தனது மகனின் 12ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு ஆயத்தமான வேளையிலேயே அவர் இந்த விபத்தில் சிக்கினார். சுமார் 38 மணிநேரமாக கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவரை மீட்பதற்காக, பல மீட்புக் குழுவினரும் சுமார் 50 தன்னார்வலர்களும் இணைந்து 10 மணிநேரப் போராட்டத்தின் பின் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் நடந்த அன்று அவரது மகன், பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவர் தனது தாத்தா-பாட்டி வீட்டில் தாயின் (டேனியேலா) வருகைக்காகக் காத்திருந்தார். 

குடும்பத்தினர் அனைவரும் இணைந்து பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக 'மானிசலெஸ்' (Manizales) பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குச் செல்லவே திட்டமிட்டிருந்தனர்.</p><p>

ஆனால், தாய் டேனியேலா இருந்த பகுதியிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டு, அவர் இருந்த கட்டடம் இடிந்து விழுந்தது. அதனால் அவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.
</p><p>
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அந்தப் பெண்ணின் தந்தை, "என் மகள் இந்த துயரத்தை அனுபவித்தமை நெஞ்சை பிளக்கிறது, ஆனால் அவள் உயிருடன் மீட்கப்பட்டது எனக்குள் அளவற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது. எனக்கு அவள் மீண்டும் பிறந்ததை போல உணர்கிறேன்" எனத் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்</p>]]></content>
            <updated>2026-08-13T06:28:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-chinese-premier-zhu-rongji-has-passed-away-1786602063"></link>
            <id>https://canadamirror.com/article/former-chinese-premier-zhu-rongji-has-passed-away-1786602063</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் சிற்பியாகக் கருதப்படுபவருமான ஜூ ரோங்ஜி (Zhu Rongji)தனது 98ஆவது வயதில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் சிற்பியாகக் கருதப்படுபவருமான ஜூ ரோங்ஜி (Zhu Rongji)தனது 98ஆவது வயதில் நேற்று (12) பெய்ஜிங்கில் காலமானாதாக சீன ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
</p><p>


சீனாவில் 1998 முதல் 2003ஆம் ஆண்டு வரை சீனாவின் பிரதமராகப் பதவி வகித்த ஜூ ரோங்ஜி (Zhu Rongji) , சீனா உலக வர்த்தக அமைப்பில் இணைவதற்கு முக்கியப் பங்காற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8e5c77d-8d58-4769-8af6-95d2b6c12085/26-6a7d6250c359f.webp' /></p><p>



முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி (Zhu Rongji) ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், சந்தை சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தி பல்வேறு சீர்திருத்தங்களையும் முன்னெடுத்தார்.</p><p>



இதன் மூலம் சீனா சர்வதேச அளவில் பொருளாதார வல்லரசாக உருவெடுப்பதற்கான அடித்தளத்தை அமைத்த முக்கிய தலைவர்களில் ஒருவராக அவர் (Zhu Rongji) கருதப்படுகிறார்.
</p><p>


இந்தியா – சீனா இருதரப்பு உறவுகளை மேம்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கில், 2002ஆம் ஆண்டு ஜூ ரோங்ஜி (Zhu Rongji)இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.</p><p> 

அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்</p>]]></content>
            <updated>2026-08-13T06:18:42+00:00</updated>
        </entry>
    </feed>
