<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-13T23:06:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 27 வயது இளைஞர் பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-dead-after-crashing-stolen-motorcycle-1789318666"></link>
            <id>https://canadamirror.com/article/man-dead-after-crashing-stolen-motorcycle-1789318666</id>
            <summary type="text">கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளானதில் 27 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். 
சனிக்கிழமை கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளானதில் 27 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். </p><p>
சனிக்கிழமை காலை சுமார் 6:30 மணியளவில், டிரம்ண்ட் பகுதியில் அமைந்துள்ள சடர்லேண்ட் புரூக் சாலையில் இந்த ஒற்றை வாகன விபத்து ஏற்பட்டது. </p><p>
வளைவான பாதையில் வேகமாகச் சென்றபோது மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நேரிட்டிருக்கலாம் என கனடிய அரச காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29ce2977-2c38-4659-bbf8-75bd7134b73c/26-6aa6d60bb590a.webp' /></p><p>
</p><p>சம்பவ இடத்திற்கு காவல் அதிகாரிகள் விரைந்தபோது, டிரம்ண்ட் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் தீவிர காயங்கள் காரணமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.</p><p>
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள், முன்னதாக செயிண்ட்-ஆண்ட்ரே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வசிப்பிடத்திலிருந்து திருடப்பட்ட ஒன்று என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
உயிரிழந்த இளைஞரின் இறப்பிற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உடற்கூறாய்வு நடத்தப்பட உள்ளது. 
மேலும், காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T21:45:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் ரகசிய நீதிமன்ற நடவடிக்கை மூலம் ஆப்கானிஸ்தான் பெண் நாடுகடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/afghan-woman-deportede-us-following-secret-court-1789335648"></link>
            <id>https://canadamirror.com/article/afghan-woman-deportede-us-following-secret-court-1789335648</id>
            <summary type="text">அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிட உரிமையைக் கொண்டிருந்த 47 வயதுடைய ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவரை, அந்த நாட்டின் இரகசிய நீதிமன்ற நடவடிக்கைகளின் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிட உரிமையைக் கொண்டிருந்த 47 வயதுடைய ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவரை, அந்த நாட்டின் இரகசிய நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் நாடுகடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>அமெரிக்காவில் 1996ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 'அந்நிய பயங்கரவாத அகற்றும் நீதிமன்றம்' (Alien Terrorist Removal Court - ATRC) அதன் வரலாற்றில் முதன்முறையாக ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு நாடுகடத்தல் உத்தரவைப் பிறப்பித்துள்ளமை இதுவே முதல்முறையாகும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f44eb9b-f88c-4422-b4d8-3dba5837665c/26-6aa7186281413.webp' /></p><p>தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசிய ஆதாரங்களின் அடிப்படையில் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அமெரிக்கக் குடியுரிமை பெறாத நபர்களுக்கு எதிராகவே இந்த விசேட நீதிமன்றம் பயன்படுத்தப்படுகிறது.
</p><p>
டெக்சாஸ் மாநிலத்தின் ஃபோர்ட் வொர்த் நகரில் வசித்து வந்த நஸீரா ஹாஜி சாதா என்ற இந்த பெண் மீது எந்தவொரு குற்றவியல் வழக்கும் நேரடியாகப் பதிவு செய்யப்படவில்லை.</p><p>

இருப்பினும், 2024ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளில் தீவிரவாத அமைப்பின் தூண்டுதலால் துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்ட குற்றத்துக்காக இவரது மகனும் மருமகனும் தண்டிக்கப்பட்டனர்.
</p><p>
இந்த நிலையில், குடும்பத்தினரை தீவிரவாதப் பாதைக்கு வழிநடத்திய "குடும்பத் தலைமைப் பெண்" என அரச தரப்பு சட்டத்தரணிகள் இவர் மீது குற்றஞ்சாட்டினர்.
</p><p>
அரசாங்கத்துடன் நீண்ட சட்டப் போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக, அமெரிக்காவை விட்டு வெளியேற நஸீரா ஹாஜி சாதா சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

அதேசமயம், இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் அமெரிக்க அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக நஸீரா சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
குற்றம் சாட்டப்பட்டவருக்கோ அல்லது அவரது சட்டத்தரணிகளுக்கோ, எதிரான ஆதாரங்களைக்கூடக் காண்பிக்காமல் ரகசியமாக நடத்தப்படும் இந்த நீதிமன்ற முறைமை, அரசியலமைப்புக்கு முரணானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இருப்பினும், இந்த நடவடிக்கை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் கிடைத்துள்ள வெற்றி என அமெரிக்க சட்டமா அதிபர் டோட் பிளான்ச் (Todd Blanche) தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-13T21:41:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்கரியில் அடர்ந்த பனிமூட்டம்: சாரதிகளுக்குக் கனடா காலநிலை மையம் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fog-advisory-issued-for-calgary-1789319623"></link>
            <id>https://canadamirror.com/article/fog-advisory-issued-for-calgary-1789319623</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கல்கரி நகரில் அடர்ந்த பனிமூட்டம் நிலவியதை அடுத்து, கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கல்கரி நகரில் அடர்ந்த பனிமூட்டம் நிலவியதை அடுத்து, கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பு தனது இணையதளத்தில் மஞ்சள் நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>

சில பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாகப் பார்வைத் திறன் கிட்டத்தட்ட பூஜ்ஜிய நிலைக்குக் குறைந்துள்ளது.

காலையின் பிற்பகுதியில் இந்த பனிமூட்டம் மெல்ல மெல்ல விலகக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cd46e9e-a2c8-4aac-8386-f2502e61541d/26-6aa6d9c9760b4.webp' /></p><p>
</p><p>
சில பகுதிகளில் பயணம் செய்வது ஆபத்தானதாக இருக்க வாய்ப்புள்ளது.
சாரதிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> வேகத்தைக் குறைத்தும், முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதுமான பாதுகாப்பான இடைவெளியைப் பராமரித்தும் கவனமாக வாகனத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T17:23:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரில் செல்லப்பிராணியைப் பூட்டி வைத்த உரிமையாளருக்கு எதிராக வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/dog-left-in-hot-car-owner-charged-1789319172"></link>
            <id>https://canadamirror.com/article/dog-left-in-hot-car-owner-charged-1789319172</id>
            <summary type="text">கனடாவில், காரில் செல்லப்பிராணியான நாயை பூட்டி வைத்த உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கோடைகாலம் இன்னும் முடியாத நிலையில், &quot;உங்களுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், காரில் செல்லப்பிராணியான நாயை பூட்டி வைத்த உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.</p><p>
கோடைகாலம் இன்னும் முடியாத நிலையில், "உங்களுக்கு அதிக வெப்பமாகத் தோன்றும் வாகனம், உங்கள் செல்லப்பிராணிக்கும் ஆபத்தானது" எனச் சவுத் சிம்கோ காவல் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>திங்கட்கிழமை பிற்பகல் 1 மணியளவில், கனடாவின் குக்ஸ்டவுனில் உள்ள டாங்கர் அவுட்லெட் மாலில் நாய் ஒன்று காரில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc8b1aa5-02cf-4a17-8ea0-5bf54ebf7858/26-6aa6d805c9e11.webp' /></p><p>
</p><p>சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், காரின் பின்புறப் பகுதியில் உள்ள கூண்டில் நாய் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.</p><p> அந்த நாய்க்குக் குடிப்பதற்குத் தண்ணீரும் வைக்கப்படவில்லை.
வாகனத்தின் எஞ்சின் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது, காரின் முன்பக்கக் கண்ணாடி சுமார் ஒரு அங்குலம் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது, அப்போது வெளிப்புற வெப்பநிலை சுமார் 23 பாகை செல்சியஸாக இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>காரின் உரிமையாளரைத் தேடும் முயற்சியில் இறங்கிய அதிகாரிகள், மாலில் பொது அறிவிப்பும் செய்தனர். தேடுதல் வேட்டையின் போது உரிமையாளர் வாகனத்திற்குத் திரும்பி வந்தார். </p><p>அதற்குள் அந்த நாய் 30 நிமிடங்களுக்கும் மேலாகக் காரிலேயே அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
</p><p>இதையடுத்து, மாகாண விலங்குகள் நலச் சேவை சட்டத்தின் கீழ் காரின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>சமூக வலைதளங்களில் காவல் துறை வெளியிட்ட வீடியோவில், அதிகாரி ஒருவர் உரிமையாளரிடம் பேசுகையில், "ஒரு சூடான காரில் அரை மணி நேரம் என்னால் அமர முடியாது என்றால், எனது செல்லப்பிராணியையும் அங்கு வைக்க அனுமதிக்க மாட்டேன்" என்று கூறுவது பதிவாகியுள்ளது. </p><p>மேலும், இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து அதிக அளவில் வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
</p><p>பொதுமக்கள் பொருட்கள் வாங்கச் செல்லும்போதோ அல்லது வெளிப்புற வேலைகளுக்குச் செல்லும்போதோ செல்லப்பிராணிகளைக் காரில் விட்டுச் செல்லாமல், பாதுகாப்பாக வீட்டில் விட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T17:11:27+00:00</updated>
        </entry>
    </feed>
