<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-17T08:30:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-seeks-full-membership-in-uk-led-military-c-1789614938"></link>
            <id>https://canadamirror.com/article/canada-seeks-full-membership-in-uk-led-military-c-1789614938</id>
            <summary type="text">&amp;nbsp;பிரித்தானியா தலைமையிலான &#039;கூட்டுப் படைப் பிரிவில்&#039; முழுநேர உறுப்பினராக இணைவதற்கு கனடா உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்துள்ளதாகவும், இதற்கு பிரித்தானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரித்தானியா தலைமையிலான 'கூட்டுப் படைப் பிரிவில்' முழுநேர உறுப்பினராக இணைவதற்கு கனடா உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்துள்ளதாகவும், இதற்கு பிரித்தானியா தனது ஆதரவை வழங்கியுள்ளதாகவும் கனடா பிரதமர் மார்க் கர்னி தெரிவித்துள்ளார்.
</p><p>அவசர காலங்களில் விரைவாகச் செயற்படும் நோக்கில் 10 நேட்டோ நட்பு நாடுகளைக் கொண்டு 2014 ஆம் ஆண்டு இந்த இராணுவக் கூட்டணி உருவாக்கப்பட்டது.
</p><p>கனடிய இராணுவம் இதுவரை இந்த கூட்டுப் படையின் பல்தேசியப் பயிற்சிகளில் மட்டுமே பங்கேற்று வந்துள்ள நிலையில், தற்போது நிரந்தர உறுப்பினராக இணைய விண்ணப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d96ac307-bd89-498d-a837-c5bf8f399417/26-6aab5b5c76cdb.webp' /></p><p>
கியர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, பிரித்தானிய பிரதமராகப் பதவியேற்ற ஆண்டி பர்ன்ஹாமை , கனடா பிரதமர் மார்க் கர்னி புதன்கிழமை முதன்முறையாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>
பிரித்தானியாவும் கனடாவும் தங்களது பாதுகாப்பு நிதி சார்ந்த திட்டங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு அமைப்பை உருவாக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
</p><p>இவ்விரு திட்டங்களையும் ஒன்றிணைப்பது தொடர்பான இறுதி முடிவு இந்த வாரக் கூட்டங்களில் உடனடியாக வெளிவராவிட்டாலும், விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்பதில் கனடா அரசு உறுதியான நம்பிக்கையுடன் உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T08:00:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா ஹாரர் ஹவுஸ் ; 16 குழந்தைகளின் தாய் கர்ப்பிணியாக நீதிமன்றத்தில் ஆஜர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mom-16-feral-kids-house-horrors-appears-pregnant-1789630957"></link>
            <id>https://canadamirror.com/article/mom-16-feral-kids-house-horrors-appears-pregnant-1789630957</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் “ஹாரர் ஹவுஸ்” என வர்ணிக்கப்படும் கொடூர சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட 16 குழந்தைகளின் தாய், மீண்டும் கர்ப்பிணியாக நீதிமன்றத்தில் ஆஜரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் “ஹாரர் ஹவுஸ்” என வர்ணிக்கப்படும் கொடூர சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட 16 குழந்தைகளின் தாய், மீண்டும் கர்ப்பிணியாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
 முறையான உணவு, பராமரிப்பு மற்றும் அடிப்படை மனித வசதிகள் இன்றி சுகாதாரமற்ற சூழலில் பூட்டி வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் அண்மையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99125c4e-c28b-42bf-aeae-484fb9195957/26-6aab99eeae9e0.webp' /></p><h2>பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பு</h2><p> </p><p>

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர் மீதான விசாரணை தீவிரமடைந்து வருகிறது.</p><p>


நீதிமன்ற விசாரணையின் போது, தாய் மீண்டும் கர்ப்பமாக இருப்பது போன்ற அறிகுறிகளுடன் ஆஜரான காட்சி, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

ஏற்​கெனவே மீட்கப்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய தகவலானது வழக்கின் தீவிரத்தை மேலும் கூட்டியுள்ளது. </p><p>

குழந்தைகளின் தற்போதைய நிலை மற்றும் அவர்களின் எதிர்கால பாதுகாப்பு குறித்து குழந்தைகள் நல அமைப்புகள் கவனம் செலுத்தி வருகின்றன.
</p><p> 
 இந்தச் சம்பவத்தில், பெற்றோர் மீது குழந்தை சித்திரவதை, கவனக்குறைவு மற்றும் முறையற்ற பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>

குழந்தைகளின் உரிமைகளை மீறி, அவர்களை வெளி உலகத் தொடர்பின்றி தனிமைப்படுத்தி வைத்திருந்த இந்த விவகாரம் தொடர்பான மேலதிக ஆதாரங்களை காவல்துறை அதிகாரிகள் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகின்றனர்</p><p>

இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கையாண்டு வரும் நீதிமன்றம், மீட்கப்பட்ட 16 குழந்தைகளுக்கும் உடனடியாக மருத்துவ உதவிகள் மற்றும் உளவியல் ஆலோசனைகளை வழங்க உத்தரவிட்டுள்ளது.</p><p> 

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்கள் தற்காலிகமாக காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

மேலும், குழந்தைகளின் பெற்றோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-17T07:39:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: புதிய தகவல் ஒன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/charges-drop-against-man-in-pearson-gold-heist-1789630576"></link>
            <id>https://canadamirror.com/article/charges-drop-against-man-in-pearson-gold-heist-1789630576</id>
            <summary type="text">Crown drops charge against Toronto man accused in Pearson airport gold heist: பியர்சன் விமான நிலைய கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Crown drops charge against Toronto man accused in Pearson airport gold heist: பியர்சன் விமான நிலைய கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர் ஒருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>

கனடா விமான நிலையமொன்றிலிருந்து 400 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் விலக்கிக்கொண்டுள்ளார்கள்.
</p><p>
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5f33921-84fc-4e2c-9368-e282b90e5f2f/26-6aab9872ecfe9.webp' /></p><p>
கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தக்க ஆவணங்களுடன் வந்த ஒருவர் அந்த பார்சல்களை தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
</p><p>
அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ள வேறு சிலர் வந்துள்ளார்கள். அவர்கள் அந்த பார்சல்களுக்கான ஆவணங்களைக் கொடுக்க, அப்புறம்தான் தெரியவந்துள்ளது, ஏற்கனவே வந்த நபர் மோசடியாளர் என்பது.
</p><p>
அந்த பார்சல்களில், 6,600 தங்கக் கட்டிகள் இருந்துள்ளன. 400 கிலோ எடையுள்ள அவற்றின் மதிப்பு அப்போதே சுமார் 20 மில்லியன் டொலர்கள். அத்துடன், மற்றொரு பார்சலில் 2 மில்லியன் டொலர்கள் கரன்சியும் இருந்துள்ளது.&nbsp;</p><p>

சினிமா பாணியில் நடந்த அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 9 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.&nbsp;</p><p>
இந்நிலையில், ரொரன்றோவைச் சேர்ந்த Ali Raza (40) என்னும் நபர், அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24b074cb-ca9b-4a29-bcc1-9ff26c7e7e5d/26-6aab987242be9.webp' /></p><p>
நேற்று புதன்கிழமை, Ali Razaவுக்கு எதிரான வழக்கு, சூழ்நிலை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி, அரசுத் தரப்பு அவர் மீதான குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
</p><p>
தீர்ப்பைக் கேட்ட Ali Raza, தான் நிரபராதி என்றும், தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
என்றாலும், இந்த வழக்கு, நகைத் தொழில் செய்யும் Ali Razaவின் நற்பெயருக்கு களங்கத்தை உருவாக்கிவிட்டது என்றும், அவருக்கு தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றும் கூறியுள்ள அவரது சட்டத்தரணியான Brij Mohan என்பவர், அவர் தனது நற்பெயரை திரும்பப் பெற மேலும் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T07:36:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை அச்சுறுத்த ரஷ்யா எனது விமானத்தை தாக்க முயன்றது.. உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-tried-to-attack-my-plane-says-zelenskyy-1789629210"></link>
            <id>https://canadamirror.com/article/russia-tried-to-attack-my-plane-says-zelenskyy-1789629210</id>
            <summary type="text">தன்னையும் மற்ற வெளிநாட்டு தலைவர்களையும் அச்சுறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த சம்பவங்கள் நடந்தன என்றும், கடந்த சில வாரங்களில் ரஷ்யா தனது விமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன்னையும் மற்ற வெளிநாட்டு தலைவர்களையும் அச்சுறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த சம்பவங்கள் நடந்தன என்றும், கடந்த சில வாரங்களில் ரஷ்யா தனது விமானத்தை இரண்டு முறை குறிவைத்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

செவ்வாயன்று சி.பி.எஸ். நியூஸிடம் பேசிய ஜெலன்ஸ்கி, முதல் சம்பவம் நடந்தபோது தனது விமானம் மால்டோவாவில் இருந்ததாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ebf77bb-a1d7-4664-9efb-12a5ff00e42f/26-6aab931b8525b.webp' /></p><p> </p><p>அவர் அந்த நாடு வழியாக திரும்பி பயணித்தபோதும் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக கூறினார்.&nbsp;</p><p> "மால்டோவாவில் எனது விமானம் இருந்தது, அதனால்தான் அவர்கள் மால்டோவாவை தாக்கினார்கள். நாங்கள் மீண்டும் சிசினாவ் வழியாக தாயகம் திரும்பியபோதும், அவர்கள் அதையே செய்தார்கள்," என்று அவர் கூறினார்.</p><p>

சில நாட்களுக்குப் பிறகு உக்ரைனுக்குத் திரும்பும் பயணத்தின்போது, ​​ஒன்று அல்லது இரண்டு ட்ரோன்கள் மால்டோவாவின் வான்வெளிக்குள் நுழைந்ததாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
</p><p>
அதிபர் தூதுக்குழுவினருடன் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர். அந்த நேரத்தில், ட்ரோன் செயல்பாடு வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை.</p>]]></content>
            <updated>2026-09-17T07:13:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் திருமணமான 17 நாளில் இந்திய மணமகன் மர்ம மரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-origin-newlywed-groom-massachusetts-usa-1789628630"></link>
            <id>https://canadamirror.com/article/indian-origin-newlywed-groom-massachusetts-usa-1789628630</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் லோவெல் நகரில் சிவில் இன்ஜினியராக வேலை செய்து வந்த ஹைதராபாத்தை சேர்ந்த முகமது ஜாபர் உசேன் என்பவர்,&amp;nbsp; திரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் லோவெல் நகரில் சிவில் இன்ஜினியராக வேலை செய்து வந்த ஹைதராபாத்தை சேர்ந்த முகமது ஜாபர் உசேன் என்பவர்,&nbsp; திருமணமான&nbsp; 17 நாட்களில் மர்மமான முறையில் உயிரிழந்தமை&nbsp; உறவினர்களுக்கு&nbsp; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 
 
கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி டெக்சாஸில் திருமணம் முடிந்து மாசசூசெட்ஸ் திரும்பிய அவர், கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி தனது குடும்பத்தினரிடம் கடைசியாகப் பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/065d7f2c-b95d-4531-8a6f-5a56b2a3b4ac/26-6aab90d7dc966.webp' /></p><p> </p><p>அதன் பின்னர் சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக&nbsp; அவருடன் தங்க்கி இருந்தவர்கள்&nbsp; குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளதாக&nbsp; கூறப்படுகின்றது</p><p>&nbsp;உயிரிழந்த&nbsp; மணமகனின்&nbsp; உறவினர்கள் , உசேனின் உடலை ஹைதராபாத்திற்கு கொண்டு வர&nbsp; இந்திய மத்திய அரசின் உதவியை நாடியுள்ளதாக&nbsp; கூறப்படுகின்றது.</p><p>இந் நிலையில் மணமகனின் மரணத்திற்கான உண்மையான காரணம் தொடர்பில் விசாரணைகாள் இடம்பெற்றுவருவதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T07:00:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஆண்டுகளின் பின் மீண்டும் உயர்ந்த அமெரிக்க வட்டி வீதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-interest-rates-rise-again-after-3-years-1789618048"></link>
            <id>https://canadamirror.com/article/us-interest-rates-rise-again-after-3-years-1789618048</id>
            <summary type="text">அதிகரித்து வரும் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் முதன்முறையாக அமெரிக்க வட்டி வீதங்கள் உயர்த்தப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகரித்து வரும் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் முதன்முறையாக அமெரிக்க வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அவை மேலும் உயர்த்தப்படக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. </p><p>

வட்டி வீதங்களைக் குறைக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியிலும், மத்திய வங்கியால் ஏகமனதான தீர்மானத்தின் மூலம் வட்டி வீதங்கள் 3.5%-3.75% இலிருந்து 3.75%-4% ஆக உயர்த்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e169e33c-fb4a-4cae-ae81-14f16db24b04/26-6aab6781ac136.webp' /></p><p> </p><p>

பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளதுடன், அது நீண்டகாலமாக நீடிக்கிறது எனக் குறிப்பிட்ட மத்திய வங்கியின் தலைவர் கெவின் வோர்ஷ், இது ஒரு "தெளிவான" மற்றும் "பொறுப்பான தீர்மானம்" என்றும் கூறினார். </p><p>

இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஜனாதிபதி ட்ரம்ப், கெவின் வார்ஷிற்குத் தனது ஆதரவை வெளியிட்ட போதிலும், வட்டி வீதத் தீர்மானங்களில் வாக்களிக்கும் மத்திய வங்கி சபை எதிர்ப்பான போக்கைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். </p><p>

உயர்ந்த வட்டி வீதங்கள் கடன், வீடமைப்புப் பிணைக்கடன் மற்றும் கடன் அட்டைகளைப் பெற விரும்புவோருக்குக் கடன்களை அதிக செலவுடையதாக்குகின்றன. </p><p>

இருப்பினும், இது சேமிப்புகளுக்குச் சிறந்த பலன்களை அளிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

தீர்மானத்தைத் தொடர்ந்து புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, மத்திய வங்கித் தலைமையிற்குள் நம்பிக்கையான மனநிலை இருந்தபோதிலும், பணவீக்கம் தொடர்ந்து ஒரு பிரச்சினையாகவே உள்ளதாக வோர்ஷ் கூறினார்.</p><p> 

பல மத்திய வங்கிகளைப் போலவே, பணவீக்கத்தை 2% அல்லது அதற்குக் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்ற இலக்கை மத்திய வங்கியும் கொண்டுள்ளது. </p><p>

அமெரிக்க பணவீக்கம் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கை விட அதிகமாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தொடங்கியது முதல் மொத்த விற்பனை எண்ணெய் விலைகள் அதிகரித்ததன் காரணமாக, எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. </p><p>

இது பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையையும் உயர்த்தியுள்ளதுடன், இதுவே அமெரிக்க வாக்காளர்களின் முதன்மை கவலைகளில் ஒன்றாக வாழ்வாதாரச் செலவை மாற்ற உதவியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T04:07:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஃபேஸ்புக் சந்தை மூலம் கடிகாரம் விற்கச் சென்ற நபர் மீது தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/3-suspects-sought-after-person-pepper-sprayed-1789615758"></link>
            <id>https://canadamirror.com/article/3-suspects-sought-after-person-pepper-sprayed-1789615758</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள விட்பி பகுதியில், ஃபேஸ்புக் சந்தை வாயிலாகக் கைக்கடிகாரம் ஒன்றை விற்பனை செய்யச் சென்ற நபர் மீது மிளகுத் தெளிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள விட்பி பகுதியில், ஃபேஸ்புக் சந்தை வாயிலாகக் கைக்கடிகாரம் ஒன்றை விற்பனை செய்யச் சென்ற நபர் மீது மிளகுத் தெளிப்பான் தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.</p><p> 
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் டான்டன் வீதி கிழக்கு மற்றும் பால்ட்வின் வீதி தெற்கு பகுதிக்கு அருகில் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.</p><p> 
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட நபர் தனது கைக்கடிகாரத்தை விற்பனை செய்வதற்காக ஃபேஸ்புக் சந்தையில் விளம்பரம் செய்திருந்ததும், அதனை வாங்குவதாகக் கூறிய நபரைச் சந்திக்கச் சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளதும் தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cff3112-a210-4ffd-9b56-fd56962f0b4e/26-6aab5e8fa3997.webp' /></p><p>
</p><p>அங்கு வந்த மூன்று நபர்கள், விற்பனையாளர் மீது மிளகுத் தெளிப்பான் தாக்குதல் நடத்தி, அவரைத் தாக்கிவிட்டு, கருப்பு நிற எஸ்.யு.வி காரில் தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த நபர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p> 
சந்தேகநபர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய கருப்பு நிற 'ஹோண்டா சி.ஆர்-வி' ரக காரின் புகைப்படத்தைப் புதன்கிழமை காவல்துறையினர் வெளியிட்டனர். </p><p>முதலாம் நபர்: 18 முதல் 20 வயதுடைய கருப்பின இளைஞர், 6 அடி உயரம், நீண்ட சடை முடி கொண்டவர். இவர் கருப்பு நிற தொப்பி, நீல நிற மருத்துவ முகக்கவசம், கருப்பு ட்ராக்சூட், மஞ்சள் நிற வேலைக் கையுறைகள் மற்றும் சாம்பல் நிற ஓட்டப்பந்தயக் காலணிகளை அணிந்திருந்தார். </p><p>இரண்டாம் நபர்: 5 அடி 5 அங்குலம் முதல் 5 அடி 7 அங்குல உயரம் கொண்டவர். இவர் கருப்பு நிற மருத்துவ முகக்கவசம், பழுப்பு நிற ஸ்வெட்ஷர்ட், அடர் சாம்பல் நிற ட்ராக் பேன்ட், கருப்பு காலணிகள் மற்றும் கருப்பு நைட்ரைல் கையுறைகளை அணிந்திருந்தார்.</p><p>மூன்றாம் நபர்: இவரைப் பற்றிய அடையாளங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T04:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவை எச்சரிக்கும் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-calls-canada-becoming-associate-member-1789615375"></link>
            <id>https://canadamirror.com/article/trump-calls-canada-becoming-associate-member-1789615375</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது இணைப்பு உறுப்பினராகக்கனடா இணைந்தால் அது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது இணைப்பு உறுப்பினராகக்கனடா இணைந்தால் அது ஒரு "பகைமைச் செயலாக" கருதப்படும் எனவும், அதற்குப் பதிலடியாக ஐரோப்பா மீது கடுமையான சுங்க வரிகள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
</p><p>வட கரொலைனாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கனடாவை ஒரு "மோசமான வர்த்தகக் கூட்டாளி" எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.</p><p>அமெரிக்க அரசுத் துறைகளின் கொள்முதலில் இருந்து கனடிய தயாரிப்புகளை முற்றிலுமாக அகற்றுவதற்கான புதிய அரசாணையிலும் கையெழுத்திட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4917b266-16fa-4b0b-9306-948160a08757/26-6aab5d115d95b.webp' /></p><p>
</p><p>சுமார் 280 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க கூட்டாட்சி அரசின் கொள்முதல் சந்தையில் இருந்து கனடியப் பொருட்களை நீக்க இந்த உத்தரவு வழிவகுக்கிறது.</p><p> கனடாவின் நியாயமற்ற வர்த்தகக் கொள்கைகளால் அமெரிக்கத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவே இந்நடவடிக்கை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கனடா பிரதமர் மார்க் கர்னி, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயனைச் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளார்.</p><p>கனடாவுடனான உறவை வெறும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைத் தாண்டி உயர் மட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என உர்சுலா வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் முந்தைய சுங்க வரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாகக் கனடா கொண்டு வந்த 'Buy Canadian' கொள்கையே தற்போதைய அமெரிக்க நடவடிக்கைக்கான காரணம் என டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>
அமெரிக்காவின் இந்த புதிய கொள்முதல் கட்டுப்பாடுகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், கனடிய வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கனடாவின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>ஆட்டோமொபைல், எஃகு, அலுமினியம் மற்றும் உணவுப் பொருட்கள் மீது இரு நாடுகளும் மாறி மாறி விதித்து வரும் சுங்க வரிகளால் வட அமெரிக்கப் பிராந்தியத்தின் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொருட்களின் விலை உயரும் எனப் பொருளாதார நிபுணர்களும் தொழிலதிபர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T03:30:16+00:00</updated>
        </entry>
    </feed>
