<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-22T01:38:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர்; ஸ்பெயின் முழுவதும் களைக்கட்டிய கொண்டாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-million-fans-welcome-world-champion-1784680427"></link>
            <id>https://canadamirror.com/article/two-million-fans-welcome-world-champion-1784680427</id>
            <summary type="text">உலக கோப்பை வென்ற ஸ்பெயின் வீரர்களை வரவேற்க, 20 லட்சம் ரசிகர்கள் திரண்டனர்.



அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடந்த உலக கோப்பை பைனலில், ஸ்பெயின் அணி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உலக கோப்பை வென்ற ஸ்பெயின் வீரர்களை வரவேற்க, 20 லட்சம் ரசிகர்கள் திரண்டனர்.
</p><p style="text-align: justify; ">


அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடந்த உலக கோப்பை பைனலில், ஸ்பெயின் அணி, அர்ஜென்டினாவை சாய்த்து, இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fddc5ff4-4a54-4f9f-ab1c-84fa98082fbd/26-6a600fed5f499.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">இதையடுத்து 26 வீரர்கள், பயிற்சியாளர் குழுவினர் நேற்று ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் வந்தனர்.


உலக கோப்பையுடன் மன்னர் குடும்பத்தினர், பிரதமர் பெட்ரோ சான்செசையும் சந்தித்து பாராட்டு பெற்றனர். </p><p style="text-align: justify; ">பின் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான மான்க்லோவா அரண்மனையில் இருந்து சிபெலெஸ் சதுக்கம் வரை திறந்த வெளி பஸ்சில், மாட்ரிட் நகரின் மையப்பகுதியில் ஊர்வலமாக சென்றனர்.


</p><p style="text-align: justify; ">
'வி ஆர் சாம்பியன்' என்ற வாசகம் கொண்ட ஜெர்சி அணிந்து காணப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> பல்வேறு இடங்களில் வீரர்கள், ரசிகர்களுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.


சிபெலெஸ் சதுக்கத்தில் ஸ்பெஷலான மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு வந்ததும் ஒவ்வொரு வீரராக அறிமுகம் செய்யப்பட்டனர். </p><p style="text-align: justify; ">தனது 25 வது பிறந்த நாள் கொண்டாடிய பயனா, உலக கோப்பை ஏந்திய படி வந்தார். கடைசியில் பயிற்சியாளர் லுாயிஸ் டி லாவை வீரர்கள் மேலே துாக்கி ஆரவாரம் செய்தனர்.
</p><p style="text-align: justify; ">

பின் ஆட்டம் களை கட்டியது. வீரர்களுடன் பாடகிகள் ஐடனா, அனா மெனா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-22T01:10:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு டெலிவரி ஊழியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/courier-makes-history-with-top-literature-prize-1784682033"></link>
            <id>https://canadamirror.com/article/courier-makes-history-with-top-literature-prize-1784682033</id>
            <summary type="text">சீனாவைச் சேர்ந்த உணவு டெலிவரி பணியாளரும், கவிஞருமான வாங் ஜிபிங், கவிதைப் பிரிவில் சீனாவின் மதிப்புமிக்க லு சூன் இலக்கியப் பரிசை வென்றுள்ளார்.

நவீன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவைச் சேர்ந்த உணவு டெலிவரி பணியாளரும், கவிஞருமான வாங் ஜிபிங், கவிதைப் பிரிவில் சீனாவின் மதிப்புமிக்க லு சூன் இலக்கியப் பரிசை வென்றுள்ளார்.
</p><p>
நவீன சீன இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் லு சூனின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது, சீனாவின் மிக உயர்ந்த இலக்கிய அங்கீகாரங்களில் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03dc394a-c2b6-42c0-8814-217f30ee46f2/26-6a601632e3a4b.webp' /></p><p>

</p><p>
லோ பிளைட்
சீனாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் அன்றாடப் போராட்டங்கள், விரக்திகள் மற்றும் சவால்களை மையமாக வைத்து 'லோ பிளைட்' (Low Flight) எனும் கவிதைத் தொகுப்பு நூலை எழுதியுள்ளார்.
</p><p>
இந்த நூலுக்காக சுமார் 200 சக டெலிவரி ஊழியர்களிடம் அவர் உரையாடியுள்ளார்.
</p><p>
6,000 கவிதைகள்
பகலில் உணவு டெலிவரி செய்யும் இவர், கடந்த 8 ஆண்டுகளில் தனது ஸ்கூட்டரில் சுமார் 1,50,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்து, ஓய்வு நேரங்களில் 6,000-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.
</p><p>
களப்பணியாளர்களின் யதார்த்தமான வாழ்க்கையை எழுத்தாக்கிய இவரது வெற்றி, சீனாவில் தொழிலாளர்களின் இலக்கிய படைப்புகளுக்குக் கிடைத்துவரும் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
</p><p>
ஜியாங்சு மாகாணத்தில் பிறந்த வாங் ஜிபிங், வீட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக இளமையிலேயே பள்ளியிலிருந்து விலகினார். </p><p>அவர் உணவு டெலிவரி ஊழியராக மாறுவதற்கு முன் கட்டுமானம், குப்பை சேகரிப்பு மற்றும் தெருவோர வியாபாரம் என பல்வேறு வேலைகளைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-22T01:00:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை ; ட்ரம்ப் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-rules-out-talks-with-the-united-states-1784674748"></link>
            <id>https://canadamirror.com/article/trump-rules-out-talks-with-the-united-states-1784674748</id>
            <summary type="text">அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முறிந்து மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 10 நாட்களாக நீடித்து வரும் இந்த சண்டையில் ஈரான் தனது அண்டை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முறிந்து மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. </p><p>10 நாட்களாக நீடித்து வரும் இந்த சண்டையில் ஈரான் தனது அண்டை நாடான குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டன், கத்தார் உள்ளிட்டவை மீது தாக்குதல் நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1353add-e951-48a3-a761-f0282837333d/26-6a5ff9bd9f715.webp' /></p><p>


</p><p>
இதற்கிடையே ஈரான் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி, அமெரிக்காவுடனான மோதலைத் தணித்து, முறிந்த இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்காக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். </p><p>இஸ்லாமாபாத்துக்கு நேரில் சென்று ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகிய மத்தியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். </p><p>ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் தற்போதைக்கு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு எந்த விருப்பமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>

ஓவல் அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால், முறையான மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயாராகும் வரை சந்திப்பில் எங்களுக்கு ஆர்வம் இல்லை” என்றார்.</p><p> மேலும், போரினால் ஈரான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அதை முடிவுக்கு கொண்டுவரவே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு துடிப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p> தற்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் பலவீனமடைந்துள்ளதால், தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-22T00:26:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை விதிக்க தயாராகிறது பிரான்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/france-to-ban-social-media-for-children-under-15-1784669414"></link>
            <id>https://canadamirror.com/article/france-to-ban-social-media-for-children-under-15-1784669414</id>
            <summary type="text">15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கும் சட்டமூலத்தை பிரான்ஸ் பாராளுமன்றம் இறுதி வாக்கெடுப்பில் நிறைவேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கும் சட்டமூலத்தை பிரான்ஸ் பாராளுமன்றம் இறுதி வாக்கெடுப்பில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் 15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடைசெய்யும் முதல் நாடாக பிரான்ஸ் மாறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2765c755-630e-496d-9e95-334440133239/26-6a5fe4ed8d358.webp' /></p><p>

பாராளுமன்றத்தின் மேலவை மற்றும் கீழவை உறுப்பினர்கள் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சட்டமூலத்தின் இறுதி வடிவத்திற்கு ஒருமனதாக இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இறுதி வாக்கெடுப்புக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
</p><p>
சட்டத்தின்படி, 2026 செப்டம்பர் 1 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் டிக்டொக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப் செட் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் புதிய கணக்குகளைத் தொடங்க முடியாது.
</p><p>
மேலும், 2027 ஜனவரி முதல், ஏற்கனவே 15 வயதிற்குட்பட்டோரால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக ஊடகக் கணக்குகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதேவேளை, புதிய கல்வியாண்டு தொடங்கும் செப்டம்பர் மாதம் முதல், பிரான்ஸின் உயர்நிலைப் பாடசாலைகளில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது</p><p>
இருப்பினும், விக்கிப்பீடியா, கல்வி இணையத்தளங்கள் மற்றும் திறந்த மூல மென்பொருள் தளங்கள் இந்தத் தடையிலிருந்து விலக்கு பெறும்.</p>]]></content>
            <updated>2026-07-21T21:30:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 வயது சிறுவன் மீது கத்திக்குத்து —இளம் பெண் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/17-year-old-critically-injured-in-stabbing-1784651080"></link>
            <id>https://canadamirror.com/article/17-year-old-critically-injured-in-stabbing-1784651080</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் மிசிசாகா நகரில் பேருந்து ஒன்றுக்குள்ளேயே 17 வயது சிறுவனைக் கத்தியால் குத்திக் கொடூரமாகத் தாக்க முயன்ற குற்றத்திற்காக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் மிசிசாகா நகரில் பேருந்து ஒன்றுக்குள்ளேயே 17 வயது சிறுவனைக் கத்தியால் குத்திக் கொடூரமாகத் தாக்க முயன்ற குற்றத்திற்காக 18 வயது இளம் பெண்ணைக் காவல் துறையினர் கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். </p><p>
செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 1:50 மணியளவில் ஹூரோன்டாரியோ தெரு மற்றும் வாட்லைன் டிரைவ் அருகே இயங்கிக் கொண்டிருந்த 'மிவே' பேருந்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. </p><p>
செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பீல் பிராந்திய காவல் துறை அதிகாரிகள் இதுகுறித்த விவரங்களை வெளியிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df964a1-8ffe-4d4d-9b9e-217faa9f1e29/26-6a5f9d4a270d1.webp' /></p><p>தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுவனும், கத்தியால் குத்திய 18 வயது இளம் பெண்ணும் முன்பே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
பேருந்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அந்தப் பெண் சிறுவனைக் கத்தியால் குத்தியுள்ளார். </p><p>
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அச்சிறுவன் டொராண்டோவில் உள்ள அதி தீவிர சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டார்.</p><p>
 தொடக்கத்தில் அவரது நிலை சீராக இருந்தபோதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 
சம்பவ இடத்திலேயே 18 வயது பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது பின்வரும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இது இருவருக்குள் தனிப்பட்ட முறையில் நடந்த சம்பவம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு வேறு எந்தப் அச்சுறுத்தலும் இல்லை என்றும் புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கும் இடையிலான உறவின் தன்மை என்ன என்பது குறித்தும், அவர்கள் இருவரும் ஒன்றாகப் பேருந்தில் ஏறினார்களா என்பது குறித்தும் இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T20:38:21+00:00</updated>
        </entry>
    </feed>
