<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-06T03:17:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹொர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-launches-surprise-attack-ships-strait-hormuz-1788655698"></link>
            <id>https://canadamirror.com/article/iran-launches-surprise-attack-ships-strait-hormuz-1788655698</id>
            <summary type="text">ஹொர்முஸ் நீரிணை வழியே விதிமுறைகளை மீறிச் சென்ற 2 முதல் 5 கப்பல்கள் வரை தினமும் இரவு நேரத்தில் &quot;தண்டிக்கப்பட்டதாக&quot; ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொர்முஸ் நீரிணை வழியே விதிமுறைகளை மீறிச் சென்ற 2 முதல் 5 கப்பல்கள் வரை தினமும் இரவு நேரத்தில் "தண்டிக்கப்பட்டதாக" ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

2026 ஆகஸ்ட் 30-ஆம் திகதி வரையிலான 10 நாட்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
</p><p>
இந்த தாக்குதல்களின் பின்னரும் கூட விதிமுறைகளை மீறும் கப்பல்கள் மீது தேவையான நேரங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரானிய புரட்சிக்கர காவல்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84aeccc2-db4f-43b4-8b4c-19e67b48c22f/26-6a9cb85407a41.webp' /></p><p>

இந்தநிலையில், ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலை ஈரான் வெளியுறவு அமைச்சகம் "போர்க்குற்றம்" என கடுமையாகக் கண்டித்துள்ளது.
</p><p>
அத்துடன், பிராந்திய கடற்பகுதியில் அமெரிக்காவின் முற்றுகை மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்தால் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது பதிலடித் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என ஈரானிய ஆயுதப்படைகள் எச்சரித்துள்ளன.
</p><p>
எனினும், பிராந்திய கடற்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை இலக்கு வைத்து ஈரானிய புரட்சிகர காவல் படை பெலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியதைத் தொடர்ந்தே ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க மத்திய கட்டளையகம் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை, ஈரானின் நதான்ஸ் (Natanz) அணுசக்தி மையத்திற்கு அருகே அமைந்துள்ள 'பிக்அக்ஸ்' (Pickaxe Mountain) நிலத்தடி அணுசக்தி வளாகத்தின் மீது மிக விரைவில் (very soon) தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
</p><p>
கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு இத்தகைய எச்சரிக்கையை அவர் மீண்டும் விடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T01:47:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் விமானத்தில் அட்டகாசம் செய்த பயணி ; இருக்கையுடன் டேப் போட்டு கட்டி வைத்த சக பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/passenger-causes-a-scene-on-a-flight-in-the-us-1788646117"></link>
            <id>https://canadamirror.com/article/passenger-causes-a-scene-on-a-flight-in-the-us-1788646117</id>
            <summary type="text">அமெரிக்காவில், விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 67 வயதுடைய பயணி ஒருவர் சக பயணிகளால் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில், விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 67 வயதுடைய பயணி ஒருவர் சக பயணிகளால் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அமெரிக்கன் ஏர்லைன்ஸின் AA618 விமானம் கடந்த வியாழக்கிழமை டெக்சாஸின் டல்லாஸிலிருந்து நியூவர்க்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d581c9e8-412d-487a-8291-49b088d0017d/26-6a9c92e78ddd5.webp' /></p><p> </p><p>விமானத்தில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, பயணியின் கைகள் ஜிப் டைகளால் கட்டப்பட்டதுடன், அவர் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்டதாக மேரிலாந்து போக்குவரத்து ஆணைய காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
அரிசோனாவைச் சேர்ந்த 67 வயதான ஆர்தர் லண்டீன் என்பவரே இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>சம்பவத்துக்கான முழுமையான காரணங்கள் ஆரம்பத்தில் வெளியிடப்படவில்லை என்றாலும், விமானத்தில் அவரது நடத்தை கடுமையாக இருந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

நிலைமை கட்டுக்கடங்கியதைத் தொடர்ந்து விமானம் அதன் பயணப் பாதையை மாற்றி, இரவு சுமார் 10.15 மணியளவில் Baltimore/Washington International Airport (BWI) விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு காவல்துறையினர் விமானத்தில் ஏறி அவரை கைது செய்தனர்.
</p><p>
சம்பவம் தொடர்பாக Federal Aviation Administration (FAA) விசாரணை நடத்தி வருவதுடன், FBI-யும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>பயணியை அகற்றிய பின்னர் விமானம் தனது இறுதி இலக்கான நியூவர்க்கை நோக்கி தொடர்ந்து பயணித்தது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், விமானப் பயணங்களின்போது கட்டுப்பாடற்ற பயணிகளால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T22:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் எதிரொலி ; அமெரிக்காவில் பெற்றோல் விலை வரலாறு காணாத உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/petrol-prices-in-the-us-hit-an-all-time-high-1788632422"></link>
            <id>https://canadamirror.com/article/petrol-prices-in-the-us-hit-an-all-time-high-1788632422</id>
            <summary type="text">ஈரான் மீதான போரை தொடர்ந்து அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் காரணமாக, அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலன் (அமெரிக்காவில் 3.78 லீற்றர்) 4 டொலரைத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான போரை தொடர்ந்து அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் காரணமாக, அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலன் (அமெரிக்காவில் 3.78 லீற்றர்) 4 டொலரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

வரவிருக்கும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படும் வாரத்தில் பெற்றோல் விலை ஒரு கலன் 4.03 டொலராக இருக்கும் என கேஸ் பட்டி (GasBuddy) தரவுகள் கணித்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0271a611-7742-49d3-ba02-91b0fa61bc54/26-6a9c5d67d82c8.webp' /></p><p>இது, கடந்த 2012 ஆம் ஆண்டில் பதிவான ஒரு கலனுக்கான 3.83 டொலர் என்ற முந்தைய சாதனையை விட மிக அதிகமாகும்.
</p><p>
அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தைக் கொண்டாடும் அதிகாரப்பூர்வ விடுமுறை தினமான தொழிலாளர் தினம் (Labour Day) திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்வுள்ள நிலையில், இந்த நீண்ட வார இறுதியில் பலரும் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
GasBuddy தரவுகளின்படி, கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி நாட்டின் சராசரி பெற்றோல் விலை ஒரு கலனுக்கு சுமார் 4.13 டொலராக இருந்தது. </p><p>இது கடந்த ஆண்டின் சராசரியை விட சுமார் ஒரு டொலர் கூடுதலாகும்.</p><p>

4 டொலர் என்ற இந்த விலை எல்லையானது அமெரிக்க நுகர்வோருக்கு மிகவும் தாங்க முடியாத ஒரு புள்ளியாக (Pain Point) மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் ஏழாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் எதிர்வரும் நவம்பர் இடைக்காலத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T21:42:59+00:00</updated>
        </entry>
    </feed>
