<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-14T03:55:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மகன்களைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sentencing-hearing-underway-for-new-brunswick-man-1786675932"></link>
            <id>https://canadamirror.com/article/sentencing-hearing-underway-for-new-brunswick-man-1786675932</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி அதிகாலை, காமிஷ்னி தனது 10 மற்றும் 17 வயதுடைய இரு மகன்களையும் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.</p><p> 
பின்னர், 'நெயில் கன்' ஆணி அடிக்கும் கருவி மூலம் தனது தலையில் தானே அடித்துக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார்.
கடந்த ஜூன் 24 அன்று இவர் மீதான முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், தற்போது இவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, அவை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c13f2e43-2828-4500-9573-9d5cb3d0fccd/26-6a7e82de9aefe.webp' /></p><p> </p><p>கனடாவின் சட்டப்படி முதல் நிலை கொலைக் குற்றவாளிக்கு 25 ஆண்டுகளுக்குப் பிணை பெற முடியாது.
</p><p>விவாகரத்து செய்த தனது மனைவியைப் பழிவாங்குவதற்காகவும், அவருக்குத் தண்டனை அளிப்பதற்காகவுமே காமிஷ்னி இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
</p><p>கொலை செய்வதற்கு முன்பாக, "நான் அனைவரையும் கொன்றுவிட்டேன், பொலிஸாரையும் ஆம்புலன்ஸையும் வரச் சொல்" என்று மனைவிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி மற்றும் கடிதங்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.
</p><p>எனினும், நீதிமன்றத்தில் பேசிய காமிஷ்னி, "எனக்கு அன்றைய தினம் நடந்தது எதுவும் நினைவில் இல்லை, என் குழந்தைகளைக் கொல்லும் திட்டம் எனக்கு இருக்கவில்லை" என்று வாதிட்டார்.
</p><p>இதைக் கேட்ட நீதிபதி டேரல் ஸ்டீபன்சன், "உம்மீது மேலும் வார்த்தைகளை வீணடிக்க விரும்பவில்லை. நீர் ஒரு திட்டமிட்டு அதைச் செயல்படுத்தியுள்ளீர், அதற்கான தண்டனையை அனுபவிக்கும் நேரம் இது" என்று கூறி தண்டனையை அறிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T03:34:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோவா ஸ்கோடியாவில் மனித எச்சங்கள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/human-remains-found-near-debert-ns-rcmp-1786674694"></link>
            <id>https://canadamirror.com/article/human-remains-found-near-debert-ns-rcmp-1786674694</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்திலுள்ள கோல்செஸ்டர் கவுன்டீ பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்திலுள்ள கோல்செஸ்டர் கவுன்டீ பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>டெபர்ட் பகுதிக்கு அருகிலுள்ள காடடர்ந்த பகுதியில் மனித எச்சங்கள் இருப்பதாகக் கடந்த ஜூலை 22 ஆம் திகதி கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டனர்.
</p><p>மீட்கப்பட்ட எச்சங்கள் ஒரு ஆணுடையது என்றும், அவரது மரணத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் அடங்கியிருக்கலாம் என நம்புவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aca255e7-b81f-45de-9b58-8d5ed9432b0b/26-6a7e7e08729d3.webp' /></p><p>
</p><p>எனினும், நோவா ஸ்கோடியா மருத்துவ பரிசோதனை சேவையின் உதவியுடன், உயிரிழந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் புலனாய்வாளர்கள் முயன்று வருகின்றனர்.</p><p>
அந்த நபரின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதில் இருந்து, அப்பகுதியில் விரிவான தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன. </p><p>இந்த சம்பவம் குறித்து மக்களிடையே பல்வேறு வதந்திகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளதை நாங்கள் அறிவோம். ஆனால், எங்கள் முதன்மைப் பொறுப்பு விசாரணையின் நிமித்தம் தகவல்களைப் பாதுகாப்பதே ஆகும் என நோவா ஸ்கோடியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இவ்விசாரணை இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதால், தற்போதைக்கு மேலதிக விவரங்கள் எதையும் வெளியிட முடியாது என பொலிஸார் கூறியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T03:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சில உணவு வகைகள் குறித்து எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/some-whole-foods-salsas-guacamoles-recalled-1786674275"></link>
            <id>https://canadamirror.com/article/some-whole-foods-salsas-guacamoles-recalled-1786674275</id>
            <summary type="text">&amp;nbsp;ஒன்டாரியோவில் இணையவழியில் விற்பனை செய்யப்பட்ட &#039;ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட்&#039; நிறுவனத்தின் சில சாஸ்கள், குவாக்கமோல் மற்றும் பிற ஆயத்த உணவுகளில் &#039;சால்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஒன்டாரியோவில் இணையவழியில் விற்பனை செய்யப்பட்ட 'ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட்' நிறுவனத்தின் சில சாஸ்கள், குவாக்கமோல் மற்றும் பிற ஆயத்த உணவுகளில் 'சால்மோனெல்லா' பாக்டீரியா தொற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவை திரும்பப் பெறப்படுவதாக கனடாவின் உணவுத் ஆய்வு முகவரகம் அறிவித்துள்ளது.</p><p>
மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார மிளகாய் மூலமாகவே இந்த பாக்டீரியா பரவியுள்ளது.</p><p> 
அமெரிக்காவில் ஏற்பட்ட நோய் பரவலுக்கும் இந்த மிளகாய்களே காரணம் எனக் கூறப்படும் நிலையில், அதன் தொடர்ச்சியாகவே கனடாவிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15bf9fa8-9665-4121-b034-7a91bc6516cd/26-6a7e7c64e009a.webp' /></p><p>எனினும், கனடாவில் இந்த உணவுகளை உட்கொண்டதால் இதுவரை யாருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை என்று கனடாவின் உணவுத் ஆய்வு முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>
திரும்பப் பெறப்படும் பொருட்களில் பல்வேறு வகையான 'சால்சா', 'குவாக்கமோல்', 'பிகோ டி காலோ' மற்றும் 'சிக்கன் கெசடிலா' போன்ற ஆயத்த உணவுகள் அடங்கும். இவை ஆகஸ்ட் 16 வரை காலாவதி திகதியைக் கொண்ட தயாரிப்புகளாகும்.
</p><p>சால்மோனெல்லா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவுகள் பார்ப்பதற்கோ அல்லது வாசனைக்கோ கெட்டுப்போனது போல் தெரியாது. </p><p>ஆனால், அவற்றை உட்கொள்வது உடல்நலக் குறைவை ஏற்படுத்தும். குறிப்பாக சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T03:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது ; ஈரான் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strait-of-hormuz-completely-closed-iran-announces-1786662961"></link>
            <id>https://canadamirror.com/article/strait-of-hormuz-completely-closed-iran-announces-1786662961</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை தடையின்றி இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை தடையின்றி இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் நடைபெறும் அனைத்து நகர்வுகளையும் IRGC கடற்படை முழுமையாகக் கண்காணித்து வருவதாகவும், தமது அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் அந்தப் பாதையில் சுதந்திரமாக இயங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p>இதேவேளை, ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாகவும், அமெரிக்க கடற்படை அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாத்து வருவதாகவும் அமெரிக்க தரப்பு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/741d1d6b-5ac2-4457-8af1-a300988f45bf/26-6a7e50338372c.webp' /></p><p>அண்மைய தகவல்களின்படி, அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள பாதையில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து மிகவும் குறைந்த அளவிலேயே இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கு முன்னர் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை முடிவுக்கு வருதல், பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுதல் உள்ளிட்ட பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. </p><p>ஈரான் மற்றும் ஓமான் இடையே கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்பான வழித்தடம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், அந்த உடன்பாடு மட்டும் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்கு போதுமானதல்ல என ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எரிசக்தி வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகும். </p><p>இதன் ஊடான கப்பல் போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளமை உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் எரிசக்தி சந்தைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

எனவே, “நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது” என்ற ஈரானின் நிலைப்பாட்டுக்கும், “நீரிணை திறந்துள்ளது” என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கும் இடையே தொடர்ந்தும் முரண்பாடு நிலவி வருகிறது. </p><p>நடைமுறையில், நீரிணை வழியாக கப்பல்கள் செல்வது முற்றிலும் நிறுத்தப்படவில்லை என்றாலும், வழக்கமான அளவுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து கடுமையாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது</p>]]></content>
            <updated>2026-08-14T00:24:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் செயலி சேவைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lawsuit-filed-us-agains-trump-truth-social-service-1786665299"></link>
            <id>https://canadamirror.com/article/lawsuit-filed-us-agains-trump-truth-social-service-1786665299</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை ஏனைய பயனர்களைவிட மிக வேகமாகப் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை ஏனைய பயனர்களைவிட மிக வேகமாகப் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கும் ‘Truth API’ சேவைக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
</p><p>
நியூயோர்க் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் The Intercept மற்றும் Freedom of the Press Foundation ஆகிய ஊடக அமைப்புகள் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.
</p><p>
Trump Media &amp; Technology Group (TMTG) அறிமுகப்படுத்தியுள்ள இந்தச் சேவை, ட்ரம்ப் உள்ளிட்ட Truth Social இன் செல்வாக்குமிக்க கணக்குகளில் வெளியாகும் பதிவுகளை நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த தாமதத்துடன் வழங்குகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3de1421d-9259-48ff-b740-2446bbb0b308/26-6a7e595626e15.webp' /></p><p>குறிப்பாக நிதி நிறுவனங்கள் மற்றும் அதிவேக வர்த்தக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக்கு மாதாந்தம் 60,000 முதல் 100,000 அமெரிக்க டொலர் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதன் மூலம் ட்ரம்பின் கொள்கை அறிவிப்புகள் அல்லது சந்தையைப் பாதிக்கக்கூடிய பதிவுகளை மற்றவர்களுக்கு முன்னதாகவே சில நிறுவனங்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதாக மனுதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
குறித்த நடைமுறை அமெரிக்க அரசியலமைப்பின் முதல் மற்றும் ஐந்தாவது திருத்தங்களுக்கு முரணானது எனவும், அரசாங்க தகவல்களை பணம் செலுத்தக்கூடியவர்களுக்கு முன்னுரிமையுடன் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.
</p><p>
இதனிடையே, Trump Media &amp; Technology Group இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. </p><p>பொதுமக்களுக்கு ஏற்கனவே கிடைக்கும் Truth Social பதிவுகளை வேகமாகவும் நேரடியாகவும் வழங்கும் தரவு சேவையே Truth API என அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களிடையேயும் முன்னதாக கவலைகள் எழுந்திருந்தன. </p><p>Truth API மூலம் ட்ரம்பின் சந்தையைப் பாதிக்கக்கூடிய பதிவுகளை மிக வேகமாகப் பெறுவதால், முதலீட்டாளர்களுக்கு சமமற்ற தகவல் முன்னிலை கிடைக்கக்கூடும் எனக் கூறி அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் (SEC) விசாரணை நடத்துமாறும் கோரப்பட்டிருந்தது.
</p><p>
இந்நிலையில், இந்த வழக்கு அமெரிக்க ஜனாதிபதியின் சமூக ஊடகப் பதிவுகளை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவது தொடர்பான சட்ட மற்றும் நெறிமுறை விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T23:55:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/three-people-executed-same-day-us-after-16-years-1786661874"></link>
            <id>https://canadamirror.com/article/three-people-executed-same-day-us-after-16-years-1786661874</id>
            <summary type="text">அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டென்னசி, அலபாமா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மூன்று மாகாணங்களில் இந்த மரண தண்டனைகள் திட்டமிடப்பட்டிருந்தன.
</p><p>
டென்னசியில் 66 வயதான அந்தோணி டேரல் ஹைன்ஸ், ஹோட்டல் பணியாளரான கேத்தரின் ஜென்கின்ஸை 1985ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3945751-b01e-4871-8b93-7a8505628f53/26-6a7e4bf59af0e.webp' /></p><p>ஓக்லஹோமாவில் 70 வயதான கார்லோஸ் குயெஸ்டா-ரோட்ரிக்ஸ், 2003ஆம் ஆண்டு தனது காதலியை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p>

அலபாமாவில் 42 வயதான ஜெரமி வில்லியம்ஸ், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் மரண தண்டனைக்கு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார். </p><p>இந்த மூவருக்கும் மரண தண்டனை விஷ ஊசி மூலம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.</p><p>

அமெரிக்காவில் இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி ஒரே நாளில் மூன்று மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருந்தன. </p><p>அதன்பின்னர் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறான மூன்று மரண தண்டனைகள் ஒரே நாளில் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-13T22:58:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர் ; 2 வீரர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/military-helicopter-crashes-us-2-soldiers-killed-1786660731"></link>
            <id>https://canadamirror.com/article/military-helicopter-crashes-us-2-soldiers-killed-1786660731</id>
            <summary type="text">அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

டெக்சாஸ் மாநிலம் சலாடோ பகுதிக்கு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இடம்பெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>

டெக்சாஸ் மாநிலம் சலாடோ பகுதிக்கு அருகே அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான தாக்குதல் வகை அபாச்சி ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fd11f62-791a-4f4e-8295-6dd88e805f0b/26-6a7e477ccea8f.webp' /></p><p>

விபத்தைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் தீப்பற்றி வெடித்துச் சிதறியதுடன், வயல்வெளியில் இருந்த புற்களிலும் தீ பரவியுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். </p><p>எனினும், தீ சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு ராணுவ வீரர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>அதேவேளை, இந்த விபத்தில் வேறு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. </p><p>விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இந்நிலையில், உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T22:38:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாயில் வேற்றுகிரகவாசிகள் வாழ்கின்றனரா... நாசா புகைப்படம் கூறுவது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/are-aliens-living-on-mars-what-nasa-photo-say-1786660146"></link>
            <id>https://canadamirror.com/article/are-aliens-living-on-mars-what-nasa-photo-say-1786660146</id>
            <summary type="text">செவ்வாய் கோளில் இருந்து நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செவ்வாய் கோளில் இருந்து நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கடந்த ஜூலை மாதம் செவ்வாய் கோளின் மவுண்ட் ஷார்ப் பகுதியைச் சேர்ந்த பல புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f45c69a-0d8a-4e65-8eac-8a36250aad56/26-6a7e4534c9d2e.webp' /></p><p>இந்தப் புகைப்படங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பெரிய படத்தில், பாறைப் பகுதியில் கதவு போன்ற தோற்றமுடைய அமைப்பு ஒன்று தென்படுவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனை அடிப்படையாகக் கொண்டு, செவ்வாய் கோளில் வேற்றுகிரகவாசிகளின் நாகரிகம் இருந்திருக்கலாம் அல்லது இன்னும் இருக்கலாம் என்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
</p><p>
கியூரியாசிட்டி ரோவர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கோளின் கேல் பள்ளத்தில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, சுமார் 3 மைல் உயரம் கொண்ட மவுண்ட் ஷார்ப் பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் மண்ணை ஆய்வு செய்து வருகிறது.
</p><p>
பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கோளில் நுண்ணுயிர்கள் வாழ்ந்தனவா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
</p><p>
இந்நிலையில், புகைப்படத்தில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு குறித்து பறக்கும் தட்டு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் ஸ்காட் வேரிங், அது உண்மையில் ஒரு கதவு போன்றே காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08d0f8b8-fdeb-46e9-b0dd-ce29a6d48e38/26-6a7e45357cc80.webp' /></p><p>அந்த அமைப்பு சுமார் 6.6 அடி உயரமும் 3.3 அடி அகலமும் கொண்டதாக அவர் கூறியுள்ளார். எனினும், இந்த அளவீடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
</p><p>
இதனிடையே, இந்தக் காட்சி தொடர்பில் பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்ற போதிலும், செவ்வாய் கோளில் வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்ததற்கான அல்லது பழமையான நாகரிகம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என நாசா தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், செவ்வாயில் உயிரினங்கள் அல்லது பண்டைய நாகரிகம் தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இதனால், தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் காணப்படும் கதவு போன்ற அமைப்பு உண்மையில் என்ன என்பது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், அதனை வேற்றுகிரகவாசிகளின் இருப்புக்கான ஆதாரமாகக் கருத முடியாது என விஞ்ஞான ரீதியில் சுட்டிக்காட்டப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T22:29:14+00:00</updated>
        </entry>
    </feed>
