<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-05T13:27:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தன்னை கருணைக்கொலை செய்யுமாறு கோரிய நகைச்சுவை நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-court-denies-toronto-womans-motion-1788537333"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-court-denies-toronto-womans-motion-1788537333</id>
            <summary type="text">&amp;nbsp;மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
</p><p>எனினும், இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்குப் பதிலளிக்குமாறு கனடா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>டொராண்டோவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும் நகைச்சுவைக் கலைஞருமான கிளாரி புரோஸோ , சிறுவயது முதலே கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17fafbec-6a8d-4ac7-aaaf-337e6e70589b/26-6a9ae9f6e5020.webp' /></p><p>
</p><p>பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் தனக்குக் தீராத மன உளைச்சல் நீடிப்பதால், சட்டம் வழங்கும் கருணைக்கொலைக்குத் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மே 2026-இல் அவசர மனுத் தாக்கல் செய்திருந்தார்.
</p><p>நீதிபதி கரிசிமா மாதன், புரோஸோவின் வேதனைகள் உண்மையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றபோதிலும், சட்ட விலக்கு அளிப்பது சமூகத்திலும் அரசின் கொள்கை முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மனுவை நிராகரித்தார்.
</p><p>அதேசமயம், 2024-ஆம் ஆண்டு புரோஸோ தாக்கல் செய்த அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை 14 நாட்களுக்குள் தொடங்குமாறு கனடா தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
</p><p>கனடாவில் 2021-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, தீர்க்க முடியாத நோய் மற்றும் உடல் ஊனம் உள்ளவர்கள் கருணைக்கொலை கோர முடியும்.</p><p> ஆனால், மனநலப் பிரச்சினையை மட்டுமே காரணமாகக் கொண்டு கருணைக்கொலை கோருவதற்கு அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. </p><p>இத்தடையை நீட்டிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசிய புரோஸோ, "மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களைப் போன்ற சம உரிமையோ, உடல் சார்ந்த சுய உரிமையோ இல்லை என்பதை அரசாங்கம் மீண்டும் நிரூபித்துள்ளது. </p><p>நான் தொடர்ந்து வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்" என வேதனையுடன் தெரிவித்தார்.
</p><p>அரசியலமைப்புச் உரிமைகளின்படி மனநலப் பாதிப்பு உள்ளவர்களுக்கும் கருணைக்கொலை உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்கான முதன்மை வழக்கைத் தொடர்ந்து நடத்தப்போவதாக புரோஸோவின் சட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T12:58:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள சுரங்கப்பாதையில் 10 நாட்களின் பின் மீட்கப்பட்ட மூன்றாவது நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/third-person-rescued-nepal-tunnel-after-10-days-1788607462"></link>
            <id>https://canadamirror.com/article/third-person-rescued-nepal-tunnel-after-10-days-1788607462</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாள சுரங்கப்பாதையில் 10 நாட்களின் பின்னர் இருந்து மூன்றாவது நபர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 இயற்கையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாள சுரங்கப்பாதையில் 10 நாட்களின் பின்னர் இருந்து மூன்றாவது நபர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

 இயற்கையில் திடீர் கோர தாண்டவத்தால் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 5,600க்கும் மேற்பட்டோர் காணாமல் போன 10 நாட்களுக்குப் பின்னர், நேபாளத்தில் இன்று சனிக்கிழமையன்று ஒரு சீன நாட்டவர் சுரங்கப்பாதையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f70d942-b4d3-4477-b6b6-5eb4968a7d89/26-6a9bfbe7bae91.webp' /></p><p>
</p><p>
திரிசூலி ஆற்றில் உள்ள அதே நீர்மின் சுரங்கப்பாதையிலிருந்துதான் அந்த சீன நபர் மீட்கப்பட்டதாக நேபாள இராணுவம் கூறியது. முந்தைய நாள் இதே சுரங்கப்பாதையில்தான் இரண்டு நேபாளியர்கள் ஒரு பரபரப்பான மீட்பு நடவடிக்கையில் உயிருடன் மீட்கப்பட்டனர்.
</p><p>
ஆற்றின் மேல் பகுதிகளில் ஆகஸ்ட் 26 அன்று ஒரு பனியாறு சரிந்ததால், ஆறு நீர்மின் திட்டங்கள் தொடர்பான சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் சிக்கியிருக்கலாம் என்று மீட்புப் பணியாளர்கள் நம்புவதாகக் கூறியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T12:42:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளை கொன்ற பெண் விடுவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-killed-her-3-children-in-the-us-released-1788611206"></link>
            <id>https://canadamirror.com/article/woman-killed-her-3-children-in-the-us-released-1788611206</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் கைதான லிண்ட்சே கிளான்சி என்ற பெண் மீதான கொலை வழக்கில், விசாரணையை ரத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் கைதான லிண்ட்சே கிளான்சி என்ற பெண் மீதான கொலை வழக்கில், விசாரணையை ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p> 

மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பிளைமவுத் நகரில் கடந்த 2023 ஜனவரி மாதம் நடந்த இந்த சம்பவத்தில், 36 வயதான முன்னாள் செவிலியரான லிண்ட்சே கிளான்சி தனது மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c827ebe-6cdd-4d9d-b30e-b0aef3bb0af1/26-6a9c0a87d897b.webp' /></p><h2>&nbsp;கடுமையான மனநலப் பாதிப்பு</h2><p>
</p><p>
பிரசவத்திற்குப் பிந்திய கடுமையான மனநலப் பாதிப்பு காரணமாகவே அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும், எனவே அவரை மனநலப் பாதிப்பின் அடிப்படையில் குற்றமற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் அவரது தரப்பு சட்டத்தரணி வாதாடினார்.</p><p>

எனினும் கிளான்சிக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்தபோதிலும், அவர் திட்டமிட்டே தன் குழந்தைகளைக் கொன்றதாக அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
</p><p>
இந்த வழக்கு அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடர்வது குறித்து அரசு தரப்பு இன்னும் முடிவு செய்யவில்லை என்பதுடன், குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிளான்சி எதிர்வரும் 29 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T12:41:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்! மீண்டும் மோதல் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-missile-attack-iranian-oil-tanker-kharg-island-1788602342"></link>
            <id>https://canadamirror.com/article/us-missile-attack-iranian-oil-tanker-kharg-island-1788602342</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளமை மீண்டும் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முக்கிய எண்ணெய் ஏற்றுமதி ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளமை மீண்டும் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில் நங்கூரமிட்டிருந்த எண்ணெய் கப்பலை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>

இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், கப்பலில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddf5ec74-c90e-4dd1-913e-50edccd8c6ab/26-6a9be7e7ea349.webp' /></p><h2>அதிகாரப்பூர்வ&nbsp; அறிவிப்பில்லை..</h2><p> </p><p>

இருப்பினும், இது குறித்து ஈரானிய அதிகாரிகளோ அல்லது அமெரிக்க மத்திய கட்டளையகமோ (US Central Command) இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ கருத்துக்களையும் வெளியிடவில்லை.</p><p> 

கடந்த ஓகஸ்ட் 31 அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கார்க் தீவு அழிக்கப்படுவது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.</p><p> கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் முன்னதாக எச்சரித்திருந்தது. 

ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடியதைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா தொடங்கியது. </p><p>

இந்த சூழ்நிலையில், ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை மேற்கொள்ளும் கார்க் தீவு பகுதியைச் சுற்றியுள்ள எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஈரானின் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் தொழில்துறைக்கு மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T12:24:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைதிப் பேச்சுக்கு மத்தியில் ரஷ்யா தீவிர தாக்குதல்; உலக நாடுகள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-launches-intense-attacks-ukraine-1788590431"></link>
            <id>https://canadamirror.com/article/russia-launches-intense-attacks-ukraine-1788590431</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ரஷ்யா - உக்ரைன் போரை நுறுத்துவது தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ரஷ்யா - உக்ரைன் போரை நுறுத்துவது தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
</p><p>


ஒடேஸா மற்றும் டினிப்ரோ பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adbb28bb-ff84-49cb-8b5d-25e7ddf71fca/26-6a9bb960c5de4.webp' /></p><h2>&nbsp;ரஷ்யா வான்வழித் தாக்குதல்</h2><p>



அதேவேளை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது தொடர்ந்து 10ஆவது நாளாக ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p> வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், கீவ் நகர மையத்தில் உள்ள உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவு தலைமையகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.



இந்தத் தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர். </p><p>தாக்குதலுக்கு தக்க பதிலடி வழங்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
</p><p>


இதனிடையே, உக்ரைன்–ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் முறையே மாஸ்கோ மற்றும் கீவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


 இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளமை சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T09:57:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு ; 11 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-person-dies-11-missing-in-china-landslide-1788600592"></link>
            <id>https://canadamirror.com/article/one-person-dies-11-missing-in-china-landslide-1788600592</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


சௌடெல் சூறாவளியால் பெய்த கனமழையைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 4 மணியளவில் ஜியாங்சியின் சூச்சுவான் மாவட்டத்திலுள்ள காபிங் நகரில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b18bf9b-3677-4d36-8253-dd3f67931714/26-6a9be1119b3d0.webp' /></p><p>
</p><p>


இதன்போது 12 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் மண்சரிவில் சிக்கியுள்ளதாக சீன அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
</p><p>


காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-05T09:26:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்தும் ஆஸ்திரேலியா !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/australia-halt-international-student-admissions-1788586345"></link>
            <id>https://canadamirror.com/article/australia-halt-international-student-admissions-1788586345</id>
            <summary type="text">&amp;nbsp;ஆஸ்திரேலியா புதிய சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

விசா முறைகேடு, அதிக நிராகரிப்பு விகிதங்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆஸ்திரேலியா புதிய சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.</p><p>

விசா முறைகேடு, அதிக நிராகரிப்பு விகிதங்கள் மற்றும் படிப்பை முடிக்காமை ஆகியவை குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, மேலாண்மை (கற்றல்) பட்டதாரி பட்டயப் படிப்பில் புதிய சர்வதேச மாணவர் சேர்க்கையை நிறுத்த ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60bb08d9-4700-4fb3-9bf9-e4666861ec7b/26-6a9ba96aad8dc.webp' /></p><p>
</p><p>
ஆஸ்திரேலியாவின் சர்வதேசக் கல்வி மற்றும் மாணவர் விசா அமைப்புகளின் நேர்மை குறித்துக் கவலைகளை எழுப்பும் படிப்புகளை இடைநிறுத்த அல்லது ரத்து செய்ய, தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய அதிகாரங்களைப் பயன்படுத்தும் முதல் முடிவு இது என்று அல்பேனிய அரசாங்கம் கூறியுள்ளது.</p><p>

BSB80120 என்ற பாடக் குறியீட்டால் அடையாளம் காணப்பட்ட இந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்களின் வெளிநாட்டு மாணவர்களுக்கான நிறுவனங்கள் மற்றும் படிப்புகளின் காமன்வெல்த் பதிவேட்டில் உள்ள பதிவு தானாகவே இடைநிறுத்தப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.</p>]]></content>
            <updated>2026-09-05T07:31:25+00:00</updated>
        </entry>
    </feed>
