<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-22T20:17:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ ; மக்கள் வெளியேற்ற உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/wildfires-intensify-across-the-united-states-1784746231"></link>
            <id>https://canadamirror.com/article/wildfires-intensify-across-the-united-states-1784746231</id>
            <summary type="text">அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அலமேடா கவுண்டி பகுதிக்குட்பட்ட பிளசண்டன் மற்றும் சுனோல் நகர எல்லைப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் &quot;லிட்டில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அலமேடா கவுண்டி பகுதிக்குட்பட்ட பிளசண்டன் மற்றும் சுனோல் நகர எல்லைப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் "லிட்டில் ஃபயர்" எனப் பெயரிடப்பட்ட காட்டுத் தீ திடீரெனப் பற்றி எரியத் தொடங்கியது.</p><p style="text-align: justify; "> கடும் வெப்பம், உலர்ந்த புற்பகுதிகள் மற்றும் வீசி வரும் பலத்த காற்றின் காரணமாக தீ மிக வேகமாகப் பரவி, குறுகிய நேரத்திலேயே 950 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைச் சாம்பலாக்கியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcb8d9b3-e211-46c4-bb7f-3780cebfb583/26-6a6110f93f074.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">

லிட்டில் வேலி சாலை மற்றும் ஹப்பார்ட் லேன் சந்திப்பு பகுதி ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 950 ஏக்கர் எரிந்துள்ள நிலையில், 10% மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">இந்நிலையில், தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். 

ரூபி ஹில் சொகுசு குடியிருப்பு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள சுனோல் பகுதி மக்களுக்கு உடனடி வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">சுமார் 4,900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலப்பரப்பில் புல்டோசர்கள் மற்றும் எஞ்சின்கள் மூலமும், வான்வழியாக சிறப்பு ஏர்-டேங்கர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமும் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. </p><p style="text-align: justify; ">அடர்ந்த புதர் மற்றும் மலைப்பகுதிகள் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T18:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வரலாறு காணாத காட்டுத் தீ பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/more-than-180-wildfires-burning-in-ontarios-north-1784742428"></link>
            <id>https://canadamirror.com/article/more-than-180-wildfires-burning-in-ontarios-north-1784742428</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் வடபகுதியில் காட்டுத்தீ பரவல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
ஒன்டாரியோ இயற்கை வளங்கள் அமைச்சு இது தொடர்பில் அறிக்கை வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் வடபகுதியில் காட்டுத்தீ பரவல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
ஒன்டாரியோ இயற்கை வளங்கள் அமைச்சு இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி 180-க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் செயலில் உள்ளன.</p><p> கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 புதிய காட்டுத்தீகள் பதிவாகியுள்ளன.
ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, இந்த ஆண்டு காட்டுத்தீயால் 7,250 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. </p><p>இது ஒன்டாரியோவில் இதற்கு முன் எந்த ஆண்டிலும் பதிவாகாத அளவுக்கு அதிகமான பாதிப்பாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f94bf7e2-9822-405c-a306-6cb0383a6df3/26-6a61021e190b5.webp' /></p><p>
</p><p>அதிகப்படியான தீப்பரவல்கள் கடந்த 10 நாட்களுக்குள் ஏற்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீ காரணமாக இதுவரை 1,800-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>
வெளியேற்றப்பட்ட 13 சமூகங்களில் 12 சமூகங்கள் பழங்குடியின சமூகங்கள் வாழும் பகுதிகளாகும். இந்த சமூகங்கள் தீவிர பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>பழங்குடியினத் தலைவர்கள் ஒன்டாரியோ அரசின் காட்டுத்தீ மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து பொது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
</p><p>அவர்கள், அவசர வெளியேற்ற நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை அரசு சரியான நேரத்தில் வழங்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.</p><p>
இதற்கு பதிலளித்த ஒன்டாரியோ முதலமைச்சர் டக் ஃபோர்டு (Doug Ford), காட்டுத்தீயை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் தனது அரசு முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T18:30:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூபெக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-wanted-for-quebec-murder-is-arrested-1784741797"></link>
            <id>https://canadamirror.com/article/man-wanted-for-quebec-murder-is-arrested-1784741797</id>
            <summary type="text">&amp;nbsp;பிரிட்டிஷ் கொலம்பியாவில் கைது 
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர், பல்வேறு காவல்துறை அமைப்புகளின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரிட்டிஷ் கொலம்பியாவில் கைது 
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர், பல்வேறு காவல்துறை அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையின் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பர்னபி நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>2022 மே 11 அன்று மொன்றியல் நகரில் செபாஸ்டியன் ஜிரூ (என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் மூவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
</p><p>அதில் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், லீ வான் ஸ்மாத் ஜெர்மைன் என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார்.
விசாரணையின் போது, குற்றச்சாட்டுக்குட்பட்ட நபருக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்புகள் இருப்பது மொன்றியல் காவல்துறையினரால் கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23e03d87-628a-4309-a0d7-0351d05bb3d7/26-6a60ffa75ae65.webp' /></p><p>
 இதையடுத்து, பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், புதன்கிழமை பர்னபி நகரிலுள்ள ஒரு வீட்டில் சோதனை உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது, தேடப்பட்டு வந்த நபர் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
</p><p>கைது செய்யப்பட்ட நபர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கியூபெக் மாகாணத்திற்கு அழைத்துச் செல்லப்படும் வரை ஆறு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ள விரைவில் கியூபெக்கிற்கு அழைத்துச் செல்லப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T18:00:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மோசமான குற்றச்சாட்டில் கைதான இலங்கையர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sickkids-doctor-arrested-on-child-sexual-abuse-1784740555"></link>
            <id>https://canadamirror.com/article/sickkids-doctor-arrested-on-child-sexual-abuse-1784740555</id>
            <summary type="text">கனடாவில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இலங்கையர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் முன்னணி குழந்தைகள் மருத்துவமனையான சிக்கிட்ஸ் மருத்துவமனயைில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இலங்கையர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
கனடாவின் முன்னணி குழந்தைகள் மருத்துவமனையான சிக்கிட்ஸ் மருத்துவமனயைில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான ஆபாசப் பொருட்களை வைத்திருந்ததுடன், அவற்றை அணுகியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் டொராண்டோ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
டொராண்டோ காவல்துறையின் இணைய சிறுவர் துஸ்பிரயோக தடுப்புப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68318c47-913c-4551-8988-43cb36a5fa29/26-6a60facd1e013.webp' /></p><p>
கடந்த ஜனவரி மாதம் மின்னணு சாதனம் ஒன்றின் மூலம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.
</p><p>அதனைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரி மாதம் சிக் கிட்ஸ் மருத்துவமனை மற்றும் சந்தேகநபரின் தனியார் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு, பணியிட கணினி உட்பட பல மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
இந்த வழக்கில், டொராண்டோவைச் சேர்ந்த 44 வயதான டிலான் திஸநாயக்க என்பவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.</p><p>
சிறுவர் பாலியல் துஷ்பிரயோக மற்றும் சுரண்டல் தொடர்பான ஆபாசப் பொருட்களை வைத்திருந்தது, அவற்றை அணுகி பயன்படுத்தியது, ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>இக்குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட மருத்துவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
</p><p>எனினும், மருத்துவராக அவர் மேற்கொண்ட பணிகளுக்கும் இந்த குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்புடைய எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை" என டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>விசாரணை தொடங்கிய தகவல் கிடைத்த உடனேயே, குற்றச்சாட்டுக்கு உள்ளான மருத்துவர் பணியிலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T17:18:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு ; டிரம்ப் ஷாக் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/very-few-soldiers-died-in-the-war-is-waged-trump-1784716347"></link>
            <id>https://canadamirror.com/article/very-few-soldiers-died-in-the-war-is-waged-trump-1784716347</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு என டிரம்ப் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா கடந்த 50 வருடங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு என டிரம்ப் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா கடந்த 50 வருடங்களுக்கு மேலாகவே பல நாடுகளிலும் போர் தொடுத்து வருகின்றன. </p><p>அந்த போர்களில் எதிரி நாடுகள் தாக்கியதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலரும் உயிரிழந்திருக்கிறார்கள். 

அமெரிக்கா இதுவரை ஆப்கானிஸ்தான், ஈராக், வியட்நாம், கொரியா, வெனிசுலா, ஈரான் போன்ற நாடுகளின் போரை நடத்தி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b2df269-5f74-4864-9ecf-a7c9a2b9d124/26-6a609c3d681f6.webp' /></p><p> </p><p>அதில் பல ஆயிரம் ராணுவ வீரர்கள் இறந்து போயிருக்கிறார்கள்.

நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கூறி அமெரிக்காவும், இஸ்ரலும் சேர்ந்து அந்த நாட்டின் மீது போரை துவங்கியது.&nbsp;</p><p>
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்திய போரால் பல்லாயிரம் வீரர்கள் இறந்து போய்விட்டதாக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட துவங்கியிருக்கிறார்கள். </p><p>அதோடு அமெரிக்காவுக்கு பல கோடி மில்லியன்கள் செலவாகிவிட்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தள பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் ,</p><p>

20 வருடங்கள் நடந்த ஆப்கானிஸ்தான் போரில் 2 ஆயிரம் வீரர்களும், 8 வருடங்கள் நடந்த ஈராக் போரில் 4,800 வீரர்களும், 19 வருடம் நடந்த வியட்நாம் போரில் 56,220 பேரும், 3 வருடங்கள் நடந்த கொரியன் போரில் 36,575 வீரர்களும், ஒரு நாள் நடந்த வெனிசுலா போரில் யாரும் இறக்கவில்லை, ஈரானுடான 4 மாத போரில் 18 அமெரிக்கா ராணுவ வீரர்கள் மட்டுமே இறந்துள்ளனர் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்</p>]]></content>
            <updated>2026-07-22T16:39:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மாயமான 11 வயது சிறுவனை தேடும் பணி ஏழாவது நாளாகவும் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/search-for-missing-calgary-child-parker-1784735950"></link>
            <id>https://canadamirror.com/article/search-for-missing-calgary-child-parker-1784735950</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்டா மாகாணம் கால்கரி நகரில் காணாமல் போன 11 வயது சிறுவன் பார்கர் வெல்ஸ்ஐ கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை புதன்கிழமையுடன் ஏழாவது நாளாகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்டா மாகாணம் கால்கரி நகரில் காணாமல் போன 11 வயது சிறுவன் பார்கர் வெல்ஸ்ஐ கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை புதன்கிழமையுடன் ஏழாவது நாளாகவும் தொடர்கிறது.
</p><p>கால்கரியின் வடமேற்கு பகுதியில் உள்ள Connaught Drive N.W.-இல் அமைந்திருந்த தனது சிறுவர் பராமரிப்பு மையத்திலிருந்து பார்கர் காணாமல் போனதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;கால்கரி காவல்துறை, கண்காணிப்பு கமெரா பதிவுகளின் அடிப்படையில் பார்கர் சென்றதாக உறுதிப்படுத்தப்பட்ட பாதையை காட்டும் வரைபடத்தையும் வெளியிட்டது.
தேடுதலை கைவிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1b74d5c-977b-43cd-b7f5-961df3857e30/26-6a60e8d019010.webp' /></p><p> </p><p>இது ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகப்பெரிய துயரமான கனவாகும். இந்த கடினமான நேரத்தில் பார்கரின் குடும்பத்துடன் எங்கள் மனமும் இணைந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இதுவரை 400-க்கும் மேற்பட்ட கால்கரி காவல்துறை அதிகாரிகளும், பயிற்சி பெற்ற தன்னார்வலர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>
தேடுதல் நடவடிக்கையின் போது 7,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 5,500 மணிநேரத்திற்கும் அதிகமான தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும், பொதுமக்களிடமிருந்து 300-க்கும் மேற்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, ஒவ்வொரு தகவலும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
அதேவேளை, தனியார் வீடுகளில் அனுமதியின்றி நுழைந்து தேடுதல் நடத்தவோ, அங்குள்ள மக்களை எதிர்கொள்ளவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தனிப்பட்ட விசாரணைகளை முன்னெடுக்கவோ கூடாது என்று காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p> இத்தகைய நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வ தேடுதல் பணிகளை பாதிப்பதுடன், சமூகத்தின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T16:02:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/national-crime-rates-and-crime-severity-fell-1784734731"></link>
            <id>https://canadamirror.com/article/national-crime-rates-and-crime-severity-fell-1784734731</id>
            <summary type="text">கனடாவில் கடந்த ஆண்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் 2025-ஆம் ஆண்டில் குற்றங்களின் விகிதமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் கடந்த ஆண்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கனடாவில் 2025-ஆம் ஆண்டில் குற்றங்களின் விகிதமும் குற்றங்களின் தீவிரமும் குறைந்துள்ளதாக கனடா புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>கனடாவின் குற்றத் தீவிரக் குறியீடு கடந்த ஆண்டில் 5 சதவீதம் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/226fbfa0-156c-460d-8879-5a773b98f66e/26-6a60e40d50430.webp' /></p><p> </p><p>
அதற்கு முந்தைய 8 ஆண்டுகளாக இக்குறியீடு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சரிவைக் கண்டுள்ளது.</p><p>
குற்றங்களின் தீவிரத்தைப் பொருட்படுத்தாமல், மொத்தக் குற்றங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் வழக்கமான குற்ற விகிதம் 2025-ஆம் ஆண்டில் 2 சதவீதம் குறைந்துள்ளது.</p><p>
வீடுகளின் கதவு/பூட்டை உடைத்துத் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் குறைந்ததே குற்றத் தீவிரக் குறியீடு சரிந்ததற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.</p><p>
கொலைகள், மோட்டார் வாகனத் திருட்டுகள் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற குற்றச் செயல்களின் தேசிய விகிதமும் குறைந்துள்ளது.
அதேவேளையில், கடைகளில் பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
</p><p>2025-இல் ஏமாற்று வேலை மற்றும் மோசடி வழக்குகள் சற்றே குறைந்திருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் இத்தகைய வழக்குகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. </p><p>இதனால் 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய மோசடி விகிதம் இன்னும் 61 சதவீதம் அதிகமாகவே உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T15:45:28+00:00</updated>
        </entry>
    </feed>
