<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-20T18:44:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல் மீது தாக்குதல்: 4 இந்தியர்கள் பலி;]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/four-indians-killed-in-attack-on-ship-leaving-1784567360"></link>
            <id>https://canadamirror.com/article/four-indians-killed-in-attack-on-ship-leaving-1784567360</id>
            <summary type="text">உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், மற்றொரு இந்தியர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>
கினியா-பிசாவு (Guinea-Bissau) நாட்டின் கொடியுடன் பயணித்த ‘கோல்டன் லியோ’) எனும் வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இக்கப்பலில் இந்தியா மற்றும் சிரியா நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.</p><p> 
ஞாயிற்றுக்கிழமையன்று இக்கப்பல் மீது ரஷ்யா 3 க்ரூஸ் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் கடற்படை தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7f76178-3749-4ff5-8f2f-ffbf8a2fab5e/26-6a5e5642e2aa6.webp' /></p><p> </p><p>
வணிகக் கப்பல்களை இலக்கு வைப்பதும், அப்பாவி சிவில் பணியாளர்களின் உயிர ஆபத்தில் தள்ளுவதும், கடல்சார் கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரத்தைத் தடுப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது என இந்தியா தெரிவித்துள்ளது.
</p><p>இத்தகைய தாக்குதல்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையைக் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T17:17:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேன்கூவர் தீவு அருகே கடலடியில் நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/magnitude-56-earthquake-rumbles-off-bc-1784567688"></link>
            <id>https://canadamirror.com/article/magnitude-56-earthquake-rumbles-off-bc-1784567688</id>
            <summary type="text">கனடாவின் வேன்கூவர் தீவு அருகே ஆழ்கடல் பகுதியில் 5.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 11:4...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் வேன்கூவர் தீவு அருகே ஆழ்கடல் பகுதியில் 5.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 11:41 மணிக்கு இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.</p><p>
 வேன்கூவர் தீவின் வடக்கு முனையில் அமைந்துள்ள ‘போர்ட் ஹார்டி’ பகுதிக்கு தென்மேற்கே 219 கிலோமீட்டர் தொலைவில், கடற்பரப்பிற்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
</p><p>கடலடியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும், இதனால் சுனாமி ஏற்படுவதற்கான அபாயம் எதுவுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19a0878e-98f4-4b05-a572-7c3ac62ea68c/26-6a5e578a0774c.webp' /></p><p>
இந்நிலநடுக்கத்தின் மையம் வேன்கூவர் தீவின் முக்கிய நகரங்களான ‘கேம்ப்பெல் ரிவர்’ மற்றும் ‘போர்ட் ஆல்பர்னி’ ஆகியவற்றின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.</p><p>
நிலநடுக்க மையத்தில் இருந்து தென்மேற்கே 450 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள ‘மெட்ரோ வேன்கூவர்’ பகுதி வரை இந்த அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இதுதவிர, வேன்கூவர் தீவின் வடக்குப் பகுதிகளிலும் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T17:16:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்தப் பகுதியில் காட்டுத்தீ எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/more-than-9000-under-evacuation-alert-1784566989"></link>
            <id>https://canadamirror.com/article/more-than-9000-under-evacuation-alert-1784566989</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள கிம்பர்லி நகரின் மேற்குப் பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாடன்றி வேகமாகப் பரவி வருவதால், நகர் முழுவதற்கும் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள கிம்பர்லி நகரின் மேற்குப் பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாடன்றி வேகமாகப் பரவி வருவதால், நகர் முழுவதற்கும் வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>நகர எல்லைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையால், சுமார் 9,000 குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். </p><p>
இது தவிர, நகருக்கு தென்மேற்கே உள்ள ‘சென்ட் மேரி லேக்’ வீதியிலுள்ள 66 குடியிருப்புகளுக்கும் தனியாக வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bd2d28c-0ad6-48b6-bde9-e95647df38c7/26-6a5e54cf03eba.webp' /></p><p>
</p><p>சனிக்கிழமை கண்டறியப்பட்ட இத்தீ, பலத்த காற்று மற்றும் காய்ந்த மரங்கள் காரணமாக மிக வேகமாகப் பரவி, சுமார் 567 ஹெக்டேர் பரப்பளவை எட்டியுள்ளது.</p><p>
முறையே 250 ஹெக்டேர் மற்றும் 30 ஹெக்டேர் பரப்பளவில் மேலும் இரு காட்டுத்தீக்கள் பரவி வருகின்றன.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ சேவை அமைப்பின் தகவல்படி, இந்த மூன்று காட்டுத்தீக்களும் செங்குத்தான மலைப் பகுதிகளில் எரிந்து வருவதால், தீயணைப்பு வீரர்கள் நேரடியாகச் சென்று தீயை அணைப்பது பாதுகாப்பற்றதாக உள்ளது.</p><p>
காட்டுத்தீயின் நகர்வுகள் வான்வழியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 3 ஹெலிகாப்டர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கனரக இயந்திரங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T17:07:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால்ட் ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு கனடா பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-wildfires-responsible-for-much-of-the-smoke-1784541350"></link>
            <id>https://canadamirror.com/article/us-wildfires-responsible-for-much-of-the-smoke-1784541350</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் நிலவும் மோசமான காற்றுத் தரக் குறைவிற்கும் புகை மூட்டத்திற்கும், அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் நிலவும் மோசமான காற்றுத் தரக் குறைவிற்கும் புகை மூட்டத்திற்கும், அமெரிக்க-கனடா எல்லையின் தெற்குப் பகுதியில் (அமெரிக்காவில்) எரிந்து வரும் காட்டுத் தீயே முக்கியக் காரணம் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
மின்னல் காரணமாக உள்ளூர் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும், எல்லைப் பகுதியில் புகையின் அளவு அதிகரிக்க அமெரிக்காவில் எரியும் காட்டுத் தீயே பிரதான காரணம் என மாகாண காட்டுத் தீ சேவை மையம் சனிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பார்வைத் திறன் குறைவதோடு காற்றுத் தரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2901a05a-7c24-4c5c-9b55-de4f9766c8b4/26-6a5df0a7993b8.webp' /></p><p>
அதேவேளையில், எல்லை தாண்டிப் பரவும் காட்டுத் தீ புகை மூட்டம் இரு நாடுகளுக்குமிடையே அரசியல் ரீதியான காரசார விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
 அமெரிக்க நகரங்களான சிகாகோ, நியூயார்க் மற்றும் டெட்ராய்ட் ஆகியவை புகையினால் சூழப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் கனடாவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T13:28:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை மாளிகை இரகசியத் தகவல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/white-house-secret-information-exposed-iran-war-1784551892"></link>
            <id>https://canadamirror.com/article/white-house-secret-information-exposed-iran-war-1784551892</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில், வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இரகசியத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில், வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இரகசியத் தகவல் கசிந்துள்ளதாக 'பபிள்மேப்ஸ்' நிறுவனம் தொரிவித்துள்ளது.
</p><p>


இதைப்பயன்படுத்தி பொலி மார்க்கெட்' போன்ற ஒன்லைன் சூதாட்டத் தளங்களில் 3 அநாமதேயக் கணக்குகள் சரியாகப் பந்தயம் கட்டி, $6,00,000-க்கும் அதிகமாக (சுமார் ₹5.77 கோடி) இலாபம் ஈட்டியுள்ளதை 'பபிள்மேப்ஸ்' நிறுவனம் கண்டறிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deab0e6b-ac44-4c18-8e5e-3c6814820df4/26-6a5e19d6218db.webp' /></p><p>



ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டெலிப்ரொம்ப்டர் ஒபரேட்டரான கேப்ரியல் பெரெஸ், ஜனாதிபதியின் உரைகளை முன்கூட்டியே அணுகி தகவல்களைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>


இவர் இதன் மூலம் $1,00,000-க்கும் மேல் சம்பாதித்துள்ளதாக அமெரிக்காவின் (CFTC) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
</p><p>


நிதி ஆதாயங்களுக்காக இரகசியத் தகவல்களைப் பகிரக் கூடாது என்று ஏற்கனவே மார்ச் மாதம் ஊழியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில் இந்த முறேகடு நடந்துள்ளது.</p><p>



இதனால் வெள்ளை மாளிகையின் பல உயர் அதிகாரிகள் தற்போது தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-07-20T12:49:54+00:00</updated>
        </entry>
    </feed>
