<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-28T13:32:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் Project Bay operation ; இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/project-bay-operation-19-indian-origion-arrested-1785223031"></link>
            <id>https://canadamirror.com/article/project-bay-operation-19-indian-origion-arrested-1785223031</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கனடாவில் &#039;புரஜெக்ட் பே&#039; என்ற பெயரில் பொலிஸார் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையில் , சுமார் 1,039 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கனடாவில் 'புரஜெக்ட் பே' என்ற பெயரில் பொலிஸார் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையில் , சுமார் 1,039 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் 17 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
</p><p>


அமெரிக்க எல்லையிலிருந்து கனடாவிற்குள் சரக்கு லொரிகள் மூலமாக கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஓப்பியம் உள்ளிட்ட ஆபத்தான போதை மருந்துகள் கடத்தப்படுவதாகக் கனடா பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1782996e-fadb-4765-a93d-00dd7409266a/26-6a68577915acd.webp' /></p><p>
</p><p>


இதனைத் தொடர்ந்து, கனடா பொலிஸார் அமெரிக்கா மற்றும் கனடா எல்லைப் பகுதிகளில் 'புரஜெக்ட் பே' என்ற சிறப்புச் சோதனையைத் ஆரம்பித்துள்ளது.</p><p>



ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள 22 இடங்கள் உட்பட விண்ட்சர், லசலே, கொரூனா, பிராம்ப்டன், மார்க்கம் மற்றும் கலேடன் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது.</p><p>



இந்தச் சோதனையின் முடிவில் 1.7 தொன் எடையுள்ள போதை மருந்துகள் 17 துப்பாக்கிகள்

ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் சர்வதேச சந்தை மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.1,039 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.



கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-28T13:21:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் Paris கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பெண்கள் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/3-women-injured-in-a-stabbing-attack-paris-france-1785244952"></link>
            <id>https://canadamirror.com/article/3-women-injured-in-a-stabbing-attack-paris-france-1785244952</id>
            <summary type="text">&amp;nbsp; பிரான்ஸ் தலைநகர் பரிசின் Porte de Clichy பகுதியில் ஜூலை மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 19, 24 மற்றும் 36 வயத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரான்ஸ் தலைநகர் பரிசின் Porte de Clichy பகுதியில் ஜூலை மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 19, 24 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.
</p><p>
 அவர்களில் இருவர் முதுகுப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியில் கடுமையாகக் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களின் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லை என உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b024d18f-9d14-4060-b5b5-66655020c68f/26-6a68ad1a636fa.webp' /></p><h2>உயிருக்கு ஆபத்து இல்லை&nbsp;</h2><p> </p><p>

மூன்றாவது பெண் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 31 வயதுடைய நபர், பணியில் இல்லாத காவல்துறை அதிகாரி ஒருவரின் துரித நடவடிக்கையால் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். </p><p>

அவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தற்போது எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது என்றும், கைது செய்யப்பட்ட நபர் தொடர்பற்ற மற்றும் குழப்பமான கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் அமைச்சர் Laurent Nuñez கூறியுள்ளார். </p><p>

இதுவரை இந்தச் சம்பவம் பயங்கரவாத தாக்குதலாகக் கருதப்படவில்லை என்றும், சம்பவத்தின் உண்மையான பின்னணி குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-28T13:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; வணிக வளாகத்தில் சிக்கிய மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/earthquake-japan-people-trapped-shopping-complex-1785238647"></link>
            <id>https://canadamirror.com/article/earthquake-japan-people-trapped-shopping-complex-1785238647</id>
            <summary type="text">&amp;nbsp; தென்மேற்கு ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, காஷிமா நகரில் உள்ள ஏயோன் மோல் வணிக வளாகத்திற்குள் பலர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென்மேற்கு ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, காஷிமா நகரில் உள்ள ஏயோன் மோல் வணிக வளாகத்திற்குள் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குமாமோட்டோவில் உள்ள ஏயோன் மோலில் வெடிப்பு ஏற்பட்டதாகச் சில தகவல்கள் கூறுகின்றன.



இந்த நிலநடுக்கம் கியூஷு தீவின் உட்பகுதியில் மாலை 16:27 மணிக்கு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f6a017e-6e02-4336-8a84-c52676fef1af/26-6a68965bab0ac.webp' /></p><h2>150,000-க்கும் மேற்பட்ட மக்கள்&nbsp; வெளியேற&nbsp; அறிவுறுத்து</h2><p> இதன் மையம் 10 கி.மீட்டர் (6 மைல்) ஆழமற்ற பகுதியில் அமைந்துள்ளது.



இந்நிலையில், 150,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>


இதேவேளை, ந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட குறுகிய கால சுனாமி எச்சரிக்கை, ஒரு மணி நேரத்திற்குள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.



ஆழமற்ற மையப்பகுதி என்பதால் மேலும் வலுவான பின்அதிர்வுகள் ஏற்படக்கூடுமென அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p><p></p><p>



நாங்கள் இன்னும் காயங்கள் மற்றும் சொத்து சேதங்களின் முழு அளவை மதிப்பிட்டு வருகிறோம். எனினும், ஏற்கனவே பலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளதென ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சி ஊடகங்களுக்ககு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>



அதேவேளை ஜப்பான், ஆண்டுக்குச் சுமார் 1,500 நிலநடுக்கங்களைச் சந்திக்கும் உலகின் மிக முக்கியமான நிலநடுக்கப் பகுதிகளில் ஒன்றாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-28T12:31:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுவெளியில் ஆயுதங்களை ஏந்தி போராட்டம்; ஈரானில் வெளியில் தூக்கிலிடப்பட்ட இருவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-people-publicly-executed-in-iran-today-1785235675"></link>
            <id>https://canadamirror.com/article/two-people-publicly-executed-in-iran-today-1785235675</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு நபர்களுக்கு இன்று (28) பொதுவெளியில் தூக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு நபர்களுக்கு இன்று (28) பொதுவெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் சவர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>



அபோல்ஃபாஸ்ல் செபாஹி மற்றும் அமீர்-ஹொசைன் சபாஹி ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி பொலிஸ்அதிகாரிகளை ஆயுதங்களால் தாக்கி, பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து கொலை செய்ததாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faea2627-ba56-4f3b-969f-e300034a4d45/26-6a6888dd319ae.webp' /></p><h2>ஆயுதங்களால் தாக்கி, பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து கொலை&nbsp;</h2><p>
</p><p>


அத்துடன், பொதுவெளியில் ஆயுதங்களை ஏந்தி அச்சத்தை உண்டாக்கியது, நாட்டின் பொது ஒழுங்கையும் அமைதியையும் சீர்குலைத்தது மற்றும் மனசாட்சியற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது ஆகியவை முதன்மைக் குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>



இந்நிலையில், மத்திய இஸ்ஃபஹான் மாகாணத்தில் உள்ள மாலெக்ஷாஹர் நகரின் பொதுச் சதுக்கத்தில், பொதுமக்கள் முன்னிலையில் இருவரும் தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன</p><p>. 



ஈரானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரியில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிவையில், இந்த வன்முறைச் சம்பவங்களில் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இப்போராட்டங்களைத் தொடர்ந்து ஈரான் முழுவதும் பலர் கைது செய்யப்பட்டு மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது அதிகரித்துள்ளது.



சர்வதேச அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடாக ஈரான் உள்ளது குறிப்பிடத்தக்கது</p>]]></content>
            <updated>2026-07-28T10:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/powerful-earthquake-in-japan-1785231328"></link>
            <id>https://canadamirror.com/article/powerful-earthquake-in-japan-1785231328</id>
            <summary type="text">&amp;nbsp; ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>

 ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3549e164-b1b3-43ef-b322-56146ddb12b1/26-6a6877e1cfc91.webp' /></p><h2>&nbsp;சுனாமி எச்சரிக்கை</h2><p>&nbsp; ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>ஜப்பானின் தெற்கே இன்று(28) 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும் சுனாமி எச்சரிக்கையையும் விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
</p><p>


இந்த நிலநடுக்கமானது, ஜப்பானின் சொந்த ஷிண்டோ (Shindo) அதிர்வு அளவுகோலின்படி சாத்தியமான மிக உயர்ந்த அளவான ஏழாவது நிலையை எட்டியுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T09:33:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 90 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய மர்மக் கொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/oronto-police-identify-2-separate-cold-case-1785214126"></link>
            <id>https://canadamirror.com/article/oronto-police-identify-2-separate-cold-case-1785214126</id>
            <summary type="text">கனடாவின் தொராண்டோ நகரில் பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த இரண்டு பழைய மர்மக் கொலை வழக்குகளில் பலியான பெண்களின் அடையாளங்களை, நவீன மரபியல் தொழில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் தொராண்டோ நகரில் பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த இரண்டு பழைய மர்மக் கொலை வழக்குகளில் பலியான பெண்களின் அடையாளங்களை, நவீன மரபியல் தொழில்நுட்பமான ஐ.ஜீ.ஜீ. மூலம் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
</p><p>இதில் 90 ஆண்டுகளுக்கு முன்பு கணவரால் கொடூரமாகக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட பெண் ஒருவரின் மர்மமும் அடங்கும்.
</p><p>கடந்த 1995-ஆம் ஆண்டு, தொராண்டோவில் உள்ள 'டான்ஃபோர்த் மற்றும் காக்ஸ்வெல்' பகுதியில் பழைய கார் விற்பனையகக் கட்டடம் ஒன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், பூமிக்கு அடியில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருப்பதை அவதானித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2861e21-753a-4653-ac80-dab93818bc7f/26-6a6834af9d2b5.webp' /></p><p>
மருத்துவப் பரிசோதனையில், அந்தப் பெண் சுத்தியல் போன்ற கனமான ஆயுதத்தால் மண்டையில் 6 முறை தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதும், பின்னர் திட்டமிட்டுப் புதைக்கப்பட்டதும் உறுதியானது.
</p><p>கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அந்த உடலின் அடையாளம் தெரியாமல் இருந்தது. மண்ணில் பல ஆண்டுகள் இருந்ததால் பாக்டீரியாக்களால் டி.என்.ஏ மாதிரிகளைப் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. </p><p>
ஆனால், அண்மையில் எலும்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பெறப்பட்ட தூய்மையான டி.என்.ஏ மூலம், இறந்தவர் மேரி மெக்லியோட் மாஃபாட் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>
1905-இல் ஸ்காட்லாந்தில் பிறந்த மேரி, 1913-இல் கனடாவிற்கு இடம்பெயர்ந்தார்.
மேரியின் கணவரான ஆண்ட்ரூ லாயிட் மாஃபாட் என்பவரே இக்கொலையைச் செய்துள்ளார். </p><p>
மேரிக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணை மணந்து தொராண்டோவில் வாழ்ந்து வந்த கணவரைத் தேடி மேரி வந்தபோது ஏற்பட்ட தகராறில், ஏப்ரல் 1936-இல் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.</p><p>
கொலையாளி ஆண்ட்ரூ, தனது காரியகத்திற்கு அருகிலேயே மேரியைப் புதைத்துவிட்டு, 'டிரேக் லாயிட் கம்மிங்ஸ்' என்ற போலி பெயரில் அமெரிக்கா மற்றும் வான்கூவரில் தலைமறைவாக வாழ்ந்து, மொத்தம் 4 பெண்களைத் திருமணம் செய்துகொண்டு 1985-இல் உயிரிழந்தார்.
</p><p>இதேவேளை, ஏப்ரல் 22, 2004 அன்று, நெடுஞ்சாலை 401-இல் ஒரு கார் வேண்டுமென்றே டிராக்டர்-டிரெய்லர் மீது மோதி விபத்துக்குள்ளானது. </p><p>காரின் பயணியர் இருக்கையில் எரிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
</p><p>காரை ஓட்டிவந்த சியுமி கில்ஃபு என்பவர், காரைக் கொளுத்தி ஆதாரங்களை அழிக்க முயன்றதற்காகவும், வாகனத்தை ஆபத்தாக இயக்கியதற்காகவும் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று 2012-இல் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். </p><p>ஆனால், இறந்த பெண் யார் என்பதை அவர் கடைசி வரை கூறவில்லை.
தற்போது ஐ.ஜீ.ஜீ தொழில்நுட்பம் மூலம் அந்தப் பெண் மணிடோபாவைச் சேர்ந்த பேட்ஸி புளோரா லாகார்ட் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பழங்குடியினப் பின்னணியைக் கொண்டவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
பல தசாப்தங்களாக விடை தெரியாமல் இருந்த இந்த இரண்டு வழக்குகளிலும், உயிரிழந்த பெண்களின் உண்மையான அடையாளங்கள் மீட்டெடுக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-28T08:57:28+00:00</updated>
        </entry>
    </feed>
