<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-12T12:38:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய ஜனாதிபதிக்கு திருக்குறளை பரிசளித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/modi-gifts-thirukkural-to-russian-president-1789212830"></link>
            <id>https://canadamirror.com/article/modi-gifts-thirukkural-to-russian-president-1789212830</id>
            <summary type="text">&amp;nbsp;புதுடெல்லியில் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;புதுடெல்லியில் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.<br></p><p>&nbsp;அதன்போது,&nbsp; திருவள்ளுவர் இயற்றிய பழமையான தமிழ் செவ்வியல் நூலான 'திருக்குறளின்' ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதியை, ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.
</p><p>
திருவள்ளுவரின் 1,330 குறட்பாக்களும் இந்த ரஷ்யப் பதிப்பில் இடம்பெற்றுள்ளன.</p><p>

இந்திய அரசின் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த நூலை, நைரா எம் கர்ட்சியான் (Naira Mkrtcheyan) என்பவர் ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
</p><p>
இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பரிசுகளை ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்குவது இது முதல்முறையல்ல.
</p><p>
முன்னதாக, 2024ஆம் ஆண்டு கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 'சோஹ்ராய்' (Sohrai) ஓவியத்தை அவர் விளாடிமிர் புடினுக்குப் பரிசளித்தார்.</p><p>

அதேபோல, 2025ஆம் ஆண்டில் பகவத் கீதையின் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதி, அஸ்ஸாம் தேயிலை மற்றும் வெள்ளியிலான குதிரை சிலை ஆகியவற்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-12T11:34:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் இலங்கை வம்சாவளி பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sri-lankan-origin-woman-gets-top-norway-post-1789198392"></link>
            <id>https://canadamirror.com/article/sri-lankan-origin-woman-gets-top-norway-post-1789198392</id>
            <summary type="text">இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவரும் நோர்வேயின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தருமான கம்சி குணரட்ணம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவரும் நோர்வேயின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தருமான கம்சி குணரட்ணம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;நோர்வே மன்னர் தலைமையில் நடைபெற்ற அரசாங்க சபைக் கூட்டத்தில், 2026 செப்டெம்பர் 11ஆம் திகதி கம்சி குணரட்ணம் போக்குவரத்து அமைச்சராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d667326-a3ed-437d-a262-d79e39344d20/26-6aa500398df93.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் நோர்வே அரசியலில் முக்கியமான அமைச்சுப் பதவியை வகிக்கும் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட அரசியல்வாதியாக கம்சி குணரட்ணம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
</p><p>
இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட கம்சி குணரட்ணம், தொழிலாளர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி படிப்படியாக பல்வேறு அரசியல் பொறுப்புகளை வகித்து முன்னேறியுள்ளார்.</p><p> 19 வயதில் ஒஸ்லோ மாநகர சபைக்கு தெரிவான அவர், பின்னர் தேசிய அரசியலிலும் முக்கிய இடத்தைப் பெற்றார்.
</p><p>
தற்போது நோர்வே அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கம்சி குணரட்ணம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, அஞ்சல் சேவைகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பான கொள்கைகளுக்கு பொறுப்பானவராக செயற்படவுள்ளார்.</p><p>அரசியல் செய்திகளை வாசி

கம்சியின் இந்த உயர்வு, அவரது அரசியல் பயணத்தில் முக்கியமான புதிய கட்டமாகவும், நோர்வே வாழ் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்களுக்கு பெருமைக்குரிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.</p><p>

நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் கட்சி உறுப்பினர்களைக் கொண்டதாக அமைந்துள்ள நிலையில், கம்சி குணரட்ணம் போக்குவரத்து அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.
</p><p>
இதேவேளை, புதிய அமைச்சருக்கான மாநிலச் செயலாளர்களாக Abel Cecilie Knibe Kroglund மற்றும் Jakob Vorren ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-12T10:34:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி ; மோசமடையும் மத்திய கிழக்கு நிலைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/saudi-arabia-shuts-key-oil-pipeline-1789209268"></link>
            <id>https://canadamirror.com/article/saudi-arabia-shuts-key-oil-pipeline-1789209268</id>
            <summary type="text">ஈரான் - அமெரிக்கா மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக்கிலிருந்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது முக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் - அமெரிக்கா மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக்கிலிருந்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது முக்கியமான 1,200 கிலோமீட்டர் நீளமுடைய ‘கிழக்கு - மேற்கு’ எண்ணெய் குழாய் வழித்தடத்தை தற்காலிகமாக மூடியுள்ளது.</p><p>



சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய மாற்று வழித்தடமாக விளங்கும் இந்தக் குழாய் வழித்தடம், ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து எண்ணெயை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d51bcabd-5a6b-47f8-ba26-1c7ebfe6e80f/26-6aa52ab65e11d.webp' /></p><p>



பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தக் குழாய் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>


கடந்த வியாழக்கிழமை (10) ஈராக்கிலிருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படும் பல ட்ரோன்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக சவூதி வெளியுறவு அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது. </p><p>தாக்குதலை ஈராக் அரசாங்கமும் கண்டித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.



இதனிடையே, சவூதி ஆதரவு பெற்ற யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஈரான் ஆதரவு ஹௌதி அமைப்பினர்களுக்கும் இடையிலான மோதலும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>


பாப்-எல்-மண்டேப் நீரிணைக்கு அருகிலுள்ள முக்கிய பகுதிகள் தொடர்பிலும் ஹௌதிகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>


உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான பாப்-எல்-மண்டேப் நீரிணை, சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
</p><p>


இதனால் அப்பகுதியில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.



சவூதி அரேபியா மூடியுள்ள எண்ணெய் குழாய் வழித்தடம் மூலம் கடந்த சில மாதங்களாக நாளொன்றுக்கு சுமார் 4 முதல் 5 மில்லியன் கொள்கலன் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.



இந்நிலையில், குழாய் வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பாதுகாப்புப் படையினரும் தொழில்நுட்பக் குழுவினரும் மதிப்பீடு செய்து வருகின்றனர்.</p><p>



குழாய் மீண்டும் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T10:34:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குறைய இருக்கும் வாகன எரிபொருள் விலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/gas-prices-canada-reduce-1789200215"></link>
            <id>https://canadamirror.com/article/gas-prices-canada-reduce-1789200215</id>
            <summary type="text">&amp;nbsp;Gas prices are expected to drop soon in Canada: கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமெரிக்காவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Gas prices are expected to drop soon in Canada: கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>


அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் துவங்கியதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாத இறுதியிலிருந்தே, பெட்ரோல், டீசல் போன்ற வாகன எரிபொருட்கள் விலை உலகமெங்கும் உயர்ந்துவருகிறது.
</p><p>
இந்நிலையில், கனடாவில் வாகன எரிபொருள் விலைகள் விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><span style="color: inherit;">முதலாவதாக, குளிர் காலத்தில் கனேடியர்களும் அமெரிக்கர்களும் பயணம் செய்வதை வெகுவாகக் குறைத்துவிடுகிறார்கள்.</span></p><p>
ஆகவே, வாகன பயன்பாடு குறைவதால், எரிபொருள் நிரப்புவதற்கான தேவையும் குறைகிறது.</p><p>இரண்டாவதாக, கனடாவைப் பொருத்தவரை, குளிர்காலம் துவங்கியதும் வாகன எரிபொருளில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்படும்.</p><p>

குளிர்காலத்தில் வாகன செயல்பாடு நன்றாக இருப்பதற்காக, எரிபொருளுடன் பியூட்டேன் போன்ற உட்பொருட்கள் கலக்கப்படுகின்றன.</p><p>

இந்த பியூட்டேன் போன்றவை கலக்கப்படும் எரிபொருள் விலை, வழக்கமாகவே குறைவாகத்தான் இருக்கும்.
</p><p>
ஆக, இந்த இரண்டு காரணங்களாலும், எரிபொருள் விலைகள் குறைய உள்ளன.
</p><p>
இந்த விலை குறைவு, இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வர அமுலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.<br></p>]]></content>
            <updated>2026-09-12T08:05:14+00:00</updated>
        </entry>
    </feed>
