<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-20T21:57:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[60 மணி நேரத்தில் சீனா, துருக்கி ராணுவ விமானங்கள் பாகிஸ்தானில் ; பரபரப்பு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/chinese-turkis-military-aircraft-pakistan-60-hours-1787262827"></link>
            <id>https://canadamirror.com/article/chinese-turkis-military-aircraft-pakistan-60-hours-1787262827</id>
            <summary type="text">சீனா மற்றும் துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு 60 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து வந்திறங்கிய கனரக ராணுவ விமானங்களில் போர் தளவாடங்கள் கொண்டுவரப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா மற்றும் துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு 60 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து வந்திறங்கிய கனரக ராணுவ விமானங்களில் போர் தளவாடங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே உள்ள நூர் கான் விமானப்படைத் தளம் மற்றும் கராச்சியில் உள்ள மஸ்ரூர் விமானப்படைத் தளங்களில் சீனா மற்றும் துருக்கியைச் சேர்ந்த கனரக ராணுவ விமானங்கள் சமீபத்தில் தரையிறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2550fac-a5b2-46fc-bb4b-28125c534ca1/26-6a87776ccc542.webp' /></p><p>இந்த விமானங்கள் மூலம் பாகிஸ்தானுக்குத் தேவையான ராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>
கடந்த ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பின்னர், பாகிஸ்தான் மற்றும் சீனா இடையேயான ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.</p><p> போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாகிஸ்தான் சீனாவை பெரிதும் நம்பி வருகிறது.
</p><p>
இதனிடையே, போர் விமான மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க துருக்கியும் பாகிஸ்தானும் சமீபத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. </p><p>மேலும், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தமும் அண்மையில் கையெழுத்தானது.
</p><p>
இத்தகைய சூழலில், சீனா மற்றும் துருக்கியின் கனரக ராணுவ விமானங்கள் பாகிஸ்தானில் அடுத்தடுத்து தரையிறங்கியிருப்பது பிராந்திய ராணுவ நிலவரம் குறித்து புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
எனினும், இந்த விமானங்களில் உண்மையில் என்ன வகையான தளவாடங்கள் கொண்டுவரப்பட்டன என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-20T21:53:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்க சிறிய விமானம் ஹெலிகாப்டரில் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/small-us-plane-crashes-helicopter-after-takeoff-1787261041"></link>
            <id>https://canadamirror.com/article/small-us-plane-crashes-helicopter-after-takeoff-1787261041</id>
            <summary type="text">அமெரிக்காவில் சிறிய ரக விமானமும் காவல்துறையின் ஹெலிகாப்டரும் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பென்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் சிறிய ரக விமானமும் காவல்துறையின் ஹெலிகாப்டரும் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

பென்சில்வேனியா மாகாணம், கம்பர்லேண்ட் கவுண்டியில் உள்ள கார்லைல் விமான நிலையம் அருகே செஸ்னா 150 சிறிய ரக விமானமும், பென்சில்வேனியா மாகாண காவல்துறையின் பெல் 407 ஹெலிகாப்டரும் புதன்கிழமை இரவு 7:50 மணியளவில் (அமெரிக்க நேரப்படி) மோதி விபத்துக்குள்ளாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f8bfdbc-c34f-422c-ac88-1b7f9a41ab66/26-6a8770737ae43.webp' /></p><p>

இந்த விபத்தில், செஸ்னா 150 விமானத்தை இயக்கிய விமானி பலியானதாக அமெரிக்க காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், அந்த விமானத்தில் உயிரிழந்த விமானியைத் தவிர யாரும் பயணிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேபோல், ஹெலிகாப்டரில் பயணித்த பென்சில்வேனியா மாகாண காவல்துறையின் விமானப் பிரிவைச் சேர்ந்த இருவர் காயமடைந்திருப்பதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதன்கிழமை இரவு 7 மணியளவில் பென்சில்வேனியா மாகாண காவல்துறையின் பெல் 407 ஹெலிகாப்டரில் வழக்கமான பயிற்சியில் விமானிகள் ஈடுபட்டிருந்தனர்.
</p><p>
அந்த சமயத்தில் கார்லைல் விமான நிலையத்திலிருந்து செஸ்னா ஜெட் விமானம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>
மேலும், அந்த விமானம் வழக்கத்துக்கு மாறாக வலதுபுறம் திரும்பி, ஹெலிகாப்டரின் பின்புறத்தில் மோதியதால் விபத்து நேரிட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விபத்தில் ஜெட் விமானம் பல துண்டுகளாக நொறுங்கி புல்வெளியில் விழுந்தது. இதில், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
</p><p>
இந்த விபத்து குறித்து அமெரிக்க விமான விபத்து விசாரணைப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-20T21:24:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ பூங்காவில் 6 வயது குழந்தையிடம் தகாத முறையில் நடந்த நபர் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-search-for-suspect-accused-of-sexually-1787244562"></link>
            <id>https://canadamirror.com/article/police-search-for-suspect-accused-of-sexually-1787244562</id>
            <summary type="text">டொராண்டோ பூங்காவில் 6 வயது குழந்தையிடம் தகாத முறையில் நடந்த நபர் !
டொராண்டோ நகரின் மத்திய பகுதியில் உள்ள பிரபல பூங்காவில் 6 வயது குழந்தையிடம் தகாத மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>டொராண்டோ பூங்காவில் 6 வயது குழந்தையிடம் தகாத முறையில் நடந்த நபர் !
டொராண்டோ நகரின் மத்திய பகுதியில் உள்ள பிரபல பூங்காவில் 6 வயது குழந்தையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டு, அவரைத் தீவிரமாகத் தேடி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
செவ்வாய்க்கிழமை பிற்பகல் பிரெம்னர் பூலேவார்ட் மற்றும் லோயர் சிம்கோ தெரு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள 'ரவுண்ட்ஹவுஸ் பூங்காவில்' இச்சம்பவம் நடந்துள்ளது. </p><p>
அங்குள்ள ரயில் பெட்டிகள் அருகே குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் குழந்தைக்குப் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e04c0d0-68bc-46e7-898e-8e6f45c988f3/26-6a873014ed6bd.webp' /></p><p>
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் அந்த நபரைத் தட்டிக் கேட்டபோது, அவர் மீண்டும் அக்குழந்தையிடம் தகாத முறையில் நடந்துள்ளார் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
</p><p>புதன்கிழமை இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சந்தேக நபரின் அடையாளங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.</p><p>
55 முதல் 60 வரை வயதுடைய, 5 அடி 6 அங்குலம் உயரமுடைய, நடுத்தர உடல்வாகு, முன் தலைமுடி குறைந்த நரைத்த முடி, தாடி-மீசை இல்லாத முகம், வெள்ளி நிற உலோகம் கொண்ட கண்ணாடி அணிந்திருந்தார் என குறித்த நபர் பற்றிய விபரங்கள் பகிரப்பட்டுள்ளன.</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்தவர்கள் அல்லது சந்தேக நபரை அடையாளம் காண்பவர்கள் உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T19:53:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரடியிடமிருந்து உரிமையாளர்களைக் காப்பாற்றிய நாய்: விருது வழங்கி கௌரவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hero-pup-honoured-for-saving-her-family-1787242723"></link>
            <id>https://canadamirror.com/article/hero-pup-honoured-for-saving-her-family-1787242723</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள நிபிகான் பகுதியில், வீடொன்றுக்குள் புகுந்த கருப்புக் கரடியிடமிருந்து தன் உரிமையாளர்களின் உயிரைக் காப்பாற்றிய ஏழு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள நிபிகான் பகுதியில், வீடொன்றுக்குள் புகுந்த கருப்புக் கரடியிடமிருந்து தன் உரிமையாளர்களின் உயிரைக் காப்பாற்றிய ஏழு வயது நாய் 'சுலோ' 'பியூரினா அனிமல் ஹால் ஆஃப் ஃபேம்' விருதைப் பெற்றுள்ளது.</p><p>
கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி இரவு 11 மணியளவில், கோலெட் ஸ்வெட்ஸ் என்பவர் தன் வளர்ப்பு நாயான 'சுலோ'வை வழக்கம்போல வெளியே அனுப்ப வீட்டின் கதவைத் திறந்துள்ளார்.
</p><p> அப்போது வீட்டின் படிக்கட்டுக்கு அடியில் மறைந்திருந்த சுமார் 300 பவுண்டு எடையுள்ள பெரிய கருப்புக் கரடி ஒன்று சுலோவைத் தொடர்ந்து வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்தது.
வீட்டிற்குள் புகுந்த கரடி கோலெட்டைத் தாக்கி, கடித்துக் குதறத் தொடங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d46156c-90e9-47d2-a47e-1778e8c5cd58/26-6a8728e50fea2.webp' /></p><p> </p><p>அப்போது, தூங்கிக் கொண்டிருந்த கோலெட்டின் கணவரை சுலோ விரைந்து சென்று எழுப்பியது. அவர் ஓடிவந்து கரடியைத் தடுக்க முயன்றபோது, கரடியின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. </p><p>அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, தம்பதியினரும் சுலோவும் சேர்ந்து போராடி கரடியை வீட்டின் கீழ் தளத்திற்கு தள்ளினர்.
</p><p>காவல்துறையினர் வரும் வரை கரடி மீண்டும் மேலே வராதவாறு, படிகளில் நின்று குறைத்துத் துணிச்சலுடன் அதைத் தடுத்தது சுலோ. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கரடியை அப்புறப்படுத்தி தம்பதியை மீட்டனர்.</p><p>
இந்தத் தாக்குதலில் சுலோ பலத்த காயமடைந்து, தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்தது.</p><p> 
ஆபத்தான சூழலில் சாதுரியமாகவும் தைரியமாகவும் செயல்பட்டு உரிமையாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சுலோவை, "எங்கள் குடும்பத்தின் நிஜ கதாநாயகி" என அதன் உரிமையாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T16:36:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒட்டாவா நகரில் கடைகளில் திருடிய 17 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/17-people-arrested-in-police-operating-targeting-1787242184"></link>
            <id>https://canadamirror.com/article/17-people-arrested-in-police-operating-targeting-1787242184</id>
            <summary type="text">ஒட்டாவா நகரின் மத்திய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தொடர்ந்து நடைபெற்று வந்த கடைத் திருட்டுகளைத் தடுக்கும் வகையில், ஒட்டாவா நகரக் காவல்துறை நடத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒட்டாவா நகரின் மத்திய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தொடர்ந்து நடைபெற்று வந்த கடைத் திருட்டுகளைத் தடுக்கும் வகையில், ஒட்டாவா நகரக் காவல்துறை நடத்திய சிறப்பு தீவிர நடவடிக்கையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 18 வரையிலான காலகட்டத்தில், ரிடோ தெருவில் அமைந்துள்ள குறிப்பிட்ட வணிக நிறுவனத்தில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. </p><p>
சில்லறை விற்பனைக் கடைகளில் நடைபெறும் திருட்டுகள் குறித்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து, காவல் பிரிவினர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d5f2dec-1984-4f9d-b917-66a694979f59/26-6a8726c9cf483.webp' /></p><p>
பாதிக்கப்பட்ட நிறுவனத்தின் பாதுகாப்புப் பணியாளர்களுடன் இணைந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் காவல்துறையினர் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர்.
</p><p>இந்த நடவடிக்கையின் மூலம் 17 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 17 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 7 பேருக்கு மாகாண சட்ட மீறல் அறிவிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>காவல்துறை எந்த நிறுவனம் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும், இது ரிடோ தெருவின் 300வது தொகுதியில் அமைந்துள்ள ஒரு வணிக நிறுவனம் எனத் தெரியவந்துள்ளது.
</p><p>வணிக நிறுவனங்கள் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளைப் உடனடியாகப் புகாரளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>
உள்ளூர் வணிகர்களுடன் இணைந்து குற்றங்களைத் தடுப்பதற்கும், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஒட்டாவா காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T16:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்கா தடைக்கு சீனா கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-strongly-condemns-us-sanctions-on-iran-1787230980"></link>
            <id>https://canadamirror.com/article/china-strongly-condemns-us-sanctions-on-iran-1787230980</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் &quot;பொருளாதார டி-டே&quot; பிரச்சாரத்தை சீனா கடுமையாக சாடியுள்ளதுடன், கூடுதல் பொருளாதாரத் தடைகள் நிலுவையில் உள்ள பிரச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் "பொருளாதார டி-டே" பிரச்சாரத்தை சீனா கடுமையாக சாடியுள்ளதுடன், கூடுதல் பொருளாதாரத் தடைகள் நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது என்றும் தெரிவித்துள்ளது.</p><p>



பீஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீனாவின் வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் லின் ஜியான் (Lin Jian), இதனை தெரிவித்துள்ளார்.



இதன்போது, தடைகளை விதிப்பதும் அழுத்தம் கொடுப்பதும் பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48deb9c5-8e7e-4287-9ac9-400a5f87cbb4/26-6a86fb05a28d2.webp' /></p><p> </p><p>



மேலும், பொறுப்பான நடவடிக்கைகளை எடுத்து, தூதரக மற்றும் அரசியல் வழிமுறைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க சம்பந்தப்பட்ட தரப்பினரை சீனா வலியுறுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
</p><p>


பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் (Kpler) வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, ஈரான் ஏற்றுமதி செய்யும் எண்ணெயில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை சீனா வாங்குவதால், இந்த நடவடிக்கைகள் சீனாவைப் பிரதானமாகப் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T16:05:13+00:00</updated>
        </entry>
    </feed>
