<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-31T04:36:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவும் இஸ்ரேலுமே உண்மையான எதிரிகள் ; ஈரான் உச்ச தலைவர் அதிரடி கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-and-israel-are-real-enemies-iran-supreme-leader-1788112414"></link>
            <id>https://canadamirror.com/article/us-and-israel-are-real-enemies-iran-supreme-leader-1788112414</id>
            <summary type="text">அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய ஒற்றுமைக்கு &quot;உண்மையான எதிரிகள்&quot; என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய ஒற்றுமைக்கு "உண்மையான எதிரிகள்" என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
</p><p>
இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் தங்களின் "உண்மையான எதிரியை" இனம் கண்டு, அதன் திட்டங்களைப் புரிந்து கொண்டு எதிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

"இஸ்லாமிய ஒற்றுமை வாரம்" குறித்த செய்தியை வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94fc2c31-5395-46d0-895a-b4af48cc5a26/26-6a946e1fa462c.webp' /></p><p>ஈரான் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளின் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு இன, கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் புவியியல் ரீதியான வேறுபாடுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் சாக்குப்போக்குகளாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன், ஈரானியர்கள் தங்களுக்குள் எந்தவித வேறுபாடுகளையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
விரும்பத்தக்க மற்றும் ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய நாகரிகத்தை அடைவதற்கு முஸ்லிம்களிடையே ஒற்றுமை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
வொஷிங்டனும் டெல் அவிவும் ஈரானின் எதிரிகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் "உண்மையான எதிரிகள்" என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்தது. இதனையடுத்து, அமெரிக்காவின் சொத்துக்கள் அமைந்துள்ள பிராந்திய நாடுகளின் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த ஜூன் மாதம் ஈரானும் அமெரிக்காவும் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், அந்த இடைக்கால ஒப்பந்தம் விரைவில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T01:04:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பேரழிவு ; நீர்மின் நிலைய சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க தீவிர தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/search-and-rescue-operation-underway-in-nepal-1788130196"></link>
            <id>https://canadamirror.com/article/search-and-rescue-operation-underway-in-nepal-1788130196</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து திரிசூலி-3ஏ (Trishuli-3A) நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து திரிசூலி-3ஏ (Trishuli-3A) நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
இந்த மீட்புப் பணிகளில் முப்படை வீரர்கள் காவல்துறையினர் மற்றும் பயிற்சி பெற்ற நாய்களுடன் கூடிய 90 பேர் கொண்ட சிறப்பு மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ecd5ddc-9692-4b1d-a5f3-7c3a238e96d6/26-6a94b3963e050.webp' /></p><p>

சுரங்கத்தின் மேற்பகுதியில் (Crown) 2அல்லது3 அடி அளவில் துளையிடப்பட்டு கயிறுகள் மூலம் மீட்புப் படையினர் உள்ளே இறங்கிச் சோதனைகளை மேற்கொண்டனர்.</p><p>எனினும் உள்ளிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில், கடுமையான மற்றும் ஆபத்தான சூழலிலும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து 24 மணி நேரமும் அயராது உழைத்து வருவதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்தச் பேரிடரில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில் நீர்மின் நிலையச் சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
</p><p>
வெள்ளத்தால் வீதிகள் அடித்துச் செல்லப்பட்டதாலும் பாலங்கள் சேதமடைந்ததாலும் ரசுவா மாவட்டம் இன்னும் வெளி உலகத்துடன் தொடர்பில்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தப் பகுதியில் உணவுப் பொருட்கள் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவில் இருப்பதாகவும் சமையல் எரிவாயு முற்றிலுமாக தீர்ந்துவிட்டதாகவும் சுகாதாரப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
மின்சார விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளதால் மக்கள் உறவினர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.
</p><p>
வீதிகள் சாலைகள் சீரமைக்கப்பட்டு வரும் பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் துண்டிக்கப்பட்டுள்ள சமூகங்களை விரைந்து சென்றடைய மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் முகாமை ஆணையம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை இந்த பேரிடரில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 800 ஐ அண்மித்துள்ளது.
அதேநேரம் 2500 பேரை இன்னும் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T22:50:06+00:00</updated>
        </entry>
    </feed>
