<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-29T19:24:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் -காஸா போரில் 60,000 குழந்தைகளின் பெற்றோர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/60-000-children-lose-parents-in-gaza-war-1785346051"></link>
            <id>https://canadamirror.com/article/60-000-children-lose-parents-in-gaza-war-1785346051</id>
            <summary type="text">காஸா மீதான இஸ்ரேலின் போரில், இதுவரை சுமார் 60,000 பலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸா மீதான இஸ்ரேலின் போரில், இதுவரை சுமார் 60,000 பலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இஸ்ரேலில், கடந்த 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d0933cc-a370-40dc-9f6a-0060474930a7/26-6a6a3804bcd82.webp' /></p><p> </p><p>இதையடுத்து, காஸா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை 73,000-க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>


இந்த நிலையில், கடந்த 2023 ஒக்டோபர் முதல் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 60,737 குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாக, காஸாவின் சுகாதார அமைச்சகம் இன்று (ஜூலை 29) அறிவித்துள்ளது.
</p><p>


இதில், 52,095 குழந்தைகள் தங்களின் தந்தையையும், 5,929 குழந்தைகள் தங்களின் தாயையும் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,713 பாலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர்கள் இருவரையும் இழந்துள்ளனர்.
</p><p>


இத்துடன், 8,858 உறுப்பினர்களை உள்ளடக்கிய 2,276 குடும்பங்கள் குடிமக்களின் பதிவேட்டில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாக, காஸா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>





முன்னதாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்குப் பிறகு காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 1,000-க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-29T17:27:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஏரியில் தொலைந்த திருமண மோதிரம்: மீட்ட கடற்படை வீரர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/find-louisiana-mans-submerged-wedding-band-1785332641"></link>
            <id>https://canadamirror.com/article/find-louisiana-mans-submerged-wedding-band-1785332641</id>
            <summary type="text">அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெஃப் டக்ளாரிஸ் என்பவர், கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஏரியொன்றின் ஆழத்தில் தவறவிட்ட தனது திருமண மோதிரத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெஃப் டக்ளாரிஸ் என்பவர், கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஏரியொன்றின் ஆழத்தில் தவறவிட்ட தனது திருமண மோதிரத்தை, நெய்ட் மெக்லாகன் என்பவரின் உதவியுடன் பத்திரமாக மீட்டுள்ளார்.
</p><p>கனடிய ராயல் கடற்படையில் ஆயுதத் தொழில்நுட்பக் கலைஞராகப் பணியாற்றி வரும் நெய்ட் மெக்லாகன், கடந்த 20 ஆண்டுகளாக 'மெட்டல் டிடெக்டர்' கருவி மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். </p><p>
இந்த ஆண்டு மட்டும் தொலைந்துபோன 25 பொருட்களையாவது உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இலக்குடன் அவர் செயல்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb43dd6-05be-4510-9ceb-daaa14611abb/26-6a6a03a2c2654.webp' /></p><p>
</p><p>ஜெஃப் டக்ளாரிஸ் பயிற்சிக்காக கனடாவிற்கு வந்திருந்தபோது, தனது நண்பர்களுடன் 'கேஜிம்குஜிக் தேசியப் பூங்காவில்' உள்ள ஏரியில் காயாக்கிங் படகுச் சவாரி செய்தார். பாறைகளில் ஏறி ஏரி நீரில் குதித்தபோது, அவரது விரலிலிருந்த 14-காரட் தங்கத் திருமண மோதிரம் நழுவி ஏரிக்குள் விழுந்தது.
</p><p>திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகத் தனது விரலை விட்டுப் பிரியாத மோதிரம் தொலைந்ததால் மனமுடைந்த டக்ளாரிஸ், அதைத் தேட முயன்றும் நீர் தெளிவில்லாமல் இருந்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை. </p><p>
உடனே அந்த இடத்தைக் குறிப்பாய்வு செய்து, புகைப்படங்களை எடுத்துக்கொண்டு இணையத்தில் உதவி தேடியபோது, மெக்லாகனின் அறிமுகம் கிடைத்துள்ளது.
</p><p>டக்ளாரிஸ் தனக்கு அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், அடுத்த வார இறுதியில் டைவிங் உடைகள் மற்றும் மெட்டல் டிடெக்டருடன் அந்த ஏரிக்குச் சென்றார் மெக்லாகன்.
ஆச்சரியப்படும் விதமாக, ஏரியின் அடியில் தேடத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பாறைகளுக்கு இடையே மின்னிய அந்தத் தங்க மோதிரத்தைக் கண்டெடுத்தார்.
</p><p>கடந்த ஆண்டில் 13 தொலைந்த பொருட்களை மீட்டுத் தந்த மெக்லாகன், இதை ஒரு பொழுதுபோக்காகவும் தன்னார்வத் தொண்டாகவுமே செய்து வருகிறார்.</p><p> 
இதற்காக அவர் யாரிடமும் பெருந்தொகையைக் கட்டணமாகப் பெறுவதில்லை; தூரப் பயணங்களுக்கான எரிபொருள் செலவை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
மோதிரங்கள், கைபேசிகள், சாவிக்கொத்துகள் மட்டுமின்றி, முதல் உலகப்போருக்குப் பிந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கங்கள், பீரங்கி உதிரிபாகங்கள் எனப் பல அரிய பொருட்களையும் இவர் ஏரிகளிலிருந்து கண்டெடுத்துள்ளார்.<b>டி</b>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T16:32:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/60-000-children-in-gaza-have-lost-parents-1785333455"></link>
            <id>https://canadamirror.com/article/60-000-children-in-gaza-have-lost-parents-1785333455</id>
            <summary type="text">&amp;nbsp;காசா முனையில் 2023 அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர் அல்லது பெற்றோர் ஒருவரை இழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;காசா முனையில் 2023 அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர் அல்லது பெற்றோர் ஒருவரை இழந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>குறைந்தபட்சம் 60,737 குழந்தைகள் தங்களது தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர்.
இதில் 52,095 குழந்தைகள் தந்தையையும், 5,929 குழந்தைகள் தாயையும் இழந்துள்ளனர்.
</p><p>2,713 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்து அனாதைகளாகியுள்ளனர் என காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22d174ed-d938-43e3-9553-cd9a3b6357f4/26-6a6a06d766512.webp' /></p><p>
</p><p>மேலும், 2,276 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 8,858 நபர்கள் முற்றிலும் உயிரிழந்து, குடிமக்கள் பதிவேட்டில் இருந்தே அவர்களின் பெயர்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
2023 அக்டோபர் முதல் இதுவரை 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> 
ஒக்டோபரில் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டும் கூட, இஸ்ரேல் காசா முழுவதும் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில், போர்நிறுத்தத்திற்குப் பின்னர் மட்டும் 1,100-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T16:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shooting-in-stoney-creek-leaves-2-dead-hamilton-1785333107"></link>
            <id>https://canadamirror.com/article/shooting-in-stoney-creek-leaves-2-dead-hamilton-1785333107</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் &#039;ஸ்டோனி க்ரீக்&#039; பகுதியில் அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஹாமில்ட்டன் காவல்துறையினர் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் 'ஸ்டோனி க்ரீக்' பகுதியில் அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஹாமில்ட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>இன்று அதிகாலை 2:25 மணியளவில், ரைமல் ரோடு ஈஸ்ட் மற்றும் அப்பர் சென்டெனியல் பார்க்வே ஆகிய பகுதிகளுக்கு அருகே உள்ள 'கேண்டில்வுட் டிரைவ்' குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
</p><p>சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், துப்பாக்கிக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு ஆண்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/babc1055-e27a-47ae-9fec-98bb71ef32f3/26-6a6a0575707af.webp' /></p><p> </p><p>எனினும், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஹாமில்ட்டன் காவல்துறையின் 'கொலை வழக்கு விசாரணைப் பிரிவு' தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p>
இக்குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது காவலில் எடுக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்துக் காவல்துறை இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
</p><p>வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்கள் விசாரணைக்குப் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T16:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொன்றியல் விமான நிலையத்தில் துர்நாற்றம்: விமானங்கள் ரத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/flights-to-us-cancelled-odour-at-montreal-airport-1785332206"></link>
            <id>https://canadamirror.com/article/flights-to-us-cancelled-odour-at-montreal-airport-1785332206</id>
            <summary type="text">கனடாவின் மொன்றியல்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவின் பகுதியில் வீசிய விசித்திரமான துர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மொன்றியல்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவின் பகுதியில் வீசிய விசித்திரமான துர்நாற்றம் காரணமாக, புதன்கிழமை காலை அமெரிக்காவிற்கான அனைத்து விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டன.
</p><p>கட்டட வேலைகளுக்கானப் பொருட்களில் இருந்து இந்த துர்நாற்றம் வீசியதை அடுத்து, அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவு தனது பரிசோதனைப் பணிகளைத் தற்காலிகமாகப் நிறுத்தி வைத்தது.</p><p>
இதேவேளை, துர்நாற்றம் வீசியதற்கான காரணம் கண்டறியப்பட்டு விட்டதாக மொன்றியல் விமான நிலைய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be630a77-8508-4e2b-8a1c-f2962515a882/26-6a6a01f092917.webp' /></p><p>
</p><p> எனினும், எல்லைப் பாதுகாப்புப் பணிகள் சீரடையும் வரை பயணிகள் தங்களது விமானங்களின் நிலவரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் உறுதிசெய்த பின்னரே விமான நிலையத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>அமெரிக்கச் சுங்கப் பரிசோதனை தொடர்பான கூடுதல் சந்தேகங்களுக்கு பயணிகள், அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T13:37:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எட்மண்டனில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shooting-death-at-west-end-business-investigation-1785331696"></link>
            <id>https://canadamirror.com/article/shooting-death-at-west-end-business-investigation-1785331696</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>செவ்வாய்க்கிழமை காலை 11:35 மணியளவில் 11230 149 St. பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், எட்மண்டன் காவல்துறையினர் விரைந்து சென்றனர்.</p><p> 
அங்கு படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 39 வயது நபர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bed11541-7ad5-4bb5-a206-910561e4d506/26-6a69fff232b3a.webp' /></p><p>
</p><p>அவரது உடற்கூறாய்வு பரிசோதனை புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சமயத்தில், அந்த வணிக வளாகத்திலிருந்து நபர் ஒருவர் ஓடித் தப்பிச் செல்வதைப் பார்த்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>சம்பவம் இடம்பெற்ற தினம் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அப்பகுதியில் பயணித்தவர்கள், சாட்சிகள் அல்லது தங்களது வாகனத்தின் 'டேஷ்கேம்' காட்சிகளை வைத்திருப்பவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு கொலை வழக்கு விசாரணை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 780-423-4567 என்ற எண்ணிலோ அல்லது 'கிரைம் ஸ்டாப்பர்ஸ்' மூலமாகவோ ரகசியமாகத் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T13:32:02+00:00</updated>
        </entry>
    </feed>
