<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-15T05:24:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தில் கோய் மீன்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 51 வயது முதியவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/elderly-man-sexually-harassed-koi-fish-1789419453"></link>
            <id>https://canadamirror.com/article/elderly-man-sexually-harassed-koi-fish-1789419453</id>
            <summary type="text">தாய்லாந்தில் அண்டை வீட்டாரின் தனியார் கோய் மீன் வளர்ப்புத் தொட்டிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் 51 வயது நபர் ஒருவர், மீன்களுக்கு பாலியல் துஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தில் அண்டை வீட்டாரின் தனியார் கோய் மீன் வளர்ப்புத் தொட்டிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் 51 வயது நபர் ஒருவர், மீன்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

தாய்லாந்தின் துங் சோங் ஹோங் பகுதியில் உள்ள தனியார் குளமொன்றில் கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e024373a-87ef-4dd7-b0b8-b8bfd1eaf57f/26-6aa85fbe930c2.webp' /></p><p>குறித்த நபர் மிதிவண்டியில் அப்பகுதிக்கு வந்த பின்னர், குளத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அங்கு வளர்க்கப்பட்டிருந்த கோய் மீன்களுக்கு துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவத்தை வீட்டுப் பணியாளரும் குளத்தின் உரிமையாளரும் அவதானித்து அவரை எதிர்கொண்டபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>இதனையடுத்து உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், குளத்தில் வளர்க்கப்பட்ட கோய் மீன்கள் தொடர்ச்சியாக விசித்திரமான முறையில் உயிரிழந்ததை அவதானித்த உரிமையாளர், காரணம் தொடர்பில் சந்தேகமடைந்துள்ளார்.
</p><p>
மேலும், குளத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோதே சம்பவத்தின் பின்னணி தெரியவந்துள்ளது.

இதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபரை மறுநாள் லாக் சி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். </p><p>கைது செய்யப்பட்டபோது, சம்பவத்தன்று அணிந்திருந்த ஆடைகளையே அவர் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ac78282-8bc1-448c-a744-93b27c474e82/26-6aa85fbf47e2a.webp' /></p><p>விசாரணைகளின்போது குறித்த நபர் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>
மேலும், கடந்த காலங்களிலும் விலங்குகள் மற்றும் பொருட்கள் தொடர்பில் இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>

சுமார் ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக கோய் மீன்களை வளர்த்து வரும் குளத்தின் உரிமையாளர், மீன்கள் வித்தியாசமான நிலையில் உயிரிழந்ததைக் கண்டு ஆரம்பத்தில் அவை ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கருதியதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், CCTV காட்சிகளை ஆய்வு செய்த பின்னரே உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் விலங்கு வதை, சொத்து சேதம், ஒழுக்கக்கேடான செயற்பாடு மற்றும் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தாய்லாந்து பொலிஸார் பரிசீலித்து வருகின்றனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-15T01:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்தான் தாக்குதலில் புதிய திருப்பம் ; ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னால் புதிய மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-new-mystery-behind-iran-s-missile-attack-1789431790"></link>
            <id>https://canadamirror.com/article/a-new-mystery-behind-iran-s-missile-attack-1789431790</id>
            <summary type="text">ஜோர்தானில் உள்ள முவாஃபக் அல்-சால்டி (Muwaffaq Al-Salti) வான்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு சீன செயற்கைக்கோள் புகைப்படங்கள் பயன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்தானில் உள்ள முவாஃபக் அல்-சால்டி (Muwaffaq Al-Salti) வான்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு சீன செயற்கைக்கோள் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து அமெரிக்க புலனாய்வாளர்கள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
இந்த ஏவுகணைத் தாக்குதலில் 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
தாக்குதலுக்கு முன்னர், சம்பந்தப்பட்ட இராணுவ முகாமின் அதிநவீன செயற்கைக்கோள் புகைப்படங்களை ஈரான் பெற்றிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3d0ecb3-2a51-4938-92e4-084d96dc57b4/26-6aa88ff03bfda.webp' /></p><p>இந்த தாக்குதலின் மூலம் அமெரிக்க வீரர்களின் இருப்பிடம், இராணுவ தளவாடங்கள் மற்றும் முகாமின் கட்டமைப்பு குறித்த விவரங்களை ஈரான் பெற்றிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.
</p><p>
தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாக, முகாமிற்கு ஏற்பட்ட சேதங்களை ஈரான் அதிகாரிகள் மதிப்பீடு செய்திருக்கக் கூடும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.</p><p>

தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே அல்-சால்டி முகாமின் காணொளிகள் வெளியானதைத் தொடர்ந்து, இலக்கு வைக்கப்பட்ட இடத்திலிருந்து இவ்வளவு விரைவாக ஈரான் எவ்வாறு தகவல்களைப் பெற்றது என்பது குறித்து அமெரிக்கா விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T00:23:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக எண்ணெய் சந்தைக்கு புதிய நெருக்கடி ; சவூதி எண்ணெய் இருப்பு தீரும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/risk-of-saudi-oil-reserves-running-dry-1789430944"></link>
            <id>https://canadamirror.com/article/risk-of-saudi-oil-reserves-running-dry-1789430944</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய் வலையமைப்பு சில நாட்களுக்குள் மீண்டும் இயக்கப்படாவிட்டால், யான்பு துறைமுகத்தில் உள்ள எண்ணெய் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய் வலையமைப்பு சில நாட்களுக்குள் மீண்டும் இயக்கப்படாவிட்டால், யான்பு துறைமுகத்தில் உள்ள எண்ணெய் இருப்பு தீர்ந்து, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4% வரை பாதிப்பு ஏற்படக்கூடும் என எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதல்களால் குழாய் வலையமைப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதன் காரணமாக யான்பு துறைமுகத்தில் தற்போது 5 முதல் 7 நாட்களுக்கு மட்டுமே போதுமான ஏற்றுமதி இருப்பு உள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
</p><p>
குறித்த குழாய் மூலம் நாளொன்றுக்கு சுமார் 4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் யான்புவுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22857be3-d88a-4f2f-8d39-d18124c6b0dc/26-6aa88ca24b946.webp' /></p><p>மாற்று வழியாக எண்ணெயை ஏற்றுமதி செய்யும் வசதிகள் இருந்தாலும், அவற்றின் சேமிப்பு இருப்புகளும் வரையறுக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனிடையே, சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA), ஹோர்மூஸ் மற்றும் செங்கடல் வழியாக எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>

சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி, போருக்கு முன்னர் நாளொன்றுக்கு 10.9 மில்லியன் பீப்பாய்களாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 6.2 மில்லியன் பீப்பாய்களாக குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இந்த நிலை நீடித்தால், ஏற்கனவே அதிகரித்துள்ள உலகளாவிய எரிபொருள் விலைகள் மேலும் உயர்ந்து, சர்வதேச பணவீக்க அழுத்தம் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T00:09:10+00:00</updated>
        </entry>
    </feed>
