<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-16T08:25:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தீப்பற்றி எரிந்த வாகனத்திற்குள் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/victoria-police-investigating-after-body-found-1789544619"></link>
            <id>https://canadamirror.com/article/victoria-police-investigating-after-body-found-1789544619</id>
            <summary type="text">கனடாவின் விக்டோரியா நகரில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகனம் தீப்பற்றிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் விக்டோரியா நகரில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகனம் தீப்பற்றிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>காலை 7 மணியளவில் விக்டோரியா பொலிஸ் திணைக்கள அதிகாரி ஒருவர் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோதே, குயின்ஸ் அவென்யூவின் 700 ஆவது பகுதியில் வாகனம் ஒன்று தீப்பற்றி எரிவதைக் கண்டுள்ளார். </p><p>
உடனடியாக அவர் 911 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் சில நிமிடங்களில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32e6979f-0cd7-40a7-908d-d0796e14aabd/26-6aaa48ad1fff7.webp' /></p><p> </p><p>எனினும், அந்த வாகனத்திற்குள் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 
பாதிக்கப்பட்டவர் குறித்தோ அல்லது தீப்பற்றிய வாகனம் குறித்தோ மேலதிக விவரங்கள் எதையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.</p><p>
விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், விசாரணையின் நேர்மையைப் பாதுகாக்கும் பொருட்டு தற்போது மேலதிக விவரங்களை வெளியிட முடியாது பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>சம்பவம் தொடர்பில் அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரையான காலப்பகுதியில், டக்ளஸ் அல்லது பிளான்ஷார்ட் வீதிகள் வழியாகச் சென்ற வாகனங்களின் கேமரா பதிவுகள் அல்லது தகவல்கள் வைத்திருப்போர் உடனடியாக புலனாய்வாளர்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p> 
இச்சம்பவத்தைத் தொடர்ந்து புலனாய்வாளர்கள் சோதனைகளை மேற்கொண்டதால், அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டிருந்தது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T07:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாஸ் ஏஞ்சல்ஸ் நேரலையில் ஹெலிக்கொப்டர் விபத்து ; மூவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/helicopter-crash-in-los-angeles-three-dead-1789544050"></link>
            <id>https://canadamirror.com/article/helicopter-crash-in-los-angeles-three-dead-1789544050</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் பேருந்து தீப்பிடித்த சம்பவத்தை நேரலை செய்துகொண்டிருந்த ஹெலிக்கொப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் பேருந்து தீப்பிடித்த சம்பவத்தை நேரலை செய்துகொண்டிருந்த ஹெலிக்கொப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>


லாஸ் ஏஞ்சலீஸின் சாட்ஸ்வொர்த் பகுதியில் நேற்று மாலை வீதியில் பயணித்த பேருந்து ஒன்றில் திடீரென தீப்பற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/459cc42a-0421-4cb0-854c-89cd343a4ad2/26-6aaa46749b3d3.webp' /></p><p> </p><p>

இதனை என்.பி.சி. செய்தி நிறுவனத்தின் ஹெலிக்கொப்டர் நேரலை செய்துகொண்டிருந்த நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிக்கொப்டர் இரண்டு கட்டடங்களுக்கு இடையில் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.
</p><p>


இந்த விபத்து நேரலையின்போதே இடம்பெற்றதால், ஹெலிக்கொப்டர் கீழே விழும் காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பாகியது.
</p><p>


விபத்தில் ஹெலிக்கொப்டரில் பயணித்த விமானி மற்றும் செய்தியாளர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>



சாட்ஸ்வொர்த் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஹெலிக்கொப்டர் விழுந்ததால் கட்டடங்களுக்கு சேதம் ஏற்படவில்லை எனவும், நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



விபத்து தொடர்பில் அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணைக்குழு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது</p>]]></content>
            <updated>2026-09-16T07:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை: பொதுமக்கள் உதவியை நாடும் பொலிசார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/thiaves-theft-atm-in-british-columbia-1789542287"></link>
            <id>https://canadamirror.com/article/thiaves-theft-atm-in-british-columbia-1789542287</id>
            <summary type="text">Thieves haul ATM from British Columbia: பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.


கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thieves haul ATM from British Columbia: பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.</p><p>


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கொள்ளையர்கள் இருவர் ஏடிஎம் இயந்திரம் ஒன்றைத் தூக்கிச் சென்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb521e9-a9c4-4e41-abdc-04c3cfca8dfa/26-6aaa3f9080bcb.webp' /></p><p>

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Ladysmith என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
</p><p>
இந்நிலையில், முகமூடியும் கையுறைகளும் அணிந்த இருவர், அந்த ஏடிஎம் இயந்திரத்தை சங்கிலி மூலம் தங்கள் ட்ரக்குடன் இணைத்து, இழுத்துப் பெயர்த்து, தங்கள் ட்ரக்கில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்.
</p><p>
இந்தக் காட்சிகள் அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளன.
</p><p>
கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரக் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளையர்கள் குறித்து ஏதேனும் தெரியவந்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T07:04:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவருடன் தவறான தொடர்பு; மனித மலத்தை வீசி பெண் மீது மனைவி தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/affair-husband-florida-woman-throws-poop-wife-1789538549"></link>
            <id>https://canadamirror.com/article/affair-husband-florida-woman-throws-poop-wife-1789538549</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் மியாமி பகுதியில் உள்ள ‘ராயல் கன்ட்ரி மொபைல் ஹோம்ஸ்’ பகுதியில் வசித்து வருபவர் 50 வயதான யிர்சி மச்சாடோ ரிவேரா . இவருடைய கணவருக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் மியாமி பகுதியில் உள்ள ‘ராயல் கன்ட்ரி மொபைல் ஹோம்ஸ்’ பகுதியில் வசித்து வருபவர் 50 வயதான யிர்சி மச்சாடோ ரிவேரா . இவருடைய கணவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாக இவர் சந்தேகப்பட்டுள்ளார். </p><p>இதன் காரணமாக ஆத்திரமடைந்த மச்சாடோ ரிவேரா, சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/332e7d27-8b99-4c20-94a9-feba47d95c1f/26-6aaa30f6f1188.webp' /></p><h2>அத்துமீறல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டு</h2><p>
</p><p>
கதவைத் திறந்தவுடன் அண்டை வீட்டுப் பெண்ணைக் கடுமையாகத் திட்டிய மச்சாடோ ரிவேரா, அனுமதியின்றிப் பலவந்தமாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார். </p><p>தான் பழிவாங்கும் நோக்கத்தோடு மனிதக் கழிவுகளை ஒரு வாளியில் சேகரித்து வைத்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தில் வீசியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகக் காவல்துறை வாக்குமூலப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கிடையே, காவல்துறையினரிடம் விசாரணைக்குப் பிறகு பேசிய மச்சாடோ ரிவேரா, தனது வீட்டில் கழிவறை பழுதாகியிருந்ததால் கழிவுப்பொருளை அப்புறப்படுத்த மட்டுமே சென்றதாகவும், அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் ஏற்பட்ட தகராறில் அவர் தன்னை மட்டையால் தாக்கியதாகவும் மாற்றுக்கதை கூறியுள்ளார்.</p><p>

எவ்வாறாயினும், அத்துமீறல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் மச்சாடோ ரிவேராவைக் கைது செய்துள்ள மயாமி-டேட் ஷெரிப் அலுவலக அதிகாரிகள், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T05:59:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் ஆக்கிரமிப்பு ; டென்மார்க் உலங்கு வானூர்தி மீது ரஷ்ய தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-attack-on-danish-army-helicopter-1789538033"></link>
            <id>https://canadamirror.com/article/russian-attack-on-danish-army-helicopter-1789538033</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;டென்மார்க் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றை நோக்கி ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று இரண்டு தீப்பொறிக் கீற்றுகளை வீசியதாகவும், அவற்றில் ஒன்று அந்த விமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;டென்மார்க் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றை நோக்கி ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று இரண்டு தீப்பொறிக் கீற்றுகளை வீசியதாகவும், அவற்றில் ஒன்று அந்த விமானத்திற்கு மிக அருகில் கடந்து சென்றதாகவும் டென்மார்க்கின் ஆயுதப் படைகள் செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தன.
</p><p>
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரின்போது ​​நேட்டோவின் கிழக்கு எல்லையில் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள சூழலில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363f66c0-fe3e-474c-b1c0-29feec1adc7a/26-6aaa2ef2d6abc.webp' /></p><h2>ஐரோப்பாவில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புத் தன்மை</h2><p>
</p><p>

ஐரோப்பாவில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புத் தன்மை அதிகரித்து வரும் ஒரு பரந்த போக்கின் ஒரு பகுதியாகவே இந்தச் சம்பவம் அமைந்துள்ளது என்று டேனிஷ் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் கூறினார் .
</p><p>
ரஷ்யா தனது ஐரோப்பாவிற்கு எதிரான கலப்புப் போரை தீவிரப்படுத்துவதாகவும், நேட்டோவை சோதித்து சவால் விடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
</p><p>
பால்டிக் கடலில் நேற்று வழக்கமான வான்வழிப் பயணத்தின் போது டென்மார்க் இராணுவத்தின் மீது ரஷ்யா மேற்கொண்ட பொறுப்பற்ற நடவடிக்கை. ரஷ்யாவின் நடவடிக்கைகள் அச்சுறுத்துவதையும் பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டவை.</p><p> 

அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று ஃபிரடெரிக்சன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-09-16T05:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியாவில் குற்ற செயலில் இலங்கையர்கள் குழு; அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/busan-customs-arrests-two-sri-lankans-cannabis-1789535662"></link>
            <id>https://canadamirror.com/article/busan-customs-arrests-two-sri-lankans-cannabis-1789535662</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தென் கொரியாவில், இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



குறித்த இலங்கையர்கள் குழுவினர், கஞ்சா பயன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தென் கொரியாவில், இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>


குறித்த இலங்கையர்கள் குழுவினர், கஞ்சா பயன்படுத்தி ஹாஷிஷ் போதைப்பொருளை தயாரித்து தென் கொரியாவில் விற்பனை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a97b5675-a0a8-4b00-beb4-52cadb86c910/26-6aaa25b021fbc.webp' /></p><p>சர்வதேச அஞ்சல் மூலம் அதிக செறிவுள்ள கஞ்சாவைக் கடத்தி, உள்நாட்டில் விநியோகிக்க முயன்ற இரண்டு இலங்கை நாட்டினர் சுங்கத்துறையினரால் பிடிபட்டனர்.
</p><p>
போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 30 வயதுகளில் உள்ள இலங்கையரான 'ஏ' மற்றும் 'பி' ஆகியோரை வழக்கு விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக புசான் பிராந்திய சுங்க சேவை 14ஆம் தேதி அறிவித்தது.</p><p> 



இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அந்த தகவல்காள் மேலும் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-16T05:11:02+00:00</updated>
        </entry>
    </feed>
