<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-12T13:49:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென வந்த அவசர எச்சரிக்கை ; அடுத்தடுத்து தாக்குதல்களால் அதிர வைத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783862343"></link>
            <id>https://canadamirror.com/article/iran-shocks-world-with-series-of-attacks-1783862343</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் திகதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. </p><p>இந்த ஒப்பந்தத்தால் ஏற்கெனவே மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17fcb600-f9c2-49b1-81d1-88d9bb3b88fc/26-6a53944845c97.webp' /></p><p>

</p><p>
இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
இதனால் தாக்குதல்கள் இருபுறமும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், கத்தார், குவைத் போன்ற பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
</p><p>
இதையடுத்து, கத்தாரில் வசித்து வரும் மக்களை வீட்டிலேயே இருக்குமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>மேலும் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களையடுத்து, அங்கு வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>ஈரான் மூலம் மத்திய கிழக்கை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகள், டிரோன் விமானங்கள் போன்றவற்றை தடுத்தி நிறுத்தி வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.</p><p>

முன்னதாக ஈரானின் 140 கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக மூடுவதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-12T13:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள் 44 பேர் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/44-kidnapped-nigerian-students-rescued-safely-1783863509"></link>
            <id>https://canadamirror.com/article/44-kidnapped-nigerian-students-rescued-safely-1783863509</id>
            <summary type="text">மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும், கொள்ளை கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன.
</p><p>
இதனிடையே, அந்நாட்டின் ஒயோ மாகாணம் ஒசிரி மாவட்டத்தில் உள்ள 3 பள்ளிகளுக்குள் கடந்த மே 15ம் தேதி புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் என மொத்தம் 44 பேரை கடத்தி சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d913c09-0f4a-4221-add4-20a7fd0bbedd/26-6a5398d757a61.webp' /></p><p> </p><p>இதையடுத்து, கடத்தப்பட்ட பள்ளி குழந்தைகள், ஆசிரியர்களை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டிருந்தனர்.
</p><p>
மீட்பு
இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் 44 பேரையும் பாதுகாப்புப்படையினர் நேற்று அதிரடியாக மீட்டுள்ளனர்.</p><p> மேலும், இந்த சமப்வம் தொடர்பாக சிலரை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-12T13:38:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-qatar-emir-sheikh-hamad-passes-away-1783853025"></link>
            <id>https://canadamirror.com/article/former-qatar-emir-sheikh-hamad-passes-away-1783853025</id>
            <summary type="text">கத்தார் நாட்டை அதன் நாடோடி பின்னணியில் இருந்து உலகளவில் ஒரு சக்திவாய்ந்த பிராந்திய வல்லரசாக மாற்றியமைத்த அந்நாட்டின் முன்னாள் அமீரும், &#039;தந்தை அமீர்&#039; எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கத்தார் நாட்டை அதன் நாடோடி பின்னணியில் இருந்து உலகளவில் ஒரு சக்திவாய்ந்த பிராந்திய வல்லரசாக மாற்றியமைத்த அந்நாட்டின் முன்னாள் அமீரும், 'தந்தை அமீர்' என்று போற்றப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி தனது 74 ஆவது வயதில் காலமானார். </p><p>

இத்தகவலை நாட்டின் மிக உயர்ந்த அரசாங்க அமைப்பான அமிரி திவான் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd0d8372-7396-47d4-bf74-a8dcff9ec178/26-6a536fe3132de.webp' /></p><p>
</p><p>
"அமிரி திவான் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தந்தை அமீர் ஷேக் ஹமத் பின் கலீபா அல்-தானியின் மறைவை அறிவிக்கிறது.</p><p> எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது ஆன்மாவுக்குக் கருணை காட்டட்டும், மேலும் அவர் தனது தாயகத்திற்காகவும் தேசத்திற்காகவும் சாதித்தவற்றுக்குச் சிறந்த நற்பலன்களை வழங்கட்டும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஷேக் ஹமத் 1995 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை கத்தாரை ஆட்சி செய்துள்ளார்.

வளைகுடா அரபு நாடுகளின் பாரம்பரிய அரண்மனை வழக்கங்களுக்கு மாறாக, வாரிசுரிமைச் சீராக நடப்பதை உறுதி செய்வதற்காக 2013 ஜூன் மாதத்தில் அவர் தனது அதிகாரத்தைத் தனது மகனும் தற்போதைய அமீருமான ஷேக் தமீமிடம் தானாகவே முன்வந்து ஒப்படைத்துள்ளார்.
</p><p>

முன்னதாக 1995 ஆம் ஆண்டில், இரத்தம் சிந்தாத ஒரு உள்நாட்டுப் புரட்சி மூலமாகத் தனது தந்தையை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு இவர் கத்தாரின் அமீராகப் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
ஷேக் ஹமத் தனது 18 ஆண்டுகால ஆட்சியில் கத்தாரின் சர்வதேச அந்தஸ்தை மிக உன்னதமான நிலைக்கு உயர்த்தினார்:&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T11:25:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெனிசுலாவா நிலநடுக்கங்கள் ; 4,300 கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/venezuela-quakes-death-toll-tops-4-300-1783849416"></link>
            <id>https://canadamirror.com/article/venezuela-quakes-death-toll-tops-4-300-1783849416</id>
            <summary type="text">வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,300 ஆக உயர்ந்துள்ளது.



வெனிசுலாவில் கடந்த ஜூன் 24 ஆம் திகதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,300 ஆக உயர்ந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


வெனிசுலாவில் கடந்த ஜூன் 24 ஆம் திகதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிச்டர் அளவுகளிலான நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e38c726-eedd-46c3-9e6a-5d6b2ad260ae/26-6a5361c96f4ce.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">


இந்தப் பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
</p><p style="text-align: justify; ">


இந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,333 ஆக உயர்ந்துள்ளதாகவும், 6,462 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் மேலும், பல்லாயிரக் கணக்கானோர் மாயமாகியுள்ளதாகவும் அந்த நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T09:43:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை ; புதிய தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hormuz-strait-closed-again-us-launches-strikes-1783837923"></link>
            <id>https://canadamirror.com/article/hormuz-strait-closed-again-us-launches-strikes-1783837923</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா புதிய கட்டத் தாக்குதல்களை நடத்தியுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா புதிய கட்டத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. </p><p>

அங்கீகரிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச் சென்றதாகவும், அதன் கண்காணிப்பு அமைப்புகளை அணைத்துவிட்டுச் சென்றதாகவும் கூறி ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை, அந்த கப்பலைத் தாக்கியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/332c6aac-443e-4067-8cce-93a6cb13ffca/26-6a5334e5476a6.webp' /></p><p> </p><p>

மேலும், ஹோர்முஸ் நீரிணை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. </p><p>

சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றின் மீது ஈரான் "வெளிப்படையாகத் தாக்குதல்" நடத்தியதைத் தொடர்ந்து, "இந்த வாரத்தின் மூன்றாவது சுற்றுத் தாக்குதலை" நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (Centcom) தெரிவித்துள்ளது. </p><p>

இந்தத் தாக்குதலால் கப்பலின் இயந்திர அறை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அது பயணத்தைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரு மாலுமி காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

வணிகக் கப்பல்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டும், மீண்டும் அதே தவறைச் செய்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். </p><p>

"ஈரான் தவறான முடிவை எடுத்துவிட்டது, அதற்கான விளைவை இப்போது சந்திக்கிறது" என்றும் அவர் எச்சரித்துள்ளார். </p><p>

முன்னதாக, ஒரு வணிகக் கப்பல் மீது எச்சரிக்கையாகக் கப்பல் ஏவுகணையைத் தாங்கள் ஏவியதாகவும், பலமுறை எச்சரித்தும் கேட்காததால் அந்த கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>

மேலும், ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு "ஆக்கிரமிப்புக்கும்" கடும் பதிலடி கொடுக்கப்படும் என்றும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T08:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச குற்றக்குழுவுடன் தொடர்புடைய கனடியர் பிரான்சில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-man-arrested-in-france-1783839892"></link>
            <id>https://canadamirror.com/article/bc-man-arrested-in-france-1783839892</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கரீந்தர் சிங் தியோ என்ற நபர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். 
அமெரிக்க புலனாய்வு அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கரீந்தர் சிங் தியோ என்ற நபர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>
அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இன் "ஒப்பரேஷன் ஹார்ட் போல்" என்ற சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிரான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>
சந்தேக நபர் தற்போது அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd3af68c-20ae-4cec-a153-81a1dd58aa14/26-6a533e7437ac7.webp' /></p><p>
</p><p>இந்த சர்வதேச குற்றக் கும்பல்கள் மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல், கடத்தல் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p><p> 
குறிப்பாக, 2023 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடந்த சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையுடனும் இக்குற்றக் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
</p><p>இக்குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய 24 சந்தேகநபர்களின் கைது விபரங்களை பொலிஸார் வெளியிட்ட சில நாட்களில், ஜூலை 7 ஆம் திகதி கரீந்தர் சிங் தியோ பிரான்சில் வைத்து கைது செய்யப்பட்டார்.</p><p> இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்காவது கனடியர் இவராவார்.
தியோ, அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய இரு நிறுவனங்களுக்கு எதிராக சிவில் சொத்துப் பறிமுதல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p> சட்டவிரோத வருமானம் மூலம் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் வெஸ்ட் வன்கூவர் மற்றும் பகுதிகளில் உள்ள மூன்று சொத்துக்களை பறிமுதல் செய்ய மாகாண அரசு முயன்று வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T08:00:11+00:00</updated>
        </entry>
    </feed>
