<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-12T01:45:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா–ஈரான் பதற்றம் தீவிரம் ; புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதாக ஈரான் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-accuses-us-of-violating-memorandum-understand-1783789733"></link>
            <id>https://canadamirror.com/article/iran-accuses-us-of-violating-memorandum-understand-1783789733</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குற்றம் சாட்டியுள்ளார். </p><p>இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரானின் உயர்மட்டத் தலைவருடன் தொடர்புடைய ஒருவருக்கு எதிராக அமெரிக்க திறைசேரி திணைக்களம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பது, இரு நாடுகளும் ஜூன் மாதத்தில் எட்டிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறும் செயல் என அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71a82a1c-cdc3-4c47-b0d7-4ca1d62a700c/26-6a5278a638430.webp' /></p><p>ஜூன் மாதம் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பும் தற்போதைய நிலையைப் பேணுவதுடன், புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்காமல் இருக்க இணக்கம் தெரிவித்திருந்ததாகவும், தற்போதைய அமெரிக்க நடவடிக்கை அந்த உறுதிமொழிக்கு முரணானது என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்குப் பதிலடியாகவே புதிய தடைகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.</p><p> மேலும், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு ஈரானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரான் தொடர்புடைய இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், அதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நலன்கள் மற்றும் தளங்களை குறிவைத்து ஈரான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>இந்தச் சூழ்நிலையில், ஓமான் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தத்துடன் பதற்றத்தைத் தணிக்கும் இராஜதந்திர முயற்சிகளும் தொடர்கின்றன.</p>]]></content>
            <updated>2026-07-12T01:03:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூபாவில் மீண்டும் மின்கட்டமைப்பு முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cuba-suffers-another-power-outage-1783817762"></link>
            <id>https://canadamirror.com/article/cuba-suffers-another-power-outage-1783817762</id>
            <summary type="text">தீவு நாடான கியூபாவில் நிலவி வரும் மிக மோசமான எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக, அங்குள்ள தேசிய மின்கட்டமைப்பு மீண்டும் முழுமையாக முடங்கியுள்ளது.இதன் விளைவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவு நாடான கியூபாவில் நிலவி வரும் மிக மோசமான எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக, அங்குள்ள தேசிய மின்கட்டமைப்பு மீண்டும் முழுமையாக முடங்கியுள்ளது.</p><p></p><p>இதன் விளைவாக, கடந்த ஐந்து நாட்களில் இரண்டாவது முறையாக அந்த நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல மில்லியன் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a8e7495-f821-4432-ae68-dc071fb24453/26-6a52e6236d460.webp' /></p><p>தொடர்ந்து மோசமடைந்து வரும் இந்த மின்கட்டமைப்பு முடக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதாரமும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.</p><p>மின்கட்டமைப்பைச் சீரமைத்து, மின் விநியோகத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான தீவிர முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
எனினும், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புப் பராமரிப்புப் பணிகள் தொய்வடைந்துள்ளதால், மின்சாரத்தை முழுமையாக மீட்டெடுப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T00:56:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் புதிய அத்தியாயம் தொடங்கிய நோஸ்கோவா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/noskova-begins-new-chapter-first-grand-slam-title-1783812012"></link>
            <id>https://canadamirror.com/article/noskova-begins-new-chapter-first-grand-slam-title-1783812012</id>
            <summary type="text">லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், செக் குடியரசை சேர்ந்த லிண்டா நோஸ்கோவா வெற்றி பெற்று தனது முதலாவது கிரேண்ட்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், செக் குடியரசை சேர்ந்த லிண்டா நோஸ்கோவா வெற்றி பெற்று தனது முதலாவது கிரேண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
</p><p>
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், சக நாட்டு வீராங்கனையான கரோலினா முச்சோவாவை 6-2, 5-7, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நோஸ்கோவா வீழ்த்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feab6c34-19d9-45ba-9ef7-f0c513b1e63b/26-6a52cfaddc42d.webp' /></p><p>

போட்டியின் தொடக்கத்தில் அபாரமாக செயற்பட்ட நோஸ்கோவா, இரண்டாவது செட்டில் 5-2 என முன்னிலை பெற்றிருந்தபோது பல வெற்றி வாய்ப்புகளைத் தவறவிட்டார்.</p><p>

இதனைப் பயன்படுத்திக் கொண்ட முச்சோவா, இரண்டாவது செட்டைக் கைப்பற்றிப் போட்டியை விறுவிறுப்பாக்கினார்.
</p><p>
இருப்பினும், மூன்றாம் செட்டில் தனது பதற்றத்தைக் கட்டுப்படுத்திய 21 வயதான நோஸ்கோவா, மீண்டும் ஆதிக்கத்தைச் செலுத்தி வெற்றியைத் தனதாக்கிக்கொண்டார்.</p><p>

இதன்படி விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வெல்லும் மூன்றாவது செக் வீராங்கனை என்ற பெருமையை நோஸ்கோவா பெற்றுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-11T23:20:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாமில் படகு கவிழ்ந்து15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/15-indian-tourists-die-in-boat-capsize-in-vietnam-1783801566"></link>
            <id>https://canadamirror.com/article/15-indian-tourists-die-in-boat-capsize-in-vietnam-1783801566</id>
            <summary type="text">வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பு குவோக் (Phu Quoc) தீவுப் பகுதியில் நேற்று (11) படகு கவிழ்ந்ததில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பு குவோக் (Phu Quoc) தீவுப் பகுதியில் நேற்று (11) படகு கவிழ்ந்ததில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p>

36 பேருடன் சென்ற அந்த படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 3 பணியாளர்கள் மற்றும் ஒரு உதவியாளர் பயணம் செய்துள்ளனர்.
</p><p>
ஹோன் மே ருட் தீவில் இருந்து அன் தோய் துறைமுகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சுமார் 400 மீட்டர் தொலைவில் கடல் சீற்றம் காரணமாகப் படகு கவிழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a68e651b-946f-4b41-8c99-a95a6f14426a/26-6a52a6e0237c4.webp' /></p><p>

இந்த விபத்தில் 21 பேர் உயிர் பிழைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

விபத்து குறித்து வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவ ஹோ சி மின் நகரம் மற்றும் ஹனோயில் அவசர கால உதவி மையங்களை நிறுவியுள்ளது.</p><p>

தற்போது மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்து தொடர்பான கூடுதல் தகவல்களைத் தூதரகம் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-11T20:26:25+00:00</updated>
        </entry>
    </feed>
