<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-19T22:51:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Fifa உலகக் கோப்பை ; அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியனானது ஸ்பெயின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-1784499369"></link>
            <id>https://canadamirror.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-1784499369</id>
            <summary type="text">23-வது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>23-வது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது,</p><p>&nbsp;அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவும், முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01079a1d-0604-42e3-a3b7-92aa579fe180/26-6a5d4cab6e36d.webp' /></p><p> </p><p>4-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் அர்ஜென்டினாவும், 2-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் ஸ்பெயினும் களமிறங்கின.&nbsp;</p><p> போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d05b374a-051c-4e2a-b65f-a18de9e98018/26-6a5d54260a67c.webp' /></p><p>தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்றத் தவறின. இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.</p><p>

இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் (90+3) போது அர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால், அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.&nbsp; தொடர்ந்து ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றது.</p><p> கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். அதன் பிறகு அர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும், ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர்.</p><p>இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-19T22:34:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரத்தத்திற்கு ரத்தம் ; சவப்பெட்டியில் ட்ரம்ப் குடும்பம் ; பரபரப்பை கிளப்பிய ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-unveils-trump-family-coffin-display-1784498229"></link>
            <id>https://canadamirror.com/article/iran-unveils-trump-family-coffin-display-1784498229</id>
            <summary type="text">ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டி மேல் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது சர்சை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டி மேல் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், "ரத்தத்திற்கு ரத்தம்" என அடைமொழியிடப்பட்டு தலைநகர் தெஹ்ரானில் இந்த பலகை வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5c2be09-1929-4567-b143-875995e206d7/26-6a5d4836f0016.webp' /></p><p>


டெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட விளம்பர பலகையில், ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் அவர்களின் ஐந்து பிள்ளைகளான இவான்கா, டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், எரிக், டிஃப்பனி மற்றும் பாரோன் ஆகியோர் வெள்ளை மாளிகையின் பின்னணியில் சவப்பெட்டிகளின் மேல் இருப்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
</p><p>

சில நாட்களுக்கு முன்புதான், தெஹ்ரானின் ஏங்கெலாப் சதுக்கத்தில் மற்றொரு பிரம்மாண்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது.
</p><p>
அதில், ட்ரம்ப் ஒரு திறந்த கருப்பு சவப்பெட்டிக்குள் படுத்திருப்பது போலவும், அதற்கு மேலே பாரசீக மற்றும் ஆங்கில மொழிகளில் "நாங்கள் டிரம்பைக் கொல்வோம்" என்ற வார்த்தைகளும் எழுதப்பட்டிருந்தன.
</p><p>
அந்த சவப்பெட்டியின் மேல், "மினாப் குழந்தைகளின் நினைவாக" என்று எழுதப்பட்டிருந்தது.</p>]]></content>
            <updated>2026-07-19T21:57:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் ; ஒருவர் பலி; 16 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/midnight-drone-attack-sparks-tension-1784492693"></link>
            <id>https://canadamirror.com/article/midnight-drone-attack-sparks-tension-1784492693</id>
            <summary type="text">உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். 16 பேர் காயம் அடைந்தனர். இந்த சூழலில், ரஷ்யா மீது உக்ரைன் நேற்று முன்தினம் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். 16 பேர் காயம் அடைந்தனர். </p><p>இந்த சூழலில், ரஷ்யா மீது உக்ரைன் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடத்திய ட்ரோன்கள் தாக்குதல்களில் 7 பேர் பலியாகி உள்ளனர். 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae8e5e4a-09b2-40fc-8f40-41f85887ce97/26-6a5d3296e872b.webp' /></p><p> </p><p>ரஷியாவின் முக்கிய ஆயுத உள்கட்டமைப்புகள் மீது ட்ரோன்களை கொண்டு உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டது. எண்ணெய் நிறுவனம் ஒன்றும் தாக்குதலுக்கு இலக்கானது.</p><p>

நீண்டதூர இலக்குகளை தாக்கி அழிக்கும் ட்ரோன்கள் இந்த தாக்குதல்களில் ஈடுபட்டன. இந்த சூழலில், பதிலடியாக உக்ரைனின் கீவ் நகர் மீது நேற்று நள்ளிரவு, பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். 16 பேர் காயம் அடைந்தனர். இரவு 1.30 மணியளவில் தொடங்கி, அதிகாலை வரை பல மணிநேரம் நடந்த இந்த தாக்குதலின் வெடிச்சத்தம் தலைநகரம் முழுவதும் எதிரொலித்தது.
</p><p>
இதுபற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, உக்ரைனை இலக்காக கொண்டு நள்ளிரவில் 41 ஏவுகணைகள், 125 டிரோன்கள் தாக்கின. கீவ் நகரின் 5 மாவட்டங்களில் அதன் தாக்கம் உணரப்பட்டது. </p><p>குடியிருப்பு கட்டிடங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆலைகள், வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன என உக்ரைன் அவசரகால சேவை அமைப்பு தெரிவித்து உள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-19T20:25:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; 5 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/powerful-peru-quake-kills-5-people-1784487043"></link>
            <id>https://canadamirror.com/article/powerful-peru-quake-kills-5-people-1784487043</id>
            <summary type="text">பெருவின் ஆண்டிஸ் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவின் ஆண்டிஸ் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.5 ஆக பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ce0d927-ec57-4e7f-8a4a-dd3139b2a792/26-6a5d1c855b4af.webp' /></p><p> நிலநடுக்கத்தால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 300 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.</p><p>

நேற்று (சனிக்கிழமை) இரவு 9:24 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதன் மையப்புள்ளி ஹுவான்காயோ மாகாணத்தில் உள்ள சிகாயா நகருக்கு மேற்கே-தென்மேற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்று பெருவின் தேசிய குடிமை பாதுகாப்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>உள்ளூர் தேவாலயம் மற்றும் கன்னியர் மடம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன அல்லது கட்டமைப்பு சேதமடைந்தன.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T18:50:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் அரச பாதுகாப்பு நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spy-watchdog-do-more-to-avoid-canadian-1784471733"></link>
            <id>https://canadamirror.com/article/spy-watchdog-do-more-to-avoid-canadian-1784471733</id>
            <summary type="text">&amp;nbsp;வெளிநாடுகளுடன் தகவல்களைப் பகிரும் போது, அந்த தகவல்கள் சித்திரவதை அல்லது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்காத வகையில் கனடாவின் சில மத்திய அரச நிறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெளிநாடுகளுடன் தகவல்களைப் பகிரும் போது, அந்த தகவல்கள் சித்திரவதை அல்லது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்காத வகையில் கனடாவின் சில மத்திய அரச நிறுவனங்கள் மேலும் கவனமாக செயல்பட வேண்டும் என புதிய பாதுகாப்பு கண்காணிப்பு அறிக்கை எச்சரித்துள்ளது.
</p><p>தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை மறுஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், சர்ச்சைக்குரிய தகவல் பரிமாற்றங்களை கையாளும் சட்ட நடைமுறைகளை வலுப்படுத்த பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>வெளிநாட்டு அமைப்புகளால் ஏற்படும் தவறான நடத்தைகளில் பங்காளியாக இருப்பதைத் தவிர்க்கும் சட்டம் வெளிநாட்டு அமைப்புகளுடன் தகவல்களை பகிர்வதை அல்லது அவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை பயன்படுத்துவதை தடை செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c6c19e2-a857-4895-8a9b-0a7969699d3a/26-6a5ce0b7c4bda.webp' /></p><p> 
குறிப்பாக, அந்த நடவடிக்கை காரணமாக ஒருவர் வெளிநாட்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சித்திரவதை அல்லது மனிதாபிமானமற்ற நடத்தைக்கு உள்ளாகும் கணிசமான அபாயம் இருந்தால் அது அனுமதிக்கப்படாது.
</p><p>எனினும், அந்த அபாயங்களை மதிப்பீடு செய்து, அவற்றை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே தகவல் பகிர்வு அனுமதிக்கப்படலாம். இது அபாயத்தை குறைக்கும் நடைமுறை என அழைக்கப்படுகிறது.
</p><p>மேலும், சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனைகளை ஒழிப்பதற்கான சர்வதேச மனித உரிமை கடமைகளுக்கு ஏற்ப இந்த கடுமையான விதிமுறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
</p><p>வெளிநாட்டு தகவல் பகிர்வு தொடர்பான முடிவுகளில் இந்த சட்டத் தேவைகளை எவ்வாறு பரிசீலித்தனர் என்பதற்கான முழுமையான பதிவுகளை மத்திய அரச நிறுவனங்கள் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T18:40:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா காட்டுத்தீ புகையால் மொன்ரியல் பகுதியில் காற்றுத் தர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-wildfires-air-quality-warning-1784471113"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-wildfires-air-quality-warning-1784471113</id>
            <summary type="text">கனடாவின் காட்டுத்தீகளில் இருந்து பரவும் புகை காரணமாக, மொன்ரியல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற கனடா நிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் காட்டுத்தீகளில் இருந்து பரவும் புகை காரணமாக, மொன்ரியல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற கனடா நிறுவனம் காற்றுத் தர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
</p><p>காற்றில் புகையின் அளவு அதிகரிக்கும் போது, உடல்நல அபாயங்களும் அதிகரிக்கும். மக்கள் வெளியில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும். வெளிப்புற விளையாட்டுகள், நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க அல்லது குறைக்க பரிசீலிக்க வேண்டும் என கனடா வானிலை நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>
காட்டுத்தீ புகை காரணமாக பொதுமக்களுக்கு கண், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல், தலைவலி, லேசான இருமல் போன்ற சாதாரண அறிகுறிகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc0fa72d-27f3-4d75-9812-8767c7288821/26-6a5cde4ab3406.webp' /></p><p>
</p><p>அதேவேளை, சிலருக்கு மூச்சுத்திணறல், மார்பு வலி மற்றும் கடுமையான இருமல் போன்ற தீவிர அறிகுறிகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள், ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் அல்லது நீண்டகால நோய்களைக் கொண்டவர்கள், மேலும் வெளிப்புறங்களில் பணிபுரிபவர்கள் காட்டுத்தீ புகையால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என தெரிவித்துள்ளது.
</p><p>இவர்கள் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை குறைக்க அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்றும், உடல்நல அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>காட்டுத்தீ புகை காரணமாக கனடாவின் பல நகரங்களில் வானம் புகைமூட்டத்துடன் காணப்படுவதுடன், பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாக்க அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T18:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/international-students-say-post-grad-work-permit-1784470846"></link>
            <id>https://canadamirror.com/article/international-students-say-post-grad-work-permit-1784470846</id>
            <summary type="text">கனடாவில் கல்வி கற்ற ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள், தாங்கள் தகுதியானதாக நம்பி பயின்ற கல்வித் திட்டங்களை நிறைவு செய்த பின்னரும், பட்டப்படிப்புக்குப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் கல்வி கற்ற ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள், தாங்கள் தகுதியானதாக நம்பி பயின்ற கல்வித் திட்டங்களை நிறைவு செய்த பின்னரும், பட்டப்படிப்புக்குப் பிந்தைய வேலை அனுமதிப் பத்திரம் மறுக்கப்பட்டதாக தெரிவித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
</p><p>தாங்கள் அனைவரும் 2026 ஜூன் 24-ஆம் திகதிக்கு முன்பே விண்ணப்பங்களை முழுமையாகச் சமர்ப்பித்திருந்தனர். </p><p>
ஆனால் அதே நாளில் கனடிய குடிவரவு மற்றும் ஏதிலிகள் அலுவலகம் தனது இணையதள வழிகாட்டுதலை புதுப்பித்து, "Non-credit" கல்வித் திட்டங்களை முடித்தவர்களுக்கு பொதுவாக PGWP வழங்கப்படாது என்று தெளிவுபடுத்தியது.
</p><p>இதனால், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் மதிப்பீடு செய்வது நியாயமற்றது என்று மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.
</p><p>இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் Portage Students Union அமைப்பு, நாடு முழுவதும் சுமார் 1,500 பட்டதாரிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. </p><p>
அவர்கள் அரசிடம் அவசர மறுபரிசீலனை நடத்தவும், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் திறந்து நியாயமான முடிவெடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>கால்கரியைச் சேர்ந்த குடிவரவு சட்டத்தரணி லோரா-அன் கோல்டிங், தனது அலுவலகத்திலேயே 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் வழக்குகள் தற்போது கையாளப்பட்டு வருவதாக தெரிவித்தார். </p><p>
மாணவர்கள் மறுபரிசீலனை கோருவதோடு, நீதிமன்றத்தில் நீதித்துறை மீளாய்வு கோரியும் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.</p><p>
இந்நிலையில், பட்டப்படிப்புக்குப் பிந்தைய வேலை அனுமதிப் பத்திரம் வழங்கும் தகுதி விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட இணையதள புதுப்பிப்பு ஏற்கனவே இருந்த விதிமுறைகளை தெளிவுபடுத்தும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் குடிவரவு மற்றும் ஏதிலிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>எனினும், இந்த விளக்கம் மாணவர்களின் அதிருப்தியை தணிக்கவில்லை. தங்களது எதிர்காலத்தை கனடாவை நம்பி திட்டமிட்ட ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள், நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அரசின் முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T17:30:08+00:00</updated>
        </entry>
    </feed>
