<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-15T17:49:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் வீட்டிற்குள் நுழைந்து உணவு தேடிய கரடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/japan-family-finds-bear-in-kitchen-calls-police-1784133555"></link>
            <id>https://canadamirror.com/article/japan-family-finds-bear-in-kitchen-calls-police-1784133555</id>
            <summary type="text">&amp;nbsp;ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் சமையலறைக்குள் கரடி ஒன்று நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்குத் தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் சமையலறைக்குள் கரடி ஒன்று நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். </p><p>
ஜப்பானில் அண்மைக்காலமாக கரடிகளின் தாக்குதலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>
ஜப்பானின் இவதே மாகாணத்திலுள்ள ஷிசுகுய்ஷி நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்த அசாதாரண சம்பவம் நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d75970f5-64bf-4d47-adea-fb2af4e66155/26-6a57b7b50ffec.webp' /></p><p> 
வீட்டிற்குள் நுழைந்த கரடி ஒன்று, அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியை எளிதாகத் திறந்து, அதிலிருந்த உணவுப் பொருட்களைத் தரையில் சிதறடித்துள்ளது.
</p><p> பின்னர், சமையலறைக்கு அருகில் இருந்த கதவு வழியாக வெளியேறிய அந்தக் கரடி, அங்கிருந்த குப்பைத் தொட்டியிலும் உணவைத் தேடிவிட்டுச் சென்றிருப்பதை அதன் கால்தடங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. </p><p>
ஷிசுகுய்ஷி நகரில் கடந்த ஜூலை 5 ஆம் திகதிக்குப் பின்னர், வீடுகளுக்குள் கரடிகள் புகுந்ததாகப் பதிவாகும் 5-வது சம்பவம் இதுவாகும். 
குளிர்கால உறக்கத்திலிருந்து வெளிவந்த பிறகு, கரடிகள் நகரங்களுக்குள் ஊடுருவுவது கணிசமாக அதிகரித்துள்ளது.</p><p>
ஜப்பானில் அண்மைக்காலமாக கரடித் தாக்குதல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
ஜப்பானிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதியிலிருந்து இதுவரை டோஹோகு பிராந்தியத்தில் மட்டும் கரடித் தாக்குதலால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T17:31:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மின்னணு சாதன மோசடியில் ஈடுபட்டவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-make-arrest-in-milton-fake-agent-scam-1784132699"></link>
            <id>https://canadamirror.com/article/police-make-arrest-in-milton-fake-agent-scam-1784132699</id>
            <summary type="text">சாதனங்கள் மீட்பு
கனடாவில் மோசடியில் ஈடுபட்டு தொலைதொடர்பு நிறுவனங்களின் முகவர்கள் போல நடித்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி போன்கள் மற்றும் மின்னணு சாதனங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாதனங்கள் மீட்பு
கனடாவில் மோசடியில் ஈடுபட்டு தொலைதொடர்பு நிறுவனங்களின் முகவர்கள் போல நடித்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களைப் பறித்து வந்த மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவரை ஹால்டன் பிராந்திய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். </p><p>
அவரிடமிருந்து சுமார் 36,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள 22 மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. </p><p>
மில்டன் பகுதியைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட இந்த மோசடி கும்பல், கனடாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான Rogers, Bell, அல்லது Telus ஆகியவற்றின் பிரதிநிதிகள் போல வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec67bc3-62ec-4217-94ce-994f35aec614/26-6a57b45dc1966.webp' /></p><p> </p><p>
வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், அவர்களுக்குப் புதிய ஐபோன் அல்லது மின்னணு சாதனங்கள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கப் போவதாகக் கூறி நம்ப வைத்துள்ளனர்.
</p><p>வாடிக்கையாளர்களின் தற்போதைய கணக்கைப் (account) பயன்படுத்தி, புதிய போன் அல்லது சாதனங்களை வாங்குமாறு அவர்களை மூளைச்சலவை செய்து ஆர்டர் செய்ய வைக்கின்றனர்.</p><p>
வாடிக்கையாளர்களுக்கு அந்தப் புதிய சாதனம் டெலிவரி செய்யப்பட்டவுடன், மீண்டும் அவர்களைத் தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், "ஆர்டரில் தவறு நடந்துவிட்டது, எனவே அந்தப் பெட்டியைப் பிரிக்காமல் எங்களது அஞ்சல் பெட்டிக்கு (PO Box) திருப்பி அனுப்புங்கள்" என்று கூறுகின்றனர்.
</p><p>அஞ்சல் பெட்டிக்கு வரும் அந்தப் புதிய சாதனங்களைச் சேகரிக்கும் மோசடி கும்பல், அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பி சட்டவிரோதமாக விற்றுப் பெரும் லாபம் சம்பாதிக்கிறது.
எனவே இந்த விடயம் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T17:31:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: இருவர் பலி, மூவர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crash-closes-eb-express-lanes-of-hwy-401-1784132157"></link>
            <id>https://canadamirror.com/article/crash-closes-eb-express-lanes-of-hwy-401-1784132157</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், மிசிசாகா பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற கொடூர வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாண க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், மிசிசாகா பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற கொடூர வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாண காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>இன்று காலை 9 மணிக்குப் பிறகு, டிக்ஸி வீதிக்கு அருகிலுள்ள கிழக்கு நோக்கிய விரைவுப் பாதைகளில்இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>
பின்னாலிருந்து வந்த வாகனம் ஒன்று மோதியதில், முன்னால் சென்ற வாகனத்தில் பயணித்த கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் மற்றும் 53 வயது பெண் ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86eec105-cfc3-42f1-96e8-7d55ba3ba2b3/26-6a57b23f45462.webp' /></p><p>
</p><p>மேலும், இந்த விபத்தில் காயமடைந்த மற்ற மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.</p><p>
விபத்தைத் தொடர்ந்து மிசிசாகா பகுதியில் உள்ள விரைவுப் பாதைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. </p><p>இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மிசிசாகா வீதிக்கும் டிக்ஸி வீதிக்கும் இடைப்பட்ட விரைவுப் பாதைகளுக்குள் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
</p><p>ஒரேயொரு கலெக்டர் பாதை மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளதால், வாகனங்கள் மிக மிக மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.</p><p>
மாலை 3 மணி வரை இந்த விரைவுப் பாதைகள் மூடப்பட்டிருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த விபத்து நடந்த பகுதியைத் தவிர்த்து, மாற்றுப் பாதைகளாக டெர்ரி வீதி, எக்லிண்டன் அவென்யூ அல்லது நெடுஞ்சாலை 407 ஆகியவற்றைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T17:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் மிக மோசமான காற்றுத் தரத்தைக் கொண்ட நகரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/torontos-air-quality-ranked-worst-in-the-world-1784131635"></link>
            <id>https://canadamirror.com/article/torontos-air-quality-ranked-worst-in-the-world-1784131635</id>
            <summary type="text">கனடாவின் வடமேற்கு ஒன்டாரியோ பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயின் அடர்ந்த புகை மூட்டம் நகருக்குள் பரவியதை அடுத்து, டொரண்டோ நகரின் வானம் ஆரஞ்சு நிறமாக மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் வடமேற்கு ஒன்டாரியோ பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயின் அடர்ந்த புகை மூட்டம் நகருக்குள் பரவியதை அடுத்து, டொரண்டோ நகரின் வானம் ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளது. </p><p>
இதனால், புதன்கிழமை உலகிலேயே மிக மோசமான காற்றுத் தரத்தைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் டொரண்டோ முதலிடத்தைப் பிடித்துள்ளது. </p><p>
வடமேற்கு ஒன்டாரியோவின் காட்டுத்தீ புகை தெற்கு நோக்கி நகர்வதால், டொரண்டோ நகருக்கு "ஆரஞ்சு எச்சரிக்கை" விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85e9d657-1f7d-4b03-bd07-cf534d76aa2a/26-6a57b03549063.webp' /></p><p> </p><p>
கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் ஒன்டாரியோ மாகாணம் முழுமைக்கும் புதிய வண்ணக் குறியீட்டு முறையிலான வானிலை எச்சரிக்கை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>
பாதிப்பு அல்லது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான வானிலை. 
கடுமையான சேதங்கள் அல்லது கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மிக மோசமான வானிலை. </p><p>
சில பகுதிகளில் இந்த மோசமான காற்றின் தரம் வியாழக்கிழமை வரையிலும் நீடிக்கலாம். புகை மூட்டம் அதிகரிக்கும் போது உடல்நல அபாயங்களும் அதிகரிக்கும் என்பதால், மக்கள் வெளியில் செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வெளிப்புற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்வுகளைத் தவிர்க்கவோ அல்லது ஒத்திவைக்கவோ பரிசீலிக்கவும் என சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p> 
உலகளாவிய காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் IQAir அமைப்பின் தரவுகளின்படி, புதன்கிழமை காலை 8 மணியளவில் டொரண்டோவின் காற்றின் தரம் உலகிலேயே மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
</p><p>புகை மூட்டம் காரணமாகக் கண், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல், தலைவலி அல்லது லேசான இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p> 
வெப்ப அலை மற்றும் காற்று மாசடைவு ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் சேர்ந்து கொண்டு டொரண்டோ மக்களைப் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T17:29:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தாக்குதலில் ஈரானில் 30 பேர் உரியிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/30-people-killed-in-us-attack-in-iran-1784121784"></link>
            <id>https://canadamirror.com/article/30-people-killed-in-us-attack-in-iran-1784121784</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் நடந்த அமெரிக்கத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த சில நாட்களில் நடந்த அமெரிக்கத் தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமா மொஹஜெரானி தெரிவித்தார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80dba9aa-3e2b-4adf-bc3a-747b3fb6a651/26-6a5789b9ef7af.webp' /></p><p>
</p><p>
தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் இன்று புதன்கிழமை&nbsp; &nbsp;தங்களது ஏழு வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
நாட்டின் தென்கிழக்கில் உள்ள ஈரான்ஷாஹர் நகருக்கு அருகிலுள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T13:21:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/collingwood-opp-beware-of-new-cell-phone-fraud-1784101731"></link>
            <id>https://canadamirror.com/article/collingwood-opp-beware-of-new-cell-phone-fraud-1784101731</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் காலிங்வுட் மாகாண காவல்துறை, அண்மையில் புதிய கைப்பேசிகளை கொள்வனுவு செய்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய மோசடி குறித்து மக்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் காலிங்வுட் மாகாண காவல்துறை, அண்மையில் புதிய கைப்பேசிகளை கொள்வனுவு செய்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய மோசடி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>
தங்கள் புதிய கைப்பேசிகளை வாங்கிய உடனேயே, தங்களுக்கு மோசடி அழைப்புகள் வருவதாகப் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள், தாங்கள் மொபைல் சேவை வழங்கும் நிறுவனம் சார்பாகப் பேசுவதாகக் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e21e15a-f758-4dc9-bd23-2cdcb5b671db/26-6a573df2d7dea.webp' /></p><p>
</p><p> பின்னர், கைப்பேசிகளின் முழுமையான அமைப்புகளை முடிப்பதற்காக, வாங்கிய சாதனத்தைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறுகின்றனர்.
</p><p>மற்றொரு சில சம்பவங்களில், மொபைல் போனுக்கு தள்ளுபடிகள் அல்லது சலுகைகள் வழங்குவதாகக் கூறி கைப்பேசிகளைத் திருப்பி அனுப்பினால் சலுகை விலையில் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.</p><p>
காவல்துறையின் கூற்றுப்படி, இந்த ஏமாற்று வேலைகளை உண்மையென்று நம்பும் மக்கள், தங்கள் கைப்பேசிகளை கூரியர் மூலமாகவோ அல்லது நேரில் வரும் ஒரு நபரிடமோ ஒப்படைத்து விடுகின்றனர். </p><p>ஆனால், அவ்வாறு ஒப்படைக்கப்படும் போன்கள் மீண்டும் ஒருபோதும் திருப்பித் தரப்படுவதில்லை.
சமீபத்தில் வாங்கப்பட்ட மின்னணு சாதனங்கள் (Electronics) தொடர்பாக வரும் தேவையற்ற அழைப்புகள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அல்லது கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>யாராவது உங்களைத் தொடர்பு கொண்டு உங்கள் மொபைல் சேவை நிறுவனம் சார்பாகப் பேசுவதாகக் கூறினால், அதை அப்படியே நம்ப வேண்டாம். உங்கள் மொபைல் பில்லில் உள்ள எண் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி, நீங்களாகவே நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அந்த கோரிக்கையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு காவல்துறை பரிந்துரைக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T13:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்துப் பாலங்களையும் தகர்ப்போம் ; ​​நான் போதும் என சொல்லும் வரை தாக்குதல் தொடரும்; ஈரானை மிரட்டும் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/we-will-destroy-all-bridges-trump-threatens-iran-1784121039"></link>
            <id>https://canadamirror.com/article/we-will-destroy-all-bridges-trump-threatens-iran-1784121039</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈரானிய பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
தெஹ்ரானுடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈரானிய பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
</p><p>தெஹ்ரானுடன் வாஷிங்டன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துமாறு ஈரானை வலியுறுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்தார். </p><p> டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 

உடன்பாடு எட்டப்படாவிட்டால் அமெரிக்க இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d21642b-c059-40fc-9f71-76390ff39500/26-6a5786d0a717f.webp' /></p><h2>நான் போதும் என சொல்லும் வரை தாக்குதல் தொடரும்</h2><p> </p><p>மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல்களை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவர் கூறினார்.
</p><p>
அடுத்த வாரம் அவர்களுக்கு நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது ஏனென்றால் அதற்கு அடுத்த வாரம் மின் உற்பத்தி நிலையங்கள் வரும். அதற்கு அடுத்த வாரம் பாலங்கள் வரும் என்று டிரம்ப் கூறினார்.
</p><p>
அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், நாங்கள் அவர்களின் அனைத்து மின் நிலையங்களையும் செயலிழக்கச் செய்வோம். அவர்களின் அனைத்துப் பாலங்களையும் தகர்ப்போம் என்று அவர் மேலும் கூறினார். </p><p> 

 அமெரிக்கத் தாக்குதல்கள் எவ்வளவு காலம் தொடரும் என்று கேட்கப்பட்டபோது, ​​நான் போதும் என்று சொல்லும் வரை அவை தொடரும் என்று டிரம்ப் பதிலளித்துள்ளமை உலகில் மீண்டும் போர் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T13:09:08+00:00</updated>
        </entry>
    </feed>
