<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-14T21:32:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து ; பலி எண்ணிக்கை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fire-breaks-out-at-thailand-nightclub-1784059974"></link>
            <id>https://canadamirror.com/article/fire-breaks-out-at-thailand-nightclub-1784059974</id>
            <summary type="text">தாய்லாந்து நாட்டின் பாங்காக் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகும். பாங்காக்கின் சடுசக் பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்து நாட்டின் பாங்காக் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகும். பாங்காக்கின் சடுசக் பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
</p><p>
இந்த தீ விபத்தில் கேளிக்கை விடுதிக்குள் இருந்த 50க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7c5c475-0953-41b3-b47c-c19ab15b7e08/26-6a569847d8436.webp' /></p><p> </p><p>ஆனால் இந்த தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.</p><p>இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாங்காக் கேளிக்கை விடுதி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. </p><p>சிகிச்சை பெற்றுவருபவர்களில் மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
</p><p>
கேளிக்கை விடுதியில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-14T20:12:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை குறித்து முக்கிய திட்டத்தைக் கைவிட்ட ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-drops-key-plan-on-hormuz-strait-1784047068"></link>
            <id>https://canadamirror.com/article/trump-drops-key-plan-on-hormuz-strait-1784047068</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20 சதவீதக் கட்டணத் திட்டத்தை அமெரிக்கா கைவிடுவதாக அமெரிக்க ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20 சதவீதக் கட்டணத் திட்டத்தை அமெரிக்கா கைவிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

அதற்குப் பதிலாக, வளைகுடா நட்பு நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61f4e6c0-88f5-45cd-bd09-ca21d43449e8/26-6a5665de1fc41.webp' /></p><p style="text-align: justify; ">

 

முக்கிய உலகளாவிய எரிசக்திப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான அமெரிக்காவின் செலவினங்களை ஈடுசெய்ய, 20% கட்டணம் விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார்.</p><p style="text-align: justify; "> 

 

சர்வதேச அளவில் இந்த அறிவிப்பு பெரும் விவாதங்களைக் கிளப்பிய நிலையில், ஒரே நாளில் அவர் தனது முடிவை மாற்றியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது:

 

"மத்திய கிழக்கு நாட்டுத் தலைவர்களுடன் நடத்தப்பட்ட மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், 20% அமெரிக்க ஈடுசெய்யும் கட்டணத் திட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளேன்.</p><p style="text-align: justify; "> அதற்குப் பதிலாக, பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் மேற்கொள்ளவுள்ள பிரம்மாண்ட வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முதலீடுகள் மிகவும் பிரம்மாண்டமானதாகவும், அவர்களது எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாகவும் அமையும்."</p>]]></content>
            <updated>2026-07-14T20:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்ஜியத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/several-found-dead-in-lift-shaft-1784050445"></link>
            <id>https://canadamirror.com/article/several-found-dead-in-lift-shaft-1784050445</id>
            <summary type="text">பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரின் மையப்பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு பிரம்மாண்ட வானளாவிய கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரின் மையப்பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு பிரம்மாண்ட வானளாவிய கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கிப் பலர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>கட்டிடத்தில் ஏற்பட்ட தீயைத் தீயணைப்பு வீரர்கள் விரைவாக அணைத்த போதிலும், புகை மற்றும் தீ கட்டிடத்தின் மின் தூக்கி வழிகளில் (Lift shafts) வேகமாகப் பரவியுள்ளது. </p><p>
இதனால் இரண்டு மின் தூக்கிகள் (Lifts) நடுவழியிலேயே சிக்கிக் கொண்டன. தீயணைப்புத் துறையினர் ஒரு மின் தூக்கியின் கதவை உடைத்துப் பார்த்தபோது, அதனுள் பலர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b9574cd-4d00-42c3-9d1a-36681e4d7d80/26-6a56730eeb5a4.webp' /></p><p>
</p><p>மின் தூக்கியின் உள்ளே பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன, ஆனால் சரியாக எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று இப்போது கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>விபத்துக்குப் பின் காணாமல் போனதாகக் கூறப்படும் 6 நபர்களின் உடல்களாக இவை இருக்கலாம். ஆனால், மற்றொரு மின் தூக்கியிலோ அல்லது கட்டிடத்தின் வேறு பகுதியிலோ மேலும் சிலர் சிக்கியிருக்கவும் வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
கட்டிடம் முழுவதும் இடிபாடுகள் நிறைந்துள்ளதால் மீட்புப் பணி மிகவும் சவாலாக உள்ளது. உடல்களை மீட்க இன்னும் பல மணிநேரம் ஆகும்," என தெரிவித்துள்ளனர்.
</p><p>இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>
மேலும், மீட்புப் பணியின் போது அதிக வெப்பம் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஒரு தீயணைப்பு வீரருக்கும் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T19:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாரி - கார் மோதி ஒருவர் பரிதாப பலி, இருவர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-dead-two-injured-in-brockton-area-crash-1784049902"></link>
            <id>https://canadamirror.com/article/one-dead-two-injured-in-brockton-area-crash-1784049902</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் சவுத் புரூஸ் பகுதியின், பிராக்டன் நகருக்கு வடக்கே கார் மற்றும் வர்த்தக லாரி ஆகியவை மோதி ஏற்பட்ட ஒரு கொடூர விபத்து குறித்து பொலிஸார் தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் சவுத் புரூஸ் பகுதியின், பிராக்டன் நகருக்கு வடக்கே கார் மற்றும் வர்த்தக லாரி ஆகியவை மோதி ஏற்பட்ட ஒரு கொடூர விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>
'சைடுரோடு 10 சவுத்' மற்றும் 'கண்சேஷன் 4 ஈஸ்ட் பிரான்ட்' சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அதிவேகமாக வந்த பயணிகள் காரும், பெரிய வர்த்தக லாரியும் இந்தச் சந்திப்பில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வாக்கர்டன் (Walkerton) பகுதியைச் சேர்ந்த 61 வயது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகப் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45cf2255-3719-4fcc-b4f7-32b426b409c6/26-6a5670efea4b9.webp' /></p><p>
</p><p>மேலும், இந்த விபத்தில் லாரி மற்றும் காரின் ஓட்டுநர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். 
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். </p><p>
விபத்துக்கான சரியான காரணம் குறித்துப் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T19:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குழந்தையுடன் காரைத் திருடிய நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/suv-stolen-with-small-child-asleep-in-the-backseat-1784049552"></link>
            <id>https://canadamirror.com/article/suv-stolen-with-small-child-asleep-in-the-backseat-1784049552</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள குவெல்ஃப் நகரில், நான்கு வயதுக் குழந்தை தூங்கிக்கொண்டிருந்த சொகுசு காரை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள குவெல்ஃப் நகரில், நான்கு வயதுக் குழந்தை தூங்கிக்கொண்டிருந்த சொகுசு காரை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, அந்த குழந்தை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
</p><p>திங்கட்கிழமை மாலை, குவெல்ஃப் நகரின் 'வில்லோ ரோடு மற்றும் வெஸ்ட்வுட் ரோடு' சந்திப்பில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வெளியே இந்த சொகுசு கார் நிறுத்தப்பட்டிருந்தது.
</p><p>காரின் பின் இருக்கையில் நான்கு வயதுக் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.
மாலை 4:20 மணியளவில் காரை காணாததை உணர்ந்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், உடனடியாக அவசர உதவி எண்ணான 911-க்கு அழைத்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb05da97-09c0-439a-8dea-1bd0394b0f68/26-6a566f9204614.webp' /></p><p>
</p><p>வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் இருந்து பொருட்கள் சிலவற்றைத் திருடிக்கொண்டு ஒரு நபர் வெளியே ஓடிவந்துள்ளார். அவரை அங்கிருந்த ஊழியர் தடுக்க முயன்றபோது, அந்த நபர் அநாகரிகமாக நடந்துகொண்டதுடன், அங்கிருந்த சொகுசு காரில் ஏறி வேகமாகத் தப்பியோடியுள்ளார்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>கார் திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்ட 16 நிமிடங்களிலேயே, அந்த வாகனம் அருகில் உள்ள ஒரு தெருவில் பொலிஸாரினால் கண்டறியப்பட்டது. </p><p>
கார் மீட்கப்பட்டபோது, உள்ளே இருந்த குழந்தை எதையும் அறியாமல் இன்னும் தூங்கிக் கொண்டே இருந்தது. குழந்தைக்கு எந்தவிதமான உடல்நலப் பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>காரைத் திருடிச் சென்ற குவெல்ஃப் நகரைச் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் உடனடியாகக் கைது செய்து வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். </p><p>
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போதைய வெப்ப அலை (Heat wave) வீசும் சூழலில் குழந்தைகளைக் காரில் தனியாக விட்டுச் செல்வதிலுள்ள ஆபத்து குறித்துப் பொதுமக்களுக்குப் பொலிஸார் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>எந்தவொரு சூழ்நிலையிலும் குழந்தைகளையோ அல்லது வளர்ப்புப் பிராணிகளையோ மிகக் குறைந்த நேரத்திற்குக்கூடக் காரில் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T18:00:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எட்மண்டனில் தீ விபத்து: ஒருவர் பலி, பலர் படுகாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fire-tears-through-north-edmonton-apartment-1784049001"></link>
            <id>https://canadamirror.com/article/fire-tears-through-north-edmonton-apartment-1784049001</id>
            <summary type="text">கனடாவின் வடக்கு எட்மண்டன் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 மேலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் வடக்கு எட்மண்டன் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>
 மேலும், குடியிருப்பில் இருந்த சிலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>132 அவென்யூ மற்றும் 82 ஸ்ட்ரீட் சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று, சாலையை விட்டு விலகி அங்குள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் மீது பலமாக மோதியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a9d7239-dd0c-46a0-83d1-3cc7561e7d46/26-6a566d6b6336c.webp' /></p><p> 
இந்த மோதலின் போது, கட்டிடத்தின் வெளிப்புறத்தில் இருந்த எரிவாயு குழாய் உடைந்ததால், திடீரெனப் பயங்கர வெடிப்புச் சத்தத்துடன் தீப்பிடித்தது.</p><p> 
வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளைக் கொண்ட அந்த மூன்று அடுக்குக் கட்டிடத்திலிருந்து பலரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். </p><p>எனினும், தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடினர். 
தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்ததால், கட்டிடத்தில் வசித்த சில குடியிருப்பாளர்களைத் தொடர்பு கொள்ளவோ, கண்டறியவோ முடியவில்லை என எட்மண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>இந்த விபத்தில் கட்டிடத்தில் வசித்து வந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 
குடியிருப்பில் இருந்த 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>
வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதற்கான காரணம் என்ன என்பது குறித்துப் போக்குவரத்துப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>
இந்த அவசர கால மீட்புப் பணிகள் காரணமாக, 82 ஸ்ட்ரீட்டில் உள்ள 131 மற்றும் 133 அவென்யூக்களுக்கு இடைப்பட்ட சாலைப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T17:30:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மருந்தாளரின் தகாத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/alberta-pharmacists-permit-cancelled-1784048648"></link>
            <id>https://canadamirror.com/article/alberta-pharmacists-permit-cancelled-1784048648</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள பாசானோ நகரில், நோயாளி மற்றும் ஊழியர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருந்தாளுநர் ஒருவரின் உரிமத்தை ஆல்பர்ட்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள பாசானோ நகரில், நோயாளி மற்றும் ஊழியர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருந்தாளுநர் ஒருவரின் உரிமத்தை ஆல்பர்ட்டா கல்லூரி ஆஃப் பார்மசி நிரந்தரமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. </p><p>
பாசானோ நகரில் மருந்தகம் நடத்தி வந்த அன்கித் பாரிக் என்பவர், அங்கு பணிபுரிந்த மற்றும் மருந்தகத்திற்கு வந்த நோயாளிகளான பெண்களிடம் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தவறான பாலியல் நடத்தைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.</p><p> 
இதுமட்டுமின்றி, மருந்தகம் திறந்திருந்த நேரத்திலும், தான் பணியில் இருந்த பொறுப்பான நேரங்களிலும் பாரிக் மருந்தக வளாகத்திலேயே தொடர்ந்து மது அருந்தியதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9faa5dca-5f09-453a-b4d1-745d072f8aa8/26-6a566c0a4112b.webp' /></p><p> </p><p>
இந்த விவகாரத்தில் பாரிக்கின் உரிமத்தை ரத்து செய்ய விசாரணை தீர்ப்பாயம் 2024-லேயே முடிவெடுத்தது. 
இந்த முடிவை எதிர்த்து பாரிக் மேல்முறையீடு செய்த நிலையில், மேல்முறையீட்டு குழு அதனைத் தள்ளுபடி செய்து, அவராலேயே ஏற்பட்ட மேல்முறையீட்டுச் செலவுகளையும் அவரே ஏற்குமாறு உத்தரவிட்டது.
</p><p>இதனைத் தொடர்ந்து, பாரிக் ஆல்பர்ட்டா மேல்முறையீட்டு நீதிமன்றத்தை (Alberta Court of Appeal) நாடினார். </p><p>ஆனால், கடந்த ஜூன் 23 அன்று நீதிமன்றமும் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து, அவர் செலுத்த வேண்டிய நீதிமன்றச் செலவை மட்டும் சற்றே குறைத்து உத்தரவிட்டது. </p><p>
இந்த உத்தரவின் மூலம் அன்கித் பாரிக் இனி மருந்தாளுநராகப் பணியாற்ற முடியாது. மேலும், அவர் தனது உரிமத்தை மீண்டும் கோரி விண்ணப்பிக்கவும் தகுதி அற்றவர் ஆக்கப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T17:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கொடூரத் தீ விபத்து: 20,000 பன்றிகள் கருகி உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/20000-hogs-killed-in-massive-norfolk-1784047617"></link>
            <id>https://canadamirror.com/article/20000-hogs-killed-in-massive-norfolk-1784047617</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள நார்ஃபோக் கவுண்டி பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய பண்ணைத் தீ விபத்தில், சுமார் 20,000 பன்றிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள நார்ஃபோக் கவுண்டி பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய பண்ணைத் தீ விபத்தில், சுமார் 20,000 பன்றிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>சிம்கோ நகருக்கு வெளியே உள்ள 'ஹைவே 3' பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பெரிய பண்ணையில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது.</p><p> 
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் அவசரக் கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18847f9b-b9b9-4cf2-9f32-e1ccc8542cf5/26-6a5668030545e.webp' /></p><p> </p><p>
பண்ணைக் கட்டிடம் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்ததால், அதனை அணைக்கப் பெருமளவிலான தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டனர். </p><p>இத்தீயணைப்புப் பணியில்: 
8 வெவ்வேறு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 40 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
</p><p>தீயை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வர 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டன. </p><p>
தீயின் வீரியத்தால் பண்ணைக் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக மனிதர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>இந்தத் விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.</p><p> 
இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவத்தில் சதித்திட்டம் அல்லது சந்தேகத்திற்குரிய பின்னணி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T16:58:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/90-percent-mojtaba-khomeini-will-not-survive-1784016137"></link>
            <id>https://canadamirror.com/article/90-percent-mojtaba-khomeini-will-not-survive-1784016137</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானின் ஆன்மீக தலைவர் மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானின் ஆன்மீக தலைவர் மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>


அமெரிக்கா - ஈரான் இடையே உச்சகட்டப் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், “ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்கா இனி பாதுகாப்பு அளிக்கும். ஆனால், அச்செலவினங்களுக்கு ஈடாக அவ்வழியாகக் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்” என்று ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00b633ed-6f65-4509-af10-6e12bb218a71/26-6a55ed10b40ea.webp' /></p><h2>&nbsp;இறுதிச் சடங்கு நிகழ்வில் கூட கலந்துகொள்ளவில்லை&nbsp;</h2><p>


இது தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பேசிய ட்ரம்ப் தெரிவித்ததாவது:



“ஈரானின் கடற்படை, விமானப்படை என அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்களின் வான்வழித் தடுப்பு அமைப்புகள் செயலிழந்துவிட்டன. </p><p>அவர்களின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். கொமெய்னி இறந்துவிட்டார். மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைக்க 90 சதவிகிதம் வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.
</p><p>


ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி, அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் மோஜ்தபா கொமெய்னி, புதிய ஆன்மீக தலைவராக அறிவிக்கப்பட்டார்.</p><p>



இந்நிலையில், அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் ஒன்றில் மோஜ்தபா கொமெய்னியும் பலத்த காயமடைந்ததாகவும், தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.



இதன்காரணமாக, ஈரான் மற்றும் இராக்கில் கடந்த வாரம் நடைபெற்ற அயதுல்லா அலி கொமெய்னியின் இறுதிச் சடங்கு நிகழ்வில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை.
</p><p>


இந்த சூழலில், மோஜ்தபா கொமெய்னி 90 சதவிகிதம் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T16:29:44+00:00</updated>
        </entry>
    </feed>
