<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-15T02:01:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் போர்க்களமாகும் ஹோர்முஸ் நீரிணை ; ஈரான் மீது புதிதாக தாக்குதல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fresh-iran-strikes-as-naval-blockade-returns-1784076403"></link>
            <id>https://canadamirror.com/article/fresh-iran-strikes-as-naval-blockade-returns-1784076403</id>
            <summary type="text">கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.</p><p>

ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு, அமெரிக்காவின் கடற்படை முடக்கத்தை மீண்டும் அமுல்படுத்துவதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஜூலை 14 மாலை 4 மணி முதல் (அமெரிக்க நேரம்) அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5594c689-dd06-4108-98c9-39525bde141e/26-6a56d874e055c.webp' /></p><p>
இதற்காக மத்திய கிழக்குக் கடல் பிராந்தியத்தில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல்களும், நூற்றுக்கணக்கான போர் விமானங்களும் களமிறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.</p><p>இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல் திறன்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கில், அமெரிக்கா ஈரானின் தென்பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்கிறது.</p><p>
அமெரிக்காவின் தாக்குதல்கள் காரணமாக, ஈரானின் தெற்குத் துறைமுக நகரங்களான பண்டர் அப்பாஸ் (Bandar Abbas), சிரிக் (Sirik) மற்றும் கேஷ்ம் (Qeshm) தீவு ஆகிய பகுதிகளில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
முன்னதாக, அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, குவைட் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. </p><p>"அமெரிக்காவின் இத்தகைய விரோதப் போக்குகள் தொடருமானால், இந்த பகுதியிலிருந்து ஒரு துளி எண்ணெய் அல்லது எரிவாயு கூட ஏற்றுமதி செய்யப்படாது என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை கடுமையாக எச்சரித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த நீரிணை திறந்திருக்கும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். </p><p>முன்னதாக, கப்பல்களிடம் 20% வரி வசூலிக்கும் திட்டத்தை முன்வைத்த அவர், தற்போது அதற்குப் பதிலாக வளைகுடா நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த மோதல்கள் காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மீண்டும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-15T01:31:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதிகளுடனான மோதலில் ராணுவ வீரர்கள் 30 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/30-soldiers-killed-in-clash-with-terrorists-1784077367"></link>
            <id>https://canadamirror.com/article/30-soldiers-killed-in-clash-with-terrorists-1784077367</id>
            <summary type="text">மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.</p><p>

மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் அதிபராக ராணுவ ஜெனரல் அசிமி கொமிடா செயல்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e93f9cfb-d393-4cce-9a8a-96ed61fbf24e/26-6a56dc395d73b.webp' /></p><p> </p><p>இதனிடையே, மாலி அரசுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, ராணுவத்திற்கும் , கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது.</p><p>

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் பமாகோ உள்பட பல்வேறு நகரங்கள் மீது அல்கொய்தா உள்பட பயங்கரவாதிகளுடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.</p><p>இதனை தொடர்ந்து கடந்த 4ம் தேதி வடக்கு நகரங்களான அக்லிஹல், அனிபிஸ், கொவா, ஹனிரொபா உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதலை பயங்கரவாதிகள் தீவிரப்படுத்தினர்.</p><p>

வடக்கு மாலியை தனிநாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுக்கு எதிராக தாக்குதலை கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள் மேற்கொண்டுள்ளனர். </p><p>இந்த தாக்குதலை தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.மேலும், பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களையும் ராணுவம் மீட்டு வருகிறது.</p><p>
இந்நிலையில், மாலியின் வடக்கு நகரமான அனிபிசை பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ராணுவம் மீட்டுள்ளது. </p><p>இந்த மீட்பு நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. பயங்கரவாதிகளுடனான இந்த மோதலில் ராணுவ வீரர்கள் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T01:02:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை குறித்து முக்கிய திட்டத்தைக் கைவிட்ட ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-drops-key-plan-on-hormuz-strait-1784047068"></link>
            <id>https://canadamirror.com/article/trump-drops-key-plan-on-hormuz-strait-1784047068</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20 சதவீதக் கட்டணத் திட்டத்தை அமெரிக்கா கைவிடுவதாக அமெரிக்க ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20 சதவீதக் கட்டணத் திட்டத்தை அமெரிக்கா கைவிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

அதற்குப் பதிலாக, வளைகுடா நட்பு நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61f4e6c0-88f5-45cd-bd09-ca21d43449e8/26-6a5665de1fc41.webp' /></p><p style="text-align: justify; ">

 

முக்கிய உலகளாவிய எரிசக்திப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான அமெரிக்காவின் செலவினங்களை ஈடுசெய்ய, 20% கட்டணம் விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார்.</p><p style="text-align: justify; "> 

 

சர்வதேச அளவில் இந்த அறிவிப்பு பெரும் விவாதங்களைக் கிளப்பிய நிலையில், ஒரே நாளில் அவர் தனது முடிவை மாற்றியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது:

 

"மத்திய கிழக்கு நாட்டுத் தலைவர்களுடன் நடத்தப்பட்ட மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், 20% அமெரிக்க ஈடுசெய்யும் கட்டணத் திட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளேன்.</p><p style="text-align: justify; "> அதற்குப் பதிலாக, பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் மேற்கொள்ளவுள்ள பிரம்மாண்ட வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முதலீடுகள் மிகவும் பிரம்மாண்டமானதாகவும், அவர்களது எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாகவும் அமையும்."</p>]]></content>
            <updated>2026-07-14T23:33:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் 10 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/10-year-old-boy-killed-in-gaza-shooting-1784068113"></link>
            <id>https://canadamirror.com/article/10-year-old-boy-killed-in-gaza-shooting-1784068113</id>
            <summary type="text">பாலஸ்தீனத்தின் காசாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 10 வயதுச் சிறுவன் உட்பட 9 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறுவன் கொலை
தெற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலஸ்தீனத்தின் காசாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 10 வயதுச் சிறுவன் உட்பட 9 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>
சிறுவன் கொலை
தெற்கு காசாவின் ராபாவில் உள்ள அல்மவாசி தற்காலிக அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 10 வயதுச் சிறுவன் கொல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b54cd7a9-d03e-4f32-bd6e-9f3fd5731e88/26-6a56b81397476.webp' /></p><p>கடந்த சில நாட்களாக இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.


</p><p>இந்தத் தாக்குதலில் ஜபாலியா பகுதி காவல் முகாமின் தலைவரான கர்னல் முகமது மர்வான் சலீம் மற்றும் சில காவல்துறை அதிகாரிகள், ஒரு பெண் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
</p><p>
கொல்லப்பட்ட முகமது மர்வான் சலீம், ஹமாஸ் அமைப்பின் ஜபாலியா மத்தியப் படைப்பிரிவின் தலைவராகச் செயல்பட்டு வந்ததாகவும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதால் அச்சுறுத்தலை தவிர்க்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T22:28:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து ; பலி எண்ணிக்கை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fire-breaks-out-at-thailand-nightclub-1784059974"></link>
            <id>https://canadamirror.com/article/fire-breaks-out-at-thailand-nightclub-1784059974</id>
            <summary type="text">தாய்லாந்து நாட்டின் பாங்காக் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகும். பாங்காக்கின் சடுசக் பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்து நாட்டின் பாங்காக் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகும். பாங்காக்கின் சடுசக் பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
</p><p>
இந்த தீ விபத்தில் கேளிக்கை விடுதிக்குள் இருந்த 50க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7c5c475-0953-41b3-b47c-c19ab15b7e08/26-6a569847d8436.webp' /></p><p> </p><p>ஆனால் இந்த தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.</p><p>இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாங்காக் கேளிக்கை விடுதி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. </p><p>சிகிச்சை பெற்றுவருபவர்களில் மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
</p><p>
கேளிக்கை விடுதியில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-14T20:12:58+00:00</updated>
        </entry>
    </feed>
