<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-16T18:32:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாய் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தம் ; காரணம் குறித்து தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-series-of-loud-explosions-in-central-dubai-1784222032"></link>
            <id>https://canadamirror.com/article/a-series-of-loud-explosions-in-central-dubai-1784222032</id>
            <summary type="text">துபாயின் மத்திய (Central Dubai) பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அப்பகுதியில் இருந்த சாட்சிகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயின் மத்திய (Central Dubai) பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அப்பகுதியில் இருந்த சாட்சிகளை மேற்கோள்காட்டி அவசரத் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p>

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த வெடிச்சத்தங்கள் துபாய் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da305343-0df3-41e6-8fdc-6f9a1e4ff762/26-6a5911517d7f0.webp' /></p><p> </p><p>எனினும், வெடிச்சத்தங்களுக்கான துல்லியமான காரணம், உயிரிழப்புகள், காயமடைந்தோர் அல்லது சொத்துச் சேதம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் அதிகாரிகளும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>சம்பவத்தின் பின்னணி மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவம், அமெரிக்கா–ஈரான் மோதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிராந்திய பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இடம்பெற்றுள்ளது. </p><p>இருப்பினும், துபாயில் கேட்கப்பட்ட வெடிச்சத்தங்கள் எந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை</p>]]></content>
            <updated>2026-07-16T17:13:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா தீ விபத்து: முதியவர் பலியானதைத் தொடர்ந்து அவரது மனைவியும் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missing-wife-of-senior-killed-in-northeast-1784194338"></link>
            <id>https://canadamirror.com/article/missing-wife-of-senior-killed-in-northeast-1784194338</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வடகிழக்கு எட்மண்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மேலும் ஒரு மூதாட்டி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வடகிழக்கு எட்மண்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளதாக எட்மண்டன் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>உயிரிழந்த 82 வயதுடைய அந்த மூதாட்டி, இந்த தீ விபத்தில் ஏற்கனவே பலியான 85 வயது முதியவரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது.
</p><p>தீ விபத்து ஏற்பட்ட போது, அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே குதித்ததில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/503e0aef-d7c5-49ee-ac92-eab46636ee4d/26-6a58a52473954.webp' /></p><p> 
மேலும், இடிபாடுகளில் சிக்கி காணாமல் போயிருந்த மற்றொரு நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, 82-வது தெரு மற்றும் 132-வது அவென்யூ சந்திப்பில் உள்ள இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது. </p><p>
இந்த மோதலின் போது அங்கிருந்த எரிவாயு குழாய் உடைந்ததால், பயங்கர வெடிப்புச் சத்தத்துடன் தீப்பிடித்தது.
</p><p>இந்த திடீர் வெடிப்பு மற்றும் தீ விபத்தில் சிக்கி காயமடைந்த குடியிருப்பாளர்கள் 6 பேரும், காரை ஓட்டி வந்த ஓட்டுநரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>இந்த தீ விபத்தில் உயிரிழந்த தம்பதியினரை நினைவு கூரும் வகையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே ஆண் மற்றும் பெண் உருவங்கள் அடங்கிய சிறிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p><p>
விபத்து ஏற்படுவதற்கான முழுமையான பின்னணி குறித்து புலனாய்வாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> 
மேலும், தீயணைப்புப் படையினருடன் இணைந்து கட்டடத்திற்குள் பாதுகாப்பாகச் சென்று தேடுதல் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T13:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் மாறுகிறதா நேரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/as-us-takes-steps-toward-permanent-daylight-time-1784192855"></link>
            <id>https://canadamirror.com/article/as-us-takes-steps-toward-permanent-daylight-time-1784192855</id>
            <summary type="text">அமெரிக்கா முழுவதும் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பகல் நேரத்தைப் பாதுகாக்கும் &#039;பகலொளி சேமிப்பு நேரத்தை&#039; நிரந்தரமாக்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா முழுவதும் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பகல் நேரத்தைப் பாதுகாக்கும் 'பகலொளி சேமிப்பு நேரத்தை' நிரந்தரமாக்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p> 
இதனைத் தொடர்ந்து, கனடாவின் பல மாகாணங்களும் தங்களின் கடிகார நேரத்தை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றன. </p><p>
அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு ஆதரவாக 308 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் கிடைத்தன. இந்த மசோதா இப்போது செனட் சபை மற்றும் அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d82118c-8777-4b7b-8f12-d21ad5739a27/26-6a589f58e6959.webp' /></p><p> </p><p>
கனடாவில் ஆண்டுக்கு இருமுறை கடிகார நேரத்தை மாற்றும் வழக்கத்தை சஸ்காச்சுவான், யூகோன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மூன்று பகுதிகள் ஏற்கனவே ஒழித்துவிட்டன.</p><p> 
சஸ்காச்சுவான் மாகாணம் 1966-லும், யூகோன் பகுதி 2020-லும் இந்த மாற்றத்தை மேற்கொண்டன. 
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் 2019-லேயே இதற்கான சட்டத்தை இயற்றிய போதிலும், அண்டை நாடான அமெரிக்காவின் வர்த்தக உறவுகளைக் கருத்தில் கொண்டு காத்திருந்தது.</p><p>
இறுதியாக, மார்ச் 2026 முதல் நிரந்தர பகலொளி சேமிப்பு நேரத்திற்கு அந்த மாகாணம் முழுமையாக மாறியுள்ளது. 
கடந்த ஏப்ரல் மாதம் ஆல்பர்ட்டா மாகாணம் நிரந்தர நேர மாற்றத்திற்கான சட்ட முன்வடிவைத் தாக்கல் செய்தது. ஆல்பர்ட்டாவுடன் ஒரே நேர மண்டலத்தைப் பகிர்ந்து கொள்ளும் வடமேற்கு பிராந்தியங்களும் இந்த மாற்றத்தைப் பின்பற்ற முடிவு செய்துள்ளன. </p><p>
ஒன்டாரியோ மாகாணம் 2020-லேயே இதற்கான சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், அண்டை மாகாணமான கியூபெக்கும், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலமும் மாறினால் மட்டுமே இதை அமல்படுத்துவோம் என்ற நிபந்தனையை விதித்துள்ளது. </p><p>
கியூபெக் மாகாணத்தில் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்பில் 91% மக்கள் நேர மாற்றத்தை ஒழிக்க ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், அங்கு இன்னும் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படவில்லை.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T13:27:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் படகு விபத்துகளில், 500க்கும் மேற்பட்ட ஏதிலிகள் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/500-refugees-death-boat-accidents-myanmar-waters-1784208329"></link>
            <id>https://canadamirror.com/article/500-refugees-death-boat-accidents-myanmar-waters-1784208329</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; மியன்மார் கடல் பகுதியில் கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து நிகழ்ந்ததாகக் கூறப்படும் இரண்டு பெரும் படகு விபத்துகளில், 500க்கும் மேற்பட்ட அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; மியன்மார் கடல் பகுதியில் கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து நிகழ்ந்ததாகக் கூறப்படும் இரண்டு பெரும் படகு விபத்துகளில், 500க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.</p><p> 

ஐ.நா.வின் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM) மற்றும் அகதிகள் முகமை (UNHCR) ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18a1a0b6-3e40-4916-b25c-4a0dc793f3a0/26-6a58dbcb36714.webp' /></p><h2>ரோஹிஞ்சா அகதிகளே பயணித்துள்ளனர்</h2><p>
</p><p>
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாரின் ராகைன் (Rakhine) மாநிலத்தில் இருந்து ஜூன் மாத இறுதியில் புறப்பட்ட இரு படகுகளிலும், பெரும்பான்மையாக முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிஞ்சா அகதிகளே பயணித்துள்ளனர். </p><p>இவர்களில் சிலர் பங்களாதேஷின் காக்ஸ் பஜார் (Cox’s Bazar) முகாம்களில் இருந்து பயணித்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>250 பேருடன் சென்ற ஒரு படகு புறப்பட்ட சில நாட்களிலேயே தொடர்பை இழந்த நிலையில், 280 பேருடன் சென்ற மற்றுமொரு படகு ஜூலை 08ஆம் திகதி மியான்மரின் ஐயராவடி (Ayeyarwady) கடற்பரப்பில் மூழ்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
</p><p>
மோசமான காலநிலை நிலவும் பருவத்திற்கு வெளியில், அண்மைய பெருமழை மற்றும் வெள்ளப் பெருக்குக்கு மத்தியில் இந்த ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>மியான்மரில் நீடிக்கும் உள்நாட்டு மோதல்கள், மோசமடைந்து வரும் மனிதாபிமான சூழ்நிலை மற்றும் பங்களாதேஷ் முகாம்களில் நிலவும் வரையறுக்கப்பட்ட வசதிகள் காரணமாகவே அகதிகள்&nbsp; கடத்தல்காரர்களின் வலையில் சிக்கி ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதாக ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>தேடல் மற்றும் மீட்புப் பணிகளை வலுப்படுத்துமாறும், கடத்தல் நெட்வொர்க்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் சர்வதேச சமூகத்திற்கு ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T13:23:55+00:00</updated>
        </entry>
    </feed>
