<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-29T17:30:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் -காஸா போரில் 60,000 குழந்தைகளின் பெற்றோர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/60-000-children-lose-parents-in-gaza-war-1785346051"></link>
            <id>https://canadamirror.com/article/60-000-children-lose-parents-in-gaza-war-1785346051</id>
            <summary type="text">காஸா மீதான இஸ்ரேலின் போரில், இதுவரை சுமார் 60,000 பலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸா மீதான இஸ்ரேலின் போரில், இதுவரை சுமார் 60,000 பலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இஸ்ரேலில், கடந்த 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d0933cc-a370-40dc-9f6a-0060474930a7/26-6a6a3804bcd82.webp' /></p><p> </p><p>இதையடுத்து, காஸா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை 73,000-க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>


இந்த நிலையில், கடந்த 2023 ஒக்டோபர் முதல் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 60,737 குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாக, காஸாவின் சுகாதார அமைச்சகம் இன்று (ஜூலை 29) அறிவித்துள்ளது.
</p><p>


இதில், 52,095 குழந்தைகள் தங்களின் தந்தையையும், 5,929 குழந்தைகள் தங்களின் தாயையும் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,713 பாலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர்கள் இருவரையும் இழந்துள்ளனர்.
</p><p>


இத்துடன், 8,858 உறுப்பினர்களை உள்ளடக்கிய 2,276 குடும்பங்கள் குடிமக்களின் பதிவேட்டில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாக, காஸா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>





முன்னதாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்குப் பிறகு காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 1,000-க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-29T17:27:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஏரியில் தொலைந்த திருமண மோதிரம்: மீட்ட கடற்படை வீரர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/find-louisiana-mans-submerged-wedding-band-1785332641"></link>
            <id>https://canadamirror.com/article/find-louisiana-mans-submerged-wedding-band-1785332641</id>
            <summary type="text">அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெஃப் டக்ளாரிஸ் என்பவர், கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஏரியொன்றின் ஆழத்தில் தவறவிட்ட தனது திருமண மோதிரத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெஃப் டக்ளாரிஸ் என்பவர், கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஏரியொன்றின் ஆழத்தில் தவறவிட்ட தனது திருமண மோதிரத்தை, நெய்ட் மெக்லாகன் என்பவரின் உதவியுடன் பத்திரமாக மீட்டுள்ளார்.
</p><p>கனடிய ராயல் கடற்படையில் ஆயுதத் தொழில்நுட்பக் கலைஞராகப் பணியாற்றி வரும் நெய்ட் மெக்லாகன், கடந்த 20 ஆண்டுகளாக 'மெட்டல் டிடெக்டர்' கருவி மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். </p><p>
இந்த ஆண்டு மட்டும் தொலைந்துபோன 25 பொருட்களையாவது உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இலக்குடன் அவர் செயல்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb43dd6-05be-4510-9ceb-daaa14611abb/26-6a6a03a2c2654.webp' /></p><p>
</p><p>ஜெஃப் டக்ளாரிஸ் பயிற்சிக்காக கனடாவிற்கு வந்திருந்தபோது, தனது நண்பர்களுடன் 'கேஜிம்குஜிக் தேசியப் பூங்காவில்' உள்ள ஏரியில் காயாக்கிங் படகுச் சவாரி செய்தார். பாறைகளில் ஏறி ஏரி நீரில் குதித்தபோது, அவரது விரலிலிருந்த 14-காரட் தங்கத் திருமண மோதிரம் நழுவி ஏரிக்குள் விழுந்தது.
</p><p>திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகத் தனது விரலை விட்டுப் பிரியாத மோதிரம் தொலைந்ததால் மனமுடைந்த டக்ளாரிஸ், அதைத் தேட முயன்றும் நீர் தெளிவில்லாமல் இருந்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை. </p><p>
உடனே அந்த இடத்தைக் குறிப்பாய்வு செய்து, புகைப்படங்களை எடுத்துக்கொண்டு இணையத்தில் உதவி தேடியபோது, மெக்லாகனின் அறிமுகம் கிடைத்துள்ளது.
</p><p>டக்ளாரிஸ் தனக்கு அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், அடுத்த வார இறுதியில் டைவிங் உடைகள் மற்றும் மெட்டல் டிடெக்டருடன் அந்த ஏரிக்குச் சென்றார் மெக்லாகன்.
ஆச்சரியப்படும் விதமாக, ஏரியின் அடியில் தேடத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பாறைகளுக்கு இடையே மின்னிய அந்தத் தங்க மோதிரத்தைக் கண்டெடுத்தார்.
</p><p>கடந்த ஆண்டில் 13 தொலைந்த பொருட்களை மீட்டுத் தந்த மெக்லாகன், இதை ஒரு பொழுதுபோக்காகவும் தன்னார்வத் தொண்டாகவுமே செய்து வருகிறார்.</p><p> 
இதற்காக அவர் யாரிடமும் பெருந்தொகையைக் கட்டணமாகப் பெறுவதில்லை; தூரப் பயணங்களுக்கான எரிபொருள் செலவை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
மோதிரங்கள், கைபேசிகள், சாவிக்கொத்துகள் மட்டுமின்றி, முதல் உலகப்போருக்குப் பிந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கங்கள், பீரங்கி உதிரிபாகங்கள் எனப் பல அரிய பொருட்களையும் இவர் ஏரிகளிலிருந்து கண்டெடுத்துள்ளார்.<b>டி</b>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T16:32:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/60-000-children-in-gaza-have-lost-parents-1785333455"></link>
            <id>https://canadamirror.com/article/60-000-children-in-gaza-have-lost-parents-1785333455</id>
            <summary type="text">&amp;nbsp;காசா முனையில் 2023 அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர் அல்லது பெற்றோர் ஒருவரை இழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;காசா முனையில் 2023 அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர் அல்லது பெற்றோர் ஒருவரை இழந்துள்ளதாகக் காசா சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>குறைந்தபட்சம் 60,737 குழந்தைகள் தங்களது தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர்.
இதில் 52,095 குழந்தைகள் தந்தையையும், 5,929 குழந்தைகள் தாயையும் இழந்துள்ளனர்.
</p><p>2,713 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்து அனாதைகளாகியுள்ளனர் என காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22d174ed-d938-43e3-9553-cd9a3b6357f4/26-6a6a06d766512.webp' /></p><p>
</p><p>மேலும், 2,276 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 8,858 நபர்கள் முற்றிலும் உயிரிழந்து, குடிமக்கள் பதிவேட்டில் இருந்தே அவர்களின் பெயர்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
2023 அக்டோபர் முதல் இதுவரை 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> 
ஒக்டோபரில் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டும் கூட, இஸ்ரேல் காசா முழுவதும் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில், போர்நிறுத்தத்திற்குப் பின்னர் மட்டும் 1,100-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T16:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shooting-in-stoney-creek-leaves-2-dead-hamilton-1785333107"></link>
            <id>https://canadamirror.com/article/shooting-in-stoney-creek-leaves-2-dead-hamilton-1785333107</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் &#039;ஸ்டோனி க்ரீக்&#039; பகுதியில் அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஹாமில்ட்டன் காவல்துறையினர் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் 'ஸ்டோனி க்ரீக்' பகுதியில் அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஹாமில்ட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>இன்று அதிகாலை 2:25 மணியளவில், ரைமல் ரோடு ஈஸ்ட் மற்றும் அப்பர் சென்டெனியல் பார்க்வே ஆகிய பகுதிகளுக்கு அருகே உள்ள 'கேண்டில்வுட் டிரைவ்' குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
</p><p>சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், துப்பாக்கிக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு ஆண்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/babc1055-e27a-47ae-9fec-98bb71ef32f3/26-6a6a0575707af.webp' /></p><p> </p><p>எனினும், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஹாமில்ட்டன் காவல்துறையின் 'கொலை வழக்கு விசாரணைப் பிரிவு' தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p>
இக்குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது காவலில் எடுக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்துக் காவல்துறை இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
</p><p>வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்கள் விசாரணைக்குப் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T16:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொன்றியல் விமான நிலையத்தில் துர்நாற்றம்: விமானங்கள் ரத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/flights-to-us-cancelled-odour-at-montreal-airport-1785332206"></link>
            <id>https://canadamirror.com/article/flights-to-us-cancelled-odour-at-montreal-airport-1785332206</id>
            <summary type="text">கனடாவின் மொன்றியல்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவின் பகுதியில் வீசிய விசித்திரமான துர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மொன்றியல்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவின் பகுதியில் வீசிய விசித்திரமான துர்நாற்றம் காரணமாக, புதன்கிழமை காலை அமெரிக்காவிற்கான அனைத்து விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டன.
</p><p>கட்டட வேலைகளுக்கானப் பொருட்களில் இருந்து இந்த துர்நாற்றம் வீசியதை அடுத்து, அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவு தனது பரிசோதனைப் பணிகளைத் தற்காலிகமாகப் நிறுத்தி வைத்தது.</p><p>
இதேவேளை, துர்நாற்றம் வீசியதற்கான காரணம் கண்டறியப்பட்டு விட்டதாக மொன்றியல் விமான நிலைய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be630a77-8508-4e2b-8a1c-f2962515a882/26-6a6a01f092917.webp' /></p><p>
</p><p> எனினும், எல்லைப் பாதுகாப்புப் பணிகள் சீரடையும் வரை பயணிகள் தங்களது விமானங்களின் நிலவரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் உறுதிசெய்த பின்னரே விமான நிலையத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>அமெரிக்கச் சுங்கப் பரிசோதனை தொடர்பான கூடுதல் சந்தேகங்களுக்கு பயணிகள், அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T13:37:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எட்மண்டனில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shooting-death-at-west-end-business-investigation-1785331696"></link>
            <id>https://canadamirror.com/article/shooting-death-at-west-end-business-investigation-1785331696</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>செவ்வாய்க்கிழமை காலை 11:35 மணியளவில் 11230 149 St. பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், எட்மண்டன் காவல்துறையினர் விரைந்து சென்றனர்.</p><p> 
அங்கு படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 39 வயது நபர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bed11541-7ad5-4bb5-a206-910561e4d506/26-6a69fff232b3a.webp' /></p><p>
</p><p>அவரது உடற்கூறாய்வு பரிசோதனை புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சமயத்தில், அந்த வணிக வளாகத்திலிருந்து நபர் ஒருவர் ஓடித் தப்பிச் செல்வதைப் பார்த்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>சம்பவம் இடம்பெற்ற தினம் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அப்பகுதியில் பயணித்தவர்கள், சாட்சிகள் அல்லது தங்களது வாகனத்தின் 'டேஷ்கேம்' காட்சிகளை வைத்திருப்பவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு கொலை வழக்கு விசாரணை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 780-423-4567 என்ற எண்ணிலோ அல்லது 'கிரைம் ஸ்டாப்பர்ஸ்' மூலமாகவோ ரகசியமாகத் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T13:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் தரவு கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/average-canadian-data-breach-costs-and-detection-1785330819"></link>
            <id>https://canadamirror.com/article/average-canadian-data-breach-costs-and-detection-1785330819</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் இயங்கி வரும் நிறுவனங்களில் &#039;தரவு கசிவு&#039; சம்பவங்களால் ஏற்படும் நிதி இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் இயங்கி வரும் நிறுவனங்களில் 'தரவு கசிவு' சம்பவங்களால் ஏற்படும் நிதி இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
கனடாவில் ஒரு தரவு கசிவு சம்பவத்திற்கு நிறுவனங்கள் சராசரியாக 7.11 மில்லியன் கனடிய டொலர் செலவிட வேண்டியுள்ளது. </p><p>
இது கடந்த 2025-ஆம் ஆண்டில் 6.98 மில்லியன் டொலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு தரவு கசிவின் மூலம் சராசரியாக 28,500 நபர்களின் தரவுகள் களவாடப்பட்டுள்ளன.
</p><p>ஒரு கசிவைக் கண்டறிந்து சரி செய்ய சராசரியாக 205 நாட்கள் ஆகின்றன.
ரொஜர்ஸ் (Rogers), ஃபைடோ (Fido), டெலஸ் டிஜிட்டல் (Telus Digital), லோப்லா (Loblaw), கனடா கம்ப்யூட்டர்ஸ் மற்றும் ஆர்டீன் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டில் தரவு கசிவால் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>
மிச்சிகனைச் சேர்ந்த 'பொனெமன் இன்ஸ்டிடியூட்' என்ற சுயாதீன ஆராய்ச்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலகளவில் மார்ச் 2025 முதல் பெப்ரவரி 2026 வரை தரவு கசிவை எதிர்கொண்ட 602 நிறுவனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T13:22:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் அமைச்சர் டொராண்டோ மேயர் தேர்தலில் போட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-conservative-mp-chris-alexander-1785331258"></link>
            <id>https://canadamirror.com/article/former-conservative-mp-chris-alexander-1785331258</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கன்சர்வேடிவ் கட்சி முன்னாள் அமைச்சரான கிறிஸ் அலெக்ஸாண்டர், டொராண்டோ நகர மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கன்சர்வேடிவ் கட்சி முன்னாள் அமைச்சரான கிறிஸ் அலெக்ஸாண்டர், டொராண்டோ நகர மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
</p><p>புதன்கிழமை காலை டொராண்டோ சிட்டி ஹாலில் இதற்கான வேட்புமனுவை அவர் முறைப்படி தாக்கல் அறிவித்துள்ளார்.
</p><p>57 வயதான கிறிஸ் அலெக்ஸாண்டர் இதுகுறித்து தனது இணையதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9b33b57-18ad-478d-aa46-4d583257b6af/26-6a69fe3c109d7.webp' /></p><p>
கடந்த மூன்றாண்டுகளாக டொராண்டோ நகரம் எந்தவித வளர்ச்சியும் இன்றி தேங்கிக் கிடக்கிறது. </p><p>இவ்வளவு திறமையும் ஆற்றலும் கொண்ட ஒரு நகரம் பின்தங்கி இருக்கக் கூடாது. டொராண்டோவைச் சிறந்த நகரமாக மாற்ற நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இவர் 2013 முதல் 2015 வரை கனடாவின் குடியுரிமை மற்றும் குடிவரவுத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், 2003 முதல் 2005 வரை ஆப்கானிஸ்தானுக்கான கனடியத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p>எதிர்வரும் அக்டோபர் 26 அன்று நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், தற்போதைய மேயர் ஒலிவியா சௌ மற்றும் நகரமன்ற உறுப்பினர் பிராட் பிராட்போர்ட் ஆகியோருக்கு எதிராகக் கிறிஸ் அலெக்ஸாண்டர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>தற்போதைய நிலவரப்படி, டொராண்டோவின் மேயர் பதவியைப் பிடிக்க மொத்தம் 32 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T13:21:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் 22 வயது இலங்கை தமிழ் இளைஞருக்கு சிறை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sri-lankan-tamil-youth-8-months-prision-australia-1785320265"></link>
            <id>https://canadamirror.com/article/sri-lankan-tamil-youth-8-months-prision-australia-1785320265</id>
            <summary type="text">&amp;nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூன்று மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞர் 22 வயதான சரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar) மற்றும் அவருடன் குற்றத்தில் ஈடுபட்ட பாட்லி மாஹ்வினி (Baddeley Mawhinney) ஆகியோர் ஏப்ரல் 25 அன்று கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் கொடூரமான தாக்குதலை நடத்தியது சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6795bdcd-90ba-4dfe-a7b1-74e26aed1aba/26-6a69d34b504d9.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கொடூரமான தாக்குதல்&nbsp;</span></p><p>
</p><p>
தாக்குதலில் தனது பங்கிற்காக மாவின்னிக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட சிவகுமார், திங்களன்று காவலில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கிளீவ்லேண்ட் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
</p><p>
தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த பாதிக்கப்பட்ட நபரை சிவகுமாரும் மாஹினியும் அணுகிப் பேசத் தொடங்கியதாகவும், ஆனால் அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>அவ்விருவரும் அந்த நபரின் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியதுடன், மூடிக் கொண்டிருந்த ரயில் கதவுகள் வழியாக அவரை இழுத்துச் சென்று அவர் வெளியேறுவதைத் தடுத்த பின்னர் மற்றொரு பெட்டிக்குச் சென்றனர்.</p><p>

 அவர்கள் விரைவில் திரும்பி வந்து அந்த நபரின் பையைப் பறிக்க முயன்ற போது சிவகுமார் ஒரு கண்ணாடிப் போத்தலால் அந்த நபரின் தலையில் தாக்கியதில் அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டது.</p><p>

இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனால் அவர் குயின்ஸ்லாந்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>தாக்க முற்பட்டவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அவ்வாறு செய்ததாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்டார். எனினும் இந்தத் தாக்குதலுக்காக சிவகுமாருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது,

ஏற்கனவே 89 நாட்கள் சிறைக்காவலில் இருந்ததால், அவர் கண்காணிப்புடன் கூடிய நிபந்தனையில் விடுவிக்கப்பட்டார்.</p><p>
அதேசமயம் சிவகுமார் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியக் குடிமகனாக மாறியதாகவும், வேலை தேடி மெல்போர்னிலிருந்து பிரிஸ்பேனுக்குச் சென்ற அவர், வீடின்றியும் வேலையின்றியும் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T13:10:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஒன்றரை வயது குழந்தையை கொன்ற தாய்க்கு தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mom-sentenced-to-four-and-a-half-years-in-prison-1785330371"></link>
            <id>https://canadamirror.com/article/mom-sentenced-to-four-and-a-half-years-in-prison-1785330371</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் ஒன்றரை வயதான குழந்தையை கொன்ற தாய்க்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
கனடாவின் &#039;நியூ வெஸ்ட்மின்ஸ்டர்&#039; நகரில், 18 மாத பெண் குழந்தை ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் ஒன்றரை வயதான குழந்தையை கொன்ற தாய்க்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
</p><p>கனடாவின் 'நியூ வெஸ்ட்மின்ஸ்டர்' நகரில், 18 மாத பெண் குழந்தை ஒன்று சுயநினைவின்றி மீட்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அக்குழந்தையின் தாய்க்கு கொலைக் குற்றத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>கடந்த 2021 ஜூலை 21 அன்று, அக்குழந்தை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததை அடுத்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டதாக கொலை விசாரணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e09b071-68ad-424f-a8a4-2e989d960ceb/26-6a69fac5553be.webp' /></p><p>
குழந்தையின் உயிரிழப்பிற்கு வழிவகுத்த நிகழ்வுகளைக் கண்டறிய புலனாய்வாளர்கள் இடைவிடாது பணியாற்றி வந்த நிலையில், குழந்தையின் தாயான கர்மா டைக் மீது சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
</p><p>மனித படுகொலை, கொடுங்காயம் விளைவித்தல், ஆயுதத்தால் தாக்குதல், உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>இந்நிலையில், கர்மா டைக் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தன் மீதான மனிதக் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். </p><p>
அதைத் தொடர்ந்து, அவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T13:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் காட்டுத்தீயால் 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/42-000-hectares-burnt-france-consumed-by-wildfires-1785327126"></link>
            <id>https://canadamirror.com/article/42-000-hectares-burnt-france-consumed-by-wildfires-1785327126</id>
            <summary type="text">&amp;nbsp; பிரான்ஸில் போர்டோவிற்கு மேற்கே பெருமளவிலான மக்களை வெளியேற்றத் தூண்டிய ஒரு பெரும் காட்டுத்தீயை பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் செவ்வாயன்று (28) இரவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரான்ஸில் போர்டோவிற்கு மேற்கே பெருமளவிலான மக்களை வெளியேற்றத் தூண்டிய ஒரு பெரும் காட்டுத்தீயை பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் செவ்வாயன்று (28) இரவு முழுவதும் போராடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.</p><p>

புதன்கிழமை அன்று வெப்பநிலை மற்றும் காற்று அதிகரித்து, தீ மேலும் பரவக்கூடும் என முன்னறிவிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
தொடர் வெப்ப அலைகளால் ஏற்பட்ட கடுமையான வறட்சிக்குப் பிறகு, பிரபலமான சுற்றுலாத் தலமான போர்டோவிற்கு மேற்கே உள்ள லாண்டஸ் (Landes) பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, முக்கியமாக பைன் மரக் காடுகளைக் கொண்ட 42,000 ஹெக்டேர் (1,03,784 ஏக்கர்) பரப்பளவிலான நிலத்தை அழித்துள்ளது.
</p><p>
ஒரு வார காலப் போராட்டத்திற்குப் பின்னர், ஐரோப்பிய சகாக்களின் உதவியுடன் பிரான்ஸ் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். </p><p>

இருப்பினும், இந்த கோடைக்காலத்தில் இதுவரை நான்காவதாக வரவுள்ள மற்றொரு வெப்ப அலை, வரும் மணிநேரங்களில் சூழலை மேலும் மோசமாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டுகளில் பிரான்ஸ் முன்னெப்போதும் இல்லாத காட்டுத்தீ பருவத்தை சந்தித்து வருகிறது. 

தற்ப‍ேது எரிந்த பகுதியின் அளவு, 2022 ஆம் ஆண்டின் முந்தைய சாதனையை ஏற்கனவே தாண்டிவிட்டது என்றும் கூறப்படுகின்றது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T12:10:30+00:00</updated>
        </entry>
    </feed>
