<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-01T07:40:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நம்பிக்கை குறைந்து வருகிறது ; ஈரான் குறித்து டிரம்ப் கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-iran-conflict-trump-strongly-criticizes-iran-1785569356"></link>
            <id>https://canadamirror.com/article/us-iran-conflict-trump-strongly-criticizes-iran-1785569356</id>
            <summary type="text">ஈரான் மீதான தனது நம்பிக்கை குறைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றமான சூழ்நிலை தொடரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான தனது நம்பிக்கை குறைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றமான சூழ்நிலை தொடரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் மீண்டும் மோதல் நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a959b6b5-0ea1-413e-a4f1-fbc9ae2057ec/26-6a6da04d6152e.webp' /></p><p>இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
</p><p>
இந்நிலையில், ஈரான் தொடர்பில் கருத்து தெரிவித்த டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், ஈரானிய அதிகாரிகள் தங்களது வாக்குறுதிகளை அடிக்கடி மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

"ஈரான் குறித்து எனக்குள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது. அவர்கள் பொய் கூறுகின்றனர், தகவல்களை மாற்றிக் காட்டுகின்றனர். </p><p>பேச்சுவார்த்தைக்கு உடன்படுகின்றனர், ஆனால் பின்னர் அதனை மீறுகின்றனர்" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், ஈரான் தற்போது பலவீனமடைந்து வருவதாகவும், சில நேரங்களில் மீண்டும் வலிமை பெறலாம் என்றாலும், இறுதியில் மீண்டும் பலவீனமடைந்து மறைந்து போகும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-01T07:31:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கப் பயணம் தொடர்பில் கனேடியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-travel-advisory-to-us-over-cyclosporiasis-1785567504"></link>
            <id>https://canadamirror.com/article/canada-travel-advisory-to-us-over-cyclosporiasis-1785567504</id>
            <summary type="text">அமெரிக்க மாகாணமொன்றிற்குப் பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்காவின் மிச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க மாகாணமொன்றிற்குப் பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.</p><p>

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் ஒட்டுண்ணித் தொற்று பயங்கரமாக பரவி வருகிறது.</p><p>

ஜுலை 30 வரையிலான காலகட்டத்தில், மிச்சிகன் மாகாணத்தில், 10,700க்கும் அதிகமானவர்களுக்கு இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9ac77e-0d4f-4203-bda5-0fa83bfa38d4/26-6a6d991253a08.webp' /></p><p>
சைக்ளோஸ்போரியாசிஸ் கிருமித் தொற்றை ஏற்படுத்தக்கூடியது சைக்ளோஸ்போரா என்னும் கிருமி ஆகும்.
</p><p>
உணவு மற்றும் குடிநீர் வழியாக மட்டுமே பரவும் இந்த சைக்ளோஸ்போரா என்னும் கிருமி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம், வயிற்று வலி, லேசான காய்ச்சல், வாயுத்தொல்லை மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.
</p><p>
பல நாட்கள் அல்லது வாரங்களுக்கு நீடிக்கும் இந்த பிரச்சினைகள், முறையாக, முழுமையாக சிகிச்சை பெறாவிட்டால் மீண்டும் உருவாகும்.
</p><p>
விடயம் என்னவென்றால், மிச்சிகனை ஒட்டியுள்ள கனேடிய பகுதி வின்ஸ்டர் எசெக்ஸ்.
</p><p>
வின்ஸ்டர் எசெக்ஸிலிருந்து மக்கள் எல்லை கடந்து மிச்சிகனுக்குச் சென்றுவருவதுண்டு.
</p><p>
இந்நிலையில், பொதுவாக வின்ஸ்டர் எசெக்ஸில் அதிகபட்சமாக மூன்று பேருக்கு சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று கண்டறியப்படும் நிலையில், தற்போது வழக்கத்துக்கு மாறாக 24 பேருக்கு அந்த ஒட்டுண்ணித் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1e7c63c-57e3-4b1e-8915-7a31da6fb5a6/26-6a6d9911a1f86.webp' /></p><p>
ஆக, அமெரிக்காவுக்கு, அதாவது, மிச்சிகனுக்கு கனேடியர்கள் சென்று வருவதால், அவர்களுக்கு இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவியிருக்கலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.
</p><p>
ஆகவே, எல்லை கடந்து மிச்சிகனுக்குப் பயணிக்கும் கனேடியர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறும், லெட்டூஸ், சாலட் போன்ற உணவுகள் மூலமாக சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவுவதாக கருதப்படுவதால், அத்தகைய உணவுகளை உட்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்குமாறும் கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T06:59:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கடலில் காணமல் போனவரின் சடலம் மீட்பு; தேடப்படும் 3 படகுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/body-of-missing-person-found-in-negombo-waters-1785566450"></link>
            <id>https://canadamirror.com/article/body-of-missing-person-found-in-negombo-waters-1785566450</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு கடற் பகுதியில் மேலும் மூன்று படகுகள் காணாமல்போயுள்ள 
கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு கடற் பகுதியில் மேலும் மூன்று படகுகள் காணாமல்போயுள்ள 
கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, நீர்கொழும்பு துறைமுகத்தில் படகொன்று காணாமல் போயிருந்தது.
</p><p>
குறித்தப் படகில், 4 பேர் பயணித்துள்ள நிலையில், மூன்று பேர் காணாமல் போனதாக கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c957b76-c031-4632-b8ff-e935cf6388cb/26-6a6d94f3ed73f.webp' />]</p><p>
</p><p>
 தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவரிடன் உடலம் மீட்க்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், படகில் பயணித்த ஒருவர் பாதுகாப்பாக கரை வந்து சேர்ந்ததாக இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.
</p><p>
இதனையடுத்து, இன்றைய தினம் மேலும் மூன்று படகுகள் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் சூரியன் செய்திப் பரிவுக்கு கூறினார்.

அதற்கமைய, நீர்கொழும்பு துறைமுக கடற்பகுதியில், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-01T06:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், தனி நபர்களுக்கு அமெரிக்கா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-bans-six-entities-including-an-indian-company-1785565338"></link>
            <id>https://canadamirror.com/article/us-bans-six-entities-including-an-indian-company-1785565338</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈரானின் மகான் எயார் விமான நிறுவனத்துக்கு விற்பனை முகவர்களாகச் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், தனி நபர்களுக்கு அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈரானின் மகான் எயார் விமான நிறுவனத்துக்கு விற்பனை முகவர்களாகச் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், தனி நபர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>


ஈரானைச் சோ்ந்த மகான் எயார் விமான நிறுவனம், போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் தனது விமானங்களில் அந்த நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்கு வீரர்களை ஏற்றிச் செல்லுதல், ஆயுதங்களைக் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட உதவிகளைச் செய்வதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2652a3c5-e222-4b31-aa55-ccc50dec3a67/26-6a6d909c7c999.webp' /></p><h2>மகான் எயார் நிறுவனத்துக்கு நிதி</h2><p> </p><p>



இதையடுத்து, அந்த விமான நிறுவனத்துக்கு உதவி செய்ததாகக் கூறி, இந்தியாவின் அதன் விற்பனை முகவராகச் செயல்படும் ஸ்கீஸ் ட்ராவல்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.</p><p> 



இதேபோல், சீனாவைச் சோ்ந்த ஷாங்காய் விங்ஸ் நிறுவனம், ரஷ்யாவை சோ்ந்த எயார் கார்கோ நிறுவனம், ஷாங்காய் எலைட் இன்டர்நேஷனல் நிறுவனம், சீனாவை சோ்ந்த தாங் ஷின் (ஷாங்காய் விங்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர்) உள்ளிட்டோருக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
</p><p>


இதுகுறித்து அமெரிக்க நிதித் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஈரானின் ஐ.ஆா்.ஜி.சி. அல்லது மகான் எயார் நிறுவனத்துக்கு நிதி ரீதியாகவும், தளவாட ரீதியாகவும் அல்லது வா்த்தக ரீதியாகவும் உதவி செய்வோர், பயங்கரவாத அமைப்பை தக்கவைப்பவராக கருதப்படுவர் எனக் கூறப்பட்டுள்ளது.
</p><p>


ஸ்கீஸ் ட்ராவல்ஸ் நிறுவனமானது, டில்லி மற்றும் ஸ்ரீநகரில் அலுவலகங்களைக் கொண்டு செயல்படுகின்றது. அந்நிறுவனம் தனது வலைதளத்தில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஈரானின் மகான் எயார் நிறுவன முகவராகச் செயல்படத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
</p><p>


ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் மேற்காசியாவில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெறுகின்றது. இந்தச் சூழ்நிலையில் ஈரானின் விமான நிறுவனத்துக்கு உதவி செய்வதாகக் கூறி இந்திய நிறுவனம் உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-01T06:20:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினிற்குள் நுழைந்த 60,000 ஏதிலிகள்; திரும்பி சென்ற 50,000 பேர்! 57 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/60-000-refugees-entered-spain-50-000-returned-1785562207"></link>
            <id>https://canadamirror.com/article/60-000-refugees-entered-spain-50-000-returned-1785562207</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) பகுதிக்குள் நுழைந்த சுமார் 60,000 ஏதிலிகளில், 50,000 பேர் தன்னார்வமாக மீண்டும் மொராக்கோவுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) பகுதிக்குள் நுழைந்த சுமார் 60,000 ஏதிலிகளில், 50,000 பேர் தன்னார்வமாக மீண்டும் மொராக்கோவுக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட நெரிசல் மற்றும் கடலைக் கடந்து நீந்திச் செல்லும் முயற்சியின் போது, மூழ்கி மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 57 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a5545f1-ddcd-4033-a18f-00f905547841/26-6a6d84617c993.webp' /></p><p>
</p><p>
மனிதக் கடத்தல் கும்பல்கள் இந்த நிலைமையைப் பயன்படுத்தி மக்களை சட்டவிரோதமாக எல்லை தாண்டத் தூண்டியதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மனிதக் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T05:29:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய இலங்கை ஈஸ்டர் தாக்குதல்; இருவருக்கு மரண தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sl-easter-attacks-death-sentence-pujith-hemasiri-1785560506"></link>
            <id>https://canadamirror.com/article/sl-easter-attacks-death-sentence-pujith-hemasiri-1785560506</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் 2019 ஆம் ஆண்டு&amp;nbsp; இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் பொறுப்பைத் தட்டிக்கழித்த குற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் 2019 ஆம் ஆண்டு&nbsp; இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் பொறுப்பைத் தட்டிக்கழித்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர கொழும்பு நிரந்தர மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.</p><p>

போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே மூவரடங்கிய விசேட உயர்நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d9677d6-4e48-4946-9a05-fea43ab48b7b/26-6a6d7dbc5eb6e.webp' /></p><h2>&nbsp;தாக்குதலை தடுக்கவில்லை</h2><p>
</p><p>
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை தொடர்பான தீர்ப்பை இன்று அறிவிக்கும் போதே மரணதண்டனை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகவும், முன்கூட்டியே கிடைத்த உளவுத்துறை தகவல்களைப் பொருட்படுத்தாமல் கடமையை மீறியதாகவும் குற்றஞ்சாட்டி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
</p><p>
அதன்படி நேற்றைய தினம் வழக்கு விசாரணையில் போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சட்டமா அதிபர் தரப்பினால் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது.
</p><p>
தீர்ப்பை அறிவித்த நீதியரசர்கள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னைய தினம் மாலை, அரச புலனாய்வு சேவையின் அப்போதைய பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, மறுநாள் இடம்பெறவிருந்த தாக்குதல் தொடர்பான தகவல்களை ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு அறிவித்திருந்ததாக தெரிவித்தனர்.</p><p>

அந்த தகவல்களைப் பெற்றிருந்த போதிலும், தாக்குதலைத் தடுப்பதற்கான எந்தவொரு பயனுள்ள நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.
</p><p>
மேலும், புலனாய்வு அதிகாரிகளின் கூட்டமொன்றை கூட்டி தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியிருக்க முடியும் என்றும், முப்படையினருடன் இணைந்து தாக்குதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் அவருக்கு இருந்ததாகவும் பெரும்பான்மை நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர்.
</p><p>
மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவின் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில், மரண தண்டனை தீர்ப்பு விதிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-01T04:59:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து ; மோட்டார் சைக்கிள் பயணி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fatal-accident-in-tamil-area-motorcycle-rider-dies-1785557104"></link>
            <id>https://canadamirror.com/article/fatal-accident-in-tamil-area-motorcycle-rider-dies-1785557104</id>
            <summary type="text">வவுனியா புளியங்குளம் சந்திப் பகுதியில் இன்று இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா புளியங்குளம் சந்திப் பகுதியில் இன்று இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adeecbdd-550e-4bfc-a235-f8c5b4e14fd8/26-6a6d70717cd4d.webp' /></p><p>விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

உயிரிழந்த நபரின் அடையாளம் மற்றும் விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-01T04:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று சாதனை படைத்த இலங்கை வீரர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rumesh-tharanga-wins-commonwealth-gold-1785546621"></link>
            <id>https://canadamirror.com/article/rumesh-tharanga-wins-commonwealth-gold-1785546621</id>
            <summary type="text">பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 
இதன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். </p><p>
இதன் மூலம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தங்கப் பதக்கம் வெல்வதற்கான 20 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.
</p><p>இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா உட்பட உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற கடுமையான போட்டியில், ருமேஷ் தரங்க 89.75 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடத்தைப் பிடித்து தங்கத்தைக் கைப்பற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c0038c8-fc1e-470b-a503-8e64f8c9f1e2/26-6a6d477f9ce18.webp' /></p><p>
</p><p>2006-ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதல் வீரர் சிந்தன விதானகே தங்கம் வென்றதற்குப் பின்னர், பொதுநலவாய மேடையில் இலங்கை பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
</p><p>இந்த வெற்றியின் மூலம் பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் இலங்கை வெல்லும் 5-வது தங்கப் பதக்கமாக இது பதிவாகியுள்ளது.
</p><p>சர்வதேச தடகள அரங்கில் இலங்கை பெற்ற மிகச் சிறந்த மற்றும் மகத்தான சாதனைகளில் ஒன்றாக ருமேஷ் தரங்கவின் இந்த வெற்றி கருதப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T03:09:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக மீண்டும் பாரிய தாக்குதல்களை நடத்த டிரம்ப் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-plans-launch-anot-major-attack-against-iran-1785552913"></link>
            <id>https://canadamirror.com/article/trump-plans-launch-anot-major-attack-against-iran-1785552913</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக மீண்டும் பாரிய தாக்குதல்களை நடத்தத் தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

பேச்சுவார்த்தைகளுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக மீண்டும் பாரிய தாக்குதல்களை நடத்தத் தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>

பேச்சுவார்த்தைகளுக்கு ஈரானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இதன்படி, ஈரானுக்கு எதிராகப் புதிய தாக்குதலைத் தொடங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது இராணுவத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ae334cf-5b40-4290-a3a1-7e777c9f62d0/26-6a6d601283ee2.webp' /></p><p>இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், "நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம்.</p><p>ஒரு கட்டத்தில் அவர்களால் இதை இனி தாங்க முடியாது என்று அவர்களே கூறுவார்கள்.." எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இதனிடையே, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற எரிசக்தி வசதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்துவதில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

இருப்பினும், உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் போர்க் குற்றங்களின் கீழ் வரக்கூடும் என மனித உரிமைகள் மற்றும் ஆலோசனை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-01T02:55:46+00:00</updated>
        </entry>
    </feed>
