<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-02T07:38:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வணிகக் கட்டடத்தை சட்டவிரோதமாக குடியிருப்பாக மாற்றியவர்களுக்கு அபராதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/vancouver-landlords-illegally-converted-offices-1785653934"></link>
            <id>https://canadamirror.com/article/vancouver-landlords-illegally-converted-offices-1785653934</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வான்கூவர் பகுதியில் உள்ள வணிகக் கட்டடத்தின் ஒரு பகுதியை, உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக 11 ஒற்றை அறை குடியிருப்புகளாக மாற்றியமைத்ததற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வான்கூவர் பகுதியில் உள்ள வணிகக் கட்டடத்தின் ஒரு பகுதியை, உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக 11 ஒற்றை அறை குடியிருப்புகளாக மாற்றியமைத்ததற்காக இரு நபர்களுக்கும் அவர்களின் நிறுவனத்திற்கும் 57,100 டாலர் நிர்வாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவின் குடியிருப்பு வாடகை அமைப்பின் இணக்கம் மற்றும் அமலாக்கப் பிரிவு (CEU), அக்தர் நவாஸ், சர்வர் கான் மற்றும் அவர்களின் '1460317 B.C. Ltd.' என்ற நிறுவனத்திற்கு ஜூலை 10 அன்று இந்த அபராதத்தை விதித்தது.
</p><p>குறித்த வணிகக் கட்டடத்தின் தரைதளத்தில் கடைகளும் மேல் தளங்களில் அலுவலகங்களும் செயல்பட்டு வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/122f20dd-60b2-4be9-ba0e-cdac3804b5a1/26-6a6eeab0bdecb.webp' /></p><p> 
இந்நிலையில், 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, 2-வது மற்றும் 3-வது தளங்கள் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாகத் தற்காலிகத் தடுப்புச் சுவர்கள் மூலம் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு ஆட்கள் தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.</p><p>
நகர நிர்வாகமும் தீயணைப்புப் படையும் ஆய்வு செய்து, கட்டடத்தில் கடும் தீ பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி "தங்குவதற்கு பாதுகாப்பற்றது" மற்றும் "தங்கத் தடை" உத்தரவுகளை 2025 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் பலமுறை பிறப்பித்தன.
</p><p>இத்தனை தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும், கட்டடத்தில் வாடகைக்கு ஆட்கள் தங்குவது தொடர்ந்தது.</p><p> இதன் காரணமாக, நகர நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க 2025 நவம்பர் 28 அன்று CEU தனது விசாரணையைத் தொடங்கியது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T07:06:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஸ்காட்செவன் ஆற்றில் தவறி விழுந்த பெண் மற்றும் நாய்: தொடரும் மீட்புப் பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/saskatoon-residents-shocked-and-saddened-1785653432"></link>
            <id>https://canadamirror.com/article/saskatoon-residents-shocked-and-saddened-1785653432</id>
            <summary type="text">&amp;nbsp;தெற்கு சஸ்காட்செவன் ஆற்றில் பெண்ணொருவரும் நாயொன்றும் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, அவர்களைத் தேடும் பணிகள் இரண்டாவது ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தெற்கு சஸ்காட்செவன் ஆற்றில் பெண்ணொருவரும் நாயொன்றும் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, அவர்களைத் தேடும் பணிகள் இரண்டாவது நாளாகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>
சனிக்கிழமை காலையில், அவர்கள் கடைசியாகக் காணப்பட்ட இடத்தில் மீட்புப் படகு ஒன்று ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
</p><p>வான்வழி மற்றும் மூழ்கி தேடும் சோதனைகளைத் தொடர்ந்து, தற்போது தேடுதல் பரப்பை விரிவுபடுத்துவதற்காக 'சோனார்' சாதனங்களை மீட்புக் குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f77d0a16-d529-4eec-b01d-aa99573d96fd/26-6a6ee8ba110b3.webp' /></p><p> </p><p>இத்தேடுதல் நடவடிக்கை தற்போது உடல்களை மீட்கும் பணிக்கான கூர்மையுடன் தொடர்கிறது.
சாஸ்கடூன் நாய்கள் பூங்காவை ஒட்டியுள்ள ஆற்றின் கிழக்குப் பகுதியில் இவர்கள் ஆற்றில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் மற்றும் நாய் பூங்காவிற்கு வந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
</p><p>கனடாவில் ஆண்டுதோறும் சராசரியாக 485 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.</p><p>
இதில் 27 சதவீதமான உயிரிழப்புகள் ஆறுகளிலேயே நிகழ்கின்றன.
மாகாணங்களைப் பொறுத்தவரை நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லேப்ரடார் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து சஸ்காட்செவன் மாகாணமும் அதிக உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T07:05:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பாதிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/the-single-biggest-household-bill-draining-1785652961"></link>
            <id>https://canadamirror.com/article/the-single-biggest-household-bill-draining-1785652961</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பணவீக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் தொடர்ச்சியாக நிலவி வரும் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் பணவீக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து வருகிறது. </p><p>
இந்நிலையில், 'நாரடிவ் ரிசர்ச்' அமைப்பினால் நடத்தப்பட்ட புதிய தேசிய அளவிலான ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 76 சதவீதத்தினர், உணவு மற்றும் மளிகைப் பொருட்களின் அதிகப்படியான விலையேற்றமே தங்களது குடும்பப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9489e7a5-b33b-4536-86e4-ff51ee4e5fd6/26-6a6ee6e3618d0.webp' /></p><p>
47 சதவீதத்தினர் எரிபொருள் விலையேற்றத்தை இரண்டாவது பெரிய நிதி நெருக்கடியாகக் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
33 சதவீத மக்கள் வீடுகளுக்கான அடமானக் கடன் மற்றும் வாடகையைத் தங்களின் முக்கிய நிதிச் சுமையாகக் கருதுகின்றனர்.</p><p>
இது தவிர, மின்சாரக் கட்டணம், வீட்டு பராமரிப்புச் செலவுகள் மற்றும் வெப்பமூட்டும் செலவுகளும் கனடா மக்களுக்கு அதிகளவு நிதி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>மளிகைப் பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்ற அன்றாடச் செலவுகளில் வாழ்க்கைச் செலவு உயர்வு ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகவும் திடுக்கிட வைப்பதாக உள்ளது, என 'நாரடிவ் ரிசர்ச்' அமைப்பின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி மார்கரெட் சாப்மேன் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>விலையேற்றம் தொடர்வதால், கனடா மக்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் நிதி நிவாரணம் கிடைப்பது கடினம் என்றும், இந்த உயர் விலைகளே நிலையாகத் தொடருமோ என்றும் கவலையும் சோர்வும் அடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T06:44:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பொருளாதாரத்தை குறிவைத்து டிரம்ப் வெளியிட்ட புதிய பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-releases-new-post-targeting-iran-s-economy-1785651420"></link>
            <id>https://canadamirror.com/article/trump-releases-new-post-targeting-iran-s-economy-1785651420</id>
            <summary type="text">ஈரான் தற்போது கடுமையான பணவீக்கத்தை சந்தித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது &#039;டிரூத் சோஷியல்&#039; (Truth Social) சமூக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தற்போது கடுமையான பணவீக்கத்தை சந்தித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62803ad8-84d0-46ee-b0e0-9de419151b1f/26-6a6ee0de578cc.webp' /></p><p>தனது 'டிரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், ஈரானிய நாணயமான 'ரியால்' பலவீனமடைந்து வருவதைக் காட்டும் வரைபடத்தைப் பகிர்ந்துள்ளார்.
</p><p>
குறித்த பதிவில், "நான் ஈரானிய நாணயத்தை அழித்துக் கொண்டிருக்கிறேன்" என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-02T06:17:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் சுற்றுலா விமானம் விபத்து ; 13 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tourist-plane-crash-in-peru-13-dead-1785650511"></link>
            <id>https://canadamirror.com/article/tourist-plane-crash-in-peru-13-dead-1785650511</id>
            <summary type="text">பெருவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற Nazca Lines தொல்பொருள் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற Nazca Lines தொல்பொருள் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த சிறிய ரக சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9b4caf4-4c06-472a-8cb0-9289c1c7b269/26-6a6edd50cb76c.webp' /></p><p>இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
மேலும் குறித்த வானூர்தியில் 11 பயணிகளும் 2 விமானிகளும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T06:02:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ட்ரம்ப் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-decision-to-suspend-attacks-on-iran-1785645542"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-decision-to-suspend-attacks-on-iran-1785645542</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p> 

நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியதாக ட்ரம்ப் தனது 'டிரூத்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3704af1-e7d8-45dd-9ee2-e078ee768ae0/26-6a6ec9e80310d.webp' /></p><p>இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை ரத்து செய்ய தாம் சம்மதித்துள்ளேன் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>

ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தால், அதற்கு தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. </p><p>

பல முக்கிய உட்கட்டமைப்புகள் மீது ஈரானினால் ஏவப்பட்ட ட்ரோன்களை அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே, துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவூதி உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி நடத்திய தனித்தனி தொலைபேசி உரையாடல்களின் போது இக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.</p><p> 

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் ஈரான் தீர்க்கமாக பதிலளிக்கும் எனக் கூறிய அராக்சி, அமெரிக்காவின் பிராந்திய நிலைகுலைவு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளின் விளைவுகள் குறித்தும் விவாதித்ததாக அராக்சியின் டெலிகிராம் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T04:39:07+00:00</updated>
        </entry>
    </feed>
