<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-07T05:33:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் மாயமான 5,000 பேர் தொடர்பில் தகவல் இல்லை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-information-5-000-people-missing-in-nepal-flood-1788758335"></link>
            <id>https://canadamirror.com/article/no-information-5-000-people-missing-in-nepal-flood-1788758335</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுமார் 5,000 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. அவர்களைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுமார் 5,000 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. </p><p>அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70564e68-4906-4efc-8574-ee4aaea3b781/26-6a9e4940ee848.webp' /></p><h2>இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது</h2><p> இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களில் சுமார் 600 பேர் வெளிநாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 275 பேர் இந்தியர்களாவார்.
</p><p>


நேபாள இராணுவத்தினர் உள்ளிட்ட 20,000-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேதமடைந்த நீர்மின் நிலையங்களின் சுரங்கப் பாதைகளிலும் இந்திய நிபுணர்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>



மீட்கப்பட்ட உடல்களில் 500-க்கும் மேற்பட்டவை உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், அவற்றை அடையாளம் காண்பதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இதுவரை 98 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. </p><p>காணாமல் போனவர்களின் உறவினர்களிடமிருந்து மரபணு பரிசோதனைக்கான மாதிரிகளை நேபாள பொலிஸ் சேகரித்து வருகிறது.



இதனிடையே, பெருவெள்ளத்தால் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரண முகாம்களில் போதிய வசதிகள் இல்லாததால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் உள்ளிட்டோர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>


மேலும், திபெத் பகுதியில் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதுடன், 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் நம்ரங் கோலா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 4 வீடுகளும் ஒரு தொங்கு பாலமும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இரண்டு சிறிய நீர்மின் நிலையங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-09-07T05:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியாமி விமான நிலையத்தில் அமேசான் சரக்கு விமானம் விபத்து: 5 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/at-least-5-dead-after-amazon-cargo-plane-1788743502"></link>
            <id>https://canadamirror.com/article/at-least-5-dead-after-amazon-cargo-plane-1788743502</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி, வாகனங்கள் மீது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி, வாகனங்கள் மீது மோதித் தீப்பற்றி எரிந்ததில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவானில் இருந்து வந்த 'அமேசான் பிரைம் ஏர்' அமைப்பின் போயிங் 767 ரக சரக்கு விமானம், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஓடுபாதையைத் தாண்டிச் சென்று அருகிலிருந்த வீதியில் பயணித்த வாகனங்கள் மீது மோதித் தீப்பற்றி எரிந்தது.</p><p>
இவ்விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்தும் 2 பேர் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/596b9564-fd32-421c-8a69-d17039d0a7aa/26-6a9e0f501b918.webp' /></p><p> </p><p>
விமானத்தின் காக்பிட்டில் சிக்கிய விமானிகள் மற்றும் வாகனங்களில் சிக்கியவர்கள் சுமார் 200 மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டனர். </p><p>
உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா அல்லது வாகனங்களில் இருந்தவர்களா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியாகவில்லை.
</p><p>இந்த விபத்து காரணமாக மியாமி விமான நிலையத்தில் 160க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 325க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.</p><p>
விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. </p><p>
விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் இடியுடன் கூடிய மழையும் மணிக்கு 48 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T04:28:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பிரபல டிவி தொகுப்பாளினி உட்பட 12 பேருக்குத் தூக்கு தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tv-presenter-among-12-sentenced-to-death-1788703248"></link>
            <id>https://canadamirror.com/article/tv-presenter-among-12-sentenced-to-death-1788703248</id>
            <summary type="text">எகிப்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைத் தயாரித்து கடத்திய வழக்கில், அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான சாரா கலீஃபா உட்பட 12 பேருக்குத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எகிப்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைத் தயாரித்து கடத்திய வழக்கில், அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான சாரா கலீஃபா உட்பட 12 பேருக்குத் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றக் கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><p>
39 வயதான சாரா கலீஃபா, எகிப்தில் குற்றவியல் தொடர்பான 'மிஷன் இம்பாசிபிள்' என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாவார். </p><p>
போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, செயற்கைப் போதைப்பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்த குற்றவியல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fa5d369-5466-46ea-9047-3bb4ae5316da/26-6a9d7215b0903.webp' /></p><p> </p><p>
மேலும், உரிமம் பெறாத சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன. 
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.
</p><p>கடந்த மாதம் முதற்கட்டத் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போதிலும், எகிப்திய சட்டப்படி மரண தண்டனை விவகாரங்களில் எகிப்தின் தலைமை மதத் தலைவரான 'கிராண்ட் முஃப்தி'யின் மத ரீதியான ஆலோசனையைப் பெற்ற பிறகே இத்தீர்ப்பு தற்போது முறைப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>
விசாரணையின் போது, 750 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்களும், அவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. </p><p>
20 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆடியோ/வீடியோ உரையாடல்கள் அடங்கிய மின்னணு ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. </p><p>
எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை சாரா கலீஃபா முற்றிலுமாக மறுத்துள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துப் புகைப்படம் எடுக்கப்படும் வரை தான் போதைப்பொருட்களைப் பார்த்ததே இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். </p><p>
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகச் சாரா கலீஃபாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட 2025 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, எகிப்தில் அந்த ஆண்டில் மட்டும் 492 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 23 தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.</p><p> 
சர்வதேச சட்ட விதிகளின்படி "திட்டமிட்ட கொலை" குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களுக்கும் எகிப்தில் மரண தண்டனை வழங்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T01:08:22+00:00</updated>
        </entry>
    </feed>
