<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-13T13:41:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் கணவன் தாக்குதலை தடுத்ததால் தூக்கிலிடப்பட்ட 23 வயதான இளம் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/23-year-old-marzieh-nieri-hanged-in-iran-1786598914"></link>
            <id>https://canadamirror.com/article/23-year-old-marzieh-nieri-hanged-in-iran-1786598914</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.


அந்தத் தண்டனை 2026 ஆகஸ்ட் 8 அதிகாலை கஸ்வின் மத்திய சிறையில் நிறைவேற்றப்பட்டது.
</p><p>
குடும்ப அழுத்தத்தின் காரணமாக தனது 17-வது வயதில் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் நெய்ரி, 2021 அக்டோபரில் தனக்கு 18 வயதாக இருந்தபோது, மதுபோதையில் இருந்த தனது கணவரின் தொழில் கூட்டாளி ஒருவர் தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்றதாக தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd10c2e8-b983-4edb-83d4-a96bdcbd7c7f/26-6a7d5603f3682.webp' /></p><h2>கணவரின் தொழில் கூட்டாளி&nbsp;&nbsp;பாலியல் துன்புறுத்தல்</h2><p> 

அப்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சமையலறைக் கத்தியைப் பயன்படுத்தியதாகவும், ஏற்பட்ட மோதலில் அந்த நபரும் தனது கணவரும் உயிரிழந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.</p><p> 

சம்பவத்துக்குப் பின்னர் சில நாட்களில் அதிகாரிகளிடம் சரணடைந்த அவர், தனது செயல் தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்டது என வாதிட்டபோதும், ஈரான் நீதிமன்றங்கள் அந்த வாதத்தை ஏற்கவில்லை. </p><p>

இதையடுத்து, ஈரானின் ‘கிசாஸ்’ எனப்படும் பழிக்குப் பழி சட்ட நடைமுறையின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 


 2026ஆம் ஆண்டில் இதுவரை ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறைந்தது 14 ஆக உயர்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. </p><p>

தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்ற ஒருவரைக் கொன்றதாகக் கூறப்பட்ட வழக்கில் 2014ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட ரெய்ஹானே ஜப்பாரியின் வழக்குடன் நெய்ரியின் வழக்கும் ஒப்பிடப்படுகிறது.
</p><p>
 ஈரானின் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் ‘கிசாஸ்’ உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சட்டப் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.</p><p>

 இருப்பினும், நெய்ரி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார் என்பது நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை ஆனால் அவர் முன்வைத்தது தற்காப்பு வாதம் என்று செய்திகள் கூறுகிறது</p>]]></content>
            <updated>2026-08-13T13:34:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி பதவியை தொடர விருப்பம் ..ஆனால்..;டிரம்ப் பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/willing-to-continue-as-president-trump-s-response-1786625059"></link>
            <id>https://canadamirror.com/article/willing-to-continue-as-president-trump-s-response-1786625059</id>
            <summary type="text">&amp;nbsp; &#039;எனக்கு மிகவும் விருப்பம்தான் ஆனால் சட்டம் வலுவானது&#039; என 2028 தேர்தல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 'எனக்கு மிகவும் விருப்பம்தான் ஆனால் சட்டம் வலுவானது' என 2028 தேர்தல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது,
</p><p>
 எனக்கு மிகவும் விருப்பம் தான். 2028ல் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் தடை உள்ளது. மற்றொரு முறை போட்டியிடுவதை வரவேற்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b93b5fb-5a52-4818-8151-984bb0a2e913/26-6a7dbc24c7493.webp' /></p><h2>&nbsp;டிரம்ப் போட்டியிட முடியாத சூழல்</h2><p> ஆனால் சட்ட வரம்புகள் என்னை அவ்வாறு செய்யவிடாமல் தடுக்கிறது.

எனது அரசியல் ஆதரவாளர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகள் இருந்தபோதிலும், ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்ப சட்டம் வெளிப்படையாகத் தடுக்கிறது. </p><p>எல்லோரும் என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள், மேலும் அந்த விஷயத்தில் சட்டம் மிகவும் கடுமையாக இருக்கிறது . இருந்தாலும், எனக்கு பதவிக்காலத்தைத் தொடர்வதில் ஆர்வம் இருக்கிறது என அதிபர் டிரம்ப் கூறினார்.
</p><p>அதேசமயம்&nbsp; அமெரிக்காவில்&nbsp; &nbsp;4 ஆண்டுகளுக்கு ஒருமுறை&nbsp; ஜனாதிபதி&nbsp; &nbsp;பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22வது திருத்தப்படி விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. </p><p>

இதனால் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட முடியாத சூழல் உள்ளமை&nbsp; குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-13T12:41:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு லண்டனில் 25 வயதான பேருந்து ஓட்டுநர் சுட்டுக் கொலை ; நண்பர்கள் உருக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/25-year-old-bus-driver-shot-dead-in-south-london-1786609837"></link>
            <id>https://canadamirror.com/article/25-year-old-bus-driver-shot-dead-in-south-london-1786609837</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தெற்கு லண்டனின் கிளாப்ஹாம் (Clapham) பகுதியில் உள்ள பப் ஒன்றுக்கு வெளியே 25 வயதான பேருந்து ஓட்டுநர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தெற்கு லண்டனின் கிளாப்ஹாம் (Clapham) பகுதியில் உள்ள பப் ஒன்றுக்கு வெளியே 25 வயதான பேருந்து ஓட்டுநர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

லண்டன் பெருநகரக் காவல் துறையினரால் (Metropolitan Police) ஆகஸ்ட்-மேரி பைல்-அகா அமோவா (Auguste-Marie Bile-aka Amoa) என அடையாளப்படுத்தப்பட்ட அந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95378f96-fa19-41e0-8536-d5e960c30b87/26-6a7d80aef01db.webp' /></p><h2>அவர் மிகவும் அமைதியானவர், கடின உழைப்பாளி</h2><p>
</p><p>
வில்லிங்டன் சாலையில் (Willington Road) உள்ள தி லேண்டர் (The Landor) பப் அருகே திங்கள்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. </p><p>நான்கு முறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கூறிய அப்பகுதி மக்கள், சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞருக்கு முதலுதவி செய்ய முயன்றனர். </p><p>

 மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சியையும் தாண்டி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
</p><p>
 சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, துப்பாக்கிக் காயத்துடன் மருத்துவமனைக்கு வந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கொலை சந்தேகத்தின் பேரில் போலிஸார் கைது செய்தனர். சிகிச்சை பெற்று வரும் அவர், போலிஸாரின் பலத்த காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

உயிரிழந்த இளைஞரின் நண்பர்கள் மற்றும் சக பேருந்து ஓட்டுநர்கள் தெரிவிக்கையில், “அவர் மிகவும் அமைதியானவர், கடின உழைப்பாளி. </p><p>எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லாத அவர், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததாலேயே (Wrong Place at Wrong Time) இந்த கொடூர சம்பவத்திற்குப் பலியாகியுள்ளார்” என உருக்கமாகக் கூறினர். </p><p>

கொலைக்கான முகாந்திரம் மற்றும் பின்னணி குறித்துத் தலைமை துப்பறியும் அதிகாரி கிளேர் கைவர் (Claire Guiver) தலைமையிலான சிறப்புக் குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T12:33:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொருளாதார நெருக்கடி ; பிரிக்ஸ் வங்கியில் இணையும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/economic-crisis-iran-joins-brics-bank-1786623927"></link>
            <id>https://canadamirror.com/article/economic-crisis-iran-joins-brics-bank-1786623927</id>
            <summary type="text">பிரிக்ஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் புதிய வளர்ச்சி வங்கியில் ஈரான் விரைவில் இணையவுள்ளதாக ஈரானன் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரிக்ஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் புதிய வளர்ச்சி வங்கியில் ஈரான் விரைவில் இணையவுள்ளதாக ஈரானன் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
</p><p>


அமெரிக்காவுடனான போரினால் ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், அந்நாடு தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66ee7eb1-e163-4cd3-a857-b009735d499b/26-6a7db7b98ed38.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், புதிய வளர்ச்சி வங்கியில் இணையும் முடிவை ஈரான் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



எனினும், ஈரான் இணைவது தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. </p><p>அதேவேளை, புதிய வளர்ச்சி வங்கியின் தரப்பிலிருந்தும் இது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
</p><p>


இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கிய பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கி, உறுப்பு நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது.
</p><p>


பிரிக்ஸ் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



அதேவேளை ஈரான் கடந்த 2024ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பில் அதிகாரப்பூர்வமாக இணைந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-13T12:23:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெக்சாஸ் மாநிலத்தில் இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/military-helicopter-crash-in-texas-2-died-1786623603"></link>
            <id>https://canadamirror.com/article/military-helicopter-crash-in-texas-2-died-1786623603</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் அபாசி (Apache) இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் உய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் அபாசி (Apache) இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
</p><p>


இந்த விபத்து ஆஸ்டினிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் வடக்கே உள்ள பெல் கவுண்டியில் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97866a17-b43f-49cb-a514-cc86ce500a8d/26-6a7db6748307f.webp' /></p><p>


ஃபோர்ட் ஹூட் இராணுவத் தளத்தின் நடவடிக்கைகளின்போது AH-64 அபாசி ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


ஹெலிக்கொப்டரில் பயணித்த இரு வீரர்களும் உயிரிழந்துள்ளதாக பெல் கவுண்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

எனினும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் பணிகள் நிறைவடையும் வரை அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படமாட்டாது என ஃபோர்ட் ஹூட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>


 ஹெலிக்கொப்டர் விழுந்த பகுதியில் பாரிய புல்வெளித் தீ ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.



விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T12:18:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/6-indians-2-indians-in-top-25-canada-immigrants-1786607542"></link>
            <id>https://canadamirror.com/article/6-indians-2-indians-in-top-25-canada-immigrants-1786607542</id>
            <summary type="text">டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.


புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு ஆற்றிய பங்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.</p><p>


புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது என்னும் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது.</p><p>

2026ஆம் ஆண்டுக்கான டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றோர் பட்டியலில், 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.
</p><p>
விருது பெற்றவர்களில் ஒருவரான Prabath Pullay, வான்கூவரிலுள்ள, சால்வேஷன் ஆர்மி என்னும் திருச்சபை மற்றும் சமூக சேவை அமைப்பு நடத்தும் Belkin Communities of Hope என்னும் அமைப்பில் எக்சிகியூட்டிவ் இயக்குநராக உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa827e2-d11d-4341-88f5-f1c690e2ebad/26-6a7d77b7a60d8.webp' /></p><p>
இவர், 1996ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர் ஆவார்.
</p><p>
இலங்கைத் தமிழரான Roy Ratnavel என்பவரும் 2026ஆம் ஆண்டுக்கான டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.</p><p>

தனது 18ஆவது வயதில் கனடாவுக்கு புலம்பெயர்ந்த Roy Ratnavel, ஏற்கனவே 2025ஆம் ஆண்டுக்கான Tamil American Pioneer (TAP) Award மற்றும் 2020ஆம் ஆண்டு, Best Executive Award ஆகிய விருதுகளைப் பெற்றவர் ஆவார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1897f89-bb8e-43e4-9a20-43cbe79d03c7/26-6a7d77b85a3b4.webp' /></p><p>
இந்தியர்களைப் பொறுத்தவரை, ஷிவானிஸ் கிச்சன் என்னும் உணவு தயாரிப்பு நிறுவனத்தை நிறுவிய Shivani Dhamija, Fraser Health அமைப்பில் Regional director பொறுப்பு வகிக்கும் Sneha Jain,
</p><p>

கலையுலகைச் சேர்ந்த Aparna Rangnekar, Irrigation Industry Association of British Columbia அமைப்பில் Executive director பொறுப்பு வகிக்கும் Poshak Sachdeva, தொழிலதிபரான Jatinder Pal Singh மற்றும் நடிகர் மற்றும் எழுத்தாளரான Supinder Wraich ஆகியோருக்கு டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றோர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T07:52:28+00:00</updated>
        </entry>
    </feed>
