<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-10T08:07:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லித்தியம்-அயன் பேட்டரிகளால் அதிகரிக்கும் தீ விபத்துகள்: எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lithium-ion-battery-fires-on-rise-canadian-cities-1786347142"></link>
            <id>https://canadamirror.com/article/lithium-ion-battery-fires-on-rise-canadian-cities-1786347142</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பல்வேறு நகரங்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள் வெடித்து ஏற்படும் தீ விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தீயணைப்புத் துறையினர் தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பல்வேறு நகரங்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள் வெடித்து ஏற்படும் தீ விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தீயணைப்புத் துறையினர் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>ஆல்பர்ட்டா மற்றும் ஒன்டாரியோ மாகாணங்களில் கடந்த வாரத்தில் மட்டும் பல விபத்துகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக கல்கரி நகரில் 24 மணி நேரத்திற்குள் 3 இடங்களில் இத்தகைய விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
</p><p>மெடிசின் ஹாட் பகுதியைச் சேர்ந்த ஃப்ரெட் டென்னிஸ் என்பவரது வீட்டின் பின்புறத்தில் இருந்த 'சோலார் லைட்' பேட்டரி வெடித்ததில் வீடு கடுமையாகச் சேதமடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ac5ebd-3191-4537-b84c-72eabe11ba81/26-6a797e880b5a0.webp' /></p><p> </p><p>
தம்பதியினர் வெளியே சென்றிருந்த நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் அவர்களின் வளர்ப்பு நாயும் பூனையும் தீயில் கருகி உயிரிழந்தன.
</p><p>ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், மின்சார சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர்களில் இந்தப் பேட்டரிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.</p><p> 
சார்ஜ் செய்யும்போது பேட்டரி அதிக வெப்பமடைந்து 'தெர்மல் ரன்அவே' எனும் நிலையை அடையும் போது மிக வேகமாகவும் பேரழிவை ஏற்படுத்தும் வகையிலும் தீ பரவுகிறது.</p><p>
நகரத்தின் பொதுப் பாதுகாப்புக்கு மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய அச்சுறுத்தல் லித்தியம்-அயன் பேட்டரி தீ விபத்துகளே என டோரண்டோ நகரின் தீயணைப்புத் தலைவர் ஜிம் ஜெஸப் தெரிவித்துள்ளார்.
</p><p>சாதனம் 100% சார்ஜ் ஆனவுடன் சார்ஜரிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், பாதுகாப்புத் தரச் சான்றிதழ் பெறாத சாதனங்கள் மற்றும் போலி சார்ஜர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>சேதமடைந்த பேட்டரிகளை வீட்டுக்குப்பைகளுடன் வீசாமல், உரிய முறையில் மறுசுழற்சி மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>கனடாவில் விற்பனை செய்யப்படும் லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்புகள் மீது கடுமையான தேசியக் கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறை விதிகளையும் கொண்டு வர வேண்டும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T07:39:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காட்டுத்தீ: வீட்டை விட்டு வெளியேற முயன்ற 80 வயது மூதாட்டி உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/wildfire-claims-the-life-of-80-year-old-woman-1786345803"></link>
            <id>https://canadamirror.com/article/wildfire-claims-the-life-of-80-year-old-woman-1786345803</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சம்மர்லேண்ட் பகுதியில் வேகமாகப் பரவி வரும் &#039;பால்ட் ரேஞ்ச்&#039; காட்டுத்தீ காரணமாக 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சம்மர்லேண்ட் பகுதியில் வேகமாகப் பரவி வரும் 'பால்ட் ரேஞ்ச்' காட்டுத்தீ காரணமாக 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கனடிய அரச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
மேடோ வேலி பகுதியில் காட்டுத்தீ பரவியதையடுத்து, தனது குடும்ப உறுப்பினருடன் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோதே அந்த மூதாட்டி திடீரென உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c36b0cf-1c4a-43ab-947d-8115d6cf0ae2/26-6a797b9dc271c.webp' /></p><p> </p><p>
சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில், தீயிலிருந்து தப்பிக்க முயன்ற மற்றொரு நபர் மூதாட்டியின் உடலைப் பார்த்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
</p><p>மூதாட்டியின் இறப்பிற்கு காட்டுத்தீயே காரணம் எனப் பொலிஸார் நம்பும் போதிலும், மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனைச் சேவை விசாரணையைத் தொடங்கியுள்ளது. </p><p>வேறு எவரும் இக்காட்டுத்தீயில் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை. 
வெள்ளிக்கிழமை மாலை 5:15 மணியளவில் பற்றிய இக்காட்டுத்தீ, மிகக் குறுகிய காலத்தில் பிரம்மாண்டமாகப் பரவி, ஒகனகன் ஏரியை நோக்கி நகர்ந்தது.</p><p> இதில் ஃபோல்டர் மற்றும் மேடோ வேலி பகுதிகள் கடுமையாக எாிந்து சேதமடைந்துள்ளன. 
காட்டுத்தீயின் தீவிரத்தால் சம்மர்லேண்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T07:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானைக் முடக்க டிரம்ப் வகுக்கும் புதிய வியூகம்! விரைவில் அதிரடித் தாக்குதல் நடத்தக்கூடும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-plans-to-destroy-iran-s-pickaxe-mountain-1786346250"></link>
            <id>https://canadamirror.com/article/trump-plans-to-destroy-iran-s-pickaxe-mountain-1786346250</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானைக் முடக்க டிரம்ப் வகுக்கும் புதிய வியூகம் குறித்த தகவல் வெளியாகி மீண்டும் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 அதன்படி ஈரானின் நிலத்தடி அணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானைக் முடக்க டிரம்ப் வகுக்கும் புதிய வியூகம் குறித்த தகவல் வெளியாகி மீண்டும் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 அதன்படி ஈரானின் நிலத்தடி அணுஆயுதத் திட்டங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதைத் தடுப்பதற்காக, அந்நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ‘பிக்ஏக்ஸ்’ (Pickaxe Mountain) மலைப்பகுதி சுரங்கப் பாதைகளின் நுழைவாயில்களைத் தாக்கித் தகர்ப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகப் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01aba7eb-de2c-470b-a439-08ed1830b015/26-6a797b0c0cba1.webp' /></p><h2>&nbsp; அமெரிக்கப் படைகள் விரைவில் அதிரடித் தாக்குதல் நடத்தக்கூடும்</h2><p> </p><p>

ஈரானின் நடான்ஸ் (Natanz) அணு உலையை அடுத்துள்ள இமயமலை போன்ற கடினமான பாறைப்பகுதியில் அமைந்துள்ள இந்த மையத்தை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் விரைவில் அதிரடித் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

ஈரானிய மொழியில் ‘கூ-எ கோலங் காஸ் லா’ (Kuh-e Kolang Gaz La) என அழைக்கப்படும் இந்த பிக்ஏக்ஸ் மலை மையம், பூமிக்கு அடியில் சுமார் 100 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் கிரானைட் பாறைகளுக்கு நடுவே கட்டப்பட்டுள்ளது. </p><p>

இங்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உருவாக்கப் பயன்படும் பல்லாயிரக்கணக்கான சென்ட்ரிஃபியூஜ் (Centrifuge) இயந்திரங்களை ஈரான் மறைத்து வைத்திருப்பதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.
</p><p>
 மிகக் கடினமான பாறைத் தளங்களுக்கு அடியில் அமைந்துள்ளதால், வழக்கமான பங்கர் பாஸ்டர் (Bunker Buster) குண்டுகளால் கூட இந்த மையத்தை முழுமையாக அழிக்க முடியாது என ராணுவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p>

இந்நிலையில், இந்த நிலத்தடி மையத்தை முழுமையாக அழிக்க முடியாவிட்டாலும், அங்கு அமைந்துள்ள சுரங்கப் பாதைகளின் நுழைவாயில்கள் (Tunnel Entrances) மற்றும் காற்றோட்ட அமைப்புகளைச் சக்திவாய்ந்த ஏவுகணைகள் மூலம் தகர்ப்பதன் மூலம், அந்த மையத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்க முடியும் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் கணித்துள்ளனர். </p><p>

இதன்மூலம் சென்ட்ரிஃபியூஜ் இயந்திரங்களை வெளியே கொண்டு வரவோ அல்லது அணுஆயுதப் பணிகளைத் தொடரவோ முடியாதவாறு ஈரானைக் முடக்க முடியும் என வாஷிங்டன் திட்டமிட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தொடர் தாக்குதல்கள் மற்றும் வான்வழி மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், “ஈரான் அணுஆயுதத் திட்டத்தில் முன்னேற்றம் அடைவதைச் சகித்துக் கொள்ள முடியாது என்றும், பிக்ஏக்ஸ் மலைப் பகுதியை மிக விரைவில் கடுமையாகத் தாக்குவோம்” என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். </p><p>

நிலத்தடி அணுஆயுத மையங்களை இலக்கு வைத்து அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கும் இந்த அடுத்தகட்டப் போர்த் திட்டம், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளமை உலகில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T07:15:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் காதலியை கொலை செய்து தப்பி ஓடிய இந்தியர்; ஜேர்மனியில் மடக்கிய FBI அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-man-arrested-germany-murder-girl-friend-us-1786342395"></link>
            <id>https://canadamirror.com/article/indian-man-arrested-germany-murder-girl-friend-us-1786342395</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவியான தனது காதலியைப் படுகொலை செய்துவிட்டு, தாயகமான இந்தியாவிற்குத் தப்பியோட முயன்ற 20 வயது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவியான தனது காதலியைப் படுகொலை செய்துவிட்டு, தாயகமான இந்தியாவிற்குத் தப்பியோட முயன்ற 20 வயது இந்திய இளைஞர் ஜெர்மனி தலைநகர் பெர்லின் விமான நிலையத்தில் வைத்து சர்வதேசக் காவல் துறை மற்றும் FBI&nbsp; அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கைது செய்யப்பட்ட வாலிபர் வருண் பேட்சிஹாரி (என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


அமெரிக்காவின் டியூக்சன் (Tucson) நகரில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் வணிகப் பகுப்பாய்வு (Business Analytics) படித்து வந்த வருண் பேட்சிஹாரியும், 19 வயதான ஜூலிசா ரூபி சலசார் (Julissa Rubi Salazar) என்ற மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23535d90-4177-4ed6-b6ff-82f8091241e0/26-6a796bfd25453.webp' /></p><h2>ஜேர்மனியில் மடக்கிய FBI அதிகாரிகள்</h2><p> </p><p>

வருணின் வன்முறைப் போக்கால் அதிருப்தியடைந்த ஜூலிசா, அவருடனான உறவை முறித்துக் கொள்ளத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஜூலிசாவை வருண் கழுத்தை நெரித்துக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளார்.</p><p>

கொலைக்குப் பிறகு தப்பிப்பதற்காக, ஜூலிசாவின் செல்போன் மற்றும் வங்கிக் கார்டுகளைத் திருடிய வருண், கொலையை மறைக்க ஜூலிசாவின் தாயாருக்குத் தவறான குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளார். </p><p>

தொடர்ந்து ஜூலிசாவின் பணத்தைப் பயன்படுத்தி டியூக்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து ஹூஸ்டன் வழியாக ஜெர்மனிக்கு விமானத்தில் ஏறியுள்ளார். 

ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்குப் பறக்க அவர் திட்டமிட்டிருந்ததாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனிடையே ஜூலிசாவின் உடலைக் கைப்பற்றிய டியூக்சன் காவல் துறையினர், வருண் மீது முதல் நிலைக்கொலை (First-degree murder) மற்றும் கடத்தல் வழக்குப்பதிவு செய்து சர்வதேச அளவில் தேடுதல் எச்சரிக்கை விடுத்தனர்.
</p><p>
 FBI&nbsp; அமைப்பும் ஜெர்மன் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டதால், ஜெர்மனியில் விமானம் தரையிறங்கிய உடனேயே வருண் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

 தற்போது ஜெர்மனி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை விரைவில் அமெரிக்காவிற்கு நாடுகடத்தி வழக்கு விசாரணை நடத்த அரிசோனா காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-10T07:01:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக டிரம்ப் எடுக்கும் அதிரடி நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-moves-to-increase-economic-pressure-on-iran-1786343949"></link>
            <id>https://canadamirror.com/article/trump-moves-to-increase-economic-pressure-on-iran-1786343949</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரான் கடும் கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், அதற்கு எதிரான கூடுதல் ராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவதைத் தவிர்த்துவிட்டு, பொருளாதார அழுத்தத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரான் கடும் கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், அதற்கு எதிரான கூடுதல் ராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவதைத் தவிர்த்துவிட்டு, பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.</p><p>



ஈரானின் நடவடிக்கைகளை நாங்கள் சாதாரணமாகக் கையாளுகிறோம் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.



ஈரானில் நிலவும் கடுமையான பணவீக்கம் மற்றும் அவர்களிடம் பணம் இல்லாததை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/527ff231-5d80-49bd-8f9d-ee8348301068/26-6a7977bd352c8.webp' /></p><p>
</p><p>


போர் தொடங்கியதிலிருந்து ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால் எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ளது.</p><p> 



இருப்பினும், அமெரிக்க நுகர்வோர் இந்தப் போரினால் பெரியளவில் சிரமத்தை எதிர்நோக்கும் அளவிற்கு அமெரிக்கா எண்ணெய் விலைகளை உயர்த்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T06:36:54+00:00</updated>
        </entry>
    </feed>
