<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-24T14:42:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏரியில் நீந்திய 8 வயது சிறுமி அரிய வகை தொற்றினால் பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/8-year-old-dies-from-rare-brain-eating-amoeba-1787573932"></link>
            <id>https://canadamirror.com/article/8-year-old-dies-from-rare-brain-eating-amoeba-1787573932</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ஏரியில் நீந்தியபோது அரிய வகை உயிர்க்கொல்லி அமீபா தொற்றுக்கு உள்ளானதாகக் கருதப்படும் 8 வயது சிறுமி உயிரிழந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ஏரியில் நீந்தியபோது அரிய வகை உயிர்க்கொல்லி அமீபா தொற்றுக்கு உள்ளானதாகக் கருதப்படும் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.</p><p>
வடக்கு லூசியானாவின் ருஸ்டொன் பகுதியைச் சேர்ந்த லில்லியன் ஸ்மார்ட் என்ற சிறுமி, தனது 8ஆவது பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளான சனிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>Naegleria fowleri எனப்படும் இந்த நுண்ணுயிரி பொதுவாக “மூளையை உண்ணும் அமீபா” என அழைக்கப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8309194-fb6e-46ca-a985-13365b716517/26-6a8c36ae0ece3.webp' /></p><p>
லிலியன் இந்த அமீபா தொற்றை க்ளேய்போர்ன் ஏரியில் நீந்தியபோது பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. அந்த ஏரி ருஸ்டன் நகரிலிருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.</p><p>
குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், அமீபா தொற்றினால் சிறுமியின் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்ததால் அவர் குணமடைய முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
</p><p>லிலியன் கடந்த ஆகஸ்ட் 15ஆம் திகதி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்து, இரட்டைப் பார்வை உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>Naegleria fowleri பொதுவாக வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற இடங்களில் காணப்படும். அமீபா கலந்த நீர் மூக்கின் வழியாக உடலுக்குள் சென்று மூளையை அடையும் போது தீவிர மூளைத் தொற்று ஏற்படலாம்.</p><p>
இந்தத் தொற்று நீரை விழுங்குவதன் மூலம் ஏற்படாது என்பதுடன், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் பரவாது.
ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை காணப்படலாம்.</p><p> பின்னர் கழுத்து இறுக்கம், குழப்பநிலை, சமநிலை இழப்பு உள்ளிட்ட தீவிர அறிகுறிகள் வேகமாக உருவாகக்கூடும்.
</p><p>அண்மைய ஆண்டுகளில் வெப்பநிலை அதிகரிப்பால் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிலும் வெப்பமான நன்னீர் பரவலாகி வருவதால், இந்த அமீபா காணப்படும் பகுதிகள் விரிவடையக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் பிரபல நிழல் உலக தாதா சுட்டுக்கொலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-underworld-don-yanis-yushvaev-shot-dead-1787576498"></link>
            <id>https://canadamirror.com/article/israel-underworld-don-yanis-yushvaev-shot-dead-1787576498</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இஸ்ரேலின் பிரபல நிழல் உலக தாதாவும், “காகசஸ் மாஃபியா” (Caucasian Jewish Mafia) அமைப்பின் தலைவருமான யானிஸ் யுஷ்வேவ் (Yanis Yushvaev – 40) ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இஸ்ரேலின் பிரபல நிழல் உலக தாதாவும், “காகசஸ் மாஃபியா” (Caucasian Jewish Mafia) அமைப்பின் தலைவருமான யானிஸ் யுஷ்வேவ் (Yanis Yushvaev – 40) சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

கிசாரியா (Caesarea) பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியறியபோது, மர்ம நபர் ஒருவரால் மிக அருகில் வைத்துத் தலையில் சுடப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15c822b7-abd3-4540-bba3-19c917549912/26-6a8c40b40aade.webp' /></p><p><span style="font-size: 28px;">&nbsp;</span><span style="color: inherit; font-size: 1.75rem;">தப்பியோடிய கொலையாளி</span></p><p>
</p><p>
ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட யானிஸ் யுஷ்வேவ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p><p> 

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்க இஸ்ரேல் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது.</p><p> 

இக்கொலை சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

 40 வயதான யானிஸ் யுஷ்வேவ், இஸ்ரேலிய காவல்துறையின் குற்றப் பட்டியலில் முக்கிய நபராக இருந்துவந்துள்ளார்.</p><p> 

துப்பாக்கிச் சூடு, கையெறி குண்டு வீச்சு மற்றும் வாகனங்களுக்குத் தீ வைப்பு உள்ளிட்ட பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் இவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் எந்த வழக்குகளிலும் அவர் தண்டிக்கப்படவில்லை.
</p><p>

கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில், தான் ஒரு நேர்மையான தொழிலதிபர் என்றும், சொகுசு கார்களைப் பயன்படுத்துவதால் காவல்துறை தன் மீது வீண் சந்தேகம் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.</p><p> 

இருப்பினும், இஸ்ரேலில் இயங்கி வரும் காகசியன் யூத மாஃபியா கும்பலின் தலைவராகச் செயல்பட்டு வந்த இவரின் படுகொலை, போட்டியின் காரணமாக நடந்திருக்கலாம் என இஸ்‌ரேல் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T13:38:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் மீளப்பெறப்படும் 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nearly-three-million-teslas-recalled-1787569790"></link>
            <id>https://canadamirror.com/article/nearly-three-million-teslas-recalled-1787569790</id>
            <summary type="text">மின்சார வாகனங்களின் நவீன வடிவமைப்பின் முக்கிய அடையாளமாக மாறியுள்ள மறைவு கதவுக் கைப்பிடிகள் தற்போது சீனாவின் மிகப்பெரிய வாகன மீளப்பெறும் நடவடிக்கைக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்சார வாகனங்களின் நவீன வடிவமைப்பின் முக்கிய அடையாளமாக மாறியுள்ள மறைவு கதவுக் கைப்பிடிகள் தற்போது சீனாவின் மிகப்பெரிய வாகன மீளப்பெறும் நடவடிக்கைக்கு காரணமாகியுள்ளன.</p><p>
சீனாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 29.8 இலட்சம் டெஸ்லா வாகனங்கள் உட்பட மொத்தம் 40 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இந்த நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
டெஸ்லா, ஸிபஙெ், ஸியோமி மற்றும் ஜீலி உள்ளிட்ட நிறுவனங்களின் சில மின்சார வாகனங்கள் இதில் அடங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/295d0a80-a144-4194-ad41-181e2a8b9c1e/26-6a8c268101a4a.webp' /></p><p>
</p><p>விபத்து அல்லது அவசரநிலை ஏற்படும் போது, வாகனத்தின் உட்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கதவுக் கைப்பிடிகளை கண்டுபிடித்து திறப்பது கடினமாக இருக்கலாம் என்ற பாதுகாப்பு கவலைகள் எழுந்துள்ளன.</p><p>
குறிப்பாக, கடுமையான மோதலின் காரணமாக வாகனத்தின் குறைந்த மின்னழுத்த மின்சார அமைப்பு செயலிழந்தால், பயணிகள் விரைவாக வாகனத்திலிருந்து வெளியேறுவதற்கு இது தடையாக இருக்கலாம் என்றும், வெளியில் இருந்து மீட்புப் பணியில் ஈடுபடுவோருக்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம் என்றும் டெஸ்லா தெரிவித்துள்ளது.</p><p>
மீளப்பெறப்படும் வாகனங்களில் உட்புறக் கதவுகளில் பாதுகாப்பு எச்சரிக்கை ஒட்டிகள் பொருத்தப்படுவதுடன், விபத்து ஏற்பட்டால் வாகனத்தின் ஜன்னல்கள் தானாகக் கீழிறங்கும் வகையில் மென்பொருள் புதுப்பிப்பு வழங்கப்பட உள்ளது.</p><p>
சீனாவில் ஸியோமி நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் தொடர்பான இரண்டு உயிரிழப்பு விபத்துகளுக்குப் பின்னரும் இந்த கதவுக் கைப்பிடி வடிவமைப்பு தொடர்பான பாதுகாப்பு கேள்விகள் தீவிரமடைந்துள்ளன.
</p><p> அந்த சம்பவங்களில் மின்சார அமைப்பு செயலிழந்ததால் கதவுகளைத் திறக்க முடியாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.
இந்த மீளப்பெறும் நடவடிக்கை சீனாவுக்கு வெளியே விற்பனை செய்யப்பட்ட இதே வகை வாகனங்களுக்கும் பொருந்துமா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T13:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் புதிய வரிகளால் கனடாவில் வேலை இழப்புகள் தவிர்க்க முடியாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/job-loss-is-inevitable-bc-chamber-of-commerce-1787573247"></link>
            <id>https://canadamirror.com/article/job-loss-is-inevitable-bc-chamber-of-commerce-1787573247</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனேடியப் பொருட்களுக்கு புதிய கடுமையான இறக்குமதி வரிகளை விதித்துள்ள நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனேடியப் பொருட்களுக்கு புதிய கடுமையான இறக்குமதி வரிகளை விதித்துள்ள நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வேலை இழப்புகள் “தவிர்க்க முடியாதவை” எனவும், சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாகவும் பிரிட்டிஷ் கொலம்பிய வர்த்தக சம்மேளனம் எச்சரித்துள்ளது.</p><p>
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கனடா பிரதமர் மார்க் கார்னி முடிவெடுத்துள்ள நிலையில், புதிய வர்த்தக நடவடிக்கைகளை தொழில் துறையினர் கவலையுடன் அவதானித்து வருகின்றனர்.</p><p>
வர்த்தகப் போரில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றம் மீண்டும் அதே நிச்சயமற்ற சூழ்நிலைக்கே தொழில் துறையை கொண்டு சென்றுள்ளதாக வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஜென் ரெய்லி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48892baa-92a0-45b8-8c70-30dae2f57391/26-6a8c3400e7bbc.webp' /></p><p>
</p><p>கடந்த 21 மாதங்களில் வர்த்தக நிலைப்பாட்டில் 15 மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் தொடர்ச்சியான மாற்றங்கள் காரணமாக வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து நிச்சயமற்ற சூழலில் இயங்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே புதிய வரிகளால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என ஜென் தெரிவித்துள்ளார்.</p><p>
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில கனேடியப் பொருட்களுக்கு தற்போது 50 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், அந்த அளவிலான வரியை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் தாங்கிக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.</p><p>
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்தச் சூழ்நிலையிலிருந்து பாதிப்பின்றி வெளியேற முடியுமா என்பது குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டு வரும் சொப்ட்வுட் லும்பர் எனப்படும் மென்மரத் தொழில்துறையும் புதிய வரிகளால் மேலும் பாதிக்கப்படுவதாக வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.</p><p>
மென்மர ஏற்றுமதிக்கு ஏற்கனவே மொத்தமாக 45 சதவீத வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதன் காரணமாக வேலை இழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.</p><p>
எனினும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் கனடாவின் இறையாண்மை தொடர்பான விடயங்களும் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி எடுத்த முடிவு சரியானது என்றே தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் மகனை இலக்குவைக்கும் ஈரான்; 10 மில்லியன் டாலர் வெகுமதி ; உலக அரங்கில் பதற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iranian-state-tv-broadcast-target-barron-trump-1787575851"></link>
            <id>https://canadamirror.com/article/iranian-state-tv-broadcast-target-barron-trump-1787575851</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இளைய மகனான பரோன் டிரம்பைக் இலக்கு வைத்து, ஈரான் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ள வீடியோ சர்வதேச அளவில் பெரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இளைய மகனான பரோன் டிரம்பைக் இலக்கு வைத்து, ஈரான் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ள வீடியோ சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

சுமார் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தத் தொகுப்பில், பரோன் டிரம்பைக் கண்காணிப்பது போன்ற அனிமேஷன் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><p> 

மேலும், அவரை நெருங்குவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சிகள் விவரிக்கப்பட்டு, அவரைப் பற்றியத் தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19b30361-46ff-4ad5-bad4-79cd614089eb/26-6a8c3e2d3d607.webp' /></p><h2>&nbsp;10 மில்லியன் டாலர் வெகுமதி</h2><p>
</p><p>

இந்த வீடியோவில் பரோன் டிரம்ப் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள், அவர் அடிக்கடி செல்லும் இடங்கள் மற்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அமெரிக்கச் சீக்ரெட் சர்வீஸ் (Secret Service) பாதுகாப்பு வளையங்களை ஊடுருவுவது போன்ற கிராபிக்ஸ் சித்தரிப்புகள் இடம்பெற்றுள்ளன. </p><p>

அமெரிக்க அதிபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை நேரடியாகவே இலக்கு வைத்து ஈரான் அரசு ஊடகம் இத்தகைய பகிரங்க மிரட்டலை விடுத்திருப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
</p><p>
ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) மற்றும் அதன் ஆதரவு பெற்ற அமைப்புகள் ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது முக்கிய அதிகாரிகளுக்கு எதிராகப் பல்வேறு மிரட்டல்களை விடுத்து வந்த சூழலில், தற்போது டொனால்ட் டிரம்பின் குடும்ப உறுப்பினர் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.</p><p>

முன்னதாக 2020-ஆம் ஆண்டு ஈரான் தளபதி காசெம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு ஈரான் மிரட்டல் விடுத்து வந்தது.
</p><p>

ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த அச்சுறுத்தல் வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் அதன் பின்னணியில் உள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன

.</p><p> ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் போர் மற்றும் பொருளாதாரத் தடைகள் சார்ந்த மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் சர்வதேச அரசியல் அரங்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-24T12:48:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வே மன்னர் உடல்நிலை குறித்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/information-health-of-the-king-of-norway-1787573989"></link>
            <id>https://canadamirror.com/article/information-health-of-the-king-of-norway-1787573989</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; நோர்வே மன்னர் ஹரால்டின் (Harald V), ஐரோப்பாவின் மிக வயதான ஆளும் மன்னர் ஆவார். 89 வயதான இவர் இரத்த சம்பந்தமான நோயால் அவதிப்பட்டு வருகிறார...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; நோர்வே மன்னர் ஹரால்டின் (Harald V), ஐரோப்பாவின் மிக வயதான ஆளும் மன்னர் ஆவார். 89 வயதான இவர் இரத்த சம்பந்தமான நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
</p><p>
இந்த வார இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நார்வே மன்னர் ஹரால்டின் (Harald V) உடல்நிலை மோசமடைந்துள்ளதாக, அரச குடும்பம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf4205ff-c82c-47d8-99e8-19ee2eab0a7b/26-6a8c36e6afeda.webp' /></p><p>

89 வயதான ஹரால்டு, இரத்தச் சிவப்பணுக்கள் வேகமாக அழிவதால் ஏற்படும் ஹீமோலிடிக் அனீமியா என்ற நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தக் கோளாறு சோர்வு, பலவீனம், மூச்சுத்திணறல் மற்றும் வெளிறிய தன்மை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.</p><p>

மாண்புமிகு மன்னரின் (Harald V) உடல்நிலை வார இறுதியில் மோசமடைந்தது. அவரது இரத்தத்தில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றுக்காக மன்னர் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பெற்று வருகிறார், </p><p>

மேலும் இந்த சிகிச்சைக்கு அவர் (Harald V) நல்ல பலனளித்துள்ளார் என்று அரண்மனை தெரிவித்தது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-24T12:17:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் விமான விபத்து இருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/small-seaplane-crashes-in-woods-near-st-johns-1787566407"></link>
            <id>https://canadamirror.com/article/small-seaplane-crashes-in-woods-near-st-johns-1787566407</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோரின் தலைநகரான செயின்ட் ஜான்ஸ் நகருக்கு அருகே, நீரில் தரையிறங்க முயன்ற சிறிய விமானம் ஒன்று காட்டுப் பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோரின் தலைநகரான செயின்ட் ஜான்ஸ் நகருக்கு அருகே, நீரில் தரையிறங்க முயன்ற சிறிய விமானம் ஒன்று காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
</p><p>மேர்லின் ஜீ.ரீ. ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், செயின்ட் ஜான்ஸ் நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்துள்ள பெடிஸ் பொன்ட் ஏரியில் தரையிறங்க முயன்றபோது திடீரென மின்சக்தியை இழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இதையடுத்து, சனிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் விமானம் ஏரிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் விழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00bb59e4-ad5c-4b88-a549-902962ef24b4/26-6a8c1948e6834.webp' /></p><p>
</p><p>விமானத்தில் பயணித்த இரு ஆண்களும் மீட்புப் படையினர் சம்பவ இடத்தை அடையும் முன்னரே விமானத்தின் இடிபாடுகளில் இருந்து வெளியேறியிருந்தனர்.</p><p>
அவர்களில் ஒருவர் காட்டுப் பகுதியிலிருந்து நடந்து பிரதான வீதியை அடைந்த நிலையில், அங்கு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது. </p><p>மற்றொருவரை மீட்க ஹெலிகொப்டரின் உதவி தேவைப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>
இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
கனடாவின் போக்குவரத்து பாதுகாப்புச் சபைவிசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T11:59:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்​கா​வில் 2 இந்தியர்கள் சுட்​டுக் கொலை; உறவினர்கள் விடுத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/2-indians-shot-dead-us-relatives-request-body-1787572871"></link>
            <id>https://canadamirror.com/article/2-indians-shot-dead-us-relatives-request-body-1787572871</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்​கா​வில் 2 இந்தியர்கள் வெவ்​வேறு சம்பவங்களில் சுட்​டுக் கொல்​லப்​பட்டனர். அவர்களின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும் என குடும்பத்தினர் வலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்​கா​வில் 2 இந்தியர்கள் வெவ்​வேறு சம்பவங்களில் சுட்​டுக் கொல்​லப்​பட்டனர். அவர்களின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
</p><p>
பஞ்​சாப் மாநிலம் கபூர்​தலா மாவட்​டத்​தைச் சேர்ந்த குர்​தீப் சிங் (28), அமெரிக்​கா​வின் நியூ​யார்க்​கில் பீட்சா டெலிவரி செய்​யும் வேலை பார்த்து வந்​தார். 

நேற்று முன்​தினம் இரவு ரிச்​மண்ட் ஸ்ட்ரீட் பகு​தி​யில் பீட்சா டெலிவரி செய்ய சென்​றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89c5f5f6-4dd1-49ce-b30c-98dbfe86b91f/26-6a8c328ee8a79.webp' /></p><h2>உறவினர்கள் விடுத்த கோரிக்கை</h2><p> </p><p>அப்​போது அங்கு வந்த மர்ம நபர்​கள் குர்​தீப் சிங்கை தாக்கி கொள்ளையடிக்க முயன்​றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரி​வித்ததால் மர்ம நபர்​கள் துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்பி சென்றனர்.
</p><p>
இதில் குர்​தீப் சிங் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். இந்நிலையில், கொலை​யாளி​களை கைது செய்​து, கடுமை​யான தண்​டனை வழங்​கு​மாறு அமெரிக்க அரசை​ வலி​யுறுத்​தி​யுள்ளனர்.
</p><p>
இதனிடையே, அமெரிக்​கா​வின் டென்​னிசி மாகாணத்​தில் உள்ள ஜாக்​சன் நகரில் குஜ​ராத் மாநிலத்​தைச் சேர்ந்த சுரேஷ் பர்​சோத்​தம்​தாஸ் (56) என்​பவர் கடந்த சில தினங்​களுக்கு முன்பு டிபார்​மெண்ட்​டல் ஸ்டோர் திறந்​தார். </p><p>

கடந்த 20-ம் தேதி இரவு இந்த கடைக்​குள் புகுந்த மர்ம நபர் சுரேஷை துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு பணத்​தைக் கொள்​ளை​யடித்​துச் சென்​றார். </p><p>இதில் சுரேஷ் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

அமெரிக்​கா​வில் அடுத்​தடுத்து 2 இந்​தி​யர்​கள் சுட்​டுக்​கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் அவர்களுடைய குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்​சி​யை ஏற்​படு​த்​தி உள்​ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T11:58:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடொன்றில் குப்பைக் கிடங்கு சரிந்ததில் 30 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/30-people-killed-in-a-garbage-dump-collapse-1787547269"></link>
            <id>https://canadamirror.com/article/30-people-killed-in-a-garbage-dump-collapse-1787547269</id>
            <summary type="text">&amp;nbsp; மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தலைநகர் கொனாக்ரியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
தலைநகர் கொனாக்ரியில் அமைந்துள்ள மிகப்பெரிய குப்பைக் கிடங்கின் ஒரு பகுதி, கனமழை காரணமாக சரிந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74fcb4ae-e955-4c46-a2a0-3722ba411f9e/26-6a8bce8709a68.webp' /></p><p>
</p><p>
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்தச் சரிவில், குப்பைக் கிடங்குக்கு அருகிலிருந்த குடிசைகள் மற்றும் தற்காலிக குடியிருப்புகள் புதையுண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த அனர்த்தத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், மேலும் 16 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடியவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
சம்பவ இடத்துக்கு பிரதமர் அமடூ ஓரி பா நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டதுடன், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் மேற்பார்வையிட்டார்.</p><p>

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்</p>]]></content>
            <updated>2026-08-24T11:29:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலுடனான உறவுகளை இடைநிறுத்தும் தீர்மானம் – மொன்றியல் நகர சபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/montreal-council-to-vote-on-motion-calling-1787570268"></link>
            <id>https://canadamirror.com/article/montreal-council-to-vote-on-motion-calling-1787570268</id>
            <summary type="text">காசா போர் தொடர்பாக நகராட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான முக்கியமான முயற்சியாக, இஸ்ரேல் அரசாங்கத்துடனான நிறுவன ரீதியான உறவுகளை இடைநிறுத்தக் கோரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசா போர் தொடர்பாக நகராட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான முக்கியமான முயற்சியாக, இஸ்ரேல் அரசாங்கத்துடனான நிறுவன ரீதியான உறவுகளை இடைநிறுத்தக் கோரும் தீர்மானம் ஒன்றை மொன்றியல் நகர சபை விவாதிக்கவுள்ளது.</p><p>
நகர சபையின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக உள்ள புரொஜெக்ட் மொன்ட்ரியல் கட்சி இந்தத் தீர்மானத்தை முன்வைத்துள்ளது. </p><p>
இந்தத் தீர்மானம் திங்கட்கிழமை மொன்றியல் நகர சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e9e835a-7a95-4d3b-934a-1c01f103902d/26-6a8c285e1fc43.webp' /></p><p>
</p><p>தீர்மானத்தில், பாலஸ்தீனத்தில் நிலவும் நிலைமையை “இன ஒதுக்கல் ஆட்சி” என அங்கீகரித்து கண்டனம் தெரிவிக்கவும், அங்கு இடம்பெறுவதாகக் கூறப்படும் “இனப்படுகொலைக்கு” எதிர்ப்புத் தெரிவிக்கவும் மொன்றியல் நகரை வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
மேலும், பாலஸ்தீன மக்கள் மற்றும் மோதலால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய பொதுமக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தவும் தீர்மானம் கோருகிறது.
அத்துடன், தற்போதைய இஸ்ரேல் அரசாங்கம், அதன் நிறுவனங்கள் மற்றும் நகராட்சிகளுடனான மொன்றியலின் நிறுவன ரீதியான தொடர்புகளை இடைநிறுத்துமாறும் அதில் கோரப்பட்டுள்ளது.</p><p>
இந்தத் தீர்மானத்திற்கு Montreal Anti-Apartheid என்ற பிரசார அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.</p><p> எனினும், அந்த அமைப்பு உறவுகளை வெறுமனே இடைநிறுத்துவதற்கு பதிலாக முற்றாக துண்டிக்க வேண்டும் எனக் கோருகிறது.
</p><p>இஸ்ரேலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களிலிருந்து முதலீடுகளை விலக்கிக் கொள்ளுதல், இஸ்ரேல் பிரதிநிதிகளைப் புறக்கணித்தல் மற்றும் பாலஸ்தீன அகதிகளுக்கு கூடுதல் ஆதரவு வழங்குதல் உள்ளிட்ட விரிவான கோரிக்கைகளையும் அந்த அமைப்பு முன்வைத்துள்ளது.</p><p>
அதன்படி, இஸ்ரேல் அரசாங்கப் பிரதிநிதிகளை மொன்றியல் நகர மண்டப நிகழ்வுகளுக்கு அழைப்பது நிறுத்தப்படலாம் என்றும், நகராட்சி அதிகாரிகள் இஸ்ரேலிடமிருந்து வழங்கப்படும் கட்டணப் பயணங்கள், பரிசுகள் அல்லது விருந்தோம்பல்களை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இதேவேளை, கியூபெக்கைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட கலைஞர்கள், கலாசாரத் துறையினர் மற்றும் நிறுவனங்கள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
</p><p>மொன்றியலின் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், இதேபோன்ற நடவடிக்கைகளை ஏனைய கனேடிய நகராட்சிகளும் முன்னெடுக்க ஊக்கமளிக்கக்கூடும் என தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T11:22:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் இடியுடன் கூடிய புயலில் சிக்கிய இரு மலையேற்ற வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hypothermic-hikers-await-rescue-in-bc-backcountry-1787568926"></link>
            <id>https://canadamirror.com/article/hypothermic-hikers-await-rescue-in-bc-backcountry-1787568926</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் வீசிய கடும் இடியுடன் கூடிய புயலின்போது, இரு மலையேற்ற வீரர்கள் ஆபத்தான நிலையில் சிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் வீசிய கடும் இடியுடன் கூடிய புயலின்போது, இரு மலையேற்ற வீரர்கள் ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளனர்.
</p><p>சைப்பிரஸ் பார்க் பகுதியில் உள்ள மெக்னிசா மெடோவ்ஸ் அருகே கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.
</p><p>அந்த நேரத்தில் மாகாணம் முழுவதும் மழைப்பொழிவு திடீரென அதிகரித்ததுடன், 7,000-க்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் பதிவாகியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e99fac0a-a1bd-4b76-b7e6-2c705fa05b7c/26-6a8c231fda137.webp' /></p><p>
கடும் காற்று மற்றும் மழை காரணமாக அவர்களின் கூடாரம் சேதமடைந்து, மழைநீர் தடுப்பு உறை கிழிந்ததாக தெரிவித்துள்ளது. </p><p>
இதனால் இருவரின் ஆடைகள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக நனைந்ததுடன், இரவு முழுவதும் குளிரான ஈரமான சூழலில் அவர்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
</p><p>அடுத்த நாள் காலை சுமார் 11.40 மணியளவில் மீட்புக் குழுவுக்கு அழைப்பு கிடைத்தது. அதற்குள் இருவரும் பாதுகாப்புக்காக அவசரகால தங்குமிடத்தை அடைந்திருந்தனர்.</p><p>
அங்கு இருந்த மற்றொரு குழுவினர், உடல் வெப்பநிலை குறைந்த நிலையில் இருந்த இருவருக்கும் உதவி செய்து 911 அவசர சேவையை அழைத்துள்ளனர்.
</p><p>குறைந்த மேக மட்டம் மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக அந்தப் பகுதிக்கு ஹெலிகொப்டர் மூலம் செல்வது சாத்தியமாகவில்லை.</p><p> 
எனவே, மலையேற்றத்தைத் திட்டமிடும்போது பயணிக்கத் திட்டமிட்டுள்ள நாளின் வானிலையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அதற்கு முந்தைய மற்றும் அடுத்த நாட்களின் வானிலை நிலவரங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T10:54:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்ராறியோவில் காலியான கட்டிடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/dead-body-found-in-kirkland-lake-building-1787566958"></link>
            <id>https://canadamirror.com/article/dead-body-found-in-kirkland-lake-building-1787566958</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கிரிக்லான்ட் லேக் பகுதியில் காலியாக இருந்த கட்டிடம் ஒன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கிரிக்லான்ட் லேக் பகுதியில் காலியாக இருந்த கட்டிடம் ஒன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒன்ராறியோ மாகாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி இரவு சுமார் 10 மணியளவில் அரசாங்க வீதிப் பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடம் ஒன்றில் மனித எச்சங்கள் இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.
</p><p>சம்பவ இடத்துக்கு கிரிக்லான்ட் லேக் தீயணைப்புப் பிரிவினரும் அவசர மருத்துவ சேவைப் பிரிவினரும் சென்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6abf2280-2e9b-452f-913c-82c766b0a097/26-6a8c1b6feeaf5.webp' /></p><p>
</p><p>ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், இது தனிப்பட்ட சம்பவமாக இருக்கலாம் எனவும், பொதுமக்களுக்கு பரந்த அளவிலான அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>எனினும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதால் அந்தப் பகுதியில் பொலிஸாரின் பிரசன்னம் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அந்தக் கட்டிடத்தில் எவ்வளவு காலமாக இருந்திருக்கலாம் என்பது குறித்தோ அல்லது இந்த சம்பவத்தில் குற்றச் செயல் இடம்பெற்றிருக்கிறதா என்பது குறித்தோ பொலிஸார் இதுவரை தகவல் வெளியிடவில்லை.
</p><p>இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 1-888-310-1122 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T10:26:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கானின் ஆரோக்கியம் குறித்து அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மீண்டும் கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-ranatunga-players-write-aga-regarding-imran-1787565395"></link>
            <id>https://canadamirror.com/article/former-ranatunga-players-write-aga-regarding-imran-1787565395</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கானின் சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சை தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கானின் சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சை தொடர்பில், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள் குழுவொன்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இம்ரான் கானை மருத்துவமனையில் அனுமதித்து, அவரது தனிப்பட்ட மருத்துவர்கள் மற்றும் அவரது சகோதரியான மருத்துவர் உஸ்மா கான் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரால் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e59e0327-aa19-4129-bdfe-d46f197f50d7/26-6a8c1554b6f2c.webp' /></p><p>இம்ரான் கான் சில மணிநேரங்கள் மட்டுமே மருத்துவமனையில் வைக்கப்பட்ட பின்னர், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மருத்துவக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இம்ரான் கானின் மருத்துவ சிகிச்சை தொடர்பில் மூன்று முக்கிய கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
</p><p>
அதன்படி, அவரது வலது கண் பார்வை இழப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட மருத்துவக் குழுவின் மூலம் சுயாதீன மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இம்ரான் கானின் குடும்பத்தினருக்கான வாராந்த சந்திப்புகள் தடையின்றி அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகள் எவ்வித தாமதமும் இன்றி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அரசியல்வாதிகளாக அல்லாமல், முன்னாள் சக வீரர்களாகவும் கிரிக்கெட் போட்டியாளர்களாகவும் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக முன்னாள் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>பாகிஸ்தானின் உள்நாட்டு சட்ட நடைமுறைகளில் தலையிடும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p>

இந்தக் கோரிக்கையில் இலங்கையின் முன்னாள் உலகக் கிண்ணத் தலைவர் அர்ஜுன ரணதுங்கவுடன் இந்தியாவின் முன்னாள் தலைவர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், அவுஸ்திரேலியாவின் ஆலன் போடர், ஸ்டீவ் வோ, கிரெக் செப்பல், இங்கிலாந்தின் அலஸ்டயர் குக், ஆடம் கில்கிறிஸ்ட், நாசர் ஹுசைன் மற்றும் டேவிட் கோவர் உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
</p><p>
இம்ரான் கானின் கண் பாதிப்பு மற்றும் சிறையில் அவருக்கு போதிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை எனக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமரிடம் முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள் விடுக்கும் இரண்டாவது முறையீடு இதுவாகும்.</p>]]></content>
            <updated>2026-08-24T09:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூப்பர்மேன் ஆடையில் காட்டுத்தீயை அணைக்கும் 17 வயது சிறுவன் ; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/boy-puts-out-wildfires-in-superman-costume-1787564223"></link>
            <id>https://canadamirror.com/article/boy-puts-out-wildfires-in-superman-costume-1787564223</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் சூப்பர்மேன் ஆடை அணிந்தபடி காட்டுத்தீயை அணைக்கும் 17 வயதுச் சிறுவன் ஒருவர் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறார்.

இந்தோனேசியாவின் போர்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் சூப்பர்மேன் ஆடை அணிந்தபடி காட்டுத்தீயை அணைக்கும் 17 வயதுச் சிறுவன் ஒருவர் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறார்.
</p><p>
இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் காட்டுத்தீயால் பெருமளவு நிலம் கருகியுள்ள நிலையில், ருடியான்சா (Rudiyansah) என்னும் பாடசாலை மாணவன் பாடசாலை முடிந்த பிறகு தீயணைப்புப் பணியில் தொண்டூழியராக ஈடுபட்டு வருகிறான்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bdd9fd0-6c42-43ce-a0c2-5a5593e2c728/26-6a8c10c086200.webp' /></p><p>அவனுடைய தந்தை தொடங்கிய தொண்டூழியக் குழுவில் 2023ஆம் ஆண்டு முதல் அவன் இணைந்துள்ளார். </p><p>இந்த ஆண்டு முதல் தனக்குப் பிடித்த சூப்பர்மேன் ஆடையை அணிந்தபடி தீயை அணைக்கத் தொடங்கியுள்ளான்.
</p><p>
"அது வெறும் வேடிக்கைக்காகத்தான்," என்று ருடியான்சா கூறுகிறார். ஆனால், தீயை அணைக்கும் அவரது காணொளி சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைக் கவர்ந்துள்ளது. </p><p>இவனது சேவையைப் பாராட்டி இந்தோனேசிய வனத்துறை அமைச்சர் அவரைக் "காட்டின் நாயகன்" என்று பாராட்டியுள்ளார்.
</p><p>
"மிகவும் சோர்வாக இருந்தாலும், மக்களுக்கு உதவ முடிவது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று அவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-24T09:37:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரியும் மேகனும் ஓராண்டுக்குப் பின் கனடா திரும்பக்கூடும்: அரண்மனை வட்டாரம் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/prince-harry-meghan-may-return-canada-after-1-year-1787563145"></link>
            <id>https://canadamirror.com/article/prince-harry-meghan-may-return-canada-after-1-year-1787563145</id>
            <summary type="text">Harry and Meghan may only stay one year before moving to Canada: ஹரியும் மேகனும் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கனடாவுக்குத் திரும்பலாம் என அரண்மனை வட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry and Meghan may only stay one year before moving to Canada: ஹரியும் மேகனும் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கனடாவுக்குத் திரும்பலாம் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>

பிரித்தானிய இளவரசர் ஹரி, அமெரிக்கப் பெண்ணான மேகனை திருமணம் செய்ததிலிருந்தே தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கத் துவங்கினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a0eaef5-4c05-4a7b-b0dd-c437a2f00c53/26-6a8c0c8b47de8.webp' /></p><p>

திடீரென ஒரு நாள் தானும் மேகனும் ராஜ குடும்ப மூத்த உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஹரி.</p><p>

அதன் பின் ஹரியும் மேகனும் கனடாவுக்குச் சென்றார்கள். அதன் பின் தன் குடும்பத்துடன், தன் மனைவி மேகனுடைய நாடான அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார் ஹரி.
</p><p>
ஆக, எடுத்தோம் கவிழ்த்தோம் என பல முடிவுகளை எடுப்பவர் ஹரி.&nbsp;&nbsp;</p><p>
இந்நிலையில், மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்புவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார் ஹரி!&nbsp;</p><p>[<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c67fdef-437f-43d2-8d9b-432f72a4b5b5/26-6a8c0c8c07ffe.webp' />]</p><p>
ஹரி, தன் குடும்பத்துடன் மீண்டும் பிரித்தானியா திரும்ப உள்ளதாகவும், ஹரியின் பிள்ளைகள் பிரித்தானியாவில் கல்வி கற்க உள்ளதாகவும், அவர்கள் படிக்கப்போகிற பள்ளி குறித்து முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
</p><p>
இந்நிலையில், ஹரியும் மேகனும், ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கனடாவுக்குத் திரும்பலாம் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

ஹரி பிரித்தானியா திரும்பினாலும், அவருக்கு ராஜ குடும்பத்தில் பொறுப்புகள் கொடுக்கப்படப்போவதில்லை என்றே கருதப்படுகிறது.</p><p>

அப்படியிருக்கும்பட்சத்தில், ஹரி எப்போது வேண்டுமானால் மீண்டும் கனடாவுக்கோ அல்லது அவுஸ்திரேலியாவுக்கோ திரும்பலாம் என்கிறார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.
</p><p>
சிக்கல் என்னவென்றால், ஹரி, மேகன் தம்பதியரின் பிள்ளைகளான ஆர்ச்சிக்கும் லிலிபெட்டுக்கும் பள்ளி துவங்கும் நேரம் வந்துவிட்டது.
</p><p>
ஆக, பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தபின் ஹரியும் மேகனும் தாங்கள் விரும்பிய நாட்டுக்குச் செல்வது குறித்து எப்படி முடிவெடுப்பார்கள் என்பதுதான் புரியவில்லை!&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T09:19:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேசத்தில் பூட்டப்பட்ட வீட்டிலிருந்து 4 சடங்கள் மீட்பு ; துர்நாற்றத்தால் வெளிச்சத்துக்கு வந்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/four-members-same-family-murdered-in-bangladesh-1787562529"></link>
            <id>https://canadamirror.com/article/four-members-same-family-murdered-in-bangladesh-1787562529</id>
            <summary type="text">பங்களாதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலையாளிகள். கொலை செய்துவிட்டு அங்கயே இருந்து உணவு சாப்பிட்டு, குளித்து விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலையாளிகள். கொலை செய்துவிட்டு அங்கயே இருந்து உணவு சாப்பிட்டு, குளித்து விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.</p><p>பங்களாதேசத்தின் ரங்பூர் நகரில் மச்சுவாபார பகுதியில் கணபதி சக்கரவர்த்தி (வயது 65) அவரது மனைவி பிரிதிலா சக்ரவர்த்தி (50) , இவர்களின் மகள் ஆகமி (23) மற்றும் மகன் பிரியம்(12) ஆகியோர் வசித்து வந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc322d3c-b172-4d3f-ac49-002497b9de20/26-6a8c0a22c9c8a.webp' /></p><p>கணபதி சக்ரவர்த்தி ஒரு ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் ஆவார். குடும்பத்தினர் சென்ற வாரம் (20-ம் திகதி) இரவு வீட்டில் இருந்துள்ளனர். </p><p>ஆனால் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து வீடு பூட்டி இருந்ததுள்ளது. </p><p>இதற்கிடையே சனிக்கிழமை இரவுக்குள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். </p><p>இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், வீட்டுக்குள் சென்று பார்த்த போது 4 பேரும் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர்.</p><p> உடனடியாக உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-24T09:09:01+00:00</updated>
        </entry>
    </feed>
