<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-30T13:30:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு; தெரியாத நபர்களுடன் கட்டிலைப் பகிரும் சீன இளைஞர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rising-cost-of-living-chinese-youth-sharing-bed-1785417695"></link>
            <id>https://canadamirror.com/article/rising-cost-of-living-chinese-youth-sharing-bed-1785417695</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் காரணமாக, இளைஞர்கள் தங்களது மாதாந்தச் செலவுகளைக் குறைப்பதற்கு ஒரு புதிய வழிமுறையைக் கையாண்டு வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் காரணமாக, இளைஞர்கள் தங்களது மாதாந்தச் செலவுகளைக் குறைப்பதற்கு ஒரு புதிய வழிமுறையைக் கையாண்டு வருகின்றனர்.

முன்பின் தெரியாத நபர்களுடன் ஒரே அறையை மாத்திரமன்றி, ஒரே கட்டிலையும் பகிர்ந்துகொள்ளும் (Bed-sharing) போக்கு தற்போது சீனா இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
</p><p>
மத்திய சீன நகரமான வூஹானைச் (Wuhan) சேர்ந்த 25 வயதான வின்னி செங் (Winnie Zeng) என்ற பெண், நேரலை விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றுகிறார்.

தனது மாதாந்த வருமானமான 4,000 யுவானில் கணிசமான தொகையைச் சேமிப்பதற்காக, தனது படுக்கையறையை மற்றொரு பெண்ணுடன் பகிர்ந்துகொள்ளத் தீர்மானித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0b86aa5-491f-4bbb-be7e-e05857b499a6/26-6a6b4fe12f4a9.webp' /></p><h2>&nbsp;நாட்டின் பொருளாதார வீழ்ச்சி</h2><p>

இதன் மூலம் தனது மாதாந்த வாடகையில் 450 யுவானைச் (சுமார் 66 அமெரிக்க டொலர்) சேமிக்கும் அவர், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவே இத்தகைய கடினமான முடிவை எடுத்ததாகக் கூறுகிறார்.
</p><p>
 பீஜிங்கில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நிறுவனமொன்றில் பணியாற்றி வேலை இழந்த 39 வயதான மோர்கன் பான் (Morgan Pan) என்பவரும், கட்டுமான நிறுவனத்தின் வீழ்ச்சியால் வேலையிழந்த பல இளைஞர்களும் தங்களது மாதாந்த வாடகையை குறைப்பதற்காக அறைப் பங்கீட்டைத் தேர்வு செய்துள்ளனர்.</p><p>இந்த போக்கு குறித்து சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான ‘வெய்போ’ (Weibo) மற்றும் 'டூயின்' (Douyin) ஆகியவற்றில் "கட்டிலைப் பகிர்வது என்பது என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு துன்பம்" என்ற ஹேஷ்டேக் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.</p><p>

அத்துடன் 'சியோஹோங்ஷு' (Xiaohongshu) போன்ற செயலிகளில் அறை மற்றும் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளப் பங்காளிகளைத் தேடும் விளம்பரங்களும் அதிகரித்து வருகின்றன.
</p><p>
சீனாவில் வாழும் சுமார் 260 மில்லியன் வாடகைதாரர்கள் மத்தியில் இந்த போக்கு இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளபோதிலும், இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.</p><p>

அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய பணி மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் பணிப்பாளர் மிங்வெய் லியு இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "நகரங்களில் நிலையான வாழ்விடம், நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் தெளிவான வருமான வாய்ப்புகள் இல்லாத சூழலையே இது காட்டுகிறது. </p><p>

இளைஞர்களின் இந்த மனநிலை தொடருமானால், அது நாட்டின் நுகர்வுச் செலவுகள், சொத்து சந்தை மற்றும் திருமண வீதம் ஆகியவற்றைப் பெருமளவில் பாதித்து, நீண்டகாலப் பொருளாதாரச் சவால்களை உருவாக்கும்" என எச்சரித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T13:20:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பர்களைத் துண்டு துண்டாக வெட்டி கொடூரக் கொலை! இங்கிலாந்தை உலுக்கிய பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/uk-serial-killer-james-desborough-jailed-for-life-1785394125"></link>
            <id>https://canadamirror.com/article/uk-serial-killer-james-desborough-jailed-for-life-1785394125</id>
            <summary type="text">&amp;nbsp;இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெஸ்பரோ (40) என்ற நபர், தனது இரு நண்பர்களைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டிக் காட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெஸ்பரோ (40) என்ற நபர், தனது இரு நண்பர்களைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டிக் காட்டுப் பகுதியில் வீசிய சம்பவம் அதிர வைத்துள்ளது.
</p><p>
சந்தேக நபர் குற்றத்திற்காக ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். 

வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் இவருக்கு இறுதி மூச்சு இருக்கும் வரை சிறை தண்டனை (Whole-life Order) வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2833a5e5-0beb-4718-bc45-6d231ab07e73/26-6a6af3ce9fa14.webp' /></p><h2>&nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு</h2><p>
</p><p>
பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் உள்ள காட்டில் தனது குடிசை அருகே வாழ்ந்து வந்த டெஸ்பரோ, அங்குத் தங்கியிருந்த கிளாரியோ அகிலினோ (57) மற்றும் டேனியல் கோல்மேன் (43) ஆகிய இரு நண்பர்களை மிகக் கொடூரமாகக் கொலை செய்தார். </p><p>

கொலைக்குச் பின்னர் இருவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி, சில பாகங்களை எாித்து ஆற்றிலும், எஞ்சிய பாகங்களை ஆழமற்ற குழி தோண்டியும் மறைக்க முயன்றார்.</p><p> 

‘டெக்ஸ்டர்’ தொடரில் வருவது போல உடல்களைத் துண்டு துண்டாக வெட்டும் காட்சிகள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தடயவியல் அதிகாரிகளிடம் அவர் கூறியது விசாரணையில் அம்பலமானது.
</p><p>
போலீசார் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், காட்டில் இருந்து எரிக்கப்பட்ட 1,900 எலும்புத் துண்டுகளையும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களையும் மீட்டனர்.</p><p> 
கொலைக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் வங்கி அட்டைகளைப் பயன்படுத்திப் பணம் எடுத்த டெஸ்பரோ, அவர்கள் உயிருடன் இருப்பது போல் போலியான தகவல்களையும் பரப்ப முயன்றார். </p><p>

இந்த வழக்கு விசாரணையின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, குரட்டை விட்ட காரணத்திற்காகத் தனது சக கைதியான ஸ்டீவன் கெம்ப்ஸ்டர் என்பவரையும் அவர் கழுத்தை நெரித்துக் கொன்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.
</p><p>
மூன்று பேரைக் கொடூரமாகக் கொன்ற தொடர் கொலையாளியான ஜேம்ஸ் டெஸ்பரோ, மனித நேயமற்ற முறையில் கொடூரச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக நீதிபதி திரு. சைனி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். </p><p>

இவருக்கு மனித உயிர்கள் மீது எவ்வித மரியாதையும் இல்லை; இவர் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான நபர்” எனக் கூறி நீதிமன்றம் இவருக்குக் கருணையற்ற ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T13:10:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வயது சிறுவன் படுகொலை: தேடப்பட்டு வந்த நபர் கனடாவில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/quebec-murder-suspect-arrested-three-day-manhunt-1785400237"></link>
            <id>https://canadamirror.com/article/quebec-murder-suspect-arrested-three-day-manhunt-1785400237</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கியூபெக் மாகாணம், ஷவினிங்கன் பகுதியில் 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 41 வயதான பிலிப் பெனாய்ட் என்பவரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கியூபெக் மாகாணம், ஷவினிங்கன் பகுதியில் 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 41 வயதான பிலிப் பெனாய்ட் என்பவரைக் கியூபெக் மாகாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
நான்கு நாட்களாக தீவிரமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், ஷவினிங்கன் நகருக்கு வடக்கே சுமார் 57 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக் வேய்லெட் பகுதிக்கு அருகில் புதன்கிழமை பிற்பகல் 4:30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
</p><p>கைது செய்ய முயன்ற போது அவர் பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர் பலவந்தமாகக் கட்டுப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65959b7-de52-4cc3-b193-65a8ccee7a9f/26-6a6b0baf6e421.webp' /></p><p>
</p><p>சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு, கூர்மையற்ற கனமான பொருளால் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில், பிலிப் பெனாய்ட் மீது முதல் நிலைக்கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 201-வது அவென்யூவில் உள்ள வீடொன்றில் இருந்து சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் கொலை வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.</p><p>
பிலிப் பெனாய்ட் மனசிதைவு நோய் மற்றும் சமூக பயம் உள்ளிட்ட தீவிர மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
தேடுதல் வேட்டையின் போது, இவரைக் கண்டால் பொதுமக்கள் யாரும் நேரடியாக அணுக வேண்டாம் எனவும், உடனடியாக அவசர உதவி எண்ணான 911-ஐத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் எச்சரித்திருந்தனர்.</p><p>
கொல்லப்பட்ட சிறுவனுக்கான அஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு கியூபெக்கின் ட்ராய்ஸ்-ரிவியர்ஸ் பகுதியில் நடைபெறவுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T13:09:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அட்லாண்டிக் பெருங்கடலில் மாபெரும் கடற்பாசிப் படலம் ; சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/massive-seaweed-bloom-in-the-atlantic-ocean-1785413323"></link>
            <id>https://canadamirror.com/article/massive-seaweed-bloom-in-the-atlantic-ocean-1785413323</id>
            <summary type="text">&amp;nbsp; அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 8,500 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரவியுள்ள மாபெரும் கடற்பாசிப் படலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சூழலியல் நிபுணர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 8,500 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரவியுள்ள மாபெரும் கடற்பாசிப் படலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, NASA-வின் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

விஞ்ஞானிகளின் தகவலின்படி, வரலாற்றில் பதிவாகியுள்ள கடற்பாசி வளர்ச்சிகளில் இது இரண்டாவது மிகப்பெரிய கடற்பாசிப் படலமாகக் கருதப்படுகிறது.
</p><p>
இந்த கடற்பாசிகள் கடற்கரைகளில் கரை ஒதுங்கும்போது கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், கடல் வாழ் உயிரினங்கள், கடல்சார் சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பகுதிகளின் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சூழலியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
மேலும், இந்த கடற்பாசிப் படலத்தின் வளர்ச்சி மற்றும் நகர்வை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், கடலோர நாடுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T12:06:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்; ஐ.நா. பொதுச்செயலாளர் அவசர அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-iran-tensions-un-secretary-general-urgent-call-1785411484"></link>
            <id>https://canadamirror.com/article/us-iran-tensions-un-secretary-general-urgent-call-1785411484</id>
            <summary type="text">மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு, இரு தரப்பும் தூதரக ரீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு, இரு தரப்பும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்ப வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் (Antonio Guterres) வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக நியூயோர்க்கில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ஐ.நா.வின் துணைப் பேச்சாளர், "இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால், இந்த மோதல் ஒரு பெரிய போராக விரிவடையும் என்று பொதுச்செயலாளர் நீண்ட காலமாகவே கவலை கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59834829-1f55-4cf1-84ca-d8e6ea1886d1/26-6a6b379e08329.webp' /></p><p>
</p><p>
கடந்த சில மணிநேரங்களில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது, அந்த அச்சம் நிஜமாவது போலவே தோன்றுகிறது" எனக் குறிப்பிட்டார்.
</p><p>
தற்போது அரங்கேறி வரும் வன்முறைச் சம்பவங்கள் எந்த விதத்திலும் நேர்மறையானவை அல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளும் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்பதில் பொதுச்செயலாளர் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>

 பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் மத்தியஸ்த முயற்சிகளைப் பயன்படுத்தி, தூதரக வழிமுறைகள் மூலம் தீர்வுகாண முன்வர வேண்டும் என ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T11:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு வாரங்களாகக் காணாமல் போன 11 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/11-year-old-calgary-boy-found-dead-1785399434"></link>
            <id>https://canadamirror.com/article/11-year-old-calgary-boy-found-dead-1785399434</id>
            <summary type="text">கனடாவின் கல்கரி நகரத்தில் கடந்த இரண்டு வாரங்களாகக் காணாமல் போன 11 வயதுச் சிறுவன் பார்க்கர் வெல்ஸ், புதன்கிழமை வடகிழக்கு நகரப் பகுதியில் சடலமாக மீட்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கல்கரி நகரத்தில் கடந்த இரண்டு வாரங்களாகக் காணாமல் போன 11 வயதுச் சிறுவன் பார்க்கர் வெல்ஸ், புதன்கிழமை வடகிழக்கு நகரப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>இன்று மிகவும் கடினமான ஒரு நாள் என பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.</p><p>கடந்த ஜூலை 16 ஆம் திகதி காலை 11:00 மணியளவில் பார்க்கர் வெல்ஸ் காணாமல் போனார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7261a749-0fcf-416f-9743-08cd3f2366ff/26-6a6b088c2815f.webp' /></p><p> </p><p>நூற்றுக் கணக்கான பொலிஸார், மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
</p><p>பொதுமக்களில் ஒருவர் கண்டெடுத்த சிறுவனின் ஆடை ஒன்று, பொலிஸாரைத் தேடுதல் வழியில் வழிநடத்தியது.</p><p>
'டீர்ஃபுட் ட்ரெயில்' பகுதியிலுள்ள நிலத்தடி நீர் வடிகால் குழாய்களின் சிக்கலான வலைப்பின்னலுக்குள் சிறுவன் நுழைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
</p><p>சுமார் 450 முதல் 500 அடிகள் ஆழத்திலிருந்த மிகச் சிறிய குழாய் ஒன்றுக்குள்ளிருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. சிறுவன் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
அத்துடன், தேடுதல் பணியில் ஈடுபட்ட கல்கரி பொலிஸ் துறை, தீயணைப்புத் துறை மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு நிதி உதவி ; ரஷ்யா பெண் பத்திரிகையாளருக்கு கடூழிய சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/help-aid-ukraine-russian-female-sentenced-12years-1785407358"></link>
            <id>https://canadamirror.com/article/help-aid-ukraine-russian-female-sentenced-12years-1785407358</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு (Darya Shipacheva) 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு (Darya Shipacheva) 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து மொஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><p>

 இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக நடத்தப்பட்டது. 

உக்ரைன் நாட்டுக்குப் பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2025இல் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04ad2de9-eb02-4826-936a-affc9a45bb43/26-6a6b278060f76.webp' /></p><h2>&nbsp;குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து 12 ஆண்டுகள் சிறை</h2><p> </p><p> 

இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது தர்யா ஷிபச்சேவா தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது. 

அறிவியல் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த செய்தியாளரான தர்யா ஷிபச்சேவா, ரஷ்யாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றியுள்ளார்.</p><p> ரஷ்யாவில் தொடரும் ஊடகக் கட்டுப்பாடு உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியது முதல், ரஷ்யா தனது நாட்டில் ஊடகத் தணிக்கைச் சட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது.</p><p> 


'பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு' (CPJ) வெளியிட்ட தகவல்களின்படி, ரஷ்யாவில் இதுவரை 29-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தங்களின் பணி மற்றும் செய்தியளித்தல் தொடர்பான காரணங்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-30T10:27:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த மீன் சாஸ் தொழிற்சாலை: உள்ளூர் நிர்வாகத்தின் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-st-mary-town-action-on-fish-sauce-factory-1785405167"></link>
            <id>https://canadamirror.com/article/canada-st-mary-town-action-on-fish-sauce-factory-1785405167</id>
            <summary type="text">கனேடிய கிராமம் ஒன்றில், மீன் சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து பல ஆண்டுகளாக துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த நிலையில், அது தொடர்பில் உள்ளூர் நிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனேடிய கிராமம் ஒன்றில், மீன் சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து பல ஆண்டுகளாக துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த நிலையில், அது தொடர்பில் உள்ளூர் நிர்வாகம் நல்ல முடிவொன்றை எடுத்துள்ளது.
</p><p>
கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடார் மாகாணத்தில், செயிண்ட் மேரீஸ் என்னும் கிராமம் ஒன்று உள்ளது.
</p><p>
அந்த கிராம மக்கள், பல ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரச்சினையை சந்தித்துவந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c688a742-4237-4004-931f-748ef8cd8302/26-6a6b1ef14ac51.webp' /></p><p>
அதாவது, அங்கு ஒரு மீன் சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் அந்த தொழிற்சாலை நிர்வாகம் அந்த தொழிற்சாலையை கைவிட்டுச் சென்றுள்ளது.
</p><p>
அப்போது, அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள், சுமார் 11,000 லிற்றர் கொள்ளளவு கொண்ட, 110 டேங்குகளிலிருந்த மீன் சாஸை அப்படியே விட்டுச் சென்றுள்ளார்கள்.
</p><p>
காலப்போக்கில் ஜன்னல்கள், கதவுகள், கூரை, சுவர்கள் என அந்த தொழிற்சாலைக் கட்டிடம் சிதிலமடைய, மீன் சாஸ் டேங்குகளில் அவற்றை நொதிக்கச் செய்வதற்காக சேர்க்கப்பட்ட பாக்டீரியா தவறாமல் தன் பணியைச் செய்ய, அழுகிய மீன் சாஸிலிருந்து கடும் நாற்றம் வீசத்துவங்கியுள்ளது.</p><p>

பல ஆண்டுகளாக மக்கள் அந்த துர்நாற்றத்தால் அவதியுற்றுவந்த நிலையில், தற்போது உள்ளூர் நிர்வாகம் அது தொடர்பில் ஒரு நல்ல முடிவெடுத்துள்ளது.
</p><p>
ஆம், தாங்களே அந்த மீன் சாஸை அங்கிருந்து அகற்றி, பிரம்மாண்ட பள்ளம் ஒன்று தோண்டி, அதில் ஊற்றி மண்ணைப் போட்டு மூடிவிட உள்ளூர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.
</p><p>
ஆக, இத்தனை ஆண்டுகளாக நாற்றத்தால் தவித்துவந்த மக்களுக்கு விரைவில் அதிலிருந்து விடுதலை கிடைக்கப்போகிறது!&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T09:54:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெக்மீத் சிங்கிற்கு முக்கிய பதவி? – எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/exclusive-former-ndp-leader-jagmeet-singh-1785404897"></link>
            <id>https://canadamirror.com/article/exclusive-former-ndp-leader-jagmeet-singh-1785404897</id>
            <summary type="text">கனடாவின் தேசிய சுற்றுலா சந்தைப்படுத்தல் அமைப்பான &#039;டெஸ்டினேஷன் கனடா&#039; நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக புதிய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் தேசிய சுற்றுலா சந்தைப்படுத்தல் அமைப்பான 'டெஸ்டினேஷன் கனடா' நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக புதிய ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெக்மீத் சிங் நியமிக்கப்பட பரிசீலிக்கப்பட்டு தகவல் வெளியிட்டுள்ளது.
</p><p>எனினும், இந்த நியமனப் பரிசீலனைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த அமைப்புகளிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. </p><p>
ஜெக்மீத் சிங்கிற்கு சுற்றுலாத்துறையில் ஏதேனும் முன்அனுபவம் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
"இது சுற்றுலாத்துறைக்கும் இந்த நிறுவனத்திற்கும் இழைக்கப்படும் அவமானமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4228c68d-195e-4df8-9bc9-713206738eb2/26-6a6b1de2da9b3.webp' /></p><p> இது ஏதோ ஒரு சாதாரண தூதரகப் பதவி அல்ல; கனடாவில் பில்லியன் கணக்கான டாலர் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஒரு முக்கிய அமைப்பு" என்று பெயர் குறிப்பிட விரும்பாத சுற்றுலாத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>
2021 பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அரசு ஆட்சியில் நீடிப்பதற்கு, 2022-இல் ஜெக்மீத் சிங் தலைமையிலான என்.டி.பி கட்சி செய்துகொண்ட ஆதரவு ஒப்பந்தமே முக்கியக் காரணமாக இருந்தது. </p><p>இந்த ஒப்பந்தம் 2024 வரை நீடித்தது.
பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய ஜெக்மீத் சிங், சமீபத்தில் கூட்டாட்சி நாடாளுமன்ற ஓய்வூதியத்திற்குத் தகுதி பெற்றார். 
இந்த கிரவுன் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாகி பதவிக்கு ஆண்டுக்கு 3,50,000 டாலர் வரை ஊதியம் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.</p><p>
சட்டத்தரணியாகப் பணியாற்றி அரசியலுக்கு வந்த ஜெக்மீத் சிங், 2017 முதல் 2025 வரை என்.டி.பி கட்சியின் தலைவராகவும், பர்னபி சவுத் தொகுதியின் எம்பியாகவும் இருந்தார். </p><p>
2025 கூட்டாட்சித் தேர்தலில் என்.டி.பி கட்சி தனது வரலாற்றுப் பாதகமான பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T09:53:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோவில் தொடர் காட்டுத் தீ: கியூபெக் இளைஞர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/quebec-man-charged-with-setting-bush-fires-1785397397"></link>
            <id>https://canadamirror.com/article/quebec-man-charged-with-setting-bush-fires-1785397397</id>
            <summary type="text">கனடாவின் வடக்கு ஒன்டாரியோவில் உள்ள ஹியூரான் ஷோர்ஸ் பகுதியில் திட்டமிட்டுத் தொடர்ச்சியாகக் காட்டுத் தீ மூட்டிய குற்றச்சாட்டில் கியூபெக் மாகாணத்தைச் சேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் வடக்கு ஒன்டாரியோவில் உள்ள ஹியூரான் ஷோர்ஸ் பகுதியில் திட்டமிட்டுத் தொடர்ச்சியாகக் காட்டுத் தீ மூட்டிய குற்றச்சாட்டில் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>கடந்த ஜூலை 28 ஆம் திகதி மாலை 5:30 மணியளவில், 'மெல்வெல் வீதிக்கு' அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் காட்டுத் தீ பரவுவதாக உள்ளூர் தீயணைப்புத் துறைக்குக் கோரிக்கைகள் வந்தன.</p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும், வீதியின் இருபுறமும் சுமார் 10 அடி முதல் 700 அடி வரையிலான காட்டுப்பகுதிகளில் திட்டமிட்டு வைக்கப்பட்ட 10 சிறிய காட்டுத் தீ சம்பவங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1c92e07-effd-49e9-aef6-9c0b41c4087f/26-6a6b009725180.webp' /></p><p>
</p><p>தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் நடமாடிய சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரைத் தீயணைப்பு வீரர்கள் கவனித்துள்ளனர்.</p><p>
 அதனடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸார், இரவு 7:15 மணியளவில் அருகில் உள்ள பாதை ஒன்றில் வைத்து கியூபெக், சட்டன் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞரைக் கைது செய்தனர்.
</p><p>கைது செய்யப்பட்ட நபர் மீது சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் வகையில் தீ வைத்தல் மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>
அவர் ஜூலை 28 ஆம் திகதி 'பிளைண்ட் ரிவர்' நீதிமன்றத்தில் பிணை விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம் ; அமெரிக்கா - சவுதி கூட்டு தாக்குதலில் ஈராக்கில் 20 போராளிகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/20-militants-killed-joint-us-saudi-strike-in-iraq-1785390449"></link>
            <id>https://canadamirror.com/article/20-militants-killed-joint-us-saudi-strike-in-iraq-1785390449</id>
            <summary type="text">&amp;nbsp; ஈராக்கில் அமெரிக்கா மற்றும் சவுதி இணைந்து ஏழு மாகாணங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 20 போராளிகள் கொல்லப்பட்டதுடன் 32 பேர் காயமடைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈராக்கில் அமெரிக்கா மற்றும் சவுதி இணைந்து ஏழு மாகாணங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 20 போராளிகள் கொல்லப்பட்டதுடன் 32 பேர் காயமடைந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 போராளிகாள் ஈராக்கின் மக்கள் திரட்டல் படைகள் (Iraq’s Popular Mobilisation Forces) கண்டனம் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b23ddfa-09b9-441f-a311-d939ea0d622b/26-6a6ae572b90b0.webp' /></p><h2>கொல்லப்பட்டவர்களுக்குப் பழிவாங்கப்படும்</h2><p> </p><p>மேலும், படைகள் முழு எச்சரிக்கை நிலையில் உள்ளன என்றும் எச்சரித்துள்ளன.

மக்கள் திரட்டல் படைகளின் ஒரு ஆயுதக் குழுவான ஹரகாத் அல்-நுஜாபா, பாதுகாப்பான ஈராக் நகரங்கள் மீதான அமெரிக்க-சவுதி தாக்குதல்களைக் கண்டித்ததோடு, கொல்லப்பட்டவர்களுக்குப் பழிவாங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
</p><p>

அமெரிக்கப் படைகளின் தொடர்ச்சியான இருப்பு நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உடனடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று கூறி, அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அது கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
சவூதி அரேபியாவுடனான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவரவும், மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைநிறுத்தவும் அழைப்பு விடுத்ததுடன், அமெரிக்க மற்றும் சவூதி நலன்களுக்கு எதிராகப் பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அச்சுறுத்தியது.
</p><p>
நாடு முழுவதும் உள்ள தங்களது தளங்கள் மீது சவூதி-அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதல்களில், ஈராக்கின் மக்கள் திரட்டல் படையைச் சேர்ந்த குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் அப்படை தெரிவித்துள்ளது.</p><p>

இந்த தாக்குதலை அடுத்து ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதியின் நாளைய சவூதி அரேபியா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும், பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பதற்கும் அல்-ஜைதி உத்தியோகபூர்வ பயணமாக சவூதி அரேபியாவுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-30T08:16:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரினால் முடங்கிய காசா வைத்தியசாலைகள் ; கடும் நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/gaza-hospitals-crippled-by-war-severe-crisis-1785399406"></link>
            <id>https://canadamirror.com/article/gaza-hospitals-crippled-by-war-severe-crisis-1785399406</id>
            <summary type="text">இஸ்‌ரேல் - ஹமாஸ்&amp;nbsp; மோதலால் காசாவில் தொடர்ந்து நீடிக்கும் போர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் பற்றாக்குறை காரணமாக, அங்குள்ள சுகாதார அமைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்‌ரேல் - ஹமாஸ்&nbsp; மோதலால் காசாவில் தொடர்ந்து நீடிக்கும் போர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் பற்றாக்குறை காரணமாக, அங்குள்ள சுகாதார அமைப்பு முற்றிலும் சீர்குலைந்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளன. </p><p>



 இதனால் டயாலிசிஸ் நோயாளிகள், உறுப்பிழந்தவர்கள் மற்றும் காயங்களிலிருந்து மீண்டு வருபவர்கள் உயிர்காக்கும் வைத்தியக் கவனிப்பு இன்றி தவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dad4c1a1-2af2-4946-b96c-e29b30e39e50/26-6a6b086fed7b9.webp' /></p><p>
</p><p>


காசா நகரத்தில் உள்ள அல்-ஷிஃபா வைத்தியசாலையின் டயாலிசிஸ் பிரிவில், நோயாளிகள் வரிசையாக அமர்ந்து பல மணிநேர சிகிச்சையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். </p><p>வடக்கு காசாவின் ஜபாலியாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி, சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு இங்கு தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>



டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்குவதற்குத் தேவையான சோடியம் பைகார்பனேட் பற்றாக்குறை காரணமாக, காசாவில் உள்ள 50 சதவீத டயாலிசிஸ் இயந்திரங்கள் முற்றிலும் செயல்படாமல் முடங்கியுள்ளன.</p><p>


 சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்த 7வைத்தியசாலைகளில், நூரா அல்-காபி டயாலிசிஸ் மையம் உள்ளிட்ட பல மையங்கள் போரில் அழிக்கப்பட்டதால், தற்போது 4 வைத்தியசாலைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
</p><p>

 வைத்திய வசதிகளின் சீர்குலைவு காரணமாகச் சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகள் கவலைக்கிடமான விகிதத்தில் உயிரிழந்து வருகின்றனர் போருக்கு முன்பு காசாவில் 1,200 சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் இருந்தனர்.
</p><p>


தேவையான டயாலிசிஸ் சிகிச்சைகள் கிடைக்காததாலும், அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாலும் 470-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



பாலஸ்தீனிய மனித உரிமைகள் மையத்தின் தகவல்படி, தற்போது இந்த நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 700 ஆகக் குறைந்துள்ளது.</p><p>



தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாகக் காசாவின் வைத்தியத் துறை கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-30T08:15:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அலைபேசி அடிமைத்துவத்தை கட்டுப்படுத்த கனடா மாணவரின் புதுமையான முயற்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/qb-student-builds-app-to-stop-doomscrolling-1785396850"></link>
            <id>https://canadamirror.com/article/qb-student-builds-app-to-stop-doomscrolling-1785396850</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் மணிக்கணக்கில் நேரத்தை வீணடிப்பதையும், முடிவில்லாமல் செய்திகளை &#039;ஸ்க்ரோல்&#039; செய்யும் பழக்கத்தையும் தடுக்கும் வகையில், கனடாவைச் சேர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் மணிக்கணக்கில் நேரத்தை வீணடிப்பதையும், முடிவில்லாமல் செய்திகளை 'ஸ்க்ரோல்' செய்யும் பழக்கத்தையும் தடுக்கும் வகையில், கனடாவைச் சேர்ந்த 21 வயது மாணவர் ஒருவர் புதிய சமூக ஊடகச் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
</p><p>கனடாவின் கியூபெக் மாகாணம், பின்கோர்ட் பகுதியைச் சேர்ந்த அலெக்சிஸ் போஸ் என்ற மாணவர், கடந்த மே மாதம் 'லைவியோ' என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.
</p><p>இச்செயலியில் விளம்பரங்களோ அல்லது பயனர்களைத் தொடர்ந்து பார்க்கத் தூண்டும் அல்காரிதம் முறையோ கிடையாது. 
நண்பர்களின் பதிவுகள் அனைத்தையும் பார்த்து முடித்ததும், "நீங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டீர்கள், மீதமுள்ளவை ஆஃப்லைனில் உள்ளன" என்ற செய்தி திரையில் தோன்றி செயலி நின்றுவிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11eaafc8-7b9b-4865-bebf-f11fe1d0bd84/26-6a6afe73e4e62.webp' /></p><p>
சமூக வலைத்தளங்களுக்குத் தான் அடிமையாகியிருந்ததை உணர்ந்த மோன்ட்ரியல் பல்கலைக்கழக மாணவரான அலெக்சிஸ் போஸ், அதிலிருந்து விடுபட ஆரோக்கியமான செயலி ஒன்றை உருவாக்க விரும்பினார்.</p><p>
இதற்காக மென்பொருள் பொறியாளர்களை அணுகியபோது அவர்கள் 30,000 முதல் 50,000 டொலர் வரை கட்டணம் கேட்டதால், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தானே குறியீட்டு முறையைக் கற்றுக்கொண்டு இச்செயலியை உருவாக்கியுள்ளார்.
</p><p>வணிகவியல் பயிலும் இம்மாணவர், இச்செயலியைப் பணத்திற்காக உருவாக்கவில்லை என்று தெரிவிக்கிறார்.
பயனர்கள் அனைத்துப் பதிவுகளையும் பார்த்த பிறகு, போனை மூடி வைத்துவிட்டுத் தங்களது அன்றாட பணிகளைக் கவனிக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
</p><p>தற்போதைய பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் மக்களிடையே தொடர்பை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு, லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்றன. </p><p>
பயனர்களைப் அதிக நேரம் தளத்திலேயே வைத்திருக்கச் செய்வதே அவற்றின் மென்பொருள்களின் முக்கிய வேலையாக உள்ளது எனத் தொழில்நுட்ப பகுப்பாய்வாளர் கார்மி லெவி சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>இளைஞர்கள் நாளொன்றுக்கு 2 மணி நேரத்திற்கு மேல் திரைகளைப் பயன்படுத்தக் கூடாது எனப் பரிந்துரைக்கப்பட்டாலும், 40 சதவீதமான இளைஞர்கள் அதனைப் பின்பற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T07:35:18+00:00</updated>
        </entry>
    </feed>
