<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-08T20:36:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான இறக்கை மீது நின்றபடி 97 வயது பாட்டி கின்னஸ் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/97-year-grandmother-guinness-world-record-plane-1786220033"></link>
            <id>https://canadamirror.com/article/97-year-grandmother-guinness-world-record-plane-1786220033</id>
            <summary type="text">பிரிட்டனைச் சேர்ந்த 97 வயதான மூதாட்டி ஒருவர், நடுவானில் பறக்கும் விமானத்தின் இறக்கையில் நின்றபடி ஆபத்தான வான் சாகசத்தில் ஈடுபட்டு, புதிய கின்னஸ் உலக ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரிட்டனைச் சேர்ந்த 97 வயதான மூதாட்டி ஒருவர், நடுவானில் பறக்கும் விமானத்தின் இறக்கையில் நின்றபடி ஆபத்தான வான் சாகசத்தில் ஈடுபட்டு, புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
</p><p>
பிரிட்டனின் செல்டன்ஹாம் பகுதியைச் சேர்ந்த பெட்டி ப்ரோமேஜ் என்ற 97 வயதான மூதாட்டியே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
</p><p>
விமான சாகசங்களில் ஆர்வம் கொண்ட இவர், நடுவானில் பறக்கும் விமானத்தின் இறக்கையில் பொருத்தப்பட்டுள்ள பிரத்யேக ஆசனத்தில் பாதுகாப்பாக தன்னை இணைத்துக்கொண்டு வான் சாகசங்களை மேற்கொண்டு வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc256c0c-4b8a-48cb-aa2d-04c40849e0c5/26-6a778e037e267.webp' /></p><p>கடந்த சில தினங்களுக்கு முன்னர், சினாரெஸ்டர் பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தில் இருந்து ஏரோ-சூப்பர்பேடிக்ஸ் இருதள விமானம் ஒன்று புறப்பட்டது.</p><p>

அந்த விமானத்தின் இறக்கையில் நின்றபடி பெட்டி ப்ரோமேஜ் வான் சாகசத்தில் ஈடுபட்டார்.

விமானம் மணிக்கு சுமார் 150 மைல் வேகத்தில் வானில் வளைந்து நெளிந்து பறந்த நிலையில், ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக அவர் ஆபத்தான முறையில் விமானத்தின் இறக்கையில் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சாகசத்தின் மூலம் ‘உலகின் மிக வயதான பெண் விமான இறக்கை சாகச வீராங்கனை’ என்ற கின்னஸ் உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p>பெட்டி ப்ரோமேஜ் இதற்கு முன்னரும் இதே போன்ற வான் சாகசத்தை மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், தனது 93ஆவது வயதில் விமான இறக்கையில் நின்றபடி சாகசம் செய்து, உலகின் வயதான விமான இறக்கை சாகச வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்திருந்தார்.</p><p>

இந்நிலையில், தற்போது தனது 97ஆவது வயதில் மீண்டும் வானில் பறந்து, தனது சொந்த சாதனையையே அவரே முறியடித்துள்ளார்.&nbsp;பெட்டி ப்ரோமேஜுக்கு கடந்த 2025ஆம் ஆண்டு திடீரென பக்கவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அவரது பேச்சுத்திறன் மற்றும் உடல் இயக்கம் ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தது. </p><p>எனினும், தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமடைந்ததாகக் கூறப்படுகிறது.

உடல்நலப் பாதிப்புகளைக் கடந்து, தனது வயதையும் பொருட்படுத்தாமல் மீண்டும் வான் சாகசத்தில் ஈடுபட்டு கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.&nbsp;</p><p>தனது சாதனை குறித்து பெட்டி ப்ரோமேஜ் கூறுகையில், வயதாகிவிட்டதால் அமைதியாக வீட்டில் இருப்பது தனக்குப் பிடிக்காது எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது தன்னால் கார் ஓட்ட முடியவில்லை என்றும், பார்வையும் மங்கலாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தன்னால் முடிந்தவற்றைச் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ad17899-5a6b-4218-b464-b006c45851c7/26-6a778e02cb27d.webp' /></p><p>

மேலும், இன்னும் இரண்டு ஆண்டுகள் உயிருடன் இருந்தால், மீண்டும் ஒருமுறை வானில் பறக்க விரும்புவதாகவும் அவர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>பெட்டி ப்ரோமேஜ் தனது 87ஆவது வயதில் முதன்முறையாக விமான இறக்கை வான் சாகசத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் இதுவரை 6 முறை விமான இறக்கையில் பயணித்து வான் சாகசங்களை மேற்கொண்டுள்ளார்.
</p><p>
இந்தச் சாகசப் பயணத்தின் மற்றொரு முக்கிய நோக்கம், தனக்கு சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்றிய செல்டன்ஹாம் பொது மருத்துவமனையின் பக்கவாதப் பிரிவுக்கு நிதியுதவி திரட்டுவதாகும்.
</p><p>
தனது உடல்நலப் போராட்டத்துக்குப் பின்னரும் தன்னம்பிக்கையை இழக்காமல், மருத்துவமனைக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் 97 வயதில் ஆபத்தான வான் சாகசத்தில் ஈடுபட்டு, தனது சொந்த உலக சாதனையையே முறியடித்த பெட்டி ப்ரோமேஜின் முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T20:14:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 ஆண்டுகளாக எவரெஸ்டில் உறைந்த ‘கிரீன் பூட்ஸ்’ வீரரின் உடலை மீட்க தீவிர முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/recover-body-green-boots-climber-everest-30-years-1786217314"></link>
            <id>https://canadamirror.com/article/recover-body-green-boots-climber-everest-30-years-1786217314</id>
            <summary type="text">எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு அருகில், பனியில் கடந்த 30 ஆண்டுகளாக உறைந்த நிலையில் உள்ளதாக கூறப்படும்&quot;கிரீன் பூட்ஸ்&quot; என்று அறியப்படும் இந்திய மலையேறு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு அருகில், பனியில் கடந்த 30 ஆண்டுகளாக உறைந்த நிலையில் உள்ளதாக கூறப்படும்"கிரீன் பூட்ஸ்" என்று அறியப்படும் இந்திய மலையேறு வீரர் டோர்ஜே மோருப்பின் உடலை மீட்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.</p><p>1996 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துவிட்டு இறங்கும் போது ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த இந்திய வீரர் டோர்ஜே மோருப்பின் பிரகாசமான பச்சை நிற மலையேற்ற பாதணிகளே பல ஆண்டுகளாக அந்தப் பாதையில் செல்பவர்களுக்கு ஒரு சோகமான அடையாளச் சின்னமாக இருந்து வந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6293751d-d473-47ca-80ae-86a195d05c13/26-6a77836486dfd.webp' /></p><p>நீண்ட காலமாக இந்த பாதணி மற்றொரு வீரரான த்சேவாங் பால்ஜோருக்கு சொந்தமானது என்று கருதப்பட்டது.</p><p>இருப்பினும், 1996ஆம் ஆண்டு குறித்த சம்பவத்தில் தப்பியவர்களின் சாட்சியங்கள் மற்றும் ஆடை அமைப்புகளின் அடிப்படையில் இது மோருப்பினுடையது என்று தற்போது அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தின் 8,500 மீட்டர் உயரத்தில், ஒக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் -40 டிகிரி குளிர் நிலவும் "இறப்பு மண்டலத்தில்" இந்த மீட்புப் பணி நடைபெறவுள்ளது.
</p><p>
திபெத் (சீனா) பகுதியில் இந்த உடல் புதையுண்டுள்ளமையால், உலங்கு வானூர்திகள் மூலம் எளிதில் மீட்கும் வசதிகள் அங்கே இல்லை.
</p><p>
இதன் காரணமாக, பனியில் உறைந்து கடினமான நிலையில் இருக்கும் உடலைச் சுமந்து இறங்குவதற்கு 10 முதல் 12 திறமையான மலையேறுபவர்கள் தேவைப்படுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de52c666-0e48-4ffd-85ad-941de78b22d4/26-6a778363d22a1.webp' /></p><p>

இந்த மீட்புப் பணிக்கு 40,000 முதல் 80,000 டொலர்கள் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில், மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, உடலை லடாக் பகுதிக்கு கொண்டுவந்து லே நகரில் உள்ள தியாகிகள் பூங்கா அருகில் இறுதிச் சடங்குகளை நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க "கிரீன் பூட்ஸ்" பாதணிகளை தங்கள் குடும்ப நினைவாகப் பாதுகாக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-08T19:28:41+00:00</updated>
        </entry>
    </feed>
