<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-28T21:44:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்க தயார் ; ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-us-ready-to-provide-all-assistance-to-nepal-1787952122"></link>
            <id>https://canadamirror.com/article/trump-us-ready-to-provide-all-assistance-to-nepal-1787952122</id>
            <summary type="text">நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.&amp;nbsp; நேபாளத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட காட்டாற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.&nbsp;</p><p> நேபாளத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், அங்குள்ள மத்திய மாவட்டங்களை உருக்குலைந்து உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf3331ed-a2ad-458e-9775-88c9971107b2/26-6a91fbfcb01e7.webp' /></p><p>

இந்த காட்டாற்று வெள்ளத்தில் 32 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அடித்து செல்லப்பட்டனர். </p><p>இதனையடுத்து மீட்புப்பணிகளில் நேபாள ராணுவம், போலீசார் மற்றும் மீட்புக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.</p><p>

</p><p>
இந்தநிலையில், நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார். </p><p>இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,

வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்து உள்ள நேபாளத்தை நாங்கள் தொடர்புகொண்டு அவர்களுக்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்குவதாக கூறியுள்ளோம். நேபாளத்துடன் எங்களுக்கு மிக சிறந்த உறவு உள்ளது.
</p><p>
இது ஒரு கொடூரமான நிகழ்வு. அது வெறும் வெள்ளம் மட்டுமல்ல, சேறும் நீரும் கலந்த ஒரு பேரழிவு. இதுபோன்ற ஒன்றை யாரும் பார்த்திருக்க முடியாது. மிகவும் வலிமையான உறுதியான கட்டிடங்கள் கூட தீக்குச்சிகளை போல அடித்து செல்லப்பட்டன. </p><p>இது மிகவும் மோசமான ஒரு நிகழ்வு. நாங்கள் உதவிகளை அனுப்பி வருகிறோம். அவர்களுக்கு என்ன தேவையோ அதை வழங்குவோம் என்று அந்நாட்டு தலைவர்களிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.</p>]]></content>
            <updated>2026-08-28T21:22:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் கனடிய தம்பதி மாயம்: நல்ல செய்திக்காகக் காத்திருக்கும் குடும்பத்தினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missing-in-nepal-after-deadly-flash-floods-1787928115"></link>
            <id>https://canadamirror.com/article/missing-in-nepal-after-deadly-flash-floods-1787928115</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த கனடிய தம்பதியினர், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். 
இமய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த கனடிய தம்பதியினர், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர்.</p><p> 
இமயமலை பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட இந்த பேரிடரில் 30-க்கும் மேற்பட்ட கனடியர்கள் காணாமல் போயுள்ள நிலையில், இந்த தம்பதியின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் பெரும் தவிப்பில் உள்ளனர்.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவின் 'போர்ட் மூடி' பகுதியைச் சேர்ந்த தவால் ஷா மற்றும் அவரது மனைவி மேகா ஷா ஆகியோர் நேபாளத்திற்குச் சுற்றுலா சென்றிருந்த நிலையில் இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a090e0-cabc-4b01-acc0-4299c4eb9757/26-6a919e3575bc5.webp' /></p><p>
</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் அவர்களிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை என்று தவாலின் சகோதரர் கேவல் ஷா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
</p><p>அவர்கள் எப்படியாவது வெள்ளத்திலிருந்து தப்பித்து, உயிருடன் மீட்டெடுக்கப்பட்டார்கள் என்ற ஒரு நல்ல செய்தி வரக் கூடாதா என்று தான் நாங்கள் வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருக்கிறோம்.</p><p> ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என காணாமல் போன கனடியரின் சகோதரர் கேவல் ஷா தெரிவித்துள்ளார்.
</p><p>திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
</p><p>இதில் தவால்-மேகா தம்பதி உட்பட குறைந்தபட்சம் 30 கனடியர்களும், நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவர் என கனடா உலகளாவிய விவகாரங்கள் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>மலைப் பகுதியில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் பல அடி உயரத்திற்குச் சேறும் சகதியும் அடர்த்தியாகக் குவிந்துள்ளது.
</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகள் மிகவும் தொலைதூரத்தில் அமைந்திருப்பதாலும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் மீட்புக் குழுவினர் அங்குச் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. 
அடர்ந்த சேற்றுக்குள் சிக்கியவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T19:56:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் பயங்கரத் தீ விபத்து! 5 வாகனங்கள் முற்றிலும் சேதம் – தீவிர விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/the-car-exploded-5-vehicles-damaged-in-northeast-1787935049"></link>
            <id>https://canadamirror.com/article/the-car-exploded-5-vehicles-damaged-in-northeast-1787935049</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கால்கரி நகரிலுள்ள &#039;சிட்டிஸ்கேப்&#039; பகுதியில் அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் ஐந்து வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
அதிகாலை 2 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கால்கரி நகரிலுள்ள 'சிட்டிஸ்கேப்' பகுதியில் அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் ஐந்து வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
</p><p>அதிகாலை 2 மணியளவில் 'சிட்டிலைன் காமன் பகுதியில் தீப்பற்றி எரிவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, கால்கரி காவல்துறையும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தி, விசாரணையைத் தொடங்குவதற்காக அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டது.</p><p> 
சேதமடைந்த நான்கு வாகனங்கள் கபேன் மூலமாக அகற்றப்பட்ட நிலையில், கடுமையாக எரிந்த வெள்ளை நிற வேன் ஒன்று சம்பவ இடத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ca21d11-0f71-455a-9cfa-b5d7285ba74a/26-6a91b94ad96d6.webp' /></p><p>
</p><p>சம்பவ இடத்திற்கு அருகில் வசிக்கும் லக் சாது என்பவர் கூறுகையில், நள்ளிரவில் கேட்ட பலத்த சத்தம் ஏதோ வாகன விபத்தினால் ஏற்பட்டது என்று முதலில் நினைத்ததாகத் தெரிவித்தார்.
</p><p>இந்தப் பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. கார் வெடித்துச் சிதறியது போல் இருந்தது என குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>இது திட்டமிட்டு வைக்கப்பட்ட தீயா என்பதை ஆராயக் கால்கரி காவல்துறையின் 'தீவைப்புப் பிரிவு' விசாரணைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.</p><p> 
எனினும், தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T19:00:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்: கனடாவில் முக்கிய சூத்திரதாரி கைது !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-charged-in-drug-trafficking-1787934429"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-charged-in-drug-trafficking-1787934429</id>
            <summary type="text">சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய 24 வயது கனடிய இளைஞர் ஒருவரை வாட்டர்லூ பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது.
ஒன்டாரியோவின் கேம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய 24 வயது கனடிய இளைஞர் ஒருவரை வாட்டர்லூ பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது.
</p><p>ஒன்டாரியோவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து ஆகஸ்ட் 26 அன்று இவர் கைது செய்யப்பட்டார்.</p><p>
இவர் மீது கொக்கைன் போதைப்பொருளை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c70de98-8af7-4afc-aa2b-d291c3fb01b1/26-6a91b6df8befa.webp' /></p><p>
</p><p>கைது செய்யப்பட்ட நபரின் பெயரைப் போலீசார் வெளியிடவில்லை என்றாலும், போதைப்பொருள் கடத்தல் கும்பலில் அவர் முக்கியப் பங்காற்றியதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>
கடந்த செப்டம்பர் 2025-இல், கேம்பிரிட்ஜைச் சேர்ந்த 19 வயதான ஜேட் என்ற பெண் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் 25 கிலோ கொக்கைனுடன் பிடிபட்டார்.
கனடாவின் பியர்சன் விமான நிலையத்தின் சோதனைகளில் சிக்காமல் கொண்டு செல்லப்பட்ட இந்தப் போதைப்பொருள், ஹாங்காங் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p>நான்கு மாத காலத்தில் ஹாங்காங்கில் பிடிபட்ட 4 கனடியர்களில் ஜேடும் ஒருவர். இவர்களிடம் இருந்து மொத்தம் சுமார் 100 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.
</p><p>சர்வதேச பொதிகள் அனுப்புபவர் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
ஒரு பயணத்திற்கு 5,000 டொலர் சம்பளம் மற்றும் இலவச விமானக் கட்டணம், தங்குமிடம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>தங்களுக்குத் தெரியாமலேயே நகை அல்லது பிற பொருட்கள் என நம்ப வைக்கப்பட்டு போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகப் பிடிபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T18:03:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத் தடையை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்தது கனடா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-extends-ebola-travel-restrictions-30-days-1787927479"></link>
            <id>https://canadamirror.com/article/canada-extends-ebola-travel-restrictions-30-days-1787927479</id>
            <summary type="text">எபோலா நோய்த்தொற்று பரவல் காரணமாகக் காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் கனடாவிற்குள் நுழைய விதிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எபோலா நோய்த்தொற்று பரவல் காரணமாகக் காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் கனடாவிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பதாகக் கனடா அரசு அறிவித்துள்ளது.</p><p>
கடந்த மே மாதம் முதல் அமலில் உள்ள இந்தத் தடையால் 67,000-க்கும் அதிகமான மக்களின் விசா விண்ணப்பங்கள் மற்றும் குடியிருப்பு உரிமைகள் முடங்கியுள்ளன.
</p><p>வெளிநாடுகளிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 31,693 நிரந்தரக் குடியிருப்பு விண்ணப்பங்களும், 10,465 தற்காலிகக் குடியிருப்பு விண்ணப்பங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b44f7b2-4c20-499b-8ed6-33d6c9b415cd/26-6a919bb9089bb.webp' /></p><p>
</p><p>கனடாவிற்கு வெளியே உள்ள 1,534 நிரந்தரக் குடியிருப்பாளர்கள் மற்றும் 23,415 தற்காலிக விசா வைத்திருப்பவர்களும் நாட்டிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்நாடுகளிலிருந்து திரும்பும் கனடியர்களுக்கு 21 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது நிவாரண அமைப்புகளின் மனிதாபிமானப் பணிகளைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
</p><p>கெங்கோவில் 5,794 பேர் பாதிக்கப்பட்டு, 2,786 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லாத 'புண்டிபுக்யோ' என்ற அரிய வகை வைரஸால் இங்குப் பாதிப்பு மிகவேகமாகப் பரவி வருகிறது.
</p><p>உகாண்டாவில் எபோலா பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாகப் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளன. தெற்கு சூடானில் எந்தப் பாதிப்பும் பதிவாகவில்லை.</p><p>
கனடாவில் எபோலா பரவும் அபாயம் குறைவாக இருந்தாலும், நோயின் வீரியம் மற்றும் சிகிச்சை முறைகள் இல்லாத நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாகவே இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கனடா பொது சுகாதார முகமை தெரிவிக்கிறது.
</p><p>முழுமையான பயணத் தடை விதிப்பது அறிவியல் பூர்வமானதல்ல என்றும், பயத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் உலக சுகாதார நிறுவனம் கண்டித்துள்ளது.
</p><p>கனடிய குடிமக்களுக்குத் தனிமைப்படுத்தல் அனுமதியும், வெளிநாட்டினருக்கு முழுத் தடையும் விதிப்பது நியாயமற்றது என சர்வதேச சுகாதார சட்ட ஆய்வாளர் ரூஜின் ஹபீபி கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>இந்தத் தடை உண்மையான சுகாதாரப் பாதுகாப்பைக் காட்டிலும், மக்களுக்கு நம்பிக்கை தருவதற்காகச் செய்யப்பட்ட ஒரு வெளிப்புற நடவடிக்கை மட்டுமே என்று மெக்கில் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜோன் லியூ விமர்சித்துள்ளார்.</p><p>
ஃபிஃபா உலகக்கப் நிகழ்வுகளில் பங்கேற்கவிருந்த கலைக்குழுவினர் மற்றும் குடும்பங்களைப் பிரிந்து வாழும் கனடியர்கள் பலரும் இந்த முடிவால் பெரும் கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T16:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க கடல் உணவுப் பொருட்கள் மீதான வரியை நீக்கியது கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/why-fishers-asked-ottawa-to-spare-1787926303"></link>
            <id>https://canadamirror.com/article/why-fishers-asked-ottawa-to-spare-1787926303</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பழிவாங்கும் வரிப் பட்டியலிலிருந்து மீன் மற்றும் கடல் உணவுப் பொருட்களைக் கனடா கூட்டாட்சி அரசு விலக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பழிவாங்கும் வரிப் பட்டியலிலிருந்து மீன் மற்றும் கடல் உணவுப் பொருட்களைக் கனடா கூட்டாட்சி அரசு விலக்கியுள்ளது.
</p><p> நாட்டின் மீன்பிடி மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>கனடா ஆண்டுதோறும் அமெரிக்காவிலிருந்து சுமார் 1 பில்லியன் டொலர் மதிப்பிலான கடல் உணவுகளை இறக்குமதி செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363e9735-6c93-40c4-9ccc-7aa3092b0444/26-6a919721ad248.webp' /></p><p> </p><p>இதில் 40 சதவீதம் லோப்ஸ்டர் வகை நண்டுகளாகும்.
கனடாவில் அறுவடை குறைவாக இருக்கும் காலங்களில், அங்குள்ள பதப்படுத்தும் ஆலைகள் அமெரிக்க இறக்குமதியையே சார்ந்து இயங்குகின்றன.</p><p> 
வரி விதிப்பு தொடர்ந்தால் ஆலைகளும், உள்ளூர் மீன்பிடித் தொழிலும் பெரும் நிதிப் பாதிப்பைச் சந்திக்கும் என்பதால் இவ்வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.
</p><p>நோவா ஸ்கோஷியா போன்ற கடலோர மாகாணங்களில் மீன்பிடி மற்றும் கடல் உணவு ஏற்றுமதித் துறை ஆண்டுக்குச் சுமார் 8.5 பில்லியன் டொலர் வருவாயை ஈட்டித் தருகிறது.
</p><p>அமெரிக்காவுடனான வர்த்தகப் போரினால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க, கனடிய கடல் உணவுத் துறை தனது ஏற்றுமதியை ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்குப் பல்வகைப்படுத்தி வருகிறது.
</p><p>வரி நீக்கம் உள்ளூர் தொழில்துறைக்கு நிம்மதி அளித்துள்ள போதிலும், டீசல் மற்றும் தூண்டில் இரையின் விலை இருமடங்கு வரை உயர்ந்துள்ளதால், மீன்பிடித் துறை தொடர்ந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T16:03:20+00:00</updated>
        </entry>
    </feed>
