<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-01T18:41:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சோகம்: டிப்பர் லாரியுடன் கார் மோதி 11 வயது சிறுவன் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/child-11-killed-when-vehicle-collides-with-truck-1788280786"></link>
            <id>https://canadamirror.com/article/child-11-killed-when-vehicle-collides-with-truck-1788280786</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், நார்த் பே பகுதிக்கு அருகே உள்ள நெடுஞ்சாலை 17-இல், பயணிகள் கார் ஒன்றும் டிப்பர் லாரி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், நார்த் பே பகுதிக்கு அருகே உள்ள நெடுஞ்சாலை 17-இல், பயணிகள் கார் ஒன்றும் டிப்பர் லாரி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
</p><p>திங்கள்கிழமை மாலை சுமார் 5:20 மணியளவில் ஈஸ்ட் ஃபெர்ரிஸ் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>காரில் பயணித்த 11 வயது சிறுவன் தீவிர காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4752d03-f09a-488f-8c63-f06990527cbe/26-6a96ffd42d5fb.webp' /></p><p>
காரில் பயணித்த மேலும் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p>அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தைத் தொடர்ந்து, காவல்துறையின் விபத்து விசாரணை மற்றும் போக்குவரத்து மேலாண்மைப் பிரிவினர் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.</p><p> 
இதன்காரணமாக நெடுஞ்சாலை 17 சுமார் 6 மணி நேரத்திற்கு மூடப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.
</p><p>இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது அந்தச் சமயத்தில் அப்பகுதியில் சென்ற வாகனங்களின் கேமராவில் காட்சிகள் பதிவாகியிருந்தால், நார்த் பே காவல் பிரிவை 1-888-310-1122 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p> 
தகவல்களை ரகசியமாக வழங்க விரும்புவோர் 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பை 1-800-222-8477 எனும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:56:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய தயாரிப்புகளுக்கு நுகர்வோரிடையே அதிகரிக்கும் வரவேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/local-demand-surges-for-canadian-made-food-1788261071"></link>
            <id>https://canadamirror.com/article/local-demand-surges-for-canadian-made-food-1788261071</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் நீடித்து வரும் நிலையில், கனடாவில் உள்ளூர் உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக உற்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் நீடித்து வரும் நிலையில், கனடாவில் உள்ளூர் உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p> 
மளிகைக் கடைகளில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளபோதிலும், கனடா முழுவதும் உள்ள நுகர்வோர்கள் தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கே முன்னுரிமை அளித்துத் தேடிச் சென்று வாங்கி வருகின்றனர்.</p><p> 
அமெரிக்காவின் வர்த்தக வரிகளால் தங்களது நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ஒன்டாரியோவின் போமன்வில் பகுதியில் பாய்ச்ச்மென்ட் காகிதம் விநியோகிக்கும் 'ஏவென்கோ லிமிடெட்' நிறுவனத்தின் தலைவர் கேத்லீன் சேப்மேன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04795de-0631-4945-bd9c-888eac22e040/26-6a96b2d116f8a.webp' /></p><p> 
சுமார் 40 சதவீத வாடிக்கையாளர்களை அமெரிக்காவில் கொண்டுள்ள இந்நிறுவனம், பிரான்ஸிலிருந்து மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதால் ஆரம்பத்தில் ஐரோப்பிய பொருட்கள் மீதான அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்டது. </p><p>
தற்போது அப்பொருட்கள் கனடாவில் தயாரிக்கப்பட்டு மாற்றியமைக்கப்படுவதால், மேலும் 50 சதவீத கூடுதல் வரியை எதிர்கொண்டுள்ளது. </p><p>
எனினும், கனடிய மக்கள் நேரடியாகத் தங்கள் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவிப்பதுடன், ஆன்லைன் மூலமாக நேரடியாக ஆர்டர்களையும் வழங்கி வருகின்றனர்.</p><p>
இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் வெறும் 20 ஆக இருந்த நேரடி வாடிக்கையாளர் ஆர்டர்களின் எண்ணிக்கை, புதிய அமெரிக்க வரிகள் அமலுக்கு வந்த ஒரே வாரத்தில் நூற்றுக்கணக்கில் உயர்ந்துள்ளது. </p><p>
நுகர்வோர்கள் உள்நாட்டுப் பொருட்களை கொள்வனவு விரைவாக மாறிவரும் நிலையில், சில்லறை விற்பனைக் கடைகள் தங்களது விற்பனை அலமாரிகளில் கனடிய தயாரிப்புகளுக்குப் போதிய இட ஒதுக்கீட்டை வழங்குவதில் இன்னும் தாமதம் காட்டி வருவதாக சேப்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:47:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோவில் 1 மில்லியன் டொலர் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/more-than-1-million-in-drugs-stolen-property-1788280388"></link>
            <id>https://canadamirror.com/article/more-than-1-million-in-drugs-stolen-property-1788280388</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் தென்மேற்கு ஒன்டாரியோ பிராந்தியம் முழுவதும் நடத்தப்பட்ட விரிவான சோதனைகளில், 1 மில்லியன் டொலருக்கும் அதிக மதிப்புடைய சட்டவிரோத போதைப்பொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் தென்மேற்கு ஒன்டாரியோ பிராந்தியம் முழுவதும் நடத்தப்பட்ட விரிவான சோதனைகளில், 1 மில்லியன் டொலருக்கும் அதிக மதிப்புடைய சட்டவிரோத போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் திருடப்பட்ட சொத்துக்களை ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. </p><p>
கடந்த ஜனவரி மாதம் மாகாணம் முழுவதும் நிலவிய போதைப்பொருள் கடத்தல் குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.</p><p> 
பிராண்ட்போர்ட் மற்றும் பிராண்ட் கவுண்டி பகுதிகளில் ஒன்றும், லண்டன் மற்றும் ஒனைடா நேஷன் பகுதியில் இன்னொன்றுமாக இரண்டு தனித்துவமான குற்றவியல் வலையமைப்புகள் சுதந்திரமாக இயங்கி வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1ffd12-0eae-4c9c-81bf-4477658e2de0/26-6a96fe461a24d.webp' /></p><p> </p><p>
பிராம்ப்டன் மற்றும் பாரிஸ் (Paris) பகுதிகளில் உள்ள 4 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. 
லண்டன் மற்றும் ஒனைடா நேஷன் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. </p><p>
6.5 கிலோ ஃபென்டனில், 420 கிராம் கோகோயின் மற்றும் 250 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் பெருந்தொகைப் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>பறிமுதல் செய்யப்பட்ட ஃபென்டனில் போதைப்பொருள் மட்டும் தெருக்களில் சுமார் 65,000 பேரின் உயிரைப் பறிக்கக்கூடிய ஆபத்தான அளவைக் கொண்டது என காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>
இச்சம்பவம் தொடர்பாக 7 நபர்கள் மீது மொத்தம் 64 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய இருவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:36:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் மானிடோபாவில் சுழன்றடித்த சூறாவளி: கட்டடங்கள், மின் கம்பங்கள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tornado-touches-down-in-southwest-manitoba-1788259536"></link>
            <id>https://canadamirror.com/article/tornado-touches-down-in-southwest-manitoba-1788259536</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் தென்மேற்கு மானிடோபா வீசிய பலத்த சூறாவளி காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின் கம்பங்கள் உடைந்தும், வர்த்தக நிலையங்களின் கூரைகள் பிடுங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் தென்மேற்கு மானிடோபா வீசிய பலத்த சூறாவளி காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின் கம்பங்கள் உடைந்தும், வர்த்தக நிலையங்களின் கூரைகள் பிடுங்கி எறியப்பட்டும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p> 
சஸ்காட்செவன் எல்லைக்கு மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்க்ஹார்ன் எனும் பகுதியில், இந்தச் சூறாவளி தாக்கியதாக கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> 
பொலிஸ் மற்றும் பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2681ce5f-d104-4665-90f5-1d1f4871f5bc/26-6a96acd1a7bcf.webp' /></p><p> </p><p>
இந்த வானிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக, மானிடோபா எல்லைக்கு அருகே தென்கிழக்கு சஸ்காட்செவன் பகுதியிலும் மேலும் இரண்டு சூறாவளிகள் தாக்கியுள்ளன. </p><p>
அத்துடன் கனமழை மற்றும் பெரிய அளவிலான ஆலங்கட்டி மழையுடன் கூடிய பலத்த இடிபுயலும் அப்பகுதியைத் தாக்கியது. 
இப்புயல் காரணமாக மானிடோபாவின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. </p><p>
திங்கட்கிழமை காலை வரையிலான 48 மணி நேரக் கணக்கீட்டின்படி, கோலா பகுதியில் 80.5 மில்லிமீட்டரும், மினிடோனாஸ் பகுதியில் 71.7 மில்லிமீட்டரும், சான் கிளாரா பகுதியில் 71.6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. </p><p>
பருவத்திற்கு மாறான அதிக வெப்பமான வளிமண்டலத்துடன் குளிர் காற்றுப் பிரதேசம் இணைந்ததே இந்த திடீர் சூறாவளிக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு அல்பர்ட்டா முதல்வர் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/albertas-smith-says-canadians-confused-by-1788259075"></link>
            <id>https://canadamirror.com/article/albertas-smith-says-canadians-confused-by-1788259075</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே தீவிரமடைந்துள்ள வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு அல்பர்ட்டா மாகாண முதலமைச்சர் டேனியல் ஸ்மித் நேரடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே தீவிரமடைந்துள்ள வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு அல்பர்ட்டா மாகாண முதலமைச்சர் டேனியல் ஸ்மித் நேரடியாக அமெரிக்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p> 
அமெரிக்காவின் 'பாக்ஸ் பிசினஸ்' ஊடகத்தில் உரையாற்றிய அவர், கனடாவின் ஒன்டாரியோ ஏரியை 'லேக் அமெரிக்கா' என பெயர் மாற்றம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சி குறித்து கனடிய மக்கள் கடும் குழப்பமும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.</p><p> 
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பொருளாதார மற்றும் இராணுவ உறவைக் சுட்டிக்காட்டிய டேனியல் ஸ்மித், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களுடன் கனடியப் படைகள் தோளோடு தோள் நின்று போரிட்டதையும், விரைவில் வரவிருக்கும் 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களின் 25வது நினைவேந்தலையும் நினைவுகூர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba628219-01f7-432d-917e-db10db935e49/26-6a96ab057a610.webp' /></p><p> 
கனடாவைப் பலவீனப்படுத்த அமெரிக்கா ஏன் விரும்புகிறது என்பது எங்களுக்குப் புரியவில்லை. </p><p>நாம் இணைந்து செயல்படும்போதே வலுவாக இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார். 
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22 முதல் கனடிய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்தது.</p><p>
இதற்குப் பதிலடியாக செப்டம்பர் 8 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என கனடா அறிவித்துள்ளது. </p><p>
இந்த வர்த்தகப் போரினால் இரு நாடுகளிலும் உள்ள சிறு வணிகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பெருமளவிலான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என ஸ்மித் எச்சரித்துள்ளார்.
</p><p>ஒன்டாரியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட் உள்ளிட்டோர் அனைத்துக் காரணிகளையும் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திய போதிலும், அல்பர்ட்டா மாகாணத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிகளை வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஒரு பலப்பரீட்சைக் கருவியாகப் பயன்படுத்தப் போவதில்லை என ஸ்மித் மீண்டும் தெளிவுபடுத்தினார்.</p><p> 
ட்ரம்ப் நிர்வாகமும் கனடிய பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கமும் உடனடியாகப் பேச்சுவார்த்தை மேஜைக்குத் திரும்பி இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T13:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் இரு இந்திய இளம் பெண்கள் கொலை; திடீரென வில்லியாக மாறிய நண்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-young-kerala-women-murdered-in-california-1788240930"></link>
            <id>https://canadamirror.com/article/two-young-kerala-women-murdered-in-california-1788240930</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் இரு இந்திய இளம் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் புலம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் இரு இந்திய இளம் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் புலம்பெயர் சமூகத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
திருச்சூர் பாணஞ்சேரி, மண்ணுத்தி, முடிக்கோடு தெக்கூட்டு வீட்டைச் சேர்ந்த ஹரிதாஸ் மற்றும் சுஷ்மா தம்பதியரின் மகள் அஞ்சனா மற்றும் கோட்டயம் சிங்கவனம் பகுதியைச் சேர்ந்த ஆன் ஆகிய இருவருமே இந்தக் கொடூர சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65df686a-bb5f-4b14-a14a-4e9c34f9c582/26-6a96642384b51.webp' /></p><h2>திடீரென&nbsp; வில்லியாக மாறிய&nbsp; நண்பி</h2><p>

இவர்கள் இருவருக்கும் நெருங்கிய தோழியும், அதே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தவருமான அனிலா என்ற பெண், இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.</p><p>

ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த இந்த மூன்று குடும்பங்களுக்கும் இடையே மிகவும் நெருக்கமான நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. 
ஆசிரியையாக பணியாற்றி வந்த அஞ்சனா கடந்த எட்டு ஆண்டுகளாக கலிபோர்னியாவில் வசித்து வந்தார். மென்பொருள் பொறியாளரான தனது கணவர் விஜீஷ் மற்றும் ஆறு வயது மகள் வாமிகாவுடன் அஞ்சனா வசித்து வந்தார்.
</p><p>
சமீபத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டங்களிலும், அஞ்சனா உள்ளிட்ட மூவரும் தங்களது நண்பர்களுடன் ஒன்றாகக் கலந்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

ஆகஸ்ட் 28ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தக் கொலைச் சம்பவங்கள் அரங்கேறின. 
 
வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அஞ்சனாவின் கணவர் விஜீஷ், சம்பவ இடத்திலிருந்து நிற்காமல் வேகமாகச் சென்ற அனிலாவின் நீல நிற காரைக் கவனித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விஜீஷ் உடனடியாக ஆனின் கணவர் ஜேக்கப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.

ஜேக்கப், ஆனுக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. </p><p>இதையடுத்து அவர் குடியிருப்புக்குச் சென்று பார்த்தபோது, ஆன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளார்.
அதேநேரத்தில், விபத்து குறித்த தகவலை அறிந்து விஜீஷ் சம்பவ இடத்துக்கு வந்து சேரும் முன்பே அஞ்சனாவும் உயிரிழந்திருந்தார்.</p><p>

இந்த சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அஞ்சனா மற்றும் விஜீஷின் ஆறு வயது மகள் வாமிகா வீட்டின் அறைக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்திற்குப் பிறகு, நீல நிற எஸ்.யு.வி. கார் ஒன்று அதிவேகமாக அங்கிருந்து சென்றதைப் பார்த்ததாக நேரில் பார்த்தவர்களும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
</p><p>
இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், அருகிலுள்ள ஒரு பார்க்கிங் பகுதியில் பலத்த சேதமடைந்த நிலையில் அந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>தொடர்ந்து அனிலாவையும் போலீசார் காவலில் எடுத்தனர்.



நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்த இந்த மூவருக்கிடையே திடீரென கொலைச் சம்பவம் நிகழும் அளவுக்கு என்ன காரணம் ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
</p><p>காவலில் உள்ள அனிலாவிடம் அமெரிக்க போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் மூலம் கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்த கூடுதல் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-01T13:29:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 17 வயது சிறுமி மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-17-year-old-girl-us-charged-3-counts-of-murder-1788268835"></link>
            <id>https://canadamirror.com/article/a-17-year-old-girl-us-charged-3-counts-of-murder-1788268835</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்கா&amp;nbsp; சந்தியாகோ&amp;nbsp; பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் மூவர் உயிரிழந்த சம்பவத்தை இணையத்தில் நேரலை செய்வத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்கா&nbsp; சந்தியாகோ&nbsp; பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் மூவர் உயிரிழந்த சம்பவத்தை இணையத்தில் நேரலை செய்வதற்கு உதவியதாகக் கூறப்படும் 17 வயது சிறுமி மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் சதித்திட்டம் தீட்டியதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>

கடந்த மே 18ஆம் திகதி சந்தியாகோ இஸ்லாமிய மையத்தில் 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மூவர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca196b69-74e3-4aed-bb90-64710f5da181/26-6a96d124c17d4.webp' /></p><h2>&nbsp;ஹெல்மெட் கமராக்கள் மூலம் பதிவு</h2><p>
</p><p>
நோர்த் கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி, தாக்குதல்தாரிகளின் அறிக்கையை வெளியிடுவதுடன், ஹெல்மெட் கமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட தாக்குதலை இணையத்தில் நேரலை செய்வதற்கும் உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

குற்றத்திற்கு நேரடியாகச் செயல்பட்டவர்களுக்கு உதவி அல்லது ஒத்துழைப்பு வழங்கியவர்களும், அந்தக் குற்றத்தை நேரடியாகச் செய்தவர்களைப் போன்றே குற்றவியல் ரீதியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற மாநில சட்டத்தின் அடிப்படையில் சிறுமி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>
தாக்குதல்தாரிகளான இரு இளைஞர்களும் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் தங்களைத் தாங்களே சுட்டு உயிரிழந்தனர். அவர்களிடமிருந்து 30 துப்பாக்கிகள் மற்றும் வில்-அம்பு உள்ளிட்ட பெருமளவான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பள்ளிவாசலின் பாதுகாப்பு அதிகாரியான அமீன் அப்துல்லா, தாக்குதல்தாரிகளுடன் போராடி கட்டிடத்தைப் பாதுகாப்பாக மூடியதன் மூலம் உள்ளே இருந்த சுமார் 140 சிறுவர்களைக் காப்பாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>எனினும், இந்த முயற்சியின்போது அமீன் அப்துல்லாவும் இரு வழிபாட்டாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.</p><p>

மேலும், தாக்குதல்தாரிகள் யூத ஆலயம் மற்றும் ஆபிரிக்க-அமெரிக்கர்கள் அதிகளவில் பயிலும் பாடசாலை ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், வெள்ளை இன மேலாதிக்க சித்தாந்தத்தால் அவர்கள் தூண்டப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவத்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T13:17:41+00:00</updated>
        </entry>
    </feed>
