<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-25T07:47:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் ஹோட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்; 8 மாதம் கழித்து வந்த அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/alcohol-cannabis-saudi-prince-died-london-hotel-1784960598"></link>
            <id>https://canadamirror.com/article/alcohol-cannabis-saudi-prince-died-london-hotel-1784960598</id>
            <summary type="text">&amp;nbsp; லண்டனில் உள்ள பிரபல மேரியட் ஹோட்டலில் சவுதி இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். 

அவரது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; லண்டனில் உள்ள பிரபல மேரியட் ஹோட்டலில் சவுதி இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். 

அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை முடிவுகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 
 
ஹோட்டல் அறையின் குளியலறையில் மயங்கிக்கிடந்த இளவரசரை ஹோட்டல் ஊழியர் கண்டுபிடித்து அவசர உதவிக்கு அழைத்துள்ளார். 

இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d1c8e2f-7563-40db-86da-fcefc593d29a/26-6a64565788776.webp' /></p><h2>ஆபத்தான அளவில்&nbsp;&nbsp;போதைப்பொருள்</h2><p> </p><p>பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அவரது உடலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிக மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது. 
 
மேலும், ஆபத்தான அளவில் ஜி.எச்.பி போதைப்பொருள், கானபியா மற்றும் ஜானக்ஸ் போன்ற மாத்திரைகளும் கலந்திருந்தன. </p><p>

இந்த நச்சுப் பொருட்களின் அதிவேக கலவையே அவரது திடீர் மாரடைப்புக்குக் காரணம் என மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
 
 இதற்கு முன் அவர் மது மற்றும் மருந்து அடிமைத்தனத்துக்காக லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

எனினும், அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், இது ஒரு எதிர்பாராத விபத்து மரணம் என்றும் உதவி coroner ஜீன் ஹார்க்கின் தீர்ப்பளித்துள்ளார். 

இதனையடுத்து சவுதி அரச குடும்பத்தினர் அவரது மறைவை உறுதிசெய்து, இறுதிச்சடங்குகளை நடத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-25T07:19:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் எல்லை மீறிய ரஷ்ய வானூர்தி; துரத்தி அடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/romanian-f-16-fighter-jet-shot-down-russian-drone-1784954953"></link>
            <id>https://canadamirror.com/article/romanian-f-16-fighter-jet-shot-down-russian-drone-1784954953</id>
            <summary type="text">&amp;nbsp; ஐரோப்பிய நாடான ருமேனியாவின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த, ரஷ்யாவினுடையது என சந்தேகிக்கப்படும் ஒரு ஆளில்லா வானூர்தியை, ருமேனியப் போர் வானூர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஐரோப்பிய நாடான ருமேனியாவின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த, ரஷ்யாவினுடையது என சந்தேகிக்கப்படும் ஒரு ஆளில்லா வானூர்தியை, ருமேனியப் போர் வானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தியுள்ளது.
</p><p>

யுக்ரைன்; மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து, ஊடுருவிய ஒரு ஆளில்லா வானூர்தியை, இந்த கிழக்கு ஐரோப்பிய நாடு இடைமறித்தது இதுவே முதல் முறை என்று நாட்டின் ஜனாதிபதி நிகுசர் டான் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0b6d7b7-b5fc-41ba-93d2-25fdf866b716/26-6a64404acfdc1.webp' /></p><p>
</p><p>
ரஷ்யாவும் யுக்ரைனும் தினமும் நூற்றுக்கணக்கான ஆளில்லா வானூர்திகளை ஏவி வரும் நிலையில், குறித்த ஆளில்லா வானூர்தியை, ருமேனிய போர் வானூர்தி சுட்டு வீழ்த்தியுள்ளது.
</p><p>
முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில்;, ருமேனியாவின் கருங்கடல் துறைமுகமான கான்ஸ்டன்டாவில் உள்ள ஒரு எண்ணெய் முனையத்திற்கு அருகில் ஒரு கடல் ஆளில்லா வானூர்தி தானாகவே வெடித்த சம்பவமும் பதிவானது.</p>]]></content>
            <updated>2026-07-25T07:18:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிச்சிகன் வீடு ஒன்றில் தீ விபத்தில் 6 சிறுவர்கள் உட்பட எட்டு பேர் பலி ; உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/8-people-including-6-children-killed-michigan-home-1784963949"></link>
            <id>https://canadamirror.com/article/8-people-including-6-children-killed-michigan-home-1784963949</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 சிறுவர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 சிறுவர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

லேக் மிச்சிகனின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள 'கிராண்ட் ஹேவன்' (Grand Haven Township) நகர்ப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் வெள்ளிக்கிழமை (24) இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ca8cb81-bc69-4ffd-99ab-88c6f7c4e71e/26-6a64636e6f6e3.webp' /></p><h2>சிலரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள்&nbsp;</h2><p> </p><p>

இந் நிலையில் உயிரிழந்தவர்களில் சிலரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிற்குள் தீப்பற்றியதாக வந்த தகவலையடுத்து, தீயணைப்பு பிரிவு மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று வீட்டிற்குள் சோதனையிட்டபோது 8 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
</p><p>
உயிரிழந்தவர்கள் 5 வயது முதல் 15 வயது வரையிலான சிறுவர்-சிறுமியினர் என அடையாம் காணப்பட்டுள்ளனர். 

உயிரிழந்த அனைவரின் விவரங்களும் முழுமையாக இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. </p><p>


இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை எனவும் இது ஒரு கொலை மற்றும் தற்கொலை சம்பவமாக இருக்கலாம் என மிச்சிகன் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p> 

 தீ விபத்து சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாகவும், திட்டமிட்டே தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். </p><p> 

 சம்பவம் தொடர்பிலான துல்லியமான காரணங்களைக் கண்டறிய மிச்சிகன் மாநிலக் தீயணைப்பு விசாரணைப் பிரிவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T07:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏரியில் கவிழ்ந்த படகு... இரண்டு உயிர்களைக் காப்பற்றிய சிறுவனுக்கு வீரப்பதக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/teen-got-medal-for-save-lives-in-boat-capsize-1784963598"></link>
            <id>https://canadamirror.com/article/teen-got-medal-for-save-lives-in-boat-capsize-1784963598</id>
            <summary type="text">கனடாவில், ஏரி ஒன்றில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் உயிரைக் காப்பாற்றிய சிறுவன் ஒருவனுக்கு வீரப்பதக்கம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், ஏரி ஒன்றில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் உயிரைக் காப்பாற்றிய சிறுவன் ஒருவனுக்கு வீரப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>

2022ஆம் ஆண்டு, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள Wabamun ஏரியில் பொழுதுபோக்குவதற்காக தங்கள் பெற்றோருடன் சென்றுள்ளனர் பெஞ்சமினும் (Benjamin Gerber) அமெலியாவும் (Amelia).
</p><p>
பெஞ்சமினுக்கு அப்போது 12 வயது, அமெலியாவுக்கு 10 வயது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8575e91b-5619-4dbf-997f-b07829ab6e8c/26-6a64620fe305e.webp' /></p><p>
ரப்பர் படகு ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த பெஞ்சமினும் அமெலியாவும் கரைக்குத் திரும்பும்போது, படகு ஒன்று கவிழ்ந்து கிடப்பதையும், இரண்டு ஆண்கள் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருப்பதையும் கவனித்திருக்கிறார்கள் இருவரும்.
</p><p>
அவர்களில் ஒருவர் சுயநினைவின்றிக் கிடந்துள்ளார்.
</p><p>
உடனே பெஞ்சமின் கரையிலிருந்த தன் தாயைப் பார்க்க, என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய், போ என்று அவர் கூற, உடனே தண்ணீருக்குள் குதித்துள்ளார்கள் பிள்ளைகள்.
</p><p>
விடயம் என்னவென்றால், பெஞ்சமினும் அமெலியாவும் அருமையாக நீந்துபவர்கள், மட்டுமின்றி, இருவரும் Junior Lifeguard Club என்னும் அமைப்பில் உறுப்பினர்கள்.
</p><p>
ஆக, உடனே இருவரும் தண்ணீருக்குள் குதிக்க, பெஞ்சமின் சுயநினைவின்றிக் கிடந்தவரை 80 அடி தூரத்துக்கு இழுத்துக்கொண்டே நீந்தி கரைக்குக் கொண்டுவந்துள்ளார்.
</p><p>
இத்தனைக்கும் 12 வயதேயான பெஞ்சமினை ஒப்பிடும்போது அந்த நபரின் எடையும் அதிகம், உயரமும் அதிகம். இருந்தாலும் சற்றும் யோசிக்காமல், தனது நீச்சல் பயிற்சியை நம்பி அவரை கரை சேர்த்துள்ளார் பெஞ்சமின்.
</p><p>
இந்நிலையில், இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய பெஞ்சமினுக்கு தற்போது வீரப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், M.G. Griffiths Certificate என்னும் சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. </p><p>இந்த M.G. Griffiths Certificate என்பது, கனடாவின் Lifesaving Society Canada என்னும் அமைப்பு வழங்கும், நாட்டிலேயே இரண்டாவது உயரிய வீர விருது ஆகும்.</p><p>

பெஞ்சமினின் தங்கையான அமெலியாவைப் பொருத்தவரை, சான்றிதழ் பெற, அவர் தனக்கு 15 வயது ஆகும் வரை காத்திருக்கவேண்டும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T07:13:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ; அவசர நிலை பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/raging-wildfires-spain-state-emergency-declared-1784959048"></link>
            <id>https://canadamirror.com/article/raging-wildfires-spain-state-emergency-declared-1784959048</id>
            <summary type="text">&amp;nbsp; தென் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ மிகக் வேகமாக பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதனால் ஸ்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ மிகக் வேகமாக பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதனால் ஸ்பெயின் அரசு தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. </p><p>

 காட்டு தீ காரணமாக, இதுவரை இரண்டு நாடுகளிலும் சேர்த்து 2,20,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07c967f0-aa0f-468e-adff-e5a4d34dd9b6/26-6a64504a1abf2.webp' /></p><p>

ஸ்பெயின் தலைநகர் மத்ரித்துக்கு மேற்கே மூன்று இடங்களில் பற்றி எரிந்த காட்டுத்தீ, ஒன்றாக இணைந்து பெரும் தீப்பிழம்பாக மாறியுள்ளது. </p><p>இதனால் அங்கு நிலைமை மிக மோசமடைந்துள்ளது.
மத்ரித் பகுதியில் சுமார் 25,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர், மேலும் 40,000 பேர் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
காட்டுத்தீ வரலாற்று சிறப்புமிக்க 'எல் எஸ்கோரியல்' நகரை நெருங்குவதைத் தடுக்க, ஸ்பெயினின் இராணுவ அவசரக்காலப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-25T05:56:04+00:00</updated>
        </entry>
    </feed>
