<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-12T01:37:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் புதிய சாதனை ; நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/natural-habitats-along-canada-s-niagara-river-1789152185"></link>
            <id>https://canadamirror.com/article/natural-habitats-along-canada-s-niagara-river-1789152185</id>
            <summary type="text">கனடாவில் நயகரா ஆற்றின் கரையோர ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிவடைந்ததைத் தொடர்ந்து, மீள்சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் நயகரா ஆற்றின் கரையோர ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிவடைந்ததைத் தொடர்ந்து, மீள்சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் மரக் கழிவுகளை ஆற்றுப் படுகையில் நிலைநிறுத்தி சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>

இந்தத் திட்டத்தின் மூலம், நயகரா பூங்காக்கள் நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் இணைந்து இதுவரை 1.64 கிலோமீற்றர் பரப்பளவில் நீர்வாழ் உயிரினங்களுக்கான இயற்கை வாழ்விடங்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0d2c242-4191-4e7d-a71b-88963ae7e6ab/26-6aa44bbb1b5b5.webp' /></p><p>மேலும், 2025 கோடை காலத்தில் பிளாக் கிரீக் மற்றும் பொயர்ஸ் கிரீக் நதி முகத்துவாரப் பகுதிகளில் மரக் கட்டமைப்புகள் மற்றும் பாறைகளைப் பயன்படுத்தி மேலதிகமாக 240 மீற்றர் ஈரநிலப் பகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையினால் அந்த பகுதிகளில் மீன்கள் மற்றும் கரையோரப் பறவைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதுடன், நீரின் தரமும் மேம்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-12T00:34:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து ; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/small-plane-crashes-sea-four-same-family-killed-1789157779"></link>
            <id>https://canadamirror.com/article/small-plane-crashes-sea-four-same-family-killed-1789157779</id>
            <summary type="text">அட்லாண்டிக் பஹாமாசில் சிறிய ரக தனியார் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>அட்லாண்டிக் பஹாமாசில் சிறிய ரக தனியார் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள கரீபியன் தீவு நாடான பஹாமாஸ், உலகின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eadff236-6d36-4cd5-ace2-014e1017da0c/26-6aa46195524db.webp' /></p><p>இந்த நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 80 வயதான மரியோ லமர், அவரது 79 வயது மனைவி லில்லி லமர் மற்றும் அவர்களது பேரப்பிள்ளைகளான 28 வயதான சோபி சோசா, 22 வயதான கிறிஸ்டின் சோசா ஆகியோர் சிறிய ரக தனியார் விமானம் மூலம் பஹாமாசுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.</p><p>விமானத்தை 40 ஆண்டுகள் விமானி அனுபவம் கொண்ட மரியோ லமர் இயக்கியுள்ளார்.

சுற்றுலாவை முடித்த பின்னர், கடந்த திங்கட்கிழமை மதியம் அண்ட்ரோஸ் தீவில் உள்ள விமான நிலையத்திலிருந்து நால்வரும் விமானத்தில் புளோரிடாவின் மியாமி நகரை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
</p><p>
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அண்ட்ரோஸ் தீவிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்த கோர விபத்தில் மரியோ லமர், அவரது மனைவி லில்லி லமர் மற்றும் அவர்களது பேரப்பிள்ளைகளான சோபி சோசா, கிறிஸ்டின் சோசா ஆகிய நால்வரும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/905ba790-23f9-49b0-a899-ceae059baf28/26-6aa46194a08f5.webp' /></p><p>

விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் கடலில் விழுந்த விமானத்தையும் அதில் பயணித்தவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். </p><p>எனினும், மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
</p><p>
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் நால்வரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
</p><p>
உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-11T20:16:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் விரைவில் யு.பி.ஐ. சேவை ; வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/upi-service-coming-soon-us-non-resident-indians-1789156836"></link>
            <id>https://canadamirror.com/article/upi-service-coming-soon-us-non-resident-indians-1789156836</id>
            <summary type="text">இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் விரைவில் யு.பி.ஐ. சேவை தொடங்கவுள்ளது. இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.&amp;nbsp;தேநீர் கடை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் விரைவில் யு.பி.ஐ. சேவை தொடங்கவுள்ளது. இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.&nbsp;</p><p>தேநீர் கடை முதல் பிரமாண்ட வணிக வளாகங்கள் வரை இன்று இந்தியர்களின் பாக்கெட்டு களில் பணத்திற்குப் பதிலாக மொபைல் போன்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. </p><p>இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘யு.பி.ஐ. எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை. இன்று கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06d3c2a5-974c-43f1-83ad-200a7a87a3f8/26-6aa45de584527.webp' /></p><p>

உலக நாடுகளே இந்தியாவின் இந்த அசுர வேக டிஜிட்டல் வளர்ச்சியை வியப்புடன் உற்று நோக்கி வருகின்றன.</p><p> இந்த நிலையில், இந்தியப் பொருளாதாரத்திற்கும், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அளிக்கும் மாபெரும் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகளைத் தொடர்ந்து, தற்போது உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவிலும் இந்தியாவின் யு.பி.ஐ. சேவை இந்த ஆண்டின் இறுதிக் குள் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகவுள்ளது. </p><p>அமெரிக்காவின் பிரபல 'பேங்க் ஆப் அமெ ரிக்கா', அங்குள்ள முன்னணி பணப்பரிவர்த்தனை செயலியான 'ஸெல்லி' உடன் இந்தியா வின் யு.பி.ஐ. அமைப்பை இணைக்கும் பிரமாண்ட கூட்டுப்பரிசோதனை முயற்சியைத் தொடங்கியுள்ளது.
</p><p>
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் மூலம், அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், இனி எவ்வித இடைத்தரகர்களும் இன்றி தங்களது வங்கிக் கணக்கில் இருந்தே நேரடியாக இந்தியாவில் உள்ள தங்களது குடும்பத்தினருக்கு நொடிப் பொழுதில் பணம் அனுப்ப முடியும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97e3f50f-5b9d-462c-baa6-0f9a45055731/26-6aa45de638a02.webp' /></p><p>கடந்த நிதியாண்டில் மட்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலமாக இந்தியாவுக்கு சுமார் ரூ.13 லட்சம் கோடி (135 பில்லியன் டாலர்) பணம் அனுப்பப்பட்டுள்ளது. </p><p>இதில் அமெரிக்கா வில் இருந்து மட்டுமே சுமார் 3% லட்சம் கோடி (37 பில்லியன் டாலர்) அனுப்பப்பட்டு, இந்தி யாவிற்கு அதிகப் பணம் வரும் நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.</p><p>

இந்த புதிய 'ஸெல்லி-யு.பி.ஐ.' இணைப்பு மூலம், வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானதாகவும், அசுர வேகத்திலும் மாறும் என்பதால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-11T20:00:43+00:00</updated>
        </entry>
    </feed>
