<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-26T23:32:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்கும் உலகின் தடகள ஜாம்பவான் உசைன் போல்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/usain-bolt-to-marry-longtime-girlfriend-1787780459"></link>
            <id>https://canadamirror.com/article/usain-bolt-to-marry-longtime-girlfriend-1787780459</id>
            <summary type="text">உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட், தனது 40-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நீண்டநாள் காதலியான காசி பென்னட்டுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட், தனது 40-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நீண்டநாள் காதலியான காசி பென்னட்டுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.


</p><p>&nbsp;ஜமைக்கா நாட்டின் கிங்ஸ்டன் நகரில் உசைன் போல்ட்டின் பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழா மேடையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், உசைன் போல்ட் கையில் மைக்ரோ போனுடன் திடீரென மண்டியிட்டு காசி பென்னட்டிடம் தனது திருமண விருப்பத்தைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f4aa505-6de2-4cd6-a52d-4bdd82656be3/26-6a8f5d6d9f3d6.webp' /></p><p>உசைன் போல்ட்டின் இந்த திடீர் அறிவிப்பைக் காசி பென்னட் ஆச்சரியத்தில் உறைந்து போன அவர், மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தைக் கூறினார்.</p><p> இதுகுறித்து காசி பென்னட் போல்ட்டின் கைகளில் உணர்ச்சிவசப்பட்டு அழுதபடி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "என் முகம் ஆச்சரியத்தில் உறைந்துவிட்டது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

13 ஆண்டுகால காதல் பயணம்
உசைன் போல்ட் மற்றும் காசி பென்னட் ஆகிய 2 பேரின் காதல் பயணம் 2013-ம் ஆண்டு தொடங்கியது.</p><p> ஆனால் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது தான் இவர்கள் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அறிவித்தனர். திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தனர்.</p><p>இவர்களுக்கு 6 வயதில் ஒலிம்பியா லைட்னிங் என்ற மகளும், 5 வயதில் தண்டர் மற்றும் செயின்ட் லியோ என்ற இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
</p><p>

ஒலிம்பிக்கில் 8 முறை தங்கப் பதக்கம் வென்று தடகள உலகின் ஜாம்பவானாகத் திகழும் உசைன் போல்ட், விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது குடும்ப வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T22:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய அசம்பாவிதம்; காணாமல்போனோர் எண்ணிக்கை 579 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sudden-tragedy-579-including-troops-missing-1787779659"></link>
            <id>https://canadamirror.com/article/sudden-tragedy-579-including-troops-missing-1787779659</id>
            <summary type="text">நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காணாமல் போனவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>காணாமல் போனவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p>

</p><h2>சுற்றுலாப் பயணிகள்</h2><p>அவர்களில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்களும், 54 அமெரிக்கர்களும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் அடங்குகின்றனர்.</p><p> </p><p>

திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை, இன்று (26) காலை போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட கடும் திடீர் வெள்ளம் அடித்து சென்றதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95-ஆக உயர்ந்துள்ளது.</p><p></p><p> 

இந்த திடீர் வெள்ளத்தால் வீதிகள், நீர்மின் திட்டங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. </p><p>

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள இராணுவம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T21:27:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - கனடா இடையே தீவிரமடையும் உருளைக்கிழங்கு சர்ச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-tightens-rules-for-pei-potatoes-heres-1787759835"></link>
            <id>https://canadamirror.com/article/us-tightens-rules-for-pei-potatoes-heres-1787759835</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய உருளைக்கிழங்களுக்கான கட்டுப்பாடுகளை அமெரிக்க வேளாண்மைத் துறை மேலும் தீவிரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய உருளைக்கிழங்களுக்கான கட்டுப்பாடுகளை அமெரிக்க வேளாண்மைத் துறை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>
உருளைக்கிழங்கைப் பாதிக்கும் ஒருவகை பூஞ்சை நோய் பரவும் அபாயம் இருப்பதாகக் கூறி, அமெரிக்க அமைப்புகள் முழுமையான தடை கோரிய நிலைக்குப் பதிலாக, வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் புதிய இறக்குமதி விதிகள் அமல்படுத்தப்படவுள்ளன.</p><p> 
இதன்படி, 50 பவுண்டுக்கும் அதிகமான மொத்த உருளைக்கிழங்கு மூட்டைகளை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் கழிவு மேலாண்மை ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதும், உருளைக்கிழங்குகள் எந்தப் பண்ணையிலிருந்து வந்தன என்பதைக் கண்டறியும் துல்லியமான லேபிளிங் முறைகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2821df88-9422-4de5-834b-987a3b173feb/26-6a8f0cdd46d49.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கனடிய உருளைக்கிழங்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 
தங்கள் பகுதியிலிருந்து நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தாவரப் பாதுகாப்பை விட தங்களின் சந்தைப் போட்டியையும் அரசியலையும் மையமாகக் கொண்டது என்றும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>
ஏற்கனவே கடந்த 2021-ஆம் ஆண்டு இதே காரணத்தைக் கூறி விதிக்கப்பட்ட தடையால், இத்தீவின் உருளைக்கிழங்குத் துறை சுமார் 50 மில்லியன் டாலர் வருவாய் இழப்பைச் சந்தித்ததுடன், 25 கோடி பவுண்ட் உருளைக்கிழங்குகளை அழிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
</p><p>கடந்த மே மாதத்தில் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள ஒரு பண்ணை நிலத்தின் மண்ணில் இந்த பூஞ்சை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 100 பில்லியன் டாலர் மதிப்புடைய அமெரிக்க உருளைக்கிழங்குத் தொழிலைப் பாதுகாக்க முழுத் தடை விதிக்க வேண்டும் என வாஷிங்டன் அமைப்புகள் வலியுறுத்தின. </p><p>எனினும் முழுத் தடை விதிக்காமல் புதிய நிபந்தனைகளை மட்டுமே அமெரிக்க அரசு கொண்டுவந்துள்ள நிலையில், இதனால் ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் குறைக்கவும், கட்டுப்பாடுகளில் தளர்வுகளைப் பெறவும் கனடிய உருளைக்கிழங்கு வாரியம் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T21:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயார்க்கை 'நியூயார்க் மாகாணம்' என அழைப்போம் — டொரண்டோ மேயர் வேட்பாளர் சவால்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/province-of-new-york-toronto-mayoral-candidate-1787760704"></link>
            <id>https://canadamirror.com/article/province-of-new-york-toronto-mayoral-candidate-1787760704</id>
            <summary type="text">கனடாவுடனான வர்த்தகப் போரின் பின்னணியில் &#039;ஒன்டாரியோ ஏரி&#039;யின் பெயரை &#039;லேக் அமெரிக்கா&#039; என மாற்றப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததற்குப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுடனான வர்த்தகப் போரின் பின்னணியில் 'ஒன்டாரியோ ஏரி'யின் பெயரை 'லேக் அமெரிக்கா' என மாற்றப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததற்குப் பதிலடியாக, டொரண்டோ மேயர் வேட்பாளர் பிராட் பிராட்ஃபோர்ட் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தை "நியூயார்க் மாகாணம்" என அழைக்க வேண்டும் என நகைச்சுவையாகப் பதிலடி கொடுத்துள்ளார். </p><p>
சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிராட்ஃபோர்ட், ஒன்டாரியோ ஏரிக்கரையில் அமர்ந்தவாறு, "டிரம்ப் எங்களது ஏரியின் பெயரை மாற்ற விரும்பினால், நாங்களும் அவரது சொந்த மாநிலத்திற்குப் புதிய பெயர் வைப்போம்; அது வரலாற்று ரீதியாகவும் துல்லியமானது" எனக் குறிப்பிட்டார்.
</p><p>1664 முதல் 1776 வரை நியூயார்க் பகுதி பிரிட்டிஷ் காலனியாக இருந்தபோது 'நியூயார்க் மாகாணம்' என்றே அழைக்கப்பட்ட வரலாற்றை அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>[58HPGE
]</p><p> </p><p>எதிர்வரும் அக்டோபர் 26 அன்று நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில் தாம் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நியூயார்க்கை அதன் பழமையான வரலாற்றைப் போற்றும் வகையில் "நியூயார்க் மாகாணம்" என்றே அழைப்பேன் என்றும், அதற்கான நினைவுப் பலகை ஒன்றை டிரம்ப் டவரில் உள்ள டிரம்பிற்கு அனுப்பி வைக்கத் தயார் என்றும் அவர் கூறினார். </p><p>
இரு நாடுகளுக்கும் பொதுவான ஏரியின் பெயரை மாற்றுவதாக அச்சுறுத்துவது டொரண்டோ மக்களின் தேசபக்தியைக் குறைக்காது என்று கூறிய பிராட்ஃபோர்ட், அமெரிக்காவின் புதிய வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அனைவரும் கனடியப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.</p><p> 
வாஷிங்டன் செய்வதை நம்மால் மாற்ற முடியாது, ஆனால் டொரண்டோ தனக்கான ஆதரவை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும் என்றார். </p><p>
அதேவேளையில், மேயர் தேர்தலில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான கிறிஸ் அலெக்ஸாண்டர், பிராட்ஃபோர்டின் இந்த கருத்தைக் கண்டித்துள்ளார்.</p><p>அமெரிக்காவுடன் வரலாறு காணாத வர்த்தகப் போர் நிலவும் இக்கட்டான சூழலில், ஒரு வேட்பாளர் அமெரிக்க அதிபருடன் பெயர் விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்.</p><p> வர்த்தகப் போர் என்பது வேலைவாய்ப்புகள் மற்றும் முதலீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல்; இது சுய விளம்பரம் செய்வதற்கான நேரமல்ல" என்று அவர் சாடியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T19:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியா கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து தெரசா வாட் பதவி விலகல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/teresa-wat-quits-bc-conservatives-after-unfounded-1787760207"></link>
            <id>https://canadamirror.com/article/teresa-wat-quits-bc-conservatives-after-unfounded-1787760207</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து ரிச்மண்ட்-பிரிட்ஜ்போர்ட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தெரசா வாட் விலகியுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து ரிச்மண்ட்-பிரிட்ஜ்போர்ட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தெரசா வாட் விலகியுள்ளார்.
</p><p>கட்சியின் புதிய தலைவரான கெர்ரி-லின் ஃபைண்ட்லே தனக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாகவும், கனடா நாட்டிற்கான தனது விசுவாசத்தைக் கேள்விக்குள்ளாக்கியதாகவும் கூறி அவர் கட்சியிலிருந்து வெளியேறி சுயேச்சை உறுப்பினராக இயங்க முடிவு செய்துள்ளார். </p><p>
இந்த மாதத்தில் மட்டும் ஃபைண்ட்லேவின் தலைமையின் கீழ் அக்கட்சியிலிருந்து வெளியேறும் 4-வது சட்டமன்ற உறுப்பினர் இவர் ஆவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f0dcc12-46d5-4cff-a550-889bcf241b7b/26-6a8f0e5085759.webp' /></p><p> </p><p>
தனது விலகல் குறித்துப் பேசிய தெரசா வாட், "எனது நாட்டின் மீதான விசுவாசத்தை எவ்வித ஆதாரமும் இன்றி கேள்விக்குள்ளாக்கிய ஒருவரின் தலைமையில் இயங்கும் கட்சியில் என்னால் தொடர்ந்து நீடிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.</p><p> 
இதுகுறித்து தலைவரிடமிருந்து மன்னிப்பும் விளக்கமும் அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதிலும், அது நிறைவேற்றப்படாததால் தனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைச் சரிசெய்யவே இக்கடினமான முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 
முன்னதாக, செவ்வாய்க்கிழமை அன்று கட்சியின் கொறடாவாக இருந்த ரோசலின் பேர்ட் விலகிய நிலையில், அடுத்த சில மணிநேரங்களிலேயே தெரசா வாட்டின் விலகல் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.</p><p>
இதற்கு சில தினங்களுக்கு முன்பு இயன் பேட்டன் மற்றும் பீட்டர் மிலோபார் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
</p><p>கடந்த 2024 மாகாணத் தேர்தலில் 44 இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு அருகில் வந்த கன்சர்வேடிவ் கூட்டணி, தற்போது உட்கட்சிப் பூசல்களால் 33 உறுப்பினர்களாகக் குறைந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.</p><p> 
கடந்த மே மாதம் கெர்ரி-லின் ஃபைண்ட்லே தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து கட்சியின் முன்னாள் உயர் நிர்வாகிகள் பலரும் வெளியேறியுள்ளனர். </p><p>
மக்கள் விரும்பும் ஒரு மாற்று அரசை உருவாக்காமல், பிரிவினையைத் தூண்டும் பாதையில் கட்சி செல்வதாகவும், புதிய தலைமையின் கீழ் கன்சர்வேடிவ் கட்சி சரியான பாதையில் செல்லவில்லை என்றும் தெரசா வாட் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T18:30:27+00:00</updated>
        </entry>
    </feed>
