<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-06T15:22:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் அனக் கிரக்கடோவா எரிமலை வெடிப்பு: விமான சேவைகள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/anak-krakatoa-erupts-in-indonesia-1788701366"></link>
            <id>https://canadamirror.com/article/anak-krakatoa-erupts-in-indonesia-1788701366</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

வானூர்தி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
</p><p>
வானூர்தி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் எரிமலைச் சாம்பல் பரவியதைத் தொடர்ந்து, 209 வானூர்தி சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனால், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று காலை மேலும் இரண்டு எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன், ஜகார்த்தா உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வானொலி நிலையங்களின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எரிமலை அமைந்துள்ள ஜாவா பகுதியில் சுமார் 20 ஆயிரம் அடி உயரம் வரையிலும், சுமத்ரா பகுதியில் சுமார் 50 ஆயிரம் அடி உயரம் வரையிலும் எரிமலைச் சாம்பல் பரவியுள்ளதாக இந்தோனேசிய வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள இந்தப் பகுதி புவியியல் ரீதியாக மிகவும் ஆபத்தான பகுதியாக கருதப்படுகிறது.
</p><p>
இதனால் அங்கு அடிக்கடி நில அதிர்வுகளும் எரிமலை வெடிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இதேவேளை, பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி விழிப்புடன் செயற்படுமாறும் இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
எரிமலைச் சாம்பல் பார்வைத் திறனை குறைக்கக்கூடும் என்பதால், சாம்பல் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் கண் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துமாறும், தேவையற்ற வெளிப்புறப் பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-06T14:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பெண் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற விசித்திர விருந்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/calgary-homeowner-gets-surprise-visit-1788689808"></link>
            <id>https://canadamirror.com/article/calgary-homeowner-gets-surprise-visit-1788689808</id>
            <summary type="text">கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த ஜானிஸ் ஆண்டர்சன் என்பவரது வீட்டின் தோட்டத்தில், ஆகஸ்ட் 27 அன்று தாய் காட்டுப்பூனை ஒன்று தனது ஐந்து குட்டிகளுடன் நுழைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த ஜானிஸ் ஆண்டர்சன் என்பவரது வீட்டின் தோட்டத்தில், ஆகஸ்ட் 27 அன்று தாய் காட்டுப்பூனை ஒன்று தனது ஐந்து குட்டிகளுடன் நுழைந்தது.
</p><p>அண்டை வீட்டார் கொடுத்த தகவலையடுத்து, தனது வளர்ப்பு நாயை வீட்டிற்குள் பூட்டிவிட்டு ஆண்டர்சன் உடனடியாகத் தனது கேமரா மற்றும் கைப்பேசியுடன் தோட்டத்திற்கு விரைந்தார்.</p><p>
அங்கு காட்டுப்பூனைகள் மிகவும் அமைதியாகத் தோட்டத்திலும், வீட்டின் முன்பக்கப் புல்வெளியிலும் அமர்ந்து ஓய்வெடுத்தன. தாய் காட்டுப்பூனை புல்வெளியில் சாவகாசமாகப் படுத்துக் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9925d006-fa51-490c-ad56-bcd6bfbb5989/26-6a9d3d91ec311.webp' /></p><p> </p><p>சில நிமிடங்களிலேயே அவை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும், ஆண்டர்சன் அவற்றின் அழகிய தருணங்களைத் தனது கேமராவில் துல்லியமாகப் படம்பிடித்தார்.
</p><p>சில ஆண்டுகளுக்கு முன்புதான் வனவிலங்கு புகைப்படக் கலையை ஒரு பொழுதுபோக்காகத் தொடங்கிய ஆண்டர்சன், காட்டுப்பூனை குடும்பம் நேரடியாகத் தனது வீட்டிற்கே வந்து புகைப்படங்களுக்குப் பொஸ் கொடுத்ததை வாழ்நாளின் மறக்க முடியாத அரிய வாய்ப்பாகவும் கௌரவமாகவும் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T14:01:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்பெர்ட்டா தேர்தல் ஆணையம் பகிரங்க மன்னிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/elections-alberta-apologizes-for-confusion-1788700355"></link>
            <id>https://canadamirror.com/article/elections-alberta-apologizes-for-confusion-1788700355</id>
            <summary type="text">கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத் தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்ட சிறப்புத் தபால் வாக்குச் சீட்டுகளில் ஏற்பட்ட தவறுகள் மற்றும் குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத் தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்ட சிறப்புத் தபால் வாக்குச் சீட்டுகளில் ஏற்பட்ட தவறுகள் மற்றும் குழப்பங்களுக்காக மின்னஞ்சல் மூலம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.</p><p> 
வாக்காளர்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குச் சீட்டுகளில், பொய் வாக்குமூலம் அளித்தால் 50,000 டொலர் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் கூடிய சுயபிரகடனப் படிவம் இடம்பெற்றிருந்தது. </p><p>
வாக்காளர்கள் அந்த குறிப்பிட்ட வாசகத்தைக் கோடு போட்டு நீக்கிவிட்டு படிவத்தின் மற்ற பகுதிகளைப் பூர்த்தி செய்து அனுப்பலாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d332f12-2b4f-4d75-b930-59620fa3e063/26-6a9d66c503c89.webp' /></p><p> </p><p>
நேரில் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் இந்த வாசகம் இடம்பெறவில்லை. தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஆணையம், புதிய படிவத்தைப் பெற 1.877.422.VOTE (8683) என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.</p><p> 
எதிர்வரும் அக்டோபர் 19 அன்று நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலை முன்னிட்டு, இதுவரை 2,90,000-க்கும் மேற்பட்ட சிறப்புத் தபால் வாக்குச் சீட்டுகளுக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.</p><p> இது 2023 தேர்தலில் பெறப்பட்டதை விட கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகமாகும். 
அதேசமயம், சில வாக்காளர்களுக்கு வந்த பொதிகளில் 'அல்பெர்ட்டா பிரிவினை' தொடர்பான 10-ஆவது கருத்துக் கணிப்பு கேள்வி உள்ளிட்ட சில பக்கங்கள் விடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. </p><p>
மிகச் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கே இவ்வாறு நேர்ந்துள்ளதாகத் தெரிவித்த தேர்தல் ஆணையத் துணை அதிகாரி டாலஸ் ஸ்டோஸ், விடுபட்ட வாக்குச் சீட்டுகளைக் கொண்டவர்கள் உடனடியாக ஆணையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். </p><p>
தேர்தல் ஆணையத்தின் இந்த தெளிவுபடுத்தல் நல்ல தொடக்கம் என்றாலும், வாக்காளர்களுக்கு மேலும் தெளிவளிக்க இரண்டாம் கட்ட அறிவிப்புக் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என எதிர்க்கட்சியான எண்டிபி கட்சி சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்டினா கிரே வலியுறுத்தியுள்ளார்.
</p><p>அதிக தேவையின் காரணமாக, சிறப்பு வாக்குச் சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 9-லிருந்து செப்டம்பர் 25-ஆக முன்னகர்த்தப்பட்டுள்ளது. </p><p>
ஆரம்பத்தில் அக்டோபர் 9 என அறிவித்துவிட்டு தற்போது செப்டம்பர் 25 எனக் கெடுவை மாற்றியது செய்திகளைத் தொடர்ந்து கவனிக்காத மக்களுக்குப் பெரும் குழப்பத்தையும் அநீதியையும் ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர் லோரி வில்லியம்ஸ் எச்சரித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T13:18:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 12 பேருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/12-including-famous-tv-host-sentenced-to-death-1788699272"></link>
            <id>https://canadamirror.com/article/12-including-famous-tv-host-sentenced-to-death-1788699272</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு தொடர்பான வழக்கில், எகிப்தின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் சாரா கலீஃபா (Sarah Khalifa) உட்பட 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு தொடர்பான வழக்கில், எகிப்தின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் சாரா கலீஃபா (Sarah Khalifa) உட்பட 11 பேருக்கு மரணத் தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>

எகிப்தின் அரச ஊடகமான 'அல்-அஹ்ராம்' தகவலின்படி, போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்த குற்றவியல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டமை மற்றும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60ea1570-06ed-4d0d-867a-67ccff812381/26-6a9d628988dd9.webp' /></p><p>

'மிஷன் இம்போசிபிள்' என்ற குற்றவியல் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த 39 வயதான சாரா கலீஃபா, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
</p><p>
இந்த வழக்கில் மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, 7 பேர் விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.
</p><p>
முன்னதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தீர்ப்பு, எகிப்திய சட்டப்படி நாட்டின் தலைமை மதகுருவின் (Grand Mufti) ஆலோசனைப் பெறப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
வழக்கின் விசாரணையின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 750 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களும், அவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இலத்திரனியல் சான்றுகள் மற்றும் 20 சாட்சியாளர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சாரா கலீஃபாவின் சார்பில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T12:54:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பென்டகனில் இராணுவ அதிகாரிகளிடம் பொய் கண்டறியும் சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/polygraph-tests-for-military-officers-at-pentagon-1788695117"></link>
            <id>https://canadamirror.com/article/polygraph-tests-for-military-officers-at-pentagon-1788695117</id>
            <summary type="text">அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு தொடர்பான தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், தகவல்களை வெளியிட்டவர்களைக் கண்டறியும் நோக்கில் பென்டகன் இராணுவ உயர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு தொடர்பான தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், தகவல்களை வெளியிட்டவர்களைக் கண்டறியும் நோக்கில் பென்டகன் இராணுவ உயர் அதிகாரிகளிடம் பொய் கண்டறியும் சோதனையை நடத்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>


கடந்த வெள்ளிக்கிழமை பென்டகனில் சுமார் 50 இராணுவ உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், அதன் ஒரு பகுதியாக அவர்கள் பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


ஈரானுடனான பல மாதகால போரினால் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களின் கையிருப்பு குறைந்துள்ளதாக கடந்த ஜூலை மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. </p><p>எனினும், இந்தத் தகவலை அமெரிக்க இராணுவ அதிகாரிகள் மறுத்திருந்தனர்.
</p><p>


தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசியத் தகவல்கள் கசிவதை அமெரிக்கா மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும், இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது.
</p><p>


இரகசியத் தகவல்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கும் அல்லது புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் பொய் கண்டறியும் சோதனை வழக்கமாக இடம்பெறும் நிலையில், தகவல் கசிவு தொடர்பான விசாரணையில் இதுபோன்ற சோதனை நடத்தப்படுவது முன்னெப்போதும் இல்லாத நடைமுறை என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T11:45:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கரடி தாக்குதல்: ஒரு கரடியைக் சுட்டுக் கொன்ற அதிகாரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bear-killed-after-woman-attacked-near-whistler-1788690239"></link>
            <id>https://canadamirror.com/article/bear-killed-after-woman-attacked-near-whistler-1788690239</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள விஸ்லர் பகுதிக்கு அருகே, வெள்ளிக்கிழமை அன்று மலையேறிக் கொண்டிருந்த குழுவினர் மீது கரடி தாக்குதல் நடத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள விஸ்லர் பகுதிக்கு அருகே, வெள்ளிக்கிழமை அன்று மலையேறிக் கொண்டிருந்த குழுவினர் மீது கரடி தாக்குதல் நடத்தியதில், பெண் ஒருவர் காயமடைந்தார். அவர் ஹெலிகாப்டர் மூலம் அவசரமாக மீட்புக் குழுவினரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியா வனவிலங்கு பாதுகாப்பு சேவை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, விஸ்லருக்கு மேற்கே உள்ள காலைஹான் பள்ளத்தாக்கின் 'கான்ப்ளிக்ட் ஏரி' பகுதியில் ஒரு குழுவினர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது இரண்டு கரடிகளை எதிர்கொண்டனர்.</p><p> 
அதில் ஒரு கரடி திடீரென அந்தப் பெண்ணைத் தாக்கியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு அக்கரடி அங்கிருந்து விலகிச் சென்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b37cc959-5269-4667-b638-aff1c08072d9/26-6a9d3f416886e.webp' /></p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பொலிஸார், மீட்புக் குழுவினர் மற்றும் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் விரைந்தனர்.</p><p> காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, அப்பகுதியில் காணப்பட்ட ஒரு வளர்ந்த ஆண் கருங்கரடியை வனப்பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். </p><p>
எனினும், அந்தப் பெண்ணைத் தாக்கியது கருங்கரடியா அல்லது 'கிரிஸ்லி' வகைக் கரடியா என்பதை அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.
</p><p>இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கான்ப்ளிக்ட் ஏரிப் பகுதி மலையேறும் பாதையை அதிகாரிகள் மூடியுள்ளதுடன், பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T10:41:35+00:00</updated>
        </entry>
    </feed>
