<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-24T05:47:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-who-killed-top-democrat-her-husband-sentenced-1784870768"></link>
            <id>https://canadamirror.com/article/man-who-killed-top-democrat-her-husband-sentenced-1784870768</id>
            <summary type="text">அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில முன்னாள் சபாநாயகரும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் மார்க் ஹார்ட்மேன் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில முன்னாள் சபாநாயகரும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் மார்க் ஹார்ட்மேன் ஆகியோரைப் படுகொலை செய்த வழக்கில், குற்றவாளியான வான்ஸ் போல்டருக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் மேலதிகமாக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கின் இறுதி விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், துப்பாக்கிச் சூட்டில் தப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தில் உணர்ச்சிப்பூர்வமாக சாட்சியளித்தனர்.
</p><p>கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று அதிகாலை 3:30 மணியளவில், பொலிஸ் அதிகாரி போல முகமூடி மற்றும் சீருடை அணிந்து வந்த குற்றவாளி போல்டர், மெலிசா ஹார்ட்மேனின் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59fab932-9eea-4f5d-bd33-d064d2a424ff/26-6a62f7722805c.webp' /></p><p> </p><p>கதவைத் திறந்த கணவர் மார்க்கை சுட்டு வீழ்த்திய பின், வீட்டிற்குள் புகுந்து மாடிக்கு ஓடிய நாடாளுமன்ற உறுப்பினர் மெலிசாவையும் சுட்டுக்கொன்றார். </p><p>அவர்களின் செல்லப் பிராணியான நாயையும் அவர் விட்டுவைக்கவில்லை.
இதற்கு முன்பாக, அதே இரவில் மாநில செனட்டர் ஜான் ஹோஃப்மேன் மற்றும் அவரது மனைவி யுவெட் ஆகியோரின் வீட்டிற்குச் சென்று அவர்களைச் சுட்டுப் படுகாயப்படுத்தியுள்ளார்.
மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் அவர் சென்றுள்ளார். </p><p>இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், மாநில வரலாற்றிலேயே மிகப்பெரிய பொலிஸ் தேடுதல் வேட்டைக்கு வழிவகுத்தது.
மரண தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக, குற்றவாளி போல்டர் ஜூன் மாதத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார். </p><p>இதனைத் தொடர்ந்து, அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜான் ஆர். டன்ஹெய்ம் தீர்ப்பளிக்கும் போது:
"எனது பல ஆண்டுகால நீதித்துறை அனுபவத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகளை விசாரித்த பிறகு நான் வழங்கும் மிக நீண்ட தண்டனை இதுவாகும்.</p><p> ஆனால் இந்தத் தண்டனை அவருக்கு மிகவும் தகுதியானது தான்" எனக் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தில் சாட்சியளித்த மெலிசாவின் மகள் சோஃபி மற்றும் மகன் காலின் ஆகியோர், தங்கள் பெற்றோர் மற்றும் செல்லப் பிராணியை இழந்து வாழும் வேதனையை விவரித்து கண்ணீர் விட்டனர்.
</p><p>செனட்டர் ஜான் ஹோஃப்மேன் மற்றும் அவரது மனைவி கூறுகையில், அந்த கொடூர இரவுக்குப் பிறகு தங்கள் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டதாகவும், பாதுகாப்பிற்காக வீட்டின் கதவுகளை இரும்பால் மாற்றியிருப்பதாகவும், ஒவ்வொரு நாளும் பயத்துடனேயே வாழ்வதாகவும் குறிப்பிட்டனர்.
</p><p>அதேவேளை, வரி செலுத்தும் மக்களின் பணத்தில் குற்றவாளிக்கு ஆயுள் முழுவதும் உணவு அளிப்பதற்குப் பதிலாக அவருக்கு மரண தண்டனை வழங்கப்படாதது குறித்து மார்க் ஹார்ட்மேனின் குடும்பத்தினர் கடும் அதிருப்தி வெளியிட்டனர்.</p><p>
நீதிமன்றத்தில் பேசிய குற்றவாளி போல்டர், "என்னால் இழப்பு, வலி, சோகம் மற்றும் தனிமையைச் சந்தித்த ஒவ்வொரு நபரிடமும் நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T05:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய இராஜாங்க அமைச்சராக இலங்கை தமிழ்ப் பெண் உமா குமரன்; முதல் வரலாற்றுச் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lanka-tamils-uma-kumaran-uk-new-cabinet-minister-1784871247"></link>
            <id>https://canadamirror.com/article/lanka-tamils-uma-kumaran-uk-new-cabinet-minister-1784871247</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை புலமபெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில் (Foreign, Commonwealth and Development Office) வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ் இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54d46103-9b72-4b51-bd41-d15ac82db539/26-6a62f95118016.webp' /></p><h2>பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண்</h2><p> </p><p>இதன் மூலம் பிரித்தானிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கும் முதல் தமிழ் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
</p><p>
இலங்கையில் உள்நாட்டுப் போரின் காரணமாக பிரித்தானியாவில் குடியேறிய தமிழ் பெற்றோருக்கு பிறந்த உமா குமரன், அண்மைய பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.</p><p> தற்போது அமைச்சுப் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து, தனது சமூக ஊடகப் பதிவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அவர், “எனது பெற்றோருக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்த பிரித்தானியா, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வாய்ப்பை வழங்கியது.</p><p> இன்று அந்த நாட்டிற்கு அமைச்சராக சேவையாற்றுவது பெருமைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.


பிரித்தானிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைப்பில் இராஜாங்க அமைச்சர் பதவி, நாடாளுமன்ற துணைச் செயலாளர் பதவியை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p> அமைச்சரவை அமைச்சருக்கு அடுத்த முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் ஒன்றாக இந்தப் பதவி விளங்குகிறது.

இதற்கு முன்னர் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜயவர்தன, லிஸ் ட்ரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்.</p><p>

உமா குமரனின் நியமனம், பிரித்தானிய அரசியலில் இலங்கைத் தமிழ் சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கும், அந்நாட்டின் பல்வகைமை மற்றும் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் முக்கிய முன்னேற்றமாகவும் அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T05:32:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றத்தால் 100 அமெரிக்க டொலரை தாண்டிய மசகு எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/oil-prices-cross-100-on-middle-east-tensions-1784868688"></link>
            <id>https://canadamirror.com/article/oil-prices-cross-100-on-middle-east-tensions-1784868688</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இரு மாத வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இரு மாத வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.</p><p>இதன் காரணமாக, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலரைக் கடந்து அதிகரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f83ee7e6-9e70-4493-8cb6-90bbb35a2385/26-6a62ef525c3c9.webp' /></p><p>இதன்படி, சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100.60 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோன்று, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் விலையும் அதிகரித்து 92.13 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-24T04:52:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் புதிய வரி கொள்கை அமுல் ; இலங்கை உள்ளிட்ட நாடுகளின் 10% வரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-new-tax-policy-come-effect-10-tax-sri-lankan-1784862532"></link>
            <id>https://canadamirror.com/article/trump-new-tax-policy-come-effect-10-tax-sri-lankan-1784862532</id>
            <summary type="text">அமெரிக்காவின் தற்காலிக 10% உலகளாவிய இறக்குமதி வரி நடைமுறை காலாவதியாகும் நிலையில், இலங்கை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வர்த்தக கூட்டாளி நாடுகளிலிருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தற்காலிக 10% உலகளாவிய இறக்குமதி வரி நடைமுறை காலாவதியாகும் நிலையில், இலங்கை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வர்த்தக கூட்டாளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.
</p><p>
கட்டாய உழைப்புத் தடைச் சட்டங்கள் (Forced Labor Laws) போதுமான அளவில் அமுல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அமெரிக்காவின் வர்த்தக நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய வரி நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c13edde8-309c-44c4-bc0e-ce7c561b6d94/26-6a62d7461d1c2.webp' /></p><p>புதிய அறிவிப்பின்படி, இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளது. </p><p>இதேபோன்று ஆர்ஜென்டினா, பங்களாதேஷ், பிரித்தானியா, கம்போடியா, கனடா, ஈக்வடோர், குவாத்தமாலா, ஒண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட பல நாடுகளின் பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சீனா உள்ளிட்ட 38 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 12.5% இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது. அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மொத்தம் 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்களுக்கும் இந்த புதிய வரி நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் 10% முதல் 50% வரையிலான "பரஸ்பர இறக்குமதி வரிகள்" (Reciprocal Tariffs) அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. </p><p>எனினும், அந்த வரி நடைமுறையை அமெரிக்க உயர்நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் செல்லுபடியாகாது எனத் தீர்ப்பளித்து ரத்து செய்தது.

அதனைத் தொடர்ந்து, இடைக்கால நடவடிக்கையாக 150 நாட்கள் காலத்திற்கு அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக 10% தற்காலிக இறக்குமதி வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். </p><p>அந்த தற்காலிக வரி நடைமுறை இன்று நிறைவடையும் நிலையில், அதற்குப் பதிலாக நாடுவாரியாக புதிய வரி அமைப்பை அமெரிக்க நிர்வாகம் அமுல்படுத்தியுள்ளது.</p><p>

இந்த புதிய நடவடிக்கை, அமெரிக்க உற்பத்தித் துறையை வலுப்படுத்துதல், வர்த்தகப் பற்றாக்குறையை கட்டுப்படுத்துதல் மற்றும் "உலகளாவிய வரி" தொடர்பான தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய பொருளாதாரக் கொள்கை முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
</p><p>
இதனிடையே, புதிய இறக்குமதி வரிகள் அமுலுக்கு வந்ததன் பின்னர் இலங்கை உள்ளிட்ட பல ஏற்றுமதி நாடுகளின் ஆடை, விவசாயம் மற்றும் உற்பத்திப் பொருட்கள் அமெரிக்க சந்தையில் எந்தளவு பாதிப்பை எதிர்கொள்ளும் என்பது குறித்து சர்வதேச வர்த்தக வட்டாரங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-24T03:19:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்களால் முடியாவிட்டால், யாராலும் முடியாது ; ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/world-shaken-by-iran-s-stark-warning-1784853562"></link>
            <id>https://canadamirror.com/article/world-shaken-by-iran-s-stark-warning-1784853562</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘தங்களால் கச்சா எண்ணெய் விற்க முடியாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள எந்த நாடும் விற்க முடியாது’ என ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘தங்களால் கச்சா எண்ணெய் விற்க முடியாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள எந்த நாடும் விற்க முடியாது’ என ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும், அந்நாட்டின் தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/333bd9ab-2ce3-42b3-9ad1-5e36c9830e5d/26-6a62b43c11e2c.webp' /></p><p>

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,
</p><p>

“இந்த போரின் நிலைப்பாடு மிகத் தெளிவானது: ஒன்று அனைத்தும் அல்லது எதுவுமே இல்லை. நாங்கள் எண்ணெய் விற்க முடியாத ஒரு பிராந்தியத்தில், வேறு யாரும் எண்ணெய் விற்க முடியாது. ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால், எந்தவொரு உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது.
</p><p>
அதேவேளையில், அமெரிக்கப் படைகள் இல்லாத சூழலில்தான் அந்த ஹார்மூஸ் நீரிணை பாதுகாப்பானதாக இருக்கும். அந்த நீரிணையின் நிலைமை மீண்டும் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது என்பதை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் வர்த்தக கப்பல்களை தெஹ்ரான் தாக்கும் ஒவ்வொரு நேரமும், ஈரானியப் பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என ட்ரம்ப் எச்சரித்த சில மணிநேரங்களில் ஈரானின் இந்த எச்சரிக்கை வந்தது.</p>]]></content>
            <updated>2026-07-24T01:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் காட்டுத்தீ ; அவசர வெளியேற்றப்பபட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/france-wildfire-forces-10-000-evacuations-1784850966"></link>
            <id>https://canadamirror.com/article/france-wildfire-forces-10-000-evacuations-1784850966</id>
            <summary type="text">பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள லேஜ் கேப்-பெரெட் என்ற கடலோர சுற்றுலா நகரின் அருகே இரவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள லேஜ் கேப்-பெரெட் என்ற கடலோர சுற்றுலா நகரின் அருகே இரவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.</p><p> காற்றின் வேகம் காரணமாக இந்த தீ சுமார் 4 ஆயிரத்து 900 ஏக்கர் வனப்பரப்பிற்கு&nbsp; பரவியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78c3e2c7-223e-447f-bcaf-a41704f77d84/26-6a62aa1818971.webp' /></p><p> இதையடுத்து, அங்குள்ள 8 சுற்றுலா முகாம்களில் தங்கியிருந்த பயணிகள் மற்றும் காடுகளின் ஓரமாக வசித்த பொது மக்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.


</p><p>
தகவலறிந்து விரைந்து வந்த 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர். </p><p>எனினும், கடுமையான வறட்சி மற்றும் வெயில் காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் கடும் சவால் நீடிக்கிறது.</p><p> காலநிலை மாற்றத்தால் நடப்பாண்டில் மட்டும் பிரான்சில் 44 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் காட்டுத்தீயால் நாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-23T23:56:11+00:00</updated>
        </entry>
    </feed>
