<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-10T22:21:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா – சீனா வர்த்தக உறவில் புதிய முன்னேற்றம் ; வரிக் குறைப்புக்கு பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-development-in-us-china-trade-relations-1789073989"></link>
            <id>https://canadamirror.com/article/new-development-in-us-china-trade-relations-1789073989</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் சீனா இடையே இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பில் இரு நாடுகளும் விரைவில் உடன்பாட்டை எட்டக்கூடும் என சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் சீனா இடையே இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பில் இரு நாடுகளும் விரைவில் உடன்பாட்டை எட்டக்கூடும் என சீனா தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பாக இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக சீன தரப்பு தெரிவித்துள்ளது.</p><p>

இரு நாட்டு தலைவர்களும் விரைவில் சந்திக்கவுள்ள நிலையில், வரிக் குறைப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a08221a3-489b-4627-a037-b4344d398c7b/26-6aa31a47f2811.webp' /></p><p>சீன செய்தித் தொடர்பாளர் ஹுவாங் லிங், செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், சுமார் 30 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளைக் குறைப்பது தொடர்பில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான இந்த ஆண்டின் மூன்றாவது சந்திப்பு செப்டம்பர் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் வகையில், இந்த சந்திப்பை முன்னிட்டு வரிக் குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கு முன்னர் மே மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற இரு தலைவர்களின் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நிர்வாகத்தை மேம்படுத்த வர்த்தக வாரியம் மற்றும் முதலீட்டு வாரியம் அமைப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டிருந்தது.</p><p>

சீனப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவும் பதிலடியாக அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a7893e5-501f-4611-9ffd-87b323520e70/26-6aa31a4747470.webp' /></p><p>இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமான வர்த்தகப் போர் உருவானது.

இந்த நிலையில், பதற்றத்தைத் தணித்து வர்த்தக உறவுகளை சீரமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளில் வரி குறைப்பு முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது.</p><p>இரு நாடுகளிலும் அதிக வரி விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பொருட்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கான வரிகளை குறைப்பதே பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, அமெரிக்கா மற்றும் சீனா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள தற்போதைய தற்காலிக வர்த்தக சமாதான ஒப்பந்தம் நவம்பர் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
</p><p>
இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே விரிவான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும், அதற்கு பதிலாக குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும் வரிக் குறைப்புகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் பார்க்லேஸ் வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-10T21:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸில் பிரமாண்ட சொகுசு கப்பலில் பயங்கர தீ ; 5 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fire-on-luxury-ship-in-the-philippines-5-dead-1789072407"></link>
            <id>https://canadamirror.com/article/fire-on-luxury-ship-in-the-philippines-5-dead-1789072407</id>
            <summary type="text">பிலிப்பைன்ஸில் பயணிகள் சொகுசு கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீயில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிலிப்பைன்ஸில் பயணிகள் சொகுசு கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீயில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். </p><p>அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.தலைநகர் மணிலாவிலிருந்து சுற்றுலாத் தலமான பலாவனின் கொரோன் பகுதிக்குச் சென்ற 'எம்வி ஜூன் ஆஸ்டர்' என்ற பிரமாண்ட சொகுசு கப்பலில் 117 பயணிகள், 17 ஊழியர்கள் என மொத்தம் 134 பேர் சென்று கொண்டிருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebfe2689-043b-4361-9584-8ce382dac70e/26-6aa31418f06c0.webp' /></p><p>நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது, கப்பலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. </p><p>இது கப்பலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.


கொளுந்து விட்டு எரிந்த இந்தத் தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். </p><p>பலர் தீயில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்துள்ளனர். அவர்களில் ஒருசிலர் மீட்கப்பட்ட நிலையில், 80க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மாயமாகியுள்ளனர்.</p><p> அவர்களை தேடும் பணியில் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் தேடி வருகின்றனர்.
</p><p>

இதனிடையே, கப்பலில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கீழ்த்தளப் பகுதியில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக உயிர் தப்பிய ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>இருப்பினும், கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து குறித்த துல்லியமான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.
</p>]]></content>
            <updated>2026-09-10T20:33:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் 20 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/20-killed-in-cargo-ship-fire-at-chinese-port-1789070998"></link>
            <id>https://canadamirror.com/article/20-killed-in-cargo-ship-fire-at-chinese-port-1789070998</id>
            <summary type="text">சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவிலுள்ள துறைமுகத்திற்கு லைபீரிய நாட்டு கொடியுடன் கூடிய ஓசன் மெல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர்.</p><p>

சீனாவிலுள்ள துறைமுகத்திற்கு லைபீரிய நாட்டு கொடியுடன் கூடிய ஓசன் மெலோடி என்ற பெயரிட்ட சரக்கு கப்பல் ஒன்று வந்து நிறுத்தப்பட்டு உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1404984-846b-4d68-bede-c5f601dd7d82/26-6aa30e97a959a.webp' /></p><p>கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்தனர்.
</p><p>
இந்த நிலையில், அந்த கப்பல் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். </p><p>எனினும், கப்பலில் இருந்து 12 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டனர். மீதமுள்ள நபர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-10T20:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலின் முக்கிய கடற்கரை நகரை கைப்பற்றிய ஹவுதிக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/houthis-capture-key-red-sea-coastal-city-1789063221"></link>
            <id>https://canadamirror.com/article/houthis-capture-key-red-sea-coastal-city-1789063221</id>
            <summary type="text">தெற்கு செங்கடலில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஸூக்கார் தீவின் (Zuqar Island) கட்டுப்பாட்டை ஹூதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கைப்பற்றிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு செங்கடலில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஸூக்கார் தீவின் (Zuqar Island) கட்டுப்பாட்டை ஹூதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/210b914e-fbf6-46fa-9b8e-c4a37e343c11/26-6aa2f036e176b.webp' /></p><p>

படகுகளில் வந்து மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடர்ந்து குறித்த தீவு ஹூதி கிளர்ச்சியாளர்களின் பிடிக்குள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்தக் கைப்பற்றலின் ஊடாக, செங்கடலின் கடல்சார் பிராந்தியத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தமது இராணுவ மற்றும் மூலோபாய பலத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T18:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/oil-prices-rise-unstable-situation-in-middle-east-1789061803"></link>
            <id>https://canadamirror.com/article/oil-prices-rise-unstable-situation-in-middle-east-1789061803</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாகவும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து நிலை காரணமாகவும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாகவும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து நிலை காரணமாகவும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 105 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6228de5c-1cf4-45eb-8595-b81e9a406a36/26-6aa2eaad25497.webp' /></p><p>புளூம்பர்க் (Bloomberg) செய்திச் சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 4.25% (4.30 டொலர்) அதிகரித்து 105.51 டொலராக உயர்ந்துள்ளது.
</p><p>
அத்துடன், அமெரிக்காவின் NYMEX WTI ரக மசகு எண்ணெய் விலையும் 4.24% (4.07 டொலர்) அதிகரித்து 100.12 டொலரை எட்டியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T17:36:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலைக்கு அடியில் ஈரானின் ரகசிய அணு உலை; டிரம்ப் எச்சரிக்கையால் அச்சத்தில் உலகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-secret-nuclear-facility-beneath-the-mountain-1789032264"></link>
            <id>https://canadamirror.com/article/iran-secret-nuclear-facility-beneath-the-mountain-1789032264</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈரானின் நட்டாண்ஸ் அணுஉலை மையத்திற்கு அருகே அமைந்துள்ள ‘பிக்ஆக்ஸ் மலை’ (Pickaxe Mountain) என்ற மிகவும் சக்திவாய்ந்த நிலத்தடி அணுஆயுதத் தளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈரானின் நட்டாண்ஸ் அணுஉலை மையத்திற்கு அருகே அமைந்துள்ள ‘பிக்ஆக்ஸ் மலை’ (Pickaxe Mountain) என்ற மிகவும் சக்திவாய்ந்த நிலத்தடி அணுஆயுதத் தளத்தின் மீது அமெரிக்கப் படைகள் மிக விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும் என 


 டிரம்ப் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

ஈரான் தனது அணுஆயுதத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கிரானைட் பாறைகளுக்கு அடியில் 300 அடிக்கும் அதிகமான ஆழத்தில் ‘பிக்ஆக்ஸ்’ நிலத்தடிப் சுரங்கப் பாதையை அமைத்து அதில் ஆயிரக்கணக்கான அதிநவீன சென்ட்ரிஃபியூஜ்களை மாற்றி அமைத்துள்ளதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9910475-09c5-43c2-8487-886c761e08b8/26-6aa27749d8ace.webp' /></p><h2>அமெரிக்கப் படைகள் மிகக் கொடூரமாகத் தாக்கி அழிக்கும்</h2><p>
</p><p>
 மேலும், அங்குச் சந்தேகத்திற்கிடமான அணுசக்தி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை அமெரிக்கச் செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
</p><p>
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “ஈரானைப் பற்றியும் பிக்ஆக்ஸ் மலையில் யார் யாருடைய நடமாட்டம் இருக்கிறது என்பதையும் நாங்கள் உளவு அமைப்புகள் மூலம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். </p><p>ஈரான் எந்தவொரு சூழ்நிலையிலும் அணுஆயுதம் தயாரிப்பதை அனுமதிக்க முடியாது. அங்கே ஏதேனும் அணுசக்தி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டால், மிக விரைவில் பிக்ஆக்ஸ் தளத்தை அமெரிக்கப் படைகள் மிகக் கொடூரமாகத் தாக்கி அழிக்கும்” என எச்சரித்துள்ளார்.</p><p>

அமெரிக்காவின் இந்த அதிரடி அச்சுறுத்தலுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் நாடாளுமன்றப் பிரதிநிதிகள், உலகின் மிகவும் பலமாகப் பாதுகாக்கப்பட்ட அணுஆயுதத் தளமான பிக்ஆக்ஸ் மலை மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியத்தையும் போர்க் களமாக மாற்றிவிடும் என எச்சரித்துள்ளனர்.
</p><p>
இந் நிலையில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடரும் இந்த மோதல் போக்கால் சர்வதேச அளவில் அணுஆயுதப் போர் அபாயம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T16:59:04+00:00</updated>
        </entry>
    </feed>
