<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-15T20:10:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வீடொன்றில் ஆண் சடலமாக மீட்பு – காவல்துறை தீவிர விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/opp-investigating-death-of-man-found-in-parry-1789483562"></link>
            <id>https://canadamirror.com/article/opp-investigating-death-of-man-found-in-parry-1789483562</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், பாரி சவுண்ட் நகரில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை தீவிர விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், பாரி சவுண்ட் நகரில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. </p><p>
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில், சர்ச் வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிற்குச் சென்ற காவல்துறையினர், அங்கு ஒரு வயது வந்த ஆண் உயிரிழந்து கிடப்பதைக் கண்டறிந்தனர்.
</p><p>இச்சம்பவம் தொடர்பாக திங்கள்கிழமை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும், பொதுமக்களுக்கு வேறு எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa0551f8-37f9-43ca-bfcd-543375759744/26-6aa95a2c4dc86.webp' /></p><p> 
எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் சர்ச் வீதிப் பகுதியில் காவல்துறையினரின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த விசாரணையானது ஒன்றாரியோ பொலிஸாரின் குற்றப் புலனாய்வுக் கிளை, தலைமைச் சவப்பரிசோதனை அதிகாரி அலுவலகம் மற்றும் ஒன்ராறியோ தடயவியல் நோயியல் சேவை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது.</p><p> 
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல்கள் அறிந்தவர்கள் உடனடியாக காவல்துறையை 1-888-310-1122 என்ற எண்ணிலோ அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பின் மூலமாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T19:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஜோதிடரிடம் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்த பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-devastated-after-losing-96k-in-1789481669"></link>
            <id>https://canadamirror.com/article/woman-devastated-after-losing-96k-in-1789481669</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் கடுமையான உடல்நலப் பாதிப்பிலும் குடும்ப உறுப்பினர்களின் இழப்பிலும் தவித்த தருணத்தைப் பயன்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் கடுமையான உடல்நலப் பாதிப்பிலும் குடும்ப உறுப்பினர்களின் இழப்பிலும் தவித்த தருணத்தைப் பயன்படுத்தி, ஜோதிடர் ஒருவர் தன்னிடம் இருந்து சுமார் 96,000 டாலர்களை ஏமாற்றிவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
</p><p>தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்தப் பெண், தன்னை 'நேன்சி' என்ற பெயரில் ஊடகத்திடம் தனது துயரத்தைப் பகிர்ந்துள்ளார்.
</p><p>இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கடுமையான இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்த நேன்சி, அதே காலகட்டத்தில் தனது தந்தை மற்றும் சகோதரரை அடுத்தடுத்து இழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c8cbb6-aed5-4504-b8c5-e986bb822035/26-6aa952c7685b1.webp' /></p><p> </p><p>
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்தபோது, இன்ஸ்டாகிராமில் வெறும் 30 கட்டணத்தில் ஜோதிடம் பார்க்கப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்து அந்த ஜோதிடரை அணுகியுள்ளார்.</p><p>
ஜோதிடத்தைச் சந்தித்தபோது, நேன்சியைச் சுற்றிப் பொல்லாத ஆவிகளும், கடுமையான பில்லி சூனியமும் இருப்பதாக அச்சமூட்டப்பட்டுள்ளது.
</p><p>இந்தச் சூனியத்தினால் விரைவில் நீங்கள் முடங்கி, சக்கர நாற்காலியில் அமர நேரிடும்; இறுதியில் உயிரிழப்பீர்கள்" என்று ஜோதிடர் அச்சுறுத்தியுள்ளார்.</p><p>
ஒரு துர்சக்தியை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து ஏரியில் புதைக்க 25,000 டொலர் வேண்டும் எனக் கேட்டுப் பெற்றுள்ளார்.
</p><p>அதன் பின்னர் மேலும் 7 துர்சக்திகள் இருப்பதாகக் கூறி, சிறுகச் சிறுக நேன்சியின் வாழ்நாள் சேமிப்பான மொத்தம் 96,000 டெலாலர்களை பறித்துள்ளார்.</p><p>
தனது சேமிப்பு முழுவதையும் கொடுத்த பிறகும் நேன்சியின் உடல்நலத்திலோ பிரச்சினைகளிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை.</p><p> "இறுதியில் எதுவுமே நடக்கவில்லை. நான் மிகப்பெரிய முட்டாள்தனம் செய்துவிட்டேன். தினமும் அழுதுகொண்டிருக்கிறேன்" என நேன்சி கதறியுள்ளார்.
</p><p>இத்தகைய ஜோதிட மோசடிகள் பயம், அச்சுறுத்தல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சூழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை என கனடா மோசடி எதிர்ப்பு மையம் எச்சரித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T19:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வீட்டின் உரிமையாளர்களுடன் மோதல் –இருவர் மருத்துவமனையில் அனுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-men-injured-after-waterloo-assault-wrps-1789483206"></link>
            <id>https://canadamirror.com/article/two-men-injured-after-waterloo-assault-wrps-1789483206</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வாட்டர்லூ பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் ஏற்பட்ட கடுமையான தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வாட்டர்லூ பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் ஏற்பட்ட கடுமையான தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:40 மணியளவில், கிங் ஸ்ட்ரீட் நார்த் அருகே உள்ள கொலம்பியா ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதியில் அமைந்த குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது.</p><p> 
குறிப்பிட்ட ஒரு வீட்டிற்குள் இரு நபர்கள் நுழைய முயன்றதாகக் கூறப்படும் நிலையில், அவர்களுக்கும் வீட்டின் உரிமையாளர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5776aef7-3ab2-492b-91e9-2c63fed6b422/26-6aa958c7a8fc9.webp' /></p><p>
இந்த மோதலில் 34 மற்றும் 29 வயதுடைய இரு ஆண்கள் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.</p><p>
இந்தத் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் அல்லது அப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட கண்காணிப்புக் கேமரா மற்றும் டேஷ்கேம் வீடியோ காட்சிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாகத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு வாட்டர்லூ பிராந்தியக் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T18:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதி தப்பியோட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/federal-offender-known-to-frequent-the-gta-wanted-1789482824"></link>
            <id>https://canadamirror.com/article/federal-offender-known-to-frequent-the-gta-wanted-1789482824</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடமாடக்கூடிய &#039;பிராட்லி எலியட்&#039; (42) என்ற குற்றவாளியைப் பிடிக்க, பொலிஸார் நாடு தழுவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடமாடக்கூடிய 'பிராட்லி எலியட்' (42) என்ற குற்றவாளியைப் பிடிக்க, பொலிஸார் நாடு தழுவிய பிடியாணை பிறப்பித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>தனது சட்டப்பூர்வ விடுதலையின் போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறித் தப்பியோடியுள்ள இவர், 42 வயதுடைய வெள்ளை இனத்தவர் ஆவார். இவர் 5 அடி 9 அங்குலம் உயரமும், 75 கிலோ எடையும், பழுப்பு நிறக் கூந்தலும், ஹேசல் நிறக் கண்களும் கொண்டவர்.
காவல்துறையின் தகவல்படி, இவரது உடலில் பல இடங்களில் அடையாளப் பச்சைகள் குத்தப்பட்டுள்ளன. </p><p>
குறிப்பாக, இவரது வலது மேல் கையில் முள்வேலி, “HAWK” இதயம் மற்றும் சிலுவை அடையாளங்களும், இடது மேல் கையில் சிலுவை மற்றும் “Mom” என்ற வார்த்தையும் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2760b585-ee86-4171-8ae3-43b52c41e6ef/26-6aa9574a4f858.webp' /></p><p> 
மேலும், வலது முன்கையில் “Crystal”, கழுத்தில் “Bush”, இடது கையில் பிறந்த திகதியுடன் கூடிய “Jayden”, இடது முன்கையில் “Nanette” மற்றும் முதுகின் நடுப்பகுதியில் “ELLIOTT” என்ற பெயர் மற்றும் இரண்டு கைப்பாக்கிகளின் படங்களும் பச்சை குத்தப்பட்டுள்ளன.
</p><p>அடையாள மோசடி செய்து சொத்துக்களைக் கைப்பற்றுதல், குற்றங்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருத்தல், அதிகாரிகளின் பணிக்கு இடையூறு செய்தல், அபாயகரமான முறையில் வாகனம் இயக்குதல், வாகனத் திருட்டு, அனுமதியின்றித் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருத்தல், ஆயுதத்தால் தாக்குதல் மற்றும் காவலர் போல் ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் இவருக்கு 4 ஆண்டுகள் 1 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
</p><p>பொதுமக்கள் இவரைப் பற்றியோ அல்லது இவரது இருப்பிடம் குறித்தோ ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக 416-808-5900 அல்லது 1-866-870-7673 ஆகிய எண்களிலோ, 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பின் மூலமாகவோ காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T17:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடைக்கால முகாமில் சிறுவனுடன் தகாத செயலில் ஈடுபட்ட 46 வயது பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cook-charged-for-sexually-assaulting-youth-1789482285"></link>
            <id>https://canadamirror.com/article/cook-charged-for-sexually-assaulting-youth-1789482285</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், 16 வயதிற்குட்பட்ட சிறுவனுடன் தகாத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 46 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், 16 வயதிற்குட்பட்ட சிறுவனுடன் தகாத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 46 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார்.</p><p>
நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள ஜான்ஸ்டன் பாயிண்ட் பகுதியில் இயங்கி வந்த கோடைக்கால முகாம் ஒன்றில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், அங்கிருந்த சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக ஆகஸ்ட் 24ம் திகதி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், செப்டம்பர் 8 அன்று போர்ட் எல்கின் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் வைத்து ஜெனிஃபர் காலன் அபோட் என்ற பெண்ணைக் கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db9d871-8468-49c5-a27a-4219bc0fc88e/26-6aa9552ef232e.webp' /></p><p> </p><p>
செப்டம்பர் 9 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெனிஃபர் மீது மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>
பாலியல் தாக்குதல், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தலையீடு, 16 வயதிற்குட்பட்ட சிறுவர் முன் அநாகரீகமாக நடந்துகொள்ளுதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>தற்போது சில நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இவர், அக்டோபர் 7 அன்று மாங்க்டன் மாகாண நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>
இந்தச் சம்பவத்தில் வேறு ஏதேனும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும், பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை எந்த நேரத்திலும் பொதுமக்கள் காவல்துறைக்குத் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் அறிந்தவர்கள் உள்ளூர் காவல்துறையையோ அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' (1-800-222-8477) அமைப்பையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T16:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து 111 பேர் நாடு கடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cbsa-has-deported-amid-extortion-1789472113"></link>
            <id>https://canadamirror.com/article/cbsa-has-deported-amid-extortion-1789472113</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவிலிருந்து 111 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் கப்பம் கோரல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவிலிருந்து 111 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கனடாவில் கப்பம் கோரல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிரான நாடு தழுவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 111 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது. </p><p>
கடந்த ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட 188 வெளியேற்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த நாடுகடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31411d4b-d3c1-4f24-aae0-f6818fcf0d9a/26-6aa92d72b302d.webp' /></p><p>இவற்றில் பெரும்பாலான வெளியேற்றங்கள் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் டொராண்டோ பெரும்பாக பகுதியில் நிகழ்ந்துள்ளன.</p><p> 
குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவில் வசிக்கத் தகுதியற்றவர்களைக் கண்டறிந்து, விசாரித்து, வெளியேற்ற கனடா முழுவதிலும் உள்ள சட்ட அமலாக்கப் பங்காளிகளுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>இத்திட்டம் ஆகஸ்ட் 2025-இல் பசிபிக் மற்றும் பிரெய்ரி பிராந்தியங்களில் தொடங்கப்பட்டு, மூன்று மாதங்களுக்குப் பின்னர் டொராண்டோ பகுதிக்கு விரிவாக்கப்பட்டது.</p><p>பசிபிக் பிராந்தியத்தில் 91 வெளியேற்ற உத்தரவுகள் – 58 பேர் நாடுகடத்தல், பிரெய்ரி பிராந்தியம் 47 வெளியேற்ற உத்தரவுகள் – 30 பேர் நாடுகடத்தல், கிரேட்டர் தொரண்டோ பகுதி 50 வெளியேற்ற உத்தரவுகள் – 23 பேர் நாடுகடத்தல் என விபரிக்கப்பட்டுள்ளது.</p><p>
கடந்த ஆண்டில் மட்டும் தீவிர குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் கொண்ட 1,010 பேர் உட்பட மொத்தம் 23,160 தகுதியற்ற நபர்களை கனடா நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.</p><p> 
தற்போது எல்லை முகமையகத்தை விரிவாக்கம் செய்ய 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 30.4 மில்லியன் டொலர் நிதி மூலம் மேலும் 1,000 புதிய அதிகாரிகளை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T14:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
