<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-05T01:30:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழிவின் விளிம்பில் இங்கிலாந்து ; ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/england-on-the-brink-of-ruin-trump-warns-1788568080"></link>
            <id>https://canadamirror.com/article/england-on-the-brink-of-ruin-trump-warns-1788568080</id>
            <summary type="text">வல்லரசு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, சமீபகாலமாக பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, அங்குள்ள தற்போதைய அரசியல் மற்றும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வல்லரசு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, சமீபகாலமாக பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. </p><p style="text-align: justify; ">குறிப்பாக, அங்குள்ள தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் உலக நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db9d8b8c-f02c-45ce-9659-c1dbc3bed992/26-6a9b6212694aa.webp' /></p><p style="text-align: justify; ">


</p><p style="text-align: justify; ">
இந்தச் சூழ்நிலையில், இங்கிலாந்தின் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசு கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; ">


இங்கிலாந்தில் உயர்ந்து வரும் மின்சாரக் கட்டணம், பசுமை ஆற்றல் கொள்கைகள் மற்றும் உலகெங்கிலும் இருந்து எல்லையைக் கடந்து வரும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் ஆகியவை அந்த நாட்டைப் பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> மேலும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களைப் பயன்படுத்தாமல், இங்கிலாந்து தன் பொருளாதாரத்தை அழித்துக் கொள்வதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-05T01:19:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டென்னிஸ் மைதானத்தில் கஞ்சா வாசனை ; வீராங்கனை செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cannabis-smell-at-tennis-court-player-s-act-1788569406"></link>
            <id>https://canadamirror.com/article/cannabis-smell-at-tennis-court-player-s-act-1788569406</id>
            <summary type="text">அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் விளையாடிய உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அரினா சபலென்கா (Aryna Sabalenka), மைதானத்தில் வீசிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் விளையாடிய உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அரினா சபலென்கா (Aryna Sabalenka), மைதானத்தில் வீசிய கஞ்சா புகையின் வாசனை காரணமாக போட்டியைச் சிறிது நேரம் நிறுத்தி நடுவரிடம் முறைப்பாட்டை செய்துள்ளார்.
</p><p>
உஸ்பெகிஸ்தானின் கமில்லா ரகிமோவாவுக்கு எதிரான போட்டியின் போதுஇ இரண்டாவது சர்வீஸ் விளையாடியபோது இந்த வாசனை திடீரென வீசியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d5ce0f3-8124-47f4-8f0d-5f05882bbb09/26-6a9b673fa71ce.webp' /></p><p>
</p><p>
இதுகுறித்து நடுவர் ஈவா அஸ்டெராக்கி-மோர்விடம் முறையிட்ட அரினா சபலென்கா , மக்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், ஆனால் டென்னிஸ் மைதானத்திற்கு அருகில் அதைப் புகைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
</p><p>
மைதானத்தில் கஞ்சா வாசனை வருவது இது முதல்முறை அல்ல என்றாலும் இந்த முறை காற்று காரணமாக வாசனை மிகவும் தீவிரமாக இருந்ததாக சபலென்கா தெரிவித்தார்.
</p><p>
நியூயோர்க் நகரில் பெரியவர்களுக்குக் கஞ்சா பயன்பாட்டை சட்டம் அனுமதியளித்தாலும்இ மைதான வளாகத்திற்குள் புகைப்பிடிக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-05T00:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rebel-attack-in-sudan-kills-21-people-1788566157"></link>
            <id>https://canadamirror.com/article/rebel-attack-in-sudan-kills-21-people-1788566157</id>
            <summary type="text">வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான்.&amp;nbsp;சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.&amp;nbsp; சூடானின் தெற்கு கார்டோப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான்.&nbsp;</p><p>சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.&nbsp;</p><p><br></p><p> </p><p>சூடானின் தெற்கு கார்டோபன் மாகாணம் கவ்டா அருகே உள்ள டிபி, லுவிரி ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.</p><p>இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.</p><p> இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T23:56:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள அனர்த்தம் ; 9 நாட்களின் பின் மண்ணுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-rescued-alive-after-9-day-burial-struggle-1788559659"></link>
            <id>https://canadamirror.com/article/two-rescued-alive-after-9-day-burial-struggle-1788559659</id>
            <summary type="text">நேபாளத்தில் பனிப்பாறை மற்றும் சேறு சரிவு ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு, மேல் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த (சஞ்சய் சா )...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் பனிப்பாறை மற்றும் சேறு சரிவு ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு, மேல் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த (சஞ்சய் சா )மற்றும் (கபீர் மகர்ஜன் )ஆகிய இரண்டு தொழிலாளர்கள் இன்று (04) உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
சுரங்கப்பாதைக்குள் இருந்து சத்தம் கேட்டதை அடுத்து, இராணுவம், காவல்துறை மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் இந்தப் பிரதான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2956721c-7e28-4168-8ad8-bc40cb51cfb2/26-6a9b412ca5266.webp' /></p><h2><span style="font-size: 14px;">மீட்கப்பட்ட இருவரும் தலைநகர் காத்மண்டுவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர்.</span></h2><p>
அத்துடன் ஆகஸ்ட் 26 அன்று நேரிட்ட இந்தப் பேரிடரால் 1,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் திட்டச் சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T22:07:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தன்னை கருணைக்கொலை செய்யுமாறு கோரிய நகைச்சுவை நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-court-denies-toronto-womans-motion-1788537333"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-court-denies-toronto-womans-motion-1788537333</id>
            <summary type="text">&amp;nbsp;மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
</p><p>எனினும், இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்குப் பதிலளிக்குமாறு கனடா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>டொராண்டோவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும் நகைச்சுவைக் கலைஞருமான கிளாரி புரோஸோ , சிறுவயது முதலே கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17fafbec-6a8d-4ac7-aaaf-337e6e70589b/26-6a9ae9f6e5020.webp' /></p><p>
</p><p>பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் தனக்குக் தீராத மன உளைச்சல் நீடிப்பதால், சட்டம் வழங்கும் கருணைக்கொலைக்குத் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மே 2026-இல் அவசர மனுத் தாக்கல் செய்திருந்தார்.
</p><p>நீதிபதி கரிசிமா மாதன், புரோஸோவின் வேதனைகள் உண்மையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றபோதிலும், சட்ட விலக்கு அளிப்பது சமூகத்திலும் அரசின் கொள்கை முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மனுவை நிராகரித்தார்.
</p><p>அதேசமயம், 2024-ஆம் ஆண்டு புரோஸோ தாக்கல் செய்த அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை 14 நாட்களுக்குள் தொடங்குமாறு கனடா தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
</p><p>கனடாவில் 2021-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, தீர்க்க முடியாத நோய் மற்றும் உடல் ஊனம் உள்ளவர்கள் கருணைக்கொலை கோர முடியும்.</p><p> ஆனால், மனநலப் பிரச்சினையை மட்டுமே காரணமாகக் கொண்டு கருணைக்கொலை கோருவதற்கு அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. </p><p>இத்தடையை நீட்டிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசிய புரோஸோ, "மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களைப் போன்ற சம உரிமையோ, உடல் சார்ந்த சுய உரிமையோ இல்லை என்பதை அரசாங்கம் மீண்டும் நிரூபித்துள்ளது. </p><p>நான் தொடர்ந்து வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்" என வேதனையுடன் தெரிவித்தார்.
</p><p>அரசியலமைப்புச் உரிமைகளின்படி மனநலப் பாதிப்பு உள்ளவர்களுக்கும் கருணைக்கொலை உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்கான முதன்மை வழக்கைத் தொடர்ந்து நடத்தப்போவதாக புரோஸோவின் சட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T21:37:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் பாதுகாப்பு சேவை தலைமையகத்தை தாக்கிய ரஷ்ய ட்ரோன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-drone-hits-ukraine-security-service-hq-1788557824"></link>
            <id>https://canadamirror.com/article/russian-drone-hits-ukraine-security-service-hq-1788557824</id>
            <summary type="text">கீவ் நகரில் உள்ள உக்ரைனின் SBU பாதுகாப்பு சேவைகளின் தலைமையகத்தை ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி&amp;nbsp; வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீவ் நகரில் உள்ள உக்ரைனின் SBU பாதுகாப்பு சேவைகளின் தலைமையகத்தை ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி&nbsp; வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். </p><p>உக்ரைன்ஸ்கா பிரவ்தா செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், கட்டிடத்தின் முன்புறத்தில் உள்ள குறைந்தது இரண்டு ஜன்னல்களில் இருந்து கருப்பு புகை வெளியேறுவது போல தெரிந்தது, அதே நேரத்தில் வெளியே ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a95f0a39-53f9-4b2a-b953-c062f897eb1e/26-6a9b3a0272357.webp' /></p><p>
</p><p>&nbsp;நகர மையத்தின் மீதான தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்தனர் என கீவ் நகர மேயர் விட்டாலி கிளிச்கோ தெரிவித்தார். </p><p>சமீபத்திய வாரங்களில் ரஷியா, உக்ரைன் மீதான தனது பகல் நேர தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>சில சமயங்களில், வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்க கடினமான ஜெட் விமானங்களையும் அது பயன்படுத்துகிறது.
</p><p>
தாக்குதலுக்கு பிறகு "SBU-வின் தலைவர் ஒலெக்சாண்டர் போக்லாடுடன்" பேசியதாக ஜெலென்ஸ்கி கூறினார்.</p><p> "துரதிர்ஷ்டவசமாக, கீவ் நகரின் வோலோடிமிர்ஸ்கா தெருவில், புனித சோபியா பேராலயத்திற்கு எதிரே உள்ள SBU-வின் மைய கட்டிடத்தின் மீது ஒரு ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியுள்ளது," என்று ஜெலென்ஸ்கி டெலிகிராமில் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-04T21:37:23+00:00</updated>
        </entry>
    </feed>
