<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-12T14:23:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் இலங்கை வம்சாவளி பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sri-lankan-origin-woman-gets-top-norway-post-1789198392"></link>
            <id>https://canadamirror.com/article/sri-lankan-origin-woman-gets-top-norway-post-1789198392</id>
            <summary type="text">இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவரும் நோர்வேயின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தருமான கம்சி குணரட்ணம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவரும் நோர்வேயின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தருமான கம்சி குணரட்ணம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;நோர்வே மன்னர் தலைமையில் நடைபெற்ற அரசாங்க சபைக் கூட்டத்தில், 2026 செப்டெம்பர் 11ஆம் திகதி கம்சி குணரட்ணம் போக்குவரத்து அமைச்சராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d667326-a3ed-437d-a262-d79e39344d20/26-6aa500398df93.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் நோர்வே அரசியலில் முக்கியமான அமைச்சுப் பதவியை வகிக்கும் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட அரசியல்வாதியாக கம்சி குணரட்ணம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
</p><p>
இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட கம்சி குணரட்ணம், தொழிலாளர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி படிப்படியாக பல்வேறு அரசியல் பொறுப்புகளை வகித்து முன்னேறியுள்ளார்.</p><p> 19 வயதில் ஒஸ்லோ மாநகர சபைக்கு தெரிவான அவர், பின்னர் தேசிய அரசியலிலும் முக்கிய இடத்தைப் பெற்றார்.
</p><p>
தற்போது நோர்வே அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கம்சி குணரட்ணம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, அஞ்சல் சேவைகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பான கொள்கைகளுக்கு பொறுப்பானவராக செயற்படவுள்ளார்.</p><p>அரசியல் செய்திகளை வாசி

கம்சியின் இந்த உயர்வு, அவரது அரசியல் பயணத்தில் முக்கியமான புதிய கட்டமாகவும், நோர்வே வாழ் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்களுக்கு பெருமைக்குரிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.</p><p>

நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் கட்சி உறுப்பினர்களைக் கொண்டதாக அமைந்துள்ள நிலையில், கம்சி குணரட்ணம் போக்குவரத்து அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.
</p><p>
இதேவேளை, புதிய அமைச்சருக்கான மாநிலச் செயலாளர்களாக Abel Cecilie Knibe Kroglund மற்றும் Jakob Vorren ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-12T13:53:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சென்றார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/xi-jinping-visits-india-after-seven-years-1789218164"></link>
            <id>https://canadamirror.com/article/xi-jinping-visits-india-after-seven-years-1789218164</id>
            <summary type="text">புதுடெல்லியில் நடைபெறும் 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் இன்று இந்தியா வந்தடைந்தார்.

கடந்த 7 ஆண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுடெல்லியில் நடைபெறும் 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் இன்று இந்தியா வந்தடைந்தார்.
</p><p>
கடந்த 7 ஆண்டுகளில் அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் வருகை இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57486bf6-c03d-455c-91f4-798e032880e5/26-6aa54d75bde67.webp' /></p><p>
</p><p>
சீன அரசாங்கத்தின் செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் (Xinhua) தகவல்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொது அலுவலக பணிப்பாளரும் உயர்மட்ட அதிகாரியுமான சாய் சி (Cai Qi) மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) ஆகியோர் ஜனாதிபதி ஸீ ஜின்பிங்குடன் வருகை தந்துள்ளனர்.
</p><p>
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஸீ ஜின்பிங் இறுதியாக இந்தியா வந்திருந்தார்.
</p><p>
அதன் பின்னர், லடாக்கின் எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு இராணுவப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பு உறவில் பதற்றம் நிலவி வந்தது.
</p><p>
இருப்பினும், கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றிருந்த நிலையிலும், இரு நாடுகளும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியதன் மூலமும் இருதரப்பு உறவுகள் படிப்படியாக சீரடைந்து வருகின்றன.</p><p>

இந்தநிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்கள் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் கலந்து கொள்கிறார்.

இன்று மாலை அவர் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-12T13:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய ஜனாதிபதிக்கு திருக்குறளை பரிசளித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/modi-gifts-thirukkural-to-russian-president-1789212830"></link>
            <id>https://canadamirror.com/article/modi-gifts-thirukkural-to-russian-president-1789212830</id>
            <summary type="text">&amp;nbsp;புதுடெல்லியில் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;புதுடெல்லியில் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.<br></p><p>&nbsp;அதன்போது,&nbsp; திருவள்ளுவர் இயற்றிய பழமையான தமிழ் செவ்வியல் நூலான 'திருக்குறளின்' ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதியை, ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.
</p><p>
திருவள்ளுவரின் 1,330 குறட்பாக்களும் இந்த ரஷ்யப் பதிப்பில் இடம்பெற்றுள்ளன.</p><p>

இந்திய அரசின் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த நூலை, நைரா எம் கர்ட்சியான் (Naira Mkrtcheyan) என்பவர் ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
</p><p>
இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பரிசுகளை ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்குவது இது முதல்முறையல்ல.
</p><p>
முன்னதாக, 2024ஆம் ஆண்டு கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 'சோஹ்ராய்' (Sohrai) ஓவியத்தை அவர் விளாடிமிர் புடினுக்குப் பரிசளித்தார்.</p><p>

அதேபோல, 2025ஆம் ஆண்டில் பகவத் கீதையின் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதி, அஸ்ஸாம் தேயிலை மற்றும் வெள்ளியிலான குதிரை சிலை ஆகியவற்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-12T11:34:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி ; மோசமடையும் மத்திய கிழக்கு நிலைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/saudi-arabia-shuts-key-oil-pipeline-1789209268"></link>
            <id>https://canadamirror.com/article/saudi-arabia-shuts-key-oil-pipeline-1789209268</id>
            <summary type="text">ஈரான் - அமெரிக்கா மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக்கிலிருந்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது முக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் - அமெரிக்கா மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக்கிலிருந்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது முக்கியமான 1,200 கிலோமீட்டர் நீளமுடைய ‘கிழக்கு - மேற்கு’ எண்ணெய் குழாய் வழித்தடத்தை தற்காலிகமாக மூடியுள்ளது.</p><p>



சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய மாற்று வழித்தடமாக விளங்கும் இந்தக் குழாய் வழித்தடம், ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து எண்ணெயை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d51bcabd-5a6b-47f8-ba26-1c7ebfe6e80f/26-6aa52ab65e11d.webp' /></p><p>



பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தக் குழாய் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>


கடந்த வியாழக்கிழமை (10) ஈராக்கிலிருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படும் பல ட்ரோன்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக சவூதி வெளியுறவு அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது. </p><p>தாக்குதலை ஈராக் அரசாங்கமும் கண்டித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.



இதனிடையே, சவூதி ஆதரவு பெற்ற யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஈரான் ஆதரவு ஹௌதி அமைப்பினர்களுக்கும் இடையிலான மோதலும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>


பாப்-எல்-மண்டேப் நீரிணைக்கு அருகிலுள்ள முக்கிய பகுதிகள் தொடர்பிலும் ஹௌதிகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>


உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான பாப்-எல்-மண்டேப் நீரிணை, சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
</p><p>


இதனால் அப்பகுதியில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.



சவூதி அரேபியா மூடியுள்ள எண்ணெய் குழாய் வழித்தடம் மூலம் கடந்த சில மாதங்களாக நாளொன்றுக்கு சுமார் 4 முதல் 5 மில்லியன் கொள்கலன் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.



இந்நிலையில், குழாய் வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பாதுகாப்புப் படையினரும் தொழில்நுட்பக் குழுவினரும் மதிப்பீடு செய்து வருகின்றனர்.</p><p>



குழாய் மீண்டும் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T10:34:36+00:00</updated>
        </entry>
    </feed>
