<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-18T15:23:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் அங்கீகரிக்கப்படாத எடைக் குறைப்பு மருந்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drugmaker-warns-canadians-about-unapproved-1787045403"></link>
            <id>https://canadamirror.com/article/drugmaker-warns-canadians-about-unapproved-1787045403</id>
            <summary type="text">&amp;nbsp;அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான எடைக் குறைப்பு மருந்து கருப்புச் சந்தையில் விற்கப்படுவது குறித்து முன்னணி மருந்து உற்பத்தியாளரான &#039;லில்லி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான எடைக் குறைப்பு மருந்து கருப்புச் சந்தையில் விற்கப்படுவது குறித்து முன்னணி மருந்து உற்பத்தியாளரான 'லில்லி கனடா' கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
அந்நிறுவனம் சோதனைக் கட்டத்தில் வைத்துள்ள 'ரெடாட்ரூடைட்' என்ற மருந்து, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
ரெடாட்ரூடைட் மருந்து, ஹெல்த் கனடா அமைப்பாலோ அல்லது உலகளவில் வேறு எந்த ஒழுங்குமுறை ஆணையத்தாலோ மனித பயன்பாட்டிற்காக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deaefffe-6170-4b9f-9edc-f7e3bd099468/26-6a84261d6d580.webp' /></p><p> </p><p>
எனவே, இதை கனடாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ சட்டப்பூர்வமாக விற்க முடியாது. எனினும், சர்வதேச அளவில் இதற்கான கருப்புச் சந்தை இயங்கி வருகிறது என லில்லி கனடா தெரிவித்துள்ளது.
</p><p>அமெரிக்க மருந்து நிறுவனமான எலி லில்லி தயாரிக்கும் இந்த மருந்து, உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக உருவாக்கப்பட்டு வருகிறது. </p><p>
தற்போது 3-ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ள இம்மருந்து, உடல் எடையைக் குறைப்பதில் ஒரு "புரட்சிகரமான முன்னேற்றத்தை" வெளிப்படுத்தியுள்ளதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
</p><p>80 வாரங்கள் நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில், டைப் 2 நீரிழிவு மற்றும் அதிக உடல் எடை கொண்ட நபர்கள் சராசரியாக 22.5 கிலோ (49.6 பவுண்ட்) வரை எடையைக் குறைத்துள்ளனர்.</p><p>
 மற்றொரு ஆய்வில், தீவிர உடல் பருமன் கொண்ட பெரியவர்கள் சராசரியாக 25.3 கிலோ (55.8 பவுண்ட்) எடையைக் குறைத்துள்ளது தெரியவந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T13:34:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆள் மாறாட்டத்தில் சிக்கிய பிரிட்டன் பிரதமர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/british-pm-burnham-case-of-mistaken-identity-1787031998"></link>
            <id>https://canadamirror.com/article/british-pm-burnham-case-of-mistaken-identity-1787031998</id>
            <summary type="text">&amp;nbsp;பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளஆண்டி பர்ன்ஹாம் ( Andy Burnham ), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதன்மை உதவியாளரான சூசி வைல்ஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளஆண்டி பர்ன்ஹாம் ( Andy Burnham ), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதன்மை உதவியாளரான சூசி வைல்ஸ் (Susie Wiles) போல ஆள்மாறாட்டம் செய்த ஒருவருடன் குறுஞ்செய்திகளைப் பகிர்ந்து கொண்ட சம்பவம் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
ஜூலை மாத இறுதியில் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்ற ஆண்டி பர்ன்ஹாமிற்கு ( Andy Burnham ) , வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியான சூசி வைல்ஸின் பெயரில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1db1c29-2d42-4662-85c8-656cdc054347/26-6a83f1bfe964d.webp' /></p><p> 
அச்செய்தியை உண்மையானது என நம்பிய பிரதமர் பர்ன்ஹாம் ( Andy Burnham ), அந்த மர்ம நபருடன் சில குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொண்டுள்ளார்.
</p><p>
 இருப்பினும், உரையாடலின் போக்கில் எழுந்த சந்தேகத்தையடுத்து, பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் உடனேத் தகவல்தொடர்பை நிறுத்திவிட்டு பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வாஷிங்டனில் உள்ள பிரிட்டன் தூதரகம் உடனடியாக வெள்ளை மாளிகையைத் தொடர்புகொண்டு முறையிட்டது. மேலும், சூசி வைல்ஸின் கைபேசி அல்லது சாதனங்கள் ஏதேனும் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது. </p><p>

ஆனால், வெள்ளை மாளிகை தரப்பில் தங்களது அதிகாரிகளின் சாதனங்கள் எதுவும் ஊடுருவப்படவில்லை எனவும், இது தனிப்பட்ட ஆள்மாறாட்ட முயற்சி எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தகவல்தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் எதுவும் பரிமாறப்படவில்லை என்றும், வழக்கமான உரையாடல்களே நடைபெற்றதாகவும் பிரிட்டன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

“தேசியப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம்” என டவுனிங் ஸ்திரீட் வழக்கமான பதிலை அளித்துள்ள போதிலும், உயர்மட்டத் தலைவர்களிடையே நடைபெறும் இத்தகைய ஆள்மாறாட்ட சம்பவங்கள் இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T13:22:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யப் படைகள் தாக்குதல்; மத்திய கிழக்கு உக்ரைனிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-makes-hostages-of-kherson-civilians-1787059458"></link>
            <id>https://canadamirror.com/article/russia-makes-hostages-of-kherson-civilians-1787059458</id>
            <summary type="text">ரஷ்யப் படைகள் உக்ரைனின் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்திற்குள் முன்னேறி வரும் நிலையில், அங்குள்ள 2,200 குழந்தைகள் உட்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யப் படைகள் உக்ரைனின் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்திற்குள் முன்னேறி வரும் நிலையில், அங்குள்ள 2,200 குழந்தைகள் உட்பட பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.
</p><p>


டினிப்ரோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள 16 குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பொதுமக்களை கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30a43e5e-2c43-4ebc-a5c3-a15d5adf79d7/26-6a845d0408755.webp' /></p><h2>ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள&nbsp; ரஷ்யப் படையெடுப்பு</h2><p>
</p><p>


ஒரு மாதத்திற்குள் குழந்தைகளுடன் உள்ள அனைத்து குடும்பங்களும் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய இராணுவ நிர்வாகத் தலைவர் அலெக்சாண்டர் கொன்ஷா தெரிவித்துள்ளார்.
</p><p>


இதன்படி, பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகளின் உதவியுடன் 2,177 குழந்தைகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
</p><p>


வெளியேற்றப்படும் பொதுமக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் பாதுகாப்பான புதிய குடியிருப்புகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியம் ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு தொடர்ச்சியாக இலக்காகி வருகின்றது. பிராந்தியத்தின் கிழக்குப் பகுதிகளில் மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p>



இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பு ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ளது.
</p><p>
இந் நிலையில், ரஷ்யப் படைகளின் முன்னேற்ற வேகம் குறைந்திருந்தாலும், ஆள் பற்றாக்குறை மற்றும் இராணுவ வீரர்களின் சோர்வு காரணமாக உக்ரைன் இராணுவம் தொடர்ந்து நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


மேலும், கடந்த மாதம் ரஷ்ய இராணுவத்தின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை, போரின் ஆரம்பகாலத்துக்குப் பின்னர் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T13:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fatality-confirmed-after-serious-collision-1787046676"></link>
            <id>https://canadamirror.com/article/fatality-confirmed-after-serious-collision-1787046676</id>
            <summary type="text">கனடாவின் லண்டன் நகரில், வெட்டரன்ஸ் மெமோரியல் பார்க்வே மற்றும் பிராட்லி அவென்யூ சந்திப்பில் கடந்த வெள்ளிக்கிழமை நேரிட்ட கொடூர கார் விபத்தில் ஒருவர் உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் லண்டன் நகரில், வெட்டரன்ஸ் மெமோரியல் பார்க்வே மற்றும் பிராட்லி அவென்யூ சந்திப்பில் கடந்த வெள்ளிக்கிழமை நேரிட்ட கொடூர கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லண்டன் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> 
முன்னதாக, இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p>
இந்நிலையில், விபத்துக்குள்ளான வாகனங்களில் ஒன்றில் பயணித்த பெண் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தற்போது தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/464ed245-167a-4134-abb2-671f9d540b5f/26-6a842b15af1d9.webp' /></p><p> </p><p>
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற மூன்று பேரின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை. </p><p>
ஆகஸ்ட் 14, 2026 அன்று இரவு 9:20 மணி முதல் 9:40 மணி வரை இந்த பகுதியில் பயணித்தவர்கள், விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் அல்லது தங்களது வாகன டேஷ்கேம், வீடுகள் மற்றும் கடைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் வைத்துள்ள பொதுமக்கள் லண்டன் காவல் துறைக்கோ அல்லது 'கிரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பிற்கோ உடனடியாகத் தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T09:55:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கான் தொடர்பில் பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pakistan-supreme-court-orders-imran-khan-hospital-1787045813"></link>
            <id>https://canadamirror.com/article/pakistan-supreme-court-orders-imran-khan-hospital-1787045813</id>
            <summary type="text">&amp;nbsp; பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உயர் நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


சிறையில் உள்ள இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பில் கவலைகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு உரிய வைத்திய சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தபோதே நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a9255cd-0b58-4def-9ea6-5a5ffdb072b4/26-6a8427b6c84e1.webp' /></p><p>
</p><p>


மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, இம்ரான் கானை வைத்தியசாலைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதுடன், அவரது உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை வழங்க வைத்தியர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>



மேலும், வைத்திய பரிசோதனை மற்றும் சிகிச்சையின்போது இம்ரான் கானின் சகோதரி மற்றும் தனிப்பட்ட வைத்தியர் ஆகியோர் உடனிருக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>


அடுத்த விசாரணை வரை அல்லது வைத்தியர்கள் அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறத் தகுதியானவர் எனத் தெரிவிக்கும் வரை இம்ரான் கான் வைத்தியசாலையில் தங்கியிருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-18T09:34:23+00:00</updated>
        </entry>
    </feed>
