<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-29T17:38:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய பேரழிவு; உடல்களை அடக்கம் செய்யவுள்ளதாக நேபாள அரசு அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepa-announces-plans-to-bury-the-bodies-flood-1788007730"></link>
            <id>https://canadamirror.com/article/nepa-announces-plans-to-bury-the-bodies-flood-1788007730</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாள வெள்ளத்தில் பலியாகி இதுவரை அடையாளம் கண்டறியபடாத நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாள வெள்ளத்தில் பலியாகி இதுவரை அடையாளம் கண்டறியபடாத நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
</p><p>


திபெத் எல்லையில் அமைந்துள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில், கடந்த 26 ஆம் திகதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டதில் 600 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன் 2000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2a68e27-d0bf-4e15-92e3-5392bcdef3a8/26-6a92d5340c906.webp' /></p><h2>600 க்கும் மேற்பட்ட உயிரிழப்பு</h2><p>
</p><p>


காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
</p><p>


இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இன்று (29) காலை 10 மணி நிலவரப்படி 626 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதிகப்படியாக சித்வான் பகுதியில் மட்டும் 233 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>



இதையடுத்து, மீட்கப்படும் உடல்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு சித்வான் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதிய இடவசதியும் கட்டமைப்பு வசதியும் இல்லை எனக் கூறப்படுகிறது.</p><p> மேலும், மீட்கப்பட்டு வரும் உடல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உடல்கள் சிதைவடைவதைத் தடுப்பது மிகுந்த சிரமம் என்றும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>


இதனால், சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு புதிய தொற்றுகள் உருவாகக் கூடும் என்பதால் அடையாளம் காணப்படாத உடல்களை தேவ்காட் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் அடக்கம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T17:37:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா கெடுபிடிக்கு மத்தியில் சாதனை படைத்த ஈரான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-oil-achieves-a-milestone-amidst-us-pressure-1788009829"></link>
            <id>https://canadamirror.com/article/iran-oil-achieves-a-milestone-amidst-us-pressure-1788009829</id>
            <summary type="text">அமெரிக்காவின்&amp;nbsp; கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் ஈரான் தனது எண்ணெய் வருவாய் மற்றும் வரவுசெலவுத் திட்ட இலக்குகளை உறுதிசெய்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின்&nbsp; கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் ஈரான் தனது எண்ணெய் வருவாய் மற்றும் வரவுசெலவுத் திட்ட இலக்குகளை உறுதிசெய்துள்ளது.
</p><p>


கடல்சார் போக்குவரத்து தடைகள் எதுவாக இருப்பினும், தமது வரவுசெலவுத் திட்டத்திற்கு (Budget) தேவையான நிதியைத் திரட்டுவதற்குப் போதுமான அளவு எண்ணெய் விற்பனைக்குக் கிடைப்பதாக ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef023197-83e4-426c-a465-1c3c990a89b7/26-6a92dd66883c4.webp' /></p><p>
</p><p>


பெட்ரோலிய அமைச்சகத்தின் தரவுகளின்படி, நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வரவுசெலவுத் திட்டத்திற்காக எதிர்பார்க்கப்பட்ட எண்ணெய் வருவாயில் 99 சதவீதம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



குறித்த ஆரம்ப மாதங்களில் எண்ணெய் மூலம் ஈட்டப்பட்ட 7.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அந்நியச் செலாவணி வருவாயை பெட்ரோலிய அமைச்சகம் ஏற்கனவே மத்திய வங்கியிடம் ஒப்படைத்துள்ளது.</p><p>&nbsp; இது எதிர்வரும் ஜனவரி மாதம் வரையிலான அரசாங்கத்தின் அந்நியச் செலாவணிச் செலவுகளை ஈடுசெய்யும் என்றும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-29T13:20:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் Kyiv மீது ரஷ்யா சரமாரி ட்ரோன் தாக்குதல்; பலர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-launches-barrage-of-drone-attacks-on-kyiv-1788008271"></link>
            <id>https://canadamirror.com/article/russia-launches-barrage-of-drone-attacks-on-kyiv-1788008271</id>
            <summary type="text">&amp;nbsp; உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) நகருக்கு அருகிலுள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) நகருக்கு அருகிலுள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
</p><p>


துரதிர்ஷ்டவசமாக, தற்போது வரை 27 பேர் உயிரிழந்துள்ளதாகக் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கீவ் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தைமூர் தகாச்சென்கோ (Tymur Tkachenko) தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ecdacf6-6496-4b82-a5d7-33f5d5da2761/26-6a92d751804b5.webp' /></p><p>
</p><p>


உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.</p><p>



ரஷ்ய ட்ரோன்கள் ஒரு சேமிப்புக் கிடங்கைத் தாக்கியதால் ஏற்பட்ட வெடிப்பு, அப்பகுதி முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p>



இதேவேளை, ட்ரோன் தயாரிக்கும் உபகரணங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதக் கிடங்கைத் தமது படைகள் தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-29T12:55:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் வர்த்தகப்போர்; கனடாவை எச்சரிக்கும் வல்லுனர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trade-war-with-the-us-experts-warn-canada-1787990920"></link>
            <id>https://canadamirror.com/article/trade-war-with-the-us-experts-warn-canada-1787990920</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர் இரண்டு நாடுகளின் வணிகங்களையும் பாதிக்கும் எனவும், இதில் , கனேடியப் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர் இரண்டு நாடுகளின் வணிகங்களையும் பாதிக்கும் எனவும், இதில் , கனேடியப் பொருளாதாரம் கடுமையான மந்தநிலையைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>

 அமெரிக்கா - கனடா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா, கனடாவின் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் மீது 50 சதவீத வரியை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca8eaa8-5272-4bb9-b034-e571ca00f6f7/26-6a929389e49a5.webp' /></p><h2>&nbsp;20 பில்லியன் டொலர் மதிப்பிலான பழிவாங்கல் வரி</h2><p>
</p><p>
ஜனவரி 1 முதல் அனைத்து சிற்றுந்து தயாரிப்புகள் மீதும் 50 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார் .</p><p>அதேநேரம், அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, கனேடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), 700-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் பொருட்கள் மீது 15, 25 மற்றும் 50 சதவீத அடிப்படையில் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பழிவாங்கல் வரிகளை அறிவித்துள்ள நிலையில் இந்த வரிகள் எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் அமுலுக்கு வரவுள்ளன.</p><p>

இதற்கிடையில், அமெரிக்காவைக் காட்டிலும் கனடாவின் பொருளாதாரம் பத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளதாலும், தனது ஏற்றுமதியில் 70 சதவீதத்தை அமெரிக்காவிற்கே அனுப்புவதாலும் கனடா இந்த வர்த்தகப் போரால் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.
</p><p>
அதன்படி ஒன்ராறியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் நியூ பிரன்சுவிக் மாகாணங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர்.</p><p>

இந்த வர்த்தகப் போரால் கனடாவில் 100,000-க்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்படலாம் என சர்வதேச வர்த்தக ஆலோசகர்கள் அஞ்சுகின்றனர்.</p><p>

இதேவேளை, கனடாவிற்கு எதிரான தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, ஒன்ராறியோ ஏரியை (Lake Ontario) இனி அமெரிக்க அரசு "அமெரிக்கா ஏரி" (Lake America) என்று அழைக்கும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
இதற்குப் பிரதமர் மார்க் கார்னி மற்றும் மனிட்டோபா மாகாணத்தின் முதல்வர் வாப் கினே (Wab Kinew) ஆகியோர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-29T12:47:35+00:00</updated>
        </entry>
    </feed>
