<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-16T14:30:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கார் கொள்ளையுடன் தொடர்புடைய இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nb-rcmp-arrest-wanted-man-accused-of-assault-1786880260"></link>
            <id>https://canadamirror.com/article/nb-rcmp-arrest-wanted-man-accused-of-assault-1786880260</id>
            <summary type="text">கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாகப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கனடிய அரச காவல்துறை கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாகப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கனடிய அரச காவல்துறை கைது செய்துள்ளது.</p><p>
நிக்கோலஸ் கெல்லி என்ற இந்த நபரை ரிச்சிபுக்டோ பகுதியில் பொலிஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். அவர் கடைசியாக ஆகஸ்ட் 4 ஆம் திகதி கென்ட் கவுண்டியில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
</p><p>கைது செய்யப்பட்ட 25 வயதான நிக்கோலஸ் கெல்லி மீது, ஆட்களைத் தாக்குதல், ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டுதல், வாகனத் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2b134ad-a959-4ac8-8325-3dc35edd111a/26-6a81a1068e183.webp' /></p><p>
சந்தேகநபர் எந்த இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்ற விவரங்களைப் பொலிஸார் வெளியிடவில்லை.</p><p>
எனினும், சந்தேகநபரைப் பிடிப்பதற்குத் தேவையான தகவல்களை வழங்கி உதவிய பொதுமக்களுக்குச் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் பொலிஸார் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T12:23:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் கத்திக்குத்து தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/toronto-police-identify-suspect-wanted-in-stabbing-1786880704"></link>
            <id>https://canadamirror.com/article/toronto-police-identify-suspect-wanted-in-stabbing-1786880704</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து ஊழியர் ஒருவர் மீது எவ்வித காரணமுமின்றி நடத்தப்பட்ட கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாகத் தேடப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து ஊழியர் ஒருவர் மீது எவ்வித காரணமுமின்றி நடத்தப்பட்ட கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை டொராண்டோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
</p><p>வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் புளோர் மற்றும் யோங் வீதிகளுக்கு அருகே குறித்த ஊழியர் நடைபாதையில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>சம்பவத்தின் போது அந்த ஊழியர் தனது இடைவேளையில் இருந்ததாக ரீ.ரீ.சீ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கத்திக்குத்துத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஊழியர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3d6599a-1f17-44fa-b641-37a2ecad38db/26-6a81a2c1e922f.webp' /></p><p> அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 
பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டில் நலமடைந்து வருவதாக ரீ.ரீ.சீ தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் 36 வயதான அந்தோணி கிறிஸ்டோபர் டேவிட் மெக்லாலின் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். </p><p>ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியமை மற்றும் படுகாயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் தேடப்பட்டு வருகிறார்.
</p><p>5 அடி 8 அங்குலம் முதல் 5 அடி 10 அங்குலம் வரை உயரம் கொண்ட நடுத்தர உடல்வாகு உடையவர். முகம் மற்றும் கைகளில் பல பச்சைக் குத்தல்கள் மற்றும் முழுமையான தாடி வைத்துள்ளார் என குறித்த நபர் பற்றிய அடையாள விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>சாம்பல் நிற டி-சர்ட், நீல நிற வெஸ்ட் ஜோக்கெட், சாம்பல் நிறப் பேன்ட், பழுப்பு நிற லெதர் காலணிகள் மற்றும் பின்புறமாகத் திருப்பி வைக்கப்பட்டக் கருப்பு நிற தொப்பி (வெள்ளை எழுத்துகளில் "We The North" என எழுதப்பட்டது).
</p><p>இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் 416-808-5300 என்ற எண்ணில் பொலிஸாரையோ அல்லது 416-222-TIPS (8477) என்ற எண்ணில் குற்றத் தடுப்புப் பிரிவையோ (Crime Stoppers) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T12:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூபெக்கில் பொலிஸார் சந்தேக நபர்களை துரத்திய போது ஒருவர் பலியான விடயம் தொடர்பில் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-chase-leaves-1-dead-and-1-injured-quebec-1786881179"></link>
            <id>https://canadamirror.com/article/police-chase-leaves-1-dead-and-1-injured-quebec-1786881179</id>
            <summary type="text">கனடாவின் கியூபெக் மாகாணத்தில், லேவிஸ் பகுதிக்கு அருகே பொலிஸார் சந்தேக நபர்களை துரத்திச் சென்ற சம்பவத்தின் போது நபர் ஒருவர் உயிரிழந்தது குறித்து கியூபெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கியூபெக் மாகாணத்தில், லேவிஸ் பகுதிக்கு அருகே பொலிஸார் சந்தேக நபர்களை துரத்திச் சென்ற சம்பவத்தின் போது நபர் ஒருவர் உயிரிழந்தது குறித்து கியூபெக்கின் சுயாதீன பொலிஸ் கண்காணிப்புக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p>
வெள்ளிக்கிழமை இரவு 11:21 மணியளவில், கியூபெக்கில் உள்ள பியர் லபோர்ட் பாலத்தில் வாகன விபத்து மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் விரைந்தனர்.
</p><p>விபத்தை ஏற்படுத்திய நபர், மற்றொருவரைப் பலத்த காயப்படுத்திவிட்டு வாகனத்தில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7828b564-cb12-4471-98b2-ce3d4d7d463b/26-6a81a49dcbc60.webp' /></p><p>
</p><p>இதையடுத்து, கியூபெக் மாகாண பொலிஸார் அதிகாலை 1:25 மணியளவில் நெடுஞ்சாலை 20-இல் அந்த நபரின் வாகனத்தைக் கண்டுபிடித்துத் துரத்தத் தொடங்கினர்.</p><p>சக்கரங்களின் காற்றைப் போக்கும் ஸ்பைக் கீற்றுகளைப் பயன்படுத்தி வாகனத்தை நிறுத்த அவர்கள் முயன்றனர்.
இறுதியில், லேவிஸில் உள்ள ரூட் 132-இல் அந்த நபர் வாகனத்தை நிறுத்தினார்.</p><p>எனினும், அவர் வாகனத்திற்குள்ளேயே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
</p><p>சம்பவம் நடந்த இடத்தை கியூபெக் மாகாண பொலிஸார், கியூபெக் நகரப் பொலிஸார் மற்றும் லேவிஸ் பொலிஸார் இணைந்து சுற்றி வளைத்துப் பாதுகாத்தனர்.
</p><p>இச்சம்பவம் தொடர்பான சூழ்நிலைகளை ஆராய, சுயாதீன புலனாய்வு அமைப்பான BEI-ன் ஏழு விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T12:16:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹங்கேரியில் பஸ் விபத்து: போலந்து யாத்ரீகர்கள் 12 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/twelve-killed-as-polish-bus-veers-off-hungari-1786881580"></link>
            <id>https://canadamirror.com/article/twelve-killed-as-polish-bus-veers-off-hungari-1786881580</id>
            <summary type="text">ஹங்கேரியின் நெடுஞ்சாலையில் போலந்து நாட்டினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹங்கேரியின் நெடுஞ்சாலையில் போலந்து நாட்டினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.</p><p>
தலைநகர் புடாபெஸ்ட்டை வடகிழக்கு நகரமான நைரேகிஹாசாவுடன் இணைக்கும் எம்3 நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 01:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>பஸ் ஓட்டுநர் தூங்கியதே விபத்துக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அவரைப் பொலிஸார் காவலில் எடுத்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72475b50-c7ea-4171-bd77-cd89ef9e6683/26-6a81a62ded399.webp' /></p><p>பஸ்ஸில் மொத்தம் 57 பயணிகளும் இரண்டு ஓட்டுநர்களும் இருந்த நிலையில், இதுவரை 35 பேரைத் தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளதாக ஹங்கேரிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
 24 தொன் எடையுள்ள பஸ்ஸை முழுமையாக உயர்த்த கிரேன்கள் வரும் வரை, அதற்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்க அவசர உதவிப் பிரிவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
</p><p>விபத்தில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 9 பேர் பலத்த காயங்களுடனும், 37 பேர் சிறு காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>இந்தச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள ஹங்கேரியப் பிரதமர் பீட்டர் மகியர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>போலந்துப் பிரதமர் டொனால்ட் டஸ்க் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் அடங்கிய சிறப்பு விமானம் ஒன்றை ஹங்கேரிக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவிலிருந்து திரும்பி வந்த இந்த பஸ்ஸில், போலந்தின் போட்கார்பாசி பிராந்தியத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் பயணித்துள்ளதாகப் போலந்து செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p> விபத்து தொடர்பில் ஓட்டுநரிடம் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T12:16:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் 'முழுமையான தோல்வி' உறுதி: ஈரானிய ஆயுதப் படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-war-live-talks-on-hormuz-strait-continue-1786882129"></link>
            <id>https://canadamirror.com/article/iran-war-live-talks-on-hormuz-strait-continue-1786882129</id>
            <summary type="text">&amp;nbsp;பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய எதிரிப் படைகள் &#039;முழுமையான தோல்வியை&#039; தழுவும் வரை தாங்கள் பின்வாங்கப்போவதில்லை என்று ஈரானிய ஆயுதப் படைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய எதிரிப் படைகள் 'முழுமையான தோல்வியை' தழுவும் வரை தாங்கள் பின்வாங்கப்போவதில்லை என்று ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைப் பணியாளர்கள் உறுதியளித்துள்ளனர். </p><p>
1990 ஆம் ஆண்டு ஈராக்கிலிருந்து ஈரானிய போர்க்கைதிகள் தாயகம் திரும்பியதன் நினைவாண்டைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "எதிர்ப்பின்" பாரம்பரியம் ஈரானின் புதிய தலைமுறைக்குக் கடத்தப்பட்டுள்ளதாகவும், உலகின் அதிநவீன இராணுவக் கருவிகளைக் கொண்ட படைகளுக்கு எதிராக அவர்கள் உறுதியுடன் நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
எதிரி படைகள் சரணடையும் வரை, நாட்டின் நியாயமான உரிமைகளையும் தலைமையின் கோரிக்கைகளையும் ஈரான் தொடர்ந்து முன்னெடுக்கும் என ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a892676d-7649-476c-9cef-a6d48dcce3fb/26-6a81a8538dbd1.webp' /></p><p> </p><p>
மேலும், ஈரானிய ஆயுதப் படைகளுக்குப் பொதுமக்கள் அளித்து வரும் ஆதரவைப் பாராட்டியுள்ள இராணுவம், பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிக்கப் போக்கைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T12:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கோர வாகன விபத்து: ஒன்ராறியோவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-man-dies-in-rollover-on-sask-highway-1786875061"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-man-dies-in-rollover-on-sask-highway-1786875061</id>
            <summary type="text">கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள லா லோச் பகுதிக்கு தெற்கே சனிக்கிழமை அதிகாலை நடந்த ஒற்றை வாகன விபத்தில், ஒன்ராறியோவின் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள லா லோச் பகுதிக்கு தெற்கே சனிக்கிழமை அதிகாலை நடந்த ஒற்றை வாகன விபத்தில், ஒன்ராறியோவின் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>
அதிகாலை 2:20 மணியளவில், வடக்கு சஸ்காட்செவன் பகுதியிலிருந்து தெற்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலை 155-இல் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p> 
இது குறித்துத் தகவல் கிடைத்ததும் லா லோச் பொலிஸார், உள்ளூர் தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2063f97b-4efb-40b4-b813-37ad34234ace/26-6a818cb743e71.webp' /></p><p> 
வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அவசர மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
அத்துடன், வாகனத்தில் பயணித்த மேலும் நான்கு பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். </p><p>அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>விபத்துக்கான காரணம் குறித்து சஸ்காட்செவன் பொலிஸ் பிரிவின் விபத்து மறுசீரமைப்பு நிபுணரின் உதவியுடன் லா லோச் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T10:56:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சன்ஸ்கிரீன் தோல் புற்றுநோயை ஏற்படுத்துகிறதா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/dermatologist-warns-of-the-sunscreen-paradox-1786872661"></link>
            <id>https://canadamirror.com/article/dermatologist-warns-of-the-sunscreen-paradox-1786872661</id>
            <summary type="text">கனடிய விஞ்ஞானி மறுப்பு
சன்ஸ்கிரீன் திரவம் தோல் புற்றுநோயை உண்டாக்குகின்றது என இணையத்தில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை எனவும், தனது ஆராய்ச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடிய விஞ்ஞானி மறுப்பு
சன்ஸ்கிரீன் திரவம் தோல் புற்றுநோயை உண்டாக்குகின்றது என இணையத்தில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை எனவும், தனது ஆராய்ச்சி முடிவுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் கனடாவைச் சேர்ந்த பிரபல தோல் நோய் நிபுணரும் விஞ்ஞானியுமான இவான் லிட்வினோவ் தெரிவித்துள்ளார்.</p><p>
சமீபத்தில் இத்தாலிய மருத்துவர் ஒருவர், மெக்கில் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான இவான் லிட்வினோவ் தலைமையிலான ஆய்வை மேற்கோள் காட்டி, சன்ஸ்கிரீன் தோல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்ற பிரசாரத்தை முன்னெடுத்திருந்தார்.
</p><p>இது குறித்து விளக்கமளித்துள்ள பேராசிரியர் லிட்வினோவ் சன்ஸ்கிரீன் புற்றுநோயை உருவாக்குகிறது என்ற கூற்று முற்றிலும் உண்மையற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1d2a239-f207-4140-b7c3-a4656d42afd2/26-6a818356e70d5.webp' /></p><p> </p><p>எனினும், சன்ஸ்கிரீன் பயன்பாடு குறித்த சில தவறான அணுகுமுறைகள் ஆபத்தானவை என்று எச்சரித்துள்ளார்.
சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வதால் மட்டுமே சூரிய கதிர்வீச்சிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைத்துவிட்டது என மக்கள் தவறாகக் கருதுவதே முதன்மையான சிக்கலாகும். </p><p>இதனை ஆராய்ச்சியாளர்கள் சன்ஸ்கிரீன் முரண்பாடு என்று அழைக்கின்றனர்.</p><p>
சன்ஸ்கிரீன் பூசிய பிறகு மணி கணக்கில் வெயிலில் தாராளமாக இருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர்.</p><p>
இதனால் அவர்கள் அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பதால் தோல் கருகதல் மற்றும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர்.
</p><p>சூரிய ஒளி தோலில்படும் போது உடலுக்குள் மகிழ்ச்சியைத் தரும் என்டோர்பின்கள் வெளியாவதால், மக்கள் வெயிலில் அதிக நேரம் இருக்க விரும்புகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T09:45:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் படகு கவிழ்ந்து விபத்து: காணாமல்போன இளைஞர் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-person-missing-after-canoe-capsizes-1786873235"></link>
            <id>https://canadamirror.com/article/one-person-missing-after-canoe-capsizes-1786873235</id>
            <summary type="text">கனடாவின் கிரேட்டர் சட்பரி நகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள குரோலி ஏரியில் படகு தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காணாமல்போன 26 வயது இளைஞர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கிரேட்டர் சட்பரி நகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள குரோலி ஏரியில் படகு தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காணாமல்போன 26 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>
படகு கவிழ்ந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து, சட்பரி பொலிஸார், தீயணைப்புப் படை மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p> 
அந்தக் கரோட் படகில் மூன்று பேர் பயணித்த நிலையில், அது திடீரென ஏரியில் கவிழ்ந்தது. அப்பகுதியில் கயாகிங் சவாரியில் ஈடுபட்டிருந்தவர்கள், நீரில் மூழ்கிய இருவரைக் காப்பாற்றிப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3da3fe34-cd5a-4de9-b9e3-1d55585f7887/26-6a818594c136d.webp' /></p><p> 
எனினும், படகில் இருந்த 26 வயது இளைஞர் மற்றும் படகைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது. </p><p>
இதையடுத்து, ஏரி நீரிலும் கடற்கரைப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.</p><p> ஒன்ராறியோ மாகாண பொலிஸின் ஹெலிகாப்டர் மற்றும் சட்பரி பொலிஸின் ட்ரோன் ஆகியவை மூலம் வான்வழித் தேடுதலும் நடத்தப்பட்டது. </p><p>பின்னர் கவிழ்ந்த படகு மீட்கப்பட்டபோதிலும், இளைஞரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 
தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிரத் தேடுதலின் பலனாக, ஒன்ராறியோ மாகாண பொலிஸாரின் நீருக்கடியிலான தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் அந்த இளைஞரின் உடலை ஏரியிலிருந்து மீட்டனர். </p><p>
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இந்த இழப்பால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T09:42:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் மாணவன் ஒருவருக்கு பல மில்லியன் யூரோ தங்க புதையல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/gold-treasure-worth-millions-of-euros-1786873306"></link>
            <id>https://canadamirror.com/article/gold-treasure-worth-millions-of-euros-1786873306</id>
            <summary type="text">பெல்ஜியத்தின் - ஃப்ளாண்டர்ஸ் பகுதியில் ஒரு வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டின் அடித்தளச் சுவர்களுக்குள் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தின் - ஃப்ளாண்டர்ஸ் பகுதியில் ஒரு வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டின் அடித்தளச் சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சுமார் 9 மில்லியன் யூரோ (330 கோடி) மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களை கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

புதிய கழிவுநீர் குழாய்களை அமைப்பதற்காக வீட்டின் அடித்தளத்தில் துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இந்தப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>மேலும், ஃப்ளாண்டர்ஸ், டெண்டர்மாண்டேவில் உள்ள ஒரு முன்னாள் மதுபான ஆலை இருந்த இடத்தில் 18 வயதான கோபி, என்ற சிறுவனே இதனை முதலில் கண்டுப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>உரிமை கோரும் வாய்ப்பு</h2><p>இந்தக் கண்டுபிடிப்பு, தங்கத்தை யார் உரிமை கோர முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.&nbsp;&nbsp;</p><p> </p><p>கட்டுமானப் பணியாளர்களுக்கும், அந்தச் சொத்தை வைத்திருக்கும் உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்கும் உரிமை கோரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இது குறித்து அந்நாட்டு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், மேலும் புதையலைத் தேடி யாரும் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.</p><p>அந்த வீடு முழுமையாகச் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து தங்கமும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-16T09:42:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதில் கடும் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/processing-times-have-been-increasing-for-proof-1786872208"></link>
            <id>https://canadamirror.com/article/processing-times-have-been-increasing-for-proof-1786872208</id>
            <summary type="text">கனடியப் பிரஜை என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அரச சான்றிதழைப் பெற முயலும் விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதற்கு 2 ஆண்டுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடியப் பிரஜை என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அரச சான்றிதழைப் பெற முயலும் விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதற்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>மத்திய அரசின் மதிப்பீடுகள் மற்றும் குடிவரவு நிபுணர்களின் கூற்றுப்படி, கடந்த சில ஆண்டுகளில் விண்ணப்பங்களைச் பரிசீலிக்கும் காலம் கணிசமாக அதிகரித்துள்ளது.
</p><p>டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் சர்ச்சைக்குரிய கொள்கைகள் மற்றும் கடந்த டிசம்பரில் அமலுக்கு வந்த குடியுரிமைச் சட்டத் திருத்தம் (Bill C-3) ஆகியவற்றின் காரணமாகவே விண்ணப்பங்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளதாகக் குடிவரவு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dfdfb2e-a9e7-4ed7-8777-17fcc7ac213d/26-6a81819256245.webp' /></p><p> </p><p>
மசோதா C-3, பரம்பரை வழியிலான குடியுரிமைக்கான முதன்முறை வரம்பை நீக்கியதால், கனடாவில் முன்னோர்களைக் கொண்ட பலருக்கும் குடியுரிமை பெற கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
</p><p>திடீரென விண்ணப்பிக்கத் தொடங்கியவர்களின் பெரும்பாலானோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என வான்கூவரைச் சேர்ந்த குடிவரவு வழக்கறிஞரும் கொள்கை ஆய்வாளருமான ரிச்சர்ட் குர்லேண்ட் தெரிவித்துள்ளார்.
</p><p>குடியுரிமைச் சான்றைப் பெறுவது முன்னர் விரைவாக இருந்தது, ஆனால் டிரம்பின் கொள்கைகளால் ஏற்பட்ட தாக்கம் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பெருமளவில் உயர்த்தியுள்ளது. இதனால் பரிசீலனை நேரமும் நீடித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
</p><p>ஒட்டாவாவைச் சேர்ந்த குடிவரவு வழக்கறிஞர் செட்ரிக் மரின் கூறுகையில்,
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 9 முதல் 10 மாதங்களாக இருந்த பரிசீலனை நேரம், தற்போது 25 மாதங்களாக உயர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் காத்திருப்பு காலம் 3 ஆண்டுகளாக உயரக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><p>அவசரத் தேவைகளைக் கொண்ட விண்ணப்பங்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருவதால், சாதாரண விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகள் மேலும் தாமதமாகி வருகின்றன. </p><p>
குறிப்பாக, வேலை அனுமதிப் பத்திரங்கள் காலாவதியாகும் நிலையில் உள்ளவர்கள் மற்றும் அவசர உதவி தேவைப்படுவோரின் விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்படுகின்றன.
</p><p>தற்போது சுமார் 121,800 பேர் தங்களது விண்ணப்பங்களின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகக் தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>நீண்ட தாமதம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த கனடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அனாஹிதா பெலாடி, விண்ணப்பங்கள் சட்டப்படி நியாயமாகவும் முடிந்தவரை விரைவாகவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>குறிப்பிட்டுள்ள பரிசீலனை நேரங்கள் தோராயமான மதிப்பீடுகளே தவிர உத்தரவாதம் அல்ல என்றும், 'முன்னதாக வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையிலேயே பரிசீலனை நடைபெறுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
</p><p>எனினும், நிலுவையில் உள்ள பெருமளவிலான விண்ணப்பங்களை விரைந்து முடிக்க அரசு கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T09:28:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய துப்பாக்கி மீட்புத் திட்டம்! அவுஸ்திரேலிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-gun-rescue-program-1786872083"></link>
            <id>https://canadamirror.com/article/new-gun-rescue-program-1786872083</id>
            <summary type="text">சிட்னியின் பொண்டி கடற்கரையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற பயங்கரத் தாக்குதலைத்
தொடர்ந்து, நாட்டின் துப்பாக்கிக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வகையில் புதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிட்னியின் பொண்டி கடற்கரையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற பயங்கரத் தாக்குதலைத்
தொடர்ந்து, நாட்டின் துப்பாக்கிக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வகையில் புதிய
துப்பாக்கி மீட்புத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல்
அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்
அறிவித்துள்ளார்.
</p><p>
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நவம்பர் 2 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள
இத்திட்டத்தின் கீழ், ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு துப்பாக்கிக்கும் 1,000
அவுஸ்திரேலிய டொலர்கள் வரை இழப்பீடாக வழங்கப்படவுள்ளது.
</p><p>
துப்பாக்கிகளைத் திரும்பப் பெறுவதுடன், துப்பாக்கி உரிமங்களுக்கான பரிசீலனைகளை
வலுப்படுத்தவும் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
எடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2af5a9f-a8f2-4018-950e-217894c54a12/26-6a818119e65b2.webp' /></p><p>
</p><p>
கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற
தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.</p><p>

இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த துப்பாக்கிகள்
சட்டப்பூர்வமாகப் பெறப்பட்டவை என்பது தெரியவந்ததையடுத்து, மாநிலத்தில் ஒருவர்
அதிகபட்சமாக 4 துப்பாக்கிகளை மட்டுமே வைத்திருக்க முடியும் என புதிய சட்டக்
கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.
</p><p>
தற்போது அவுஸ்திரேலியாவில் சுமார் 4.1 மில்லியனுக்கும் அதிகமான துப்பாக்கிகள்
பயன்பாட்டில் உள்ளதாக அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>1996 ஆம் ஆண்டு
போர்ட் ஆர்தர் பகுதியில் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு,
அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு
நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T09:28:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசிய நிலநடுக்கம்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indonesia-earthquake-1786871681"></link>
            <id>https://canadamirror.com/article/indonesia-earthquake-1786871681</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்
காரணமாக இதுவரை குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் வரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்
காரணமாக இதுவரை குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் வரை
இடம்பெயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரஸ் தீவில் சனிக்கிழமை அதிகாலை
7.7 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.</p><p>

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 341 தொடர் அதிர்வுகள் பதிவாகியுள்ளதால்,
மக்கள் வீடுகளுக்குள் செல்ல அச்சமடைந்து தற்காலிக கூடாரங்களிலும்
திறந்தவெளிகளிலும் தங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cd5c808-97e9-4b22-b06e-7e23ffa45dff/26-6a817f82d37b1.webp' /></p><p>
</p><p>
இந்த இயற்கை அனர்த்தத்தினால் 1,300க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த
சேதமடைந்துள்ளதுடன், நிலச்சரிவு காரணமாகப் பல முக்கிய வீதிகள் தடைப்பட்டுள்ளன.
</p><p>இதனால் பாதிக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதில்
பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

தற்போது வரை 36 பேர் தீவிர காயங்களுக்கும், 77 பேர் இலேசான காயங்களுக்கும்
உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p>நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகொப்டர்கள் மற்றும் படகுகள்
மூலம் அவசர உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
அத்துடன் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும்
சுமார் 3,500 இராணுவ மற்றும் பொலிஸ் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த பகுதியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள்
ஆராய்ந்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T09:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டைப் புதுப்பித்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! நினைத்துப் பார்க்க முடியாத அளவு கிடைத்த தங்கப் புதையல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/belgium-gold-treasure-1786870585"></link>
            <id>https://canadamirror.com/article/belgium-gold-treasure-1786870585</id>
            <summary type="text">பெல்ஜியத்தில், வீடொன்றை புதுப்பிக்கும் பணியின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

வீட்டின் அடித்தள சுவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தில், வீடொன்றை புதுப்பிக்கும் பணியின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p>

வீட்டின் அடித்தள சுவர்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தங்கச் சேமிப்பு கண்டறியப்பட்டுள்ளது. </p><p> 

இதன் மதிப்பு சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

கிழக்கு ஃபிளாண்டர்ஸ் பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டில், புதிய கழிவு நீர் குழாய்களைப் பதிப்பதற்காகத் துளையிடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, இந்தத் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் அடங்கிய மறைக்கப்பட்ட புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a037746-e9ae-4765-8c5f-6700853a29e0/26-6a817b3aad2f5.webp' /></p><p> </p><p>

இந்தநிலையில், இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தங்கப் புதையல் யாருக்கு சொந்தமாகும் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.</p><p> 

வீட்டுப் புதுப்பிக்கும் பணியில் இருந்த தொழிலாளர்கள் இந்த தங்கப் புதையலைக் கண்டுபிடித்த நிலையில், குறித்த தொழிலாளர்களும், வீட்டின் உரிமையாளரும் மற்றும் உள்ளூர் தொண்டு நிறுவனமும் இந்தத் தங்கத்தைக் கோருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T09:06:43+00:00</updated>
        </entry>
    </feed>
