<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-31T11:29:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விற்பனை இலக்கு எட்டாததால் ஊழியருக்கு கொடுமை ; அமெரிக்க நிறுவன மேலாளர் மீது வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/abuse-of-employee-for-not-reaching-sales-target-1785496958"></link>
            <id>https://canadamirror.com/article/abuse-of-employee-for-not-reaching-sales-target-1785496958</id>
            <summary type="text">விற்பனை இலக்கை எட்டாத ஊழியர் ஒருவரை நாற்காலியில் கட்டிவைத்து, அவரது முகத்தில் கிறீம் பூசி அவமானப்படுத்தியதாக அமெரிக்காவின் பிரபல நிறுவனம் ஒன்றின் மேலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விற்பனை இலக்கை எட்டாத ஊழியர் ஒருவரை நாற்காலியில் கட்டிவைத்து, அவரது முகத்தில் கிறீம் பூசி அவமானப்படுத்தியதாக அமெரிக்காவின் பிரபல நிறுவனம் ஒன்றின் மேலாளர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
</p><p>
வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி, குறித்த நிறுவனத்தின் மேலாளரான பீட்டர்சன், மாதாந்த விற்பனையில் குறைந்த பெறுபேறுகளைப் பெற்ற ஊழியர்களை அலுவலகத்தின் பின்பகுதிக்கு அழைத்துச் சென்று நாற்காலியில் கட்டிவைத்து அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70a769b1-f305-476e-832c-7c9c0f4afa73/26-6a6c857fe3510.webp' /></p><p>மேலும், அதிக விற்பனை செய்த ஊழியர்களைக் கொண்டு, கட்டப்பட்ட ஊழியரின் முகத்தில் பையை அடிக்கச் செய்ததாகவும், சில சந்தர்ப்பங்களில் முகத்தில் கிறீம் பூசப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
வாடிக்கையாளர் திருப்தி மதிப்பீடுகளில் குறைந்த புள்ளிகளைப் பெற்ற ஊழியர்களும் இதேபோன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த சம்பவங்களை மேலாளர் பீட்டர்சன் காணொளியாகப் பதிவு செய்ததுடன், சக ஊழியர்களையும் நிழற்படங்கள் எடுக்க வற்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ஊழியர் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்புகளுக்காக நட்டஈடு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.</p><p>

எனினும், குறித்த குற்றச்சாட்டுகளை நிறுவனம் மறுத்துள்ளது. </p><p>தமது நிறுவனக் கிளைகளில் ஊழியர்களை அவமதிக்கும் அல்லது துன்புறுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதி இல்லை எனவும், இவ்வாறான செயற்பாடுகளுக்கு நிறுவனம் "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" கொள்கையைப் பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T11:22:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொரோக்கோ–ஸ்பெயின் எல்லையில் பதற்றம் ; சியூட்டா மீண்டும் உலக கவனத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/morocco-spain-ceuta-back-in-the-world-s-attention-1785494896"></link>
            <id>https://canadamirror.com/article/morocco-spain-ceuta-back-in-the-world-s-attention-1785494896</id>
            <summary type="text">மொரோக்கோவை ஒட்டியுள்ள ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான சியூட்டா (Ceuta) பகுதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள குடியேற்ற நெருக்கடி, ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை மீண...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொரோக்கோவை ஒட்டியுள்ள ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான சியூட்டா (Ceuta) பகுதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள குடியேற்ற நெருக்கடி, ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.
</p><p>
ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்திருந்தாலும், சியூட்டா ஸ்பெயினின் தன்னாட்சி நகரமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நகரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லையாகவும் கருதப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9db3ea7-d800-48f1-9c74-4a92eeb6b68c/26-6a6c7d717ead8.webp' /></p><p>வரலாற்றுப் பதிவுகளின்படி, 1415 ஆம் ஆண்டு போர்த்துக்கல் சியூட்டாவைக் கைப்பற்றியது.</p><p>பின்னர் 1668 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட லிஸ்பன் உடன்படிக்கையின் அடிப்படையில், அந்தப் பகுதி ஸ்பெயினின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. </p><p>அதன்பின்னர் சியூட்டா தொடர்ந்து ஸ்பெயினின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது. இருப்பினும், மொரோக்கோ அரசு சியூட்டாவையும் மெலில்லா (Melilla) நகரையும் தமது இறையாண்மைக்குட்பட்ட பகுதிகளாக தொடர்ந்து உரிமைகோரி வருகிறது. </p><p>ஆனால், அந்தக் கோரிக்கையை ஸ்பெயின் நிராகரித்து வருகிறது.

அண்மையில், ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் சியூட்டாவை நோக்கி எல்லையைக் கடக்க முயன்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>அவர்களில் மொரோக்கோ நாட்டவர்களுடன், ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளும் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2b31283-cefa-45c3-a0ae-2f5f6333e684/26-6a6c7d7232280.webp' /></p><p>

இந்த நிலைமையால் எல்லைப் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள் மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகள் மீது கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதையடுத்து, எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஸ்பெயின் அரசு மேற்கொண்டுள்ளது.</p><p>

சியூட்டா விவகாரம் குடியேற்றப் பிரச்சினையை மட்டுமன்றி, வரலாறு, இறையாண்மை, சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய சிக்கலான விடயமாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
இதேவேளை, சியூட்டா தொடர்பான தமது உரிமைக் கோரிக்கையை மொரோக்கோ தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப் பகுதி ஸ்பெயினின் பிரிக்க முடியாத தன்னாட்சி நகரம் என்ற தனது நிலைப்பாட்டை ஸ்பெயின் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T10:52:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விற்பனை இலக்கை எட்டாத ஊழியர் முகத்தில் கிறீம் பூசி சித்திரவதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/comcast-workers-had-pies-smashed-face-low-sales-1785494797"></link>
            <id>https://canadamirror.com/article/comcast-workers-had-pies-smashed-face-low-sales-1785494797</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவில் விற்பனை இலக்கை எட்டாத ஊழியரை நாற்காலியில் கட்டிவைத்து, அவரது முகத்தில் கிறீம் பூசி அவமானப்படுத்தியதாக பிரபல நிறுவனத்தின் மே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவில் விற்பனை இலக்கை எட்டாத ஊழியரை நாற்காலியில் கட்டிவைத்து, அவரது முகத்தில் கிறீம் பூசி அவமானப்படுத்தியதாக பிரபல நிறுவனத்தின் மேலாளர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.</p><p>

மாதத்தின் மிகக் குறைந்த விற்பனை செய்த ஊழியரை அலுவலகத்தின் பின்பகுதியில் நாற்காலியில் கட்டிவைத்து, அதிக விற்பனை செய்த ஊழியரைக் கொண்டு அவரது முகத்தில் பையை அடிப்பதை மேலாளர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5deaa97a-4f81-4434-8140-e6c0bd17d75c/26-6a6c7d0f77c4c.webp' /></p><h2>&nbsp;மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பிற்கு நட்டஈடு</h2><p>
</p><p>
அதுமட்டுமல்லாது வாடிக்கையாளர் திருப்தி மதிப்பீடு குறைவாகக் கிடைக்கும் ஊழியர்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களை மேலாளர் பீட்டர்சன் தானே காணொளி எடுத்ததுடன், சக ஊழியர்களையும் நிழற்படம் எடுக்க வற்புறுத்தியுள்ளார். </p><p>விற்பனையை உயர்த்தவே இந்த முறை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பிற்கு நட்டஈடு கேட்டுள்ளார்.
</p><p>
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள குறித்த நிறுவனம், தங்கள் கடைகளில் ஊழியர்களை அவமதிக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் சகிப்புத்தன்மை கிடையாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-31T10:44:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏதிலிகளை தடுக்க தேசிய அவசரநிலையை அறிவித்த ஸ்பெயின்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spain-declares-national-emergency-to-halt-migrants-1785475617"></link>
            <id>https://canadamirror.com/article/spain-declares-national-emergency-to-halt-migrants-1785475617</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஆப்பிரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஸ்பெயின் சியூட்டா (Ceuta) பகுதியின் அதிகாரிகள், மொரோக்கோ எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஆப்பிரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஸ்பெயின் சியூட்டா (Ceuta) பகுதியின் அதிகாரிகள், மொரோக்கோ எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக தேசிய அவசரநிலையை அறிவித்தனர்.
</p><p>
 எல்லையைப் பாதுகாக்க இராணுவத்தை அனுப்புமாறு வியாழக்கிழமை (31) மாட்ரிட் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44e0e401-93cf-48d8-8756-cd786d4bcd77/26-6a6c322357a8c.webp' /></p><p>
</p><p>
மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் பிரதேசங்களைப் பிரிக்கும் கடல்தடுப்புச் சுவர்களைச் சுற்றி நடந்து செல்லவும், எல்லை வேலியை ஏறிக் கடக்கவும் மக்கள் கூட்டம் முயற்சிக்கும் காட்சிகள் காணொளிகளில் வெளியாகியுள்ளது.
</p><p>
இதனையடுத்து, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), நிலைமையை சமாளிக்க “உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவளிப்பதற்காக, தங்கள் ஆயுதப் படைகளைச் சேர்ந்த பணியாளர்களைச் சியூட்டாவிற்கு (Ceuta) அனுப்பவுள்ளதாக ஸ்பெயினின் உள்துறை அமைச்சு வியாழக்கிழமை பிற்பகுதியில் தெரிவித்தது.
</p><p>
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மற்றொரு ஸ்பானியத் தன்னாட்சி நகரமான மெலில்லாவுடன் (Melilla) சேர்த்து, சியூட்டா (Ceuta) நகரமும் ஆப்பிரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே நில எல்லையாகத் திகழ்கிறது.

இந் நிலையில் ஐரோப்பாவை அடைய முற்படும் புலம்பெயர்ந்தோர் எல்லை வழியாக நுழைய முயற்சிக்கும் நிகழ்வுகள், அவ்வப்போது இவ்விரு நகரங்களிலும் அதிகரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-31T10:18:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு; ஒரே நாளில் நுழைந்த 49,000 குடியேறிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/49-000-migrants-entered-spain-in-a-single-day-1785493152"></link>
            <id>https://canadamirror.com/article/49-000-migrants-entered-spain-in-a-single-day-1785493152</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயூட்டா பகுதிக்குள் ஒரே நாளில் சுமார் 49,000 குடியேறிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
சட்டவிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயூட்டா பகுதிக்குள் ஒரே நாளில் சுமார் 49,000 குடியேறிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
சட்டவிரோதமாக நுழைந்தவர்களில் குறைந்தது 7,000 பேர் சிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில், மொராக்கோவிலிருந்து சுமார் 49,000 குடியேறிகள் தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/210e20c0-e6a5-43b1-a000-2038916f7ff0/26-6a6c76a246f0d.webp' /></p><h2>கடலில் தடுத்து நிறுத்தப்படும் குடியேறிகள்</h2><p>
</p><p>
வியாழக்கிழமையன்று (30) ஆயிரக்கணக்கான மக்கள் கடர்மார்க்கமாக நீந்தி நகருக்குள் வருவதை வீடியோக்களும் படங்களும் காட்டின.

அதேவேளையில், இரவு முழுவதும் இத்தகைய வருகைகள் தொடர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. </p><p>

அண்மைய நாட்களில் அப்பகுதியை அடைய முயன்றவர்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p></p><p>
சியூட்டா (Ceuta) அல்லது மற்றொரு ஸ்பானியப் பகுதியான மெலில்லாவை (Melilla) அடைய முயலும்போது கடலில் தடுத்து நிறுத்தப்படும் குடியேறிகளை மொராக்கோவிற்கு உடனடியாகத் திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயினின் உயர் நீதிமன்றம் இந்த மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><p>
அண்மையில் எல்லை கடக்கும் முயற்சிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் அதிகாரிகள் மாட்ரிட்டிடம் உதவி கோரியிருந்தனர். </p><p>

ஆனால், வியாழக்கிழமையன்று எல்லைக் கட்டுப்பாடுகள் செயலிழந்ததால் அங்கு குழப்பமான காட்சிகள் நிலவின.

பின்னர், ஸ்பெயின் தனது ஆயுதப் படைகளை செவுட்டாவிலும், அதன் சகோதர நகரமான மெலிலாவிலும் பாதுகாப்பை வலுப்படுத்த அனுப்பியது. </p><p>

அங்கும் ஒரே இரவில் 300 முதல் 400 பேர் வரை எல்லை கடக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஸ்பானிய அதிகாரிகளின் வியக்கத்தக்க மதிப்பீட்டின்படி, கடந்த ஓரிரு நாட்களில் சியூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, அந்நகரின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாக இருக்கலாம்.\</p><p>&nbsp; உள்ளூர் புள்ளிவிவரங்களின்படி இந்நகரின் மக்கள் தொகை சுமார் 83,600 ஆகும்.


தங்கள் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அனைவரையும் முடிந்தவரை விரைவாக திருப்பி அனுப்புவதை உறுதிசெய்ய மொராக்கோவுடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T10:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைக்கவசம் இல்லாமல் மின்னுருளி ஓட்டினால் கடும் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heavy-fines-for-riding-a-scooter-without-a-helmet-1785492995"></link>
            <id>https://canadamirror.com/article/heavy-fines-for-riding-a-scooter-without-a-helmet-1785492995</id>
            <summary type="text">மின்னுருளி (Electric Scooter) விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், பிரான்சின் ஓ-து-சென் (Hauts-de-Seine) மாவட்டத்தில் மின்னுருளி உள்ளிட்ட தனிநபர் மின...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்னுருளி (Electric Scooter) விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், பிரான்சின் ஓ-து-சென் (Hauts-de-Seine) மாவட்டத்தில் மின்னுருளி உள்ளிட்ட தனிநபர் மின்சாரப் போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><p>
மாவட்ட ஆட்சியர் அலெக்சாண்டர் ப்ரூஜெர் (Alexandre Brugère) கையெழுத்திட்டுள்ள புதிய அவசர உத்தரவின் மூலம் இந்தச் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. </p><p>பாதுகாப்பு விதிகளை மீறுவோருக்கு 1,500 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய விதிகளின்படி, மின்னுருளிகள், ஒற்றைச் சக்கர மின்வாகனங்கள் மற்றும் பிற தனிநபர் மின்சாரப் போக்குவரத்து சாதனங்களை இயக்குபவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e30e37c2-b634-4151-ab2a-edf247aa5301/26-6a6c760473609.webp' /></p><p>மேலும், பகல் மற்றும் இரவு நேரங்களில் தொலைவிலிருந்தே தெளிவாகக் காணக்கூடிய ஒளிரும் பாதுகாப்பு மேலாடை அல்லது ஒளிரும் பட்டை அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், இந்த வாகனங்களை இயக்குபவர்கள் குறைந்தது 14 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுடன், வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோமீட்டரைத் தாண்டக் கூடாது எனவும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>
"ஒவ்வொரு விபத்தும் தவிர்க்கப்பட வேண்டிய துயரமான நிகழ்வு" எனக் குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர், புதிய சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் காவல்துறையின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
அண்மையில் அண்டை மாவட்டமான சென்-எ-மார்னில் (Seine-et-Marne) இடம்பெற்ற 45 மின்னுருளி விபத்துகளில் ஒருவர் உயிரிழந்ததுடன், 51 பேர் காயமடைந்திருந்தனர். </p><p>அந்த விபத்துகளில் சிக்கியவர்களில் ஐந்து பேர் மட்டுமே தலைக்கவசம் அணிந்திருந்ததாக வெளியான புள்ளிவிவரங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க காரணமாகியுள்ளன.</p><p>

மேலும், ரூவேல்-மால்மேசோன் (Rueil-Malmaison) நகரில் 'சீசர்' என்ற சிறுவன் மின்னுருளி விபத்தில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நகரிலும் ஏற்கனவே தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
</p><p>
இதனிடையே, பிரான்சின் பல நகராட்சிகள் இதேபோன்ற பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், இந்த நடைமுறையை நாடு முழுவதும் பொதுச் சட்டமாக்குவது தொடர்பாக பிரான்ஸ் அரசு பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T10:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-missile-entered-polish-airspace-1785492356"></link>
            <id>https://canadamirror.com/article/russian-missile-entered-polish-airspace-1785492356</id>
            <summary type="text">&amp;nbsp; போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை ஒன்று நுழைந்து வீழ்ந்து நொறுங்கியதால், அங்கு நேட்டோ போர் வானூர்திகள் அவசரமாக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை ஒன்று நுழைந்து வீழ்ந்து நொறுங்கியதால், அங்கு நேட்டோ போர் வானூர்திகள் அவசரமாக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
வியாழக்கிழமை அதிகாலையில் போலந்து வான்வெளிக்குள் நுழைந்த இந்த ஏவுகணை, இரவோடு இரவாக யுக்ரைன் மீது ரஷ்யா ஏவிய பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதலின் ஒரு பகுதி என்று கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a6b34d7-f5a1-4dfc-82e9-24591aad282a/26-6a6c7385ac678.webp' /></p><p>

இதில் சிறுவர்கள் உட்பட குறைந்தது எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஏவுகணை தென்பட்டதைத் தொடர்ந்து, போலந்து உட்பட நேட்டோ உறுப்பு நாடுகள், ஜெட் வானூர்திகளையும்,வான்வழி எரிபொருள் நிரப்பும் வானூர்தியையும், வான்வழி முன்னெச்சரிக்கை வானூர்தியையும் களமிறக்கியதாக நேட்டோ கூட்டணியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.</p><p>

அத்துடன் தனது பிராந்தியத்தைப் பாதுகாக்க நேட்டோ அனைத்துத் தேவையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-31T10:04:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைரல் காணொளிக்காக சுகாதார விதிமீறல் ; 19 வயது மாணவருக்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/student-fined-violating-health-rules-viral-video-1785485839"></link>
            <id>https://canadamirror.com/article/student-fined-violating-health-rules-viral-video-1785485839</id>
            <summary type="text">சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் தோடம்பழப் பானம் வழங்கும் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை சுகாதார முறையின்றி கையாண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் தோடம்பழப் பானம் வழங்கும் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை சுகாதார முறையின்றி கையாண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 19 வயது மாணவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 600 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதித்துள்ளது.
</p><p>
கடந்த மார்ச் மாதம், சிங்கப்பூரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் அமைந்திருந்த தோடம்பழப் பானம் வழங்கும் இயந்திரத்தின் உறிஞ்சுகுழாயை மாணவர் சுகாதார விதிமுறைகளை மீறும் வகையில் கையாண்டு, பின்னர் அதனை மீண்டும் அதே இடத்தில் வைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32f5895a-e3f5-4c69-a0af-8c943af337bc/26-6a6c5a1101352.webp' /></p><p>இந்தச் செயலை அவர் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
</p><p>
குறித்த காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் அவர் மீது பொது இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.</p><p>

நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மாணவருக்கு, அவரது இளம் வயது மற்றும் ஆரம்ப கட்டத்திலேயே குற்றத்தை ஏற்றுக்கொண்டமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சிறைத்தண்டனை விதிக்காமல் 600 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.</p><p>

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த நிறுவனம் இயந்திரத்தை முழுமையாகச் சுத்தம் செய்ததுடன், அதில் பயன்படுத்தப்பட்டிருந்த சுமார் 500 உறிஞ்சுகுழாய்களையும் அகற்றி புதியவற்றை பொருத்தியுள்ளது.
</p><p>
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தனித்தனியாகப் பொதி செய்யப்பட்ட உறிஞ்சுகுழாய்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-31T08:19:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாறு காணாத நெருக்கடி ;8000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் BMW!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/germany-bmw-to-lay-off-8-000-employees-1785480066"></link>
            <id>https://canadamirror.com/article/germany-bmw-to-lay-off-8-000-employees-1785480066</id>
            <summary type="text">&amp;nbsp; ஜெர்மனியின் முனிச் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிஎம்டபுள்யூ, நிறுவனம் வரும் 2027ம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் தனது சுமார் 8000 ஊழியர்களை பணிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜெர்மனியின் முனிச் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிஎம்டபுள்யூ, நிறுவனம் வரும் 2027ம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் தனது சுமார் 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.</p><p> 
 
 
மின்சார வாகன தயாரிப்புக்கான தாங்க முடியாத செலவுகள், சீன நிறுவனங்களிடமிருந்து எழும் கடுமையான போட்டி மற்றும் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஜெர்மனியின் வாகனத்துறை தற்போது வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f38fefb0-1af3-419e-8b87-280af39b2e84/26-6a6c4383ca6f4.webp' /></p><p> 
 
ஏற்கனவே வோக்ஸ்வேகன் மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில், தற்போது பிஎம்டபுள்யூவும் இந்த முடிவை எடுத்துள்ளது.
</p><p> 
ஜெர்மனியின் முனிச் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் உலக அளவில் சுமார் 1.5 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். 

தொழிலாளர் சங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T07:59:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு: சமீபத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/accused-of-sushmita-case-in-psychiatric-evaluation-1785482537"></link>
            <id>https://canadamirror.com/article/accused-of-sushmita-case-in-psychiatric-evaluation-1785482537</id>
            <summary type="text">கனடாவில் பெண்ணொருவர் மாயமான நிலையில், அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் மன நல மதிப்பீட்டுக்கு உட்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் பெண்ணொருவர் மாயமான நிலையில், அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் மன நல மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dec5822-b19e-423e-9435-2fade6b6553d/26-6a6c4d2b45cd2.webp' /></p><p>
கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Lévis நகரில், சுஷ்மிதா பாஸ்கரன் (51) என்னும் பெண் காணாமல் போனதாக கடந்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 22ஆம் திகதி பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது.</p><p>

கியூபெக் மற்றும் Lévis பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசாரணையில், வனப்பகுதி ஒன்றில் பெண்ணொருவரின் உயிரற்ற உடல் கிடப்பது தெரியவந்தது.</p><p>

அதைத்தொடர்ந்து, Lévisஇலுள்ள வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல் சுஷ்மிதாவுடையதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
</p><p>
சுஷ்மிதா வழக்கு தொடர்பில், பொலிசார் மார்ட்டின் கேரியர் (61) என்பவரைக் கைது செய்துள்ளார்கள். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49acc0e0-6b84-46ee-bdd1-bccdac7c1b99/26-6a6c4d2a943bb.webp' /></p><p>
இந்நிலையில், தற்போது கேரியர் மன நல மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
அதாவது, கேரியருக்கு ஏதாவது மன நல பாதிப்பு உள்ளதா, அதனால் அவர் செய்த குற்றச்செயல்களுக்கு அவர் பொறுப்பா இல்லையா என்பதை அறிவதற்காக இந்த மதிப்பீடு செய்யப்பட உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T07:22:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு வயதுக்கு முன் சர்க்கரை கட்டுப்பாடு மூளை ஆரோக்கியத்திற்கு உதவுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/does-sugar-controlbefore-age-two-help-brain-health-1785482025"></link>
            <id>https://canadamirror.com/article/does-sugar-controlbefore-age-two-help-brain-health-1785482025</id>
            <summary type="text">இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சர்க்கரை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது, அவர்களின் எதிர்கால மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுவதுடன், முதிய வயதில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சர்க்கரை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது, அவர்களின் எதிர்கால மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுவதுடன், முதிய வயதில் டிமென்ஷியா (மறதி நோய்) ஏற்படும் அபாயத்தையும் குறைக்கக்கூடும் என புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் நடைமுறையில் இருந்த சர்க்கரை விநியோகக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்க்கரை நுகர்வு அதிகரித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

1953 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்க்கரை விநியோகக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், ஒருவரின் சராசரி தினசரி சர்க்கரை உட்கொள்ளல் 41 கிராமிலிருந்து 80 கிராமாக அதிகரித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d0b91be-016e-4339-b018-be7622d74aa0/26-6a6c4b2b1cac7.webp' /></p><p>

'யூகே பயோபேங்க்' (UK Biobank) திட்டத்தில் பங்கேற்ற சுமார் 65,000 பேரின் தரவுகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்த முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
</p><p>
ஆய்வில், இரண்டு வயதுக்கு முன்னர் சர்க்கரை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்ந்தவர்களுக்கு டிமென்ஷியா நோய் ஏற்படும் வாய்ப்பு 23 சதவீதம் குறைவாக இருந்ததாகவும், நோய் கண்டறியப்படுவதற்கான காலம் சராசரியாக இரண்டரை ஆண்டுகள் தாமதமாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது நீண்டகால அடிப்படையில் மூளை ஆரோக்கியத்திற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஜியாஜென் செங் (Jiazhen Zheng) தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், இந்த தொடர்பை முழுமையாக உறுதிப்படுத்த மேலதிக ஆய்வுகள் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதேவேளை, இது ஒரு அவதானிப்பு ஆய்வு மட்டுமே என்பதால், குறைந்த அளவில் சர்க்கரை உட்கொள்வது நேரடியாக டிமென்ஷியாவைத் தடுக்கிறது என உறுதியாகக் கூற முடியாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், ஆய்வில் பங்கேற்றவர்கள் உண்மையில் எவ்வளவு சர்க்கரை உட்கொண்டனர் என்பது தொடர்பான துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும், அவர்களின் பிறந்த காலம் மற்றும் சர்க்கரை விநியோகக் கட்டுப்பாட்டு நடைமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
1940 மற்றும் 1950களில் பிறந்தவர்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வு முடிவுகளை தற்போதைய தலைமுறை குழந்தைகளுக்கு நேரடியாகப் பொருத்திப் பார்ப்பதில் அவதானம் தேவை என வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
இருப்பினும், மூளை ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு சமநிலையான உணவு மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் முக்கியமானவை என்றும், நல்ல பழக்கங்களை ஆரம்பிப்பதற்கு எந்த வயதும் தாமதமில்லை என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-31T07:13:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crude-oil-prices-fall-in-the-world-market-1785478875"></link>
            <id>https://canadamirror.com/article/crude-oil-prices-fall-in-the-world-market-1785478875</id>
            <summary type="text">உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (31) சற்று சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அதன்படி, WTI கச்சா எண்ணெய் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (31) சற்று சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

 

அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.71% குறைந்து 82.16 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
 

ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 1.16% குறைந்து 88 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
 

அத்துடன், முர்பான் (Murban) ரக கச்சா எண்ணெய் விலையும் 2.60% சரிவடைந்துள்ளதுடன், அதன்படி அவ்வகையான கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.71 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be458f06-66c9-42ba-aa39-fce18230e66f/26-6a6c3edcbd9b6.webp' /></p><p>இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை சூத்திரத்திற்கு அமைவாக மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) பெரும்பாலும் மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p>

 

அக்கூட்டுத்தாபனம் தற்போது பெற்றுள்ள இலாபத்தைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலை திருத்தத்தை மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் எதுவும் இல்லை என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
</p><p>
 

அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை காரணமாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-31T06:21:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் போர் முடிவு வருவதாக ட்ரம்ப் அறிவிப்பு; ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்குமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-announces-an-end-to-the-war-in-gaza-1785478341"></link>
            <id>https://canadamirror.com/article/trump-announces-an-end-to-the-war-in-gaza-1785478341</id>
            <summary type="text">&amp;nbsp; நீண்டகாலமாக நீடித்து வந்த காசா போரை முடிவுக்குக் கொண்டுவர &#039;காசா அமைதித் திணைக்களம் &#039; ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வரைவு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீண்டகாலமாக நீடித்து வந்த காசா போரை முடிவுக்குக் கொண்டுவர 'காசா அமைதித் திணைக்களம் ' ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வரைவு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>


எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களைப் படிப்படியாக ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f46ac9f6-008e-4350-a084-c59a88aa4480/26-6a6c3cc6d6409.webp' /></p><p>



காசாவின் நிர்வாகம் புதிய பாலஸ்தீன இடைக்கால நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். மேலும், இஸ்ரேலியப் படைகள் காசாவிலிருந்து வெளியேறிய பின், சர்வதேச அமைதிப்படை மற்றும் புதிய பாலஸ்தீன பொலிஸார் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கும் என தெரியவந்துள்ளது.</p><p>



இஸ்ரேல் தனது படைகளை முழுமையாக திரும்பப் பெற்ற பிறகே ஆயுதங்கள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதே வேளையில், ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்குமா என்பதில் இஸ்ரேலுக்குச் சந்தேகம் உள்ளது.</p><p>



இந் நிலையில் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்பட்டாலும், இதன் முழுமையான அமுலாக்கம் இரு தரப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-31T06:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-announces-attack-on-us-bases-1785477449"></link>
            <id>https://canadamirror.com/article/iran-announces-attack-on-us-bases-1785477449</id>
            <summary type="text">குவைத் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.

ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் கெஷ்ம் தீவில் அமெரிக்கா மேற்கொண்ட குண்டுவீச்சுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.</p><p>

கெஷ்ம் தீவில் அமைந்திருந்த கட்டிடம் ஒன்றின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய குண்டுவீச்சில், கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/013be207-e5b4-4bec-b229-5385ca177168/26-6a6c394a7cd9f.webp' /></p><p>மேலும், ஜஞ்சான் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
அத்துடன், ஈரானின் பல பகுதிகளில் அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, வடக்கு குவைத்தில் அமைந்துள்ள சீன நிறுவனமொன்றின் கட்டடம் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இச்சம்பவங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்புகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-31T05:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்துக்குள் இளைஞனின் விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/katunayake-garment-factory-bus-bizarre-decision-1785476502"></link>
            <id>https://canadamirror.com/article/katunayake-garment-factory-bus-bizarre-decision-1785476502</id>
            <summary type="text">கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

மாஸ்பொத, போகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவர் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் வான் சாரதியாகப் பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b85f85d8-f64b-4e6d-a078-2d7f5221777f/26-6a6c3598468b0.webp' /></p><p>நேற்று நண்பகல் வேளையில், தொழிற்சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றிற்குள் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
எவரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குறித்த பேருந்துக்குள் சென்று அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கட்டுநாயக்க பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குலதுங்கவின் பணிப்புரையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுரவீரவின் மேற்பார்வையில் பொலிஸ் கான்ஸ்டபிள் திசாநாயக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T05:50:23+00:00</updated>
        </entry>
    </feed>
