<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-16T09:23:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசிய நிலநடுக்கம்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indonesia-earthquake-1786871681"></link>
            <id>https://canadamirror.com/article/indonesia-earthquake-1786871681</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்
காரணமாக இதுவரை குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் வரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்
காரணமாக இதுவரை குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் வரை
இடம்பெயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரஸ் தீவில் சனிக்கிழமை அதிகாலை
7.7 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.</p><p>

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 341 தொடர் அதிர்வுகள் பதிவாகியுள்ளதால்,
மக்கள் வீடுகளுக்குள் செல்ல அச்சமடைந்து தற்காலிக கூடாரங்களிலும்
திறந்தவெளிகளிலும் தங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cd5c808-97e9-4b22-b06e-7e23ffa45dff/26-6a817f82d37b1.webp' /></p><p>
</p><p>
இந்த இயற்கை அனர்த்தத்தினால் 1,300க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த
சேதமடைந்துள்ளதுடன், நிலச்சரிவு காரணமாகப் பல முக்கிய வீதிகள் தடைப்பட்டுள்ளன.
</p><p>இதனால் பாதிக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதில்
பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

தற்போது வரை 36 பேர் தீவிர காயங்களுக்கும், 77 பேர் இலேசான காயங்களுக்கும்
உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p>நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகொப்டர்கள் மற்றும் படகுகள்
மூலம் அவசர உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
அத்துடன் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும்
சுமார் 3,500 இராணுவ மற்றும் பொலிஸ் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த பகுதியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள்
ஆராய்ந்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T09:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டைப் புதுப்பித்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! நினைத்துப் பார்க்க முடியாத அளவு கிடைத்த தங்கப் புதையல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/belgium-gold-treasure-1786870585"></link>
            <id>https://canadamirror.com/article/belgium-gold-treasure-1786870585</id>
            <summary type="text">பெல்ஜியத்தில், வீடொன்றை புதுப்பிக்கும் பணியின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

வீட்டின் அடித்தள சுவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தில், வீடொன்றை புதுப்பிக்கும் பணியின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p>

வீட்டின் அடித்தள சுவர்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தங்கச் சேமிப்பு கண்டறியப்பட்டுள்ளது. </p><p> 

இதன் மதிப்பு சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

கிழக்கு ஃபிளாண்டர்ஸ் பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டில், புதிய கழிவு நீர் குழாய்களைப் பதிப்பதற்காகத் துளையிடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, இந்தத் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் அடங்கிய மறைக்கப்பட்ட புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a037746-e9ae-4765-8c5f-6700853a29e0/26-6a817b3aad2f5.webp' /></p><p> </p><p>

இந்தநிலையில், இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தங்கப் புதையல் யாருக்கு சொந்தமாகும் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.</p><p> 

வீட்டுப் புதுப்பிக்கும் பணியில் இருந்த தொழிலாளர்கள் இந்த தங்கப் புதையலைக் கண்டுபிடித்த நிலையில், குறித்த தொழிலாளர்களும், வீட்டின் உரிமையாளரும் மற்றும் உள்ளூர் தொண்டு நிறுவனமும் இந்தத் தங்கத்தைக் கோருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T09:06:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காணாமல்போன விமானி : தீவிரமாக தேடும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pilot-who-took-off-from-oshawa-airport-did-1786867940"></link>
            <id>https://canadamirror.com/article/pilot-who-took-off-from-oshawa-airport-did-1786867940</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒஷாவா எக்சிகியூட்டிவ் விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டுச் சென்று காணாமல்போன விமானியைக் கண்டுபிடிக்க தர்ஹாம் பிராந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒஷாவா எக்சிகியூட்டிவ் விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டுச் சென்று காணாமல்போன விமானியைக் கண்டுபிடிக்க தர்ஹாம் பிராந்திய பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
</p><p>வெள்ளிக்கிழமை காலை 8:30 மணியளவில் 73 வயதான டேவிட் என்ற அனுபவமிக்க விமானி இந்த விமானத்தை ஓட்டிச் சென்றுள்ளார். </p><p>
பொலிஸார் இவரது முழுப் பெயரையும் வெளியிடாத போதிலும், குடும்பத்தினர் சார்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் அவர் 'டேவிட் டக்ளஸ்' என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62385f72-9dc1-4575-b537-c0828a70d392/26-6a8170e641284.webp' /></p><p> </p><p>
ஒற்றை என்ஜின் கொண்ட, சொந்தமாக தயாரிக்கப்பட்ட விமானத்தில் புறப்பட்ட அவர், காலை 9:30 மணிக்கு மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
</p><p>வெள்ளிக்கிழமை காலையில் அந்தப் பகுதியில் தாழ்வாகப் பறந்த இலகுரக விமானத்தைக் கண்டவர்கள் அல்லது அதன் சத்தத்தைக் கேட்டவர்கள் உடனடியாகத் தகவல் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
டேவிட் 5 அடி 7 அங்குல உயரமும், மெலிந்த உடல்வாகையும் கொண்டவர். கருப்பு மற்றும் சாம்பல் நிற தலைமுடியும், மீசையும் உடையவர்.
நீலம் மற்றும் மஞ்சள் நிறங்கள் கொண்ட, ஒற்றை என்ஜின் கொண்ட சொந்தமாக தயாரித்த விமானமாகும்.</p><p>டேவிட் வழக்கமாக கவர்தா லேக்ஸ் நகரத்திற்குத் தெற்கேயும், ஸ்குகாக் ஏரிக்கு வடக்கேயும் உள்ள பகுதிகளில் பறப்பார். </p><p>எனினும், இந்த விமானத்தின் கடைசி இருப்பிடம் பால்சம் ஏரியைச் சுற்றி இருந்ததாகக் கருதப்படுகிறது என தர்ஹாம் பிராந்திய பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது.</p><p>
காணாமல்போன நபரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் பணியில் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் மற்றும் ட்ரென்டன் கூட்டமைப்பின் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகின்றன.
</p><p>இந்த நபர் இருக்கும் இடம் குறித்து தகவல் அறிந்தவர்கள் அல்லது தொடர்புடைய பிற தகவல்கள் வைத்திருப்பவர்கள், உடனடியாக உள்ளூர் பொலிஸாரையோ அல்லது தர்ஹாம் பொலிஸின் மத்திய மேற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுக் கிளையையோ 1-888-579-1520 (ext. 1805) என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T08:25:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலிருந்து சென்றவரிற்கு விமான நிலையத்தில் நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-returning-from-sri-lanka-dies-at-chennai-1786866270"></link>
            <id>https://canadamirror.com/article/man-returning-from-sri-lanka-dies-at-chennai-1786866270</id>
            <summary type="text">இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். 

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயதான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். </p><p>

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயதான நபரே இவ்வாறு திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். </p><p>

சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சையத் சிராஜுதீன் என்பவர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்றுவிட்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cd28192-34f0-4b39-bae9-6a37083d8297/26-6a816ae224916.webp' /></p><p> </p><h2><b>குடிவரவு&nbsp;சோதனை</b></h2><p>விமானத்தில் இருந்து இறங்கியவர் குடிவரவு மற்றும் சுங்கத்துறை சோதனைகளை முடித்துவிட்டு, பிராட்வே செல்வதற்காக விமான நிலைய வளாகத்தில் உள்ள மெட்ரோ தொடருந்து நிலையத்திற்கு சென்றார்.</p><p>அங்குள்ள டிக்கெட் கவுண்டர் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக்கண்ட சக பயணிகளும், மெட்ரோ நிலைய ஊழியர்களும் உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனையடுத்து விரைந்து வந்த மருத்துவ குழுவினர் முதலுதவி வழங்கிய போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். </p><p>சம்பவத்தை தொடர்ந்து விமான நிலைய பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரச மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். </p><p>இது குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-16T07:48:55+00:00</updated>
        </entry>
    </feed>
