<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-30T03:26:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் சூளுரையால் காத்திருக்கும் சிக்கல் ; தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trouble-looms-after-trump-s-warning-1785373102"></link>
            <id>https://canadamirror.com/article/trouble-looms-after-trump-s-warning-1785373102</id>
            <summary type="text">அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் தங்களது சந்திப்பில், ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் தங்களது சந்திப்பில், ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான ராஜதந்திரம், பொருளாதார அழுத்தம் மற்றும் படைபலம் உள்ளிட்ட அனைத்து வழிகளையும் ஆராய்ந்ததாக ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்தார்.</p><p>

வெள்ளை மாளிகையில் இருவரும் சந்தித்த பிறகு, செய்தியாளர்களுடனான சந்திப்பில் அந்த அதிகாரி கூறும் போது, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதே இஸ்ரேலின் விருப்பம் என்பதை நெதன்யாகு ட்ரம்ப்பிடம் தெரிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5f8733a-51c9-49f0-a678-0ef1c22d90f3/26-6a6aa1af6c594.webp' /></p><p>

"ஒரு உடன்பாடு, முற்றுகை அல்லது பொருளாதார அழுத்தங்களை தொடர்வது, மற்றும் ஒரு மாபெரும் தாக்குதல் என டிரம்புக்கு மூன்று ஆப்ஷன்கள் இருந்தன. இறுதியில், அது அவருடைய முடிவுதான்," என்று ட்ரம்ப் குறித்து அந்த அதிகாரி கூறினார்.
</p><p>
அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொதுமக்களின் விரக்தியால் ஈரானின் மதகுரு ஆட்சியாளர்கள் கலக்கமடைந்துள்ளதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், ஆனால் உலக பொருளாதாரம் மற்றும் எண்ணெய் சந்தை மீதான தாக்கமும் கருத்தில் கொள்ளப்படுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.</p><p>
இந்த மாதம் இரண்டு வாரங்களாக அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சு தாக்குதல்களில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை. இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்க தளங்கள் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், தாக்கப்பட்டால் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெஹ்ரானை எச்சரித்துள்ளது.</p><p>

நேற்று, அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு துணை ராணுவ குழுக்கள் மீது தாக்குதல் நடத்தின. மேலும், தான் வான்வழி தாக்குதல்களை நிறுத்திய சில நாட்களுக்கு பிறகு அமெரிக்க படைகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஈரானை "நன்றாக அடித்து நொறுக்குவேன்" என்று ட்ரம்ப் சூளுரைத்தார்.
</p><p>
ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும், நீரிணையை கூட்டாக நிர்வகிப்பது குறித்த ஓமானின் முன்மொழிவை நிராகரித்ததாகவும் ஈரான் நேற்றிரவு உறுதிப்படுத்தியது.</p>]]></content>
            <updated>2026-07-30T01:14:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசத்துரோக வழக்கில் கைதான பத்திரிகையாளர் ; 12 ஆண்டுகள் சிறை தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/journalist-jailed-12-years-in-treason-case-1785370267"></link>
            <id>https://canadamirror.com/article/journalist-jailed-12-years-in-treason-case-1785370267</id>
            <summary type="text">தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் பிரபல பெண் பத்திரிகையாளருக்கு ரஷ்யா நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் பிரபல பெண் பத்திரிகையாளருக்கு ரஷ்யா நீதிமன்றம் 12 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது</p><p>
பிரபல பத்திரிகையில் அறிவியல் மற்றும் மருத்துவ பிரிவில் தர்யா ஷிபச்சேவா பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de6f6dfb-0ad5-4f1f-85b8-f153f66beb2f/26-6a6a969de9168.webp' /></p><p> </p><p>இவர் ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் உக்ரைன் நாட்டுக்கு ரகசியமாக பண உதவி செய்ததாக கூறி, கடந்த 2025 ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மாஸ்கோ நீதிமன்றத்தில் மூடிய கதவுகளுக்கு பின்னால் ரகசியமாக நடந்து வந்தது.
</p><p>இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தர்யா ஷிபச்சேவாவுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். </p><p>தண்டனையை குறைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். </p><p>ஆனாலும், நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்ததால், தீர்ப்பை கேட்டு அவர் நீதிமன்றத்திலேயே கடும் அதிர்ச்சியடைந்தார்.</p><p>
2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து, பத்திரிகையாளர்களுக்கு எதிராக அதிபர் புதின் அரசு பல்வேறு கடுமையான தணிக்கை சட்டங்களை கொண்டு வந்துள்ளது. </p><p>இந்த தீர்ப்புக்கு முன்பாகவே, ரஷ்யாவில் ஏற்கனவே பல பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சர்வதேசப் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
மேற்கத்திய நாடுகளுக்கு உளவு பார்த்ததாகவும், உக்ரைனுக்கு உதவியதாகவும் கூறி பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் உலக அளவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T00:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் ; எச்சரிக்கும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-warns-of-possible-strike-on-iran-1785358165"></link>
            <id>https://canadamirror.com/article/trump-warns-of-possible-strike-on-iran-1785358165</id>
            <summary type="text">ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ம் திகதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ம் திகதி தாக்குதல் நடத்தின.</p><p> இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை உயர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a291cfc-edcf-4d7e-bbb1-592ded05a94e/26-6a6a675680526.webp' /></p><p>
</p><p>


இதையடுத்து, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 12ம் திகதி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. </p><p>இதனால் இரு தரப்பும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. ஈரான் மீது கடந்த 25ம் திகதி வரை தொடர்ந்து 13 நாட்களாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்தது. இதையடுத்து இரு தரப்பும் கடந்த 26ம் திகதி முதல் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. </p><p>இதனால் மத்திய கிழக்கில் அமைதி திரும்பி இருந்தது.



ஆனால் ஜோர்தானில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.</p><p> இந்த ஏவுகணைகள் அனைத்தும் வான்பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.



இந்நிலையில், ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>ஈரான் மீது வலிமையான தாக்குதல் நடத்த அமெரிக்க படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>இதனால் இன்று இரவு ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-29T23:55:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் ; தீயை அணைக்க சென்று பலியான அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/helicopter-crash-kills-wildfire-officials-1785367938"></link>
            <id>https://canadamirror.com/article/helicopter-crash-kills-wildfire-officials-1785367938</id>
            <summary type="text">அர்ஜென்டினாவின் மேற்கு சான் ஜுவான் மாகாணத்தில் தீயணைப்பு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினாவின் மேற்கு சான் ஜுவான் மாகாணத்தில் தீயணைப்பு ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>

உயிரிழந்தவர்களில் தீயணைப்பு வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் குடிமை பாதுகாப்புப் பணியாளர்கள் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59758ad0-209e-4b3e-9cd6-6fe41e14b32e/26-6a6a8d841d889.webp' /></p><p> </p><p>விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், நேற்று (புதன்கிழமை) காலை ஹெலிகாப்டர் தளத்துடனான தொடர்பை இழந்ததாக அவசரகால சேவைகள் தெரிவித்தன.
</p><p>
அருகிலுள்ள லா ரியோஜா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுவதற்காக அது சென்று கொண்டிருந்ததாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும், விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-07-29T23:32:28+00:00</updated>
        </entry>
    </feed>
