<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-21T12:57:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் துறைமுகத்தில் கொடூர தாக்குதல் ; 4 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/brutal-attack-at-ukrainian-port-10-4-indian-killed-1784635533"></link>
            <id>https://canadamirror.com/article/brutal-attack-at-ukrainian-port-10-4-indian-killed-1784635533</id>
            <summary type="text">தெற்கு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 4 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 4 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசௌவின் கொடியுடன் பயணித்த ‘எம்.வி. கோல்டன் லியோ’ என்ற சரக்குக் கப்பல், ஒடேசா துறைமுகத்தில் இருந்து சோளம் ஏற்றிக்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டுள்ளது.
</p><p>
அப்போது, கப்பலை இலக்காகக் கொண்டு ரஷ்யா மூன்று ‘க்ரூஸ்’ ஏவுகணைகளை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aff64e7-e711-4f93-9325-4e6d979cbdb2/26-6a5f608ea659d.webp' /></p><p>தாக்குதலையடுத்து கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளின் போது, கப்பலில் பணியாற்றிய 17 மாலுமிகளில் 8 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
எனினும், 9 மாலுமிகள் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த கடல்வழி வழிகாட்டி ஒருவர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 4 பேர் இந்தியர்கள் என இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>மேலும், காயமடைந்த மற்றொரு இந்தியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், வணிகக் கப்பல்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.</p><p>

“சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், சர்வதேச கடல் போக்குவரத்து சுதந்திரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது” என இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, கருங்கடல் மற்றும் அசோவ் கடல் பகுதிகளில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.
</p><p>
ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உக்ரைன் இலக்காகக் கொண்டு தாக்கி வரும் நிலையில், உக்ரைனின் தானிய ஏற்றுமதி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கப்பல்களை ரஷியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எனினும், ‘எம்.வி. கோல்டன் லியோ’ கப்பல் மீதான தாக்குதல் தொடர்பாக ரஷ்யா இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-21T12:05:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு டெலிவரி ஊழியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/food-delivery-worker-wins-china-s-highest-literary-1784634258"></link>
            <id>https://canadamirror.com/article/food-delivery-worker-wins-china-s-highest-literary-1784634258</id>
            <summary type="text">சீனாவைச் சேர்ந்த உணவு டெலிவரி ஊழியரும் கவிஞருமான வாங் ஜிபிங், தனது கவிதைத் தொகுப்புக்காக சீனாவின் மதிப்புமிக்க லு சூன் இலக்கியப் பரிசை வென்று சாதனை பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவைச் சேர்ந்த உணவு டெலிவரி ஊழியரும் கவிஞருமான வாங் ஜிபிங், தனது கவிதைத் தொகுப்புக்காக சீனாவின் மதிப்புமிக்க லு சூன் இலக்கியப் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.
</p><p>
நவீன சீன இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் லு சூனின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது, சீனாவின் மிக உயர்ந்த இலக்கிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
</p><p>
வாங் ஜிபிங் எழுதிய ‘லோ பிளைட்’ (Low Flight) என்ற கவிதைத் தொகுப்பு, சீனாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை, போராட்டங்கள், விரக்திகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c2bf974-c755-442e-b6c4-42e2e5fb4d21/26-6a5f5b944427b.webp' /></p><p>இந்த நூலை உருவாக்குவதற்காக அவர் சுமார் 200 சக டெலிவரி ஊழியர்களுடன் உரையாடி, அவர்களின் அனுபவங்களை கவிதைகளாக பதிவு செய்துள்ளார்.
</p><p>
பகல் நேரங்களில் உணவு டெலிவரி பணியில் ஈடுபடும் வாங் ஜிபிங், கடந்த 8 ஆண்டுகளில் தனது ஸ்கூட்டரில் சுமார் 1.5 இலட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்துள்ளார். </p><p>அதே காலப்பகுதியில், ஓய்வு நேரங்களை பயன்படுத்தி 6,000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.

ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த வாங் ஜிபிங், குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக இளம் வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்தியுள்ளார்.</p><p>

பின்னர் கட்டுமானத் தொழில், குப்பை சேகரிப்பு, தெருவோர வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளைச் செய்த அவர், இறுதியில் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றத் தொடங்கினார்.
</p><p>
சாதாரண தொழிலாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை இலக்கியமாக மாற்றியுள்ள அவரது படைப்பு, சீனாவில் தொழிலாளர் வர்க்கத்தின் குரலுக்கு கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.</p><p>

வாழ்க்கையின் கடினமான பாதைகளைக் கடந்து, தனது உழைப்பாலும் எழுத்தாற்றலாலும் உயர்ந்த வாங் ஜிபிங்கின் வெற்றி, கனவுகளுக்கு எல்லைகள் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-21T11:44:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாம் பேருந்தில் பயங்கர தீ விபத்து ; 7 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/massive-fire-in-vietnam-bus-7-dead-1784633842"></link>
            <id>https://canadamirror.com/article/massive-fire-in-vietnam-bus-7-dead-1784633842</id>
            <summary type="text">வியட்நாமின் லம் டாங் மாகாணத்தில் இருந்து ஹோ சி மின் நகரை நோக்கி பயணித்த ஆம்னி பேருந்து ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், மேலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியட்நாமின் லம் டாங் மாகாணத்தில் இருந்து ஹோ சி மின் நகரை நோக்கி பயணித்த ஆம்னி பேருந்து ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
</p><p>
நேற்று இரவு பயணத்தைத் தொடங்கிய குறித்த பஸ்சில் மொத்தம் 24 பேர் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இன்று அதிகாலை டாங் நாய் நகரில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பேருந்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fefb44a-2f1f-4092-ac23-13dac807ede9/26-6a5f59f43b3ea.webp' /></p><p>

தீ வேகமாக பரவியதால், பயணிகள் உயிர் தப்புவதற்காக அவசரமாக வெளியேற முயன்றனர். </p><p>இருப்பினும், தீயின் கொடூரத்தில் சிக்கிய 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும், 5 பேர் படுகாயமடைந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p><p>

தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>பேருந்து தீப்பற்றியதற்கான காரணம் குறித்து வியட்நாம் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-21T11:37:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயானா படகு விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலி, 83 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/27-dead-83-missing-in-guyana-ferry-accident-1784622951"></link>
            <id>https://canadamirror.com/article/27-dead-83-missing-in-guyana-ferry-accident-1784622951</id>
            <summary type="text">தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால் இடம்பெற்ற பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால் இடம்பெற்ற பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>கடந்த சனிக்கிழமை (18) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மீட்புப் பணியாளர்கள் இதுவரை 69 பேரை உயிருடன் மீட்டுள்ள நிலையில், மேலும் 83 பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்பத்தில் குறித்த படகில் 133 பேர் பயணித்ததாக பதிவுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. எனினும், மீட்கப்பட்டவர்களில் பலரின் பெயர்கள் உத்தியோகபூர்வ பயணிகள் பட்டியலில் இடம்பெறாததால், படகில் 179 பேர் வரை பயணித்திருக்கலாம் என கயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e31e2509-a985-4b19-8233-a0aca0028196/26-6a5f2f69080db.webp' /></p><p>விபத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், படகின் ஓட்டுநர் மற்றும் ஊழியர் ஒருவர் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்திய பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுவான் எட்ஜில் தெரிவித்துள்ளார்.
</p><p>
பணிநேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியமை மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், படகோட்டி மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>கயானா தலைநகர் ஜோர்ஜ்டவுனில் இருந்து போர்ட் கைடூமா பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த படகு, சனிக்கிழமை இரவு 11.01 மணியளவில் ஆபத்து சமிக்ஞையை அனுப்புவதற்கு முன்பே கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விபத்தில் உயிர் தப்பிய பயணி எலினா மூன்சாமி, மிகப்பெரிய அலை ஒன்று மோதிய சில விநாடிகளிலேயே படகுக்குள் நீர் புகுந்து அது கவிழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

"மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்றைப் பிடித்துக்கொண்டு உயிர் பிழைத்தேன்.</p><p>ஆனால், எனது 2 வயது குழந்தையின் கையை பிடித்திருந்தபோதும், அலையின் வேகத்தில் எனது கை நழுவி குழந்தை நீரில் மூழ்கியது" என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b6b2ae4-5462-443a-94da-3fa3c7573fa9/26-6a5f2f69ad7b1.webp' /></p><p>மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக அருகிலுள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து பிரெஞ்சு இராணுவம் 12 அனுபவமிக்க உயிர்காப்புப் பணியாளர்கள், இரண்டு வைத்தியர்கள் மற்றும் ஒரு மெக்கானிக் ஆகியோரை அனுப்பியுள்ளது.
</p><p>
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சிறிய தனியார் மீன்பிடிப் படகுகள் கடலில் மிதந்து கொண்டிருந்த 17-க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளன.
</p><p>
மீட்கப்பட்ட 69 பேரில் 15 சிறுவர்களும் அடங்குகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் மார்க் பிலிப்ஸ்,

"காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதே எங்களின் முழு கவனமாக உள்ளது. இன்னும் நம்பிக்கை உள்ளது. </p><p>இந்த துயரச் சம்பவத்திற்கு அதிகாரிகளின் அலட்சியம், விதிமீறல் அல்லது குற்றவியல் தவறுகள் காரணமாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்" என எச்சரித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-21T11:10:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை கனவு சிதறியது ; ஸ்பெயின் வரலாற்று சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/messi-s-last-world-cup-dream-shattered-spain-1784629889"></link>
            <id>https://canadamirror.com/article/messi-s-last-world-cup-dream-shattered-spain-1784629889</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், தனது வரலாற்றில் இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் நியூயோர்க்–நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், சுமார் 80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இரு அணிகளும் ஆரம்பம் முதல் கடுமையான போட்டியை வெளிப்படுத்தின. </p><p>நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களிலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால் போட்டி கூடுதல் நேரத்துக்குச் சென்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7754032a-4b51-4433-bdbc-0a12af9eb0c1/26-6a5f4a83df892.webp' /></p><p>போட்டியின் 93ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ் இரண்டாவது மஞ்சள் அட்டையைப் பெற்று வெளியேறியதால், அந்த அணி 10 வீரர்களுடன் போட்டியைத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. </p><p>இந்த எண்ணிக்கைக் குறைபாட்டைச் சாதகமாக பயன்படுத்திய ஸ்பெயின், கூடுதல் நேரத்தின் 106ஆவது நிமிடத்தில் நிக்கோ வில்லியம்ஸின் தலையால் தள்ளப்பட்ட பந்தை ஃபெர்ரான் டோரஸ் வலுவான ஷாட்டாக கோலாக மாற்றி வெற்றியை உறுதி செய்தார்.
</p><p>
2010ஆம் ஆண்டு நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் உலகக் கோப்பையை வென்றிருந்த ஸ்பெயின், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கோல் கணக்கில் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றியுள்ளது.</p><p> இதன் மூலம் பிரான்ஸ் மற்றும் உருகுவே அணிகளுக்கு இணையாக இரண்டு உலகக் கோப்பை பட்டங்களை வென்ற நாடுகளின் வரிசையில் ஸ்பெயின் இணைந்துள்ளது.
</p><p>
இறுதிப் போட்டி முழுவதும் ஸ்பெயின் அணி பந்தின் கட்டுப்பாட்டை அதிக நேரம் தக்கவைத்ததுடன், தொடர்ச்சியான தாக்குதல்களால் அர்ஜென்டினாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. </p><p>எனினும், அர்ஜென்டினா கோல்காப்பாளர் எமிலியானோ "டிபு" மார்டினஸ் அபாரமான மீட்புகளை நிகழ்த்தி அணியை நீண்ட நேரம் போட்டியில் நிலைநிறுத்தினார்.
</p><p>
நடப்பு சாம்பியனாக களமிறங்கிய அர்ஜென்டினா, லியோனல் மெஸ்ஸியை மையமாகக் கொண்டு தாக்குதல்களை முன்னெடுக்க முயன்ற போதிலும், ஸ்பெயின் வீரர்களின் ஒழுங்கமைந்த தற்காப்பால் அவரது தாக்கம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73d1b868-22a1-4b90-a600-1670a36323fa/26-6a5f4a8338d14.webp' /></p><p> </p><p>போட்டி முழுவதும் அர்ஜென்டினாவால் இலக்கை நோக்கிய குறிப்பிடத்தக்க தாக்குதல்களை உருவாக்க முடியாமல் போனது.
</p><p>
மறுபுறம், தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபுவென்டேவின் கீழ் ஸ்பெயின் அணி முழுத் தொடரிலும் ஒருங்கிணைந்த அணியாக விளையாடி, தனிநபர் திறமையை விட குழு ஆட்டத்தின் வலிமையால் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. </p><p>மாற்று வீரராக களமிறங்கிய ஃபெர்ரான் டோரஸின் வெற்றிக்கோல், ஸ்பெயின் கால்பந்து வரலாற்றில் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.</p>]]></content>
            <updated>2026-07-21T10:31:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விளையாட்டு வீரர்: இருவர் பலியான பரிதாபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/2-dies-in-candian-footballer-drives-car-accident-1784622047"></link>
            <id>https://canadamirror.com/article/2-dies-in-candian-footballer-drives-car-accident-1784622047</id>
            <summary type="text">கனடாவில் கார் விபத்தொன்றில் இருவர் பலியான நிலையில், அவர்களில் ஒருவர் இந்தியர் என்பதும் மற்றவர் கனேடிய கால்பந்து விளையாட்டு வீரர் என்பதும் தெரியவந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் கார் விபத்தொன்றில் இருவர் பலியான நிலையில், அவர்களில் ஒருவர் இந்தியர் என்பதும் மற்றவர் கனேடிய கால்பந்து விளையாட்டு வீரர் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p>
கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலை 11இல், சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில், தவறான திசையில் சென்ற ஒரு கார், எதிரே வந்துகொண்டிருந்த கார் மீது மோதியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e4b8f61-af96-40fc-8463-3ec26e978754/26-6a5f2be0cca81.webp' /></p><p>
அந்த கோர விபத்தில், இரண்டு கார்களின் சாரதிகளும் பலியானார்கள். </p><p>அவர்களில், தவறான திசையில் காரை செலுத்தியவர் ஒரு கனேடியர். அவரது பெயர் ஜேடன் (Jayden Dalke, 30). ஜேடன், பிரபல கால்பந்து அணியான Saskatchewan Roughriders அணி வீரர்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஜேடனின் காரில் கஞ்சாவும், மதுபானமும் இருந்துள்ளன. அவர் பெட்ரோல் நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமலே அங்கிருந்து சென்றுவிட்டதாக பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆனால், அவர் போதையிலிருந்தாரா என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2313f198-1971-4a56-8c3e-b77c8a3b2eb1/26-6a5f2be027975.webp' /></p><p>
ஜேடனின் கார் மோதி உயிரிழந்தவர், பீஷ்மா ராஜ்யகுரு (22) என்னும் இந்தியர். பொலிசார் ராஜ்யகுருவைக் குறித்து தெரிவித்த தகவல் அவ்வளவே!</p><p>

இதற்கிடையில், இந்தியாவிலிருக்கும் ராஜ்யகுருவின் பெற்றோர், தங்கள் மகனுடைய மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது நண்பர்கள், எப்படியாவது பணம் திரட்டி அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
ராஜ்யகுருவின் பெற்றோருக்கு தங்கள் மகனை அணைத்துக்கொள்ளும் ஒரு இறுதி வாய்ப்பையும், அவருக்கு இறுதிச்சடங்கு செய்யும் வாய்ப்பையும் எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுவது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-21T08:23:58+00:00</updated>
        </entry>
    </feed>
