<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-14T15:42:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மகன்களைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sentencing-hearing-underway-for-new-brunswick-man-1786675932"></link>
            <id>https://canadamirror.com/article/sentencing-hearing-underway-for-new-brunswick-man-1786675932</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி அதிகாலை, காமிஷ்னி தனது 10 மற்றும் 17 வயதுடைய இரு மகன்களையும் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.</p><p> 
பின்னர், 'நெயில் கன்' ஆணி அடிக்கும் கருவி மூலம் தனது தலையில் தானே அடித்துக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார்.
கடந்த ஜூன் 24 அன்று இவர் மீதான முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், தற்போது இவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, அவை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c13f2e43-2828-4500-9573-9d5cb3d0fccd/26-6a7e82de9aefe.webp' /></p><p> </p><p>கனடாவின் சட்டப்படி முதல் நிலை கொலைக் குற்றவாளிக்கு 25 ஆண்டுகளுக்குப் பிணை பெற முடியாது.
</p><p>விவாகரத்து செய்த தனது மனைவியைப் பழிவாங்குவதற்காகவும், அவருக்குத் தண்டனை அளிப்பதற்காகவுமே காமிஷ்னி இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
</p><p>கொலை செய்வதற்கு முன்பாக, "நான் அனைவரையும் கொன்றுவிட்டேன், பொலிஸாரையும் ஆம்புலன்ஸையும் வரச் சொல்" என்று மனைவிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி மற்றும் கடிதங்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.
</p><p>எனினும், நீதிமன்றத்தில் பேசிய காமிஷ்னி, "எனக்கு அன்றைய தினம் நடந்தது எதுவும் நினைவில் இல்லை, என் குழந்தைகளைக் கொல்லும் திட்டம் எனக்கு இருக்கவில்லை" என்று வாதிட்டார்.
</p><p>இதைக் கேட்ட நீதிபதி டேரல் ஸ்டீபன்சன், "உம்மீது மேலும் வார்த்தைகளை வீணடிக்க விரும்பவில்லை. நீர் ஒரு திட்டமிட்டு அதைச் செயல்படுத்தியுள்ளீர், அதற்கான தண்டனையை அனுபவிக்கும் நேரம் இது" என்று கூறி தண்டனையை அறிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T13:33:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 வருடங்களாக தாம் சகோதரிகள் என தெரியாது பழகிய நண்பிகள்; ஆச்சர்ய செய்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/friends-30-years-without-knowing-they-were-sisters-1786698595"></link>
            <id>https://canadamirror.com/article/friends-30-years-without-knowing-they-were-sisters-1786698595</id>
            <summary type="text">30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் சகோதரிகள் என்பது தெரியாமலேயே தோழிகளாக பழகியிருக்கிறார்கள்.</p><p> 

சமீபத்தில் டி.என்.ஏ சோதனையில் அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதும் அவர்கள் 30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து தத்துக் கொடுக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8e4c393-5d7f-4b2b-a243-b8ad82ffab3d/26-6a7edb650a4cd.webp' /></p><p>
 

இதையடுத்து இரு தோழிகளும் கட்டியணைத்து, கண்ணீர் மல்க தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

நாங்கள் இருவரும் முப்பது வருடங்களாக சகோதரிகளாகவே இருந்திருக்கிறோம்.</p><p> ஆனால் எங்களுக்கு அது தெரியவில்லை என உணர்ச்சி பொங்க அவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். 

இவர்கள் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-14T13:27:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் காட்டுத்தீயால் அழிந்த 1,100 ஹெக்டேர் நிலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/1-100-hectares-destroyed-by-wildfires-in-france-1786714136"></link>
            <id>https://canadamirror.com/article/1-100-hectares-destroyed-by-wildfires-in-france-1786714136</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தென்மேற்கு பிரான்சில் பரவிவரும் காட்டுத்தீ 1,100 ஹெக்டேர் நிலத்தை அழித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 525 பேரை அதிகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தென்மேற்கு பிரான்சில் பரவிவரும் காட்டுத்தீ 1,100 ஹெக்டேர் நிலத்தை அழித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 525 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் 75 பிராந்தியங்களுக்கு தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9566a50b-90f7-48aa-8525-a3640af8a1f5/26-6a7f1819cbb2d.webp' /></p><p>

இதற்கிடையில், மேற்கு ஜெர்மனியில் பரவிவரும் காட்டுத்தீ காரணமாக, 2,000-க்கும் மேற்பட்ட மக்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளும் எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T13:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுக்கடங்காத காட்டுத் தீ ; ஜெர்மனியில் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/wildfire-people-evacuated-from-homes-in-germany-1786712297"></link>
            <id>https://canadamirror.com/article/wildfire-people-evacuated-from-homes-in-germany-1786712297</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மேற்கு ஜெர்மனியில் பெல்ஜியம் எல்லைக்கு அருகில் ஏற்பட்ட காட்டுத் தீயின் பரவலை தொடர்ந்து, 2,000 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் வீடுகளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மேற்கு ஜெர்மனியில் பெல்ஜியம் எல்லைக்கு அருகில் ஏற்பட்ட காட்டுத் தீயின் பரவலை தொடர்ந்து, 2,000 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>



குறித்த பகுதியிலுள்ள கிராமத்தில் வசிக்கும் மக்கள் அதிகாலை 4:00 மணியளவில் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/008d5b2d-6301-4177-a6f5-23d210238d40/26-6a7f10ea71c63.webp' /></p><p>
</p><p>


இதன்போது, மக்கள் அத்தியாவசியப் பொருட்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் அவசியமான மருந்துகளை மட்டும் கொண்டு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>


வெளியேற்றம் வெற்றிகரமாக முடிவடைந்த போதிலும், நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீப்பிழம்புகள் கிராமத்திலிருந்து சுமார் 300 மீட்டர் (1,000 அடி) தொலைவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


"இந்தக் காட்டுத் தீ உள்ளூர் சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது" என்று வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியா மாநிலத்தின் துணைப் பிரதமர் மோனா நியூபார், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
</p><p>


மேலும், ஜெர்மனியின் பெரும்பகுதி வறண்ட வானிலை மற்றும் கடுமையான காட்டுத் தீ அபாயங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-14T12:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் பயணிகள் ரயிலின் மீது ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-drone-attack-ukrainian-passenger-train-1786708007"></link>
            <id>https://canadamirror.com/article/russian-drone-attack-ukrainian-passenger-train-1786708007</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் பயணிகள் ரயிலின் இயந்திரம் மீது ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் பயணிகள் ரயிலின் இயந்திரம் மீது ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இந்தத் தாக்குதலில் ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15813f35-526a-45f7-8771-59e239e9f9b3/26-6a7f00289c006.webp' /></p><p>



தாக்குதலையடுத்து ரயிலின் முன்பகுதி தீப்பற்றி எரிந்த நிலையில், அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T11:44:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் கனமழை; 6 பேர் பலி... வீடுகளை இழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heavy-rains-in-japan-thousand-people-left-homeless-1786706107"></link>
            <id>https://canadamirror.com/article/heavy-rains-in-japan-thousand-people-left-homeless-1786706107</id>
            <summary type="text">&amp;nbsp; ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் இதுவரை சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் இதுவரை சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>


கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், 20,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9973c2af-c3ce-4a9a-9b04-2c82dcb6dd0b/26-6a7ef8bd9b9cc.webp' /></p><p>
</p><p>


மேலும், மோசமான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவின் நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 7,000 பயணிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T11:12:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவு லாரியில் ஒழிந்த டிரம்ப்; ஈரானிய ஊடகங்கள் கேலி! அமெரிக்காவிற்கு மாபெரும் அவமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-hid-in-a-food-truck-iranian-media-mocked-1786691766"></link>
            <id>https://canadamirror.com/article/trump-hid-in-a-food-truck-iranian-media-mocked-1786691766</id>
            <summary type="text">&amp;nbsp; அண்மையில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் போது, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தலுக்குப் பயந்து அமெரிக்க அதிபர் டொனால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அண்மையில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் போது, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தலுக்குப் பயந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) விமானத்திலிருந்து உணவு விநியோக லாரியில் (Catering Truck) ரகசியமாகத் தப்பிச் சென்ற சம்பவத்தை ஈரானிய அரசு ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன. </p><p>

ஈரானின் ராணுவ வலிமையைக் கண்டு டிரம்ப் அஞ்சி நடுங்குவதையே இந்நிகழ்வு வெளிப்படுத்துவதாகத் தெஹ்ரான் தொலைக்காட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/372b6ac6-7c5c-499f-82e3-e2e8ded6cbce/26-6a7ec0b79d3ce.webp' /></p><h2>அமெரிக்காவிற்கு நேர்ந்த மாபெரும் அவமானம்</h2><p>
</p><p>
துருக்கியில் டிரம்ப் தங்கியிருந்த ஹோட்டல் மற்றும் அவரது விமானத்தின் நடமாட்டங்களை ஈரானிய உளவுத்துறை துல்லியமாகக் கண்காணித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ரகசியச் சேவை அதிகாரிகள் டிரம்பை உணவு லாரி மூலம் மற்றொரு சிறிய ராணுவ விமானத்திற்கு மாற்றினர். </p><p>

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட ஈரானிய ஊடகங்கள், “ஈரானின் அச்சுறுத்தலால் டிரம்ப் உணவு லாரியில் ஒளிந்து தப்பியுள்ளார், இது அமெரிக்காவிற்கு நேர்ந்த மாபெரும் அவமானம்” எனக் கூறிப் புகைப்படங்கள் மற்றும் மீம்களைப் (Memes) பகிர்ந்து கேலி செய்து வருகின்றன.</p><p>

அதேவேளையில், ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) சர்வதேசக் கடல் பாதையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் வாதத்திற்கு ஈரான் கடும் மறுப்புத் தெரிவித்துள்ளது.</p><p>

 அதேசமயம் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றிலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது” என்ற டிரம்பின் அறிக்கையைத் தள்ளுபடி செய்துள்ள ஈரானியப் புரட்சிப் படை (IRGC) அதிகாரிகள், அப்பகுதியில் அமெரிக்கக் கடற்படையின் அதிகாரம் செல்லாது என்றும், கடல்சார் வான்வெளியும் கடல் பாதையும் தங்களது முழுக் கண்காணிப்பில் தான் இயங்கி வருகிறது என்றும் பதிலடி கொடுத்துள்ளனர்.</p><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்தச் சொல்லம்புப் போர் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

இந் நிலையில் டிரம்பின் பாதுகாப்பு விவகாரத்தை ஈரான் சர்வதேச அளவில் பகிரங்கமாகக் கேலி செய்து வருவது, அமெரிக்க அரசு மற்றும் வெள்ளை மாளிகை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T10:55:48+00:00</updated>
        </entry>
    </feed>
