<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-09T22:26:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ; ஜோர்டான் மீது ஈரான் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/renewed-tension-middle-east-iran-attacks-jordan-1788987170"></link>
            <id>https://canadamirror.com/article/renewed-tension-middle-east-iran-attacks-jordan-1788987170</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்டான் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஜோர்டான் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

ஜோர்டானின் பப்ரக் மற்றும் அஸ்ரக் பகுதிகளில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்ற நிலை தீவிரமடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee93aa5f-1445-4947-ad5d-191e905b75df/26-6aa1c723cc8a9.webp' /></p><p> </p><p>இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள இலக்குகள் மீதும், பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.</p><p>

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் சர்வதேச கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதுடன், கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்திருந்தது.

பின்னர் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து சில நாட்கள் மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்திருந்தது. </p><p>எனினும், கடந்த மாத இறுதியில் இருந்து ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் அவ்வப்போது மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>
இந்த நிலையில், ஈரானின் கார்க் தீவில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. </p><p>அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றின் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.</p><p>

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

மேலும், இரண்டு அமெரிக்கக் கப்பல்கள், எட்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் மற்றும் பத்து சரக்குக் கப்பல்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

எனினும், இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-09-09T20:52:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 14 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/14-killed-in-explosion-in-syria-1788971251"></link>
            <id>https://canadamirror.com/article/14-killed-in-explosion-in-syria-1788971251</id>
            <summary type="text">சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள சர்மாடா (Sarmada) நகருக்கு அருகே ஆயுதங்கள் மற்றும் போர்க் கழிவுகளைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள சர்மாடா (Sarmada) நகருக்கு அருகே ஆயுதங்கள் மற்றும் போர்க் கழிவுகளைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக இடம் ஒன்றில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 14 பேர் உயிரிழந்ததுள்ளனர்.</p><p> 

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51701b46-60f2-48fe-989e-9c5f94570a21/26-6aa188f55c2bf.webp' /></p><p>அந்த ஆயுதங்களும் போர்க் கழிவுகளும் வேறொரு இடத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்னர் குறித்த இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகப் பாதுகாப்பு சிரியாவின் அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p>

சிவில் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிப்புகள் தீயை அணைக்கும் முயற்சிகளுக்குத் தடையை ஏற்படுத்தியதுடன், பல மணிநேரமாக அப்பகுதியிலிருந்து அடர்ந்த புகையும் வெளியேறியது. </p><p>

ஆரம்பக்கட்ட வெடிப்புக்கான காரணம் என்னவென்று அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை. </p><p>

சிரிய அரச ஊடகங்களின் தகவலின்படி, இத்லிப் மாகாணத்தில் உள்ள பின்னீஷ் (Binnish) பகுதியிலும் செப்டம்பர் 1 ஆம் திகதி வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் மேலும் சிலர் காயமடைந்தனர்.</p>]]></content>
            <updated>2026-09-09T20:32:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பில் அதிரடி நடவடிக்கை ; IAEA தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drastic-move-regarding-iran-s-nuclear-program-iaea-1788985765"></link>
            <id>https://canadamirror.com/article/drastic-move-regarding-iran-s-nuclear-program-iaea-1788985765</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்த ஆய்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அந்த நாட்டின் மீது ஐநா பாதுகாப்புச் சபையில் அறிக்கை தாக்கல் செய்ய சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்த ஆய்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அந்த நாட்டின் மீது ஐநா பாதுகாப்புச் சபையில் அறிக்கை தாக்கல் செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகம் (IAEA) ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
சர்வதேச அணுசக்தி முகவரகத்திலுள்ள 35 உறுப்பினர்களில் 23 பேர் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.</p><p>எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமலும் நடுநிலை வகித்ததோடு ரஷ்யா, சீனா மற்றும் நைஜர் ஆகிய நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1335bc40-12c0-45c5-9282-116260eb0130/26-6aa1c1a71f281.webp' /></p><p>அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தை ஐநாவுக்கான ஈரானிய நிரந்தரப் பணிமனை கண்டித்துள்ளது.
</p><p>
இது ஒரு "சார்பான, அரசியல் ரீதியான தீர்மானம்" என்று ஈரான் விமர்சித்துள்ளது.

இதற்கிடையே, ஓமானுக்கான ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகைக்கு எதிராக ஈரான் தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) அமைப்பு அமெரிக்கக் கப்பல்களைக் குறிவைத்ததாகக் கூறும் நிலையில், எந்தவொரு அமெரிக்கப் போர்க் கப்பலும் பாதிக்கப்படவில்லை என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>

பாதுகாப்புப் சபையில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு வீட்டோ (Veto) அதிகாரம் இருப்பதால், ஈரானுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதை அந்த நாடுகள் தடை செய்ய வாய்ப்புள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T20:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்ய தாக்குதல் ; இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-attack-in-ukraine-border-area-two-killed-1788984653"></link>
            <id>https://canadamirror.com/article/russian-attack-in-ukraine-border-area-two-killed-1788984653</id>
            <summary type="text">உக்ரைன் மற்றும் மால்டோவா எல்லைக் கடக்கும் பகுதியில் நடத்தப்பட்ட ரஷ்ய ஆளில்லாத வானூர்தி தாக்குதலில் 02 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் ஒடேசா பிராந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மற்றும் மால்டோவா எல்லைக் கடக்கும் பகுதியில் நடத்தப்பட்ட ரஷ்ய ஆளில்லாத வானூர்தி தாக்குதலில் 02 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் உள்ள ஸ்டாரோகோசாச்சே (Starokozache) எல்லைச் சாவடி மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் காயமடைந்தனர் என பிராந்திய ஆளுநர் ஒலெஹ் கிப்பர் (Oleh Kiper) உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39420963-2afe-4aa2-a721-ce1167dcc42a/26-6aa1bd4ecbac4.webp' /></p><p>நேற்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் அந்தப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதோடு, எல்லைக் கடக்கும் சேவைகளும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன.
</p><p>
எனினும், பிற்பகலுக்குள் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக யுக்ரைன் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. </p><p>உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தத் தாக்குதல்கள் உக்ரைன்-ரஷ்யா போரின் தீவிரத்தை தொடர்ந்து வெளிக்காட்டி வருவதுடன், எல்லைப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-09T20:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030-க்குள் மனிதகுலத்திற்கு பேராபத்தா? ; AI நிறுவனத்தின் ஆய்வாளர் விடுத்த பகீர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-grave-threat-to-humanity-by-2030-ai-company-1788981212"></link>
            <id>https://canadamirror.com/article/a-grave-threat-to-humanity-by-2030-ai-company-1788981212</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்தில் பண...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஜேகப் காக்சன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>Anthropic மற்றும் OpenAI உள்ளிட்ட முன்னணி AI நிறுவனங்கள், போதிய கட்டுப்பாடுகள் இன்றி அதிக திறன் கொண்ட Superintelligence தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் போட்டியிட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eff1d692-baa1-4f43-80b3-d085d9be35c0/26-6aa1afddbb4eb.webp' /></p><p>

எதையும் ஹேக் செய்யும் திறன் மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் அளவிலான அதிகாரம் கொண்ட AI அமைப்புகளின் வளர்ச்சியை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்த ஆபத்தான போட்டி தொடருமானால், எதிர்காலத்தில் அதன் விளைவுகள் மிகவும் தீவிரமானதாக இருக்கக்கூடும் எனவும் ஜேகப் காக்சன் எச்சரித்துள்ளார்.
</p><p>
மேலும், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2030-க்குள் மனிதகுலமே அழியும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளதாகக் கூறப்படும் தகவல், தற்போது AI பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
</p><p>
எனினும், 2030-க்குள் மனிதகுலம் அழியும் என்ற கூற்று உறுதியான அறிவியல் கணிப்பு எனக் கருதப்பட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-09T19:14:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மானிடோபாவில் காணாமல்போன நபர் ஒரு மாதத்தின் பின் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/body-of-missing-alberta-man-pulled-from-manitoba-1788973277"></link>
            <id>https://canadamirror.com/article/body-of-missing-alberta-man-pulled-from-manitoba-1788973277</id>
            <summary type="text">&amp;nbsp;கடந்த மாதம் கனடாவின் மானிடோபா மாகாணத்தில் காணாமல்போன அல்பெர்ட்டாவைச் சேர்ந்த 60 வயது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று உறுதிப்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடந்த மாதம் கனடாவின் மானிடோபா மாகாணத்தில் காணாமல்போன அல்பெர்ட்டாவைச் சேர்ந்த 60 வயது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>அல்பெர்ட்டாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ரெட்மண்ட் என்பவர், கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி மானிடோபாவின் கெல்சி பகுதியில் காணாமல்போயிருந்தார். </p><p>இவர் வழக்கமாக நெல்சன் ஆற்றின் கரையில் மீன்பிடிக்கச் செல்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aa06f9d-5a22-4244-9ce0-3340ab7c90de/26-6aa190df048fc.webp' /></p><p>
</p><p>ரெட்மண்டின் குடிலுக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட தேடுதலின் போது, கெல்சி மின் உற்பத்தி நிலைய அணையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அவரது மீன்பிடி உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன.</p><p>
செப்டம்பர் 1 ஆம் திகதி கெல்சி அணைப் பகுதியில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, ஆற்றங்கரைக்கு அருகே சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.</p><p>
வினிபெக் நகரத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், மீட்கப்பட்டவர் ஜேம்ஸ் ரெட்மண்ட் என்பது முறைப்படி உறுதி செய்யப்பட்டது.</p><p>
இந்த மரணத்தில் எவ்வித சந்தேகத்திற்கு இடமான சூழலும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T17:03:06+00:00</updated>
        </entry>
    </feed>
