<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-27T06:37:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொன்றியல் விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் – ஏர் கனடா ஊழியர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-air-canada-employees-arrested-i-1787810763"></link>
            <id>https://canadamirror.com/article/two-air-canada-employees-arrested-i-1787810763</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் மொன்றியல்–பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையம் ஊடாக கொக்கெய்ன் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் மொன்றியல்–பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையம் ஊடாக கொக்கெய்ன் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஏர் கனடா நிறுவனத்தின் இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, புதன்கிழமை காலை மொன்றியல் பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்புகள் மற்றும் ஒரு வாகனத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p>
மேலும், ஏர் கனடாவின் ஒத்துழைப்புடன், டொர்வால் பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊழியர்கள் பணியாற்றும் இடத்திலும் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff85c9f5-e716-4470-846d-53e827db3257/26-6a8fd3cc8a00c.webp' /></p><p>
</p><p>கைது செய்யப்பட்ட இருவரும் ஏர் கனடாவின் விமான நிலைய தரைத்தள செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு பதவிகளில் பணியாற்றி வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>விமான நிலையம் தொடர்பான விசாரணைப் பிரிவினரின் விசாரணையில், பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ள விமான நிலையப் பகுதிகளுக்கு பயணப் பொதிகளை கொண்டு செல்வதற்கும், அங்கிருந்து அவற்றை நகர்த்துவதற்கும் குறித்த இருவரும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.</p><p>
பொதிகளின் பயணச் சீட்டுகள் மாற்றப்பட்டு, போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகளை குறிப்பிட்ட நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு அவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T06:23:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கிய பார்வையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spectators-trapped-swing-ride-in-germany-hamburg-1787807638"></link>
            <id>https://canadamirror.com/article/spectators-trapped-swing-ride-in-germany-hamburg-1787807638</id>
            <summary type="text">&amp;nbsp; யேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கியிருந்த திருவிழா பார்வையாளர்கள் மீட்கப்பட்டனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, 70 மீட்டர் (230 அடி) நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யேர்மனியில் ஊஞ்சல் இராட்டினத்தில் சிக்கியிருந்த திருவிழா பார்வையாளர்கள் மீட்கப்பட்டனர்.
</p><p>
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, 70 மீட்டர் (230 அடி) நீளமுள்ள அந்த சவாரி வாகனம் பழுதடைந்து நகர்வதை நிறுத்தியதால், 23 பயணிகள் பாதி வழியில் சிக்கிக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62cbea48-8ccf-4cb6-843f-355919b18e08/26-6a8fc797cb7f9.webp' /></p><p>
மத்திய ஹாம்பர்க்கில் உள்ள ஊஞ்சல் இராட்டினத்தில் 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் சிக்கிக்கொண்டிருந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட திருவிழா பார்வையாளர்கள், 90 நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டனர்.
</p><p>
ஹம்பர்கர் டோம் திருவிழா, நகரின் செயிண்ட்-பாலி பகுதியில் ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படுகிறது. இது ஜெர்மனியின் மிக நீண்ட காலமாக நடைபெறும் மற்றும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட கேளிக்கைச் சந்தைகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் சுமார் 10 மில்லியன் விருந்தினர்களை இது ஈர்க்கிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T05:11:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு உதவ களமிறங்கிய ஐக்கிய நாடுகள் சபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/united-nations-steps-in-to-help-nepal-1787806112"></link>
            <id>https://canadamirror.com/article/united-nations-steps-in-to-help-nepal-1787806112</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தாம் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6f61fab-e960-4fda-b2ef-c179e808abd7/26-6a8fc1a1ea33c.webp' /></p><p>அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையத் தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

பாதிக்கப்பட்ட அனைவருடனும் நான் துணை நிற்கிறேன் என்று கூறியுள்ள அவர், நேபாள அரசாங்கத்தின் தலைமையிலான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. குழுக்களும் அதன் பங்காளர்களும் தேவையான நிவாரண பொருட்களையும் பணியாளர்களையும் திரட்டி வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-27T04:49:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ள அனர்த்தத்தில் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-flood-killed-160-1787805506"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-flood-killed-160-1787805506</id>
            <summary type="text">நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். </p><p>
இமயமலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பனி மற்றும் பாறைச் சரிவினால் லெண்டே ஆற்றின் குறுக்கே உருவாகிய தற்காலிக இயற்கை அணை உடைந்ததே இந்த பேரழிவுக்கு முக்கியக் காரணமாகும்.
</p><p>இதனால் போதே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் வெள்ளநீர் பேரிரைச்சலுடன் சீறிப் பாய்ந்து கரையோர கிராமங்களைச் சூறையாடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54d69449-e621-4bf9-8878-7fa7bed8a700/26-6a8fbf4bbb467.webp' /></p><p>
இந்த எதிர்பாராத வெள்ளப்பெருக்கில் நேபாளத்தின் ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. </p><p>கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட சுமார் 600 பயணிகள் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகிறது.
</p><p> மேலும், சீனா-நேபாள எல்லையிலுள்ள கியிரோங் வர்த்தகக் கணவாய், முக்கிய சர்வதேசப் பாலங்கள் மற்றும் பல நீர்மின் திட்டங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அப்பகுதியின் உள்கட்டமைப்பு முற்றிலும் முடங்கியுள்ளது.</p><p>
தொடர் மழை மற்றும் தடிமனான சேறு காரணமாகப் பாதிக்கப்பட்ட மலைப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் மற்றும் ஹெலிகாப்டர்கள் செல்வதில் கடும் சிரமம் நிலவி வருகிறது.
</p><p> அதேவேளையில், நேபாள ஆறுகளில் இருந்து பெருக்கெடுக்கும் மேலதிக நீர் காரணமாக இந்தியாவின் பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச எல்லைப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T04:41:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திபெத் மண்சரிவு பேரிடர் ; காணாமல் போனோர் எண்ணிக்கை 558 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tibet-landslide-number-missing-people-rises-to-558-1787805315"></link>
            <id>https://canadamirror.com/article/tibet-landslide-number-missing-people-rises-to-558-1787805315</id>
            <summary type="text">திபெத்தின் கைராங் (Gyirong) மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு பேரிடரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் அரச ஒளிபரப்பு நிறுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திபெத்தின் கைராங் (Gyirong) மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு பேரிடரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் அரச ஒளிபரப்பு நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>

இவர்களில் 260 பேர் வெளிநாட்டவர்கள் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அனர்த்தம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0345131-8cef-4110-abf8-8fe7472851b9/26-6a8fbe8505dde.webp' /></p><p>கைராங் எல்லையானது சீனா மற்றும் நேபாளத்திற்கு இடையிலான சுற்றுலாப் பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய எல்லைக் கடக்கும் இடமாக உள்ளது. </p><p>

இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் எல்லையில் மண்சரிவு ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே, பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.</p><p> 

அதேநேரம் நேபாளத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. 

அத்துடன் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போனவர்களில் 341 வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.</p><p>

அவர்களில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்களும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 34 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் எந்த நாடுகள் என உறுதிப்படுத்தப்படாத 100 பேரும் அடங்குவதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T04:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் இளைய மகனுக்கு படுகொலை அச்சுறுத்தல் ; இரகசிய புலனாய்வு துறை விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-youngest-son-secret-service-investigation-1787801649"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-youngest-son-secret-service-investigation-1787801649</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான 20 வயதுடைய பரோன் ட்ரம்பை இலக்குவைத்து படுகொலைச் சதித்திட்டம் ஒன்று குறித்து ஈரானிய அரசுக்கு சொந்தமான த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான 20 வயதுடைய பரோன் ட்ரம்பை இலக்குவைத்து படுகொலைச் சதித்திட்டம் ஒன்று குறித்து ஈரானிய அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் காணொளி ஒளிபரப்பப்பட்டமை தொடர்பில் அமெரிக்க இரகசிய புலனாய்வு துறை தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.</p><p>குறித்த காணொளியில் பரோன் ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரைக் கொல்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/260a4911-d570-4d57-a2aa-5f421809ac6a/26-6a8fb0325ab72.webp' /></p><p>பாதுகாக்கப்பட வேண்டிய நபர்களுக்கு விடுக்கப்படும் அனைத்து அச்சுறுத்தல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த இரகசிய புலனாய்வு துறையின் பேச்சாளர் நெய்ட் ஹெரிங், பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான தகவல்களைப் பகிரங்கப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்த போர் ஆறு மாதங்களாகத் தொடரும் நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T03:34:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை உலுக்கிய சம்பவம் ; உறவினர்கள் 8 பேரை கொன்று இளைஞன் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-shocked-as-youth-kills-8-relatives-1787787960"></link>
            <id>https://canadamirror.com/article/us-shocked-as-youth-kills-8-relatives-1787787960</id>
            <summary type="text">அமெரிக்காவில் உறவினர்கள் 8 பேரை கொன்று விட்டு இளைஞர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பில்லிங்ஸ் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் உறவினர்கள் 8 பேரை கொன்று விட்டு இளைஞர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p>

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பில்லிங்ஸ் என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்து நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3288095d-eff0-4daa-8ae4-9f1000bc5b8b/26-6a8f7aba7e850.webp' /></p><p> </p><p>அப்போது 4 சிறுவர்கள் உள்பட உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு வாலிபர் தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


</p><p>அவர்களில் 90 வயதுடைய பாட்டி முதல் 7 வயது கொண்ட சிறுமி வரை அடக்கம். </p><p>விருந்து நடக்க இருந்த வீடும் தீப்பிடித்து முற்றிலும் எரிந்துள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T01:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்ஜியத்தின் புகழ்பெற்ற 'பிரெஞ்சுப் பொரியல்' உற்பத்திக்குப் பேராபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/belgium-s-famous-fries-face-production-crisis-1787792859"></link>
            <id>https://canadamirror.com/article/belgium-s-famous-fries-face-production-crisis-1787792859</id>
            <summary type="text">பெல்ஜியத்தில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அங்குப் பயிரிடப்படும் உருளைக்கிழங்குகளின் பருமன் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. இதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, அங்குப் பயிரிடப்படும் உருளைக்கிழங்குகளின் பருமன் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. </p><p>இதனால், அந்நாட்டின் புகழ்பெற்ற 'பிரெஞ்சுப் பொரியல்' (Frites) உற்பத்திக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2938a0f8-4f68-4257-8042-c09c701ed6c7/26-6a8f8ddd7b892.webp' /></p><p> </p><p>வசந்த காலத்தின் இறுதியில் பெய்த கடும் மழையினால் மண்வளம் பாதிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து கோடைகாலத்தில் நிலவிய அதீத வெப்பமும் வறட்சியுமே உருளைக்கிழங்குகளின் வளர்ச்சி குன்றியமைக்குப் பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

</p><p>ஏற்றுமதி மற்றும் விநியோகத்திற்கான ஒப்பந்தங்களை முன்கூட்டியே செய்துள்ள விவசாயிகள், தங்களது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காகக் கடந்த ஆண்டின் மேலதிக விளைச்சலில் சேமிக்கப்பட்ட உருளைக்கிழங்குகளைக் கொண்டே தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.</p><p>

பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்குப் பொரியல்களை (Frites surgelées) ஏற்றுமதி செய்வதில் பெல்ஜியம் உலகளவில் முதலிடம் வகிக்கின்றது.</p><p> ஆண்டுதோறும் சுமார் ஆறு மில்லியன் தொன் உருளைக்கிழங்குகளைப் பதப்படுத்தும் இந்நாடு, தமது உற்பத்தியில் 90 விழுக்காட்டை 120-இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது.</p><p> இந்நிலையில், தற்போதைய விளைச்சல் வீழ்ச்சியால் உருளைக்கிழங்குகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை, நுகர்வோர் மத்தியில் பாரிய விலையேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p> பொரியல் தயாரிப்பதற்கு ஏற்ற நீளமான மற்றும் பெரிய உருளைக்கிழங்குகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், எதிர்வரும் நாட்களில் இதன் விலைகள் அதிகரிக்கக்கூடும் என 4,500 உணவகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெல்ஜிய தேசியப் பொரியல் தயாரிப்பாளர் சங்கம் (Association nationale belge des frituristes) எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T01:08:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான விளைவுகள் உண்டு ; ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரானின் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-hits-back-at-trump-warning-with-threat-1787791286"></link>
            <id>https://canadamirror.com/article/iran-hits-back-at-trump-warning-with-threat-1787791286</id>
            <summary type="text">புதிதாக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் அமெரிக்கா எதையும் சாதிக்கப் போவதில்லை என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.

ஈரான் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிதாக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் அமெரிக்கா எதையும் சாதிக்கப் போவதில்லை என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரான் பொருளாதாரத்தை முடக்குவதற்கு அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed6ab37d-e325-49cc-b18c-602fde6a08c6/26-6a8f87b7c33a2.webp' /></p><p> </p><p>மேலும், ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்றும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.



</p><p>
1979 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் பல ஆண்டுகளாக ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p> அவற்றைத் தொடர்ந்து எதிர்கொண்டு வந்துள்ள ஈரான் தலைவர்கள் தற்போதைய அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளின் தாக்கத்தை நிராகரித்துள்ளனர்.
</p><p>
இதுதொடர்பாகப் பேசிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், “பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல் மூலமாக பிரச்னைகளைத் தீர்ப்பதே எங்களின் கொள்கை. அதேநேரம், இதுவரை நாங்கள் பிரச்னைகளில் உறுதியாக இருந்தது போன்று, இனிவரும் பொருளாதார அழுத்தங்களுக்கு எதிராகவும் உறுதியாக நிற்போம்.
</p><p>
போரின் மூலம் எதையும் சாதிக்க முடியாததைப் போன்று தற்போதைய பொருளாதாரத் தடை நடவடிக்கைகளாலும் அமெரிக்காவால் எதையும் சாதிக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T00:41:35+00:00</updated>
        </entry>
    </feed>
