<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-27T23:37:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு ஷாக் கொடுத்த சீனா ; அமெரிக்காவை குறிவைக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-shocks-trump-hypersonic-missiles-targeting-1787873124"></link>
            <id>https://canadamirror.com/article/china-shocks-trump-hypersonic-missiles-targeting-1787873124</id>
            <summary type="text">சீனா தனது ராணுவ ரகசியங்களை மறைத்து வரும் வேளையில், அமெரிக்க உளவுத்துறை தற்போது ஒரு அதிர்ச்சி தரும் புதிய ரகசியத் தகவலை வெளியிட்டுள்ளது.


வானில் பற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா தனது ராணுவ ரகசியங்களை மறைத்து வரும் வேளையில், அமெரிக்க உளவுத்துறை தற்போது ஒரு அதிர்ச்சி தரும் புதிய ரகசியத் தகவலை வெளியிட்டுள்ளது.


</p><p>வானில் பறந்து கொண்டே அமெரிக்காவின் அதிமுக்கிய உளவு விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களைத் துல்லியமாகக் குறிவைத்து அழிக்கும் 'ஹைப்பர்சோனிக்' ஆயுதங்களைச் சீனா ரகசியமாகத் தயாரித்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bd54970-c13d-4779-935b-a779fadbeefa/26-6a90c7667c616.webp' /></p><p>
</p><p>&nbsp;சீனாவின் இந்த ஆபத்தான ஏவுகணைகள் சுமார் 2 ஆயிரத்து 500 கி.மீ முதல் 8 ஆயிரம் கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று, பசிபிக் கடலில் உள்ள அமெரிக்காவின் 'குவாம்' மற்றும் 'ஹவாய்' ராணுவத் தளங்களை நேரடியாகத் தாக்கும் வல்லமை கொண்டவை என உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன.
</p><p>&nbsp;ஒலியை விடப் பல மடங்கு வேகத்தில் சென்று நடுவானில் தன் திசையைத் தானே மாற்றிக்கொள்ளும் இந்த விபரீத ஆயுதத்தை ரேடார்களால் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை தற்போது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.</p><p>
ஹைப்பர் சோனிக் கிளைடு ஆயுதங்கள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் அனுப்பப்படும். கீழ்வளிமண்டலத்தை எட்டியதும், இது ஏவுகணையில் இருந்து பிரிந்து செல்லும். அதன்பின், தன் இலக்கை நோக்கி பயணிக்கும். அதன்பின், ஒலியை விட பல மடங்கு வேகத்தில் வானில் உள்ள இலக்கை நோக்கி, எதிரியின் ரேடாரில் சிக்காத வகையில் தன் திசையை மாற்றியபடியே சீறிப்பாயும். சில சமயங்களில் திசை மாறி செல்லும்.</p>]]></content>
            <updated>2026-08-27T23:25:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளவில் விசா நேர்காணல்களை நிறுத்தியது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-suspends-visa-interviews-worldwide-1787864587"></link>
            <id>https://canadamirror.com/article/us-suspends-visa-interviews-worldwide-1787864587</id>
            <summary type="text">உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

 

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
</p><p>
 

இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், குடியேற்ற கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c2a50e-6045-4cff-81f8-2e70ad0ef667/26-6a90a60d91150.webp' /></p><p> </p><p>மாணவர்கள், வேலை பார்ப்போர், வர்த்தகம், சுற்றுலா என பல விசாக்களில் கடும் விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார்.</p><p>



அந்த வகையில் சுற்றுலா அல்லது வணிகத்திற்காக வந்து, அகதி அந்தஸ்து கோரியுள்ள, 2 இலட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.</p><p>



இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்கள் மற்றும் துாதரக அலுவலகங்களில் விசா நேர்காணல்கள் நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>


அமெரிக்க அரசு வழங்கும் நலத்திட்டங்களைச் சார்ந்து வாழும் வாய்ப்புள்ள விண்ணப்பதாரர்களை கண்டறிந்து நிராகரிப்பது மற்றும் விசா விண்ணப்பங்களை மிகவும் தீவிரமாகவும், ஒரே மாதிரியாகவும் ஆய்வு செய்வது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



நேர்காணல் எப்போது மீண்டும் தொடங்கும் என்ற விபரத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிடவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-27T21:03:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-toll-rises-after-nepal-flash-floods-1787852565"></link>
            <id>https://canadamirror.com/article/death-toll-rises-after-nepal-flash-floods-1787852565</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சில மணி நேரங...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் மரண எண்ணிக்கை 359 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 389 ஆக உயர்ந்துள்ளது</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d79db142-6087-4a71-b9a0-4dbaa0a78c45/26-6a90771722bdd.webp' /></p><p style="text-align: justify; ">இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வரும் நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா, நேபாள இராணுவம், ஆயுதப் பொலிஸ் படை மற்றும் தேசிய பொலிஸைச் சேர்ந்த 13,000க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

இன்றைய தினத்தில் மட்டும் வான்வழியாக 573 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

உயிர்களைக் காப்பாற்றுதல், காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றுக்கே அரசாங்கம் முதன்மை முக்கியத்துவம் அளிப்பதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-27T17:42:55+00:00</updated>
        </entry>
    </feed>
