<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-22T08:32:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கத்தியைக் காட்டி மக்களை மிரட்டிய நபர்... பொலிஸ் நடவடிக்கையில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-police-shot-and-kill-man-threat-by-knife-1784708387"></link>
            <id>https://canadamirror.com/article/canada-police-shot-and-kill-man-threat-by-knife-1784708387</id>
            <summary type="text">கனடாவில், ஷாப்பிங் மாலுக்குள் கத்தியைக் காட்டி மிரட்டிய ஒருவரை பொலிஸ் துரத்த, பொலிஸ் நடவடிக்கையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், ஷாப்பிங் மாலுக்குள் கத்தியைக் காட்டி மிரட்டிய ஒருவரை பொலிஸ் துரத்த, பொலிஸ் நடவடிக்கையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
</p><p>
நேற்று மதியம் 1.12 மணியளவில், கனடாவின் வடக்கு வான்கூவரில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலில் ஒருவர் கத்தியைக் காட்டி மக்களை மிரட்டிக்கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7db619a-4d9f-4b3e-97c1-5f397e0dd45b/26-6a607d24535f8.webp' /></p><p>
உடனடியாக பொலிசார் அங்கு விரைய, அந்த நபர் மாலிலிருந்து தப்பி, கார் ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார்.
</p><p>
அவரது கார் பல வாகனங்கள் மீது மோத, எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் காரை நிறுத்திய அவர், அங்கு நின்றுகொண்டிருந்த பொலிஸ் காரில் ஏறியுள்ளார்.
</p><p>
பொலிசார் அவரை சுற்றி வளைக்க, அவர் கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
</p><p>
உடனே பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டு, கைவிலங்கிட்டு கைது செய்துள்ளார்கள்.</p><p>

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T08:20:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[700 ஆண்டுகால ஸ்பெயின் அரச கல்லறைக்குள் அதிர்ச்சி; எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/discovery-inside-a-700-year-old-spanish-royal-tomb-1784699192"></link>
            <id>https://canadamirror.com/article/discovery-inside-a-700-year-old-spanish-royal-tomb-1784699192</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘சாண்டா மரியா டி பெட்ரால்பஸ்’ (Santa Maria de Pedralbes) மடாலயத்தில், 700 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘சாண்டா மரியா டி பெட்ரால்பஸ்’ (Santa Maria de Pedralbes) மடாலயத்தில், 700 ஆண்டுகள் பழமையான அரச கல்லறைகளைத் திறந்து தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. </p><p>

14-ஆம் நூற்றாண்டில் அரசி எலிசெண்டா (Queen Elisenda) என்பவரால் நிறுவப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னத்தின் 700-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், இதுவரை சொல்லப்பட்டு வந்த வரலாற்றுப் பதிவுகளுக்கு முற்றிலும் மாறான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6f636a-3b69-4db0-9d9b-484f82b56f0d/26-6a605939ec216.webp' /></p><h2>&nbsp;9 நபர்களின் எலும்புக்கூடுகள்</h2><p> 

வரலாற்று ஏடுகளின்படி, வீரத் தளபதியான ஆர்டாவ் டி ஃபோசெஸ் (Artau de Foces) என்பவரின் கல்லறை என நினைத்துத் திறக்கப்பட்ட இடத்தில், ஒரு ஆண் எலும்புக்கூடு கூடக் கிடைக்கவில்லை.</p><p>

 மாறாக, அங்கு இரண்டு பெண்களின் உடல்களும், மூன்று குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டன. அ

தில் ஒரு பெண்ணின் மண்டையோட்டுடன் 700 ஆண்டுகள் கடந்தும் சடை போட்ட கூந்தல் (Ponytail) அப்படியே சிதையாமல் மம்மியாகி இருந்தது தொல்லியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.</p><p>

அதைவிடப் பெரிய அதிர்ச்சியாக, அரசியின் உறவினரும் மடாலயத்தின் தலைவியுமான பிரான்செஸ்கா என்பவரின் கல்லறையை ஆய்வு செய்த போது, அங்குப் பல்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த 9 நபர்களின் எலும்புக்கூடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>

அதில் கூர்மையான ஆயுதங்களால் வெட்டப்பட்டு உயிரிழந்த 4 ஆண்களின் மண்டையோடுகளும், பிரசவத்தின் போதே இறந்து போன ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் மம்மியான உடலும் கண்டெடுக்கப்பட்டன. </p><p>அந்தப் பெண்ணின் பிரசவப் பாதையிலேயே 22 வாரக் கருவின் எலும்புகள் சிக்கியிருந்த காட்சி ஆராய்ச்சியாளர்களை உரைய வைத்தது.

மடாலயத்தின் நிறுவனர் அரசி எலிசெண்டாவின் உடலும் மரப்பெட்டிக்குள் வைத்துப் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p>அரச குடும்பத்துக்கான ஆடம்பரத்துடன் புதைக்கப்படாமல், எளிய துறவி உடையில் அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது, அவரது ஆன்மீக வாழ்க்கை முறைக்குச் சான்றாக உள்ளது.</p><p>

 இந் நிலையில் அரச கல்லறைகளுக்குள் கொலை செய்யப்பட்ட ஆண்களின் உடல்களும், பெண்களும், குழந்தைகளும் எப்படி வந்தார்கள் என்ற வரலாற்றுப் புதிரை அவிழ்க்க, மரபணு (DNA) மற்றும் கார்பன் ரேடியோ சோதனைகளைத் தொல்லியல் வல்லுநர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-22T08:14:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக்கிண்ண கோப்பை ஷாப்பிங் பையில் ; சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/world-cup-shopping-bag-video-viral-social-media-1784704778"></link>
            <id>https://canadamirror.com/article/world-cup-shopping-bag-video-viral-social-media-1784704778</id>
            <summary type="text">ஸ்பெயின் அணி உலகக்கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து, வீரர் Marc Cucurella FIFA உலகக்கிண்ணத்தை ஒரு சாதாரண ஷாப்பிங் பைக்குள் வைத்தபடி எடுத்துச் செல்லும் காட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் அணி உலகக்கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து, வீரர் Marc Cucurella FIFA உலகக்கிண்ணத்தை ஒரு சாதாரண ஷாப்பிங் பைக்குள் வைத்தபடி எடுத்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
</p><p>
இந்தக் காட்சியை பார்த்த பலருக்கும் முதலில் எழுந்த கேள்வி, “உலகின் மிக மதிப்புமிக்க விளையாட்டு சின்னங்களில் ஒன்றான FIFA உலகக்கிண்ணத்தை இவ்வளவு சாதாரணமாக எடுத்துச் செல்ல முடியுமா?” என்பதாகும்.</p><p>

FIFA உலகக்கிண்ணம் சாதாரணமாக தயாரிக்கப்பட்ட ஒரு கோப்பை அல்ல. இதன் உயரம் 36.8 சென்டிமீற்றர் ஆகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12409645-74f2-4f8b-bb97-4ab112664c3c/26-6a606f0cd9ec0.webp' /></p><p>மேலும் இதன் எடை 6.175 கிலோகிராம். 6 கிலோகிராமுக்கும் அதிகமான எடையைக் கொண்ட ஒரு பொருளை, எந்தவித சிரமமும் இல்லாமல் ஒரு சாதாரண பையில் எடுத்துச் செல்வது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
</p><p>
Cucurella அந்தக் கிண்ணத்தை எடுத்துச் செல்லும் விதம், அதிக எடை கொண்ட பொருளை கையாளும் ஒருவரின் உடல் மொழியாக தெரியவில்லை. மாறாக, மிகவும் இலகுவான பொருளை எடுத்துச் செல்வது போன்ற இயல்பான தோற்றத்தை அது வழங்குகிறது.</p><p>

இதனுடன் தொடர்புடைய மற்றொரு முக்கிய விடயம், FIFA உலகக்கிண்ணத்தின் பாதுகாப்பு நடைமுறைகளாகும். </p><p>அசல் உலகக்கிண்ணம், சாம்பியன் அணி வீரர்கள் கொண்டாட்டத்தின் போது கையில் ஏந்த அனுமதிக்கப்பட்டாலும், அதன் பின்னர் அது எப்போதும் FIFA அதிகாரிகளின் கண்காணிப்பிலேயே இருக்கும்.
</p><p>
அசல் கிண்ணத்தை வீரர்கள் தங்களது விருப்பப்படி மைதானம், உடைமாற்றும் அறை அல்லது பிற இடங்களுக்கு எடுத்துச் செல்வது வழக்கமான நடைமுறை அல்ல.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd2ca693-3f04-47de-b7db-4245bb50671e/26-6a606f0c37424.webp' /></p><p>இதன் காரணமாக, வெற்றிக் கொண்டாட்டங்கள், புகைப்பட நிகழ்ச்சிகள் மற்றும் ஊடக நிகழ்வுகளுக்காக FIFA தரப்பில் Replica Trophy எனப்படும் மாதிரி கிண்ணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.</p><p> அவை தோற்றத்தில் அசல் கிண்ணத்தைப் போன்றே இருந்தாலும், வேறு பொருட்களால் தயாரிக்கப்படுவதால் எடை குறைவாக இருக்கும்.
</p><p>
எனவே, Marc Cucurella எடுத்துச் சென்றது உண்மையான FIFA உலகக்கிண்ணம் அல்லாமல், கொண்டாட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் Replica Trophy ஆக இருக்கலாம் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அந்தக் கிண்ணம் Replica Trophy என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இதுவரை வெளியாகவில்லை. </p><p>காட்சியில் தெரியும் விதம், கிண்ணத்தின் எடை மற்றும் FIFA-வின் பாதுகாப்பு நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த ஊகம் முன்வைக்கப்படுகிறது.
</p><p>
வைரலாகியுள்ள இந்தக் காட்சி, உலகக்கிண்ணம் தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அதன் உண்மையான மதிப்பு குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T07:19:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது உடலை ஆய்வகமாக மாற்றிய விஞ்ஞானி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/scientist-his-body-into-a-laboratory-passes-away-1784703955"></link>
            <id>https://canadamirror.com/article/scientist-his-body-into-a-laboratory-passes-away-1784703955</id>
            <summary type="text">உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் ஆராய்ச்சியாளரும், பரிசோதனை நோய் எதிர்ப்பு சிகிச்சையை (Experimental Immunotherapy) தனது சொந்த உடலில் முதன்முறையாக சோதித்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகப் புகழ்பெற்ற புற்றுநோய் ஆராய்ச்சியாளரும், பரிசோதனை நோய் எதிர்ப்பு சிகிச்சையை (Experimental Immunotherapy) தனது சொந்த உடலில் முதன்முறையாக சோதித்த விஞ்ஞானியுமான பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்கோல்யர் தனது 59-வது வயதில் காலமானார்.</p><p>
</p><p></p><p>2023ஆம் ஆண்டு, மிக வேகமாகப் பரவும் மற்றும் குணப்படுத்துவது மிகவும் கடினமான Glioblastoma எனப்படும் மூளைக் கட்டி புற்றுநோய் அவருக்கு கண்டறியப்பட்டது.</p><p>

வழக்கமான சிகிச்சை முறைகளை மட்டும் பின்பற்றாமல், தனது நீண்டகால சக பணியாளரான புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜார்ஜினா லாங் உடன் இணைந்து, மெலனோமா (Melanoma) தோல் புற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட புதிய நோய் எதிர்ப்பு சிகிச்சையை தனது மூளைக் கட்டிக்காக மாற்றியமைத்து பயன்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5447875a-e48c-49cd-b76d-09060778cefe/26-6a606bd52f450.webp' /></p><p>
</p><p>
மருத்துவ வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் வகையில், அறுவை சிகிச்சைக்கு முன்பே இந்த பரிசோதனை சிகிச்சையை அவர் தனது உடலில் மேற்கொண்டார். </p><p>கட்டி இன்னும் செயல்பாட்டில் இருக்கும் நிலையில், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி புற்றுநோய் செல்களை எதிர்க்கச் செய்வதே இந்த சிகிச்சையின் நோக்கமாக இருந்தது.</p><p>

தனது சிகிச்சை அனுபவங்கள், உடல்நிலை மாற்றங்கள் மற்றும் மருத்துவப் பயணத்தை பேராசிரியர் ஸ்கோல்யர் வெளிப்படையாக பதிவு செய்தார். </p><p>அவரது அனுபவங்களிலிருந்து கிடைத்த மருத்துவத் தகவல்கள், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் புதிய புற்றுநோய் சிகிச்சை பரிசோதனைகள் முன்னெடுக்க முக்கிய ஆதாரமாக அமைந்தன.
</p><p>
இந்த சிகிச்சை அவரது புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தவில்லை என்றாலும், அவரது ஆயுளை குறிப்பிடத்தக்க அளவில் நீட்டித்ததுடன், மூளைக் கட்டி சிகிச்சையை அணுகும் மருத்துவ உலகின் பார்வையிலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
</p><p>
2024ஆம் ஆண்டின் “Australian of the Year” விருதைப் பெற்ற பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்கோல்யர், தனது இறுதி காலம் வரை புற்றுநோய் ஆராய்ச்சிக்கும் நோயாளிகளுக்கான புதிய நம்பிக்கைகளுக்கும் பங்களித்து வந்தார்.</p><p>

தனது உடலையே அறிவியல் ஆய்வுக்கான தளமாக மாற்றி, எதிர்கால புற்றுநோய் நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை வாய்ப்புகளை உருவாக்க அர்ப்பணித்த அவரது பங்களிப்பு மருத்துவ வரலாற்றில் நீண்ட காலம் நினைவுகூரப்படும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T07:06:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[Godzilla vs. Kong பட நடிகை விபத்தில் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/godzilla-vs-kong-actress-dies-in-accident-1784704059"></link>
            <id>https://canadamirror.com/article/godzilla-vs-kong-actress-dies-in-accident-1784704059</id>
            <summary type="text">&amp;nbsp;சிறுவர்களை மிகவும் கவர்ந்த கோட்சில்லா விஎஸ் கோங்&quot; (Godzilla vs. Kong) திரைப்படத் தொடரில் ஜியா (Jia) என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிறுவர்களை மிகவும் கவர்ந்த கோட்சில்லா விஎஸ் கோங்" (Godzilla vs. Kong) திரைப்படத் தொடரில் ஜியா (Jia) என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற காதுகேளாத நடிகை கெய்லி ஹட்டில் (Kaylee Hottle), தனது 18 வயதில் அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்துள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
ஜியா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், ஹாலிவுட் திரை உலகில் காதுகேளாத சமூகத்திற்கான பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தியதற்காக ஹட்டில் பரவலாக அறியப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e114c38-acfa-40dc-a6c7-c2046a0e943d/26-6a606c3c838aa.webp' /></p><h2>நடிகை கெய்லி ஹட்டில் (Kaylee Hottle)</h2><p>
</p><p>
2021 ஆம் ஆண்டு வெளிவந்த பிளாக்பஸ்டர் திரைப்படமான "கோட்சில்லா விஎஸ் கோங்" படத்தில் இளம் அநாதை ஜியாவாக ஹட்டில் நடித்ததுடன், 2024 ஆம் ஆண்டு வெளியான அதன் தொடர்ச்சியான "கோட்சில்லா எக்ஸ் கோங்: தி நியூ எம்பயர்" (Godzilla x Kong: The New Empire) படத்திலும் அத்தகைய கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்திருந்தார்.
</p><p>


 நடிகை கெய்லி ஹட்டில் (Kaylee Hottle) தந்தையான ஜோசுவா ஹட்டில், அமெரிக்க சைகை மொழியைப் பயன்படுத்தி பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட வீடியோ அறிக்கை மூலம் அவரது இறப்பை உறுதிப்படுத்தினார்.
</p><p>


பிரடெரிக் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின்படி, மேரிலாந்தின் ஐயம்ஸ்வில் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:50 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒரே ஒரு வாகனம் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளது என்றும், அதிக வேகம் விபத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் பொலிஸார் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>


19 வயது ஓட்டுநர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிய காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அதே நேரத்தில் மற்றொரு பயணியே சம்பவ இடத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற மறுத்துவிட்டார்.
</p><p>
ஹட்டில் படித்த டெக்சாஸ் காதுகேளாதோர் பள்ளி, "ஆழ்ந்த சோகத்துடன்" அவரது மறைவை அறிவித்ததுடன், குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் விபத்து தொடர்பான யூகங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.</p><p>



கோட்சில்லா எக்ஸ் கோங் படங்களின் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் (Warner Bros.), எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், ரெபேக்கா ஹால், டான் ஸ்டீவன்ஸ் மற்றும் பிரையன் டைரி ஹென்றி ஆகியோருடன் திரையைப் பகிர்ந்துகொண்ட இளம் நடிகைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T07:05:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் நெதன்யாகுவை எவராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-one-can-touch-netanyahu-in-the-us-trump-1784702053"></link>
            <id>https://canadamirror.com/article/no-one-can-touch-netanyahu-in-the-us-trump-1784702053</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க மண்ணில்&amp;nbsp; நெதன்யாகு எந்த வடிவத்திலும், எவ்விதத்திலும் கைது செய்யப்பட மாட்டார்” என அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க மண்ணில்&nbsp; நெதன்யாகு எந்த வடிவத்திலும், எவ்விதத்திலும் கைது செய்யப்பட மாட்டார்” என அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பிடிவாரண்ட் அடிப்படையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு வரும்போது அவரைக் கைது செய்வதற்கான சட்ட வழிகளை ஆராய்ந்து வருவதாக நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி கூறியிருந்த நிலையில்,நெதன்யாகுவை எவராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a55eff4-8879-49bd-8a87-eb508626809b/26-6a60646762a28.webp' /></p><h2>காசாவில் போர்க்குற்றம் புரிந்த&nbsp;&nbsp;நெதன்யாகு</h2><p> </p><p>

 

வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நியூயார்க் வரவுள்ள சூழலில், “காசாவில் போர்க்குற்றம் புரிந்த குற்றச்சாட்டிற்காக சர்வதேச நீதிமன்றத்தால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நெதன்யாகு தி ஹேக் (The Hague) சிறையில்தான் இருக்க வேண்டும்; நியூயார்க் சட்டப் பிரிவு அனுமதித்தால் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மம்தானி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.</p><p> மம்தானியின் இந்த அதிரடி பேச்சு சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

மம்தானியின் கருத்துக்குத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாகப் பதிலளித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், </p><p>“நெதன்யாகு ஈரானின் தீவிரவாத ஆட்சிக்கு எதிராகப் போராடி வருகிறார். 

உண்மையில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் ஈரானை அழிவுப் பாதைக்குக் கொண்டுசென்ற அதன் தலைவர்களே தவிர நெதன்யாகு அல்ல” எனத் தெரிவித்துள்ளார். </p><p>அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உறுப்பு நாடு அல்ல என்பதால், அதன் பிடிவாரண்டுகளைச் செயல்படுத்தும் கடமை அமெரிக்காவிற்கு இல்லை என்பதை அதிபர் நிர்வாகம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p>

மேலும், ஒரு நாட்டின் தலைவரை மற்றொரு நாட்டின் உள்ளூர் மேயர் கைது செய்ய நினைப்பது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது என்றும், அது முற்றிலும் அரசியல் ஆதாயத்திற்காகச் செய்யப்படும் நாடகம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p> 

 டிரம்பின் இந்தத் தீர்க்கமான அறிவிப்பின் மூலம், நியூயார்க் மேயர் மம்தானி கிளப்பிய நெதன்யாகு கைது குறித்த சர்ச்சைக்கும் சட்டப் போராட்டங்களுக்கும் அமெரிக்கக் கூட்டாட்சி அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T06:32:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வரி திட்டம் ; டிரம்பின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-to-tax-drugs-imported-into-the-us-1784698443"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-to-tax-drugs-imported-into-the-us-1784698443</id>
            <summary type="text">அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜெனரிக் மருந்துகளுக்கும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு 0 சதவீத வரி தொடரும் என அமெரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜெனரிக் மருந்துகளுக்கும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு 0 சதவீத வரி தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன் பின்னர், ஒரு வருட காலத்திற்கு ஜெனரிக் மருந்துகளுக்கான இறக்குமதி வரி 100 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும், அதற்குப் பிறகு அது 200 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
</p><p>
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலைகளை அமெரிக்காவிலேயே அமைப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d92febd-98d7-4c96-8e98-8e634e7084cb/26-6a60564d178b8.webp' /></p><p>இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜெனரிக் மருந்து உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவுக்குள் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. </p><p>நிறுவனங்களுக்கு வழங்கப்படும் குறிப்பிட்ட காலத்திற்குள் அமெரிக்காவில் உற்பத்தி ஆலைகளை அமைக்கத் தவறும் பட்சத்தில் அபராதங்கள் விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதாகும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அதேவேளை, காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் பிராண்டட் மருந்துகளுக்கான தற்போதைய வரி விதிப்பு முறையில் மாற்றம் எதுவும் செய்யப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்கா முழுவதும் இதுவரை இல்லாத அளவில் புதிய மருந்து உற்பத்தி வசதிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், உள்நாட்டு மருந்து உற்பத்தியை அதிகரிப்பதே அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த புதிய வரிக் கொள்கை, வெளிநாட்டு உற்பத்தியைச் சார்ந்திருக்கும் மருந்துத் துறையை அமெரிக்காவுக்குள் மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-22T05:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் உடனடி பேச்சுவார்த்தைக்கு மறுப்பு ; டிரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-announces-immediate-talks-with-iran-1784697810"></link>
            <id>https://canadamirror.com/article/trump-announces-immediate-talks-with-iran-1784697810</id>
            <summary type="text">ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை என அமெரிக்க அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

“ஈரான் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராகும் வரை, பேச்சு நடத்த அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை” என டிரம்ப் கூறியுள்ளார்.
</p><p>
ஈரானின் இராணுவ திறன்களை குறைக்கும் நோக்கில் அமெரிக்க படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது 11-வது நாளாக இரவு நேரத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5acf8a3-1d35-4160-8e0a-12338c55bdf2/26-6a6053d3a96d5.webp' /></p><p>

இது தொடர்பாக அமெரிக்க படைகளின் மத்திய தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஈரானின் இராணுவ திறன்களை சீர்குலைக்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளும் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.</p><p>

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் மீண்டும் புதிய அணுசக்தி தளத்தை அமைக்க முயற்சித்தால், அதனை அமெரிக்கா தாக்கும் என எச்சரித்துள்ளார்.</p><p>

“ஈரான் ஒரு புதிய அணுசக்தி தளத்தை மீண்டும் அமைக்க முயற்சித்தால், அமெரிக்கா அந்தத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், ஈரான் தற்போது கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதால், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பேச்சுவார்த்தைக்கு வர விரும்புவதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்து வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
“அவர்கள் சந்திக்க மிகவும் விரும்புகின்றனர். ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர எப்படியாவது சந்திக்க விரும்புவதாக அவர்கள் கூறுகின்றனர்” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், ஈரான் தரப்பில் இருந்து இந்தக் கருத்துகள் தொடர்பான உடனடி பதில் எதுவும் வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-22T05:23:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை ; பிரான்ஸ் புதிய சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/france-s-new-law-bans-social-media-those-under-15-1784696506"></link>
            <id>https://canadamirror.com/article/france-s-new-law-bans-social-media-those-under-15-1784696506</id>
            <summary type="text">15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை பெரும்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை பெரும்பான்மை ஆதரவுடன் வாக்களித்துள்ளனர்.</p><p> இதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு இவ்வாறான வயது வரம்பை அறிமுகப்படுத்தும் முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
</p><p>
இந்த மசோதா, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் வலுவான ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் இந்தச் சட்டத்தில் கையெழுத்திட்ட பின்னர், அது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35607892-ae7f-48cd-82b1-3f7303ab9ff7/26-6a604ebc9c8e0.webp' /></p><p>வாக்கெடுப்புக்குப் பின்னர் சமூக ஊடகமான X தளத்தில் பதிவிட்ட மக்ரோன், “இந்தக் கல்வியாண்டு முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனநலம், பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.</p><p> சமூக ஊடக தளங்களின் பரிந்துரை முறைகள், சிறுவர்களை அதிக நேரம் இணையத்தில் ஈடுபடச் செய்வதுடன், சில சமயங்களில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களுக்கும் அவர்களை உட்படுத்துவதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

மத்திய கிழக்கு நாடுகளின் தாக்கங்கள், சமூக ஊடக நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் குழந்தைகள் மீதான டிஜிட்டல் தாக்கம் குறித்து உலகளவில் அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
</p><p>
இதேபோன்ற நடவடிக்கையை கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா மேற்கொண்டிருந்தது. அந்நாடு 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. </p><p>மேலும், பிரிட்டன், ஸ்பெயின், கிரீஸ் மற்றும் டென்மார்க் உள்ளிட்ட நாடுகளும் சிறுவர்களுக்கான சமூக ஊடக வயது வரம்புகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2243507a-361b-4dc8-b9af-029494075386/26-6a604ebbd141b.webp' /></p><p>

பிரான்சின் புதிய சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு, அந்நாட்டின் ஒலி-ஒளி மற்றும் டிஜிட்டல் தகவல்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ஆர்காமுக்கு வழங்கப்பட்டுள்ளது. </p><p>சமூக ஊடக நிறுவனங்கள் 15 வயதுக்குட்பட்ட பயனர்கள் கணக்குகளை உருவாக்குவதைத் தடுப்பதற்கான நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
எனினும், பயனர்களின் வயதை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது தொடர்பில் தொழில்நுட்ப சவால்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றன. வயது சரிபார்ப்பு நடைமுறைகள் தனியுரிமை மற்றும் இணைய அணுகல் உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகளும் சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதற்கு முன்னர், குழந்தைகளை பாதுகாப்பதற்காக இணைய ஆபாச உள்ளடக்கங்களை அணுகுவதற்கான வயது சரிபார்ப்பு நடைமுறைகளையும் பிரான்ஸ் அறிமுகப்படுத்தியிருந்தது.
</p><p>
பிரான்சில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், குறிப்பாக TikTok போன்ற தளங்களில் அதிக நேரம் செலவிடுவதாக ஆர்காம் அமைப்பு தெரிவித்துள்ளது. </p><p>பரிந்துரை அல்காரிதம்கள் மூலம் சிறுவர்கள் தொடர்ச்சியான மற்றும் சில நேரங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்களைப் பார்க்கும் நிலை உருவாகிறது எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
</p><p>
சமூக ஊடக நிறுவனங்கள், சிறுவர்களைப் பாதுகாக்க ஏற்கனவே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விதிகளுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். </p><p>குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு சமூக ஊடக நிறுவனங்களிடமும் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பேச்சுரிமை மற்றும் இணைய உள்ளடக்கங்களுக்கான அணுகல் தொடர்பான கவலைகளை முன்வைத்து பிரான்சில் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
</p><p>
சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உலகளாவிய விவாதங்களுக்கு மத்தியில், பிரான்சின் இந்த புதிய சட்டம் ஐரோப்பிய நாடுகளில் முக்கியமான முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-22T05:02:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்கள் எதிர்ப்பால் 3% வரியை திரும்பப்பெற்றது நேபாள அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-government-withdraws-3-tax-public-outcry-1784695911"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-government-withdraws-3-tax-public-outcry-1784695911</id>
            <summary type="text">தனியார் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மீது விதிக்கப்பட்டிருந்த 3 சதவீத வரியை, பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மீது விதிக்கப்பட்டிருந்த 3 சதவீத வரியை, பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து நேபாள அரசாங்கம் திரும்பப்பெற்றுள்ளது.
</p><p>
நாட்டின் வரி வரம்பை விரிவுபடுத்தவும், அரசின் வருவாயை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் என்ற நோக்கில் இந்த புதிய வரி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/127a0638-221c-4b0b-8c9c-5dca204253e1/26-6a604c6843651.webp' /></p><p>எனினும், இந்த நடவடிக்கை கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகளின் செலவை அதிகரிக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
</p><p>
இதையடுத்து, அரசின் முடிவை மறுபரிசீலனை செய்த நேபாள அரசு, குறித்த 3 சதவீத வரியை தற்போதைக்கு அமல்படுத்த வேண்டாம் என தீர்மானித்துள்ளது.
</p><p>
இது தொடர்பாக நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தனது சமூக ஊடகப் பதிவில், “நாட்டின் வரி வரம்பை விரிவுபடுத்தவும், பொருளாதாரத்தைச் சீரமைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. </p><p>இருப்பினும், மக்களின் உணர்வுகளுக்கும் கவலைகளுக்கும் அரசு உயர்ந்த முக்கியத்துவம் அளிக்கிறது. </p><p>அதன்படி, தனியார் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான 3 சதவீத வரியை தற்போதைக்கு அமல்படுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசின் இந்த அறிவிப்பு, வரிக்கு எதிர்ப்பு தெரிவித்த கல்வி நிறுவனங்கள், சுகாதாரத் துறை பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-22T04:52:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் மீண்டும் உயர்ந்த மசகு எண்ணெய் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/lubricant-prices-increase-again-1784694765"></link>
            <id>https://canadamirror.com/article/lubricant-prices-increase-again-1784694765</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.தற்போதைய நிலவரப்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 92 அமெரிக்க டொலருக்கும் அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.</p><p>தற்போதைய நிலவரப்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 92 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac170e2f-4344-4fe7-922a-284367d17db2/26-6a6047eea3fec.webp' /></p><p>

இதேவேளை WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 85 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது.</p><p>

மத்திய கிழக்கு நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களால் மசகு எண்ணெய் விலையில் இந்த திடீர் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-22T04:32:51+00:00</updated>
        </entry>
    </feed>
