<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-17T11:26:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலையில் பாலியல் தொழிலாளி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sex-worker-arrested-russian-commander-bomb-kills-1786963747"></link>
            <id>https://canadamirror.com/article/sex-worker-arrested-russian-commander-bomb-kills-1786963747</id>
            <summary type="text">&amp;nbsp; ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலையில் பாலியல் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


கடந்த 13-ம் தேதி அங்​குள்ள கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலையில் பாலியல் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


கடந்த 13-ம் தேதி அங்​குள்ள கடைக்கு அவர் சென்​றார். </p><p>வெளியே வந்​த​போது வாசலில் இருந்த குப்​பைத் தொட்டி வெடித்​துச் சிதறியதில் ராபர்ட் ஷகீவ் சம்பவ இடத்திலேயே உயி​ரிழந்​தார்.

இதுதொடர்​பாக சிசிடிவி கேம​ராக்​களின் பதிவு​களை ரஷ்ய போலீஸார் ஆய்வு செய்​தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e383aee-78f0-46b3-82db-0594e37c2166/26-6a82e7248f114.webp' /></p><p> </p><p>அப்​போது ரஷ்​யா​வின் சோச்சி பகுதி​யைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி மார்​கரிட்டா ராய்ட் (32), ஒரு காரில் இருந்து ரிமோட் கன்ட்​ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்​கச் செய்​திருப்​பது தெரிய​வந்​தது. </p><p>

 கைதான பாலியல் தொழிலாளி உக்​ரைன் ராணுவத்​தின் உளவாளி​யாக செயல்பட்​டிருப்​பது போலீஸ் வி​சா​ரணை​யில் உறு​தி செய்யப்பட்டு உள்​ளதாக கூறப்படுகின்றது.</p><p>

கடந்த 2014-ம் ஆண்​டில் உக்​ரைன் கடற்​படை நீர்​மூழ்கிக் கப்​பலின் கேப்​ட​னாக இருந்த ராபர்ட் ஷகீவ், ரஷ்ய ஆதரவாள​ராக மாறி​ய பின்னர் ரஷ்ய கடற்​படை​யின் மூத்த தளபதி​யாக நியமிக்​கப்​பட்​டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-17T10:46:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய படையெடுக்கும் அகதிகள்; படையினர் முறியடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/refugees-storming-into-spain-troops-repel-1786949858"></link>
            <id>https://canadamirror.com/article/refugees-storming-into-spain-troops-repel-1786949858</id>
            <summary type="text">ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய படையெடுக்கும் அகதிகள்; படையினர் முறியடிப்பு

 மொராக்கோ நாட்டின் எல்லை வழியாக நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய படையெடுக்கும் அகதிகள்; படையினர் முறியடிப்பு

 மொராக்கோ நாட்டின் எல்லை வழியாக நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்கள் ஒரே நேரத்தில் ஸ்பெயின் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

ஆப்பிரிக்க கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி நகரமான செவுட்டாவிற்குள் (Ceuta),அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்கள் ஊடுருவ முயன்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b71a6b-8150-4c2e-9aa7-335cea405b8e/26-6a82b0e3f17d3.webp' /></p><h2>முன்கூட்டியே உளவுத்துறை தகவல்கள்</h2><p> </p><p>

சமூக வலைதளங்கள் வாயிலாகத் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இந்தத் திரளான எல்லைக் கடக்கும் முயற்சியை, மொராக்கோ நாட்டுப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><p>

மொராக்கோவின் எல்லை நகரமான ஃபினிடெக் (Fnideq) பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு, ஸ்பெயின் எல்லையை நோக்கி முன்னேற முயன்றனர்.</p><p> இதனை முன்கூட்டியே உளவுத்துறை தகவல்கள் மூலம் அறிந்த மொராக்கோ காவல்துறையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர், ட்ரோன்கள் மற்றும் நவீன தடுப்புக் காவல்கள் மூலம் ஒட்டுமொத்தப் பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
</p><p>
முன்னதாக, ஜூலை மாத இறுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடல் வழியாக நீந்தியும், தடுப்புச் சுவர்களைக் கடந்தும் செவுட்டாவிற்குள் புகுந்த சம்பவம் பெரும் அரசியல் மற்றும் சமூக நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.</p><p> 

தொடர்ந்து, ஆகஸ்ட் 15-ஆம் தேதி மீண்டும் மாபெரும் அளவில் எல்லையை முற்றுகையிட்டு ஊடுருவுமாறு சமூக வலைதளங்களில் மர்மக் கணக்குகள் மூலம் பிரசாரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாட்டு எல்லைகளிலும் இராணுவ வீரர்களும் காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.</p><p>

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே ஆப்பிரிக்கப் நில எல்லையாகச் செயல்படும் செவுட்டா மற்றும் மெலில்லா பகுதிகள், சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முனையும் அகதிகளின் முதன்மை இலக்காக இருந்து வருகின்றன. </p><p>அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், சட்டவிரோதக் கடத்தல்களைத் தடுக்கவும் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ நாடுகள் இணைந்து எல்லைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-17T10:15:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வரிக் கொள்கை மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-needs-tax-reform-relieving-small-business-1786956630"></link>
            <id>https://canadamirror.com/article/canada-needs-tax-reform-relieving-small-business-1786956630</id>
            <summary type="text">கனடாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் வரிக் கொள்கை சீர்திருத்தங்களை ஒட்டாவா அரசு &quot;படிப்படியாக&quot; அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் சிறு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் வரிக் கொள்கை சீர்திருத்தங்களை ஒட்டாவா அரசு "படிப்படியாக" அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் சிறு வணிகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பிரதமர் மார்க் கார்னியின் வரவுசெலவுத் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேய்ன் லாங் தெரிவித்துள்ளார். </p><p>
கனடாவின் சிக்கலான வரி அமைப்பை எளிமையாக்கி, மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என பல வரி நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
</p><p>தற்போதைய வரி முறையின் விதிமுறைகள் அடுக்கடுக்காக அதிகரித்து, வணிகங்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சுமையாக மாறியுள்ளதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c391352-f9e4-4f27-9727-ee44885b8810/26-6a82cb57ee108.webp' /></p><p> </p><p>
கனடாவின் சிக்கலான வரி விதிகளால் சில முக்கிய சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குவதாகவும், இந்தத் தடைகளைக் குறைத்து முதலீடுகளை ஈர்ப்பதே அரசின் நோக்கம் என்றும் வேய்ன் லாங் குறிப்பிட்டார்.</p><p>
பிரதமர் மார்க் கார்னியின் தலைமையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இரண்டாவது இலையுதிர் கால வரவுசெலவுத் திட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் "இரண்டாம் கட்ட நடவடிக்கையாக" இருக்கும். 
கனடாவில் பெரிய அளவிலான வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.</p><p> தற்போதைய அரசு சிறு மாற்றங்களை மட்டுமே செய்து வருவதாகவும், பொருளாதாரத்தை முடக்கும் பழைய வரி முறையை முழுமையாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கன்சர்வேடிவ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.</p><p>
சிறு வணிகர்களுக்கான வரி விதிப்பு நடைமுறைகளை எளிமையாக்கி, அறிக்கை சமர்ப்பிக்கும் சுமையைக் குறைப்பதே அரசின் முதன்மை இலக்காக உள்ளது. </p><p>
அரசின் இந்த முடிவை கனடிய சுதந்திர வணிக கூட்டமைப்பு வரவேற்றுள்ள அதே வேளையில், நிஜமான மாற்றம் வரவுசெலவுத் திட்டத்தில் பிரதிபலித்தால் மட்டுமே சிறு வணிகர்கள் பலனடைவர் என்று சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T08:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க துருப்புகளின் தலைகளுக்கு ஈரான் வெகுமதி; ஆணுக்கு 30,000 , பெண்ணுக்கு 60,000 டொலர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-offers-a-reward-for-the-heads-of-us-troops-1786956673"></link>
            <id>https://canadamirror.com/article/iran-offers-a-reward-for-the-heads-of-us-troops-1786956673</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க வீரர்களைக் கொல்பவர்கள் அல்லது உயிருடன் பிடிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என ஈரானிய இராணுவத் தலைமைத் தளபதி அமீர் ஹதாமி அறிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்க வீரர்களைக் கொல்பவர்கள் அல்லது உயிருடன் பிடிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என ஈரானிய இராணுவத் தலைமைத் தளபதி அமீர் ஹதாமி அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


இதன்படி, அமெரிக்க வீரர் ஒருவரைக் கொல்லும் அல்லது பிடிக்கும் ஈரானிய ஆணுக்கு 30,000 டொலரும், பெண்ணுக்கு 60,000 டொலரும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84920704-5bbb-436d-ab9d-c687f6d3664b/26-6a82cb8322894.webp' /></p><h2>&nbsp;தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட&nbsp; ஆயுதத்திற்கு இருமடங்கு விலை&nbsp;</h2><p>
</p><p>


மேலும், அமெரிக்க வீரர் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அதன் மதிப்பை விட இருமடங்கு விலைக்கு அரசாங்கம் கொள்வனவு செய்து, அதற்குப் பதிலாக புதிய ஆயுதம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


அத்துடன், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள சிறப்பு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் என்றும் ஈரானிய இராணுவத் தலைமைத் தளபதி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>



அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T08:48:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாஞ்செஸ்டர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பயங்கர விபத்து ; நடுரோட்டில் பற்றி எரிந்த கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/m56-closed-after-crash-near-manchester-airport-1786949133"></link>
            <id>https://canadamirror.com/article/m56-closed-after-crash-near-manchester-airport-1786949133</id>
            <summary type="text">&amp;nbsp; இங்கிலாந்து மாஞ்செஸ்டர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள M56 அதிவேக நெடுஞ்சாலையில், இரண்டு கார்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர விபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இங்கிலாந்து மாஞ்செஸ்டர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள M56 அதிவேக நெடுஞ்சாலையில், இரண்டு கார்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. </p><p>இந்த விபத்தில் ஒரு கார் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில், மற்றொரு கார் நடுரோட்டிலேயே தீப்பற்றி எரியத் தொடங்கியதால் பெரும் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/288a1531-9afa-4b52-b510-ff9e1ebf3ba0/26-6a82ae0ec1e75.webp' /></p><p>
</p><p>
 தகவலறிந்த மாஞ்செஸ்டர் நகரக் காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர ஆம்புலன்ஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.</p><h2>விபத்துக்கான காரணம் குறித்துக்&nbsp; &nbsp;விசாரணை </h2><p> 

நடுரோட்டில் எாிந்து கொண்டிருந்த காரின் தீயை அணைக்கும் முயற்சிகளுடன், விபத்தில் சிக்கியவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணிகளையும் மீட்புக் குழுவினர் தீவிரமாக மேற்கொண்டனர்.</p><p>

இந்த பயங்கர விபத்து காரணமாக M56 நெடுஞ்சாலையின் முக்கியப் பகுதிகள் இருபுறமும் தற்காலிகமாக மூடப்பட்டன. 

இதனால் மாஞ்செஸ்டர் விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்ற பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.</p><p>

 விமானத்தைப் பிடிக்கச் செல்லும் பயணிகள் கூடுதல் நேரத்தைக் கணக்கில் கொண்டு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்தனர்.</p><p>

விபத்து நடந்த பகுதியில் சாலையில் சிந்திய எரிபொருள் மற்றும் சேதமடைந்த தடுப்புச் சுவர்களைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டன. </p><p>மீட்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நெடுஞ்சாலையில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுப் போக்குவரத்து மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. 

 விபத்துக்கான காரணம் குறித்துக் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-17T08:17:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்; மக்கள் அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/5-9-earthquake-strikes-indonesia-again-1786942656"></link>
            <id>https://canadamirror.com/article/5-9-earthquake-strikes-indonesia-again-1786942656</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5ef5754-a058-4fa5-857d-726e158c4988/26-6a8294c19df44.webp' /></p><h2>சேத விபரங்கள்&nbsp;வௌியாகவில்லை</h2><p> </p><p>

எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.</p><p> 

இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் ஏற்பட்டன. 

இதனால் 53 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பலரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. </p><p>

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் 9,200 இற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.</p><p> 

நிலநடுக்கத்தின் பின்னர் அந்நாட்டின் சுற்றுலாப் பகுதிகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், இந்தோனேசிய துறைமுக அதிகாரசபையினால் கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. </p><p>

இதற்கிடையில், நிலநடுக்கம் காரணமாக குறித்த மாகாணங்களில் மின்தடை ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது அதனை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-17T06:43:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பனிக்கரடியின் தூக்கத்தை கலைத்ததால் அபராதம்; கப்பல் உரிமையாளர் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/norway-fine-for-disturbing-a-polar-bear-s-sleep-1786948293"></link>
            <id>https://canadamirror.com/article/norway-fine-for-disturbing-a-polar-bear-s-sleep-1786948293</id>
            <summary type="text">&amp;nbsp; நோர்வேவுக்கு சொந்த மான தீவுக்கூடமான ஸ்வால்பார்ட் கடற்கரை பகுதி வழியாக சமீபத்தில் சுற்றுலாப்பயணியர் கப்பல் சென்றது. 

அப்போது கப்பலில் இருந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நோர்வேவுக்கு சொந்த மான தீவுக்கூடமான ஸ்வால்பார்ட் கடற்கரை பகுதி வழியாக சமீபத்தில் சுற்றுலாப்பயணியர் கப்பல் சென்றது. </p><p>

அப்போது கப்பலில் இருந்தவர்கள், கரையில் பனிக்கரடி ஒன்று ஓய்வெடுப்பதை கண்டனர். அவர்கள் அக்கரடி நகர்வதை பார்க்க விரும்பியதையடுத்து, கப்பல் உரிமையாளர் ஒருவர் மூடுபனியின் போது, எச்சரிக்கைக்காக ஒலிக்க செய்யும் கப்பலின் 'பாக் ஒலியை' ஒலிக்கச் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb2f2405-e2f1-4490-9f99-f7e9651d5b16/26-6a82aac72f7f3.webp' /></p><p>
</p><p>


இச்சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த கரடி அங்கிருந்து பயந்து ஓடியது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. </p><p>

ஸ்வால் பார்ட் கவர்னரான லார்ஸ் பவுஸ், பனிக்கரடிக்கு தொந்தரவு கொடுத்த கப்பல் உரிமையாளருக்கு, ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இந்த அபராதத்தால் கப்பல் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.
</p><p>


ஸ்வால்பார்ட் பகுதியின், 1972ம் ஆண்டு சுற்றுச்சூழல் சட்டத்தின்படி, பனிக்கரடியை தேவையற்ற முறையில் அல்லது தொந்தரவு செய்வது, துரத்துவது குற்றமாகும்</p>]]></content>
            <updated>2026-08-17T06:29:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலி சிசிலி தீவில் அபூர்வ ஓவியங்கள் திருட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rare-paintings-stolen-italian-island-of-sicily-1786945134"></link>
            <id>https://canadamirror.com/article/rare-paintings-stolen-italian-island-of-sicily-1786945134</id>
            <summary type="text">&amp;nbsp; இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன. </p><p>

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0514118-0d55-4433-bd59-d672d3dd311a/26-6a829e6f989e8.webp' /></p><p>

அருங்காட்சியகத்தில் பாதுகாவலர்கள் இருந்தபோதும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலார அமைப்புகளை முறியடித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பாதுகாக்கப்பட்ட கண்ணாடி பெட்டியை உடைத்து குறித்த 4 ஓவியங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.</p><p> 

தப்பியோடும் அவசரத்தில் 2 ஓவியங்களை அங்கேயே போட்டு விட்டுச் சென்றுள்ளனர். 

இந்த ஓவியங்களின் திருட்டு குறித்து இத்தாலி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-17T05:36:26+00:00</updated>
        </entry>
    </feed>
