<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-19T16:31:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B விசாவுக்கான கட்டணம் ; ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-extends-h-1b-visa-fee-for-one-year-1789803117"></link>
            <id>https://canadamirror.com/article/trump-extends-h-1b-visa-fee-for-one-year-1789803117</id>
            <summary type="text">H-1B குடியேறாதோர் விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு வரும் குறிப்பிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணத்தை மேலும் 12 மாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B குடியேறாதோர் விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு வரும் குறிப்பிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணத்தை மேலும் 12 மாதங்களுக்கு நீடிக்கும் உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். </p><p>



புதிய உத்தரவு 2026 செப்டம்பர் 21 முதல் அமுலுக்கு வந்து, 2027 செப்டம்பர் 21 வரை நீடிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/203fff20-97ed-4d9a-8b9e-91c8f26e0c75/26-6aae3a6f5456c.webp' /></p><p>



2025ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கட்டண விதி, அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் H-1B பணியாளர்களை உள்ளடக்கிய குறிப்பிட்ட புதிய மனுக்களுக்கு பொருந்துகின்றது. </p><p>



தேசிய நலன் கருதி விதிவிலக்குகளை வழங்கும் அதிகாரமும் உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>


H-1B திட்டத்தில் முறைகேடுகளைத் தடுப்பதும், அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதும் கட்டணத்தை நீட்டிப்பதற்கான காரணங்களாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>



அதேவேளை, புதிய நிர்வாக உத்தரவின் கீழ் H-1B விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது, தொடர்புடைய அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதா அல்லது எதிர்காலத்தில் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>



வெள்ளை மாளிகையின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டு கட்டண விதி அமுலுக்கு வந்ததிலிருந்து 700க்கும் மேற்பட்ட H-1B மனுக்களுக்கு 1 இலட்சம் டொலர் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>



H-1B விசா திட்டம் தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்புத் திறன் தேவைப்படும் துறைகளில் வெளிநாட்டு பணியாளர்களை தற்காலிகமாக அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கும் திட்டமாகும்.</p><p> 



இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T16:08:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் பொலிஸ் வளாகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்: உயிரிழப்பு 31 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pakistan-police-attack-death-toll-rises-to-31-1789824155"></link>
            <id>https://canadamirror.com/article/pakistan-police-attack-death-toll-rises-to-31-1789824155</id>
            <summary type="text">வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>


நேற்று வெள்ளிக்கிழமை (18) பொலிஸ் அதிகாரிகளும் அவர்களின் குடும்பத்தினரும் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த போது, வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட காரை இந்தத் தாக்குதலாளி பொலிஸ் வளாகத்தின் மீது மோதியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/384b4078-989b-4a1b-b45c-2a9f1647c510/26-6aae8c9ccd27a.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T13:23:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேற்கு யேமனில் ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாக பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rally-in-support-of-the-houthi-movement-1789820370"></link>
            <id>https://canadamirror.com/article/rally-in-support-of-the-houthi-movement-1789820370</id>
            <summary type="text">&amp;nbsp;மேற்கு யேமனில் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில், ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாகவும், சவுதி அரேபியாவுக்கு எதிராகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் யேமன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மேற்கு யேமனில் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில், ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாகவும், சவுதி அரேபியாவுக்கு எதிராகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் யேமன் தலைநகர் சணாவின் (Sanaa) வீதிகளில் திரண்டு பேரணி நடத்தினர்.
</p><p>
இந்த டையலை யேமனின் தென்மேற்கு பகுதியிலுள்ள தைஸ் மாகாணத்தின் அல்-வாசியா (Al-Waziiyah) மாவட்டத்தில் நடந்த கடுமையான மோதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 30 ஹூதி போராளிகள் கொல்லப்பட்டதாக யேமன் அரசுப்படைகள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06e16c4e-dd8c-478c-9d71-18256d73ee25/26-6aae7dd39f166.webp' /></p><p>

இந்தச் சண்டையில் 60க்கும் மேற்பட்ட ஹூதி அமைப்பினர் காயமடைந்துள்ளனர்.</p><p>

இதற்கிடையில் யேமன் அரசுப்படையினர் மற்றும் வான்படை, அல்-வாசியா மாவட்டத்தில் உள்ள ஹூதிகளின் வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் கூட்டங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக யேமன் ஆயுதப் படைகளின் ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T12:19:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய சட்டத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப் ; ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trouble-for-countries-buying-russian-oil-1789814671"></link>
            <id>https://canadamirror.com/article/trouble-for-countries-buying-russian-oil-1789814671</id>
            <summary type="text">ரஷ்யா மற்றும் ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய சட்ட மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மற்றும் ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய சட்ட மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். </p><p>இந்த சட்டம் மூலம் ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96ef82be-fe50-4b75-9439-1728b590a1f3/26-6aae6790d33e5.webp' /></p><p> ‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷியா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ என்ற இந்த சட்டத்தின் கீழ், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவில் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் இடம்பெற்றுள்ளதால், இந்த சட்டம் இந்தியாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. </p><p>எனினும், இந்திய பொருட்களுக்கு உடனடியாக 100 சதவீத வரி விதிக்கப்பட்டதாக அர்த்தமில்லை. அதற்கான அதிகாரம் டிரம்புக்கு வழங்கப்பட்டுள்ளது.


</p><p>
ரஷியாவின் எரிசக்தி துறைக்கு குறி
ரஷ்ய அதிகாரிகள், வங்கிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிரான தடைகளை விரிவுபடுத்துவதுடன், ரஷியாவின் எரிசக்தி வர்த்தகம் மற்றும் தடைகளைத் தவிர்க்க உதவும் கப்பல் அமைப்புகளுக்கும் இந்த சட்டம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். </p><p>மேலும், ஈரான் மீது ஏற்கனவே உள்ள தடைகளையும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் சட்டத்தில் விதிகள் இடம்பெற்றுள்ளன. </p><p>ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிப்பதன் மூலம், அந்த நாடுகள் ரஷிய எரிசக்தியை வாங்குவதை குறைக்கச் செய்வதும், உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரித்து போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலும் இத்தகைய சட்டங்களை நிறைவேற்றி வருவதாக டிரம்ப் நிர்வாகம் கூறி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-19T10:44:40+00:00</updated>
        </entry>
    </feed>
