<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-05T16:45:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பிற்காக இஸ்ரேல் எதையும் செய்யும் – நெதன்யாகு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-is-great-friend-says-netanyahu-1785947246"></link>
            <id>https://canadamirror.com/article/trump-is-great-friend-says-netanyahu-1785947246</id>
            <summary type="text">ஒப்பந்தங்கள் எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேல் &quot;தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்&quot; என அந்நாட்டுப் பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒப்பந்தங்கள் எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேல் "தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுக்குக் கிடைத்த மிகச்சிறந்த நண்பர் என நெதன்யாகு புகழாரம் சூட்டியுள்ளார்.
</p><p>எனினும் இஸ்ரேலின் இருப்பு மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bdfa1bd-6364-4e11-88b4-414b10e65d01/26-6a736474e9e59.webp' /></p><p>நவீன சீயோனிச அமைப்பின் நிறுவனரான தியோடோர் ஹெர்ஸலின் தாத்தா மற்றும் பாட்டியான ஷிமோன் மற்றும் ரிவ்கா ஹெர்ஸலின் உடல்கள் ஜெருசலேமிலுள்ள ஹெர்ஸல் மலையில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்ட அரசு சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நெதன்யாகு இதனைத் தெரிவித்தார்.</p><p>
இத்தாலியின் ரோம் நகரில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கிடையே "கட்டமைப்பு ஒப்பந்தம்" குறித்த பேச்சுவார்த்தைகள் தொடரும் சூழலிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை நடத்தி வரும் பின்னணியில் நெதன்யாகுவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T16:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் லவாலில் கோர வீதி விபத்து: இரு பதின்ம வயதினர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/2-teens-dead-1-in-hospital-after-car-crash-1785938993"></link>
            <id>https://canadamirror.com/article/2-teens-dead-1-in-hospital-after-car-crash-1785938993</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள லவால் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரு பதின்ம வயதினர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள லவால் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரு பதின்ம வயதினர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>
அதிகாலை 1:20 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பதிவு இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்றைக் கண்டு அதை நிறுத்துமாறு சமிக்ஞை கொடுத்துள்ளனர். </p><p>
பொலிஸார் வாகனத்தை நிறுத்த முயன்றதும், அது வேகத்தை அதிகரித்துத் தப்பிச் சென்றது. எனினும் பொலிஸார் வாகனத்தைத் துரத்திச் செல்லவில்லை" என லவால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் லோரண்ட் ஆர்செனோ தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dd87e84-5eae-4ece-8c1d-a03c3419b017/26-6a73443308879.webp' /></p><p> </p><p>
தப்பிச் சென்ற கார், சில நிமிடங்களில் லோரண்டைட்ஸ் புலேவார்ட்டில் அமைந்துள்ள 'அட்லாண்டிஸ் ஜிம்' கட்டடத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. </p><p>
வாகனத்தைச் செலுத்திய ஆண் ஓட்டுநரும், அதில் பயணித்த 19 வயது இளம் பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். </p><p>மேலும், வாகனத்திலிருந்த மற்றொரு 19 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். </p><p>
வாகனத்தில் உரிமத் தகடு இல்லை என்பதும், காரின் அதிகப்படியான வேகமே விபத்துக்கு முக்கியக் காரணம் என்பதும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>
விபத்தைத் தொடர்ந்து, செயிண்ட்-மார்ட்டின் புலேவார்ட் மற்றும் ரிச்சர்ட் தெரு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட லோரண்டைட்ஸ் புலேவார்ட் பகுதி முழுமையாக மூடப்பட்டு, பொலிஸார் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தித் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T16:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/more-than-100-structures-lost-in-bcs-pear-lake-1785938452"></link>
            <id>https://canadamirror.com/article/more-than-100-structures-lost-in-bcs-pear-lake-1785938452</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்கு உள் பகுதியில் வேகமாகப் பரவி வரும் &#039;பியர் லேக்&#039; காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விரைவு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்கு உள் பகுதியில் வேகமாகப் பரவி வரும் 'பியர் லேக்' காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விரைவு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>
இதில் வீடுகளை இழந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாகத் தகவல்கள் தெரிவிக்கப்படவுள்ளன. </p><p>
தோம்ப்சன் நிகோலா பிராந்திய மாவட்டம் வழங்கிய தகவலின்படி, சுமார் 1,100 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ள இந்த பிரம்மாண்ட காட்டுத்தீயினால், அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட சுமார் 120 சொத்துக்களிலுள்ள கட்டடங்கள் முற்றிலுமாக அழிந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e7af40b-cb55-4b2d-b86b-d89ad0638a6d/26-6a734215ebd73.webp' /></p><p> </p><p>
பிக் பார் லேக், சாசம், கிளண்டன் பகுதியின் தெற்கே அமைந்துள்ள நெடுஞ்சாலை 97 மற்றும் கெல்லி லேக் வீதி ஆகியவற்றில் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.</p><p> 
பாதிக்கப்பட்ட 120 சொத்துக்களில் பெரும்பாலானவை குடியிருப்பு வீடுகளாகும். சில இடங்களில் முதன்மை வீடுகள் தப்பியிருந்தாலும், அவற்றின் கேரேஜ்கள், கொட்டகைகள் மற்றும் ஏனைய வெளிப்புறக் கட்டடங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. </p><p>
இந்த கணக்கெடுப்பில் தோம்ப்சன் நிகோலா பிராந்திய மாவட்டத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே உள்ள கிளண்டன் நகர்ப்பகுதிச் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை. </p><p>காட்டுத்தீயினால் மேலும் பல கட்டடங்கள் சேதமடைந்திருக்கலாம் என நாங்கள் நம்பும் அனைத்து பகுதிகளுக்கும் இன்னும் எங்களால் செல்ல முடியவில்லை என தோம்ப்சன் நிகோலா பிராந்திய மாவட்டத்தின் தகவல் அதிகாரி கோல்டன் டேவிஸ்தெரிவித்துள்ளார்.</p><p>எதிர்வரும் நாட்களில் பாதுகாப்பு நிலைமைகள் சரியாகும் போது, முழுமையான சேத மதிப்பீட்டை மேற்கொண்டு தெளிவான தகவலக்ள பெறத் திட்டமிட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
வார இறுதியில் வீசிய பலத்த காற்றினால் காட்டுத்தீயின் வீரியம் அதிகரித்திருந்த போதிலும், தற்போது வானிலை சற்றே சீரடைந்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T16:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் மல்மூரில் இடம்பெற்ற வீதி விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/motorcyclist-dead-following-collision-in-mulmur-1785937545"></link>
            <id>https://canadamirror.com/article/motorcyclist-dead-following-collision-in-mulmur-1785937545</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள மல்மூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள மல்மூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>
ஹைவே 89 மற்றும் 3ஆவது வீதி சந்திப்பில் இரு வாகனங்கள் மோதிக்கொண்டதாகப் பிற்பகல் 2:30 மணியளவில் அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. </p><p>
குறித்த சந்திப்பில் மோட்டார் சைக்கிள் ஒன்று பயணிகள் காரொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/618588ac-fa12-4f6b-8f40-4f9ad1ac6631/26-6a733e8af09fd.webp' /></p><p> 
வெலிங்டன் நோர்த் பகுதியைச் சேர்ந்த 63 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>
காரில் பயணித்த ஓட்டுநரும் பயணியும் லேசான காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.</p><p>
தற்போது வரை விபத்துக்கான காரணம் குறித்தோ அல்லது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்தோ பொலிஸார் எந்தத் தகவலும் வெளியிடவில்லை. </p><p>சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T15:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 நாட்கள் கடலில் உணவு மற்றும் தண்ணீரின்றி 17 அகதிகள் உயிரிழந்த அவலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/17-refugees-ship-sea-15-days-without-food-spain-1785932411"></link>
            <id>https://canadamirror.com/article/17-refugees-ship-sea-15-days-without-food-spain-1785932411</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு சென்றுகொண்டிருந்த படகு நடுவழியில் பழுதானதில் அதிலிருந்த 17 அகதிகள் 15 நாட்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு சென்றுகொண்டிருந்த படகு நடுவழியில் பழுதானதில் அதிலிருந்த 17 அகதிகள் 15 நாட்கள் கடலில் உணவு மற்றும் தண்ணீரின்றி தத்தளித்து உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. </p><p>

ஸ்பெயின் செய்தி நிறுவனம் நேற்று (04) வெளியிட்டுள்ள செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்பெயினின் மல்லோர்கா தீவுக்கு தென்மேற்கே 12.7 நாட்டிக்கல் மைல் தொலைவில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் படகு ஒன்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரை ஸ்பெயின் கடற்படை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9335bca7-9965-4efc-bde5-08ccac2a5ecf/26-6a732a7d11956.webp' /></p><h2>ஹெலிகாப்டர் மூலம்&nbsp; தீவிர தேடுதல்&nbsp;</h2><p> </p><p>

தாங்கள் பயணித்த படகில் மொத்தம் 19 பேர் இருந்ததாகவும், இன்ஜின் பழுதாகி 15 நாட்களாகக் கடலில் தத்தளித்ததால் உணவு மற்றும் தண்ணீரின்றி மற்ற 17 பேரும் இறந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.</p><p> 

இந்நிலையில் ஸ்பெயினின் இபிஸா தீவுக்கு தென்மேற்கே 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் 15 வட ஆப்பிரிக்க அகதிகளுடன் வந்த மற்றொரு படகை மீட்புக் குழுவினர் மீட்டனர். 

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 3,935 அகதிகளுடன் 211 படகுகள்ஸ் பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.</p><p> 

ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்பிரிக்க எல்லைப் பகுதியான செவுடாவில் அகதிகள் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. 

கடந்த வாரம் மொராக்கோவில் இருந்து சுமார் 72,000 அகதிகள் செவுடாவிற்குள் நுழைந்தனர்.</p><p> 

இதில் இதுவரை 70,000 பேர் செவுடாவிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், எல்லையைக் கடக்கும் முயற்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. 

மனித கடத்தல் கும்பல்களின் சட்டவிரோத நடவடிக்கைகளே இந்த மனித உரிமை நெருக்கடிக்குக் காரணம் என ஸ்பெயின் அரசு குற்றம்சாட்டியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-05T13:29:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயில் 20 நிமிடங்களில் 7 இடங்களில் சக்திவாய்ந்த தாக்குதல் ; அதிரும் மத்திய கிழக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/7-blast-within-20-minutes-in-dubai-1785935592"></link>
            <id>https://canadamirror.com/article/7-blast-within-20-minutes-in-dubai-1785935592</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;டுபாயின் ஜெபல் அலி துறைமுகப் பகுதியில் 20 நிமிடங்களில் 7 இடங்களில் சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;டுபாயின் ஜெபல் அலி துறைமுகப் பகுதியில் 20 நிமிடங்களில் 7 இடங்களில் சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. 


தாக்கப்பட்ட இடங்களில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது. </p><p>20 நிமிட இடைவேளையில் 7 முறை வெடிச்சத்தம் கேட்டதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த வெடிச்சம்பவம் குறித்தோ, இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியோ அதிகாரிகள் எந்தத் தகவலும் அளிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18b20023-a580-4cd1-8c51-ebab27ab7a6e/26-6a7336e9cb165.webp' /></p><p>
</p><p>
அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. ஈரான் சார்பில் அதன் கூட்டாளி அமைப்பான ஏமன் ஹவுதி அமைப்பினருக்கும், வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
</p><p>

இந் நிலையில் டுபாய் துறைமுகமான ஜெபல் அலி மற்றும் தொழில் மண்டலப் பகுதியில் இன்று அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


ஏமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் தான் இதற்கு காரணம் என்று ஈராக் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.</p><p> 

இருப்பினும், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேபோல, ஏமனின் தலைநகரான சனாவிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>


அதேவேளை இந்த தாக்குதலில் , துறைமுகத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகக் கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை நாசாவின் போட்டோக்கள் காட்டுவதாக ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-05T13:29:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பைக்குள் ஒரு மில்லியன் யூரோ ஜாக்பாட் பரிசு; சம்பவத்தால் நெகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/garbage-workers-help-woman-find-1-million-jackpot-1785907270"></link>
            <id>https://canadamirror.com/article/garbage-workers-help-woman-find-1-million-jackpot-1785907270</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இத்தாலியின் பிட்டோன்டோ நகரில், குப்பைத் தொழிலாளர்கள் €1 மில்லியன் ($1.15 மில்லியன்) மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டை மீட்டெடுத்து உரியவரிடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இத்தாலியின் பிட்டோன்டோ நகரில், குப்பைத் தொழிலாளர்கள் €1 மில்லியன் ($1.15 மில்லியன்) மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டை மீட்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த&nbsp; சம்பவம்&nbsp; நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பரிசை வென்று அதை இழந்த பெண்ணிடமிருந்து டோஸ்கானோவுக்குப் பதற்றமான அழைப்பு வந்தது.

பெயர் குறிப்பிடப்படாத அந்தப் பெண் சனிக்கிழமை லாட்டரியில் பங்கேற்றார் , ஞாயிற்றுக்கிழமை அன்று தனது உள்ளூர் கடைக்குச் சென்று டிக்கெட்டின் முடிவைச் சரிபார்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0da4a5ef-3f20-4ab0-ac72-67033c075b9b/26-6a72c847b6ec0.webp' /></p><h2>&nbsp;குப்பைகளை சல்லடை போட்டுத் தேடிய&nbsp; குப்பைத் தொழிலாளர்கள்</h2><p>
</p><p>

ஆனால் அந்த இயந்திரம், பரிசுத்தொகை வழங்கப்படாது என்று காட்டியது. அந்தப் பரிசுத்தொகை சிறிய சில்லறை விற்பனையாளரால் பெற முடியாத அளவுக்குப் பெரியது என்பதைக் குறிக்கும் ஒரு பொதுவான செய்தி அது. அவள், எந்தப் பரிசுத்தொகையும் வரவில்லை என்று அந்தச் செய்தியைத் தவறாகப் புரிந்துகொண்டார்.</p><p>

வெற்றியாளர் எப்போதும் ஒரே எண்களையே விளையாடுவார், ஏனெனில் அவை தங்களுக்குப் பிரியமான ஒருவருடன் தொடர்புடையவை," என்று டோஸ்கானோ கூறினார். 

இத்தாலிய செய்தித்தாளான கொரியர் டெல்லா சேராவின்படி , அந்தப் பெண்ணின் வெற்றி பெற்ற எண் சேர்க்கை 2, 4, 8, 10 மற்றும் 51 ஆகும்.</p><p> 

அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர் ஒருவர், அதுவே வெற்றி பெற்ற எண் சேர்க்கை என்பதைக் கவனித்து அவரிடம் தெரிவித்தார்,</p><p> ஆனால் அவர் அதற்குள் அந்தச் சீட்டை அப்புறப்படுத்தியிருந்தார்.

அவர்கள் கடைக்குத் திரும்பி வருவதற்குள், அவளுடைய டிக்கெட் இருந்த குப்பைத் தொட்டியை ஒரு குப்பை லாரி ஏற்கனவே எடுத்துச் சென்றிருந்தது.
</p><p>
அந்தப் பெண் SANB-ஐத் தொடர்பு கொண்ட பிறகு, குப்பை நிறுவனம் அந்தச் சீட்டின் பயணப் பாதையை மீண்டும் உருவாக்க விரைந்து செயல்பட்டது என்று டோஸ்கானோ கூறினார். அவர்களால் சரியான லாரியை அடையாளம் கண்டு அதை நிறுத்த முடிந்தது.

சேகரிக்கப்பட்ட குப்பைகளை சல்லடை போட்டுத் தேடினால், அதில் அபாயகரமான பொருட்கள் இருப்பதற்கான ஆபத்து உள்ளது. </p><p>எனவே, தேடுதல் பணிக்காக பிரத்யேக வசதிகள் கொண்ட ஒரு சிறப்பு இடத்திற்கு அந்த வாகனம் கொண்டு செல்லப்பட்டதாக டோஸ்கானோ கூறினார். 

ஒரு நாள் முழுவதும் தேடிய பின்னரே அந்த டிக்கெட்டைக் கண்டுபிடித்ததாக டோஸ்கானோ கொரியர் டெல்லா செராவிடம் தெரிவித்தார்.
</p><p>
தொலைபேசி மூலம் பயணச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்தபோது அந்தப் பெண் அழுததாக டோஸ்கானோ கூறினார். 

 தொழில்முறை, ஒழுங்கமைப்பு மற்றும் பெரும் அதிர்ஷ்டம் ஆகியவையே அந்தத் தருணத்தை நிகழ்த்தின என்றும், குப்பை அகற்றும் பணியாளர்கள் இல்லாமல் இந்த சாத்தியமற்ற முடிவு ஏற்பட்டிருக்க முடியாது என்றும் அவர் அந்தப் பத்திரிகையிடம் கூறினார் </p><p>.

SANB ஒரு பொது நிறுவனம் என்பதால், சோதனைக்கான செலவை வரி செலுத்துவோர் ஏற்க வேண்டும் ஆனால் கூடுதல் செலவுகள் அனைத்தையும் ஏற்பதாக அந்தப் பெண் உறுதியளித்ததாக கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-05T12:18:54+00:00</updated>
        </entry>
    </feed>
