<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-09-09T00:17:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 மணி நேரம் பணயக்கைதி ; உயிர் தப்பிய சிறுமியின் வாழ்க்கைப் போராட்டம் 40 ஆண்டுகளுக்குப் பின் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/life-struggle-girl-who-survived-viral-40-years-1788911108"></link>
            <id>https://canadamirror.com/article/life-struggle-girl-who-survived-viral-40-years-1788911108</id>
            <summary type="text">1986ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி, விடுமுறைக்காக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தனியாகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, தாம் பயணித்த Pan Am 73 வான...</summary>
            <content type="html"><![CDATA[<p>1986ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி, விடுமுறைக்காக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தனியாகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, தாம் பயணித்த Pan Am 73 வானூர்தி கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கடத்தலுக்குப் பின்னர் பயணிகள் சுமார் 16 மணி நேரம் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தின்போது பயணிகள் வானூர்தியின் நடுப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b389c2d3-f37d-4be9-aee0-d2a6ba9eeaab/26-6aa09e05809c6.webp' /></p><p>

இந்த கொடூரமான சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வானூர்தி கடத்தப்பட்டிருந்த நிலையில், அவசரகால வெளியேறும் கதவு வழியாக தாம் தப்பியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.</p><p> வானூர்தியின் இறக்கையில் நின்றிருந்த தமக்கு பணிப்பெண் ஒருவர் உதவி செய்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வழிவகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எனினும், அந்தப் பயங்கரமான அனுபவம் தனது வாழ்க்கையை முடக்குவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன் ஒரு பகுதியாக, கரீபியன் கடலில் ஆழ்கடல் நீச்சல், சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு உள்ளிட்ட பல்வேறு சாகசப் பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தனது Instagram பக்கத்தில் காணொளி ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார்.</p><p>

“குணமடைதல் என்பது நடந்ததை மறந்துவிடுவது அல்ல. நாம் வாழத் தொடங்குவதற்கு முன்பே குணமடைய வேண்டும் என்ற அவசியம் இல்லை; நாம் வாழ்வதன் மூலமே குணமடைதல் இடம்பெறுகிறது” என்ற கருத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.</p><p>

அவரது இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
கடுமையான அனுபவத்தை எதிர்கொண்ட போதிலும், வாழ்க்கையை தைரியத்துடனும் மனவலிமையுடனும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் அவரது முயற்சிக்கு சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T23:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பாரிய விபத்து: 4 இளைஞர்கள் பரிதாப பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271"></link>
            <id>https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271</id>
            <summary type="text">கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கிம்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
நெடுஞ்சாலை 229-ல் மேற்காகப் பயணித்த கார் ஒன்று, நெடுஞ்சாலை 8-ஐக் கடக்க முயன்றபோது, தெற்கு நோக்கி வந்த வேன் ஒன்றுடன் பலமாக மோதியது. </p><p>
இந்தச் சந்திப்பில் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு 'நிற்குமாறு' எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ca2f6d9-f1b1-4749-b10f-db90748128a8/26-6aa03d0187a1d.webp' /></p><p> 
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வீதியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டன. </p><p>அதில் ஒரு வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்தது. 
மேற்கு நோக்கிச் சென்ற காரில் பயணித்த 4 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். </p><p>
காரை ஓட்டிவந்த வின்னிபெக்கைச் சேர்ந்த 18 வயது பெண், கிம்லியைச் சேர்ந்த 18 வயது இளைஞர், சேண்டி ஹூக்கைச் சேர்ந்த 18 வயது பெண் மற்றும் ஒன்டாரியோவின் இயர் ஃபால்ஸைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>வேனில் பயணித்த வின்னிபெக்கைச் சேர்ந்த 49 வயது ஓட்டுநர், ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள் என 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வின்னிபெக் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
</p><p>இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T22:54:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் து நோர் நிலையத்தில் தொடருந்து சேவைகள் ஸ்தம்பிதம் ; பல மணிநேர தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/train-services-at-gare-du-nord-station-paralyzed-1788896772"></link>
            <id>https://canadamirror.com/article/train-services-at-gare-du-nord-station-paralyzed-1788896772</id>
            <summary type="text">ஐரோப்பாவின் பாரிஸ் &#039;கார் து நோர்&#039; (Gare du Nord) தொடருந்து நிலையத்தில் நபரொருவர் மீது தொடருந்து மோதிய விபத்துக்குள்ளானதில் சேவைகள் இரத்து செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவின் பாரிஸ் 'கார் து நோர்' (Gare du Nord) தொடருந்து நிலையத்தில் நபரொருவர் மீது தொடருந்து மோதிய விபத்துக்குள்ளானதில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பல மணிநேர தாமதமாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>தொடருந்து நிலையத்துக்கும் அராஸ் (Arras) பகுதிக்கும் இடையில் இன்று (08) காலை இடம்பெற்ற நபர் ஒருவருடன் தொடர்புடைய தொடருந்து விபத்து காரணமாக, பிரதான தொடருந்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
நபர் ஒருவர் மீது தொடருந்து மோதியதையடுத்து, சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cbfd57e-c9ca-47ce-a71a-e34f9ce0c4e2/26-6aa0660687f5e.webp' /></p><p>இதன் காரணமாக இரு திசைகளிலும் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன், பல சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

விபத்து இடம்பெற்ற இடத்தில் தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக பிரெஞ்சுத் தேசிய தொடருந்து நிறுவனமான SNCF தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் விளைவாக கார் து நோர் தொடருந்து நிலையத்தில் பெரும் பயணிகள் நெரிசலும் குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>நிலையத்தின் தகவல் பலகைகளில் பல தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பல சேவைகளுக்கு நீண்ட நேர தாமதம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக, இப்பகுதியில் இயங்கும் TGV INOUI, OUIGO மற்றும் Eurostar ஆகிய அதிவேக தொடருந்து சேவைகளின் வருகை மற்றும் புறப்பாடுகளில் சுமார் நான்கு மணி நேரம் வரை தாமதம் ஏற்படக்கூடும் என பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7704eb71-4f67-4fd6-aab7-c7a591d13549/26-6aa06605d3b49.webp' /></p><p>மேலும், தொடருந்துகள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், சில பயணங்களின் மொத்த நேரம் வழக்கத்தைவிட அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால் கார் து நோர் நிலையத்திலிருந்து பயணிக்கவுள்ள பயணிகள் தங்களது தொடருந்து சேவைகளின் தற்போதைய நிலை மற்றும் புறப்படும் நேரம் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
விபத்து தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே தொடருந்து சேவைகள் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-08T19:46:23+00:00</updated>
        </entry>
    </feed>
