<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-26T13:18:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிடோபாவில் 19 மாத தீவிர சோதனை: 15 பேர் மீது வழக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/15-arrested-drugs-and-guns-seized-manitoba-1787748133"></link>
            <id>https://canadamirror.com/article/15-arrested-drugs-and-guns-seized-manitoba-1787748133</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் மனிடோபா மாகாணத்தில் சுமார் 19 மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, பெருமளவிலான சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் மனிடோபா மாகாணத்தில் சுமார் 19 மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, பெருமளவிலான சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.</p><p>
'புராஜெக்ட் டோலர்' எனப் பெயரிடப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கையை ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் மற்றும் விங்க்ளர் பொலிஸ் பிரிவு இணைந்து மேற்கொண்டன. </p><p>இது தொடர்பான விவரங்கள் ஆகஸ்ட் 25, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3167ee54-8d7d-4997-a08b-6a674c77231a/26-6a8edf273d1fc.webp' /></p><p>
கார்மன், விங்க்ளர், வின்னிபெக், மோர்டன் உள்ளிட்ட 10 நகரங்களைச் சேர்ந்த 15 பேர் மீது போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் தொடர்பாக மொத்தம் 67 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>இவர்களில் கார்மன் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது மட்டுமே 29 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>இவர் கடந்த பெப்ரவரி மாதம் காரில் கொகைன் மற்றும் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>கடந்த 2024 டிசம்பர் மாதம், உள்ளூர் வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு பல கிலோகிராம் கொகைன் கடத்தப்பட்டதை விங்க்ளர் பொலிஸார் கண்டறிந்தனர்.</p><p> அதன்பின்னரே பொலிஸாரின் உதவியுடன் இந்த பிரம்மாண்ட கூட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
</p><p>சட்டவிரோத போதைப்பொருட்களையும் ஆயுதங்களையும் அகற்றுவதையே ஒரே இலக்காகக் கொண்டு அனைத்துக் குழுக்களும் இணைந்து மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T12:40:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு பதிலடி: 700 பொருட்களுக்கு வரி விதித்த கனடா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-hits-us-imposes-tariffs-on-700-products-1787732836"></link>
            <id>https://canadamirror.com/article/canada-hits-us-imposes-tariffs-on-700-products-1787732836</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரிக்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரிக்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்க கனடா தீர்மானித்துள்ளது.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில், அமெரிக்கா திடீரென கனடா மீது 50 சதவீத வரியை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4623198e-4434-4fa9-bc67-89cf7ef3be6f/26-6a8ea36652568.webp' /></p><h2>அமெரிக்கா – கனடா உறவில் மேலும் விரிசல்&nbsp;</h2><p> இதனால் ஏற்கனவே பதற்றமடைந்திருந்த அமெரிக்கா – கனடா உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கடுமையான நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
</p><p>
இந்த வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வு காணவும், அமெரிக்கா விதித்துள்ள வரியை தவிர்ப்பது தொடர்பிலும் வொஷிங்டனில் இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. </p><p>எனினும், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதனையடுத்து, கனடா மீது 50 சதவீத சுங்கவரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். </p><p>அத்துடன், கனடா தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
</p><p>
இந்த புதிய வரி நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவுடன் முன்னர் காணப்பட்ட உறவு மீண்டும் அதே நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என கனடா பிரதமர் மார்க் கார்னி முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் நீண்டகாலமாக நெருக்கமான வர்த்தக உறவுகளை கொண்டுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக மோதல் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-26T12:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயர் அரேபியா விமானச் சக்கரத்தில் இருந்த சடலம் ; விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/body-found-in-airplane-wheel-inquest-underway-1787730612"></link>
            <id>https://canadamirror.com/article/body-found-in-airplane-wheel-inquest-underway-1787730612</id>
            <summary type="text">லண்டன் கேட்விக் (Gatwick) விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஒன்றின் சக்கரப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டன் கேட்விக் (Gatwick) விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஒன்றின் சக்கரப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>

கடந்த ஜூன் 16ஆம் திகதி மொராக்கோவின் டான்ஜியர் (Tangier) நகரிலிருந்து கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்த ‘எயர் அரேபியா’ (Air Arabia) விமானத்தின் லேண்டிங் கியர் பகுதியில் குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/033bd060-586d-4a56-8ce5-11f954c3e2e9/26-6a8e9ab5bd5d2.webp' /></p><p>விமானத்தை பரிசோதித்துக் கொண்டிருந்த தரைக்கட்டுப்பாட்டு பொறியாளர் ஒருவர் சடலத்தை கண்டுபிடித்ததையடுத்து, குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>

இந்நிலையில், ஹார்ஷாம் (Horsham) மரண விசாரணை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த மரணம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

அப்பகுதியின் மரண விசாரணை அதிகாரி ஜோசப் டர்னர் (Joseph Turner) முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
</p><p>
அதன்படி, ஹைபோக்சியா (Hypoxia – உடலுக்கு போதியளவு ஒட்சிசன் கிடைக்காத நிலை), ஹைபோதெர்மியா (Hypothermia – உடல் வெப்பநிலை கடுமையாகக் குறைதல்) மற்றும் மாரடைப்பு ஆகியவை மரணத்திற்கான முக்கிய காரணிகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விமானத்தின் சக்கரப் பகுதி பயணத்தின் போது கடுமையான குளிர் மற்றும் குறைந்தளவிலான ஒட்சிசன் கொண்ட சூழலாக இருந்திருக்கலாம் என மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், குறித்த மரணம் இயற்கையான முறையில் ஏற்பட்டதாகக் கருத முடியாததற்கான போதுமான காரணங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T11:10:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/8-killed-in-flash-floods-in-nepal-1787739047"></link>
            <id>https://canadamirror.com/article/8-killed-in-flash-floods-in-nepal-1787739047</id>
            <summary type="text">நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.&amp;nbsp;மேகவெடிப்பு காரணமாக நே...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.&nbsp;மேகவெடிப்பு காரணமாக நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>இதனால், கிராமத்திற்குள் புகுந்த வெள்ள நீரால் வீடுகள் அடியோடு அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36364756-c637-4b0d-ab4f-08ad88df2eb9/26-6a8ebbd9c6e1a.webp' /></p><p>இதில், ஏராளமான பொதுமக்களும் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.தொடர்ந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளான சியாப்ரு மற்றும் திமுரே ஆகிய இடங்களில் மீட்பு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாததால், மீட்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
</p><p>

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், கரையோரம் வசிப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பிரதமர் பாலேந்திர ஷா அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>

மேலும், நேபாளத்தை கடந்து திபெத்தில் உள்ள கியிரோங் பகுதியில் பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பலர் காணாமல் போனதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T10:12:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிரோசாகி கோட்டையை கயிறு கட்டி இழுத்து நகர்த்திய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/people-who-pulled-hirosaki-castle-with-ropes-japan-1787736443"></link>
            <id>https://canadamirror.com/article/people-who-pulled-hirosaki-castle-with-ropes-japan-1787736443</id>
            <summary type="text">ஜப்பானில் சுமார் 360 டன் எடை கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிரோசாகி கோட்டையை, சுமார் 1,800 பேர் ஒன்றிணைந்து கயிற்றால் இழுத்து 2 மீட்டருக்கும் அதிகமான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் சுமார் 360 டன் எடை கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிரோசாகி கோட்டையை, சுமார் 1,800 பேர் ஒன்றிணைந்து கயிற்றால் இழுத்து 2 மீட்டருக்கும் அதிகமான தூரம் வெற்றிகரமாக நகர்த்திய அரிய நிகழ்வு உலகளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஹிரோசாகி கோட்டையின் அடிப்பகுதியில் இருந்த கல் சுவர்கள் பலத்த சேதமடைந்தன. </p><p>இதையடுத்து, அந்தச் சுவர்களைச் சீரமைக்கும் பணிக்காக, கடந்த 2015-ம் ஆண்டு கோட்டையை இடிக்காமல் அப்படியே பாதுகாப்பாக 78 மீட்டர் தூரத்திற்கு தற்காலிகமாக நகர்த்தி வைத்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/752891a1-013a-455e-bbf4-cf8347865aae/26-6a8eb17d047ba.webp' /></p><p>தற்போது, கோட்டையின் அடிப்பகுதி கல் சுவர்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோட்டையை மீண்டும் அதன் பழைய இடத்திற்குக் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கியுள்ளன.
</p><p>
இதற்காக, பிரம்மாண்டமான கட்டிடங்களை இடிக்காமல் அப்படியே நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஜப்பானின் பாரம்பரிய தொழில்நுட்பமான ‘ஹிக்கியா’ முறை பயன்படுத்தப்பட்டது. </p><p>கோட்டையின் அடிப்பகுதியில் நவீன உருளைகள் மற்றும் தண்டவாளங்கள் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, மனித ஆற்றல் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் அது நகர்த்தப்பட்டு வருகிறது.</p><p>

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இந்த அரிய நிகழ்வில், உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என சுமார் 1,800 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். </p><p>அவர்கள் 80 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 30 மீட்டர் நீளமுள்ள தடிமனான கயிறுகளைப் பிடித்து, பாரம்பரிய உற்சாகக் கோஷங்களுடன் கோட்டையை இழுத்தனர்.</p><p>

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டு முயற்சியில், முதல் நாளில் 1.13 மீட்டரும், இரண்டாம் நாளில் 1.09 மீட்டரும் என மொத்தம் 2.22 மீட்டர் தூரத்திற்கு 360 டன் எடை கொண்ட கோட்டை நகர்த்தப்பட்டது.
</p><p>
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சுமார் 4,100 பேர் பங்கேற்புடன் கோட்டையை 5 மீட்டர் வரை நகர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>அதன்பின்னர், மீதமுள்ள 73 மீட்டர் தூரத்தை நவீன இயந்திரங்களின் உதவியுடன் நகர்த்தி, இந்த ஆண்டின் இறுதிக்குள் ஹிரோசாகி கோட்டையை மீண்டும் அதன் பழைய இடத்திலேயே முழுமையாக நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T09:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க சிஐஏ இயக்குநர் மாஸ்கோவுக்கு ரகசிய பயணம் ; உற்று நோக்கும் உலக நாடுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-cia-director-secret-trip-to-moscow-1787736407"></link>
            <id>https://canadamirror.com/article/us-cia-director-secret-trip-to-moscow-1787736407</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் (John Ratcliffe), ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திடீர் பயணம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் (John Ratcliffe), ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திடீர் பயணமாக மாஸ்கோ சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
 இந்த ரகசிய பயணம், ரஷ்யா–உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffa66461-d841-470e-80c7-825cfc4b260c/26-6a8eb158ac48c.webp' /></p><h2>உற்று நோக்கும் உலக நாடுகள்</h2><p>
 
ராட்க்ளிஃப் (John Ratcliffe), மாஸ்கோ செல்வதற்கு முன்பாக, ரஷ்யாவின் மாஸ்கோ உள்ளிட்ட வடக்கு நகரங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துமாறு உக்ரைனிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p> திங்கள் முதல் புதன்கிழமை வரை இந்த கோரிக்கை அமலில் இருந்ததாகவும், உயர்மட்ட அமெரிக்க அதிகாரி ரஷ்யா செல்ல இருப்பது குறித்து உக்ரைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p> 
இதற்கிடையே, அமெரிக்க ராணுவத்தின் போயிங் C-17 விமானம் மாஸ்கோவில் உள்ள வ்னுகோவோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானம் அமெரிக்காவின் ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் இருந்து புறப்பட்டதாக விமான கண்காணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p> 
மேலும், ரஷ்யா–ஈரான் நெருக்கம், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் எதிர்காலத்தில் நேட்டோ நாடுகளுக்கு ஏற்படுத்தக்கூடிய சவால்கள் குறித்தும் இந்த பயணத்தின் பின்னணியில் முக்கியத்துவம் பெறுகின்றன.
</p><p>
கடந்த காலங்களில் அமெரிக்கா–ரஷ்யா கைதிகள் பரிமாற்றத்திலும் சிஐஏ முக்கிய பங்காற்றியுள்ளது. இதனால் ராட்க்ளிஃப்பின் தற்போதைய மாஸ்கோ பயணம் சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-26T09:24:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர தரையிறக்கப்பட்ட சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/swiss-airlines-flight-makes-emergency-landing-1787735140"></link>
            <id>https://canadamirror.com/article/swiss-airlines-flight-makes-emergency-landing-1787735140</id>
            <summary type="text">சிகாகோவிலிருந்து சூரிச்சிற்குச் சென்று கொண்டிருந்த சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று அசோரஸில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

விமானத்தில் ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிகாகோவிலிருந்து சூரிச்சிற்குச் சென்று கொண்டிருந்த சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று அசோரஸில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.</p><p>

விமானத்தில் ஏற்பட்ட இரசாயன வாசனையே இதற்குக் காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bc64853-f20c-4b07-8a41-dc29d39588c1/26-6a8eac65bd58f.webp' /></p><p>அந்த விமானம் ஒரு போயிங் 777 ரகத்தைச் சேர்ந்தது என்றும், அதில் 222 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்தனர் என்றும் சுவிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (COO) ஆலிவர் புச்ஹோஃபர் சூரிச்சில் ஊடகங்களிடம் தெரிவித்தார். </p><p>

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது, ​​விமானக் குழுவினர் ஆபத்துக்கான அழைப்பை விடுத்தனர். </p><p>அதைத் தொடர்ந்து, விமானம் அசோரஸுக்குத் திருப்பி விடப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-08-26T09:05:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்ப் மகன் உயிருக்கு ரூ.95 கோடி பரிசு ; ஈரான் தொடர்புடைய ஊடகம் வெளியிட்ட வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-son-life-reward-95-crore-iranian-media-video-1787732881"></link>
            <id>https://canadamirror.com/article/trump-son-life-reward-95-crore-iranian-media-video-1787732881</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 20 வயது மகன் பாரன் டிரம்பை குறிவைத்து, ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஊடகம் ஒன்று அதிர்ச்சி வீடியோவை வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 20 வயது மகன் பாரன் டிரம்பை குறிவைத்து, ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஊடகம் ஒன்று அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

“பாரனை எங்கு கொல்லலாம்?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் அந்த வீடியோவில், பாரன் டிரம்பின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படுவதாகவும், அவரை கொலை செய்பவர்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c38759c-147a-43b4-a476-010a04a836af/26-6a8ea392ca302.webp' /></p><p>மேலும், பாரன் டிரம்ப் கல்வி பயிலும் பல்கலைக்கழகம், அவருக்குப் பாதுகாப்பு வழங்கும் அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் தொடர்பான காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த தகவல் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க ரகசிய சேவை அமைப்புக்கும் தகவல் கிடைத்துள்ளது.</p><p>
இதுகுறித்து ரகசிய சேவை அதிகாரி ஒருவர், பாதுகாப்பில் உள்ள நபர்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய தகவல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p> எனினும், பாரன் டிரம்பின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே கடுமையான அரசியல் மற்றும் ராணுவ பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினரை குறிவைத்து இத்தகைய மிரட்டல் வெளியாகியுள்ளதாக கூறப்படுவது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T08:28:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் இல்லை; டிரம்ப் தகவல்! ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-mines-in-the-strait-of-hormuz-trump-1787719857"></link>
            <id>https://canadamirror.com/article/no-mines-in-the-strait-of-hormuz-trump-1787719857</id>
            <summary type="text">&amp;nbsp; ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஈரான் வைத்திருந்த அனைத்துக் கண்ணிவெடிகளையும் அமெரிக்க கடற்படை அகற்றி அழித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஈரான் வைத்திருந்த அனைத்துக் கண்ணிவெடிகளையும் அமெரிக்க கடற்படை அகற்றி அழித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

</p><p>&nbsp;மீண்டும் கண்ணிவெடி வைக்கும் கப்பல்கள் உடனடியாக அழிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். </p><p>

இருநாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c596915-6e09-4473-8479-f5d20e7ce210/26-6a8e70b3365d7.webp' /></p><h2>அமெரிக்கா அறிவிப்பை உதாசீனம் செய்யும் ஈரான்</h2><p> ஈரானுடன் நிதித் தொடர்பு வைத்துள்ள நாடுகள் தனிமைப்படுத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. 

ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்யும் முக்கிய நாடான சீனா, அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்சமான தடைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.</p><p>டன், தனது உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகக் கூறியுள்ளது. 

பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள ஈரான், ஹோர்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறது. </p><p>

ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்துடன் தற்காலிகக் கடல்வழிப் பாதை அமைப்பது குறித்து ஈரான் ஆலோசித்து வருகிறது. 

ஈரான் எல்லைக்குட்பட்ட நீர் வழியிலேயே வர்த்தகக் கப்பல்கள் பயணிக்க வேண்டும் என்றும், இராணுவக் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஈரான் தெளிவாகத் தெரிவித்துள்ளது.</p><p>

தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாக மூடப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T07:25:09+00:00</updated>
        </entry>
    </feed>
