<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-29T12:39:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் வர்த்தகப்போர்; கனடாவை எச்சரிக்கும் வல்லுனர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trade-war-with-the-us-experts-warn-canada-1787990920"></link>
            <id>https://canadamirror.com/article/trade-war-with-the-us-experts-warn-canada-1787990920</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர் இரண்டு நாடுகளின் வணிகங்களையும் பாதிக்கும் எனவும், இதில் , கனேடியப் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர் இரண்டு நாடுகளின் வணிகங்களையும் பாதிக்கும் எனவும், இதில் , கனேடியப் பொருளாதாரம் கடுமையான மந்தநிலையைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>

 அமெரிக்கா - கனடா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா, கனடாவின் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் மீது 50 சதவீத வரியை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca8eaa8-5272-4bb9-b034-e571ca00f6f7/26-6a929389e49a5.webp' /></p><h2>&nbsp;20 பில்லியன் டொலர் மதிப்பிலான பழிவாங்கல் வரி</h2><p>
</p><p>
ஜனவரி 1 முதல் அனைத்து சிற்றுந்து தயாரிப்புகள் மீதும் 50 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார் .</p><p>அதேநேரம், அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, கனேடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), 700-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் பொருட்கள் மீது 15, 25 மற்றும் 50 சதவீத அடிப்படையில் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பழிவாங்கல் வரிகளை அறிவித்துள்ள நிலையில் இந்த வரிகள் எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் அமுலுக்கு வரவுள்ளன.</p><p>

இதற்கிடையில், அமெரிக்காவைக் காட்டிலும் கனடாவின் பொருளாதாரம் பத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளதாலும், தனது ஏற்றுமதியில் 70 சதவீதத்தை அமெரிக்காவிற்கே அனுப்புவதாலும் கனடா இந்த வர்த்தகப் போரால் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.
</p><p>
அதன்படி ஒன்ராறியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் நியூ பிரன்சுவிக் மாகாணங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர்.</p><p>

இந்த வர்த்தகப் போரால் கனடாவில் 100,000-க்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்படலாம் என சர்வதேச வர்த்தக ஆலோசகர்கள் அஞ்சுகின்றனர்.</p><p>

இதேவேளை, கனடாவிற்கு எதிரான தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, ஒன்ராறியோ ஏரியை (Lake Ontario) இனி அமெரிக்க அரசு "அமெரிக்கா ஏரி" (Lake America) என்று அழைக்கும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
இதற்குப் பிரதமர் மார்க் கார்னி மற்றும் மனிட்டோபா மாகாணத்தின் முதல்வர் வாப் கினே (Wab Kinew) ஆகியோர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-29T11:07:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரழிவு ; உலக நாடுகள் மீது குற்றம் சுமத்தும் அறிவியல் அறிஞர்கள் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nepal-disaster-scientists-blame-world-1787995622"></link>
            <id>https://canadamirror.com/article/nepal-disaster-scientists-blame-world-1787995622</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா போன்ற வல்லரசு நாடுகள் செயல்களால் பூமி வெப்பம் அடைந்ததால்தான் இமயமலையில் பனிப்பாறைகள் உருகி நேபாளத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா போன்ற வல்லரசு நாடுகள் செயல்களால் பூமி வெப்பம் அடைந்ததால்தான் இமயமலையில் பனிப்பாறைகள் உருகி நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்தி இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள் .</p><p>வடக்கு நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 600-க்கும் மேற்பட்ட உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுவரை 400 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/836182ed-2482-49a0-903b-62e730762346/26-6a92a5e7be224.webp' /></p><h2>2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை&nbsp;</h2><p>&nbsp; 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை

அதிக மழை பெய்யாத பொழுது திடீரென நேபாளத்திற்கு வெள்ளம் எப்படி வந்தது என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது. </p><p>நேபாளத்திற்கு மேற்பகுதியில் உள்ள சீன - திபெத் எல்லையை ஒட்டியுள்ள போடாகோஷியின் கிளை நதியான லெண்டேயின் நீரோட்டத்தை பனிப்பாறைகள் தடுத்ததால் அங்கு ஒரு ஏரி உருவாகி உருவாகி, அதன்பின் அந்த ஏரி உடைந்ததால் அதிகளவிலான நீர் நேபாளத்திற்குள் புகுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.</p><p>

ஒருபக்கம், பனிப்பாறைகள் உருகியதற்கு ஒரு முக்கிய காரணம் சொல்லப்படுகிற்து.</p><p> உலக அளவில் கரிமிலவாயுவை வெளியிடுவதில் (Carbon emissions) நேபாளத்தின் பங்கு 0.03 சதவீதம் மட்டுமே. அதாவது 0.1 சதவீதத்திற்கும் குறைவு.
</p><p>
 அதேநேரம், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா போன்ற வல்லரசு நாடுகள் தங்களின் தொழிற்சாலைகள் மூலம் 61 சதவீத கரியமில வாயுவை காற்றில் வெளியிடுகின்றன. </p><p>

அதனால் ஏற்படும் மாசு காரணமாக பூமி வெப்பம் அடைந்ததால்தான் இமயமலையில் பனிப்பாறைகள் உருகியதால் அதற்கான பலனை நேபாளம் அனுபவித்திருப்பதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்</p>]]></content>
            <updated>2026-08-29T09:24:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-toll-from-the-floods-in-nepal-crossed-600-1787985747"></link>
            <id>https://canadamirror.com/article/death-toll-from-the-floods-in-nepal-crossed-600-1787985747</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தைத் தாக்கிய முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தைத் தாக்கிய முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த திடீர் பேரழிவின் விளைவாக குறைந்தது 1,924 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95b1a0cd-2b9a-49c7-8088-4095fcf10959/26-6a927f547a9ee.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியை நாட வேண்டாம் என்ற தனது முடிவை நேபாளம் மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளது.
</p><p>
பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளைத் தாங்களே ஒருங்கிணைப்பதாகவும், வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை என்றும் நேபாள வெளியுறவு அமைச்சகம் ஆரம்பத்தில் கூறியிருந்தது.
</p><p>
இருப்பினும், வெள்ளத்தில் காணாமல் போனவர்களில் வெளிநாட்டினரும் இருப்பதால், சம்பந்தப்பட்ட நாடுகளின் இராஜதந்திர அழுத்தத்தின் காரணமாக நேபாள அரசாங்கம் அந்த முடிவை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது.
</p><p>
அதன்படி, சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் சிக்கலான நடவடிக்கைகளுக்கும், உடல்களை அடையாளம் காணும் தொழில்நுட்பப் பணிகளுக்கும் சர்வதேச நிபுணர் குழுக்களுக்கு நேபாள அதிகாரிகள் தற்போது அனுமதி வழங்கியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T08:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான கனேடியர்கள்: அமைச்சர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/minister-anita-about-missing-canadians-in-nepal-1787990443"></link>
            <id>https://canadamirror.com/article/minister-anita-about-missing-canadians-in-nepal-1787990443</id>
            <summary type="text">Foreign affairs minister Anita Anand says 32 Canadians unaccounted for after Nepal floods: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான 32 கனேடியர்கள் மாயமாகியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Foreign affairs minister Anita Anand says 32 Canadians unaccounted for after Nepal floods: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான 32 கனேடியர்கள் மாயமாகியுள்ளதாக கனடா வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>

நேபாளப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600ஐக் கடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சுமார் 2,500 பேர் மாயமாகியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c30e3d6-1815-4952-a159-f322feae9ab7/26-6a9291ad54601.webp' /></p><p>

நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமானவர்களில் பாதி பேர் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா அல்லது புனித யாத்திரை சென்றவர்கள் என கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், நேபாளம் சென்ற 32 கனேடியர்கள் வரை மாயமாகியுள்ளதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.</p><p>

மாயமானவர்களில் பலர் இந்தோ கனேடியர்கள், அவர்கள் கைலாச மலை மற்றும் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்றவர்கள் என கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>
மாயமான கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் எத்தனை பேர், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார் அனிதா ஆனந்த்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3934a179-8bfe-4233-949d-7f469f0a8886/26-6a9291ae0631d.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், சுற்றுலா அல்லது புனித யாத்திரை சென்ற தங்கள் குடும்பத்தினர் பெருவெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்கள் என்னும் செய்தி தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ள பலரும், அவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாததால் தாங்கள் கடும் மன அழுத்தத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
</p><p>
இந்நிலையில், கனடா தூதரக அதிகாரிகள், நேபாளத்தில் மாயமான கனேடியர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் கனடாவிலிருக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் அனிதா ஆனந்த், நேபாளப் பெருவெள்ளதால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், நேபாளப் பெருவெள்ள நிவாரணப் பணிக்காக 5 இல்லியன் கனேடிய டொலர்களை கனடா வழங்குகிறது.</p>]]></content>
            <updated>2026-08-29T08:01:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெனிசுலா மீது கைவைத்த டிரம்ப்; எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்த ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-control65-billion-barrels-oil-venezuela-1787980866"></link>
            <id>https://canadamirror.com/article/us-control65-billion-barrels-oil-venezuela-1787980866</id>
            <summary type="text">&amp;nbsp; வெனிசுலாவின் 6,500 கோடி கொள்கலன் எண்ணெய் இருப்பை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வெனிசுலாவின் 6,500 கோடி கொள்கலன் எண்ணெய் இருப்பை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>


இந்த ஒப்பந்தம் தொடர்பில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55b7cb08-9c2c-40bc-ad65-d478ce664f11/26-6a926c43e0660.webp' /></p><h2>&nbsp;சர்வதேச எண்ணெய் சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்</h2><p>



தனது வழிகாட்டுதலின் கீழ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸுடன் இணைந்து இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>




இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் எண்ணெய் இருப்பு இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரிக்கும் என்றும், நாட்டின் எண்ணெய் விநியோகம் விரிவடையும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
</p><p>


இதன் காரணமாக எதிர்காலத்தில் அமெரிக்க மக்களுக்கான எரிபொருள் விலையை கணிசமாகக் குறைக்க முடியும் எனவும், வெனிசுலாவை பொருளாதார ரீதியாக செழிப்பான பாதைக்கு கொண்டு செல்ல இது உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>



 இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே வளர்ந்து வரும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


உலகளாவிய மசகு எண்ணெய் இருப்பில் சுமார் 17 சதவீதத்தை வெனிசுலா கொண்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த ஒப்பந்தம் சர்வதேச எண்ணெய் சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-29T07:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருநங்கை வீரர் அனயா பங்கருக்கு அவுஸ்திரேலியா அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/australian-approval-transgender-athlete-anaya-1787986190"></link>
            <id>https://canadamirror.com/article/australian-approval-transgender-athlete-anaya-1787986190</id>
            <summary type="text">திருநங்கை கிரிக்கெட் வீரரான அனயா பங்கருக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளதை, தென்னாப்பிரிக்க அண...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருநங்கை கிரிக்கெட் வீரரான அனயா பங்கருக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளதை, தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீராங்கனை மரிசான் கப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>
மகளிர் பிக்பேஷ் லீக் (WBBL) தொடரில் அனயா பங்கர் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியான பதிவுக்கு பதிலளித்துள்ள மரிசான் கப், "இது முற்றிலும் அபத்தமானது, இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2b1378c-5a2c-4251-98b8-d4d6e39d7d10/26-6a92810fe0776.webp' /></p><p>
</p><p>
இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரின் மகளான அனயா பங்கர், அவுஸ்திரேலியாவில் உள்ள மகளிர் உள்ளூர் மற்றும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் உடனடியாக விளையாட கிரிக்கெட் அவுஸ்திரேலியாவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கொள்கையின்படி, திருநங்கைகள் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி இல்லை.

இருப்பினும், கிரிக்கெட் அவுஸ்திரேலியா தனது உள்நாட்டுப் போட்டிகளுக்காகத் தனித்துவமான கொள்கையைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-29T06:47:01+00:00</updated>
        </entry>
    </feed>
