<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-08-23T04:35:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடி காட்டிய கனேடிய பிரதமர் மார்க் கார்னி ; ட்ரம்பிற்கு காத்திருக்கும் பெரும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-pm-mark-carney-makes-a-bold-move-1787445540"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-pm-mark-carney-makes-a-bold-move-1787445540</id>
            <summary type="text">அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதக் கடுமையான புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு, டொலருக்கு டொலர் வரி விதிப்பு தொடர்பான திகதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதக் கடுமையான புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு, டொலருக்கு டொலர் வரி விதிப்பு தொடர்பான திகதியை கனடாப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
</p><p>
சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்த சில மணிநேரங்களிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c412f5d-e3e9-48cc-a021-43519c77fbc6/26-6a8a4127452ff.webp' /></p><p>இதன்படி, கனடாவின் பதிலடி வரி, எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, பால் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாயக் கருவிகள், காகிதம் மற்றும் மின்னணுப் பொருட்களுக்கே, பதிலடி வரிகள் விதிக்கப்படவுள்ளன.</p><p>

இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை எட்டப் பல நாட்களாக தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அமெரிக்காவின் நியாயமற்ற நிபந்தனைகளால் உடன்பாடு எட்டப்படவில்லை.</p><p>

அமெரிக்கா அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பதோடு, மிகக் குறைவாகவே வழங்குகிறது என்று சுட்டிக்காட்டிய மார்க் கார்னி, "நாங்கள் தாக்கப்பட்ட பின்னரே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம்; என்று கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-23T01:21:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவிரவாக மாறி மாறி நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் ; பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missile-strikes-carried-out-overnight-1787446829"></link>
            <id>https://canadamirror.com/article/missile-strikes-carried-out-overnight-1787446829</id>
            <summary type="text">உக்ரைனின் வணிக வளாகத்தில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 16 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, சனிக்கிழமை இரு நாடுகளும் மீண்டும் நடத்திய பரஸ்பரத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் வணிக வளாகத்தில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 16 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, சனிக்கிழமை இரு நாடுகளும் மீண்டும் நடத்திய பரஸ்பரத் தாக்குதல்களில் மேலும் 10 போ் உயிரிழந்தனா்.</p><p>

ரஷ்யாவின் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்களில் உக்ரைனில் 7 பேரும், ரஷ்யாவின் கிராஸ்னோதா் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேரும் உயிரிழந்தனா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5e3fd9d-0e35-4fa8-b060-d1206bf8fb01/26-6a8a46335a324.webp' /></p><p>உக்ரைனிடம் வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்குத் தட்டுப்பாடு நிலவும் சூழலைப் பயன்படுத்தி, ரஷ்யா ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.</p><p>

தலைநகா் கீவில் உள்ள ரயில்வே கட்டமைப்பு மீது சனிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். </p><p>இதுதவிர, கீவ் புகா்ப் பகுதியில் பிற்பகலில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 2 பேரும், ஸபோரிஷியா பிராந்தியத்தில் இரவு, பகலாக நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில் 4 பேரும் உயிரிழந்தனா்.
</p><p>
அதேநேரம், உக்ரைனும் ரஷிய எல்லைக்குள் தனது தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது. </p><p>தெற்கு ரஷியாவின் கிராஸ்னோதா் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்; இருவா் காயமடைந்தனா்.</p>]]></content>
            <updated>2026-08-23T01:00:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புத்த மடாலயம் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இராணுவம் ; பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/army-launches-airstrike-on-buddhist-monastery-1787439351"></link>
            <id>https://canadamirror.com/article/army-launches-airstrike-on-buddhist-monastery-1787439351</id>
            <summary type="text">மியான்மரில் புத்த மடாலயம் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் காயமுற்றனர்.


மியன்மார் ராணுவத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியான்மரில் புத்த மடாலயம் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் காயமுற்றனர்.</p><p>


மியன்மார் ராணுவத்துக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் மியான்மரில் செயல்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccc889fd-5cf9-468f-8635-a28a727bd044/26-6a8a28f99cef8.webp' /></p><p>

கிளர்ச்சியார்களை குறிவைத்து ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.</p><p>

இந்த நிலையில் தான் மத்திய மியான்மரில் உள்ள மியாவ்ங் பகுதியில் உள்ள ஸ்வெல் லே ஓ என்ற கிராமத்தில் நேற்று ராணுவம் வான்வெளித் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
ராணுவப் போர் விமானம் ஒன்று 15 நிமிட இடைவெளியில் இரண்டு குண்டுகளை வீசியுள்ளது. இதில் இரண்டாவது குண்டு அருகில் இருந்த வீடு ஒன்றையும் சேதப்படுத்தியது.
</p><p>
தகவலின்படி, இத்தாக்குதலில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.</p><p>

பௌத்தர்களின் புனித காலத்தை குறிக்கும் வகையில் மடாலயத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வார கால தியானப் பயிற்சியில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றிருந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T22:56:19+00:00</updated>
        </entry>
    </feed>
