<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-15T15:52:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தாக்குதலில் ஈரானில் 30 பேர் உரியிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/30-people-killed-in-us-attack-in-iran-1784121784"></link>
            <id>https://canadamirror.com/article/30-people-killed-in-us-attack-in-iran-1784121784</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் நடந்த அமெரிக்கத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த சில நாட்களில் நடந்த அமெரிக்கத் தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமா மொஹஜெரானி தெரிவித்தார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80dba9aa-3e2b-4adf-bc3a-747b3fb6a651/26-6a5789b9ef7af.webp' /></p><p>
</p><p>
தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் இன்று புதன்கிழமை&nbsp; &nbsp;தங்களது ஏழு வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
நாட்டின் தென்கிழக்கில் உள்ள ஈரான்ஷாஹர் நகருக்கு அருகிலுள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T13:21:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/collingwood-opp-beware-of-new-cell-phone-fraud-1784101731"></link>
            <id>https://canadamirror.com/article/collingwood-opp-beware-of-new-cell-phone-fraud-1784101731</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் காலிங்வுட் மாகாண காவல்துறை, அண்மையில் புதிய கைப்பேசிகளை கொள்வனுவு செய்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய மோசடி குறித்து மக்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் காலிங்வுட் மாகாண காவல்துறை, அண்மையில் புதிய கைப்பேசிகளை கொள்வனுவு செய்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய மோசடி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>
தங்கள் புதிய கைப்பேசிகளை வாங்கிய உடனேயே, தங்களுக்கு மோசடி அழைப்புகள் வருவதாகப் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள், தாங்கள் மொபைல் சேவை வழங்கும் நிறுவனம் சார்பாகப் பேசுவதாகக் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e21e15a-f758-4dc9-bd23-2cdcb5b671db/26-6a573df2d7dea.webp' /></p><p>
</p><p> பின்னர், கைப்பேசிகளின் முழுமையான அமைப்புகளை முடிப்பதற்காக, வாங்கிய சாதனத்தைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறுகின்றனர்.
</p><p>மற்றொரு சில சம்பவங்களில், மொபைல் போனுக்கு தள்ளுபடிகள் அல்லது சலுகைகள் வழங்குவதாகக் கூறி கைப்பேசிகளைத் திருப்பி அனுப்பினால் சலுகை விலையில் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.</p><p>
காவல்துறையின் கூற்றுப்படி, இந்த ஏமாற்று வேலைகளை உண்மையென்று நம்பும் மக்கள், தங்கள் கைப்பேசிகளை கூரியர் மூலமாகவோ அல்லது நேரில் வரும் ஒரு நபரிடமோ ஒப்படைத்து விடுகின்றனர். </p><p>ஆனால், அவ்வாறு ஒப்படைக்கப்படும் போன்கள் மீண்டும் ஒருபோதும் திருப்பித் தரப்படுவதில்லை.
சமீபத்தில் வாங்கப்பட்ட மின்னணு சாதனங்கள் (Electronics) தொடர்பாக வரும் தேவையற்ற அழைப்புகள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அல்லது கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>யாராவது உங்களைத் தொடர்பு கொண்டு உங்கள் மொபைல் சேவை நிறுவனம் சார்பாகப் பேசுவதாகக் கூறினால், அதை அப்படியே நம்ப வேண்டாம். உங்கள் மொபைல் பில்லில் உள்ள எண் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி, நீங்களாகவே நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அந்த கோரிக்கையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு காவல்துறை பரிந்துரைக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T13:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்துப் பாலங்களையும் தகர்ப்போம் ; ​​நான் போதும் என சொல்லும் வரை தாக்குதல் தொடரும்; ஈரானை மிரட்டும் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/we-will-destroy-all-bridges-trump-threatens-iran-1784121039"></link>
            <id>https://canadamirror.com/article/we-will-destroy-all-bridges-trump-threatens-iran-1784121039</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈரானிய பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
தெஹ்ரானுடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈரானிய பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
</p><p>தெஹ்ரானுடன் வாஷிங்டன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துமாறு ஈரானை வலியுறுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்தார். </p><p> டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 

உடன்பாடு எட்டப்படாவிட்டால் அமெரிக்க இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d21642b-c059-40fc-9f71-76390ff39500/26-6a5786d0a717f.webp' /></p><h2>நான் போதும் என சொல்லும் வரை தாக்குதல் தொடரும்</h2><p> </p><p>மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல்களை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவர் கூறினார்.
</p><p>
அடுத்த வாரம் அவர்களுக்கு நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது ஏனென்றால் அதற்கு அடுத்த வாரம் மின் உற்பத்தி நிலையங்கள் வரும். அதற்கு அடுத்த வாரம் பாலங்கள் வரும் என்று டிரம்ப் கூறினார்.
</p><p>
அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், நாங்கள் அவர்களின் அனைத்து மின் நிலையங்களையும் செயலிழக்கச் செய்வோம். அவர்களின் அனைத்துப் பாலங்களையும் தகர்ப்போம் என்று அவர் மேலும் கூறினார். </p><p> 

 அமெரிக்கத் தாக்குதல்கள் எவ்வளவு காலம் தொடரும் என்று கேட்கப்பட்டபோது, ​​நான் போதும் என்று சொல்லும் வரை அவை தொடரும் என்று டிரம்ப் பதிலளித்துள்ளமை உலகில் மீண்டும் போர் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T13:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரஸ்ஸல்ஸ் கட்டுமான தளத்தில் பயங்கர தீ விபத்து ; லிஃப்ட்டில் கருகிய உடல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/massive-fire-at-brussels-construction-site-1784116047"></link>
            <id>https://canadamirror.com/article/massive-fire-at-brussels-construction-site-1784116047</id>
            <summary type="text">&amp;nbsp; பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் மையப்பகுதியில் உள்ள பிளேஸ் டி புரூக்கர் (Place de Brouckere) பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான கட்டுமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் மையப்பகுதியில் உள்ள பிளேஸ் டி புரூக்கர் (Place de Brouckere) பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான கட்டுமான தளம் ஒன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

இந்த கோர விபத்தில் பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 தற்சமயம் விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை குறித்த தெளிவான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e11a0d6a-7df2-4351-82f3-578849aadb52/26-6a5773516e036.webp' /></p><h2>லிஃப்ட் பெட்டிக்குள்&nbsp; கருகிய நிலையில் பலரது உடல்கள்&nbsp;</h2><p>
 
‘ஆக்ஸி’ (Oxy building) என்று அழைக்கப்படும் இந்த பழைய நிர்வாகக் கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் திடீரெனப் பிடித்த சிறிய அளவிலான தீ, எதிர்பாராத விதமாக அங்குள்ள மின்தூக்கி (Elevator) எனப்படும் லிஃப்ட் பகுதி வழியாக மற்ற இடங்களுக்கும் வேகமாகப் பரவியது.
</p><p>
 கடுமையான புகையினாலும், கொழுந்துவிட்டு எரிந்த தீயினாலும் தொழிலாளர்கள் தப்பி ஓட முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.</p><p>

தீயணைப்பு வீரர்களின் அரும்பாட்டிற்குப் பிறகு தீ ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, மீட்புக் குழுவினர் கட்டிடத்திற்குள் சென்று சோதனையிட்டபோது, அங்கிருந்த ஒரு லிஃப்ட் பெட்டிக்குள்ளிருந்து பலரது உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் இருந்தமை மீட்புப் பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. </p><p>

இந்த விபத்தில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான மூன்று பேர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp; மாயமான&nbsp; &nbsp;தொழிலாளர்களைக் கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள் மற்றும் வெப்பநிலையைக் கண்டறியும் தெர்மல் கேமராக்கள் (Thermal Cameras) பயன்படுத்தப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.</p><p> 

பெல்ஜிய நாட்டின் உள்துறை அமைச்சர் மற்றும் பிரஸ்ஸல்ஸ் மேயர் பிலிப் குளோஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். </p><p>

விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்படாத நிலையில், இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது</p>]]></content>
            <updated>2026-07-15T11:46:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பகைகளை மறந்து விண்வெளியில் கைகோர்த்த அமெரிக்கா – ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-and-russia-join-hands-in-space-1784115186"></link>
            <id>https://canadamirror.com/article/us-and-russia-join-hands-in-space-1784115186</id>
            <summary type="text">&amp;nbsp; உலக அளவில் அரசியல் ரீதியாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பல்வேறு மோதல்களும் பதற்றங்களும் நீடித்து வரும் வேளையில், விண்வெளி ஆராய்ச்சியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலக அளவில் அரசியல் ரீதியாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பல்வேறு மோதல்களும் பதற்றங்களும் நீடித்து வரும் வேளையில், விண்வெளி ஆராய்ச்சியில் இரு நாடுகளும் மீண்டும் கைகோர்த்துள்ளமை சர்வதேடசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
 சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) 8 மாத கால ஆய்விற்காக, அமெரிக்க விண்வெளி வீரர் மற்றும் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள் அடங்கிய கூட்டுக்குழு வெற்றிகரமாகப் பயணித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fc610d2-8c9e-4355-89ee-bd497d6ece56/26-6a576ff42df4d.webp' /></p><h2>வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம்</h2><p> </p><p>கசகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்திலிருந்து ரஷ்யாவின் சோயுஸ் MS-29 (Soyuz MS-29) விண்கலம் மூலம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் தொடங்கப்பட்டுள்ளது.</p><p> 

 
நாசா (NASA) விண்வெளி வீரரான அனில் மேனன், ரஷ்யாவின் ரஸ்கோஸ்மோஸ் (Roscosmos) விண்வெளி முகமையின் பியோட்டர் துப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகிய மூவர் அடங்கிய குழுவே இந்த விண்கலத்தில் பயணித்துள்ளது.
</p><p>
 பூமியிலிருந்து ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே விண்கலம் திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடைந்து, விண்வெளி நிலையத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்தது. இந்த மூன்று விண்வெளி வீரர்களும் அடுத்த 8 மாதங்களுக்கு விண்வெளி நிலையத்திலேயே தங்கி பல்வேறு முக்கிய அறிவியல் சோதனைகளை மேற்கொள்ள உள்ளனர். </p><p>

இந்த நிகழ்வின் போது நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் மற்றும் ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி பகனோவ் ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர்.
</p><p>
 உக்ரைன் விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையிலும், விண்வெளித் துறையில் இந்த ஒருங்கிணைந்த பணி தொடர்வது கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>

விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் காலகட்டத்தில், விண்வெளி வீரர் அனில் மேனன் உயர்தர கணினிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தேவையான குறைக்கடத்தி படிகங்களை (Semiconductor Crystals) விண்வெளியில் தயாரிப்பது குறித்த சோதனைகளை மேற்கொள்ளவுள்ளார்.
</p><p>
 மேலும், எதிர்கால நீண்டகால விண்வெளிப் பயணங்களின் போது பூமியின் மருத்துவ உதவி இன்றி, AI தொழில்நுட்பம் மூலம் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளைச் செய்வது குறித்தும் இந்த குழுவினர் விரிவான ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-15T11:31:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா கடற்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-launches-missile-attack-on-us-naval-base-1784091734"></link>
            <id>https://canadamirror.com/article/iran-launches-missile-attack-on-us-naval-base-1784091734</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), பஹ்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளத்தின் மீது ஏவுகணைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), பஹ்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளத்தின் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>
இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளதாகவும், தங்களுக்கு எதிரான "அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு" தொடர்ந்தால் இன்னும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecebb8b8-ba64-4dbc-aa99-9e50564ead9a/26-6a5714579493d.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T10:04:32+00:00</updated>
        </entry>
    </feed>
