<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-10T17:37:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஈரான் மோதல் நிறுத்தப்பட வேண்டும் - சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-wants-iran-us-to-maintain-cessation-1783702389"></link>
            <id>https://canadamirror.com/article/china-wants-iran-us-to-maintain-cessation-1783702389</id>
            <summary type="text">&amp;nbsp;ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா அழைப்பு விடுத்துள்ளது.</p><p>
இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல்களை உடனடியாக நிறுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும் என ஐநா-வுக்கான சீனாவின் துணைத் தூதர் சன் லீ (Sun Lei) தெரிவித்துள்ளார்.
</p><p>இது குறித்து பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
 புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிக்க அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2fc78e6-4b5c-4df1-930c-e2f01cc9c66a/26-6a5123773fc61.webp' /></p><p> </p><p>இது கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும். மேலும், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
</p><p>அவர் மேலும் கூறுகையில், "எது சரி, எது தவறு என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவது தற்போதைய சூழலில் மிக முக்கியம். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்ற தனது வாக்குறுதியைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அதே நேரத்தில், சிவிலியன் பயன்பாட்டிற்காக அணுசக்தியை உற்பத்தி செய்துகொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது" என்றும் குறிப்பிட்டார்.</p><p>
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் சீனாவின் நடுநிலையான மற்றும் நிலையான நிலைப்பாட்டை முன்வைத்த துணைத் தூதர், இந்த விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காண சீனா தொடர்ந்து ஒரு ஆக்கப்பூர்வமான பங்கைக் வகிக்க உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T17:03:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேகமாக வாகனம் செலுத்திய சாரதிக்கு எதிராக வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-driver-caught-nearly-doubling-speed-1783701911"></link>
            <id>https://canadamirror.com/article/police-driver-caught-nearly-doubling-speed-1783701911</id>
            <summary type="text">கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை 11-இல் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை விட இரு மடங்கு வேகத்தில் ஆபத்தான முறையில் காரைச் செலுத்திய 24 வயது இள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை 11-இல் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை விட இரு மடங்கு வேகத்தில் ஆபத்தான முறையில் காரைச் செலுத்திய 24 வயது இளைஞர் மீது ஒண்டாரியோ மாகாண காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.</p><p>
ஹன்ட்ஸ்வில் பகுதியில் உள்ள கிரியர் ரோட்டிற்கு அருகே போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.</p><p>
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகம் செல்ல வேண்டிய பகுதியில், சுமார் 197 கிலோமீட்டர் வேகத்தில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுள்ளது.
இதனைப் பார்த்த போலீசார் உடனடியாக அந்த காரை மறித்து நிறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e6b56f7-e12f-43bc-9374-8895cfc4f317/26-6a5121995f968.webp' /></p><p> </p><p>காரை ஓட்டி வந்த நியூகாசில் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கியதற்கான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>
மேலும், தண்டனை நடவடிக்கையாக அந்த இளைஞரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அவரது கார் 14 நாட்களுக்குக் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. </p><p>
குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞர் வரும் செப்டம்பர் மாதம் ஒண்டாரியோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T17:03:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட 5 கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/5-inmates-mistakenly-released-from-sask-jails-1783701487"></link>
            <id>https://canadamirror.com/article/5-inmates-mistakenly-released-from-sask-jails-1783701487</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் சாஸ்காச்சுவான் மாகாணச் சிறைச்சாலைகளில் இருந்து, நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக 5 கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் சாஸ்காச்சுவான் மாகாணச் சிறைச்சாலைகளில் இருந்து, நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக 5 கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>எழுத்துப் பிழைகள், தகவல் தொடர்பு குறைபாடுகள், ஆவணக் கோளாறுகள் அல்லது தரவுச் செயலாக்கத்தில் ஏற்பட்ட தவறுகள் காரணமாகவே இந்தக் கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சாஸ்காச்சுவான் மாகாண அரசு தெரிவித்துள்ளது.</p><p>
இப்படியாகத் தவறுதலாக விடுவிக்கப்பட்டவர்களில் 26 வயதான கெலீஷா ஜாக்சன் என்ற பெண்ணும் ஒருவர். தாக்குதல் மற்றும் ஒருவரை வலுக்கட்டாயமாகச் சிறைபிடித்த குற்றத்திற்காக நார்த் பேட்டில்ஃபோர்ட் சிறையில் இவர் தண்டனை அனுபவித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3809897b-33da-4f34-a6b6-8eb71ef58183/26-6a511ff0d251e.webp' /></p><p> 
கடந்த மார்ச் 19 அன்று இவர் தவறுதலாக விடுவிக்கப்பட்டார். ஆனால், இதுகுறித்த தகவல் ஜூன் 19 வரை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
</p><p>இறுதியாக, தவறுதலாக விடுவிக்கப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்த ஜாக்சன், இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>இத்தகைய தவறுகள் மிகவும் அரிதானவை என்றும், ஒட்டுமொத்த கைதிகள் விடுதலையில் இது 0.1 சதவீதத்திற்கும் குறைவானதே என்றும் அரசுத் தரப்பு வாதிட்டுள்ளது.
</p><p>இருப்பினும், இந்த விவகாரத்தில் சாஸ்காச்சுவான் அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என எதிர்க்கட்சியான என்.டி.பி (NDP) குற்றம் சாட்டியுள்ளது. </p><p>
இதுகுறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று என்.டி.பி சட்டமன்ற உறுப்பினர் நிக்கோல் சராவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
மறுபுறம், கைதிகள் தங்களின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கப்படுவதால், சிறைச்சாலையில் அவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வுப் பயிற்சிகள் முழுமையடையாமல் போகும் என்றும், இது அவர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைவதைப் பாதிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
</p><p>தவறுதலாக நடக்கும் ஒவ்வொரு விடுதலை குறித்தும் சிறப்புக் குழு ஆய்வு செய்து வருவதாகவும், வருங்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காமல் தடுக்க உரியப் பரிந்துரைகள் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T17:03:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பெண் ஒருவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/alberta-woman-celebrating-5m-lottery-win-1783701020"></link>
            <id>https://canadamirror.com/article/alberta-woman-celebrating-5m-lottery-win-1783701020</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த மே மாதம் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் 5 மில்லியன் டாலர் வென்றுள்ளார்.
ஆல்பர்ட்டாவின் லீகல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த மே மாதம் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் 5 மில்லியன் டாலர் வென்றுள்ளார்.
</p><p>ஆல்பர்ட்டாவின் லீகல் பகுதியைச் சேர்ந்த ஷானன் கீஸ்ட் என்ற பெண், மே 27 அன்று நடைபெற்ற 'லோட்டோ 6/49 கிளாசிக் ஜாக்பாட்' (Lotto 6/49 Classic jackpot) குலுக்கலில் 5, 27, 35, 38, 44 மற்றும் 46 ஆகிய எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டை கொள்வனவு செய்திருந்தார். அந்த எண்களுக்கே தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது.
</p><p>இது குறித்து ஷானன் கீஸ்ட் கூறுகையில், "கடையில் வைத்து எனது லாட்டரி சீட்டை ஸ்கேன் செய்தபோது, நான் தான் வென்றேன் என்பதை உடனடியாக என்னால் நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2af43178-a692-4d8e-8d30-c28736324b6c/26-6a511e1e19670.webp' /></p><p>
ஒரு வித்தியாசமான சத்தம் மட்டுமே கேட்டது. உடனே பதற்றத்திலும் மகிழ்ச்சியிலும் கண்ணீருடன் எனது கணவருக்கு ஃபேஸ்டைம் மூலம் வீடியோ கால் செய்ய முயன்றேன்," என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த பரிசுப் பணத்தைக் கொண்டு சாஸ்காச்சுவான் பகுதியில் ஒரு அழகான மர இல்லம் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக கோஸ்டாரிகா நாட்டிற்குச் சிறப்புப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>"இது இன்னும் ஒரு கனவு போலவும், அதே சமயம் மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாதவாறும் உள்ளது. எங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று," என்று கீஸ்ட் மேலும் கூறினார்.
இவர் இந்த அதிர்ஷ்டகரமான லாட்டரி சீட்டை மொரின்வில் பகுதியில் உள்ள ஒரு மொபில் எரிபொருள் நிலைய கடையிலிருந்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T17:03:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடியருக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/brampton-man-sentenced-in-us-to-20-years-1783700332"></link>
            <id>https://canadamirror.com/article/brampton-man-sentenced-in-us-to-20-years-1783700332</id>
            <summary type="text">கனடிய பிரஜை ஓருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு சுமார் 17 மில்லியன் டாலர் மதிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடிய பிரஜை ஓருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
</p><p>அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு சுமார் 17 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய குற்றத்திற்காக, கனடாவின் பிராம்ப்டன் நகரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.</p><p>
63 வயதான குராம்ரித் சித்து என்ற நபர், அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு போதைப்பொருள் கடத்தும் சர்வதேச நெட்வொர்க்கை வழிநடத்தி வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15bc2fc4-3071-4f3d-ab0e-d95b8da43ee6/26-6a511b6da6011.webp' /></p><p> </p><p>
இந்த வழக்கில் நேற்று முன்தினம் அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜான் ஏ. குரோன்ஸ்டாட் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கினார்.</p><p>
அமெரிக்காவில் மொத்தமாகப் போதைப்பொருட்களை கொள்வனவு செய்யும் சித்து, அவற்றை நீண்ட தூரம் செல்லும் லாரிகள் மூலம் கனடாவிற்குள் கடத்தி வந்துள்ளார். </p><p>
குறிப்பாக, கடந்த 2022 செப்டம்பர் 13 முதல் அக்டோபர் 24 வரையிலான வெறும் ஒரு மாத காலத்திற்குள், 523 கிலோ மெத்தம்பேட்டமைன் மற்றும் 347 கிலோ கோகோயின் ஆகியவற்றை உள்ளடக்கிய 8 பெரிய போதைப்பொருள் கடத்தல்களை இவர் திட்டமிட்டு நடத்தியுள்ளார்.
</p><p>போதைப்பொருளை டெலிவரி செய்யும் போது ஆட்களை அடையாளம் காண்பதற்காக, சித்து ஒரு நூதன முறையைக் கையாண்டுள்ளார். </p><p>
கடத்தலில் ஈடுபடும் கூரியர்களிடம் குறிப்பிட்ட சில தொலைபேசி எண்களையும், பண நோட்டுகளில் இருக்கும் வரிசை எண்களையும் ரகசியக் குறியீடாக வழங்கிப் பயன்படுத்தியுள்ளார்.</p><p>இந்தக் கடத்தல் கும்பல் கடந்த 2020 செப்டம்பர் முதல் 2023 பெப்ரவரி வரை இயங்கி வந்துள்ளது.</p><p> கடந்த 2024 ஜனவரியில் கைது செய்யப்பட்ட சித்து, பின்னர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட எட்டாவது நபர் சித்து ஆவார். இவருக்கு முன்னதாகக் கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்கு 2 முதல் 9 ஆண்டுகள் வரை ஏற்கனவே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T17:02:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கக் குடியேற்றக் கொள்கைகளினால் பாதிக்கப்படும் கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/what-trumps-deportation-push-could-mean-1783699776"></link>
            <id>https://canadamirror.com/article/what-trumps-deportation-push-could-mean-1783699776</id>
            <summary type="text">அமெரிக்காவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேரை நாடுகடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, சில குடியேறிகளுக்கான பாதுகாப்பு சலுகைகளும் ரத்து செய்யப்பட உள்ளன. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேரை நாடுகடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, சில குடியேறிகளுக்கான பாதுகாப்பு சலுகைகளும் ரத்து செய்யப்பட உள்ளன. </p><p>
இதனால், அமெரிக்காவில் இருக்கும் அகதிகள் தங்களின் பாதுகாப்பிற்காக வடக்கு எல்லையைக் கடந்து கனடாவிற்குள் நுழைய முயலலாம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p>எனினும், அமெரிக்கா மற்றும் கனடா இடையே உள்ள 'பாதுகாப்பான மூன்றாவது நாடு ஒப்பந்தத்தின்' படி, அமெரிக்காவில் இருந்து எல்லை வழியாக கனடாவுக்குள் நுழையும் அகதிகள் திருப்பி அனுப்பப்பட வாய்ப்புகள் அதிகம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4830484-82e7-407f-8239-df0af8ce1ac0/26-6a51194209aa3.webp' /></p><p>
</p><p>இந்த ஒப்பந்தத்தின்படி, தஞ்சம் கோருபவர்கள் தாங்கள் முதலில் கால்பதிக்கும் பாதுகாப்பான நாட்டில்தான் அகதி அந்தஸ்து கோர வேண்டும். குறிப்பிட்ட சில விதிவிலக்குகளைத் தவிர, மற்றவர்கள் எல்லையிலேயே திருப்பி அனுப்பப்படுவர்.</p><p>
இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள குடியேற்ற விவகாரங்களுக்கான வழக்கறிஞர் ஜோயல் சாண்டலக், கனடாவிற்குள் மீண்டும் ஒரு பெரிய அகதிகள் அலை வரும் என்று தான் கருதவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p>சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து தினசரி 165 பேர் கனடாவுக்கு வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 15 ஆகக் குறைந்துள்ளது என்றார்.
</p><p>மேலும், கனடா சமீபத்தில் நிறைவேற்றியுள்ள மசோதா சி-12, அமெரிக்காவில் இருந்து வருபவர்களுக்கான அகதி பாதுகாப்பை பெருமளவில் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.</p><p> 
கியூபெக் மற்றும் நியூயார்க் இடையே உள்ள 'ராக்ஸாம் சாலை' போன்ற முறைசாரா எல்லைக் கடப்பு வழிகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. </p><p>தற்போதைய சூழலில், அமெரிக்காவின் கடுமையான கொள்கைகளால் எல்லையில் தஞ்சம் கோர முடியாமல் போகும் அகதிகள், சட்டவிரோதமாக மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று சாண்டலக் கவலை தெரிவித்துள்ளார்.</p><p>
"பாதிக்கப்படுபவர்களில் குழந்தைகளும், மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். இத்தகைய பெரிய அரசியல் கொள்கைகள், மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் துயரங்களையும் கருத்தில் கொள்வதில்லை," என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T17:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பறக்கும் விமானத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விமானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/flight-school-pilot-jumps-to-his-death-1783699178"></link>
            <id>https://canadamirror.com/article/flight-school-pilot-jumps-to-his-death-1783699178</id>
            <summary type="text">அர்ஜென்டினாவில் விமானப் பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் ஒருவர், பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினாவில் விமானப் பயிற்சிப் பயிற்றுவிப்பாளர் ஒருவர், பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. </p><p>
குறித்த குதித்த பிறகு, விமானத்தில் இருந்த 22 வயது மாணவி தனியாக அந்த விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளார்.</p><p>
மத்திய அர்ஜென்டினாவின் டோலிடோ பகுதியில் கடந்த சனிக்கிழமை செஸ்னா 150 ரக சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b16b47d-624a-400b-90e4-f015ec7d00c8/26-6a5116ebdb854.webp' /></p><p> </p><p>
இதில் 42 வயதான அனுபவம் வாய்ந்த விமானப் பயிற்றுவிப்பாளர் லியான்ட்ரோ ஆண்ட்ரேஸ் பெர்டாஸோ மற்றும் ரொசாரியோ என்ற 22 வயது மாணவியும் இருந்துள்ளனர்.</p><p>
விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த மாணவியிடம், "உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும், தொடர்ந்து செய்" எனக் கூறிவிட்டு, பெர்டாஸோ தனது ஹெட்செட் மற்றும் சீட் பெல்ட்டைக் கழற்றியுள்ளார்.</p><p> பின்னர், விமானத்தின் கதவைத் திறந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதனால் மாணவி கடும் அதிர்ச்சியடைந்தார்.
</p><p>இருப்பினும், அந்த மாணவி மிகுந்த தைரியத்துடன் செயல்பட்டு, கட்டுப்பாட்டை இழக்காமல் விமானத்தை எவ்வித சேதமுமின்றி பத்திரமாகத் தரையிறக்கினார்.
</p><p>இது குறித்து அந்தப் பறக்கும் பள்ளியின் இயக்குனர் எடுவார்டோ ஆல்வாரெஸ் கூறுகையில், பெர்டாஸோ மிகவும் நல்ல மனிதர் என்றும், அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். </p><p>
மேலும், வேகமாகப் பறக்கும் விமானத்தின் கதவைத் திறப்பது மிகவும் கடினமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அனுபவம் வாய்ந்த இந்த விமானியின் திடீர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அந்நாட்டு அரசு வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T16:06:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து மீளப்பெறப்படும் வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/honda-has-recalled-hundreds-of-thousands-1783681274"></link>
            <id>https://canadamirror.com/article/honda-has-recalled-hundreds-of-thousands-1783681274</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் ஹோண்டா ரக வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்புறக் காட்சி (Rear-view) கேமரா திரையில் ஏற்படும் தொழில்நுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் ஹோண்டா ரக வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>பின்புறக் காட்சி (Rear-view) கேமரா திரையில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கனடா முழுவதும் 32,000-க்கும் மேற்பட்ட 'ஒடிஸி' ரக வாகனங்களை ஹோண்டா கனடா நிறுவனம் திரும்பப் பெற்றுவருகிறது. </p><p>
இதேபோன்றதொரு கோளாறினால் அமெரிக்காவிலும் 3,00,000-க்கும் அதிகமான வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0193556b-291a-4594-8b9d-e473e5a611ab/26-6a50d0fbaab9d.webp' /></p><p>
இது தொடர்பாக ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் தயாரிக்கப்பட்ட 32,289 ஒடிஸி மினிவேன் ரக வாகனங்கள் இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>வாகனத்தின் பின்புறக் கேமரா பகுதிக்குள் தண்ணீர் நுழைவதால், அங்குள்ள அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகை துருப்பிடிக்க வாய்ப்புள்ளது.
</p><p> இதனால், வாகனத்தை ரிவர்ஸ் எடுக்கும் போது பின்புறக் கேமரா திரை வேலை செய்யாமல் போகலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>
கேமரா திரை வேலை செய்யாவிட்டால், ஓட்டுநருக்குப் பின்னால் இருக்கும் பொருட்கள் சரியாகத் தெரியாது. இது விபத்துகள் ஏற்படுவதற்கான அல்லது காயங்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என ஹோண்டா எச்சரித்துள்ளது.
</p><p>கேமராவைப் பொருத்தும் போது ஏற்பட்ட பிழையே இதற்கு முக்கியக் காரணமாகும். கேமராவின் உறையிலுள்ள துளையின் அளவுக்குப் பொருந்தாத மவுண்டிங் ஸ்க்ரூ பயன்படுத்தப்பட்டதே இந்த குறைபாட்டிற்குக் காரணமாக அமைந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T13:10:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வெப்ப அலை; இங்கிலாந்து மக்களுக்கு விதிக்கப்பட்ட தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/severe-heatwave-hosepipe-ban-in-england-1783685707"></link>
            <id>https://canadamirror.com/article/severe-heatwave-hosepipe-ban-in-england-1783685707</id>
            <summary type="text">&amp;nbsp; இங்கிலாந்து நீண்ட வெப்ப அலை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், மேலும் பல மில்லியன் இங்கிலாந்து மக்களுக்கு குழாய் மூலம் நீர் பாய்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இங்கிலாந்து நீண்ட வெப்ப அலை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், மேலும் பல மில்லியன் இங்கிலாந்து மக்களுக்கு குழாய் மூலம் நீர் பாய்ச்சுவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது.</p><p>

 இன்று (10) காலை, இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தனது 50 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு, குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான (hosepipe) தடையை ‘ஆங்லியன் வாட்டர்’ (Anglian Water) நிறுவனம் அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf77bce-6589-4567-829b-3e02a81391a4/26-6a50e24d1acf8.webp' /></p><h2>இதுவே முதல் முறை...</h2><p>
</p><p>
ஒரு ஆண்டில் 34 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலை பதிவான நாட்களின் எண்ணிக்கை எட்டை எட்டியது.</p><p>

1976 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளின் கோடைக்காலத்தில் பதிவான ஏழு நாட்கள் என்ற முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையை இது கடந்துவிட்டது.

 சில பகுதிகளில் வறட்சி நிலவுவதற்கான அபாயம் அதிகரித்து வருவதாக இங்கிலாந்து அதிகாரிகள் அண்மையில் எச்சரித்துள்ளனர்.</p><p>

 ஈஸ்ட் ஆங்லியா, டெவோன் மற்றும் கார்ன்வால் ஆகிய பகுதிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், நீர் நிறுவனங்களும் பற்றாக்குறையாகி வரும் வளங்களைச் சமாளிக்கப் போராடி வருகின்றன.
</p><p>

இந் நிலையில் , சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல், வாடிக்கையாளர்கள் தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கோ, கார்களைக் கழுவுவதற்கோ அல்லது நீச்சல் மற்றும் சிறுவர் குளங்களை நிரப்புவதற்கோ குழாய்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
</p><p>
அதேநேரம், கேம்பிரிட்ஜ் வாட்டர் நிறுவனமும் தனது 350,000 வாடிக்கையாளர்களுக்கு தற்காலிக குழாய் நீர் பயன்பாட்டுத் தடையை அறிவித்துள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களில் அந்நிறுவனம் இத்தகைய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.</p><p>

இது தவிர சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனம், ஜூலை 3 அன்று கென்ட் மாகாணத்தின் பல பகுதிகளில் குழாய் நீர் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-10T13:09:50+00:00</updated>
        </entry>
    </feed>
