<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Canadamirror - Canadia Tamil News Website | Canada Latest News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News</title>
    <subtitle type="html"><![CDATA[Canadamirror provides all the latest Canada Tamil News The news includes local, regional, national and international news on Canada, World, Political, Business, Financial, Education, Entertainment, Cinema and Sports. கனடாமிரர் - உடனுக்குடன் புதிய கனடா, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு செய்திகள் தமிழில்]]></subtitle>
    <link href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <id>https://canadamirror.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://canadamirror.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/cm/img/logo.png</logo>
            <updated>2026-07-12T05:45:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: 3 சந்தேகநபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/toronto-police-victim-in-targeted-triple-shooting-1783830051"></link>
            <id>https://canadamirror.com/article/toronto-police-victim-in-targeted-triple-shooting-1783830051</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள நோர்த் யார்க் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள நோர்த் யார்க் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p> 
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><p>
வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ வெஸ்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு பல அழைப்புகள் கிடைத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2181a255-6f4c-402d-b9ed-3495f230f67e/26-6a531625964ca.webp' /></p><p>
</p><p>பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, 20 மதிக்கத்தக்க மூன்று இளைஞர்கள் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் கண்டறியப்பட்டனர்.</p><p> 
அவர்களில் 22 வயதுடைய அப்திஹமீம் ஆதன் என்ற இளைஞர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இவர் 2026 ஆம் ஆண்டில் டொராண்டோவில் பதிவான 18 ஆவது கொலைச் சம்பவம் இதுவாகும்.
</p><p>காயமடைந்த மற்ற இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்களின் நிலைமை சீராக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
இந்தத் துப்பாக்கிச் சூடானது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி சான்ட்ரா அர்ருடா தெரிவித்துள்ளார். </p><p>
எனினும், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.
கருப்பு நிற ஆடைகள் மற்றும் முகமூடி அணிந்திருந்த மூன்று ஆண் சந்தேகநபர்கள், திருடப்பட்ட கருப்பு நிற ஹோண்டா சிவிக் காரில் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.</p><p> 
இந்த சந்தேகநபர்களின் கார் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பிராம்ப்டன் பகுதியில் தீப்பிடித்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. 
இக்கார் சில நாட்களுக்கு முன்பு நோர்த் யார்க் பகுதியில் திருடப்பட்ட ஒன்று என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
சம்பவ இடத்தில் வசிக்கும் செவிலியர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சுமார் 6 துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், பின்னர் உதவி கேட்டு அலறிய சத்தம் கேட்டு தான் வெளியே வந்து காயமடைந்தவர்களுக்கு உதவ முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்தக் கொடூரக் குற்றத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய பொலிஸார் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். </p><p>
சம்பவ இடத்தை கடந்து சென்ற வாகனங்களின் டேஷ்கேம் காட்சிகள் அல்லது தகவல்கள் ஏதேனும் இருந்தால், உடனடியாக தமக்கு வழங்கி உதவுமாறு டொராண்டோ பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T04:32:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ 'சல்சா' திருவிழாவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி, 6 பேர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-people-are-dead-as-salsa-festival-1783821589"></link>
            <id>https://canadamirror.com/article/two-people-are-dead-as-salsa-festival-1783821589</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘சல்சா ஆன் செயின்ட் கிளயர்’ வீதித் திருவிழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘சல்சா ஆன் செயின்ட் கிளயர்’ வீதித் திருவிழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>செயின்ட் கிளெயர் அவென்யூ வெஸ்ட் மற்றும் ஆர்லிங்டன் அவென்யூ பகுதிக்கு அருகில் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
</p><p>சனிக்கிழமை இரவு 8:12 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அழைப்பு கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d51d9a4-0a96-49d8-b281-83759f0c38cf/26-6a52f517c68e8.webp' /></p><p> </p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் ஐந்து பேரைக் கண்டறிந்தனர். அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
</p><p>விசாரணைகள் தொடர்ந்த நிலையில், இரவு 9:34 மணியளவில் காயமடைந்த ஆறாவது நபர் ஒருவரையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.</p><p> எனினும், காயமடைந்தவர்களின் நிலைமை குறித்த உடனடி விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்தை பொலிஸார் தற்போது தமது பாதுகாப்புக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். </p><p>எனினும், விசாரணைகள் தொடர்வதால் அப்பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p> துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அவர் அப்பகுதியிலிருந்து தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. </p><p>அங்கிருந்த பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>திருவிழாவில் மக்கள் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த போதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. </p><p>இதனால் அங்கு பெரும் பதற்றமும் பயமும் நிலவியதுடன், திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குப் போகுமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டனர்.
'</p><p>சல்சா ஆன் செயின்ட் கிளெயர்' திருவிழா என்பது கனடாவின் முதன்மையான 'இலத்தீன் அமெரிக்க கலாசாரக் கொண்டாட்டம்' ஆகும். 
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த வருடாந்த திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T04:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா–ஈரான் பதற்றம் தீவிரம் ; புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதாக ஈரான் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-accuses-us-of-violating-memorandum-understand-1783789733"></link>
            <id>https://canadamirror.com/article/iran-accuses-us-of-violating-memorandum-understand-1783789733</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குற்றம் சாட்டியுள்ளார். </p><p>இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரானின் உயர்மட்டத் தலைவருடன் தொடர்புடைய ஒருவருக்கு எதிராக அமெரிக்க திறைசேரி திணைக்களம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பது, இரு நாடுகளும் ஜூன் மாதத்தில் எட்டிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறும் செயல் என அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71a82a1c-cdc3-4c47-b0d7-4ca1d62a700c/26-6a5278a638430.webp' /></p><p>ஜூன் மாதம் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பும் தற்போதைய நிலையைப் பேணுவதுடன், புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்காமல் இருக்க இணக்கம் தெரிவித்திருந்ததாகவும், தற்போதைய அமெரிக்க நடவடிக்கை அந்த உறுதிமொழிக்கு முரணானது என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்குப் பதிலடியாகவே புதிய தடைகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.</p><p> மேலும், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு ஈரானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரான் தொடர்புடைய இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், அதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நலன்கள் மற்றும் தளங்களை குறிவைத்து ஈரான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>இந்தச் சூழ்நிலையில், ஓமான் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தத்துடன் பதற்றத்தைத் தணிக்கும் இராஜதந்திர முயற்சிகளும் தொடர்கின்றன.</p>]]></content>
            <updated>2026-07-12T01:03:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூபாவில் மீண்டும் மின்கட்டமைப்பு முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cuba-suffers-another-power-outage-1783817762"></link>
            <id>https://canadamirror.com/article/cuba-suffers-another-power-outage-1783817762</id>
            <summary type="text">தீவு நாடான கியூபாவில் நிலவி வரும் மிக மோசமான எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக, அங்குள்ள தேசிய மின்கட்டமைப்பு மீண்டும் முழுமையாக முடங்கியுள்ளது.இதன் விளைவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவு நாடான கியூபாவில் நிலவி வரும் மிக மோசமான எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக, அங்குள்ள தேசிய மின்கட்டமைப்பு மீண்டும் முழுமையாக முடங்கியுள்ளது.</p><p></p><p>இதன் விளைவாக, கடந்த ஐந்து நாட்களில் இரண்டாவது முறையாக அந்த நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல மில்லியன் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a8e7495-f821-4432-ae68-dc071fb24453/26-6a52e6236d460.webp' /></p><p>தொடர்ந்து மோசமடைந்து வரும் இந்த மின்கட்டமைப்பு முடக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதாரமும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.</p><p>மின்கட்டமைப்பைச் சீரமைத்து, மின் விநியோகத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான தீவிர முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
எனினும், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புப் பராமரிப்புப் பணிகள் தொய்வடைந்துள்ளதால், மின்சாரத்தை முழுமையாக மீட்டெடுப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T00:56:09+00:00</updated>
        </entry>
    </feed>
