அல்பெர்ட்டாவில் கோர விபத்து: செமி-ட்ரக் மோதியதில் 41 வயது நபர் பலி!
கனடாவின் வடக்கு அல்பெர்ட்டா பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் கிராண்ட் பிரெய்ரி பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஸ்பிரிட் ரிவர் (Spirit River) பகுதிக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலை 2 இல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில், பாதிக்கப்பட்டவரின் பிக்கப் டிரக்கும் ஒரு செமி-ட்ரக்கும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
விபத்தில் சிக்கிய பிக்கப் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடன் பயணம் செய்த மற்றொரு பயணிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதை அடுத்து, அவர் 'ஸ்டார்ஸ்' வான்வழி மருத்துவ ஊர்தி மூலம் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
செமி-டிரக் ஓட்டுநர் எந்தக் காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.
விபத்து நடந்த பகுதியில் காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதால், அப்பகுதி பல மணி நேரம் போக்குவரத்துக்காக மூடப்பட்டிருந்தது.