பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 11 பேர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக , இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் யூடியூபர் முதல் மாணவர் வரை 11 பேரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் நாசவேலைகளை அரங்கேற்ற எல்லையில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவச் செய்கிறதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.
அதன்படி இந்தியாவில் பணத்துக்கு மயங்கும் ஆட்களை பிடித்து பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பெற்று சதி வேலையில் பாகிஸ்தான் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பாகிஸ்தானின் உளவு நெட்வொர்க்கை தகர்க்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 11 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.