டொரொண்டோவில பாரியளவில் டாக்சி மோசடி
கனடாவின் டொரொண்டோவில் பாரிய அளவிலான "டாக்சி மோசடி" குறித்த தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
டொரொண்டோ நகரத்தில் "டாக்சி மோசடி" எனப்படும் பெரிய அளவிலான நிதி மோசடியில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த பத்து மாதங்களாக விசாரணை நடத்டதப்பட்டுள்ளதாகவும், இந்த விசாரணைகளுக்கு புரொஜெக்ட் பெயார் “Project Fare” எனப் பெயரிடப்பட்டிருந்தது.
“இந்த குழுவினர் சட்டவிரோதமாக டாக்சி ஓட்டுநர்களாக நடித்து பயணிகளிடம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் பணம் செலுத்தும்படி கூறி, பணப்பரிவர்த்தனை நேரத்தில் பயணியின் கார்டை தனது கார்டுடன் மாறாக பரிமாறியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் குறித்த அட்டைகளை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் ஐந்து லட்சம் டொலர்கள் வரையில் இந்த கும்பலினால் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்கள் 108 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களிடமிருந்து டெபிட் மற்றும் கிரெடிட் அட்டை இயந்திரங்கள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.