ஆப்கானிஸ்தானில் 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு கசையடி!
ஆப்கானிஸ்தானில் பழைய முறைப்படி 3 பெண்கள் உள்பட 12 பேரை பொது இடத்தில் வைத்து கசையடி தந்து தாலிபன் அரசு தண்டித்தது.
ஆப்கானில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள தாலிபன்கள், 90 களில் கடைபிடித்த அதே வகையான தண்டனை முறையை மீண்டும் அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் நிகழ்ச்சியைக் காண வருமாறு முஜாயிதீன், மூத்த மற்றும் பழங்குடித் தலைவர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு லோகார் மாகாண ஆளுநர் அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது.
ஒவ்வொருவருக்கும் 21 முதல் 39 கசையடிகள் கொடுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.