12 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய நபர் கைது
12 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் நபர் ஒருவருக்கு எதிராக ஒன்றாரியோ பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
12 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபருக்கு எதிரகா ஒன்றாரியோ பொலிஸார் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.
ஒன்றாரியோவின் போல்டன் பகுதியைச் சேர்ந்த 45 வயதான மோரிஸ் கொன்டே என்ற நபரே கொலையுண்டவர்.
கடந்த 2011ம் ஆண்டில் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் 2011ம் ஆண்டில் கைது செய்யப்பட்டதாகவும் தற்பொழுது ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் வுட்பரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த 62 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றவாளிகள் பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு 50000 டொலர்கள் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.