கனடாவில் கொரோனாவால் உயிரிழந்த 13 வயது சிறுமி: சோகத்துடன் விவரித்த தந்தை!
கனடாவில் கொரோனா தொற்றால் 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிராம்டனை சேர்ந்தவர் எமிலி வியாகஸ் (13). இவர் கடந்த 22ஆம் திகதி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 நாட்களுக்கு பின்னர் எமிலியின் உயிர் பிரிந்துள்ளது. அவர் தந்தை கூறுகையில், முதலில் இருமல் பிரச்சினை எமிலிக்கு வந்தது. பின்னர் சுவாசிக்க சிரமப்பட்டதோடு, அவளால் நிற்க முடியவில்லை.
பின் வீட்டு படுக்கையில் எந்த உணர்ச்சியும் இன்றி கிடந்தாள். இதையடுத்து எமிலியை மருத்துவமனையில் சேர்த்தோம்.
அவளுக்கு கொரோனாவுடன் நிமோனியாவும் சேர்ந்தே வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டாள் என சோகத்துடன் கூறியுள்ளார்.
இதனிடையில் எமிலியின் தாயார் மற்றும் சகோதரரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.