துப்பாக்கி முனையில் 136 குழந்தைகள் கடத்தல்: நைஜீரியாவில் சம்பவம்!
நைஜீரியாவில் 136 மாணவா்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடக்கு நைஜீரியாவில் உள்ள சாலிகு டாங்கோ என்கிற இஸ்லாமிய பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்த ஆயுதம் ஏந்திய நபா்கள் ஒருவரை சுட்டுக் கொன்று, 3 ஆசிரியா்கள் மற்றும் 136 மாணவா்களைக் கடத்திச் சென்றதாக பள்ளியின் உரிமையாளா் உமா் இத்ரிஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இவா்கள் தவிர 3 முதல் 4 வயது வரையிலான 11 குழந்தைகளை வழியிலேயே கடத்தல்காரா்கள் விட்டுச் சென்றுவிட்டனா் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்பள்ளியில் 3 வயது முதல் 14 வயது வரையிலான மாணவா்கள் பயின்று வருகின்றனர்.
நைஜீரியாவில் பள்ளி மாணவா்களைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. வடக்கு நைஜீரியாவில் நிகழாண்டு நூற்றுக்கணக்கான மாணவா்களை கடத்தல்காரா்கள் கடத்திச் சென்றனர். இந்த சம்பவங்களை அரசால் தடுக்க முடியவில்லை. இதன் விளைவாக, ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னா் கதுனா மாகாணத்தில் உள்ள கிரீன்ஃபீல்டு பல்கலைக்கழகத்தைச் சோந்த மாணவா்கள், பணியாளா்கள் 14 பேர் கடத்தப்பட்டனர்.
ஒரு மாதம் கழித்து இந்த வார தொடக்கத்தில் அவா்கள் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக, பிணையத் தொகையாக ஆயிரக்கணக்கான டாலா்கள் கேட்டு மிரட்டிய கடத்தல்காரா்கள், 5 மாணவா்களை சுட்டுக் கொன்றுள்ள்னர்.