1380 கோடி டொலர் ரஷ்ய சொத்துக்கள் முடக்கம்! ஐரோப்பிய ஒன்றியம்
போர் தொடுத்த பிறகு 1,380 கோடி டொலர் மதிப்பிலான ரஷ்ய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி 24-ம் திகதி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரு தரப்பிலும் அதிக அளவிலான உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
உக்ரைன் மீதான போரை கைவிடுமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், பல்வேறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன.
இதனால் ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றி வருகிறது. இதன் காரணமாக ரஷ்யா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் ரஷ்யாவின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் ரஷ்யா - உக்ரைன் போர் ஏற்பட்ட பிறகு 1,380 கோடி டொலர் மதிப்பிலான ரஷ்ய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.