பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 140 பேர் கொரோனாவால் மரணம்!
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் புதிதாக 38, 281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,281 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 66,28,709 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 143 ஆக உயர்ந்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 54,034 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 52 லட்சத்து 51 ஆயிரத்து 174 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது கொரோனா பாதிப்புடன் 12,45,392 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.