கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 15 பேர் கொரோனாவால் மரணம்!
கனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 1,504, 604 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 26ஆயிரத்து 977பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில், வைரஸ் தொற்றினால் 1,504 பேர் பாதிக்கபட்டதோடு, 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 32ஆயிரத்து 759பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 405பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 44ஆயிரத்து 868பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.