பிரான்சில் 16 பேர் குரங்கம்மையால் பாதிப்பு
பிரான்சில், 16 பேருக்கு குரங்கு காய்ச்சலால் (variole du singe) இருப்பது கண்டறியப்பட்டது.
பிரான்சில் இதுவரை 7 பேருக்கு குரங்கு காய்ச்சலால் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 16 பேரில், 12 பேர் இல்-து-பிரான்ஸ் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டனர். ஒன்று Auvergne-Rhône-Alpes மாகாணத்திலும், இரண்டு Occitanie மாகாணத்திலும், ஒன்று நார்மண்டி மாகாணத்திலும் அடையாளம் காணப்பட்டது. பிரான்சில் குரங்கு நோய் புதிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சான்டே பப்ளிக் பிரான்ஸ் அறிவித்துள்ளது.
இதேவேளை, இதற்கு முன்னர் குரங்கு நோய் தொற்றுடன் தொடர்பில் இருந்த இருவருக்கு அம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.