பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 165 பேர் கொரோனாவால் மரணம்!
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றால் 39,842 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதோடு 165 பேர் மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 89 இலட்சத்து 36 ஆயிரத்து 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 40ஆயிரத்து 206 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 15 இலட்சத்து 34ஆயிரத்து 182 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை தொற்றால் பாதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை மையங்களில் 945 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 29, 454 பேர் தொற்றிலிருந்து குணமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அந்நாட்டில் இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 72இலட்சத்து 61 ஆயிரத்து 767 ஆக உயர்ந்துள்ளது.