றொரன்டோவில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு
றொரன்டோவின் நோர்த் யோர்க் பகுதியில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
19 வயதான இளைஞர் ஒருவர் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். விலோவ்டேல் மற்றும் சேர்ச் ஆகிய வீதிகளுக்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் நபர் ஒருவர் சில துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் இருப்பதனை அவதானித்து வைத்தியசாலைலயில் அனுமதித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர் பொலிஸாருக்கு சில தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவமானது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தப் போவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பற்றிய விபரங்கள் இருப்பின் அது குறித்து 416-808-3200 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.