அமெரிக்க எல்லையில் கஞ்சாவுடன் 2 கனடியர்கள் கைது
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தின் லூயிஸ்டன் பாலம் (Lewiston Bridge) எல்லைச் சாவடியில், காரில் மறைத்து வைத்து கஞ்சா கடத்த முயன்ற இரண்டு கனடா நாட்டுப் பிரஜைகளை அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ஒன்டாரியோ உரிமத் தகடு (Ontario licence plate) கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் ரக எஸ்யுவி கார் எல்லைக்கு வந்தபோது, போதைப்பொருள் கண்டறியும் மோப்ப நாய் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது.
சந்தேகத்தின் பேரில் வாகனம் இரண்டாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஸ்கேன் சோதனையின் போது, காரின் பின்பக்க கதவு மற்றும் உட்புறப் பகுதிகளில் சில மாற்றங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அதிகாரிகள் சோதனையிட்டதில், ஆறு சீல் வைக்கப்பட்ட பைகளில் பச்சை நிற இலைகள் இருப்பது தெரிந்தது. சோதனையில் அது கஞ்சா என்பது உறுதி செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சுமார் 2.72 கிலோகிராம் எடையுள்ளது.
இதன் சந்தை மதிப்பு சுமார் 16,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் 22,000 கனடிய டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காரை ஓட்டி வந்த 43 வயதான ஆண்ட்ரியா சீவ்ரைட் (Andrea Seivewright) மற்றும் அவருடன் பயணித்த 35 வயதான டேனியல் ஹியூஸ் (Daniel Hughes) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நபர்களுக்கு எதிரான நடவடிக்கைக்காக லூயிஸ்டன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.