பிரிட்டிஷ் கொலம்பியாவில் நீரில் வீழ்ந்த கார் : பெண் பலியாகியிருக்கலாம் என அச்சம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தில் உள்ள காம்லூப்ஸ் பகுதியில் கார் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், காரை ஓட்டிச் சென்ற 24 வயது யுவதி நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஷுபர்ட் டிரைவ் வீதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த 'நோர்த் தாம்சன்' ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.
அந்த ஆற்றில் நீர்மட்டம் அதிகமாக இருந்ததோடு, நீரோட்டமும் மிக வேகமாக இருந்துள்ளது. விபத்தின் போது காரில் பயணித்த 21 வயதுடைய மற்றொரு யுவதியைக் காப்பாற்ற, அங்கிருந்த மூன்று பொதுமக்கள் உடனடியாக ஆற்றில் குதித்துள்ளனர். வேகமாக ஓடும் நதியின் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அவர்கள் அந்த யுவதியை பத்திரமாக மீட்டுள்ளனர்.

இருப்பினும், காரை ஓட்டிச் சென்ற 24 வயது யுவதி காரோடு சேர்த்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கியதை நேரில் பார்த்தவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்து நடந்தவுடன் காம்லூப்ஸ் தீயணைப்பு மீட்புப் படையினரின் படகுகளும், தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவு தன்னார்வலர்களும் அப்பகுதியில் இரவாகும் வரை தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். ட்ரோன்கள் (Drones) மற்றும் அதிவேக நீர் மீட்புக் குழுவினரின் உதவியுடன் இரவு வரை நீடித்தது.
எனினும், காணாமல் போன யுவதி குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர மருத்துவக் குழுவினர், காரில் இருந்து மீட்கப்பட்ட 21 வயது யுவதிக்கும், அவரைக் காப்பாற்ற முயன்று காயமடைந்த ஒரு பொதுமகனுக்கும் முதலுதவி அளித்தனர்.
பின்னர் இருவரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிய நிலையில், நிலையான ஆரோக்கியத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.