லண்டனில் வயதான இந்தியர் ஒருவரை அடித்தே கொன்ற 13 வயது சிறுமி
லண்டனில் 80 வயதான இந்தியர் ஒருவரை , 13 வயது வெள்ளை இன சிறுமி அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த 2024 ஆண்டு செப்டெம்பர் மாதம் பிராங்கிளின் பார்க், Leicester இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தனது வளர்ப்பு நாயை கூட்டிக் கொண்டு சிவனே என்று தெருவில் நடந்து சென்ற வயதான (இந்திய வம்சாவழி) தாத்தா ஒருவரை, தனது செருப்பை களற்றி அவர் கன்னத்தில் 14 வயது மாணவர், அறைந்துள்ளார்.
இனத் துவேச வார்த்தை
இதில் அவர் தடுமாறி கீழே விழுந்த சமயம் காலால் எட்டி முகத்தில் உதைக்க இந்த 13 வயது மாணவியும் சேர்ந்து அவரை தாக்கியது மட்டுமல்லாது அதனை வீடியோ வேறு எடுத்து நண்பர்களோடு பகிர்ந்துள்ளார்கள்.
80 வயதாகும் கோகில் என்ற தாத்தா லண்டனில் ஒரு பெரும் கம்பெனியை கட்டி எழுப்பி, பலருக்கு வேலை வாய்ப்பை கொடுத்தவர் என கூறப்படுகின்றது.
தற்போது ஓய்வில் உள்ள அவர் தனது வளர்ப்பு நாயைக் கூட்டிக் கொண்டு வெளியே சென்றவேளை அங்கே வந்த 13 வயது மாணவி மற்றும் அவரது 14 வயது ஆண் நண்பர் ஆகியோர், தாத்தாவை பார்த்து இனத் துவேச வார்த்தையால் திட்டியுள்ளார்கள்.
அதன் பின்னர் செருப்பை களற்றி மாணவன் அடித்து, தாத்தாவை நிலத்தை தள்ளி காலால் மிதித்துள்ளார். இதனால் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அவர் இறந்து விட்டார்.
13 வயது மாணவி மற்றும் 14 வயது மாணவன் இருவரையும் பொலிசார் உடனே கைதுசெய்தார்கள். வழக்கு பதிவுசெய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம்(செவ்வாய் 08) நீதிபதி தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.
இருவரும் தலா குறைந்தது பட்சம் 6 வருடங்களாவது சிறையில் இருக்கவேண்டும் என்று ஜூரிகள் தமது முடிவை அறிவித்தார்கள். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி உடனே எதுவுமே நடக்காதது போல கண்ணீர் விட்டு கதறி அழுததாக கூறப்படுகின்றது.