மரணமடைந்த வைத்தியரின் பிள்ளைகளை பாதுகாக்கும் 21 பொலிஸ் அதிகாரிகள்!
கொரோனா வைரஸ் தொற்றால் சில தினங்களுக்கு முன் உயிரிழந்த மருத்துவர் ஏலியந்த வைட்டின் மகள் மற்றும் மகனின் பாதுகாப்பிற்கு என 21 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பாதுக்க (Niroshan Padukka) இதனை தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் உட்பட 21 அதிகாரிகள் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். என்ன காரணத்திற்காக இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பது தொடர்பில் தற்போதுவரை தகவல் வெளிவரவில்லை.
இதேவேளை உயிரிழந்த மருத்துவர் ஏலியந்த வைட் மஹிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) தனிப்பட்ட மருத்துவராக கடமையாற்றி இருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.