தென்கிழக்கு ஆசியாவில் கண்டறியப்பட்ட 224 புதிய உயிரினங்கள்
ஆசியாவின் மீகாங் பகுதியில் சுமார் 224 புதிய உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக வன விலங்கு நிதியம் தெரிவித்துள்ளது.
கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மீகாங் ஆற்றுப் படுகையில் கண்களைச் சுற்றி வெள்ளை வட்டம் கொண்ட பேய் குரங்கு, தவளைகள், முதலை மற்றும் புதிய மூங்கில் இனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் மீகாங் பகுதியில் மனிதர்களால் ஏற்படும் நோய்கள் போன்ற காரணத்தால் அதிகளவிலான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கு காணப்படும் ஏரளமான உயிரினங்கள் அடையாளம் காணப்படுவதற்கு முன்பாகவே அழிவினை எதிர்கொள்வதாகவும் உலக வனவிலங்கு நிதியம் தெரிவித்துள்ளது.