ஒன்றாரியோவில் 1.7 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருள் மீட்பு! 25 பேர் கைது
ஒன்றாரியோ மாகாணத்தில் பாரியளவில் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்,
சுமார் 1.7 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 25 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொக்கேய்ன், மெதபெமைன் உள்ளிட்ட சில வகைப் போதைப் பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 2021ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் சந்தேக நபர்களை பொலிஸார் பின்தொடர்ந்துள்ளனர்.
யோர்க் பிராந்திய பொலிஸாரும், றொரன்டோ பொலிஸாரும் இணைந்து இந்த தேடுதல் வேட்டையை முன்னெடுத்துள்ளனர்.
19 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.
23000 டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களும், 136000 டொலர் ரொக்கப் பணமும் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக மொத்தமாக 113 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.