சிறையிலிருந்து தப்பிய 262 கைதிகள் மீண்டும் சிறையிலடைப்பு

Praveen
Report this article
நைஜீரியா சிறைக்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் ஒன்று சிறைக் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி கைதிகளை தப்பிக்க செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தப்பிய 262 கைதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து மீண்டும் சிறையில் அடைத்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல், பணத்திற்காக கடத்தும் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. அந்நாட்டின் ஒயோ மாகாணத்தில் உள்ள சிறையில் பயங்கரவாத செயல்கள், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் கைதான குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஒயோ மாகாணத்தில் உள்ள சிறைக்குள் நேற்றைய தினத்தில் துப்பாக்கி, வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்மக்கும்பல் சிறைக் காவலாளிகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
அதன்பின் சிறைக்கைதிகளை தப்பிக்க செய்தனர். அதன் பின்பு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் தப்பியோடிய கைதிகளில் 262 பேரை சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் 572 கைதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருவதாக கூறப்படுகிறது.