பிராம்ப்டனில் வாகன விபத்தில் 29 வயது பெண் பலி
கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் 29 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து மாலை 6 மணியளவில் குயின் மேற்கு வீதி மற்றும் மெக்லாகின் வீதியில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் சாலையை கடந்து கொண்டிருந்த போது வாகனம் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் பின்னர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, வாகன ஓட்டுநர் விபத்தில் ஈடுபட்டதை உணர்ந்தாரா என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் வாகனத்தை நிறுத்திய பின்னர் ஓட்டுநர் அங்கிருந்தே ஒத்துழைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தைக் கண்டவர்கள் அல்லது தொடர்புடைய தகவல்கள் உள்ளவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.