ஆப்கனுக்கு 3.10 கோடி டாலர் உதவி; சீனா அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைத்துள்ள அரசை சீனா அங்கீகரித்துள்ளடன் 3.10 கோடி டாலர் உதவி வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளது.
31 மில்லியன் டாலர் மதிப்புக்கு ஆப்கானிஸ்தானுக்கு உணவுப் பொருட்கள், தடுப்பூசிகள் என்பன போன்ற உதவிகளை வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அக்கூட்டத்தில் சீனாவின் கருத்து வெளியாகியுள்ளது.
குறித்த கூட்டத்தில் சீனா,பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாட்டு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதன் பின் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி, ஆப்கானிஸ்தானிற்கு தேவையான உதவிகளை தங்கள் நாடு வழங்கும் என தெரிவித்தார்.
அதோடு ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ தலிபான்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.