2 ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 3 ஆண்டுகள் ஜெர்மனியில் கண்டெடுப்பு
ஜேர்மனியின் கோலோன் (Cologne) நகரில், இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட 3 வெடிக்காத குண்டுகள் பொதுப் பாதுகாப்புத் துறை, பொலிஸார் மற்றும் வெடிகுண்டு மீட்புக் குழுவினரால் வெற்றிகரமாக செயலிழக்கப்பட்டுள்ளன.
குறித்த குண்டுகள் Deutz பகுதியில் உள்ள கப்பல்துறை அருகே கடந்த திங்கட் கிழமை கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த பகுதியில் வீடுகள், கடைகள், பள்ளிகள், ஹோட்டல்கள், ஒரு பெரிய மருத்துவமனை மற்றும் ஒரு முக்கியமான ரயில்நிலையம் காணப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பொது மக்களின் உதவியுடன் குறித்த குண்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளன.
இந் நடவடிக்கைக்காக குறித்த பகுதியை விட்டு சுமார் 20,000 மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது இரண்டாம் உலகப்போருக்குப் பின் இடம்பெற்ற மிகப்பெரிய மீட்புப் நடவடிக்கையாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோலோன் நகரம், இரண்டாம் உலகப்போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.