குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் 3 வயது குழந்தை பலி
குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் 3 வயது குழந்தை பலியான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று (14) மாத்தளை ரன்பிமகம பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
நேற்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தாய் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண் அவரது மகள் மற்றும் இரண்டு மகன்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைய மகன் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அயலவர் என அடையாளம் காணப்பட்ட ஒருவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 19 வயது மகளும் 15 வயது மகனும் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தின் காரணம்
குடும்பத்துக்கும் சந்தேகநபரின் குடும்பத்துக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தாக்குதலை மேற்கொள்ள பயன்படுத்திய ஆயுதத்துடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.