கொரோனாவுக்கு முன்பே ஆரோக்கியமான உணவை அடைய முடியாத நிலையில் 300 கோடி மக்கள்!
கொரோனாவுக்கு முன்பே ஆரோக்கியமான உணவை அடைய முடியாதநிலையில் மக்கள் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
கொரோனாவால் உணவு பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. ஆனால், கொரோனாவுக்கு முன்பே ஆரோக்கியமான உணவை அடைய முடியாதநிலையில் மக்கள் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
உலகளாவிய உணவு பொருட்கள் விலை புள்ளிவிவரம் குறித்து ஒரு ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 2017-ம் ஆண்டில், உலக மக்கள்தொகையில் 40 சதவீதம்பேர், அதாவது 300 கோடி பேர், தரம் குறைந்த உணவுப்பொருட்களை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு விலை உயர்வும், குறைந்த வருவாயுமே காரணங்கள்.
அதே சமயத்தில், மீதி 790 கோடி மக்களுக்கு ஆரோக்கியமான உணவை பெற வசதி இருந்தாலும், சமைக்க நேரமின்மை உள்ளிட்ட காரணங்களால் ஆரோக்கியமற்ற உணவு பொருட்களையே சாப்பிட்டதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.