300 பெண்கள், ஆண்கள் நிர்வாணமாக போட்டோஷூட் செய்த காரணம் என்ன? சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்
இஸ்ரேலில் காலநிலை மாற்றத்தால் சுருங்கிய உப்பு கடல் குறித்து விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் 300 பேரை நிர்வாணமாக்கி புகைப்பட கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு இடையே டெட் சீ என்று புகழ்பெற்ற உப்பு கடல் ஒன்றுள்ளது. காலநிலை மாற்றத்தால் டெட் சீ அதன் அளவில் சுருங்கி விட்டது.
இதையடுத்து காலநிலை மாற்றம் எத்தகைய அழிவுகளை ஏற்படுத்தும் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஆண்கள், பெண்கள் என 300 நபர்களை நிர்வாணப்படுத்தி நியூயார்க் நகரை சேர்ந்த புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான ஸ்பென்சர் ட்யூநிக் புகைப்படம் எடுத்துள்ளார்.
ஆடையில்லாத ஆண்கள் மற்றும் பெண்கள் மீது வெள்ளை நிறம் பூசப்பட்டு டெட் சீ நிலப்பரப்பில் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில் நிற்க வைத்து புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்திற்கு மத வெறி பிடித்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் சிலர் பாராட்டி வருகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் புகைப்படம் எடுக்கும்போது இந்த கடல் பரப்பளவு பெரிதாக இருந்தது.
ஆனால் தற்போது அதன் அளவு சுருங்கிவிட்டது என்று ஸ்பென்சர் ட்யூநிக் தனது புகைப்படம் மூலம் உணர்த்தியுள்ளார்.