சிங்கப்பூரில் 31 பேர் அதிரடி கைது!
சிங்கப்பூரில் பொழுதுபோக்கு சேவைகளை வழங்கியதாக மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Work permit இல்லை, Hostessing பொழுதுபோக்கு சேவைகளை வழங்கியதாக மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 29 மற்றும் 33 வயதுக்குட்பட்ட 29 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரு ஆடவர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.
அந்த சேவைகளை வழங்கியது, Work permit முறையாக இல்லாதது ஆகிய குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
31 மற்றும் 35 வயதுடைய அந்த இரு நபர்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்து தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு பொழுதுபோக்கு நிலையங்களும் பொது பொழுதுபோக்குச் சட்டம் 1958க்கு முரணாக செயல்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. ஐசிபி எண்டர்பிரைஸ் ஹவுஸ் அருகே பெண்களை பொலிசார் கைது செய்வதையும் அந்த புகைப்படம் வாயிலாக காண முடிகிறது.
ஒர்க் பெர்மிட் இல்லாமல் வெளிநாட்டு ஊழியரை வேலைக்கு எடுப்பது சட்டப்படி தவறு. இந்த குற்றம் நிரூபணமானால் 5,000 சிங்கப்பூர் டொலர் முதல் 30,000 சிங்கப்பூர் டொலர் வரை அபராதம், 12 மாத சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.