புடினின் நண்பருக்கு உதவிய 4 வங்கி ஊழியர்களுக்கு நேர்ந்த கதி; சுவிஸ் அதிரடி!
அதிபர் புடினின் நெருங்கிய நண்பருக்கு உதவிய 4 வங்கி ஊழியர்களுக்கு சுவிஸ் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பருக்கு சுவிஸ் வங்கிக் கணக்கின் மூலம் மில்லியன் கணக்கான பணத்தை வைப்பிலிட உதவிய வங்கி ஊழியர்கள் நால்வர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செர்ஜி ரோல்டுகினின் வங்கிக் கணக்கிற்கு மில்லியன் கணக்கான பணத்தை அவர்கள் வைப்பிலிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி குறித்த குற்றவாளிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவர்கள் இவ்வாறான குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சூரிச் நீதிமன்றம், குறித்த நால்வரையும் ஏழு மாதங்கள் வரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.